Showing posts with label க்ரைம் தொடர். Show all posts
Showing posts with label க்ரைம் தொடர். Show all posts

Sunday, December 27, 2015

பதினோரா வது கொலை!-பட்டுக்கோட்டை பிரபாகர்

குற்றவாளிகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள் என்று சொல்வார்கள்.


பெரும்பாலான குற்றவாளிகளின் வாழ்க்கையிலும் அப்படி உருவா வதற்கான சூழல் இருக்கலாம். ஒரே இர வில் ஒருவன் கொள்ளைக்காரனாகிவிட லாம் என்று தீர்மானம் செய்து, அப்படியே கொள்ளைக்காரனாக மாறி வங்கியைக் கொள்ளையடித்துவிட முடியாது. இன்றைக்கு கொலைசெய்யலாம் என்று வண்டிக்கு பெட்ரோல் போடுவது மாதிரி சாதாரணமாக செய்வதில்லை. கூலிப் படையில் காசுக்காக இரக்கமே இன்றி கொலைகளைச் செய்கிற யாரும் “இது எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு’’ என்று சொல்வதில்லை. எல்லோரிடமும் ஒரு கதை இருக்கும்.


நேனிதாஸின் கதை மிக அழுத்தமானது. அமெரிக்காவில் பிறந்த நேனி தாஸ், தனது சின்ன வயதில் பள்ளியில் சேர்ந்து படித்துப் பெரிய அரசு அதிகாரி யாக வளரத்தான் ஆசைப்பட்டாள். ஆனால், அவளுடைய தந்தை அவளை பணம் கொடுக்கும் ஒரு இயந்திரமாக நினைத்து, வேலைக்கு அனுப்பி சம்பா தித்து வரச் சொன்னார். அங்கேயே விழுந்தது அவள் மனதில் முதல் விரிசல்.



பதின்பருவத்தில் நேனிதாஸுக்கு ஒரு நல்ல உடை வாங்கித் தந்ததில்லை அவள் தந்தை. அவளுக்கு வயிறார சாப்பாடு போட்டது இல்லை. கொஞ்சம் திருத்தமாக மேக்கப் போட்டுக்கொள்ள வும் அனுமதி இல்லை. வெளியே எங்கும் தனியாகப் போகக் கூடாது. ஆண் நண்பர் களுடன் பழகக் கூடாது. பார்ட்டிகளுக்கு, விழாக்களுக்குப் போகவே கூடாது என்று ஏகப்பட்ட கூடாதுகள்!



ஆனால், மறுக்கப்படுவதைத்தானே மனித மனம் விரும்பிச் செய்யும்? எதை எல்லாம் வீட்டில் மறுக்கப்பட்டதோ, அதையெல்லாம் பிடிவாதமாக நாடியது அவளுடைய மனசு.



நேனிதாஸ் கனவுகளில் மிதந்தாள். கற்பனை சுகத்தில் மகிழ்ந்தாள். மனதில் காதல் பொங்கி வழிந்தது. காதல் தொடர்பான புத்தகங்களை மட்டுமே படித்தாள். பத்திரிகைகளுக்கு தனது பெயர் போடாமல் காதல் கட்டுரைகள் எழுதி அனுப்பினாள். மற்றவர்களின் காதல் அனுபவங்களை ஆர்வமாகக் கேட்டாள். ஆனால், அவளின் காதலைப் பகிர்ந்துகொள்ள ஓர் ஆண் மகனைச் சந்திக்கவே இல்லை. அதாவது சந்திக்க வாய்ப்பு அமையவில்லை.



16 வயதில் பெற்றோர் பார்த்து வைத்த திருமண வாழ்வை ஏற்று, ஆயிரம் கனவுகளுடன் புதிய வாழ்வில் நுழைந்தாள். அங்கே நேனிதாஸின் ஒவ் வொரு கனவும் முறிக்கப் பட்டது. அன்பான கணவன் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவளுக்கு அவளு டைய தந்தையைவிட மோச மானவனாக அவன் அமைந் தான். அவனுடைய வார்த்தை கள் சாட்டையடிகளாக விழுந் தன. அவனுடைய நடவடிக்கை எதுவுமே அவளுக்குப் பிடிக்காமல் போனது. ஆனாலும், அவனோடு பொறுமையாக வாழ்ந்து குழந்தைகளும் பெற்றாள்.



வெளியே கடைக்காரர்களிடம், கார் டிரைவர்களிடம் என்று எவரிடம் அவள் பேசினாலும் அவனுக்கு சந்தேகம். மனம் நொந்துபோன அவள் புகைப் பழக்கத்துக்கும், மதுப் பழக்கத்துக்கும் ஆளானாள். தினமும் குடித்தே ஆக வேண்டும் என்கிற அளவுக்கு போதைக்கு நேனிதாஸ் அடிமையானாள்.


திடீரென்று உடல்நலம் கெட்டு அவளது கணவன் இறந்தபோது அவள் அழவே இல்லை. மனதுக்குள் கொண் டாடியபடி, வெளியே பொய் துக்கத்தில் இருந்தாள். இதைத் தொடர்ந்து உடனடியாக இரண்டாவது திருமணமும் செய்துகொண்டாள்.



புதிய கணவனின் செயல்களிலோ மர்மம் இருந்தது. அவன் இரவில் தாமதமாக வீட்டுக்கு வந்தான். அவனைத் தேடி காவல் துறை ஆசாமிகள் அடிக்கடி வந்து போனார்கள். அந்தத் துறையில் தனக்கு நண்பர்கள் இருப்பதாக அவன் சொன்னதை நேனிதாஸ் நம்பினாள்.



அவன் உடம்பில் இருந்து வீசும் பெண்கள் உபயோகிக்கும் செண்ட் வாசனையைப் பற்றி அவள் கேட்டபோது, அவனால் அவளுக்கு விளக்கம் சொல்ல முடியவில்லை. ஆனால், அது என் பலவீனம் என்று ஒப்புக்கொண்டான். பிறகுதான் தெரிந்தது, தினமும் விதவிதமானப் பெண்களைத் தொட்டாக வேண்டும் என்கிற அவனது காம உணர்வு. அதற்குப் பணம் தேவை. பணத்துக்காக அவன் ரகசியமாக குற்றங்கள் செய்திருக்கிறான். விசாரிக்க வரும் அதிகாரிகளுக்கு லஞ் சம் கொடுத்து சமாளித்திருக் கிறான்.



அவனும் திடீரென்று இறந்துபோனான். உறவினர் கள் நேனிதாஸின் நிலைமைக் காகப் பரிதாபப்பட்டார்கள். ஆறுதல் சொன்னார்கள். அப்போதும் அவள் திருமணத்தின் மீது தனக்கு இருந்த நம்பிக்கையை மாற்றிக்கொள்ளவே இல்லை. மூன்றாவதாகவும் ஒரு கணவனைத் தேடிக் கொண்டாள்.



மூன்றாமவன் இதற்கு முந்தையவர் களைப் போல இல்லை. அவனுக்கு ஒரே ஒரு பலவீனம்தான். அவனுக்கு தினமும் சூதாட வேண்டும். அதற்கு முதலில் அவளுடைய நகைகள் பலியாகின. பிறகு, வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் எடுத்துச் சென்று விற்றுவிடுவான்.



மனம் வெறுத்துப் போன நேனிதாஸ் அவன் இறக்கக் காத்திருந்து, கடைசி முயற்சியாக நான்காவதாக ஒருவனைத் திருமணம் செய்துகொண்டாள். இந்தக் கணவன் படு மக்கு. அவனோடு இருந்த அவனுடைய அம்மாதான் … அங்கே இவளுக்கு வில்லி. சீரியல்களில் வரும் மாமியாரைப் போல அதிகாரம் செய் வதும் வேலைகள் வாங்குவதுமாக நேனிதாஸைப் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.



மன உளைச்சலுக்கு மருந்தாக தன் அம்மா வீட்டுக்குச் சென்றால், அங் கேயும் இவளை விமர்சித்து இவளின் அம்மாவும் கடுமையாகத் திட்டினாள். தனது உடன் பிறந்த இரண்டு சகோதரி களும் இவளின் வாழ்க்கையைக் கிண்டல் செய்தார்கள். பொது விழாக்களில் வைத்து இவளை அவமானப் படுத்தினார்கள்.



போதாக்குறைக்கு இவளுக்குப் பிறந்த இரண்டு பெண்களும் தாய் என் றும் பார்க்காமல் இவளை அலட்சியப் படுத்தினார்கள். எங்கும் மரியாதை இல்லை. எல்லோருக்கும் நேனிதாஸின் வாழ்க்கை கேலிப் பொருளானது.
ஒரு சுபயோக சுபதினத்தில் இவள் தன் மாமியாரை உணவில் விஷம் வைத்துக் கொன்றாள். முதலில் அது வெளியில் தெரியவில்லை. பிறகு காவல் துறையின் தீவிர விசாரணையில் உண்மை வெளிப்பட்டு, நேனிதாஸ் கைது செய்யப்பட்டாள்.



தொடர் விசாரணையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியான தகவல்கலைக் கொட்டினாள் நேனிதாஸ். மாமியாரைக் கொன்றது இவளின் முதல் கொலை இல்லை; அது அவளுடைய பதினோரா வது கொலை!



இவள் மனதைக் காயப்படுத்திய ஒவ் வொருவரையும் ரகசியமாக திட்டமிட்டு, அது கொலை என்று வெளியே தெரியாத படி கொலை செய்திருக்கிறாள். இவளின் நான்கு கணவர்களுக்குமே இயற்கை மரணம் நேரவில்லை. அத்தனை பேரை யும் நேனிதாஸ்தான் கொன்றிருக்கிறாள். கணவர்கள் மட்டுமல்ல; சொந்த தாய், இரண்டு சகோதரிகள், இரண்டு மகள்கள், ஒரு பேரன் உட்பட அவளுக்கு மன வருத்தம் கொடுத்த அத்தனை பேரையும் கொலை செய்திருக்கிறாள்.



இவளை விசாரித்த நீதிமன்றம் மரண தண்டனை தர நினைத்து, பிறகு.. இவளின் சூழ்நிலை, மனநிலை எல்லாவற்றையும் கணக்கில் எடுத் துக்கொண்டு ஆயுள் தண்டனை வழங்கியது. சிறையில் இருந்தபோது ரத்தப்புற்று நோய் வந்து நேனிதாஸ் இறந்து போனாள்.




குற்றவாளிகள் பிறப்பதில்லை; உரு வாக்கப்படுகிறார்கள் என்னும் கூற்றை நேனிதாஸின் வாழ்க்கை நிரூபித்தது. ஒரு மனநலக் கணக்கெடுப்பில் திருமணங் களில் தோல்வியைச் சந்தித்த ஒரு சில பெண்கள் தங்களுக்குள் கொலை செய் யும் எண்ணம் வந்ததாக ஒப்புக்கொண் டிருக்கிறார்கள். அந்த எண்ணம் தீவிர மடைகிற தருணத்தில் அதற்கான வாய்ப்பு அமைந்தால் அது செயலாகிவிடுறது.



- நிறைந்தது
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]

தஹிந்து

Monday, December 14, 2015

திருநெல்வேலி கலெக் டராக இருந்த ஆங்கிலேயர் ஆஷ்வாஞ்சிநாதனால் சுடப்பட்டவழக்கு-பட்டுக்கோட்டை பிரபாகர்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்று - திருநெல்வேலி கலெக் டராக இருந்த ஆங்கிலேயர் ஆஷ் வாஞ்சிநாதனால் சுடப்பட்டது.


104 வருடங்களுக்கு முன்பு 1911-ல் நிகழ்ந்தது இந்தக் கொலை. நிகழ்ந்த இடம் மணியாச்சி ரயில் நிலையம். திருமணமான 25 வயது இளைஞரான வாஞ்சிநாதன் வனத்துறையில் பணி புரிந்தபடி வாய்ப்பு கிடைத்தால் நம் நாட்டில் ஊடுருவிய வெள்ளையர்களை கொலை செய்ய வேண்டும் என்கிற வெறியுடன் இயங்கிய ஓர் அமைப்பில் இருந்தவர்.


17.06.1911 அன்று ஆஷ் தன் மனைவி மேரியுடன் கொடைக்கானலில் படித்த தனது பிள்ளைகளைப் பார்க்க திருநெல்வேலியில் இருந்து ரயிலில் புறப்பட்டான். மணியாச்சியில் அவன் வந்த ரயில் பெட்டி வேறு ரயிலில் கோக்கப்படக் காத்திருந்தது. ஆஷின் பாதுகாவலர் தண்ணீர் பிடிக்கப் போன இடைவெளியில் வாஞ்சிநாதன் அந்தப் பெட்டியில் நுழைந்தார். ஆஷின் மார்புக்கு நேராக பெல்ஜியம் நாட்டின் தயாரிப்பான பிரவுனிங் வகை துப்பாக்கியை நிமிர்த்தினார். மூன்று முறை சுட்டார்.


ஆஷின் மனைவி மேரி அலற, ஓடிவந்த பாதுகாவலர் வாஞ்சிநாதனைத் துரத்த, வாஞ்சிநாதன் பிளாட்பார கழிவறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டார். காவலர்கள் கழிவறையின் கதவைத் திறந்து பார்த்த போது அங்கே வாஞ்சிநாதன் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதை உணர்ந்தார்கள்.


அவருடைய சட்டைப் பாக்கெட் டில் இருந்த இரண்டு காகிதங்களில் ஒன்று - பிரான்சில் இருந்து வெளிவந்த ‘வந்தே மாதரம்’ பத்திரிகையின் தலையங்கப் பகுதி. அதில் ‘வெள்ளையர்களைக் கொன்று பாரத மாதாவுக்கு ரத்த அபிஷேகம் செய்ய வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது. மற்றொன்று, காவல்துறைக்கு வாஞ்சிநாதன் எழுதி வைத்திருந்த கடிதம். அதில் ‘ராமனும், கிருஷ்ணனும் வாழ்ந்த புண்ணிய பூமியை ஆங்கிலேயர்கள் அரசாள்வதா? ஒவ்வோர் ஆங்கிலேயனுக்கும் நமது பாரதத்தின் புத்திரர்கள் நான் செய்ததைப் போலவே செய்வதுதான் கடமை’ என்று எழுதப்பட்டிருந்தது.



காவல்துறை வாஞ்சிநாதனின் இல்லத்தில் சோதனை போட்டபோது நடந்த கொலை தனி மனித செயல் அல்ல என்பதும், இந்தச் சதியில் பலர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது. கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ஆறுமுகப் பிள்ளை, சோமசுந்தரம் என்கிற இருவர் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் இரு வரும் அரசுத் தரப்பின் சாட்சிகளாக மாறுவதாகச் சொல்லி அப்ரூவர் ஆனார் கள். நடந்த கொலையை யாரெல்லாம் சேர்ந்து, எப்படி எல்லாம் திட்டம் தீட்டினோம் என்று விரிவாகச் சொன் னார்கள். அவர்கள் கொடுத்தத் தகவல்களை வைத்து மொத்தம் 16 பேரைக் கைது செய்ய காவல்துறை பட்டியல் போட்டது. காவல்துறை கெடுபிடிகளுக்கு பயந்து 16 பேர்களில் இருவர் தற்கொலை செய்துகொள்ள, மீதி 14 பேர்களும் கைது செய்யப்பட்டர்கள்.



இந்த அமைப்பின் தலைமைப் பொறுப் பில் இருந்து செயல்பட்டவர் நீலகண்ட பிரம்மச்சாரி. அவரும் குழுவினரும் அடிக்கடி கூடி சதித் திட்டங்களைப் பேசி வடிவமைப்பார்கள். ஆஷ் கொலை யைப் பற்றி முடிவெடுத்ததும் அதை செயல்படுத்துவது யார் என்று கேள்வி வந்தது. அனைவருமே அதைச் செய்து முடிக்க முன்வந்ததால், அனைவரின் பெயர்களும் எழுதிப் போடப்பட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப் பட்டவர்தான் வாஞ்சிநாதன்.


இந்தச் சதித் திட்டத்தில் பங்கிருந்த தாக மேலும் ஐந்து பேரை ஆங்கில அரசு சந்தேகப்பட்டது. அந்த ஐவரையும் கைது செய்ய உத்தரவும் போட்டது. ஆனால் அவர்களில் மாடசாமிப் பிள்ளை என்கிறவர் தலைமறைவானார். அவர் என்ன ஆனார் என்பது இன்று வரைத் தகவலில்லை. மீதி நான்கு பேரும் பாண்டிச்சேரி சென்று தங்கிவிட்டதால் அங்கு சென்று அவர் களைக் கைது செய்ய இயலவில்லை.


அப்போது பாண்டிச்சேரி பிரெஞ்சுக் காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் அங்கு சென்று யாரையும் கைது செய்வதானால் அதற்கு பாண்டிச்சேரி அரசின் சம்மதமும் அனுமதியும் தேவை. அதை அத்தனை சுலபமாகப் பெற முடியாது. அங்கே பதுங்கியிருந்த நான்கு பேரையும் ரகசியமாகக் கண்காணித்து அவர்கள் தமிழக எல்லைக்குள் வரும்போது கைது செய்யத் தயாராக ஒற்றர்களையும் காவலர்களையும் நியமித்தது அரசு.



இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப் பட்ட 14 பேர்களையும் குற்றவாளிகள் என்று மூன்று நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சில் இரண்டு நீதிபதிகளின் கருத்தின் அடிப்படையில் கோர்ட் தீர்மானித்தது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அங்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் நியமிக்கப்பட்டது. அவர்களில் மூன்று பேர் இவர்களைக் குற்றவாளிகள் என்று கருதியதால் அனைவருக்கும் சிறைத் தண்டனை உறுதியானது.


குறிப்பாக ஆஷ் மேல் வாஞ்சிநாத னுக்கு மிகுந்த கோபம் ஏற்படக் காரணம் சுதந்திரப் போராளிகளுக்கு எதிராக ஆஷ் எடுத்த பல நடவடிக்கைகள். குறிப் பாக வ.உ.சி-யை ஆஷ் தன் எதிரியாகவேக் கருதினான். வெள்ளை யர்களுக்கு எதிராக சுதேசிப் பொருட்களைத் தயாரிப்பதும், மக் களைப் பயன்படுத்த வைப்பதும் நோக்கமாகக் கொண்டு சுதேசி இயக்கம் நிகழ்ந்தபோது தூத்துக்குடியில் வ.உ.சி இரண்டு கப்பல்களை விலைக்கு வாங்கி ஆங்கிலக் கப்பல்களுக்குப் போட்டியாக இயக்கினார்.



அப்போது தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குச் செல்ல ஆங்கிலக் கப்பல்கள் வசூலித்த பயணக் கட்டணம் 16 அணா. (அதாவது ஒரு ரூபாய்) வ.உ.சி தனது கப்பல்களில் எட்டணா மட்டுமே வசூலித்தார். மக்கள் ஆர்வத்துடன் சுதேசிக் கப்பல் களில் பயணம் செய்யத் தொடங்கினார்கள்.
அப்போது தூத்துக்குடியில் உதவிக் கலெக்டராக இருந்தவன் ஆஷ். வ.உ.சியின் கப்பல் வணிகத்தை நசுக்குவது என்று முடிவெடுத்த ஆஷ் ஆங்கிலக் கப்பல்களை கட்டணமே, இல்லாமல் இலவசமாக இயக்க உத்தரவிட்டான். அது தவிர பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவசமாக ஒரு குடையும் கொடுத்தான். (ஆக, மக்களுக்கு இலவசம் தரும் கவர்ச்சித் திட்டத்தையும் நமக்குக் கற்றுக் கொடுத்தவன் ஆங்கிலேயனே) அத னால் சுதேசிக் கப்பல்கள் பயணிக்க ஆளின்றி முடங்கின. மிகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்தார் வ.உ.சி. வேறு வழியே இல்லாமல் தனது இரண்டு கப்பல்களையும் ஏலத்தில் விட்டார். அவற்றை ஏலத்தில் எடுத்ததும் ஆங்கிலேய அரசே.




ஆஷ் திருநெல்வேலி மாவட்டத்தின் கலெக்டராக இருந்தபோது நிகழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டான். அதில் நான்கு பேர் இறந்தார்கள். அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய வ.உ.சியை ஆஷ் கைது செய்து அவருக்கு கோர்ட்டில் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வாங்கிக் கொடுத்து சிறையில் செக்கிழுக்க வைத்தான்.




வ.உ.சியின் மீது அபரிமிதமான பக்தி கொண்ட வாஞ்சிநாதன் இந்த சம்பவங்களால் ஆஷ் மீது மாறாத கோபமும் கொலை வெறியும் கொண்டிருந்தார். குலுக்கலில் தன் பெயர் வந்ததும் மிகவும் மகிழ்ந்த வாஞ்சிநாதன் பாண்டிச்சேரி சென்று ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொண்டு திட்டமிட்டபடி செயல்பட்டார்.




சுதந்திரப் போராட்டத்தின் தமிழக தியாகியான வாஞ்சிநாதனின் பெய ரைத் தாங்கி வாஞ்சி மணியாச்சி சந்திப்பு என்று ரயில் நிலையத்தில் பெயர் பலகை மட்டுமே இருக்கிறது. தவிர வாஞ்சிநாதனுக்கு எங்கும் சிலைகள் கிடையாது. ஆனால் ஆஷின் இந்திய விசுவாசிகள் 32 பேர் பணம் போட்டு தூத்துக்குடியில் ஆஷுக்கு ஒரு மணி மண்டபமும், பாளையங்கோட்டையில் ஒரு சிலையும் வைத்தார்கள்.


2011-ம் வருடம் ஆஷ் சுடப்பட்டு நூறாண்டு ஆன சமயத்தில் ஆஷின் வாரிசுகள் வாஞ்சிநாதனின் குடும்பத் தாருக்கு ‘நடந்ததை மறந்து சமாதான மாக இருப்போம்’ என்று கடிதம் எழுதி அனுப்பினார்கள். வாஞ்சிநாதனின் குடும்பத்தினர் அதற்கு ‘ஆஷின் வாரிசு கள் இந்தியா வந்தால் வரவேற்போம்’ என்று மனிதநேயத்துடன் பதில் சொன்னார்கள்.


- வழக்குகள் தொடரும்..
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]\

  • Thangamani  India
    வீர வாஞ்சி, வீர சவார்கர் என்ற வீர வீர அடைமொழியெல்லாம் மதவாதிகள் தங்கள் ஆட்களுக்கு வைத்துகொண்ட அடைமொழிகள். சிறை வாசத்திலிருந்து வெளிவருவதற்கு ஆங்கிலேயனிடம் மன்றாடி மன்னிப்புக்கடிதம் கொடுத்தவரைதான் வீர என்ற அடைமொழியிட்டு வீர சவார்க்கர் என்பார்கள். வாஞ்சியும் (சனாதனவாதி) இந்த ரகம் தான்.
    23105
    2 days ago
     (0) ·  (0)
     
    • Sivakumar Sivakumar  United States
      வாஞ்சிநாதனின் முழுமையான வாக்கு- ' கட்டுரை ஆஷ் அடிச்சுவட்டில்... ஆ. இரா. வேங்கடாசலபதி அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் விமான முனையத்தில் நான் தரை இறங்கிய நாள் ப்ளும்ஸ்டே 2006. ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘யூலிஸஸ்’ நாவல் முழுவதும் டப்ளின் நகரைக் களமாகவும் 16 ஜூன் 1904ஐக் காலமாகவும் கொண்டதால் ஒவ்வொரு ஜூன் 16ஐயும் ப்ளும்ஸ்டே என்று கொண்டாடுகிறார்கள். எனது அயர்லாந்து பயணத்தில் தற்செயல் நிகழ்வுகளுக்குக் குறைவில்லை. இந்தியக் கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு இலண்டனிலுள்ள அயர்லாந்து தூதரகத்தில் விசா பெறுவது எளிதாக இல்லை. தூதரக அலுவலருக்குக் ‘கலெக்டர்’ என்பதற்கு என்ன பொருள் என்று விளக்கி மாய்ந்து போனேன். டப்ளின் விமான முனைய விராந்தைகள் உலகக் கால்பந்துப் போட்டியின் பரபரப்பில் அலைவுற்றிருந்தன. அல்லற்பட்டு வாங்கிய விசாவைப் பார்க்கத்தானும் குடியேறல் வரிசையில் ஆளில்லை. வாயிலில் நின்று சுற்றுமுற்றும் விழித்தேன். நான் சந்திக்க வந்தவருக்கு என்னை அடையாளம் காண்பதில் சிரமமிருந்திருக்க முடியாது. அங்கு நான் ஒருவனே இந்தியன். நரைத்த தாடியும் தடித்த கண்ணாடியுமாக உயரமாகவும் பொலிவாகவும் அவர் இருந்தார். சம்பிரதாயமான நல உசாவல
      3 days ago
       (0) ·  (0)
       
      • SKS Kalyanasundaram  India
        அருமையான பதிவு.
        2395
        3 days ago
         (0) ·  (0)
         
        • SSugir  India
          இது வரலாற்றின் ஒருபக்க பார்வை மட்டுமே. இந்த கலெக்டர் ஆஷ் இன் நடவடிக்கை மூலமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு , கல்வி கிடைத்தது. சாதி துவசங்கள் கட்டுக்குள் இருந்தது. மேலும் ஒரு அருந்ததிய பென்னிக்கு பிரசவ நேரத்தில், மருத்துவ சிகிச்சைக்காக , அக்கரகாரம் வழியாக செல்ல தடைவிதித்த பொது, இந்த ஆஷ் துரை தான் , தன்னுடைய குதிரை வண்டியில் அவர்களை ஏற்றி , தடுத்தவர்களை சாட்டையால் அடித்து, அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இந்த செயல் தான், இந்த வான்ச்னதனை, கோபம் கொள்ள வைத்தது. மேலும் வாஞ்சிநாதன் தற்கொலை செய்த கொண்டபோது கிடைத்த கடிதத்தில் கூட, " இந்த மிலேச்சனை, கோ மாமிசம் , ஜார்ஜ் மன்னன் மூலம் ஆங்கிலேயர் ஆட்சி செய்வதை எதிர்கிறேன் " என்று தான் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளது. நீங்கள் நடந்த சம்பவத அப்படியே ரீபைண்ட் செய்து , ஏதோ சுதந்திர போர் வீரர் போல குரிப்பிட்டுலீர்கள். உண்மையிலேல நாட்டு பற்று இருந்தால் அந்த வந்ச்நாதன், ஆங்கிலேய அரசாங்கத்தின் வன துறையில் வேலை செய்ய வேண்டிய தேவை என்ன. அதற்கு பதில் விவசாயம் பார்க்கலாமே?ஆங்கிலேயர் அடித்தட்டு மக்களுக்கு நம்மை தான் செய்தனர், கல்வி, மருத்துவம், போல
          1235
          3 days ago
           (9) ·  (1)
           
          rajdurai · thangamani · பீ · Raana · Prabaharan · Stalinraj · Sembiyan · Sivakumar · Niranjan Up Voted
          woraiyuril Down Voted
          • Balu Nathan  India
            வாஞ்சிநாதனுக்கு குற்றாலம் அருகே செங்கோட்டைல சிலை உள்ளது. செங்கோட்டை அவர் பிறந்த இடம்.
            1750
            3 days ago
             (0) ·  (0)
             
            • SSundari  India
              நன்றி .ஒவ்வொரு வரலாறும் வீரம் தரும் வரலாறு

            Thursday, August 20, 2015

            மாநில சிஎம் சீட்டையே மாற்றிய காதல் -கொலை- பட்டுக்கோட்டை பிரபாகர்

            ஒரு காதலால் ஒரு மாநில அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? ஒரு காதலால் தேர்தலில் ஒரு கட்சி தோல்வியைத் தழுவ முடியுமா? முடியும்!
            கொல்கத்தாவில் 2007-ம் வருடம் நடந்த ஒரு காதலும், அதன் தொடர்பான சம்பவங்களும் 2011-ம் வருடம் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் 34 வருட ஆட்சி முடிவடைய முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தன.
            ‘லக்ஸ்’ நிறுவனம் ஆண்களுக்கான உள்ளாடைகள் தயாரிக்கும் 200 கோடி மதிப்புள்ள நிறுவனம். அதன் அதிபர் அசோக் டோடி. இவர் ஓர் இந்து. அவரின் மகள் பிரியங்கா டோடி. அவர் கம்ப்யூட்டர் அனிமேஷன் கற்க ஒரு நிறுவனத்தில் சேர்ந்தார். அவருக்கு பாடம் எடுத்த இளைஞர் ரிஸ்வனூர் ரஹ்மான். இவர் இஸ்லாமியர்.
            ரஹ்மானுக்கும், பிரியங்காவுக்கும் மன்மதன் அம்புவிட்டு காதல் மலர்ந் தது. மதம், அந்தஸ்து, வேற்றுமை காரணமாக குடும்பத்தினர் கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள் என்பதால்,ரகசிய மாக சில நண்பர்களை மட்டும் சாட்சி களாக வைத்து, பதிவுத் திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால், அதை வெளிப்படுத்தாமல் அவரவர் வீட்டில் சாதாரணமாக நடந்துகொண்டார்கள்.
            சில மாதங்கள் கழித்து ரஹ்மான் தன் அம்மாவுக்கும், அண்ணனுக்கும் தகவல் சொன்னார். அவர்கள் அதிர்ந்து போனார் கள். பிரியங்காவை வீட்டுக்கு அழைத்து வந்தார். பிரியங்காவை விட்டு தன்னை மன்னித்து, தங்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அசோக் டோடிக்கு ஒரு கடிதம் எழுதச் சொன்னார்கள்.
            கடிதம் பார்த்ததும் அசோக் டோடிக்கு கோபம் தலைக்கேறியது. அவர் தனக் குத் தெரிந்த காவல்துறை அதிகாரியின் உதவியை நாடினார்.
            காவல்துறை ரஹ்மான் வீட்டுக்கு வந்தது. பிரியங்காவை அவர் தந்தை வீட்டுக்கு அனுப்பிவிடும்படியும், காதலை மறந்துவிடும்படியும் மிரட்டல் தொணியில் பேசினார்கள். இருவரையும் காவல்துறையின் ஒரு அலுவலகத்துக்கு வரச் சொன்னார்கள். வர மறுத்தால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழுத்துப் போவோம் என்றார்கள்.
            ரஹ்மானும், பிரியங்காவும் அவர்கள் சொன்ன அலுவலகத்துக்குச் சென்றார் கள். அங்கு பெரிய அதிகாரிகள் மிரட்டத் தொடங்கினார்கள். ரஹ்மான் தன் மனைவியைப் பிரியாவிட்டால் விளைவு விபரீதமாக இருக்குமென்று எச்சரித்தார்கள். பெரிய தொகை வாங் கித் தருவதாக ஆசை காட்டினார்கள். இதுபோல மூன்றுமுறை தங்கள் அலுவ லகங்களுக்கு அழைத்துப் பேசினார்கள்.
            மூன்றாவது முறை பேசியபோது பிரியங்காவின் மாமா வந்திருந்தார். மகளைப் பார்க்காமல் அவளின் பெற் றோர் கவலையில் இருப்பதாகவும், ஒரு வாரத்துக்கு மட்டும் பிரியங்காவை அனுப்பி வைக்கும்படியும், ஒரு வாரத்துக்குப் பிறகு பிரியங்காவை மீண்டும் ரஹ்மான் வீட்டுக்கு அனுப்பி வைப்பதாகவும் எழுத்துபூர்வமாக அதி காரிகள் முன்னிலையில் உறுதியளித்தார் மாமா. அதை நம்பி பிரியங்காவை அவ ருடன் அனுப்பி வைத்தார் ரஹ்மான்.
            ஆனால், பிரியங்கா ஒரு வாரம் கழித்து வரவில்லை. அங்கே என்ன நடக்கிறது என்பது புரியாமல் ரஹ்மான் துடித்துப் போனார்.
            “செல்வாக்குள்ள பெரிய இடம். அவர் களுடன் மோத முடியாது. நீ அவளை மறந்துவிட வேண்டியதுதான்'’ என்று உற வினர்கள் சொல்ல, கோபப்பட்டார் ரஹ்மான். “அதெப்படி? அவள் என் மனைவி, அவளை எதற்காக மறக்க வேண்டும்?’’ என்று வாதிட்டார் ரஹ்மான்.
            சில தினங்கள் கழித்து வெளியே சென்ற ரஹ்மானைக் காணவில்லை. அவரை முகம் உருக்குலைந்த நிலையில் ஒரு ரயில்வே தண்டவாளத்தில் பிரேத மாகக் கண்டெடுத்தார்கள். அது தற்கொலையென்று காவல்துறை வழக்கை முடிக்க நினைத்தது. ரஹ்மா னின் குடும்பத்தினரும், நண்பர்களும் அது தற்கொலை அல்ல; கூலிப்படை வைத்து கொலை செய்துவிட்டார்கள் என்றார்கள். ரஹ்மான் படித்த கல்லூரி யின் மாணவர்களும், தன்னார்வஅமைப் புகளும், சில இஸ்லாமிய அமைப்புகளும் ஒரு பெரிய போராட்டத்தில் இறங்கின.
            இது தொடர்பாக வெடித்த கலவரத் தில் போலீஸ்காரர்களும், பொது மக் களும் பரஸ்பரம் தாக்குதல் நடத்த பலர் காயமடைந்தார்கள். காவல்துறையின் வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. பொது மக்கள் தினமும் மெழுகுவத்தி ஏந்தி நீதிக்காக ஊர்வலம் சென்றார்கள். ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதன் காரணமாக முதல்வர் சில காவல்துறை அதிகாரிகளைப் பணிமாற்றம் செய்தார். தனி நபர் விசாரணை கமிஷன் அமைத் தார். கோர்ட்டின் உத்தரவுக்குப் பிறகு வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
            அப்போது எதிர் கட்சித் தலைவியாக இருந்த மம்தா பேனர்ஜி இப் பிரச்சினை யைக் கையிலெடுத்தார். காவல் துறையை தன் பொறுப்பில் வைத்திருக் கும் முதல்வரை கடுமையாக விமரிசித் தார். தேர்தலில் நாங்கள் வெற்றி பெற் றால் அந்தக் குடும்பத்துக்கு நியாயம் வாங்கித் தருவோம் என்று முழங்கினார்.
            சி.பி.ஐ, விசாரணைக்குப் பிறகு ‘‘ரஹ் மான் தற்கொலைதான் செய்துகொண் டார், ஆனால் அவரை தற்கொலை செய் யத் தூண்டியதாக பிரியங்காவின் தந்தை, மாமா, மற்றும் காவல்துறை அதிகாரிகள் சிலரின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்’’ என்று அறிக்கை தந்தது. அசோக் டோடி சுப்ரீம் கோர்ட்டுக் குச் சென்று சி.பி.ஐ அறிக்கையின் மேல் நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைத்து உத்தரவு வாங்கினார்.
            தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தோற்று திரினாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று மம்தா பேனர்ஜி முதல்வரானார். “இந்த விவகாரம் எங்கள் கட்சிக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது உண்மை'’ என்று ஒப்புக்கொண்டார் தலைவர் ஜோதி பாசு.
            சமீபத்தில் சி.பி.ஐ குற்றம்சாட்டிய ஒரு காவல்துறை அதிகாரிக்கு பணி உயர்வு உத்தரவு கொடுத்ததற்காக மம்தா பேனர்ஜி கடுமையாக விமரிசிக்கப்பட் டார். “ரஹ்மான் மரணத்தை ஒரு தேர்தல் ஆயுதமாக மட்டும் பயன்படுத்தினாரா?'’ என்று மீடியா கேள்வி கேட்டு வருகிறது.
            வெகு நாட்கள் இந்த விவகாரம் பற்றி வாயே திறக்காத பிரியங்கா டோடி சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது, “ரஹ்மான் குடும் பத்தினரின் சில நடவடிக்கைகளால் தான் விவகாரம் பெரிதாக வெடித்தது, இல்லையென்றால் சுமூகமாக சரிசெய் திருக்க முடியும்'’ என்று குற்றம் சாட்டி னார். அது பற்றி ரஹ்மானின் தாயாரிடம் கேட்டபோது, “அவை நியாயமே இல் லாத குற்றச்சாட்டு என்றும், இறந்த தன் கணவனின் உடலைக் காணக்கூட பிரியங்கா வரவில்லை, அதன் பிறகு தன் னையும் சந்திக்கவில்லை. இந்த வீட்டில் இருந்த அவரது உடைமைகளை ஒப் படைக்கச் சொல்லி ஒரு வக்கீல் மூலமாக கடிதம் அனுப்பினார் அவர்’’ என்றார்.
            காதலித்தபோது ஒருமுறை ரஹ்மான் பிரியங்காவிடம் சொன்னாராம், “மதம் தான் பிரச்சினை என்றால்.. நான் வேண்டு மானாலும் ஹிந்துவாக மாறிவிடுகிறேன்’' என்று. அதேப் போல பிரியங்கா தன் மாமியார் “வசதியாக வாழ்ந்த உன்னால் எப்படி இந்த வசதியற்ற வீட்டில் வாழ முடியும்?’' என்று கேட்டபோது, “நான் சில மாதங்களாக எங்கள் வீட்டில் ஏ.சி போட்டுக்கொள்ளாமல் தூங்கிப் பழகி வருகிறேன், ரஹ்மானுக்காக எந்த வீட்டிலும் என்னால் வாழ முடியும்’’ என்றாராம்.
            தந்தை பெரியாரிடம் ஒருவர் தன் புது மனைவியுடன் வந்து, “அய்யா, நாங்க வெவ்வேறு ஜாதி. இது கலப்புத் திருமணம்’' என்றார். பெரியார் சிரித்தபடி, “நீ ஒரு கழுதையையோ குதிரையையோ திருமணம் செய்திருந்தால்தான் அது கலப்புத் திருமணம். ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்வதில் எங்கே கலப்பு வருகிறது?’’ என்றார். ஆனால் இன்னும் நம் நாட்டில் ஜாதி, மதம் தாண்டி நிகழும் காதல் திருமணங் களைப் பலர் ஏற்பதில்லை.
            இதன் வெளிப்பாடாகத்தான் ஆயிரக் கணக்கில் கவுரவக் கொலைகள் நிகழ் கின்றன. (சுப.வீர பாண்டியன் இவற்றை ஆதிக்கக் கொலை என்றோ அல்லது ஆணவக் கொலை என்றோ குறிப்பிட வேண்டும் என்கிறார்.)
            இவர்களின் திருமணத்தில் சாட்சிக் கையெழுத்துப் போட்ட ரஹ்மானின் மாணவரான ஹுஸ்ஸேய்ன், “ரஹ்மான் மிரட்டியதால்தான் திருமணத்துக்கு சாட்சிக் கையெழுத்துப் போட்டேன் என்று சொல்ல வேண்டும்’’ என்று போலீஸ் மிரட்டியதால் நான்வேறு ஊருக்குப் போய்விட்டேன். இந்த விவகாரத்தில் பல மனிதர்களின் வேறு முகங்கள் வெளிப்படுவதை உணர்ந்தேன். அதை மையமாக வைத்து நான் எழுதிய கவிதைத் தொகுப்புக்கு ‘சாகித்திய அகாடமி’ பரிசு கிடைத்தது. இந்தக் காதலும், தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களும் சாதாரண எழுத்தாளனாக இருந்த என்னை வீரியமிக்க சிறந்த எழுத்தாளனாக மாற்றியது’’ என்கிறார்.


            நன்றி -த இந்து