Showing posts with label SUNAINA. Show all posts
Showing posts with label SUNAINA. Show all posts

Sunday, January 13, 2013

சமர் - சினிமா விமர்சனம்

tamil-cinema-samar-movie-first-look04.jpg (575×861)

சிம்பு மாதிரி ரொமாண்டிக்கா இருக்க ஹீரோவுக்கு தெரில .லவ்வுன்னா பொய் சொல்லனும், உருகனும், அட்லீஸ்ட் உருகற மாதிரி நடிக்கனும். நம்ம ஹீரோவுக்குஅதெல்லாம் வர்லை. டக்னு ஹீரோயின் ஹீரோவை  கழட்டி விட்டுட்டு பாங்காங்க் போயிடறா. 3 மாசம் கழிச்சு அவ கிட்டே இருந்து லெட்டர். உன்னை என்னால மறக்க முடியல . வா அப்டினு சொல்லி . கூடவே  பாங்காங்க்க்கு டிக்கெட் இன் கூரியர் கவர் . 


 ஹீரோ பாங்காங்க் கிளம்பறார். அங்கே போனா ஏகப்பட்ட ட்விஸ்ட். ஹீரோயின் அவரை வரவே சொல்லலை . வேற யாரோ கேம் பிளான் பண்ணி இருக்காங்க . இன்னொரு ஹீரோயின் அறிமுகம் . முத லவ்வுதான் புட்டுக்கிச்சு, சரி 2 வது லவ்வையாவது மெயிண்ட்டெயின் பண்ணலாமா?னு ஹீரோ யோசிகும்போது   ஹீரோவோட 2 வது லவ்வரோட  முதல் லவ்வர் எண்ட்டர் ஆகறார். என்ன தலை சுத்துதா? நயன் தாரா கதை மாதிரி இருக்கா? 


 எல்லாத்துக்கும் பின்னால  2 வில்லன்களோட பிளான் இருக்கு. ஆல் டிராமா..  ஏன் அப்டி பண்ணாங்க ? ஹீரோ ஓவர் ஹீரோயிசம் எல்லாம் காட்டாம அண்டர்ப்ளே சாக்சம் செய்வது எப்படி? என்பதை திரையில் காண்க .


 படத்துல முதல் ஹீரோ திரைக்கதை தான். டபுள் ஹீரோ ஆள் மாறாட்டக்கதையோ?  தாதா கதையோ என்றெல்லாம் யோசிக்க வைத்து  கடைசியில் செல்வராகவன் பாணியில் சைக்கோ வில்லன்கள் கேம் என திரைக்கதை அமைத்தது புத்திசாலித்தனம்.


s1.jpg (800×600)


 ஹீரோ முன்னாள் புரட்சித்தளபதி விஷால் . ஆள் ரொம்ப டல் ஆகிட்டார். அவர் முகத்துல பழைய உற்சாகம் மிஸ்சிங்க் . டோண்ட் ஒர்ரி பாஸ். நல்ல கதையா செலக்ட் பண்ணா வின் பண்ணலாம்.. சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டுகிறார். ரொமான்ஸ் காட்சிகளில்  ஜோடி தன் தோழி த்ரிஷா தான் என்றாலும் அவரிடம் உற்சாகம் இல்லாதது ஏனோ? ஷூட்டிங்க்  ஸ்பாட்ல ராணா இருந்திருப்பாரோ? 


 ஹீரோயின்  த்ரிஷா . மாடர்ன் ட்ரஸ்சிலும் சரி , சேலையிலும் சரி அழகான தோற்றம் தருபவர் .10 வருடங்கள் ஆகியும் இன்னும் இளமையாக இருக்கிறார்,. பாராட்டுக்கள் . சிவப்புக்கலர் புடவை அணிந்து ஒரு பாடல் காட்சியில் ரொமாண்டிக் பிரமாதமா பண்ணும்போதும் சரி, சிந்தாமணிக்கலர் பனியன் போட்டிருக்கும்போது ட்ரான்ஸ்பேரண்ட் சீன் காட்டும்போதும் சரி சபாஷ் போட வைக்கிறார்.  ஒரு சீனில் வில்லன்கள் முன் பேய் லுக் விடும்போது செம . வெல்டன் 3 ஷா.. 


 ஓபனிங்க் காதலியாக சில காட்சிகள் மட்டுமே வரும் அவசரக்குடுக்கை  அல்டாப் ராணியாக  சுனைனா.  இவர் தோன்றும்  7 காட்சிகளில் 6 காட்சிகள் செம லோ கட் . கண்டு களியுங்கள் மக்களே என்று சொல்லாமல் சொல்றார். நடிப்பு காட்ட டைம் இல்லை.. நாங்க யாரும் அதை எதிர்பார்க்கவும் இல்லை.. 



சைக்கோ வில்லன்களாக தெலுங்கு சத்யா ஹீரோ சக்ரவர்த்தி + இன்னொரு ஆள் . கேனத்தனமான நடிப்பு . சைக்கோ கேரக்டர்ல நடிக்கும்போது இப்படி லூஸ் தனமா விளையாட்டு காட்டிட்டு இருக்கக்கூடாது . செல்வராகவன் , கவுதம் மேனன் ரூமில் ஒரு நாளாவது தங்கி வந்தால் ஆட்டோமேட்டிக்காக ரியல் சைக்கோவாக வே மாறி  விடலாம். ஜஸ்ட் மிஸ். 


 காமெடி டிராக் என்ற பெயரில் அடிஷனல் அட்டாச்மெண்ட் எல்லாம் இல்லாதது ரொம்ப நிம்மதி 



Samar-Movie-Stills-42-255x300.jpg (255×300)


 இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள் 




1. ஹீரோ ஓப்பனிங்க் சீனில் காட்டுக்குள் கிடைச்ச மலர்கள், புல் எல்லாம் வெச்சு ஆன் த ஸ்பாட் ஒரு பூங்கொத்து ரெடி பண்ணும் லாவகம் கவிதை யான காட்சி 




2. ஏர்போர்ட்டில் த்ரிஷா காட்டும் பதவிசு , அவர் டிரஸ்சிங்க் சென்ஸ் பிரமாதம் . வெளிநாட்டுக்காட்சிகள் , ஏர்போர்ட் காட்சிகள் எடுத்த விதம் கனகச்சிதம் 



3.  படத்துக்கு பெரும் பலம் சேர்ப்பது எஸ் ராமகிருஷ்ணனின் வசனங்கள்.  த்ரில்லர் மூவி என்பதால்வசனத்திற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு , கிடைச்ச கேப்ல கிடா வெட்டி இருக்கார் , வெல்டன் 



4. பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் அழகு . 3 பாடல்கள் நல்லாருக்கு .  த்ரிஷாவின் அழகு மிக நளினமாக வெளிப்பட்ட மிகச்சில படங்களில் இதுவும் ஒன்று


samar_tamil_movie_stills_1007120942_022.jpg (1024×681)


இயக்குநரிடம் சில கேள்விகள்





1. ஹீரோ எப்பவும் டியூட்டி நினைவா இருக்கார். ஹீரோயினை கண்டுக்கலை. ஜஸ்ட் அப்போதான் எதிரே வந்து நிற்கும் ஹீரொயின் போட்டிருக்கும் டிரஸ் என்னன்னு கூடவா நினைவு இருக்காது?  அவ்ளவ் தத்தியா? அப்படி டியூப்லைட்டா இருப்பவர் கடைசில எப்படி  புத்திசாலித்தனமா ஆகறாரு?




2.  ஓப்பனிங்க் ஃபைட் சீனைப்பார்த்தா ஹீரோ காட்டிலாகா அதிகாரி மாதிரியும் படமே சந்தன மர தேக்கு மர கடத்தல் மாதிரி பில்டப் எதுக்கு?



3.  ஹீரோ விஷால் ஒரு சீன்ல தூங்கி எந்திரிச்சு அப்பதான் பெட்ல இருந்து எந்திரிக்கிறார் , ஆனா பேண்ட் சர்ட்  போட்டு இன் பண்ணி கைல வாட்ச் கூட கட்டி இருக்கார்..  அப்படி யாராவது தூங்குவாங்களா?



4.  லவ்வர் சுனைனா கேரக்டர் சரியா சொல்லப்படலை . ஓப்பனிங்க் ஃபைட் சீனை கட் பண்ணிட்டு இருவருக்குமான காதல் காட்சி வெச்சிருக்கலாம்.  காதலன் தன்னை சரியா வாட்ச் பண்ணலை , ரொமாண்டிக்கா இருக்கத்தெரியலை என்பதற்காக எல்லாம் ஒரு பொண்ணு காதலனை கழட்டி விடுவாளா?



5.   சுனைனா பாங்காங்க்ல இருந்து கூரியர்ல ஒரு கவர் அனுப்பி இருக்கார். அதுல அட்ரஸ், ஃபோன் நெம்பர் எதுவும் இல்லை. விளக்கம் கேட்டு பதில் அனுப்பி அப்புறமா கிளம்புவாங்களா? சிக்னல் கிடைச்ச்சா போதும்னு உடனே முன்னே பின்னே தெரியாத ஊருக்கு போவாங்களா?




6. பாங்காங்க் ஹோட்டல் நிஜமா அங்கே எடுத்ததா? இங்கே  செட்டிங்க் போட்டு எடுத்ததா? ஃபாரீன் அழகி கம் ரிசப்ஷனிஸ்ட் இண்டியன் மேடு ரோட்டமேக் லெட் பேனா யூஸ் பண்ணுது



7. சுனைனா டுபாக்கூர்னு தெரிஞ்ச பின் ஹீரோ அந்த கவர் வெச்சு கூரியர் ஆஃபீஸ்ல போய் விசாரிக்கவே இல்லையே?


8. ஒரு சீன்ல ஹீரோ கார்ல இன்னொருவர் கூட உக்காந்திருக்கார். பின் கண்ணாடி வழியா த்ரிஷா கார்ல கடத்தப்படறார். டக்னு காரை திருப்பி சேஸ் பண்ணாம காரை  விட்டு இறங்கி  காரைத்துரத்திட்டு ஓடறாரே?  அவர் என்ன ஸ்பைடர்மேனா?


9.  தரண் பில்லா தீம் மியூசிக்கை எதுக்கு பல இடங்கள்ல யூஸ் பண்ணி இருக்கார்?


10. க்ளைமாக்ஸ் கொஞ்சம் இழுவை . ஷார்ட் & ஸ்வீட்டா முடிச்சிருக்கலாம்.

Trisha-hot-sey-photo.jpg (880×1248)

11. சைக்கோக்களா வரும் 2 வில்லன்களும் கேனம் மாதிரி சிரிச்சுட்டு வர்றாங்க , கதையோட சீரியஸ்னெஸ் தெரியாம.. அவங்களுக்கு சம்பளம் சரியாத்தர்லையா?



12. படத்தோட மார்க்கெட்டிங்க் மகா மோசம் .  புரமோ சரி இல்லை



13. படத்துக்கு சமர் என டைட்டில் வெச்சது ராங்க்.  இந்தப்படத்துக்கு என்  செலக்சன் - சுழல்  , இறுதி வரை உன்னோடு  இப்படி டைட்டில் ஓக்கே


14. ஒரு மசாலாப்படத்துல ஹீரோவுக்கும் , ஹீரோயினுக்கும் எப்படி காதல் மலருதுன்னு காமிக்கத்தேவை இல்லை. ஆனா லவ் சப்ஜெக்ட்ல அது முக்கியத்தேவை, ஏன்னா காதல் மலரும்  தருணம் அற்புதமானது . அதை காட்சிப்படுத்துவது அவசியமானது , இந்தப்படத்துல சுனைனா , த்ரிஷா 2 பேருமே ஹீரோவிடம் ஏன் காதல் வசப்பட்டார்னு காட்சிப்படுத்தவே இல்லை


15. சில சீன்களில் பில்லா பாதிப்பு , கிடத்தட்ட திரையில் ஹீரோவைத்தவிர எல்லாரும் கூலிங்க் கிளாஸ்ல .. முடியல


16 . ஹீரோ 3ஷா காதலை ஏத்துக்கவே இல்லை . மனசுல காதல் இருப்பதாவும் நமக்கு காட்டலை, ஆனா  அவரோட முதல் லவ்வர் வந்ததும் கத்தியை எடுத்து குத்தப்போவது ஓவர். அந்தளவு தீவிரம் ஒரு காதலனுக்குத்தான் வரும். அதனால சிம்ப்பிளா ஹீரோவுக்கு த்ரிஷா மேல லவ் வந்தாச்சுன்னு ஒரு சீன் காட்டி இருக்கனும் .


17. த்ரிஷா லவ் டிராமா திருட்டுபயலே சோனியா அகர்வால் போர்ஷன் உல்டா



18. பொதுவா யார் செத்தாலும் டெட் பாடியை நேர்ல பார்க்கனும். சும்மா வீடியோ காட்சியை மட்டும்  பார்த்து செத்ததா வில்லன்க எப்படி நம்பறாங்க?



19. இந்தக்கதைக்கு ஃபாரீன் லொக்கேஷன் எதுக்கு ? ஜஸ்ட் வில்லன்க  மும்பை மாதிரி ஒரு ஏரியான்னு காடி இருக்கலாம்.. புரொடியூசர் செலவுல பாங்காங்க் போயிட்டு வந்துட்டீங்க..



Samar-Tamil-Movie-Stills-07102012362636f.jpg (940×625)





மனம் கவர்ந்த வசனங்கள் 




1. நீ எல்லாத்துக்கும் கணக்கு வெச்சிருக்கே.நான் காதலை கணக்கே இல்லாம வெச்சிருக்கேன்



2. பொண்ணுங்க அளவுக்கு பசங்களால எல்லாத்தையும் நினைவு வெச்சுக்க முடியாது.அதுக்காக அவங்க மனசுல உண்மையான காதல் இல்லைனு சொல்லிட முடியாது 

3.  எனக்கு இது ஃபர்ஸ்ட் டைம்


 எது? பொண்ணுங்களை ஃபாலோ பண்றதா? 


 நோ, ஃபிளைட்ல போறது 



4.  காபில  உப்பு போடுங்க 


 வாட்?


 காபி ஷாப்க்கு டெயிலி  300 பேர் 400 பேர் வருவாங்க.. பேரர் எல்லாரையும் நினைவில் வெச்சிருக்க முடியுமா?  இப்போ பருங்க, என் பேரை , நினைவு வெச்சிருப்பார்.. 




5. நீ ட்ரிங்க் பண்ண மாட்டியா? 


 ம், பட் லேடீஸ் இத்தனை பேர் இருக்காங்க.. அதான் தயக்கமா இருக்கு 




6. காட்டையே சுத்திட்டு இரு , காத்லியை கண்டுக்காத 



7.  லவ் ஈஸ் பிலைண் ட்னு சொல்வாங்க.. எனக்கு கலர் பிலைண்ட் போல. நீ என்ன கலர் டிரஸ் போட்டிருக்கேனு  தெரியாம போச்சு 




trisha-new-hot-wallpaper03.jpg (1024×685)



8. கிதார் ப்ளே பண்ற  பசங்களை பொண்ணுங்களுக்கு ரொம்ப  பிடிக்கும் , ஒரு ஃபீல் வரும் 



9. சண்டையே போடாத பொண்ணு , சரக்கே அடிக்காத பையன் கிடைப்பது ரொம்ப சிரமம்



10. பொண்ணுங்களுக்குன்னு தனி டாஸ்மாக் , தனி பார் ( BAR)  வரும் நாள் வெகு தொலைவில் இல்லை 




11. காதலி கிட்டே ஆல்ரெடி இருக்கறதை கொடுக்கறமா? இல்லாததைக்கொடுக்கறமா? இது முக்கியம் இல்லை, ஏதாவது பரிசு கொடுக்கனும், அதான் காதல் 



12.  ஒரு பெக் அடிச்சா காதலி மேல லவ் வரும் ,  2 பெக் அடிச்சா காதலி  மேல சந்தேகம்  வரும் ,3 பெக் அடிச்சா வேற ஒரு பொண்ணு  மேல லவ் வரும் ,   4 பெக் அடிச்சா தூக்கம் வரும்


 எத்தனை பெக் அடிச்சாலும் எனக்கு காதலி மேல நம்பிக்கை வரும் , காதல் மேலயும் 




13.  அவ வரவே மாட்டா-னு முடிவு பண்ணீட்டீங்களா? 


 இல்லை, ஊருக்கு போகலாம்னு  முடிவு பண்ணிட்டேன் 




14. தமிழ் சினிமாவுல எனக்கு பிடிச்ச டயலாக் - குத்துங்க எஜமான் குத்துங்க , இந்தப்பொண்ணுங்களே இப்படித்தான்  ( சிவப்பு ரோஜாக்கள் - கே பாக்யராஜ் வசனம், டயலாக் டெலிவரி பை கவுண்டமணி ) 



15.  இன்னும் ஒரு நாள் இங்கே நான் இருந்தா என்னையே  நான் சந்தேகப்பட வேண்டி வரும் 



16.  ஒரே மாதிரி 2 பேர் ஓக்கே , ஒரே மாதிரி சிக்னேச்சர் சாத்தியமே இல்லையே? எங்கேயோ தப்பு நடக்குது 




Sunaina%2520hot%2520in%2520green%2520bra%252C%2520Sunaina%2520without%2520saree%252C%2520Sunaina%2520in%2520bra.jpg (405×512)




17.  லவ்ல தோத்துப்பாரு , நீயும் குடிப்பே 




18.  கேம்ல பூ விழுமா? தலை விழுமா? னு கேட்டுட்டு இருக்கக்கூடாது , விழ வைக்கனும் 




19. நான் அவன் கிட்டே “ உன்னை மட்டும் தான் லவ் பண்றேன்”ன்னு சொல்லி இருக்கேன்


 விடு, எல்லாப்பொண்ணுங்களும்  அவங்கவங்க லவ்வர் கிட்டே அப்படித்தான் சொல்றாங்க 




20. நீ இன்னும் மத்தவங்களை அட்ராக்ட் பண்றதுக்காக காபில உப்பு போட்டு குடிச்சுட்டு இருக்கியா? 





21.  இப்படிப்பேசிபேசியேதான்  எல்லாப்பொண்ணுங்களும் பசங்களை சாகடிக்கறீங்க? 



22.  முதல் காதலை விட 2 வது காதல் ஈசியா வரும் 




23. இந்த உலகத்துல எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்கு 




24. ஹீரோ பேசும் ஒரே பஞ்ச் டயலாக் - பயமுறுத்துனிங்க, பயந்தேன் ,  துரத்துனீங்க.. ஓடுனேன் , சுத்த விட்டீங்க.. சுத்தலை நின்னேன். நின்னு ஜெயிச்சேன்  ( அண்ணன் யாருக்கோ என்னமோ சொல்ல வர்றாரு ) 


actress-sunaina-hot-beach-photos-5.jpg (1024×683)




எதிர்பார்க்கும் விகடன் மார்க் - 43


 எதிர்பார்க்கும் குமுதம் ரேட்டிங்க் -  ஓக்கே 


 ரேட்டிங்க்  7 / 10



 சி.பி கமெண்ட் -த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம் . பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் படம் இருக்கு .  கொஞ்சம் பொறுமையா பார்க்கனும் . இது டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இல்லைன்னு மைண்ட்ல செட் பண்ணிட்டு படம் பார்க்கனும் . ஈரோடு சண்டிகாவுல படம் பார்த்தேன்



டிஸ்கி - பலரும் ஃபோன் பண்ணிட்டு இருக்காங்க. இதுலயே பதில் சொல்லிடறேன். படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா , பின்னணி இசை  தருண்




சமர் - த்ரில்லர் மூவி ரிவ்யூ - வீடியோ -பை - சி பி எஸ் 






Trisha-Hot-Cleavage-Show-Pictures-Stills-Spicy-Pics-Navel-Show-4.jpg (741×563)

Wednesday, December 26, 2012

சாத்தானே! அப்பால் போ புகழ் செர்ரிப்பழ உதட்டழகி சுனைனா பேட்டி

http://s4.hubimg.com/u/4108351_f520.jpg 

ஆச்சர்ய சுனேனா

அழ வைத்தார் சீனுராமசாமி!

ராகவ்குமார்

ஒரு சிறிய இடைவெளி, அதுக்குள்ள இத்தனை நாளாய் எங்கிருந்தாய்ன்னு கேட்டா எப்படி?" என்று அழகாகச் சிரிக்கிறார் சீனுராமசாமியின்நீர்ப்பறவையில் எஸ்தராக நடித்து, நம்மையெல்லாம் அழவைத்த சுனேனா.
என்னோட கலரை கம்மியா காட்டறதுக்காக, டைரக்டர் சீனுராமசாமி தூத்துக்குடி மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் கடும் வெயிலில் நடக்க விட்டார். ஷூட்டிங் நடந்துக்கிட்டிருந்த சமயத்தில் நான் ஒரு பாறையில மோதி காலில் அடிபட்டேன். கால் சரியாகற வரைக்கும் ஷூட்டிங்கை தள்ளி வைச்சார். ஒருநாள் ஸ்பாட்டில் எங்க யூனிட் ஆட்களுடன் கலகலப்பா சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தேன். திடீரென வந்த சீனு சார் இப்படியா சத்தம் போட்டு சிரிச்சுக்கிட்டிருப்பன்னு சொல்லி நல்லா திட்டி விட்டாரு. எனக்கு அழுகை முட்டிக்கிட்டு வந்திடுச்சு. அடக்கிக்கிட்டேன். உடனே டேக். ஒரு இறப்புக்காக வாய்விட்டு அழ வேண்டிய சீன். டைரக்டர் திட்டியது எனக்குள் குமுறிக்கிட்டே இருந்தது. டேக்கில் நிஜமாகவே கத்தி அழுதுட்டேன். டேக் முடிஞ்சதும் எல்லோரையும் கைதட்டச் சொன்னார் சீனு ராமசாமி.

என்கிட்ட வந்து, உன்னைத் திட்டினது உண்மையிலேயே நீ அழுது நடிக்கணும்ன்றதுக்காகத்தான், நான் திட்டியதால்தான் கிளசரின் போடாம உன்னால நடிக்க முடிஞ்சது. சூப்பர்ன்னு பாராட்டினார்.
சர்ச்சில் வேலை செய்யும் பெண் கேரக்டரில் நடித்த நான் அமைதியாகத் தெரிய வேண்டும் என்பதற்காக ஷூட்டிங் நடக்கும் ஸ்பாட்டில் கூட அதிகமாக பேச விடமாட்டார் டைரக்டர். ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி, திட்டு வாங்கி, ஷூட்டிங்கில் யார்கிட்டேயும் பேசாம நடிச்சதுக்குப் பலனை, ‘நீர்ப்பறவையின் ரிசல்ட்டில் உணர முடியுது. தேங்க்ஸ் டு டைரக்டர்."
இவ்வளவு சிவப்பா இருக்கீங்களே? கருப்பா காண்பிச்சது வருத்தமில்லையா?
கடல் பகுதியைச் சார்ந்தவங்க கொஞ்சம் கலர் கம்மியாத்தான் இருப்பாங்க. இருக்கறதை உள்ளபடியே காட்டியதில் வருத்தமில்லை. சந்தோஷம்தான்."
உங்களுக்குப் பிடித்த ஹீரோ யார்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVqrtR74uJjyzNvjhwfyQKUbrfErEfM2Dg1U-CNciXSbJDoGZ5fDTjDew-kr_b_Skd-OqkCErwbo_oc2uFE9Y_woI40Uo0MS99l97WH84QwD1jDFqn4cpiW2HBd5C0r7ZLIoXwS8_Vesc/s1600/masilamani_sunaina_hot_photos-12.jpg

எல்லா ஹீரோக்களையும் பிடிக்கும்ங்றதுதான் இதமாதிரி வம்புல மாட்டிவிடும் கேள்விக்கு நான் சொல்ற பதில்."
நாம் செய்ய முடியவில்லையே என ஏங்கும் கேரக்டர் எது?
பிளாக்படத்தில் ராணிமுகர்ஜி செய்த கேரக்டர்."
லவ் யூன்னு யாராவது உங்ககிட்ட சொல்லியிருக்காங்களா?
நான் கோபக்காரி. அதனால பயந்துகிட்டே லவ் யூன்னு யாரும் சொன்னதில்லை."
அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்...?
ஜி.வி. பிரகாஷின் இசையில் வெளிவந்தபறபறபாடல்."
அடிக்கடி வரும் கனவு...?

மேலே உயரமான இடத்திலிருந்து கீழே விழுற மாதிரி அடிக்கடி கனவு வருது."
கீழே விழாம தாங்கிப் பிடிக்கும் ஹீரோ யாரு?
இப்படி விபரீதமா எதையாவது கற்பனை பண்ணாதீங்க. அதிகாலை கனவுகளோட தூங்கிக்கிட்டிருக்கும்போது நான் வளர்க்கும் நாயும், பூனையும் என் காலை பிராண்டி எழுப்பி விட்டுடும்."
எந்த டைரக்டர் படத்தில் நடிக்க ஆசை?
நல்ல ஸ்க்ரிப்ட் இருக்கும் அனைத்து டைரக்டர்களின் படங்களில் நடிக்க ஆசை."
படித்த நாவலில் பிடித்தது?
தி அல்கமிஸ்ட்நாவல்."
உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்சது?
என் சிரிப்பு."
எப்ப கல்யாணம்...?
சின்னப் பொண்ணுகிட்ட கேட்கற கேள்வியா இது?"


நன்றி - கல்கி , புலவர் தருமி  

http://lh5.ggpht.com/-WjruIfxCu5c/T_sUCqP7ruI/AAAAAAAAL-Q/icNceZFPOk0/Sunaina%252520hot%252520in%252520green%252520bra%25252C%252520Sunaina%252520without%252520saree%25252C%252520Sunaina%252520in%252520bra.jpg

Friday, November 30, 2012

நீர்ப்பறவை - சினிமா விமர்சனம்

http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/10/Neerparavai2.jpgஹீரோ ஒரு சரக்கு சங்கரலிங்கம். எப்போ பாரு குடி. குடிக்கு அடிமை. தண்ணி அடிக்க காசு வேணும்னா ஊரெல்லாம் கை ஏந்தத்தயங்காத ஆள்.அம்மா, அப்பா மீனவ்க்குடும்பம்.ஹீரோயின் சர்ச்ல ஒர்க் பண்றாங்க. ஹீரோயினைப்பார்த்ததும் ஹீரோவுக்கு காதல். குடிக்கு அடிமை ஆனவர் காதலுக்கு அடிமை ஆகிடறார். (2ம் 1 தான். ஆளை முடிச்சுக்கட்டிடும்).


ஹீரோவை ஹாஸ்பிடல்ல சேர்த்து ஆளை குடிபோதைப்பழக்கத்தில் இருந்து  மீட்டுடறாங்க.அவங்க ஏரியா மீனவர்கள் ஹீரோவை மீன் பிடிக்க விடலை. காரணம் ஹீரோ மீனவப்பரம்பரை இல்லை. தத்துப்பிள்ளை.ஆனா ஹீரோயின் நீ கடல் போய் மீன் பிடிச்சு மீனவன் ஆகுங்கறா. காதலி வாக்குக்காக ஹீரோ என்ன செஞ்சார்,  என்ன ஆச்சு? என்பதே மிச்ச மீதிக்கதை .


ஹீரோ விஷ்ணு கேரக்டரை உணர்ந்து பண்ணி இருக்கார். வெண்ணிலா கபாடிக்குழு , குள்ள நரிக்கூட்டம் போல் இதுவும் நிதானமாக ஸ்கோர் செய்ய வாய்ப்பு உள்ள படம்.  பேரை காப்பாற்றி இருக்கிறார். ஆனாலும் குடிகாரர் கேரக்டர் எப்படி இருக்கனும் என்பதை சிவா மனசுல சக்தி ஜீவா கேரக்ட்ர் பார்த்து இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்.


 ஹீரோயின் சுனைனா .இளஞ்சிவப்பு உதட்டழகி. கடல் ஓர கிராமக்கதை என்பதால் மேக்கப் போட வாய்ப்பு கம்மி .தூசு படிந்தாலும் வெள்ளிக்குத்துவிளக்குக்கு மதிப்பு போயிடுமா? ஜொலிக்கிறார். வழக்கொழிந்த பஃப் கை ஜாக்கெட் கம் சர்ட் மாடலில் டைட் டிரஸ் டாப் , பாவடை போட்டுக்கொண்டு படம் நெடுக உலா வருகிறார். குடிவெறியரான ஹீரோ காதலை சொல்ல  கிட்டே வரும்போது “ சாத்தானே! அப்பால் போ! என பயந்து மருகும்போது தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறார். ஆனால் சினேகாவுக்கு கிட்டத்தட்ட தங்கை மாதிரி புன்னகை இளவரசியான இவரை ஏன் சோனியா அகர்வாலுக்கு அக்கா போல் மெல்லிய சோக இழையை முகத்தில் ஒட்ட வைத்து இருக்கிறார்? இயக்குநர். புரியாத புதிர்.



சரண்யா அம்மா கேரக்டர். தென் மேற்குப்பருவக்காற்றில் கலக்கியது போல் இதிலும். சரக்கு அடிக்க பையனுக்கு காசு தரும் சீனில் செம நடிப்பு. அவர் வசனம் பேசும் உச்சரிப்புஸ்டைல் பலர் பின் பற்ற வேண்டிய பாடம். அப்பாவாக வருபவர் நடிப்பும் நிறைவு .

இயக்குநர் சமுத்திரக்கனி முஸ்லீம் மீனவராக வருகிறார். கொஞ்ச நேரம் தான். ஆனால் மனதில் நிற்கிறார். இவரும் சீமான் போல் கை தட்டல் வாங்கும் குணச்சித்திர நடிகர் லிஸ்ட்டில் .


ஹீரோயின் சுனைனாவின் வயதான கேரக்ட்ர்க்கு நந்திதா தாஸ். வாய்ப்பு ரொம்ப குறைவு . வந்தவரை நிறை குடம்


http://www.indiancinemagallery.com/Gallery2/d/835356-1/Neer+Paravai+stills+_17_.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1. கதைக்களம் ராமேஸ்வரம் தங்கச்சி மடம் என்பதால் கடலின் பல்வேறு கோணங்களை காமெராவில் அழகுபடுத்திக்காட்டியது. ஒளிப்பதிவு பக்கா.. குறிப்பா கடல் ஓர நண்டுகளை பாடல் காட்சியில் காட்டுவது, கடல் நீரை செங்கடல் , நீலம், பச்சை , கரும்நீலம் என வகைப்படுத்தி வண்ணக்கோலம் கண்ணுக்கு குளுமை


2. ஹீரோவைப்பார்த்தாலே பயந்து போய் விலகும் சுனைனா முதல் முறையாக காதல் பார்வையை அள்ளி வழங்கும் காதல் மலரும் காட்சி



3. மீனுக்கு கடல் மீனுக்கு ,பர பர ,தேவன் மகளே  என 3 கலக்கலான மெலோடி சாங்க், இசை , காட்சிப்படுத்தியமை அனைத்தும் அழகு ( பர பர பாட்டு 2 டைம் ஸ்ரேயா கோசால் , சின்மயி இருவரும் தனித்தனியா )


4. படத்துக்கு நேர்த்தியாக திரைக்கதை எழுதியது , இலக்கியவாதி எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்கள்  பக்க பலமாய்



http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-neerparavai-movie-stills/images/tamil-cinema-neerparavai-movie-stills15.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்



1. மீனவர்கள் பிரச்சனை பற்றிய படம் என நீங்கள் சொன்னவிதம், அளீத்த பேட்டிகள் எல்லாம் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களுக்கு இழைத்த கொடுமைகள் பற்றி , அதற்கான தீர்வு பற்றி படம் இருக்கும் என்ற இமாலய எதிர்பார்ப்பைப்பொய்த்து விட்டீர்கள். அந்த மேட்டர் ஜஸ்ட் வந்து போகுது. மக்கள் மனதில் குடிப்பழக்கம் தவறு என்பதை உணர்த்திய அள்வில் கால் பங்கு கூட மீனவர்களை அநியாயமாக கொல்லும் விஷயம் பதிவாகவில்லை, இது மிகப்பெரிய பின்னடைவு


2. மீனவர் பற்றி , அவர்கள் சந்திக்கும் கடல் பிரதேச பிரச்சனை பற்றி சொல்ல 1000 விஷயங்கள் இருந்தும்  அதைச்சொல்லாமல் படத்தின் முதல் பாதியை குடிப்பிரச்சனைக்கு தாரை வார்த்தது ஏன்?


3. ஓப்பனிங்க்ல கொலையாளி என கைது செய்யப்படும் நந்திதா தாஸ் விசாரணையில் மயக்கம் போடும்போது விசாரணை செய்யும் போலீஸ் ஆஃபீசர் காட்டும் பதட்டம் ஓவர். நந்திதாவின் அம்மாவோ , மகனோ காட்ட வேண்டிய பதட்டத்தை போலீஸ் ஆஃபீசர் காட்றார்.



4. கிறிஸ்டியனான சுனைனா ஹீரோவுக்கு 50 ரூபா தரும்போது இடது கைல  தர்றார். லட்சுமி வலது கை தானே பரிமாற்றங்கள்?


5. சுனைனா அந்தப்பணத்தை திரும்ப வாங்க வரும்போது சரன்யா வீட்டுக்குள் இருந்து பணம் தர்றார். சுனைனா வாசப்படில நின்னு வாங்கறார். கிராமங்களில் அப்படி பழக்கம் இல்லை. அப்டி செஞ்சா செல்வம் போயிடும். சரண்யா வாசலுக்கு வெளீல வந்தோ , சுனைனாவை வீட்டுக்குள்ளே வரச்சொல்லியோ பண்ம் கொடுத்திருக்கலாம்



6. ஒரு காட்சியில்  ஹீரோயின் மழையில் குடை பிடித்து  நிற்கிறார். ஹீரோ அவர் எதிரில் 4 அடி தள்ளி மண்டி போட்டு இருக்கார். ஆனா அவர் சட்டை நனையவே இல்லை . வாட்டர் ப்ரூஃபா?


7. மொத்தக்கதையும் ஃபிளாஸ்பேக் உத்தியில் நாயகியின் பார்வையில் சொல்லப்படுது. அப்போ ஹீரோ தனியா இருக்கும் காட்சி , ஹீரோயின் இல்லாமல் இருக்கும் காட்சிகள் 30 நிமிடம் வருதே? அது எப்படி? இதை தவிர்க்க ஃபிளாஸ்பேக்கை ஹீரோ பார்வையில் அல்லது பொதுவா காட்டி இருக்கலாம்

http://cdn3.supergoodmovies.com/FilesFive/neerparavai-movie-press-meet-stills-5637e45b.jpg


8. வயசுக்கு வந்த பொண்ணு சர்ச் வாசல்ல பப்ளிக்கா படுக்குமா? அரன்மனை மாதிரி இடம் இருக்கே? ஹீரோயின் வாசல்ல படுத்திருக்கும் காட்சியும் , ஹீரோ மப்பில் அருகே வந்து படுக்கும் காட்சியும் செயற்கை



9. பொது வெளியில் கிணற்ற்டியில் குளிக்கும் கிராமத்துப்பெண்கள் மஞ்சள் , ஆரஞ்சு போன்ற லைட் கலர் பாவாடை கட்டிக்குளிக்க மாட்டாங்க. கறுப்பு, பிரவுன், மெரூன் டார்க் கலர் தான் கட்டுவாங்க. சீன் படங்களில் கில்மாவுக்காக அப்படி காட்சி வெச்சா கேட்கமாட்டோம். ரசிச்சுட்டு போயிடலாம், ஆனா இது கண்ணியமான படம் ஆச்சே?


10. கொலைக்குற்றவாளியான நந்திதாவை ஜாமீனில் எடுக்கனும்னா ஏதாவது வக்கீல் ஆஃபீஸ் போகனும். அதை விட்டுட்டு அவரை விசாரணை செய்யும் போலீஸ் ஆஃபீசரிடமே என்ன பண்ண? ஜாமீன் எடுக்கனும் என ஐடியா கேட்கும் காட்சி எதுக்கு?



11. ஆரம்ப்ம் முதலே காதலுக்கு கெத்து காட்டி வரும் சுனைனா ஹீரோவை மீனவனாக மாற்ற எடுக்கும் முயற்சியில் ஏன் கெஞ்சனும்? ஹீரோ ஏதாவது ஒரு வேலைக்குப்போனா போதும். ஆனா மீனவனாத்தான் ஆகனும்னு ஏன் கண்டிஷன் போடறாங்க? அதுக்கு காரணம் காட்டி இருக்க வேணாமா?


12. யாராலும் பிடிக்க முடியாத உளுவை சுறாவை ஹீரோ பிடிச்சுட்டு வந்து அம்மா , அப்பா கிட்டே கொடுத்துட்டு அடுத்த நிமிஷமே ஹீரோயினைப்பார்க்க அதே டிரஸ்ல வர்றார். அப்போ ஹீரோயின் “ ஊரே உன்னைப்பற்றித்தான் பேசுது. அரிய வகை மீனைப்பிடிச்சுட்டியாமே?” சன் டி வி ல சொன்னாங்களா?



13. சுனைனாவுக்கு கதைப்படி 21 வயசு. அவர் 36 வயசுல அவ்ளவ் மாற்றம் ஆகி நந்திதா தாஸ் ஆகிடுவாரா? டைட்டானிக் படத்துல 2 வெவ்வேறு ஹீரோயினை காட்டியதுக்குக்காரணம் வயசு வித்தியாசம் 21 - 90 . ஸ்டார் வேல்யூவுக்ககவா?அவருக்கு காட்சிகளும் அதிகம் இல்லையே? ஒரு வேளை சுனைனாவின் கால்ஷீட் பிரச்சனையா?


14. ஹீரோ பஞ்சம் பிழைக்க வேற ஊர் போனப்ப ஓனர் தங்கச்சி ஹீரோ மேல ஆசைப்படறது இந்தக்கதைக்கு தேவை இல்லாதது

http://cine-talkies.com/movies/tamil-actress/sunaina/sunaina-104.jpg




ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்  - 43


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே


 சி.பி கமெண்ட் - கண்ணியமான காதல் கதை , நேர்த்தியான் திரைக்கதைதான். ஆனால் மீனவர் பிரச்சனை சரியாக சொல்லப்படவில்லை . இயக்குநரின் நோக்கம் நல்ல நோக்கம் தான். ஆனால் அதை மக்களுக்கு சொன்ன  விதம் இன்னும் நல்லா அழுத்தமா சொல்லி இருக்கலாம்னு தோணுது . ஈரோட்டில் அபிராமியில் படம் பார்த்தேன்.


டிஸ்கி - படத்தில் ஜெயமோகனின் அபாரமான வசனங்கள் 64 இடங்கள் இருக்கு. நினைவில் நின்றவை 46.அது தனிப்பதிவாய் பின் ஒரு சந்தர்ப்பத்தில் . மின் தடை கையை கட்டிப்போட்டு விட்டது  .

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2012/12/blog-post_8939.html

 

 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOn48BD80JIk8BdYPvn9zfiyNV1N3W7m8-5Q9NjAPsyiR9FCVeuIWf5zjJTRRnYfWxVij_7scICkdeyMBlpyTX_ZteXovzgWsBRlQIesCt27oEEQ-1eCMhFrg4_vLIR3PYOfDYKVcNp-8/s320/sunaina+hot+in+yathumagi+(10).jpg