Showing posts with label தொடர். Show all posts
Showing posts with label தொடர். Show all posts

Sunday, December 27, 2015

பதினோரா வது கொலை!-பட்டுக்கோட்டை பிரபாகர்

குற்றவாளிகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள் என்று சொல்வார்கள்.


பெரும்பாலான குற்றவாளிகளின் வாழ்க்கையிலும் அப்படி உருவா வதற்கான சூழல் இருக்கலாம். ஒரே இர வில் ஒருவன் கொள்ளைக்காரனாகிவிட லாம் என்று தீர்மானம் செய்து, அப்படியே கொள்ளைக்காரனாக மாறி வங்கியைக் கொள்ளையடித்துவிட முடியாது. இன்றைக்கு கொலைசெய்யலாம் என்று வண்டிக்கு பெட்ரோல் போடுவது மாதிரி சாதாரணமாக செய்வதில்லை. கூலிப் படையில் காசுக்காக இரக்கமே இன்றி கொலைகளைச் செய்கிற யாரும் “இது எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு’’ என்று சொல்வதில்லை. எல்லோரிடமும் ஒரு கதை இருக்கும்.


நேனிதாஸின் கதை மிக அழுத்தமானது. அமெரிக்காவில் பிறந்த நேனி தாஸ், தனது சின்ன வயதில் பள்ளியில் சேர்ந்து படித்துப் பெரிய அரசு அதிகாரி யாக வளரத்தான் ஆசைப்பட்டாள். ஆனால், அவளுடைய தந்தை அவளை பணம் கொடுக்கும் ஒரு இயந்திரமாக நினைத்து, வேலைக்கு அனுப்பி சம்பா தித்து வரச் சொன்னார். அங்கேயே விழுந்தது அவள் மனதில் முதல் விரிசல்.



பதின்பருவத்தில் நேனிதாஸுக்கு ஒரு நல்ல உடை வாங்கித் தந்ததில்லை அவள் தந்தை. அவளுக்கு வயிறார சாப்பாடு போட்டது இல்லை. கொஞ்சம் திருத்தமாக மேக்கப் போட்டுக்கொள்ள வும் அனுமதி இல்லை. வெளியே எங்கும் தனியாகப் போகக் கூடாது. ஆண் நண்பர் களுடன் பழகக் கூடாது. பார்ட்டிகளுக்கு, விழாக்களுக்குப் போகவே கூடாது என்று ஏகப்பட்ட கூடாதுகள்!



ஆனால், மறுக்கப்படுவதைத்தானே மனித மனம் விரும்பிச் செய்யும்? எதை எல்லாம் வீட்டில் மறுக்கப்பட்டதோ, அதையெல்லாம் பிடிவாதமாக நாடியது அவளுடைய மனசு.



நேனிதாஸ் கனவுகளில் மிதந்தாள். கற்பனை சுகத்தில் மகிழ்ந்தாள். மனதில் காதல் பொங்கி வழிந்தது. காதல் தொடர்பான புத்தகங்களை மட்டுமே படித்தாள். பத்திரிகைகளுக்கு தனது பெயர் போடாமல் காதல் கட்டுரைகள் எழுதி அனுப்பினாள். மற்றவர்களின் காதல் அனுபவங்களை ஆர்வமாகக் கேட்டாள். ஆனால், அவளின் காதலைப் பகிர்ந்துகொள்ள ஓர் ஆண் மகனைச் சந்திக்கவே இல்லை. அதாவது சந்திக்க வாய்ப்பு அமையவில்லை.



16 வயதில் பெற்றோர் பார்த்து வைத்த திருமண வாழ்வை ஏற்று, ஆயிரம் கனவுகளுடன் புதிய வாழ்வில் நுழைந்தாள். அங்கே நேனிதாஸின் ஒவ் வொரு கனவும் முறிக்கப் பட்டது. அன்பான கணவன் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவளுக்கு அவளு டைய தந்தையைவிட மோச மானவனாக அவன் அமைந் தான். அவனுடைய வார்த்தை கள் சாட்டையடிகளாக விழுந் தன. அவனுடைய நடவடிக்கை எதுவுமே அவளுக்குப் பிடிக்காமல் போனது. ஆனாலும், அவனோடு பொறுமையாக வாழ்ந்து குழந்தைகளும் பெற்றாள்.



வெளியே கடைக்காரர்களிடம், கார் டிரைவர்களிடம் என்று எவரிடம் அவள் பேசினாலும் அவனுக்கு சந்தேகம். மனம் நொந்துபோன அவள் புகைப் பழக்கத்துக்கும், மதுப் பழக்கத்துக்கும் ஆளானாள். தினமும் குடித்தே ஆக வேண்டும் என்கிற அளவுக்கு போதைக்கு நேனிதாஸ் அடிமையானாள்.


திடீரென்று உடல்நலம் கெட்டு அவளது கணவன் இறந்தபோது அவள் அழவே இல்லை. மனதுக்குள் கொண் டாடியபடி, வெளியே பொய் துக்கத்தில் இருந்தாள். இதைத் தொடர்ந்து உடனடியாக இரண்டாவது திருமணமும் செய்துகொண்டாள்.



புதிய கணவனின் செயல்களிலோ மர்மம் இருந்தது. அவன் இரவில் தாமதமாக வீட்டுக்கு வந்தான். அவனைத் தேடி காவல் துறை ஆசாமிகள் அடிக்கடி வந்து போனார்கள். அந்தத் துறையில் தனக்கு நண்பர்கள் இருப்பதாக அவன் சொன்னதை நேனிதாஸ் நம்பினாள்.



அவன் உடம்பில் இருந்து வீசும் பெண்கள் உபயோகிக்கும் செண்ட் வாசனையைப் பற்றி அவள் கேட்டபோது, அவனால் அவளுக்கு விளக்கம் சொல்ல முடியவில்லை. ஆனால், அது என் பலவீனம் என்று ஒப்புக்கொண்டான். பிறகுதான் தெரிந்தது, தினமும் விதவிதமானப் பெண்களைத் தொட்டாக வேண்டும் என்கிற அவனது காம உணர்வு. அதற்குப் பணம் தேவை. பணத்துக்காக அவன் ரகசியமாக குற்றங்கள் செய்திருக்கிறான். விசாரிக்க வரும் அதிகாரிகளுக்கு லஞ் சம் கொடுத்து சமாளித்திருக் கிறான்.



அவனும் திடீரென்று இறந்துபோனான். உறவினர் கள் நேனிதாஸின் நிலைமைக் காகப் பரிதாபப்பட்டார்கள். ஆறுதல் சொன்னார்கள். அப்போதும் அவள் திருமணத்தின் மீது தனக்கு இருந்த நம்பிக்கையை மாற்றிக்கொள்ளவே இல்லை. மூன்றாவதாகவும் ஒரு கணவனைத் தேடிக் கொண்டாள்.



மூன்றாமவன் இதற்கு முந்தையவர் களைப் போல இல்லை. அவனுக்கு ஒரே ஒரு பலவீனம்தான். அவனுக்கு தினமும் சூதாட வேண்டும். அதற்கு முதலில் அவளுடைய நகைகள் பலியாகின. பிறகு, வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் எடுத்துச் சென்று விற்றுவிடுவான்.



மனம் வெறுத்துப் போன நேனிதாஸ் அவன் இறக்கக் காத்திருந்து, கடைசி முயற்சியாக நான்காவதாக ஒருவனைத் திருமணம் செய்துகொண்டாள். இந்தக் கணவன் படு மக்கு. அவனோடு இருந்த அவனுடைய அம்மாதான் … அங்கே இவளுக்கு வில்லி. சீரியல்களில் வரும் மாமியாரைப் போல அதிகாரம் செய் வதும் வேலைகள் வாங்குவதுமாக நேனிதாஸைப் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.



மன உளைச்சலுக்கு மருந்தாக தன் அம்மா வீட்டுக்குச் சென்றால், அங் கேயும் இவளை விமர்சித்து இவளின் அம்மாவும் கடுமையாகத் திட்டினாள். தனது உடன் பிறந்த இரண்டு சகோதரி களும் இவளின் வாழ்க்கையைக் கிண்டல் செய்தார்கள். பொது விழாக்களில் வைத்து இவளை அவமானப் படுத்தினார்கள்.



போதாக்குறைக்கு இவளுக்குப் பிறந்த இரண்டு பெண்களும் தாய் என் றும் பார்க்காமல் இவளை அலட்சியப் படுத்தினார்கள். எங்கும் மரியாதை இல்லை. எல்லோருக்கும் நேனிதாஸின் வாழ்க்கை கேலிப் பொருளானது.
ஒரு சுபயோக சுபதினத்தில் இவள் தன் மாமியாரை உணவில் விஷம் வைத்துக் கொன்றாள். முதலில் அது வெளியில் தெரியவில்லை. பிறகு காவல் துறையின் தீவிர விசாரணையில் உண்மை வெளிப்பட்டு, நேனிதாஸ் கைது செய்யப்பட்டாள்.



தொடர் விசாரணையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியான தகவல்கலைக் கொட்டினாள் நேனிதாஸ். மாமியாரைக் கொன்றது இவளின் முதல் கொலை இல்லை; அது அவளுடைய பதினோரா வது கொலை!



இவள் மனதைக் காயப்படுத்திய ஒவ் வொருவரையும் ரகசியமாக திட்டமிட்டு, அது கொலை என்று வெளியே தெரியாத படி கொலை செய்திருக்கிறாள். இவளின் நான்கு கணவர்களுக்குமே இயற்கை மரணம் நேரவில்லை. அத்தனை பேரை யும் நேனிதாஸ்தான் கொன்றிருக்கிறாள். கணவர்கள் மட்டுமல்ல; சொந்த தாய், இரண்டு சகோதரிகள், இரண்டு மகள்கள், ஒரு பேரன் உட்பட அவளுக்கு மன வருத்தம் கொடுத்த அத்தனை பேரையும் கொலை செய்திருக்கிறாள்.



இவளை விசாரித்த நீதிமன்றம் மரண தண்டனை தர நினைத்து, பிறகு.. இவளின் சூழ்நிலை, மனநிலை எல்லாவற்றையும் கணக்கில் எடுத் துக்கொண்டு ஆயுள் தண்டனை வழங்கியது. சிறையில் இருந்தபோது ரத்தப்புற்று நோய் வந்து நேனிதாஸ் இறந்து போனாள்.




குற்றவாளிகள் பிறப்பதில்லை; உரு வாக்கப்படுகிறார்கள் என்னும் கூற்றை நேனிதாஸின் வாழ்க்கை நிரூபித்தது. ஒரு மனநலக் கணக்கெடுப்பில் திருமணங் களில் தோல்வியைச் சந்தித்த ஒரு சில பெண்கள் தங்களுக்குள் கொலை செய் யும் எண்ணம் வந்ததாக ஒப்புக்கொண் டிருக்கிறார்கள். அந்த எண்ணம் தீவிர மடைகிற தருணத்தில் அதற்கான வாய்ப்பு அமைந்தால் அது செயலாகிவிடுறது.



- நிறைந்தது
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]

தஹிந்து

Tuesday, November 24, 2015

அற்புதமாக இருக்கிறீர்களா...?

ஒரு ஞானியிடம் “நீங்கள்தான் ஒன்றுமே வாங்க மாட்டீர்களே, பின் ஏன் கடைகளுக்குப் போகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

“என்னென்ன பொருட்கள் இல்லாமல் என்னால் நிம்மதியாக வாழ முடியும் என்று தெரிந்துகொள்ளவே போகிறேன்!” என்று அவர் பதில் அளித்தார்.
கடைகள் வீதியில் இருந்தால் அது கடைவீதி. கடைவீதியே ஒரு கட்டிடத்துள் இருந்தால் அதன் பெயர் மால். அப்படியொரு பெருங்கடையுள் காலை 11.30-க்கு குடும்பத்துடன் நுழைகிறேன். கையில் 5,100 ரூபாய்.

அந்த ஞானியின் ஞானத்தன்மையை என்னுடைய குடும்பத்துக்கும் ஊட்டியிருந்தேன். ஆனால், ஒரு ஹேண்ட்பேக் என் மனைவியின் ஞானத்தன்மையை சவாலுக்கு இழுத்துவிட்டது. “ஏற்கெனவே இருக்கிறதே!” என்று நான் முணுமுணுத்தேன்.

அப்போது அவள் ‘என் கனவை, அடையாளத்தைத் தொலைத்துவிட்டு, உன்னிடம் நிற்க வேண்டியிருக்கிறதே’ என்று ஜோதிகா, மஞ்சு வாரியர் பாணியிலான பார்வைகளைப் பார்த்தாள். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர 1,200 ரூபாயை இழந்தேன்.

தொடர்ந்து ஸ்வீட்கார்ன், சிடி, ஐஸ்க்ரீம், ஆடைகள், செருப்பு, கரண்டி, முகப்பூச்சுக்கள்...என ஞானத்தன்மை பங்கப்பட்டுக் கொண்டே வந்து மதியம் 2.30-க்கு என்னிடம் மிஞ்சியது வெறும் 100 ரூபாய்கள் மட்டுமே. அப்படியானால், நான் இழந்தது ?

5,000 ரூபாய் என்று பதில் சொல்வதற்கு விசேஷமான அறிவு எதுவும் தேவையில்லை.

ஆனால், நான் எனது உடலின் எரிபொருளை கலோரிக் கணக்கிலும் வேடிக்கை பார்த்தல், அதிருப்தியடைதல், வாதம் புரிதல் போன்றவற்றால் மனதின் எரிபொருளையும் இழந்திருக்கிறேன். 3 மணி நேரத்தை இழந்திருக்கிறேன். எனது ஆற்றலையும் காலத்தையும் செலவிட்டுள்ளேன்.
ஆனால், என்ன செலவானது என்ற கேள்விக்குப் பெரும்பாலானவர்கள் பண மதிப்பையே சொல்லியிருப்பார்கள். பணப் பார்வை கொண்டு இந்த விஷயத்தை அணுகி யிருக்கிறோம் என்பது இதன் பொருள்.

இது மட்டுமல்ல. அன்றாடம் வெகு சாதாரணமாக நாம் பணக் கண்கள் கொண்டு பார்க்கும் பல காட்சிகள் இருக்கின்றன.

“நல்லா இரு” என்று ஒருவர் ஆசி வழங்கினார் என்றால் நிறையப் பேருக்கு அதன் அர்த்தம் “கை நிறையப் பணத்துடன் வசதியாக இரு” என்பதுதான்.

“நல்ல தினமாக அமையட்டும்” என்றால் முதலில் தோன்றுவது ஏதோ புதையலின் சாவி கிடைப்பது போலவும், வராத கடன்கள் வசூலாகப் போவது போலவும், எதிர்பாராத அதிர்ஷ்டம் அமையப்போவது போன்ற காட்சிகள்தான்.

பெண் வீட்டுக்காரர்கள் பார்வையில் “நல்ல” என்பதன் பொருளே வேறு. “நல்ல இடம்” என்றால் கண்டிப்பாகப் பையன் கனமான பர்ஸைக் கொண்டிருக்கிறார் என்ற அர்த்தமே அநியாயத்துக்குப் புழக்கத்தில் இருக்கிறது.

‘‘நன்றாக இரு’’ என்றால் நோயில்லாமல் இருத்தல், மகிழ்வாக இருத்தல் என்று எவ்வளவோ சொல்லலாம்.

“ நல்ல தினம்” என்றால் நீங்கள் எவ்வித விபத்துமில்லாமல், மோசமான சம்பவங்கள் இல்லாமல் திரும்பினாலேயே அது நல்ல தினமில்லையா...? நல்ல உழைப்பு, நல்ல பசி, நல்ல தூக்கம் என்று அமைந்த தினங்கள் நல்ல தினம் இல்லையா...? அப்படியொரு தினத்தை நாம் நல்ல தினம் என்று ஏற்றுக்கொள்வதே இல்லை. “பெரிசா வாழ்த்தினான் “நல்ல தினமா அமையட்டும்னு” விசேஷமா ஒண்ணும் நடக்கலியே...வழக்கமான தினமாத்தான இருக்குது. போனோம்; வந்துசேந்தோம்.” என்றே பலரும் நினைக்கிறோம்.

“ நல்ல இடம்” என்றால் பண்பட்ட குடும்பம், பையன் எவ்விதக் கெட்ட பழக்கமுமில்லாதவன், நற்குணங்களைக் கொண்டவன் என்று எத்தனை பேர் நினைக்கிறோம்? பெண் “ நல்ல இடம்” என்றால், எழுகிற எண்ணம் பெண்வீட்டார் பணம் காய்க்கும் மரம் ஒன்றை வைத்திருக்கிறார்கள் என்பதுதான்.

“தப்பா நினைக்காதீங்க...ஒரு சின்ன ஹெல்ப்”என்று துவங்கினால் நிறையப் பேருக்கு முதலில் வருகிற நினைப்பு அவர் பணம் ஏதாவது கேட்கிறாரோ என்பதுதான். பணம் சாராத உதவிகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றைக் கேட்கவும்கூட அவர் நினைத்திருக்கலாம். சக மனிதருக்குச் செய்யும் உதவிக்குக்கூடப் பணத்தை முன் நிறுத்துகிறோம்.

நாம் சந்நியாசிகள் இல்லை என்பதால் பணம் சார்ந்து பார்ப்பது அப்படி ஒன்றும் பாவகாரியமோ, மட்டகரமான செயலோ இல்லைதான். பார்ப்பவர்களும் மோசமானவர்கள் இல்லைதான்.

ஆனால், எல்லாவற்றையும் நாம் கரன்ஸிக் கண் கொண்டு பார்க்கும்போது, பணத்தால் தர முடியாத, பல நல்ல விஷயங்களை- வாழ்வின் அற்புதங்களைப் பார்க்கத் தவறிவிடுவோம்.

தவிர, பணம் சார்ந்த பார்வைகள், பணம் சார்ந்த பிரச்சினைகள், எரிச்சல்கள், எதிர்பார்ப்புகளையே தரும். உங்களின் அக உலகில் கரன்ஸி இயந்திரங்கள் இயங்கிக்கொண்டே இருந்தால், அது நீங்கள் சுவாசிக்கும் காற்றிலும் கரன்ஸியின் மணத்தைக் கலந்து விடும்.

தவிர்க்கவே முடியாது என்பதற்காக எல்லாவற்றையும் பணம் சார்ந்தே பார்க்க வேண்டியதில்லை. சரியாகச் சொன்னால், நீங்கள், உங்களின் உள் அமைதி தேடி, உங்களுக்கான சந்தோஷம் தேடும் முயற்சிகளிலிலெல்லாம், பணம் இரண்டாம் இடத்தையே பிடித்திருக்கும்.
குழந்தையுடன் விளையாடுகிறீர்கள்.

நெருங்கிய நண்பனை, தோழியை வெகு காலத்திற்குப் பின் சந்திக்கிறீர்கள்.
பிரார்த்தனை செய்கிறீர்கள்.

வானில் நட்சத்திரங்களை ரசிக்கிறீர்கள்.

பணம் சந்தோஷம் தருகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பணம் சாராத சந்தோஷங்களையும் அனுபவிக்கக் கற்றுக் கொண்டால்தான் வாழ்க்கை முழுமை அடையும்.

“ நல்லாயிருக்கியா?” இதற்குப் பணம் சார்ந்து பதில் சொல்கிறவர்கள் “ஏதோ இருக்கேன்” என்றுதான் சொல்வார்கள். ஏனென்றால் பணம் தேவைகளைச் சார்ந்தது. இன்று ஒரு லட்ச ரூபாய் உங்களிடம் இருந்தாலும் ஒரு லட்சத்து ஒரு ரூபாய்க்கான தேவையை உருவாக்கிக்கொள்ள முடியும். இது தவிர, இன்னொரு பிரச்சினையும் வந்துவிடும். அடுத்தவரிடம் இரண்டு லட்சம் இருந்தால் நீங்கள் மனதளவில் ஏழையாகிவிடுவீர்கள்!

இதில் “நன்றாயிருக்கிறேன்” என்று சொன்னால், கண் பட்டுவிடும். நாம் நன்றாயிருப்பது அடுத்தவருக்கு ஏன் தெரிய வேண்டும்? அது வேறுமாதிரியான பிரச்சினைகளைக் கொண்டுவரும். இவ்வளவு கணக்குகளையும் போட்டு “என்னத்தை சொல்ல” “ ஏதோ வண்டி ஓடுது” என்றுதான் பதில் வரும். பணம் சாராத பதில் என்றால் உங்களின் பதில் “சூப்பரா இருக்கேன்” என்றுதான் வரும்.

எப்படி, நீங்கள் “ஏதோ” இருக்கிறீர்களா...? இல்லை “அற்புதமாக” இருக்கிறீர்களா...?

thanks the hindu

Friday, November 20, 2015

எஸ்பி. முத்துராமன் - சினிமா எடுத்துப் பார் - காதல் பூக்கும் தருணம்!


‘பெத்த மனம் பித்து’ படம் வெற் றிக்குப் பிறகு எங்கள் குழுவின் மேல் நம்பிக்கை வைத்து, அடுத்தடுத்து படம் எடுக்க அட்வான்ஸ் கொடுக்க பலர் முன் வந்தார்கள். நல்ல கதை, நல்ல கம்பெனி என்று பார்த்து இறங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். இந்நிலையில் ‘விக்டரி மூவிஸ்’ பட நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த விஜய பாஸ்கர் படம் எடுக்க ஆசையோடு எங்களை அணுகி ‘‘என் கையில் 25 ஆயிரம் ரூபாய் உள்ளது. தொழிலும் தெரியும், எல்லா விநியோகஸ்தர்களும் நல்ல பழக்கம், படம் தொடங்குவோம்’’ என்று சொல்லி அவர் பெயரிலேயே ‘விஜய பாஸ்கர் பிலிம்ஸ்’ என்ற கம்பெனியை ஆரம்பித்தார்.


அப்போது பஞ்சு அருணாசலம் நகைச் சுவை கதைகளை எழுதி நல்ல பெயர் பெற்று வந்தார். கவியரசு கண்ணதாச னின் அண்ணன் கண்ணப்பனின் மக னான பஞ்சு அருணாசலம், கண்ணதாச னிடம் உதவியாளராக இருந்துவந்தார். பின்னர் ஒருகட்டத்தில் படங்களுக்கு வசனம் எழுதச் சென்றார். அவர் எழுதிய முதல் மூன்று படங்கள் பாதியிலேயே நின்றுவிட்டன. அதனால் ‘பாதி படம் பஞ்சு அருணாச்சலம்’ என்றே அவருக்கு பெயர். அதன் பிறகு நகைச்சுவை கதை களுக்குத் திரைக்கதை எழுதி வெற்றி பெற்றார். சினிமா உலகில் தோல்வி களைக் கண்டு அஞ்சாமல், தொடர்ந்து போராடி வெற்றிபெற்றவர் பஞ்சு அருணாசலம்.


அவர் எங்களுக்கு முதன்முதலில் எழுதி கொடுத்த படம் விஜய பாஸ்கர் தயாரித்த ‘எங்கம்மா சபதம்’. இதில் முத்து ராமன், சிவகுமார், ஜெயசித்ரா, விதுபாலா, மனோரமா, அசோகன் நடித் தார்கள். இசை விஜய பாஸ்கர். கன்னடத் திரை இசையுலகில் புகழ் பெற்றிருந்த அவரை ‘கன்னடத்து எம்.எஸ்.வி’ என்றே அழைப்பார்கள். அவருடைய இசையில் ‘அன்பு மேகமே இங்கு ஓடி வா’என்ற அருமையான பாடலுக்கு, சென்னை கடற்கரையில் இரவு 9 மணி முதல் 2 மணி வரையில் சிவகுமார், ஜெயசித்ரா இருவரையும் நடிக்க வைத்து படமாக் கினோம். சிவகுமாருக்கு அப்போதுதான் திருமணம் முடிந்திருந்தது. அவர் என் அருகில் வந்து ‘‘சார் இந்த ராத்திரி நேரத் துல படப்பிடிப்பு வைக்கிறீங்களே’’ என்றார். ‘‘மனைவியைக் காக்க வைப்பதிலும் ஓர் இன்பம் இருக்கு’ என்று சொல்லி நாங்கள் அவரை கிண்டலடித்தோம்.


‘எங்கம்மா சபதம்’ நகைச்சுவை பட மாக உருவாகி பெரிய அளவில் பேசப்பட்டது. அதே கதை மீண்டும் ‘வனஜா கிரிஜா’ என்ற பெயரில் எடுக்கப் பட்டதில் இருந்து பஞ்சு அருணாசலத் தின் கதை ஆற்றலைப் புரிந்து கொள்ளலாம்.


‘எதையும் பெரிதாக பொருட்படுத் தாத இளம் வயதில் காதலில் இறங்கும் போது, அது ஆத்மார்த்தமான காதலாக மலராமல், டைம் பாஸ் காதலாக முளைத் தால் அதன் விளைவு என்னவாகும்?’ என்பதைப் பின்னணியைக் கொண்ட கதைதான் ‘மயங்குகிறாள் ஒரு மாது’. எங்களை ‘கமர்ஷியல் இயக்குநர்’ என்று சிலர் சொல்கிறார்கள். கருத்துள்ள, கதை அம்சம் கொண்ட படங்களை நாங்களும் எடுத்துள்ளோம் என்பதற்கு 1975-ல் எடுக்கப்பட்ட ‘மயங்குகிறாள் ஒரு மாது’ ஒரு சாட்சி!


மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், ‘‘சேலம் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோவை முழு படத்துக்கும், குறிப்பிட்ட தொகைக்கு வாடகைக்குத் தரத் தயாராக இருக் கிறார்கள். அங்கு படமெடுக்க முன்வந் தால் ராமப்பாவிடம் சொல்லி, முழு உதவியும் வாங்கித் தருகிறேன்’’ என்றார். தயாரிப்பாளர் விஜய பாஸ்கருக்கு ஒரே கொண்டாட்டம். அங்கு போய் ‘மயங்கு கிறாள் ஒரு மாது’ படப்பிடிப்பைத் தொடங்கினோம். படப்பிடிப்புக்கான அத்தனை வசதிகளையும் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் செய்து வைத்திருந்தார். அப்போது சென்னை யில் மின் தடை (கரண்ட் கட்) இருந் தது. ஆனால், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் மின் தடையே இல்லை. காரணம், ஸ்டுடியோ முழுவதும் ஜெனரேட்டர் வசதி செய்திருந்தார் சுந்தரம். அவரெல்லாம் சினிமாவின் தீர்க்கதரிசி!


‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தில் முத்துராமன், விஜயகுமார், சுஜாதா, தேங்காய் சீனிவாசன், படாபட் ஜெய லட்சுமி ஆகியோர் நடித்தனர். சுஜாதா ஒரு கல்லூரி மாணவி. அவர் அணிய வேண்டிய உடைகளை மேக்கப் அறை யில் பார்த்துவிட்டு அழ ஆரம்பித்து விட்டார். ‘‘மாடர்ன் டிரெஸ் எனக்கு வேண் டாம். சேலை கட்டிக் கொள்கிறேனே’’ என்றார். ‘‘அது கவர்ச்சி உடை இல்லை. கல்லூரிக்கு அணிந்து செல்கிற சுடிதார் போன்ற உடைதான்’’ என்று எவ்வளவோ சொல்லி பார்த்தும், அவர் பிடிவாதமாக மறுத்தார். சுஜாதாவின் அறைக்கு அருகில் இருந்த குணச்சித்திர நடிகை காந்திமதியிடம் ‘‘என்ன செய் வீர்களோ தெரியாது. சுஜாதாவிடம் கதாபாத்திரத்தை எடுத்துக் கூறி, அந்த உடையை அணிவித்து அழைத்து வர வேண்டியது உங்கள் பொறுப்பு’’ என்றேன். அடுத்த சில மணித் துளிகளில் சுடிதார் உடையில் வந்து நின்றார் சுஜாதா. சாமர்த்தியமான பேச்சிலும் கெட்டிக்காரர் என்பதை நிரூபித்தார் காந்திமதி.


படத்தில் விஜயகுமாருக்கும் சுஜாதா வுக்கும் காதல் பூக்கும். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தன் வீட்டுக்கு சுஜாதாவை அழைத்து வருவார். இனிமையான தனிமை காதலர்களை எல்லை மீற வைத்துவிடும். அதன் விளைவு, கரு கலைப்பு வரைக்கும் சென்றுவிடும். அப்போது சுஜாதாவுக்கு சிகிச்சை செய்த டாக்டர் எம்.என்.ராஜம், ‘‘நடந்ததை மறந்து விடு. இந்த விஷயம் நம்மைத் தவிர யாருக்கும் தெரியாது. இனி, அடுத்து உன் வாழ்க்கையை அமைத்துக்கொள்’’ என்பார் சுஜாதாவிடம்.


கதாநாயகன் முத்துராமன் வீட்டில் இருந்து சுஜாதாவைப் பெண் பார்க்க வருவார்கள். சுஜாதாவுக்கு பேரதிர்ச்சி. டாக்டர் எம்.என்.ராஜத்தின் தம்பிதான் மாப்பிள்ளை முத்துராமன். எம்.என்.ராஜம் சுஜாதாவை வீட்டுக்குள்ளே தனியாக அழைத்துச் சென்று, ‘‘அன்று சொன்னதைத்தான் இப்போதும் சொல் கிறேன். என் தம்பியைத் திருமணம் செய்துகொண்டு, நல்லபடியாக வாழ்க் கையைத் தொடங்கு’’ என்று கூறி திருமணம் செய்து வைப்பார்.


தேங்காய் சீனிவாசன் எதிர்பாராத விதமாக தான் எடுத்த விஜயகுமார், சுஜாதா இணைந்திருந்த புகைப்படங் களை வைத்துக்கொண்டு, சுஜாதாவை பிளாக்மெயில் செய்வார். சுஜாதா மனதள வில் உடைந்து, உடல்நிலை பாதிக்கப் பட்டு இறந்துவிடும் நிலை யில் தன் கணவ னிடம், தன் தவறை சொல்லி மன்னிப்பு கேட்பார். அதற்கு முத்துராமன், ‘‘உன்னை பெண் பார்க்க வரும்போதே எனக்கு அந்த உண்மை தெரியும். நீயும், என் அக்காவும் பேசியதை நான் அன்றைக்கு கேட்டேன். தெரியாமல் செய்த தவறை மன்னிப்பதுதான் மனித குணம்’’ என்று அவரை ஏற்றுக்கொள்வார். சுஜாதா இறுக்கம் குறைந்து உடல் நலம் பெற்று மகிழ்வோடு வாழ்வார். இதோடு படம் முடியும். இந்தப் படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் ‘‘தவறு செய்த கதாநாயகி சாக வேண்டும். அப்படி கதையை முடித்தால் படத்தை வாங்கிக்கொள்கிறோம்’’ என்றார்கள்.


எங்களுக்கு மிகுந்த பண நெருக்கடி. நாங்கள் என்ன செய்தோம்?

- இன்னும் படம் பார்ப்போம்…


thanks the hindu

Wednesday, November 18, 2015

எதை நினைத்தோமோ அதுவே நடந்தது


“எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சேனோ அது அப்படியே நடந்தது!” என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ஏன் இப்படி நடக்கிறது? காரணம் அது நடக்கக் கூடாதுன்னு அதையே நினைத்ததால் அதுவே நடந்தது!


பெரிய கண்ணாடி டம்ளரில் வழிய வழிய தண்ணீரைக் குழந்தை கொண்டு சென்றால், “கீழே போடப் போறே...ஜாக்கிரதை!” என்று அலறியவுடன் அது கை நழுவிப் போட, அங்கிருந்து அம்மா சொல்வாள்: “எனக்குத் தெரியும். நீ கீழே போடுவேன்னு. அதனாலதான் கத்தினேன்!” அவருக்குத் தெரியாதது, அவர் குழந்தை கீழே போடுவதை எண்ணிப் பயத்தில் கத்தியதால்தான் குழந்தை மிரண்டு போய்க் கீழே போட்டது என்று.


நம்பிக்கையும் நிகழ்வும்

இதுதான் self fulfilling prophecy எனும் உளவியல் கோட்பாட்டின் சாரம். நம் நம்பிக்கைகளுக்கு ஏற்ப நிகழ்வுகள் நடந்து அவை நம் நம்பிக்கைகளை வலுப்படுத்தும்.

“அவன் ஒரு ஆள் போதும் சார். அத்தனையும் தானா முடிப்பான்!” என்று பாஸ் நம்பிக்கை வைக்கும் போது அந்தப் பணியாளரின் வேலைத்திறன் தானாகவே உயர்கிறது. தன்னம்பிக்கை, திறமை, முயற்சி, பெருமை என அனைத்தும் இசைந்து ஒரு அற்புதம் நிகழும். பின் பாஸ் சொல்வார்: “நான் சொல்லலை? அவன் கிட்ட விட்டால். பிரமாதப்படுத்துவான்னு!”

நிர்வாகம் முழு மனதாகத் தொழிலாளர்களை மதித்து, நம்பிக்கை வைத்துப் பொறுப்புகள் கொடுக்கும் போது நல்லுறவு மட்டுமல்ல, உற்பத்தித் திறனும் பன்மடங்கு பெருகும் என்பது ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் ஆவணப் படுத்தியுள்ள உண்மை. இருந்தும், “இவனுங்க பேச்சை எல்லா விஷயங்களிலும் கேட்டா எதிர்பார்ப்பு அதிகமாயிடும். உடனே சரின்னு எதையும் சொல்லக் கூடாது.

எப்பவும் கொஞ்சம் இழுத்துப் பிடிக்கணும். இல்லேன்னா, பிரச்சினை பண்ணுவாங்க!” என்று நினைக்கும் நிர்வாகங்கள் அனைத்தும் தொழிலாளர் பிரச்சினைகளைக் கண்டிப்பாகச் சந்திக்கும். நிர்வாகத்திடம் உள்ள தொழிலாளர் பற்றிய ஆதார நம்பிக்கைகள்தான் தொழிலாளர்களை அப்படி நடந்து கொள்ள வைக்கிறது என்பதைப் பெரும்பாலும் நிர்வாகத்தினர் அறிவதில்லை.


நடக்காது என்பார் நடந்துவிடும்

“நடக்கக் கூடாது” என்று நினைக்கும் போது அந்த எதிர்மறை எண்ணம் வலுப்படும். அச்சமும் பதற்றமும் ஏற்படும். தற்காப்பு நடவடிக்கைகள் எடுப்போமே தவிர இயல்பான முயற்சியை மகிழ்ச்சியான முறையில் எடுக்க முடியாது. அது தவறுகளுக்கும் அபிப்பிராயப் பேதங்களுக்கும் வழி வகுக்கும். எதிராளி இருந்தாலும் அவரிடமும் அச்சத்தையும் நம்பிக்கையின்மையை வளர்க்கும். பின் பயந்தது போலவே தோல்வி நிகழும்.

‘சின்ன தம்பி’ படத்தில் யாரையும் தங்கை காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் மூன்று சகோதரர்களும் படு தீவிரமாக இருக்க, கடைசியில் அதுவே நிகழும். அவர்கள் தங்கையைத் தனிமைப்படுத்தி, ஆண்கள் சகவாசம் கிடைக்காமல் செய்ய, கிடைத்த முதல் தொடர்பிலேயே காதல் கொள்வாள் நாயகி. இது பல வீடுகளில் நடக்கும் உண்மைச் சம்பவம்.

இதிகாசங்களும் இதை மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன. தன் மகன் இடிபஸ் தன்னைக் கொல்வான் என்பதால் அவனுடைய அப்பா அவனைக் குழந்தையிலேயே தள்ளி வைக்கிறார். வளர்ப்புப் பெற்றோரிடம் வளர்வான் மகன். தன் அப்பா என்று தெரியாமலேயே அவரை வென்று கொல்வான். இதுதான் கிரேக்க இதிகாசத்தில் உள்ள இடிபஸின் கதை. மகன் பற்றிய அப்பாவின் எண்ணம் தான் இதன் ஆரம்பம்.


ஊத்திக்கொள்பவர்கள்

தொடர்ந்து வியாபாரத்தில் தோற்பவர்கள் எனக்குப் பல பேரைத் தெரியும். ஒவ்வொரு முறை ஒவ்வொரு காரணம் சொல்வார்கள். அடிப்படையில் அவர்கள் தோல்வியை எதிர்பார்த்தே வியாபாரத்தில் இறங்குவார்கள். “இந்த வாட்டியும் நஷ்டம் ஆகக் கூடாதுன்னு எல்லாம் பாத்து பாத்து செஞ்சேன். நம்ம ராசி இதுவும் ஊத்திக்கிச்சு!” என்பார்கள்.

அதே போலச் சிலர் திருமண வாழ்வில் தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பார்கள். ஆள் மாறினாலும் பிரச்சினை மாறாது. காரணம் பிரச்சினை துணையிடம் இல்லை. தங்களிடம்தான் உள்ளது என்பதை அவர்கள் உணர்வதில்லை.

எந்த வேலையிலும் நிலையாகத் தங்காதவர்கள், எல்லாரிடமும் சீர்குலைந்த உறவு கொண்டிருப்போர், தொடர்ந்து நோய்வாய்ப்பட்டுக்கொண்டே இருப்பவர்கள், எப்போதும் பணத் தட்டுப்பாட்டில் இருப்பவர்கள் என அனைவருமே ஏதோ சில ஆதார எண்ணங்களில் குறைபட்டவர்கள். அந்த எண்ணம் தரும் உணர்வும் செயல்பாடும் அவர்களுக்கு அவர்கள் வெறுக்கும் அதே முடிவுகளைத்தான் தருகின்றன.


பட்டியலிடுங்கள்

நமக்குப் பிரச்சினை என்று நாம் நினைக்கும் விஷயங்களில் நம் ஆதார எண்ணங்கள் என்னென்ன என்று பட்டியல் போடுங்கள். அது பிடிபடவில்லை என்றால் உங்களிடம் அதிகம் பழகும் நண்பரிடமோ, வாழ்க்கைத் துணையிடமோ, சக பணியாளர்களிடமோ கேளுங்கள். உங்கள் பேச்சு, உங்கள் எண்ணங்களை அவர்களுக்குக் காட்டிக் கொடுத்திருக்கும். அவர்கள் மிக எளிமையாக உங்கள் எண்ணங்களைச் சொல்லுவார்கள்.

உங்கள் நம்பிக்கைகளை நேர்மறையாக மாற்றுவது எப்படி என்று மிக விரிவாக, நவீன உத்திகளுடன் சொல்லித் தருகிறேன். ஆனால் அதற்கு முன் உங்களிடமுள்ள எண்ணங்களை முழுவதும் ஆராயுங்கள்.

வெறும் எண்ணத்தை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடுமா? வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளை என்ன செய்வது?

முதலில் உங்கள் எண்ணங்களை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளைச் சமாளிக்கத் தேவையான அளவு பலமான எண்ணங்கள் தானாகத் தோன்றும்.


ஒரு நாளில் 35 ஆயிரம்

“நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய்’’ என்றார் புத்தர். நீங்கள் ஒரு நாளில் அதிக நேரம் சிந்திப்பவை என்று கணக்கிடுங்கள். அவற்றில் எவையெல்லாம் நேர்மறை, எவையெல்லாம் எதிர்மறை என்று கணக்கிடுங்கள்.

ஒரு அதிர்ச்சிகரமான உளவியல் உண்மை சொல்லட்டுமா?

சமீபத்திய ஆய்வில் சொல்லியிருக்கிறார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு 35 ஆயிரம் எண்ணங்கள் நமக்கு வருகின்றனவாம். இது உங்கள் மனோபாவத்துக்கும் வேலைக்கும் ஏற்ப, கூடும், குறையும். அது முக்கியமில்லை. ஆனால் அவற்றில் 80 சதவீதம் எதிர்மறையானவை. அதுவும் ஒன்று அல்லது இரண்டு விஷயங்களைப் பற்றித்தான் முழு நேரமும் யோசிக்கிறோமாம்!

ஆக, நாள் முழுவதும் ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்துக் கவலையோ, பயமோ, கோபமோ கொண்டிருக்கிறோம். அதன் விளைவுகளை நம் உடலில், வேலையில், வாழ்க்கையில் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம்.

உங்கள் வாழ்க்கையின் எந்தெந்த விஷயத்துக்காக, என்ன என்ன எண்ணங்களைத் தற்போது வைத்துள்ளீர்கள் என்று பாருங்கள்.
இந்த ஆய்வின் முடிவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் இந்தத் தொடரைத் தொடர்ந்து படிக்காவிட்டலும் பரவாயில்லை. ஆய்வின் முடிவு அதிருப்தியைக் கொடுத்தால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்புவது போல மாற்ற இந்தத் தொடரைத் தொடர்ந்து படியுங்கள்!


thanks the hindu

Sunday, November 15, 2015

எத்தனை விதமாய் எண்ணங்கள்!

நம் அனுபவங்கள் தான் எண்ணங்களைத் தீர்மானிக்கின்றன என்பது எவ்வளவு தவறான கருத்து என்பதை முதலில் பார்ப்போம்.

10 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கையாடல் செய்து பிடிபட்டதால் வங்கி ஊழியர் தற்கொலை என்று படிக்கிறோம். கோடிக்கணக்கில் கையாடல் செய்ததாக குற்றஞ்சாட்டப்படும் மந்திரி சாதாரணமாகப் பேட்டி கொடுப்பார். சாலையில் வாகனம் செல்லும் தடத்துக்கு மிக அருகில் ஓரமாகப் படுத்து , எப்போதும் ஆபத்தை எதிர்நோக்கும் உணர்விலும் நன்றாக உறங்குவோர் பலர் நம் நாட்டில்.

இதே நாட்டில் தான் மிக வசதியான இடத்தில் படுத்தும் தூக்கம் வராமல் தூக்க மாத்திரை உபயோகிப்போர் எண்ணிக்கை மிக மிக அதிகம். 1100 மதிப்பெண்கள் எதிர்பார்த்து அது குறைந்ததால் மன அழுத்தத்தில் சிகிச்சைக்கு என்னிடம் வரும் மாணவர்களும் உண்டு. இரு முறை தோல்வி அடைந்தும் பதற்றப்படாமல் இருக்கிறானே என்று மன அழுத்தத்தில் என்னிடம் வரும் பெற்றோர்களும் உண்டு.

பணம் இருந்தால் கடன் அடைக்கலாம் என்பார்கள். நிரந்தர வருமானம் இல்லாதவர்கள் மைக்ரோ ஃபினான்ஸில் வாங்கிய கடனைச் சரியாகத் திருப்பித் தருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும் நிறுவனங்கள் அரசிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தருவதில் தாமதம். சிக்கல். ஏன்?

எல்லாம் மனசு தான்.

இரண்டு எண்ணங்கள்

விற்பனைப் பயிற்சியில் அதிகம் சொல்லப்பட்ட கதை இது:
காலணி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று ஒரு புதிய தீவில் கிளை பரப்ப எண்ணி 50 ஜோடி காலணிகளுடன் ஒரு விற்பனைக்காரனை அனுப்பியது. சென்றவன் அதே வேகத்தில் திரும்பினானாம். “அங்கு காலணி அணியும் பழக்கம் யாருக்கும் இல்லை. அதனால் கிளை திறக்கும் எண்ணத்தைக் கைவிடலாம். இங்கு விற்பனை சாத்தியமில்லை.”

இரண்டாம் ஆளை அனுப்பினார்கள். அவன் மறு நாளே செய்தி அனுப்பினானாம்: “யாருமே காலணி அணியவில்லை. உண்மை தான். அதனால் இதை விற்கப் போட்டியும் இல்லை. முழு சந்தையையும் நாமே பிடித்துவிடலாம். இன்னும் 200 ஜோடி காலணிகள் அனுப்புங்கள். விரைவில் கிளை திறக்க ஏற்பாடு செய்யுங்கள்!”

வாய்ப்புகளில் பிரச்சினைகளைப் பார்ப்பதும் பிரச்சினைகளில் வாய்ப்புகளைப் பார்ப்பதும் அவரவர் மன நிலையைப் பொறுத்ததே!
எண்ணம் தான் விதை. உணர்வு தளிர். செயல் விருட்சம். இதைப் புரிந்து கொண்டால் அனைத்தும் எளிதாக விளங்கும்.

செயலின் விதை
“ஏன் இப்படிச் செய்யறான்?” என்று கேட்பதற்கு முன் அந்தச் செயலுக்கு விதையான எண்ணம் என்னவாக இருக்கும் என்று யோசியுங்கள்.
பல ஆண்டுகளுக்கு முன், ஒரு பிரபலப் பத்திரிகையின் கேள்வி - பதில் பகுதியில் இதைப் படித்தேன்:
கேள்வி: “நடிகை ரோஜாவைக் கட்டிப் பிடிக்க ஆசை! ஒரு வழி சொல்லுங்கள்?”

பதில்: “ரோஜாவைக் கட்டிப்பிடிக்க நினைத்தால் முள் குத்தும்!”
அருகே நடிகை ரோஜாவின் படமும் ரோஜாப்பூவின் படமும் இணைந்ததாய் ஒரு கேலிச்சித்திரம். என்ன அரிய கருத்து!
சரி, இதை ஏன் ஒரு வாசகர் கர்மச் சிரத்தையாய்க் கார்டு வாங்கி எழுதி அனுப்புகிறார்? ஆயிரம் கேள்விகளில் ஏன் இதைப் பொறுக்கி எடுத்து அந்த உதவி ஆசிரியர் பதில் எழுதிப் பிரசுரிக்கிறார்? இதை ஏன் மெனக்கெட்டுப் படித்து ஞாபகம் வைத்து நான் இப்போது எழுதுகிறேன்?
ஒவ்வொருவர் எண்ணத்தை அறியவும் முயற்சி செய்யுங்கள். மூவரின் செயலுக்கும் உந்துசக்திக்கும் செயலுக்கும் விளக்கம் கிடைக்கும்.

எண்ணமே ஆதாரம்


“ஏன் முகம் கொடுத்துப் பேச மாட்டேன் என்கிறாள்?” “ஏன் எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியாக இல்லை? “ஏன் இவர் செய்கின்ற எல்லாத் தொழிலும் தோல்வியில் முடிகிறது?” “ஏன் இவர் எங்குச் சென்றாலும் பிரபலமாகிறார்?” “எந்த வேலையையும் இவரால் மட்டும் எப்படி சரியான நேரத்தில் செய்ய முடிகிறது?” “இவரால் மட்டும் எப்படி எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?” “இவன் எல்லோரிடமும் சணடை போடுகிறானே, ஏன்?” இப்படி நம்மைச் சுற்றிய மனிதர்களின் செயல்களுக்கு ஆதாரமான எண்ணங்களை ஆராயுங்கள். அவர்களின் செயல்களின் காரணங்கள் புரியும்.
எதிராளியின் எண்ணம் புரியாத போது நாம் நம் உறவுகளைச் சீர் குலைய விடுகிறோம்.


அவர் எண்ணத்தைப் புரிந்து நாம் எடுக்கும் முடிவுக்கும் அடிப்படை நம் எண்ணம் தாம். என்ன விசு பட வசனம் மாதிரி இருக்கா? சரி, கொஞ்சம் எளிமை படுத்தலாம் வாங்க...!
ப்ரமோஷன் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டார். மேலதிகாரியான உங்களுக்குக் குழப்பமாக உள்ளது. “எந்தக் கிறுக்கனாவது பணமும் பவரும் வேண்டாம்னு சொல்வானா? என்ன ஆள் இவன்?” என்று யோசிக்கிறீர்கள். பின்பு, விசாரித்ததில் புரிகிறது. தொழிற்சங்க உறுப்பினர் தகுதி ப்ரமோஷனால் பறி போகும். பதவி உயர்வை விடத் தொழிற்சங்க அடையாளம் பெரிது என்று எண்ணி அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.


இப்போது இந்த அறிதல் உங்கள் எண்ணத்தை இப்படி மாற்றலாம். “சரியான அரசியல்வாதி போல. இங்கேயே இருந்து என்னென்ன பிரச்சினை செய்வானோ? கொஞ்சம் ஜாக்கிரதையா டீல் பண்ணணும்!”
அல்லது இப்படி ஓர் எண்ணம் தோன்றலாம்: “என்ன ஒரு கொள்கைப்பிடிப்பு. அவ்வளவு தீவிரமான ஈடுபாடா? நாமெல்லாம் காசு கிடைச்சா போதும்னு நினைக்கறப்ப இப்படிப் பொதுக் காரணத்துக்கு உழைக்கும் ஆளைப் பாக்கறதே பெரிய விஷயம். அந்த ஆளைப் பாத்து இன்னும் நிறைய தெரிஞ்சக்கணும்!”
எந்த எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கிறீகளோ அது அவருடனான உங்கள் உறவை தீர்மானிக்கும்.
ஆம். நீங்கள் உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்!
“நீங்கள் உங்கள் வியாதியைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்!” என்பார் தீபச் சோப்ரா. உங்கள் எண்ணம்தான் உங்களை நோய்வாய்ப்படுத்தும் என்றால் நம்புவீர்களா?


“அப்படியா ஆச்சர்யமாக இருக்கே.!” என்பதும் “ரொம்ப கதை விடறார்!” என்பதும் இரு எண்ணங்கள். எந்த எண்ணத்தை இப்பொழுது தேர்ந்தெடுத்தீர்கள் என்று பாருங்கள்.
உங்கள் தேர்வு உங்கள் தேடலை நிச்சயிக்கும்!

thanks the hindu

Wednesday, October 14, 2015

ஆங்கிலம் அறிவோமே 77: தொபுக்கடீர் என்பது எந்த வகை வார்த்தை?

ஒரு நண்பர் Onomatopoeia (அனமாடபியா) என்ற வகையிலான வார்த்தைகளை விளக்க முடியுமா என்கிறார். விளக்குவது கஷ்டம். புரிய வைக்கலாம்.
ஓர் இயல்பான ஒலியை நகல் எடுப்பது போன்ற வார்த்தைகள் இவை. Cuckoo, meow போன்ற வார்த்தைகள் இவை.
அவன் கதவைப் படார் என்று சாத்தினான் என்ற வார்த்தையில் படார் என்பதை மட்டும் கொடுத்தால், அர்த்தம் கூறுவது கஷ்டம்தானே. அறைந்து மூடும்போது எழும் சப்தம் எனலாம்.
உங்கள் கன்னத்தில் ஒருவர் அறைந் தால் அதை எப்படி விவரிப்பீர்கள்? ‘பளார்’ என்று அறைந்தான் என்றுதான் சொல்வீர்கள். படார் என்பதில்லை.
தட்தட் என்று இதயம் அடித்துக்கொண்டது என்கிறோம். இதய ஒலியை மருத்துவர்கள் லப்டப் என்கிறார்கள்.
‘ஆ’ என்று அலறினான். ‘ஓ’ என்று கூக்குரலிட்டான். ‘வீல்’ என்று கத்தினான். இது போன்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் Onomatopoeia என்பார்கள்.
பட்டிமன்றங்களில் அடிக்கடி “அமெரிக்கப் பசு மட்டும் மம்மி என்றா குரல் கொடுக்கும்? அம்மா என்றுதானே?’’ என்ற கேள்வி இடம் பெறும். இந்த தர்க்கத்தின்படி பார்த்தால் Onomatopoeia வார்த்தைகள் எல்லா மொழிகளிலும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், ஏனோ அப்படி இருப்பதில்லை. கடிகாரத்தின் ஒலியை நாம் டிக் டிக் என்கிறோம். ஆங்கிலத்தில் Tik Tak என்கிறார்கள். சில கடிகாரக் கடைகளில் ‘Tik Taks are sold here’ என்றே அறிவிப்புப் பலகைகளைக் காண முடியும்.
காரின் ஹாரன் ஒலியை நாம் ‘பாம் பாம்’ என்போம். ஜப்பானிய மொழியில் ‘பூ பூ’ என்பார்கள். வியட்நாமிய மொழியில் அது ‘பிம் பிம்’. கொரிய மொழியில் ‘பாங் பாங்’.
அமெரிக்காவில் ஒரு பிரபலமான கோரஸ் பாடல் உண்டு. அது இதுபோன்ற வார்த்தைகளைக் கொண்டே வடிவமைக்கப்பட்டது.
“Bang! went the pistol.
Crash! went the window.
Ouch! went the son of a gun.
Onomatopoeia, I don't wanna see ya ’’
க்வாக் (Quack) என்பது வாத்தொலி (வாழ்த்தொலி அல்ல). இங்கே ‘குவாகுவா’ என்பார்கள். Baa Baa என்பது ஆட்டின் ஒலி - அதனால்தான் Baa baa black sheep.
Zip என்பதுகூட அது எழுப்பும் ஒலியைக் கொண்டு உருவான வார்த்தைதான். வேண்டுமானால் demo செய்து பாருங்கள். Twitter என்றால் நீங்கள் நினைப்பது அல்ல. அது பறவைகள் எழுப்பும் ஒலி.
Buzz, Hiss போன்ற ஒலிகளைக்கூட இந்த வகையில் அடக்கிவிடலாம்.
இதுபோன்ற வார்த்தைகள் சிலவற்றை கவனித்துவிட்டு ‘பொருத்தமாக இல்லையே’ என்று நீங்கள் கூற வாய்ப்பு உண்டு. அது ஆங்கிலேயர்களுக்குப் பொருத்தம்! (தொபுக்கடீர் என்று குதித்தான் என்கிறோமே, தொபுக்கடீர் என்ற வார்த்தை ரொம்பப் பொருத்தமோ?)
அது இருக்கட்டும், எதற்காக Onomatopoeia என்ற கரடுமுரடான வார்த்தை? கிரேக்க மொழியில் இதற்கு “நான் பெயர்களை உருவாக்குகிறேன்’’ என்று பொருள்.
இத்தகைய வார்த்தைகளைத் தண்ணீர் தொடர்பான சில வார்த்தைகளோடு பொருத்திப் பார்ப்பவர்களும் உண்டு. Splash என்றால் தண்ணீரில் குதிக்கும்போது எழும்பும் ஒலி.
Spray என்றால் வாசனைத் திரவியத்தை அடித்துக்கொள்ளும்போது எழும்பும் ஒலி. அதாவது, காற்றின் மூலம் ஒரு திரவத்தை வெளியேற்றும்போது எழும்பும் ஒலி. Drizzle என்றால் தூறல் ஒலி. (பல Onomatopoeia வார்த்தைகள் பெயர்ச் சொற்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன).
குரல் தொடர்பான இதுபோன்ற வார்த்தைகளும் உண்டு.
Giggle என்றால் அது சிரிப்பொலிதான். ஆனால், கிண்டலாக லேசான கனைப்புடன் கூடிய சிரிப்பு. ஒருவரை வெறுப்பேற்றுவதற்காகக் கொஞ்சம் பண்புக் குறைவாகச் சிரிப்பது.
Grunt என்றால்? உங்களிடம் எதற்கோ ஒப்புதல் கேட்கிறார்கள். வேண்டாவெறுப்பாக நீங்கள் அதை ஒப்புக் கொள்வதுபோல் ‘ம்ம்’ என்று அடித்தொண்டையிலிருந்து ஒரு ஒலியை எழுப்புகிறீர்கள். அது grunt.
Chatter என்றால் தொணதொணப்பது. Murmur என்றால் முணுமுணுப்பது. Mumble என்பதும் கிட்டத்தட்ட அப்படித்தான். தெளிவில்லாமல் முணுமுணுப்பது.
STAND
‘‘Stand ஆடுது பார். மேலே விழுந்திடப்போவுது, ஜாக்கிரதை’’ என்பதுபோல் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருப்போம். அதை verb ஆகப் பயன்படுத்துகையில் ‘நில்’ என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தியிருப்போம்.
ஆனால், ஒவ்வொருவித preposition-ஐ stand என்ற வார்த்தையுடன் சேர்க்கும்போது அது ஒவ்வொருவிதமான அர்த்தத்தைத் தரும்.
Stand by என்றால் support என்று அர்த்தம். We will be unbeatable if we stand by one another.
Stand out என்றால் இறுதிவரை வளைந்து கொடுக்காமல் இருப்பது. It is difficult but I think you can stand it out. தனித்துத் தெரிவதையும் stand out என்பதுண்டு.
Stand over என்பது தள்ளிப் போடுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. Let this matter stand over for the present.
Stand up என்றால் உறுதியாக இருப்பது என்ற அர்த்தம். We must have the courage to stand up.
LIMIT LIMITATIONS
சிலர் Limit என்ற வார்த்தையையும், Limitation என்ற வார்த்தையையும் மாற்றிப் பயன்படுத்துகிறார்கள். Limit என்றால் எல்லை. This is the limit. இந்த இடத்தில் இது noun ஆகப் பயன்படுத்தப்படுகிறது.
Limit என்பதை verb ஆகப் பயன்படுத்தும்போது ஒரு எல்லையோடு நிறுத்திக்கொள்வது அல்லது கட்டுப்படுத்துவது என்று அதற்கு அர்த்தம்.
The lift limits the number of users to ten at a time.
Limitation என்பது சில கோணங்களில் Limit போலவே பயன்படுத்தப்படலாம் என்பது உண்மை. குறைபாடு என்ற அர்த்தத்தையும் இது தருகிறது. I am not good at public speech. This is my limitation.
இப்படியும் வைத்துக் கொள்ளலாம். I have my limits என்று நீங்கள் சொன்னால் அதில் உங்கள் விருப்பம் கலந்துள்ளது. அதாவது, சிலவற்றைத்தான் நான் ஏற்றுக் கொள்வேன் என்பது போல.
ஆனால் I have my limitations என்றால் அது உங்கள் விருப்பம் தொடர்பானது அல்ல. உங்கள் இயலாமையைக் குறிக்கும் சொல் அது.
Limitation என்று ஒரு சட்டம் உண்டு. அதற்கான அர்த்தம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் வழக்கு தொடுக்கவில்லையென்றால் உங்களுக்குச் சட்டம் உதவிக்கு வராது என்பதுதான். மிகவும் காலம் கடந்த வழக்குகளை ஏற்றுக் கொண்டால் சம்பந்தப்பட்டவர்கள் இறந்திருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவேதான் இந்த Law of Limitation.
எளிமையாகச் சொல்வதென்றால் நீங்கள் ஒருவருக்குப் பணத்தைக் கடன் கொடுத்துவிட்டு அதற்கான பிராமிஸரி நோட்டில் அவரது கையெழுத்தையும் வாங்கி வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் பிராமிஸரி நோட்டில் கையெழுத்து போட்ட தேதியிலிருந்து மூன்று வருடத்துக்குள் வழக்கு தொடுக்க வேண்டும்.
தொடர்புக்கு: [email protected]

thehidhu

பதின் பருவம் புதிர் பருவமா?- 2: என் வழி தனி வழி-டாக்டர் ஆ.காட்சன்

‘வர வர அவன் சொன்ன பேச்சைக் கேட்கவே மாட்டேங்கிறான்’… ‘எப்பப் பாரு இவளுக்குக் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டிருக்கணும்’... பதின் வயதுப் பிள்ளைகள் உள்ள எல்லா வீடுகளிலும் இந்த வசனங்களைக் கேட்க முடியும். வளரிளம் பருவத்தில் வெளிப்படையாகத் தெரியும் மாற்றங்களில், இதெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே.
இதுவரை பெற்றோரோடு தூங்கிய மகன்/மகள், தனி அறையை நாடத் தொடங்குவார்கள். இவ்வளவு காலம் தாயின் கையைப் பிடித்து சாலையில் நடந்து சென்றிருந்தாலும், இப்போது வெட்கமாகத் தோன்றும். பெற்றோரின் ஆலோசனையைவிட நண்பர்களின் சொற்கள் வேதவாக்காகத் தெரியும்.
ஆனால், இந்தப் பருவம்தான் தனக்கென்று ஒரு தனித்தன்மை (Identity) மற்றும் அகநிலையை - சுயத்தை (Self) உருவாக்கிக்கொள்ளும் காலம். இது ஆரோக்கியமான மாற்றம்தான்!
பெற்றோரின் பங்கு
இந்த நேரத்தில் ‘ஐயையோ... அவன் அப்படிச் செய்யுறான்.. இவள் இப்படிப் போறா..’ என்று பெற்றோர்கள் புலம்புவதால், பயனில்லை. பிள்ளைகளின் வளர்ச்சி மாற்றத்தைப் புரிந்துகொண்டு, அவர்களுடைய உலகத்தில் பங்கேற்று, அவர்களுக்கு ஆதரவாக இருப்பதுதான் அவசியத் தேவை.
உதாரணமாக, ‘அந்தப் பசங்களுடன் சேராதே' எனக் கட்டளையிடுவதைவிட, பிள்ளைகள் யார் யாருடன் நட்பு கொண்டிருக்கிறார்கள், அவர்களுடன் எப்படிப் பழகுகிறார்கள் என்று சற்றே விலகி நின்று கண்காணிப்பது பலன் தரும். தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவோ அல்லது அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாகவோ வளரிளம் பருவத்தினர் நினைத்துவிட்டால் கொஞ்சம் ஆபத்துதான்.
அப்படி நம்பிவிட்டால், பெற்றோரை எதிரியாகப் பார்க்க ஆரம்பிப்பார்கள். உறவு சிக்கலுக்கு உள்ளாகும். இந்தக் கட்டத்தில் அவர்களை அதிகம் சந்தேகப்படுவதோ அல்லது அதிகம் நம்புவதோ, இரண்டுமே அவர்களுடைய மனதைப் பாதிக்கும்.
புதிய பிரச்சினைகள்
‘கூகுள்’ யுகத்துக்கு முன்னால் விடலைப் பருவத்தினரின் நடவடிக்கை மாற்றங்கள் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தன. அதுவரை கசங்கிய சட்டை அணிந்தவன், திடீரென்று அயர்ன் செய்து நீட்டாக அணிய ஆரம்பிப்பது, எண்ணெய் வழியத் தலைசீவி சென்றவள் சிகை அலங்காரத்தை மாற்றச் சிரத்தையெடுப்பது போன்றவையெல்லாம் நடக்கும். அதையெல்லாம் தாண்டி அதிகபட்சமாக சைக்கிள் கேட்பார்கள். ஆனால், இப்போதோ ‘டாக்டர், என் பையன் மொபைல் போன் வாங்கிக்கொடுத்தால்தான் ஸ்கூலுக்குப் போவேன் என்று அடம்பிடிக்கிறான்’ என்றோ, ‘ஒன்றரை லட்ச ரூபாய்க்குப் பைக் வாங்கித் தரவில்லையென்றால், வீட்டைவிட்டு ஓடிப்போய்விடுவேன் என்று மிரட்டுகிறான்’ என்றோ மனநல மருத்துவரிடம் புகார் சொல்லும் அளவுக்குப் பிரச்சினைகள் சகஜமாகி வருகின்றன.
கஷ்டப்பட விடலாமா?
சிறுவயதிலேயே குடும்பச் சூழ்நிலை, பொருளாதார நிலையைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்து வளர்ப்பதில் தவறே இல்லை. ‘நான் பட்ட கஷ்டத்தை, என் பிள்ளைகள் அனுபவிக்கக் கூடாது’ என்ற எண்ணம், பெற்றோரிடம் இருப்பது இயல்பான ஒன்றுதான். இந்த வயதில் இது தேவையில்லை என்று பெற்றோர் நினைத்தால், அதைத் தைரியமாகப் பிள்ளைகளிடம் சொல்லப் பழக வேண்டும். மிக இன்றியமையாததாகவும், அதேநேரம் விலை உயர்ந்ததாகவும் இருந்தால், அதன் மதிப்பைச் சுட்டிக்காட்டிக் கையில் கொடுப்பதில் தவறில்லை.
நான் யார்?
‘பாட்ஷா' படத்தில் ரஜினி, ‘எட்டு எட்டா மனுஷ வாழ்க்கையைப் பிரிச்சுக்கோ' என்று பாடியதைப் போல, நூறு வருடங்களுக்கு முன்னரே புகழ்பெற்ற ஜெர்மன் உளவியல் நிபுணர் எரி எரிக்சன் வாழ்க்கையை எட்டு நிலைகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் மனதளவில் ஏற்படும் மாற்றங்களைக் கூறியிருக்கிறார்.
அதில் ஐந்தாம் நிலையான பதிமூன்று வயதில் ஆரம்பித்து இருபத்தியொரு வயதில் முடியும் பருவத்தில் ஏற்படும் முக்கிய மாற்றமாக Self என்றழைக்கப்படும் தனித்துவமும் சுயமும் உருவாவதைக் குறிப்பிடுகிறார். இந்தக் காலகட்டத்தில்தான் ‘தான் யார், இந்தச் சமூகத்தில் தன் பங்கு என்ன?’ என்ற குழப்பம் ஏற்படும். இதற்கு Identity crisis (அடையாளச் சிக்கல்) என்று பெயர்.
அந்தக் குழப்பத்தைத் தீர்ப்பதற்காக மனம் எடுக்கும் பல முயற்சிகளில் ஒன்றுதான், தனக்குப் பிடித்த ஒருவரோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது. விளைவாக ஒரு நடிகர், நடிகை அல்லது விளையாட்டு வீரரின் தீவிர ரசிகராக அடையாளப்படுத்திக் கொள்வது, அரசியல் தலைவரின் மானசீகத் தொண்டனாக மாறுவது, மதரீதியான நம்பிக்கைகளில் ஐக்கியமாவது போன்ற மாற்றங்கள் நடக்கும். பச்சை குத்திக்கொள்வது முதல் பாலாபிஷேகம் செய்வதுவரை, எல்லாமே இதன் வெளிப்பாடுதான்.
தடம் மாறும் நிலை
இந்த மாற்றங்களில் பெரும்பாலா னவை போகப்போக ஆரோக்கியமான முதிர்ச்சியை அடைந்துவிடும். இந்த அடையாளப்படுத்திக்கொள்ளுதல் சில நேரங்களில் எதிர்பாலின ஈர்ப்பாக மாறி, காதல் வயப்படுவதிலும் முடியும்.
சில வேளைகளில் சமூகவிரோதக் கும்பலுடன் சேர்வது, ஜாதி அடிப்படையில் அடையாளம் காண்பது அல்லது போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற ஆரோக்கியமற்ற செயல்பாடுகளிலும் முடிவடையலாம். பெற்றோரின் சரியான வழிகாட்டுதல், சாதகமான குடும்பச் சூழ்நிலை, ஆரோக்கியமான கல்வி போன்றவை, இந்தக் காலகட்டத்தில் சரியான பாதையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: [email protected]

நன்றி-தஹிந்து

Tuesday, September 15, 2015

சினிமா ரசனை 15: சூப்பர் ஹீரோக்களை வீட்டுக்கு அனுப்புங்கள்!-கருந்தேள் ராஜேஷ்

நுழைவாயில்
ஆங்கிலப் படங்களை மட்டுமே பார்க்கும் உலகில் அலெஹந்த்ரோ ஹொதரோவ்ஸ்கி என்ற பெயர் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மாறாக, சிலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மறக்கவே முடியாத பெயர் இது. உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களையும் காமிக்ஸ்களையும் ஒருங்கே உருவாக்கியவர். நாடகங்கள் இயக்கியிருக்கிறார். கவிஞரும் கூட. நடித்தும் உள்ளார்.
அலெஹந்த்ரோ ஹொதரோவ்ஸ்கி (Alejandro Jodorowsky), முற்றிலும் வித்தியாசமான தனது படங்களால் உலகப் புகழ் பெற்ற ஓர் இயக்குநர். இவரது படங்களில் இடம்பெறும் சர்ரியலிஸம் நிரம்பிய கதைகள், அவற்றில் வரும் குறியீடுகள், அவற்றில் சொல்லப்படும் மறைஞானம் நிரம்பிய கருத்துகள் (Mysticism) ஆகியவை தீவிர உலக சினிமா ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலம். இன்றளவும் இவரது மிகவும் முக்கியமான படைப்புகளாக ‘எல் தோப்போ’ El Topo (1970) மற்றும் ‘த ஹோலி மவுண்டெய்ன்’ (The Holy Mountain-1973) ஆகியவை விளங்குகின்றன.
இவற்றுக்குப் பிறகும் ‘டஸ்க்’ (Tusk-1978), ‘சாந்த சாங்ரே’ (Santa Sangre -1989) ஆகிய படங்களும், இவரே இப்போதுவரை மறுதலித்துவரும் ‘த ரெயின்போ தீஃப்’ (The Rainbow Thief-1990), ‘த டான்ஸ் ஆஃப் ரியாலிட்டி’ (The Dance of Reality- 2013) ஆகிய படங்களும் இயக்கியிருக்கிறார். ‘ரெயின்போ தீஃப்’ படத்தின் தயாரிப்பாளர்கள், கதையிலும் திரைக்கதையிலும் இவரது கருத்துகளை ஏற்றுக்கொள்ளாமல், வெறுமனே இயக்க மட்டும் நிர்ப்பந்தித்ததால் அப்படத்தை இன்றுவரை தனது படமாகக் கருதாமல் எதிர்த்துக்கொண்டே இருக்கிறார். இறுதியாக வெளியான ‘டான்ஸ் ஆஃப் ரியாலிடி’ படத்தில் இவரது வாழ்க்கையின் சில சம்பவங்கள் உண்டு. கான் திரைப்பட விழாவில் பெரிதும் பாராட்டப்பட்ட படம் அது.
இவரது இன்னொரு மிகப் பிரபலமான முகம் திரைப்படங்களை விடவும் அவரது பெயரைப் பல ரசிகர்களிடம் கொண்டுசேர்த்த இன்னொரு பக்கத்தைப் பற்றியது.
ஹொதரோவ்ஸ்கி, காமிக்ஸ் உலகில் புகழ் வாய்ந்தவர். திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்னரே காமிக்ஸில் இறங்கிவிட்டவர். உலகப் பிரசித்தி பெற்ற பல ஆர்டிஸ்ட்களுடன் சேர்ந்து காலத்தால் அழியாத பல காமிக்ஸ்களை அளித்திருக்கிறார். இவருடன் சேர்ந்து பணியாற்றியவர்களில் சிலர்: ஸான் ஷிரோ (Jean Giraud) - இவரைப் பற்றியே பல பக்கங்கள் எழுதலாம்; அத்தனை பிரபலமான ஓவியர். உலகெங்கும் இவரது காமிக்ஸ்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு ஃப்ரான்ஸ்வா புக் (Franois boucq), யுவான் கிமெனஸ் (Juan Gim nez), மிலோ மனாரா (Milo Manara) போன்றோர். இந்தப் பெயர்கள் எல்லாம் சாதாரணமானவையே அல்ல. காமிக்ஸ் உலகில் இவர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.
இவர்கள் தவிர, உலகப் புகழ்பெற்ற ஓவியர் சால்வதோர் டாலியுடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஆர்ஸன் வெல்ஸ் (சிட்டிசன் கேன் இயக்குநர்), புகழ்பெற்ற இசைக்குழு பிங்க் ஃப்ளாய்ட் (Pink Floyd), ஸான் ஷிரோ, டாலி ஆகிய கில்லாடிகளுடன் சேர்ந்து ‘ட்யூன்’ (Dune) என்ற பிரபல சயன்ஸ் ஃபிக்‌ஷன் நாவலின் திரைவடிவத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அது பலிக்காமல் போனது. அப்படத்தைப் பின்நாட்களில் இயக்குநர் டேவிட் லிஞ்ச் (இவரைப் பற்றி indie படங்கள் பற்றிய அத்தியாயத்தில் பார்த்திருக்கிறோம்) இயக்க, அதைப் பற்றி ஹொதரோவ்ஸ்கி சொல்லும்போது, “அப்படத்தை ஒரே ஒரு நிமிடம் மட்டும் பார்த்தேன். உடனடியாக டிவியை அணைத்துவிட்டேன். மிகச் சாதாரணமாக உருவாக்கப்பட்ட ஒரு மோசமான படைப்பு அது” என்று சொல்லியிருக்கிறார்.
ஹொதரோவ்ஸ்கியும் ஸான் ஷிரோவும் சேர்ந்த முதல் காமிக்ஸ்- த இன்கால் (The Incal). 1981-லிருந்து 1988 வரை ஆறு பாகங்களாக வெளியான காமிக்ஸ். இது ஒரு சயன்ஸ் ஃபிக் ஷன் கதை. ஹொதரோவ்ஸ்கியே உருவாக்கிய ஒரு பிரத்தியேக உலகில் நடப்பது. இந்த உலகில் நடப்பது போன்ற கதைகள் இன்னும் சிலவற்றையும் ஹொதரோவ்ஸ்கி எழுதியுள்ளார். மிகவும் விறுவிறுப்பான காமிக்ஸ் இது. படிக்க ஆரம்பித்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாது. அதேசமயம் உணர்ச்சிகள், நகைச்சுவை ஆகியவையும் காமிக்ஸ் முழுவதுமே நிரம்பியிருக்கும்.
இன்கால் எந்த அளவு பிரபலம் என்றால், பிரபல ஃப்ரெஞ்ச் இயக்குநர் லுக் பெஸ்ஸன் 1997-ல் ‘த ஃபிஃப்த் எலிமெண்ட்’ (The Fifth Element) என்ற ஒரு ஹாலிவுட் படம் இயக்கினார். அதில் இன்காலின் சில அம்சங்கள் அப்படியப்படியே எடுத்துக் கையாளப்பட்டிருந்தன. இதனால் வெகுண்ட ஹொதரோவ்ஸ்கி, பெஸ்ஸன் மேல் வழக்குத் தொடர்ந்தார்.
அவருக்கு உறுதுணையாக ஸான் ஷிரோவும் இவ்வழக்கில் பங்கேற்றார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. இதற்குக் காரணம், அந்தப் படத்தில் கவுரவ ஆலோசகராகப் பணியாற்றியவர் சாட்சாத் ஸான் ஷிரோ. இன்காலின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த ஆர்டிஸ்ட். இவர் பெஸ்ஸனுடன் கூட்டு என்று ஒரு குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார் ஹொதரோவ்ஸ்கி.
இன்காலின் காலகட்டத்துக்கு முன்னர் நடக்கும் கதைகள் பின்னர் நடக்கும் கதை என்று சிலவற்றையும் ஹொதரோவ்ஸ்கி உருவாக்கியிருக்கிறார். இதேபோல், மெடாபேரன்ஸ் (Metabarons) என்ற காமிக்ஸின் களமும் இன்கால் நடக்கும் அதே களன்தான்.
இவற்றைத் தவிர ஹோடரோவ்ஸ்கியின் உருவாக்கத்தில் முக்கியமான காமிக்ஸ் - பௌன்ஸர் (Bouncer). தற்போது லயன் காமிக்ஸில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கும் காமிக்ஸ் இது. இதன் நாயகன், ஒரு கை இல்லாதவன். துப்பாக்கிகள் ஆட்சிபுரியும் பழைய அமெரிக்காவில் அவன் சந்திக்கும் பிரச்சினைகளே கதை. கதை சாதாரணமானதாக இருந்தாலும், சம்பவங்கள், கதாபாத்திரங்கள், கதைகளில் தெறிக்கும் வன்முறை என்று எல்லாமே ஹொதரோவ்ஸ்கியின் பிரத்தியேக உருவாக்கங்கள். ஒரு சில பக்கங்களைப் படித்தாலேயே ஹோதரோவ்ஸ்கியின் பங்களிப்பை அறிந்துகொள்ளலாம்.
இவற்றைத் தவிரவும் ஏராளமான காமிக்ஸ்களை உருவாக்கியுள்ளார் ஹொதரோவ்ஸ்கி.
காமிக்ஸ்களின் உருவாக்கத்தில், அவரது கதைகளை வரையப்போகும் ஆர்ட்டிஸ்டின் பங்கு மிகவும் முக்கியமானது என்பது ஹொதரோவ்ஸ்கியின் கருத்து. ‘ஒரு ஆர்டிஸ்ட்டுடன் இணைவதற்கு முன்னால் அவருடன் நிறையப் பேசி, அவரது விருப்பு வெறுப்புகளை அறிந்துகொண்டுவிடுவேன். இதனால் அவரது அடிமனதில் இருக்கும் விஷயங்கள் எனக்குத் தெரிந்துவிடும்.
அதன்பின், அவற்றில் அவருக்குப் பிடித்தவற்றை என் கதைகள் தொட்டுச்செல்லுமாறு எழுதுவேன். எனக்காக மட்டுமே என் கதைகளை நான் எழுதுவதில்லை; மாறாக, ஆர்டிஸ்டுக்காகவேதான் எழுதுகிறேன். இதன்மூலம் அந்த ஆர்டிஸ்ட்டை, என் மனதில் இருக்கும் கருத்துகளை அவரது படங்கள் மூலம் வெளிப்படுத்த வைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
ஹொதரோவ்ஸ்கிக்கு சூப்பர் ஹீரோக்கள் பிடிக்காது. அவர்களைப் பற்றிய காமிக்ஸ்களும் படங்களும் எடுப்பது நேரவிரயம் என்று நினைப்பவர். அவரது பல பேட்டிகளில் ‘சூப்பர் ஹீரோக்களைக் கொல்லுங்கள்; உங்களது மனதில் இருக்கும் கனவை எழுதுங்கள். அதுவே போதுமானது’ என்று சொல்லியிருக்கிறார். இருந்தும், சூப்பர் ஹீரோக்களின் பிதாமகன் ஸ்டான் லீ பெரிதும் மதிக்கும் காமிக்ஸ் எழுத்தாளர்களில் ஹொதரோவ்ஸ்கியும் ஒருவர்.
ஹொதரோவ்ஸ்கிக்கு வயது தற்போது 86. இன்னும் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார். திரைப்படங்கள் தவிர, கவிதை, நாடக இயக்கம், நடிகர் என்ற பல முகங்கள் இவருக்கு உண்டு. இவற்றைத் தவிர, உளவியலில் ஏராளமான அனுபவம் கொண்டவர். பல ஆண்டுகளாக அத்துறையில் எக்கச்சக்கமான உரைகள் நிகழ்த்தியிருக்கிறார். இவரது படங்களில் இதன் தாக்கத்தை எளிதில் உணரலாம்.
தொடர்புக்கு: [email protected]


நன்றி- த இந்து

Monday, September 07, 2015

தீர்ப்பு வெளிவந்த நாளில் நேரடி ஒளிபரப்பை 10 கோடி பேர் பார்த்தகொலை வழக்கு -பட்டுக்கோட்டை பிரபாகர்

1994-ம்
ஆண்டு. அமெரிக்காவில் நடந்த ஒரு வழக்கின் தீர்ப்பு வெளிவந்த நாளில், அதன் நேரடி ஒளிபரப்பை 10 கோடி பேர் பார்த் தார்கள். நியூயார்க் பங்குச் சந்தையில் அன்று வர்த்தகம் 41 சதவிகிதம் குறைந் தது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 48 கோடி டாலர்கள் பாதிப்படைந்தது. அப்படி என்ன வழக்கு அது?
ஓ.ஜே.சிம்சன் புகழ்மிக்க கால்பந் தாட்ட வீரர். நடிகர். தொலைக்காட்சித் தொகுப்பாளர். முதல் மனைவியின் விவாகரத்துக்குப் பிறகு, நிகோல் பிரவுன் என்பவரை மணந்தார். ஆனால், அடிக்கடி சண்டை. பிரவுனை சிம்சன் திட்டியும் அடித்தும் இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் பிரவுன் சிம்சனை விட்டு விலகி தனியாக வாழ ஆரம்பித்தார். விவாகரத்து வழக்கும் தொடுத்தார். 1994-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி இரவு. பிரவுன் தன் வீட்டு வாசலில் கத்திக் குத்துப்பட்டு இறந்து கிடக்க, அருகில் ரொனால்ட் கோல்ட்மேன் என்கிற பிரவுனின் நண்பரும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். போலீஸ் விசா ரணையில் இந்தக் கொலைகளில் சிம்ச னைத் தொடர்புப்படுத்தும் சில தடயங்கள் கிடைத்தன. பிரவுன் வீட்டுக்கு அருகில் இருந்து சிம்சனின் கார் புறப்பட்டுச் சென்றதைப் பார்த்ததாக பக்கத்து வீட்டுப் பெண் சொன்னாள். தடயங்களை ஆராய்ந்ததில் சந்தேகம் வலுத்ததால் சிம்சனை விசாரணைக்கு அழைத் தார்கள்.
ஜூன் 17-ம் தேதி சிம்சன் காவல் நிலை யத்துக்கு வரப் போவதை அறிந்து பத் திரிகையாளர்கள் எல்லாம் காத்திருக்க, சிம்சன் வரவில்லை. அவருடைய வக்கீல் சிம்சன் கொடுத்ததாக ஒரு கடிதத்தைப் பத்திரிகையாளர்களிடம் கொடுத்தார். அதில் சிம்சன் தனக்கும் அந்தக் கொலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், மனம்வெறுத்து எங்கோ போவதாகவும், கிட்டத்தட்ட தற்கொலை கடிதம் போல எழுதியிருந்தார்.
அன்று மாலை 6.20 மணியளவில், நண்பர் ஒருவர் கார் ஓட்ட பின் சீட்டில் அமர்ந்து சிம்சன் காரில் செல்வதைப் பார்த்து ஒருவர் தகவல் சொல்ல, அடுத்த நொடியே ஏராளமான போலீஸ் கார்கள் சிம்சனைத் துரத்தத் தொடங்கின. சிம்சன் துப்பாக்கியை தன் நெற்றியில் வைத்து காரை நிறுத்தாமல் ஓட்டச் சொல்லி நண்பருக்கு வெறித்தனமாக கட்டளை யிட்டார். செல்போனில் ஒரு போலீஸ் அதிகாரி பேசினார். துப்பாக்கியை ஜன்னல் வழியாக வீசிவிட்டு சரணடையச் சொன்னார். சிம்சன் கேட்கவில்லை. 20 தொலைக்காட்சி நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து வந்து இந்தத் துரத்தலைப் பதிவு செய்தன. சிஎன்என், ஏபிசி நியூஸ் போன்ற பெரிய தொலைக்காட்சிகளில் மற்ற நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு இதை நேரடி ஒளிபரப்பு செய்தார்கள். (இதை யூ டியூபில் காணலாம்)
இரவு 8 மணி வரை 80 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்தத் துரத்தல் தொடர்ந்து, ஒருவழியாக சிம்சன் சரணடைய சம்மதித்தார். தன் வீட்டு வாசலில் காரை நிறுத்தி இறங்கி, வழக்கை முறைப்படி சந்திக்கிறேன் என்று கைதானார்.
340 நபர்களைப் பரிசீலித்து 12 ஜூரி களைத் தேர்வு செய்தார் நீதிபதி. தினமும் தொலைக்காட்சிகள் படம் பிடிக்க, விசாரணை தொடங்கியது. அரசுத் தரப்பின் குற்றச்சாட்டின்படி, சம்பவம் நடந்த அன்றிரவு சிம்சன் தன் காரில் பிரவுன் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினார். கதவைத் திறந்த பிரவுனை கத்தியால் குத்தினார். அப்போது அங்கு வந்த ரொனால்ட் கோல்ட்மேன் சிம்ச னைத் தடுக்க முயல, அவருக்கும் குத்துக் கள் விழுந்தன. இருவரும் இறந்ததும் காரில் ஏறிச் சென்றுவிட்டார் சிம்சன்.
கொலைகள் நிகழ்ந்த இடத்தில் சிம்ச னுக்குச் சொந்தமான ஒரு கையுறையும், பிரவுனின் ரத்தச் சுவடுகளுடன் கூடிய சிம்சனின் எண் 12 சைஸில் இருந்த ஷூ தடயங்களும், சிம்சனின் காரைப் பார்த்த சாட்சியும், சிம்சனுக்கு கத்தி விற்ற நபரின் சாட்சியும், சிம்சனுக்கும் அவர் மனைவிக்கும் அடிக்கடி சண்டை நடந்ததற்கான சாட்சிகளும் அவருக்கு எதிராக வைக்கப்பட்டன.
சிம்சன் தரப்பு எல்லாவற்றையும் மறுத்தது. அந்த ஷூவின் அளவு சரிதான். ஆனால் அது சிம்சனுடையது அல்ல என்றது. அந்தக் கையுறையை கோர்ட்டிலேயே அணிந்து பார்க்க, அது அவருக்கு சேரவேயில்லை. அதற்கு அரசுத் தரப்பு, இடைப்பட்ட காலத்தில் சிம்சன் வழக்கமாக எடுக்கும் மூட்டு வலிக்கான மருந்தை எடுக்காததால் கை வீங்கியிருக்கிறது என்று கொடுத்த விளக்கத்தை சிம்சன் தரப்பு ஏற்கவில்லை.
காரை அந்த நேரத்தில் அங்கு பார்த்ததாகச் சொன்ன சாட்சியும், கத்தி விற்றதாக சொன்ன சாட்சியும் தனியார் தொலைக்காட்சிகளுக்கு பணம் வாங்கிக்கொண்டு பேட்டிகள் அளித்ததால், அவர் கள் இருவரையும் அரசுத் தரப்பு கோர்ட்டில் ஆஜர் படுத்தவில்லை.
பிரவுனுடன் தங்கியிருந்த ஒரு தோழி போதை மருந்துக்கு அடிமை என்றும், அவள் மருந்து வாங்கி பாக்கி வைத்த தொகையை வசூலிக்க வந்த போதை மருந்து விற்ற ஆசாமியிடம் தோழிக்காக பிரவுன் வாதம் செய்ததால் கத்தியால் குத்திவிட்டு, தடுக்க வந்த ரொனால்டையும் கொன்றுவிட்டுப் போய்விட்டார்கள் என்பது சிம்சன் தரப்பு வாதமாக இருந்தது.
கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை அரசுத் தரப்பால் கைப் பற்ற முடியவில்லை. ஆனால் அவர்கள் குறிப்பிட்ட சிம்சன் விலைக்கு வாங்கிய கத்தியை சிம்சன் தரப்பு சமர்ப்பித்தது. அந்தக் கத்தி இன்னும் பயன்படுத்தப் படாமல் புதிதாக இருந்ததை நிரூபித் தார்கள்.
விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கிய நாளில் நாடு முழுதும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்பாக மக்கள் அமர்ந்து விட்டார்கள். அலுவலகங்களில் எல்லா அலுவல்களும் ஒத்தி வைக்கப்பட்டன. பத்திரிகையாளர்கள் குவிந்தார்கள். சிம்சனை குற்றவாளி என்று சொல்ல போதுமான ஆதாரங்கள் இல்லை என்று ஜூரிகள் தீர்ப்பளித்தார்கள்.
இந்த வழக்கு பற்றி அத்தனை பத்திரிகைகளும் தொடர்ந்து எழுதின. அத்தனை தொலைக்காட்சிகளும் தொடர்ந்து காட்டின. பல புத்தகங்கள் எழுதப்பட்டன. இந்த வழக்கில் இனப் பிரச்சினையின் தாக்கம் பெரிதும் இருந்த தாக பலர் கருத்து சொன்னார்கள். ஜூரி களில் 8 பேர் கருப்பினத்தவரைச் சேர்ந்தவர்களாக இருந்ததும், நாடு முழு வதும் இதனை சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான வழக்காக மீடியா பிரச்சாரம் செய்ததும், இனக் கலவரம் வந்துவிடக்கூடாது என்கிற எச்சரிக்கையும் தீர்ப்பை பாதித்ததாக எழுதினார்கள். கொலைகளால் பாதிக்கப் பட்ட இரண்டு குடும்பத்தினரும் நஷ்ட ஈடு கேட்டு தனியாக வழக்கு தொடர்ந் தார்கள். அந்த வழக்கில் அவர்களுக்கு சிம்சன் 3 கோடியே 30 லட்சம் டாலர்கள் தர வேண்டும் என்று தீர்ப்பானது. அதை அவர் சரியாக செலுத்தாததால் சிம்சனுக் குச் சொந்தமான பல சொத்துக்களை அரசு கைப்பற்றி ஏலத்தில் விட்டு தொகையை அவர்களுக்குக் கொடுத்தது.
சிம்சன் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தை விட்டு வெளியேறி லாஸ் வேகாஸ் நகரத்துக்கு வந்து குடியேறினார். 2007-ம் வருடம் ஒரு உணவு விடுதியில் சிம்சனுக் குச் சொந்தமான பல கப்புகளும், மெடல்களும் இருப்பதை அறிந்து அவற்றைக் கைப்பற்ற 3 நண்பர்களோடு சிம்சன் சென்றார். தகராறு ஆனது. துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். பொருட்களைக் கைப்பற்றினார். ஒரு ஆசாமியைக் கடத்தி வந்தார்.
போலீஸ் அவரைக் கைது செய்து விசாரித்தபோது, ‘‘அமைதியாகதான் கேட்டேன். துப்பாக்கி எடுத்துச் செல்ல வில்லை’’ என்று மறுத்தார். ஆனால், உடன் சென்ற நண்பர்கள் தன்டனைக்கு பயந்து அப்ரூவர்களாக மாறி உண்மையைச் சொல்லிவிட்டார்கள். அந்த வழக்கில் 33 வருடங்கள் சிறைத் தண்டனை கிடைத்து, இப்போதும் சிம்சன் சிறையில் இருக்கிறார்.
பெரிய வழக்கில் கோட்டைவிட்டதால் இந்த வழக்கில் காவல்துறை வசமாக அவரைச் சிக்க வைத்துவிட்டதாக எழுதி னார்கள். அந்த இரண்டு கொலைகளை யும் செய்தது யார் என்கிற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.
- வழக்குகள் தொடரும்…

நன்றி - த இந்து