Tuesday, October 29, 2013

seetharamula kalyanam lankalo (2010) -ரவுடி கோட்டை ( 2013) - சினிமா விமர்சனம்

 

இது ஒரு முக்கேனக்காதல் கதைங்க . அதாவது ஒரு கேனப்பொண்ணை ஹீரொ , வில்லன்னு 2 கேனங்கள் லவ் பண்ணுதுங்க . அதுல வில்லன் கேனம் ஒரு தாதா வேற . விளைவுகள் என்ன ஆச்சுன்னு காமெடியா சொல்றாங்களாம். ( காமெடினு இவ்ங்களா நினைச்சுக்கிட்டு மொக்கை போடறாங்க) தியேட்டருக்குப்போகும் ஆடியன்சுக்கு ஒரு கூடை பூ இலவசம் . வாங்கி காதுல வெச்சுக்கலாம் .


ஒரு தாதாவோட பொண்ணு தான் நாயகி . நாயகன் அவர் பாட்டுக்கு ரோட்டோரமா நின்னு தம் அடிச்சுட்டு இருக்கார் .  நாயகி வந்து வலியனா பேச்சுக்குடுக்குது . யாருக்குமே தெரியாத ஒரு ராணுவ ரகசியத்தை சொல்லுது. புகை பிடிச்சா கேன்சர் வந்துடும் , இனி பிடிக்காதேங்குது.


இந்த  பேக்கு ஹீரோ உடனே ஹீரோயினை லவ்வ ஆரம்பிச்சுடறாரு . நாயகிக்கு என் மேல அக்கறை இல்லைன்னா இப்டி வந்து நல்ல புத்திமதி சொல்லுமா?னு கேட்கறாரு . ரோட்ல பிச்சைக்காரன் கிட்டே கூடத்தான் பிசை எடுக்காதே , உழைச்சு சாப்பிடுன்னு  சொல்றோம். அதுக்காக லவ்னுஅர்த்தமா? 



நாயகி காதலை ஏத்துக்கலை . அப்போ தான் ஒரு பெரிய திருப்பம் நடக்குது. இதுவரை  எந்த உலகப்படத்துலயும் வராத சீன் .அதாவது நாயகியை நடு  ரோட்ல பட்டப்பகல்ல  4 ரவுடிங்க   கிண்டல் பண்றாங்க .( டெல்லியோ?)  நாயகன் அந்த ஏரியாவையே கலைச்சுப்போட்டு ஃபைட் பண்றாரு. உடனே டமார்னு நாயகிக்கு லவ் வந்துடுது . சண்டை போடும் ஆளைத்தான் பொண்ணுங்க லவ் பண்ணும்னா ஜப்பான் ல ஜாக்கிசான் , சொர்க்கத்துல ப்ரூஸ்லீ , சீனாவுல ஜெட்லீ இவங்க 3  பேருக்கு மட்டும் தான் காதலி  கிடைக்கும் . 


வில்லன் தாதா ஹீரோயினை பொண்ணு கேட்டு வர்றார். ஹீரோயின் அப்பா மறுக்கறார். உடனெ வில்லன்  ஹீரோயினைக்கடத்தி அவர் ஏரியாவுல வெச்சுடறார். ( அதுதான் ரவுடிக்கோட்டையாம் ) மனசுக்குள்ளே பெரிய ராவணன்னு நினைப்பு . ஒரு அடியாள் லாஜிக்கா ஒரு கேள்வி கேட்கறான் . பாஸ்! இந்தப்பொண்ணை மேரேஜ் பண்ணிக்க ஏன் கெஞ்சிக்கிட்டு இருக்கீங்க ? பேசாம ( அல்லது பேசிக்கிட்டே) ரேப் பண்ணிடுங்க . தானா வந்து மேரேஜ் பண்ணிக்கச்சொல்லும்னு ஐடியா தர்றான். 


 உடனே வில்லன் அங்கே இருக்கும் சுவத்துல  ஒரு காலண்டர் மாட்டவே துப்பில்லாத சின்ன ஆணில அவன் தலையை அடிச்சு கொலை பண்ணிடறான். அவருது தூய காதலாம் . அப்டி பண்ண மாட்டாராம் .



 ஹீரோ அப்பவே வந்து   ஃபைட் போட்டா படம் அப்பவே  முடிஞ்சிருக்கும். ஆனா 4 ரீல் தான்  தேறும் . அதனால திரைக்கதைல பெரிய  திருப்பம் . ஹீரோ வில்லன் தாதா கிட்டே வேலைக்காரனா சேருகிறார்.சேர்ந்து நாம சோர்ந்து போகும் வரை  மொக்கை போட்டு க்ளைமாக்ஸ்ல தான் யார்னு உண்மையை சொல்லி ஒண்டிக்கு ஒண்டி ஃபைட் போட்டு படத்தை முடிக்கறார் . உஷ் அப்பா , முடியல 


ஹீரோவா நிதின்.ஆள் நல்லா தான் இருக்காரு . அவர் பேசும் வசனங்கள் தான் படு  எரிச்சல் . டான்ஸ் ல சில்ம்பாட்டம்   சிம்பு மாதிரி , அழகிய தமிழ் மகன் விஜய் மாதிரி ஸ்டெப் எல்லாம் போட்டு கலக்கறாரு . ஒரு பாடு சீன்க்கு  ஹீரோயின் கூட ரொம்ப க்ளோசா நடிச்சு பாடி கெமிஸ்ட்ரி , பாடி பிசிக்ஸ் எல்லாம் ஒர்க் அவுட் ஆக்கி கலக்கி இருக்காரு . 


ஹீரோயின்  மன்மதன் சிம்புவின் 3 வது தெய்வீகக்காதலி ஹன்சிகா . குட்டி குஷ்பூனு படத்துல இவருக்குப்பட்டபேரு. குஷ்பூவை விட வெயிட் ஜாஸ்தி ( எப்டித்தெரியும்னு கேட்காதீங்க, ஒரு கண் பார்வை அனுமானத்துல சொல்றதுதான். 3  டூயட் , 4 காமெடி மொக்கை சீன் அவ்வளவுதான் அவருக்கு சீன்ஸ் . நஸ்ரியாவுக்கு சவால் விடும்படி  ஒரு கிளு கிளு பாடல் காட்சி இருக்கு . 


பிரம்மானந்தம் வழக்கம் போல்  கெஸ்ட் ரோல். வரும் வரை  சிரிக்க வைக்கத்தவறவில்லை . தெலுங்கு காமெடியர்களில் இவர் தமிழர்களைக்கவர்ந்த  சிறந்த காமெடி மேன் . கிட்டத்தட்ட வடிவேல் மாதிரி , பாடி லேங்குவேஜ் , ஃபேஸ் எக்ஸ்பிரசன் எல்லாம்  சூப்பர் . 


 ஆழி , ஜெயப்ரகாஷ ரெட்டினு  வில்லன்க  கூட்டம் . எல்லாம்  ஓவர் சவுண்ட் .தெலுங்குப்படத்துக்குன்னு எழுதி வெச்ச  ஃபார்முலா போல . 




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 



1.  தெலுங்கில்  குடும்பப்பாங்கான பெண்களைக்கவரும் டைட்டில் இருந்தாலும் தமிழ் டப்பிங்க் க்கு ரவுடிக்கோட்டை என வாண்ட்டடா திகில்  கொடுத்து போஸ்டர்  டிசைன் பண்ணுனது 


2. இந்தப்படத்தை தமிழில் டப் பண்ணக்கூடாது , அப்படிப்பண்ணுனா  தமிழ் ல என் இமேஜ் போயிடும்னு ஹன்சிகா  சொன்னதா இவங்களா ஒரு புரளியைக்கிளப்பியது 


3. போஸ்டர்  டிசைன்களில் எல்லாம் ஹன்சிகாவுக்கே முக்கியத்துவம்  கொடுத்தது , கிளாமர் ஸ்டில்களைப்போட்டது 



4. ஹீரோ அடிக்கடி  ஹீரோயினிடம் மன்னிப்புக்கேட்கிறேன் பேர்வழின்னு ஹீரோயின் முன் மண்டியிட்டு இடையில்  முகம் புதைத்து சாரி சொல்வது ( முன் பின் அறிமுகம் இல்லாத பெண்ணிடம் இப்படி சாரி கேட்கும் ஆளை இப்போதான் முதன் முதலா பார்க்கிறென் ) 


5  கிஸ் மீ கிஸ் மீ  எனும் பாட்டு செம கிளுகிளுப்பான ஹஸ்கி வாய்சில் ( நாட் ஹன்சி(கா) வாய்ஸ் )  பாட வைத்து படமாக்கலிலும் டெம்ப்போ ஏத்தியது . மாம்பல லேடி  உன் மாம்பலத்தைத்தாடி என உலகத்தரமான பாடல் வரிகளைப்போட்டு அக்மார்க்  சி செண்ட்டர் கிளாப்ஸ்க்காகவே ஒரு பாட்டை படமாக்கியது 




இயக்குநரிடம்  சில  கேள்விகள் 



1. ஓப்பனிங்க்  சீன்ல  ஹீரோ கபடி மேட்ச்ல கபடி கபடி சொல்லி ரைடு வர்றார். ஓக்கே . அந்த மேட்ச் முடிஞ்ச பின் ஃபைட் வருது . வில்லன் ஆளுங்க கூட ஃபைட் போடறார். ஆனா பேக்கு மாதிரி கபடி கபடி சொல்லிட்டே அடிக்கறார். அவருக்கு கஜினி மாதிரி 10 நிமிஷத்துகு எல்லாத்தையும் மறக்கும் வியாதியா?  சும்மா  அடிச்சா அடி படாதா? 



2 தாதாவான ஆள் தன் பொண்ணுக்கு இன்னொரு தாதா மாப்ளை வேணாம்னு சொல்றது லாஜிக்கா படலையே ? பின்னே ரவுடியோட பொண்ணுக்கு ஐ ஏ எஸ் கலெக்டரா மாப்ளையா கிடைப்பார் ? 


3 . தாதா மாப்ள வேணாம்னு சொல்ற அதே ஆள் க்ளைமாக்ஸ்ல  ஹீரோ கிட்டே   என் பொண்ணை காப்பாத்த நல்லா ஃபைட் போடத்தெரிஞ்சிருக்கனும்னு சொல்றாரே, இது  முன்னுக்குப்பின்  முரண் இல்லையா? 



4. வில்லன் என்னதான்  கேனமா  இருந்தாலும்  தன்  இருப்பிடத்தில்   நாயகனும் , நாயகியும்  ரொமான்ஸ் பண்ணிட்டு நம்மையே ஏமாத்திட்டு இருக்காங்க என்பது  கூடவா தெரியாது ? 





மனம் கவர்ந்த வசனங்கள்



1,  அவன் ரோடு  ரோலர் மாதிரி  இருக்கான் . ரெனால்டு ரீபிள் மாதிரி நீ இருக்கே 



2 உனக்கு கலர் ஜாஸ்தி , அதே போல்  கொழுப்பும் ஜாஸ்திடி 




3 பயம் இருக்கறவனுக்கு காதல் வராது , காதல் இருக்கறவனுக்கு பயம் வராது 



4 காதலிக்கறவன்  கனவு காணமாட்டான் , நிறைவேத்துவான் 



5 . ஒருத்தனுக்கு படிப்பு  மிஸ் ஆகலாம், வேலை மிஸ் ஆகலாம்,. ஆனா மனசுக்குபிடிச்ச பொண்ணு மட்டும் மிஸ் ஆகவே  கூடாது 



6   திட்டம் தீட்டும்போது சகுனியா இருக்கனும் , போர்  புரியும் போது ஸ்ரீகிருஷ்ணரா இருக்கனும் 

 

ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  38


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -சுமார்

ரேட்டிங் = 2  / 5



சி பி கமெண்ட்  - ஹன்சிகா  ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம் சிம்பு ரசிகர்கள் பார்த்தா கடுப்பாகிடுவாங்க . மத்தவங்க யாரும்  டி வி ல போட்டாக்கூடப்பார்த்துடாதீங்க . பட்டுகோட்டை அன்னபூரணா வில் படம் பார்த்தேன். ஏ சி டி டி எஸ் தியேட்டர் . 8 பேர் தான் டோட்டல் ஆடியன்சே , எப்படிதான் கட்டுபடி ஆகுதோ, அய்யோ பாவம்
 

பிரபு தேவாவிடம் இப்போ சிக்கியிருப்பவர் சோனாக்ஷி சின்ஹா??

1. ஃபேஸ்புக் ல ஒரு ஒல்லி பொண்ணு 4 லிட்டர் கப் ( கேன் ) ல டீ குடிக்கற மாதிரி டி பி வெச்சிருக்கு . அடேங்கப்பா



================

2 என்னமோ கல்யாண விழா மாதிரி லவ் பண்றதை புரொபஷனல் போட்டோகிராபரை கூட்டிட்டு வந்து போட்டோ எடுத்திட்டிருக்கு ஒரு பக்கி # ஆதாரம் சேகரிக்கறானாம்



=====================

3 லட்டு மாதிரி இருக்கற பிகருங்க ஷேர் ஆட்டோலயோ ,டவுன் பஸ்லயோ ஏறி இற்ங்குனா பூந்தி ஆகிடுவாங்க



==================

4 தன்னை விட செல்வத்தில் சிறந்தவர்களைப்பார்க்கப்போகும்போது அவர்களை விடத்திறமையில் சிறந்தவர்கள் தாழ்வுமனப்பான்மையுடன் செல்கிறார்கள்



=======================


5  நம் பெற்றோர் ,நாம் பெற்ற குழந்தை ,தாலி கட்டிய மனைவி நால்வருக்கும் செய்யும் பணிவிடைகளில்் கவுரவம் பார்க்கத்தேவை இல்லை



======================


6 நம் வாழ்க்கைப்பயணத்தில் எனக்குக்கிடைத்த ஜன்னல் ஓர சீட் உன் விழிகள் தான்.வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பேன்



=====================


7 ஜிம்முக்குப்போகாமயே உடல் எடையைக்குறைக்க எளிய வழி 1000 படிக்கட்டுகள் உள்ள மலையில் தினம் ஏறி இறங்குவதே



========================

8 சென்னிமலையில் உள்ள படிக்கட்டுகள் 1350, தூர அளவு - படி வழி சென்றால் 2 கிமீ.சாலை வழி சென்றால் 4 கிமீ .20 நிமிடத்தில் படியில் ஏறி விடலாம்



===================


9 நோகாமல் நோன்பு கும்பிட முடியாது.காதலியின் விழிகளை நோக்காமல் அன்பு காட்டிட முடியாது



========================


10 கோயிலில் கூட்டம் அதிகமா இருந்தா பக்தி முத்திடுச்சுனு அர்த்தம் இல்லை.அன்னைக்கு அன்னதானமாக்கூட இருக்கலாம்



========================


11 மாடர்ன் பிகரா இருந்தாலும் கோயிலுக்கு வரும்போது மட்டும் குடும்பத்துக்குத்துவிளக்காய் பெண்கள் புடவையில் வருவது கொள்ளை அழகு



===================


12 தலை தீபாவளியை அடிக்கடி கொண்டாடணும்னா 2 வழி இருக்கு 1,அடிக்கடி கல்யாணம் பண்ணனும் 2 அஜித் ரசிகனா இருக்கனும்



====================

13 மினி ஸ்கர்ட் இனி ஸ்மால் ஸ்கர்ட் ,மினி பஸ் இனி ஸ்மால் பஸ் ,மினிமீன்ஸ் இனி ஸ்மால் மீன்ஸ் - ஜெ அதிரடி அறிவிப்பு # சும்மா



========================


14  சிக்கனமா இருக்கனும்கறதை மாடர்ன் பொண்ணுங்க தப்பா புரிஞ்சுக்கறாங்க # டிரஸ்ஸிங்



=======================


15 பிகரும் கலரும் தானா நம் வீட்டுக்கு வாரா ( தீதும் நன்றும் பிறர் தர வாரா ரீமிக்ஸ் )



======================


16 ஒன் பை 2 னு பங்கு போட்டு டீ குடிச்சா அவன் கஞ்சனா இருப்பான்.இளநி குடிச்சா காதலர்கள்



=========================


17 நீ என் மேல எவ்ளவ் அன்பு வெச்சிருக்கே? என்ற கேள்விக்கு பதில் தருவது பொன்னியின் செல்வன் நாவலை 8 நிமிட குறும்படமா எடுப்பது போல




========================


18  நீங்க ஆண்ட்டி ஹீரோவா நடிக்க சங்கடம் இல்லையா ? 6யா- ஆண்ட்டிக்கே சங்கடம் இல்லை.எனக்கென்ன? ஜாலி தான் # ஆரம்பம்




==================


19 அத்தான்.முதல் இரவுல வந்து எதுவும் பேசாம என்னை போட்டோ எடுக்கறீங்களே? சினிமாப்பைத்தியம் சின்னா - FBல FIRST LOOK போஸ்டர் ஒட்டனும்




===================


20 பிரபு தேவா இப்போ சிக்கியிருப்பவர் சோனாக்ஷி சின்ஹா - செய்தி # சோனா! வேணா! பேரு சின்னா பின்னம் ஆகிடும்



========================

Monday, October 28, 2013

Chaappa Kurishu - கிளு கிளு கில்மா மலையாள சினிமாவா? ஒரு பார்வை 18+

சில சினிமாக்களை வெறும் இரண்டு மணி நேரப் பொழுதுபோக்கு எனக் கடந்துவிட முடிவதில்லை. அப்படி கடக்க முடியாத ஒரு படம் மலையாளத்தில் வெளியான 'சப்பா குரிசு'. படம் பார்த்துவிட்டு படம் குறித்து ஃபேஸ்புக்கில் சில வரிகள் எழுதியிருந்தேன். "படம் நல்லாருக்கா?" என்ற உரையாடல்களில், ஆச்சரியத்தை ஏற்படுத்தியது "நெஜமாகவே நெட்ல அப்படி இருக்குதா?" என்ற இருவரின் கேள்விதான். 


"நெட்ல இண்டியன் ஸ்கேண்டல் வீடியோனு தேடிப்பாருங்க, அப்ப புரியும்!" என்றேன். 


கேட்டவர்கள் இருவரும் பெண்கள் என்பதால், ஒருவேளை அவர்கள் தேடியிருந்தால் அதுகுறித்து மேற்கொண்டு என்னிடம் கேட்கவோ பேசவோ ஏதும் இல்லாமல் போயிருக்கலாம். அதற்கு முக்கியக் காரணம் அவர்களுக்கு கிடைத்த வீடியோ காட்சிகளில் பெரும்பாலும் பெண்களே பலிகடாக்களாக இருந்திருக்கும் சாத்தியம் அதிகம் என்பதே. 


காமம் நிதர்சனமானது. வெகு இயல்பானது. வெகு அழகானதும் கூட. தெரிந்தோ தெரியாமலோ அது குறித்த விழிப்புணர்வை, கல்வியைக் கொடுக்காமல், அதைப் பொத்திவைத்து ஒரு எட்டாப் பொருளாக, பாவமாக, குற்றமாக பாவனைகள் ஏற்படுத்தி, எட்டாப் பொருள் கிட்டினால் ஏற்படும் பரவசத்தில் ஆழ்த்தி வைக்கப்பட்டிருக்கிறோம். 




ஒரு காலத்தில் வயது வந்தவர்களுக்கான படங்கள், காட்சிகள் கிடைப்பது அரிதினும் அரிது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒன்றோ இரண்டோ திரையரங்குகள் மட்டுமே தீனி போடும். இன்றைக்கு இணையத்திலும், எம்எம்எஸ் வழியாகவும் வேண்டிய நொடியில் கிட்டுகின்றன. முன்பெல்லாம் அதெற்கென நடிகர்கள் நடித்து, இயக்கிய படம், காட்சிகள் மட்டுமே கிடைக்கும். 


ஆனால் இன்றைக்கு கிடைப்பவை 90 சதவிகிதம், நிஜமாய் நிகழ்ந்தேறிய காட்சிகள். இருளும் ஒளியுமாய், சில சமயம் தலையைப் திருப்பிப் பார்க்க வேண்டிய கோணத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன. 


மிக மிக அரிதாக அதற்கென நடிப்பவர்கள், வெகு அரிதாக கணவன் மனைவியாக இருப்போர், பெரும்பாலும் காதல் இணைகள், அதைவிடப் பெரும்பாலும் பிறன்மனை உறவுகள் என இணையத்தின் காம வெளியெங்கும் நிரம்பிக் கிடக்கின்றனர். "எப்படி, ஏன் இவை பதிவாகின்றன?" என்பதற்கு மிகமுக்கியமான பதில் - ஆர்வம், அதீத ஆர்வம், ஆர்வக் கோளாறு, கொஞ்சமே கொஞ்சமேனும் எதிர்காலத்தில் தன் பாதுகாப்பிற்காக அல்லது அவர்களை சமாளிக்க அல்லது மிரட்டுவதற்கான வக்கிரம் என்பது மட்டுமே. 



வெப்கேம் உரையாடல்களின் போது பதிவு செய்துகொள்வது, கையில் செல்போனில் உள்ள கேமரா மூலம் சுயமாகப் பதிவு செய்துகொள்வது, செல்போனை ஒரு இடத்தில் பொருத்தி பதிவு செய்து கொள்வது என சுயமாக, விரும்பி, தெரிந்து, நம்ம போன் தானே என்னவாகிவிடப்போகிறது என்ற அசட்டு நம்பிக்கையில்தான் நிறைய நடக்கின்றன. அப்படியான காணொளிகளில், பெரும்பாலும் அதில் தென்படும் பெண்கள் ரொம்பவும் தயங்குவார்கள், அய்யே இதெல்லாம் வேணாம் என பலகீனமாக எதிர்ப்பார்கள். ஆனாலும் அவர்களின் கண்களில் பயம், எச்சரிக்கை உணர்விற்குப் பதிலாக அந்த ஆடவனுடன் அந்த நேரத்தில் கொண்டிருக்கும் பிரியத்தால், மீட்டிவிடப்பட்ட மோகத்தால், நம்மையே கொடுக்கிறோம் இதனால் என்னவாகிவிடப் போகிறதென்ற ஆழ்ந்த அசட்டு நம்பிக்கையால், தன்னைப் பகிர்ந்ததோடு தன்னை அல்லது தங்களைப் பதிவுசெய்யவும் அனுமதித்து விடுகிறாள். 

 

சில காணொளிக் காட்சிகளில் மட்டுமே அதில் ஈடுபடும் ஆடவனும் தெரிவான், மற்றபடி முழுக்க முழுக்க அதில் பெண்ணே வியாபித்திருப்பாள். இன்னொரு வகை, தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோமென்று ஆழ்ந்திருக்கும் தருணத்தில், அதைக் காணும் ஏதோ ஒரு ஜோடி விழிகள் தன் செல்போன் வழியே அதை பதிவு செய்வதும் நடக்கின்றது. இப்படிப் பதிவு செய்யப்படுவதற்கு காரணம், பெரும்பாலும் அதை மீண்டும் மீண்டும் ரசிக்க வேண்டும் என்பது மட்டுமே! 



'சப்பா குரிசு' படத்தில் வரும் இரண்டு பேர் ஒரு பெருநகரத்தில் சமகாலத்தின் இரண்டு துருவங்களாக இருப்பவர்கள். நாணயத்தின் பூ, தலை என்பது போல மிக நெருக்கத்தில் அமைந்துவிட்ட துருவங்கள் என்றும் சொல்லலாம். 



கட்டுமானத்துறையை நிர்வகிக்கும், வசதிகளும், தோழிகளும் நிறைந்த அர்ஜூன் (ஃபகத் பாசில்) ஒவ்வொருவரும் இதுதான் சொகுசு என நினைக்கும் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவன். தன்னிடம் பணிபுரியும் சோனியாவோடு (ரம்யா நம்பீசன்) மிக நெருக்கமாக இருக்கிறான். புதிய வியாபாரம் ஒன்று வெற்றிகரமாக நிறைவேறும் தருணத்தில் இருக்கிறார்கள். அவனுக்கு வேறொரு பெண்ணோடு திருமணம் உறுதியாகிறது. தனிமையாய் தனது வீட்டில், ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் எறும்புகளை தனது ஐபோனில் பதிவு செய்து கொண்டிருப்பவனின் அழைப்பு மணி அடிக்கிறது. வந்திருப்பது சோனியா என்பதால், கதவு திறக்கும் நொடியில் அவள் முக பாவனையைப் பதிவு செய்துகொண்டே உள்ளே அழைத்து, அணைப்பு முத்தமென ஐபோனில் பதிந்தபடி அடுத்தடுத்து முன்னேறுகிறான், அவள் ஓரிரு முறை தட்டிவிட்டு தடுக்கிறாள். அவளின் ஆசையும் நம்பிக்கையும் அதைவிடப் பெரிதாக இருக்கின்றது. அருகிலொரு பெட்டிமீது பதிவாகும் வகையில் வைத்துவிட்டு முன்னேறுகிறான். 



ரப்பர் பேண்ட் போட்டு சுற்றிய நோக்கிய 3310 போனை வைத்துக்கொண்டு, தனது அன்றாடங்களுக்கு போராடிக் கொண்டிருக்கும், ஒரு சூப்பர் மார்கெட் துப்புரவாளனான அன்சாரிக்கு (வினித் சீனிவாசன்) ஒரு சாலையைக் கடப்பதிலும், எதிரில் நடக்கும்போது யாரேனும் இடித்தால் அதைச் சமாளிப்பதிலும் கூட தடுமாற்றம் உண்டு. தினமும் சிக்கனமாய் மெஸ்ஸில் சாப்பிடும்போதும், பணியிடத்தில் அடிமையாக பாவிக்கும் மேலாளரிடமும் அவமானப்பட்டு நொந்துபோகிறான். அங்கிருக்கும் பெண்ணொருத்தி இவனையே நோக்குகிறாள், அவன் பார்வையை விரும்புகிறாள், இவனிடமே பேச விழைகிறாள், அவன் மீது பிரியம் காட்டுகிறாள். 



அர்ஜூன் சோனியா இடையே அர்ஜூன் திருமணம் குறித்து பிரச்சினை எழும் இக்கட்டான தருணத்தில் போன் தொலைந்து, அதை எப்படி இயக்குவதென்று கூடத்தெரியாத அன்சாரியின் கையில் கிடைக்கிறது. 


பயன்படுத்துவது எப்படியெனத் தெரியாமல் போனை அணைத்து வைத்திருக்கும் அன்சாரிக்கும், அந்த போனிற்குள் அந்தரங்கத்தின் வாயிலாக, மொத்த வாழ்க்கையும் அடமானம் வைத்துவிட்டு, போனை மீட்க தொடர்ந்து தொடர்ந்து அழைத்துக் கொண்டேயிருக்கும் அர்ஜூனுக்கும் இடையே அவ்வப்போதான உரையாடல்கள் எனத் தொடங்குகிறது கண்ணாமூச்சி போராட்டம். 

 

சிங்கம் போல் இருந்தாலும், அந்த போனிற்காக அன்சாரி சொல்வதற்கெல்லாம் ஆடும் நிலைக்கு கீழே இறங்குவதும், போனிற்குள் என்ன இருக்கிறதென்று தெரியாமலே, எதுவும் செய்யத் தயாராக இருக்கும் அர்ஜூனை வைத்து தன்னை அவமானப்படுத்திய வாடிக்கையாளர், மேலாளரைப் பழிவாங்கும் அன்சாரி, தன்னையொரு சக்தி வாய்ந்தவனாகவும் உணர்கிறான். 



போனை திருப்பித் கொடுத்துவிடலாம் என தீர்மானிக்கும் சூழலில் போன் பேட்டரி தீர்ந்துவிடுகிறது. தெரிந்த மொபைல் கடையில் சார்ஜ் போட போனைக் கொடுக்கிறான். அன்சாரி போனைத் திருடி வந்திருக்கிறான் என நினைத்த கடைக்காரர் சார்ஜ் போட்டுவிட்டு திருப்பித் தந்த அடுத்த காட்சியில் அர்ஜூன் - சோனியா அந்தரங்கம் இணையத்திலும், எம்எம்எஸிலும் உலகத்திற்கு விருந்தளிக்கப்படுகிறது. அந்தப் புள்ளியில் திருமணம் நின்று, வியாபாரம் கெட்டு, தற்கொலை முனைக்குச் செல்லும் சோனியா என எல்லாம் சிதைந்துபோகிறது. 



இணையத்தில் எளிதாய்க் கிடைக்கும் ஒரு ஸ்கேண்டல் வீடியோவை ரசிக்கும் கண்களுக்கும், அதில் கிளர்ச்சியுறும் ஹார்மோன்களுக்கும், அப்படிப்பட்ட அந்தரங்கக் காணொளிகள், நிழற்படங்கள், உரையாடல்கள் எவ்வளவு பெரிய காதலில், கட்டாயத்தில் அல்லது நம்பிக்கையின் மேல் கட்டமைக்கப்பட்டிக்கும் என்பது தெரிந்திருக்க வாய்ப்புண்டா எனத் தெரியவில்லை. 



ஒரு குறுகுறுப்பிற்காக, விளையாட்டாக, ஆர்வக் கோளாறில், விஷமத்தனமாக என ஏதோ ஒரு காரணத்தினால் பதிவு செய்யப்பட்ட அந்த நிகழ்வின்மேல் இருந்த காதல், பிரியம், நம்பிக்கை அல்லது கட்டாயம், எந்த வகையிலும் தொடர்பில்லாத எவரோ ஒருவரின் மூலம் கட்டவிழ்க்கப்பட்டு கடை பரப்பப்பட்டு, அதில் ஈடுபட்டிருந்தோரை நிலைகுலைய வைத்து சூன்யமாக்கிவிடுகிறது. 

 

கோயில் கருவறையில் பெண்களோடு அர்ச்சகர், கல்லூரி வளாகத்தில் தோழியோடு மாணவன், வகுப்பறையில் ஆசிரியையோடு தலைமையாசிரியர், நிறுவனப் பெண்களோடு உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் என சமீபத்தில் அதிர்வுகளை உண்டாக்கிய காணொளிகளில் அந்த அர்ச்சகர், மாணவன், தலைமையாசிரியர், அதிகாரி என அனைவருமே, தங்கள் முழு விருப்பத்தின் பேரில், சுய அறிவோடு, அந்தப் பெண்கள் அறிந்தோ அறியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ பதிவு செய்திருக்கின்றனர். அந்தக் காட்சிகளை அவர்களாகவே விருப்பட்டு வெளியிட்டிருக்க சாத்தியங்கள் மிகக் குறைவு. கைபேசி பழுது நீக்க கொடுத்த இடத்தில், கணினியோடு இணைத்து சார்ஜ் போடக்கொடுத்த இடத்தில் என அந்தக் காட்சிகள் உருவப்பட்டு, இணையத்தில் வெளியாகி, சில நிமிட இசைவுக்கு அவர்களின் தலைமுறையே எதிர்பார்க்காத அளவு, தாங்க முடியாத அளவுக்கு சேதாரங்களை, அவமானத்தை, காயத்தை அளித்துவிட்டுப் போய்விடுகின்றன.. 



நம் அந்தரங்கங்கள், தொடர்புகள், தனிப்பட்ட முக்கிய விபரங்கள், வியாபார விபரங்கள், வங்கிப் பரிமாற்றங்கள், பயணங்கள் உட்பட அனைத்துமே கையடக்க போன் அல்லது கணினியில் சுருங்கி அடைபட்டுவிட்ட சூழலில் அதைத் தொலைத்தால் எத்தனை ஆபத்து என்பதையும், அல்பத்தனமாய் ஆர்வக்கோளாறின் காரணமாய்ப் பதிவு செய்யப்படும் அந்தரங்கங்கள் எத்தனை கொடூரமான ஆபத்து என்பதையும் உணர்த்தும் பாடம் தொடர்ந்து தொடர்ந்து மக்களுக்கு நடத்தப்பட்டே தீரவேண்டும். 'சப்பா குரிசு' அப்படிப்பட்ட ஒரு பாடம் தான். 


கட்டுரையாளரின் வலைப்பதிவுத் தளம் http://www.maaruthal.blogspot.in

ஈரோடு கதிர்
 
 


நன்றி - த தமிழ் ஹிந்து 

முதல் இரவு அறையைவிட்டு ஒரு முறை கூட வெளியேவராத தமிழன்

இனிய காலை வணக்கம் நண்பர்களே...
இனிய காலை வணக்கம் நண்பர்களே...
1. மோடியும் குஜராத்.நமீதாவும் குஜராத்.மோடியை பி எம் ஆக்கினால் நாடு முழுக்க பல நமீதாக்கள் உருவாகலாம்.வாய்ப்பிருக்கு



=====================


2   ஆரம்பம் புரமோ சாங் ஜெயா டி வி ல வருதாம்.அப்போ ஜெயா டி வி புரமோ சாங் ஆரம்பம் ல வருமோ? அய்யய்யோ



=====================



3 டேமேஜர் - லீவே எடுக்காத நீ 31 10 13 ஆப் டே லீவ் கேட்கறியே? எதுக்கு?



 சார். தலை போற பிரச்சனை சார்



=========================


4 9 தாரா - படத்துல அதிக முக்கியத்துவம் எனக்கா?,டாப்சிக்கா?




6 யா.- தலை இருக்க வால் ஆடலாமா?



===========================


5  ராகுல் - நான் தான் உங்களை விட யூத் .பதவி எனக்குத்தான் .




மோடி - யூத்னா லவ் பண்ணனும் ,மேரேஜ் பண்ணனும்.இப்டி அழிச்சியாட்டியம் ,டிராமா கூடாது



=========================





6 டியர்.10 வருசமா லவ் பண்றீங்க.எப்போ என்னை மேரேஜ் பண்ணுவீங்க?




சரவணன் மீனாட்சி தொடர் முடிஞ்சதும் # கிழிஞ்சுது கிருஷ்ணகிரி



=========================


7 அவள் சமையல் ல் பிசியாக இருக்கையில் முத்தம் கேட்டேன்.பொறுக்கவும் என்றாள்.பொறுத்திருக்கவும் என அர்த்தமா? நாம பொறுக்கினு திட்டுகிறாளா?



=========================



8 என் புன்னகைகளை எல்லாம் சேமித்து வைத்திருக்கிறாயா?




 ம்க்கும்.சேமித்து வைக்கும் பழக்கம் எங்க பரம்பரைக்கே இல்லை.அப்பப்ப செலவு பண்ணிடுவோம்



=========================


9 உனக்கு கற்பூர புத்தி! நான் ஒரு கழுதை.ஆனாலும் உன் வாசம் அறிவேன்


====================


10 ஆரம்பம் புரமோ -@ஜெயா டி வி = முதல்ல ரெட்டை இலை யைக்காட்டுவாங்க.அப்புறமாத்தான் தல


====================



Photo: இனிய காலை வணக்கம் நண்பர்களே...



11 சன் டி வி டாப் டென் ல கடைசி வரை ஆரம்பம் டாப் 1 வராது # ஜெயா டி வி சேட்டிலைட் உரிமை



===================


12 30 ந்தேதி நைட் அஜித் ரசிகர்கள் தூங்க மாட்டாங்க . 31 ந்தேதி நைட் மத்த ரசிகர்களுக்குத்தூக்கம் வராது



===================


13 தினமும் பாலைக்காய்ச்சிக்குடிக்கவும் # அமலாபால் பிறந்த நாள் செய்தி



====================


14 மழை வந்தா கிரிக்கெட்டை கேன்சல் பண்ணலாம்.ஆனா முதல் இரவை கேன்சல் பண்ண முடியாது



===============


15 நண்பன்னு சொன்னா உயிர் கொடுக்கனுமுன்ல்லாம் அவசியம் இல்லை லவ்வர உள்ளே கூட்டிட்டு போக வீடு் கொடுத்தாலே போதும்."# எ கீ


===================
நம்மளுக்கு தெரிஞ்ச மேடம்(!) அவங்க கொஞ்ச காலத்துக்கு முன்னாடி வரைக்கும் நல்லாத்தேன் இருந்தாங்க...நேத்திக்கி வீட்டுக்கு வந்திருந்தாக...ஆள கரண்டுல அடிபட்ட வெள்ளைக்கொக்கு(!) போல சுருங்கிப்போயி இருந்தாக...ஏங்க இன்னாச்சின்னா...நான் டயட்ல இருக்கேன்பான்னாங்க...- உங்க டயட்ல தீய வைக்க அவ்வ்!~



162 மணி நேர சினிமா பார்க்கறதுக்குள்ளே 20 டைம் தம் அடிக்க தியேட்டரை விட்டு வெளியே வரும் தமிழன் முதல் இரவு அறையைவிட்டு ஒரு முறை கூட வரமாட்டான்


=====================


17  ஒரு சீன் கூட உடை விலகாம கண்ணியம் காத்தா நஸ்ரியா .ஒவ்வொரு சீன்லயும் ரசிகன் கண்ணுக்கு விருந்து வெச்சா நயன் தாரா



===================


18 டாஸ்மாக் கின் தீபாவளி டார்கெட் பற்றி சரியாத்தெரியல.ஆனா அல்டிமேட்டின் டார்கெட் 100 கோடி.ரிலீஸ் ஆகி 10 நாள் ல


====================


19 விடுமுறை நாளில் குடும்பத்துடன் நேரம் ஒதுக்க வழி இல்லாமல் ஆபீஸ் வரச்சொல்லும் ஒவ்வொரு டேமேஜரும் ,முதலாளியும் நாசமாகப்போகட்டும்



================


20 நைட்டியில் நைட் இருக்கிறது # எதையாவது உளறுவோர் சங்கம்



========================


Photo: இனிய காலை வணக்கம் நண்பர்களே...

Sunday, October 27, 2013

டீன் ஏஜ் பெண்களும் , பாலியல் தொந்தரவுகளும் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் @ த தமிழ் ஹிந்து

 

நாள்தோறும் சமூக - பொருளாதார பாகுபாடின்றி, குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதை ஊடகங்கள் வாயிலாக கேள்விப்படுகிறோம். நாம் பாதிக்கப்படாதவரை எந்தச் செய்தியும் 'சம்பவம்' தான். எனினும் குறைந்தபட்சம், சம்பவங்கள் நமக்கு சம்பவிக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்ததில் நிறைய தோன்றியது, பதிவாக போடும் அளவுக்கு. மேலும், சில ஆராய்ச்சிகள் செய்ததில் கிட்டியவைகளையும் சேர்த்து... 


குழந்தைகள் மற்றும் பாலியல் தொந்தரவுகள் 


யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?

 
* அப்பா - அம்மா இருவரும் வேலைக்கு போகும் வீடுகளில் தனியாக இருக்கும் குழந்தைகள் 


* உறவினர் வீடுகளில் வளரும் குழந்தைகள் 


* குழந்தைத் தொழிலாளர்கள் 


* உடல் ஊனமுற்ற / மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் 


* ஹாஸ்டலில் வளரும் மற்றும் சம்மர் கேம்ப்பில் விடப்படும் குழந்தைகள் 


(இவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், அவ்வளவே. ஆனால், எல்லாக் குழந்தைகளுமே சில பல மனித மிருகங்கள் சூழ் உலகத்தில் வாழ நிர்பந்திக்கப்பட்டிருப்பதால், யாருக்கும் நடக்கலாம்) 



குற்றவாளிகளை எப்படி இனம் காண்பது?


 
* குழந்தையோடு தனிமையை வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக் கொள்வார்கள். ("நீங்க போயிட்டு வாங்க... இவளும் என் பொண்ணு போல தான், நான் பார்த்துக்கறேன்...")
* குழந்தை ஆசைப்பட்டு, நீங்கள் வேண்டாம் என்று மறுக்கும் பொருளை வலிய வந்து வாங்கித்தருவார்கள்.
* ஆபத்தான சில விஷயங்களை செய்யச் சொல்லி குழந்தைகளை தூண்டுவார்கள் ("நீ எவ்ளோ தைரியசாலி பார்! உன்னால மொட்டைமாடி சுவர்ல கூட பிடிச்சிக்காம நிக்க முடியுது!") 



எவை பாலியல் சார்ந்த தவறுகள்?

 
கட்டாயப்படுத்தி உறவுவைத்துக் கொள்வது மட்டும் அல்ல... முத்தம் தருவது, பிடித்து அழுத்துவது, பிறப்புறுப்பை காண்பிக்கச் சொல்வது, பார்க்க மற்றும் தொட சொல்வது, சில படங்கள் அல்லது வீடியோக்களை பார்க்க வைப்பது, நிர்வாணமாக்கி படம் எடுப்பது என்று பட்டியல் நீள்கிறது. 



எப்படி காப்பாற்றலாம்?

 
* சின்ன சங்கடம் என்றாலும், அம்மா - அப்பாவிடம் சொல்லி விடும் அளவுக்கு நாம் நம்பிக்கை தருவது. 



* குட் டச், பேட் டச் ( Good Touch / Bad Touch ) பற்றிய புரிதல். 


* குழந்தைகள், சிலரோடு பழக பிடிக்கவில்லை என்று சொன்னால் அதை மேலோட்டமாய் கேட்டு உதாசீனப்படுத்தாமல் இருப்பது. 


* குழந்தைகள் போக்கில் திடீர் மாறுதல் ஏற்பட்டால் இனம் காண்பது, காரணம் கேட்டறிவது. 



* எக்காரணம் கொண்டும் அம்மா,அப்பா, பாட்டி தாண்டி யாரும் தொட்டு பேசுவதை அனுமதிக்காமல் இருக்க கற்று தருவது. 


* உரக்க கத்துவதை ஒரு தற்காப்பாக பயன்படுத்தவேண்டியது என்றும் அவசியம் குழந்தைகளுக்கு தெரிந்திருக்கவேண்டும். 


* கல்யாணவீடுகள், இன்ன பிற அன்னிய மனிதர்கள் நிறைய புழங்கும் இடத்தில், குழந்தை நம் கண்பார்வையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். 


* குழந்தைகளுக்கு இறுக்கமான மற்றும் அரைகுறை உடைகளை தவிர்க்கலாம். (பத்து வயது தாண்டினாலும், பெற்றோருக்கு அவர்கள் குழந்தை தான். யாவர் பார்வைக்கும் அப்படியே என்று நினைப்பது மடத்தனம்.)



கவனிக்க: 

 
- ஆண் குழந்தைகளும் பாலியல் சார்ந்த வன்முறைக்கு ஆளாகிறார்கள். 


- பெண்களும் பாலியல் சார்ந்த குற்றம் புரிகிறார்கள். 


- பெற்றோருக்கு நன்கு அறிமுகமானவர்களிடம் தான் அதிகமாக குழந்தைகள் மாட்டுகின்றன. 


- பெரும்பாலும் குழந்தையிடம் தவறாக நடக்கிறவர்கள் Habitual Offenders ஆக இருக்கிறார்கள். இவர்கள், தண்டனை பெற்றாலும் சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் தவறு செய்துக்கொண்டே தான் இருக்கிறார்கள்! 


- பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ மற்றும் மனோதத்துவ உதவி அவசியம். ஏனெனில் வெளியே தெரியாவிட்டாலும், பின்னாளில் தீவிர மனச்சிதைவு ஏற்படலாம். இது எதிர் பாலின வெறுப்பில் தொடங்கி சமூகவிரோத செயல் வரை கொண்டுவிடுகிறது. 



பின்குறிப்பு - எந்த குழந்தையாவது துன்புறுத்தலுக்கு ஆளாவதாய் தோன்றினால், நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண் 1098 


எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளலாம்... பத்து ஒன்பது எட்டு - 1098. 


கட்டுரையாளரின் வலைப்பதிவுத் தளம் http://mymarsandvenus.blogspot.in

பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு ; சதி செய்தது யார் ?;

பாட்னா: பீகாரில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உரையாற்ற விருந்த பிரசார மேடை , ரயில்வே ஸ்டேஷன், மைதானம் என 8 இடங்களில் இன்று பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியாகியிருப்பதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. 90க்கும் மேற்பட்டோர், பலர் காயமுற்றுள்ளதாக தெரிகிறது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்தாக சந்தேகிக்கப்படும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.



பா.ஜ., கூட்டத்திற்கு வந்தவர்கள் மற்றும் மோடியை கொல்ல திட்டம் தீட்டப்பட்டு இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த குண்டுகள் சக்தி வாய்ந்ததது இல்லாமல் இருந்ததால் பெரும் சேதம் ஏதும் இல்லாமல் முடிந்தது. இந்த குண்டு வெடிப்பு மத்தியிலும் மோடி தனது பிரசாரத்தை ரத்து செய்யாமல் மேடைக்கு வந்து தொண்டர்களிடம் பேசினார்.

5 அடுக்கு பாதுகாப்பு : நாடு முழுவதும் பா.ஜ.,வுக்கு ஆதரவு திரட்டும் வகையில் நாடு பல்வேறு மாநிலங்களில் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களாக மத்தியபிரதேசம், சட்டீஸ்கள், டில்லி, மும்பை, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், தமிழகம், ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். இவர் செல்லும் இடமெல்லாம் பா.ஜ., தொண்டர்கள் லட்சக்கணக்கில் குவிந்து வருகின்றனர். மத்திய அரசுக்கு பெரும் சவால்கள் விட்டு வரும் மோடிக்கு தற்போது இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இவர் பங்கேற்கும் கூட்டங்களில் போலீசார் முழு அளவில் 5 அடுக்கு பாதுகாப்பு செய்து வந்தனர்.

ஆனால் இன்று பீகாரில் அனைத்து பாதுகாப்பையும் மீறி குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் ஆளும் இங்கு பாட்னாவில் மோடி முதல் பிரசாரத்தை துவக்கினார். இங்குள் காந்தி மைதானத்தில் பிரசாரம் துவங்கும் முன்னதாக காலை 9. 50 மணியளவில் பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள பாத்ரூம் மற்றும் கழிப்பறையில் ஒரு குண்டு வெடித்தது. இதில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் , வெடிகுண்டு நிபுணர்கள் சில நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி செயல் இழக்க செய்தனர். தொடர்ந்து மோடி மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக மேடை அருகிலும், மைதானத்திலும் சில குண்டு வெடிப்புகள் நடந்தன. மொத்தம் இதுவரை 6 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சதி திட்டத்திற்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. வெடித்தது குறைந்த சக்தி கொண்டதாக தெரிகிறது. இதனால் பெரும் சேதம் ஏதும் இல்லாமல் முடிந்தது. குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தை பொருட்படுத்தாத மோடி மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் பொதுக்கூட்ட மேடைக்கு வந்தனர். தங்களின் பிரசார கூட்டத்தை துவக்கினர்.

முதல்வர் அவசர ஆலோசனை: இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் நிதீஷ்குமார், பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு உத்தரவிட்டார். இதற்கிடையில் பீகாரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மத்திய அரசு முழு அறிக்கை கேட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தேசி புலனாய்பவு படையினர் விரைந்துள்ளளனர்.

மோடி பேச்சு : இந்த கூட்டத்தில் பங்கேற்று மோடி பேசுகையில்: பீகார் மாநிலம் புத்தர், மகாவீரர் உள்ளிட்ட கடவுளை தந்தது. பீகார் மக்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்தபோது ஜெய்பிரகாஷ் நாராயணன் இந்த மாநிலத்தில் இருந்து அவதரித்தார். இவருடன் நான் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்காமல் போனது. இன்று நடப்பது பேரணி மட்டுமல்ல. இந்தியாவின் எதிர்காலத்திற்கான அடித்தளம் அமைக்கும் பேரணி. பீகார், மற்றும் உ.பி.,யில் உள்ள யாதவ இன மக்களுக்கு நான் சொல்லி கொள்வதென்னவென்றால் , உங்களின் கவலைகளை நான் அறித்து வைத்துள்ளேன். இதனை நிறைவேற்றுவேன். நான் இதற்கு உறுதி அளிக்கிறேன். பிரதமர் வழக்கம் போல் முதல்வர்கள் மாநாட்டை நடத்துகிறார்.

பீகாரில் நாங்கள் கூட்டணி ஆட்சி அமைத்தோம். ஆனால் நிதீஷ் பா.ஜ.,வை ஏமாற்றினார். பா.ஜ., அமைச்சர்கள் இங்கு நல்ல பணிகளை செய்துள்ளனர். மாநில முதல்வர் நிதீஷ் கபட வேடதாரி. இவர் காங்கிரசுடன் மறைமுக உறவு வைத்துள்ளார். பீகாரில் காட்டாட்சி நடக்கிறது. இவர் தான் பிரதமர் ஆக வேண்டும் என கனவு காண்கிறார். இவரது அமைச்சர் ஒருவர் சொல்கிறார், ராணுவத்தில் சேருவதே சாவதற்குத்தான் என்கிறார். பீகாரில் உள்ள முஸ்லிம்கள் ஏழைகளாக இருக்கின்றனர். ஆனால் குஜராத் வாழ் முஸ்லிம்கள் வளம் மிக்வர்களாக உள்ளனர்.

இந்து - முஸ்லிம் ஒற்றுமை : 100 நாட்களில் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதாக காங்., உறுதிமொழி கொடுத்தது காங்., அரசு, ஆனால் 10 ஆண்டுகளாக இவர்களால் இதனை செய்ய முடியவில்லையே. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி முடியும் காலம் வந்து விட்டது. காங்., அரசை வேரறுக்க வேண்டும். காங்,. குடும்ப அரசியலை நிறுத்தட்டும் . நான் இளவரசர் என்று ராகுலை அழைப்பதை நிறுத்துகிறேன். கட்சியை விட நாடே முக்கியம். ஏழைகளை திட்டக்கமிஷன் கேலிப்பொருளாக பார்க்கிறது. காங்., அமைச்சர்கள் ரூ. 12 போதும் மதிய சாப்பாட்டுக்கு என்று சொல்கின்றனர். இவர்கள் ஏழைகள் பசியை அறியாதவர்களாக இருக்கின்னறனர். முஸ்லிம் - இந்துக்கள் யாரும் மோத வேண்டாம். இருவரும் இணைந்து வறுமையை ஒழிக்க போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஒரு வார்த்தை கூட பேசவில்லை : இந்த மேடையில் இவர் குண்டு வெடிப்பு தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் கண்டனம்: இந்த சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்ப்பட வேண்டும். இவர்ள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

டுவிட்டரில் மோடி இரங்கல்: இந்த சம்பவம் தொடர்பாக நரேந்திர மோடி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த சம்பவம் தனக்கு பெரும் கவலையை தந்துள்ளது. இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த தருணத்தில் அனைவரும் அமைதி காத்திட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

உளவுத்துறை தோல்வி: சுஷ்மா கண்டனம்: இன்றைய சம்பவம் உளவுத்துறையினரின் பணியில் தோல்வியையே காட்டுகிறது. இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறேன் என எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

ஜனாதிபதி கண்டனம்: குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்நேரத்தில் அனைவரும் அமைதி காத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜனநாயகதின் மீது தாக்குதல்: சோனியா ; காங்கிரஸ் தலைவர் சோனியா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இது போன்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் ஜனநாயகத்தை குறிவைத்து நடத்தப்படுகின்றன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் நீதிமுன் நிறுத்தப்பட வேண்டும். குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கும் மற்றும் காயமடைந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

காங்கிரஸ் கண்டனம்: இது குறித்து காங்., கட்சி தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது போன்ற சதிச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த கொடூர செயலுக்கு காங்., கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


அமைதியை குலைக்க முயற்சி : முதல்வர் நிதீஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், குண்டுவெடிப்பு சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். 83 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். குண்டுவெடிப்பு குறித்து மத்திய அரசிடமிருந்து எந்தவித தகவலும் மாநில அரசிற்கு வரவில்லை. மாநில சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவே குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. பீகாரில் நிலவும் அமைதியை குலைக்க ஒரு சிலர் முயற்சி செய்துள்ளனர். குண்டுவெடிப்பு சம்பவ இடத்திலிருந்து சந்தேக நபர் ஒருவர் பிடிபட்டுள்ளார். தொலைபேசி எண்கள் மற்றும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மோடி பங்கேற்கும் பேரணியை குறிவைத்து முன்கூட்டியே குண்டு வெடிப்பிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் பழக்கம் பீகார் மாநிலத்திற்கு இல்லை என கூறினார்.
 
 
thanx - dinamalar 

ஆரம்பம் - டை ஹார்டு , ஸ்வார்டு ஃபிஷ் ரீமேக்கா? - இயக்குநர் விஷ்ணுவர்தன் பேட்டி @ த ஹிந்து

இயக்குனர் விஷ்ணுவர்தன் 

31ம் தேதி பட வெளியீடு, மாயாஜாலில் மட்டும் 91 ஷோ, எங்கு பார்த்தாலும் 'ஆரம்பம்' படத்தைப் பற்றி தான் பேச்சாக இருக்கிறது. சரி, 'ஆரம்பம்' பற்றி இயக்குநர் விஷ்ணுவர்தனிடமே பேசலாம் என்று தொடர்பு கொண்டேன். 



ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் பைனல் மிக்ஸ் போய்க் கொண்டிருக்கிறது. அங்கு வாங்க என்றவுடன் அவசர அவசரமாக சென்று காத்திருந்து எடுத்த மினி பேட்டி... 


'ஆரம்பம்' படத்தை அஜித் பாத்துட்டு என்ன சொன்னார்?

 
ரொம்ப நல்லாயிருக்குனு சொன்னார். இது என்னோட சிறந்த படங்கள்ல ஒண்ணு. ரொம்ப நன்றி விஷ்ணு அப்படினு சொன்னார். சார்.. நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்னு சொன்னேன். குடும்பத்தோட படம் பாத்துட்டு, என்கிட்ட ஜாமி (ஆர்யா) பத்தி தான் ரொம்ப பேசினாரு. ரொம்ப நல்லா பண்ணியிருக்கான்னு பாராட்டினாரு. 



இந்தப் படத்தோட சிறப்பம்சமே படத்தோட கதை தான் விஷ்ணு. நான் ஒரு நல்ல கேரக்டர் பண்ணிருக்கேன். மொத்த படமா பார்த்தா, எல்லாருமே அவங்கங்க கேரக்டர்ல ரொம்ப நல்லா, பிரமாதமா நடிச்சுருக்காங்க. எப்போதுமே என்னோட படங்கள்ல என்னோட கேரக்டருக்குத் தான் முக்கியத்துவம் இருக்கும். மத்தவங்களும் நடிச்சிருப்பாங்க. ஆனா இந்த படம் அப்படியில்லைனு ரொம்ப பாராட்டினார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு. 


ஆக்‌ஷனுக்கு அஜித், ரொமான்ஸுக்கு ஆர்யாவா..?


 
அப்படியெல்லாம் கிடையாது. படம் பாத்தீங்கன்னா தெரியும். இது ஒரு ஆக்‌ஷன் டிராமா. காமெடிக்காக சந்தானத்தையும், ரொமான்ஸ்க்காக ஆர்யாவையும், ஆக்‌ஷனுக்கு அஜித்தையும் யூஸ் பண்ணா அது தப்பான படம். படத்துல ஆர்யா முக்கியமான கேரக்டர் பண்ணிருக்காரு. அஜித்துக்கு இணையா ஆர்யாவுக்கு நிறைய காட்சிகள் இருக்கு. 


ஸ்டில்ஸ் எல்லாம் பார்க்கும் போது அஜித் போலீஸ் வேடத்துல நடிச்சுருக்காரா..?


 
இப்படிக் கேட்டா நான் என்ன பதில் சொல்ல முடியும். படம் பாத்து தெரிஞ்சுக்கிட்டுமே. இப்பவே அஜித்துக்கு இந்த ரோல் அப்படின்னா, படம் பாக்குற அப்போ அந்த எதிர்பார்ப்பு இருக்காது. அதனால இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பல. 



பெரிய பட்ஜெட், நிறைய நடிகர்கள் கொண்ட படத்தை முடிச்சாச்சு.. அடுத்த ப்ளான் என்ன?


 
எனக்கே தெரியல. என்னோட எல்லா படங்களையும் அப்படித்தான் பண்ணிருக்கேன். மற்ற இயக்குநர்கள் மாதிரி படம் முடியும் முன்பே, அடுத்த படத்துக்காக அட்வான்ஸை வாங்கி வச்சுக்குற ஆள் நான் இல்ல. படம் ரிலீஸான உடனே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு, அப்புறமா தான் ப்ளான் பண்ணுவேன். என்ன கதை பண்ணலாம்னு யோசிப்பேன். அடுத்த படத்தை பத்தி எனக்கு யோசிக்க கூட இப்ப டைமில்லை. அந்தளவிற்கு 'ஆரம்பம்' பணிகளுக்காக ஓடிட்டு இருக்கேன்.



'ஆரம்பம்' படத்தின் இந்தி ரீமேக் பண்ணச் சொன்னா பண்ணுவீங்களா?


 
கண்டிப்பா பண்ணுவேன். இதுல என்ன தப்பிருக்கு. இப்பவே நிறைய பேர் பட வெளியீட்டிற்காக காத்துட்டு இருக்காங்க. பாக்கலாம்.. படம் வெளியாகி எல்லாம் நல்லபடியா அமைஞ்ச இயக்க தயாரா இருக்கேன். 



இந்தில பண்ணா அஜித், ஆர்யா ரோல்ல எல்லாம் யார் நடிச்சா நல்லாயிருக்கும்..?


 
தெரியல. எல்லாக் கேள்விக்கும் படம் ரிலீஸான உடனே தான் பதில் கிடைக்கும். இப்பவே படத்தை இந்தி நடிகர் யாருக்காவது போட்டுக் காட்டி, அப்படியே அவரை வெச்சு ஒரு இந்தி படம் பண்ணிரனும் அப்படினு எல்லாம் நான் ப்ளான் பண்ணல. இந்தி படம் பேசிக்கிட்டிருக்கேன். ஆனால் அது 'ஆரம்பம்' ரீமேக் கிடையாது. இப்பவே அஜித், ஆர்யா வேஷத்துல யார் நடிச்சா நல்லாயிருக்கும் கேட்டா எனக்கிட்ட பதில் இல்லை. ஏன்னா யார் நடிச்சா நல்லாயிருக்கு, அஜித் சார் இமேஜ் யாருக்கு செட்டாகும், அப்படினு நிறைய விஷயங்கள் உட்காந்து பேசி முடிவு பண்ணனும். இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு. 



'ஆரம்பம்' படத்தப் பத்தி இணையத்துல இருக்க, முக்கியமா டிவிட்டர்ல இருக்க பரபரப்பை எல்லாம் கவனிக்குறீங்களா?


 
இல்லைங்க.. காரணம், எனக்கு நேரமில்லை. ட்விட்டர் பக்கம் கூட இப்போ நான் போறதில்லை. 2 நாளைக்கு ஒரு தடவை #Arrambam டிரெண்டாவது பத்தி எல்லாம் சொல்லுவாங்க.. பார்ப்பேன். ஆனா அதுக்காக அதுல ரொம்ப கவனம் செலுத்த மாட்டேன். ஏன்னா எனக்கு பயம். 



என்னை ட்விட்டருக்கு கொண்டு வந்ததே யுவன் தான். ஆரம்பிச்சு விட்டுட்டான். அதனால எப்போதாவது எனக்கு தோணுறதா ட்வீட் பண்ணிட்டு வந்துருவேன். என்னையே ரொம்ப கேவலமா திட்டி எல்லாம் அனுப்புவாங்க. ஆனா, என்னோட அசிஸ்டன்ஸ் இருப்பாங்க.. படம் இன்றைக்கு சென்சார் அப்படினு நிறைய ட்வீட் பண்ணுவாங்க. வித்தியாசமான ஏதாவதுன்னா சொல்லுவாங்க.. நானும் பார்ப்பேன். 



எவ்வளவு HYPE இருக்கோ.. அதே மாதிரி SWORD FISH ரீமேக், தீவிரவாதிகளை மையப்படுத்திய படம் தான் 'ஆரம்பம்'னு எதிர்மறையான விமர்சனங்களும் வருதே?

 
இது எந்த படத்தோட ரீமேக்கும் கிடையாது. ஒருத்தன் துப்பாக்கி தூக்கி சண்டை போடுறான்னு எடுத்தா அதே மாதிரி நிறைய படங்கள் வந்திருக்கும். அதுக்காக இது அந்தப்படத்தோட காப்பினு சொல்லக்கூடாது. ஊழலை எதிர்த்து போராடுறான், லவ் பண்றான்னு இப்படி எதைப் பத்தி எடுத்தாலும் உடனே காப்பினு சொல்ல முடியாது. அது ஒரு முட்டாள்த்தனம். அப்படி சொல்றவங்க தான் ஒரு புத்திசாலினு காட்டிக்கறதுக்காக இப்படி சொல்லிட்டு இருக்காங்க. 



அப்படினு பாத்தா இந்த படத்துலயும் ஹேக்கிங் (HACKING) இருக்கு. உடனே இது DIE HARD படத்தோட காப்பினு சொல்லடுவீங்களா.. எந்திரன் படத்தை i-Robot படத்தோட காப்பினு எப்படி சொல்ல முடியும்? இந்த படமே ஒரு உண்மை சம்பவம் தான். அதை சுத்தி கதை பண்ணிருக்கேன் அவ்வளவுதான். 



உண்மை சம்பவம்ன்னா மும்பை தீவிரவாதிகள் தாக்குதலா?


 
அப்படிச் சொல்ல முடியாது. தீவிரவாத தாக்குதல், ஊழல், இப்படி நிறைய இருக்கு. டெல்லி, இந்தியா, அமெரிக்கா இப்படி எல்லா இடத்துலயும் ஊழல் இருக்கு. உடனே நான் ஊழலைப் பத்தி படம் எடுக்கிறேன்னு சொன்னா. நான் காலி. கதையே பாம்பேல நடக்குற மாதிரி எடுத்துருக்கேன். குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அங்கே நடக்கற மாதிரி எடுத்தா தான் நல்லாயிருக்கும். நான் சென்னைல நடக்கற மாதிரி எடுத்தேன்னா, அதை மாதிரி முட்டாள் தனம் எதுவுமே கிடையாது. ஏன்னா அதே மாதிரி சம்பவங்கள் இங்க அவ்வளவா நடக்குறதில்லை. இதே நான் பாம்பே நடக்குதுனு சொன்னா நம்புவீங்க. அது தான் முக்கியம். 



பத்து பெண்கள் கற்பழிப்பு பத்தி கதைன்னா அதை எங்கு வேணுமானாலும் நடக்கறதா கதை பண்ணலாம். அது எங்கனாலும் நடக்கும். பாம்பே மாதிரியான நகரங்கள்ல நீங்க எந்த மாதிரியான கதைகளையும் எடுக்கலாம். அங்கே தமிழர்களே இல்லையே அப்படினு நீங்க சொல்ல முடியாது. நான் சொல்லிருக்குற விஷயங்கள் எல்லாமே நம்பற மாதிரி இருக்குற இடம் பாம்பே. அதனால அங்கு வெச்சு எடுத்தேன். 



அஜித் - நயன்தாரா பாடல் காட்சியே இல்லையாமே... நயன் இதுல என்ன ரோல் பண்ணிருக்காங்க?

 
யாரு சொன்னாங்க இதுல அஜித் - நயன் பாட்டு இல்லனு. ஒரு சின்ன பாட்டு இருக்கு. கிளாமர் என்பதெல்லாம் தாண்டி இதுல நயன் ஒரு சூப்பரான கேரக்டர் பண்ணிருக்காங்க. கதை போயிட்டு இருக்குற வேகத்துல கமர்ஷியலுக்காக ரெண்டு பேர வைச்சு பாட்டு பண்ண முடியாது. 



'ஆரம்பம்' முடிஞ்சிருச்சு.. அஜித் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க..

 
படம் பாத்த வரைக்கும் எல்லாருக்குமே படம் பிடிச்சிருக்கு. என்னைப் பொருத்தவரைக்கும் இது ஒரு அஜித் படம். எந்தொரு படமெடுத்தாலும் அதுல நாயகன்னு ஒருத்தர் இருப்பாரு. அஜித்தை சுத்தித்தான் கதை நடக்கும். மொத்தத்துல அஜித்தை வச்சு ஒரு சூப்பரான கதை ஒண்ணு பண்ணிருக்கேன். இது ஒரு கேங்க்ஸ்டர் படம் கிடையாது. எனக்கும் சரி, அஜித்திற்கு சரி இது ஒரு புதுமையான களம். 



ஸ்கிரீன்ல பாக்குற அப்போ ரசிகர்களுக்கு புதுசாயிருக்கும். அதை மட்டும் நீங்க உறுதியா நம்பலாம். கண்டிப்பா எல்லாரும் தியேட்டர்ல போய் படம் பாருங்க. திருட்டு டி.வி.டில, இணையத்துல எல்லாம் பாக்காதீங்க. ரொம்ப கஷ்டப்பட்டு பண்ணியிருக்கோம்.படம் பாத்துட்டு நீங்க சொல்ற பதிலுக்காக, ஒரு இயக்குநரா காத்துட்டு இருக்கேன். அனைவருக்கும் 'ஆரம்பம்' படக்குழுவினரின் 'தல' தீபாவளி வாழ்த்துகள்.


thanx - the hindu

ஆரம்பம் படத்தில் நடிகர் அஜித்

சுட்ட கதை - சினிமா விமர்சனம்

டைட்டிலைப்பார்த்ததும் வழக்கமா ஏ எல் விஜய் ,மிஷ்கின் வகையறாக்கள் ஹாலிவுட் ,  கொரியப்படங்களை சுட்டு கதை பண்ணுவாங்களே அந்த மாதிரின்னு நினைக்கத்தோணும், ஆனா இது ஒரு ஆளை துப்பாக்கியால ஒருத்தன் சுட்ட கதை. கொலையாளி யார்? என்பதை கண்டு பிடிக்கும் டிடெக்டிவ்  காமெடி ஸ்டோரி 


மலைவாழ் மக்கள் வாழும் ஒரு கிராமம். அங்கே இருக்கும் எல்லாரும்  திருட்டுப்பசங்க அங்கே  இருக்கும் போலீஸ் ஸ்டேஷன்ல  புதுசா வேலைக்குச்சேரும் 2 கான்ஸ்டபிள்கள் மலைவாழ் மக்களின் தலைவனின் மகள் லேடி ஜெட்லீ மாதிரி இருக்கும் பொண்ணை காதலிக்கறாங்க. 

அந்த பொண்ணு கிட்டே தங்கள் காதலை வெளிப்படுத்தி 2 பேர்ல யாரோ ஒருவரை காதலிக்கனும்னு சொல்றாங்க . அந்த டைம்ல அந்தப்பொண்ணோட அப்பாவை யாரோ கொலை பண்ணிடறாங்க . பொண்ணு அப்பாவைக்கொன்னவங்களை  பழி வாங்க நினைக்குது .அந்த 2 போலீஸும் உதவறாங்க . யார் கொன்னது ? எதுக்கு கொன்னாங்க ? என்பதே மீதிக்கதை . 


 தமிழில் ஒரு வித்தியாசமான காமெடி கதையை , புதியதா ஒரு திரைக்கதை வடிவத்தை காட்டனும்கற ஆர்வம் இயக்குநருக்கு அபாரமா இருக்கு , ஆனா ஆர்வம் இருந்த அளவு அவர் ஹோம் ஒர்க் பண்ணலை . அதனால திரைக்கதை தடுமாறுது . 110 நிமிடம்  கூட ஓடாத சின்னப்படம் தான் ஆனா  ரொம்ப இழுக்குது . 




பாலாஜி , வெங்கடேஷ்  இருவரும்  ஹீரோக்கள் . நாகேஷ் , சந்திரபாபு பாணியில் நடிக்க முயற்சி பண்ணி  இருக்காங்க .பாராட்டத்தக்க  முயற்சி .2 பேருக்கும் பாடி லேங்குவேஜ் நல்லா வருது . வடிவேலுக்குப்பின் காமெடி நடிகர்களில் பாடி லேங்குவேஜில் யாரும் கலக்க வில்லை . அந்தக்குறையை இவர்கள் தீர்த்து வைக்க வாய்ப்பு இருக்கு 

ஹீரோயினாக லட்சுமிப்ரியா .இவர் ஆல்ரெடி கவுரவம் படத்தில் நடித்தவர் . இந்தியன் கிரிக்கெட்  டீமில்  இருந்தவர் . நஸ்ரியா பாணியில்  மிகக்கறாராக ஆடை விலகாமல் கண்ணியமாக வந்து போகிறார்.  தமிழ் சினிமா இவரைப்பயன்படுத்திக்கொள்வது நலம் 


நாசர்  மகளிர் மட்டும் படத்தில் வருவது போல் ஒரு முழு நீளக்காமெடிப்படத்தில் சைன் பண்ணிட,லாம் என கணக்குப்போட்டு இருக்கிறார். பாதிக்கிணறு கூடத்தாண்டவில்லை , ஆனால் அவர் அளவில் நடிப்பில்  குறை சொல்ல முடியாது . குட் 


எம் எஸ் பாஸ்கர் , ஜெயப்ரகாஷ்  லட்சுமிராமகிருஷ்ணன் என ஏகப்பட்ட கேரக்டர்கள் . வந்த வரை  ஓக்கே ரகம் 


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 

1. சாம்பசிவம் காமிக்ஸ் காட்சிகள் படத்தில்  ஒரு புதுமை . படத்தில்  ஹீரோக்கள் துப்பறியும் காட்சிகளில்  காமிக்ஸ் காட்சியை இணைத்தது நல்ல ஐடியா . தமிழ் சினிமாவில் யாரும் இதுவரை காட்டாத காட்சி 


2.  படத்தின்  பின்னணி இசை அபாரம் . ஒரு காமெடிப்படத்துக்கு இசையால் சிரிக்க வைப்பது  ரொம்ப  முக்கியம் . அதை இந்தபப்டம் பரிபூரணமா நிறைவேத்தி இருக்கு . மேட்லீ ப்ளூஸ் தான் இசை . செம . ஆங்காங்கே எம் எஸ் விஸ்வநாதன் இசையை பயன் படுத்தி இருப்பது அடடே ரகம்


3 கான்ஸ்ட;பிள் சிங்காரம் வரும் காட்சிகளில் எல்லாம் தண்ணி டேங்க் சத்தத்தை பின்னணி இசையாக கொடுத்த காட்சிகள் செம காமெடி 2 ஹீரோக்களில்   ஒருவருக்கு நினைத்தாலே இனிக்கும்  ரஜினி மாதிரி எதையாவது திருடும் குணம் இருப்பதும் , இன்னொரு ஹீரோவுக்கு ஒன் சைடு காது டமாரம் என்பதையும் வைத்து அமைக்கப்பட்ட காமெடிக்காட்சிகள் ஓக்கே  ரகம் ( இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளை வைத்து காமெடி பண்ணுவதை இனி தவிர்க்கலாம் ) 


4  இரு ஹீரோக்களும் வாக்குவாதத்தில்  ஈடுபட்டிருக்கும்போது  காட்டில் புலி உறுமுவதும்  உடனே அவர் “ உஷ் , பேசிட்டு இருக்கோமில்ல ? “ என புலியை அப்பாவித்தனமாய் அதட்டுவதும் அல்லோலகல்லோலக்காமெடி . தியேட்டரே அதிர்ந்தது கைதட்டலால் 


5 போலீஸ் ஹீரோக்கள் இருவரும் மாஸ் சீன் வேணும் என  கடலையைத்தட்டி விட்டு இண்ட்ரோ  கொடுக்கும் காட்சி செம நக்கல் 


6  வீடு வாடகைக்கு வேண்டும் என கேட்கப்போன இடத்தில் அந்தப்பொண்ணு போலீஸ் மாமா கிட்டே பிடிச்சுக்கொடுத்துடுவேன் என குழந்தைக்கு சோறு ஊட்டும் இடம் 


7  மலைவாழ் மக்களின்  உப தலைவன்  ஆசீர்வாதம் செய்யும் சீனில் அவர் கூல் என சொல்லி அனுப்ப குஞ்ஞானி என ஆட்கள் சொல்லுவதும் செம சிரிப்பு 



இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1. கதையோடு ஆடியன்ஸ் ஒன்றி விட வேண்டும் எனில்  முதல்ல கேர்கடர்களை அந்நியோன்யமா காட்டிடனும். யார் எவர்னே தெரியாத ஆள்  கொலை செய்ய்ப்படுதல் , ஹீரோயின்  யாரையும் லவ்வலை  என்பதெல்லாம் சுவராஸ்யம் குறைந்த காட்சி அமைப்புகள் 


2  கதை நடக்கும்  கால கட்டம் 1970 என்பது போல் காட்டறாங்க . ஆனா ஹீரோயினை ஹீரோக்கள் நீ விஜய சாந்தி மாதிரி  இருக்கே  என சொல்வது எப்படி ? 


3 கல்வி மந்திரி தன் நெருங்கிய சொந்தத்துக்கு வேலை வாங்கித்தரனும்னா  கமிஷன்ருக்குத்தான் போன் போட்டு  சொல்லச்சொல்வார் , அதுவும் தன் பி ஏ , மூலமா . இப்படி ஒரு சாதா இன்ஸ்பெக்டருக்கு லெட்டர் எல்லாம் எழுதிட்டு இருக்க மாட்டார் 


4 காட்டுக்குள் இரவில் எடுக்கப்பட்ட காட்சிகளில் லைட்டிங்க் ஓவர் . ரொம்ப செயற்கை . இயற்கையான ஒளிப்பதிவு முக்கியம் . கொடைக்கானலில் அத்தனை லைட் ஏது ?



5 படத்தில் ஏதாவது  திருப்பம் வந்தால் ரசிகர்கள் பார்த்துக்குவாங்க , படத்தில் வரும் கேர்கடர்களே மூச்சுக்கு முன்னூறு தடவை ட்விஸ்ட் வருது , என்ன ஒரு ட்விஸ்ட் , செம ட்விஸ்ட் என  பாராட்டிக்கொள்வது கலைஞரின் நமக்கு நாமே பாராட்டுத்திட்டம் மாதிரி எரிச்சலைக்கிளப்புது


 
மனம் கவர்ந்த வசனங்கள்


  1. கல்வித்துறை மந்திரி ஒரு கை நாட்டு . விளங்கிடும்


  1. இது உங்க வீடு மாதிரி


ரொம்ப தாங்க்ஸ் சார்

உங்க  வீடுன்னா சுத்தமா வெச்சிருக்க மாட்டீங்க,? க்ளீன் பண்ணுங்க

சார்!!

3 ரோந்து வேலை பார்க்கச்சொன்னா  ரோமியோ வேலை பார்த்துட்டு இருக்கீங்களா?


4 மிஸ்! சாகறதுக்கு முன்னால அங்க்கிள் என்ன பண்ணிட்டு இருந்தாரு?


உயிரோட  இருந்தாரு


5 உங்களுக்கு டாஸ்மாக் அனுபவம் இதுதான்  ஃபர்ஸ்ட் டைமா?

 ஆமா, எப்படி தெரியும் ?

 ஒரு குவாட்டர்  பீர் ஆர்டர் பண்றீங்களே? பீர்-னா ஃபுல் தானே? 




6         நீ துப்பாக்கியை வெச்சுத்தானே சுடுவே? நான் துப்பாக்கியையே சுடுவேன் ஐ மீன் லபக்கிடுவேன்


7         என் புருஷனால  குறி பார்த்து எதையும்  சுட முடியாது , கண் வீக்கு , ஆனா இதை சொன்னா கோபம் மட்டும் வந்துடும்

8 சிலந்தி   தன் வேலை முடிஞ்சதும் தன் காதலனையே கொன்னுடும் 

 



ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-40


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் = 2.75  / 5



சி பி கமெண்ட்  - வித்தியாசமான காமெடிப்படம் பார்க்கும் ஆர்வம் உள்ள ரசிகர்கள் பார்க்கலாம், பெண்களூம் பார்க்கும் தரத்தில் தான் படம் இருக்கு . ரொம்ப சின்னப்படம் என்பதால் நெளிய வைக்கவெல்லாம் இல்லை .ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன் . படம்  முழுக்க ஆடியன்ஸ் ரசிச்சு சிரிச்சாங்க . ஏ செண்ட்டர்ல் ஓரளவு ஓடிடும்

 

ஆரம்பம் -வசனகர்த்தா சுபா பேட்டி + கொங்கு மண்டலம் தீபாவளி ரிலீஸ் தியேட்டர் லிஸ்ட்

ஆரம்பத்துக்கு முன்பதிவு தொடங்கியது - தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள்!!

 

தல ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழக மக்களுக்கும் தீபாவளி விருந்து படைக்க வருகிறது ஆரம்பம். வருகிற 31ந் தேதி உலகம் முழுவதும் ஆரம்பம், ஆரம்பம். அதற்கான முன்பதிவு இன்று (அக்டோபர் 26) தொடங்கியது. காலை பத்து மணிக்கு துவங்கிய முன்பதிவு மாலை 5 மணி வரை இருக்கும். சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இதற்கென தனியாக கவுண்டர்கள் அமைத்திருக்கிறார்கள். காலை 8 மணிமுதலே ரசிகர்கள் முன்பதிவு கவுண்டர்களை மொய்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

தீபாவளி ஸ்பெஷல் டிரைய்ன் மாதிரி காலை 12 மணிக்குள் நவம்பர் 5ந் தேதி வரைக்கும் ரிசர்வேஷன் முடிந்து விட்டதாக தியேட்டர் மானேஜர்கள் தெரிவிக்கிறார்கள். சென்னை அடுத்த பிற நகரங்களிலும் இன்றே முன்பதிவு தொடங்கியது. அங்கும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாயாஜாலில் இதுவரை 24 காட்சிகளுக்கு ஹவுஸ்புல் புக்கிங்க ஆகிவிட்டது. 31ந் தேதி அன்று மட்டும்  70 காட்சிகள் திரையிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதுதவிர பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு ஆன்லைன் புக்கிங்கும் இன்று தொடங்கியது. சில புக்கிங் இணைய தளங்கள் இதற்கென்று தனி பக்கத்தை துவக்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்பம் மூலம் 18 வருடங்களுக்கு பிறகு ரீ-என்ட்ரியாகும் சுமன் ரங்கநாதன்!!
3

Suman Renganathan Re-entry after 18 years by Arrambam
சுமன் ரங்கநாதனை ஞாபகம் இருக்கிறதா...? தமிழில், ‘புதுப்பாட்டு’, ‘பெரும்புள்ளி’, ‘மாநகரகாவல்’ போன்ற படங்களில் நடித்தவர். பின், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடிக்க துவங்கினார். துவக்கத்தில் குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்த சுமா, பின் பாலிவுட்டே கொண்டாடும் கவர்ச்சி நடிகையாக மாறினார். இந்நிலையில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சுமன் ரங்கநாதன்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜீத் நடித்துள்ள ‘‘ஆரம்பம்’’ படத்தில் தான் சுமா, ரீ-என்ட்ரி ஆகியுள்ளார். ஆக்ஷ்ன் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ஆரம்பம் படத்தில் சுமாவின் ரோல் ரொம்பவே முக்கியமானதாம். இந்தவேடத்தில் அவரை நடிக்க கேட்டபோது ரொம்பவே முதலில் தயங்கினாராம். பிறகு படத்தில் அஜீத், ஆர்யா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள், இந்த ரோல் கண்டிப்பாக உங்களுக்கு ‌பொருத்தமாக இருக்கும் என்று டைரக்டர் சொன்ன பிறகு நடிக்க சம்மதித்தாராம். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பது குறித்து இந்தப்படம் வெளிவந்த பிறகு முடிவு செய்ய இருப்பதாக கூறியுள்ளார் சுமன் ரங்கநாதன். 


உளவுத்துறை அதிகாரி வேடத்தில் ஆரம்பம் அஜீத்!

Ajith as intelligence officer in Arrambam movie
 அல்டிமேட் ஸ்டார் அஜீத்தின் நடிப்பில் ரசிகர்களுக்கு தீபாவளி போனசாக வெளியாகயிருக்கும் படம் ஆரம்பம். பில்லா படத்தை இயக்கிய அஜீத்தின் லக்கி இயக்குனரான விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள இப்படத்தில் மங்காத்தாவில் நடித்தது போலவே நரை முடி கெட்டப்பில் நடித்திருக்கிறார் அஜீத். அதேசமயம், ஜீன்ஸ்-டீசர்ட் என்று யூத்தை மெயின்டெய்ன் பண்ணியிருக்கிறாராம். கூடவே, இப்படத்துக்காக அவர் எடுத்த ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் அனைத்தும் அஜீத்தின் பாடி லாங்குவேஜையே வித்தியாசப்படுத்தியிருக்கிறதாம். அதனால் ஆரம்பம் அஜீத் அசத்தல் அஜீத் என்கிறார்கள்.

மேலும், உளவுத்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ள அஜீத், ஒரு கட்டத்தில் பக்கா ஹாலிவுட் நடிகர்கள் போன்றே பர்பாமென்ஸ் செய்திருக்கிறாராம். அவரது நடை உடை எல்லாமே தலயின் தலயாய ரசிகர்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாக இருக்குமாம். அந்த அளவுக்கு தனது தரத்தை இப்படத்தில் உயர்த்திக்காட்டியிருக்கிறாராம் தல அஜீத்.

இப்படம் டை ஹார்ட், ஸ்வார்டு பிஷ் போன்ற ஹாலிவுட் படங்களின் சாயலில் அவுட்புட் வந்திருப்பதாக சொல்லும் ஆரம்பம் படக்குழுவினர், இது அஜீத்தை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும் என்கிறார்கள்.


பெரும்பான்மை தியேட்டர்களை கைப்பற்றியது ஆரம்பம்

aarambam captured most of the theatres
தீபாவளியையொட்டி வருகிற 31ந் தேதி அஜீத் நடித்த ஆரம்பம் ரீலிசாகிறது. நவம்பர் முதல் தேதியில் பாண்டியநாடும் நவம்பர் 2ந் தேதி, தீபாவளி அன்று ஆல் இன் ஆல் அழகுராஜாவும் ரிலீசாகிறது. மூன்றுமே பெரிய படங்கள் என்பதால் தியேட்டர்களை பிடிப்பதில் கடும் போட்டி நிலவியது. இந்த போட்டியில் ஆரம்பம் பெரும்பான்மை தியேட்டர்களை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

தமிழ் நாட்டில் உள்ள சுமார் 850 தியேட்டர்கள் ரிலீஸ் சினிமாவுக்கு ஏற்ற சொகுசான தியேட்டர்கள். இவற்றில் சுமார் 500 தியேட்டர்களில் ஆரம்பம் ரிலீசாகிறது. ஆல்இன் ஆல் அழகுரஜா 300 தியேட்டர்களிலும், பாண்டிய நாடு சுமார் 200 தியேட்டர்களிலும் ரிலீசாகிறது. "கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளடக்கிய ஏரியாவில் 75 தியேட்டர்கள் ரிலீஸ் தியேட்டர்கள். இவற்றில் 40 முதல் 50 தியேட்டர்களில் ஆரம்பம் ரிலீசாகிறது" என்கிறார் ஆரம்பம் தியேட்டர் ரைட்ஸ் வாங்கியுள்ள காஸ்மோ பிக்சர்ஸ் சிவா. படம் முதலில் ரிலீசாவதாலும், அஜீத் படத்துக்கு எப்பவுமே மாஸ் ஓப்பனிங் இருக்கும் என்பதாலும் தியேட்டர்காரர்கள் ஆரம்பம் படத்தையே ரிலீஸ் செய்ய விரும்புகிறார்கள்.

ஒரு எக்ஸ்ட்ரா தகவல்: ஆரம்பம் படம் ஓடும் நேரம் சரியாக 2 மணி 30 நிமிடம்.



ஆரம்பம் படத்தில் அஜீத்தை பார்த்து வியந்தோம் - கதாசிரியர்கள் சுபா நெகிழ்ச்சி!!

Writers Suba Praises Ajith and Arrambam
கதாசிரியர்கள் சுபா, தமிழ் திரை உலகில் தங்களுக்கென இடத்தை நிர்ணயத்து விட்டார்கள். அஜீத் குமார், ஆர்யா,ராணா, நயன்தாரா, மற்றும் டாப்சி நடிக்கும் ஆரம்பம் திரை படத்தின் மூலம் தங்களது திரை பயணத்தின் உச்ச கட்டத்தை தொட்டு உள்ளதாக கூறும் இவர்களின்ஆரம்பம் பற்றிய சில அனுபவங்கள் இதோ !!!

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இப்படி ஒரு படத்தை எடுக்க போகிறோம் என கூறியபோது , அஜீத் ரசிகர்களின்  எதிர்பார்ப்பை பூர்த்தி  செய்ய வேண்டும் என்ற எண்ணமே கதையாக உருவெடுத்தது. மூன்று மாதங்களுக்கு பிறகு கதை கருவை அவரிடம் பகிர்ந்துக் கொள்ள முதன்முதலாக அவரை சந்தித்த போது அவரது எளிமை எங்களை கவர்ந்தது. ஒரு நட்சதிரத்துக்குரிய எந்த பந்தாவும் இல்லாமல் இருந்தது வியப்பு ஊட்டியது, அந்த வியப்பு அடங்கும் முன்னரே அவர் விடுத்த வேண்டுகோள் எங்களை மேலும் வியப்பூட்டியது, அது படத்தில் தன்னை புகழும் காட்சிகளோ, வசனங்களோ, பஞ்ச் வசனங்களோ இருக்க கூடாது என்பதுதான். கதைக்குதான் நாயகனே தவிர நாயகனுக்கு கதை இல்லை என்பதை தெளிவாக வலியுறுத்தினார்.

அவர் தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் வகையில் காட்சி அமைப்பை அமைக்குமாறு இயக்குனரிடம் கூறியதை கேட்ட பிறகு தான் அந்த மனிதருக்கு அவர் மீதுள்ள தன்னம்பிக்கையின் அர்த்தம் புரிந்தது. அந்த தன்னம்பிக்கை அவருடன் பணியாற்றும் மற்றவர்களுக்கும் ஒட்டி கொண்டது என்றால் மிகை ஆகாது.

படத்துக்காக அவர் எடையை குறைத்தால் நன்றாக இருக்கும் என்ற உடனே பல ஆபரேஷன் செய்துள்ள அவரது உடல் நிலையையும் மீறி ஒரு தினத்துக்கு 5 முதல் 6 மணி நேரம் வரை அயராமல் உடல் பயிற்சி செய்த அவரது கடமை உணர்ச்சி தான், அவரை இந்த உயரத்துக்கு கூட்டி சென்று இருக்கும் என தெளிவாக புரிந்தது. நாங்கள் பல நடிகர்களின் படங்களில் பணி புரிந்து இருக்கிறோம், பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த படத்துக்கும் ஆரம்பம் படத்தை பற்றிய ஆர்வம் போல் கண்டதில்லை.

எல்லா தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்து கொண்டு இருப்பதை பார்க்கும் போதுதான் அவருடைய ரசிகர்கள் எந்த அளவுக்கு பரந்து உள்ளது என்பது புலப்படுகிறது.. ஏராளமான பொருட் செலவு, விஷ்ணுவின் ஸ்டைலிஷ் இயக்கம், யுவன் ஷங்கர் ராஜாவின் மெய் மறக்கும் இசை ஆகியவை அந்த எதிர்பார்ப்பை சந்திக்கும் என நம்பிக்கை எங்களுக்கு நிச்சயம் உண்டு. ஆர்யாவும், அஜீத் சாருக்கும் உள்ள பரஸ்பர மரியாதை, சிநேகம் ஆகியவை தமிழில் இனிமேல் பல நட்சத்திரங்கள் இணைந்தது நடிக்கும் காலம் வரும் என நம்பிக்கை தருகிறது. அந்த காலத்துக்கு இதுதான் ஆரம்பம் என்கிறார்கள்.


விஷ்ணுவர்த்தனை மனமார பாராட்டிய அஜீத்குமார்
4

Ajith praises Vishnuvarthan
ஸ்ரீ சத்ய சாய் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஏ.ரகுராம் தயாரிப்பில், விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத்குமார் - ஆர்யா நடிப்பில் உருவான ஆரம்பம் படத்தின் தணிக்கை அதிகாரிகளுக்கான பிரத்யேக காட்சி நேற்று சென்னையில் உள்ள திரை அரங்கில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்து யு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் படத்தை பற்றி ஏகமனதாக பாராட்டியதாக கூறபடுகிறது.


இந்த மாதம் 31ஆம் தேதி உலகெங்கும் கோலாகலமாக வெளியிடப்பட உள்ளது. அக்டோபர் 20ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை வீரம் படத்தின் இடைவிடாத படப்பிடிப்புக்கு ஹைதராபாத் செல்ல உள்ள அஜீத்குமாரின் வேண்டுக்கோளுக்கு இணங்க தயாரிப்பு நிறுவனம் ஒரு பிரத்யேக காட்சியை திரையிட்டனர். இதை அவரது குடும்பத்தினர், தயாரிப்பாளர் ஆகியோர் பார்த்தனர். படத்தை மிகவும் ரசித்த அஜீத்குமார் காட்சி முடிந்தவுடன் இயக்குனர் விஷ்ணுவர்தனை மனமார பாராட்டினார் . அதற்கு பின்னர் ஆர்யாவை தொலைபேசியில் நலம் விசாரித்ததோடு தன் பாராட்டையும் தெரிவித்தார். இந்த படத்தில் உங்களது  நடிப்பு மிகவும் பிரமாதம். நான் மிகவும் ரசித்துபார்த்தேன். திரையில் நீங்கள் டாப்சியுடன் தோன்றும் காட்சிகள் இளமை, அழகு... எல்லோரையும் கவரும் வண்ணம் உள்ளது. இந்த படம் உங்களை நிச்சயம் ஒரு புதிய உயரத்துக்கு கூட்டி செல்லும், தொடர்ந்தது வெற்றி படங்களை குவித்து வரும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்  என கூறினார். பதிலுக்கு ஆர்யாவும் இந்த பாராட்டு என்னை ஊக்குவிக்கிறது. உங்களுடன் பணிபுரியும் வாய்ப்பு எப்போது கிடைத்தாலும் நிச்சயம் நடிக்க வருவேன் என நெகிழ்ச்சியுடன் கூறினார். இவர்களின் உரையாடலை கேட்டு ரசித்த நிர்வாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இந்த பரஸ்பர மரியாதை, தமிழ் திரை உலகில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும்’ என கூறினார்.


thanx - dinamalar

கொங்குமண்டலம்.ஆரம்பம்.அ ராஜா.பா நாடு கோவை11,7,8,ஈரோடு =3,3,2,திருப்பூர்.8,8,8



அழகுராஜா@கொங்கு
 
 
 
பாண்டியநாடு@கொங்கு
 
 
 
 
ஆரம்பம் @ கொங்கு