Showing posts with label கிரேசியை கேளுங்கள். Show all posts
Showing posts with label கிரேசியை கேளுங்கள். Show all posts

Sunday, May 03, 2015

தந்தைசொல் கேட்ட தனயன் - பீஷ்மர், ராமர் யார் நெ 1? - கிரேசி மோகன் பதில்கள்

ஓவியம்: ‘ஹிண்டு’ கேசவ்
ஓவியம்: ‘ஹிண்டு’ கேசவ்
நிர்மலா ராகவன், ஹ்யூஸ்டன்.
உங்கள் ‘சாக்லேட் கிருஷ்ணா’ நாடகம் பார்த்தேன். எந்த ஊரில் நடந்த ‘சாக்லேட் கிருஷ்ணா’ உங்களுக்கு ரொம்பவும் பிடித்தது?
எனக்கு மிகவும் பிடித்தது ‘ஹிண்டு’ கேசவ் என்னை சாக்லேட் கிருஷ்ணா ஓவியமாக வரைந்ததுதான். சென்ற ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி இரவு கேசவ் எனக்கு போன் செய்து, ‘1952-ம் வருஷம் அக்டோபர் 16-ல் வந்த தீபாவளிதான் என்னால் மறக்கவே முடியாத தீபாவளி. ஏனெனில் அன்றுதான் நான் பிறந்தேன் என்று கூறியிருக்கிறீர்கள். அதே போல இந்த வருஷ பிறந்த நாளையும் நீங்கள் மறக்க மாட்டீர்கள்’ என்று சஸ்பென்ஸ் வைத்த கையோடு, போனையும் வைத்துவிட்டார்.
மறுநாள் அடியேனின் ‘சாக்லேட் கிருஷ்ணா’ ஓவியத்தை எனக்குப் பிறந்த நாள் பரிசாக அனுப்பியிருந்தார் அந்த மேதை!
கோமதி நமச்சிவாயம், நெல்லை.
27 குழந்தைகளைப் பெற்ற குசேலர், தீடீரென்று தனது வீட்டுக்கு சாப்பிட வந்த 27 சம்பந்திகளையும் எப்படி சமாளித்திருப்பார்?
சம்பந்திகளை சமபந்தி போஜனத்தில் அமர்த்தி சமாளித்திருக்கலாம். ‘28-வது பிள்ளையைப் பெற்றெடுக்க என் மனைவி பொறந்த வீட்டுக்குப் போயிருக்காள்’ என்று சொல்லி சமாளித்திருக்கலாம்!
கே.அன்பரசு, நாகர்கோயில்.
‘கிச்சன் கிங்’ புரமோஷன் கிடைத்தால் எப்படி சமாளிப்பீர்கள்?
அதை ஏன் கேட்கறீங்க? சமீபத்தில் தனது மருமகளைப் பார்க்க எனது ‘கிச்சன் குயின்’ பெங்களூருக்குச் சென்றபோது, எனக்கு ‘கிச்சன் கிங்’ புரமோஷன் கிடைத்தது. பாவம் என் புரமோஷனால் ‘மோசம் அண்ட் மோஷன்’ போனது என்னை நம்பி சாப்பிட்ட என் அப்பாவும், என் பசங்களும்தான்!
என் வசதிக்காக உளுத்தம் பருப்பை உ.ப என்றும் பயத்தம் பருப்பை ப.ப என்றும் டப்பாவின் மேல் எழுதி ஒட்டிவிட்டுப் போயிருந்தாள் என் மனைவி. உப்பு டப்பாவின் மேல் ‘ப்’ அழிந்து போனது தெரியாமல், நான் உளுத்தம் பருப்பு என்று நினைத்து உப்பை அள்ளிப் போட்டு சாம்பார் வைத்தேன். எக்கச்சக்க உப்பால் சாம்பாரில் சமுத்திர அலை அடித்த போது எனக்கு லேஸாக சந்தேகம் வந்து, மேலும் கொஞ்சம் உப்பை அள்ளிப் போட்டேன். அதைச் சாப்பிட்டவர்கள் உப்பிட்ட என்னைக் கரித்துக் கொட்டினார்கள். அன்று முதல் என் பிள்ளைகள் என்னை ‘அப்பா’ என்பதற்கு பதில் ‘உப்பா’ என அழைக்கிறார்கள்.
கு.சங்கீதா, அரியலூர்.
பாமாரனின் பார்வை, பத்திரிகையாளன் பார்வை. ஒப்பிடுங்களேன்?
விபத்தில் கிழவி மரணம் அடைந்தால் பாமரன் ‘கெய்வி ஆக்ஸிடெண்டுல பூட்சுப்பா’என்பான். பத்திரிகையாளன் பார்வையில் ‘அழகி பலி’!
காந்தி செல்விம் கோவிந்தபுரம்.
அது என்ன கபட நாடகம்?
மேக்அப் போட்டுக்கொண்டு நடிப்பது நாடகம். எதையாவது மேக்-அப் பண்ண நடிப்பது கபடநாடகம்!
ஆனந்தி ராமசாமி, சென்னை-5.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெரு மாள் மீசையின் காரணம்?
தன்னுடைய நெருங்கிய நண்பன் ‘கண்ணன் என் தோழன்’ பாடிய பாரதிக்கு கம்பெனி கொடுக்க!
மணவாளன், திருச்சானூர்,
உண்மை உறங்கும் நேரத்தில் ‘பொய்’ என்ன செய்யும்?
வேறென்ன… பேந்த பேந்த விழிக்கும்!
ரா.சங்கர நாராயணன், தளவாய்புரம்.
‘தந்தை சொல் கேட்டு மணி முடி துறந்த பீஷ்மர், ராமர்… இந்த இருவரில் யார் சிறந்தவர்’ என்ற பட்டிமன்றத்துக்கு தாங்கள் நடுவராக இருந்தால்?
இவர்கள் இருவரையும்விட ‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை எடுத்துக் காட்டியதில் சிறந்தவர், ரகு வம்சத்தில் வந்த மன்னன் யயாதியின் மகன் புருதான்.
தந்தை யயாதியின் வேண்டு கோளுக்கு இணங்கி தனது இளமையை அவருக்குத் தாரை வார்த்து , அதற்கு பதிலாக அவரது வயோதிகத்தைப் பெற்று, எல்லோரும் ஆச்சர்யப்படும் வகையில் தன் ‘முடி’யைத் துறந்தவன் புரு. ஆச்சர்ய மாகப் பார்க்கும்போதெல்லாம் புரு வத்தை உயர்த்துவது இந்த ‘புரு’ வால்தான்!
திருமலை, பஹ்ரைன்.
சார் அது என்ன… ‘ஃப்ரெண்ட், பிலாசஃபர், கெய்டு’?
‘வேதாந்தி, வழிகாட்டி, தோழன்’ என்பதை ஆங்கிலத்தில் கேட்கிறீர்கள். ‘ரைட்ல திரும்பி நேரா போய் லெஃப்ட்ல கட் பண்ணா…’ என்பவன் வழிகாட்டி.
‘ரைட்டுல போனா யூ வில் பி லெஃப்ட் அலோன். லெஃப்ட்ல போனா யூ ஆர் ராங்…’ என்று குழப்புபவன் வேதாந்தி. போகும் வழி ராங்கா இருந்தாலும் அதை ‘செட் ரைட்’ செய்பவனே தோழன்!
கே.கலையரசன், கிடாரங்கொண்டான்.
வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டை விட்டுப் போகாமல் இருந்திருந்தால்?
ஆங்கில ‘ஹிண்டு’ பேப்பரில் ‘Ask Crazy’ (கிரேசியைக் கேளுங்கள்) என்ற பகுதியில் வாசகர் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பேன்!
- நிறைந்தது

நன்றி  - த  இந்து

Wednesday, April 29, 2015

பெண்களின் இடையைப் பார்த்தால் மனம் மயங்குதே ஏன் சாமி?- கிரேசியைக் கேளுங்கள் 30

  • ‘கூகுள் கடோத்கஜன்’ ஓவியம்: ‘ஹிண்டு’ கேசவ்
    ‘கூகுள் கடோத்கஜன்’ ஓவியம்: ‘ஹிண்டு’ கேசவ்
எம்.ரகுநாதன், சென்னை.
உங்களுடைய ‘சாக்லேட் கிருஷ்ணா’ நாடகத்தைத் தொடர்ந்து அடுத்த நாடகம் என்ன ‘பன்பட்டர் கிருஷ்ணாவா’ இல்லை ‘பிரட் ஜாம் கிருஷ்ணாவா’?
‘விஸ்வரூபம்’ படத்துக்குப் பிறகு கமல் ‘விஸ்வரூபம்’ பார்ட்-2 எடுப்பதைப் போல... ‘யதா கமல் ததா கிரேசி’. கமல் எவ்வழி கிரேசி அவ்வழியில் அடி யேன் ‘சாக்லேட் கிருஷ்ணா’ பார்ட்-2 ‘கூகுள் கடோத்கஜன்’ நாடகத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். வரும் ஜூன் மாதத் தில் அரங்கேறும். இதில் கிருஷ்ணன், கடோத்கஜன் என்று எனக்கு ரெட்டை வேடம்.
‘தம்மாத்துண்டு இருக்கிற நீயா கடோத்கஜன்?’ என்று நீங்கள் கிசு கிசுப்பது என் காதில் விழுகிறது. இந்தக் கேள்வியை உங்கள் சார்பில் ஹீரோ மாது பாலாஜி என்னிடம் கேட்க, அடி யேன் கடோத்கஜன் சொல்லும் பதில்:
மாது: பீமன் பையன் கடோத்கஜன் வாட்டசாட்டமா இருப்பான். நீ தம்மாதுண்டு இருக்கியே?
கடோத்கஜன்: மெய்யாலுமே நான் பீமன் பையன் கடோத்கஜன்தாம்பா! ஆனா, நீ நினைக்கிற அந்த பீமன் இல்ல. ‘சோட்டா பீம்’ பையன். அதான் தேசலா இருக்கேன். ஏம்பா மாது… நீ ‘POGO’ டிவி பாக்கிறதே இல்லியா?!
சினிமாவுக்கு விஷுவல் டிரெய்லர் போல, என்னோட அடுத்த நாடகத்துக்கு இது ‘வசன டிரெய்லர்’. முதன்முறையாக சினிமாவைப் போல் இந்த நாடகத்தில் ‘காஸ்டியூம் டிசைன்: ‘ஹிண்டு’ கேசவ்!
கி.மனோகரன், பொள்ளாச்சி.
வெய்யிலில் இருந்து தப்பிக்க அட்ட காசமான ஐந்து ஆலோசனைகளை, உங்கள் பாணியில் சொல்லுங்களேன்?
வெய்யில், மழை, காற்று, குளிர் என்று உடம்பை சொல்ல வைப்பது ஐம்புலன் கள்தான். இந்த ஐந்தின் ஆலோசனை களைக் கேட்காமல் இருந்தாலே போதும். என் இளம் வயதில் எங்கள் வீட்டில் மின்விசிறியே கிடையாது. இன்று ஏசி இல்லாவிட்டால் என் பேரன் எழுந்து கிரேஸியாகக் கத்துகிறான். வசதிதான் மனுசனுக்கு அசதி சாமி!
காந்திநாதன், மன்னார்குடி.
உங்களைப் பிடிக்காதவர்களை உங் களுக்குப் பிடிக்காதுதானே?
வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக்கொண்ட கதையாக, என்னை இதுவரைப் பிடிக்காத Mr.ஜலதோஷத்தை நான் ஏன் வேலை மெனக்கெட்டுப் போய் பிடிக்க வேண்டும்?!
திருவாரூர் தீன், பூதமங்கலம்.
நீங்கள் மத்தியானம் பாடும் ராகம் என் னவோ? (மத்தியமாவதி என்று சொல்லித் தப்பிக்கக் கூடாது)
வாரிச் சுருட்டிப் படுத்துக்கொண்டு ‘செஞ்சுருட்டி’ ராகத்தில் குறட்டைவிடு வேன். இரவில்தான் விடிய விடிய ‘பூபாளம்’பாடி ‘காபி’ராகம் வரும் வரை எழுதுவேன்!
ஜே.கார்த்திக், கடலூர்.
பெண்களின் இடையைப் பார்த்தால் மனம் மயங்குதே ஏன் சாமி?
அதுதான் ஹிப்நாட்டியிஸம் (Hip Naughtyயிசம்)
கோ.வசந்தி, கும்பகோணம்.
தாயை துதிக்கும் அளவுக்கு, தந்தையை பலர் மதிப்பதில்லையே, ஏன்?
யார் சொன்னார்கள். Mother India-வுக்கு விடுதலை வாங்கித் தந்தது Father of the Nationதானே?!
கோமதி நமச்சிவாயம், திருநெல்வேலி.
பிரம்மா பரீட்சை எழுதினால் காப்பி அடிக்காமல் இருக்க ஹாலில் எப்படி உட்கார வைப்பார்கள்? அவருக்குத்தான் நான்கு பக்கமும் கண்கள் இருக்குமே?
படைக்கும் பிரம்மா ஏன் காப்பி அடிக்க வேண்டும்? நாம்தான் அவர் படைப்பைப் பார்த்து காப்பி அடிக்கிறோம். பறவை யைக் கண்டோம் விமானம் படைத்தோம். பாயும் மீன்களில் படகினைக் கண்டோம். எதிரொலி கேட்டோம் வானொலி படைத் தோம். மேலும் பல கோடி முகங்களைப் படைத்தும், ஒவ்வொன்றும் ஜாடையில் வேறுவிதமாக, வித்தியாசமாக இருக் கிறதே! தன் படைப்பையே காப்பி அடிக் காத பிரம்மன் மற்றவர்களைப் பார்த்து ஏன் காப்பி அடிக்க வேண்டும்? அவருக் கென்ன தலையெழுத்தா?!
சு.சங்கீதா, அரியலூர்.
பிறக்கும் ஒவ்வொருவர் நெற்றியிலும் Expiry Date குறித்திருந்தால்?
சந்தேகமே வேண்டாம். கெடு நாளை குறித்துத்தான் வைத்திருக்கிறான் எமன். அதனால்தான் அவனை டபாய்க்க… பாழ் நெற்றியாய் இல்லாமல், பட்டை யாக திருநீறோ, நாமமோ இட்டு Expiry Dateஐ மறைக்கச் சொன்னார்கள் நம் முன்னோர்கள். இதுதான் நம் முன்னோர் களின் ‘ஆயுள் காப்பிட்டுத் திட்டம்’. ஆயுளைக் காப்பாத்த ஏதேனும் இடு நெற்றியில்!
கோ.சரவணன், ஓசூர்.
ஆடித் தள்ளுபடி ‘டாஸ்மாக்கில்’வருமா?
வந்தால்… அது ‘தள்ளாடிக் கள்ளுபடி!’
சுமதி, கீழ்திருப்பதி.
ஆசாரமாக இருந்தால் வியாதிகளே வராதாமே?
எனக்கு தூரத்து உறவினர் ஒருவர் இருக்கிறார். நெருங்கிய உறவுதான். ஆசாரம் காரணமாக எப்போதும் சற்று தூரத்தில் தள்ளியே நிற்பார். அதனாலயே தூரத்து உறவினர் ஆகிவிட்டார். டம்ளரை எச்சில் பண்ணாமல் குடிக்க, காபியை மாடியில் இருந்து ஊற்றச் சொல்லி கீழே நின்று அண்ணாந்து குடிப்பார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
மனைவிக்கு ஃப்ளையிங் கிஸ்தான் கொடுப்பார். ‘மெட்ராஸ் ஐ’, ‘சிக்கின் குனியா’ போன்ற இம்சைகள் ஊருக்குள் நுழைந்ததும்… லாட்ஜில் ரூம் போடுவது போல, முதல் காரியமாக இவரிடம் தான் குடிபுகும். இப்போதிருக்கும் ‘பொல் யூஷனை’ சமாளிக்க ‘இல்யூஷன்’தான் ஒரே சொல்யூஷன். இயற்கையோடு இணைந்து வாழ கற்க கசடறதான்!
கே.கலையரசன், கிடாரங்கொண்டான்.
பெண்பாற் புலவர்களில் உங்களை கவர்ந்தவர் யார், ஏன்?
‘ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத் தாள் வாழி’ என்று போற்றப் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோதை நாச்சியார்தான்!
ஏன் என்றால்… அன்றே I Love You (143) சொல்லிவிட்டாள் அரங்கனுக்கு. அவரும் பதிலுக்கு ‘ஓ.கே கண்மணி’என்று சொல்லி மனைவியாக ஏற்றுக் கொண்டு விட்டார்.
‘பட்டர் பிரான்பெண்ணை Butter பிரான்கண்ணன்
ட்விட்டரில் காதலுக்கு தூதுவிட்டான் - லெட்டராய்
நூத்திநாப் பத்திமூணு நூற்றாள் பதிலுக்(கு)
ஆத்தியது ஐலவ்யு ஆச்சு’!


thanx - the  hindu

Monday, March 02, 2015

‘நாயகன்’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’ படங்களுக்கு வசனம் எழுதிய பாலகுமார னைப் பற்றி - கிரேசி மோகன்

எம்.ரமேஷ், சென்னை-91.
பாண்ட் (Bond) என்பதற்கு தமிழில் பத்திரம் என்று எப்படி பெயர் வந்திருக் கும் சார்?
சவுல்ட்ரி (Choultry) என்பதற்கு தமிழில் சத்திரம் என்று எப்படி பெயர் வந்ததோ, அதுபோல பாண்ட் என்பதற்கு பத்திரம் என்று பெயர் வந்திருக்கலாம். ‘ச’னா வுக்கு ‘ச’ போல ‘பா’னாவுக்கு ப. எனக்கு எட்டியது அவ்வளவுதான்.
கோமதி நமச்சிவாயம். திருநெல்வேலி.
கடவுளுக்கு தலை முடி நரைத்தால் என்ன செய்வார்?
கடவுளுக்கு எதுக்கய்யா ‘GOD’ரெஜ்!
தேமொழி, கலிஃபோர்னியா.
ராமாயணத்தை சுருக்கமாகச் சொன் னது மாதிரி மகாபாரதத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்களேன்?
‘பூலோகம் கொண்ட பெரும் பாரம்
நூலாகக் கண்ணன் அவ தாரம்
பாஞ்சாலி சபதமும்
பார்த்தனுக்கு கீதையும்
பெருமாளின் வ்யாபார பேரம்’
எம்.அஷ்வின், சென்னை-14.
நீங்கள்… காப்பியா, டீயா?
‘டீ’ அடிச்சான் காப்பி!
கி.மகாலிங்கம், ஆவுடையார்கோயில்.
உங்களுக்கு ரொம்பவும் பிடித்த கண்ணதாசன் பாடல் எது? ஏன்?
கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள எழுத்து மதம் கொண்ட ஆனை!’ என்னைப் பொறுத்தவரையில் கம்பர்... முதற் சங்கம். பாரதியார்… இடைச் சங்கம், கண்ணதாசன்... கடைச் சங்கம்!
திரைப்படப் பாடல்களில் இவர் எவரெஸ்ட் என்றால் ‘அழகு சமுத்திரம் அம்பாள்’ (சவுந்தர்யலஹரி மொழி பெயர்ப்பு) , ‘பொன்மழைப் பாடல்கள்’ (கனகதாராஸ்தவம் மொழிபெயர்ப்பு), கிருஷ்ண கானம் போன்ற தனிப் பாடல்களில் மேரு மலை!
எனக்கு ரொம்பப் பிடித்த கண்ணதாச னின் திரைப்படப் பாடல், பார்வதியாக சாவித்திரி அம்மா அபிநயிக்க, கே.வி.மகாதேவன் இசையில், பி.சுசீலா குரலில் ’கந்தன் கருணை’ படப் பாடலான ‘சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா’ என்கிற பாடல்தான்.
‘உயிரினங்கள் ஒன்றையொன்று வாழ்த்திடும்போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் குரலன்றோ முருகா
உன் குரலன்றோ…’ - என்கிற கவிஞரின் வரிகள் ஆன்மிகத் தின் தேசிய கீதம்.
அதேபோல கவியரசரின் தனிப் பாடல்களில்...
‘படகோடு கங்கை குகனாக வேண்டும்
பணிவான ஆசை ரகுராமா’ - என்ற வரிகளை ராமனும் குகனும் கேட்டிருந்தால் ‘நின்னொடு அறுவரா னோம்’ என்று கவியரசைக் கட்டித் தழுவியிருப்பார்கள். சமஸ்கிருதத்தில் ‘வேதாந்த தேசிகரை’கவிதார்கிக கேசரி (கவிகளில் சிங்கம்) என்பார்கள். சுவைமிகு கண்ணதாசனோ ‘கவிதார்கிக ஸ்வீட் கேசரி!’
ஓவியர் ஜீவா வரைந்த கவியரசர் ஓவியத்தை நண்பர் இரா.முருகன் எனக்கு அனுப்பியிருந்தார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஜீவாவுக்கு ஒரு வாழ்த்து வெண்பா:
'உயிரினங்கள் ஒன்றையொன்று உள்ளிருந்து வாழ்த்தல்'
அயில்வேலோன் வாக்கென்ற அந்த - மயிலிறகு
கண்ணனின் தாசனைக் கண்ணெதிரில் கொண்டுவந்த
வண்ணதாசன் ஜீவாக்கு வாழ்த்து.’
உமா சண்முகம், திருநெல்வேலி.
நாடக உலகில் உங்களின் அடுத்த வாரிசு என்று யாரை சொல்வீர்கள்?
சொத்தைத் தவிர வேறு எதையும் வாரிசுக்கு வழங்கும் உரிமை நமக் கில்லை. ஜெயகாந்தன்தான் கூறுவார்: ‘விஸ்வரூபம் காட்டப்படுவது அன்று. காணப்படுவது’ என்று. அதேபோல ‘வாரிசுகள் உருவாக்கப்படுவது இல்லை. உருவாவது’.
என் தம்பி மாது பாலாஜி பல இளைஞர்களை எங்கள் நாடகக் குழுவில் சேர்த்திருக்கிறான். இவர்களில் வாரிசு யார் என்பது வாரிசத்தில் (தாமரை) அமர்ந்த வாணியின் சிபாரிசைப் பொறுத்தது!
ரங்கராஜன், ஸ்ரீரங்கம்
வீட்டில் ஏதாவது வாங்கி வர பணம் கொடுத்து, அதில் நீங்கள் உள்கமிஷன் அடித்து... மாட்டிக்கொண்ட அனுபவத்தை சிரிக்க சிரிக்க எழுதுங்களேன்?
சிறு வயதில் ‘ஸ்டாம்ப்’ (ஸ்டாம்ப் கலெக்ட்டிங்) சேர்க்கும் பழக்கம் இருந்தது. மயிலை விஜயா ஸ்டோர்ஸில் கோவா, டையூ, டாமன், ஆஸ்திரேலியா, அர்ஜென்டைனா ஸ்டாம்ப்கள் கடை முகப்பில் கவர்ச்சிக் கன்னியாய் என்னை ஈர்த்தன. என் கையிலோ தொண்டி கால ணாக் கூட இல்லை. கோனார் நோட்ஸ் வாங்குவதாக அம்மாவிடம் பொய் சொல்லி பணம் வாங்கி, அந்தப் பணத்தில் விஜயா ஸ்டோர்ஸில் ஆசை தீர ஸ்டாம்ப்கள் வாங்கினேன்.
அம்மாவுக்கு எப்படியோ எனது தில்லுமுல்லு தெரிந்து கச்சமுச்சா என்று திட்டிவிட்டாள். ஆறுவது சினம் அறியாத மோகன் நான் ‘வீட்டை விட்டு ஓடிப் போறேன்’என்று ஊரறியக் கத்தி விட்டு ஓட ஆரம்பித்தேன். ஓடினேன்… ஓடினேன்… தெருக்கோடி வரை ஓடினேன். பின்னால் துரத்திய தெரு நாய் போரடித்து ஜகா வாங்க, தெருக்கோடி நாராயணி அம்மாள் கல்யாண மண்டபத்தில் நாதஸ்வரக்காரர்களோடு சேர்ந்து உட்கார்ந்துகொண்டேன்.
யாராவது வந்து சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் செல்ல மாட்டார் களா… என்று காத்திருந்தேன். எனது பாட்டி என்னைத் தேடி வந்து… ‘‘டேய் மோகன்... ஓடறதுதான் ஓடறே சாப்பிட் டுட்டு ஒடுறா, சமச்சது வீணாப் போய்டும்’ என்றாள். விட்டை விட்டு ஓடியவன் திரும்பி வந்ததைக் கொண் டாட, என் பாட்டி எனக்கு அப்பளம் பொரித்துப் போட்டாள்.
பிறகு, உடனே விஜயா ஸ்டோர்ஸுக்குச் சென்று ‘தோ… பாருங்கோ. நீங்க என் பேரனுக்குத் தந்த ஸ்டாம்ப் எல்லாம் ரொம்ப முத்தலா இருக்கு’ என்று சொல்லி திருப்பித் தர, எனது ‘பாட்டி சொல்லைத் தட்டாத’அந்த ஓனரும், அப்பள எண்ணெயில் பிசுபிசுப்பான ஸ்டாம்ப்களை பெற்றுக் கொண்டு பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.
பி.டி.உஷாவுக்கு போட்டி உஷாவாக ஓடிய ரேஸி மோகன், அன்று முதல் ஸ்டாம்ப் சேர்ப்பதையே விட்டுவிட்டேன். இப்போதெல்லம் இமெயில் அனுப்பினால் கூட அடியேன் ஸ்டாம்ப் ஒட்டுவதில்லை… என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
பத்மா மணாளன், திருநின்றவூர்.
‘நாயகன்’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’ படங்களுக்கு வசனம் எழுதிய பாலகுமார னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
‘மெர்க்குரிப் பூக்கள்’, ‘இரும்புக் குதிரை’ போன்ற இவரது கதைகளுக்கு நான் காதலன். பழகுவதற்கு இவர் ஒரு ஜெண்டில்மேன். ஸ்ரீராம்சூரத்குமார் என்ற தாயகத்தை அறிமுகப்படுத்திய பூஜா நாயகன்.
தி.ஜானகிராமனைப் படித்திருக்கிறேன். அவரோடு பழகிய தில்லை. நான் படித்துப் பழகிய தி.ஜானகிராமன்… பாலகுமாரன்!


நன்றி -  த  இந்து


  •   
    //இப்போதெல்லம் இமெயில் அனுப்பினால் கூட அடியேன் ஸ்டாம்ப் ஒட்டுவதில்லை…// அட்டகாசம் கிரேஸி.
    Points
    195
    9 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
    • Skv  
      கண்ணதாசன் பாடல்களில் எனக்கு மிகவும் பிடிச்சது நினெஇத்தெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நிநேய்திருந்தால் அமைதி என்றுமில்லை பாடல் முழுக்கவே எல்லாகாலத்துக்கும் பொருந்துமுன்கொ
      Points
      12460
      10 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Chandramouli  
        It was a golden period for Tamil cinema during the1960s, thanks to the magical combination of Sivaji Ganesan, Kannadasan, Viswanathan-Ramamurthy, KVM, TMS and Susila. Most of Kannadasan's songs were real gems. I agree with Crazy Mohan's description of Bharathiyar as Idai Sangam and Kannadasan as Kadai Sangam. However, we really cannot select any one song as Kannadasan's best. The lyrical beauty of Kannadasan's could be seen in hundreds of songs.
        Points
        245
        10 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Thukluck_Junior  
          எனக்கு ரொம்பப் பிடித்த கண்ணதாச னின் திரைப்படப் பாடல், பார்வதியாக சாவித்திரி அம்மா அபிநயிக்க, கே.வி.மகாதேவன் இசையில், பி.சுசீலா குரலில் ‘திருவிளையாடல்’ படப் பாடலான ‘சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா’ என்கிற பாடல்தான்............... படம் கந்தன் கருணை ............ கிரேசி த தேருஞ்சி தப்பா சொன்னாரா? தெரியாம சொன்னாரா

        Tuesday, January 20, 2015

        யோக்கியனா இருந்தா என்ன கிடைக்கும் ? - கிரேசி மோகன்

        கிரேசியைக் கேளுங்கள் 16 - யோக்கியமாக’ இருந்தால்... ‘ஆரோக்கியமாக’ இருக்கலாம்.

         

        கே.பாலசந்தரைப் பற்றிய உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்?

        பாலசந்தர் சார் மறைந்துவிட்டதாக நான் கருதவில்லை. என்னைப் பொறுத்தவரையில் ஆத்மா சாந்தியடைதல், ஆத்ம திருப்தி… இரண்டுமே ஒன்றுதான். கே.பி சார் ஆத்ம திருப்திக்காக ஆகாசம் சென்றுள்ளார். அங்கு அவரது ஆத்ம நண்பர் அனந்துவுடன், அடுத்த படத்துக்கான டிஸ்கஷனில் ஈடுபட்டுள்ளார். கதாநாயகனின் கால்ஷீட் பற்றி கவலையே வேண்டாம். அவரது ஆஸ்தான கதா நாயகர் நாகேஷ் சொர்க்கத்தில்தானே இருக்கிறார்.
        குபேரன் ஃபைனான்ஸ் செய்ய, கந்தர்வர்கள் இசையமைக்க, மயன் ஆர்ட் டிபார்ட்மென்டைப் பார்த்துக் கொள்ள, இந்திரன் லைட்டிங் பார்க்க, வாயு பகவான் வேகமாக டிராலி தள்ள… வருண பகவான் கிளாப் அடிக்க, ‘சர்வர் சுந்தரம்’ போல ‘சொர்க்க சுந்தரம்’ என்கிற படத்தை இயக்கச் சென்றுள்ளார் கேபி சார்… என்றுதான் நான் நினைத்துக் கொள்கிறேன்.
        கண்ணதாசன் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன: ‘அவர் (கே.பி. சார்) நிரந்தரமானவர் அழிவதில்லை. எந்த நிலையிலும் அவருக்கு மரணமில்லை!’
        மகேஷ், துபாய்.
        கிரேசி… நீங்கள் எந்தக் கட்சி?
        என் கட்சி எப்பவுமே ‘தென்கச்சி’தான்! யாம் அறிந்து இரண்டு கலைவாணிகள் உண்டு. ஒருவர், ஆய கலைகள் அறுபத்தி நான்கினை ஆளும் வாணி. இன்னொருவர், ஹாஸ்ய கலையை மட்டும் அள்ளி வழங்கும் ஆஹாஸ்ய வாணி (ஆகாச வாணி).
        இந்த ‘ஆஹாஸ்ய வாணியின்’ ஒரே வாரிசு ஆல் இண்டியா ரேடியோவில் ‘இன்று ஒரு தகவல்’ வழங்கிய தென்கச்சி சுவாமிநாதன். இவர், வாழ்க்கைக்கு பகைச் சுவையான எதிர்க் கட்சிகளை நகைச்சுவையால் ஆளும் தென் கட்சியார். இவரது ‘சிரிப்போம்… சிந்திப்போம்’ என்கிற புத்தகத்துக்கு அணிந் துரை எழுதும் வாய்ப்பு அடியேனுக்குக் கிட்டியது.
        தென்கச்சியார் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பழுத்த நகைச்சுவை ஞானப்பழம். நானோ, நேற்று முளைத்த அவ(ச)ரக்காய். ‘கனிக்கு அணிந்துரை வழங்க காய் கவர்ந்தற்று’ என்று நீங்கள் கூறலாம். என்ன செய்வது? என் அதிர்ஷ்டம் இந்தப் பழம் நழுவி ‘என் பால்’ விழுந்துவிட்டது.
        படிப்பவர்கள் ரசனை மேம்படும் அளவுக்கு, சிரிப்பின் படம் வரைந்து அதன் பாகங்களைக் காட்டியவர் பேராசிரியர் தென்கச்சியார். ‘Humour is the Salt of the Life’ என்பார்கள். தென்கச்சியாரின் சிரிப்பு என்கிற இந்த உப்பு அதிகமானால்… B.P குறையும். யாரையும் கரிக்காத இவரது சிரி(உ)ப்பு டயாப்டீஸை போக்க வல்ல இனிப்பு.
        இன்சுலின் போல… இது ‘இன் சொலின்’. ஜோஸ்யத்தை நம்புவதைவிட தென்கச்சியின் ஹாஸ்யத்தை நம்பலாம். இவரது எழுத்தைப் படிப்பது ‘இம்மை சுகம்’ என்றால்… மேடையில் இவர் பேச்சைக் கேட்பது ‘மறுமை மோட்சம்’. தமிழ் இலக்கணத்தில் ‘உயர்வு நவிற்சி அணி’ என்று ஒன்று உண்டு. தென்கச்சியாருடையது ‘உயர்வு நகைச்சுவை அணி’!
        கே.மாதவன், சின்னதாராபுரம்.
        ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்… சார்?
        உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. ‘யோக்கியமாக’ இருந்தால்… ‘ஆரோக்கியமாக’ இருக்கலாம். வெகுநாள் வாழ வைக்கும் வீட்டு சாப்பாடே என் ஸ்பெஷல். வெண்பா போல உண்பா(ய்). பிறகு பார் ஆரோக்கியம் ‘ஹச்’ டாக் போல உன்னைத் தொடரும்.
        ‘பாயில்டு வெஜிடபிள்ஸ் பச்சரிசி சாதத்தில்
        ஆயில்டு சாம்பார் அடிக்கரைசல் - சாயில்டு
        சாத்தமுது(ரஸம்) சாதம் சுவையா னநீர்மோர்
        ஆத்தமுதே என்ஸ்பெஷல் ஆம்’
        திருமலை, பஹரைன்.
        ஜீனியஸுக்கும் சாம்பியனுக்கும் என்ன வித்தியாசம்?
        ஜீனியஸ் பிறக்கிறார்கள். சாம்பியன்கள் உருவாக்கப்படுகிறார்கள். ‘ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதைப் போல…’ ஒரு சாம்பியனுக்குப் பின்புலனாக ஒரு ஜீனியஸ் ஆணோ, பெண்ணோ இருக்க வேண்டும்.
        ‘உன் பையன்
        மண்ணைத் தின்றால் வையாதே
        வாய்க்குள் பார்…
        வையம் தெரியாவிட்டால்
        ஐயமே இல்லை - நீ
        யசோதை அல்ல’
        நாம் யசோதையாக இருந்தால் எந்தச் சோட்டா கிருஷ்ணனும் சாம்பியன் கிருஷ்ணன் ஆகும் சாத்தியம் உண்டு. என்.எஸ். கிருஷ்ணனில் இருந்து டென்னிஸ் கிருஷ்ணன் வரைக்கும் இது பொருந்தும். சாம்பியன் கிருஷ்ணன்தான் பின்னாளில் ஜீனியஸ் கிருஷ்ணனாகி… கீதை சொல்லி அர்ச்சுனனை சாம்பியன் ஆக்கினார்.
        ‘பிறந்த குழந்தையைத் தண்ணீரில் தூக்கிப் போட்டால் அது முழுகாது, நீந்தும்’ என்பார்கள் சிலர். ‘தண்ணிக்கிட்டே போகாதே… பீச் அலையில் நிக்காதே’ என்று சொல்லிச் சொல்லியே ‘குற்றாலீஸ்வரன்’ ஆகக் கூடிய நீச்சல் சாம்பியன்களை, பாத்ரூம் ஷவரில் குளிக்கப் பயப்படும் கோமாளியாக்கிவிடுகிறோம். சாம்பியனை இனம் கண்டு கொள்ள ஒரு ஜீனியஸ் அவசியம் தேவை.
        கமல், ரஜினி போன்ற சாம்பியன்ஸை உருவாக்கியது கே.பாலசந்தர் என்ற ஜீனியஸ். இதில் உல்டாவும் உண்டு. கணித மேதை ராமானுஜம் என்ற ஜீனியஸைக் கண்டுபிடித்து, அவரது திறமையை உலகுக்குக் காட்டிய சாம்பியன் ஹார்டி. ஜீனியஸ் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக சாம்பியனானால், அது நிலைத்து நிற்காது.
        கற்றதற்கு ஏற்ப கசடற நிற்பதற்கு ஜீனியஸ் என்ற ஊன்றுகோல் அவசியம்!
        சி.மோகன், தூத்துக்குடி.
        ஒரு ஜோக் ப்ளீஸ்...
        நான் எழுதி, காத்தாடி ராமமூர்த்தியின் வசன உச்சரிப்பால் பிரபலமான ‘அய்யா அம்மா அம்மம்மா’ நாடகத்தில் இருந்து...
        காத்தாடி: ஜானகி… பேன்ட் லூஸா இருக்கு. சணல் கயிறு இருந்தா தா!
        ஜானகி: ஏன் பேன்ட்டை இவ்வளவு லூஸா தெச்சுண்டீங்க?
        காத்தாடி: அடியே லூஸு! மொதல்ல ரொம்ப டைட்டா இருந்தது. நம்ம டெய்லர்தான் ஆல்டர் பண்ணறதுல ஆஸ்கர் வாங்கினவனாச்சே. சரின்னு பேன்ட்டை கொஞ்சம் லூஸ் வெச்சு தரச் சொன்னேன். அந்தப் படுபாவி பயங்கர லூஸு வெச்சுட்டான். ஹோட்டல்ல போய் சாப்பிட்டுட்டு நான் எழுந்துட்டேன். ஆனா, பேன்ட் எழுந்துக்கல...’’
        - இன்னும் கேட்கலாம்...


        நன்றி  - த  இந்து

         

        Monday, December 29, 2014

        ஆனந்த விகடன் ஆசிரியர் - கிரேசி மோகன்!!!

        அமரர் எஸ்.பாலசுப்ரமணியன்
        அமரர் எஸ்.பாலசுப்ரமணியன்
        வி பார்த்தசாரதி, சென்னை - 49
        உங்கள் பத்திரிகைத் துறை அனுபவம் பற்றி எழுதுங்களேன்? 

         
        அது 85-ம் வருடம் என்று நினைக்கிறேன். காலையில் ஓட்டம் (சுந்தரம் கிளேட்டனுக்கு இன்ஜினீயராக), மாலையில் ஆட்டம் (நாடக நடிகனாக), நள்ளிரவு வரை நாட்டம் (‘ஜூனியர் விகடன்’ ஆபீஸில் எழுத்தாளனாக) என்று என் வாழ்க்கை கைனடிக் ஹோண்டாவில் ஓடிக் கொண்டிருந்தது. என்னை ஆளாக்கியது எனது அப்பா வழித் தாத்தா என்றால், என்னை எழுத்தாளனாக்கியது ’ஆனந்த விகடன்’ தாத்தா. 


        இந்த ர.மோகனுக்கு ‘கிரேசி’ என்கிற அடைமொழியைக் கொடுத்து, உரையாடல் மட்டுமே அறிந்திருந்த எனக்கு உரைநடையை உபதேசித்தவர் எங்கள் எல்லோராலும் எம்.டி என்று மரியாதையாக அழைக்கப்படும் ஆனந்த விகடன் நிர்வாகி எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள். 


        கல்கி, தேவன், சாவி, பரணீதரன் போன்ற ஜாம்பவான்கள் முத்தெடுக்கக் குளித்த விகட மகா சமுத்திரத்தின் அலையில் என்னையும் நின்று விளையாட அனுமதித்தவர். ‘ஜூனியர் விகடன்’ இதழில் ‘கே.பி.டி. சிரிப்பு ராஜன்’என்ற நகைச்சுவை சரித்திரத் தொடர்கதை என்னும் அகழியைத் தாண்ட வைத்து, விகடன் கோட்டைக்குள் நான் நுழைய முத்திரை மோதிரம் அளித்தவர். 


        சூரியனுக்கு முன் போய் சூரியனுக்குப் பின்னே திரும்பும் இந்த சுந்தரம் கிளேட்டன் இன்ஜினீயரைக் கொஞ்சினவர் எம்.டி. எனது பத்திரிகை மசக்கையை அவரிடம் வெளியிட்டபோது ‘ஏன் கஷ்டப்படறே...பேசாம நீ இங்கே சப்-எடிட்டரா சேந்துடேன். இன்ஜினீயர் சம்பளம் தர்றேன்’’ என்று தனக்கே உரிய கணீர் குரலில் அவர் அழைப்பு விடுத்தார். இந்த ஊழியனோடு சேர்ந்து VSP (வெற்றிலை, சீவல், புகையிலை) போடுவார் அந்த முதலாளி. நான் விகடனில் வேலை பார்த்தேன் என்பதைவிட டிராமா, சினிமா போக அங்கே போய் வந்து கொண்டிருந்தேன் என்பதுதான் நிஜம். அந்த அளவுக்கு எனக்கு அனுக்கிரகம் அளித்தவர் எம்.டி. 



        ஒரு தடவை ‘‘அப்பாவுக்குக் காரியம் செய்ற நாளை ஏன் ‘அமாவாசை’ என்கிறோம் சார்? ‘அப்பாவாசை’ என்றுதானே சொல்ல வேண்டும்’’ என்ற ஏறுமாறான எனது கேள்விக்கு, ‘‘அது இல்ல மோகன்... பையன் அப்பாவுக்குக் காரியம் செய்யணும்கிறது அம்மாவோட ஆசை என்பதால்தான்… அது அமாவாசை ஆச்சு’’ என்று பளிச்சென்று பதில் சொல்லி எனது வார்த்தை விளையாட்டுக்கு வித்திட்டார்.



         அப்போதெல்லாம் அவர் வருஷா வருஷம் மயிலம் முருகனைத் தரிசிக்க என்னையும் அழைத்துச் செல்வார். அவரது வீட்டு நவராத்திரி கொலுப் படிகள் பார்க்கச் செல்லும் என்னை, தன் ஜெமினி பங்களா படியிறங்கி வந்து கையைப் பிடித்து அழைத்துச் செல்வார் அந்த பாஸ். 



        ‘‘மோகன் வறுவல் சீவல் இருக்கா…’’ என்று கேட்டு என் டேபிளுக்கே வருவார். அடியேன் எழுதும் கதை, கட்டுரைகளுக்கு ‘Good, not bad…’ என்றெல்லாம் மார்க் போடுவார். அந்த மார்க் என்றுமே அக்மார்க்தான். 



        சாதாரணமாக விகடனில் வந்த எழுத்தை வேறு பத்திரிகையில் எடுத்து பிரசுரித்தால் ‘நன்றி - விகடன்’என்று போடுவது வழக்கம். என் எழுத்து எங்கு பிரசுரமானாலும் ‘நன்றி - விகடன் எம்டி’! 


        சோனா ராஜ், புதுடெல்லி.
        அர்த்தம் இல்லாமல் வரும் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது? 


         
        அர்த்தம் இல்லாமல் வருவதே கோபம். அதே கோபம் அர்த்தத்துடன் வந்தால் அதன் பெயர்… பாரதி பழகச் சொன்ன ‘ரெளத்திரம்’. கடிக்காமல் இருந்த பாம்பை ஊர் மக்கள் அடித்தபோது பாம்பு கடவுளிடம் முறையிட, பதிலுக்குக் கடவுள் “உன்னைக் கடிக்காதே என்றுதானே சொன்னேன். சீறாதே என்றா சொன்னேன்” என்றாராம். கடிப்பது கோபம்... சீறுவது... ரெளத்திரம்! 



        குஹன், நன்னிலம்
        ‘நாற்பது வயதில் நாய் குணம்’ என்று ஏன் சொல்லப்பட்டது? 

         
        40 வயதாகிவிட்டது... ஜாக்கிரதை! இனிமேல் நீங்கள் உப்பைக் குறைக்கணும், சர்க்கரையைக் குறைக்கணும், சோற்றைக் குறைக்கணும், சுக போகங்களைக் குறைக்கணும்… என்று டாக்டர் நம்மை நோய் வராமல் தடுக்க எல்லாவற்றையும் ‘குறை’க்கச் சொல்வார். அந்த ‘குறை’த்தலில் உள்ள பெரிய ‘ற’வை சின்ன ‘ர’வாக்கி, ‘நோய்’ என்பதை ‘நாய்’ ஆக்கிவிட்டோம். உண்மையிலேயே வைத்தியர் சொல்படி உப்பு, சர்க்கரை இத்யாதிகளைக் குறைத்தால் 40 வயதில் நோய் ‘குணம்’ ஆகும். 


        மத்தளராயன், மாம்பலம்
        பரமசிவத்தையும் எலுமிச்சைப் பழத்தையும் ஒப்பிட்டு, பாம்பையும் நல்லெண்ணெய்யையும் ஒப்பிட்டு கவி காளமேகம் போல, ஏதாவது இரண்டை ஒப்பிட்டு வெண்பா எழுதுங்கள் பார்க்கலாம்? 



        காதலையும் துறவையும் ஒப்பிட்டு ஒரு வெண்பா:
        ‘ஊரைவிட்(டு) ஓடலால் ஒன்றிக் கலத்தலால்
        யாரிடமும் கூறாமல் ஏற்பதால் - பாரினில்
        சாதலை வென்று சமாதியில் (காதல் சமாதி) நிற்பதால்
        தீதிலாக் காதல் துறவு’.
        - இன்னும் கேட்கலாம்... 


        thanx - the hindu