Showing posts with label SUNAINA. Show all posts
Showing posts with label SUNAINA. Show all posts

Thursday, November 29, 2012

நீர்ப்பறவை


நம்பர் ஒன் ஆக வேண்டாம்!





நேற்று வரை கடற்கரை வாசம். கஷ்டம், நஷ்டம், கண்ணீர் எல்லாம் பார்த்த நாள்கள். மக்களோடு மக்களாக வாழ்வது ஒரு கலைஞனுக்கு முக்கியம். இப்போதுதான் அது எனக்கு கிடைத்திருக்கிறது.'' பக்குவத்துடன் பேசுகிறார் நாயகன் விஷ்ணு. "நீர்ப்பறவை' டப்பிங் முடிந்த நாளில் பேசியதிலிருந்து...




.
அறிமுக சினிமாவில் இருந்தே அதிக நிதானம் காட்டுகிறீர்கள். கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறீர்கள். இருந்தும் முதல் படத்தை தவிர மற்ற படங்கள் எதற்கும் பெரிய அடையாளம் இல்லையே?




எனக்கு உண்மையில் கிரிக்கெட் மீதுதான் உயிர். இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவுதான் அதிகம். ஏனோ சரியாக அமையவில்லை. அதன் பின்தான் சினிமாவுக்கு வந்தேன். வீட்டில் பெரிய கஷ்டம் இல்லை. கேட்டதெல்லாம் கொடுக்கிற வீடுதான். ஆனாலும் சினிமாவில் மட்டும் இடம் கிடைக்கவில்லை. தொடர் முயற்சிகள், சினிமா சம்பந்தமான ஆள்களுடன் சந்திப்புகள் என நாள்கள் கடந்து கொண்டே இருந்தது. சினிமா அவ்வளவு பெரிய விஷயமாக இருந்தன. அதனாலேயே நிச்சயம் இதில்தான் பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.



 அப்போதுதான் இயக்குநர் சுசீந்திரன் சார் அழைத்து வெண்ணிலா கபடி குழு வாய்ப்பு தந்தார். நல்ல படம், எனக்கான நல்ல அடையாளத்தை உருவாக்கி தந்தது. கதைதான் ஹீரோ என்பதை நம்புகிற அளவுக்கு படம் பார்த்தவன் நான்.சினிமாவுக்கு வந்த பின்பும் அதுதான் நிஜ சினிமாவாக இருக்கும் என எண்ணினேன். ஏதோ சில காரணங்கள் சில விஷயங்கள் கை கூடி வரவில்லை. எல்லாமே நம்பி நடித்த படங்கள்தான். சில இடங்களில் தவறு நடந்திருக்கலாம். ஆனால் பெரிய பாதிப்பு இல்லை. இப்போது "நீர்ப்பறவை'. அவ்வளவு நம்பிக்கை கொடுத்திருக்கிறது. நிச்சயம் வேறுபட்ட சினிமா. நான் நினைத்த சினிமா இப்போதுதான் கிடைத்திருக்கிறது. இது என்னை நல்ல இடத்துக்கு கொண்டும் போகும்.




ஒரு படம் ஹிட் ஆனாலே நம்ம ஹீரோக்கள் தாறுமாறாக பிஸி ஆகி விடுகிறார்கள். ஆனால் நீங்கள் வருடத்துக்கு ஒரு படம் கூட நடிக்கவில்லையே?




ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு பாணி. எனக்கென ஒரு வட்டம் இருக்கிறது. எந்த இடத்திலும் எந்த தவறும் செய்யக் கூடாதென கட்டுப்பாடுடன் இருக்கிறேன். அதற்குள் மட்டும்தான் என்னால் இயங்க முடியும். கிடைக்கிற இடத்தில் இருந்து விட்டு போகலாம் என நினைத்தால், ஒன்றுக்குமே ஆகாத படங்களில் நடித்துக் கொண்டே இருப்பேன். சினிமாவுக்கு வந்த வேகத்தில் இந்நேரம் 15 படங்களை கடந்திருக்கலாம். அது தேவை இல்லை. நான் பெரிய அழகன் இல்லை. மற்ற ஹீரோக்களுக்கு சவால் விடுகிற அளவுக்கு எனக்கு பலசாலியும் இல்லை.



எனக்கான இடம் ஒன்று இருக்கும். அதற்கு போராடிக்கொண்டு இருக்கிற சின்ன பையன் நான். என்னால் எந்த மாதிரியும் நடிக்க முடியும். "வெண்ணிலா கபடி குழு', "குள்ளநரி கூட்டம்", "துரோகி', "பலே பாண்டியா' எல்லாவற்றிலுமே தனித் தனி அடையாளங்கள். சாக்லேட் பாய் கேரக்டர் எனக்கு சரி வராது என்பது எனக்கே தெரியும். எல்லோருமே நல்ல அடையாளத்துக்குதான் வந்திருக்கிறோம். அது எனக்கும் வேண்டும். பல தரப்பட்ட கதைகளில் நடிக்க நிச்சயம் என் உடம்பு செட் ஆகும். அதனால்தான் நடித்த படங்களில் எல்லாவற்றிலுமே தனி அடையாளங்களை காட்டியிருக்கிறேன்




. அப்ப எந்த மாதிரியான சவாலான வேடம் வந்தாலும் ஏற்றுக் கொள்வீர்களா?



நிச்சயம். எனக்கு கிடைத்த வாய்ப்புகள் என்னோடு சினிமாவுக்கு வந்த ஹீரோக்களுக்கு கிடைத்திருக்கிறதா என்று தெரியவில்லை. எனக்கு கிடைத்த கேரக்டர்களும் அப்படி. காமெடி, ரொமான்ஸ், கிராமம் சார்ந்த கதை, சிட்டி பேஸ் கதைகள் என நடித்த நான்கு படங்களிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறேன். இதுவே நான் நல்ல சினிமாவுக்கான தேடலில் இருக்கிறேன் என்பதை காட்டும். ஒரே விதமான சினிமாக்கள் செய்வது என் எண்ணம் இல்லை. தமிழில் எதிர்பார்த்த கதைகள் இப்போதுதான் கூடி வந்திருக்கிறது. தேசிய விருது இயக்குநர் சீனுராமசாமி சார் இயக்கத்தில் நடிப்பது நல்ல விஷயம். எனக்கென எந்த பிராண்டும் இல்லை. தவறான முடிவை எடுத்து விட்டோம் என சொல்லி வருத்தப்படவும் ஒன்றும் இல்லை. எந்த மாதிரியான வேடத்துக்கும் நான் தயார். நான் கிரிக்கெட் வீரர். எந்த பந்தைப் போட்டாலும் சமாளிக்க வேண்டும். சினிமாவிலும் அப்படித்தான் இருப்பேன். நம்பர் ஒன் இடம் வேண்டாம். எல்லோருமே கவனிக்க வேண்டும். அது போதும்.

http://cdn3.supergoodmovies.com/FilesFive/nandita-das-about-neer-paravai-a1f5946e.jpg


ரொம்பவே எதார்த்தத்துக்கு பக்கத்தில் போய் படம் எடுப்பார் சீனுராமசாமி. கஷ்டம் அதிகமாக இருந்திருக்குமே?





ஆமாம். அவருடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். எப்போதுமே நல்ல காட்சிகளுக்காக காத்திருப்பார். இயல்பாக, உண்மையாக வர வேண்டும் என்பதற்காக மெனக்கெடுவார். ""உங்கள் முகத்தில் ஒரு உண்மை இருக்கிறது. அதுதான் இந்த கதைக்கு வேண்டும். கதை சொல்லலாமா"" என்று கேட்டார். கதை கேட்டேன்.


""நான் இத்தனை வருடமாக இதற்குதான் காத்துக்கொண்டிருந்தேன். நடிக்கிறேன்.'' என என்னை அவரிடம் ஒப்படைத்து விட்டேன். இது வேண்டும், அது வேண்டும் என்கிற தேடலில் இருப்பாரே தவிர, நமக்கு முழு சுந்திரம் கொடுத்து விடுவார். ""இதுதான் காட்சி. உன்னால் எப்படி நடிக்க முடியுமோ அதை கொடு'' என்று சொல்லி விடுவார். நிச்சயம் அவரின் வேலை வித்தியாசமானது. இது மாதிரி ஒரு கதை பிடித்ததற்காகவே அவருக்கு விருது தரலாம். நாமெல்லாம் தினமும் சந்திக்கிற செய்தி. அது ஒரு செய்தியாகத்தான் நம்மை கடந்து போகிறது. அதற்கு தீர்வு சொல்ல ஒரு கதை. அந்த கதைக்கு நான் ஹீரோ. நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும்.



ஒரு முத்த காட்சியில் நடித்தாலே இங்கு ஆயிரம் பிரச்னைகள். ஆனால் நீங்களோ சுனைனாவுக்கு எண்ணிக்கையில் அடங்காத முத்தங்கள் கொடுத்திருக்கிறீர்களாமே?



இயக்குநர் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்தேன். மற்றபடி கிசுகிசுக்களுக்கோ, பிரச்னைகளுக்கோ இடம் இல்லை. சுனைனாவும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.இதுவரை என்னைப் பற்றி எந்த கிசுகிசுவும் வந்ததில்லை. என்னை இப்படியே விட்டு விடுங்கள்.



அப்புக்குட்டி தேசிய விருது வரைக்கும் போய் விட்டார். "பரோட்டா' சூரிக்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடம் உருவாகி வருகிறது. உங்களுடன் வந்தவர்கள் ஒவ்வொரு இடத்துக்கு போய் விட்டார்கள். அவர்களையெல்லாம் பார்ப்பது உண்டா? அவர்களைத் தவிர வேறு யாரெல்லாம் உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ்?




அப்புக்குட்டிக்கு தேசிய விருது கிடைத்ததில் எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி. அதுவும் சுசீந்திரன் சார் படத்துக்கு. உனக்கு ஒரு தவிர்க்க் முடியாத இடம் இருக்குன்னு அப்புக்குட்டியிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன். அதற்கு இப்போது அர்த்தம் கொடுத்திருக்கிறார்.சூரியின் காமெடிக்கு நல்ல வரவேற்பு. அவ்வப்போது பார்ப்பது உண்டு. அடிக்கடி பார்க்கா விட்டாலும் நல்ல, அழகான நட்பு இன்னும் அப்படியே இருக்கிறது. சினிமாவில் எனக்கு யாரையும் தெரியாது. ஸ்டார் கிரிக்கெட்தான் எனக்கு பலரையும் நண்பனாக்கியது. விஷால், ஆர்யா, பரத், சாந்தனு எல்லோருமே எனக்கு நல்ல ப்ரெண்ட்ஸ். "நீர்ப்பறவை' வந்த பின் இன்னும் ஆழமான சில நட்புகள் நிச்சயம் கிடைக்கும்.
 நல்ல சினிமாவுக்கு உண்மை மட்டுமே போதும்!"



http://cdn4.supergoodmovies.com/FilesFive/6a7b8b4455af420b9ec86b8ac192547f.jpg


நன்றி - சினிமா எக்ஸ் பிரஸ் 


க.நாகப்பன்

'தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தில் கிராமத்தைக் கையாண்ட இயக்குநர் சீனுராமசாமி, கடலைக் களம் ஆக்கி இருக்கிறார் 'நீர்ப்பறவை’யாக.


 ''இது இலங்கைத் தமிழர்களின் கதையா?''



''நடுக்கடல்ல ஒரு படகில் பலர் இறந்துகிடக்கிறாங்க. அதில் ஒரு சிறுவன் மட்டும் உயிரோடு இருக்கான். தென் இலங்கையைச் சேர்ந்த அவனை ஒரு மீனவன் தமிழகத்துக்கு அழைச்சிட்டு வந்து வளர்க்குறான். அவன்தான் விஷ்ணு. இதுல புலம்பெயர்ந்த தமிழர்களின் வலியை 14 நிமிஷங்கள் சமரசம் இல்லாமல் பதிவு செஞ்சுருக்கேன். மத்தபடி முழுக்க கிறிஸ்துவ மீனவக் கிராமத்தின் அசலான பதிவு இந்தப் படம். 'நீர்ப்பறவை’ தண்ணீரில் இரை தேடும்.''





''வசனங்கள் ரொம்பக் காட்டமா இருக்கும்போலத் தெரியுதே?''



''ஜெயமோகன் வசனம் எழுதி இருக்கார். அதைத் திரைமொழிக்குத் தகுந்தபடி வலுவாக்கி இருக்கேன். சினிமாவுல எல்லாரும் ஜெயிக்கணும்னு நினைக்கிற ஒரே ஆத்மா சமுத்திரக்கனிதான். 'அண்ணே, நான் உங்க படத்துல நடிக்குறேன்’னு உரிமையாக் கேட்டார். 'நம்மகிட்ட ஒத்துமை இல்லை. 30 தொகுதி மீனவனுக்கு இருந்தாத்தான் நம்ம சத்தம் கேட்கும். இல்லைன்னா, அலை மாதிரி நம்ம சத்தம் நமக்குள்ளதான் இருக்கும்’னு  சமுத்திரக்கனி பேசுற ஒவ்வொரு வசனத்துலயும் உண்மை சுடும்.''




''படத்தில் அரசியல் அதிகமா?''



''கடல் அரசியல்தான் 'நீர்ப்பறவை’. கடல்தான் இந்த உலகத்துல மூத்த உசுரு. எல்லாவித இறக்குமதி, அந்நியப் படையெடுப்பு, மதம் வந்து இறங்கிய இடம்னு சகலமும் நடக்குற இடம். இப்போ அங்கே மீனவன் வாழ்றதுக்குப் பாதுகாப்பு இல்லை. உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஒரே ஒரு தக்கையை எல்லையா வெச்சு இந்திய எல்லைக் கோட்டைத் தாண்டக் கூடாதுனு சொல்றாங்க. தக்கை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அங்கேயும் இங்கேயும் தள்ளிப்போகுது. கடலுக்கு நடுவே காம்பவுண்டு சுவரா இருக்கு? நாட்டுப் படகில் மீன் பிடிக்கப்போகும் சட்டை இல்லாத மீனவனை ஒரு அந்நிய நாடு சுடுறதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய வன்முறை. முப்படைகளும் கொண்ட இந்திய நாட்டின் கடலோரப் பிள்ளைகளை இன்னொரு நாடு சுட்டுக் கொல்றதை எப்படிப் பொறுத்துக்க முடியும்?  இதை எல்லாம் என் படம் கேட்கும்.''



''படம் முழுக்கப் பிரச்னைகள் மட்டும்தானா?''



''இரானில் இருக்கும் இயக்குநர்கள் இரான் பிரச்னைகளைத்தான் படமா எடுக்குறாங்க.  நான் தமிழ்நாட்டு மீனவர்களின் கதையை எடுக்குறேன். எதிரிகள்கூட இந்தப் படத்தைப் பார்த்தா இரக்கப்படுவாங்க. மற்றபடி விஷ்ணுவுக்கும் சுனைனாவுக்கும் இடையிலான சுவாரஸ் யமான, நெகிழ்வான காதல் கதை இருக்கு.''



''கதைக்கு நந்திதாதாஸ் எப்படித் தேவைப்பட்டாங்க?''



''நம்ம மீனவர்களின் அபயக் குரல் நாடு முழுக்க ஒலிக்கணும்னு ஆசைப்பட்டேன். உடனே, நந்திதாதான் எனக்கு நினைவுக்கு வந்தாங்க. நான் இதுவரை நேரில் பார்த்திராத நண்பர் ரவி.கே.சந்திரன்,அவங்க கிட்ட 'தைரியமா சீனுராமசாமி படத்துல நடிக்கலாம்’னு சொல்லி இருக்கார். கதையைக் கேட்ட நந்திதா, 'படத்துல நிறைய உண்மைகள் இருக்கு. ஆனால், சினிமாவுக்கு உண்மை போதுமா?’னு கேட்டாங்க. நான் நல்ல சினிமா வுக்கு உண்மை மட்டுமே போதும்னு சொன்னேன். நம்பிக்கையா நடிச்சுக் கொடுத் தாங்க.''

நன்றி - விகடன்

அட்ரா சக்க: நீர்ப்பறவை - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/11/blog-post_9009.html





Wednesday, October 24, 2012

திருத்தணி - சினிமா விமர்சனம்

http://www.tamilstar.com/cinema-images/news-images/barath-thiruththani-06-09-11.jpg 

அண்ணன் ராமராஜன் , அங்கிள் டாக்டர் சீனிவாசன் உள்ளிட்ட  பலர் நடிச்ச குப்பைப்படங்களுக்கு எல்லாம் போகக்கூடாதுன்னு ஒரு வைராக்யத்தோடதான் இருந்தேன். ஆனா பாருங்க, விதி வலியது , கூட இருக்கற ஆளுங்க  உசுப்பேத்தி விட்டுட்டாங்க.. தானா அழிவது பாதி , கூட இருக்கறவங்களால கிழிவது மீதி என்ற லேட்டஸ்ட்  ஃபார்முலா படி இந்தப்படத்தை பார்க்க நேர்ந்தது . இந்தக்காவியத்தின் கதைச்சுருக்கம் என்னான்னா. 



ஹீரோ ஜிம் மாஸ்டர். அங்கே எக்சசைஸ் பண்ண ஹீரோயின் வருது. அவர் எக்சசைஸ் பண்ற அழகைப்பார்த்து மயங்கி ஹீரோ லவ்வுக்கு பிட்டைப்போடறார்.அந்த கேன ஹீரோயின்  என்ன சொல்லுதுன்னா “ எனக்கு நல்ல , பெரிய குடும்பம் உள்ள மாப்ளை தான் வேணும், ஏன்னா நான் ஒரு அநாதை”ன்னு சொல்லுது. உலகத்துலயே மாப்ளை எக்கேடு கெட்டா என்ன? அவன் என்ன வேலை செஞ்சா என்ன? ஃபேமிலி கூட்டமா இருந்தா சரின்னு சொன்ன ஒரே பெண் இவர் தான். 


ஹீரோ உடனே கிரேசி மோகன் படங்கள்ல வர்ற மாதிரி  ஹீரோயினை தன் அத்தை பொண்ணா அதாவது பூர்வ ஜென்ம அத்தையோட அடுத்த பிறப்பா நடிக்க வெச்சு எல்லாரையும் ஏத்துக்க வைக்கறார். இந்த கேவலமான எபிசோடு 4 ரீல்க்கு போகுது. 


ஊர்ல எங்கே அநியாயம் நடந்தாலும் , வாக்கிங்க், ஜாக்கிங்க்  போனாலும் ஹீரோ கண்டுக்க மாட்டேங்கறார், தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கார். அது ரிட்டயர்டு மிலிட்ரி மேன் ராஜ் கிரணுக்கு பிடிக்கலை.அநியாயத்தை தட்டி கேட்கனும்னு அட்வைஸ் பண்றார். 


http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/10/thiruthani-movie-stills08.jpg


 உடனே  ஹீரோ அரதப்பழசான ஒரு ஃபிளாஸ்பேக்கை எடுத்து விடறார். அதாவது அண்ணன் அழகிரி மாதிரி  வாட்டசாட்டமான ஒரு அரசியல் ரவுடி  அநியாயமா  ஹீரோவோட அம்மாவை கொலை பண்றான். அப்போ ஊரே வேடிக்கை பார்க்குது. அவங்க மட்டும் வேடிக்கை பார்த்தப்போ நான் மட்டும் ஏன் தட்டி கேட்கனும்கறார். 


இப்போ ஹீரோவுக்கு ஆக்சிடெண்ட் ஆகுது. கோடம்பாக்க வழக்கப்படி  டாக்டர் ஹீரோவுக்கு கெடு விதிக்கறார்.இன்னும் 6 மாசம் தான் டைம். அதுக்குள்ளே நீ என்னென்னெ சாதிக்கனுமோ அதை எல்லாம் சாதிச்சுக்கோங்கறார். துப்பாக்கி , விஸ்வரூபம் இந்த 2 படம் மட்டும் தான் பார்க்க முடியும் அந்த 6 மாசத்துல . ஆனா பாருங்க ஹீரோ டொப்பு டொப்புன்னு எல்லாரையும் ஐ மீன் ஆல் ரவுடிஸ் , வில்லன்ஸ் சுட்டுத்தள்ளறார்.


 இதான் கதை. சின்ன குழந்தை கூட கணிக்கும் ட்விஸ்ட் என்னான்னா அந்த டாக்டர் 6 மாச கெடுன்னு சொன்னது பொய்.  4 பேரு நல்லாருக்கனும்னா  400 ரவுடிங்க நாசமா போகனும்னா எதுவுமே தப்பில்லை . அவ்வ்வ் 


 ஹீரோ பரத். மனசுக்குள்ளே  பெரிய விஜய்னு நினப்பு.. சிவகாசி , திருப்பாச்சி விஜய்யை அச்சு அசலா காப்பி அடிச்சு சின்னத்தளபதி சின்னத்தனமான தளபதி ஆகறார்.அவருக்குன்னு நல்ல டான்ஸ் டேலண்ட் இருக்கு, ஏன் விஜயை காப்பி அடிக்கனும்? அவர் பாட்ஷா ஸ்டைலில் பஞ்ச் டயலாக் பேசும்போதெல்லாம் ஊட்டி சூசயிடு பாயிண்ட்டே பெட்டர்னு தோணுது. அட்லீஸ்ட் 50  படமாவது முடிச்சவங்க  பஞ்ச் டயலாக் பேசுனா ரசிக்கலாம்.. ஹூம்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnFm0jHarGbCY2azAht4qhJYV7kKmapuOpBsmk239Vu7mhnIcRKRB8rSrNiWZu_SYE02Wfje-rVcumfycbQr3POk3hqNl55tinYYthIru9VpA09GIXrZ6hGMoqKTZXSqPTJhPMiSUU3glQ/s400/Sunaina_(2).jpg


 ஹீரோயின் அழகிய உதட்டழகி சுனைனா. சைபர் க்ரைம் போலீஸ் கிட்டே மன்னிப்பு கேட்டுட்டு ஒரு பேரா வர்ணிச்சுடறேன். பிளவு பட்ட  ஒரு கட்சி பார்க்க சகிக்காது. ஆனா பிளவு பட்டிருக்கும் இவர் உதடுகள் நந்தியா வட்டப்பூக்களாக அலங்கரிக்கப்பட்ட அழகிய பற்களை காட்டும்போது இந்தா பாப்பா என்னை கொஞ்சம் கடி என சொல்ல வைக்குது. பன்னீர் திராட்சை  கறுப்பா இருக்கும், சீட்லெஸ் திராட்சை பச்சை கலர்ல இருக்கும், இதென்ன லைட் ரோஸ் கலர்ல 2 திராட்சைன்னு பார்த்தா அது சுனைனாவின் உதடாம்.. அடடே..


மாடர்ன் டிரஸ் போட்ட மாடப்புறாவாக வரும்போதும்  சரி , பட்டுப்புடவை அணிந்து வரும் பங்கஜமா வரும்போதும் சரி சொக்க வைக்கறார்.மற்றபடி அவர் நடிப்பு எல்லாம் போலீஸ் ரகம் ஐ மீன் மாமூல் ரகம்.. அவர் ஜிம்ல படுத்த வாக்குல செஸ்ட்க்கான பென்ச் பிரஸ் எக்சசைஸ் பண்ணும்போது கேமரா மேன் நம்மளை அவர் பக்கத்துலயே கூட்டிட்டுப்போறார்..

 ராஜ் கிரண் இதுல ஜீன்ஸ் பேண்ட் போட்டுட்டு வர்றாரு. செம காமெடியா இருக்கு.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtTuQ4ZgxGCxBeR6nYn3yBmK5eMtYeAe3YLQ9QBJ3q8yCTms8XVZd-eRGAnor2NR1AeyArY0QQhzn7bLVgUTCYVv0VO1eFIoeGikA0X6awfO91i1psaZlF8rgIzC_hcviZDh9xtIBbsYk/s1600/sunaina-notecinema+%25282%2529.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்  ( குப்பையில் பொறுக்கிய மாணிக்கங்கள் )


1. சுனைனா - யோவ், எங்கங்கயோ தொடறே?


 இது டச்சிங்க் இல்லைம்மா, டீச்சிங்க் 



2. ஆம்பளைங்க ஜிம்க்கு வர்றது  சிக்ஸ் பேக்குக்காக , பொம்ப்ளைங்க ஜிம்முக்கு வர்றது  செக்ஸ் லுக்குக்காக 



3. சுனைனா - யோவ், உன் சர்ட்டை கழட்டு


 அய்யய்யோ, எதுக்கு?

 உன் பாடி எக்சசைஸ் செஞ்ச ஒரிஜினல் பாடிதானா?ன்னு பார்க்கனும்


( நல்ல வேளை ) 



4. யோவ், வக்கீலு, இந்த பொண்ணு மேல கேஸை போட்டு பீசை பிடுங்குய்யா. 


 நான் ஒண்ணும் ஈ பி ஆபீஸ் இல்லை, பீசை பிடுங்க, காசை மட்டும் தான் பிடுங்குவேன்


5. சுனைனா - நான் இங்கே இருக்கும்போது வீடு சுண்ணாம்பு அடிச்சு வெள்ளை வெளேர்னு இருந்துச்சு, இப்போ மஞ்சள் கலர்ல இருக்கே? 


 ம், மஞ்சள் காமாலை நோய் வந்திருச்சு 



6. ஏண்டி.. உங்கப்பன் பரம்பரைத்திருடனா? நைஸா சுட்டுட்டுப்போறானே? 



7. யோவ், என்னய்யா? உன் ஃபிளாஸ் பேக்  ரொம்ப பழசா இருக்கு../ ஆனா சொம்பு ரொம்ப புதுசா இருக்கு/? 


 அவ்ளவ் தானே, கொண்டா கிணத்துல போட்டுடறேன்


 அடப்பாவி, ஆதாரத்தை சேதாரம் ஆக்கிட்டானே? 



8. இது சுயநலம் நிறைஞ்ச உலகம். யாருக்கு என்ன நடந்தாலும் அதை வேடிக்கை பார்க்க  மட்டும் ஆள்ங்க ரெடியா இருப்பாங்க



9. சின்ன வயசுல செத்துப்போன எல்லாருமே சரித்திரத்துல இடம் பிடிச்சவங்களாத்தான் இருக்காங்க.. உதா - பாரதியார், வாஞ்சிநாதன், விவேகானந்தர்


10. இப்படி அடுக்கு மொழில பேசிட்டுப்போறியே? நீ டி ஆரா? 


 பேரரசு - இல்லை. அவர் சிம்புக்கு அப்பன், நான் வம்புக்கு அப்பன் ( இந்த சீன்ல அப்பா-ன்னு வசனம் சொல்லி இருக்கலாம்)


11. நீங்க நினைக்கற மாதிரி திருத்தணி யங்க் இல்லை , சிங்க்..


 அவ்வ்வ்வ் 


12. இப்பவெல்லாம் இலவசம் தான் அரசியல்ல பெரிய முதலீடா இருக்கு 


13. சிகப்பா இருக்கற நீ தீக்குளிச்சு என்னை மாதிரி கறுப்பா ஆக ஏன் ஆசைப்படறே? 


14. இந்த உலகத்துல ரெண்டே ஜாதிதான் இருக்கு 

1. தான் பட்ட கஷ்டத்தை எல்லாரும் படட்டும்னு நினைக்கற மிருக ஜாதி 


2. தான் பட்ட கஷ்டத்தை வேற யாரும் படக்ல்கூடாதுன்னு நினைக்கற மனித ஜாதி 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCj_oWVAeTr9q3d2jWYjKZG7uZfAW18YDXsKhi2AT5TbbTf7leuzPdPCPoBQb3FOsdA7EPCnHj4BgN9IiuDmS1crK7jizv3w5sUyvd2q-4wZUaBMdROGQlSqK7hB8DXsJfYrm46TeI75sH/s600/Sunaina+Hot+Photos+08.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. தான் இயக்கிய சிவகாசி படங்கள்ல இருந்து  ஒரு ரீல் ஓட்டி விஜய் ரசிகர்களை குதிப்படுத்துனது. அதனால அஜித் ரசிகர்கள் ஆதரவு இல்லாம போயிடக்கூடாதுன்னு படத்துக்கு சம்பந்தமே இல்லாம அஜித்தின் மங்காத்தா பட சீன் 2 சீன் காட்னது 


2. சுனைனாவை ஹீரோயினா புக் பண்ணி அவரை ஜிம்ல நல்லா திறமையை காட்டு காட்டுன்னு காட்ட வெச்சது.. டைட் டிரஸ் வேற 


3. பரத்தை பஞ்ச் டயலாக்ஸ் ஜஸ்ட்  ஏ ஃபோர்  சீட் 4 பக்கம் மட்டும் பேச வெச்சது 


4. உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக   ராஜ் கிரணை தொடை காட்டாமல் நடிக்க வெச்சது, அவருக்கு ஒரு ஜீன்ஸ் பேண்ட்டை மாட்டி விட்டது


5. நீ எனக்கு நான் உனக்கு, மெலோடி சாங்க் வானவில்லே , வண்ணாரப்பேட்டை குத்துப்பாட்டு, முமைத்கான் குத்தாட்டம் என சி செண்ட்டர் ரசிகர்களை திருப்திப்படுத்தும்  பாடல்கள்



http://www.shotpix.com/images/49829221999221857108.jpg

இயக்குநரிடம் ஜாலியாய் சில கேள்விகள்



1. வில்லன்னா ஹீரோ கூட சண்டை போடனும், அல்லது ஹீரோயினை ரேப் பண்ண ட்ரை பண்ணனும், அதை எல்லாம் விட்டுட்டு 4 வயசுக்குழந்தை தீபாவளிக்கு விட்டுட்டு இருக்கும் நில புருஷை ( வாணம் ) காலால மிதிச்சு அது கிட்டே போய் பஞ்ச் டயலாக் பேசுனா அதுக்கு என்ன புரியும்? 


2. அருகம்புல் ஜூஸ் என்பது ரத்தத்தை சுத்தீகரிக்கும், சுகர் பேஷண்ட் சாப்பிடுவாங்க, வாக்கிங்க் போறப்ப நாங்க எல்லாம் கிரவுண்ட்ல அதை பார்த்துட்டு ஒரு டம்ளர் வாங்கி குடிப்போம், ஆனா படத்துல ராஜ் கிரண் அருகம்புல் ஜூஸை ஹார்லிக்ஸ், போர்ன் விடா ரேஞ்சுக்கு உயர்த்தி சொல்றதெல்லாம் ஓவர், அதை குடிச்சுட்டு பசங்க ஓட்டப்பந்தயத்துல ஜெயிப்பதும் ஓவரோ ஓவர்


3. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் , 6 கான்ஸ்டபிளும் சேர்ந்து ஒரு கொலை பண்றாங்க. வில்லனுக்காக. அதுக்கு ஜஸ்ட் ஒரு லட்சம் தானா? ரொம்ப கம்மியா இருக்கே? இந்தக்காலத்துல சப் இன்ஸ் பெக்டரே 5 லட்சம் கேட்கறாங்க.. 


4. ஹீரோ அவர் பாட்டுக்கு கொலை பண்ணிட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தானே? அவர் யார்னே யாருக்கும் தெரியாது. இவர் பெரிய இவரு மாதிரி ஒவ்வொரு கொலை பண்ணினதும் போலீஸ்க்கு ஃபோனை போட்டு சொல்லிட்டு இருக்காரு? ? வேற வெலைப்பொழப்பே இல்லையா? 



5. யாரோ ஒரு அநாமதேயக்கால் - அதுல ஒருத்தன் ( ஹீரோ) என் பேரு திருத்தணி, நான் தான் இந்தக்கொலைகளை எல்லாம் செய்யறவன்னதும் உடனே ஏரியாவில் இருக்கும் 12 திருத்தணி பேர் உள்ள ஆட்களை அரெஸ்ட் பண்றது செம காமெடி.. டென் த் படிச்சவனுக்கு கூட அது புனை பெயர்னு தெரியும், டிகிரி படிச்ச இன்ஸ்பெக்டருக்கு தெரியாதா? 


6. வில்லன்ங்க கிட்டே இருக்கற ரவுடிங்க எல்லாம் லோக்கல் கேஸ்ங்க. ஏன் வில்லனே படு லோக்கல். அவங்க என்னமோ பேங்க்  கொள்ளையர்கள் மாதிரி முகமூடி எல்லாம் போட்டுட்டு வர்றதும், அதுல ஹீரோ ஊடால புகுந்து ஜாயின் ஆவதும் செம காமெடி 


7. மிலிட்ரி மேன் ராஜ்கிரண் ஒரு ஆளை சுட்டு கொன்னுடறார். ஒரே ஒரு குண்டு தான் செலவு . அவன் செத்த பின்பு செத்த பாம்பை அடிக்கற மாதிரி 43 தடவை மறுபடி சுடறாரே? மிலிட்ரில இதை எல்லாம் கேட்க மாட்டாங்களா? சிக்கனமா இருக்கலையேன்னு?


8. மிலிட்ரி மேன் ராஜ்கிரண் ஒரு ஆளை கழுத்துல மிதிக்கறார். அப்போ வில்லன் அதை தடுக்க அவர் கால்ல 18 குண்டு படற மாதிரி சுடறான், அவருக்கு ஒரு கால் போயிடுது. ஒரே ஒரு குண்டை அவர் தலைலயும், டைரக்டர் பேரரசு  கைலயும் சுட்டிருந்தா எத்தனை பேரு தப்பி இருப்பாங்க? ஏன் அதை செய்யலை? 


9. ஒரு ஷாட்ல வில்லன் ஃபோன் பண்ணி ஹீரோவை ஒரு இடத்துக்கு வரச்சொல்றான் , உடனே ஹீரோ அங்கே போயிடறார். அதே இடத்துக்கு ராஜ் கிரண் எப்படி வந்தார்? யாரும் அவருக்கு தகவலே சொல்லலையே? அவர் என்ன சுப்ரமணியம் சாமியா? 


10. யம்மா யம்மா நீ ஒத்துக்கறியா?  பாட்டு அப்படியே சிவகாசி பட பாட்டான என்னாத்தை சொல்றதுங்கோ, வடு மாங்கா ஊறுதுங்கோ பாட்டின் இசை, நடன அமைப்பு எல்லாத்தையும் சுட்டு இருக்கிங்களே? ஏன்? 


http://3.bp.blogspot.com/_-yi3NVwqzUc/SzC8euX2p2I/AAAAAAAAAhg/SbmrUWjLIQ8/s1600/Sunaina-046-stills007.blogspot.com.jpg



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38



எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார் 


 சி.பி கமெண்ட் - வாழ்க்கையை வெறுத்தவர்கள் , சம்சாரம் கூட கோவிச்சுக்கிட்டு விரக்தி அடைஞ்சவங்க ,சுனைனா டை ஹார்டு ஃபேன்ஸ் மட்டும் பார்க்கலாம். மத்தவங்க போஸ்டரைக்கூட பார்த்துடாதீங்க. ஈரோடு ராஆஆஆயல்ல படம் பார்த்தேன்


எச்சரிக்கை 1 - டைரக்டர் பேரரசு வழக்கம் போல் ஒரு சீனில் பந்தாவாக வந்து பஞ்ச் டய்லாக் பேசிட்டு  போறார், சகிக்கலை 


 எச்சரிக்கை 2 - இந்தப்படத்துக்கு இசையும் அண்ணன் பேரரசுதான், காது வலிக்குது


http://www.cinespot.net/gallery/d/964285-1/Sunaina+Hot+Gallery+_1_.jpg

Friday, August 17, 2012

பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் - சினிமா விமர்சனம்

http://www.mystills.net/wp-content/uploads/2012/07/pandi-oli-perukki-nilayam-movie-audio-launch1-15.jpg

பூ மகள் ஊர்வலம், பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் என்று வரிசையா இயக்குநர் ராசு மதுரவனுக்கு ஏறுமுகம்.. குறிப்பா  இவர் படங்கள் பழைய விசு படங்கள் லெவல்ல இருக்கறதா நல்லா பேரு வாங்கிட்டாரு.. இந்தப்படம் எப்படின்னு பார்ப்போம்.. 


மாயாண்டி குடும்பத்தார்  ஹீரோ மாதிரி இந்தப்பட ஹீரோவும் மைக் செட் காரர். இப்பவெல்லாம் கிராமத்துப்படம்னா  மைக் செட் தான் ஃபேஷன் போல.. ஹீரோயின் சுனைனா . சின்னத்தம்பி குஷ்பூ மாதிரி இவருக்கு 4 கேனை கம் ரவுடி அண்ணன்க.. ஊர்ல யாராவது சுனைனாவை சும்மா பார்த்தா போதும்.. சைட் அடிச்சா போதும் உடனே பப்ளிக் டாய்லெட்டை 4 நாட்கள் வாஷ் பண்ணனும்.. இதான் கேவலமான தண்டனை../


ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் 3 முறை சந்திப்பு நடக்குது.. அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள்


http://birlaa.com/pics/wp-content/uploads/2012/07/sunaina-homely-saree.jpeg


1.ஹீரோ எதுக்கோ டாஸ் போடறாரு.. அது 2 கிமீ தூரத்துல ஸ்கூட்டில போய்ட்டு இருக்கற ஹீரோயின் டி சர்ட்டுக்குள்ளே விழுந்துடுது ( 34 வது படம் இப்படி விழுவது)


2. ரோட்ல பஸ்டாப்ல நிக்கற குழந்தைக்கு புட்டிப்பால்ல பால் குடுக்கும்போது அந்த ஃபீடிங்க் ரப்பர் ஸ்லிப் ஆகி ஹீரோயின் கொண்டைல போய் நச்சுன்னு ஃபிட் ஆகிக்குது.. ( நல்ல வேளை.. )


3. சாவிக்கொத்தை கைல வெச்சு விளையாட்டா சுத்திட்டு இருக்காரு.. அது மிஸ் ஆகி மிஸ்சோட ஜீன்ஸ் பேண்ட் சைடு பாக்கெட்ல போய்  லாக் ஆகிக்குது ( பூட்டு - சாவி டைரக்‌ஷன் டச்சாம் )ர்


 இந்த 3 கேவலமான சந்திப்பில் நடந்த வாக்குவாதத்தில் ஹீரோயினுக்கு லவ் வந்துடுது..  எல்லாரும் நல்லா நோட் பண்ணிக்குங்க.. இந்த மாதிரி நிஜ வாழ்வில நாம செஞ்சா செருப்படி தான் கிடைக்கும்  அதுவும் ஹை ஹீல்ஸ் செப்பல் அடி.. 


2 பேரும் ஊர்ல எல்லாரும் பார்க்கற மாதிரி லவ்வறாங்க.. அண்ணன்க வில்லனா வருவானுங்கன்னு பார்த்தா அவங்க விக்ரமன் பட ஹீரோ மாதிரி அம்புட்டு நல்லவரா இருக்காங்க. லவ்க்கு ஓக்கே... ஹீரோயினுக்கு 2 லூஸ் முறை மாமனுங்க இருக்காங்க.  அவனுங்களும் எங்கிருந்தாலும் வாழ்கனு சொல்லிடறாங்க.. 


 அப்புறம் யார் தான்யா வில்லன்? எப்படித்தான் கதையை நகர்த்த? 17 அசிஸ்டெண்ட் டைரக்டர்சையும்  ரூம் போட்டு யோசிக்க சொல்றாரு.. ஆ!!!! ஐடியா.. ஆரம்பத்துல அண்ணன்களால அவமானப்படுத்தப்பட்டு  டாய்லெட் க்ளீன் பண்றானே அவனை வில்லனா போட்டு  ஹீரோயினை கொலை பண்ணிடறாங்க.  படத்துல கதையையே கொலை பண்ற ஆட்களால ஹீரோயினை கொலை பண்ண முடியாதா?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmGgo_Dkae8TZyTjn5La3zUaAGDVFoKA5gnanEFr4ZEMYeG8nSsxZvLBJiXu8pLVdRkKwNZSCHK9r8fW5xL4zzlo2UKj0VnFOgC9-4VKqdvUFCkjMINR3Xdjk3PKlwI_I3KaReBzZ8ptMa/s1600/Sunaina-CloseUp.jpg


 ஹீரோ தலைல நங்க்னு ஒரு அடி.. ஆள் ஆல்ரெடி கேனம் மாதிரி இருந்த ஹீரோ நிஜமாலுமே கேனம் ஆகிடறாரு.. பூந்தோட்டக்காவல் காரன் , செந்தூரப்பூவே விஜய்காந்த் ரேஞ்சுக்கு ஹீரோவை காட்ட நினைச்சிருக்காரு இயக்குநர் .

 உஷ் .. அப்பா முடியல.. படம் போடும்போது 49 பேர் இருந்தாங்க.. முடியும்போது 28 பேர்தான் இருக்காங்க.. பாதிலயே வெளிநடப்பு போல,


 ஹீரோ யாரோ ஒரு தயாரிப்பாளர் பையன் போல. தாடி வெச்ச கேடி போல் எண்ணெயே பார்க்காத தலையுடன் படு கேவலமா இருக்கார்.. நோ கமெண்ட்ஸ்..

 அடுத்து சுனைனா.. இவர் ஒரு உதட்டழகி.. மாநிற மேனி. தாவணியில் அழகாக வலம் வந்தால் அழகா இருப்பார்.. கேரக்டரைசேஷன் எடுபடலை.. 

தம்பி ராமையா குணச்சித்திர நடிப்பு ஓக்கே . கருணாஸ், வையாபுரி மொக்கைகள் முடியல.. புரோட்டா புகழ் சூரி பன்ற 2 மொக்கை காமெடி கொஞ்சமே கொஞ்சம் ரசிக்க வைக்குது..






இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. படம் எப்படியும் போணி ஆகாதுன்னு தெரிஞ்சுக்கிட்டு சுனைனாவை வெச்சு ஆத்துல ஒரு குளியல் சீனை எடுத்து அதை  மாலை மலர், மாலை முரசு மாதிரி பத்திரிக்கைக்களுக்கு குடுத்து கிளாமர் இருக்குன்னு ஒரு தோற்றத்தை
 ஏற்படுத்துனது ( ஆனா எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.. )


2. படத்தை போட்டுப்பார்த்துட்டு உங்களுக்கே சந்தேகம் வந்து அவசர அவசரமா  படத்துக்கு சம்பந்தமே இல்லன்னாலும் பரவாயில்லைனு தம்பி ராமையாவுக்கு ஒரு கிளைக்கதை ரெடி பண்ணி அவர் மகன் லவ்வரோட ஓடிப்போற மாதிரியும், அதை ஹீரோ தடுத்து நல்ல புத்தி சொல்லி கூட்ட்டிட்டு வர்ற மாதிரியும் எடுத்து அதை படத்தோட படாத பாடு பட்டு சிங்க் பண்ணது..


3. சிங்கம் புலி, புரோட்டா சூரி இவங்க 2 பேரையும் புக் பண்ணுனது.. ஓரளாவாவது படத்தை பார்க்க முடியுதுன்னா  அது இவங்க 2 பேர் காமெடியால தான்.


.4. ஹீரோயின் எடுத்துக்குடுத்த ஜீன்ஸ் பேண்ட்டில் ஃபேஷன் கிழிசல்களை பார்த்து ஓட்டை பேண்ட்டை ஏமாத்திக்குடுத்துட்டே என சண்டை போடும் காட்சிகள் ஆல்ரெடி பல படங்களில் பார்த்திருந்தாலும் ஓரளவு சிரிப்பு வருது


5. ஆத்துல குளிக்க வந்த அக்கா மகளை பார்த்தேன், அழகான நிலவை மெலோடி சாங்க் என 2 பாட்டுக்கள் செம ஹிட் ரகம்



http://1.bp.blogspot.com/-WjruIfxCu5c/T_sUCqP7ruI/AAAAAAAAL-Q/icNceZFPOk0/s1600/Sunaina+hot+in+green+bra,+Sunaina+without+saree,+Sunaina+in+bra.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்


1. எங்க ஊர்ல எல்லாம் பேட்டா செருப்பு கம்பெனி புரொடக்‌ஷன் அதிகமா பண்ண வேண்டி இருந்தா சப் காண்ட்ராக்டர்ஸ் கிட்டே செப்பல் மேனுஃபேக்சர்க்கு ஆர்டர் குடுத்து   அவங்க கிட்டே செப்பல் வாங்கி 10 ரூபா கூலி குடுத்து அதை பேட்டான்னு பேர் போட்டு 399 ரூபாக்கு விற்பாங்க.. அந்த மாதிரி யாரோ ஒரு உதவி இயக்குநரை இயக்கச்சொல்லி உங்க பேரை போட்டுக்கிட்டீங்களா?


2. உங்களுக்குன்னு ஒரு பேரு, மதிப்பு, மரியாதை இருக்கு.. அதை ஏன் கெடுத்துக்கறீங்க?நாளை நல்ல படமே எடுத்தாலும் நம்பகத்தன்மை வருமா? அடுத்த படத்துக்கு ஓப்பனிங்க்குக்கு என்ன பண்ணப்போறீங்க?


3.  காமெடி ஸ்க்ரிப்ட் எழுத ஆளே சிக்கலையா? முல்லா கதைகள், பீர்பால் கதைகள் எல்லாம் படிச்சுட்டு அரதப்பழசான  மொக்கைகளை வெச்சு காமெடிங்கற பேர்ல ஏன் இப்படி கொலையா கொல்றீங்க?


4. கருணாஸ் உயரமே  5 அடி 2 அங்குலம் தான்.. அவர் உயரம் குள்ளமா இருக்கறவரை கிண்டல் பண்ணி காமெடி பண்றாரு.. சகிக்கலை.. உடல் ஊனமுற்றவர்கள் சாரி. மாற்றூத்திறனாளிகளை நக்கல் அடிக்கும் காமெடியை நிறுத்துங்க.. முதல்ல.. 


5. கேட்டுக்கோடி உருமி மேளம் பாட்டை ரீமிக்ஸ் பண்ணுனது மகா கோரம்.. முடியலை.. அதைக்கூட மன்னிச்சுடலாம்.. அந்த பாட்டை ஃபாரீன்;ல போய் எடுத்திருக்கீங்க.. ஃபாரீன்கேர்ள்ஸ் நடனத்தோட.. ஷூட்டிங்க் பார்த்த ஃபாரீன்காரங்க தலைதலையா அடிச்சு இருப்பாங்க.. ( அவங்க தலைல தான் )


6. இது சும்மா காமெடிக்காக -ஓப்பனிங்க் ஸாங்க்ல பல்லவி முதல் லைன் - 6 மாசம் முன்னாடி பார்த்த சரோஜா, நீ அப்படியே இருக்கியேடி அழகு சரோஜா ..அப்படின்னு லைன்ஸ் போட்டுட்டு சரணத்துல பத்தாம் வகுப்பு ஒண்ணா படிச்சப்போ பார்த்த சரோஜான்னு வருதே.. எப்படி?

http://www.abimani.com/wp-content/gallery/pandi-oli-perukki-nilayam-movie-hot-stills/pandi-oli-perukki-nilayam-movie-hot-stills-1.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்


1.   கடுகு 100 குடுங்க..

 ஓக்கே

 நோ இப்படி இல்லை.. கவுண்ட்டிங்க்ல 100 வேணும்./

 அடேய்

 எது வாங்குனாலும் எண்ணிப்பார்த்து வாங்குன்னு முதலாளி சொல்லி இருக்காரு



2. சாம்பார்ல உப்பு இருக்கா?ன்னு பாரு


 பார்த்துட்டேன், இல்லை முதலாளி..


 கொஞ்சம் உப்பு எடுத்து போடு



 போட்டாச்சு முதலாளி..

 இப்போ இருக்கா?ன்னு பாரு..

 இப்பவும் இல்லை முதலாளி..


இதே மாதிரி6 டைம் போட்ட பின்

 அடேய் இங்கே வெச்சிருந்த 5 கிலோ உப்பு எங்கேடா?


----.....

 உனக்கு மண்டை இருக்கே? அதுல மூளை இருக்கா?



3. உலகத்துல சல்லடை போட்டு தேடுனாலும் உன்னை மாதிரி முட்டாள் கிடைக்க மாட்டான்.. ஒரு வகைல எனக்கு என்ன சந்தோஷம்னா என்னை எதிர்த்து ஒரு நாளும் நீ கடை போட மாட்டே..


4. காசு வாங்கனும்கறதுக்காக பொய்யா அழுவாதே./.


 ம்க்கும், அவன் கிட்டே காசை கொடுத்துட்டா அப்புறம் நீ அழுவியே?



5. நீ லூஸ்னு அவன் சொல்றான்.. அது உண்மையா?


 அவன் என்ன சொல்றது? நான் சொல்றேன்.. நல்லா கேட்டுக்குங்க. நான் லூஸ் தான்..



 6. மிஸ்.. 2 பேர்ல யார் போடறதுன்னு நீங்க தான் முடிவு பண்ணனும்..


என்னது?

 ஐ மீன்.. மைக் செட் போடறதுல யார்னு நீங்க தான் முடிவு பண்ணனும்.. டாஸ் போட்டோம். அது உங்க டி சர்ட்ல விழுந்துடுச்சு

 யோவ், இது என்ன உண்டியலா? சரி இந்தா..

 அடடா.. பூவா? தலையா? பார்க்காமயே குடுத்துட்டீங்க?






7. அவ பொண்ணுதான் சிவப்பு.. ஆனா அவங்கண்ணன்க அடிச்சாக்கா ரத்தச்சிவப்பு


8. ஜெயிலரை விட ஜெயிலுக்குள்ளே அதிக நாள் இருந்தவன் அவ மாமன்


9. ஏங்க ஏங்க.. நில்லுங்க.. இவ்ளவ் வேகமா போனா எப்படிங்க பால் குடிக்க முடியும்?


 வாட்?



குழந்தை பால் குடிக்கறப்போ ரப்பர் உங்க தலைல விழுந்துடுச்சு./. அதை எடுக்கலாம்னு பார்த்தா இவ்ளவ் வேக,மா போனா எப்படிங்க?


10. அளவா இருந்தாலும் நம்மளை மாதி மைக் செட் ஆளுங்களை   இழவு வீடுதான் வாழ வைக்கும்


http://www.movieballet.com/wp-content/uploads/2012/03/sunaina-10.jpg



11. எப்போ பார்த்தாலும் பழைய வண்டிக்கே ஆசைப்படறியே, ஏன் ? ( டபுள் மீனிங்க் )


எத்தனை புது வண்டி வந்தாலும் புல்லட் மாதிரி வருமா? நீ வேணா பாரு.. இந்த குஜராத் காரிய ஐ மீன் குஜராத் வண்டியை நான் சொந்தமாக்கப்போறேன்


12. ஒரே வாய்ல 20 இட்லி சாப்பிடுவேன்.. பந்தயமா?

 ம் .. பெட்..

 நல்லா பார்த்துக்க . இந்த ஒரு இட்லி சாப்பிட்ட இதே வாயால ஒவ்வொண்ணா மீதி 19 இட்லியையும் சாப்பிடறேன்


13. ஹலோ மிஸ்.. நில்லுங்க.. நான் தொறக்கனும்

 என் கிட்டே என்ன திரக்கப்போறீங்க?


 என் சாவி உங்க இடுப்புல மாட்டிக்கிச்சு



14. சாணியை தொட்டு புரோட்டா சாப்பிடறேன் .. பந்தயமா?

 ம்


 இடது கையால சாணியை தொட்டுக்கறேன். வலது கையால  புரோட்டா சாப்பிடறேன், எப்படி?


15. ஹீரோயின் - உனக்கும் எனக்கும் மேரேஜ் ஆகாம இருக்கலாம்,. ஆனா எனக்கும் உனக்கும் மேரேஜ் ஆகிடுச்சு ( யாருக்காவது புரிஞ்சுதா/? )




16.  யோவ்,. இன்னும் 2 நாள்.. ரெண்டே நாள்ல உன்னை கதற கதற..


 அய்யய்யோ..


 காதலிக்க வைக்கறேனு சொல்ல வந்தேன்யா.. ஏன் பதர்றே?



17. யோவ், என்னய்யா,வாய்ல வாய் வெச்சு  தண்ணியை எடுப்பேன்னு பார்த்தா?

 எனக்கு நீச்சல் தெரியாது.. நீ சொல்ற மாதிரி செய்ய நீ என்ன பம்ப் செட்டா?


18. அறிவே இல்லாத உனக்கு ஏழாம் அறிவு கெட்டப்பா?



19. சிங்கம்புலி - வில்லன் ஆட்கள் உதைக்க பறந்து வந்து ஒரு கில்மா லேடியின் கன்னத்தில் பட்டு



 ஃபிளையிங்க் கிஸ் கேள்விப்பட்டிருக்கேன். இப்போதான் முத முறையா குடுக்கறேன், ஆஹா!



20. டேய், வீரப்பா, நம்பியார், அசோகன், எல்லா வில்லன்களும் அந்த வீட்ல தான் இருக்காங்க


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVP4z_kJ9lVpIVfjaLowNsN8TD8kFLkvTyIPTisz5JBmZoU9UhUmeVF61P_ei3k8X01D4gRmyYAWu2zuXnEV-N0tGbnQagLzzHkmRQLA3SwI2DIx50C20hXCZZPWsJPInYDYiXK8a1mouc/s1600/Sunaina-hot-cleavage.jpg



21.  முடி இருந்தா உறவு நீடிக்கும் மேடம்..



 யோவ்.. அப்போ ஏன் இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை, இலங்கைப்பிரச்சனை வருது? லாரி நிறைய முடி லோடு ஏத்தி அனுப்பி உறவை நீடிக்க வைக்கலாமே?


22. இங்கே எல்லா விதமான பிரியாணியும் கிடைக்கும்.. நிற்பன, நடப்பன, பறப்பன, ஊர்வன


 அப்போ ஏரோபிளான் பிரியாணி குடு , அதும் பறக்கறதுதானே?


23. கருணாஸ் - நான் பண்ணுனது சரியா?

 நீ அந்தப்பொண்ணு கிட்டே செஞ்சதுல குழந்தை மட்டும் தான் பிறக்காது , மத்ததெல்லாம் ம் ம் ஆகி இருக்கும்



24. அடுத்தவங்களூக்காக எப்போ நீ கவலைப்படறியோ அப்பவே நீ பெரிய ஆள் ஆகிட்டே..




சி.பி கமெண்ட் - டி வி ல போட்டாக்கூட பார்த்துடாதீங்க.. மரண மொக்கை.. ஈரோடு ஆனூர் தியேட்டர்ல பால்கனி வழக்கமா 50 ரூபா தான். ஆனா இன்னைக்கு 70 ரூபாயாம்.. பழிக்குப்பழி  தியேட்டரை விட்டு வெளீல வர்றப்போ 50 பேரை வீட்டுக்கு திருப்பி அனுப்பிட்டுதான் வர்றேன்.ஒரு நல்ல படத்தை போய்ப்பாருங்கன்னு சொல்ற  உரிமை இருக்கும்போது ஒரு குப்பைப்படத்தை பார்த்து அவங்க காசு வேஸ்ட் ஆகக்கூடாதுன்னு நினைக்கறதும் ஒரு சமூக சேவை தான்.



 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 38


 குமுதம் ரேங்க் - சுமார்

http://moviegalleri.net/wp-content/gallery/pandi-oli-perukki-nilayam-movie-stills/pandi_oli_perukki_nilayam_movie_stills_sabarish_sunaina_2279e53.jpg


 டிஸ்கி -

1. EK THA TIGER - ரொமான்ட்டிக் ஆக்‌ஷன் - பாலிவுட் சினிமா விமர்சனம் 

 

2. நான் - NON-STOP க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம் 

http://www.adrasaka.com/2012/

08/non-stop.html

 

3. அட்டகத்தி - சினிமா விமர்சனம் 

http://www.adrasaka.com/2012/

08/blog-post_15.html
--

 

 http://tamilogallery.com/albums/Sunaina/Sunaina_Hot_Photos4.jpg