Showing posts with label டில்லி. Show all posts
Showing posts with label டில்லி. Show all posts

Tuesday, March 12, 2013

டெல்லி கேங்க் ரேப் ராம்சிங்க் கொலையா? தற்கொலையா? மர்மங்கள்

மருத்துவ மாணவி பலாத்காரம் முக்கிய குற்றவாளி ராம் சிங் திகார் தற்கொலை

 

புதுடில்லி:டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளியான, ராம்சிங், திகார் சிறையில் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

டில்லியை சேர்ந்த மருத்துவ மாணவி, கடந்த டிசம்பரில், ஓடும் பஸ்சில், ஆறு பேர் கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். பின், சிங்கப்பூர் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் ஆறு பேர், கைது செய்யப்பட்டனர். 


இவர்களில், டில்லி, ஆர்.கே.புரத்தை சேர்ந்த ராம் சிங், 33, அவரது சகோதரர், முகேஷ் ஆகியோர் முக்கியமானவர்கள்.பாலியல் பலாத்காரத்துக்கு பயன்படுத்தப்பட்ட, பஸ்சின் டிரைவராக செயல்பட்டது, ராம் சிங். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக, ராம் சிங் சேர்க்கப்பட்டிருந்தான். இவர்கள் மீதான வழக்கு விசாரணை, டில்லி விரைவு கோர்ட்டில் நடந்தது.

சிறை எண்-3:


குற்றவாளிகளில் ஒருவன், மைனர் என்பதால், அவன் மட்டும், சிறுவர் சீர்திருத்த மையத்தில் அடைக்கப்பட்டு உள்ளான். ராம் சிங் உள்ளிட்ட, மற்ற ஐந்து பேரும், டில்லி திகார் சிறையில், தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.குற்றவாளிகள், தற்கொலை செய்வதற்கான வாய்ப்புள்ளதாக கருதப்பட்டதால், ஐந்து பேருமே, திகார் சிறையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அடைக்கப்பட்டிருந்த சிறை அறைக்கு வெளியில், தனியாக ஒரு காவலர், பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்.ராம் சிங், சிறை எண்-3ல் அடைக்கப்பட்டிருந்தான். அதே அறையில், மேலும் சில கைதிகளும் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று காலை, விசாரணைக்காக, ராம்சிங், கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படவிருந்தான்.

இந்நிலையில், நேற்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர், குற்றவாளிகளை எழுப்புவதற்காக சென்றார். அப்போது, சிறை அறைக்குள், ராம் சிங் தூக்கில் தொங்கியதை பார்த்து, அவர் அதிர்ச்சி அடைந்தார். உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, ராம் சிங்கை, தூக்கிலிருந்து இறக்கிய அதிகாரிகள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

உடையால் கயிறு:


தான் அணிந்திருந்த உடைகளை, ஒன்றன் பின் ஒன்றாக முடிந்து, கயிறு போல் திரித்து, அறையின் மேல் பகுதியில் உள்ள கிரில்லில் தூக்கிட்டு, அவன் தற்கொலை செய்து கொண்டதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டில்லியில் உள்ள தீனதயாள் மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக, ராம்சிங்கின் உடல் கொண்டு செல்லப்பட்டது.அதிகபட்ச பாதுகாப்பு வளையத்துக்குள், தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குற்றவாளி, சிறைக்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, ஆச்சர்யத்தையும், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
 
 
 
தேசிய பெண்கள் கமிஷன் தலைவர், மம்தா சர்மா கூறுகையில்,"" சிறைக்குள் இருக்கும் ஒரு கைதியை, சிறை அதிகாரிகளால் கண்காணிக்க முடியவில்லை என்றால், அந்த சிறை அதிகாரிகள், எதற்காக வேலை செய்கின்றனர் என, தெரியவில்லை,'' என்றார். திகார் சிறையின் முன்னாள் டைரக்டர் ஜெனரலும், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியுமான, கிரண் பேடியும், இதே சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.ராம் சிங்கின் தற்கொலை குறித்து, பல்வேறு தரப்பினரும், பல சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
 
 
ராம் சிங், கடந்த சில நாட்களாகவே, கடும் மன உளைச்சலில் இருந்தான். சரியாக உணவு சாப்பிடுவதும் இல்லை. சக கைதிகள், ராம் சிங்கை தாக்கும் அபாயம் இருந்தது. இதனால், அவன் பயத்தில் இருந்தான். ராம் சிங்கிற்கு, ஒரு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.ஒருகை, சரியாக செயல்படாத நிலையில், எட்டு அடி உயரத்தில் உள்ள கிரில்லில், தூக்கு போடுவது, சாத்தியமற்ற ஒன்று. அவனுடைய உடைகளையே, கயிறு போல் திரித்து, தூக்கு போடுவதற்காக பயன்படுத்தியதாக கூறுவதும், நம்பும்படியாக இல்லை.
 
 
 
அந்த அறையில், ராம்சிங் மட்டும், தனியாக அடைக்கப்படவில்லை. மேலும் சில கைதிகளும், உடன் இருந்தனர். அவர்களுக்கு தெரியாமல், ராம்சிங் தூக்கிட்டு கொண்டதாக கூறுவதையும் நம்ப முடியவில்லை. அந்த அறைக்கு வெளியில், பாதுகாவர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டு இருந்தார். அவருக்கும் இந்த விஷயம் தெரியவில்லை என கூறுவதும், ஆச்சர்யமாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்
 
 
.ராம் சிங் தற்கொலை சம்பவத்தை அடுத்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மற்ற நான்கு குற்றவாளிகளும், தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.இதற்கிடையே, டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டேயை நேற்று சந்தித்து பேசினார். இதன்பின், ஷீலா தீட்ஷித் கூறுகையில்,""இது தொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானால் தான், இந்த விஷயம் பற்றி, கருத்து தெரிவிக்க முடியும்,'' என்றார்.
 
 
பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த மாணவியின் சகோதரர் கூறியதாவது:ராம் சிங்கை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என்பதே, எங்களின் விருப்பம். அது நடக்காமல் போய் விட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய, மற்ற குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்க போகிறது என்பதற்காக காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.தந்தை ஆவேசம்:ராம்சிங் தந்தை கூறியதாவது:என் மகன், தற்கொலை செய்யவில்லை. அவனை, திட்டமிட்டு கொலை செய்து விட்டனர். இந்த உண்மையை மறைக்கின்றனர். பிரேத பரிசோதனையை, எங்களுக்கு முன், வெளிப்படையாக நடத்த வேண்டும்.
 
 
 இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். என் மகனை, ஏற்கனவே சிறைக்குள் தாக்கியுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.ராம்சிங், தற்கொலை செய்யும் நபர் அல்ல. இந்த விஷயத்தில், ஏதோ சதி நடந்துள்ளது. விசாரணைக்காக, முழு ஒத்துழைப்பு அளித்து வந்தான். விசாரணை, விரைவாக நடப்பதில், அவனுக்கு முழு திருப்தி இருந்தது. சிறை அதிகாரிகள் தான், அவனை கொலை செய்துள்ளனர்.இவ்வாறு, வி.கே.ஆனந்த் கூறினார்.திகார் சிறை வட்டாரங்கள் கூறியதாவது:திகார் சிறை, கடுமையான பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ளது. 
 
 
சிறையில், கண்காணிப்பு மற்றும் வெளிப்புற பாதுகாப்பு பணிகளில், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீசார், தமிழ்நாடு சிறப்பு போலீசார் ஆகியோர், ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சிறையின் அன்றாட நடவடிக்கைகளை, டில்லி போலீசார், கவனித்து வருகின்றனர். கடந்தாண்டில் மட்டும், திகார் சிறையில், 18 பேர் இறந்துள்ளனர். இவற்றில், 16 இறப்புகள், இயற்கையாக நிகழ்ந்தவை. மற்ற இரண்டும், தற்கொலை சம்பவங்கள். தற்போது, ராம் சிங்கையும் சேர்த்து, கடந்த, 15 மாதங்களில், இதுவரை, மூன்று பேர் தற்கொலை மூலம், உயிரிழந்துள்ளனர்.
 
 
இவ்வாறு சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. "" ராம்சிங் மரணம், தற்கொலை தான் என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,'' என, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே கூறினார். மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ராம்சிங் தற்கொலை சம்பவத்தை அடுத்து, திகார் சிறையில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு குறித்து, மறு ஆய்வு செய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். திகார் சிறையில், பாதுகாப்பு விஷயத்தில், பெரிய அளவில் குறைபாடு இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
 
ராம்சிங் மரணம், தற்கொலை தான் என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனாலும், இந்த விவகாரம் தொடர்பான, விசாரணை முடிந்தால் தான், உண்மை நிலவரம் தெரிய வரும். ராம்சிங் கொலை செய்யப்பட்டதாக, சிலர் கூறுகின்றனர். இது தொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை முடிந்தால் தான், நடந்தது என்ன என்று தெரிய வரும். 
 
 
திகார் சிறையில், ரகசிய கண்காணிப்பு கேமராக்கள், குறிப்பிட்ட சில இடங்களில் இல்லை. இதனால், ராம்சிங் அடைக்கப்பட்டிருந்த அறையில், என்ன நடந்தது என்பதை அறிய முடியவில்லை.திகார் சிறை முழுவதையும், எலெக்ட்ரானிக் சாதன கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவது குறித்து, நான் எந்த பதிலும் அளிக்க முடியாது. திகார் சிறை கட்டுப்பாடு, உள்துறை அமைச்சகம் வசம் இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கான, தண்டனையை அதிகரிக்கும், குற்றவியல் சட்ட திருத்த மசோதா குறித்து, மத்திய அமைச்சரவையில், இன்று விவாதிக்கப்படவுள்ளது. இவ்வாறு, சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.
 
 
 
மக்கள் கருத்து 
 
 
1. குற்றவாளி ராம் சிங் யின் கூட்டாளிகள் 4 பேருடைய உடலில் போதை மாத்திரை அல்லது தூக்க மாத்திரை அதிக அளவில் கலக்கப்பட்டு உள்ளதா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவ்வாறு கண்டு பிடிக்கபட்டால் அது கண்டிப்பாக காங்கிரஸ் கட்சியின் வேலை தான் .....ராம்சிங் யின் கை முறிந்து உள்ளதாள் இது நடை பெற சாத்தியமே இல்லை .....ஒவ்வொரு பிரச்சனை முடிந்தவுடன் உளவு துரையின் மூலம் மக்களின் நாடி துடிப்பை துளியமாக கனிகிறது இந்த அரசு 
 
 
 
 ..........பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரரின் தலையை துண்டித பின் மக்கள் மொத்தமாக இந்த கற்பழிப்பு சம்பவத்தை மறந்துவிடுவார்கள் என்று கணக்கிட்டு ஏமார்ந்தவுடன் சுதாகரித்து கொண்ட மதிய அரசு அடுத்தடுத்த தூக்கு தண்டனையை நிறைவேற்றி பின் அதனுடன் இந்த தூக்கு மரணத்தையும் மக்கள் நியாபகம் வைத்துகொண்டால் இந்த கற்பழிப்பு சம்பவத்திலிருந்து /பிரச்சனையிலிருந்து காங்கிரஸ் கட்சி சற்று கரையை போக்கலாம் என்று உளவு துறை ஆலோசனை வழங்கி இருக்கலாம் அதனால் இந்த நாடகம் நடந்து ஏறி இருக்காலாம் .............கடந்த 24 மணி நேரத்தில் மற்ற நால்வரின் உணவு ...உடலில் அதிக அளவில் தூக்க மாத்திரை /போதை மாத்திரை கலந்து உள்ளதா என்று கண்டுபிடிப்பது திருபத்தை ஏற்படுத்தலாம்


2. அரசாங்கத்திற்கு தன்னால் இவ்வளவு செலவு ஆகிறதே என்று எண்ணி உயிரை விட்டானோ என்னவோ??? எது எப்படியோ குறைந்த பட்சம் அவன் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கமோ என்கிற கோணத்தில் விசாரிப்பது நல்லது......அரசாங்கத்திற்கு பாதுகாப்பு செலவை மிட்சபடுத்திய இவன் செயல் விநோதமானது தான்.....இதில் ஒன்றை கவனிக்க வேண்டியது......மேற்குறிப்பிட்ட குற்றசாட்பட்ட பெயர்களை வைத்து பார்த்தால் அவர்கள் உயர் ஜாதியினர் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்க கூடிய விஷயம்..... இப்போதெல்லாம் தனி மனித ஒழுக்கம் இல்லாதது மற்றும் குற்றங்கள் செய்வது சமுதாயத்தில் அணைத்து பகுதியிலும் பரவிவிட்டது என்பது மாபெரும் வேதனைக்குரியது....சமயமும்,மதமும்,சமூகமும் மற்றும் பெற்றோரும் அவர்களின் கடமையை திறம்ப செய்யாததும் அவர்களுக்கு கொடுத்த அதீத சுதந்திரமும் தான் இந்த குற்றத்திற்கு காரணம் என்றால் அது மிகையாகாது....


3.இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பு நிறைந்த திகார் சிறையில் ........ ஒரு கைதி ...... அதுவும் விசாரணை கைதி ...... விடியற்காலை 5 மணிக்கு தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் ....... சிறைத்துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ..... வார்டன்கள் எங்கே போனார்கள் ....... மற்ற கைதிகள் கூட இதை கவனிக்கவில்லையா ...... கண்காணிப்பு கேமராக்கள் எப்படி "கண்டு கொள்ளாமல்" இதை விட்டன ...... யாரை திருப்திபடுத்த இந்த நடவடிக்கை? ..... பல சந்தேகங்கள் ........ விடை எங்கே ....


4. சிறையில் அவனைப் பரிசோதித்து வந்த மனநல மருத்துவர்கள் செயல்பாடு சரியில்லை என்கிறார் கிரண் பேடி .... தூக்கு தண்டனைக் கைதிக்குக் கூட இந்தப் பரிசோதனை நடப்பது உண்டுதான் .... ஆனா இவனுக்கெல்லாம் மனநிலை சரியா இருந்து நாட்டுக்கு என்ன ஆகணும் ????... 

5. ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. இந்த நாட்டில் ஜெயிலுக்குள்ளே போனாலும் வெளியே இருந்தாலும் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பான இடமே இல்லை இந்த நாட்டில். காவல் துறை நினைத்தால் எதுவும் செய்யலாம் போல் இருக்கிறது. முறைப்படி தண்டனை கொடுக்கவேண்டிய இடம் ஜெயில். முரட்டுத்தனமாக தண்டிக்க கூடாது. அவனை இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததே இந்த அரசு தான். ஊரெங்கும் மது கடைகள், சினிமா, சின்னத்திரை கிளுகிளுப்புகள், இன்டர்நெட் ஆபாசம், முக்கியமாக இலவசம், வேலை இன்மை, எதிலும் லஞ்சம், அரசியல் அராஜகம், இப்படிஎல்லாம் இருந்தால் மக்களின் போக்கு இப்படி தான் இருக்கும்....



நன்றி - தினமலர்

Wednesday, January 02, 2013

2012-ம் ஆண்டில் 78 %டெல்லி பெண்களுக்கு செக்ஸ் கொடுமை:, மக்கள் அதிர்ச்சி

புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி, சிகிச்சை பலனின்றி சிங்கப்பூரில் உயிரிழந்தார். அவரது உடல், கடந்த 30ம் தேதி டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. மாணவியின் அஸ்தி நேற்று கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது. 


இந்த சடங்குக்கு பின்னர் மாணவியின் தந்தை கூறியதாவது:-எங்கள் கிராமத்தில் யாருக்காவது உடல் நலக்குறைவோ, விபத்தோ ஏற்பட்டால், 10 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அல்லது 25 கி.மீட்டர் தூரத்தில் உள்ள மாவட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும். கிராம சாலைகள் சரியில்லை. எனவே கிராமத்துக்குள் ஆம்புலன்ஸ் வரமுடியாது.

நோயாளியை கட்டிலில் படுக்க வைத்து, தோளில் சுமந்து சென்று சாலை வரை தோளில் சுமந்து செல்வோம். இதையெல்லாம் பார்த்து மனம் துடித்த என் மகள், ஒரு டாக்டராகி இந்த கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தீவிரமாக படித்தாள். கல்லூரி செலவுகளை சமாளிக்க இரவு 9 மணி முதல், அதிகாலை 5 மணி வரை பி.பி.ஓ.வில் வேலை செய்தாள். குழந்தைகளுக்கு டியூஷன் கற்றுத் தந்தாள்.


அவளது எதிர்காலைத்தைப் பற்றி நாங்கள் நிறைய ஆசைப்பட்டோம். ஆனால், எங்கள் ஆசைகளை எல்லாம், நிராசையாக்கிவிட்டு அவள் போய் சேர்ந்து விட்டாள். அவள் எங்களைவிட்டு மறைந்ததும் எங்கள் நம்பிக்கையும் அவளுடன் மறைந்துவிட்டது. எங்களுக்கு ஆதரவாக இருந்த நம் நாட்டு மக்களுக்கும், அரசு செய்த உதவிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். என் மகளின் கனவை நனவாக்கும் வகையில், அவளது நினைவாக எங்கள் கிராமத்தில் மருத்துவமனை ஒன்றை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவியின் தாத்தா கூறுகையில் 'குற்றவாளிகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கடும் தண்டனை விரைவாக வழங்கப்பட வேண்டும். மைனர் என்பதற்காக குற்றவாளிகளில் ஒருவனாக இருந்தவனுக்கு தண்டனையை குறைக்கக் கூடாது. தண்டனை வழங்குவதில் கருணை காட்டினால், அவன் வளர்ந்த பிறகு இந்த சமுதாயத்திற்கு பெரும் தீங்காக மாறி விடுவான். அவன் செய்த குற்றம் குழந்தைத்தனமானது அல்ல.

எனவே அவனை ஏன் மைனர் என்று கருத வேண்டும்? இந்த வழக்கில் எல்லோருக்கும் வழங்கும் தண்டனை அவனுக்கும் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்' என்றார். 


நியூஸ் 2 


 2012-ம் ஆண்டில் 78 சதவீத டெல்லி பெண்களுக்கு செக்ஸ் கொடுமை: ஆய்வில் தகவல்

புதுடெல்லி, ஜன. 2-

டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன்காரணமாக டெல்லி கற்பழிப்பு தலைநகர் என்று அனைவராலும் விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டில் (2012) டெல்லியில் 78 சதவீத பெண்கள் செக்ஸ் சித்ரவதைக்கு உள்ளாகி இருப்பதாக ஆய்வு தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. ஆங்கில பத்திரிக்கை ஒன்றும், தனியார் அமைப்பு ஒன்றும் நடத்திய ஆய்வில் இது தெரிந்தது.

கடந்த ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிராக செக்ஸ் கொடுமையில் 661 சம்பவம் நடந்துள்ளது. இதற்கு பெண்கள் அணியும் ஆடை ஒரு முக்கிய காரணம்


நன்றி - மாலை மலர்

Tuesday, December 18, 2012

டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ரேப் - கேஸ் விபரம்

டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பலாத்காரம்

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி, ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டாள்.


நேற்று இரவு வசந்த் விஹார் என்ற பகுதியில், நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


நேற்று இரவு 11 மணியளவில், தெற்கு டெல்லி பகுதியில் முனிர்கா என்ற இடத்தில், ஒரு பெண்ணும், அவளது ஆண் நண்பரும் பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்து பாதி தூரம் வந்ததும், பேருந்தில் இருந்த சிலர் நண்பரை தாக்கிவிட்டு, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவர்களை தூக்கி வெளியே வீசியுள்ளனர். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் பேருந்து ஊழியர்களா அல்லது பயணிகளா என்பது தெரிய வரவில்லை. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


டெல்லியில் மாணவி பலாத்காரம்: காவல்துறை துப்புத் துலக்கியது எவ்வாறு?

டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் 24 மணி நேரத்தில் காவல்துறையினர் முக்கியக் குற்றவாளிகளை கண்டறிந்துள்ளனர்.
இதில், காவல்துறையினர் துப்புத்துலக்கியது எவ்வாறு என்ற தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 


அதாவது, தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவின் உதவியோடு, அந்த பேருந்தை அடையாளம் கண்ட காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள பேருந்துகள் நிறுத்துமிடத்தில் சோதனை செய்ததில், அந்த பேருந்து கண்டறியப்பட்டது. அதன் ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தியதில், பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்ல அந்த பேருந்து பயன்படுத்தப்பட்டு வந்ததும், அதன் ஓட்டுநர் விவரமும் தெரிய வந்தது. இதையடுத்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். 




மேலும், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர்களின் செல்போன்களை குற்றவாளிகளை பிடுங்கி வைததிருந்தனர். அந்த செல்போன்களுக்கு காவல்துறையினர் எஸ்எம்எஸ் அனுப்பிய போது, அதில் ஒன்று செயல்பாட்டில் இருந்ததால், அந்த இடத்தை தொலைத்தொடர்பு உதவியோடு கண்டறிந்த காவல்துறையினர், அதன் மூலம் இரண்டாவது குற்றவாளியையும் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் அளித்த தகவலின் அடிப்படையில் மேலும் 1 குற்றவாளி கைது செய்ய்பட்டு, மேலும் 3 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேற்று பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, தற்போது அபாயகரமான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், அவரது அடிவயிற்றுப் பகுதி சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.


புது தில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை, நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜக எழுப்பியது.


இந்த சம்பவம் மிகவும் மோசமானதாகும். இது போல அடிக்கடி நிகழ்கிறது. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை பாஜக கொண்டு வரும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.



இரு அவைகளிலுமே, கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு, மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது.



நன்றி - தினமணி  



Delhi gangrape victim still
 critical, doctors say
Delhi Police team inspecting inside detained buses after a 23-year-old student was allegedly gangraped inside a private bus in Delhi.
Times of India
NEW DELHI: The 23-year-old woman who was gangraped and thrown off a moving bus in the capital is still critical and continues to be on ventilator support, authorities at the Safdarjung hospital said on Tuesday.

"The patient is still critical, she is on ventilator support. But since today (Tuesday) morning she has started to speak to the doctor," SN Makwana, press information officer at the hospital, told IANS.

A senior doctor at the hospital, who is attending to the victim, added that no further surgeries were being planned as of now.

"The patient is in critical condition and she is now trying to speak. As of now we are not planning for any surgery. We can say it is a grievous injury and her intestines are severely damaged," another doctor said on condition of anonymity.

The brutal rape and torture occurred Sunday night when the woman along with her male friend boarded a private bus at Munirka to go to Dwarka after watching a movie.

The woman was beaten up, stripped and raped by at least seven men who were inside the bus. Both the woman and her male friend, who was also beaten up when he resisted, were thrown off the bus near Mahipalpur.

The male friend was taken Safdarjung but discharged after treatment for his injuries Monday. 


நன்றி - த டைம்ஸ் ஆஃப் இண்டியா  

New DelhiThe horrific rape of a young medical student in a bus in South Delhi on Sunday night was raised by angry parliamentarians today in both houses.

Here are all the reactions in Parliament:

Sushma Swaraj, Leader of Opposition in Lok Sabha
What is the government doing to curb rape cases in the capital? The rapists should be hanged, we need tougher laws to stop rapes. There no words enough to condemn this issue. Home Minister should come to the house and explain what the government is doing. And the whole house should condemn this in one voice


Most Recent
  • Gwen Stefani admits to marriage being a struggle
  • Sajid Khan guarantees ticket crunch for Himmatwala
Also See
  • Delhi rape: Angry MPs ask government for tough action, more security
  • Gang-rape in Delhi bus: Police arrest three accused

Girija Vyas, Congress

There should be security all around. Fast track is very much needed. I want to say that everybody should together... There is a need of self-defence programme. Please wake up and save our girls.

Hamid Ansari, Rajya Sabha Chairman
The government will make a statement on the case later today.

Mayawati, BSP Chief
We need to improve our laws and make them stricter, so that it serves as a deterrent. Not enough to just arrest them, but action should be so strict that no one should dare to act in such a manner.

Meira Kumar, Speaker of Lok Sabha

The gang-rape case in Delhi is chilling. The government must take tough steps - this is what the House wants.

Kamal Nath, Parliamentary Affairs Minister
Tough and strict steps will be taken.

Jaya Bachchan, Samajwadi Party MP in the Rajya Sabha
We live in such a country where women are worshipped. But that faith is disrupted every day because in some city of India, especially in the capital there are atrocities against women. The way we are discussing this topic today it should have been done earlier.

Derek O' Brien: Trinamool MP in the Rajya Sabha
Delhi has become the rape capital of India. Rape is not a women's issue, it is much beyond. It is about men who stop behaving like human beings and started behaving like animals. This is even worse than animals.


Delhi gangrape: Nation outraged, demands justice






Monday, December 17, 2012

டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் வில்லித்தனமான பேச்சு

புதுடில்லி:""ஐந்து உறுப்பினர்களை கொண்ட குடும்பத்திற்கு, மாதம், 600 ரூபாய் இருந்தால் போதும்; அவர்களின், அரிசி, பருப்பு போன்ற, உணவு தேவைகள் நிறைவேறி விடும்,'' என, டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித் பேசியுள்ளார். இதற்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சோனியா தலைமை:
டில்லியில், நேற்று முன்தினம், "அன்னஸ்ரீ யோஜனா' என்ற, உணவு பாதுகாப்பு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடந்த அந்த விழாவில், டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித் பேசியதாவது:அன்னஸ்ரீ யோஜனா, அருமையான திட்டம். இதில், மானிய விலையில் வழங்கப்படும் உணவு பொருட்களுக்கான மானியம், பொதுமக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். "ஆதார்' அடையாள அட்டை மூலம், பொதுமக்களின் வங்கிக்கணக்கில், 600 ரூபாய் நேரடியாக சென்று சேர்ந்து விடும்.இந்தப் பணத்தை கொண்டு, மிக அழகாக குடும்பம் நடத்த முடியும். ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு, இந்த தொகை போதுமானது. "ஆதார்' அடையாள அட்டை வைத்துள்ள, குடும்ப உறுப்பினர்களில், மிக மூத்த வயதுடையவரின் கணக்கில், இந்தத் தொகை வரவு வைக்கப்படும்.இவ்வாறு, ஷீலா தீட்ஷித் தெரிவித்தார்.

இதற்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 



அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர், முக்தார் அப்பாஸ் நக்வி கூறும்போது, ""நூறு ஆண்டுகளுக்கு முன் வேண்டுமானால், இந்த தொகை போதுமானதாக இருக்கலாம். இப்போது, நிச்சயம் போதாது. இது போன்று பேசுவதன் மூலம், ஏழை மக்களை, காங்., அவமரியாதை செய்கிறது,'' என்றார்.

26 ரூபாய்போதும்:
"பணக்காரர்கள் நிறைந்த காங்., கட்சியில், ஏழைகளுக்கு இடமில்லை' என, பொதுவாக கூறப்படுவது உண்டு. காங்., தலைமையிலான, மத்திய அரசின், திட்டக் கமிஷனின், துணை தலைவராக இருக்கும், மாண்டேக் சிங் அலுவாலியா, "தனிநபர் உயிர் வாழ, நாள் ஒன்றுக்கு, நகரங்களில், 32 ரூபாயும், கிராமங் களில், 26 ரூபாயும் போதும்' என, தெரிவித்திருந்தார்.அதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது; காங்., பொது செயலர், ராகுல் கூட, மாண்டேக் சிங்குக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

நிலைமை இவ்வாறு இருக்க, டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித்தும், ஏழை மக்களின் துயரம் பற்றி தெரியாமல், குடும்பத்தை நடத்த, 600 ரூபாய் இருந்தால் போதும் என, தெரிவித்துள்ளது, "ஏழைகள் மீது அந்த கட்சிக்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது' என்கிறார், டில்லி அரசியல் பார்வையாளர் ஒருவர்.

ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு, மாதம், 600 ரூபாய் இருந்தால் போதும் என, திருவாய் மலர்ந்துள்ள ஷீலா தீட்ஷித், மாத சம்பளமாக, ஒரு லட்சம் வரை பெறுகிறார். அவரின் மகனும், கிழக்கு டில்லி தொகுதி, காங்., எம்.பி.,யு மான, சந்தீப் தீட்ஷித், அதே அளவுக்கு பெறுகிறார்.

செழிப்பான குடும்பம்:பஞ்சாபின் பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஷீலாவின், மறைந்த கணவர், உமாசங்கர் தீட்ஷித், உத்தர பிரதேசத்தின், செல்வ செழிப்பான குடும்பத்தை சேர்ந்தவர்.ஷீலா, சிறு வயது முதல், மக்கள் பிரதிநிதியாகவும், அமைச்சராகவும் இருந்தவர் என்பதால், அவருக்கு சாமானிய மக்களின் துயரம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என, எதிர்க்கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


thanx - dinamalar




மக்கள் கருத்து 



1. இங்கே கருத்து சொல்லி இருக்கும் திரு ரமேஷ் மற்றும் சாடிக் அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த அரசாங்கம் என்ன மானியமாக மாதம் 6000 ரூபாயா குடுக்குது. அத வச்சுக்கிட்டு மக்கள் உழைக்காம சோம்பேறி ஆக போறாங்க, 600 ஓவாய வச்சிக்கிட்டு இன்னைக்கு ஒரு தனி மனிதனால கூட வாழ முடியாதுன்னு சாமானியனுக்கும் தெரியும். மானியம் என்பது என்ன? கஷ்ட படுரவங்களுக்கு அவங்க கஷ்டத்த குறைக்க குறைஞ்ச விலைல பொருள குடுக்குறதுதான் மானியம். அதும் கிட்டத்தட்ட 70 கோடிக்கும் மேல வாழற நம்ம இந்தியால இது தேவை, ஏழை மக்களை பத்தி கொஞ்சம் கூட கவலைபடாம மானியத்த ஒழிக்கணும்னு சொல்றிங்களே நீங்க எல்லாம் மனசார முடியாதவங்களுக்கு ஒரு உதவி கூட செய்ய மாட்டிங்கனு நல்ல தெரியுது 






2. பிஜேபியோடு சேர்ந்து கொண்டு ஒப்பாரி வைப்பதே பிழைப்பாகி விட்டது சிலருக்கு. ஷீலா என்ன தவறாக சொல்லி விட்டார், ஆதார் அட்டை மூலம் மாதம் அறுநூறு கிடைத்தால் ஒரு குடும்பத்துக்கு போதுமானது என்றால், படுத்துக் கொண்டு சாப்பிடுவதற்காக சொல்லவில்லை. மறைமுக மானியமாக கிடைத்து கொண்டிருக்கும் இப்பணத்துடன் குடும்ப வருமானமும் சேர்ந்தால் சுலபமாக குடும்பம் நடத்த முடியும் என்பதே அவர் பேச்சின் சாராம்சம். நம்மை பொறுத்த வரை இந்த மான்யங்களையே நிறுத்தி விட்டு விலைவாசியை குறைப்பதற்கும் வேலையில்லா திண்டாத்தை போக்குவதற்கும் பயன் படுத்தினால் நல்லது என்பதே சரியானதாக இருக்கும். 




3. Sekar
 Sekaran ஐய்யய்யோ...இந்த தொகை மிக மிக அதிகம்..அறுநூறு ரூபாயா..அடேங்கப்பா..இவ்ளோ தொகை வைத்துகொண்டு மக்கள் என்ன செய்வார்கள்? சுவிஸ் வங்கியில் கணக்கை ஆரம்பித்துவிடுவார்கள். சொன்னால் கேளுங்கள்..தயவு செய்து இவ்ளோ தொகையை கொடுக்காதீர்கள்..சேர்த்து வைக்க வங்கி இருக்காது..எல்லா செலவும் போக மீதி கூட ஐநூற்றி தொண்ணூறு ரூபாய் மீதமிருக்கும். அப்படியே உடனே சுவிஸ் வங்கிக்கு அனுப்பிவிட வேண்டியதுதான். ஷீலா அவர்கள் என்செய்வார்கள்..? அவர்கள் வாழுகின்ற விதம் அப்படி..ஏழைகள் என்றால் என்ன என்று கேட்பார்கள்..அல்லது வயிற்றில் ஈரத்துணியை போட்டு கொண்டு வாழ்ந்தால்..இதே அதிகம்தான். கோபுரங்களில் வாழ்பவர்கள்..குடிசைகள் பற்றி தெரிய நியாயமில்லை..ஒரு லட்சத்தை தினசரி வாடகையாக கொடுத்து வாழும் வசதி படைத்த மத்திய அமைச்சர்கள் உள்ள நாடு அல்லவா இது..இன்னமும் பேசுவார்கள்..இது போதும் பிரச்சாரத்திற்கு..காங்கிரஸ் காணாமல் போக இது போதும்.. 





4. இலக்கு எட்ட முடியாத அளவுக்கு உயரத்தில் வைத்துக்கொண்டால்தான் நமக்கு முயற்சி என்பது இருக்கும். அரசியல்வாதிகள் இப்படி கீழ்த்தரமான இலக்குகள் வைத்துக்கொள்வதால்தான் நாடு முன்னுக்கே வராமல் இருக்கிறது. அறுநூறு ரூபாயில் ஒருவர் மட்டுமே வாழ்க்கை நடத்துவது கடினம். மனிதனின் அடிப்படை தேவைகள் என்பது உணவு, உடை இருப்பிடம் என்ற மூன்றும்தான். அதில் உணவுக்கு மட்டுமே ரூபாய் ஆறுநூறு போதாது. ஆறு நூறு ரூபாய்க்கு நாளுக்கு மூன்று வேளை சாப்பாடு (ரொட்டி) யார் கொடுக்கிறார்கள்? ஒரு ஆளின் தினக்கூலியே முன்னூறு ரூபாய்க்கும் அதிகம். மாதம் இரண்டு நாள் வேலை செய்துவிட்டு மற்ற நாட்கள் எல்லாம் சோம்பேறிகளாக இருந்தால் போதுமா? டெல்லி முதலமைச்சர் என்ன சொல்லவருகிறார்? இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் மாறினால்தான் நாடு முன்னுக்கு வரும். ஒரு ஆளின் மாத வருவாய் மூன்று ஆயிரம் என்ற இலக்கு இருக்கவேண்டும் என்பது என் கருத்து. அப்போதுதான் அரசியல்வாதிகளும் வேலை செய்வார்கள். மக்களும் உழைப்பார்கள். மக்களுக்கு இந்த அளவு வருவாய் வரவில்லை என்றால், அப்படிப்பட்டவர்களுக்கு அரசே ஊதியம் தரவேண்டும் அல்லது எதாவது ஒரு நிரந்தரமற்ற வேலையாவது தந்து ஊதியத்திற்கு வழி செய்யவேண்டும். இதை செய்யாதவரை நாடு முன்னேறியதாக சொல்லிக்கொள்வதில் அர்த்தமே இல்லை. ..





5. 1965 லே நானும் என் கணவரும் 400ரூவா சம்பளத்துலே குடுமபம் நடத்த என்ன பாடு பட்டோம்னு தெரியுமா? அப்போ காய்கள் அவ்ளோமலிவு , பால் 35காசுதான் லிட்டர்க்கு. ஒரு லிட்டர் பால் வாங்கினா போரும் அரிசி நல்லரகம் 38காசு மலிவுரகம் 26காசு , 1கிலொ பருப்பும் 20காசு 30காசுதான் பிறகு கொஞ்சம்கொஞ்சமா ஏறி 2 /3 ரூவாயாச்சு. வீட்டுவாடகை 45ரூவா மின் பில் 14 டு 20 ரூவா ஆகும் பத்துகாசுக்கு முள்ளங்கிவாங்கினாலபூம்பிஞ்ச்ஜாக இருக்கும் ஒரு முள்ளங்கி வாங்கி கொஞ்சம் சாம்பர்லே போடு மீதிய பொரியலும் செஞ்சுருவேன் பொரியலும் செஞ்சுருவேன் இதே டெல்லிலே தான் இருந்தேன் என் கணவர் 1000/ ரூவா சம்பளம் வாங்கும் போது 1980ம் ஆண்டு வரை வீட்லே டிவி வாங்கலேஒரு ற்றான்சிச்ட்டர் தான் உண்டு . muunupillaikal படிச்சாகணும் அப்போ எல்லாம் பள்ளி சம்பலம்கூட கம்மிதான் தமிழ் பள்ளிலேதான் படிச்சாங்க 8ம் வகுப்புவரை பீஸ் 3ரூவாதான் டியூஷன் எல்லாம் போகலே தாமே தான் படிச்சாங்க டீசர்கலும் நல்ல கத்துகொடுத்தாங்க பிள்ளைகளும் சின்சியரா படிச்சாங்க , 9ம் வகுப்பிலேந்து 10ரூவாதான் பீஸ் .+1 +2 க்கு எடுக்கும் க்ரூப் பொருது 15 டு 20 ரூவாய்தான் , இப்போ வாரம் 10 000 / வாங்கினாலும் போராதுன்ர நிலை , ஏழைகளும் தம் பிள்ளைகள் நல்ல பெரிய பல்லிலே ஆங்கிலவழி லே படிக்கவைக்க ஆசைபடுராக, இப்போதும் பல பெத்தவங்க தாம் தான் கஷ்டம் படறோம் தம் பிள்ளைக நல்லா வாழனும்னு உளைக்கிராக அரசு சொல்லுது 2000/போரும்னு ஷீலா திக்ஷித்துக்கு வரும் சம்பளம் எவ்ளோ ஒரு சாமானியனுக்கு வரும் சம்பளம் எவ்ளோ , இந்தம்மா சூக்க ரொட்டியும் தாலும் தின்னுட்டு போகமுடியும் வயசாச்சு இன்று செத்தால் நாளை சங்கு , வளரும் பிள்ளைக நிலை என்ன என்று தெரிஞ்சுதான் பேசுராகளா , யாருகண்டது இதுகளெல்லாம் ஒருவேளைக்கே 200 ரூவா சிலவு செய்வாக ,