Monday, June 27, 2011

நெல்லை பதிவர் சந்திப்பு கடைசி பாகம் -பாகம் 6



பண்டிகைகளும், விழாக்களும் மக்களின் மகிழ்ச்சிக்காக உருவாக்கப்பட்டவை.வீட்டில் ஏதாவது சண்டை,கணவன்,மனைவிக்குள் ஊடல் என்றால் இந்த மாதிரி விழாக்காலங்களில் உறவினர்கள் வீட்டுக்கு வரும்போது அவர்கள் முன் சும்மானாச்சிக்காவது தம்பதிகள் சந்தோஷமாக முகத்தை வைத்துக்கொள்வார்கள்.. அந்நியோன்யமாய் இருப்பது போல் காட்டிக்கொள்வார்கள்.. பிறகு அதுவே தொடர் கதை ஆகிவிடும்..

இது போன்ற உயரிய காரணங்களுக்காகவும்,மனித நேயம் வளர்வதற்காகவும்,உறவுகள் மேம்படுவதற்காகவும் உருவாக்கப்பட்டவைதான் விழாக்கள்..ஊர்த்திருவிழா என்றால் வியாபாரிகளுக்குக்கொண்டாட்டம்.. சுபச்செலவாக இருப்பதால் யாரும் அது பற்றி கவலைப்படுவது இல்லை.. 

பிரபலமான எழுத்தாளர்களை வாசகர்கள் சந்திக்க ஆர்வமாக இருப்பதும், சந்திப்புக்குப்பின் அவன் மனம் ஏமாற்றம் அடைவதையும் நான் கண்டிருக்கிறேன்..  காரணம் அவன் படித்த எழுத்து மூலம் அவனுக்குள் ஒரு கற்பனை  பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பான்.. 

நேரில் சந்தித்து உரையாடிய பின் அவன் கற்பனைகள் தவிடுபொடியாகும்..அவன் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக எழுத்தாளனின் முகம் வெளிப்படும்போது அவன் ஏமாற்றம் அடைகிறான்...

ஆனால் பதிவர் சந்திப்பில் யாரும் அதிகமாக எதிர்பார்த்து வரவில்லை.. ஒவ்வொரு பதிவரின் எழுத்தை மட்டுமே பார்த்தவர்கள் அவர்கள் எப்படிப்பட்ட கேரக்டர்?பழகுவதற்கு எந்த மாதிரி ஆள் என்பதை கண்கூடாக காண முடிவதால் சந்திப்புக்கு பிறகு உறவு பலப்படும் வாய்ப்பே அதிகம்.. 


எல்லா பதிவர்களூம் பேசி முடித்த பின் ஒரு நன்கொடை வசூலிக்கப்பட்டது.. பதிவர்கள் மனம் உவந்து பணம் கொடுத்தனர்.. இதில் சித்ராவும் ,பலாப்பட்டறை சங்கரும் அதிகமான பணம் கொடுத்தனர்.. நான் 100 ரூபாய் கொடுத்தேன்..

மொத்தம் 37 பதிவர்கள் வந்திருந்தனர்.. சராசரி ஆளூக்கு ரூ 50 டூ 100 தருவாங்க, அதிக பட்சம் ரூ 3000 கலெக்ட் ஆகும் என நினைத்தேன்.. ஆனால் ரூ 5615 கலெக்ட் ஆச்சு.. ஆச்சரியம் தான்.. இதில் நெஞ்சை நெகிழ வைக்கும் செய்தி யாரோ ஒரு பதிவர் ஏழ்மை நிலையையும் மீறி ரூ 15 நன்கொடையாக கொடுத்ததுதான் விழாவின் ஹை லைட்..அப்போதுதான் நான் நன்கொடை இன்னும் அதிகமாக கொடுத்திருக்கலாமோ என வருந்தினேன்..

ஒவ்வொரு மனிதனும் அவசரமாக ஒரு செயலை செய்தி முடித்து விடுகிறான்.. பிறகு காலம் எல்லாம் அதை அப்படி செய்திருக்கலாமோ?இதை இப்படி செய்திருக்கலாமோ என நினைத்து நினைத்து வருந்துகிறான்.. இது இயற்கை.. மனித மன விசித்திரம்..

சும்மா வந்து சந்தித்தோம், சிந்தித்தோம் என வாய் வார்த்தைக்காக இல்லாமல் ஏதோ உபயோகமாக செய்த திருப்தி அனைவர் உள்ளத்திலும்..

பதிவர் மீட்டிங்க் முடிந்ததும் சாப்பாடு...


பஃபே சிஸ்டம்..ஒரு ஆள்க்கு ரூ 160 செலவு (உபயம் அண்ணன் உணவு உலகம்).

செம கலக்கலான சைவ சாப்பாடு..


முதல்ல ஒரு சூப் குடிச்சோம்.. அப்புறம் நாண் ரொட்டி ,குருமா , பிறகு வெஜ் ஃபிரைடு ரைஸ்.. தயிர் பச்சடி..

அப்புறம் நார்மல் ஒயிட் ரைஸ் ,ரசம், தயிர்.. அப்பளம், மாங்காய் ஊறுகாய்  என வெளுத்து வாங்கினோம்..

இந்த சாப்பாட்டை செம எஞ்சாய் பண்ணி சாப்பிட்டது இம்சை அரசன் பாபு,வெறும்பய ஜெயந்த்,கல்பனா ,நாஞ்சில் மனோ சாரி லேப்டாப் மனோ இந்த செட் தான்.. ஊஞ்சல்ல உக்காந்துட்டு ஜாலியா பேசிக்கிட்டே கிண்டல் அடிச்சுக்கிட்டே சாப்பிட்டாங்க.. அவங்க என்ன பேசுனாங்க, என்ன கமெண்ட்ஸ் பண்ணாங்க என்பது எல்லாம் இங்கே சொன்னா அது ரொம்ப நீளம் ஆகிடும்.. ஏற்கனவே பதிவை சீக்கிரம் முடிடா ரொம்ப இழுக்காதே என ஏகப்பட்ட மிரட்டல்கள் வருவதால் அவை கட்..

பாபு வும் ,மனோவும் கல்பனாவை மிரட்டி (அன்பு மிரட்டல்) அதை வாங்கிட்டு வா, இதை வாங்கிட்டு வா என அதிகாரம் செஞ்சாங்க.. ஏன்னா இவங்க போனா அடிக்கடி வர்றானே அப்டின்னு இமேஜ் ஸ்பாயில் ஆகிடுமாம்.. 

நாய்க்குட்டி மனசு,சித்ரா,கவுசல்யா இவங்க ஒரு செட்.. டேபிள்ல உக்காந்து சாப்பிட்டாங்க..


பலாபட்டறை சங்கர்,மணிஜி,மணிவண்ணன் ,வலைச்சரம் சீனா,வெடிவால் இவங்க எல்லாம் ரொம்ப நாசூக்கா சாப்பிட்டாங்க..

ஜோசஃபின் அவர் கணவர் கூட  ஸ்டேண்டிங்க்லயே சாப்டாங்க.. அவர் மனைவிக்கு ரொம்ப தான் மரியாதை செலுத்துனார்.. லவ் ஜோடி போல.. நான் கேட்டேன்.. என்ன சார் உக்காந்து சாப்பிடலியா?ன்னு , அதுக்கு அவர் அது எப்படிங்க மனைவிக்கு எதிரே மரியாதை இல்லாம அமர்வது என்றார்..  ஹூம்.. நல்லவேளை.. என் மனைவியை அழைத்து வரவில்லை என நினைத்துக்கொண்டேன்..

நான் நின்னுட்டே தான் சாப்பிட்டேன்.. ஒரு இடத்துல உக்காந்து சாப்பிட்டா எல்லாரையும் நோட் பண்ண முடியாதே?

சாப்பிட்டு முடிச்ச பிறகு எல்லாரும் குரூப் குரூப்பா ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம்..காலேஜ் ஃபைனல் இயர் ஸ்டூடண்ட்ஸ் மாதிரி ஒரு ஃபீலிங்க்..

இறுதி நிகழ்ச்சியா சித்ரா எல்லா பதிவர்களூக்கும் ஸ்வீட் பாக்கெட் குடுத்தாங்க.. உணவு உலகம் அண்ணன் தான் அவங்க கிட்டே நீங்க கொடுங்கன்னு வேண்டுகோள் விடுத்தார்.. அப்பவே என் மைண்ட் 37 பதிவர்களுக்கு அல்வா கொடுத்த ஃபாரீன் பதிவர் சித்ரா.. பதிவுலகம் அதிர்ச்சி அப்டின்னு டைட்டில் வெச்சுடலாமா?ன்னு யோசிச்சுது..

சித்ரா கிட்டே பர்மிஷன் கேட்டேன்.. தம்பி.. நீ பதிவர் சந்திப்பு போஸ்ட்டையாவது எந்த கோணங்கித்தனமும் பண்ணாம உருப்படியா எழுதப்பாரு அப்டின்னாங்க.. ஆஹா.. சி.பி போற பக்கம் எல்லாம் பல்பு வாங்கறானே அப்டின்னு நினைச்சுட்டு டைட்டில் ஐடியா கேன்சல்..ஓக்கே அக்கா அப்டின்னுட்டேன்..

அப்புறம் எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு பிரியா விடை பெற்றோம்.. ( நல்ல வேளை பிரியாங்கற பேர்ல எந்த பதிவரும் இல்லை)


அப்புறம் நான் ,லேப்டாப் மனோ, கோமாளி செல்வா ,லேப் டாப் மனோ மேல நம்பிக்கை இல்லாம அவரோட சம்சாரம் ( தாலி கட்டிய முதல் மனைவி ) பாடிகார்டா அனுப்பின மனோவின் மச்சினன் 4 பேரும் குற்றாலம் போய் வந்தோம்.. அது தனியாக பின்னொரு நாளில் குற்றாலத்தில் கும்மி அடிச்சோம் என்ற தலைப்பில் பதிவு போட்டுக்கலாம்..

இப்போதைக்கு நெல்லை பதிவர் சந்திப்பு போஸ்ட் இனிதே நிறைவு பெறுகிறது.. வாழ்க வளமுடன்,, வாழ்க வையகம்..

டிஸ்கி - பதிவர்சந்திப்புக்கான வீடியோ இணைப்பு கிடைத்தால் அண்ணன் உணவு உலகம் அனுமதியுடன் அதை பதிவாக போடலாமா? என யோசித்து வருகிறேன்..  ..

43 comments:

Unknown said...

பாதிப்புக்குண்டான சிபின்னு தலைப்பு வைக்க மறந்திட்டீங்களோ ஹிஹி!

ராஜி said...

பிரபலமான எழுத்தாளர்களை வாசகர்கள் சந்திக்க ஆர்வமாக இருப்பதும், சந்திப்புக்குப்பின் அவன் மனம் ஏமாற்றம் அடைவதையும் நான் கண்டிருக்கிறேன்.. காரணம் அவன் படித்த எழுத்து மூலம் அவனுக்குள் ஒரு கற்பனை பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பான்..
>>>
ரொம்ப சரியான வார்த்தைகள்.

ராஜி said...

அப்புறம் நார்மல் ஒயிட் ரைஸ் ,ரசம், தயிர்.. அப்பளம், மாங்காய் ஊறுகாய் என வெளுத்து வாங்கினோம்.
>>>>
அப்போ அப்நார்மல் ஒயிட் ரைஸ்னு ஈரோடுல இருக்கா என்ன‌?! எனக்கு தெரியாது அப்படி இருந்தால் பார்சல் அனுப்புங்க சிபி சார்.

கடம்பவன குயில் said...

சாப்பாட்டுடைம்ல சாப்பாட்டு மெனு பெயர்எல்லாம் ்சொல்லி ஏன் இப்படி எங்களை கடுப்பேத்தறீங்க. நீங்க அட்டெண்ட் பண்ணிட்டு நல்லா சாப்பிட்டு என்ஜாய் பண்ணிட்டு வந்துட்டீங்கள்ள. ரொம்ப சந்தோசம். விலாவாரியாக குற்றாலம் டுர் எல்லாம் சொல்லி வெறுப்பேத்தாதீங்க.

அமைதி அப்பா said...

பதிவர் சந்திப்பு பதிவுகள் அனைத்தும் நன்று.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//37 பதிவர்களுக்கு அல்வா கொடுத்த ஃபாரின் பதிவர் சித்ரா - பதிவுலகம் அதிர்ச்சி// ன்னே டைட்டில் வெச்சிருக்கலாம். அவங்ககிட்ட போய் பர்மிஷன் கேட்கலாமோ!

இந்தப்பதிவும் நல்ல நகைச்சுவையாக அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

செங்கோவி said...

//பதிவர்சந்திப்புக்கான வீடியோ இணைப்பு கிடைத்தால் அண்ணன் உணவு உலகம் அனுமதியுடன் அதை பதிவாக போடலாமா? என யோசித்து வருகிறேன்.. ..// அதைப் போடும்யா முதல்ல..

Menaga Sathia said...

உங்களுக்கே உரிய நகைச்சுவையில் எழுதி கலக்கிட்டீங்க...எனக்கு மட்டும் ரகசியம் சொல்லுங்க மனோ சாரின் 2வது மனைவி யார் <????

உணவு உலகம் said...

////பதிவர்சந்திப்புக்கான வீடியோ இணைப்பு கிடைத்தால் அண்ணன் உணவு உலகம் அனுமதியுடன் அதை பதிவாக போடலாமா? என யோசித்து வருகிறேன்.. ..//
காப்பி ரைட் படங்கள் எல்லாம் கேட்டுக்கிட்டா போடுறீங்க. சும்மா போட்டு கலக்குங்கண்ணே! என்னை பொருத்தவரை நோ பர்மிஷன் நீடட் ஃப்ரம் மீ:))

சி.பி.செந்தில்குமார் said...

@FOOD

அண்ணே அது எங்களூக்கு தெரியாதா?ஃபிகர்ட்ட ஐ லவ் யூன்னு ஓப்பனா சொல்லிட முடியுமா? உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு முத பிட்டை போடறோமே அது மாதிரி தான் .. ஹி ஹி (இந்த உதாரணம் உங்க டைரில இருந்து சுட்டது ஹி ஹி )

MANO நாஞ்சில் மனோ said...

டேய் நீ பத்து தடவை புஃபே கவுன்டருக்கு திங்க போனதும் அங்கே இருந்த சர்வர் ஆப்பையை உன் மண்டையில் போட்டதையும் ஏண்டா சொல்லலை மூதேவி....?

MANO நாஞ்சில் மனோ said...

டேய் பரதேசி, அண்ணனுங்க சாப்பிட உக்காந்தா தங்கச்சி சாப்பாடு கொண்டு வந்து பரிமாரதான் செய்வாள். உனக்கு ஏண்டா காதுல புகை வருது ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி......

சக்தி கல்வி மையம் said...

மாப்ள எவ்ளோ சீக்கிரம் முடிச்சிட்டா? அந்த குற்றாலம் மேட்டர் எப்போ?

MANO நாஞ்சில் மனோ said...

டேய் டேய் டேய் "முதல் மனைவி" அப்பிடி இப்பிடின்னு குடும்பத்துல ஏண்டா குழப்பத்தை உண்டு பண்ணுற நாயே நான் ஊர்ல வேற இருக்கேன் [[அவ்வ்வ்வ்வ்வ்]]"சீவலப்பேரி" அருவாளோட என் மச்சினனுங்க வந்துர போரானுங்கடா டுபுக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

டேய் நாயே, குற்றாலத்துல குரங்கு உன் காலை ஏன் கடிச்சதுன்னு மறக்காம போடுடா கொய்யா..........

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
டேய் பரதேசி, அண்ணனுங்க சாப்பிட உக்காந்தா தங்கச்சி சாப்பாடு கொண்டு வந்து பரிமாரதான் செய்வாள். உனக்கு ஏண்டா காதுல புகை வருது ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி......//
விடுங்க மனோ, பொன்னுங்கள கூடப் பொறந்தவளா சிபி என்னைக்கு நினைக்க! ஜொள்ளு பார்டிட்ட நியாயம் எதிர்பார்ப்பது வேஸ்ட்.

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
பாதிப்புக்குண்டான சிபின்னு தலைப்பு வைக்க மறந்திட்டீங்களோ ஹிஹி!//

ஆமா ஆமா பத்து பேர் சாப்பாட்டை ஒத்தைக்கு தின்னுட்டு, பஃபே கவுன்டர்ல இருந்தவங்களை அலறி ஓட வச்சது தெரியுமாய்யா உனக்கு......

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@FOOD

அண்ணே அது எங்களூக்கு தெரியாதா?ஃபிகர்ட்ட ஐ லவ் யூன்னு ஓப்பனா சொல்லிட முடியுமா? உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு முத பிட்டை போடறோமே அது மாதிரி தான் .. ஹி ஹி (இந்த உதாரணம் உங்க டைரில இருந்து சுட்டது ஹி ஹி )//

டேய் டேய் நீ திருந்தவே மாட்டேடா ஸ்டுப்பிட்.......

MANO நாஞ்சில் மனோ said...

FOOD said...
//MANO நாஞ்சில் மனோ said...
டேய் பரதேசி, அண்ணனுங்க சாப்பிட உக்காந்தா தங்கச்சி சாப்பாடு கொண்டு வந்து பரிமாரதான் செய்வாள். உனக்கு ஏண்டா காதுல புகை வருது ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி......//


விடுங்க மனோ, பொன்னுங்கள கூடப் பொறந்தவளா சிபி என்னைக்கு நினைக்க! ஜொள்ளு பார்டிட்ட நியாயம் எதிர்பார்ப்பது வேஸ்ட்.//

இன்னொருக்கா அவன் என் கையில அம்புட்டான்னா அவன் தோலை உரிச்சி புடுவேன் ஆபீசர்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே அண்ணே முடிஞ்சிருச்சாண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சாப்புடும்போதாவது எங்களை நெனச்சுப்பாத்திருக்கலாம்.....

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

நல்ல பதிவில் கூட டபுள் மீனிங்க்கில் கமெண்ட் போடுபவர்களூக்கு என்ன தண்டனை தரலாம்? என கருட புராணம் தேடுகிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

நல்ல பதிவில் கூட டபுள் மீனிங்க்கில் கமெண்ட் போடுபவர்களூக்கு என்ன தண்டனை தரலாம்? என கருட புராணம் தேடுகிறேன்/////////

அப்படியே டீசண்ட்டா கமெண்ட் போட்டாலும் டபுள் மீனிங்கில் பார்த்து சந்தோசப்படுறவங்களுக்கு என்ன தண்டனைன்னும் பாத்து சொல்லுங்க...

குரங்குபெடல் said...

Cp- yum Ezhuduraram Centimentala . . .!?

Thanks

சுதா SJ said...

முடிந்து விட்டதா ???
இன்னும் கொஞ்சம் தொடர்ந்து இருக்கலாம் என்று தோணுது .

Shiva sky said...

உணவின் மொத்த செலவைவும் ஏத்துக்கிட்ட நபர் யாரோ..?

கவி அழகன் said...

கலக்கோ கல்க்கெண்டு கலக்கிறிங்க பாஸ்


தனியாக காத்திருப்பேன்

http://kavikilavan.blogspot.com/

செல்ல நாய்க்குட்டி மனசு said...

//நான் நின்னிட்டே தான் சாப்பிட்டேன். உட்கார்ந்து சாப்பிட்டா எல்லோரையும் நோட் பண்ண முடியாதே //
இது வேற நடந்ததா?
அது சரி CP நீங்க எழுதியதை copy -paste பண்ண முடியலியே? மேலே உள்ள வரியை மறுபடியும் டைப் பண்ணி தான் போட வேண்டி இருக்குது

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

பிரபலமான எழுத்தாளர்களை சந்திக்கும்போது ஏற்படும் ஏமாற்றம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் நான் எழுத ஆரம்பித்த பிறகு நானும் ஒரு எழுத்தாளராகத்தான் சந்தித்தேன். அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ளக் கூடாதது எவை எவை என்பதை அந்த சந்திப்புகளின் மூலம் தெரிந்து கொண்டேன். பதிவு சுவாரசியமாக இருந்தது.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
ஆனால் நிறைய விஷயங்கள் ஒட்டி அடிக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

Romeoboy said...

\\டிஸ்கி - பதிவர்சந்திப்புக்கான வீடியோ இணைப்பு கிடைத்தால் அண்ணன் உணவு உலகம் அனுமதியுடன் அதை பதிவாக போடலாமா? என யோசித்து வருகிறேன்.. ..//

பாஸ் இன்னுமா !!! உலகம் தாங்காது பாஸ் ..

நிரூபன் said...

ஒவ்வொரு மனிதனும் அவசரமாக ஒரு செயலை செய்தி முடித்து விடுகிறான்.. பிறகு காலம் எல்லாம் அதை அப்படி செய்திருக்கலாமோ?இதை இப்படி செய்திருக்கலாமோ என நினைத்து நினைத்து வருந்துகிறான்.. இது இயற்கை.. மனித மன விசித்திரம்..//

வாழ்க்கையின் படி நிலைகள் பலவற்றினை நீங்கள் தாண்டி வந்ததற்கான உணர்வு இவ் வரிகளூடாகத் தெரிகிறது,.

நிரூபன் said...

பஃபே சிஸ்டம்..ஒரு ஆள்க்கு ரூ 160 செலவு (உபயம் அண்ணன் உணவு உலகம்).//

அப்படீன்னா என்ன பாஸ்....

நிரூபன் said...

பிரபலமான எழுத்தாளர்களை வாசகர்கள் சந்திக்க ஆர்வமாக இருப்பதும், சந்திப்புக்குப்பின் அவன் மனம் ஏமாற்றம் அடைவதையும் நான் கண்டிருக்கிறேன்.. காரணம் அவன் படித்த எழுத்து மூலம் அவனுக்குள் ஒரு கற்பனை பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பான்..//

இதே அனுபவம் எனக்கும் ஒரு முறை ஏற்பட்டிருக்கு பாஸ்.

நிரூபன் said...

என்ன சார் உக்காந்து சாப்பிடலியா?ன்னு , அதுக்கு அவர் அது எப்படிங்க மனைவிக்கு எதிரே மரியாதை இல்லாம அமர்வது என்றார்.. ஹூம்.. நல்லவேளை.. என் மனைவியை அழைத்து வரவில்லை என நினைத்துக்கொண்டேன்..//


அட்ரா....அட்ரா...

அப்போ சிபி மனைவிக்குப் பயம் போல இருக்கே.

நிரூபன் said...

பதிவர்சந்திப்புக்கான வீடியோ இணைப்பு கிடைத்தால் அண்ணன் உணவு உலகம் அனுமதியுடன் அதை பதிவாக போடலாமா? என யோசித்து வருகிறேன்.. .//

இந்த வீடியோவைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,

நிரூபன் said...

சந்திப்பில் இடம்பெற்ற போசன நிகழ்வுகளோடு கூடிய, பதிவர்களின் சமூக சேவை நிகழ்வினையும் சுவைபடத் தொகுத்து எழுதியிருக்கிறீங்க.

அருமையான தொகுப்பு.

J.P Josephine Baba said...

பதிவை வாசித்து விழுந்து விழுந்து சிரித்தேன் என்ன்வரையும் விட்டு வைக்கவில்லை போலும்! ரசித்தோம் உங்கள் கலக்கல் எழுத்து நடையை! வாழ்த்துக்கள் நண்பா.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

திரு. MANO நாஞ்சில் மனோ அவர்களே, நண்பர்களுக்குள் என்னத்தான் நெருங்கிய நட்பிருந்தலும் நேரில் பேசுவது போல் பொது வெளியில் நடந்துக்கொள்வது பிறருக்கு சிறிது சங்கடத்தை ஏற்படுத்தும். சிபியை ' நாயே' போன்ற வார்த்தைகள் போட்டு பேசுவது உங்களுக்குள் இருக்கின்ற நட்பின் ஆழத்தை காட்டுகிறது. மகிழ்ச்சி. ஆனால், பொதுவெளியில் வேண்டாம் என்பது என் கருத்து. தவறு எனில் மன்னிக்க.

ஷர்புதீன் said...

நீங்க கலக்குங்க சித்தப்பு

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Mr.Madras said...

உங்களது பதிவுகளை எல்லாமேதமிழ்.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் EllameyTamil.Com

இப்படிக்கு
EllameyTamil.Com