Showing posts with label பேய். Show all posts
Showing posts with label பேய். Show all posts

Sunday, February 19, 2012

அம்புலி 3டி - திக் திக் திகில் பக் பக் பகீர் -சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLJs3_5j4rQ6BDALEtNy4nir82fOFkmZOFoG6c5YKZL7WKxtOYsdhf9IP0mDvMGr6DbCsCe1dBnGVLUQucVWzcDzfhfE95I7BCCfbawtO_4KyX9J3bWzIkE7EusnC1m6FK28qCI2qCU4A/s1600/20x10.jpgதமிழ்ல ஏகப்பட்ட படங்கள்  ஹாலிவுட் படங்கள்ள இருந்து திருடி வந்தாலும் ,  3டி யா வந்த படம் மை டியர் குட்டிச்சாத்தான்.. 18 வருஷங்களுக்கு முன்னால நான் சின்னக்குழந்தையா இருந்தப்ப வந்த படம், அதுக்கப்புறம் அன்னை பூமின்னு கேப்டன் கேவலமான ஒரு படத்துல நடிச்சாரு.. இப்போ வந்திருக்கற இந்தப்படம் ஓரளவுக்கு நல்ல திகில் படமா , ஆர் பார்த்திபன் குணச்சித்திரமா நடிக்க பல புது முகங்களை வெச்சு எடுத்திருக்காங்க.. நல்ல முயற்சி.. 

படத்தோட கதை என்ன? ஒரு கிராமம்.. அங்கே சோளக்காட்டு பொம்மை இருக்கற வயக்காடு ஏரியா.. அங்கே யாரும் போக வேணாம்.. அம்புலி அடிச்சுடும்னு ஒரு பேச்சு இருக்கு.. நம்மாளுங்க வேணாம்னு சொன்னாத்தான் வேணும்பான்,,

ஒரு லவ் ஜோடி... ஹீரோ அந்த வழியாப்போறப்ப  அவனை அம்புலி துரத்துது.. எஸ் ஆகி வந்து பகல்ல அம்புலி பற்றி விசாரிக்கறாரு..

1957 - ல  வெலிங்க்டன் காலேஜ்ல ஒரு விஞ்ஞானி ஆராய்ச்சில மனிதனோட ஆயுளை அதிகரிக்கும் மருந்தை கண்டு பிடிக்கறாரு.. அந்த காலத்துல எல்லாம் மனிதனோட சராசரி ஆயுள்  100 ஆண்டுகள் ( இப்போ 60 டூ 70) .ஆனா அவர் கண்டு பிடிச்ச மருந்தை சாப்பிட்டா  150 வருஷங்கள் வாழலாமாம்.. 


http://vanavilfm.com/wp-content/uploads/2011/07/ambuli-300x199.jpg

அவர் ஆராய்ச்சிக்கு சோதனை எலியா  கணவன் இல்லாத ஒரே ஒரு பையன் மட்டும் உள்ள கர்ப்பிணிப்பெண்ணை தேர்ந்தெடுக்கறாரு..மருந்தை அந்த பெண்ணுக்கு ஊசி மூலம் செலுத்தறாரு/..

ஏதோ ஒரு மிஸ்டேக்கால அந்த குழந்தை எசகு பிசகா ராட்சசன் போல பிறக்குது.. அம்மா பிரசவத்துல அவுட்.. சூரிய கிரஹணத்தன்னைக்கு பிறந்ததாலதான் அப்படி இருக்குன்னு ஊர் மக்கள் எல்லாம் பயப்படறாங்க.. ( சூரியன்னாலே தமிழ் நாட்டுக்கு கிரஹனம் தான்.)

 அந்தக்குழந்தை தான் அம்புலி.. ஊர் மக்களை அடிச்சு சாப்பிடுது.. நைட் டைம்ல மட்டும்  அதனால பேய்னு மக்கள் நினைக்கறாங்க.. ஆர் பார்த்திபன் தான் அந்த அம்புலியோட அண்ணன்.. 

2 லவ் ஜோடிகள் எப்படி அந்த அம்புலி கிட்டே இருந்து தப்பிக்கறாங்க .. அம்புலியை யார் போட்டுத்தள்ளுனாங்க என்பது க்ளைமாக்ஸ்,.. 

படம் போட்டு முதல் 20 நிமிஷம் ஒண்ணும் புரியலை.. படம் ஊத்திக்கிச்சோன்னு நினைக்கறப்ப 20 நிமிசத்துக்குப்பின் தான் கதை ஸ்டார்ட் ஆகுது.. 

அம்புலியின் அம்மாவாக வருபவர் உமா ரியாஸ்.. கர்ப்பிணிப்பெண்னாக  ஒரு படத்துல நடிச்சாலும் நடிச்சார், எல்லா படமும் அதே ரோல் தான் இனி தருவாங்க போல பாவம்.. ஆனா நல்ல நடிப்பு.. 

ஆர் பார்த்திபன் மொத்தமே 6 சீன்ல தான் வர்றார்.. நடிக்கவெல்லாம் வாய்ப்பு இல்லை.. 

அஜய், ஸ்ரீஜித், சனம் , திவ்யா நாகேஷ் இவங்க தான் படம் பூரா வர்ற காதல் ஜோடி.. குறை சொல்ல முடியாத நடிப்பு.. கதை நடக்கறது  1978 -1979 கால கட்டம் என்பதால் அதே கால கட்ட உடை நடை பாவனைகள், நடனம் எல்லாம் ஓக்கே.. 

http://cmsdata.webdunia.com/tm/contmgmt/photogalleryimg/big/13476B_amb08.jpg

இயக்குநர்கள் (2 பேர்) பாராட்டு பெறும் இடங்கள்

1. திரைக்கதையில் தொய்வில்லாமல் செம விறு விறுப்பாக கதையை நகர்த்திய விதம்.. 

2. பெரிய நடிகர்கள் யாரையும் நம்பாமல் கதையின் மீதும் , இயக்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்து பெரும்பாலும் புது முகங்களை வைத்தே எடுத்தது.. 

3. திருட்டு டி வி டி யை தடுக்க 3 டி யில் படம் எடுத்தது. ( ஒரே கல்லுல 2 மாங்கா.. பர பரப்புக்கு பரபரப்பு.. காசுக்கு காசு)

4. தமிழில் அம்புலி என்றால் நிலா என்ற அர்த்தத்தை மாற்றி யோசித்தது..

5. சந்திர முகி படத்துக்குப்பிறகு ரசிக்கும்படியான ஒரு திகில் படத்தை கொடுத்தது.. 


http://www.mysixer.com/wp-content/gallery/ambuli-first-3d-movie-in-tamil-gallery/jothsha-sanam-setty.jpg

இயக்குநர் கவனிக்கத்தவறிய இடங்கள் +  லாஜிக் மிஸ்டேக்ஸ்


1.  நான் கடவுள் வில்லன் ஆண்டவன் தன் 8 வயசு சிறுமியுடன் காட்டுவழியில் நடக்கும்போது அதுவும் இரவு நேரத்தில் ஏதோ சத்தம் கேட்க அவர் மகளிடம் நீ இங்கேயே இரு என்று அவரை அம்போ என விட்டுட்டு தனியா போறார்.. அம்புலி அவர் மகளை கொன்னுடுது.. எந்த அப்பாவாவது அப்படி செய்வாங்களா?

2.  எல்லா காலேஜிலும் லீவ் 2 மாசம் தான்.. அதிக பட்சம் ரெண்டரை மாதம்.. ஆனால் படத்தில் ஹீரோ படிக்கும் காலேஜில் 4 மாசம் லீவ் அவ்வ்வ்வ்

3.  சோளக்காட்டு வழியா போனா ஆபத்துனு ஊர் எச்சரிச்சும் அது எப்படி சொல்லி வெச்ச மாதிரி எல்லா பக்கிகளும் முறை வெச்சு போய் மாட்டிக்கறாங்க..?

4. மிட் நைட்ல காதலியை யாருக்கும் தெரியாம ரகசியமா சந்திக்க வர்ற காதலன் சத்தம் இல்லாம வந்த வேலையை பார்த்துட்டு போவானா? புல்லாங்குழல் எல்லாம் ஊதிட்டு காட்டிக்கொடுப்பானா? ( கமுக்கமா இருக்க வேணாமா கணேசா? )

5.  தன் குழந்தை அசுரனா, அவலட்சணமா பிறந்தா ஒரு அம்மாவுக்கு 2 வழி இருக்கு 1. எங்காவது அநாதை ஆசிரமத்துல விடுவது.அல்லது பிறந்த இடத்துலயே விட்டுட்டு நைஸா ஓடி வந்துடறது  2.. அந்த குழந்தையை கொலை செய்து விடுவது.. இதெல்லாம் செய்யாம யாராவது தூக்கு போட்டு சாவாங்களா? தான் செத்துட்டா தன் 8 வயசு பையன் அநாதையா மாறிடுவானே?ன்னு நினைக்க மாட்டாங்களா?

6. ஆர் பார்த்திபன் நினைச்சா தன் தம்பியை சின்ன வயசுலயே கொலை செஞ்சிருக்கலாம்.. அதை எல்லாம் விட்டுட்டு பெரிய ராட்சசனா வளர்ந்து ஊர் மக்களை எல்லாம் அடிச்சு உலையில் போடறதை வேடிக்கை பார்த்துட்டு, க்ளை மாக்ஸ்ல ஏன் கொலை செய்ய பார்க்கறார்?

7. அந்த கிராமத்துல அத்தனை பேர்  அநியாயமா செத்தும் போலீஸ் ஏன் எட்டிப்பார்க்கலை? ஹீரோ போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் செஞ்சும் போலீஸ் ஃபோட்டோ ஆதாரம் கேக்குதே ஏன்?

8. காதலை சொல்லி ஒரு நாள் கூட ஆகலை, அதனால நோ கிஸ் அப்டினு ஹீரோயின் பாப்பா சொல்லுது.. ஆனா அதை தொடர்ந்து வர்ற பாட்டில் மெயின் மேட்டர் தவிர எல்லா வேலயையும் ஹீரோ செஞ்சுடறார் எப்டி?

9. ஹீரோ சோளக்காட்டு வழில போறப்ப சைக்கிள விட்டுட்டு ஓடி போறாரு
.. அப்புறம் வேற ஒரு ஃபிரண்டை கூட்டிட்டு அதே இடத்துக்கு பயந்து பயந்து ஏன் வரனும்? காலைல வந்துடக்கூடாதா?

10. கதை 1978 -80 ல நடக்குது.. அடிக்கடி சொதப்பிட்ட என்ற வசனம் வருது.. அந்த வார்த்தை புழக்கத்தில் வந்ததே 2006ல தான் ( வசனத்தில் சொதப்பியது எப்படி?)
http://www.virakesari.lk/cinema/cine-news-img/ambuli/ambuli-_32_.jpg



மனம் கவர்ந்த வசனங்கள்

 1.  காதல்ங்கறது....

டேய் ரோமியோ.. போதும்டா அடக்கி வாசி.. 

2. நான் ஊருக்குள்ள வர்றதை வேட்டு வெச்சு கொண்டாடறாங்க போல.. 

நாய், நரிக்கு கூட அப்படித்தான் செய்யறாங்க.. 

3.  டியர்.. என் ரூமை எப்படி கண்டு பிடிச்சீங்க?

ரோமியோ ஜூலியட் காலத்துல இருந்தே ஹீரோயின் ரூம் மாடில தானே?

4. எதுக்காகடா இங்கே வந்தீங்க?

 சும்மா உங்களை எல்லாம் பார்த்துட்டு போலாம்னு வந்தோம்.. 

நான் என்ன உங்க அத்தை பொண்னா?

5. நான் பூங்காவனத்தோட க்ளோஸ் ஃபிரண்டுங்க..

என்னை விட க்ளோஸா?

6.  டேய்.. வாடா அம்புலியோட அண்ணன் வாரான், போய் ஒளிஞ்சுக்கலாம்.. 

அந்த கட்டிலுக்கு அடில பாம்பு வளர்த்தறேன், பார்த்து கடிச்சுடப்போகுது.. 

7. ஊருக்கே ஊது பத்தி விக்கறவங்க நாங்க,எங்களுக்கே தூபமா?

8. உன் ஸ்கூட்டரை குடு..

ம்ஹூம்

 ம், பெரிய கர்ணனோட கசின் பிரதர்...

9.. டியர்.. நான் எதுக்கு வந்தேன்னு சொல்லு பார்க்கலாம்.. 

 என் கிட்டே உதை வாங்கவா?

10.  மான் கறி சாப்பிடறீங்களா?

அய்யய்யோ நான் சைவம்.. 

மான் கூட சைவம் தான்

11. டியர்,, நீ அங்கே போகாதே அது இனிஷியல் ஸ்டேஜ்ல லவ் பண்றவங்க போக வேண்டிய இடம்.. நாம இங்கே போவொம் ஹி ஹி ஹி 

12. கடவுளை நாம அணுக காரணமே  அவர் மேல எந்த தப்பும் இல்லாம இருக்கறதால தான்.. 


http://cinema.natpu.in/wp-content/gallery/ambuli/29_full.JPG


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - சந்திரமுகி, காஞ்சனா மாதிரி திகில் பட ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம்.. குழந்தைகளும் பார்க்கலாம்.. 

ஈரோடு ஸ்ரீசண்டிகா தியேட்டர்ல படம் பார்த்தேன்

டிஸ்கி - 1 - 3டி கண்ணாடியை போட்டு படம் பார்க்கரது செம ஜாலி.. வலது கண்ணை மூடி பார்த்தா எல்லாம் பச்சையாவும் , இடது கண்ணை மூடிப்பார்த்தா எல்லாம் சிவப்பாவும் தெரியுது.. அதுல ஒரு குழந்தைத்தனமான சந்தோஷம்.. தியேட்டர்ல எல்லாரையும் கண்ணாடியோட பார்க்க செம காமெடி.. 

டிஸ்கி 2 - படம் விட்டு போறப்ப நைஸா அந்த கண்ணாடியை சுடலாம்னு பலர் ஐடியா பண்னாங்க. ஆனா தியேட்டர் வாசல்ல நின்னு கவனமா கலெக்ட் பண்ணிட்டாங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

டிஸ்கி 3 - படம் போட்டு டைட்டில்ல எழுத்து ஓடுனப்ப எனக்கு எழுத்தே தெரியல.. பக்கத்துல ஒரு லவ் ஜோடி உக்காந்திருந்தது./. உங்களுக்கு தெரியுதா ஏதாவதுன்னேன்.. சாரி நாங்க படம் பார்க்க வர்லைன்னாங்க.. அடங்கோ.. 

டிஸ்கி 4 - விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மேட்டர் நான் இந்தப்பட டைரக்டரா இருந்தா அந்த அம்புலி கேரக்டரை பெண் கேரக்டர் ஆக்கி ஸ்பீசஸ் 2 படத்துல வர்ற மாதிரி அம்புலி அந்த வழியா வர்ற ஆண்களை ரேப் பண்ணி கொலை பண்ற மாதிரி காட்டி இருப்பேன் கில்மாக்கு கில்மா, சுவராஸ்யத்துக்கு சுவராஸ்யம்  ஹி ஹி

http://mmimages.mmnews.in/gallery/2012/Feb/2053_L_galvpf.gif

Monday, December 26, 2011

8-ம் நெம்பர் வீடு - திக் திக் திகிலா?டக் டக் டகீலா? ஷக் ஷக் ஷகீலா?- சினிமா விமர்சனம்

http://filmactresses.files.wordpress.com/2010/07/mayuri22.jpg 

ஏதோ ஒரு தெலுங்குப்படத்தை டப் பண்ணி இருக்காங்க, ஆனா அது எந்தப்படம்னு கண்டு பிடிக்க முடியல.. கூகுள்ல தேடுனா படத்தோட ஸ்டில்ஸ் கூட கிடைக்கலை.. ரொம்ப ரொம்ப லோ பட்ஜெட் படம் போல.. ஏதோ திகில் படம்னு டிரெய்லர் பார்த்து போனா செம காமெடிப்பா படம் பூரா.

ஒரு பெரிய பங்களா.. அவங்க ரொம்ப பெரிய பணக்காரங்கன்னு எப்படி கண்டுபிடிச்சேன்னா கணவன், மனைவி, 10 வயசு பையன், 8 வயசு பொண்ணு எல்லாரும் தனித்தனி ரூம்னு தனிக்குடித்தனம் இருக்காங்க .. ஓப்பனிங்க் ஷாட்ல கணவன் ஒரு கனவு காண்கறான்.. அதுல ஒரு பேய் அவனோட மனைவியை  குத்தி கொலை செய்யுது.. ( ஐ ஜாலி)

.திடுக்கிட்டு எந்திரிச்சா மனைவி கண் அடிச்சு கணவனை  கில்மாக்கு கூப்பிடறா.. ஆனா கணவன் போகல.. ( அடடா , வட போச்சே.. )குழந்தைங்க இருக்காங்கன்னு சாக்கு போக்கு சொல்றான்.. சம்சாரத்துக்கு செம கடுப்பு.. 

விடிஞ்சதும் புருஷன் ஆஃபீஸ்க்கு கிளம்பறான்.. அவன் போனதும் நான் கடவுள்ல ஆர்யா வேக வேகமா நடப்பாரே, அதையே அட்டக்காப்பி அடிச்சு ஒரு நடை நடந்து ஒரு சாமியார் வர்றாரு.. அவர் இவங்க வீட்ல சங்கு ஊதிட்டு போறார்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh35bFxEtPcM_6qZr7mi5m0oJHIES9RkNewebLKQCECC1D_-tYqPppWaGVguaJ9M-SquCPm6Hk0ROVn8s6p-UtGyzTDFkyrt1gEzTeDecGQuqt_GTj5tl-FwnhsRMiYr1v7907z5JaxBH8/s1600/as+%252812%2529.jpg

இது ஏதோ கெட்ட சகுனமா படுது..  அவங்க இருக்கற எட்டாம் நெம்பர் வீடு ஏதோ பேய் குடி இருக்கற வீடுன்னு தெரிய வருது.. 

ஒரு டைம் மாடில சம்சாரம் நின்னுட்டு இருக்கறப்ப ஹால்ல புருஷன் கால் சுளுக்கி கீழே விழுந்த வேலைக்காரியை கைத்தாங்கலா தூக்கறதை பார்த்துடறா,, சும்மா சொல்லக்கூடாது வேலைக்காரியா வர்ற குஜிலி குஜாலாத்தான் இருக்கு, ஹி ஹி 

ஹீரோவோட அதாங்க அந்த புருஷனோட ஃபிரண்ட் கோட்டா சீனிவாசராவ்கிட்டே கூட்டிட்டு போறாரு.. அவர் மாந்திரீகம் தெரிஞ்ச ஜோசியர்.. ஹீரொயின் ஃபோட்டோவை பார்த்து ஜாதகம் கணிச்சு சொல்ல சொன்னா செத்துப்போனவங்களுக்கு ஜாதகம் எப்படி சொல்றது?ன்னு கேட்கறார்..இப்போ இந்த ட்விஸ்ட்டோட இடைவேளை.. 

இது வரை ஓக்கே.. அதுக்குப்பிறகு நேரா கதைக்கு வராம இழு இழுன்னு இழுத்துட்டே இருக்காங்க.. வீட்ல இருக்கற சம்சாரம் ஆல்ரெடி இறந்தாச்சு.. இப்போ இருக்கறது  வேற ஒரு ஆவி, சம்சாரம் உடம்புல இருக்கு.. க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம் முந்தி வரை எல்லாரையும் பயப்படுத்திட்டு கடைசில அந்த ஃபிளாஸ்பேக் கதை சொல்றாங்க .

முதுமலைக்காடு மாதிரி சீவாத அடர்ந்த  தலைமுடி கொண்ட கேவலமான ஹீரோவை ஆஃபீஸ் ஸ்டாஃப் ஒருத்தி ஒருதலையா லவ்வறா.. ஆனா பாருங்க ஹீரோக்கு ஹீரோயின் கூட மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சு.. அதனால நோ லவ்னு கட் அண்ட் ரைட்டா சொல்ல்லிடறான்.. அந்த குஜிலி உலகத்துலயே வேற ஆம்பளைங்களே இல்லைங்கற மாதிரி ஹீரோவையே சுத்தி சுத்தி வர்றா.. 

ஒரு நாள் மழை நாள் ஹீரோ வீட்ல தனியா இருக்கார். வில்லி  மழைல நனைஞ்சு கார் பிரேக் ஆகி ஹீரோ வீட்டுக்கு வர்றா.. டிரஸ் மாத்திக்கோன்னு ஹீரோ ஒரு டர்க்கி டவல் தர்றார்.. வில்லி அதெல்லாம் வேணாம்னு எல்லா டிரஸ்ஸையும் கழட்டி கடாசிடறா.. ஹீரோவுக்கு அதிர்ச்சி.. நமக்கும் அதிர்ச்சி, நமக்கு என்ன அதிர்ச்சின்னா குஜிலியோட கெண்டைக்காலை மட்டும் காட்றாங்க.. அடங்கோ.. 

கண்ணா லட்டு திங்க ஆசையா? அதுவும் ஓசில அப்படின்னு வில்லி கேட்காம கேட்ட கேள்விக்கு ஹீரோ நோ சொல்லிங்க், அதனால மனம் வெறுத்து அவ தற்கொலை செஞ்சுக்கறா.. அந்த ஆவிதான் இப்போ ஹீரோவோட மனைவி உடம்புல.. எப்படியாவது ஹீரோவை ஒரு தடவை ரேப்பிடனும்கற உயர்ந்த லட்சியப்பாதைல பேய் ட்ரை பண்ணுது,.. 

அப்புறம் என்ன ஆச்சு? எனக்கென்ன பேச்சு.. கில்மா தான் என் உயிர் மூச்சுன்னு சொல்ற பேய் வரலாறுதான் படம்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNTMGfYsA5bk7gbalUTpgN6fg4HjUAgTDH9MvSEbHUkIRNy4KXiARL2kQGwHw3jrtbIrsxk0s5ajlrbflZeIvHPaRHjjHchok-k53SsZoCOJEDwmPDG-mmkUzD86FBzt5Awz9d-SSlKa-k/s1600/mayuri_asha_saini_latest_hot_stills_11.JPG

இயக்குநரிடம் சில காமெடி கேள்விகள் ( ஜஸ்ட் ஃபார் ஸ்மைலி)

1.  பெண் பேயா வர்ற ஜிகிடிக்கு கத்திரிப்பூ கலர்ல பவுடர் அடிச்சு விட்டு உதட்ல ப்ளூ கலர் ஸ்கெட்ச்சால சில குறுக்குக்கோடுகள் மட்டும் போட்டா போதுமா?அவ்லவ் தான் பேய் கெட்டப்பா? பார்த்தா பயமே வர்லை கிளுகிளுப்புதான் வருது ஹி ஹி 

2. பேய் என்ன மேட்சிங்க் செண்டர் மேனகாவா? வெள்ளை சேலை, வெள்ளை ஜாக்கெட், வெள்ளை பாவாடை, வெள்ளை பிரா இவை எல்லாம் போதாதுன்னு வெள்ளைல தான் ரப்பர் பேண்டும்.. ஒய்?

3. பொதுவா ஆண்களை விட பெண்களூக்குத்தான் விழிப்புணர்வு ஜாஸ்தி, ஒரு சீன்ல ஹீரோ இடி சத்தமும், ஏதோ அழுகுரல் சத்தமும் கேட்டு விழிச்சுடறார், ஆனா அவர் சம்சாரம் விழிக்கலை.. அப்புரம் அவர் தொட்டு ( தோளைத்தான் .) எழுப்புன பிறகும் பாப்பா அசந்து தூங்குது.. ஏன்?

4.  துளசி செடி வாடுனா பேய் இருக்குன்னு அர்த்தமா? ஓக்கே , ஆனா வெச்ச உடனே வாடாம 4 நாள் கழிச்சுதான் வாடுதே அது ஏன்? பேய்தான் 24 மணீ நேர டியூட்டி பார்க்குதே..?

5.  அஞ்சாங்கிளாஸ் படிக்கற பசங்க 2 பேரையும் ஹீரோ நைட் 9 மணிக்கு கூட்டிட்டு வர்றார்.. அது எப்படி? மாலை 3 மணிக்கே ஸ்கூல்  விட்டுடுமே.. டியூஷன்ன்னு சமாளிச்சாலும் அதிக பட்சம் 2 மணீ நேரம்.. 

6. பொதுவா தாயத்துக்களை வலது கைல தானே கட்டுவாங்க, இந்தப்படத்துல ஏன் எல்லாரும் இடது கைல கட்றாங்க?

7. ஒரு சீன்ல ஹீரோ ஹீரோயினை பளார்னு அறையறான், அப்போ டக்குன்னு ஹீரோவோட ஃபிரண்ட் அந்த சீன்ல எண்ட்ட்ரி கொடுக்கறான், எப்படி? அவன் வீடு 2 தெரு தள்ளி இருக்கு.. பெட்ரூம் பக்கமே கட்டில் போட்டு படுத்திருந்தானா?

8. ஹிஸ்டீரியா பேஷண்ட்ஸ் கில்மாவுக்கு லாயக்கில்லை, அதை அவாய்டு பண்ணனும்னு  ஒரு சீன்ல டாக்டர் சொல்றார், இதை அகில உலக கில்மா சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன், அப்படி எல்லாம் ஏதும் தடை கிடையாது.. 

9. தூக்கு மாட்டி தொங்க விடப்படும் வேலைக்காரி கண் மூடி, வாய் மூடி, விரல்கள் எல்லாம் மூடி இருக்கே? பொதுவா தூக்கு போட்டு இறந்தவங்க விழி பிதுங்கி இருக்கும், நாக்கு தள்ளி இருக்கும், கை விரல்கள் விரைச்சபடி இருக்கும்.. 

10. ஹீரோ பெரிய ஸ்போர்ட்ஸ்மேனா? பெட்ரூம்ல கூட ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டுட்டுதான் வர்றார்?

11. அந்த வீணாப்போன சாமியார் அடிக்கடி “எனக்கு எல்லாம் தெரியும்”கறாரு, உன்னால என்னை எதுவும் செய்ய முடியாதுடா டா டா:ன்னு 6 டைம் சொல்றாரு.. படா பேஜாரு அந்தாள் கூட.. அவ்வ் 

12. பேய் கண்ணாடி முன் நின்னா அதனோட பிம்பம் தெரியாதுன்னு ஒரு சீன்ல வருது.. ஹீரோ தன் மனைவி பேய் என்பதை 6 மாசமா கண்டு பிடிக்கலையா? 
13. ராவணன் ராமன் உரு எடுத்து சீதையை  அடைய நினைத்த போது அவன் ராமனின் எண்ணமே வந்ததால் சீதையை அடையலைன்னு புராணக்கதை சொல்லுது, அப்போ ஹீரோயின் உடம்புல பேய் புகுந்ததும் அவங்க உணர்வு தானே வரனும், எதுக்காக குழந்தைகளை பயமுறுத்தனும்?

14. வில்லி பேயோட உன்னத நோக்கமே அகில உலக ஆண் அழகன் ஹீரோவை அடைவதே, அதுக்கான முயற்சி எடுத்தாலாவது சீன் ஏதாவது காட்டி இருக்கலாம், எதுக்காக சம்பந்தம் இல்லாம குழந்தைகளை பயப்படுத்தனும்?

http://2.bp.blogspot.com/-TFI4keDt5TE/TbMJ0gMSWJI/AAAAAAAACbc/TC5hdQSP64k/s1600/Asha+Saini+Hot+Item+Song+Stills+From+Chattam+Movie+_3.jpg

ட்டக்கிலா வசனங்கள்

1. எதுக்காக என்னை தள்ளி விட்டீங்க?

பேசாம போய் படு..

அதைத்தான் டெயிலி பண்ணிட்டு இருக்கேனே?

2.  என் கிட்டே கேள்வி கேட்க கையாலாகாம எதுக்காக குழந்தைகளை அடிக்கறே?

3.  பயப்படாதீங்க, நான் வேணா உங்க துணைக்கு வரட்டா?
உன்னைப்பார்த்தாதான் எனக்கு பயமா இருக்கு.. 


4. துளசி  மாடம் பல்லவிக்கு உயிர், பல்லவி எனக்கு உயிர், அதனால எனக்கு துலசி உயிர் ( அடேய் இதை ஏழாங்கிளாஸ் படிக்கறப்பவே கணக்கு டீச்சர் A=B, B=C SO A=C அப்டினு நடத்திட்டார்டா)


5.  எப்படியோ தாயத்தோட ஆயத்தமா இருக்கே? ( பெரிய டி ஆர் பேரன். எதுகை மோனையோட வசனம் சொல்றாரு)

6.  நீ யாரு?

பேய் - நான் தான்

மந்திரவாதி - அதான் யார்ன்னேன்

பேய் - அதான் நான் என சொல்றேனே? ( அடேய் போதும்)

7- ஹீரோ - என் வாழ்க்கைல கட்டிக்கப்போறவளைத்தவிர எந்தப்பொண்ணையும் ஏறெடுத்துக்கூட பார்க்க மாட்டேன்  ( டேய் நாயே, உன்னை நீ கட்டிக்கிட்ட பொண்ணே ஏறெடுத்துப்பார்க்காதுடா)

 படத்துல 2 குஜிலிங்க , நடிப்பு சுமாரா வருது.. இதே கதையை இன்னும் பெட்டரா பண்ணி இருக்கலாம்..  ஒரே மாதி ஆங்கிள்ல பேயை திருப்பி திருப்பி காட்டிட்டு இருந்தா பயம் போயிடும் என்ற உண்மையை உணரனும்.. ஹீரோ பேரு சின்னா , ஹீரோயின் பேரு மயூரி எனும் ஆஷா ஷைனி
இது டப்பிங்க் படம் என்பதால் இதுக்கு விகடன் மார்க் எல்லாம் இல்ல.. அவங்க போட மாட்டாங்க..


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - திகில் பட விரும்பிகள் இடைவேளை வரை பார்க்கலாம்

ஈரோடு சங்கீதாவில் படம் பார்த்தேன்