Showing posts with label ஜிகர்தண்டா. Show all posts
Showing posts with label ஜிகர்தண்டா. Show all posts

Tuesday, March 17, 2015

நார்வே தமிழ்த் திரைப்பட விருதுகள் பட்டியல் - 2014

ஆறாவது ஆண்டாக நார்வே தமிழ் திரைபப்ட விழா சினிமா கலைஞர்களோடும், ஆர்வலர்களோடும் கொண்டாட உள்ளது. சமீபத்தில் 2014ம் ஆண்டுக்கான நார்வே தமிழ் திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. வரும் ஏப்ரல் 23- 26 வரை நான்கு நாட்கள் நார்வேயில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
நார்வே திரைப்பட விருதுகள் பட்டியல்:
சிறந்த படம் - குக்கூ
சிறந்த இயக்குநர் - வசந்தபாலன் (காவியத்தலைவன்)
சிறந்த நடிகர் - சித்தார்த் (காவியத்தலைவன்)
சிறந்த நடிகை - வேதிகா (காவியத்தலைவன்)
சிறந்த கதாபாத்திர நடிகர் - சிம்ஹா (ஜிகர்தண்டா)
சிறந்த குணச்சித்திர நடிகர் - நாசர் (காவியத்தலைவன்)
சிறந்த குணச்சித்திர நடிகை - குயிலி (காவியத்தலைவன்)
சிறந்த இசையமைப்பாளர் - சந்தோஷ் நாராயணன் (ஜிகர்தண்டா, குக்கூ )
சிறந்த தயாரிப்பு - ராமானுஜன் (கேம்பர் சினிமா)
சிறந்த பாடலாசிரியர் - யுகபாரதி(குக்கூ)
சிறந்த பாடகர் - ஹரிச்சரண் (காவியத்தலைவன்)
சிறந்த பாடகி - வைக்கம் விஜயலட்சுமி (என்னமோ ஏதோ)
சிறந்த ஒளிப்பதிவாளர் - வெற்றிவேல் (கயல்)
சிறந்த எடிட்டர் - விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா)
சிறந்த சமூக விழிப்புணர்வு திரைப்படம் - சிகரம் தொடு
வாழ் நாள் சாதனையாளர் விருது - கே.பாலசந்தர்
கலைச்சிகரம் விருது - சிவகுமார்
சிறப்பு ஜுரி விருது - வின்சென்ட் (கயல்)
பாலுமகேந்திரா விருது - ரா.பார்த்திபன் (கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்)
பாலசந்தர் விருது - விவேக்

Sunday, March 08, 2015

இறைவி - எஸ் ஜே சூர்யா வில்லன் , விஜய் சேதுபது ஹீரோ - ஜிகிர்தண்டா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேட்டி

‘பெஞ்ச் டாக்கீஸ்’ குறும்படத்தில் ஒரு காட்சி. - கார்த்திக் சுப்புராஜ்
‘பெஞ்ச் டாக்கீஸ்’ குறும்படத்தில் ஒரு காட்சி. - கார்த்திக் சுப்புராஜ்
‘‘நல்ல விஷயங்களைச் செய்யும்போது மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படி ஏற்றுக்கொள்பவர்கள் இருக்கும்போது புதிய விஷயங்களை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் மனதில் மலர்கிறது’’என்று நிதானமாக பேசத் தொடங்குகிறார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
‘ஜிகர்தண்டா’ படத்தை தொடர்ந்து ‘இறைவி’ படத்தை தொடங்கவுள்ள அவர், மற்றொரு புறம் தமிழ் சினிமாவில் முதல் முயற்சியாக தனது ‘ஸ்டோன் பென்ச் கிரியேஷன்’ நிறுவனத்தின் மூலம் 6 குறும்படங்களை திரையரங்கில் வெளியிடும் வேலைகளில் பரபரப்பாக இருக்கிறார். இந்நிலையில் அவரைச் சந்தித்தோம்.
‘ஸ்டோன் பென்ச்’ நிறுவனம் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்ன?
சினிமாவில் டெக்னாலஜி மூலம் என்ன செய்ய முடியும் என்கிற தேடலை நோக்கிய பயணம் இது. இது படம் எடுக்கும் கம்பெனி இல்லை. என் நண்பர்கள் கார்த்திகேயன், கல்யாண், எழில் ஆகியோர்களோடு சேர்ந்து இதைத் தொடங்கியிருக்கிறேன். இதன் மூலம் குறும்படங்களை தியேட்டருக்கு கொண்டு வந்து சினிமாவை டிக்கெட் கொடுத்து பார்ப்பதைப்போல குறும்படங்களையும் பார்க்கும் நிலையை ஏற்படுத்துவேன்.
குறும்படம் என்பது ஒரு கலை வடிவம். எந்த ஒரு குறும்பட இயக்குநருக்கும் தன் படம் தியேட்டரில் வர வேண்டும் என்று ஆசை இருக்கும். சினிமா பார்க்க வருபவர்கள் ஒரு குறும்படத்தை பார்த்துவிட்டு போகும் மனநிலையோடு வருவதில்லை. 2 மணிநேரமாவது அவர்களை அமர வைக்க வேண்டும். அந்த அடிப்படையில் முதல்கட்டமாக எங்களிடம் வந்த குறும்படங்களில் 6 படங்களை தேர்ந்தெடுத்து சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர் ஆகிய நகரங்களில் மார்ச் 6-ம் தேதி (நாளை) ரிலீஸ் செய்கிறோம். இந்த 6 குறும்படங்களில் விஜய் சேதுபதி நடிப்பில் நான் இயக்கிய ஒரு குறும்படமும் இடம்பெறுகிறது.
குறும்படங்களை இதேபோல் தொடர்ந்து வெளியிடுவீர்களா?
இப்போது வெளியிடவுள்ள குறும்படங் களுக்கு மக்களிடம் கிடைக்கும் வர வேற்பை வைத்து இந்தப் பணியை விரிவுபடுத்தும் திட்டம் இருக்கிறது. பெரிய இயக்குநர்கள் பலரும் குறும்படங் களை இயக்கவேண்டும் என்பது என் ஆசை. சில பெரிய இயக்குநர்களும் குறும்படங்கள் இயக்கித் தருவதாக கூறியிருக்கிறார்கள்.
ஏ.எல்.விஜய், நலன் குமாரசாமி, ‘மதுபான கடை’ இயக்குநர் கமலக்கண்ணன் ஆகியோர் அடுத்தடுத்து குறும்படங்களை இயக்கவிருக் கிறார்கள். சித்தார்த் ஒரு குறும்படத்தில் நடிக்கப்போகிறார். அதேபோல மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குநர்களும் குறும்படங்களை இயக்கித்தர வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.
முன்னணி இயக்குநர், நடிகர்கள் குறும்படத்துக்கு வந்தால் அவர்களுக்கான சம்பளம், கால்ஷீட் பிரச்சினை ஆகியவை வருமே. அதை எப்படி சமாளிப்பீர்கள்?
அவர்கள் இப்போது வாங்கும் அளவுக்கு சம்பளம் கொடுக்க முடியாது. கால்ஷீட் பிரச்சினை பெரிதாக இருக்காது. படங்களின் கால்ஷீட்டுக்கு நடுவில் கிடைக்கும் ஒன்றிரண்டு ஓய்வு நாட்களை இதற்கு ஒதுக்கினாலே போதும். மேலும் இதை விரும்பிச் செய்யும் கலைஞர்களை மட்டுமே இதற்காக அணுகவுள்ளோம்.
‘இறைவி’ படம் எந்த கட்டத்தில் உள்ளது?
கதையை எழுதி முடித்துவிட்டேன். காதல் பின்னணியாகக் கொண்ட கதை இது. எஸ்.ஜே.சூர்யா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோர் நடிக்கிறார்கள். ஏப்ரல் இறுதியில் படப்பிடிப்புக்கு கிளம்பிவிடுவோம்.
இந்தப் படத்துக்கு எஸ்.ஜே.சூர்யாவை எப்படி பிடித்தீர்கள்?
இப்படத்துக்கான கதையை எழுதும் போது அவர் முகம்தான் நின்றது. ‘இசை’ படத்தின் பணிகள் முடிந்ததும் அவரைச் சந்தித்து படத்தின் கதையைக் கூறினேன். உடனே ஒப்புக்கொண்டார். படத்தில் அவருடைய கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும்.
இங்கே தயாரிக்கப்படும் படங்கள் அதிகமாக திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்படுவதில்லையே?
திரைப்படவிழாக்களுக்கு என்று படங்களை திட்டமிட்டு பண்ண வேண்டும். நானும், ‘ஜிகர்தண்டா’ படத்தை இங்கே ரிலீஸ் செய்வதற்கு முன்பே பெர்லின் திரைப்பட விழாவுக்கு அனுப்ப திட்டமிட்டேன். ஆனால், சில காரணங்களால் அது சாத்தியமில்லாமல் போனது. குறிப்பாக, ரிலீஸ் ஆவதற்கு முன் படம் விழாக்களில் கலந்துகொண்டால் திருட்டு விசிடி வந்துவிடும் என்கிற பயம் இங்கே அதிகம் உள்ளது. அதனால்தான் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் அதற்கு ஒப்புக்கொள்வதில்லை. தரமான திரைப்பட விழாக்களில் எல்லாம் திருட்டு விசிடி போன்ற மறைமுகமான திருட்டு வேலைகள் நடக்க விடுவதில்லை. இன்றைக்கு ஹாலிவுட்டில் பெரிய வரவேற்பை பெறும் பல படங்கள் ரிலீஸுக்கு முன் திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளும் படங்கள்தான்.
திரைப்பட விழாக்களில் கவனிக்கப்படும் படங்கள் நம் நாட்டில் விற்பனைரீதியாக பெரிய தாக்கத்தை பெறுவதில்லையே?
நம்ம ஊரில் அவார்டு படங்கள் என்றால், தியேட்டர் கிடைப்பதில்லை. அதை மக்கள் ரசிப்பதில்லை என்ற ஒரு தவறான புரிதல் உள்ளது. இந்த மனநிலை முதலில் திரைப்பட விநியோகஸ்தர்களிடம் இருந்து மாற வேண்டும். வருகிற ஏப்ரலில் ரிலீஸ் ஆகவிருக்கும் ‘காக்கா முட்டை’ திரைப்படம் பல விருதுகளை குவித்த படம். இதை ஃபாக்ஸ் ஸ்டார் என்ற பெரிய நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. இப்படி நல்ல மாற்றம் வர வேண்டும். வரும்.
‘ஆஸ்கர்’ வென்ற படங்களை கவனித்தீர் களா?
‘பேர்டுமேன்’ பார்த்தேன். தொழில்நுட்ப ரீதியாக நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய படமாக அது எனக்கு பட்டது. அந்தப்படத்தின் கேமரா நகர்வைப்போல நாங்கள் ‘ஜிகர்தண்டா’ படத்தில் 3 நிமிடங்கள் முயற்சி செய்திருப்போம். ‘பேர்டு மேன்’ படத்தில் சாதனை அளவாக அப்படி செய்திருக்கிறார்கள்.


நன்றி  - த  இந்து

Thursday, January 01, 2015

டாப் 15 திரைக்கதை - 2014 தமிழ் சினிமா

தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கு நிறைவையும், எதிர்கால படைப்பாளிகளுக்கு நம்பிக்கையையும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற 2014-ன் சிறந்த படைப்புகள் இவை. படத்தின் தலைப்பு - ஆங்கில அகரவரிசை அடிப்படையில் இங்கே பட்டியலிட்டுள்ளேன். உங்களிடம் ஒரு பட்டியல் இருக்கலாம். அதை கீழே கருத்துப் பகுதியில் பதியலாம். 


 
பர்மா

 
கார் திருட்டு, கார் பறிமுதல் என்ற அதிகம் பரிச்சயம் இல்லாத கதைக் களத்தில் புகுந்து விளையாடிய புத்தம் புது படைப்பு இது. 98 நிமிடங்களில் கதை சொன்ன விதம், இயல்புத் தன்மை, விறுவிறுப்பு, திரை மொழி முதலானவற்றில் மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கப்பட்ட படைப்பு இது. சரியான நேரத்தில் சரியான உத்தியுடன் ப்ரொமோஷன்ஸ் செய்யப்பட்டிருந்தால், சாதாரண ரசிகர்களிடமும் இப்படம் கவனத்தைக் கவர்ந்திருக்கக் கூடும். இந்த ஆண்டின் கவனிக்கத்தக்க புது முயற்சிகளுள் ஒன்று - பர்மா. 



குக்கூ
எளிய மனிதர்களின் காதல் என்ற ஒரு வரிக் கதை முழு நீளப் படமாக்கி இருந்தது 'குக்கூ'. கண் பார்வை இல்லாதவர்களின் வாழ்க்கை, காதல், பாடுகள், தன்னம்பிக்கை என அவர்களின் உலகம்தான் இந்தப் படம். புதுமுக இயக்குநர் ராஜுமுருகன் எதார்த்தமான திரைக்கதை அமைப்பில் கண் தெரியாத மாற்றுத்திறனாளிகளின் காதலை காமெடி கலந்து கூறியிருந்தார். மாற்றுத் திறனாளிகள் படம் என்றாலே சோகமாக இருக்கும் என்ற எண்ணத்தை முறியடித்த படம் 'குக்கூ'. 



கோலி சோடா

 
இந்தாண்டு தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்திய முதல் திரைப்படம் 'கோலி சோடா'. மிகக் குறைந்த பட்ஜெட், சுவாரசியமான திரைக்கதை, இமான் அண்ணாச்சியின் காமெடி கலந்த எதார்த்தமான வசனங்கள் என பார்ப்பவர்களின் மனதை கொள்ளைக் கொண்டது. எந்த நட்சத்திரமும் இல்லாமல் வெறும் 5டி கேமராவால் 10 பேருடன் கோயம்பேடு மார்க்கெட்டில் எடுத்த படமாக்கப்பட்ட படம். எளிமையானவர்கள் வலிமையானவர்களாக மாறுவதும், தனக்கான அடையாளம் தேடும் கருத்தும் எல்லாரையும் கவர்ந்தது. ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் இயக்குநராக முதல் பந்திலேயே சிக்சர் அடித்தார். 



ஜீவா
கிரிக்கெட் பின்னணியில் எவ்வளவு அரசியல் இருக்கிறது, திறமையானவர்கள் எவ்வாறு சாதி அடிப்படையில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய படம் 'ஜீவா'. ஆர்யா மற்றும் விஷால் இணைந்து வெளியிட்டதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது. இப்படத்தில் காதல் காட்சிகளைக் குறைத்து, முழுமையாக கிரிக்கெட் வீரர்களின் தேர்வின் பின்னால் நடக்கும் அரசியலை முழுமையாக கூறியிருந்தால் இந்திய திரையுலகம் கவனித்தக்க படமாக இருந்திருக்கும். 



ஜிகர்தண்டா
ஒவ்வொரு இயக்குநருக்கும் இரண்டாவது படம் அக்கினிப் பரீட்சை என்பார்கள். அந்தப் பரீட்சையில் வெற்றிகரமாகத் தேறினார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு வெளியான 'ஜிகர்தண்டா' படத்திற்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது. படத்தின் முக்கியமான அம்சம் நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்ட சினிமா மோகத்தின் மீதான கிண்டல். ரவுடியில் தொடங்கி சாவு வீட்டில் ஒப்பாரியில் இருக்கும் பெண் வரை சினிமா, சினிமாக்காரர்கள் என்றதும் வாயைப் பிளப்பதை இயக்குநர் ‘அசால்டாக’ காட்டியிருக்கிறார்.வசூல் ரீதியில் மிகப்பெரிய அளவில் போகவில்லை என்றாலும் பார்ப்பவர்களால் யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைத்து அதில் ஜெயித்தும் காட்டினார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். 





கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
சினிமா கனவைத் துரத்தும் இளைஞர்கள் தங்கள் முதல் படத்தை எடுப்பதற்காகக் கதையைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் எப்படித் திரைக்கதையை உருவாக்குகிறார்கள்? சொந்த வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் சவால்களைத் தாண்டி அவர்கள் சினிமா கனவு நிறைவேறியதா, இல்லையா என்பதுதான் படத்தின் கதைக்களம். இப்படத்தில் கதையே கிடையாது என்று வித்தியாசமாக விளம்பரப்படுத்தப்பட்ட படம். மக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும், வசூல் ரீதியிலும் வரவேற்பு கிடைத்தது. 




காவியத்தலைவன்
மேடை நாடகக் கலைஞர்களை நிஜத்தில் பார்த்து ரசிக்க நமக்கு கொடுத்துவைக்கவில்லையே என்னும் ஏக்கம் ’காவியத் தலைவன்’ படத்தை பார்க்கும்போது அதிகரித்தது. அத்தகைய உணர்வை ஏற்படுத்தியதற்கு விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படம், படத்தை உருவாக்கிய விதத்தில் கவனம் ஈர்த்தது. ஆனால் வசூல் ரீதியில் படம் தோல்வியடைந்தது. திரைப்படம் என்பது இயக்குநரின் ஊடகம் என்பதை நிரூபணம் செய்யும் படமாக காவியத் தலைவன் நல்லதொரு அனுபவத்தைத் தந்தது. 




மெட்ராஸ்
தொடர் தோல்வி படங்களால் துவண்டு இருந்த கார்த்தியை நிமிரச் செய்த படம் 'மெட்ராஸ்'. வடசென்னையில் இருக்கும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் இருக்கும் ஒரு பெரிய சுவர். அதில் விளம்பரம் எழுத இரண்டு அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியும், அதனால் நடக்கும் கொலைகளும்தான் ‘மெட்ராஸ்’ படத்தின் மையம். கார்த்தி இப்படத்தில் ஒரு நாயகனாக இல்லாமல், கதாபாத்திரமாக பிரதிபலித்தது ப்ளஸ் ஆக அமைந்தது. 



முண்டாசுப்பட்டி
புகைப்படம் எடுத்துக்கொண்டால் ஆயுள் குறையும் என்பது இரண்டு தலைமுறைக்கு முன்பு நம்மிடம் நிலவிவந்த (மூட)நம்பிக்கைகளில் ஒன்று. அதுதான் இப்படத்திற்கான அஸ்திவாரம். இந்தாண்டு படங்களின் வரிசையில் முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படம் இது ஒன்று தான். வழக்கமான சினிமா கதைக் களத்திற்கு மாற்றான ஒன்றைத் தேர்வுசெய்து நகைச்சுவை ததும்ப அதைக் காட்சிப்படுத்தியிருந்த விதத்தில் அறிமுக இயக்குநர் ராம்குமாருக்கு பாராட்டு கிடைத்தது. 




நெடுஞ்சாலை
நெடுஞ்சாலையில் ஓடும் வாகனங்களில் தொடரும் திருட்டு, அருகில் ஒரு காவல் நிலையம், அதன் அருகே ஒரு டெல்லி தாபா உணவகம்.. இந்தப் பின்னணியைக் கொண்டு ஒரு திரைப் பயணத்தைக் கொடுத்திருந்தார் இயக்குநர் கிருஷ்ணா. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை வாங்கியவுடன் படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியது. வெளியானதும், நெடுஞ்சாலை மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. நெடுஞ்சாலைத் திருட்டைச் சாதுர்யமாக காட்சிப்படுத்திய இயக்குநர், காதல், மனமாற்றம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தியிருந்தால் படம் சிறப்பாக அமைந்திருக்கும். 




பண்ணையாரும் பத்மினியும்
உயிரற்ற ஒரு பொருள் மீது மனிதர்களுக்கு ஏற்படும் இனம் தெரியாத பாசத்தையும் அதனால் ஏற்படும் பரிதவிப்பையும் அன்யோன்யமான காதலோடு கலந்து சொன்னது 'பண்ணையாரும் பத்மினியும்’. குறும்படமாக முதலில் வெளிவந்து, அதற்கு கிடைத்த வரவேற்பால் வெள்ளித்திரைக்கு வந்த படம் இது. திரைப்படமாக மக்களிடையே வரவேற்பு பெறாவிட்டாலும், விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. திருவனந்தபுரம், பெங்களூரு திரைப்பட விழாக்களில் இப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 




பிசாசு
பேய்ப் பட ரசிகர்களுக்கு வித்தியாசமான பேயை அறிமுகப்படுத்தும் படம் ‘பிசாசு’.பேய் என்று கொடூரமாக இருக்கும் என்பதை எல்லாம் விடுத்து பேய்க்குள்ளும் ஒர் ஈர மனம் உண்டு என்று கூறினார் இயக்குநர் மிஷ்கின். பாடல்களையும் காமெடி ட்ராக்கையும் ஒதுக்கிவிட்டு, அசல் சினிமா அனுபவத்தைத் தர முனையும் மிஷ்கினின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. 



சதுரங்க வேட்டை
ஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங், எம் எல் எம் என்று பல விதமான வடிவங்களில் மோசடிகளின் தன்மைகளை அவற்றின் செயல்முறைகளோடு அம்பலப்படுத்திய படம். லிங்குசாமி வாங்கியதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டானது. விறுவிறுப்பான திரைக்கதை, விழிப்புணர்வூட்டும் சித்தரிப்பு ஆகியவை படத்தின் பலம். காட்சிகளில் நம்பகத்தன்மையையும் மெருகையும் கூட்டியிருந்தால் சிறந்த திரைப்பட அனுபவத்தைக் கொடுத்திருக்கும். 



தெகிடி
குற்றவியல் படிப்பு, துப்பறியும் களம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு வெளிவந்த விறுவிறுப்பான திரில்லர். கதையோடு ஒன்றிய காதலையும் இணைத்திருந்தார். தெகிடி என்றால், வஞ்சம், சூது, ஏமாற்றுதல் என்றெல்லாம் பொருளாம். ஏமாற்றுவதைப் பற்றிய படம் ஏமாற்றவில்லை. வசூல் ரீதியிலும் இப்படத்திற்கு வெற்றி கிடைத்தது. 




வெண்நிலா வீடு
வெற்றி மகாலிங்கம் இயக்கத்தில் வெளியான இப்படம் பெண்களின் இரவல் நகை மோகத்தால் வரும் பிரச்சினைகள், ரியல் எஸ்டேட் திருட்டுத்தனங்கள் உள்ளிட்ட விஷயங்கள் விலாவாரியாகவும் அதே நேரத்தில் சுவாரசியமாகவும் அலசப்பட்ட படம். குடும்பச் சூழலை மையப்படுத்தும் இப்படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. 


thanx -the  hindu


  • பிசாசு படம் ஒரு மாஸ்டர் பீஸ்... நல்ல இசை ஒரு பிளஸ்...
    about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • KARTHICK  
    விஜய் ஆண்டனி நடித்த சலீம் படம் அருமை !!!!!!!!! பொறுமையாக கடைசிவரை பாருங்கள் ...............
    about 7 hours ago ·   (2) ·   (1) ·  reply (0) · 
  • KARTHICK  
    சதுரங்க வேட்டை இந்த காலத்துக்கு தேவையான படம் ( பாடம் ) . அனைவரும் ஒரு முறை பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன் .
    about 7 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
  • Thenral  
    சதுரங்கை வேட்டை!!!!!!!!!!!!! ஒரு புது டைரக்டர் முதல் படத்துலையே நல்ல கதை மற்றும் நம் வாழ்வில் தினம் தினம் நடக்கும் சம்பவங்களை அப்படியே சொல்லிருக்காங்க..
    about 10 hours ago ·   (6) ·   (0) ·  reply (0) · 
  • saravanan  
    I expect megha and some other films like oru oorla 2 Raja.
    about 12 hours ago ·   (0) ·   (5) ·  reply (0) · 
  • Ar ramanathan  
    தலைமுறைகள் படத்தை எப்படி விட்டீர்கள்?பிறகு எப்படிநல்ல படம் எடுப்பார்கள்
    Points
    345
    about 12 hours ago ·   (6) ·   (0) ·  reply (0) · 
  • Rajesh Kumar  
    நல்ல பட வரிசை .....
    about 16 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • Indiya Tamilan  
    பூஜா நடித்த "விடியும் முன் " என்ற அற்புதமான படைப்பை மறந்து விட்டீர்களே.
    about 16 hours ago ·   (7) ·   (1) ·  reply (0) · 
  • Pranesh Venkat  
    1)மெட்ராஸ் 2)சதுரங்க வேட்டை 3)குக்கூ
    about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Prabu  
    விஜய் மில்டனின் ரெண்டாவது படம் கோலி சோடா.
    about 20 hours ago ·   (3) ·   (0) ·  reply (1) · 
    • selvakumar  
      கரெக்ட் முதல் படம் அழகி இருகிறாரi பயமாய் இருக்கிறது சேரணனின் தயாரிப்பில் வெளிவந்தது
      about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • ராஜவடிவன் ரா.  
    பூவரசம் பீப்பீ இல்லாதது வருத்தமளிக்கிறது.
    about 21 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • Reginald Samson  
    ஸ்க்ரீணன், நீங்கள் வரிசைபடுத்தியதும், வார்தைபடுத்தியதும் அற்புதம்.
    Points
    2670
    about 21 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Subramanian Selvaraj at JSW Cement 
    கத்தி?
    about 21 hours ago ·   (2) ·   (35) ·  reply (1) · 
    Anand  Down Voted
    • raj  
      போய் நல்ல வேலை இருந்த பாருங்கப்பா.
      about 16 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • Anand  
    நல்லவேளை "கத்தி" பைத்தியம் உங்களையும் புடிச்சு இருக்குமோன்னு பயந்துட்டேன். தரமான பட வரிசை .

Tuesday, November 18, 2014

என்னைத் தூங்கவிடாத இருவர் -பாரதிராஜா


படைப்பாளிகளையும், குறும்பட இயக்குநர்களையும், திரைப்பட ஆர்வலர்களையும், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற திறமைசாலிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் என்ற அறிவிப்புடன், 'ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
இந்நிறுவனத்தின் தொடக்க விழா நவம்பர் 10-ஆம் தேதி காலை சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பாரதிராஜா தொடங்கி வைத்தார். நடிகர் சித்தார்த், விஜய் சேதுபதி, சிம்ஹா, இயக்குநர் பாலாஜி மோகன், தயாரிப்பாளர் சி.வி.குமார் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
விழாவினை தொடக்கி வைத்து இயக்குநர் பாரதிராஜா பேசியது:
"'ஜிகர்தண்டா' படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லரை எல்லாம் பார்த்தபோது, என்ன இது இவ்வளவு வன்முறை படமா இருக்கிறதே என்று நினைத்தேன். தமிழ் சினிமாவில் வன்முறை காட்சிகள் அதிகரித்துவிட்டதே என்று கவலைபட்டேன். சில நாட்களுக்கு பிறகு 'ஜிகர்தண்டா' பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மிரட்டி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.
'ஜிகர்தண்டா' பார்த்துவிட்டு எனக்கு இரண்டு நாட்களுக்கு தூக்கம் வரவில்லை. இதற்கு முன்பு இதேபோன்று மணி ரத்னம் இயக்கிய 'நாயகன்' பார்த்துவிட்டு மூன்று நாட்களுக்கு தூக்கம் வரவில்லை. இன்றைய இளைய தலைமுறையினர் புதிய சிந்தனைகளோடு வருகிறார்கள். சினிமா தற்போது மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது.
சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் வடுக்களைத் தாங்கிக்கொள்ள வேண்டும். நான் எந்த ஒரு நடிகையும் நடிச்சு காட்டுங்க என்று கூறி தேர்வுசெய்ய மாட்டேன். ஒருத்தரை பார்ப்பேன், பிடித்திருந்தால் வாப்பா என்று அழைத்து வந்து நடிக்க வைப்பேன். நான் காட்டுல பூத்த பூ மாதிரி. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் பிருந்தாவனம் கார்டனில் பூத்த பூ போல இருக்கிறார்கள். நன்றாக செதுக்கிறார்கள்.
சினிமாவிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் எனக்கு தெரியாத ஒன்று சினிமா வியாபாரம்தான். முதல் இரண்டு பட ஹிட் கொடுத்துவிட்டு, மூன்றாவது படம் ஒப்பந்தமானபோது சம்பளத்தைத் தயங்கித் தயங்கி 15 ஆயிரம் என்று கேட்டேன். ஆனால், என்னுடைய உதவியாளர் பாக்யராஜ்தான் சண்டைப் போடு 30 ஆயிரம் வாங்கி கொடுத்தார். எனக்கு சினிமா மட்டுமே எடுக்க தெரியும். வியாபாரம் தெரியாது. ஆனால், இன்றைய இளைய தலைமுறையினர் அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். இன்று கார்த்திக் சுப்புராஜ் தொடங்கியிருக்கும் இந்நிறுவனம் சிறப்பாக வர வேண்டும்" என்று வாழ்த்தினார்.
ரஜினி இடத்தை உடனே அடைய நினைப்பது தப்பு: எஸ்.ஜே.சூர்யா
இந்த விழாவில் கலந்து கொண்டு எஸ்.ஜே சூர்யா பேசியதாவது, "நாம தியேட்டர் சைடு தான் ரொம்ப வீக்கா இருக்கோம். அந்த உண்மையை ஒப்புக்கிட்டுத்தான் ஆகணும். இங்க பெரிய ஹீரோக்களோட படங்கள் தவிர மற்ற ஹீரோக்களோட படங்களுக்கு அவ்வளவா தியேட்டர்கள் கிடைக்க மாட்டேங்குது. அது உண்மைதான். ஆனா அதை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்.
இப்போ ரஜினி படம் ரிலீசாகுதுன்னா அதே அளவு தியேட்டர்கள் என்னோட படத்துக்கும் கெடைக்கணும்னு ஆசைப்படுறது தப்பு. ஒரு சாதாரணம் பஸ் கண்டக்டரா இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி இன்னைக்கு இந்த இடத்துக்கு வந்திருக்கார்னா அதுக்கு அவரோட உழைப்பு ஒரு காரணம்.
பல வருடங்கள் உழைப்பு அதுக்கு பின்னாடி இருக்கு. அப்படிப்பட்டவர் இடத்துக்கு சினிமாவுக்குள்ள வந்த உடனே வர ஆசைப்படுறது தப்பு. அவரோட படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கிற மாதிரியே என்னோட படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கணும்னு ஆசைப்படுறதும் தப்பு" என்று கூறினார். 



நன்றி - த இந்து

Tuesday, August 05, 2014

காவியத்தலைவன் ஜிகர்தண்டா வைத்தாண்டிடுமா? - சித்தார்த் பேட்டி

தேனீயைப்போல படு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார், சித்தார்த். ‘ஜிகர்தண்டா’ படம் ரிலீஸாகியுள்ள நிலையில் ‘காவியத்தலைவன்’, கன்னட ரீமேக் படமான ‘லூசியா’ என்று அடுத்தடுத்து தமிழில் முழு கவனம் செலுத்தி வருகிறார். 


‘‘தமிழில் நான் ஆசைப்பட்ட படங்கள் முதன்முறையாக எனக்கு கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. என் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டு இது’’ என்றவாறு பேசத் தொடங்கினார். 


‘பீட்சா’ படத்தின் மூலம் கார்த்திக் சுப்புராஜ் மீது விழுந்த தனிக் கவனம்தான் அவருடன் ‘ஜிகர்தண்டா’வில் உங்களைச் சேர்த்து வைத்ததா? 

 
‘பீட்சா’ என்னை ரொம்பவே பாதித்த படம். அந்தப் படத்தைப் பாராட்டி நான் சமூக வலை தளத்தில் எழுதியிருந்தேன். பின்னர் ஒருமுறை அவருடன் இதுபற்றி பேசிக்கொண்டிருந்த போதே, ‘இப்படி ஒரு இயக்குநர் நமக்கு கதை சொன்னால் நல்லாயிருக்குமே’ என்று நான் யோசிக்கத் தொடங்கிவிட்டேன். அந்த நேரத்தில் அவரே, ‘ஒரு கதை இருக்கிறது கேக்குறீங்களா?’ என்றார். 



‘ஜிகர்தண்டா’ கதையை சொல்வதற்கு முன்பே அவருடன் படம் பண்ண வேண்டும் என்று ஃபிக்ஸ் ஆகிட்டேன். அப்போதைக்கு கதை கொஞ்சம் பிடித்திருந்தால் போதும் என்ற மனநிலையில்தான் இருந்தேன். ஆனால், கதை ரொம்பவே பிடித்துப்போனது. குறிப்பாக என் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. உடனே ஒப்புக்கொண்டேன். 


நீங்கள் ஒருபுறம் மணிரத்னம், ஷங்கர், அமீர்கான் போன்றவர்களோடு பணிபுரிந்து வருகிறீர்கள். மறுபுறம் புது இயக்குநர் களோடும் குறும்பட இயக்குநர்களோடும் பயணிக்கிறீர்கள். இது எப்படி சாத்திய மாகிறது? 


 
புதுமுக இயக்குநர்களுடன் அதிகமாக வேலை பார்க்கும் நடிகர்களில் நானும் ஒருவன். நான் புது இயக்குநர்களோடு கிட்டத்தட்ட 15 படங்கள் செய்திருக்கிறேன். மணி சார், அமீர்கான் எல்லாம் ஜாம்பவான்கள். எல்லோரையுமே கதைதான் பேச வைக்கிறது. இப்போது கார்த்திக்கின் பலமும் கதைதான். 10 நிமிட குறும்படங்களிலேயே அசத்தும் குறும்பட இயக்குநர்கள் 2 மணி நேரம் கிடைக்கும்போது இன்னும் வித்தியாசமாக அசத்திவிடுகிறார்கள். ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜிகர்தண்டா’ படங்களில் எல்லாம் நான் ஒரு புதிய அனுபவத்தை கற்றேன். இப்போது ‘காவியத்தலைவன்’ படத்தில் வசந்தபாலன், ஏ.ஆர்.ரஹ்மான், நீரவ்ஷா என்று பெரிய அணியே இருக்கிறது. கதை என்கிற ஒரு விஷயம் எல்லாவற்றையும் கடந்து ஒரு பெரிய எதிர்பார்ப்பை முன் நிறுத்தும். 



தெலுங்கில் நீங்கள் அதிக கவனம் செலுத்திய தால்தான் தமிழில் இடைவெளி ஏற்பட்டதா? 

 
எந்த ஒரு விஷயத்துக்கும் இரண்டு பக்கம் உண்டு. கடந்த 7, 8 ஆண்டுகளாக நான் தெலுங்கில் ஓடிக்கொண்டே இருந்தேன். அங்கே நிறைய வெள்ளி விழா படங்களை கொடுத்துவிட்டேன். அங்கே பிஸியாக இருந்தபோது தமிழில் வாய்ப்புகள் வந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகள் என் கவனம் தமிழ் படங்களில்தான் இருக்கும். 


நீங்கள் படங்களைத் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளீர்களே? இப்போதே அது தேவையா? 

 
நான் படம் தயாரிப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம் உதவி இயக்குநராக இருந்த காலம் முதலே சினிமாவின் முக்கிய தொழில்நுட்பங்கள் எனக்கு தெரியும் என்பது. அடுத்ததாக ஒரு கதை நல்ல கதை என்று மனதில் பட்டால்தான் நிச்சயமாக அதை தயாரிப்பேன். நான் பணம் பண்ணுவதற்காக தயாரிப்பாளராக மாறவில்லை. நல்ல படங்களைக் கொடுக்கவே தயாரிப்பாளராக மாறுகிறேன். 


எனக்கு தெரிந்த நிறைய தொழில்நுட்பக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களின் திறமையை காத்திருப்பில் போட்டுவிடக்கூடாது என்று நினைக்கிறேன். வரும் ஜனவரி தொடங்கி மூன்று தமிழ் படங்கள் தயாரிக்க உள்ளேன். அதில் ஒரு படத்தில் நான் நடிக்கவும் செய்கிறேன். 


உங்கள் கனவு? 

 
ஒரு கதையை இயக்குநரோ, கதாசிரியரோ எழுதும்போது இந்த கதாபாத்திரத்தை சித்தார்த் செய்வான் என்று அவர்கள் மனதில் ஓட வேண்டும். அதுதான் என் கனவு. அது எந்த மாதிரியான கேரக்டராக இருந்தாலும் நான் கண்முன் வர வேண்டும். 


மணிரத்னத்திடம் நீங்கள் உதவி இயக்குந ராக இருந்துள்ளீர்கள். நீங்கள் எப்போது ஒரு படத்தை இயக்குவீர்கள்? 

 
கண்டிப்பாக. அதுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. இப்போது நடிப்பு, தயாரிப்பு, பாடுவது, கதை எழுதுவது என்று பல வேலைகளைச் செய்கிறேன். ஆனால் படம் இயக்கும்போது வேறு எதையும் செய்யக்கூடாது. குறைந்தது 2 ஆண்டுகள் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு படத்தை இயக்குவேன். 

திருமணம்? 
 
தெரியவில்லை…. இப்போதைக்கு இல்லை…. இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகட்டுமே. 


thanx - the hindu