Showing posts with label அரசியன். Show all posts
Showing posts with label அரசியன். Show all posts

Saturday, March 12, 2011

சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்....சமயம் பார்த்து பல வகையில் கொள்ளை அடிக்கிறார்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8rcUaR_CKR-jO8PSEz4ZObOh1vP6-XjVS0uji6cRSrPVoXbnCvKmCnM-dJGf6lgtRbZdcJ106Xm3F4bI3a8hiBPuFSWUoElOTCdA8VnJrfQBsJ1Ripch10GDQIr-cpNvvsuO6pVOoM3Z8/s400/pg2a.jpg 

1. பிரதமர் மன்மோகன் சிங்: தவறான கணிப்பின் காரணமாக, மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டுவிட்டார். இதற்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

உங்களுக்கு அந்த அளவுக்கு பவர் இருக்கா..? சொக்கத்தங்கம் சோனியா ஓக்கே சொல்லீட்டாங்களா?

------------------------------------------

2. கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி: காங்கிரஸ் கட்சி, ஒழுக்கக் கட்டுப்பாட்டை தீவிரமாக கடைபிடித்து வருகிறது. அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்கள் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்க வேண்டும்.

ஒழுக்ககட்டுப்பாடுன்னா.. என்ன அர்த்தம்? தலைமைக்கு தெரியாம எந்த ஊழலையும் பண்ணக்கூடாதுன்னு அர்த்தமோ?

-----------------------------------------------

3. மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன்: மார்க்சிஸ்ட் கட்சி ஊழல், தாராளமயமாக்குதல் ஆகியவற்றுக்கு எதிரானது. ஆகவே, தி.மு.க.,வுடன் உடன்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க.,. தரப்பில் இருந்து தேர்தல் உடன்பாடு குறித்து பேசுவதற்காக மார்க்சிஸ்ட் கட்சிக்கு அழைப்பு வந்துள்ளது. இரு கட்சிகளின் குழுவினரும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச இருக்கிறோம்.

வெற்றி வாய்ப்பு உள்ளவருடன் மட்டுமே கூட்டணிங்கறது உங்க கொள்கை போல...

---------------------------------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCMPY28JroG8kKRc0xzSsU7zNQBynJihPeKbUFD3LwRrMkH6OpD_vsQu0OBTZ6tA9R_Vh4CgofhjdyG9gaWnbRTfScmS67JgvsrdS-78f1xRBEE5_6X7mVNYJrpsbx2pEexN-wUpoEf1rv/s1600/tamilmakkalkural_blogspot_sonia.jpg
4. மத்திய உரத் துறை அமைச்சர் அழகிரி பேட்டி: தி.மு.க., - காங்கிரஸ் நல்லுறவில் விரிசல் என்று, ஊடகங்களில் தான் பெரிதுபடுத்தப்பட்டது. ஆனால், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில், எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை; இரு கட்சித் தொண்டர்களும், இணைந்து பணியாற்றுவோம். எங்கள் கூட்டணி மக்கள் ஆதரவுடன் மகத்தான் வெற்றியைப் பெறும்.


அதெல்லாம் சரி.. உங்களுக்கு அப்புறம் வந்தவங்க எல்லாம் ஏகப்பட்ட ஊழல்ல மாட்டி இருக்காங்க.. நீங்க வெறும் வாய்தான்.. இது வரை ஒரு ஊழல்ல கூட மாட்டலையே.. அம்புட்டு நல்லவரா நீங்க..?

-------------------------------------------------
5. என்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பேச்சு: முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு எனக்கு கட்சித் தலைமை கட்டளையிட்டது. கட்சித் தலைமையின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அப்பதவியை ராஜினாமா செய்தேன். அதன் பின் முதல்வர் வைத்திலிங்கம் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த ஆட்சியில், மக்களுக்கு எந்த புதிய திட்டங்களும் அமல் செய்யவில்லை. பொய்யான குற்றச்சாட்டுக்களை என் மீது சுமத்தி முதல்வர் பதவியில் இருந்து என்னை விலகுமாறு கூறிய சோனியா, தற்போது நடக்கும் மோசமான ஆட்சியை கண்டிக்கவில்லை.

எப்படிய்யா கண்டிப்பாங்க..?ஒரு  அயோக்கியனை மிரட்டனும்னா முதல்ல நாம யோக்கியமா இருக்கனும்...

---------------------------------------

6. மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் பேட்டி: இரு ஓய்வு பெற்ற அதிகாரிகள், ஒரு பணியிலுள்ள அதிகாரி ஆகிய மூன்று பேரை சி.வி.சி., பதவிக்கு பணியாளர் மற்றும் பயிற்சித்துறை பரிந்துரை செய்தது. இந்த விஷயத்தில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. இது குறித்து பிரதமர் கூறியிருப்பது மிகச் சரியானது. எல்லாவற்றையும் அவரே போய்ப் பார்க்க முடியாது. அவர் முன், என்னென்ன விவரங்கள் வைக்கப்பட்டனவோ அவற்றைக் கொண்டுதான் அவர் முடிவெடுக்க முடியும்.

ஆமாமா.. எல்லாத்தையும் அவரே பார்க்க முடியாதுதான்.. ஆனா பேசுனபடி கமிஷன் தொகையை மட்டும் சரியா தராம டபாய்ச்சசிடறாங்க.. அதான் இப்போ பிரச்சனை

--------------------------------------


http://img.dinamalar.com/data/images_news/tblcatroon_67855471373.jpg
7. முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேச்சு : தேர்தல் நேரத்தில் கட்சியினர் உண்மைகளை திரித்துக் கூறுவதை தவிர்த்தால், பிரச்னைகள் வருவதை தடுக்கலாம். ஜாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையில், கட்சியினரின் பேச்சு அமையக் கூடாது.

ஜாதி ஓட்டுக்களை எப்படித்தான் அவங்க வாங்குவாங்க பாவம்..?நல்ல ஜாதில பொறந்திருந்தா எதுக்கு ஜாதி அரசியலுக்கு வர்றானுங்க..?

----------------------------------

8. முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேச்சு: அரசின் நல்ல திட்டங்களை வரவேற்றோம்; பிடிக்காத திட்டங்களை எதிர்த்தோம். டாஸ்மாக், சாராயம், லாட்டரியை எதிர்த்தோம். இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து எதிர்க்கத்தான் போகிறோம்; இது நம் கொள்கை. இதை மாற்றிக் கொள்ள முடியாது.

ஏம்ப்பா அவ்வளவு கஷ்டம்.. ஏன் கூட்டு சேர்றீங்க? நீங்க சொல்றது எப்படி இருக்குன்னா பொண்டாட்ட்டி நடத்தை தவறுனா கண்டிப்போம்னு சொல்ற மாதிரி இருக்கு. காலுக்கு ஆகாத செருப்பு எதுக்கு.. யோக்கியமா இருந்தா அதை கழட்டி எறிய வேண்டியது தானே,..?

-------------------------------------------

9. வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் பேச்சு: கிராமப்புறங்களில், வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும். இதுவே, பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை. தற்போது, தகவல் தொழில்நுட்பமானது, நகரங்களை மையப்படுத்தியே உள்ளது; இது, கிராமங்களை சென்றடைய வேண்டும். தகவல் தொழில்நுட்பத்தின் இத்தகைய மாற்றம் தான் உலகளவில் இந்தியாவை உயர்த்த உதவும்.

கவர்னர் ஆட்சி வந்தாத்தான் தமிழனுக்கு நல்ல காலம் பொறக்கும். இந்த அரசியல்வியாதி வந்தானுங்கன்னா சுரண்டீட்டே தான் இருப்பாங்க..சுரண்டுற அளவு மாறும், ஆனா சுரண்டறது மாறாது..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjy5STpTSLTgoMi9hNc9B54g8By-uFdcZ5VZNEtG77CLxg8Axsa-X9zk9jKnETHMonpJbG1imPyfFBBmD3Zhbp6HGr6-31ps7P-tns6VrCXmuSVexSWxxko1AOv-BO1tda9I-R0yj5l8RA/s400/mgr_jaya.jpg
-------------------------------------
டிஸ்கி -1 : இன்று டிஸ்கில எந்த மேட்டரும் இல்ல.. ஏன்னா பதிவுங்கறது நாம போய்ப்பார்க்கற பொண்ணு மாதிரி.. டிஸ்கிங்கறது பொண்ணுக்கு தோழி மாதிரி.. சும்மா சப்போர்ட்டுக்கு.. ஆனா நம்மாளுங்க என்ன பண்றாங்க ? பொண்ணை விட பொண்ணோட தோழி நல்லாருக்கே அப்படின்னு கமெண்ட் பண்ணிடறாங்க..ஹி ஹி

டிஸ்கி 2 -  பாருங்க அட்ரா சக்க போடற டிஸ்கி ல கூட கருத்து இருக்கு.. நாம தெரிஞ்சுக்க வேண்டிய நீதி என்னான்னா பொண்ணு பார்க்கப்போறப்ப பொண்ணோட தோழியையோ, பொண்ணோட தங்கையையோ சைட் அடிக்கறது தப்பு...அப்படியே அடிச்சாலும் அதை வெளில சொல்லக்கூடாது.. ஹி ஹி


Sunday, October 10, 2010

ஏடாகூட எஸ் எம் எஸ் ஜோக்ஸ் 18 + ,36+,54+

1


1. ஊர்ல பத்து ,பதினஞ்சு ஃபிகருங்களை கரெக்ட் பண்ணுனவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்.ஒரே ஒரு ஆண்ட்டியை கரெக்ட் பண்ணிட்டு நான் படற அவஸ்தை இருக்கே,அய்யய்யோ,,.. -சுவாமி நித்யானந்தா (நன்றி -நண்பேண்டா)


2.காதலன் - டியர்,சினிமாக்கு போலாமா?

காதலி - ம்ஹூம்,நீ  தியேட்டர்ல என்னை இருட்ல கிஸ் பண்ணுவே.


காதலன் - ம்ஹூம்,பண்ணமாட்டேன்.

காதலி - என் இடுப்பை கிள்ளுவே.

காதலன் - ம்ஹூம்,அப்ப்டி எல்லாம் பண்ணமாட்டேன்.

காதலி - வரம்பு மீறி நடந்துக்குவேன்.

காதலன் - பிராமிஸ்ஸா அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்.

காதலி - அப்புறம் என்ன இதுக்கோசரம் உன் கூட சினிமாக்கு வரனும்?


3. உங்கள் சன் டிவியில் புத்தம்புதிய சூப்பர் ஹிட்  ஹாலிவுட் படங்கள் தமிழில்

1,ஆத்தா திரும்பி வர்றா (THE MUMMY RETURNS)

2.எட்டு கால் ஏழுமலை ( THE SPIDER MAN)

3.இது வேலைக்கு ஆகாது (THE MISSION IMPOOSSIBLE)

4. கருவாப்பசங்க .(MEN IN BLOCK)

5.ஓட்டையாண்டி (THE HOLLOW MAN)

6.இன்னொரு நாள் செத்துப்போ (DIE ANOTHER DAY)

7. மாமா கதை (THE POLICE STORY).


4 .  பாய்ஸ்னா யாரு?

நரகத்துக்குப்போனாக்கூட “மச்சி,எமனோட ஃபிகரைப்பார்த்தியா?செம கட்டைடா”அப்படிங்கறவங்கதான் .


5.நேத்து நைட் ஒரு பெண்ணை   ரேப்பிலிருந்து   காப்பாத்திட்டேன்.

எப்படிடா?

எல்லாம் ஒரு சுய கட்டுப்பாடுதான் (செல்ஃப் கண்ட்ரோல்)







6.உலகின் மிக மோசமான லீவ் லெட்டர்.

உயர்திரு உயர் அதிகாரி அவர்களே,

என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ,என்னால நாளைக்கு ஆஃபீஸ் வர முடியாது.

இப்படிக்கு ,

தங்கள் கீழ்ப்படிந்துள்ள

அடங்காப்பிடாரி ஆறுமுகம்.


7. நாளைக்கு எனக்கு ரெஜிஸ்டர் மேரேஜ்.எஸ் எம் எஸ் மூலமா கூப்பிடறதுக்கு சாரி,நோ டைம்,திடீர்னு செய்ய வேண்டியதா போச்சு,நாளைக்கு காலைல ரெஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு வந்துடு.ஒரு முக்கியமான விஷயம்,வரும்போது நல்ல ஃபிகரா கூட்டீட்டு வா,அவளைத்தான் மேரேஜ் பண்ணனும்.


8.ஆங்கிலேயனுக்கும் ,இந்தியனுக்கும் ஆர்கியூமெண்ட் நடக்குது.

நாங்க உங்க தாய் நாட்டை 200 வருஷமாநாசம் செஞ்சோம்.

ஹய்யோ,ஹய்யோ,உன்னை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு,நாங்கதான் உன் தாய் மொழியை (ஆங்கிலம்)தினம் தினம் கொன்னுட்டு இருக்கமே?


9.இந்திய ர்கள் கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்க ஆசைப்பட மாட்டாங்க.

இந்திய ர்கள் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்க்கு போக ஆசைப்பட மாட்டாங்க.




இந்திய ர்கள் கவர்மெண்ட்பஸ்ல போக ஆசைப்படமாட்டாங்க,ஆனா

எல்லா இந்தியர்களும் கவர்மெண்ட் வேலை மட்டும் வேனும்னு ஆசைப்படுவாங்க.

10. பொண்ணுங்க மட்டும் புளூஃபில்மை கடைசி வரை பார்பாங்க,ஏன் தெரியுமா?

கடைசில அந்தாளு அந்தப்பெண்ணை கல்யாணம் பண்ணிக்குவானானு பாக்க.


 டிஸ்கி 1 - ஜோக் நல்லாருந்தா அது என் சொந்த ஜோக் என கொள்க,கண்டனத்துக்குரிய ஜோக் என்றால் அது எஸ் எம் எஸ் சில் எனக்கு வந்தது என பொருள் கொள்க.முதல் ஸ்டில் பாணாகாத்தாடி புகழ் சமந்தா (யாரும் எழுத்துப்பிழையாக சமஞ்சா என படிக்கவேணாம்)


டிஸ்கி 2 -  2 வது ஸ்டில் பாலிவுட்டின் ஏஞ்ஜலினா ஜூலி என வர்ணிக்கப்படும் மல்லிகாஷெராவத்  (    மஞ்ச மாக்கான்னு என்னை யாரும் திட்டக்கூடாது.)