Showing posts with label மூன்று பேர் மூன்று காதல். Show all posts
Showing posts with label மூன்று பேர் மூன்று காதல். Show all posts

Monday, May 06, 2013

மூன்று பேர் மூன்று காதல் - சினிமா விமர்சனம்



இந்தப்படத்துல உருப்படியான விஷயம் ஹீரோயினா வரும் 3 உருப்படிகளும் கண்ணுக்கு லட்சணமா இருப்பதும் , ஒளிப்பதிவும்  , யுவன் -ன் இசையும் தான் . அதனால படத்தோட கதைக்கு போகாம நேரடியா 3 ஹீரோயின்களைப்பற்றி முதல்ல பார்த்துடலாம்னா நம்மை எல்லாம் ஜொள் பார்ட்டினு சொல்லிடுவாங்க ( இப்போ மட்டும் என்ன வாழுது ? ) அதனால இந்தப்படத்தோட கதையைஒரு கிளான்ஸ் பார்த்துடுவோம் .


நடிப்பே சுத்தமா வராத களவாணி விமல் தான் மெயின் ஹீரோ .வசனம் உச்சரிப்பே வராத தன்  வாயால  அவர் ஹீரோயின்ட்ட பேசும்போது செம காமெடி .லாசினி தான் இவருக்கு ஜோடி ( பாப்பாவுக்கு என்ன லாஸ் ஆக இருக்கு இனி ? ) ஊர்ல 1008 ஃபிரஸ் பீஸ் இருக்கும்போது ஹீரோ ஆல்ரெடி யாருக்கோ பரிமாறுன சாப்பாட்டு மேல ஆசைப்படறாரு , யாரும் பயப்பட வேண்டாம் , ஃபுல் மீல்ஸ்சும் பரிமாறலை . அதாவது லவ் ஆகி நிச்சயம் ஆகி பிரச்சனையால கேன்சல் ஆன ஃபிகரு .


அப்படிப்பட்ட ஃபிகரை இவரு நாய் மாதிரி பின்னாலயே சுத்தி கிட்டத்தட்ட கரெக்ட் பண்ற ஸ்டேஜ் வந்ததும் ஜகா வாங்கறார்.அவருக்கு திடீர்னு புத்தி வந்துடுது ; லவ் பண்றவனுக்கு ஏது புத்தி அப்டினு லாஜிக் கொஸ்டின் எல்லாம் கேட்கக்கூடாது . அவர் சந்திச்ச 2 லவ் ஜோடிகளின் கதையை அள்ளி விடறார்


a


யதார்த்த நாயகன் சேரன் - பதார்த்த நாயகி தாமிர பரணி பானு ( கறுப்பான கையால என்னை பிடிச்சான்)  ஜோடி கதை . இவரு சமூக சேவகரு சிறைக்கைதிகளுக்கு மறுவாழ்வு  இயக்கம் நடத்தறார்.. ஃபிகர் கிடச்சா போதும்னு  பார்க் பீச்னு கூட்டிட்டுப்போய் காதலியை கூகுள்னு நினைச்சு எதையாவது தேடிட்டே இருக்கும் சாதா காதலன் மாதிரி இல்லை இவரு . பிஹெச்டி படிப்பெல்லாம் படிக்கறாரு. லட்டு மாதிரி ஃபிகர் கிடச்சதும் நம்மாளுங்க பூந்தி ஆக்கிட்டுத்தான் மறு வேலை பார்ப்பாங்க . இவர் என்னடான்னா அன்னை தெரேசா ரேஞ்சுக்கு அவரையும் சமூக சேவகி ஆக்க ட்ரை பண்றார்.


அடுத்து ஆக்‌ஷன் கிங்க் அர்ஜூன் - சுர்வீன் லவ் ஸ்டோரி . இந்த பார்ட் அப்டியே  எதிர் நீச்சல் பின் பாதில இருந்து சுட்டுட்டாங்க போல . ஸ்டோரி டிஸ்கஷன்க்கு உக்கார்ந்த ஆட்கள் ஒரே ஹோட்டல்ல பக்கத்து பக்கத்து ரூம் போட்டு இருப்பாங்க போல அர்ஜூன் ஒரு ஸ்விம் கோச். ஹீரோயினை நீச்சல் வீராங்கனையா ஆக்க பயிற்சி அளிக்கறார் , சைடுல அவரை லவ்வறார். ஆனா பாருங்க ஒரு விபத்துல அவருக்கு அடிபட்டு கழுத்துக்கு கீழே எதுவும்  வேலை செய்ய முடியாத நிலைக்கு போறார். அவர் அப்டி ஆனதால ஹீரோயின் வீட்ல லவ்வுக்கு எதிர்ப்பு . அவரை கழட்டி விட்டுடு அப்டினு அட்வைஸ் பண்றாங்க . ஆனா  தெய்வீகக்காதல்னு அவ பம்மறா


 சுருக்கமா சொல்லப்போனா 3 காதலும் விளங்கலை . அவ்வளவு தான் கதை ஹி ஹி


முதல் ஹீரோ விமல் . டயலாக் டெலிவரிக்காகவே இவர் வாய்க்கு சூடு வைக்கனும்  அப்பா சாமி முடியலை

 


 ஹீரோயின் லாசினி புருவத்தை டெய்லி பியூட்டி பார்லர் போய் ட்ரிம் பண்ணிட்டு வருவார் போல . வரைஞ்சு வெச்சது மாதிரி இருக்கு .தான் ரொம்ப அழகு என்ற கர்வம் அவர் பாடி லேங்குவேஜ்ல தெரியுது .  இன்னும் என்ன வெல்லாமோ தெரியுது . யாராவது அவர் கிட்டே நீங்க நார்மல் ஃபிகர் தான் 50 மார்க் தான் தேறும்னு சொல்லி வெச்சா தேவலை .  அவர் டைட் பனியன் போட்டு வரும் காட்சிகள் 5  . ஸ்லோ மோஷனில் ஓடி வரும் காட்சிகள் 6 . கீழே தேவை இல்லாமல் குனியும் காட்சிகள் 4


அடுத்து சேரன் . இவர் முகம் முத்திடுச்சு . ஆனா பொறுப்பா கண்ணியமா நடிச்சிருக்கார் . மனசுக்குள்ளே ஆட்டோகிராஃப் மாதிரி இன்னொரு ஹிட் குடுக்கனும்னு ஒரு ஆதங்கம் அவர் கண்ல நல்லாத்தெரியுது



இவருக்கு ஜோடியா வரும் பானு  குட் கட்டை . ஆனா படத்துக்கு இயக்குநர் எஸ் ஜே சூர்யான்னா பிரிச்சு மேஞ்சிருப்பார். ஆனா வசந்த் . அவர் ரொம்பவே டீசண்ட் . அதனால பானுவை கண்ணியமாகவே காட்டி இருக்கார்



அர்ஜூன்  ஆக்‌ஷன் பண்ணவோ , பாகிஸ்தான் தீவிரவாதி கிட்டே பஞ்ச் டயலாக் பேசவோ வழி இல்லாம திண்டாடறார். இவர் போர்ஷன் செம போர் . தூங்கிட்டேன் . நான் மட்டும் தனியா தூங்கலை , தியேட்டர்ல இருந்த 87 பேரும் தூங்கிட்டோம் . தூங்காம விழிச்சுட்டு இருந்த அந்த கள்ளக்காதல் ஜோடிகள் 5 செட் என்ன செஞ்சாங்களோ ?

ஹீரோயின் பர்வீன் ( டைட்டில் ல சுர்வீன் ) உதட்டு அழகி . கூந்தல்க்கு மருதாணி , செம்பருத்தி இலை தேய்ச்சு இருப்பார் போல செம்பட்டையா இருந்தாலும் அழகாத்தான் இருக்கு . இவரு நீச்சல் உடையில் வரும் காட்சிகளில் லாங்க் ஷாட் கேமரா ஆங்கிள் வைத்த ஒளிப்பதிவாளருக்கு என் கடும் கண்டனங்கள் . இவங்க மட்டும் தான் ரசிக்கனுமாம் ஹூம் சுயநலம் .





 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. லொகேஷன் செலக்‌ஷன்ஸ் பக்கா .  கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கைக்காட்சிகள்  பிளஸ்


2. மூன்று ஹீரோயின்கள் செலக்‌ஷன் கனகச்சிதம் . நம்மாளுங்க கதை செலக்‌ஷன்ல கோட்டை விட்டாலும் ஹீரோயின் செலக்‌ஷன்ல கோட்டை விடறதில்லை


3. படத்தில் காமெடி டிராக் ஏதும் தனியா வைக்காமல் 3 காதல் கதைகளை மட்டும் எடுத்தது



4. வசனங்களில் ஆங்காங்கே வசந்த் டச்



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. நீச்சல் கோச்சாக வரும் 50 வயசு அங்கிள் அர்ஜூனிடம் 16 வயசு ஃபிகர்  லவ்வில் விழுந்தது எப்படி ? நீச்சல் கோச் நடக்கும்போது டச்சிங்க் டச்சிங்க் எதுவும் நடக்காம இருக்குமா? ( அதை ஏன் காட்டலை? ஹி ஹி )


2. நீச்சல் பயிற்சிக்கு பகல்ல போகாம ஏன் நடு ராத்திரில போறாங்க?


3. நீச்சல் வீராங்கனையா வரும் சுர்வீன் விமலின் தோழி என வசனத்தில் மட்டும் வருது , காட்சியில் இல்லை


4. மூன்று காதலையும் ஐ மீன் காதல் கதைகளையும் சேர்க்கும் மையக்கோடு என எதுவும் இல்லை . அது சுவராஸ்யத்தை குறைத்து விடுது



5. லவ் ஸ்டோரின்னா லவ்வர்ஸ் சேருவாங்களா? மாட்டாங்களா? என ஒரு எதிர்பார்ப்பை , துடிப்பை ஏற்படுத்தனும் . ஆனா அவங்க சேர்ந்தா என்ன சேராட்டி என்ன? என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது பலஹீனம்



6 . படம் போட்ட முதல் 30 நிமிஷத்துல 3 பாட்டு . விமல் என்ன விஜயா? முடியல . பாடல் காட்சிகள்  2க்கு இடையே போதிய இடை வெளி வேணாமா?


 7. ஹீரோ செலக்‌ஷன் தப்பு . ஏன்னா இது யூத்ஃபுல் லவ் ஸ்டோரி . அங்கிள்ஸ் லவ் ஸ்டோரி இல்லை . அர்ஜூன் , சேரன் எல்லாம் இதுக்கு சூட் ஆகலை



8. காதல் கதைகள் 3 இருந்தும் எதிலும் உண்மைக்காதலோ , அதற்கான சுவடோ இல்லை , எல்லாமே தியாகம், சேவை , டைம் பாஸ்னு போயிடுச்சு , அதனால ஆடியன்ஸ் மனசுல ஒரு பாதிப்பை ஏற்படுத்த முடியல. ஒரு லவ் ஸ்டோரி சக்சஸ் ஆகனும்னா பார்ப்பவர் மனதில் ஒரு பதை பதைப்பு ஏற்படனும்






 தூங்கிய நேரம் போக மிச்சம் மீதி கவனித்ததில் தேறிய மனம் கவர்ந்த வசனங்கள்


1. காதல்ங்கறது காதலி கிட்டே இது வேணும்னு கேட்கறது இல்லை.அவளுக்குப்பிடிச்சதை அவ கேட்காமயே கொடுக்கறது




-------------------


2. ஜெயிச்சவன் தொடர்ந்து ஜெயிச்சுட்டே இருந்தாத்தான் மரியாதை


---------------


3. யோசிச்சுப்பார்த்தா காதலை விடப்பைத்தியக்காரத்தனம் எதுவும் இல்ல.ஆனா யோசிச்சாத்தானே ? 



---------------------


4. அவனவன் தன் காதலியை 1 மணி நேரத்துக்கு 1 முறை போய் பார்க்கறாங்க . பார்க்கனும்னு இந்தக்காலப்பசங்க நினைக்கறாங்க

 நானெல்லாம் அப்டிப்பார்த்தா ஜூரம் வந்துடும் . மொக்கை ஃபிகரு 




=-----------------------


5. அழகா இருப்பா னு சொல்றே.ஆனா பேரு தெரியாதா ? ஒரு பொண்ணை அழகா இருக்கானு சொல்ல அவங்க பேரு எதுக்கு ?



-------------------

 6  குழப்பமான மன நிலைல இருக்கற ஒருத்தனாலதான் காதலிக்க முடியும்


---------------


7. எங்க ஃபேமிலில  எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருப்போம் , ஜோக் எதுவும் சொல்லத்தேவை இல்லை  ஜோக்னு சும்மா சொன்னாலே போதும் சிரிப்போம்



------------------


8. எதுக்கு என் மகளை அப்படி குனிஞ்சு பார்க்கறீங்க? அவ என்ன அவ்வளவு குள்ளமா?



---------------


9. ஒரு பொண்ணை அழகுன்னு சொல்ல அவங்க பேரு எதுக்கு?




-------------



10.  அழகான 2 பேர் ஏன் தனித்தனியா சாப்பிடனும்? வாங்க சேர்ந்தே சாப்பிடலாம்


-------------




11. மிஸ்  ஒருத்தன் ஒரு நாள் ல 86,400 தடவை ஒருத்தியை நினைக்கறான்னா என்ன அர்த்தம்?


 தெரியலையே?


 டெயிலி எல்லா டைமும் அவளையே நினைச்சுட்டு இருக்கான்னு அர்த்தம்



----------



12.  ஹலோ ! நான் சிரிச்சது உங்க ஜோக்குக்குத்தான், உங்களுக்காக இல்லை


 ஆனா அந்த ஜோக் என்னுதுதானே?



---------------


13.  ஏம்ப்பா பஃபே சிஸ்டம் ஓக்கே , இந்த தட்டு இதுதான் லாஆஸ்ட் சைஸா? எக்ஸ்ட்ரா லார்ஜ் கிடையாதா?



--------------


14.  ஃபாரீனர் - ஹாய் . ஐ ஆம் ஃபிராங்க் அண்ட் கோ


 சத்யன் - ஐ ஆம் வசந்த் அண்ட் கோ




-----------

15. உங்க லெஃப்ட் ஹேண்ட் ஏன் அங்கே இருக்கு? கொடுங்க , பத்திரமா நான் வெச்சிருக்கேன்

 ம்ஹூம்

 சரி என் கையை எடுத்துக்குங்க . அது ஃப்ரீயாத்தான் இருக்கு ( நல்ல வேளை )



---------------

16. ஏய். நீ லவ் பண்ற நாய் வீட்டு நாயா? தெரு நாயா? டக்னு சொல்லு பார்ப்போம்



------------


17.  ரெண்டு கால் இருக்கும் நாமே வாக்கிங்க் போகும்போது 4 கால் இருக்கும் நாய்ங்க வாக்கிங்க் போவதில் என்ன தப்பு?



-----------


18. நமக்குப்பிடிச்சதை செய்வது என்பது வேறு . சரியானதைசெய்வது என்பது வேற




------------------


19.  உடம்புல எந்த காயத்தையும் ஏற்படுத்தாத ஒரே அத்லெட் நீச்சல் தான்



---------------


20.  யார் என்னை எப்டி சொன்னாலும் நீ என்னை பாராட்டும்போது வர்ற கிக்கே தனி


-------------


21. மத்தவங்க எல்லாம் என்னை எப்படி கூப்டறாங்க்ளோ அதே மாதிரி நீயும் கூப்பிட்டா என்ன கிக் அதுல ?



-----------------


22.  எல்லா சேம்ப்பியன்சும் ஆல்ரெடி ஒரு முறையாவது தோல்வியை சந்திச்சவங்களாத்தான் இருப்பாங்க



----------------------

23. பொண்ணுங்க உன்னை மாதிரி சுமாரா இருந்தாலே போதுமே , பசங்க பல்லைக்காட்டுவாங்களே


---------------


24. டார்கெட்டையே பார்த்துட்டு இருப்பவன் தான் வின்னர் ஆவான்


--------------


 


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41



எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே


ரேட்டிங்க் -    2.25 / 5


 சி பி கமென்ட் -  தூக்கம் வராம அவதிப்படறவங்க போனா 20 நிமிஷத்துல தூக்கம் கேரண்டி . கள்ளக்காதலர்கள் போலாம்,. தியேட்டர்ல ஆபரேட்டர் கூட இருக்க மாட்டார். ஆன் பண்ணிட்டு போய்டுவார் . எஞ்சாய்  

 

டிஸ்கி - நான் பெண்களை மதிப்பவன் என்பதை காட்டவும் , ஆணாதிக்கவாதி அல்ல என்பதைக்காட்டவும் தான் இப்படி ஆண் ஹீரோக்களின் ஃபோட்டோக்களைத்தவிர்த்திருக்கிறேன் , பெண்ணியவாதிகள் , மாதர் சங்கங்கள்  இதுக்கு ஏதாவது விருது , பரிசு தந்தால் சாரு போல் கூச்சமே இல்லாமல் வந்து வாங்கிக்கொள்வேன் ;-))

Tuesday, January 08, 2013

மூன்று பேர் மூன்று காதல் - இயக்குநர் வஸந்த் ஜாலி பேட்டி

http://www.starmusiq.com/movieimages/Moondru-Per-Moondru-Kaadhal_B.jpg

அர்ஜுன் எனக்கு சீனியர். சேரன் எனக்குக் கொஞ்சம் ஜூனியர். இந்த சிச்சுவேஷன் எனக்குப் புதுசு. ஏன்னா, இப்போ இருக்கும் அஜித் வேற. 'ஆசை’ சமயத்துல அஜித் வேற. அதே மாதிரிதான் 'நேருக்கு நேர்’ சமயம் விஜய், சூர்யாவும். என் படத்துல நடிச்ச பிறகுதான் பலருக்கு ஸ்டார் அந்தஸ்து வந்துச்சு. ஆனா, ஸ்டார் அந்தஸ்தோட இருந்த ஹீரோவை நான் முதன்முதலா இயக்கினது 'ரிதம்’ படத்தில்தான். அப்ப அர்ஜுன் செம ஆக்ஷன் கிங். ஆனா, 'ரிதம்ல ஆக்ஷன் இருக்காது. ஆக்டிங் மட்டும்தான்’னு ஆரம்பத்திலேயே ஓப்பனா சொல்லிட்டேன்.  



சேரன் எனக்கு ரொம்பப் பிடிச்ச டைரக்டர். ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. அது இப்போ அழகா நிறைவேறி இருக்கு. ஓ.கே. எல்லாரும் காதல்பத்திப் பேசலாமே. படத்தோட காதல் இல்லை... அவங்கவங்க காதல்பத்தி!'' என்று சொல்லிவிட்டுக் குறும்பாகக் கண்ணடித்தார் வஸந்த்.    



''இப்பவும் நான் சொல்லிக்கிறேன்... நான்தான் இங்கே ரொம்ப பொடிப் பையன். அதனால, சீனியர் அர்ஜுன் சார் இப்போ பேசுவார். அவரு எதுல சீனியர்னு கேட்கக் கூடாது. எல்லாத்துலயுமே அவர்தான் சீனியர்!'' என்று இப்போதும் விமல் செம ஸ்கோர் செய்து ஒதுங்கிக்கொண்டார்.



''என்ன இப்படி மாட்டிவிடுறீங்க? எனக்கும் ஒரு லவ் இருந்துச்சு. ஆனா, அதை இப்ப சொன்னா வீட்ல மாட்டிக்குவேனே. சரி... பரவாயில்லை. இருபது வருஷத்துக்கு முன்னாடி ஷூட்டிங்ல ஒரு அப்பாவிப் பொண்ணு. பார்த்த நிமிஷமே எனக்குப் பத்திக்கிச்சு. பாரதிராஜா சாரோட 'கல்லுக்குள் ஈரம்’ படத்துல வர்ற மாதிரி. அப்ப நான் ரொம்பச் சின்ன பையன். அது ஒரு கிராமத்துப் பொண்ணு. ரெண்டு மூணு வாரம் க்ரஷ்ல திரிஞ்சேன். அப்புறம் அது அப்படியே மறைஞ்சுருச்சு. இப்ப காதல்னா, அது இந்தியா மேல மட்டும்தான். ஆனா, நான் கல்யாணத்துக்குப் பொண்ணு தேடினப்ப 'சினிமாக்காரனுக்குப் பொண்ணு தர மாட்டேன்’னு சொன்னவங்கதான் அதிகம். அந்த விஷயத்துல பரவாயில்லை விமல்... நீ கெட்டிக்காரன். காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்ட!'' என்று விமல் முதுகில் செல்ல மாகத் தட்டிக்கொடுக்கிறார் அர்ஜுன்.


http://mmimages.maalaimalar.com/Articles/2012/Dec/3fe32aac-d24d-4db5-9c15-377b826bbbdf_S_secvpf.gif



''அதுக்கு நான் பட்ட பாடு எனக்குத்தானே தெரியும். இப்போ வஸந்த் சார் அவரோட காதல்... ஸாரி காதல்கள் பத்திச் சொல்லுவார்!'' என்று விமல் அறிவிக்க, ''கொன்னு... கொன்னு'' என்று ஒற்றை விரல் காட்டி மிரட்டிவிட்டுப் பேசத் தொடங்கினார் வஸந்த்.


''எந்த விஷயத்துல அதீத ஆர்வமா இருக்கீங்களோ அல்லது யார் மேல எல்லாம் அதீத அன்பு செலுத்துறீங்களோ... அதுதான் லவ். அர்ஜுனைப் பாருங்க. சினிமாவுக்கு வந்து இத்தனை வருஷம் கழிச்சும் உடம்பை எவ்ளோ ஃபிட்டா வெச்சிருக்கார். அது அவர் தொழில் மேல அவருக்கு இருக்கிற லவ். சேரனுக்கு டைரக்ஷன் மேல லவ். எந்த நேரமும் எதையாவது யோசிச்சுக்கிட்டே இருக்கார். எனக்கு சினிமா மேல காதல். அது போக, என்ன சொல்ல... பெண்கள் மேல காதலே இல்லைனு சொல்ல முடியாது. ஆனா, அதுக்காக அதை இங்கே சொல்ல முடியாது. என்ன சேரன் கரெக்டா?''



''ரொம்பச் சரி... ஆனா, நீங்க பண்ண இன்னொரு விஷயம் ரொம்ப தப்பு. படத்துல எனக்கும் ஒரு காதல் இருக்குனு சொன்னீங்க. நானும் ஆசை ஆசையா வந்து நின்னா, கடைசி வரை என் ஜோடிகூட ஒரு வார்த்தைகூடப் பேசவிடலை. என் மேல உங்களுக்கு என்ன சார் கோபம்?'' என்று சேரன் பரிதாபமான குரலில் கேட்க, வெடித்துச் சிரித்துவிட்டார்கள் மூவரும்.  


''ஆனா, காதல் எந்த வயசுலயும் வரும். அதுவும் நம்ம கருத்தோட செட் ஆகுறவங்களோட அதிகமா வரும். அம்பது வயசுக்கு மேலயும் வரும். மத்தபடி வாழ்க்கையில ஒரே ஒரு முறைதான் காதல் பூக்கும்கிறதெல்லாம் சும்மா. அது பாட்டுக்கு அப்பப்ப பூத்துக்கிட்டே இருக்கும். அதுவும் வஸந்த் சார் மாதிரி ஆட்களுக்குஎல்லாம் தினம் தினம்கூடப் பூக்கும். ஏன்னா, பூமிக்கு அனுப்பப்பட்ட காதலின் கொள்கை பரப்புச் செயலாளர்கள்ல வஸந்தும் ஒருவர்!'' என்று சேரன் நிறுத்த, அதற்கு என்ன ரியாக்ஷன் கொடுப்பது என்று புரியாமல் சிரித்த வஸந்த், பிறகு சமாளித்துப் பேசத் தொடங்கினார்.  



''இதுதான் சேரன். மனசுல பட்டதைப் பளிச்னு பேசிடுவார். ரொம்ப ஓப்பன் டைப். எல்லாரும் சேரன் சீரியஸான ஆளு... ஹேண்டில் பண்றது கஷ்டம்னு பயமுறுத்தினாங்க. ஆனா, அவர் என்னைவிட செம ஜாலி பார்ட்டி. நாகர்கோவில்ல ஷூட்டிங். பரபரனு வேலை பார்த்துட்டு இருக் கோம். எனக்குத் தாடியை ட்ரிம் பண்ணக்கூட நேரம் இல்லை. திடீர்னு சேரன் என்னைக் கூப்பிட்டு வம்பா உட்காரவெச்சு, 'அளவா இருந் தாத்தான் அது வஸந்த் தாடி’னு சொல்லிட்டு, அவரே ட்ரிம் பண்ண ஆரம்பிச்சுட்டார். 



இப்போ என்னோட நெருக்கமான நண்பர்கள் பட்டியலில் சேரனுக்கும் ஒரு இடம் இருக்கு!'' என்று நெகிழ்ந்த வஸந்தை இறுக்கி அணைத்துக்கொண்டார் சேரன்.


''ஓ.கே. எல்லாம் சூப்பரா முடிஞ்சிருச்சு. இப்போ அப்படியே வெளியே கிளம்பிப் போய் டீ, காபி, வடை, பஜ்ஜினு சில ஃபார்மாலிட்டீஸ் மட்டும் முடிச்சுட்டா, நான் கிளம்பிருவேன்!'' என்று விமல் எண்ட் கார்டு தட்ட, சட்டெனச் சுதாரித்தார் சேரன்.


http://www.nakkheeran.in/AllImages/Gallerys/33751_1.jpg



''டேய்... நானும் ஆரம்பத்துல இருந்து பார்த்துட்டே இருக்கேன். எஸ்கேப் ஆகிட்டே இருக்கே. நீ இப்ப ஏதாச்சும் உண்மை பேசியே ஆகணும். இல்லைன்னா உன்னை விடுறதா இல்லை!'' என்று சேரன் மிரட்ட,


''சார்...  நான் அவ்ளோ வொர்த் இல்லை சார். நான் பொறந்த ஆஸ்பத்திரிக்குப் பக்கத்துல இருந்த தியேட்டருலதான் 'கேளடி கண்மணி’ படம் ஓடிட்டு இருந்துச்சு. கைக்குழந்தையா இருந்தப்ப அந்தப் பட வசனங்கள்தான் எனக்குத் தாலாட்டு. அப்படி வளர்ந்த நான், இப்ப எப்படி டைரக்டர் முன்னாடி பேசுறதுன்னுதான் கூச்சப்பட்டு ஒதுங்கி நிக்கிறேன்!'' என்று விமல் டபாய்க்க,
''அடப்பாவி... நான்லாம் அப்ப பொறக்கவே இல்லையே!'' என்று அர்ஜுன் சதாய்க்க... அப்புறம் அங்கே நடந்தது... நான்கு பேர்... நான்கு மணி நேர அரட்டை!


நன்றி - விக்டன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqx_fST3LZM3AWmPgpU7Y1B46cERZdgo8V4V2ch9gOIBRAUKiNQbyY-YdT51fRWY0QAPA3bjgW0u4IEE3n2AXOd0iUm8ualKLft8_vcRmMjuFKZUeBH72e-meeqDIFPp0RPdEfECH0rBh4/s1600/5.jpg