Tuesday, July 09, 2013

முகமூடிகளின் கதை!

பக்கங்கள்

முகமூடிகளின் கதை!

ஞாநி

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தி கோவிந்தாச்சாரியா பல வருடங்கள் முன்னர் வாஜ்பாயியை பி.ஜே.பி.யின் முகமூடி என்று வர்ணித்தார். பின்னர் அப்படிச் சொல்லவில்லை என்று அவர் மறுக்கவும் செய்தார். அவர் சொல்லியிருந்தாலும் சொல்லியே இராவிட்டாலும், வாஜ்பாயி பி.ஜே.பி.க்கு வாய்த்த அருமையான முகமூடி என்பதில் சந்தேகமில்லை.
பி.ஜே.பி. அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில், ஆர்.எஸ்.எஸ்.சின் லட்சியங்களை நிறைவேற்றும் நோக்கத்துடன் இயங்கும் அரசியல் கட்சி என்பது யார் மறுத்தாலும் மறைக்க முடியாத உண்மையாகும். இந்துத்துவா என்பது மதவாதம் அல்ல என்றும் தாங்கள் வலியுறுத்துவது பண்பாட்டைத்தான் என்று பி.ஜே.பி. எவ்வளவு குரலெழுப்பினாலும், அவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.சின் இதர மத எதிர்ப்பு/வெறுப்புக்கான அரசியல் தத்துவ வடிவம் தான் என்பது நடைமுறையில் அயோத்தி முதல் குஜராத் வரை அம்பலமாகிவிட்டது.
இந்தியாவில் பி.ஜே.பி. தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராகக் குரல் எழுப்புவதை ஒரு கொள்கையாக வைத்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இந்தியாவின் பெருவாரியான மக்கள் இந்தப் பிற மத விரோத உணர்ச்சியைத் தங்கள் வாழ்க்கைமுறையாக ஏற்கவே இல்லை. அதனால்தான் சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்டபோதும், வெவ்வேறு அவதாரங்களில் மக்கள் முன்னால் வந்து நின்ற போதும் ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் வடிவத்தால் சுமார் ஐம்பது ஆண்டுகளாகியும் தொண்ணூறுகள் வரை இந்திய ஆட்சி அதிகாரத்தை முற்றாக வசப்படுத்த முடியவில்லை.
அதற்குப் பயன்படுத்திய பல உத்திகளில் ஒன்று தான் முகமூடி உத்தி. நெருக்கடி நிலையின்போது ஜனநாயகக் காவலர்கள் என்ற முகமூடியைப் பயன்படுத்தியது ஆர்.எஸ்.எஸ். அதன் அரசியல் வடிவமான ஜனசங்கம் கட்சி, எமர்ஜென்சியை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்டு, காங்கிரசுக்குள்ளேயிருந்து இந்திராவை எதிர்த்து வெளியே வந்த மொரார்ஜி போன்ற மதவாதம் இல்லாத தலைவர்களின் அணிகளுடனும், மதவாத எதிர்ப்பாளர்களான சோஷலிஸ்ட் அணிகளுடனும் ஒன்று சேர்ந்து அவர்களைப் பயன்படுத்திக் கொண்டது. எல்லாமாக ஜனதா கட்சி என்ற வடிவத்தில் இயங்கினார்கள். இதில் லாபம் அடைந்தது ஜனசங்கம் எனப்பட்ட ஆர்.எஸ்.எஸ். மட்டும்தான். வாஜ்பாயி, அத்வானி போன்ற தீவிர ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் முக்கிய அமைச்சரானார்கள். அரசாங்கத்துக்குள்ளேயும் மீடியா உலகிலும் அப்போது ஏராளமான ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள்/அனுதாபிகள் ஊடுருவினார்கள். இன்று அரசிலும் பல ஊடகங்களிலும் முன்னணியில் இருந்தபடி பி.ஜே.பி. சார்பு நிலையை ஊக்குவிக்கும் வலிமையான இடத்தை அடைந்த பலர் அப்போது கீழ்மட்டங்களில் ஊடுருவியவர்கள்தாம்.

ஜனதா ஆட்சி சில வருடங்களிலேயே உடைய காரணம் இந்திராவின் அரசியல் சூழ்ச்சிகள் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. அவை அசல் காரணங்கள் அல்ல. ஜனதா கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் அப்போது இருந்த ஆர்.எஸ்.எஸ். ஆதரவு / எதிர்ப்பு சக்திகளின் முரண்பாடுகளினால்தான் ஜனதா ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
இதில் விசித்திரம் என்னவென்றால் இந்திராவின் சர்வாதிகாரத்தை ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் வடிவமான ஜனசங்கமும் ஜனதாவும் எதிர்த்தபோதே, ஆர்.எஸ்.எஸ். பகிரங்கமாக இந்திராவை ஆதரித்தே அறிக்கை வெளியிட்டு இரட்டை வேடம் போட்டது. முகம் ஒன்றும் முகமூடி ஒன்றும் பேசுவதுதான் தொடர்ந்து பின்பற்றப்படும் உத்தி.
எமர்ஜென்சியின்போது பல அராஜகங்களுக்குக் காரணமானவரான சஞ்சகாந்திக்கு நெருக்கமாக இருந்து தில்லி கவர்னராக முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகளைச் செய்த ஜக்மோகன் பின்னாளில் பி.ஜே.பி. அமைச்சரானார். சஞ்ச காந்தியின் குடும்பம் முழுவதும் பி.ஜே.பி.யில்தான் இருக்கிறது.
தொண்ணூறுகளில் ஆர்.எஸ்.எஸ். முகமூடி உத்தியை அபாரமாகப் பின்பற்றியது. அத்வானி பகிரங்கமாக ரத யாத்திரைகள் நடத்தி அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்ட வேண்டுமென்ற இயக்கத்தை நடத்தி, இந்து மத சார்பாளர் வோட்டுகளையெல்லாம் திரட்டுவது, வாஜ் பாயியோ, அத்வானி போன்று தீவிர மத வெறியர் இல்லை என்று காட்டும் செக்குலர் முகமூடி அணிந்து, மதவாதத்தில் நம்பிக்கையற்றவர்களின் காங்கிரஸ் எதிர்ப்பு வோட்டுகளைத் திரட்டுவது என்று இருமுனைத் தாக்குதலைத் தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். ஒருத்தர் மூலவர்; இன்னொருத்தர் உற்சவர் என்ற இந்த உத்தி சிறப்பாக வேலை செய்தது.
ஆனால் இப்போது இந்த இரட்டைக் குழல் துப்பாக்கி வேலை சாத்தியமில்லாமல் போய்விட்டது. இந்தப் பின்னணியில்தான் அத்வானி - மோடிமோதல்என்பது என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அத்வானியை விட சுமார் 20 வயது இளையவர் நரேந்திர மோடி. காங்கிரசில் அடுத்த தலைமைக்கான முகமாக 40 வயது ராகுல் காந்தி முன்னிறுத்தப்படும் சூழலில், பி.ஜே.பி.(ஆர்.எஸ்.எஸ்), தன்னிடம் இருக்கும் இளம் முகமான மோடியை முன் நிறுத்த வேண்டிய தேவையில் இருக்கிறது.
மோடி, இந்துத்துவாவைப் பொறுத்தமட்டில் அத்வானி வழியைச் சேர்ந்தவர். ராமர் கோவில் ரத யாத்திரைகள் மூலம் பகிரங்கமாக இந்துத்துவ நிலையை அத்வானி எடுத்ததைப் போலவே, கோத்ராவையடுத்து குஜராத்தில் முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல் கொலைகளுக்குத் தம் அரசாங்க ஆதரவை அளித்த செயல்வீரர்தான் மோடி.
அத்வானி இடத்துக்கு மோடி இருக்கிறார். ஆனால் வாஜ்பாயி இடத்துக்கு? இதுதான் இன்றைய பி.ஜே.பி/ஆர்.எஸ்.எஸ்.சின் சிக்கல். பி.ஜே.பி.யின் உச்சமான தலைமைப் பொறுப்புக்கோ, அல்லது பிரதமர் பொறுப்புக்கோ ஆர்.எஸ்.எஸ். தொண்டரல்லாத வேறு எவரையும் ஒருபோதும் கொண்டு வர மாட்டார்கள். அதனால்தான் ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா போன்ற ஆர்.எஸ்.எஸ். பின்னணி இல்லாத மூத்த தலைவர்கள் யாரும் உச்ச இடங்களுக்கு ஒருபோதும் செல்லவே முடியாது. இப்போது வாஜ்பாயிக்கு நிகராக முன் நிறுத்தி முக மூடி மாட்ட ஆர்.எஸ்.எஸ்.
பின்னணி உள்ள எந்த முகமும் இல்லை.
எனவே மோடிக்கே வாஜ்பாயி முகமூடியையும் அணிவிப்பது என்று முடிவு செய்தார்கள். கடந்த ஐந்து வருடமாக குஜராத்தின் வளர்ச்சிக்கான சிற்பி என்று ஒரு புது முகமூடியை உருவாக்கினார்கள். ஆனால் மூலவரே உற்சவராக ஊர்வலம் போவது ஒத்துவரவில்லை. ஒருவரையே இரு மாறுபட்ட முகங்களுடன் மக்கள் முன்னால் அனைத்திந்திய அளவில் நிறுத்துவது கடினமாக இருக்கிறது. ஏற்கெனவே கோவிந்தாச்சாரியா சுட்டிக்காட்டியிருப்பதை இங்கே நினைவு கூரலாம். அத்வானிதான் பிரதமர் பொறுப்புக்கு ஏற்றவர். நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் பதவியை வகித்து முதலில் அனுபவம் பெற வேண்டும் என்று கோவிந்தாச்சாரியா சில வருடம் முன்பே சொன்னார்.

இந்தப் பின்னணியில்தான் இப்போது அத்வானி, தாமே வாஜ்பாயி ஆகமுடியுமா என்று சின்ன முயற்சி செய்து பார்த்திருக்கிறார். பிரதமர் பதவிக் கனவை 15 வருடம் முன்பே இயக்க நலனுக்காக தியாகம் செய்தவர் அவர். இப்போதுதான் கடைசி வாய்ப்பு. மோடி தன் ரோலிலும், தான் வாஜ்பாயி ரோலிலும், நடித்தால், பழைய படத்தின் ரீமேக்கும் அதைப் போலவே வெற்றி பெற்று விடும் என்று அத்வானி கணக்கு போட்டிருக்கக்கூடும்.
ஆனால் நாகபுரியில் இருக்கும் இயக்குனர்கள் திரைக்கதையை குணச்சித்திர நடிகர் தீர்மானிப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. இனிமேல் உங்களுக்கு நம்ம படத்துல கெஸ்ட் ரோல்தான் என்று அடித்துச் சொல்லிவிட்டார்கள்.
மோடியை தேர்தல் குழுப் பொறுப்பாளராக்கிய அதிருப்தியில், அத்வானி கட்சியின் பல பொறுப்புகளிலிருந்து தான் விலகுவதாக எழுதி இப்போது திரும்பப் பெற்றுவிட்ட கடிதத்தில் சொல்லியிருக்கும் முக்கியமான விஷயம் என்ன ஆயிற்று? அறுபது வருடங்களுக்கும் மேலாக தான் இருந்து வரும் கட்சி தன் லட்சியங்களிலிருந்து விலகிப் போவது, அதன் இன்றைய தலைவர்கள் பலர் சுயநலமிகளாகி விட்டது என்றெல்லாம் அத்வானி சொன்ன குறைகள் சும்மா ஒரு சாக்குதான். (இதையே கோவிந்தாச்சாரியா பல வருடம் முன்பே சொல்லிவிட்டுப் போய்விட்டார்) ஏனென்றால் இந்தக் கோளாறுகளின் உச்சமாக கர்நாடகத்தில் எடியூரப்பா ஆட்சி நடந்தபோது அத்வானி இப்படியெல்லாம் கொந்தளிக்கவே இல்லை.
இப்போது அவரது தலைமைவாயை மூடிக் கொண்டு சும்மா கிடஎன்று சொன்னதும் விஸ்வாசமான காக்கி நிஜார் தொண்டராக ராஜினாமா கடிதத்தை வாபஸ் வாங்கிக் கொண்டுவிட்டார். எந்த அளவு இயக்க விஸ்வாசம் என்றால் அவர் வீட்டிலேயே இந்த அறிவிப்பை கட்சித் தலைவர் செய்கிறார். பக்கத்தில் வந்து மௌனமாக உட்காரக் கூட அவர் வரவில்லை. என்ன சோல்லி அத்வானியை சமாதானப்படுத்தியிருக்க முடியும்? ‘இனி பிரதமர் பதவியெல்லாம் உங்கள் தகுதிக்குக் குறைவானது. மோடி பிரதமராகட்டும். அடுத்த ஜனாதிபதியாக உங்களை ஆக்கிவிடுவோம்என்று சொல்லியிருப்பார்களோ ? இருக்கலாம்.
இந்தச் சுற்றில் அத்வானி தோற்பார் என்பது தெரிந்த விஷயம்தான். காரணங்கள் பல. ஆர்.எஸ்.எஸ்.க் கும் பி.ஜே.பி.க்கும் அடுத்த 20 வருடங்களுக்குத் தங்கள் காயை நகர்த்த, பொருத்தமான வயதில் அத்வானி இல்லை. அதற்கு மோடிதான் சரி. அத்வானி, கட்சிக்குள் பலவீனமாகிவிட்ட சுதேசிப் பொருளாதாரக் கொள்கையின் ஆதரவாளர். ஆனால் இப்போது கட்சி மன்மோகனுக்குப் போட்டியாக பன்னாட்டு முதலீடு, தாராளப் பொருளாதார சார்பை நோக்கிச் செல்லும் மோடியையே விரும்புகிறது.
வாஜ்பாயியின்செக்குலர்முகமூடி அப்போது பல அறிவுஜீவிகளைக் கட்சிக்கு ஈர்த்தது போல இப்போது ஈர்க்க முடியாது. ‘வலதுசாரி ஃப்ரீ மார்க்கெட் கொள்கைதான் ஈர்க்கும். அதற்கு மோடியின் குஜராத் டெவலப்மென்ட் முகமூடிதான் சரி என்றே நாகபுரி கணக்கு போட்டிருக்கக்கூடும்.
இந்த முகமூடி மாற்ற நாடகம்தான் இப்போது நடந்திருக்கிறது. முகமூடிகளை ஒப்பனை அறைக்குள் மாற்றிவிட்டு, பிறகு அரங்கில் வந்து ஆட்டம் ஆடுவது மரபு. ரகசியமாகச் செய்யும் ஒப்பனையைப் பகிரங்கமாகச் செய்ததில் கொஞ்சம் சிக்கலாகிவிட்டது. அவ்வளவுதான்.

நாங்கள் ஆட்சி அமைத்தால் அடுத்த குடியரசுத் தலைவர் அத்வானிதான் என்ற வசனங்களை வரப் போகும் நாட்களில் விரைவில் கேட்போம். மோடியே அதை அறிவித்தாலும் ஆச்சர்யப்பட வேண்டாம்.
இந்த வார கவன ஈர்ப்பு செய்தி:
இந்தியாவிலேயே மிக அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கும் மாநிலங்களில் நான்காவது இடம்: குஜராத்துக்கு. மொத்தம் 3.9 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள். முதல்நிலை: உத்தரகண்ட் : 17.5 லட்சம். இரண்டாவது: மேற்கு வங்கம்-5.5 லட்சம். மூன்றாவது: ராஜஸ்தான் - 4.05 லட்சம்.


நன்றி - கல்கி

Monday, July 08, 2013

கீப் இன் டச் -னா இன்னா மீனிங்க்?

1. பாஜகவில் சேர எடியூரப்பா நிபந்தனை!: என்னை கவுரவமாக அழைக்க வேண்டும்! # எடியூரப்பாடக்கர் ஓக்கேவா?


----------------------


2. கரடியுடன் போராடிய வனகாப்பாளருக்கு 1 லட்சம் பரிசு -ஜெ. # எப்டி இது சாத்தியம் ஆச்சு?  என் மனைவி கூட தினம் மல்லுக்கட்டறேன்,இதெல்லாம் ஜூஜுபி


-------------------------


3 மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் # அடேங்கப்பா, எல்லாம் ஜெ கட்சியை விட்டு அன்னைக்கு விரட்டி விட்டவங்களா?


----------------------------


4. இனி வங்கிகளில் கோல்ட் லோன் கிடையாது - ஏழைகளின் அடிமடியில் கைவைத்த ரிசர்வ் பேங்க்# ஹாட் லோனாவது உண்டா?



--------------------------


5. கணவருடன் சினிமாவுக்கு சென்ற பெண் தியேட்டரில் இருந்து காதலனுடன் ஓட்டம்.# போன படத்தோட டைட்டில் கணவனே கண் கண்ட தெய்வம்



----------------------


6.எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு கிடைச்சது.எனக்கு கிடைக்கல.-விஜய். # ஆமாங்ணா.உங்களுக்கு கிடைச்சது அவங்களுக்கு கிடைக்கல ( சங்கவி ,சிம்ரன் ஜோடி )


-----------------------


7.  சன்னி லியோனுக்காக ஹிந்தி கற்கும் பரத் # சுசீலா ஆக்காம விட மாட்டார் போல


---------------------------


8. ப்ளே ஸ்கூல்னா ப்ளே பாய் மாதிரி நடக்கும் சிம்பு ,பிரபுதேவா,கார்த்திக்,அர்ஜூன் மாதிரி ஆட்களுக்கு நடத்தும் ட்ரெய்னிங் ஸ்கூலா?



-----------------------


9. செல்போன் கடைல பொண்ணுங்களோட உள்ளங்கையைத்தடவிட்டு இருக்காங்க?


 சிம் கார்டு வாங்க கைரேகை,செல்போன் வாங்க கை 


---------------------


10. கேரளா பொண்ணுங்களுக்கும் தமிழ் நாட்டு பொண்ணுங்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை நம்மை மதிக்கவே இல்லை.கண்டுக்கவும் இல்லை


-------------------------


11. KIT = Keep In Touch = சின்ன வீட்டை ஊறுகாய் மாதிரி தொட்டுக்கோ #சபாஷ் துபாஷ்



-----------------------------


12. புதிய சிம் கார்டு வாங்க கைரேகை சான்று அவசியம் # பழைய சிம் கார்டு செகன்ட்ஸ்ல வாங்கிக்கலாமா ?



--------------------------


13. பொண்டாட்டி தாசன்னா இப்டி அல்ல இருக்கனும்? ஒருத்தன் கோயில் வாசல்ல ( தன் சொந்த) சம்சாரத்துக்கு கால்ல செருப்பு மாட்டி விட்டுட்டு இருக்கான்.


-----------------------------


14. ஹைதராபாத் எனக்கு பெஸ்ட் பிரன்ட் மாதிரி - பிரபுதேவா # அங்கேயே படுத்துக்குவாரு போல


------------------------


15. டெய்லரிங் ,சமையல் ,தோட்ட ,வீட்டு வேலை தெரிந்த அடிமாடு சாரி மாப்ளை தேவை



------------------------


16. நாட்டுக்கு முக்கியமான விவாதம் நடந்துட்டிருக்கு.ஜாக்கெட் தைக்க டெய்லரிங் சார்ஜ் எங்கூர்ல இவ்ளவ்.உங்க ஊர்ல எவ்ளவ்?



-------------------------


17. விளம்பரம் எனக்கு பிடிக்காது என்றதால் தலைவா போஸ்டர்களில் விஜய் ஸ்டில்ஸ் அகற்றம்.விஜய் அதிர்ச்சி # சும்மா


-------------------------


18. ஸார்.தலைவா படமும் லீடர் படமும் ஒரே கதையா ? 



இல்லீங்ணா.அது தெலுங்கு.இது தமிழ் 



----------------------


19. என்னையே நான் விளம்பரம் செய்ய எனக்கு பிடிக்காது - விஜய் # 18 பட்டி மக்களும் நல்லா கேட்டுக்கிட்டீங்களா?



-------------------------

20. கேரளா ஹோட்டல்களில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் விஷயம் குடிக்க சுடுதண்ணீர் தருவது # யானைக்கால் வியாதி பரவாம இருக்கவாம்


-------------------------


21. 40தொகுதியிலும் திமுக வெற்றி பெறும் -ஸ்டாலின் # எல்லாருமே இதையேதாங்ணா சொல்றாங்க



-------------------------


22. ஆபீஸ்க்கு எப்பவும் லேட்டாக வரும் குப்பை அள்ளும் பெண் = லேட் டஸ்ட் லேடி # சபாஷ் துபாஷ்



-------------------------


23. சிரிச்ச முகமா இருக்கும் பொண்ணுங்க ரிசப்ஷனிஸ்ட்டாவோ ,நர்சாவோ , ஏர் ஹொஸ்டலாவோ ஆகிடறாங்க




------------------------


24. பெட்ரோல் விலை ஏன் நள்ளிரவில் ஏத்தப்படுது? 1,ஒரு புதிய தினம் 12 மணிக்குத்தான் தொடங்குது 2 பகல் கொள்ளைனு சொல்ல வழி இல்லை


---------------------------


25. டாக்டர்ஸ் டே கொண்டாடுனவங்க இப்போ டாக்டர்ஸ் நைட் கொண்டாடுவாங்களா?,ஐ மீன் நைட் டியூட்டி டாக்டர்ஸ்



--------------------------


26. ரயில் எஞ் சின் டிரைவருக்கு மட்டும் எந்த வண்டியையும் ஓவர்டேக் பண்ண் வேண்டும் என்ற நிர்ப்பந்தமோ ,ஈகோவோ இருக்காது


--------------------


27. ஊர் வசி = ஒரு ஊரையே வசியம் பண்ணி விடும் அழகுப்பெட்டகம்




----------------------


28. வீட்டில் இருந்து வாட்டர்கேன் எடுத்து வந்தால் கேவலம்.கடைல மினரல் வாட்டர்கேன் வாங்குனா கவுரவம்.# தமிழா தமிழா


------------------------


29. இந்தக்காலத்துலயும் சமையல் தெரியாம பொண்டாட்டி கிட்டே ஏத்து வாங்கி கஷ்டப்படும் புருஷன்களைக்கண்டா பாவமா இருக்கு # நான் அவன் இல்லை



------------------


30. கவர்ச்சியான நடிப்பை கலைக்கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும் - ஸ்ருதி # ஆனா கவர்ச்சீ யா இருந்தாத்தான் பிரச்சனை மேடம், மேக்சிமம் ட்ரை




----------------------------


Sunday, July 07, 2013

துள்ளி விளையாடு - சினிமா விமர்சனம்

 
தினமலர் விமர்சனம்


‘பிரியமுடன்’, ‘ஜித்தன்’ உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கும் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க வெளிவந்திருக்கும் படம்தான் ‘துள்ளி விளையாடு’.


கதைப்படி, அறிமுகநாயகர் யுவராஜுக்கு பெரிய தொழில் அதிபர் ஆகவேண்டும், அவரது நண்பர்களான ‘பரோட்டா’ சூரிக்கு பிரபல அரசியல்வாதி ஆகவேண்டும். சென்ட்ராயனுக்கு பெரும் நடிகர் ஆக வேண்டும் என்பது தான் லட்சியம், ஆசை, கனவு, குறிக்கோள் இப்படி எல்லாம்! ஆனால் வெட்டி ஆபிஸர்களான மூவராலும் அவர்கள் நினைத்ததை எல்லாம் எப்படி அடையமுடியும்?! முடியவில்லை...


 ஆனால் அதற்கும் குறுக்கு வழியில் ஒரு யோகம், ஒரு நல்ல நேரம் வருகிறது! அதாகப்பட்டது, லோக்கல் அரசியல்பிரபலம் ஜெயப்பிரகாஷ், தேர்தலில் ஜெயிப்பதற்காக தன் வீட்டில் பதுக்கி வைத்திருக்கும் 20 கோடியை தன் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ‌ரெய்டு ‌வரஇருப்பது தெரிந்ததும், ஒரு வாடகை காரை எடுத்து அதில் மொத்த பணத்தையும் பதுக்கி, அதற்கு நம் அறிமுக நாயகர் யுவராஜை டிரைவராக்கி ஊர் ஊராக சுற்ற விடுகிறார். 




அதை மோப்பம் பிடிக்கும் காமெடி வில்லன் பிரகாஷ்ராஜ் கோஷ்டி, ஹீரோ யுவராஜை இரண்டு தட்டு தட்டி விட்டு யாருடைய பணம் எனத் தெரியாமலே ஜெபியின் பணத்தை கொள்ளை அடிக்கிறது. அந்தப் பணத்தை ஜெயப்பிரகாஷுக்கே தேர்தல் நிதியாக கொடுக்க முனையும்போது அது ஜெபியின் பணம் எனத் தெரியவருவதுடன் ஜெபி காரில் கொடுத்துவிட்டது 20 கோடி தன் ஆட்கள் கொள்ளை அடித்தது வெறும் 2 கோடி என்பதும் மீது 18 கோடியை ஆக்டிங் டிரைவர் யுவராஜ் அடித்து போய்விட்டதும் பிரகாஷ்ராஜுக்கு தெரிய வருகிறது! 



இதை ஜெபி எனும் ஜெயப்பிரகாஜ் நம்ப மறுக்கிறார். பிரகாஷ்ராஜ் அன்ட் கோவினர் யுவராஜை தேடிகின்றனர். யுவராஜ் தன் நண்பர்கள் சூரி, சென்ட்ரயனுடன் ராஜஸ்தானுக்கு எஸ்கேப் ஆகிறார். அங்கு கதாநாயகி தீப்தியை சந்திக்கும் யுவராஜ். காதலில் விழுகிறார். யுவராஜ் அண்ட் கோவினரின் லவ்வும் லட்சியமும் நிறைவேறியதா?! பிரகாஷ்ராஜ் - ஜெ.பி.கோஷ்டியிடம் சிக்கி பியூஸ் போனார்களா?!  என்பது ‘துள்ளி விளையாடு’ படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்புமான மீதிக்கதை!

யுவராஜ் கிராமத்தானாக ஓ.கே., கேடி, கில்லாடியாக இன்னும் நிறைய படிக்கணும் பாஸ்! அறிமுக நாயகி தீப்தி - திருப்தி என்றாலும் படம் முழுக்க இல்லாததும், அவர் பண்ணும் பம்மாத்து லவ்வும் குறை!


‘பரோட்டா’ சூரி, ‘பொல்லாதவன்’ சென்ட்ராயன், ஜெயப்பிரகாஷ் என ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தும் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் காமெடி வில்லன் பிரகாஷ்ராஜ். எந்த சூழலிலும் அவர் இந்திப் பாடல்களை ரசிக்கும் விதமும், ப்ளாஷ் பேக் காதலில் லயிக்கும் விதமும் செம காமெடி!

ஸ்ரீகாந்த் தேவாவின் இசை, எஸ்.கே. பூபதியின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் வின்சென்ட் செல்வாவின் இயக்கத்திலும் இருந்திருந்ததென்றால் "துள்ளி விளையாடு" துவண்டு விழுந்திருக்காது!

ஆக மொத்தத்தில் ‘துள்ளி விளையாடு’ வித்தியாசமான கதையில் "துள்ளி விளையாடி" விபரீதமான வசனங்கள் மற்றும் காட்சியமைப்புகளில் "துவண்டு விழுந்திருக்கிறது!"


  • நடிகர் : யுவராஜ்
  • நடிகை : தீப்தி
  • இயக்குனர் :வின்சென்ட் செல்வா
 a

thanx - dinamalar

Friday, July 05, 2013

சிங்கம் 2 - சினிமா விமர்சனம்

நாடு பூரா எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு போலீஸ் ஆஃபீசர் எந்த மாறு வேஷமும் போடாம  ஒரு சாதாரண ஸ்கூல்ல  என்சிசி மாஸ்டரா ஒர்க் பண்றார். படத்தோட டைரக்டர் தவிர மத்த எல்லாருமே கேனயனுங்களா இருக்கறதால யாரும் அதை கண்டுக்கலை , சந்தேகப்படலை .ஹீரோவோட மாஸ்டர் பிளான் என்னான்னா ஆயுதக்கடத்தல் கும்பலைக்கண்டுபிடிச்சு அவங்களை அழிக்கறது .பொண்ணு பார்க்கப்போறப்போ பொண்ணோட தங்கச்சியை சைட் அடிக்கறதில்லையா? அந்த மாதிரி அவருக்கு மாட்டுனது போதை மருந்து கடத்தல் கூட்டம்.ஹீரோ அந்தக்கூட்டத்தை எப்படி பிடிக்கறார் என்பதே ரெண்டே முக்காஆஆஆல்  மணி நேரம் ஓடும் சிங்கம் 2 படத்தோட திரைக்கதை  .


சும்மா சொல்லக்கூடாது , சூர்யாவுக்கு  போலீஸ் யூனிஃபார்ம் ஒரு கம்பீரத்தைக்கொடுக்குது . காக்க காக்க லெவலுக்கு இல்லைன்னாலும் அவரோட கர்ஜனை , தோரணை எல்லாம் செம . போலீஸ் யூனிஃபார்மில் மிடுக்காக நடப்பதும் , பாடி லேங்குவேஜும்  சூப்பர் . ஆனா வசனம் பேசும்போது மட்டும் பல்லைக்கடிச்சுக்கிட்டு கஷ்டப்பட்டு பேசறார். டூயட் காட்சிகளில் விஜய்யை டச் பண்ணப்பார்க்கறார்.


ஹீரோயின் ஹன்சிகா தான் .பல படங்களில்  கொழுக் மொழுக்  கொழுக்கட்டை மாதிரி அழகாக வந்தவர் இதில் சாதா கட்டை செண்பகமா வர்றார். இதுல இவர் ஸ்கூல் ஸ்டூடண்ட்டாம் . லட்சுமிமேணன்க்கு போட்டியா காட்டிக்கறாரோ என்னவோ? இவரோட காதல்ல ஆழம் இல்லாததால எடுபடலை 




 சைடு ஹீரோயின் அனுஷ்கா . செர்ரிப்பழ உதட்டழகி .நெய்யில் வறுத்த ப்ரெட் அழகுக்கன்ன அழகி . பட்டு சேலை கட்டி  மண மேடையில் அவர் அமர்ந்திருக்கும்போதுதான் நிறைய பேருக்கு கல்யாண ஆசையே வருது .ஆளை அசத்தும் அழகு . பாடல் காட்சிகளில் அவர் செய்யும் முக சேஷ்டைகள் அக்மார்க் அனுஷ்கா சேட்டைகள் 


வில்லனாக யாரோ ஒரு சிங்கள ஆள். ஆஜானுபாகமான தோற்றம். எள்ளலான நடிப்பு. தேறிடுவார். அது போக கண்ணே கனியமுதே , சங்கமம் பட் ஹீரோ ரகு(மான்) இன்னொரு வில்லன். ஓக்கே தான் நடிப்பு 


 படம் செம ஸ்பீடாக போகும்போது மீண்டும் ஆக்சிலேட்டரை ஒரு முறுக்கு முறுக்குவது போல் சந்தானம் காமெடி . களை கட்டுகிறது தியேட்டர். கல்லா கட்டுகிறது கவுண்ட்டர் .ஆனா இதுல சந்தானம் போர்ஷன் மட்டும் 2 வருஷம் முன்னாடி எடுத்திருப்பாங்க போல. சந்தானம் ஆள் ரொம்ப இளைச்சிருக்கார், பிரிண்ட்டும் பழசு மாதிரி இருக்கு 


 விவேக் போலீஸ் ஆஃபீசராக வந்து ஒரே  ஒரு இடத்தில் சிரிக்க வைக்கிறார். சந்தானப்புயல் முன் விவேக் காணாமல் போய் விடுவது பெரும் சோகம் . இந்த கேரக்டரில் விவேக் நடிக்காமலேயே இருந்திருக்கலாம் 


 

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1.பொதுவாக தமிழில் பாகம் 2 எடுபடாது. உதா - நாளைய மனிதன் ஹிட், அதிசய மனிதன் பிளாப் , பில்லா சூப்பர் ஹிட், பில்லா 2 சுமார் ஹிட் , அமைதிப்படை மெகா ஹிட் , நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ அட்டர் பிளாப். இந்த செண்ட்டிமெண்ட்டை உடைத்த காஞ்சனா ( முனி 2 ) வரிசையில் சிங்கம்2 வும் சேர்ந்தது , அதுக்கு பக்க பலமாக விறு விறுப்பான திரைக்கதை அமைத்தது 


2. பட்டப்பகலில் கஸ்டம்ஸ் ஆபீசரை கொலை செய்து விட்டு அவசர அவசரமாக தடயத்தை வில்லன்கள் மறைக்கும் காட்சி 


3. சந்தானம் ஒவ்வொரு முறையும் தான் மாட்டிக்கொள்ளும்போது எதிராளியின் காலில் விழுந்து பரம மண்டலத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே என கெஞ்சுவது  தியேட்டரில் செம சிரிப்பு . ஒரு சாதாரண காமெடியைக்கூட ஒரு நல்ல காமெடியன் நல்ல காமெடி ஆக்க முடியும் என்பதற்கு உதாரணம் . ஒருத்தர் வேட்டையை உருவதும் , ஒரு ரவுடி லேடி சேலை பாவாடையை இழுப்பதும் கொல் சிரிப்பு 


4. ஆபரேஷன் டி  என்பது இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் காட்டாதது . அதாவது எந்த அரசியல் குறுக்கீடும் இல்லாமல் கேள்வி கேட்க ஆளே இல்லாமல் போட்டுத்தள்ளுவது , கிட்டத்தட்ட என்கவு்ண்ட்டர் மாதிரி . இதுல நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கு  ( துப்பாக்கில இப்படி ஒரு சீன் வரும் )


 


5. டூயட் காட்சிகளில் அனுஷ்காவை துள்ளிக்குதிக்க வைத்து ஆடியன்சை துள்ளிக்குதியாட்டம் போட வைத்தது . மற்ற காட்சிகளில் அழகுப்பதுமையாய் , சேலையில் வரும் சோலையாய் தென்படும் அனுஷ்  டூயட்டில் மட்டும் இறங்கி ஆடி இருக்கார் , கிறங்க வைக்கும் அழகு  ( கா விட்டதால் அனுஷ்காவிடம் கா விட்டுட்டேன் என பொருள் இல்லை, சும்மா செல்லம் ) இந்தப்படத்துக்கு சாமார்த்தியமாய் சென்சாரிடம் யு சர்ட்டிஃபிகேட் ”வாங்கியதுக்கு”: ஸ்பெஷல் பாராட்டு

6. சிங்கம் டான்ஸ் பாட்டு செம. அனுஷ்காவுக்கு செம சீன்

7. விஸ்வரூபம் கமலை நையாண்டி செய்யும் யாரென்று  தெரிகிறதா சந்தானத்தின் ஃபைட் சீன் அதகளம் . தியேட்டரில் அப்ளாஸ் மழை ( வீட்டில் டி விடியில் பார்த்தால் இந்த சுவராஸ்யம் மிஸ் ஆகும் ) அதே போல் அவரது  ஓப்பனிங்க் காட்சியில் எந்திரன் ரஜினையையும் விட்டு வைக்கலை


8. கண்ணுக்குள்ளே கண்ணை வெச்சு பாட்டு ஹிட் ஆகும் . அந்தப்பாட்டுக்கு டான்ஸ் மூவ்மெண்ட்ஸும் ஓக்கே ரகம் 




 இயக்குநரிடம் சில கேள்விகள்  


1.  ஜஸ்ட்  15 வயசு ஆன ( !!!!????)  பத்தாங்கிளாஸ் படிக்கும் பிகரான ஹன்சிகா போலீஸ் ஆஃபீசரான 37 வயசு சூர்யாவை காதலிப்பது எல்லாம் ஓக்கே , அவர் தன் காதலை சூர்யாவிடம் சொல்லும்போது அவர் அப்பவே “ ஏம்மா , நான் ஆல் ரெடி ஒரு ஃபிகரை உஷார் பண்ணிட்டென்” அப்டினு சொன்னா அப்பவே மேட்டர் ஓவர் , அதை கடைசி  வரை சொல்லாம இதெல்லாம் சரிப்பட்டு வராது அப்டினு ஏன் பம்மறார்? சைடுல இதையும் ஓட்டிக்கலாம்னு நினைச்சுட்டாரா?


2. ஹன்சிகா காண்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கார். எக்சாம் கொஸ்டீன் பேப்பரை திருடும்போது  வெறும் 5 கிராம் ஏ 4 பேப்பர் அவர் நெத்தில பட்டு லென்ஸ் விழுமா ? அப்படி விழுந்தா உடனே அவருக்கு அது  தெரியாதா? ஏன் மாட்டிக்கறார்? 



3. அந்த சம்பவம் நடந்த அடுத்த நாள் ஹன்சிகா கண்ணாடி போட்டுட்டு வர்றார் . அவரை மாதிரி கண்ணாடி போட்ட ஃபிகருங்க 4 பேர் இருக்கும் போது ஹீரோ கரெக்டா எப்படி ஹன்சிகாவை சந்தேகப்பட்டு உண்மையை கண்டு பிடிக்கறார்? 


4. ஹன்சிகா போலீஸ்க்கு போன் பண்ணி ஸ்கூல்ல கலவரம் நடக்குதுன்னு சொல்றார். போலீஸ் வருது. அவர் தான் யார்னு யார் கிட்டேயும் சொல்லலை , போலீஸ் கிட்டேயும் சொல்லலை , எப்படி சந்தானம் , ஹீரோ 2 பேரும் ஹன்சிகா தான் ஃபோன் பண்ணினார்னு கண்டு பிடிக்கறாங்க? 


5. போலீஸ் ஆஃபீசரான ஒருவர் டியூட்டிக்காக  தற்காலிகமா வேலையை ரிசைன் பண்ணின மாதிரி நடிக்கறார் ஓக்கே , அதை தன் சொந்த அப்பா கிட்டேயே யாராவது சொல்லாம இருப்பாங்களா? சொந்த பொண்டாட்டி கிட்டே கூட அதை சொல்ல மாட்டேன்னு ஹீரோ பஞ்ச் பேசுவது ஓக்கே , பொண்டாட்டிங்கன்னா ஓட்டை வாய்ங்களாத்தான் இருக்கும் , ஆனா அப்பா கிட்டே ஏன் சொல்லலை? அதை சாக்கா வெச்சு வரும் செண்ட்டிமெண்ட் காட்சிகள் உஷ் அப்பா ... 


6.  சாதாரண ஏ சி யான ( அசிஸ்டெண்ட் கமிஷனர் ) ஹீரோ உள்ளே வரும்போது உள் துறை அமைச்சரே எந்திரிச்சு நின்னு மரியாதை தர்றாரே அவர் ரொம்ப சாதாரண துணை நடிகரோ? 




7. வில்லன்க லாட்ஜ்ல ரூமை  வெளிப்பக்கம் பூட்டிக்கிட்டு உள்ளே சீட்டாடிட்டு இருக்காங்க . செல் ஃபோனை வைப்ரேஷன் ஆர் சைலண்ட்ல மோடுல போடாம அப்படியா பெப்பரெப்பேன்னு ஹீரோ கிட்டே மாட்டிக்குவாங்க ?


8. காலியா இருக்கும் குஷன் சேர்ல வில்லன் ஈட்டியால லாங்க்ல இருந்து வீசறார் . அது சக்னு போய் செண்ட்டர்ல குத்தி நிக்குது . நீங்க வேணா செக் பண்ணிப்பாருங்க . காலியா இருக்கும் சேர் மேல 10 அடி தூரம் தள்ளி நின்னு ஈட்டி எறிஞ்சா அந்த சேர் கீழே விழும் . ஆனா அப்படி குத்தி நிக்காது. யாராவது சேரைப்பிடிச்சுக்கிட்டு நின்னாத்தான் அப்படி குத்தும் ( இதை செக் பண்றேன் பேர்வழின்னு எங்க வீட்ல இருந்த ஒரே ஒரு குஷன் சேர் கோவிந்தா )


9. பொண்ணு சமப்ந்தம் பேசும் இடத்தில் அனுஷ்கா & கோ ஏற்பாட்டின்படி அங்கே நடப்பதை அறிய செல்போனில் வீடியோ எடுத்து லைவ் ஷோ பார்க்கறாங்க . அந்த லேடி அப்படி பப்ளிக்கா ஃபோனை கைல பிடிச்சுட்டு நிக்குது. யாருமே அதை கவனிக்கலையா? ஹீரோ போலீஸ் ஆஃபீசர் வேற , அவருக்குமா தெரியலை  ?


10. ஆபரேஷன் டி கேன்சல் ஆகிடுச்சு , உள்துறை அமைச்சர் அந்த லெட்டர் உங்களுக்கு நாளை தான் கைல கிடைக்கும். அதுக்குள்ளே நைட்டே மேட்டரை முடிச்சுடுங்கனு சொல்றார். இந்த மாதிரி அதி முக்கிய அரசாங்க ஆணைகள்  தந்தி மூலமாகவோ , ஃபோன் கால்  மூலமாவோ பிறப்பிக்கப்படும் , எழுத்துப்பூர்வமான ஆணைகள் சு ம்மா ரெக்கார்டிங்க் பர்ப்பஸ்க்கு வேணும்னா வாங்கி வெச்சுக்கலாம். சி எம் ஃபோன் ல ஆபரேஷன் டி கேன்சல் பண்ணியாச்சா? என ஏன் கேட்கலை? 


11. படத்தோட ஓப்பனிங்க்ல வர்ற சாதா அடியாள் தான் மெயின் வில்லன் என்பதை ஆல்ரெடி குருதிப்புனல் , புலன் விசாரனை உட்பட பல படங்கள் ல பார்த்தாச்சே பாஸ் 


12.  ஹன்சிகா - அனுஷ்கா சக்களத்தி சண்டை ரொம்ப கேவலமா இருக்கு. அந்த சீனுக்கு வசனம்  எழுதுனவர் போரிங்க் பைப்ல தண்ணி பிடிக்கும் பொம்ப்ளைங்க ரேஞ்சுக்கு இறங்கி .. உஷ் அப்பா


 13 . ஒரு சர்வதேச  கடத்தல்காரனை லாக்கப்ல போட்ட ஹீரோ வெளில கிளம்பும்போது யாராவது வில்லனை மீட்க வரலாம்னு சந்தேகப்பட்டு  லாக்கப் சாவியை எடுத்துட்டுப்போறார். செம காமெடி . சாவியை எடுத்துட்டா அந்த ரூமை யாராலும் திறக்க முடியாதா? ஹய்யோ அய்யோ





மனம் கவர்ந்த வசனங்கள் 


1.   நான் எல்லாம் டேஞ்சரை டெபாசிட் பண்ணிட்டு அபாயத்தை வம்புக்கு இழுக்கறவன் # சந்தானம்


2. சூர்யா பஞ்ச் - நீ என் வீட்டுக்கு வந்தே.நான் தாங்கிட்டேன்.நான் உன் வீட்டுக்கு வந்தா நீ தாங்க மாட்டே # பக் சீட் பிகர் மேல வி பு சி



3.  தூரத்துல இருக்கற ஆளை 10 ஸெகண்ட்ஸ் ல போட்டுட்டேன்.பக்கத்துல இருக்கற உன்னைப்போட எவ்ளவ் நேரம் ஆகும் ? # நோ டபுள் மீனிங்.ஹீரோ டூ வில்லன் ்


4. வில்லன் ன் கேவலமான பஞ்ச் - நான் கெளுத்தி மீன் இல்ல.வலைல விழுந்தாலும் உலைல விழ மாட்டேன்


5.  தகுதி இல்லாதவன் தமிழ் வாத்தியார்.புத்தி இல்லாதவன் புவியியல் வாத்தியார் .அறிவே இல்லாதவன் அறிவியல் வாத்தியார் # சந்தானம்


6. சந்தானம் - உனக்கு நான் பேர் வாங்கித்தர்றேன்.நீ எனக்கு பீர் வாங்கித்தந்துடு.எப்டி டீலிங்?


7. சந்தானம் - டீச்சர் ஜாக்கெட்ல ஓஜோன்ல ஓட்டை விழுந்த மாதிரி ஏகப்பட்ட பொத்தல்கள் இருக்கே


8. சந்தானம் - அய்யய்யோ.பிரச்சனையை பேரம் பேசி வாங்கிட்டேன் போல


9. பேசாம அவங்க கிட்டே பாவ மன்னிப்பு கேட்டுடு.


 சந்தானம் - பாவ மன்னிப்பு ,பாசமலர் எல்லாம் கேட்க அவங்க என்ன டிவிடி கடை ஓனரா? 


10. இந்த வயசுல பிகர் வர்றதும் ,வயசானா சுகர் வர்றதும் வாழ்க்கைல சகஜம் # சி 2 சந்தானம்

 

11. சந்தானம் - ஸாரி மேடம்.உங்களுக்கு மேரேஜ் ஆகி 3 புருசனுங்க இருக்கற மேட்டரே எனக்கு இப்போ தான் தெரியும்


12. சந்தானம் - என்னய்யா? போலீஸ்னா எல்லாரும் வயித்தில சோத்தை கட்டிட்டே அலைவாங்ளோ? #தொப்பை


13. ஒருத்தரை நமக்குப்பிடிச்சுப்போச்சுன்னா அவங்க மேல நமக்கு இனம் புரியாத ஒரு அன்பு வரும்.அது காதல் இல்லை.இன்பேக்சுவேசன்


14.  சந்தானம் = சார்.பாயே மூடு,பீச்சே மூடுனு சொல்றீங்ளே.பாயை மூடிடலாம்.பீச்சை (BEACH) எப்டி மூடுவீக?


15.  நீங்க அம்மா , அப்பா பேச்சை கேட்பீங்களா 


 அவங்க பேச்சைக்கேட்காம? அவங்க எனக்கு தெய்வம் சார் ( சிவகுமாரை இம்ப்ரெஸ் பண்ண வைக்கப்பட்ட வசனம் போல ம்)


16.  என்னது? நாய் மோப்பம் பிடிக்குமா?


 பின்னே , உன்னை மாதிரி பீடி பிடிக்கும்னு நினைச்சியா?



17. ஏன் என்னைப்பார்த்து நாய் குரைக்குது?

 நாயாவது உன்னைப்பார்க்குதேன்னு சந்தோஷப்படு


18. ஆமா , நீ வேட்டி கட்டி இருக்கியே? ஜட்டி போட்டிருக்கியா? பார்த்துடா, நாய் கவ்விட்டுப்போய்டப்போகுது


19.  ப்ளூ கிராஸ் என்னைப்பிடிச்சுட்டுப்போனாலும் பரவாயில்லை ,  3 நாயையும் கல்லால அடிக்காம விட மாட்டேன்


 2 நாய் தானே இங்கே இருக்கு ?

 அந்த 3 வது நாய் நீ தாண்டா


 20.  மிஸ் ! எங்கே போய் இருந்தீங்க?

 சொல்ல மாட்டேன்


 நீ சொல்லலைன்னா 8 மணி நியூஸ்ல சொல்வாங்களா? அட சொல்லம்மா/








21.  செல் ஃபோன் கனெக்‌ஷனை கட் பண்ணுங்க , கம்யூனிகேஷனை கட் பண்ணாலே நாட்ல பாதிக்கலவரம் குறைஞ்சுடும்



22. இனிமே என் பொண்ணு காய்கறி வாங்கக்கூட சைரன் வெச்ச கார்ல தான் போவா


23. இவங்களை சமாளிக்க க்ளீன் போலீஸ் பத்தாது , கிரிமினல் போலீஸ் வேணும்  ( நாட்டுல 75 % அப்டித்தானுங்க்ணா)


24 விருந்தாளியையே இப்படி ப்வெளுக்கறாங்களே இந்தம்மா  இவங்க புருசனை எப்படி வெளுப்பாங்க


25. காதல்னா  என்ன? நெஞ்சுல வெச்சு நினைப்புல வாழனும்

26. அத்து மீறி மனசுல நுழைய நினைச்சா அது காதல் ஆகிடாது


27. தொகுதிப்பிரச்சனைக்காக என்னைக்காவது பி எம் கிட்டே பேசி இருப்பீங்களா? எம் பி சார். ஒரு பொறுக்கிக்காக இப்படி போன் போட்டு பேசறீங்க?


28. அமலாபால் நடிச்ச படம் மைனா , ஐ ஆம் கமிங்க் ஃப்ரம் சைனா , என்னை விட்டுடு நைனா # சந்தானம்





















படம் பார்க்கும்போது ட்விட்டரில் போட்ட ட்வீட்ஸ் 


1. அய்யய்யோ அனுஷ்கா அழுகுதே.இப்போவே பஸ் ஏறி அனுஷ்காவுக்கு ஆறுதல் சொல்லனும்



2. அழகு ரதி அனுஷ்கா முன்னால பப்ளிமாஷ் பப்ஸ் ஹன்சிகா எடுபடல


3. ஹீரோ சார் ஹரி சார் அது ஏன் சார் வசனம் பேசும்போது பல்லைக்கடிச்சுக்கிட்டே பேசறார் சார்?

4.   சிவப்புக்கலர் ஜாக்கெட் ,மஞ்சள் கலர் பட்டு சேலை அனுஷ்கா திருவாரூர் தேர் தேவதை

5. 50 கிமீ வேகத்துல போகும் ப்ஸ்ஸை ஹீரோ ஓடியே துரத்தி ஏறிட்டாரு # சிங்கம் சிங்கம் துரை துரை  சிங்கம் டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்டட டொய்டங்

6. ஹீரோவோட அப்பா மேரேஜ்க்கு ஓக்கே சொல்றது 6 வது ரீல் ல.அதை ஹீரோயின் தன் அப்பா கிட்டேதகவல் சொல்றது 12 வது ரீல் ல # 6 மனமே 6


7. அனுஷ்காவுக்கு உதடு் மட்டும் இவ்ளோவ் சின்னதா இருக்கே?்



8. டூயட் சீனில் அனுஷ்காவின் முக சேஷ்டைகள் கலக்கல் # அனுஷ் பழம்


9. ஸார்.ஹன்சிகா சார்.பாத்ரூம்ல குளிக்குது ஸார். # சொந்த வீட்ல பாத்ரூம்ல தாழ் போட்டுட்டு குளிக்கும்போது எதுக்கு டர்க்கி டவல்? எப்டி  நம்ம லாஜிக் கொஸ்டீன்? 


10 சந்தானம் - அனுஷ்கா டூயட் கலக்கல் # சூர்யா பாவம் 


11. ஹன்சிகா டென் த் படிக்கற ஸ்டூடண்ட்டாம்.அய்யோ ராமா


12. ஒத்தை ஆள் 10 பேரை அடிச்சா என்ன அர்த்தம்?


 சி பி = 10 பேரும் சொத்தைப்பசங்கனு அர்த்தம் பாஸ் 


13. 120 கிமீ வேகத்துல 4,ஜீப் ஹீரோவைத்துரத்துது.பிடிக்க முடியல.செம ஓட்டம்.கின்னஸ் ரெக்கார்ட்


14. சாமி விக்ரமை மறைமுகமாத்தாக்கறாரு சூர்யா.என்ன தகராறோ?


15. ஓப்பனிங் சீன் அஞ்சலிக்கு குத்தாட்டம்


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க் =41

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் = 3 / 5


சி பி கமெண்ட் - ஈரோடு சீனிவாசா வில் படம் பார்த்தேன். காலை 7 மணி ஷோ , என்னை மாதிரியே வெட்டியா ஊர்ல பல பேர் இருக்காங்க போல , பல்லு கூட துலக்காம வந்துட்டாங்க   சிங்கம் 2 - மாமூல் ஆக்சன் ஹரி பிரான்ட் மசாலா - தலைவா வரும் வரை தாங்கும். படம் ஸ்பீடாத்தான் போகுது , ஆனா காது வலிக்குது. அஞ்சலி ஒரு பாட்டுக்கு ஓப்பனிங்க்ல ஓபனா ஒரு குத்தாட்டம் போடுது, அதனால போகனும்னா யாரும் லேட்டா போகாதீங்க

 


வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 5.7 2013 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

 


1.  சிங்கம் 2  -  படத்திற்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. 


ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து ஹிட்டான படம் சிங்கம். இதன் இரண்டாம் பாகத்தையும் ஹரி சிங்கம் 2 என்ற பெயரில் இயக்கியுள்ளார். இதில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, விவேக், சந்தானம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சூர்யாவுக்கு இது ரொம்பவே முக்கியமான படமாக இருக்கும். 


ஜூலை 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் 'சிங்கம் 2' படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. இதனிடையே படம் தணிக்கைக் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. சிங்கம் 2 படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். 


இப்படம் உலகம் முழுவதும் சுமார் 2400 திரையரங்குகளில் ரிலீஸாகிறதாம். 'சிங்கம் 2'வின் வியாபாரமும் சூர்யா தரப்பினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது


சூர்யா, ஹரி கூட்டணியில் உருவாகி, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில இருக்கும் ‘சிங்கம் 2’ படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. சூர்யா நடித்த படங்களிலேயே மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் நாளை சென்னையிலுள்ள பல தியேட்டர்களில் ஸ்பெஷலாக காலை காட்சியாகவும்  திரையிடப்பட உள்ளது.



 தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் வெளியாகும் இப்படம், ஹிந்தியில் வருகிற 12-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தை அமெரிக்காவில் ’அட்மஸ் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் 62 தியேட்டர்களில் வெளியிட இருக்கிறது. இதற்கு முன் அஜித் நடித்த ‘பில்லா 2’ படம் தான் அமெரிக்காவில் ஒரே நேரத்தில் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.  

இயக்குனர் ஹரி (இயக்குனர்)
தயாரிப்பாளர் எஸ்.லக்ஸ்மன் குமார்
கதை ஹரி (இயக்குனர்)
நடிப்பு சூர்யா
அனுஷ்கா செட்டி
டேனி சபானி
ஹன்சிகா மோட்வானி
விவேக்
சந்தானம்
இசையமைப்பு தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு ப்ரியன்
படத்தொகுப்பு வி.டி.விஜயன்
கலையகம் பிரின்ஸ் பிக்சர்ஸ்
விநியோகம் ஸ்டூடியோ கிரீன்
வெளியீடு 5 சூலை 2013
நாடு இந்தியா
மொழி தமிழ்

http://www.adrasaka.com/2013/07/2.html -

சிங்கம் 2 - சினிமா விமர்சனம்

சிங்கம் 2 - சினிமா விமர்சனம்


 

2   Lone Ranger  - If not for Johnny Depp, this big-budget revisionist interpretation of the classic 'Lone Ranger' character would probably never have happened. Sure, the baby-boomer generation of the 1950s might remember the popular TV show in which Clayton Moore was the titular character, but there is scarcely any trace left of the masked ex-Texas Ranger in popular culture half a century later. That reality isn't lost on Depp nor his 'Pirates of the Caribbean' director Gore Verbinski; rather than keep to the spirit of previous incarnations, their reboot essentially applies the sensibilities of their previous franchise-spawning 'Pirates' venture to the story of two outlaws in the Wild West.

Notwithstanding the title, it is the Lone Ranger's sidekick Tonto who takes centre-stage here. His trademark eccentricity in glorious display, Depp's Tonto has a face painted white with four vertical black streaks and most distinctively, a dead crow perched atop his forehead which he obsessively feeds. Suffice to say that this is not the Tonto that Jay Silverheels used to play in the TV series; instead, this is a distinctively Depp creation, one that immediately recalls his Jack Sparrow kookiness but is yet more grounded and complex and in our opinion his most intriguing character part yet.

Even though his behaviour and mannerisms are signature Depp, this Tonto retains the reticence of the original character and therefore speaks little and with much brevity. That characteristic isn't in any way a handicap though; instead, the witty script concocted by the 'Pirates' team of Ted Elliott and Terry Rossio along with Justin Haythe reserve the best punchlines for Tonto, which Depp delivers with sheer aplomb. In particular, Depp's deadpanning makes for great humour in the middle section of the film, which deliberately lets the action take a back seat in favour of some wry character bonding between Tonto and the Lone Ranger.

Yet for the scene-stealer (or show-stopper even) that Depp is, one would not be able to do the film justice without due mention of the Lone Ranger himself. Setting aside his dramatic chops from 'The Social Network' and 'J. Edgar', Armie Hammer gives a straight-up performance as the clean-cut prosecutor turned Texas Ranger John Reid whose staunch belief in the code of law is tested by the wonton corruption that he witnesses. Reid's transformation from a lawman to an outlaw is the origins story that Elliott and Rossio want to tell, which along the way includes how the mask came to be as well as why his "spirit horse" is named Silver.

Though Reid's quest for justice propels the story, Hammer knows better than to try to steal the thunder from Depp. Aptly therefore, he contends with being Depp's foil, as straight-arrow orthodox as Depp is idiosyncratically unorthodox. By being Depp's opposite, Hammer finds a sweet spot completing the odd couple-pairing that manifests itself both in their snappy repartee as well as some truly amusing physical moments. In particular, the latter forms a nice segue into the big-action climax, especially since that marks the first time our two heroes work side by side to stop what they finally realise is their common enemy.

That enemy is none other than the sadistic criminal Butch Cavendish (played with dastardly menace by William Fitchner). Butch isn't alone as the villain here though; to up the stakes, the writers also throw in a railroad tycoon named Latham Cole (Tom Wilkinson) as well as a cavalry leader General Fuller (Barry Pepper) whom Latham enlists in his feigned war against the Red Indians in a bid to control the railroad and the riches to be found deep in Indian territory. That is a fair bit to set up, which explains the seemingly indulgent two-and-half-hour running time that in reality coasts by surprisingly swiftly.

Besides the sheer charisma of Depp's character as well as to a lesser if no less significant extent Hammer's, the film manages to be consistently entertaining thanks in no small part to Verbinski. No stranger to the Western genre after successfully directing Depp in voice only in "Rango", Verbinski makes an effortless transition to live-action with the same derring-do that he amply demonstrated at the helm of the first three 'Pirates' movies. As with 'Pirates', he shows a deftness in navigating Elliott and Rossio's intentionally convoluted screenplay, which actually succeeds in giving Depp and Hammer the space for their characters to develop alongside each other while creating the right excuses for major action setpieces.

Verbinski is of course no stranger to the kind of spectacle summer audiences want to see. Trading pirate ships for old-school coal trains, he begins with a literal bang as Tonto and Reid first make their acquaintance on board a hijacked train transporting Butch Cavendish to a New Mexico town to face punishment for his crimes. It is a jaw-dropping setpiece to say the least, even more so for the fact that it was shot for real instead of by CGI. But Verbinski sets aside the bulk of the coin for the climax, which can only be described as a glorious triumph in action choreography that pits good and bad in breathtaking fashion aboard two criss-crossing locomotives. Thrilling doesn't even begin to describe how exciting it is, given an elegant balletic touch by Hans Zimmer's rendition of Rossini's 'William Tell Overture'.

And on that exuberant note, Verbinski more than convinces that his 'Pirates' treatment of the Lone Ranger classic is a resounding success. Not only does it pack the same level of exhilaration, it allows Depp an opportunity to yet again tap on his considerable pool of acting quirks to create a familiar yet wholly refreshing character. His Tonto is like no other Tonto yet seen, nor is it simply just a Jack Sparrow in the desert; therein lies the beauty of Depp's creation and even if it isn't Tonto's name you see on the title, it will be his that you will remember and reminisce fondly long after the credits are over.

 

3. Policegiri: Will Sanjay Dutt take the box-office by storm?


i: Actress Prachi Desai, who will soon be seen in Sanjay Dutt-starrer action film 'Policegiri', says although her co-star won't be there for promotions, she is confident about the film's good business. 


Currently, Sanjay is in jail to serve his remaining jail term in the 1993 Mumbai bomb blasts case. Prachi believes his fans will definitely watch the film. 


In 'Policegiri', produced by TP Aggarwal and his son Rahul and directed by KS Ravikumar, Sanjay plays a tough yet charismatic police officer. 


I have to say that everyone (film's crew and the cast) will do their best. It's unfortunate what has happened. We do understand that but, at the same time, we are doing our best. I am sure there are people who love him (Sanjay) for what he is," Prachi said in an interview. 


"They are still going to go to the theatre (to watch Sanjay's film 'Policegiri') no matter whether he goes to their cities to promote the film or not," she added. 


Prachi further said she "just believes in the love the people have for him (Sanjay)". 

Meanwhile, Prachi is excited about her look in the film. After being seen in ultra-modern look in her last release 'I, Me Aur Main', this time her character is more 'colourful' and 'approachable'. 


"There is no particular look, but we have tried our best to keep it as young and colourful and as approachable for people," said the 24-year-old. 


"I am just happy experimenting with looks and with 'Policegiri', I guess I am getting a chance to do that again." 


Slated to release July 5, 'Policegiri' also features Prakash Raj and Om Puri. Besides, Salman Khan will be seen in a cameo in the film.
Ravikumar, who is known for making hit Tamil films such as 'Muthu' and 'Panchathantiram', says Sanjay shot with conviction after he was sentenced to imprisonment in the 1993 Mumbai bomb blast case. 


"We had finished most of the film before Sanjay was sentenced to prison, except for a few songs and some scenes. However, it amazed me how strongly he returned post-judgment and shot for the rest of the scenes. Typically, anyone will be sulking in such a situation, but not Sanjay," he said. 


Queried if he plans to make more Hindi films, Ravikumar said: "I haven't given it a thought because I want this film to come out first and only then can I decide my next course of action".
The film also be a measurement of the sympathy in the hearts of Sanjay Dutt's fans as they would love to see their favourite actor on screen.


தர்மபுரி இளவரசன் -கொலையா? தற்கொலையா?

தர்மபுரி: கலப்பு திருமணம் செய்த தர்மபுரி வாலிபர், ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி அடுத்த நாயக்கன்கொட்டாய், நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோ மகன் இளவரசன், செல்லன்கொட்டாயைச் சேர்ந்த, நாகராஜன் கவுண்டர் மகள் திவ்யாவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து, திவ்யாவின் தந்தை நாகராஜன், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வன்முறை சம்பவங்கள்:

இதையடுத்து, தர்மபுரியில் பயங்கர வன்முறை சம்பவங்கள் நடந்தன. பெண்ணின் தாய் தேன்மொழி, சென்னை ஐகோர்ட்டில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இது, நீதிபதிகள் ஜெய்சந்திரன், சுந்தரேஷ் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசராணைக்கு வந்தது. திவ்யாவிடம், நீதிபதிகள் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம், வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஆட்கொணர்வு மனுவை, தேன்மொழி வாபஸ் பெறுவதாக, வழக்கறிஞர் ரூபர்ட் பர்னபாஸ் தெரிவித்தார். நீதிபதிகள், வழக்கை இன்று, ஜூலை 5ம் தேதிக்கு, ஒத்தி வைத்தனர். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த திவ்யா, "எந்த சூழ்நிலையிலும் இளவரசனுடன் சேர்ந்து வாழத் தயாராக இல்லை. அம்மாவுடன் இருப்பேன். என் தந்தை இறந்ததை ஈடு செய்வேன்' என, தெரிவித்தார். இந்த நிலையில், தர்மபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறம், ரயில்வே தண்டவாளத்தில், இளவரசன் உடல், நேற்று பிற்பகலில் கிடந்தது. அவர் ஓட்டிச் சென்ற, "பல்சர்' பைக், அந்த பகுதியில் இருந்தது.

தர்மபுரி ரயில்வே போலீசார், கூறியதாவது:

குர்லா எக்ஸ்பிரஸ் ரயில்:

கோவையில் இருந்து, பிற்பகல், 1:20 மணிக்கு, மும்பை செல்லும், குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து, இளவரசன் தற்கொலை செய்துள்ளார். ரயில் தண்டவாளத்தில், தலை வைத்து படுத்திருந்தால் மட்டுமே, உடல் துண்டாகும். ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்வோரின் உடல், தூக்கி வீசப்படும். இளவரசன், ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்திருப்பது தெரிகிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு, போலீசார் கூறினர்.

இளவரசனின் தந்தை இளங்கோ கூறுகையில், ""திவ்யாவின் பேட்டியை, காலையில் படித்து, இளவரசன் கதறி அழுதான்; நாங்கள் ஆறுதல் கூறினோம். காலை, 10:00 மணிக்கு, செலவுக்கு பணம் கேட்டான். நான், வங்கி ஏ.டி.எம்., கார்டைக் கொடுத்தேன். அதன் பின், பிணமாக என் மகனைப் பார்க்கிறேன்,'' என்றார். இளவரசன், ரயிலில் அடிபட்டு கிடந்த இடத்தில், மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். தண்டவாளம் அருகே கிடந்த உடலை, எடுக்க விடாமல், உறவினர்கள் தடுத்தனர். இதனால், மாலை, 4:30 மணி வரை, உடலை பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல முடியாமல், போலீசார் திணறினர். அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

சட்டை பாக்கெட்டில் காதல் கடிதங்கள்:

தற்கொலை செய்து கொண்ட இளவரசனின், சட்டை பாக்கெட்டில் இருந்து, இரண்டு கடிதங்களை, போலீசார் கைப்பறியுள்ளனர். கடந்த, 2011ல், திவ்யாவுக்கு, எழுதிய கடிதமும், திவ்யா, இளவரசனுக்கு எழுதிய கடிதமும் அவை. கடிதத்தில் எழுதப்பட்டிருந்த விவரங்களை, போலீசார் கூற மறுத்து விட்டனர். இந்த கடிதங்கள், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள தடயங்கள் ஆகியவை, இளவரசன் ரயில் முன் பாய்ந்து இறந்திருப்பதை, உறுதி செய்வதாக போலீசார் தெரிவித்தனர். நேற்று மாலை, 5:10க்கு, பெங்களூருக்கு செல்ல, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், தர்மபுரி நோக்கி வந்தது. அந்த நேரத்தில், இளவரசனின் பிணத்தை எடுக்க விடாமல், உறவினர்கள், போராட்டத்தில் ஈடுபட்டதால், ரயில் சிவாடியில் நிறுத்தப்பட்டது. மாலை, 5:45 மணிக்கு, தர்மபுரி ரயில் நிலையத்துக்கு வந்தது. டி.ஐ.ஜி., சஞ்சய் குமார் தலைமையில், ஐந்து மாவட்ட, எஸ்.பி.,க்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாயக்கன்கொட்டாய் உள்ளிட்ட மாவட்ட கிராமங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு அமல்:

கலப்பு திருமணம் செய்த தர்மபுரி இளவரசன், தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இளவரசனின் உறவினர்கள், மர்ம நபர்கள் அடித்து கொலை செய்திருப்பதாகக் கூறினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அங்கு திரண்டனர். இதனால், பதற்றம் அதிகரித்தது. சேலம் டி.ஐ.ஜி., சஞ்சய்குமார், எஸ்.பி.,க்கள் ஆஸ்ராகார்க், செந்தில்குமார் ஆகியோர், அங்கு கூடியிருந்தவர்களிடம், பேச்சு நடத்தினர். "பரிசோதனை மூலம் மட்டுமே, கொலைக்கான காரணத்தை, தெரிந்து கொள்ள முடியும். எனவே, பிணத்தை எடுக்க ஒத்துழைக்க வேண்டும்' என்றனர். தொடர்ந்து, மாலை, 5:45 மணிக்கு, உடலை, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். சிலர், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் உள்ள, கடைகளை தாக்கினர். தொடர்ந்து, கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டம் முழுதும், பதற்றம் நிலவி வருவதால், 144 தடை உத்தரவு விதித்து, கலெக்டர் லில்லி உத்தரவிட்டுள்ளார். போலீசார், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை முதல், கிராமப் பகுதிகளுக்கு, பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளன.



மக்கள் கருத்து 



1. திரைக்கதையை போல சம்பவங்கள் நடந்தாலும் காதலர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இது ஒரு பாடம்...




2. நம்பமுடியவில்லை கொலையாகவும் இருக்க சந்தர்ப்பங்கள் உண்டு . இந்த காதல் தேவையா ...எத்தனை சண்டை, வீடுகள் நாசம் அடிதடி ...கடைசியில் எல்லாம் போச்சு வாழகத்துக்கங்கடா 



3. கொடுமையான வேதனை என்று தான் வர்ணிக்க தோன்றுகிறது. காதல் உன்னதமானது அதை முழுமையாக உணர்ந்தவர்களுக்கு. சுயமாக சிந்தித்து முடிவெடுக்க முடியாத இருவரின் இனக்கவர்ச்சி ஈர்ப்புக்கு பெயர் காதல் அல்ல. இந்த பெண்ணின் செயலும் இளைஞரின் முடிவும் ஒரு பாடம். காதல் வேறு. பருவ வயதில் ஏற்படும் இன கவர்ச்சி என்பது வேறு. 



4 எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் வாழ்ந்து காட்ட வேண்டும் அத விட்டு இப்படி கோழை தனமாக உயிரை விடுவதால் என்ன பயன் போன உயிர் திரும்பி வருமா.இளவரசன் பொறுமையோடு இருந்திருந்தால் கண்டிப்பாக திவ்யா மனசு மாறி ஒரு நாள் திரும்பி வந்து இருப்பார்.மனதளவில் தைரியம் இல்லாமல் அவசரத்தில் எடுத்த முடிவாகவே கருதுகிறேன்...மிகவும் வருத்தமான செய்தி...


5. பள்ளி படிப்பை முடிக்கும் வரை ஜாதி பற்றி தெரியாத வரை பிரச்சனை இல்லை எப்போது இந்த 10 எக்ஸாம் வரும்போது ஜாதி செர்டிபிகாடே வாங்க அரம்பிதொமோ அப்பொழுது தான் ஜாதி வெறி வெளியில் வர அரம்பிர்கர்த்து..அதுவே வளர வளர அதிகமா ஆகிறது...முதலில் இந்த ஜாதியை certificate ஒழித்து வருமானத்தை அடிப்படையாக கொண்டு மற்றம் செய்ய வேண்டும்... ஆனால் அதை செய்தால் என்ன செய்வார்கள்????????? 


6. ஜாதி வெறி பிடித்து அலையும் மனிதர்களை கண்டால் சவுக்கடி கொடுக்க தோன்றுகிறது. பலர் இங்கே காதலால் தான் ரெண்டு உயிர்கள் போய்விட்டன என்று காதலை குற்றம் சாட்டுகின்றனர். அவர்களுக்கு ஜாதி வெறி கண்களுக்கு தெரியவில்லையா? காதல் புனிதமானது என்று பல அறிஞர்கள் உலகம் முழுவதும் கூறியுள்ளனர். எவரும் இதுவரை புனிதமான ஜாதி என்று எதையும் குறிப்பிடவில்லை. காதலிப்பதே தவறு என்று கூறிக்கொண்டு இருக்கும் பலர் கருத்தை மாற்றி கொள்ளவேண்டும். இந்த ஜாதி வெறி, வரதட்சணை பிணி ஒழிய, கலப்பு திருமணமே சிறந்த மருந்து. 


தமிழ்நாட்டினுடைய கோர முகம் தெரிகிறது இளவரசனுடைய ஆன்மா சாந்தி அடைய நான் வேண்டிகொள்கிறேன் . 


8. எல்லா மீடியாக்களும் இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்து இளவரசன் "தற்கொலை" செய்துகொண்டான் என்று முடிவு செய்துவிட்டன. எதற்கு இந்த அவசரம்? கோர்ட் முடிவு செய்யட்டுமே இது கொலையா இல்லை தற்கொலையா என்று. அதுவரை மீடியாக்கள் பொறுமை காப்பது நல்லது.

Thursday, July 04, 2013

சாதி த்தது என்ன? தர்மபுரி இளவரசன் இறப்பு உணர்த்துவது என்ன? மக்கள் அலசல்

 

தர்மபுரி மாவட்ட கலப்பு திருமண விவகாரத்தில் சம்பந்தப்பட்ட திவ்யாவின் கணவர் இளவரசன் , ரயில் தண்டவாளத்தில் மூளை சிதறிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர்தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.

காதல் திருமணத்தால் கலவரம்

தர்மபுரி மாவட்டம், செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த, திவ்யாவுக்கும், நாய்க்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த இளவரசனுக்கும், காதல் திருமணம் நடந்தது. இதையடுத்து, திவ்யாவின் தந்தை நாகராஜன், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 



அதைத்தொடர்ந்து, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இந்த சூழ்நிலையில் திவ்யாவின் தாயார் தேன்மொழி, தனது மகளை இளவரசன் கடத்தி்ச் சென்று கட்டாய திருமணம் செய்ததாகவும் மீட்க கோரியும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக , கணவன் இளவரசனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என திவ்யா கூறியதாக தெரிகிறது. பின்னர் நேற்று இந்த வழக்கில் ஆட்கொணர்வு மனுவை தாய் தேன்மொழி வாபஸ் பெற்றார். வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.



ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இந்நிலையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறம் ரயில் தண்டவாளத்தில் இளவரசன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டனர். இன்று மதியம் தண்டவாளம் அருகே தனது பல்சர் பைக்கி்ல் வந்ததகவும், பைக்கை நிறுத்திவிட்டு மதுகுடித்ததாகவும், பின்னர் ரயிலில் பாயந்து தற்கொ‌லை செய்ததாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது சட்டை பையில் இரு கடிதங்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. 


தர்மபுரி: தர்மபுரி திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளவரசனின் உடல் இன்று ரயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், சந்தேக மரணமாகவும் கருதப்படுகிறது.
தான் இனி இளவரசனுடன் வாழப்போவதில்லை என்று திவ்யா நேற்று நீதிமன்றத்தில் கூறிய நிலையிலேயே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், தண்டவாளத்தின் அருகிலிருந்து அவரது பைக் மற்றும் கைப்பை கைப்பற்றப்பட்டதோடு, அவரது சட்டை பையிலிருந்து 2 கடிதங்கள் கிடைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
144 தடை உத்தரவு
இதனிடையே இளவரசனின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட பதட்டத்தினால், தர்மபுரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, தர்மபுரி மாவட்டம், மாரவாடியைச் சேர்ந்த திவ்யாவும். நத்தம் காலனியை சேர்ந்த இளவரசனும் காதலித்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்களின் காதலுக்கு திவ்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த விரக்தியில் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதனால் 3 தலித் கிராமங்களில் உள்ள வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

கலப்பு திருமணத்தால் நடந்தனைந்த வன்முறை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திவ்யாவின் தாயார் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுபடி திவ்யா உயர் நீதிமன்றத்தி்ல் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தாயாருடன் செல்ல விரும்புகிறேன் என்றும் இளவரசனுடன் இப்போது போக விரும்பவில்லை என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து தாயாருடன் திவ்யா செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர்.

இந்த நிலையில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தாயாருடன் மகள் வந்துவிட்டதால் வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தேன்மொழி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த திவ்யா செய்தியாளர்களிடம் பேசியபோது, எனது தந்தையின் நினைவு தொடர்ந்து இருப்பதால், இளவரசனுடன் சேர்ந்து வாழும் சூழ்நிலையே எனக்கு இல்லை என்றும் அம்மாவின் முடிவுப்படி வாழ தயாராகிவிட்டேன் என்றும் கூறினார்.
இந்த நிலையில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளத்தில் இன்று பிற்பகல் 3.30மணிக்கு இளவரசன் உடலை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

இளவரசனின் மோட்டார் சைக்கிள், கைப் பை, சட்டைப் பையில் இருந்து இரண்டு கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


 வாசகர் கருத்து 


1. காதல் எனும் போர்வையில் அந்த மகளை பெற்றோரிடம் இருந்து பிரித்தனர்....தகப்பன் உயிர் போச்சு...இப்போது, அதே காதல் மகனை பெற்றோரிடம் இருந்து பிரித்துள்ளது......பாழாய்ப்போன காதல்............பெற்றோரின் மனதை நோகடித்து அப்படி என்ன காதல் வேண்டிக் கிடக்கு? பெற்றோரால் பிறந்த நாம், அவர்களை பகைத்து வாழ்ந்து பயன் என்ன? பெற்றோர், பிள்ளை உறவை முறிக்கும் வகையிலான காதலை யாரும் ஆதரிக்காதீர்கள்......சமூக நீதி என்று பசப்ப வேண்டாம்....பெற்றோரின் மன வலியை யாரும் சட்டை செய்வதில்லை..




2. காமம் சில சமயம் காதல் எனும் போர்வையில் உயிர்களை காவு வாங்கி விடுகிறது...உண்மை அன்பான காதலி உயிரிழப்புக்கு பின் அணு அணுவாக வேதனைகளை தான் அனுபவிப்பாள்....வெறும் காம காதல் வேதனை தராது...மாறாக வேற்று உறவை தான் தேடும்..நல்ல உலகமடா இது...



3. பெண்களே.....உண்மை காதல் இல்லாவிட்டால் தயவுசெய்து திருமணம் செயாதீர்...உங்கள் வேலை முடிந்ததும் இடத்தை காலி பண்ணி விடுங்கள்.... 


4. காதலிப்பதில் உண்மையான ஆண்கள் எப்போதும் மிக கவனத்துடன் செயல்படுவது நல்லது....போன உயிர் மீண்டு வராது..எப்படி போனது என்பதை விட....இனி வராது என்பதை காதல் செய்யும் உண்மையான ஆண்மகன்கள் யோசிக்க வேண்டும்....பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே என்ற பழைய பாடல் நினைவு வருகிறது....இறந்து போன அன்பருக்காக ஆண்டவனிடம் வேண்டிகொள்வோம்... 



5. இரண்டு பேரை பலிகொடுத்து தன் கூற்றை நிருபித்து கொண்ட "பா ம க" ஒரு நாள் இதற்கு பதில் சொல்லியாகவேனும். 


6. பெற்றோர்கள் இளம் வயது பிள்ளைகளை பக்குவ படுத்தி வளர்க்க வேண்டும்.... 


7. P Ramesh Ponnaih நிதானம் இல்லாத வயதில் எடுத்த விபரீத (திருமணம் உட்பட ) முடிவு பெற்றோரின் நிலை மற்றவர்களுக்கு இது ஒரு படிப்பினை . பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் மற்றும் நாம் வாழும் சமூகமும் நல்ல பண்பாட்டினையும் பழக்கத்தையும் கற்றுத்தர வேண்டும் . 



8. அது தான் இப்பொழுது தயாரிக்கும் படங்கள் எல்லாம் 80 % சமுதாயத்தை சீரலிப்பதாகவெ உள்ளன... அப்பாவை, டேய் டாடி, என்றும், எருமை என்றும் நகைசுவை காட்சிகளில் அழைப்தாக வந்தால் எப்படி இருக்கும்... முன் காலத்தில் ரெங்கா ராவ் நடித்த படங்கள், ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று சமுதாயம் கற்கும் அளவிற்கு இருக்கும்... மக்களாக பார்த்து திருந்த வேண்டும்..


9. Devaraj சாதிகள் இல்லையடி பாப்பா என்பது உண்மை தான். ஆனால் அதனை சாதி சமய சிந்தனையில் மூழ்கி விட்ட சமுதாயத்தில் ஒரே அடியாக, ஒரே நாளில் சாதி அற்ற நிலையை உருவாக்க முடியாது. இரண்டு மரணங்கள்: ஒன்று திவ்யாவின் தந்தை தற்கொலை, அடுத்தது திவ்யாவின் முன்னாள் கணவர் மரணம். இந்த இறப்புகளை தவிர்த்து இருக்க முடியுமா? முதல் இறப்பை தொடர்ந்து நிகழ்ந்த துயரமான நிகழ்வுகள், கொடுமைகள், உடமை இழப்புகள் என பட்டியல் நீளும். இளம் தலைமுறையினர் நன்கு சிந்தித்து செயல் பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


 வெறும் உடல் ரீதியான கவர்ச்சிக்கு இடம் கொடுத்து, பின்பு வேதனை படுவதை விட. பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். சாதி யை ஒழிகின்றேன் என்று வீராப்பு பேசும் சாதிய தலைவர்கள் தங்கள் குடும்பத்தில் சாதியை ஒழித்து, நல்ல சமுதாய தலைவர்களாக மிளிர வேண்டும். படிக்கின்ற சின்ன பசங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ் திரைப்படங்கள் சீர்திருத்தம் என்ற (போர்வையில் சாதியை ஒழிகின்றேன் என்று, காதல், கத்திரி காயை உருவாக்க வேண்டாம். சமுதாயம் உருப்பட உங்கள் படம் இருக்கட்டும். அல்லது நீண்ட காமிடி படம் தயாரித்து மக்களை சிரிக்க வையுங்கள்.


நன்றி - தினமலர்

HUMMING BIRD- சினிமா விமர்சனம்

 
 
தினமலர் விமர்சனம்

எலும்பு முறிவு ஏற்பட்ட கைகள், கண்ணாடியின் முன் பார்க்கையில் தேகமெங்கும் காயம், முகமெங்கும் பூசப்பட்ட அவமானம், போதை மருந்து விற்பனையாளர்களால் துரத்தப்பட்டு திருட்டுத்தனமாக வேறொருவர் வீட்டிற்குள் புகும் டிரான்ஸ்போர்ட்டர் நாயகன் “ஜேசன் ஸ்டேதம்”. படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே இது இவருடைய வழக்கமான மசாலா படமல்ல என்ற எண்ணம் பசுமரத்தாணி போல் பதிந்து விடுகிறது.

ஆஃப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் தாக்கப்படும் ஜேசன், மிலிட்டரி டேங்கர் தாக்கப்பட்டதில் உடன் பணிபுரிந்த அதிகாரிகள் உயிர் இழக்கின்றனர். கோபத்தில் அப்பாவி வேறொருவரை தீவிரவாதி எனக் கருதி துப்பாக்கிக்கு இறையாக்க பட்டாளத்து விதிகளின் படி கோர்ட் மார்ஷல் செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்படுகிறார் ஜேசன்.

ஆஃப்கானிஸ்தானிலிருந்து லண்டனுக்கு பயணிக்கும் கதைக்களம். பட்டாளத்தான் பரதேசியாய் லண்டன் தெருக்களில், ஜேசனுடன் போதை மருந்து விற்கும் தோழி இஸபெல்லா. குடியுடன் குன்றிய நிலையில் இருக்கும் ஜேசன் தெருவில் சண்டித்தனம் செய்யும் இரு நபர்களால் துரத்தப்படுகிறார். திருட்டுத்தனமாக வேறொருவர் வீட்டிற்குச் செல்லும் ஜேசன், வீட்டில் யாருமில்லாமல் போக அதை தன் வீடாக மாற்றிக் கொள்கிறார்.  வீட்டின் உடைமைகளையும் பயன்படுத்தத் தொடங்குகிறார்.
 
 
 


ஜேசன் பரதேசியாய் திரிகையில் உதவி புரிந்த கிருஸ்துவ சந்நியாசினி மீது நேசம் கலந்த காதல் வருகிறது.  தான் சந்நியாசினி (நன்) என்பதை உணர்ந்தும் அந்தப் பெண்ணும் காதலில் விழுகிறார்.  தான் பலர் வாழ்வில் மாற்றம் உண்டாக்க வேண்டுமென நினைக்கும் அப்பெண் ஜேசனை திருந்தி வாழக் கூறுகிறார்.  ஹோட்டலில் வேலை பார்க்கும் ஜேசன், அங்கே வம்பு செய்பவர்களை அடித்துத் துவைக்கிறார். இதை கவனித்த முதலாளி இவரை அடியாளாக நியமித்து, கடத்தலுக்கும் வசூலுக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்.

இஸபெல்லா இறந்ததாக செய்தி வர ஜேசன் மனமுடைந்து போகிறார்.  இவர் கடந்த கால கசப்பான அனுபவங்களும் இவரை நினைவலயாய் தொடர்ந்து துரத்துகிறது.  பாவமன்னிப்பைத் தேடும் ஜேசன் கடைசியில் என்ன செய்தார்??  தான் விரும்பிய சந்நியாசினியுடன் இணைந்தாரா??   என்பது க்ளைமாக்ஸ்.

ஆக்ஷன்-த்ரில்லர் என வகைப்படுத்தப்படும் இப்படம் வெறும் டார்க் நாடகமாகத் திகழ்கிறது.  கதையை முழுதாக விவரிக்க திரைக்கதை ஈர்க்கத்தக்க அம்சங்கள் குன்றியே காணப்படுகிறது.  எதிர்பாரா திருப்பங்களும், பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகளும் இல்லை.  சிலாகித்துப் போக வைக்கும் அழகிய தருணங்களும் இல்லை.

பறவைகளிலேயே மிகச் சிறிய பறவையும் பின் நோக்கியும் பறக்கக் கூடிய தன்மையும் பெற்ற ஒரே பறவையானது ஹம்மிங் பேர்ட் .  வாழ்வில் வீழ்ச்சியடைந்து மனிதன் தான் இறந்த காலத்தில் செய்த பிழைக்கு நிகழ்காலத்தில் எப்படி பாவமன்னிப்பை தேடிக் கொள்கிறான் என்பது தான் இப்படம்.

மொத்தத்தில் பொழுது போக்கிற்காக பார்க்கப்படும் படம் இதுவல்ல.  டார்க் டிராமா படங்கள் மீது பற்று கொண்டவர்கள் இதை நோக்கலாம். வருடத்தில் கடந்து செல்லும் படங்களில் இதுவும் என்றால் மிகையல்ல. 
 
 
THANX - DINAMALAR