Showing posts with label டாக்டர் ராம்தாஸ். Show all posts
Showing posts with label டாக்டர் ராம்தாஸ். Show all posts

Friday, July 05, 2013

தர்மபுரி இளவரசன் -கொலையா? தற்கொலையா?

தர்மபுரி: கலப்பு திருமணம் செய்த தர்மபுரி வாலிபர், ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி அடுத்த நாயக்கன்கொட்டாய், நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோ மகன் இளவரசன், செல்லன்கொட்டாயைச் சேர்ந்த, நாகராஜன் கவுண்டர் மகள் திவ்யாவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து, திவ்யாவின் தந்தை நாகராஜன், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வன்முறை சம்பவங்கள்:

இதையடுத்து, தர்மபுரியில் பயங்கர வன்முறை சம்பவங்கள் நடந்தன. பெண்ணின் தாய் தேன்மொழி, சென்னை ஐகோர்ட்டில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இது, நீதிபதிகள் ஜெய்சந்திரன், சுந்தரேஷ் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசராணைக்கு வந்தது. திவ்யாவிடம், நீதிபதிகள் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம், வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஆட்கொணர்வு மனுவை, தேன்மொழி வாபஸ் பெறுவதாக, வழக்கறிஞர் ரூபர்ட் பர்னபாஸ் தெரிவித்தார். நீதிபதிகள், வழக்கை இன்று, ஜூலை 5ம் தேதிக்கு, ஒத்தி வைத்தனர். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த திவ்யா, "எந்த சூழ்நிலையிலும் இளவரசனுடன் சேர்ந்து வாழத் தயாராக இல்லை. அம்மாவுடன் இருப்பேன். என் தந்தை இறந்ததை ஈடு செய்வேன்' என, தெரிவித்தார். இந்த நிலையில், தர்மபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறம், ரயில்வே தண்டவாளத்தில், இளவரசன் உடல், நேற்று பிற்பகலில் கிடந்தது. அவர் ஓட்டிச் சென்ற, "பல்சர்' பைக், அந்த பகுதியில் இருந்தது.

தர்மபுரி ரயில்வே போலீசார், கூறியதாவது:

குர்லா எக்ஸ்பிரஸ் ரயில்:

கோவையில் இருந்து, பிற்பகல், 1:20 மணிக்கு, மும்பை செல்லும், குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து, இளவரசன் தற்கொலை செய்துள்ளார். ரயில் தண்டவாளத்தில், தலை வைத்து படுத்திருந்தால் மட்டுமே, உடல் துண்டாகும். ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்வோரின் உடல், தூக்கி வீசப்படும். இளவரசன், ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்திருப்பது தெரிகிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு, போலீசார் கூறினர்.

இளவரசனின் தந்தை இளங்கோ கூறுகையில், ""திவ்யாவின் பேட்டியை, காலையில் படித்து, இளவரசன் கதறி அழுதான்; நாங்கள் ஆறுதல் கூறினோம். காலை, 10:00 மணிக்கு, செலவுக்கு பணம் கேட்டான். நான், வங்கி ஏ.டி.எம்., கார்டைக் கொடுத்தேன். அதன் பின், பிணமாக என் மகனைப் பார்க்கிறேன்,'' என்றார். இளவரசன், ரயிலில் அடிபட்டு கிடந்த இடத்தில், மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். தண்டவாளம் அருகே கிடந்த உடலை, எடுக்க விடாமல், உறவினர்கள் தடுத்தனர். இதனால், மாலை, 4:30 மணி வரை, உடலை பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல முடியாமல், போலீசார் திணறினர். அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

சட்டை பாக்கெட்டில் காதல் கடிதங்கள்:

தற்கொலை செய்து கொண்ட இளவரசனின், சட்டை பாக்கெட்டில் இருந்து, இரண்டு கடிதங்களை, போலீசார் கைப்பறியுள்ளனர். கடந்த, 2011ல், திவ்யாவுக்கு, எழுதிய கடிதமும், திவ்யா, இளவரசனுக்கு எழுதிய கடிதமும் அவை. கடிதத்தில் எழுதப்பட்டிருந்த விவரங்களை, போலீசார் கூற மறுத்து விட்டனர். இந்த கடிதங்கள், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள தடயங்கள் ஆகியவை, இளவரசன் ரயில் முன் பாய்ந்து இறந்திருப்பதை, உறுதி செய்வதாக போலீசார் தெரிவித்தனர். நேற்று மாலை, 5:10க்கு, பெங்களூருக்கு செல்ல, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், தர்மபுரி நோக்கி வந்தது. அந்த நேரத்தில், இளவரசனின் பிணத்தை எடுக்க விடாமல், உறவினர்கள், போராட்டத்தில் ஈடுபட்டதால், ரயில் சிவாடியில் நிறுத்தப்பட்டது. மாலை, 5:45 மணிக்கு, தர்மபுரி ரயில் நிலையத்துக்கு வந்தது. டி.ஐ.ஜி., சஞ்சய் குமார் தலைமையில், ஐந்து மாவட்ட, எஸ்.பி.,க்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாயக்கன்கொட்டாய் உள்ளிட்ட மாவட்ட கிராமங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு அமல்:

கலப்பு திருமணம் செய்த தர்மபுரி இளவரசன், தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இளவரசனின் உறவினர்கள், மர்ம நபர்கள் அடித்து கொலை செய்திருப்பதாகக் கூறினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அங்கு திரண்டனர். இதனால், பதற்றம் அதிகரித்தது. சேலம் டி.ஐ.ஜி., சஞ்சய்குமார், எஸ்.பி.,க்கள் ஆஸ்ராகார்க், செந்தில்குமார் ஆகியோர், அங்கு கூடியிருந்தவர்களிடம், பேச்சு நடத்தினர். "பரிசோதனை மூலம் மட்டுமே, கொலைக்கான காரணத்தை, தெரிந்து கொள்ள முடியும். எனவே, பிணத்தை எடுக்க ஒத்துழைக்க வேண்டும்' என்றனர். தொடர்ந்து, மாலை, 5:45 மணிக்கு, உடலை, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். சிலர், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் உள்ள, கடைகளை தாக்கினர். தொடர்ந்து, கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டம் முழுதும், பதற்றம் நிலவி வருவதால், 144 தடை உத்தரவு விதித்து, கலெக்டர் லில்லி உத்தரவிட்டுள்ளார். போலீசார், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை முதல், கிராமப் பகுதிகளுக்கு, பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளன.



மக்கள் கருத்து 



1. திரைக்கதையை போல சம்பவங்கள் நடந்தாலும் காதலர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இது ஒரு பாடம்...




2. நம்பமுடியவில்லை கொலையாகவும் இருக்க சந்தர்ப்பங்கள் உண்டு . இந்த காதல் தேவையா ...எத்தனை சண்டை, வீடுகள் நாசம் அடிதடி ...கடைசியில் எல்லாம் போச்சு வாழகத்துக்கங்கடா 



3. கொடுமையான வேதனை என்று தான் வர்ணிக்க தோன்றுகிறது. காதல் உன்னதமானது அதை முழுமையாக உணர்ந்தவர்களுக்கு. சுயமாக சிந்தித்து முடிவெடுக்க முடியாத இருவரின் இனக்கவர்ச்சி ஈர்ப்புக்கு பெயர் காதல் அல்ல. இந்த பெண்ணின் செயலும் இளைஞரின் முடிவும் ஒரு பாடம். காதல் வேறு. பருவ வயதில் ஏற்படும் இன கவர்ச்சி என்பது வேறு. 



4 எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் வாழ்ந்து காட்ட வேண்டும் அத விட்டு இப்படி கோழை தனமாக உயிரை விடுவதால் என்ன பயன் போன உயிர் திரும்பி வருமா.இளவரசன் பொறுமையோடு இருந்திருந்தால் கண்டிப்பாக திவ்யா மனசு மாறி ஒரு நாள் திரும்பி வந்து இருப்பார்.மனதளவில் தைரியம் இல்லாமல் அவசரத்தில் எடுத்த முடிவாகவே கருதுகிறேன்...மிகவும் வருத்தமான செய்தி...


5. பள்ளி படிப்பை முடிக்கும் வரை ஜாதி பற்றி தெரியாத வரை பிரச்சனை இல்லை எப்போது இந்த 10 எக்ஸாம் வரும்போது ஜாதி செர்டிபிகாடே வாங்க அரம்பிதொமோ அப்பொழுது தான் ஜாதி வெறி வெளியில் வர அரம்பிர்கர்த்து..அதுவே வளர வளர அதிகமா ஆகிறது...முதலில் இந்த ஜாதியை certificate ஒழித்து வருமானத்தை அடிப்படையாக கொண்டு மற்றம் செய்ய வேண்டும்... ஆனால் அதை செய்தால் என்ன செய்வார்கள்????????? 


6. ஜாதி வெறி பிடித்து அலையும் மனிதர்களை கண்டால் சவுக்கடி கொடுக்க தோன்றுகிறது. பலர் இங்கே காதலால் தான் ரெண்டு உயிர்கள் போய்விட்டன என்று காதலை குற்றம் சாட்டுகின்றனர். அவர்களுக்கு ஜாதி வெறி கண்களுக்கு தெரியவில்லையா? காதல் புனிதமானது என்று பல அறிஞர்கள் உலகம் முழுவதும் கூறியுள்ளனர். எவரும் இதுவரை புனிதமான ஜாதி என்று எதையும் குறிப்பிடவில்லை. காதலிப்பதே தவறு என்று கூறிக்கொண்டு இருக்கும் பலர் கருத்தை மாற்றி கொள்ளவேண்டும். இந்த ஜாதி வெறி, வரதட்சணை பிணி ஒழிய, கலப்பு திருமணமே சிறந்த மருந்து. 


தமிழ்நாட்டினுடைய கோர முகம் தெரிகிறது இளவரசனுடைய ஆன்மா சாந்தி அடைய நான் வேண்டிகொள்கிறேன் . 


8. எல்லா மீடியாக்களும் இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்து இளவரசன் "தற்கொலை" செய்துகொண்டான் என்று முடிவு செய்துவிட்டன. எதற்கு இந்த அவசரம்? கோர்ட் முடிவு செய்யட்டுமே இது கொலையா இல்லை தற்கொலையா என்று. அதுவரை மீடியாக்கள் பொறுமை காப்பது நல்லது.

Saturday, May 11, 2013

மாமியார் வீட்டில் இருந்து வந்த டாக்டர் ராம்தாஸ் அதிரடி பேட்டி

ராமதாஸ் ஜாமீனில் விடுவிப்பு; ஜெயலலிதா, திருமா மீது சாடல்! ( படங்கள் ) 

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். முன்னதாக, அவருக்கு வள்ளியூர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.


வன்முறைச் சம்பவங்கள் மற்றும் காவல்துறையின் கைது நடவடிக்கை தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதாவையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனையும் ராமதாஸ் கடுமையாக சாடினார். 



மரக்காணம் கலவரம் தொடர்பாக விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில் கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு, ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட வழக்கு உள்பட 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள  ராமதாஸுக்கு ஏற்கனவே நான்கு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.


இதைத் தொடர்ந்து நேற்று மற்றொரு வழக்கிலும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் இன்று காலை திருச்சி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.


பா.ம.க.வினரை கைது செய்யாமல் இருந்திருந்தால் வன்முறைகள் நடந்திருக்காது: ராமதாஸ்

பா.ம.க.வினரை கைது செய்யாமல் இருந்திருந்தால் இந்த வன்முறைகள் எதுவும் நடந்திருக்காது என திருச்சி சிறையிலிருந்து இன்று விடுவிக்கப்பட்ட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து அவர் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து, இன்று திருச்சி சிறையிலிருந்து விடுதலையான ராமதாஸ், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது," பா.ம.க.வினரை கைது செய்யாமல் இருந்திருந்தால் இந்த வன்முறைகள் எதுவும் நடந்திருக்காது. விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டு வன்முறைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்," வரும் நாடாளுமன்ற தேர்தலில், தலித் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக முதல்வர் ஜெயலலிதா இந்த அடக்குமுறையை எங்கள் மீது ஏவி இருக்கிறார்

மாமல்லபுரத்தில் முறையான அனுமதி பெற்று விழாவை நடத்தினோம். ஆனால் விடுதலை சிறுத்தை கட்சியினர் குண்டர்கள் ஆதரவோடு திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தினர். விழாவிற்கு வந்த 4 ஆயிரம் வாகனங்களை திருப்பி அனுப்பினர். 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை கல்வீசி தாக்கினர். இதற்கு போலீசும் உடந்தை. பா.ம.க.வினருக்கோ, வன்னியர்களுக்கோ இதில் எந்தவித சம்மந்தமும் இல்லை. இதைகண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்றேன். அங்கு சென்ற பிறகுதான் போலீசார் இங்கு பேசக்கூடாது என்று தடுத்து கைது செய்தனர்.

சிறையில் வசதிகள் இல்லை

டெல்லியில் பிரதமர் வீட்டு முன்பும், சோனியா வீட்டு முன்பும், அமைச்சர்கள் வீட்டு முன்பும் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதில்லை. ஆனால் தமிழகத்தில்தான் இந்த நிலை.

விழுப்புரத்தில் கைது செய்த என்னை, போலீசார் 12 மணி நேரம் மின்சாரம் இல்லாத ஒரு மண்டபத்தில் வைத்து விட்டு அதிகாலை 4 மணிக்கு திருச்சி சிறைக்கு கொண்டு வந்து அடைத்தனர். 108 டிகிரி வெயில் கொளுத்துகிற கந்தக பூமியான திருச்சி மத்திய சிறையில் 12 நாட்கள் என்னையும், பா.ம.க.வினர் நூற்றுக்கணக்கானவர்களையும் அடைத்து கொடுமைப்படுத்தினர். சிறையில் எந்த வசதிகளும் இல்லாமல் ஒரு அறையில் படுத்து கிடந்தேன். பா.ம.க. முக்கிய நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

சிறையில் எனக்கு சன்ஸ்ட்ரோக் ஏற்பட்டு நெற்றியிலும் தலையிலும் ஈரத்துணியை வைத்து சமாளித்தேன். எங்கே மாரடைப்பு ஏற்பட்டு பத்திரிக்கையாளர்களையும், மக்களையும் வெளியில் வந்து சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். நாங்கள் ஒருபோதும் எங்கள் கட்சியினரை வன்முறையில் ஈடுபடவோ, தவறான பாதையில் செல்லவோ அனுமதிப்பதில்லை.இதற்காக எங்கள் கட்சியினருக்கு அரசியல் பயிலரங்கமே நடத்துகிறோம்.

இனிமேல் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும்...

கடந்த 6 மாதத்திற்கு முன்பு அ.தி.மு.க.வோடு பா.ம.க. கூட்டணி அமைக்கும் என்று உளவுத்துறை போலீசார் அரசுக்கு `நோட்' அனுப்பினர். அதன் பிறகு நான் இனிமேல் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் திராவிட கட்சிகளோடு பா.ம.க. இனி எக்காலத்திலும் கூட்டணி அமைக்காது என்று கூறினேன். இதனால் அரசு பா.ம.க. மீது பழிவாங்கும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

ஏற்கனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வோடு ம.தி.மு.க.வை கூட்டணியில் சேர்க்க முடிவு செய்துள்ளனர். கம்யூனிஸ்டும் அங்கு உள்ளது. இந்நிலையில் தலித் ஓட்டுகளையும் சேர்த்தால் மிகப்பெரிய வெற்றி பெறலாம் என்று நினைத்தவர்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். அதனால்தான் பா.ம.க. தலைவர் மீது வழக்கு, பத்திரிகையாளர்களிடம் பேசிய அன்புமணி மீது மூன்று வழக்கு, குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை என சட்டத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

போலீசாருக்கு நல்ல யோசனைகளைத்தான் கூறினேன்

மாமல்லபுரம் விழாவில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லாததை சுட்டிக்காட்டி பேசிய நான் அப்போது போலீசாருக்கு நல்ல யோசனைகளைத்தான் கூறினேன். ஆனால் என் மீது கூடங்குளம் போராட்டம் தொடர்பான வழக்குகளை எல்லாம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிய பிறகும் அந்த 2 வழக்குகளிலும் என்னை கைது செய்தனர். கடைசியாகத்தான் இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் கிடைத்தது. இதுபோன்ற அடக்கு முறைகளை ஏராளமான முறை சந்தித்து உள்ளோம்.

ஒரு ஆட்சி என்றால் உண்மை, நேர்மை, தூய்மை, சத்தியம், ஜனநாயகம், எதிர்கட்சிகளை மதிக்கும் தன்மை இருக்க வேண்டும். ஆனால் இந்த அரசுக்கு இல்லை. தொடர்ந்து தமிழகம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. வரலாறு கானாத வறட்சி, குடிநீர் பஞ்சம் இப்படி ஏராளமான பிரச்னைக்ள உள்ளன. கடந்த 2 ஆண்டில் எந்த பணிகளும் நடைபெறவில்லை, மக்கள் சோர்ந்து போய் உள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பெரும் தோல்வி அடையும்" என்றார். கருணாநிதிக்கு நன்றி

தொடர்ந்து பேசிய ராமதாஸிடம், தி.மு.க. தலைவர் கருணாநிதி உங்களுக்கு நாவடக்கம் தேவை என்று கூறியுள்ளாரே? எனக் கேட்டபோது,"அவர் நான் சிறையில் இருந்தபோது என்னை விடுதலை செய்யவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதற்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அதேபோன்று என்னை விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்று பதிலளித்தார்.

"இப்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பா.ம.க. பெரிய கூட்டணியில் சேரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதே?" என செய்தியாளர்கள் கேட்டபோது,"எந்த சூழ்நிலையிலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை. பா.ம.க. தலைமையில் பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி அமைப்போம். 10 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்" என பதில் அளித்தார் ராமதாஸ். 

நன்றி - ராம் தாஸ்

Friday, April 19, 2013

ராஜீவ்காந்திக்கும் டாக்டர் ராம்தாஸ்க்கும் உள்ள பகை


பாட்டாளி சொந்தங்களே!

மஞ்சள் பூ நடவடிக்கை!

மருத்துவர் .ராமதாஸ்

அலெக்சாண்டர் ஆளுநராகப் பொறுப்பேற்றவுடன் வன்னியர்களின் கோரிக்கை, போராட்டங்கள் பற்றி முழு விவரங்களை அதிகாரிகள் மூலமாகத் திரட்டினார். அச்சமயத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் ராஜீவ் காந்தியிடம் தமிழகத்தில் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் சமுதாயம் சமூக, பொருளாதார அளவில் மிகமிகப் பிற்படுத்தப்பட்டு இருப்பதையும் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இட ஒதுக்கீட்டைப் பற்றியும் எடுத்துரைத்து இருக்கிறார்


 அதைக் கேட்ட ராஜீவ் காந்தி அவருடைய அமைச்சரவையில் வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருந்த பி.வி.நரசிம்மராவிடம் வன்னியர் சங்கத்தினுடைய பொறுப்பாளர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென்று பொறுப்பை ஒப்படைத்தார்.

அதன் அடிப்படையில் நரசிம்மராவ் சென்னை வந்தபோது ஆளுநர் மாளிகையில் வன்னியர் சங்கப் பொறுப்பாளர்களாகிய எங்களை அழைத்துப் பேசினார். மீண்டும் அவருடன் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு ஐதராபாத் வரும்படி எங்களுக்கு மத்திய உளவுத்துறை ஏற்பாடு செய்தது. நாங்கள் ஐதராபாத் செல்வதற்கு அரசே எங்களுக்கு விமானப் பயணச் சீட்டு, தங்குவதற்கு இடம் ஆகியன அளிப்பதாகச் சொல்ல, நாங்கள் அதை மறுத்து எங்களுடைய சொந்தச் செலவிலேதான் செல்வோம் என்று உறுதியாக இருந்தோம்.


 அதேபோன்று ஐதராபாத் சென்று ஆளுநர் மாளிகையில் பி.வி.நரசிம்மராவைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்குமேல் பேச்சுவார்த்தை நடத்தினோம். பி.வி.நரசிம்மராவ் மீண்டும் எங்களை தில்லிக்கு வரச் சொன்னார்.  


அங்கும் அரசு செலவில் செல்ல மறுத்து எங்களுடைய சொந்தச் செலவிலே சென்று பி.வி.நரசிம்மராவ் வீட்டில் பேச்சுவார்த்தை நடத்தினோம். எங்களுடைய கோரிக்கைகளை முழுதும் கேட்டறிந்த நரசிம்மராவ், வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு கொடுக்க ஒப்புக்கொண்ட நிலையில் நாங்கள் மகிழ்ச்சியோடு அவரது வீட்டைவிட்டு வெளியே வந்து கொண்டிருந்த போது, எங்கள் எதிரிலே ஜி.கே. மூப்பனாரும், .சிதம்பரமும் உள்ளே நுழைந்தார்கள். தேர்தல் நேரத்தில் ஒரு சாதிக்கு (வன்னியர்களுக்கு) இட ஒதுக்கீடு கொடுத்தால் பிற சாதியினர் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று இருவரும் நரசிம்மராவிடம் கூறி அவருடைய மனத்தை மாற்றிவிட்டார்கள்.

தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்படும் என்றும் உளவுத்துறை மூலம் எங்களுக்குச் சொல்லப்பட்டது. அல்லது வன்னியர் சங்கமே காங்கிரசோடு கூட்டணி வைத்துத் தேர்தலில் நிற்கலாம் என்றும் எங்களுக்கு ஆலோசனை சொல்லப்பட்டது


 அப்போது பெங்களூரு வந்த காங்கிரஸ் தலைவர் பூட்டாசிங் தேர்தலில் நிற்பதற்கு எத்தனை சீட்டுகள் வேண்டும்? தேர்தல் செலவுக்காக எவ்வளவு நோட்டுகள் வேண்டும்? என்றெல்லாம் எங்களிடம் ஆசை வார்த்தைகள் உளவுத் துறை மூலம் சொல்லி அனுப்பப்பட்டு, அவை எங்களுக்குச் சொல்லப்பட்டன.


இதனிடையில் வன்னியர் சங்க அவசர நிர்வாகக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டு தேர்தலைப் புறக்கணிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

1988 டிசம்பர் 12 திங்கட்கிழமை காலையில் சரண்யன் என்ற உளவுத்துறை அதிகாரி வன்னியர் சங்க நிறுவனரான என்னை, கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் சென்றார். அங்கு கவர்னர் அலெக்சாண்டர் என்னிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தார். அதை வாங்கிப் படித்ததும் நான் ஆத்திரத்தின் உச்சிக்கே போய்விட்டேன். இட ஒதுக்கீட்டுப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு ஜாதி வாரியாக ஜனத்தொகையைக் கணக்கெடுக்க பி.வி. வெங்கடகிருஷ்ணன் ..எஸ் தலைமையில் ஒரு கமிஷன் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அந்தக் காகிதத்தில் இருந்தது


 நான் கவர்னர் மாளிகையிலிருந்து உடனே திரும்பி வன்னியர் சங்கத்துடன் ஆலோசனை நடத்தினேன். அன்று மாலையே எல்டாம்ஸ் ரோட்டிலிருந்த வன்னியர் சங்கத் தலைமையகத்தில் தேர்தல் புறக்கணிப்பு நடந்தே தீருமென்று பத்திரிகைகளுக்கு அறிக்கை வெளியிட்டேன்.



நான் கவர்னரைச் சந்தித்த அடுத்த நாளே தேர்தலுக்கான தேதியும் குறிக்கப்பட்டுவிட்டது. எங்கள் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில்தான் திரிபுராவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடதுசாரி இயக்கங்களின் கூட்டு மந்திரிசபை நடந்து வந்தது. அப்போது மலைச்சாதியினர் தனிநாடு கேட்டு வன்முறையில் இறங்கினர். அங்குப் போராடியவர்களுக்கு மறைமுக ஆதரவு தந்தார் ராஜீவ் காந்தி


 மலைச் சாதியினரின் வன்முறையை அடக்குவதாகக் கூறி திரிபுராவுக்குள் ராணுவம் கொண்டுவரப்பட்டது. ராணுவத்தை வைத்துத் தேர்தல் நடத்தி காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளின் இரும்புக் கோட்டையைத் துப்பாக்கி முனையில் பிடித்தது. அதுபோன்றுதான் தமிழகத்தில் வன்னியர் போராட்டத்தை ஒடுக்கி ஆட்சியைப் பிடிக்க துணை ராணுவத்தைக் கொண்டு வந்தார் ராஜீவ் காந்தி. இது குறித்துப் பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்டபோது,

நாங்கள் ராணுவத்தைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம். எங்களிடத்தில் 25 லட்சம் இளைஞர்கள் உள்ளனர். அவர்களின் 50 லட்சம் கைகள்தான் எங்கள் ஆயுதம். ஒரு லட்சம் பேர் உயிர் கொடுக்கவும் தயார். சுயமாகச் சிந்திக்கும் மக்கள் ஊழல் ஆட்சிகளைப் புறக்கணிப்பார்கள். வோட்டுச் சாவடிக்குப் போக மாட்டார்கள்என்று கூறினேன்.

தமிழகத்துக்கு வந்த ராணுவத்தினர் மற்றும் போலீசாரால் 1988 டிசம்பர் மாதத்துக்குள்ளாகவே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வன்னியர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். வன்னியர்கள் மிகுதியாக வாழும் கிராமங்களில் போலீசாரும் ராணுவத்தினரும் அடக்குமுறையில் ஈடுபட்டதாக எண்ணற்ற புகார்கள். வேர்க்கடலை மூட்டைகளைத் திருடுவது முதல், தங்க நகைகளைப் பறிப்பதுவரை சர்வசாதாரணமாக அவர்கள் குற்றங்களைப் புரிந்தனர் என்று பத்திரிகைகள் எழுதின


 தர்மபுரி மாவட்டம் கடத்தூர் மோட்டான்குறிச்சி அருகே பொதக்காடு கிராமத்தில் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் சுப்பிரமணியம் என்பவர் இறந்து போனார். வன்னியர் சங்கத்தினர் மீது அப்போது காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் கூட்டாக மேற்கொண்ட இந்தத் தாக்குதலுக்கு மஞ்சள் பூ நடவடிக்கை (Yellow Flower operation) என்று பெயர் இட்டிருந்தனர். இதுகுறித்து 21-12-1988 தேதியிட்டஜூனியர் விகடன்பத்திரிகை பின்வருமாறு எழுதியது.

பீதிக்கு உள்ளாக்குஎன்பதுதான் போலீசுக்கும் ராணுவத்துக்கும் அரசு இப்போது கொடுத்திருக்கும் ஆணை. வன்னியர்கள் அதிகமாக உள்ள திண்டிவனம், விழுப்புரம் முதலிய தென் ஆற்காடு நகரங்களில் எங்கு பார்த்தாலும் துப்பாக்கியும் கையுமாக ரிசர்வ் போலீஸ் ரோந்து வந்து கொண்டிருப்பதால் பொது மக்களிடையே மயான அமைதி.

வன்னியர் சங்கம் 15-ம் தேதி வியாழக்கிழமைதான் பந்த் நடத்தப் போவதாக அறிவித்திருந்தது. அதே தேதியில் விவசாயிகள் சங்கமும் பந்த் நடத்தப் போவதாக அறிவித்ததால் பந்த் தேதியை 16-ம் தேதிக்கு மாற்றியது. எனினும் இந்த பந்த் தேதி மாற்றம் பல ஊர்களுக்குச் சென்று அடையாததாலும், போலீசும் ராணுவமும் சேர்ந்து ஏற்படுத்தி இருக்கும் திகிலாலும் வீதிகளில் மக்கள் நடமாட்டம் 15-ம் தேதியன்றே குறைந்துவிட்டது.

இது ஒருபுறம் இருக்க, ஊர் ஊராக கார்களில் சென்று வன்முறையைத் தூண்டினார்கள் என்று வன்னியர் சங்கத் தலைமை நிலையச் செயலாளர் குருபரன், வீரபத்ர படையாட்சி போன்றோரைக் கைது செய்ததோடு அவர்கள் வந்த டாக்சியையும் கைப்பற்றி, டாக்சி டிரைவர்களையும்கூட போலீஸ் கைது செய்தது. வன்னியர் சங்கப் பிரமுகர்களுக்குப் போராட்ட சமயத்தில் டாக்சி கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

பதற்றமும் திகிலும் சூழ்ந்த நிலையில் போராட்டத்தில் கைதானோரை ஜாமீனில் எடுக்க ஆங்காங்கே வக்கீல் குழுவை அமைக்க போனில் உத்தரவு பிறப்பித்துக் கொண்டே நடுநடுவே கிளினிக்குக்கு வரும் பேஷன்டுகளை டாக்டர் ராமதாஸ் பதற்றம் இல்லாமல் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

நீங்கள்கூட கைது செய்யப்படப் போகிறீர்கள் என்று செய்தி நிலவுகிற போது நீங்கள் எல்லோர் கண்ணிலும் படும்படி கிளினிக்கில் உட்கார்ந்திருக்கிறீர்களே? என்று ராமதாஸிடம் கேட்டதற்கு, ‘நான் கைதாவதற்கு ஆயத்தமாக இருக்கிறேன். ஜெயிலுக்குப் போக பெட்டி, படுக்கை எல்லாம் கட்டிக்கிட்டு போலீசுக்காக காத்திருக்கிறேன்என்றார் காரில் வைத்திருக்கும் பெட்டி, படுக்கைகளைக் காட்டி" இதுதான்ஜூனியர் விகடன்செய்தி.

தென் ஆற்காடு மாவட்டத்து கிராமங்கள் பலவற்றில் சி.ஆர்.பி. பட்டாளம் பயங்கரமான அடக்கு முறையைக் கட்டவிழ்த்தது. இதனால் மக்கள் ஆத்திரம் அடைந்தார்கள். அதன் காரணமாக பல இடங்களில் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து 28-12-1988 தேதியிட்டஜூனியர் விகடன்பத்திரிகையில் சுதாங்கன் என்பவர், ‘நூறு தொகுதிகளில் தேர்தல் நடப்பதில் குழப்பங்கள்என்ற தலைப்பிலான கட்டுரையில் பின்வருமாறு எழுதுகிறார்.

வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், தர்மபுரி, கிழக்குத் தஞ்சை, அரியலூர், ஜெயங்கொண்டம் போன்ற திருச்சி பகுதியிலுள்ள நூறு சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் அமைதியாக நடக்குமா, நடக்க விடப்படுமா என்பது கேள்விக்குறி.

இங்கெல்லாம் கிராமங்களில் அரசியல் தலைவர்கள் வோட்டு கேட்கவே போக இயலாது என்கிறார்கள். அவ்வளவு ஆத்திரமுடன் இருக்கிறார்கள் மக்கள்! அவர்கள் தேர்தலுக்கே தயாராக இல்லை. வோட்டுப் போடக் கட்டாயப்படுத்தினால் கலவரங்கள் நடக்கலாம். தேர்தல் புறக்கணிப்பு மட்டுமின்றி ஏதேனும் தந்திரமான முறையில் இப்பகுதிகளில் தேர்தல் நடக்க விடாமல் நிறுத்தப்படலாம்" என்பது அப்பத்திரிகை செய்தியாகும்.


துணை ராணுவமும் ஆயுதப்படை போலீசாரும் தோளில் சுமந்த துப்பாக்கிகளோடு தமிழகத் தேர்தலை நடத்தி முடித்தனர். எம்மக்களின் தேர்தல் புறக்கணிப்புகள் பல இடங்களில் காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது. பல இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு திட்டமிட்டது போலவே நடந்தேறியது. சில இடங்களில் வன்னியருக்கு ஆதரவாகப் பிற சமூகத்தினரும் தேர்தலைப் புறக்கணித்தனர். இந்தத் தேர்தல் புறக்கணிப்பால் தி.மு..வினர் ஆதாயம் அடைந்தனர். இதுகுறித்து பெ.இரவிச்சந்திரன் என்பவர், ‘வன்னியர் புறக்கணிப்பு தி.மு..வுக்குத்தான் ஆதாயம்என்ற தலைப்பில் 3-2-1989 தேதியிட்ட தராசு பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதியை இங்கு எடுத்துக் காட்டுவது பொருத்தமாக அமையும்.


வந்தவாசி தொகுதியில் 50 சதவிகித வாக்குகளே பதிவாயின. தெள்ளாறு ஒன்றியம் கொண்டையான் குப்பம் கிராம வாக்குச் சாவடியில் ஒரு வாக்கு மட்டுமே பதிவானது. இவ்வூரில் வன்னியர் அல்லாதோரும் வன்னியருக்கு ஆதரவாகத் தேர்தலைப் புறக்கணித்தனர்.

ராணிப்பேட்டைத் தொகுதியில் உள்ள புளியந்தாங்களில் 103 வோட்டுகளே பதிவாயின. அணைக்கட்டு தொகுதியில் இலவம்பாடி வாக்குச் சாவடியின் எதிரே கும்பல் கும்பலாகதண்ணீர் தண்ணீர்ஸ்டைலில் வன்னியர்கள் கூடி இருந்தனர். ஆனால் ஒருவர்கூட பகல் 12 மணிவரை வாக்களிக்கவில்லை. வாக்களிக்கச் சென்ற ஒரு பெண்ணை அவளின் கணவன் முடியைப் பிடித்து இழுத்துச் சென்றார்



 திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் கும்பலாக வந்தனர். வாக்களித்துவிட்டு வெளியே வந்த அவர்களைச் சந்தித்தோம். வன்னியர்கள் அதிகம் இல்லாத நகர்ப் புறங்களில் வன்னியர் சங்கத்தினர் செல்லாத வாக்களிப்பது என முடிவெடுத்தோம். அதன்படி நடந்து கொண்டோம்" என்றனர் அவர்கள்.

தென் ஆற்காட்டில் வானூர் தொகுதியில்தான் வாக்குப்பதிவு குறைவாக இருந்தது. 35 சதவிகித வாக்குகளே அங்கு பதிவாயின. அந்தத் தொகுதியில் ஒரு சில இடங்களில் மோதல்கள் ஏற்பட்டன.

மேல்மலையனூர், செஞ்சி, திண்டிவனம், நெல்லிக்குப்பம், முகையூர், விருத்தாசலம், புவனகிரி, மங்களூர், குறிஞ்சிப்பாடி போன்ற தொகுதிகளில் பல இடங்களில் வாக்குப்பதிவு 25 சதவிகிதம் மட்டுமே நான் சென்ற சமயத்தில் நடந்திருந்தது.

இந்தத் தேர்தலில் வன்னியரின் தேர்தல் புறக்கணிப்பு கள்ள வோட்டுக்கு அதிகமாக இடம் கொடுத்து உள்ளது. பெரும்பான்மையான இடங்களில் அதிகாரிகளுக்குத் தெரிந்தே தி.மு..வினர் கள்ள வோட்டுப் போட்டனர். 16, 17 வயது இளைஞர்கள் எல்லாம் வாக்களித்த கொடுமை திருவண்ணாமலை போன்ற நகரங்களில் நடந்தது.

எது எப்படி இருப்பினும் இந்தத் தேர்தல் புறக்கணிப்பு வன்னியரைப் பொறுத்தவரை வெற்றியே என்றாலும் அதனால் தி.மு..வே ஆதாயம் அடைந்தது" என்பது அப்பத்திரிகை தரும் கணிப்பாகும். இதே நிலைதான் 1989 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வட மாவட்டங்கள் முழுவதிலும் காணப்பட்டது. எங்களைப் பொறுத்தவரை வன்னியர் சங்கத்தின் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் வெற்றிப் போராட்டமாக அமைந்தது.

(அனுபவம் தொடரும்...)


நன்றி - கல்கி