Showing posts with label SELAM. Show all posts
Showing posts with label SELAM. Show all posts

Monday, December 31, 2012

திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரவிடக்கூடாது. - சகாயம் ஐ ஏ எஸ் பேட்டி

http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/01/sagayam.jpg 

சேலம்:""உத்திரமேரூர் கல்வெட்டில், மக்கள் பிரதிநிதிகளாக வருபவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும். அதற்கான தகுதி நிர்ணயம் குறித்த தகவலும், திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரவிடக்கூடாது. நேர்மையானவர்கள் மட்டுமே பதவிக்கு வரவேண்டும் என்பது பற்றியும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதுபோல் ஆட்சியாளர்கள் வரவேண்டும்,'' என,கோ ஆப்டெக்ஸ் மேலான் இயக்குனர் சகாயம் பேசினார்.

லஞ்ச, ஊழலற்ற சமுதாயம் என்ற தலைப்பில், சேலம் குஜராத்தி திருமண மண்டபத்தில், சிறப்பு கருத்தரங்கு நேற்று நடந்தது. கோ ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம் பேசியதாவது:ரத்தம் சிந்தி வாங்கிய தேசத்தில், லஞ்சமும், ஊழலும் பெருகி கிடக்கிறது. நாமக்கல் கலெக்டராக பணியாற்றியபோது, ராசிபுரத்தில் கல்லூரி விழாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்ற, இரு வாலிபர்கள், அங்கும், இங்குமாக ஓடியபடி சென்றனர்.

அவர்களை மறித்து, என்னுடைய உதவியாளர்கள் சோதனை செய்தபோது, அவர்கள் மது அருந்தியிருந்ததும், லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதும் தெரியவந்தது. உடனடியாக அவர்களை எச்சரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.அப்போது, அதில் ஒரு வாலிபர், 100 ரூபாயை எடுத்து என்னுடைய கையில் கொடுத்தான். லஞ்சம் கொடுத்தால், தப்பித்து விடலாம் என்ற பழக்கத்தை, இந்த சமூகம் உருவாக்கியுள்ளது.

மூன்று ஆண்டுக்கு முன், அப்போதைய முதல்வருக்கு கடிதம் எழுதினேன். அதில், "நான் சரியாக வேலை செய்யவில்லையென்றால், என்னை பணி நீக்கம் செய்யுங்கள். ஜாதி, மத ரீதியாக யாருக்காவது உதவியிருந்தால் கைது செய்யுங்கள். 19 ஆண்டு காலத்தில், யாரிடமாவது, ஒரு ரூபாய் லஞ்சமாக பெற்றிருந்தால், தூக்கிலிடுங்கள்' என, கூறினேன். என்னுடைய இருக்கைக்கு பின்புறம், "லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' என்ற வாசகம் தான் இருக்கும்.

உத்திரமேரூர் கல்வெட்டில், அப்போதே, மக்கள் பிரதிநிதிகள் எப்படியிருக்க வேண்டும். அவருக்கு உண்டான தகுதிகள் என்னன்ன, திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரக்கூடாது. நேர்மையானவர்கள் மட்டுமே வரவேண்டும் என, கூறப்பட்டுள்ளது.ஊழல் நாடுகள் பட்டியலில், இந்தியா, 140வது இடத்தில் உள்ளது. இது, இந்தியாவுக்கு நேர்ந்த தேசிய அவமானம். அரசு பள்ளிகளில், முன்பு ஆய்வு செய்தபோது, அங்குள்ள மாணவர்களிடம், உன்னுடைய லட்சியம் என்னவென்று கேட்டால், சம்பாதித்து அரிசி வாங்க வேண்டும் என்கின்றனர். அந்த அளவுக்கு வறுமையின் பிடியில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

லஞ்சத்தை ஒழிப்பதை பற்றி பேசுகின்றனர், ஆனால், பின்னர், அவர்களே லஞ்ச ஒழிப்பு போலீஸில் சிக்குகின்றனர். ஊழல், லஞ்சம் என்பது புற்றுநோய் போன்றது. அது தொற்றுநோயாக உருவெடுத்து, தேசத்தையே அழித்து விடும்.

தமிழகத்தில், கடந்த காலங்களில், 40 சதவீதம் இருந்த ஊழல், தற்போது, 80 சதவீதமாக உயர்ந்து விட்டது. கோவணம் தான், இன்றைய விவசாயியின் தேசிய அடையாளமாக மாறிவிட்டது. ஒவ்வொரு மாணவரும், லஞ்சம், ஊழலற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என, சபதம் ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.ஜெயராம் கல்லூரி தலைவர் ராஜேந்திரபிரசாத், கன்ஸ்யூமர் வாய்ஸ் பூபதி, ஐந்தாவது தூண் ராசமாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.



 மக்கள் கருத்து =


 1. என்றோ ஊழலுக்கு படித்து இருந்த அன்பழகனும், நெடுஞ்செழியனும், இன்னும் பலரும் பலியாகி விட்டதின் பலன் இன்று ஊழல் பெருத்து விட்டது.எங்கும் எதுலும், எவரிடமும் ஊழல்.மாற்றுவது கடினம்.அரசன் எவ்வழி மக்கள் அவ்வ்வழி. 



2. என்றோ ஊழலுக்கு படித்து இருந்த அன்பழகனும், நெடுஞ்செழியனும், இன்னும் பலரும் பலியாகி விட்டதின் பலன் இன்று ஊழல் பெருத்து விட்டது.எங்கும் எதுலும், எவரிடமும் ஊழல்.மாற்றுவது கடினம்.அரசன் எவ்வழி மக்கள் அவ்வ்வழி. 



3.  CGS 
Kumar எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளை குறை சொல்வது நம் பழக்கம் ஆகி விட்டது. நம்மில் எத்தனை பேர் சுத்தம்? கடையில் பொருள் வாங்கும்போது ரசீது கேட்டு வாங்குகிறோமா? இதுவும் வரி ஏய்ப்புதானே? எத்தனை டாக்டர் பில் கொடுக்கிறார்கள்? தனியார் பள்ளியில் எவ்வளவு பணம் கொடுத்தாவது பிள்ளைகளை படிக்க வைக்கவில்லையா? சாலை விதிமுறைகளை எத்தனை பேர் கடை பிடிக்கிறோம்? ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி கொள்வதில்லையா? நம் குறைகளை மறைக்க அடுத்தவர்களை குறை சொல்வது பழக்கம் ஆகி விட்டது



4. சகாயம் சொல்வது மிகவும் சரியானது ,.,. ஆனால் ரவுடி தனம் இருந்தால் தான் அரசியலில் இருக்க முடியும் என ஆகிவிட்டது,. நல்லவர்களுக்கு vote போட ஆள் இல்லை,. மொழி, இனம் என மகளை பிரிக்கும் அரசியல் வாதிகள் , புதிய ரத்தம் வந்தால்தான் இது சாத்தியம்,. சில IAS காரர்கள் மதம் மாற்றுவதில் கவனம் செலுதுகின்றேனர்,. அரசாங்க வேலையை சொந்த உபயோகம் சைகின்றேனர்,. 



5. ஊழல் நாடுகள் பட்டியலில், இந்தியா, 140வது இடம் இதுகூட உலக சாதனைதானே.இந்த ஊழல் பட்டியல் நிச்சியம் அதிகாரிகள் மக்களை தாண்டி அரசியல் வியாதிகள்தான் முன்னணியில் இருப்பர் அவர்களில் முதல் ஐந்து இடங்களில் 1 தாத்தாவின் திமுக.. 2 தியாக தீபத்தின் காங்கிரஸ். 3 மாயவதி கட்சி. 4லல்லு கட்சி. 5 அம்மா கட்சி. என்று வகுத்தாலும் தமிழனுக்குத்தான் முதலிடமும் கடைசி இடமும்.



6. சகாயம் சொல்வது கேட்க கஷ்டமாக இருக்கிறது ஊழல் ஒழிப்பை பற்றிபேசும் அதிகாரிகள் சில நாட்களில் லஞ்ச ஊழல் ஒழிப்பு போலீசிடம் சிக்குகிறார்கள் என்றார். உண்மையில் நடப்பது என்ன?( நேர்மையான) அதிகாரிகள் மிக குறைந்த அளவில் இருப்பவர்களை, மாட்டி விட்டு அசிங்கபடுத்த ஒரு கூட்டம் அரசு அலுவலகங்களில் முழு நேரமாக வேலை செய்வது திரு சகாயத்திற்கு தெரிந்து இருக்க வேண்டுமே என் அனுபவத்தில், தற்போது வேலைக்கு சேரும் அரசு ஊழியர்கள் அதிகபட்சம் நேர்மையாகவே இருக்கிறார்கள். 



என் 30 வருஷ அரசு பணி அலுவலகத்தில், தற்போது வேலைக்கு சேரும் இளைஞர்கள் கொஞ்சம் முரட்டு தனமாக பேசுகிறார்களே தவிர, லஞ்சத்தை கேட்பதில்லை அவர்கள் கொஞ்சம் கூட மரியாதையுடன் இனிமையாக பழகினால், இன்னும் 20 ஆண்டுகளில் அரசு பணி நன்றாக ஆகிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது கடந்த 20=30 ஆண்டுகளில், ஊழல் செயல்பாடுகளில் ஈடுபட்டவரை தண்டிக்க உபயோகபடுத்தவேண்டிய சட்டங்கள், பலவும் ஊழலில் ஈடுபடாத உண்மை ஊழியர்களுக்கு எதிராக மிரட்டுவதற்கே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது 



7. பெருசுகள் ரிட்டயர் ஆனபின் பார்க் பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு பேசும் பேச்சு போல இருக்கு. இன்றைய நுகர்வோர் கலாசாரம் பெருகிய காலக் கட்டத்தில் அவனவன் யாரைக் கொள்ளையடித்து ,அதை வைத்து தான் மட்டும் நன்றாக வாழலாம் என நினைக்கும்போது .இதெல்லாம் எடுபடுமா?



 அட தேவாலயங்களில் கூட பாவ மன்னிப்பு கேட்பவர் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக பத்திரிக்கையில் வெளிவந்தது., தான் செய்வதை பாவம் என நினைப்பதே பாவம் என நினைக்கும் காலம் இது .அரசு சம்பளம் வாங்கிக்கொண்டு முழு நேர மதபோதகராக ஒரு சீனியர் ஐ ஏ எஸ் ஆபீசர் பணிபுரிகிறார்.அதனை எதிர்ப்பீர்களா? நீங்க நல்ல உள்ளம் உள்ளதால் சூது வது தெரியாம பேசறீங்க. உங்க போதகர் வேலை பலன் தருவதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவே .செவிடர்கள் காதில் சங்கு ஊதுறீங்க.அவங்க திரும்ப உங்களுக்கு அதையே செய்யாமலிருந்தா சரி 



8. சகாயம் அவர்கள் தவறான இடத்தில் இருக்கிற சரியான மனிதர். இவர் இருக்க வேண்டிய இடம் பள்ளிக்கூடம் அங்கு இளம் வயதில் படிக்கும் மாணவர்கள் மனதில் இது போன்ற விஷயங்களை விதைத்தால் எதிர்காலத்தில் சமுதாயம் பயனடையும். ஊழல்வாதிகள் அரசுயந்திரத்தில் உள்ளவர்கள் தான் திருவாளர் பொது ஜனங்கள் அல்ல இது சாதாரண பொது அறிவு, அதுகூட தெரியாமல் அறிவுரை கூறவரக்கூடாது. கிரனைட் வெட்ட அனுமதி கொடுக்கிறாயா? சரியான விதிப்படி அனுமதி கொடு. அரசு இடத்தை ஆக்கிரமித்து, வீடுகட்டி, மின்சார இணைப்பு பெற்று, குடி நீர் இணைப்பு பெற்று, வரியும் கட்டியபின் சுமார் ஒரு பத்து ஆண்டுகளுக்கு பின் அது ஆக்கிரமிப்பு என்று வந்து அதை இடிப்பதை என்னென்பது. 


இதுவரை இருந்த அதிகாரிகளுக்கு அது தெரியாதா, இல்லை லஞ்சம் பெற்றுக்கொண்டு எல்லாம் செய்து கொடுத்தார்களா, எப்படி எடுப்பது.எத்துனை கட்டடங்களை இடித்து இருப்பீர்கள் இதுவரை அதை அனுமதித்த எத்துனை அதிகாரிமேல் இதுவரை நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். மதுரை ஆட்சியர் அலுவலக எரிந்ததற்கு காரணம் அதில் அதிகாரிகள் இடமாற்றம் , புரோமோஷன் சார்ந்த கோப்புகளே அதிகம் இருந்ததாக நாளேடுகளில் செய்தி வந்ததை பார்க்கும் பொழுது கிரனைட் ஊழலில் சம்பந்தபட்ட அதிகாரிகளை கண்டுவிடுவார்கள் என்று சதி செய்து எரிய விட்டு இருக்கலாம் அல்லவா? அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும். தமிழ்நாட்டில் லஞ்சம் கொடுக்காமல் ஒரு பத்திர பதிவு செய்ய முடியுமா ஒரு சாதாரண குடிமகனால். 



நன்றி - தினமலர் 

Wednesday, May 30, 2012

ஃபேஸ்புக் மூலம் ஏமாற்றப்பட்டு கற்பை இழந்த சேலம் பெண்கள்-ஜூ வி கட்டுரை


ட்பு வட்டங்களுக்குத் தளமாக இருக்கும் ஃபேஸ்புக், சில நேரங்களில் தப்பு வட்டங்களுக் கான களமாகி விடுகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் சேலத்தைச் சேர்ந்த லலிதாவும் கன்னியாகுமரியை சேர்ந்த மேரியும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). பேஸ்புக் மூலமாக அறிமுகம் ஆன நண்பர்களிடம் தங்களையே இழந்து நிற்கிறார்கள் இருவரும்! 


கடந்த 24-ம் தேதி வேலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வந்து புகார் கொடுத்தவர்கள் சார்பில் பேசினார் வழக்கறிஞர் மணிகண்டன். ''லலிதா, மேரி இருவரும் தோழிகள், சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். இருவரும் ஃபேஸ்புக்கில் இருக்கின்றனர். ஃபேஸ்புக் மூலமாக லலிதாவுக்கு வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் பழக்கமானார். சதீஷின் நண்பர் ஆனந்தபாபுவும் லலிதாவிடம் அறிமுகமாக, மேரியும் அவர்களின் நட்பு வட்டத்தில் சேர்ந்துள்ளார்.

 சிவப்புச்சட்டை போட்டு நான் டேஞ்சரான ஆள்னு சொல்லாம சொல்றாரு போல அண்ணன் பார்க்க பாரதிராஜா பையன் மனோஜ் மாதிரி இருக்காரு
அடுத்து செல்போன் பேச்சாக இவர் கள் நட்பு வளர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் ஒரு நாள் லலிதாவையும் மேரியையும் பார்க்க ராணிப்பேட்டை நண்பர்கள் காரில் சென்னைக்கு வந்தனர். இருவரையும் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் தங்கக் கோயிலுக்குக் கூட்டிச் செல்வதாக அழைத்துப் போனார்கள். 



சி.பி -   ஹா ஹா >>வேலூர் மாவட்டத்தில் இருக்கும் தங்கக் கோயிலுக்குக் கூட்டிச் செல்வதாக>>> 

 தங்கக்கோயிலா? அங்கே போய் தங்கறதுக்கு கோயிலா?


ஆனால் அவர்கள், ராணிப்பேட்டையில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துப் போயி ருக்கிறார்கள். அங்கே ஆனந்த பாபு - மேரி ஓர் அறையிலும், லலிதா - சதீஷ் ஓர் அறையிலும் தங்கி இருக்கின்றனர். காதலிப்பதாகவும் உருக்கமான வார்த்தைகளால் சொல்லி இருக்கிறார்கள். தங்களை நிச்சயமாகத் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எண்ணி, இருவரும் அவர்களிடம் ஏமாந்து போய் இருக்கின்றனர். பிறகு, 'எப்போது திருமணம்?’ என்று பெண்கள் இருவரும் நச்சரித்திருக்கிறார்கள்.


சி.பி - ஏம்மா, அப்பாவிப்பெண்களே! அந்த நச்சரிப்பை மேட்டர்க்கு முன்னாலயே பண்ணி இருந்தா தக்காளிங்க 2ம் ஓடி இருக்குமே?


 ஆள் எஸ் ஜே சூர்யா மாதிரியே இருக்காரு. அப்பவாவது பொண்ணுங்க ஜாக்கிரதையா இருந்திருக்கலாம்
'உங்களிடம் நாங்கள் டைம் பாஸ்க்குத்தான் பழகினோம். உங்களை எங்களால் திருமணம் செய்ய முடியாது. மீறி ஏதாவது பிரச்னை செய்ய நினைத்தால், உங்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் எங்களிடம் இருக்கிறது, அதை ஃபேஸ்புக்கில் போட்டுவிடுவோம்’ என்று மிரட்டி இருக்கிறார்கள்.



சி.பி - உடனே பொண்ணுங்களும் மிரட்டி இருக்கனும்.. தம்பி.. உன் ஆபாச ஃபோட்டோவும் இருக்கு அதை நாங்க நெட்ல போட எவ்ளவ் நேரம் ஆகும்? எங்க முகத்தை மறைச்சு உன் முகம் தெரியற மாதிரி போட்டுடுவோம்னு மிரட்டி இருக்கலாம் , பய புள்ளங்க பயந்து தெறிச்சிருக்கும்

அவர்களின் நண்பர்களான திலீப், லூயிஸ், ஆனந்த நித்தியானந்தம் ஆகியோரும் இந்தப் பெண் களை மிரட்டவே, தாங்கள் ஏமாற்றப்பட்டதாக வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள் ளார்கள். இப்போது ஆனந்த், சதீஷ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்'' என்றார் கொந்தளிப்பாக.




வேலூர் காவல் துறையினரிடம் விசாரித் தோம். ''சதீஷ் மிகவும் டிப்டாப்பாக இருப்பான். பெண்களை ஏமாற்றுவது சதீஷ§க்கும் அவனது நண்பன் ஆனந்த பாபுவுக்கும் கை வந்த கலை. ஏற்கெனவே சென்னையைச் சேர்ந்த  விஜயலட்சுமியை ஃபேஸ்புக் மூலம் தொடர்புகொண்டு, சதீஷ் ஏமாற்றி உள்ளான். 'உன்னுடைய ஆபாசப் படம் என்னிடம் இருக்கிறது. இரண்டு லட்சம் தர வேண்டும்’ என்று மிரட்டி, 50,000 ரூபாய் வாங்கியுள்ளான். மேலும் மிரட்டவே, விழுப்புரம் மாவட்டத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். இதுபோன்று நிறையப் பெண்களை ஏமாற்றி இருக்கிறார்கள். எங்களின் கணிப்புப்படி 15-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாந்திருப்பதாகத் தெரிகிறது'' என்று சொன்னார்கள்.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் வேலூர் மாவட்டத்தில் யாஸ்காம் இன்டர்நெட் சென்டர் நடத்திவரும் ஆஸாம் இர்பான், ''பெண்கள் ஃபேஸ்புக்கில் எந்தக் காரணம்கொண்டும் யாருக்கும் தொலைபேசி எண்ணைத் தரக்கூடாது. நன்கு அறிமுகமான நபர்களை மட்டுமே தங்களுடைய நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தனது புகைப்படங்களையோ அல்லது குடும்பத்தாரின் புகைப்படங்களையோ ஃபேஸ்புக்கில் வெளியிடக்கூடாது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் சாட் செய்யாதீர்கள்'' என்று ஆலோசனைகள் சொன்னார்.



பெண்களே உஷார்!