Showing posts with label ராஜா ராணி. Show all posts
Showing posts with label ராஜா ராணி. Show all posts

Monday, September 30, 2013

சந்தானம் காமெடி பஞ்ச்சஸ் @ ராஜா ராணி

 

1. பேட்டரியே நிக்காத செல்லுக்கு டூயல் சிம்மு!


2 அவங்கப்பன் நெறைய டிவி சீரியல் பாப்பான் போல அதுல வர மாதிரியே பேசுறான்



3 மேரேஜ் ஆன பொண்ணுங்க விட்டுக்குடுத்து போகல பசங்க துட்டுகுடுத்து போயிடுவாங்க!


4 பேருதான் காராசேவ் ஆனா அத சேவ் பண்ண ஆள் இல்லையே


5 சில நேரத்தில ஆம்பளைங்க எடுக்கிற முடிவு கூட சரியா இருக்கும்


6 டேய் , ஜானைக்காணோம்

அவனைக்காணோம்னா அவனைப்போய்த்தேடுடா , என் கிட்டே ஏன் வந்தே?



7 ஒயின் ஷாப் போலாமா?

நான் ஒரு பீர் தான் அடிப்பேன்

செருப்பாலயே அடிப்பேன் , நாம போறது அவனைத்தேட



8 சின்ன வயசுலயே ஜெகன் மோகினி படத்தை நாங்க பேய்ப்படம்மாதிரி பார்ப்போம், நீ ஜெயமாலினியைப்பார்த்தவன் தானே ?


9 அம்பது லட்சம் ரூபா செலவு பண்ணி மேரேஜ் பண்ணி வெச்சா அங்கே போய் வேலை செய்யாம ஐயாயிரம் ரூபா இன்க்ரீமெண்ட்டுக்காக ஆஃபீஸ் வந்து இங்கே வேலை செஞ்சுட்டு இருகான் ராஸ்கல்



10 இங்கே வந்து நைட் ஷிஃப்ட் பார்க்கறியே , வீட்ல உனக்குப்பதிலா வேற யாராவது வந்து நைட் ஷிஃப்ட் பார்த்துடப்போறான்



11 ஹனிமூன் எனக்கு ஆகலை , நீங்க ஃபிரீயா மிஸ் ?



12 மேடம் , (என் தலை வழுக்கைன்னு சொல்லிக்காட்ட ) கிரவுண்ட் காலியாத்தானே இருக்கு , கிரிக்கெட் விளையாடலாமா?னு கூப்பிடறான்



13 மிஸ் , காரசேவ் சாப்பிடறீங்களா?


ச்சே ச்சே எனக்கு பிடிக்காது


இந்த மூஞ்சிக்கே உன்னைப்பிடிக்கலையே .. ....



14 டேய் , நீ ஆம்ப்ளையா இருந்தா நேர்ல வா

மிஸ் , நீங்க ஆம்பளையா இருந்தா வாங்க



15 மிஸ் டர் , கஸ்டமர் கேர்னா என்ன அர்த்தம் ?


வாடிக்கையாளர் சேவை மையம்

ஓக்கே , எனக்கு நச்னு 4 கஸ்டம்ர் அரேஞ்ச் பண்ணிக்குடு


அய்யோ , அக்கா நாங்க அந்த மாதிரி ஆள் இல்லீங்கக்கா



16 அவன் ரொம்ப பயந்தவனுங்க


ஓஹோ , அப்போ நீ தைரிய சாலியா?


நான் அவனை விட பயந்தவனுங்க ஹி ஹி



17 யோவ் , ஆம்ப்ளைங்க அழக்கூடாது 



நான் ஒண்ணும் அழலையே , கண் வேர்க்குது அவ்ளவ் தான்



18 டேய் ,. ஒவ்வொரு டைமும் மூடிட்டுப்போன்னு சொன்னாத்தான் மூடிட்டுப்போவியா?

யக்கா , கண்டிப்பா மூடிட்டுப்போறேனுங்க



19 மிஸ் , உங்க வாய்ஸ் சோ க்யூட்


யோவ் , நான் ஆம்பளை



20 நாம 2 பேரும் மேடு ஃபார் ஈச் அதரா?

உலகத்துல யாருமே பிறக்கும்போதே மேடு ஃபார் ஈச் அதரா பிறப்பதில்லை 





21 நம்ம கூட இருக்கறவங்க நம்மை விட்டுப்போயிட்டா நாமளும் போய்டனும்னு அவசியம் இல்லை


22 வாட்ங்கற ஒரு வார்த்தையை வெச்சு எங்களை வாட்டி எடுத்துட்டான்



23 சார் , எதிர் வீட்டு ஆண்ட்டி சேனைக்கிழங்கு வாங்கிட்டு வரச்சொன்னாங்க , பர்மிஷன் அல்லது லீவ் கொடுத்தா போய்ட்டு வந்துடுவேன்



24 யாரும் இந்த அசிங்கத்தை பார்த்துடலையே?


280 பேர் மட்டும் பார்த்தாங்க



25 டேய் , ஏன் இவ்ளவ் சந்தோஷமா இருக்கே? உன் பொண்ட்டாட்டியைக்கொன்னுட்டியா?



26 அய்யோ , ஃபிளாட்டோட செகரெட்டரி பார்த்துட்டாரு

அவன் கிடக்கான் , அவன் வீட்டுக்குள்ளே இன்னொரு ஆஃபீஸ் செகரெட்டரியை வெச்சிருக்கான் தெரியுமா?



27 மல்லிகைப்பூ வாங்கிட்டு உன்னைப்பார்க்க வீட்டுக்கு வர வேண்டியவன் சரக்கு வாங்கிட்டு என்னைப்பார்க்க வரான் 


28 ஆல் பியூட்டி பார்லர்ஸ் ஒன் மன் த் லீவ் விட்டுட்டா எது எது ஒரிஜினல் அழகுன்னு தெரிஞ்சுடும் , எல்லாம் மேக்கப் 



29 ஃபிகருக்காக நாம அடிச்சுக்கக்கூடாது , ஆனா ஃபிரண்ட்சுக்காக அடிச்சுக்கலாம் 


30 டேய் , நீ எல்லாம் குடும்பம் நடத்திப்பாரு , எவ்ளவ் செலவு ஆகுதுன்னு அப்போத்தான் தெரியும்  



டாடி , நீயும் ஃபிரண்ட்ஸ் கூட சினிமாவுக்குப்போய்ப்பாரு , அப்போத்தான் எவ்ளவ் செலவு ஆகும்னு உனக்குத்தெரியும் 



31 இந்தப்பொண்ணுங்க வீட்டுக்குப்போய் பார்த்தாத்தான் தெரியும் அவங்க ஆடும் ஆட்டம், அட்டர் டைம்ல அஞ்சு சாவு விழுந்த மாதிரி என்னமா ஆடறாங்க ? 


32 உன் சித்தப்பா வீட்ல என்ன கூட்டம் ? அவமானம் தாங்க முடியாம தூக்கு போட்டு செத்திருப்பாரா?  

அந்த நாய் அப்படி எல்லாம் பண்ண மாட்டானே? 



33 ஆஃபீஸ் அட்ரஸ் , பேரு எல்லாம் தந்தா நான் ஃபிரீயா இருக்கும்போது உங்களை வந்து பார்ப்பேன்


மச்சி , நீ எப்பவும் ஃபிரியாத்தானே இருப்பே?



34 நைட் பேசி முடிச்சுடுறேன்

நீ ( அவளை ) முடிச்சுடுவேன்னு தெரியும் , பேசிட்டியா? 



35 இத்தனை பேரு இருக்கீங்க , இதுல யாரு ஜான் ?

எல்லாரையும் விட ஒரு ஜான் உயரமா இருக்கானே அவன் தான் ஜான்



36 என் கிட்டே இல்லாதது அந்த நாய் கிட்டே என்ன இருக்கு ? முதல்ல அந்த நாயை கரெக்ட் பண்ணனும்


37 பூஷனா? புருஷனா>?


2ம் 1 தான் , எத்தனை செல்வ ராகவன் படம் பார்த்திருக்கேன்


38 அடி வாங்கவே ஆன் த வே வந்துட்டு இருக்கான் பா



39 டேய் இரு இரு , அவன் இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வர்றான்


40 டேய் நான் என்ன குடிகாரனா> ?

பின்னே ? குல்பி ஐஸ்காரனா? 





41 ஒரு பொண்ணு அழுதா யாரோ ஏமாறப்போறாங்கன்னு அர்த்தம் , ஒரு பையன் அழுதா அவனை ஒரு பொண்ணு ஏமாத்திடுச்சுன்னு அர்த்தம்



42 சும்மாவே அவ பிரதர் பிரதர்னு கூப்பிட்டு வெறுப்பேத்துவா , அடுத்து ஃபாதர்னு கூப்பிடப்போறானு பயமா இருக்கு 


43. லவ் பெயிலிருக்கு அப்பறம் லைப்'பே இல்லைனா 25வயசுக்கு மேல எவனும் இங்க உயிரோடவே இருக்க மாட்டான்!



44 ஊருக்கே பருப்ப இருந்தாலும்,வீட்டுக்கு துடப்பக்கட்டதான்



45 நீ என்னிக்கு லவ்வ சொல்றியோ அன்னில இருந்து உன் லைஃப் ஸ்டார்ட் ஆயிரும்.



46 லவ்க்கு அப்புறம் ஒருத்தன் குடிச்சானா லவ் பெயிலியர் ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் ஒருத்தன் குடிச்சானா லைப்பே பெயிலியர்



47 டேய் மாப்ளை , என்னடா புது நெம்பர்ல இருந்து கூப்பிடறே? 

என் நெம்பர்ல இருந்து கூப்பிட்டாத்தான் எடுக்க மாட்டேங்கறியேடா ? 



48 சார் , என்ன சார் இப்படிச்சொல்லீட்டீங்க, உங்க மூஞ்சியைப்பயன் படுத்தி முந்நூறு குழந்தைகளூக்கு சோறு ஊட்டலாமே? 



49. இது தான் நம்ம ஃபேவரை ட் ஐட்டம் 


எதை? இந்த வேலைக்காரியயா சொல்றீங்க?


50 மொட்டை வில்லன் - இந்த மண்டைக்கு படிப்பு ஏறலைங்க 

இந்த மண்டைல பேனே ஏறாது , படிப்பு மட்டும் எப்படி ஏறும் ? 

 

 டிஸ்கி 1 -

ராஜா ராணி - சினிமா விமர்சனம்





டிஸ்கி 2 -

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்



டிஸ்கி 3  - டைட்டிலில் சந்தானம் பஞ்ச் என இருந்தாலும்  இது படத்தில் வரும் மற்ற ரசிக்கும் வசனங்களையும்  உள்ளடக்கியது  

Thursday, September 26, 2013

ராஜா ராணி ஒரு ‘எமோஷனல் காமெடி எண்டெர்டெயினர்’-இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் அட்லீ

ஆர்யா-நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்திருக்கும் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமா கிறார் அட்லீ. இயக்குனர் ஷங்கரின் உதவியாளர். ஒரு படத்தை மக்கள் மத்தியில் எப்படிப் பிரபலப்படுத்தலாம் என்பதில் ‘நிபுணர்’ என்று பெயர் வாங்கியிருக்கும் இவரைச் சந்தித் தோம்.


இயக்குனர் ஷங்கரிடம் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எப்படி அமைந்தது?


"மதுரையில் பிறந்து சென்னையில் படித்து வளர்ந்தவன் நான். பள்ளியில் படிக்கும்போதே டான்ஸ், ஸ்கிட் என கல்சுரல்ஸ் ஆர்வம் அதிகம். சினிமா என்று பள்ளிப்பருவத்திலேயே முடிவு செய்துவிட்டதால் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்தேன். அப்போது ‘தனிமரம்’, ‘என் மேல் விழுந்த மழைத்துளி’ ஆகிய இரண்டு குறும்படங்களை தயாரித்து, இயக்கினேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே உதவி இயக்குனராக சேர வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். இதற்காக ஷங்கர் சாரை சந்தித்து என் குறும் படங்களைக் கொடுத்தேன். அந்தக் குறும்படங்களைப் பார்த்த அவர் உடனடியாக என்னை உதவி யாளனாகச் சேர்த்துக் கொண்டார். அவரிடம் எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் வேலை செய்தேன்."


ராஜா ராணி உங்கள் வாழ்க்கையில் நடந்த கதையா?


"என் வாழ்க்கையில் கொஞ்சம். எனது நண்பர்கள் வாழ்க்கையில் கொஞ்சம், என்னைச் சுற்றி இருப்ப வர்கள் வாழ்க்கையில் கொஞ்சம் என்று என் கண் முன்னால் நடந்த விஷயங்களைத்தான் கதையாக்கி னேன். உறவினர்கள், நண்பர்கள் என்று அம்மா எந்த கல்யாணத்துக்குப் போனாலும் நானும் தொற்றிக் கொள்வேன். அப்படி ஒரு கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடந்தது. இது நடந்த சில மாதங்கள் கழித்து "டேய் அட்லீ… அந்தப் பொண்ணு டைவர்ஸ் வாங்கிட்டு வந்துட்டாளம்ப்பா!" என்று ஒருவர் வேதனையோடு சொன்னது என்னை ரொம்பவும் பாதித்தது. நம்மைச் சுத்தி பெரிய பிரச்சனையா ‘காதலும், மணவிலக்கும்’ இருக்கு! அப்படி இருக்கும்போது கதைய எதுக்கு வெளியே தேடணும்னு இதையே எடுத்துகிட்டேன். இதை பிரச்சனையா பேசாம பொழுது போக்கு திரைக் கதைக்குள்ள பிரச்சனைய மறை முகமா பேசியிருக்கேன். ராஜா ராணி ஒரு ‘எமோஷனல் காமெடி எண்டெர்டெயினர்’



ஆர்யா- நயன்தாராவுக்கு கல்யாணம் என்று பத்திரிகை அடித்து விளம்பரம் பண்ணினது சீட்டிங் இல்லையா?



"கண்டிப்பா இல்லை! என்னதான் நாம காவியம் மாதிரி ஒரு படம் எடுத்தாலும் அது மக்கள்கிட்ட போய் சேரலன்னா இயக்குனர் உட்பட ஒரு 200 பேரோட உழைப்பு வேஸ்ட்! தயாரிப்பாளர் பணம் வேஸ்ட்! இந்தப் படத்தோட முதல் காட்சியே கல்யாணத்துலதான் ஆரம்பிக்குது. அதனாலதான் இந்த விளம்பர உத்தியை கையில எடுத்தேன். நயன் தாரா ஆர்யா இரண்டு பேர்கிட்டயும் அனுமதி வாங்கிட்டுதான் பண்ணி னோம். இப்போ பாருங்க அதுவே பரபரப்பாயிடுச்சு."


நயன்தாராவுக்கு தனிப்பட்ட வாழ்க் கையில ஏற்பட்ட காதல் தோல்விகள் அவர் நடிப்புல எதிரொலிச்சுருக்கா?


"ஷாக்கடிக்கிற கேள்வி. இதுக்கு கண்டிப்பா நான் பதில் சொல்ல விரும்புறேன். நான் திட்டமிட்டு இந்தப் படதுக்கு அவங்கள தேர்வு செய்யல. நயன்தாராவிடம் தமிழ்பொண்ணுக்குரிய எல்லா ஹோம்லியும் அவங்ககிட்ட இருக்கு! எல்லாருக்குமான கதைய சொல்லும்போது நயன்தாராதான் சரின்னு முடிவுபண்ணினேன். ஆனா எதிர்பாராம அவங்க நடிச்ச பல சோகக் காட்சிகள்ல நிஜ வாழ்க்கையில் அவங்க சந்திச்ச காதல் தோல்வியோட வலியை கண் முன்னால பார்த்தேன். ஒரு பொண்ணோட மனக்காயம் நிஜமாவே பதிவாகியிருக்கிற காட்சிகளை ரசிகர்களும் பார்க்கப் போறங்க!"


thanx - the hindu

Sunday, August 25, 2013

ராஜா ராணி

 

 

புது மணமக்கள் அவசியம் பார்க்க வேண்டிய ‘ராஜா ராணி’

newly married couple must see Raja Rani
இயக்குனர் ஷங்கரிடம் எந்திரன், நண்பன் படங்களில் உதவி இயக்குனராய் இருந்தவர் அட்லி. இவர் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ராஜா ராணி. இப்படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: அறிமுகம் இல்லாத இரண்டு பேருக்கு திருமணம் செய்து வைக்கும்போது அவர்களுக்குள் இருக்கும் ஈ‌கோ, திருமணத்திற்கு பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை சிறிது நகைச்சுவையுடன் கூறியிருக்கிறேன். இப்பொழுது பலர் வாழ்க்கையில் நல்ல புரிதலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இல்லாததால் விவாகரத்து அதிகரிக்கிறது. இதைத் தடுக்கும் விதத்தில் ஒரு ஸ்கிரிப்ட். ரொம்ப பாசிடிவ்வான படம். படத்தில் நல்ல புரிதல் தெரியும்.

படத்தின் கதையைக் கேட்டவுடன் ஆர்யா, ‘நான்  செய்கிறேன்’ என்று ஒப்புக்கொண்டார். நயன்தாரா பல பிரச்னைகளை சந்தித்த நேரம் என்பதால் அவரிடம் தயக்கத்துடன் கதை சொன்னேன். கதையைக் கேட்டதும் ‘நான் நடிக்கிறேன்’ என்று அவரும் ஒப்புக்கொண்டார். 3 வருடம் கழித்து ஒரு எனர்ஜியுடன் இப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் ஆர்யா - நயன் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க்அவுட் ஆகியுள்ளது. இப்படத்தில் ஜெய், நஸ்ரியாவும் இருக்கிறார்கள். அவர்கள் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் போல மிகவும் சாதாரணமாக நடித்து அசத்தி இருக்கிறார்கள். ராஜாராணி படம் மக்களிடம் நல்ல அன்பையும் புரிதலையும் ‌சொல்லும் என்பது உண்மை.

இப்படத்தை 87 நாட்களில் முடித்துவிட்டு அடுத்த வேலைக்கு சென்றுவிட்டோம். இந்த படத்திற்கு அதிகம் சப்போர்ட் செய்த முருகதாஸ் சாருக்கு நான் நன்றி சொல்லணும். அவர் இல்லாவிட்டால், நான் நினைத்தமாதிரி இப்படத்தை கொண்டுவந்திருக்க முடியாது. புது மணமக்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்‌.



ராஜா ராணியில் ஜெய்யுடன் நெருக்கமான காட்சிகளில் நயன்தாரா

Jai - Nayanthara close in Raja Rani film
 இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவியாளர் அட்லீ இயக்கும் ராஜாராணி படத்தின் பாடல்கள் நாளை வெளியிடப்பட இருக்கிறது. படத்தில் ஆர்யாவும், நயன்தாராவும் திருமண கோலத்தில் இருக்கும் படங்களை வெளியிட்டு, அவர்கள் திருமணம் செய்யப்போகிறார்கள் என்ற பில்டப்பை எகிற விட்டு ஏகத்துக்கு பப்ளிசிட்டி அடித்து வருகிறார்கள். இதன் அடுத்த பகுதியாக தற்போது ஜெய்யும் நயன்தாராவும் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்டு அடுத்த பரபரப்பை கிளப்பி இருக்கிறார்கள்.

இதுவரை படத்தில் ஜெய் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்றுதான் சொல்லி வந்தார்கள். இப்போதுதான் அவர் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று தெரியவந்திருக்கிறது. நயன்தாரா ஆர்யாவுடன் நெருக்கமாக இருந்த படங்களை விட ஜெய்யுடன் இருக்கும் படம் இன்னும் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இதுவரை வெளிவந்த போட்டோக்களை வைத்து பார்க்கும்போது ஆர்யாவும் நஸ்ரியா நசிமும் நெருக்கமான காதலர்கள். அதேபோல ஜெய்யும், நயன்தாராவும் லவ்வர்ஸ். சந்தர்ப்ப வசத்தால் ஆர்யாவும், நயன்தாராவும் திருமணம் செய்து கொள்ள வேண்டி வருகிறது. அதன்பிறகு அவர்களது பழைய காதலன் காதலி அவர்கள் வாழ்க்கையில் எப்படி வருகிறார்கள். அதனால் கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்னைகள் என்ன என்பது மாதிரியான கதை என்பதை யூகிக்க முடிகிறது.

இவர்களின் பில்டப்புகள் எல்லாம் ஓகேதான். அந்த அளவுக்கு படம் இருக்குமா? என்பதுதான் ரசிகனின் கேள்வி.



ஆர்யாவும், நயன்தாராவும் புகுந்து விளையாடிட்டாங்க! கிளுகிளுப்பேற்றும் ஜெய்!!

Arya-Nayanthara has more romance says Jai
திருமணம் எனும் நிக்கா, ராஜா ராணி ஆகிய இரண்டு படங்களிலுமே ஜெய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நஸ்ரியா நசீம். இந்த படங்களில் ராஜா ராணியில் அவர்களுக்கிடையிலான நெருக்கமான காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால்,. இதுகுறிதது ஜெய்யிடம் கேட்டால், அதெல்லாம் எதுவும இல்லை சார். நஸ்ரியாவுக்கும், எனக்கும் காதல் ட்ராக்தான் என்றாலும், ஊறுகாயை தொட்டுக்கொள்வது போல்தான் எங்களுக்கிடையிலான ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்று சலித்துக்கொள்கிறார்.

அதேசமயம், ராஜாராணியில் ஆர்யா-நயன்தாராவின் ரொமான்ஸ் பற்றி சொல்லும்போது அவரது விழி விரிந்து போகிறது. அடேங்கப்பா, அவங்களுக்கிடையே என்னவொரு கெமிஸ்ட்ரி. அதுவும் புதுசா கல்யாணமான தம்பதிகளாக படத்துல நடிச்சிருக்காங்க. அதனால் அவங்க ட்ராக்குல கிளுகிளுப்புக்கு பஞ்சமே இல்லை. ரெண்டு பேருமே புகுந்து விளையாடியிருக்காங்க.

ஆர்யா, நயன்தாரா ரெண்டு பேரும் ரொம்ப நல்லா ஒத்துழைச்சிருக்காங்க. அதனால் அவங்களுக்குத்தான் இந்த படத்துல அதிக நெருக்கமான காட்சிகள் இருக்கு. அதனால் ஆர்யா-நயனோட அட்டகாசத்தை பார்க்கிறவங்க நானும், நஸ்ரியாவும் நடிச்சதையெல்லாம் நெருக்கம்னு சொல்லவே மாட்டாங்க என்கிறார் ஜெய்.


திருமண உறவு எட்டிக்காயா..? - பதில் சொல்கிறது ராஜா ராணி

Raja Rani explains about marriage life
திரை உலக வல்லுனர்களால் ‘பிரகாசிக்கக்கூடியவர்’ என கணிக்கப்பட்ட அட்லீ இயக்கும் படம் ‘ராஜா ராணி’. ‘ஆர்யா - நயன்தாரா திருமணம்’ விளம்பரம் மூலமாகவும், எந்தக்கதை என்பதை ஊகிக்க வைப்பதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ராஜா ராணி. தன்னைப்பற்றியும் தன் படத்தைப்பற்றியும் படத்தின் இயக்குனரான அட்லீ மனம் திறக்கிறார்.

இது திருமணத்திற்குப் பின் உள்ள காலகட்டத்தைப் பற்றிய குடும்ப படமாகும். திருமண உறவை எட்டிக்காயாய் பாவிக்கும் இளைஞர்களின் மனதை மாற்றும் படமாக இருக்கும். ஆர்யா - நயன்தாரா பாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதிலும், உதவி செய்வதிலும், வாஞ்சையுடன் அழைப்பதிலும் அவர்களுக்குள் திரையைத் தாண்டிய ஒரு உறவு பட்டவர்த்தனமாக இருப்பது தெரிகிறது.

என் விளம்பர யுத்திக்கு அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு மிக அருமை. இந்த படத்தின் கதையைப் பற்றிய சர்ச்சைகள் என்னை காயப்படுத்தினாலும், தரமான படத்தைக் கொடுப்பதே இதற்கான மருந்து என உணர்ந்து உழைக்க ஆரம்பித்தேன். நான் சங்கர் சார் பாசறையில் பயின்றவன் என்ற பெருமை எனக்கு உண்டு. கதையைக் கேட்டவுடனேயே என் மேல் நம்பிக்கை வைத்து படம் பண்ணலாம் என்று கூறி எனக்கு அட்வான்ஸ் கொடுத்த முருகதாஸ் சாரையும் என்னால் மறக்கமுடியாது.

பாக்ஸ் ஸ்டார்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு நான் படம் செய்யும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது என்பதை என்னால் இன்னமும் நம்பமுடியவில்‌லை. ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் மற்றும் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இருவரும் முக்கிய தூண்கள். இப்படத்தில் ஆர்யா, ஜெய், சத்யன், சந்தானம், நயன்தாரா மற்றும் நசிரியா நசீம் ஆகியோர் நடித்துள்ளதை வைத்தே இது எவ்வளவு பெரிய படம் என்பது தெரியவரும்.

ஆகஸ்ட் மாதம் இசை வெளியீட்டு விழாவும், செப்டம்பர் மாதம் படமும் வெளியிடப்பட உள்ளது. இப்படம் நிச்சயம் இளைஞர்களக் கவரும் என்று கூறுகிறார் அட்லீ.

ராஜா ராணி திருமண அழைப்பிதழ்! நயன்தாரா கோபம்!!

Nayanthara angry over Raja Rani wedding invitation
நயன்தாராவுக்கும், ஆர்யாவுக்கும் திருமணம் நடக்கப் போவதாக போலி அழைப்பிதழ் அனுப்பியதால் டைரக்டர் முருகதாஸ் மீது கோபத்தில் இருக்கிறாராம் நயன்தாரா. சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களுக்கு ஒரு திருமண அழைப்பிதழ் வந்தது. அதில் ஆர்யா வெட்ஸ் நயன்தாரா என்ற ஆங்கில வாசகத்துடன் நயன்தாரா விரலில், ஆர்யா மோதிரம் அணிவிப்பது போல் படமும் அதில் இடம் பெற்று இருந்தது. இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு டி.வி. சேனல்கள் செய்தி வெளியிட்டன. இதனால் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து விசாரித்த போது ராஜா ராணி படத்தின் விளம்பரத்துக்கு அது வெளியிடப்பட்டது தெரிய வந்தது. இப்படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். படத்தின் பப்ளிசிட்டிக்காகவும், டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்காகவும் அப்படி ஒரு திருமண அழைப்பிதழை ஏ.ஆர்.முருகதாஸ் அச்சிட்டு வெளியிட்டு இருந்தார். நயன்தாரா ஒப்புதலோடு இதை வெளியிட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் இதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. போலி திருமண அழைப்பிதழ் விவகாரம் நயன்தாராவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாம். ஏ.ஆர்.முருகதாசை போனில் தொடர்பு கொண்டு சண்டை போட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





நயன்தாராவை தூக்கி, தமிழ் நடிகைகளை தாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்! - ராஜா ராணி ஆடியோ விழா அப்செட்!!

Raja Rani movie Audio upset
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், புதியவர் அட்லி இயக்கத்தில், ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில், ஆர்யா-நயன்தாரா, ஜெய்-நஸ்ரியா ஜோடிகள் நடித்திருக்கும் ‘ராஜா ராணி’ திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது!




இவ்விழாவில் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகை நயன்தாராவை தூக்கி பேச வேண்டும், கால்ஷீட் சொதப்பி இவ்விழாவிலும் கலந்து கொள்ளாத நஸ்ரியாவை தாக்கி பேச வேண்டும் என்பதற்காக, பொதுவாக தமிழ் நடிகர்கள், நடிகைகளை காட்டிலும் மலையாள நடிகைகள் பர்பக்ஷன், பஞ்சுவாலிட்டி மிக்கவர்கள், தான் உண்டு தன் வேலையுண்டு என்று அலட்டி கொள்ளாமல் ஷூட்டிங்கிற்கு வந்து போவார்கள். நயன்தாராவும் இதற்கு விதிவிலக்கல்ல! இதை இப்போது புதிதாக வரும் மலையாள நடிகைகளும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேரளாவில் இருந்து சமீபமாக இறக்குமதியாகி இப்படத்திலும் நடித்து கால்ஷீட், சொதப்பிய நஸ்ரியாவை தாக்கினார். கூடவே மற்ற தமிழ் நட்சத்திரங்களையும் தாக்கி பேசியது கோடம்பாக்கத்தில் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது!

அதேமாதிரி ஆர்யா தன் ஜோடி நயன்தாரா பற்றி ஒருவார்த்தை கூட குறிப்பிடாமல் பேசியதும், ஜெய்-நஸ்ரியா ஆப்செண்ட் ஆனதும் ராஜா ராணி ஆடியோ விழாவை அப்செட் ஆக்கிவிட்டது! பாவம்!!


thanx- dinamalar