Showing posts with label ஏ ஆர் முருகதாஸ். Show all posts
Showing posts with label ஏ ஆர் முருகதாஸ். Show all posts

Sunday, February 17, 2013

என்னை ஆச்சர்யப்படுத்தின படங்கள் - ஏ ஆர் முருகதாஸ் பேட்டி

சினிமாவில் 'அண்ணன் உடையான் அறிமுகத்துக்கு அஞ்சான்’கிறது புதுமொழி. சரிதானே!'' - தன் தம்பி திலீபனை அருகில் இழுத்து இறுக்கி அணைத்துக்கொண்டு சிரிக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தன் தயாரிப்பில் உருவாகும் 'வத்திக்குச்சி’ படத்தில் திலீபனை ஹீரோவாக அறிமுகம் செய்கிறார் இந்த மாஸ் இயக்குநர். 



''கஷ்டப்பட்டு சினிமாவில் சாதிச்சவர் நீங்க. ஆனா, எந்தக் கஷ்டமும் இல்லாமல், ஹீரோவா திலீபன் அறிமுகமாகிறார்ல..?''


''அப்படிப் பார்க்காதீங்க. என் அசிஸ்டென்ட் கின்ஸ்லின் நல்ல கதையோட வந்தார். 'ஹீரோ யார்?’னு கேட்டேன். 'உங்க தம்பியை வெச்சே பண்ணலாம்’னு சொன்னார். திலீபனும் நடிக்கிறேன்னு சொன்னான். நான் சரின்னு சொல்லிட்டேன். திலீபன், தானா எடுத்த முடிவு இது. சினிமாங்கிறது எப்பவுமே கத்துட்டே இருக்க வேண்டிய ஒரு கலை. அதைக் கஷ்டம்னு சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. எந்தப் பின்னணியும் இல்லாம சினிமாவுக்கு வந்த நான், கஷ்டப்பட்டேன்னு சொல்ல முடியாது. 



ஆனா, கடுமையா உழைச்சேன். கத்துக்கிட்ட விஷயங்களைச் சந்தோஷமா செயல்படுத்த ஆரம்பிச்சேன். அந்த அனுபவம் சிலருக்கு ஆரம்பத்திலேயே கிடைக்கும். சிலருக்கு அப்புறமாக் கிடைக்கும். அதேபோல திலீபன் ஜெயிக்கிறது அவன் கையில்தான் இருக்கு.''
இங்கே சின்னதாக இடைமறித்தார் திலீபன்... ''இந்தப் படத்தில் நான் நடிக்கலாம்னு முடிவு எடுத்ததைவிட, அந்தக் கதைக்காக இயக்குநர் தான் என்னைத் தேர்ந்தெடுத்தார். அதுதான் நிஜம்.




 நான் விளம்பர நிறுவனம் நடத்திட்டு இருக்கேன். அப்போ அங்கே வந்து போகும் அண்ணனோட உதவியாளர்கள் பழக்கம்ஆனாங்க. அப்படி நட்பானவர்தான் கின்ஸ்லின். அவரோட 'வத்திக்குச்சி’ ஸ்க்ரிப்ட்டுக்கு மாஸ் ஹீரோக்கள் செட் ஆக மாட்டாங்கன்னு சொல்லிட்டே இருப்பார். திடீர்னு ஒரு நாள், 'நீங்க நடிச்சா நல்லா இருக்கும்’னு சொன்னார். 



ஸ்டேஜ் ஷோ, டான்ஸ், பாடி லாங்குவேஜ், வசன உச்சரிப்புனு ஒரு வருஷப் பயிற்சிக்கு அப்புறம்தான் நடிச்சேன்'' என்று தனக்கான சின்ன இன்ட்ரோ கொடுத்துவிட்டு, அண்ணன் முகம் பார்த்தார் திலீபன். முருகதாஸிடம் பேட்டி தொடர்ந்தது.



 ''தமிழ் சினிமாவில் நிறைய இளைஞர்கள் பளிச்னு முத்திரை பதிச்சிருக்காங்க. கவனிக்கிறீங்களா?''



'' 'பீட்சா’, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படங்கள் ஆச்சர்யப்படுத்தின. தன்னை நிரூபிக்கணும்னு ஒரு இயக்குநர் அஞ்சாறு வருஷம் கஷ்டப்பட வேண்டிய சூழல் இப்போ இல்லை. ஒரு கேமரா இருந்தா தன்னோட கற்பனையை ஷூட் பண்ணி, கம்ப்யூட்டர்ல அவங்களே எடிட் பண்ணி, சின்னச் சின்ன மியூஸிக் சேர்த்து டி.வி.டி. பண்ணி கையில் கொடுத்துர்றாங்க. இந்த டிரெண்ட் பார்க்கும்போது தமிழ் சினிமா வில் இன்னும் நிறைய பவர்ஃபுல் படங்கள் வரும்னு நம்பிக்கை இருக்கு!''



 ''குறும்பட இயக்குநர்கள் சினிமாவில் சாதிப்பது நல்ல விஷயம். ஆனா, முதல் படத்தில் முத்திரை பதிச்ச பலர் இரண்டாவது படத்தில் சறுக்கிடுறாங்களே?''



''அதே ஃபார்முலாதான். சினிமாவில் நிறையக் கத்துட்டே இருக்கணும். முதல் வாய்ப்பில் தன் காதல் அல்லது தன் நண்பனின் காதல்னு ஏதோ ஒரு அனுபவம் அவங்களுக்கு இருக்கும். அது உண்மைக்கு நெருக்கமா இருக்கிறதால ரசிகர்களும் ரசிப்பாங்க... சிரிப்பாங்க... கை தட்டுவாங்க. படமும் ஹிட் ஆகிடும்.




ஆனா, ரெண்டாவது படமும் அப்படிப் பண்ண முடியாது. த்ரில்லர், ஆக்ஷன், குடும்ப உறவுகள், சமூக நலன் சார்ந்த படம்னு வேற வேற தளத்தில் டிராவல் பண்ண ணும். 'மோகமுள்’ மாதிரியான கதைகள் படிக்கும்போது ஒரு வாழ்க்கை வாழ்ந்த மாதிரி இருக்கும். அந்த மாதிரி நிறையப் படிக்கணும். சின்னச் சின்ன விஷயங்களையும் ரசிக்கும் மனசு, கற்பனைத் திறன், வாசிப்புப் பழக்கம் இருந்தா 'அழகி’, 'ஆட்டோகிராஃப்’ மாதிரி படங்களை இருபது வயசுலயே எடுக்கலாம். ஒவ்வொரு நிமிஷமும் நம்மளைச் சுத்தியே நிறைய சினிமா ஓடிட்டு இருக்கு. அதுல இருந்து சீன் பிடிச்சாலே, சிக்ஸர் அடிக்கலாம்!''



நன்றி - விகடன் 

Thursday, October 25, 2012

துப்பாக்கி - ஏ ஆர் முருகதாஸ் பேட்டி @ விகடன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-b5WrP0UhqsLq0ubeVoR0swzCW1ridIDAjsKfy3yCtHlLkgTpaOYES_VzYEY2eeoc5OqJCePQzTJpagYqWM1lgHmmXrNQdDO9ma-vEZ4L87krtjVYw-pi3VEPGBrY0v6_V_or-ojPzes/s1600/383748_303843279635954_286579361362346_1017341_858724782_n.jpg"ஹீரோக்களிடம் இருக்கும் டெடிகேஷன் ஹீரோயின்களிடம் இல்லை!"

எம்.குணா
'துப்பாக்கி’ ஃபர்ஸ்ட் காப்பி பார்த்துவிட்டு வந்து அமரும் ஏ.ஆர்.முருகதாஸ் முகத்தில் திருப்தி ததும்பும் புன்னகை. ''படம் பிரமாதமா வந்திருக்கு. இதுவரை விஜயைப் பிடிக்காதவங்களுக்குக்கூட 'துப்பாக்கி’ விஜயைப் பிடிக்கும்.



இங்கே படம் எடுக்கிறதுகூடக் கஷ்டம் இல்லைங்க... படத்துக்கு ஏத்த தலைப்பு பிடிக்கத்தான் போராட் டமா இருக்கு. ஐந்நூறு ரூபாயைக் கட்டிட்டு கோர்ட்ல கேஸ் போட்டுர்றாங்க. இப்பதான் பெரிய நிம்மதியா இருக்கு!'' - 'துப்பாக்கி’ தலைப் பைத் தக்கவைத்துக்கொண்ட உற்சாகத்தோடு பேசினார் முருகதாஸ்.




 ''தொழில்நுட்பம் இந்த அளவுக்கு வளர்ச்சி அடையாத காலத்தில் 'குரு சிஷ்யன்’ படத்தை எஸ்.பி.முத்துராமன் 24 நாட்களிலேயே முடித்தார். படமும் ஹிட். ஆனால், இப்போது ஒரு ஹீரோவை வைத்து இயக்கும் படத்தை ஒவ்வோர் இயக்குநரும் வருஷக் கணக்கில் இயக்குவது சரியா?''  



''உங்கள் குற்றச்சாட்டு உண்மைதான். நான் என்னையும் சேர்த்துதான் சொல்றேன். ஷூட்டிங், கால்ஷீட், பயணம்னு எதைப் பத்தியும் தெளிவான திட்டமிடல் இல்லை. அதுவும் போக, இப்போ தமிழ் சினிமாவுக்கு உலகம் முழுக்க மார்க்கெட்.


 சின்னமனூர் செல்வராசுக்கும் படம் பிடிக்கணும்; சின்சினாட்டி விக்கியையும் படம் அசத்தணும். அதுக்கான மெனக்கெடல், தரம் இதுக்கெல்லாம் ஒண்ணு, ரெண்டு வருஷ உழைப்பு தேவைப்படும்தான். அதைத் தப்பு சொல்ல முடியாது.''



''இந்தி சினிமாவில் உங்களுக்கு மார்க்கெட் இருக்கு. ஒரு தமிழ் ஹீரோவை வெச்சு இந்தியில் படம் பண்ணணும்னா யார் உங்க சாய்ஸ்?''



''விஜய், அஜித், சூர்யா... மூணு பேருமே என் சாய்ஸ்தான். இந்தியில் எனக்கு மட்டும் இல்லை... இவங்களுக்கும் நல்ல ஓப்பனிங் இருக்கு. 'துப்பாக்கி’ ஷூட்டிங் நடந்தப்போ, மும்பையில் எங்கே வெச்சு விஜயைப் பார்த்தாலும் அடையாளம் கண்டுபிடிச்சு, சேர்ந்து சேர்ந்து நின்னு போட்டோ எடுத்துக்கிறாங்க இந்திவாலாக்கள்.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjXJhCc7jf3go_t6dhz_4LaKuLii5a63a36ERZq-G4oV9doCZxF_3r5ihE89wxMsX6qI9e0nFsisehXBPh-uqcLIcQuQ8YulhN-YFq9HXzQKSGulrZ8kNlhbGqVL3eTWT9r57QJYM9dmo/s1600/0.jpg


அவருக்கே அது ஆச்சர்யமா இருந்துச்சு. விஜய்க்குள்ள ஒரு பிரமாதமான நடிகன் இருக்கான். இன்னும் சரியான தீனி கிடைக்காமத் தவிச்சுட்டு இருக்கான். அஜித் ஸ்க்ரீன்லதான் சாஃப்ட்டா இருக்கார். நேர்ல பழகும்போது அவர்கிட்ட இயல்பாவே இருக்கும் ஆக்ரோஷம், எமோஷன் எல்லாம் பிரமிப்பா இருக்கும். அஜித்தின் அந்த ராவான எனர்ஜிக்கு ஏத்த கதையில் இன்னும் அவர் நடிக்கலை. ஆக்ஷனோ, காதலோ... டபுள் செஞ்சுரி அடிச்சுட்டுப் போயிருவார் சூர்யா. இவங்க மூணு பேருக்கும் ஏத்த கதைகளை அமைச்சுட்டு நானே அவங்க ஒவ்வொருத்தரையும் இந்தியில் இயக்குவேன்.''




''அது என்ன... சினிமா விழாக்களில் நடிகைகளைப் பற்றிப் பேச்சு வந்தால் நீங்க சட்டுனு கோபப்படுறீங்க?''



''அந்த அளவுக்கு சிலர் என் மனசைக் காயப்படுத்தி இருக்காங்க. என் படத்தில் நடிச்ச ஒரு நடிகை பண்ண அலட்டல், பந்தா எல்லாம்... வேண்டாங்க... நினைச்சாலே சங்கடமா இருக்கு. ஹீரோ வர்ற காட்சி மட்டும் இல்லை, படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரமாதமா இருக்கணும்னு இழைச்சு இழைச்சு வேலை பார்ப்பேன் நான்.


 படத்துல ஒரு சீன்கூடத் தேவை இல்லாம இருக்கக் கூடாதுனு மொத்தத் திரைக்கதையையும் இறுக்கிப் பக்காவா வெச்சிருப்பேன். ஆனா, அந்த நடிகை 'எனக்குப் படத்துல தனியா பாட்டு வேணும்’னு  அடம்பிடிச்சாங்க. அவர் நல்லாத் தமிழ் பேசுவார். குரலும் நல்லா இருக்கும். அதனால, அவரோட சொந்தக் குரல்லயே டப்பிங் பேசச் சொன்னேன்.


http://www.vikatan.com/av/2012/06/mgqwyz/images/p14b.jpg



ஆனா, அதுக்கு பத்து நாள் எக்ஸ்ட்ரா கால்ஷீட் ஆகும்னு தவிர்த்தார். இத்த னைக்கும் என் படங்களில் ஹீரோக்களுக்குச் சரிசமமான ஸ்கோப் ஹீரோயின்களுக்கும் இருக்கும். அதான் சொல்றேன்... இங்கே ஹீரோக்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு சில நடிகைகளுக்குச் சுத்தமா இல்லை. இதோ இப்போ 'துப்பாக்கி’யில் நடிச்ச காஜலுக்கு கற்பூரப் புத்தி. நான் நினைச்சதுக்கும் மேல பெர்ஃபார்மன்ஸ் பண்ணி அசத்திட்டாங்க.''




''அது என்ன... 'மாற்றான்’ தொடர்பான உங்க ட்விட்டர் கமென்ட்ல 'பாப்பா, தள்ளிப்போய் விளையாடு’னு சொல்லி இருந்தீங்க. கே.வி.ஆனந்த், சூர்யா... யார் மேல கோபம்?''



''நான் உதவி இயக்குநரா இருக்கும்போதே, ஒளிப்பதிவில் கே.வி.ஆனந்த் சார் ஜாம்பவான். ஒரு சீனியரா அவர் மேல் எனக்கு எப்பவும் மதிப்பு, மரியாதை உண்டு. சூர்யா என் மேல அன்பும் அக்கறையும்கொண்ட நண்பர். அவங்க ரெண்டு பேரையும் காயப்படுத்துறது என் நோக்கம் இல்லை. போன ரெண்டு மாசமாவே யாரோ ஒருத்தர், வேணும்னே என்னைப் பத்தி தப்புத் தப்பா ட்விட்டர்ல கமென்ட் பண்ணிட்டு இருந்தார். அவருக்கு நான் சொன்ன பதில்தான், 'பாப்பா, தள்ளிப்போய் விளையாடு.’ மத்தபடி அதுல வேற எதுவும் இல்லை!''

 நன்றி - விகடன்



http://www.glamourfm.com/wp-content/uploads/2011/03/Kajal-Agarwal-Hot-Photoshoot-in-Red-Dress-6.jpg

Thursday, August 04, 2011

ஏழாம் அறிவு மெகா ஹிட் ஆகும் - ஏ ஆர் முருகதாஸ் பேட்டி VS விகடன் காமெடி கும்மி

http://www.thedipaar.com/pictures/resize_20100830141958.jpg

இது 2,000 வருட ரகசியம்!

ஏழாம் அறிவு ஆல்பம்


மாஸ் ப்ளஸ் கிளாஸ் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸின் 'ஏழாம் அறிவு’ படத்தைத் தமிழ் கூறும் நல்லுலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது


''140 நாட்கள் ஷூட்டிங்...  நீங்க கற்பனையே பண்ண முடியாத கலர்ஃபுல் கனவை நனவாக்கிட்டோம். அர்த்தம் உள்ள பிரமாண்டம்னு சொல்லலாம். உதயநிதி ஸ்டாலின் அதற்குப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். 'ஏழாம் அறிவு’ படத்தின் ஸ்பெஷல் என்னன்னா, இதில் பீரியட் ஃபிலிமையும் சயின்ஸ் ஃபிக்ஷனையும் கலந்து இருக்கேன்.



 சி.பி - இதே டயலாக்கைத்தான் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படம் எடுக்கறப்பவும் சொன்னாரு.. பார்ப்போம்.. 



தமிழ் ஆடியன்ஸுக்கு நிச்சயம் இந்தப் படம் பெரிய ஆச்சர்யம் கொடுக்கும். ஒவ்வொரு தமிழனுக்கும் 'நான் யார் தெரியுமா?’னு பெருமையா நினைக்கவைக்கிற படமா இருக்கும். ஓவர் பில்ட்-அப் எதுவும் கொடுக்கலை. 'ஏழாம் அறிவு’ வந்தா 'கஜினி’ எல்லாம் ஓரமா ஒதுங்கி நிக்கும். நான் இவ்வளவு நம்பிக்கை யாப் பேசும் அளவுக்குப் பிரமாதமா வந்திருக்கு படம்!''


சி.பி - ஆனா ஒரு மெகா ஹிட் கொடுத்தவர் அடுத்து வர்ற படங்கள்ல அடக்கி வாசிக்கறது தான் தமிழ் சினிமா செண்ட்டிமெண்ட்.. உதா சின்ன தம்பி, கேப்டன் பிரபாகரன் , பாட்ஷா

 சி.பி - இந்த ஸ்டில்ஸை பார்த்தா புதுமைப்பித்தன் ஆர் பார்த்திபன் கெட்டப் தான் நினைவு வருது,  விக் நல்லாவே தெரிது, துருத்திட்டு இருக்கு, ஆனா சிக்ஸ் பேக் சூப்பர்.. வெல்டன் சூர்யா,வெல் நாட் டன் மேக்கப்மேன்

1.'' 'ஏழாம் அறிவு’ன்னா என்ன?''
'' 'ஏழாம் அறிவு’ன்னா... அது DNA-க்களின் ரகசியம். அந்த ரகசியத்தை நான் கொண்டுவந்திருக்கேன். தமிழர்களின் நாகரிகம் மிகச் சிறந்தது. ஆனால், நாம் அதைப் புத்தகங்களிலும், வரலாற்றுச் சுவடிகளிலும் மட்டும் படிச்சுத் தெரிஞ்சுக்கிறோம். வெள்ளைக்காரங்க அந்தப் பெருமைகளை மறக்கடிச்சு, வறுமையை மட்டும் அறிமுகப்படுத்திட்டுப் போயிட்டாங்க. இந்த உலகத்துக்கு நாம் என்னவெல்லாம் கொடுத்தோம் என்பதை மறந்து, தாழ்வு மனப்பான்மையில் விழுந்துகிடக்குறோம். 2,000 வருடத்துக்கு முந்திய காலத்தையும், இந்த நாளையும் இதில் இணைச்சு இருக்கேன். 

 சி.பி - அய்யய்யோ, பீரியட் ஃபிலிமா? கொஞ்சம் கஷ்டம் தான்.. 


அதனால்தான், இதை ஒரு ரெகுலர் சினிமா இல்லைன்னு சொன்னேன். 500 வருஷங்களுக்கு முன் காட்டுவாசிகளா இருந்த அமெரிக்கர்களும் ஆஸ்திரேலியர்களும் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்கும்போது, தொன்மையான பாரம்பரியம் உள்ள நம்மால் ஏன் முன்னேற முடியலை? இது எல்லாத்தையும் படத்தில் சொல்லப்போறேன்!''


சி.பி - அண்ணன் சொல்றதைப்பார்த்தா அப்போகாலிப்டாவை கொஞ்சம்,காட்ஸ் மஸ்ட் பீ க்ரேஸி கொஞ்சம் உல்டா பண்ணீட்டார் போல. 

http://pirapalam.net/wp-content/uploads/2010/11/Shruti-Haasan-_12__001.jpg


'2. 'நீங்க சொல்றதைப் பார்த்தா... சூர்யாவோட கேரியர்ல பெஸ்ட் படமா இருக்குமா?''

''நிச்சயமா! சூர்யா, அடுத்து என்ன படம் பண்ணினாலும், இதுதான் அவருக்கு சவாலா இருக்கும். இதில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலந்த சண்டைகள் வருது. ஒரு மாசம் சூர்யா வியட்நாமில் தங்கிப் பயிற்சி எடுத்துக்கிட்டு வந்தார். அங்கே இருந்து அந்தச் சண்டைகளில் பிரபலமான இரண்டு பேரை அழைச்சிட்டு வந்தார். அவங்களோட சண்டைகளைக் கத்துக்கிட்டு, அவங்களுக்கே சவால் தரும்படி ஃபைட் பண்ணினார். சிக்ஸ்பேக் வெச்சுக்கிட்டு சண்டை போடுறது சிரமமான விஷயம். சிக்ஸ்பேக் வெச்சா, அளவாத்தான் தண்ணீர் குடிக் கணும். இவ்வளவுதான் சாப்பிடணும்னு ரூல்ஸ் இருக்கு. இது எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு, படத்துக்காகத் தன்னை அவ்வளவு வருத்தி இருக்கார் சூர்யா. நேரில் சொன்னால், நன்றி... கூச்சமா மாறிடும். ரொம்ப தேங்க்ஸ் சூர்யா!''


சி,.பி - எனக்குள் ஒருவன் கமல் கெட்டப் மாதிரி இருக்கும்னு நினைக்கறேன் .


3. ''ஸ்ருதிக்கு தமிழில் இது முதல் படம். எப்படி இருக்காங்க?''

சி.பி - அவங்க எப்பவும் போல் லோ ஹிப்ல , லோ கட்ல தான் இருக்காங்க. ஸ்டில்ஸ் எல்லாம் பார்க்கலை? அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கு போல.. 


''சும்மா டூயட்டுக்கு மட்டும் வந்து போற கேரக்டர் இல்லை. அவங்களுக்கு எல்லாமே பெரிய பெரிய டயலாக்ஸ். கமல் சார் பொண்ணுனு நாங்க சலுகை காட்டலை. அவங்களும் அதை எதிர்பார்க்கலை. இந்தப் படத்துக்கு என்ன தேவையோ, அதை அழகாக் கொடுத்து இருக்காங்க. தமிழில் திறமையான இன்னொரு ஹீரோயின் ரெடி. அதுவும் தமிழ் தெரிஞ்ச ஹீரோயின். சந்தோஷம்தானே!''

சி.பி - பெரிய டயலாக்னா எப்படி? அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அப்டியா?


4. ''ஏ.ஆர்.முருகதாஸ், ஹாரிஸ் ஜெயராஜ் இசை... பேசப்படுகிற கூட்டணியாச்சே...''


''இதிலும் அப்படியே... படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். ஆறாவதா ஒரு சைனீஸ் பாட்டு தேவையா இருந்தது. சீன மொழி தெரிந்த ஒரு கவிஞரைத் தேடினோம். அப்போதான் மதன் கார்க்கிக்கு 'சீன மொழி எழுத, படிக்கத் தெரியும்’னு கேள்விப்பட்டேன். அவர்கிட்ட கேட்டா, 'பாட்டே எழுதுவேன் சார்!’னு எழுதிக் கொடுத்தார். ''இது பாட்டுதானா? நாம் சொன்ன விஷயம் எல்லாம் இந்தப் பாட்டில் இருக்கானு குழப்பமா இருந்துச்சு. சீன மொழி தெரிஞ்சவங்ககிட்ட கிராஸ் செக் பண்ணப்போனா, 'அழகான     கவிதைங்க’னு புகழ்ந்து தள்ளிட்டாங்க. ரொம்ப சீக்கிரமா அப்பா பெயரைத் தாண்டிடுவார் மகன்!''


சி.பி -அப்போ அந்த சைனீஷ் பாட்டை ரசிகர்கள் எப்படி புரிஞ்சுப்பாங்க?ஸ்க்ரீன்ல தமிழ் லைன் ஓடுமா? 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVoSFycCh5UmTwIZMGji1N57EXRu5BNXVWu12xFKD-LXBEYgXNmEb_1LFxuL3Kdl0JP3y0QYAXx_eABfY-TkKS7Uu1QIjLk5VREncaArE6HE0B9LGYlx1fhSZ8Z5EnVcHFfPJRs1FVU1n_/s400/Shruti+Haasan+Barefoot.jpg


5. ''உங்களோட வெற்றிக்குக் காரணம் என்ன?''


''எனக்கு சக்சஸ் பிடிக்கும். சிலர் வெற்றியைப் பார்த்து ஆடக் கூடாது. தோல்வியைப் பார்த்து துவளக் கூடாதுன்னு சொல் வாங்க. நான் அப்படியே ரிவர்ஸ் டைப். வெற்றியைக் கொண்டாடு வேன். தோல்வி கிடைச்சா துவண்டு விழுந்திருவேன். வெற்றி யையும் தோல்வியையும் ஒரே மாதிரி எடுத்துக்கிட்டால், அப் புறம் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கு? வெவ்வேறு மாதிரி உணர்ந்தால்தான், வெற்றி, தோல்வி இரண்டுமே உறைக்கும். தோல்வியில் துவண்டு எழுந்தால் தான், அடுத்து பலமா நிக்க முடியும்.


சி.பி - ஆனா ரமணா ஹிட் கொடுத்தப்ப இதே விகடன் பேட்டில இந்தப்படத்தின் வெற்றி என்னை பாதிக்கவில்லை, எப்பவும்போல் தான் ஒர்க் பண்றேன்னு சொன்னீங்களே?
சினிமாவில் சில விஷயங்கள் நீங்க கேட்காமலேயே கிடைக்கும். அதை ரசிச்சு உள்ளே போய் விழுந்துட்டா, உங்க கதை முடிஞ்சது. நான் சினிமாவை 'கேம்’ மாதிரி நினைச்சு விளையாடு றேன். எனக்கு ஃபைனல் கோல் தான் முக்கியம். இடையில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்கள் எதுவும் வேண் டாம். என்கிட்டே வெற்றிக்கு வேறு மந்திரம் எதுவும் இல்லை!''


சி.பி - வாழ்க்கையில் கிடைக்கும் சின்ன சின்ன சந்தோஷங்கள் வேணாமா? அதான் சார் வாழ்க்கையில் பெரிய விஷயம்.. 

http://news.top10recent.com/wp-content/uploads/2011/01/Shruti-Hasan-New-hot-photos-1-600x746.jpg