Showing posts with label ஏ.ஆர்.முருகதாஸ். Show all posts
Showing posts with label ஏ.ஆர்.முருகதாஸ். Show all posts

Wednesday, April 09, 2014

'கத்தி' தயாரிப்பாளர் பேட்டி - ராஜபக்சேவுக்கு ஆதரவானது அல்ல லைக்கா நிறுவனம்:

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு லைக்கா நிறுவனம் ஆதரவானது கிடையாது என்று விஜய் நடிக்கும் 'கத்தி' படத்தின் தயாரிப்பாளர் ஐங்கரன் கருணாமூர்த்தி தெரிவித்தார். 



விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'கத்தி' படத்தினை ஐங்கரன் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். 


இந்நிலையில் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ் கரன், இலங்கை அரசுடன் தொடர்புடையவர் என செய்தி பரவியது. இதனால், படத்திற்கு பெரும் பிரச்சினை ஏற்படும் என்று தயாரிப்பாளர்களின் ஒருவரான ஐங்கரன் கருணாமூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். 


அப்போது அவர் கூறும்போது, "இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து பணியாற்றிகிறோம் என்று இந்த படத்திற்கு சம்பந்தமில்லாத செய்தி வந்து கொண்டிருக்கிறது. அந்தச் செய்தியில் உண்மையில்லை. நான் 27 வருடங்களாக சினிமா துறையில் நிறைய ஏற்ற, இறக்கங்களைப் பார்த்திருக்கிறேன். 



நான் இலங்கையில் பிறந்து வளர்ந்தவன். நாட்டை விட்டு 30 வருடங்களுக்கு முன்பே வெளியே வந்துவிட்டேன். அங்கே தமிழர்கள் என்றால் புலிகள் என்று தான் சொல்வார்கள். 



உங்களுக்கே தெரியும்... ஐங்கரன் நிறுவனம் 2000 படங்களுக்கு மேலாக வெளிநாடுகளில் வெளியிட்டு இருக்கிறோம். 20 வருடங்களுக்கு மேலாக லைக்கா நிறுவனத்தின் சுபாஷ் கரன் எனக்கு நண்பர். அவர் இலங்கையில் முல்லைத்தீவை சேர்ந்தவர். அவர் 100 சதவீதம் தமிழர். அம்மா முல்லைத்தீவு, அப்பா திருக்கோணமலை. இப்போ லண்டனில் பிசினஸ் பண்ணிட்டு இருக்கார். 



நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸ் எங்கள் நிறுவனத்திற்குதான் தேதிகள் கொடுத்தார்கள். ஆனால், பல்வேறு காரணங்களால் எங்களால் தனியாக பண்ண முடியாமல் இருந்து வந்தது. அப்போது தான் எனது நண்பரான சுபாஷ் கரன், "இவ்வளோ அனுபவத்தை வைச்சுக்கிட்டு ஏன் சும்மா இருக்கீங்க, நாம சேர்ந்து பண்ணலாம்"னு சொன்னார். இந்தப் படத்தினை 100 சதவீதம் நான் மட்டும் தான் பண்றேன். அவர் எனக்கு பண உதவி பண்றார் அவ்வளவு தான். 



லைக்கா நிறுவனம் உலகத்தில் நம்பர் ஒன் டெலிகாம் நிறுவனமாகும். அவர்களுக்கு தொழில்முறை போட்டிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் கிளப்பிவிடும் செய்திகள்தான் இவை. 2013-ல் சுபாஷ் கரன் கம்பெனியில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்தார்கள். நானும் உடன் போயிருந்தேன். அவர் பிறந்த இடம், உள்ளிட்ட இலங்கை முழுவதும் சுற்றிப் பார்த்தோம். 


தனியார் ஹெலிகாப்டர்கள் எல்லாம் இலங்கை விமானப் படையினரிடம் இருந்துதான் பெற முடியும். 25 பேர் அமரக்கூடிய இரண்டு ஹெலிகாப்டர்கள் எடுத்து, 5 நாட்கள் சுற்றிப் பார்த்தோம். அப்படிச் சுற்றிப் பார்த்ததில் அவர் நிறைய உதவிகளை பண்ண முன்வந்தார். இலங்கையில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வேண்டும் என்று இந்தாண்டு ரூ.20 கோடியும், அடுத்தாண்டு இன்னும் அதிகமாகவும் செய்ய முன் வந்திருக்கிறார். 


நாங்கள் போயிட்டு வந்தது அனைத்துமே உதவுவதற்காக மட்டுமே தவிர, வேறு எந்த ஒரு டீலிங்கும் கிடையாது. இலங்கை அரசிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும் அளவிற்கு லைக்கா நிறுவனம் சிறு நிறுவனம் அல்ல. 


ராஜபக்சேவுக்கும் சுபாஷ் கரணுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு கிடையாது. அதுமட்டுமல்லாது, இந்தப் படத்தில் நான் இப்போது அவரை தயாரிப்பாளராக வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால், வந்தச் செய்தி உண்மையாகி விடும். அதனால் மட்டுமே இதனை செய்யாமல் இருக்கிறேன். 


'கத்தி' படத்தினைப் பொறுத்தவரை 40% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விஜய் இருவேடத்தில் நடித்து வருகிறார். தீபாவளிக்கு வெளியாகும். இப்போதைக்கும் என்னால் இதை மட்டுமே கூறமுடியும்" என்றார் அவர். 


thanx - the hindu


Friday, April 04, 2014

மான் கராத்தே - சினிமா விமர்சனம்

 

5 நண்பர்கள்  ( 2 பொண்ணுங்க,3 பசங்க)  கார்ல பிக்னிக் போறாங்க. ஏதோ கிளிகிளுப்பா நடக்கும்னு தமிழன் எதிர்பார்க்கறான் ( இங்கே தமிழன் கறது சாட்சாத் நான் தான் ) ஆனா அவங்க ஒரு கொல்லிமலை சித்தரை சந்திக்கறாங்க. அவர்  என்னடான்னா  எதிர்காலத்தில் வர இருக்கும்  தினத்தந்தி பேப்பரை வர வழைக்கறாரு. ( நல்ல வேளை ,சரோஜா தேவி , விருந்து எல்லாம் வர வைக்கலை )  அதுல   பீட்டர் என்கிற பாக்சரால இவங்க 2 கோடி  ரூபாய் சம்பாதிப்பாங்கனு  நியூஸ் இருக்கு. 


பீட்டரை த்தேடிப்போனா அவர் பாக்சிங்-னா என்னனே தெரியாத பகத்சிங்கா இருக்காரு. அவங்க  தங்கள்  2 கோடியை செயிச்சாங்களா? இல்லையா? என்பதே  கதை .


ஏ ஆர் முருகதாஸ் தான் கதை. அவர் இன்னும் ஏழாம் அறிவு பாதிப்பில்  இருந்து வெளில வர்லை போல . சித்தர் பாபா-னு அள்ளி விட்டுட்டு இருக்கார் 

 ஹீரோ சிவ கார்த்திகேயன் நாளைய இளைய தளபதி என்பதில் சந்தேகமே  இல்லை . நல்ல முன்னேற்றம்.  டான்ஸ் காட்சிகளில் அவர்  உழைப்பு தெரிகிறது . திரைக்கதையில்  தன்  மேடை மிமிக்ரி காட்சிகளை லாவகமாகப்பொருத்தி விடும் சமயோசிதமும்  சூப்பர் . பெண்கள் , குழந்தைகளைக்கவரும் நடிப்பு 




ஹீரோயின்  தர்பூசணிப்பழத்தின்  உள் கலர் மேனி சருமம் கொண்ட முலாம் பழ குளிர் அழகி . குழந்தைத்தனமாக முகத்தைக்காட்டி , கிளாமர்த்தனமாய் தேகத்தைக்காட்டினால் சென்சார்  ஏமாந்து  யு தருவாங்க என்ற   வித்தையை நன்கு தெரிஞ்சு வெச்சிருக்கார். 

சதீஷ்   இன்னொரு சந்தானமாக வரும் வாய்ப்புகள் பிரகாசமாத்தெரியுது . காமெடி பஞ்ச் ஒன் லைனர்கள்  குட் 


 வில்லனாக வரும்  வம்சி கிருஷ்ணா  நல்ல நடிப்பு . அவர் மனைவியாக வரும்  ஃபிகர் நல்லாருக்கு ( வில்லனின் மனைவியையும் சைட் அடிக்கும் பார பட்சம் காட்டா வாலிபர் சங்கம் ) 


சூரி பாக்சிங் நடுவரா வந்து   கொஞ்சம் காமெடி பண்றார் . 

 





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1.  ஒளிப்பதிவு  சுகுமாரன் கலக்கல்  ரகம் .  ஓப்பனிங்கில் வரும் வனம், அருவிக்காட்சிகள் , பாடல் காட்சிகள்  லொக்கேஷன் செலக்சன் எல்லாம் பக்கா 


2 அனிரூத் -ன் இசை துள்ளாட்டம் போட வைக்கிறது . 3 பாடல்கள்  சூப்பர்  ஹிட் . டான்ஸ் மூவ்மெண்ட் விஜய் படங்களுக்கு நிகர் . ஒரு பாட்டில்  அனிரூத் ஆடறார். செம ரெஸ்பான்ஸ்


3 திரைக்கதையில்  போர் அடிக்காமல் காமெடியாக கொண்டு சென்றது . 


4  சிவகார்த்திகேயனை எதார்த்தமான ஆளாகக்காட்டியது , ஓவர் ஆக்டிங் பண்ணாமல்  நல்ல நடிப்பு  , சபாஷ் சி கா 


5  வசனம் செம  காமெடி. ஒரு காமெடி என்ட்டர்டெய்னருக்கு டயலாக் ரொம்ப  முக்கியம் 




இயக்குநரிடம் சில கேள்விகள் 


1. யாரோ  அறிமுகம் இல்லாத ஆட்களிடம் தன் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் சித்தருக்கு ஏன் வந்தது ? அப்படி ஒரு ஈகோ வந்தால் அவர் என்ன சித்தர் ? 


2  எப்படி  இருந்தாலும்   2 கோடி கிடைப்பது உறுதி எனும்போது அந்த 5 பேரும் ஏன் எப்போதும் அழகிரி மாதிரி டென்சனாகவே  இருக்கனும் ? 


3 அனுதாப ஓட்டு வாங்குவதற்க்காக  ஹீரோ  வில்லன் காலில்  விழுந்து  கெஞ்சுவது , அதுக்கு  வில்லன்  தரக்குறைவாக  ஹீரோ வைப்பேசுவது  தவிர்த்திருக்கலாம்


4  வில்லனின் மனைவி   கணவரிடம்  ஹீரோவுக்காக ஏன் பரிந்து பேசுகிறார் ? 


5  திருக்குறள் 10  ஒப்பிச்சா பொண்ணு உனக்குத்தான் என்பது செம காமெடி . ஊருக்கு 100 பேர் அப்டி வந்துட்டா  என்ன ஆகும் ஹன்ஸ் நிலைமை . 


6   ஹீரோ  பாக்சர்  ஆவது , அதுக்குப்பயிற்சி எல்லாம் பெருசா எடுக்காம  ஜெயிப்பது  எல்லாம் நம்பகத்தன்மை இல்லை  



மனம் கவர்ந்த வசனங்கள்

1. உலகத்துலயே கேவலமான விஷயம் எது தெரியுமா ? நாம வேலைக்கே ஆக மாட்டோம்கற விஷயம் நாம லவ் பண்ற பொண்ணுக்கு தெரிய வர்றது தான் # மா க

2. சி கா டூ ஹன்ஸ் = நான் இப்போ ஆக்சனுக்கு மாறவா? வேணாமா? # உள் குத்து டயலாக்



 3.என்ன ஜூசு? 


ஓசி ஜூசு. அன்னாசி.



இமான் அண்ணாச்சி ஜூசா?,



சூப்பர் ஜோக் சார்.அந்தப்பக்கமா போய் சிரிச்ட்டு வரேன்.இருங்க # மா க 


 

4. சி கா - கூலிங் இருக்கா? னு தெரிஞ்சுக்க பீர் வாங்கும்போதே கன்னத்துல வெச்சுப்பார்த்து வாங்கனும் # மா க



 
5.சதீஷ் டூ சிவா -,என்னடா வைப்ரேட்டிங் மோடுலயே போறே?,நார்மலாவே நடக்க மாட்டியா?,#,மா க





 6.ஹன்ஸ் - எப்டி ஜெயிச்சீங்க ? 


சிவா - சின்சியாரிட்டி ,டெடிகேசன் ,உழைப்பு #,உள் குத்து வசனம் டூ சிவா ஹேட்டர்ஸ்




 7.காமத்துப்பால் னா என்ன ? 


ஆண் பால் + பெண் பால் + பாதாம் பால்








9. என்ன அனிமல்ஸ் எல்லாம் ஐ பேடு வெச்சிருக்கு ? #,மா க



10. நெய்க்குழந்தை மாதிரி கும்முனு இருக்கீங்க.உங்களுக்கு பாய் பிரண்டு இல்லையா?,


ஆமா.சிங்கிள் தான். சரி டபுள்ஸ் ஆக்கிடுவோம் #,மா க






11.டெய்லி லொட லொட னு பேசிட்டிருந்தவன் டக் னு பேசாம இருந்தா பொண்ணுங்க டிஸ்டர்ப் ஆவாங்க # மா க



12.  ஹன்சிகா ரொம்ப இளைச்சிடுச்சே! சிம்பு கை வண்ணமா? # மா க




13.  கடல் வத்தி கருவாடு திங்கலாம்னு நினைச்சா கொக்கு குடல் வத்தி செத்துப்போய்டும்டா.#,சிகா பஞ்ச் @ மா க




14.  டேய் 20 ரூபா இருந்தா இவ கிட்டே எறி. 



அவ்வளவு பெரிய தொகைக்கு நான் எங்கே போவேன் ?,# மா க




15.  ஹன்சிகா ஓப்பனிங் சீன் - என் ஐஸ் க்ரீமை லிக் பண்ணுனியா? 



 அய்யய்யோ இல்லீங்க # டபுள் மீனிங் @ மா க




16.  டேய்.அந்த் பொண்ணு சூப்பரா இருக்குடா



.அடேய் அது என் மாமியார்டா.ஆனாலும் சூப்பர்தான் இல்ல?# மா க





17. நீ என்னை விட்டுட்டுக்குடிக்கலாமா? சொல் குடிக்கலாமா? # செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? பாணி 



18. அடிச்சு ஜெயிக்கறது அவன் பாலிசி.அடிக்காமயே ஜெயிக்கறது இந்த மான் கராத்தே பீட்டர் பாலிசி # மாக சிவா பஞ்ச் 


 

படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S

1. ட்ரெய்லரில் கலக்கிய டா டிகிடா ஆத்தாடி பாட்டு டான்ஸ் ஸ்டெப் பை விட லொக்கேசன் செலக்சன் ,கேமரா அள்ளுது # மா க

2.சூரி இன்ட்ரோ.அடேங்கப்பா.என்னா அப்ளாஸ்!

3.அனிரூத்க்கு இளையராஜாவை விட ரஹ்மான் தான் பிடிக்கும் போல.பாபா தீம் இசை சுட்டிங்

4. ஜாலியாப்போகுது .டைம் பாஸ் @ மான் கராத்தே இடைவேளை. ஓடிய நேரம் 1.11 மணி நேரம். இதுல ஏதாவது குறியீடு இருக்குமோ? நமோ நாராயணா ;-)




5. மாஞ்சா பொண்ணு தான் பாட்டு செம ஹிட்டு .ஒளிப்பதிவு கலக்கல்.டான்ஸ் மூவ்மென்ட் கொஞ்சமா வெச்சு நாயகி க்ளோசப் அதிக்மா வெச்சுட்டாங்க # அனிரூத்




6. ரம்பா வுக்கே சவால் விடும் ஹன்சிகாவின் துக்ளியூன்டு டிரவுசர் #,ரசிகர்களு க்கு THIGHபூச வாழ்த்துகள்




7.  தமிழ் நாட்டின் அடுத்த இளைய தளபதி ஓப்பனிங் சாங் # சுறா மாதிரி கடல் கரையில் டான்ஸ்



8.  சந்தானத்துக்கு இணையான சதீஷின் கவுன்ட்டர்ஸ் டயலாக்ஸ் # மா க



9.  பாபா ல வர்ற மாதிரி ஒரு சித்தர் # என்னய்யா கலர் கலரா ரீல் விடறீங்க?



10.  ஒரு நல்ல சிறுகதை முதல் வரியிலும் ,நல்ல சினிமா முதல் காட்சியிலும் கதையை சொல்ல ஆரம்பிச்சுடனும் # மா க குட் ஓப்பனிங்



11.  11 மணி ஷோ 10 22 க்கே போட்டாச் # ஹவுஸ்புல்



12.  அஜித் ,விஜய் படங்களுக்கு இணையான கூட்டம.ஆனா டிக்கெட் ரேட் கவுன்ட்டர் ரேட் தான் # மான் கராத்தே்



13 10 திருக்குறள் சொன்னா பொண்ணு கட்டித்தரேன்னு சொன்னதும் 10 மிமிக்ரி குரல் தரும் காட்சி அப்ளாஸ்.மழை # மா க





சி பி கமெண்ட் -மான் கராத்தே - நம்ப முடியாத கதை ,நம்ப வைக்க முயற்சிக்கும் மேஜிக் ரியலிச திரைக்கதை ,- டைம் பாஸ். மீடியமா ஹிட் ஆகிடும் . ஏ சென்ட்டரில்  50 நாள் ஓடிடும்


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =41


குமுதம் ரேட்டிங்க் =ஓக்கே


 ரேட்டிங் = 2.5  / 5


ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்




ஈரோடு அபிராமி யில்
Embedded image permalinkஅ\\


டிஸ்கி 1 -மான் கராத்தே - வீடியோ விமர்சனம் பை சி பிஎஸ்-

2  ஒரு கன்னியும் ,மூன்று களவாணிகளும் - சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2014/04/blog-post_896.html


டிஸ்கி 3 - ஒரு கன்னியும் 3 களவாணிகளும் - வீடியோ விமர்சனம் பை சி பி எஸ் -

https://www.youtube.com/watch?v=5aEaCr89cVA

Thursday, November 22, 2012

"தீனா' , "துப்பாக்கி' ஒப்பிட்டா? - ஏ ஆர் முருகதாஸ் பேட்டி

கால்ஷீட்டுக்காக கதை எழுத மாட்டேன்! - ஏ.ஆர்.முருகதாஸ்

இப்போது பேசலாம், அப்போது பேசலாம் என தாமதித்துக் கொண்டே இருந்தது இயக்குநர் முருகதாஸூடனான உரையாடல். எதிர்பார்த்ததுதான். ஆனால் எதிர்பாராத நேரத்தில் அவருடன் பேசியதிலிருந்து..
.கமர்ஷியல் படங்கள்தான் எப்போதும் விஜய் பாணி. உங்களுக்கும் விஜய்க்கும் செட் ஆகுமா? எப்படி நடந்தது இந்த மேஜிக்?
 அதுதான் சினிமா. விஜய்யுடன் நான் சேர்ந்திருப்பது பலருக்கும் ஆச்சரியம். அவருடன் சேர எனக்கு பெரிய திட்டம் எதுவும் இல்லை. ஒரு கதையை பிடிப்போம். இது எந்த ஹீரோவுக்கு செட்டாகும் என பார்ப்போம். அப்படித்தான் என் எல்லா சினிமாக்களும். சினிமாவுக்கு வந்த நாளிலிருந்து விஜய் எனக்கு பழக்கம். நான் உதவி இயக்குநராக இருக்கும் போதே ""ஒரு சினிமா பண்ணலாம் கதை ரெடி பண்ணுங்க''ன்னு சொல்லியிருக்கிறார் விஜய். நானும் கதை தயார் செய்வேன்.
 ஆனால் அடுத்தடுத்த கமிட்மெண்ட்டுகள் எங்களை சேர விடவில்லை. நான் ஒரு படத்தை தொடங்கியிருக்கும் போது, அவர் இன்னொரு படத்தை முடிக்கும் தருவாயில் இருப்பார். நான் தயார் நிலையில் இருந்தால் அவர், ""இந்த ஒரு படத்தை முடித்து விட்டு வந்துடுறேன்'' என்பார். இப்படியே காலம் கடந்து விட்டது. எஸ்.ஏ.சி.சார்தான் எங்களை இணைத்தார். ""விஜய்க்கு ஒரு படம் பண்ணனும். எப்போதுமே தயாராக இருக்கோம்'' என்றார். நானும் "ஏழாம் அறிவு' முடித்து விட்டு உடனடியாக விஜய் படத்துக்கான ஒன் லைனை பிடித்து விட்டேன். அதுதான் இந்த "துப்பாக்கி'.





படத்தில் விஜய் ஒரு இலங்கை அகதி, ராணுவ வீரன், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் இன்னும் என்னென்மோ செய்திகள் உலவுகிறதே இதில் எது உண்மை?



இதற்கு பட்டென பதில் சொல்லி விட முடியாது. ஏனென்றால் அதில்தான் கதை இருக்கிறது. நீங்கள் நினைக்கிறது எல்லாமே இதில் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். விஜய் ரசிகர்களுக்காக ஒரு படம் செய்திருக்கிறேன். அவர்களுக்கு நிச்சயம் சந்தோஷம் காத்திருக்கிறது. விஜய் ஸ்டைலை விட்டு நிச்சயம் கதை விலகிப் போகாது. ப்ளஸ் கொஞ்சம் கமர்ஷியலையும் சேர்த்திருக்கிறோம். ஹீரோ, ஹீரோயின் இருவருமே மும்பையில் வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள்.



எல்லாமே கலந்து கிடக்கும் மும்பையின் சுவராஸ்யமான முகம்தான் கதை. தமிழ் சினிமா பார்க்காத புதிய தொனியில் கதை இருக்கும், ஜெகதீஷ் என்ற இளைஞனுக்கு ஏற்படும் பிரச்னைகள். அதற்கு அவன் எடுக்கும் முடிவுகள் என கதையில் பரபரப்பு கூட்டியிருக்கிறோம். முதல் பாதி, அடுத்த பாதி இரண்டுமே பரபரக்கும். இந்த கதை ஏதேச்சையாகத்தான் முடிவானது. முதலில் ஒன் லைன்தான் சொன்னேன். ஷூட்டிங் கிளம்புவதற்கு நான்கு நாள்களுக்கு முன்புதான் விஜய்யிடம் கதை சொன்னேன். "துப்பாக்கி' என்ற பெயருக்கேற்ற பரபரப்பு கூட்டியிருக்கிறேன்.



ஹிந்தி உலகில் உங்களுக்கு பெரிய பெயர் இருக்கிறது. பாலிவுட் ஸ்டார்கள் எல்லாம் உங்கள் கால்ஷீட்டுக்கு காத்திருக்கிறார்கள். அதை பயன்படுத்தலாமே. ஏன் மறுபடியும் தமிழ் சினிமாவுக்கு?



எனக்கு எது பிடிக்கிறதோ அதை மட்டுமே செய்கிறேன். நீங்கள் சொல்லுவதை போல் நான் ஹிந்தியில் மட்டுமே படம் இயக்கி கொண்டிருக்க முடியாது. தமிழ் சினிமாதான் என் அடையாளம். அந்த அடையாளத்தை என்றைக்கும் நான் இழக்க மாட்டேன். ஹிந்தி "கஜினி' சமயம் எனக்கு நிறைய கூச்சம். ""இவர்தான் டைரக்டரா''ன்னு கேட்டவர்கள் நிறைய பேர். படம் பார்த்தவர்கள் ""இவரா இந்தப் படத்தை எடுத்தார்''ன்னு ஆச்சரியமாக கேட்டார்கள். அப்போதே அப்படியென்றால், "தீனா' எடுக்கும் போது நான் எப்படி இருந்திருப்பேன்.



 "கஜினி' எல்லா மொழிகளுக்கும் செட் ஆகிற கதை. அது மாதிரி கதைகள் கிடைத்தால் நிச்சயம் அங்கு இருப்பேன். கால்ஷீட் தர காத்திருக்கிறார்கள் என்பதற்காக எந்த கதையையும் கொண்டு போய் திணிக்க முடியாது. மும்பையில் வாழும் ஒரு தமிழ் இளைஞனின் கதைதான் "துப்பாக்கி'. அதை தமிழில் எடுத்தால்தான் நன்றாக இருக்கும். சில மாற்றங்களோடு "துப்பாக்கி' ஹிந்திக்கும் ரீமேக் ஆக போகிறது. அக்ஷய்குமார் ""எப்போ வேண்டுமானாலும் வாங்க''ன்னு கால்ஷீட் வைத்து காத்திருக்கிறார். இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு. நான் எங்கே இயங்க வேண்டும் என்பதை கதைகள்தான் தீர்மாணிக்க வேண்டும்.



அஜித், சூர்யா, விஜய் மூன்று பேரையும் வைத்து இயக்கியிருக்கிறீர்கள். மூன்று பேரும் எப்படி?



எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் அஜித். யாருக்கும் பெரிய நம்பிக்கை இல்லாதபோது, ""கதை சொல்லு பார்க்கலாம்'' என்று கைப்பிடித்து அழைத்து வந்தவர். அவர் மீது எப்போதுமே எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. பவர் ஃபுல்லா அவருக்கு கதை தயார் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இயல்பா, உண்மையா இருக்கும் அவருக்கு கதையும் அவரைப் போலவே அமைய வேண்டும். பார்க்கலாம். சூர்யா இல்லையென்றால் ஏழாம் அறிவை என்னால் செய்திருக்கவே முடியாது.



 சினிமாவுக்கான புரிதல் அவருக்கு நிறையவே இருக்கிறது. இன்னும் என்ன வேண்டும் என கேட்கிற தைரியம் உள்ள ஹீரோ அவர். விஜய்யை அவ்வப்போது பார்ப்பேன். ஓரிரு வார்த்தைகள் பேசுவார். இவர் இப்படித்தான் என நானும் நினைத்து விடுவேன். நெருங்கி பழகி பார்த்தால் அவ்வளவு விஷயம் பேசுகிறார். நான் என்றைக்கும் ஆச்சரியமாக பார்க்கும் ஹீரோ அவர். மும்பை வாசம் அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டது. ""ஹிந்திக்கு வாங்க''ன்னு சொல்லியிருக்கிறேன். தமிழை தவிர்த்து எங்கும் படம் நடிக்க மாட்டேன் என்ற பாலிசியை அவர் மாற்றினால், சீக்கிரமே ஹிந்திக்கும் அழைத்துப் போய் விடுவேன்.



 "ரமணா'வுக்கு பின்புதான் விஜயகாந்த் அரசியல் பேசினார். அதே ரமணா தெலுங்கில் வந்த பின்தான் சிரஞ்சீவி அரசியலுக்குள் வந்தார். ஆனால் விஜய் எப்போதே அரசியல் வட்டத்துக்குள் வந்து விட்டார். என்ன நடக்கும் என்ற கணிப்பு இருக்கிறதா?




ஹீரோக்களின் அரசியல் ஆசைகளுக்கு படம் எடுப்பது என் வேலை இல்லை. எது நடக்க வேண்டுமோ அதுவே நடக்கும். கதைக்கு எது தேவையோ அதை மட்டுமேதான் கொடுப்பேன். ஹீரோக்களிடமும் அதற்கேற்ற உழைப்பை மட்டும்தான் கேட்பேன். "ரமணா'வுக்குப் பின் விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததும், "ரமணா' தெலுங்கு ரீமேக்குக்கு பின் சீரஞ்சீவி அரசியலுக்கு வந்ததும் நானே எதிர்பார்க்காத ஒன்று.



"தீனா' முருகதாஸýக்கும் "துப்பாக்கி' முருகதாஸýக்கும் என்ன வித்தியாசம்?



கொஞ்சம் நிதானம், பக்குவம் கூடியிருக்கிறது. ஆனால் கள்ளக்குறிச்சி முருகதாஸீன் பேஸிக் கேரக்டர் இன்னும் மாறவில்லை. எதற்காகவும், எப்போதும் நான் எடுத்த முடிவுகளுக்காக வருத்தப்பட்டதே இல்லை. "தீனா' தொடங்கி ஹிந்தியிலும் படம் இயக்கி, இப்போது "துப்பாக்கி' ஏழாவது படம். ஆனாலும் என் பலம், பலவீனம் இரண்டையும் தெரிந்து கொள்ளும் ஆசையே இன்னும் வரவில்லை. இவர் நல்லவர் என நினைத்து முகம் காட்டினால், மறுநாளே மறைத்து வைத்திருக்கும் கத்தியின் மூலம் தாக்க வருகிறார். நல்லது, கெட்டதை பிரித்து பார்க்க கொஞ்சம் பழக்கம் வந்திருக்கிறது. வெற்றி கிடைத்தால் கொண்டாடுகிற அளவுக்கு, தோல்வி கிடைத்தால் நான் துவண்டு விடுவேன். அதனால் என்னை தோல்வி தொட்டு விடக் கூடாது என்ற பயம் இருக்கிறது.
 நன்றி - சினிமா எக்ஸ்பிரஸ்