Showing posts with label பாலியல் பலாத்காரம். Show all posts
Showing posts with label பாலியல் பலாத்காரம். Show all posts

Tuesday, March 12, 2013

டெல்லி கேங்க் ரேப் ராம்சிங்க் கொலையா? தற்கொலையா? மர்மங்கள்

மருத்துவ மாணவி பலாத்காரம் முக்கிய குற்றவாளி ராம் சிங் திகார் தற்கொலை

 

புதுடில்லி:டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளியான, ராம்சிங், திகார் சிறையில் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

டில்லியை சேர்ந்த மருத்துவ மாணவி, கடந்த டிசம்பரில், ஓடும் பஸ்சில், ஆறு பேர் கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். பின், சிங்கப்பூர் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் ஆறு பேர், கைது செய்யப்பட்டனர். 


இவர்களில், டில்லி, ஆர்.கே.புரத்தை சேர்ந்த ராம் சிங், 33, அவரது சகோதரர், முகேஷ் ஆகியோர் முக்கியமானவர்கள்.பாலியல் பலாத்காரத்துக்கு பயன்படுத்தப்பட்ட, பஸ்சின் டிரைவராக செயல்பட்டது, ராம் சிங். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக, ராம் சிங் சேர்க்கப்பட்டிருந்தான். இவர்கள் மீதான வழக்கு விசாரணை, டில்லி விரைவு கோர்ட்டில் நடந்தது.

சிறை எண்-3:


குற்றவாளிகளில் ஒருவன், மைனர் என்பதால், அவன் மட்டும், சிறுவர் சீர்திருத்த மையத்தில் அடைக்கப்பட்டு உள்ளான். ராம் சிங் உள்ளிட்ட, மற்ற ஐந்து பேரும், டில்லி திகார் சிறையில், தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.குற்றவாளிகள், தற்கொலை செய்வதற்கான வாய்ப்புள்ளதாக கருதப்பட்டதால், ஐந்து பேருமே, திகார் சிறையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அடைக்கப்பட்டிருந்த சிறை அறைக்கு வெளியில், தனியாக ஒரு காவலர், பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்.ராம் சிங், சிறை எண்-3ல் அடைக்கப்பட்டிருந்தான். அதே அறையில், மேலும் சில கைதிகளும் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று காலை, விசாரணைக்காக, ராம்சிங், கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படவிருந்தான்.

இந்நிலையில், நேற்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர், குற்றவாளிகளை எழுப்புவதற்காக சென்றார். அப்போது, சிறை அறைக்குள், ராம் சிங் தூக்கில் தொங்கியதை பார்த்து, அவர் அதிர்ச்சி அடைந்தார். உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, ராம் சிங்கை, தூக்கிலிருந்து இறக்கிய அதிகாரிகள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

உடையால் கயிறு:


தான் அணிந்திருந்த உடைகளை, ஒன்றன் பின் ஒன்றாக முடிந்து, கயிறு போல் திரித்து, அறையின் மேல் பகுதியில் உள்ள கிரில்லில் தூக்கிட்டு, அவன் தற்கொலை செய்து கொண்டதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டில்லியில் உள்ள தீனதயாள் மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக, ராம்சிங்கின் உடல் கொண்டு செல்லப்பட்டது.அதிகபட்ச பாதுகாப்பு வளையத்துக்குள், தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குற்றவாளி, சிறைக்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, ஆச்சர்யத்தையும், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
 
 
 
தேசிய பெண்கள் கமிஷன் தலைவர், மம்தா சர்மா கூறுகையில்,"" சிறைக்குள் இருக்கும் ஒரு கைதியை, சிறை அதிகாரிகளால் கண்காணிக்க முடியவில்லை என்றால், அந்த சிறை அதிகாரிகள், எதற்காக வேலை செய்கின்றனர் என, தெரியவில்லை,'' என்றார். திகார் சிறையின் முன்னாள் டைரக்டர் ஜெனரலும், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியுமான, கிரண் பேடியும், இதே சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.ராம் சிங்கின் தற்கொலை குறித்து, பல்வேறு தரப்பினரும், பல சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
 
 
ராம் சிங், கடந்த சில நாட்களாகவே, கடும் மன உளைச்சலில் இருந்தான். சரியாக உணவு சாப்பிடுவதும் இல்லை. சக கைதிகள், ராம் சிங்கை தாக்கும் அபாயம் இருந்தது. இதனால், அவன் பயத்தில் இருந்தான். ராம் சிங்கிற்கு, ஒரு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.ஒருகை, சரியாக செயல்படாத நிலையில், எட்டு அடி உயரத்தில் உள்ள கிரில்லில், தூக்கு போடுவது, சாத்தியமற்ற ஒன்று. அவனுடைய உடைகளையே, கயிறு போல் திரித்து, தூக்கு போடுவதற்காக பயன்படுத்தியதாக கூறுவதும், நம்பும்படியாக இல்லை.
 
 
 
அந்த அறையில், ராம்சிங் மட்டும், தனியாக அடைக்கப்படவில்லை. மேலும் சில கைதிகளும், உடன் இருந்தனர். அவர்களுக்கு தெரியாமல், ராம்சிங் தூக்கிட்டு கொண்டதாக கூறுவதையும் நம்ப முடியவில்லை. அந்த அறைக்கு வெளியில், பாதுகாவர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டு இருந்தார். அவருக்கும் இந்த விஷயம் தெரியவில்லை என கூறுவதும், ஆச்சர்யமாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்
 
 
.ராம் சிங் தற்கொலை சம்பவத்தை அடுத்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மற்ற நான்கு குற்றவாளிகளும், தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.இதற்கிடையே, டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டேயை நேற்று சந்தித்து பேசினார். இதன்பின், ஷீலா தீட்ஷித் கூறுகையில்,""இது தொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானால் தான், இந்த விஷயம் பற்றி, கருத்து தெரிவிக்க முடியும்,'' என்றார்.
 
 
பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த மாணவியின் சகோதரர் கூறியதாவது:ராம் சிங்கை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என்பதே, எங்களின் விருப்பம். அது நடக்காமல் போய் விட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய, மற்ற குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்க போகிறது என்பதற்காக காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.தந்தை ஆவேசம்:ராம்சிங் தந்தை கூறியதாவது:என் மகன், தற்கொலை செய்யவில்லை. அவனை, திட்டமிட்டு கொலை செய்து விட்டனர். இந்த உண்மையை மறைக்கின்றனர். பிரேத பரிசோதனையை, எங்களுக்கு முன், வெளிப்படையாக நடத்த வேண்டும்.
 
 
 இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். என் மகனை, ஏற்கனவே சிறைக்குள் தாக்கியுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.ராம்சிங், தற்கொலை செய்யும் நபர் அல்ல. இந்த விஷயத்தில், ஏதோ சதி நடந்துள்ளது. விசாரணைக்காக, முழு ஒத்துழைப்பு அளித்து வந்தான். விசாரணை, விரைவாக நடப்பதில், அவனுக்கு முழு திருப்தி இருந்தது. சிறை அதிகாரிகள் தான், அவனை கொலை செய்துள்ளனர்.இவ்வாறு, வி.கே.ஆனந்த் கூறினார்.திகார் சிறை வட்டாரங்கள் கூறியதாவது:திகார் சிறை, கடுமையான பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ளது. 
 
 
சிறையில், கண்காணிப்பு மற்றும் வெளிப்புற பாதுகாப்பு பணிகளில், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீசார், தமிழ்நாடு சிறப்பு போலீசார் ஆகியோர், ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சிறையின் அன்றாட நடவடிக்கைகளை, டில்லி போலீசார், கவனித்து வருகின்றனர். கடந்தாண்டில் மட்டும், திகார் சிறையில், 18 பேர் இறந்துள்ளனர். இவற்றில், 16 இறப்புகள், இயற்கையாக நிகழ்ந்தவை. மற்ற இரண்டும், தற்கொலை சம்பவங்கள். தற்போது, ராம் சிங்கையும் சேர்த்து, கடந்த, 15 மாதங்களில், இதுவரை, மூன்று பேர் தற்கொலை மூலம், உயிரிழந்துள்ளனர்.
 
 
இவ்வாறு சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. "" ராம்சிங் மரணம், தற்கொலை தான் என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,'' என, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே கூறினார். மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ராம்சிங் தற்கொலை சம்பவத்தை அடுத்து, திகார் சிறையில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு குறித்து, மறு ஆய்வு செய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். திகார் சிறையில், பாதுகாப்பு விஷயத்தில், பெரிய அளவில் குறைபாடு இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
 
ராம்சிங் மரணம், தற்கொலை தான் என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனாலும், இந்த விவகாரம் தொடர்பான, விசாரணை முடிந்தால் தான், உண்மை நிலவரம் தெரிய வரும். ராம்சிங் கொலை செய்யப்பட்டதாக, சிலர் கூறுகின்றனர். இது தொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை முடிந்தால் தான், நடந்தது என்ன என்று தெரிய வரும். 
 
 
திகார் சிறையில், ரகசிய கண்காணிப்பு கேமராக்கள், குறிப்பிட்ட சில இடங்களில் இல்லை. இதனால், ராம்சிங் அடைக்கப்பட்டிருந்த அறையில், என்ன நடந்தது என்பதை அறிய முடியவில்லை.திகார் சிறை முழுவதையும், எலெக்ட்ரானிக் சாதன கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவது குறித்து, நான் எந்த பதிலும் அளிக்க முடியாது. திகார் சிறை கட்டுப்பாடு, உள்துறை அமைச்சகம் வசம் இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கான, தண்டனையை அதிகரிக்கும், குற்றவியல் சட்ட திருத்த மசோதா குறித்து, மத்திய அமைச்சரவையில், இன்று விவாதிக்கப்படவுள்ளது. இவ்வாறு, சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.
 
 
 
மக்கள் கருத்து 
 
 
1. குற்றவாளி ராம் சிங் யின் கூட்டாளிகள் 4 பேருடைய உடலில் போதை மாத்திரை அல்லது தூக்க மாத்திரை அதிக அளவில் கலக்கப்பட்டு உள்ளதா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவ்வாறு கண்டு பிடிக்கபட்டால் அது கண்டிப்பாக காங்கிரஸ் கட்சியின் வேலை தான் .....ராம்சிங் யின் கை முறிந்து உள்ளதாள் இது நடை பெற சாத்தியமே இல்லை .....ஒவ்வொரு பிரச்சனை முடிந்தவுடன் உளவு துரையின் மூலம் மக்களின் நாடி துடிப்பை துளியமாக கனிகிறது இந்த அரசு 
 
 
 
 ..........பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரரின் தலையை துண்டித பின் மக்கள் மொத்தமாக இந்த கற்பழிப்பு சம்பவத்தை மறந்துவிடுவார்கள் என்று கணக்கிட்டு ஏமார்ந்தவுடன் சுதாகரித்து கொண்ட மதிய அரசு அடுத்தடுத்த தூக்கு தண்டனையை நிறைவேற்றி பின் அதனுடன் இந்த தூக்கு மரணத்தையும் மக்கள் நியாபகம் வைத்துகொண்டால் இந்த கற்பழிப்பு சம்பவத்திலிருந்து /பிரச்சனையிலிருந்து காங்கிரஸ் கட்சி சற்று கரையை போக்கலாம் என்று உளவு துறை ஆலோசனை வழங்கி இருக்கலாம் அதனால் இந்த நாடகம் நடந்து ஏறி இருக்காலாம் .............கடந்த 24 மணி நேரத்தில் மற்ற நால்வரின் உணவு ...உடலில் அதிக அளவில் தூக்க மாத்திரை /போதை மாத்திரை கலந்து உள்ளதா என்று கண்டுபிடிப்பது திருபத்தை ஏற்படுத்தலாம்


2. அரசாங்கத்திற்கு தன்னால் இவ்வளவு செலவு ஆகிறதே என்று எண்ணி உயிரை விட்டானோ என்னவோ??? எது எப்படியோ குறைந்த பட்சம் அவன் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கமோ என்கிற கோணத்தில் விசாரிப்பது நல்லது......அரசாங்கத்திற்கு பாதுகாப்பு செலவை மிட்சபடுத்திய இவன் செயல் விநோதமானது தான்.....இதில் ஒன்றை கவனிக்க வேண்டியது......மேற்குறிப்பிட்ட குற்றசாட்பட்ட பெயர்களை வைத்து பார்த்தால் அவர்கள் உயர் ஜாதியினர் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்க கூடிய விஷயம்..... இப்போதெல்லாம் தனி மனித ஒழுக்கம் இல்லாதது மற்றும் குற்றங்கள் செய்வது சமுதாயத்தில் அணைத்து பகுதியிலும் பரவிவிட்டது என்பது மாபெரும் வேதனைக்குரியது....சமயமும்,மதமும்,சமூகமும் மற்றும் பெற்றோரும் அவர்களின் கடமையை திறம்ப செய்யாததும் அவர்களுக்கு கொடுத்த அதீத சுதந்திரமும் தான் இந்த குற்றத்திற்கு காரணம் என்றால் அது மிகையாகாது....


3.இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பு நிறைந்த திகார் சிறையில் ........ ஒரு கைதி ...... அதுவும் விசாரணை கைதி ...... விடியற்காலை 5 மணிக்கு தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் ....... சிறைத்துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ..... வார்டன்கள் எங்கே போனார்கள் ....... மற்ற கைதிகள் கூட இதை கவனிக்கவில்லையா ...... கண்காணிப்பு கேமராக்கள் எப்படி "கண்டு கொள்ளாமல்" இதை விட்டன ...... யாரை திருப்திபடுத்த இந்த நடவடிக்கை? ..... பல சந்தேகங்கள் ........ விடை எங்கே ....


4. சிறையில் அவனைப் பரிசோதித்து வந்த மனநல மருத்துவர்கள் செயல்பாடு சரியில்லை என்கிறார் கிரண் பேடி .... தூக்கு தண்டனைக் கைதிக்குக் கூட இந்தப் பரிசோதனை நடப்பது உண்டுதான் .... ஆனா இவனுக்கெல்லாம் மனநிலை சரியா இருந்து நாட்டுக்கு என்ன ஆகணும் ????... 

5. ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. இந்த நாட்டில் ஜெயிலுக்குள்ளே போனாலும் வெளியே இருந்தாலும் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பான இடமே இல்லை இந்த நாட்டில். காவல் துறை நினைத்தால் எதுவும் செய்யலாம் போல் இருக்கிறது. முறைப்படி தண்டனை கொடுக்கவேண்டிய இடம் ஜெயில். முரட்டுத்தனமாக தண்டிக்க கூடாது. அவனை இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததே இந்த அரசு தான். ஊரெங்கும் மது கடைகள், சினிமா, சின்னத்திரை கிளுகிளுப்புகள், இன்டர்நெட் ஆபாசம், முக்கியமாக இலவசம், வேலை இன்மை, எதிலும் லஞ்சம், அரசியல் அராஜகம், இப்படிஎல்லாம் இருந்தால் மக்களின் போக்கு இப்படி தான் இருக்கும்....



நன்றி - தினமலர்

Sunday, July 22, 2012

கேரளா சிறுமியை ரேப் செய்து மாட்டிக்கொண்ட திமுக எம் எல் ஏ..

பெரம்பலூர்:கேரள மாநில சிறுமியை கற்பழித்து, கொலை செய்த வழக்கில், பெரம்பலூர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் உட்பட மூன்று பேரை, பெரம்பலூர் போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பெரம்பலூர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார், 46. இவர், தன் வீட்டு வேலைக்கு ஆள் தேவை என, தன் நண்பரான காரை அன்பரசனிடம் தெரிவித்தார். அன்பரசன், கேரள மாநிலத்தில் உள்ள புரோக்கர் பன்னீர்செல்வம் மூலம், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், லாட்ரக் எஸ்டேட் லட்சுமி கோவில் அருகே உள்ள பீர்மேடு பகுதியைச் சேர்ந்த சந்திரன், 49, என்பவரின் மூன்றாவது மகளான மேகலா, 15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை, தான் சொந்த செலவில் படிக்க வைப்பதாக ஒப்புக்கொண்டார்.



கதறல்:கடந்த, ஜூன் 23ம் தேதி, ராஜ்குமாரின் நெருங்கிய கூட்டாளியான ஜெய்சங்கர், கார் டிரைவர் மகேந்திரன் ஆகிய இருவரும், இன்னோவா கார் மூலம் மேகலா மற்றும் அவரது தாய் சுசிலாவை கேரளாவிலிருந்து அழைத்து வந்து, ராஜ்குமார் வீட்டில் விட்டனர். சுசிலா, மேகலாவை, ராஜ்குமார் வீட்டில் விட்டு விட்டு கேரளா சென்றார்.கடந்த, 25ம் தேதி, மேகலா, தன் தாய் சுசிலாவை போனில் தொடர்பு கொண்டு, "என்னால் இங்கு இருக்க முடியவில்லை. உடனே வந்து அழைத்து செல்' என்று கூறியுள்ளார். அதற்கு, 29ம் தேதி வந்து அழைத்து செல்வதாக சமாதானம் கூறினார். அன்றைய தினமே மேகலாவின் பெற்றோர், கேரளாவிலிருந்து பெரம்பலூருக்கு வந்து கொண்டிருக்கும் போது, ஜெய்சங்கர், மேகலாவின் பெற்றோரை போனில் தொடர்பு கொண்டு, மேகலா உடல் நிலை சரியில்லாமல்,


தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார். மருத்துவமனையில் மேகலாவை பார்த்தபோது, அவர் சுயநினைவில்லாமல் இருந்தார். 30ம் தேதி ராஜ்குமார், ஜெய்சங்கர், மேகலாவின் பெற்றோர் ஆகியோர், திருச்சி கே.எம்.சி., மருத்துவமனையில் மேகலாவை சேர்த்தனர். பண வசதியில்லாததால், ஜூலை 4ம் தேதி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, 6ம் தேதி, காலை 11.30 மணியளவில் மேகலா இறந்தார். இதுகுறித்து மேகலாவின் தந்தை சந்திரன் கொடுத்த புகார்படி, பெரம்பலூர் போலீசார், 7ம் தேதி, சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, மேகலாவின் உடலை சந்திரனிடம் ஒப்படைத்தனர்.

 சந்தேகம்:மேகலாவின் உடலை, கேரளாவுக்கு கொண்டு சென்று இறுதி அஞ்சலிக்கு ஏற்பாடு செய்த போது, மேகலாவின் உடலில் காயங்கள் இருந்ததால், மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகசந்திரன், பீர்மேடு போலீசில் புகார் செய்தார். அங்கும் சந்தேக மரணம் என, வழக்கு பதிவு செய்யப்பட்டு, மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில், மேகலா கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, பெரம்பலூர் போலீசார், சந்தேக மரணம் என, பதிவு செய்த வழக்கை, ஆள் கடத்தல், கற்பழிப்பு, கொலை ஆகிய பிரிவின் கீழ் வழக்கை மாறுதல் செய்து, ராஜ்குமார், ஜெய்சங்கர், அன்பரசன், மகேந்திரன், பாபு, பன்னீர்செல்வம் ஆகிய ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


 அன்பரசன் மற்றும் மகேந்திரனை கைது செய்தனர். இதையறிந்த ராஜ்குமார் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், பெரம்பலூர் போலீசில் சரணடைந்தார்.


ராஜ்குமார், அன்பரசன், மகேந்திரன் ஆகியோரை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி சுரேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஜெய்சங்கர், பாபு, பன்னீர்செல்வம் ஆகியோரை பிடிக்க, இன்ஸ்பெக்டர் கோபாலசந்திரன், எஸ்.ஐ., வெங்கடேஸ்வரன் உட்பட ஐந்து பேர் கொண்ட போலீஸ் தனிப்படை அமைத்து, தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.



நிரபராதி:ராஜ்குமார், சிறைக்குச் செல்லும் முன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழகம் முழுவதும், தி.மு.க., நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு வழக்கு போடுவது போல், என்னை, சிறுமியை கற்பழித்து கொலை செய்ததாக, பொய்யான புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். இந்த வழக்குக்கும், எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நான் நிரபராதி என்று நிரூபிப்பேன். விசாரணைக்கு அழைத்ததால் இரவு 9.00 மணிக்கு ஸ்டேஷனுக்கு வந்தேன். மேல் இடத்திலிருந்து வந்த தகவலால், இரவு முழுக்க ஸ்டேஷனிலேயே தங்க வைக்கப்பட்டு, மீண்டும் மேலிடத்திலிருந்து தகவல் வந்ததாக தெரிவித்து, என்னை சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் செல்கின்றனர்.இவ்வாறு ராஜ்குமார் கூறினார்.


திருச்சி ஏ.டி.எஸ்.பி., பெரோஸ்கான் கூறியதாவது:சிறுமி, ராஜ்குமாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மயக்கமடைந்து, பின்னர் அவர் மற்றும் அவர் கூட்டாளிகளான ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். இது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னரே, சிறுமியின் இறப்புக்கான காரணம் முழுமையாக தெரியவரும். மேலும், இச்சம்பவத்தில் யாரெல்லாம் காரணம் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரியவரும்.இவ்வாறு ஏ.டி.எஸ்.பி., கூறினார்.

 நன்றி - தினமலர்

'மூளைக்காய்ச்சலால் இறந்தாள்''...கேரள சிறுமி பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்!





கொல்லம்: கேரள சிறுமி பாலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது மகள் மூளைக்காய்ச்சலால் தான் இறந்தாள் என்றும் அவளை யாரும் கொலை செய்யவில்லை என்றும் அந்த சிறுமியின் தந்தை தெரிவி்த்துள்ளார்.


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் சத்யா(15). அவர் பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் திடீர் என்று மர்மமான முறையில் இறந்தார். உடல்நலக் குறைவால் சிறுமி இறந்ததாக ராஜ்குமார் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தனது மகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக சந்திரன் புகார் கூறினார்.



அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், திமுக மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர், டாஸ்மாக் ஊழியர் அன்பரசன், டிரைவர் மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதையடுத்து ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேருக்கும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனித்தனியாக பரிசோதனைகள் நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் ராஜ்குமார் உட்பட 4 பேரும் ஆண்மை உள்ளவர்கள்தான் என மருத்துவர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து 4 பேரும் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதற்கிடையே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பீர்மேடு சமூகநல அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்நிலையில் சத்யாவி்ன் தந்தை சந்திரன், தாய் சுசீலா ஆகியோரிடம் கேரள குழந்தைகள் நல கமிட்டியினர் விசாரணை நடத்தினர். அப்போது சந்திரன் கூறுகையில், எனது குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. குழந்தைகளை படிக்க வைக்க மிகவும் சிரமப்பட்டேன். இந்நிலையில் எனது மகள் சத்யாவை பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி படிக்க வைக்கலாம் என்று கூறி பீர்மேட்டைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம், விஜயகுமார் ஆகியோர் கூறினர்.


இதையடுத்து நானும், எனது மனைவியும் மகள் சத்யாவை அழைத்துக் கொண்டு பெரம்பலூரில் உள்ள ராஜ்குமார் வீட்டில் விடுவதற்காக சென்றோம். அங்கு வைத்து எனது மகளை அவரது மகளுடன் சேர்த்து படிக்க வைப்பதாக ராஜ்குமார் கூறினார். மேலும் ரூ.5,000 பணம் தந்தார்.


நாங்கள் ஊருக்கு திரும்பிய மறுநாளே சத்யா எங்களுக்கு போன் செய்து எனக்கு அங்கிருக்க பிடிக்கவில்லை, என்னை உடனடியாக அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினாள். அதற்கு மறுநாள் பெரம்பலூரில் உள்ள மருத்துவமனையில் சத்யாவை அனுமதித்திருப்பதாக போன் வந்தது.


இதையடுத்து நாங்கள் அங்கு சென்றபோது டாக்டர்கள் சத்யாவுக்கு மூளை காய்ச்சல் என்று கூறினர். அவளது நிலைமை மோசமானதால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு தான் சத்யா இறந்தாள். எனது மகளை யாரும் கொன்றிருப்பார்கள் என நான் நம்பவில்லை என்றார்.


இது குறித்து குழந்தைகள் நல கமிட்டியின் செரியன் கு. குரியன் கூறியதாவது, சந்திரனும், சுசீலாவும் முன்னுக்கு பின் முரணாகப் பேசுகிறார்கள். ராஜ்குமார் தனக்கு ரூ. 5,000 கொடுத்ததாக சந்திரன் கூறுகிறார். ஆனால் சுசீலா ரூ.3,000 கொடுத்தாகக் கூறுகிறார். இருவரது வாக்குமூலமும் முன்னுக்கு பின் முரணாக இருப்பதால் மேலும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.


thanx - thats tamil