Thursday, December 13, 2012

நீதானே என் பொன்வசந்தம்


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmCJ11rLaPQLmxdUVDVOPwJsZf66pw3hVzsriU8om_UjwH3qMJcxRH5xsyt5fTXWd1ik-Pp7yWcsVKUvgxiT19NLlDYdqCnljM9pxjB-n09V7Ukfg-ccN7g1CjlwtaDvkfO6PvPM8GTdm-/s1600/Neethane-En-Ponvasantham-jeeva-samantha-gaiutham-menon.jpg


"இது காதலின் பொன்வசந்தம்!"

கி.கார்த்திகேயன்





1. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பேட்டி 


'' 'நீதானே என் பொன்வசந்தம்’ ஷூட்டிங் முடிஞ் சிருச்சு... 'கதை கேட்டப்போ இவ்ளோ ஃபீல் பண்ணலை பிரதர். இப்போ யோசிச்சா என் வாழ்க்கையின் காதல் எபிசோடுல மறுபடியும் வாழ்ந்துட்டு வந்த ஃபீலிங்’னு சொன்னார் ஜீவா. எடிட்டிங் டேபிள்ல ஆண்டனி பார்த்துட்டு, 'ஜி... பழசுலாம் ஞாபகம் வருது... நாளைக்கு எடிட் வெச்சுக்கலாமா?’னு மெல்ட் ஆகிட்டார்.


 எடிட்டிங்ல பார்க்கும்போது எனக்கும் சட்டுனு பிளாங்க் ஆகிடுது. லவ் இஸ் ஃப்யூட்டிஃபுல்!' - காதலும் காதல் நிமித்தமுமாகப் பேசத் தொடங்குகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். கோடம்பாக்கத்தின் 'லவ் ஸ்பெஷல்’ இயக்குநர். 'அலைபாயுதே’, இளையராஜா, கமல், அகிரா குரோ சோவா, அஜித், சசிகுமார், ஆர்யா, சமந்தா என்றெல் லாம் நீண்ட உரையாடலில் தனது வாழ்வின் ரியல் காதல்பற்றிப் பேச்சு வந்தபோது ஒரு சஸ்பென்ஸ் வைத்தார் கௌதம். அது இறுதியில்...


 ''முதல் பார்வையிலேயே காதல், பிரிந்த காதலியைத் தேடிச் செல்லும் காதலன், தனக்குத்தானே குழம்பும் காதலி... இதெல்லாம் 'ழிணிறி’-யிலும் (நீதானே என் பொன்வசந்தம்) இருக்கும் தானே?'



''சந்தேகமே வேண்டாம். என் காதல் படங்களின் ஸ்ட்ரக்சர்ல பெருசா எந்த மாற்றமும் இருக்காது. ஆனா, மொமன்ட்ஸ்தான் விஷயம். சின்னச் சின்ன தருணங் களில்தான் காதல் ஒளிஞ்சிருக்கும். அந்தத் தருணங்களில்தான் நான் லைஃப் சேர்க்கிறேன். 'விடிவி’-ல த்ரிஷா ரொம்பக் குழம்புவாங்க. ஆனா, இதுல சமந்தா கேரக்டர் அப்படி இல்லை. ரொம்ப போல்டு. ரொம்ப க்ளியர். சும்மா லவ்வர் பின்னாடி வால் பிடிச்சுட்டே போறவ இல்லை.


 'சிந்து பைரவி’ சுஹாசினி, 'புதுமைப் பெண்’ ரேவதியோட ஒப்பிடாதீங்க. ஆனா, காதலிகளில் சமந்தா கேரக்டர், ஒரு புதுமைப் பெண். சாய்ந்து சாய்ந்து சமந்தா பார்க்கிறதே தனி அழகு... ஜீவா கண்ல எப்பவும் காதல் நதி ஓடிட்டே இருக்கும். க்ளைமாக்ஸ்ல சமந்தா கேரக்டர் எடுக்கும் முடிவு, அத்தனை வருஷப் பிரிவுக்கு அப்புறம் ஜீவாவும் சமந்தாவும் பேசிக்கிற விஷயங்கள்... சும்மா காலி ஆயிடுவீங்க!''



''உங்களுக்குப் பிடிச்ச உலக லவ் கிளாஸிக் படங்கள் என்னென்ன?''



''இதுக்கு நேரடியா 'எந்தெந்தப் படத்துல இருந்து சீன் பிடிக்கிறீங்க?’னு கேட்ர லாமே. உலக சினிமாக்களாப் பார்த்து கதை, சீன்லாம் உருவிப் படம் எடுக்கிறேன்னு என்னைப்பத்தி வெளியே ஒரு பேச்சு இருக்குன்னு எனக்கும் தெரியும். ஆனா, நல்லாக் கவனிச்சீங்கன்னா புரியும், 'அலைபாயுதே’ படத்துல வரும் 'எவனோ ஒருவன் வாசிக்கிறான்’ பாட்டுதான் என் காதல் படங்களின் இன்ஸ்பி ரேஷன்.



ரெண்டு பேருக்குள் காதல், சின்ன மோதல், பிரிவு, தேடிப் போறான் லவ்வர். ஹேப்பி அல்லது சோகமான எண்ட். காதல்ல அவ்ளோதான் என் டிராவல் இருக்கும். மணி சார் படங்களைவிடவா நமக்கு வேற காதல்படங்கள் வேணும்? 'மௌன ராகம்’ படத்தின் கார்த்திக் போர்ஷன், 'இதயத்தைத் திருடாதே’, 'அலைபாயுதே’, ராஜ்கபூர் நடிச்ச 'ஆவாரா’... இதெல்லாம்தான் எனக்குப் பிடிச்ச லவ் கிளாஸிக்ஸ்.



 மத்தபடி உலக சினிமாக்கள் பார்க்கிற பழக்கமே எனக்கு இல்லை. அகிரா குரோசோவாவின் ட்ரீட்மென்ட்பத்தி தெரியும். ஆனா, அவரோட 'ரோஷமான்’ உட்பட ஒரு படத்தைக்கூடப் பார்த்தது இல்லை. நான் உணர்ந்ததை, அனுபவிச்சதை வெவ்வேறு சம்பவங்கள் மூலமா சினிமா பண்றேன். 'எவனோ ஒருவன் வாசிக்கிறான்’ பாட்டு எனக்குள் உண்டாக்கின எமோஷனுக்கு இன்னும் தாராளமா பதினஞ்சு படங்கள் எடுப்பேன்!''



''உங்க இயக்கத்தில் நடிக்காத ஹீரோக்கள் பத்தி கமென்ட்ஸ் சொல்லுங்க?''



''அஜித்... அவருக்கு இருக்கிற மாஸ்... சான்ஸே இல்லை. அவருக்குக் கிடைக்கிற ஓப்பனிங் என்னைப் பிரமிப்படையவைக்கும். இத்தனைக்கும் அவரோட ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏத்த ஒரு படம்கூட அவருக்குக் கிடைக்கலை. 'உதயம்’ல நாகார்ஜுனா சைக்கிள் செயினைப் பிச்சு இழுக்கிற மாதிரியோ, 'பாட்ஷா’ல தங்கச்சி மேல கைவெச்சதும் ரஜினி தண்ணி பம்ப்பை உடைச்சு அடிக்கிற மாதிரியோ ஒரு பவர்ஃபுல் சீன்கூட அஜித்துக்கு இன்னும் சிக்கலை.



விஜய்னா டான்ஸ்தான். ஒவ்வொரு பாட்டிலும் ஏதோ ஒரு ஸ்டெப்ல இழுத்துப் பிடிச்சுடுறார். அவரைவெச்சு முழுக்க முழுக்க ஒரு டான்ஸ் ஃபிலிமே பண்ணலாம். 'பாஸ்’ படத்துல ஆர்யா காமெடி பண்ணியிருந்தது ரொம்பப் பிடிச் சிருந்தது. ஹீரோயின்கள்ல அஞ்சலி அசரடிக்கிறாங்க!''




''அஜித், விஜய் பத்தி இவ்ளோ நல்ல ஒப்பீனியன் சொல்றீங்க... ஆனா, 'துப்பறியும் ஆனந்த்’ல அஜித், 'யோஹன்’ல விஜய்... உங்ககூட சேர்ந்து பண்ண வேண்டிய புராஜெக்ட்ல இருந்து ரெண்டு பேரும் விலகிட்டாங்களே... ஏன்?''



'' 'துப்பறியும் ஆனந்த்’ 1920-கள்ல நடக்கும் கதை. அதுக்கான ஸ்க்ரிப்ட் வேலைகளுக்கே கிட்டத்தட்ட ஒரு வருஷம் தேவைப்படும். இப்போ அதுக்கான நேரம் இல்லை. அதனால அஜித்துடன் படம் பண்ண முடியலை. சூர்யாவை வெச்சுப் பண்ணலாம்னு 2013 மார்ச்ல இருந்து அவர்கிட்ட டேட்ஸ் வாங்கி அட்வான்ஸும் கொடுத்துட்டேன்.



 ஆனா, 'துப்பறியும் ஆனந்த்’ ஸ்க்ரிப்ட் இல்லை. ஆக்ஷனும் காதலும் கலந்த ஒரு ஸ்க்ரிப்ட் அவருக்காகப் பண்ணிட்டு இருக் கேன். 'யோஹன்’ முழுக்க முழுக்க ஆக்ஷன் படம். 'எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா, ரொம்ப இங்கிலீஷ் டைப் படமா இருக்கு. இன்னும் நம்ம ஸ்டைல் சேர்த்து கொஞ்சம் தமிழாப் பண்ணலாம்’னு சொன்னார் விஜய். அதனால அந்தப் படம் பண்ண முடியலை. இப்போ அதே ஸ்க்ரிப்ட்ல மகேஷ்பாபுவை வெச்சு தெலுங்கு, தமிழ், இந்தினு மூணு மொழி யிலும் 'யோஹன்’ பண்றேன். இதைத் தவிர அஜித், விஜய்கூட படம் பண்ணாததுக்கு வேற எந்தக் காரணமும் இல்லை!''



''நீங்கள் இயக்க விரும்பும் ஹீரோ?''



''எனி டே, கமல்ஹாசன். மறுபடியும் மறுபடியும் எத்தனை தடவை வேணும்னாலும் அவர்கூடப் படம் பண்ணுவேன். அப்புறம் ரஜினி சார். அவரோட ஸ்டைல், என்னோட மேக்கிங்ல ஒரு படம் பண்ணணும்னு ரொம்ப ஆசை. ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார்னு சீனியர் இயக்குநர்களை விட்டு அடுத்த செட் இயக்குநர்களுக்குப் படம் பண்ணலாம்னு அவர் வந்தா, முதல் சாய்ஸ் நானா இருக்கணும்னு ஆசைப்படுறேன்!''




''உங்களுக்கு அப்புறம் வந்த இயக்குநர்களில் யார்லாம் உங்களை இம்ப்ரெஸ் பண்ணியிருக்காங்க?''



''வெற்றி மாறன். ஆனா, எனக்கு 'ஆடுகளம்’ படத்தைவிட 'பொல்லாதவன்’தான் ரொம்பப் பிடிச்சது. வட சென்னை, பைக்னு படத்துல இருக்கிற சின்னச் சின்ன விஷயங்களைக்கூடப் பிரமாதமா பிரசென்ட் பண்ணியிருந்தார். 'சுப்ரமணியபுரம்’ சசிகுமார் ரொம்பப் பிடிச்சது. எந்த இயக்குநரும் முதல் படத்திலேயே அவ்வளவு ஷாக் கொடுக்கலை.



 ஆனா, இப்போ சசிகுமார் நடிக்கப்போயிட்டாரேனு வருத்தமா இருக்கு. ரொம்ப அழகா, ரசனையாக் கவர்ந்தார் 'எங்கே யும் எப்போதும்’ சரவணன். அவ்வளவு சீன், அவ்வளவு டீடெய்ல்ஸ் இருந்தும் தெளிவான படமா இருந்தது. ரொம்ப ராவா இருந்த 'ஆரண்ய காண்டம்’ நல்ல க்ரிப்பா இருந்தது. ஆனா, தியாகராஜன் குமாரராஜா அடுத்து படம் எதுவும் பண்ணலையா?''



''அஜித் நடிச்ச 'மங்காத்தா’வும் ஹிட். மாஸ் ஹீரோ இல்லாத 'எங்கேயும் எப்போதும்’ படமும் ஹிட். சினிமா, ஹீரோக்கள் கையிலா... இயக்குநர்கள் கையிலா?''



''எந்தப் படமா இருந்தாலும் 'கன்டென்ட்’தான் கிங். 'மங்காத்தா’ல அஜித்தான் ராஜா. 'எங்கேயும் எப்போதும்’ல திரைக்கதைதான் ராஜா. கன்டென்ட் இல்லாம என்ன ஷோ பண்ணாலும், வேலைக்கு ஆகாது!''



''ஒவ்வொரு படத்திலும் உங்கள் ரியல் காதலைத்தான் வேறவேற வெர்ஷன்ல சொல்றீங்க... அந்தக் காதலைப் பத்திக் கொஞ்சம் பேசலாமே?''



''ம்ம்ம்... இப்போ பேசினா பிரச்னை ஆகிருமே! 'விடிவி’ க்ளைமாக்ஸ்ல 'என் நம்பர் எப்படிக் கிடைச்சது?’னு த்ரிஷா கேட்கிறப்போ, 'என் அடுத்த படத்தில் சொல்றேன்’னு சிம்பு சொல்வார். அப்படி இந்தக் கேள்விக்கான பதிலையும் அடுத்த பேட்டியில சொல்லட்டுமா?''




நன்றி - விகடன்




2. ஹீரோயின் சமந்தா ஓபன்டாக் பேட்டி

கௌதம்மேனன்... க்யூட் கிரியேட்டர்!

அரவிந்தன்

சான்ஸே இல்ல... செம க்யூட்டாகிவிட்ட சமந்தாவின் முன்பு, ‘நீதானே என் பொன்வசந்தம்என்று முழந்தாழிட்டு ப்ரஃபோஸ் பண்ணத் தோன்றுகிறது. அவ்ளோ அழகு. நமது கேள்விகளுக்கு சமந்தாவைவிட அவரது கண்களே அதிகம் பதில் சொல்கின்றன!


நீதானே என் பொன்வசந்தம்?


நான் நடிச்ச படங்களிலே ப்ரிலியன்ட் படம்னா அதுநீதானே என் பொன் வசந்தம்தான். யதார்த்தமான காதலும், கதையும் கைகோத்திருக்கிற படம் இது. ‘விண்ணைத்தாண்டி வருவாயாஜெஸ்ஸி கேரக்டர் இளைஞர் மத்தியில் எனக்கு க்ரேஸ்ஃபுல் இடத்தைப் பெற்றுத் தந்தது எனில், ‘நீதானே என் பொன்வசந்தம்அதை இன்னும் ஸ்ட்ரங்காகச் செய்யும். எனக்கு தமிழில் முதல் இரண்டு படங்கள் சரியா போகலை. அதையும் தாண்டி ரீ-என்ட்ரிக்கு எனக்குநீதானே என் பொன்வசந்தம்கைகொடுக்கும்!"


என்ன கதை?


ஒரு மனுஷனுடைய வாழ்க்கையில நாலு ஸ்டேஜ்ல நடக்கிற முக்கியமான ஹைலைட்ஸ்தான் கதை. படம் வரட்டும். பார்க்கறவங்க ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பாங்க! கௌதம்மேனனை சந்தோஷமாய் சபிக்கப் போறாங்க."
ஜீவா?

யூத் ஹீரோக்களில் பளிச்சுன்னு முன்னேற்றம் காட்டுபவர் ஜீவா. எந்தப் பாத்திரங்களில் இருந்தாலும் அதன் வடிவத்துக்கு மாறிடும் தண்ணீர் போல ஜீவா பாத்திரத்துக்கு ஏற்ப தம்மைத் தகவமைச்சுக்கிறார். கௌதம்மேனன் படங்களில் ஹீரோ - ஹீரோயின் ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி அள்ளிக்கத் தோணும். அதுநீதானே என் பொன்வசந்தம்படத்திலும் உண்டு. வாய்ப்புக் கிடைத்தால் மீண்டும் ஜீவாவோடு நடிக்கத் தயார்!"
இளையராஜா மியூஸிக்?



நான் அவரோட ரசிகையாவே மாறிட்டேன். ஒவ்வொரு ட்யூனும் ஹாட் வார்மிங். யூத்களின் ஆழ்மனசைத் தொடுகிற ட்யூன். ‘சற்றுமுன்பாடல் தூக்கத்துல எனக்குள்ள சுத்திக்கிட்டே இருக்கு. எண்பதுகளில் இளையராஜா சாங்ஸைக் கேட்பதுபோல இருக்கு. பாடல்கள் ஷூட் பண்ணும்போது ஸ்க்ரிப்ட்டோடு என்னை அறியாமல் ஜெல் ஆயிட்டேன்! ரொம்ப நாளைக்குப் பிறகு படத்துல பக்கவா ஒரு க்ளைமாக்ஸ் பாட்டு வந்திருக்கு!"


முன்பைவிட க்யூட் ஆயிட்டீங்களே?

காரணம், கௌதம்மேனன். இவர், கேரக்டருக்கு ஏத்த மாதிரி நடிகர்களை மோல்ட் பண்ண மாட்டார். ஆர்ட்டிஸ்ட்டுக்குள்ள இருக்கிற பர்ஸனாலிட்டியை உண்மையா வெளியே கொண்டு வர்றதுக்கு முயற்சி பண்ணுவார். என் விஷயத்துலயும் அதுதான் நடந்தது. அதான் உங்கள் கண்களுக்கு நான் முன்பைவிட க்யூட்டா தெரியறேன்! கௌதம்மேனன் ஒரு க்யூட் கிரியேட்டர். அவர் செதுக்கும் கேரக்டரும் அவருக்குள்ள இருக்கற ரைட்டரும் அவர் உருவாக்கும் கேரக்டர்மேல ஒருவித ஈடுபாட்டை உண்டு பண்ணிவிடும். ‘நீங்க க்யூட் ஆயிட்டீங்கன்னு என்னைப் பார்த்து நீங்க சொன்னதுகூட கௌதம்மேனன் செய்த மேஜிக்தான்!"



கௌதம்மேனன் புகழ் அதிகமாகப் பாடறீங்களா?
பாஸ்... இது ரொம்ப கம்மி. கௌதம்மேனனுக்கு நான் வெச்சுருக்கற பேர் யூத் என்சைக்ளோபீடியா. யூத்களின் லாங்வேஜ்லேர்ந்து அவங்களோட லேட்டஸ்ட் ஸ்டைல் வரைக்கும் அத்தனை அப்டேட்டா இருப்பார். எனக்கு ஆச்சர்யமாய் இருக்கும். ஸ்பாட்ல கௌதம்மேனன் ஸ்கிரிப்ட்டை இம்ப்ரூவ் பண்ணும்போது ஒரு மேஜிக் பாக்கறது போல ஜிவ்வுன்னு இருக்கும் தெரியுமா? இவரோட படங்கள்ல நடிக்கும் போது நடிக்கறது போலவே இருக்காது. வாழறதுபோல இருக்கும். அதான் கௌதம் மேனன் ஸ்பெஷல்!"


சமர்த்தாகப் பேசுகிறார் சமந்தா!


 நன்றி - கல்கி  




நீதானே என் பொன்வசந்தம்


இசை: இளையராஜா  பாடல்கள்: நா.முத்துக்குமார்


வெளியீடு: சோனி மியூஸிக் விலை; 99



ளையராஜா - கௌதம் வாசுதேவ் மேனன் - நா.முத்துக்குமார்... பிரமாண்ட எதிர்பார்ப்புக் கிளப்பியிருக்கும்  ஆல்பம். 'வழக்கமான தொனி இருக்கக் கூடாது... இன்றைய தலைமுறை ரசிகர்களையும் கவர வேண்டும்.’ இந்த இரண்டு நிர்பந்தங்களையும் கவனமாகக் கடந்திருக்கிறார்  இளையராஜா.



'சாய்ந்து சாய்ந்து...’ பாடல்... மிக ரசனையான கம்போசிஷன். கிடாரின் முதல் மீட்டலிலேயே இரவின் ரம்மியத்துக்கு நம்மைக் கடத்தும் இசை, 'என் தந்தை, தோழன் ஒன்றான ஆணை நான் கண்டுகொண்டேன்...’ ரம்யாவின் குரலில் காதல் வருடல். 80-களின் 'ராஜா’ சாயலோடு மனதை வருடிச் செல்கிறது 'காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன்...’ பாடல். அட... காதல் குறித்த வன்உணர்வுகளைக் காதலி குமுறுகிறாள் 'முதல் முறை...’ பாடலில். சுனிதி சௌஹான் குரலில் கோபம், ஆதங்கம், வெறுப்பு அனைத்து உணர்வுகளும் காதல் கலந்து எட்டிப் பார்க்கிறது.



'வானம் மெள்ளக் கீழிறங்கி வந்தாடுதே...’ பாடலில் இளையராஜா, பெலா சென்டே குரல்களில் குதூகல உற்சாகம். இரு வித்தியாச டோன்களில் ஏகத்துக்கும் எனர்ஜி ஏற்றுகிறது 'புடிக்கல மாமு...’ பாடல்.



முதல் நொடியிலேயே பிடித்துவிடுகிறது 'என்னோடு வா வா...’ பாடல். ஆல்பத்தின் மெஸ்மரைஸிங் மெலடி. இடையிடையே ஹைபிட்ச் உற்சாகம்கொள்ளும் இசை, பிறகு மென்மையாகக் காது மடல் வருடுகிறது. 'காதலுக்கு இலக்கணமே... தன்னால் வரும் சின்னச் சின்ன தலைக்கனமே!’ குறும்பு வரிகளில் மெலடிக்கு அழகு சேர்க்கிறார் நா.முத்துக்குமார்.



மிகக் குறைந்த அளவு வாத்தியங் களைக்கொண்ட பாடல். ஆனால், அந்தத் தொனியே இல்லாமல் ராக் பேண்ட் பாடல்போல அதிரடிக்கிறது 'பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா...’ பாடல். 'சற்று முன்பு’ பாடலில் 'ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைத்தானடா... தூங்கிப் போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா?’ என ரம்யாவின் குரலில் ஒரு காதலியின் துயரம்... அவ்வளவு அழுத்தம்.



இந்தத் தலைமுறை ரசிகர்களுக்கான ராஜா ஆல்பம்.


Rate this article 

 நன்றி - சினிமா விகடன் 




3. ஹீரோயின் சம்ந்தா பேட்டி  

மிழ், தெலுங்கில் 'மோஸ்ட் வான்டட் நடிகை’... சருமப் பாதிப்பு, வெயிலில் முகம் காட்டக் கூடாது, மணிரத் னத்தின் 'கடல்,’ ஷங்கரின் 'ஐ’ படங்களில் இருந்து காரணம் சொல்லாமல் விலகினார்... என இந்த அழகுப் பெண்ணைச் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள். ஆனால், சந்தித்தால் செம சமத்தாகப் பேசுகிறார் சமந்தா!
 




சமந்தாவுக்கு என்ன ஆச்சு?'' 

 
''ஹைய்யோ, பெருசா எதுவும் இல்லை. இம்யூனிட்டி (நோய் எதிர்ப்புச் சக்தி) குறைஞ்சிடுச்சு. ரெண்டு மாசம் பெட் ரெஸ்ட். கொஞ்சம் முகம் டல் ஆகிருச்சு. அதான் 'கடல்’, 'ஐ’ படங்களில் நடிக்க முடியாமப்போச்சு. மிஸ் பண்ணிட்டோம்னு மனசுக்குள்ள ஃபீலிங்ஸ்தான். ஆனா, இப்போ அதுக்கெல்லாம் சேர்த்துவெச்சு, தமிழ், தெலுங்குனு நாலு மாசத்துல நாலு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகப்போகுது. தமிழ்ல அடுத்து லிங்குசாமி டைரக்ஷன்ல சூர்யாவுடன் நடிக்கிறேன். நிச்சயம் என் கேரியர் சூப்பரா இருக்கும்!''


'' 'நீதானே என் பொன்வசந்தம்’ டிரெய்லர் க்யூட். ஆனா, 'வி.டி.வி.’ ஜெஸ்ஸியை 'என்.இ.பி.’ நித்யா பீட் பண்ண முடியுமா?'' 



''நிச்சயமா! ஜெஸ்ஸியை விட நித்யாவுக்கு பெரிய கேன்வாஸ் கொடுத்திருக்கார் கௌதம் சார். சொல்லப்போனா, 'வி.டி.வி’-யைவிட 'என்.இ.பி.’ உங்க மனசுக்கு இன்னும் நெருக்கமா இருக்கும். படத்தின் ஏதோ ஒரு அஞ்சு நிமிஷம் உங்க வாழ்க்கையில நடந்திருக்கும். எனக்கும் என் மேக்கப் அசிஸ்டென்ட், காஸ்ட்யூமர்னு என் கூட இருந்தவங்களுக்கும் அந்த ஃபீல் கிடைச்சது!''



''இப்படி ஒரு முழு ரொமான்டிக் சப்ஜெக்ட்ல ஜீவா நடிக்கிறது புதுசு. அவரை நீங்க ஈஸியா ஓவர்டேக் பண்ணியிருப்பீங்களே?'' 



''அட போங்க பாஸ்... ஜீவா கூட ரொமான்ஸ் படம் பண்றது கஷ்டம். எமோஷன், சென்டிமென்ட் சீனுக்கு முன்னாடி நான் மூணு நாலு மணி நேரம் பயங்கரமா ஹோம் வொர்க் பண்ணிட்டு கேமரா முன்னாடி நிப்பேன். ஆனா, டைரக்டர் ஆக்ஷன் சொல்றதுக்குள்ள சின்னதாக் கண்ணடிச்சு மொத்த மூடையும் மாத்தி சிரிக்கவெச்சிடுவார் ஜீவா. அதே நேரம், அவர் மட்டும் நல்ல பிள்ளையா கண்ணு முழுக்கக் காதலோட பார்த்துட்டு நிப்பாரு. ஸ்வீட் ராஸ்கல். அவர்கூட காமெடிப் படம் பண்றதுன்னா புகுந்து விளையாடலாம்!''




''சமந்தாவோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் யாரு?'' 



''காஜல் அகர்வால். 'பிருந்தாவனம்’ தெலுங்குப் படத்தில் சேர்ந்து நடிச்சப்போ, ரொம்ப க்ளோஸ் ஆகிட்டோம். அவ எனக்கு காஜ். நான் அவளுக்கு சாம். ரெண்டு பேரும் அரட்டை அடிக்க ஆரம்பிச்சா, நேரம் போறதே தெரியாது. ஆனா, அப்போ சினிமா பத்திப் பேசவே மாட்டோம்!''


''சமந்தா செய்கிற நல்ல விஷயம்?'' 



''எதுக்கும் ஃபீல் பண்ணாம நம்மால முடிஞ்சதைப் பண்ணணும்னு நினைப்பேன். 'பிரதியுஷா’னு ஒரு ஃபவுண்டேஷன் ஆரம்பிச்சிருக்கேன். ஹீமோபிலியா, தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட அறுநூறு குழந்தைகளைக் கவனிச்சுக்கிறேன்.''


''சமந்தாவுக்குப் பிடிச்ச நடிகை?'' 


''அப்ப கஜோல். இப்ப அஞ்சலி. எனக்கு கஜோல் மாதிரி இருக்கணும்னு ஆசை. செமத்தியா நடிச்சாங்க. சரியான டைமிங்ல சினிமாவை விட்டுட்டு குடும்பத்துல செட்டில் ஆனாங்க. அந்த சிம்ப்ளிசிட்டி... சிம்ப்ளி சூப்பர். 'தமிழ் எம்.ஏ’, 'அங்காடித் தெரு’, 'எங்கேயும் எப்போதும்’ படங்கள்ல அஞ்சலியை ரொம்பப் பிடிச்சது. ரொம்ப ஷார்ப். ரொம்ப திறமையான நடிகை. அஞ்சலியோட ரசிகை நான்!''



''சமந்தாவின் நேர்மைக்கு ஒரு சின்ன டெஸ்ட்... உங்களுக்குக் காதல் பூத்த தருணம் எது?'' 



''உண்மையைச் சொல்லியே ஆகணுமா? ம்ம்... எட்டாவது படிக்கிறப்போ ரெண்டு, மூணு பேர் மேல லவ் வந்துச்சு. பப்பி லவ். அப்புறம்... ஹலோ... நான் ஒரு பொண்ணுங்க... எல்லாத்தையும் உங்ககிட்ட ஓப்பனா சொல்ல முடியுமா? கௌம்புங்க... கௌம்புங்க!''

நன்றி - விகடன்

என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி

விகடன் மேடை

வாசகர் கேள்விகள்... கவிப்பேரரசு வைரமுத்து பதில்கள்!
படம்: ரவிவர்மன்
ஜி.தியாகு, திருத்துறைப்பூண்டி.


''எம்.ஜி.ஆரோடு உங்களுக்கு நெருக்கம் இருந்ததா?'' 



''1984 ஒரு 'முகூர்த்த’ மாதத்தின் அதிகாலை 4.30 மணி.


பாரதிராஜாவின் புதுமனை புகுவிழா.


கட்டிய பட்டு வேட்டியோடு கட்டிய பசுமாட்டை அவர் வீட்டுக்குள் இழுத்துச்செல்லும் போது, பாதுகாப்பு வாகனங்களால் பரபரப்பானது தெரு.
யாரும் எதிர்பார்க்கவில்லை.


தன் துணைவியார் வி.என்.ஜானகியோடு வெள்ளைத் தங்கமாய் வீட்டுக்குள் நுழைகிறார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.


பதற்றத்தில் புது வீடு படபடக்கிறது. குடும்ப உறுப்பினர்கள், வேலைக்காரர்கள் தவிர யாரும் இல்லை வீட்டில்.


கூடத்தில் முதலமைச்சரை அமர்த்திவிட்டு, பசுமாட்டை இழுத்துக்கொண்டு பால் கொண்டுவர ஓடுகிறார்கள் பாரதிராஜா தம்பதி. என் காதுக்குள் சொல்லிவிட்டுப் போகிறார் பாரதிராஜா:


'எம்.ஜி.ஆருக்குக் கம்பெனி கொடுங்கள்.’

அப்போது எம்.ஜி.ஆருக்கு என்னை யாரென்றே தெரியாது. என் பெயர் வைரமுத்து என்று சொல்லிக்கொள்ளவும் தயக்கமெனக்கு. சோபாவில் அவர் பக்கத்தில் உட்கார்ந்தேன்; ஜானகி அம்மையார் தனி நாற்காலியில்.


என் காதலுக்குரிய கதாநாயகனை அன்றுதான் அணுக்கத்தில் பார்க்கிறேன்.
இந்த ரோஜா விரல்களா வாள் சுழற்றியவை? மந்திரி குமாரியின் வீரமோகனை - குலேபகாவலியின் தாசனை - மகாதேவியின் வல்லபனை - மதுரை வீரனின் வீரனை - சக்கரவர்த்தித் திருமகளின் உதய சூரியனை - நாடோடி மன்னனின் வீராங்கனை, மார்த்தாண்டனை - ஆயிரத்தில் ஒருவனின் மணிமாறனை அவருக்குள் தேடித் தேடி ரசித்ததில் ஏழு நிமிடங்கள் கழிந்துபோயின.


என்னோடு அவரும் பேசவில்லை;


அவரோடு நானும் பேசவில்லை. அதற்குள் பால் வந்துவிட்டது; எழுந்துகொண்டேன்.

பிறகு, சில விருது மேடைகளிலும், ஒரு படத் தொடக்க விழாவிலும், ஒரு படக் காட்சியிலும் அவரைச் சந்தித்தேன்.

இவ்வளவுதான் எம்.ஜி.ஆருக்கும் எனக்குமான அணுக்கம்!''


பா.செல்வி, கள்ளக்குறிச்சி.


 ''அடிப்படைத் தமிழறிவைக் குழந்தைகளுக்கு எப்படி ஊட்டுவது?'' 


''எண்களோடு எண்ணங்களை இணைத்துக் கற்றுக்கொடுங்கள்; அப்படியே நெஞ்சில் ஒட்டும்.


ஒன்று: வானம் - ஒன்று.
இரண்டு: ஆண், பெண் - சாதி இரண்டு.


மூன்று: இயல், இசை, நாடகம்- தமிழ் மூன்று.


நான்கு: வடக்கிலிருந்து வருவது வாடை, தெற்கிலிருந்து வீசுவது தென்றல், கிழக்கிலிருந்து தீண்டுவது கொண்டல், மேற்கிலிருந்து வாட்டுவது கோடை-தமிழன் காற்றுக்கு வைத்த பெயர் நான்கு.


ஐந்து: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி-இலக்கணங்கள் ஐந்து.


ஆறு: இனிப்பு, கைப்பு, புளிப்பு, உறைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு-சுவைகள் ஆறு.


ஏழு: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்-தமிழ்ப் பண்கள் ஏழு.


எட்டு: நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி-மெய்ப்பாடுகள் எட்டு.


ஒன்பது: கண்ணிரண்டு, காதிரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று, முன்னொன்று, பின்னொன்று-உடலின் வாசல்கள் ஒன்பது.


இப்படி எண்களுக்குப் பக்கத்தில் எண்ணங்களைப் பொருத்தித் தமிழியம் கற்றுக்கொடுக்க முடியுமா என்று கருதிப்பாருங்கள் தமிழாசிரியப் பெருமக்களே!''


பாரதி செழியன், சென்னை.


''கோபத்தைக் குறைக்க என்ன வழி?'' 


''சக மனிதன் செய்யும் தவறுதான் நமக்குக் கோபத்தை மூட்டுகிறது. தவறுகளை நகைச்சுவையாக் கிக்கொள்வதைப் போல் கோபத்தைக் குறைக்க நல்ல வழி இல்லை.


வேலைக்காரரை அழைத்து, 'தபால் தலையை ஒட்டிக்கொண்டு வா’ என்றார் ராஜாஜி. பிரிட்டிஷ் மன்னர் தலையிட்ட தபால் தலையைத் தலைகீழாக ஒட்டிக்கொண்டு வந்தார் வேலைக்காரர்.


நீங்களும் நானுமென்றால் கோபத்தைக் கொட்டி இருப்போம்.


ராஜாஜி சொன்னார்:


'பரவாயில்லையே! நாங்களெல்லாம் செய்ய முடியாத காரியத்த நீ செஞ்சுட்டியே, பிரிட்டிஷ் ராஜாவையே கவுத்துட்டியே.’


ராஜாஜியால் அது முடிந்தது; கேள்வி கேட்ட உங்களால் கூட முடியும்; பதில் சொன்ன என்னால் அது முடியுமா தெரியவில்லை!''


தாமரைக்கண்ணன், திருப்பூர்.


 ''இந்தியாவின் பொருளாதாரம்பற்றிச் சொல்லுங்களேன்?'' 


''ஒரு துறையில் ஒருவன் சற்றே புகழோடிருந்தால் அவனுக்கு எல்லாம் தெரியும் என்ற மூடநம்பிக்கையின் முட்டைக்குள் நீங்கள் வசிக்கிறீர்கள். பொருளாதாரம்பற்றிப் பேசும் அறிவுடையவன் அல்லன் நான். என்ன தான் இந்தியாவின் நிதியமைச்சர் என் நண்பராக இருந்தாலும், அவரிடம் இதுபற்றி நான் அறிய முயன்றதில்லை. ஆனாலும், பொருளாதாரத்தில் இந்தியா வளர்கிறதா தேய்கிறதா என்று அறிந்துகொள்ளும் அளவுகோல் ஒன்றை அறிவேன்.



எந்த நாடு தன் வங்கியில் வைக்கும் வைப்புத்தொகைக்கு அதிக வட்டி தருகிறதோ... அந்த நாடு பொருளாதாரத்தில் சரிந்திருக்கிறது என்று பொருள்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தங்கள் வைப்பு நிதிக்கு இப்போது தந்து வரும் வட்டி விகிதம் 8.5 விழுக்காடு. மூத்த குடிமக்கள் வைப்புத்தொகைக்கு 9 விழுக்காடு.


ஆனால், ஜப்பானில் வைப்புத் தொகைக்கு வட்டி கிடையாது. மாறாக, உங்கள் பணத்தைப் பாதுகாத்துவைப்பதற்காக உங்க ளிடமே வைப்பு நிதிக்குக் காப்புத்தொகை வசூலிக்கும் ஜப்பானிய வங்கி.


இந்தியாவில் 8.5 விழுக்காடு வட்டி கொடுத்து வாங்கப்படும் வைப்பு நிதி, 10 முதல் 13 விழுக்காடு வட்டிக்குத் தொழிற் கடனாக வழங்கப்படுகிறது. அந்த வட்டிப் பணம் உற்பத்திப் பொருளின் தலையில் விழுகிறது. உற்பத்திப்பொருள் வாடிக்கையாளன் தலையில் விழுகிறது. எனவே, பழைய பொருளுக்குப் புதிய விலைகளைத் தந்துகொண்டேயிருக்கின்றான் - பாவம் இடுப்பொடிந்த ஏழை இந்தியன்.


இப்படித்தான் பணம் வீங்குகிறது; அதை ஒவ்வோர் இந்தியத் தலையும் தாங்குகிறது!''


ம.இராஜ்குமார், வில்லூர்.


 ''உங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ சில பேர் தாக்குகிறார்களே... நீங்கள் திருப்பியடிக்க வேண்டாமா?'' 


''தேவையில்லை.

நீங்கள் ரசிக்க முடியாத ஓர் உண்மையைச் சொல்லுகிறேன்.


நீங்களும் நானும் சமூக மனிதர்கள் பலரும் நித்தம் நித்தம் கொஞ்ச நேரம் பைத்தியக்காரர்களாய் மாறியே தீருகிறோம்.


பெருங்கோபம் - பெருஞ்சிரிப்பு - காமம் - கர்வம் - போதை - புகழ் என்ற உணர்வுகளுக்கு ஆட்படும்போதெல்லாம் பைத்தியத்தின் உச்சத்தை ஒவ்வொருவரும் தொட்டே தீருகிறோம்.


தொட்டுவிட்ட உச்சத்தை விட்டுவிட்டு இருந்த இடத்திற்கே திரும்ப வந்தால், அது இயல்புநிலை. அங்கேயே நின்றுவிட்டால், அது திரிபுநிலை. இதை சைகோசிஸ் [Psychosis] என்கிறார்கள் மனவியல் நிபுணர்கள்.


கர்வத்தின் உச்சத்தைத் தொட்ட சில பேர் இறங்கி வராமல் அதே இடத்தில் நின்றே என்னை ஏசுகிறார்கள். அது குறைபாடுதானே தவிரக் குற்றமன்று. குற்றம் தண்டிக்கப்பட வேண்டியது; குறைபாடு நிவர்த்திக்கப்பட வேண்டியது. அவர்களுக்கு நான் பதில் தருவதை விட, சிகிச்சை தருவதே சிறந்தது!''




இரா.கரியப்பா, சூலூர்


''சிலையாவதுதான் ஒரு மனிதனின் உச்சகட்டப் புகழா?'' 



''அப்படிச் சொல்ல முடியாது. மனிதர்களைப் போலவே சிலைகளுக்கும் ஆயுள் உண்டு. அரசு - அரசியல் - சாதி - மதம் -  நிறுவனம் ஆகியவற்றால் பராமரிக்கப்படும் சிலைகள், அந்த ஐந்தும் விழுகிறபோது தாமும் விழுந்துவிடுகின்றன.



சாலைகளில் நிற்கின்ற சிலைகளின் ஆயுள், சாலையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அறிஞர் அண்ணாவால் திறந்துவைக்கப்பட்டுச் சாலைகளின் சந்திப்பில் நின்ற கலைவாணர் சிலை, மேம்பாலம் கட்டும்போது இடம் பெயர்க்கப்பட்டு ஓரச்சாலையில் ஒதுங்கிவிட்டது.


சென்னையின் தென் வாசலில் கம்பீரமாக நின்ற ஜவஹர்லால் நேருவின் சிலை கத்திப்பாரா மேம்பாலத்திற்குப் பிறகு, உயரம் குறைந்து ஒடுங்கிவிட்டது.


மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு பெயர்கள் மறக்கப்பட்ட பல சிலைகள் வெறும் பொம்மைகளாகிவிடுகின்றன.


உருவம்தான் புகழின் உச்சம் என்பது ஒரு கற்பனை. உருவ வழிபாட்டிற்கே இடம் தராத இஸ்லாத்தில், நபிகள் நாயகத்தின் பெருமை இன்னும் குறையவே இல்லையே.


எனவே, மனிதர்கள் நிலைபெறுவது உருவங்களால் அல்ல - செயல்களால் மற்றும் சித்தாந்தங்களால்!''


தரும.சரவணன். தஞ்சாவூர்.


''இங்கிதம் என்றால் என்ன?'' 


''நான் பெரிதும் மதிக்கும் பெரும் பாடகி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வருகை தந்தார். தெரிந்தோ தெரியாமலோ காலணிகளைக் கழற்றாமல் வீட்டுக்குள் நுழைய எத்தனித்தார். அதை எப்படி உணர்த்துவது? 'அம்மா! உங்கள் பாதங்கள் என் வீட்டில் பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!’ என்றேன். பதறிப்போய்க் காலணிகளைக் கழற்றிவிட்டு வந்தார்.


புண்படுத்தாமல் பண்படுத்துவது இங்கிதம்!''



- இன்னும் பேசுவோம்... 



பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி
diSki - part 1 - http://www.adrasaka.com/2012/11/blog-post_15.html



நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்
part 2  http://www.adrasaka.com/2012/11/blog-post_2188.html


இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டி

 http://www.adrasaka.com/2012/12/blog-post_4667.html

 

4

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://www.adrasaka.com/2012/12/blog-post_9476.html

 

Wednesday, December 12, 2012

Mirapakai - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_6_iJZ4NAQAcb9fGM_43YMX-v5lp2tCa8UesCDQngIUT9ToFozKMXzY_Q43tfaNzgSdbgO0ra1ZlNYbNBB-w1PkLBDhiPA8_jnlyAUw_Bmx9oashgtpyVbsjbUFe3byOEyYDHjUIeb_5r/s1600/mirapakai.jpgஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர், சாதா போலீஸ் இல்லை, இண்டெலிஜென்ஸ் செல்லுல ஸ்பெஷல் ஆஃபீசர், அதுவும் டெல்லில..இவருக்கு குடுக்கப்பட பிராஜக்ட் என்னன்னா ஒரு காலேஜ்ல போய் லெக்சரரா சேரனும். ஏன் ? எதுக்குன்னெல்லாம் கேட்கக்கூடாது.புரட்சித்தலைவி ஆட்சி மாதிரி, ஹீரோ ஓ பி எஸ் மாதிரி எந்த கேள்வியும் கேட்காம காலேஜ்ல சேர்றார் .

அங்கே 1789 சக்க ஃபிகர் இருக்கு. ஆனா 60 மார்க் கூட வாங்காத மொக்கை ஃபிகரை காதலிக்கறார். ஏன்னா அவர் தான் ஹீரோயின்.அந்த கேனமும் இவரை லவ்வுது. இந்த லவ் எபிசோடு இடைவேளை வரை ஜாலியா கலாட்டாவா போகுது.


 இடைவேளை எழுத்து போடனுமே? அப்போதான் கதைக்கு வர்றாங்க.. ஃபாரீன்ல ஒரு டான் அதாவது வில்லன் இருக்கான். அவனைப்பிடிப்பது தான் போலீஸோட பிளான். அவனோட பொண்ணு  இந்த காலேஜ்ல படிக்குது .மூக்கைச்சுத்தி காதத்தொடும் கதையா வில்லன் மக்ளை கரெக்ட் பண்ணி வில்லனைப்பிடிக்க கேவலமா மாமா வேலை  பாக்குது போலீஸ் .

 அதாவது ஹீரோ  வில்லனோட பொண்ணை லவ் பண்ற மாதிரி நடிச்சு ( சான்ஸ் கிடைச்சா மேட்டரை முடிச்சுக்கலாம், டிபார்ட்மெண்ட் கண்டுக்காதாம் அடேய் )  வில்லனை அரெஸ்ட் பண்ணனும்.


http://www.ayngaran.com/images/news/1350901551.jpg


இடைவேளை வரை ஹீரோ தனக்காக லவ் பண்றார் ஹீரோயின் நெம்பர் ஒன் கூட, இடைவேளைக்குப்பின் நாட்டுக்காக ( நாசமாப்போச்சு )  நாட்டுக்கட்டை ஒண்ணை அதாவது ஹீரோயின் நெமப்ர் 2 வை லவ் பண்றார். இந்த முக்கேனக்காதல் கதை சாரி முக்கோணக்காதல் கதை  க்ளைமாக்ஸ் வரை போகுது. 


 படம் முடிய 10 நிமிஷம் இருக்கும்போது ஹீரோ வில்லனை சந்திச்சு அரெஸ்ட் பண்ணிடறாரு . ஹய்யோ அய்யோ .. 


ஹீரோ ரவி தேஜா . ஆள் முகம் முத்தலா இருந்தாலும் , ஹேர் ஸ்டைல் கேவலமா இருந்தாலும் , டிரஸ்சிங்க் சென்ஸ் படு கண்றாவியா இருந்தாலும் சுறு சுறுப்பான நடிப்பு , டைமிங்க் பாடி லேங்குவேஜ். ஆனா அவர் முகத்தை அடிக்கடி க்ளோசப்ல காட்டும்போது கலா மாஸ்டரை பார்க்கற மாதிரியே பயமா இருக்கு . 


ஹீரோயின்  ரிச்சா கங்கோபாத்யாய். மயக்கம் என்ன டப்பா பட ஹீரோயின் . தாவணி  , அல்லது சேலை அணிந்து வந்தாலும் ஆல்வேஸ் பாப்பா லோ ஹிப் லோகா தான். சபாஷ் .  2 டூயட்ல  ஃபுல் முதுகையும் காட்டறார். வந்த வேலை முடிஞ்சது 


 அடுத்த ஹீரோயின் தீக்‌ஷா சேத் . ராஜபேட்டைல சீன் காட்டுச்சே , அந்த பாப்பா .நல்லா மொழு மொழுன்னு  பிங்க் கலர் ஐஸ் க்ரீம் மாதிரி முகம். செர்ரிப்பழம் மாதிரி உதடு . ரம்பா மாதிரி தை ( thigh) ஸ்பெஷலிஸ்ட் போல. ஆல்வேஸ் ஷார்ட்ஸ் , டி சர்ட் தான் . செம கிளு கிளுப்பு . 



பிரகாஷ் ராஜ் , கோட்டா சீனிவாசராவ் வில்லன்கள் , டோட்டல் டைம் இவங்களுக்கு 15 நிமிஷம் தான். 


http://bollygally.files.wordpress.com/2011/08/mirapakai_heroine_richa_gangopadhyay_hot-other1.jpg



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 



1. படத்துல  60 மார்க் ஃபிகரா ரிச்சா கங்கோபாத்யாய். , 70 மார்க் ஃப்ஃபிகரா தீக்‌ஷா சேத் 2 பேரை ஒப்பந்தம் பண்ணி முடிஞ்ச வரை அவங்களை திறமையை காட்டு காட்டுன்னு காட்ட வெச்சாலும்  ஒரு 80 மார்க் ஃபிகரான சுப்ரமணிய புரம்  ஸ்ருதியை புக் பண்ணினது. சும்மா கெஸ்ட் ரோல் தான் அப்டினு அவங்க கிட்டே பொய் சொல்லி ஹோம்லி கேர்ளான அந்த பாப்பாவை  லோ கட் டி சர்ட் கொடுத்து ஸ்லோ மோஷன்ல ரயிலைப்பிடிக்க ஓடி வர்ற மாதிரி ஒரு சீன் வெச்சு கேமரா மேன் கூட இயக்குநர் டாப் ஆங்கிள்ல போய் உக்காந்துக்கிட்டு சீன் பார்த்து அதை நமக்கும் காட்டியது .. ஆஹா! 


2. thujee theekkaaththooyee jaanaa sanam ( துஜே தேக்காத்தோயே ஜானா சனம்) சூப்பர் ஹிட் ஹிந்திப்பாட்டை பேக் கிரவுண்ட்ல போட்டு விட்டு ஸ்ருதி ஸ்லோ மோஷன்ல 4 நிமிஷம் ஓடி வர்றார்.  அடடே.. 


3 கதையைப்பத்தி  கவலையே படமா 14 ரீல் படத்துல 12 ரீல் ஹீரோ அந்த 2 ஹீரோயின் பின்னாலயே நாய் மாதிரி அலைய வெச்சு ஜாலியா திரைக்கதை அமைச்சது . ஃப்ரேம் பை ஃப்ரேம் படம் இளமை , ஜாலி , கொண்டாடம் 



4. பிரகாஷ் ராஜ் , கோட்டா சீனிவாசராவ் 2 பேர் கிட்டேயும்  கெஸ்ட் ரோல் , 15 நிமிஷம் தான் என்ற உண்மை எல்லாம் சொல்லாம நீங்க தான் அண்ணே மெயின் வில்லன் என கப்சா விட்டு சீட் பண்ணி புக் பண்ணினது 



5. காமெடியனை ஹீரோ இன்னொருவரிடம் இவர் ஒரு ஹோமோ என அறிமுகம் செய்ய அது தெரியாமல் காமெடியன் செய்யும் ஒவ்வொரு சேஷ்டைகளும் அதே போல் தற்செயலாக அமைய  கண்ணியமான கலக்கல் காமெடி சீக்வன்ஸ் 


6. காமெடியனை  துரோகம் செய்வது போல் காட்டி பின் எல்லாம் டிராமா என  கொடுக்கும் ட்விஸ்ட் 


http://kasepu.com/wp-content/uploads/2011/01/Richa-Gangopadhyay-Hot-Photos.jpg

 மனம் கவர்ந்த வசனங்கள்



1. ஊருக்கே ராஜான்னாலும்  வீட்டுக்கு அவன் பிள்ளை தான்.உலகத்துக்கே நான் ராஜா ஆகிட்டேன், ஆனா வீட்டை கவனிக்க முடியல, ஐ மீன் மும்பையை கவனிக்கனும்.


2.  சீனியர் யாரு? நான் தானே? என்னை விட்டுட்டு ஏன் எல்லாரும் அவனையே புகழ்றீங்க? 


 சீனியாரிட்டி வேற , சின்சியாரிட்டி வேற 



3. டேய், செக்கிங்க் தானே உன் வேலை? எதுக்கு மசாஜ் பண்ணி விடறே? 



4. போயம்ஸ், போயட்ட்ரி 2 ல எது நடத்தட்டும்? 


 2ம் 1 தான் , சுத்தம் 



5. கலர் ஃபுல் டெம்பிள்னா என்ன? 



இது தெரியாதா? கலர்ங்க எல்லாம் சாமி கும்பிட கோயிலுக்கு வந்தா அந்த கோயில் தான் கலர் ஃபுல் டெம்ப்பிள் 



6. பொண்ணுங்க நம்ம கிட்டே விழுந்தா வெட்டியா இருக்கும் நம்ம லைஃப் ஸ்வீட்டா மாறிடும் 



7. புதுசுன்னா ஃபிரஸ் பீசா? 

 யா யா ரிப்பன் கூட இன்னும் கட் பண்ணலை  


8. இவ்ளவ் பிரமாதமா இங்க்லீஷ் பேசறீங்க , ஆனா ஏன் பியூனாவே இருக்கீங்க? 

 இங்க்லீஷ்ல மடும் தான் நான் ஃபர்ஸ்ட் , மத்த சப்க்ஜெக்ட்ல ஃபெயில்  ஹி ஹி 




9. வில்லன் ஆள் எப்படின்னா மெடிட்டேஷன் பண்ண்றவங்களைக்கூட இரிட்டேஷன் பண்ண வெச்சுடுவார். 



10.  ஹிந்தி ஹமாரா ராஷ்ட்ர பாஷா 


 யூ மீன் பாட்சா? 


 யோவ், அது ரஜினி படம் , நான் சொல்றது தேசிய மொழி 


http://www.cinegoer.com/telugu-cinema/gallery/exclusive/deeksha40/deeksha-seth-hot-pics-at-ukup-success-meet-41-9.jpg



11.  புருஷன் செத்துட்டானேன்னு பொண்டாட்டி கண்ணீர் விட்டுட்டு இருந்தாளாம், கடலூர் போலாமா?ன்னு கள்ளக்காதலன் கேட்டானாம் 




12. ஹீரோயின் செல் ஃபோனை  ஜாக்கேட்டுக்குள் ஒளிச்சு வைப்பதை பார்த்த காமெடியன்  அவளையே பார்க்க அவங்கப்பா 

 என்னடா லுக்கு? 

 அவ ஜாக்க்கெட்க்குள்ளே பெருசா என்னமோ இருக்கு, பார்க்கனும்னு ட்ரை பண்றேன், முடியல 

 பளார் 



13. டீச்சர் - ஸ்டூடண்ட்னா ஃபிஷ் & வாட்டர் மாதிரி இணைஞ்சு இருக்கனும், ஃபிஷர் மேன்  & ஃபிஷ் மாதிரி இருக்கக்கூடாது 


14.  மரியாதையா சொல்றேன், நல்லா கேட்டுக்கோ... தயவு செஞ்சு என்னை லவ் பண்ணிடு , உன் கால்ல விழுந்து கேட்டுக்கறேன் 


15.  ஏய், என்ன இருந்தாலும் நீ கொஞ்சம் குறைச்சுக்கனும்


 எதை? 


 ம், உன் அழகை ( நல்ல வேளை ) . இவ்ளவ் அழகா இருந்தா பசங்க எல்லாம் என்ன தான் பண்ணுவாங்க ?



16. என்னடா ஆச்சு உனக்கு, மறுபடியும் அவளையே வெறிச்சுப்பார்க்கறே? 


 அவ ஜாக்கேட்ல சாலிட்டா என்னமோ இருக்கு 

 மறுபடியும் பளார் 



17.  இந்த அரசியல்வாதிங்க எல்லாம் எப்படித்தான் 2 வெச்சு மெயிண்டெயின் பண்றாங்களோ? 


18.  க்ளாஸ் ரூம்ல செல் ஃபோனை சைலண்ட் மோடுல வைக்கனும்னு எத்தனை டைம் சொல்றது? 


 சார், அடிப்பது உங்க ஃபோன்  கி கி 


http://gallery.southdreamz.com/cache/actress/deeksha-seth/masala-portfolio/telugu-actress-deeksha-seth-hot-photos-46_720_southdreamz.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்




1. ஹீரோயின்  2 வருஷமா லவ் பண்றா, அப்போ எல்லாம் பெற்றோர் கிட்டே சொல்லலை, அவங்களுக்கும் தெரியலை. ஒரு கட்டத்துல மேரேஜ் பண்ணிக்கலாம்னு ஒரு நாள் நைட் 8 மணிக்கு ஹீரோயின் சொல்றா,  9 மணிக்கு ஹீரோவைப்பார்த்து பேசறாங்க,அடுத்த நாள் காலைல 7 மணிக்கு மேரேஜ். என்ன கொடுமை சார் இது? 



2.  மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி 10 மணி நேரத்துல பத்திரிக்கை எல்லாம் அச்சடிச்சு எல்லாருக்கும் கொடுத்துட்டாங்களா? மண்டபத்துல அத்தனை பேர் வந்திருக்காங்க? 






3.  வில்லனுக்கு தன்  மகளோட லவ்வர் போலீஸ் ஆஃபீசர்னு தெரிஞ்சுடுது. அப்பவே அவரைப்போட்டுத்தள்ளினா மேட்டர் ஓவர். அதை விட்டுட்டு உன்னை நேர்ல பார்க்கனும்னு தான் வர வைச்சேன் அப்டினு லூஸ் மாதிரி ஒரு டயலாக் . மும்பை டூ பாங்காங்க் ஹெலிகாப்டர் செலவு தண்டம் தானே?



4. வில்லன் தன் மகளிடம் ஓப்பனிங்க்லயே “ ஏம்மா அந்த தெள்ளவேரி  டிராமா போடறான், நோ லவ், அவன் ஒரு போலீஸ் ஆஃபீசர்னு சொன்னா மேட்டர் ஓவர் . அதை விட்டுட்டு  லவ் பண்றதை எல்லாம் வேடிக்கை பார்த்துட்டு இருப்பாங்களா? 


5. வில்லன் க்ளைமாக்ஸ்ல ஹீரோவை நேர்ல சந்திச்சதும் ஷூட் பண்ணா மேட்டர் ஓவர், அதை விட்டுட்டு  ஹீரோ கிட்டே ராமாயணம்  பேசிட்டு இருக்காரு 10 நிமிஷம் , யார் உள்ளாள் வேலை பார்த்தாங்க, போலீஸ்ல யார் இன்ஃபார்ம் குடுத்தாங்க.. இதை எல்லாம் ஒப்பிச்சுட்டு இருக்காரு உங்களைக்கேட்டாங்களா முருகேஷா? 


6, வில்லனோட பையன் அதாவது ஹீரோயினோட அண்ணன் ஹீரோவைப்பார்த்து   கதை பேசிட்டு இருக்காரு. பாங்காங்க் ல இருந்து வந்தவர்  அப்பவே போட்டுத்தள்ளி இருந்தா மேட்டர் ஓவர்



7. ஹீரோயின் நெம்பர் 1 முன்னால , கண் முன்னால ஹீரோ ஹீரோயின் நெம்பர் 2 வை கட்டிப்பிடிச்சு கிஸ் அடிக்கறார். அநதக்கேனம்  “ போய்யா நீயும் ஆச்சு , உன் லவும் ஆச்சுன்னு கிளம்பாம “ என்னங்க , இங்கே என்ன நடக்குது ?” அப்டினு டவுட் கேட்கறா. ஹீரோவும் “ நான் யோக்கியன் தான், அவ தான் என்னை கட்டிப்பிடிச்சா, கிஸ் அடிச்சா “ அப்டினு பிளேட்டை திருப்பிப்போடறார். இந்த பாப்பாவும் கெக்கே  பிக்கேன்னு சிரிக்குது. அய்யொ  ராமா , என்னை ஏன் இந்த கழிசடைப்படத்தை எல்லாம் பார்க்க வைக்கறே?  ( கவுண்டமணி வாய்சில் படிக்க )

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizW7-BLn4MZUKYBiaeylMovLJS7H40bhpj1joTX6zFDkofCswfTYkLvWmr9zdmTcdHVHi6S0epB5V6saA-msiHYpWAkEt5mu-9tLAfVV_NSNpIl93GEAaLZV-0Jn8tOFMUXK6tTziTsjr4/s1600/mirapa_2.jpg



8.   ஓப்பனிங்க் ஷாட்ல இண்ட்டலிஜென்ஸ் ஆஃபீஸ் ல மீட்டிங்க். எல்லா போலீஸ் ஆஃபீசர்சும் யூனிஃபார்ம்ல பக்காவா ஆஜர். ஆனா எல்லாத்துக்கும் ஹெட் ஆஃப் த டிப்பார்ட்மெண்ட் மடும் சிவில் டிரஸ்ல . அதைக்கூட சகிச்சுக்கலாம், ரன்னிங்க் ஷூ போட்டிருக்காரு. தலைவன் ஒழுங்கா இருந்தாத்தானே தொண்டன் ஒழுங்கா இருப்பான்? ஹையர் ஆஃபீசர் கண்ணியமா யூனிஃபார்ம்ல வர வேணாமா? ( ஒரு வேளை அவர் படத்தோட புரொடியூசரோ? )



9. வில்லன் பாங்காங்க்ல இருக்கார், தன் மகள் அவர் கூடவே இருந்தா பாதுகாப்பு இல்லைங்கறார் அது ஓக்கே , கொஞ்சம் தள்ளி சிங்கப்பூர்ல  குடி வெச்சிருக்கலாம், ஏன் பேக்கு மாதிரி  இந்தியாவுல மும்பைல  குடி வைக்கனும்?


10. ஒரு போலீஸ் ஆஃபீசரா இருந்தும் ஹீரோ ஏன் டி ஆர் மாதிரி , பரட்டைத்தலையோட அலையறாரு? போலீஸ் கட்டிங்க் பண்ண முடியலைன்னா அட்லீஸ்ட் ஒழுக்கமா தலை கூட சீவ மாட்டாரா?


11. டி வி , நியூஸ் பேப்பர்ல எல்லாம் ஹீரோ ஃபோட்டோ வந்திருக்கு, ஆனா ஹீரோ கன்னத்துல ஒரு மரு கூட வைக்காம காலேஜ் லெக்சரரா மாறு வேஷத்துல ( !!!!) போறார். ஹிந்தி மாஸ்டராம் ஹய்யோ அய்யோ , எந்த காலேஜ்ல ஹிந்தி பிராத்மிக் எல்லாம் சொல்லித்தர்றாங்க? ஸ்கூல்ல தான் அந்த சிலபஸ் வரும்



12. ஒரு சீன்ல ஹீரோயின்  சுடிதார் டிரஸ்  எடுக்கறார். விடிஞ்சா மேரேஜ். அதுக்குள்ளே எப்படி தைக்க? அப்டிங்கறார். சுடிதார் ரெடிமேடு . துப்ப்பட்டாவை ஓரம் அடிக்கறது  ஒரு மேட்டரா?



13. ஒரு சீன்ல ஹீரோவை போலீஸ் கல்கத்தா வரச்சொல்லுது. ஹீரோ மும்பைல இருந்து ஃப்ளைட் பிடிச்சு அங்கே போறார். அவர் கிட்டே ஹிரோயின் 2  ஃபோட்டோவை குடுத்து இந்தப்பொண்ணைத்தான் நீ லவ் பண்ணனும்கறார். உடனே ஓக்கே சொல்லி ஹீரோ கிள்ம்பறார். ஏய்யா  இதை ஜஸ்ட் மெயில்லயே முடிச்சிருக்கலாமே? எதுக்கு டிராவலிங்க்?



14. ஸாரி ஐ ஆம் ஸாரின்னு செம டப்பாங்குத்து பாட்டு அது  வாடி வாடி க்யூட் பொண்டாட்டி பாட்டோட அப்பட்டமான தழுவல்



15. ஹீரோ ஒரு சீன்ல ஹெல்மேட் போட்டு வில்லன் அடியாளுங்களை உதைக்கறார். அப்புறம் அதை கழட்டி முகத்தை காட்டறார், இந்த ஈர வெங்காயத்தை முதல்லயே பண்ணி இருக்கலாமே? டூப் முகம் தெரியக்கூடாதுன்னா?

http://appmaza.com/Assets/Images/Kollywood/Kollywood-CelebPics/Deeksha-Seth-Mirapakaya-Stills-Mirapakaya-Deeksha-Seth-Photos.jpg






சி.பி கமெண்ட் - படம் செம ஜாலியா டைம் பாசிங்கா போகுது. லாஜிக் பார்க்காம பார்த்தா ஓக்கே. கிளாமருக்கு கிளாமர். டைம் பாஸ்க்கு டைம் பாஸ். ஈரோடு  அன்னபூரணியில் படம் பார்த்தேன்



விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 43 ( விமர்சனம் போட மாட்டாங்க )


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே



http://movie-stills.in/wp-content/uploads/2012/08/Deeksha-Seth-Hot-Stills-In-Nippu-Telugu-Movie-Stills-No-watermark-8.jpg






சி.பி செந்தில்குமார் -ன் கேவலமான ஜோக்ஸ் பாகம் 3



1. அந்த பாகவதர் ஏன் கண்ணை மட்டும் மூடிக்குறார்?

வாயை மூடிக்கிட்டா பாட முடியாதே! அதான் கண்ணை மட்டும் மூடிக்குறார்.

......................................................................

நிபந்தனையற்ற ஆதரவு தர்றேன். ஆனா ஒரு நிபந்தனை.

பார்த்தீங்களா? இப்பவே கண்டிஷன் போட ஆரம்பிச்சுட்டீங்களே!

…………………………………………………….

3.நெற்றிக் கண்ணேனு தலைவரை பாராட்டுனாங்களே!

அது அப்போ..., இப்போ ஊழலின் ஊற்றுக்கண்ணேன்னுதான் ஏசுறாங்க.

.............................................................

4. எனக்கு ஒரு வித்தியாசமான மெசேஜ் வந்துச்சு. பிறகு செல், தானா ஆஃப் ஆகிடுச்சு.

அடடா..., என்ன மெசேஜ் அது?

பேட்டரி லோ.( BATTERY LOW.)

...............................................................

5. நிரூபருக்கு கிஃப்டா தலைவர் எதுக்கு வேட்டியை தர்றார்?

பேட்டி எடுக்க வந்தவருக்கு வேட்டி தந்த வேந்தர்ன்னு பேர் எடுக்கத்தான்.

............................................................

6.மோஹனா நீதான் என் மனைவியா வருவேன்னு முதல்லயே எங்க ஸ்கூல் வாத்தியாருக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு.

எப்படி சொல்றீங்க?

மாடு மேய்க்கத்தான் நீ லாயக்குன்னு அடிக்கடி சொல்லுவாரு.

......................................................................
 7. தலைவரே! நீங்க மீன், நண்டு, கோழி சாப்புடுறதை நிறுத்தனும்ன்னு டாக்டர் சொல்லிட்டாரே!

அட போப்பா..., நான் சொல்லுறதை என் சம்சாரமே கேக்குறதில்லை. மீன், நண்டு, கோழிலாம் எப்படி கேக்கும்?

...........................................................

8. உன் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் பேரை செல்லுல ஸ்டோர் பண்றப்ப ஏர்செல் கவிதா, பி.எஸ்.என்.எல் காஞ்சனா, டாடா டொக்கோமோ பிந்துன்னு எழுதியிருக்கியே ஏன்?

அவங்ககிட்ட இருந்து எதாவது மெசேஜ் வந்தாக்கூட செல் இன்பாக்ஸ்ல ஏர்செல், பி.எஸ்.என்.எல், டாடா டொக்கோமோ, இப்படித்தான் காட்டும். என் மனைவி படிக்க மாட்டா.

.............................................................................

 9. சார் ஆஃபீஸ் விட்டு வந்ததும் உங்க வீட்டு ஜன்னல், கதவு எல்லாத்தையும் சாத்திடறீங்களே ஏன்?!

என் மனைவி என்னை சாத்துறது கேக்க கூடாதுன்னுதான்.
............................................................

10 அத்தான் சொர்க்கம், நரகம் ரெண்டுத்துக்கும் வித்தியாசம் என்ன?

மச்சினி விருந்தாளியா வந்தா அது சொர்க்கம்..., கூடவே மாமியாரும் செக்யூரிட்டிக்கு வந்தா அது நரகம்.


.................................................

11. வீடுகளின் சுவர்களில் வரைய அனுமதியில்லை- தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
அதுக்காக தலைவரோட சின்ன வீட்டோட முதுகுல கட்சி சின்னத்தை பச்சை குத்தி விளம்பரம் பண்ணானுமா?!
...........................................................

12. LKG ஸ்டூடண்ட் 1 : நேத்து கிளாஸ் ரூம்ல வச்சு ஒரு சப்பை ஃபிகர் என்னை கிஸ் பண்ணிட்டா.
LKG ஸ்டூடண்ட் 2: அடடே! நம்ம கிளாஸ் மிஸ் மோஹனாக்கிட்ட சொல்ல வேண்டியதுதானே!?
LKG ஸ்டூடண்ட் 1: என்னை கிஸ் பண்ணதே அந்த சப்பை ஃபிகர்தாண்டா.

..........................................................

13. அவர் அம்மா கட்சின்னு எப்படி சொல்றே.

 மஞ்சள் கலர்ல இருக்குன்னு  போஸ்ட் கார்டு போஸ்ட் கார்டே யூஸ் பண்றதில்லையாம்.
.........................................................

14. டாக்டர்! என் மனைவுக்கு நாக்கு நீளம்.

விட்டுத்தள்ளுங்க. கை நீளம்ன்னாத்தான் பயப்படனும்.

......................................................
15. ஜட்ஜ்: தீர்ப்பு சொல்லுறதுக்கு முன்னாடி நீ எதாவது சொல்ல விரும்புறியா?

கைதி: யுவர் ஆனர்! என் ஃபெர்ஃபாமன்சுக்கு உங்க ஸ்கோர் எவ்வளவுன்னு சொன்னா சந்தோசப்படுவேன்.

................................................................................

16.உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்ணை லவ் பண்றதா என்கிட்டயே சொல்லுவே?!

அப்போ சிறந்த தைரியசாலின்னு பாராட்டி உங்க பொண்ணை தரப்போறீங்களா மாமா?!
..................................................

17. தலைவர் அதிகமா டி.வி பார்ப்பார் போல-ன்னு எப்படி சொல்றே?!

அவருக்கும், மகளிர் அணித்தலைவிக்கும் பாடி கெமிஸ்ட்ரி எப்படி இருக்குன்னு கேட்டு கருத்து கணிப்பு நடத்த சொல்லி இருக்கார்.

.........................................................
18. பேடு பாய்ஸின் டெண்டா டெம்பிள் ஆகிடக் கூடாது...,

அது வேற ஒண்ணுமில்லை. கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிடக்கூடாதுங்குற டயலாக்கின் ரீமிக்ஸாம்.

.............................................................

19. தலைவரோட செல்போன்ல காலர் டியூனா என்ன வெச்சிருக்காரு?

அது தெரியலை.., ஆனா, அவர் கரகாட்டக்காரி காஞ்சனாவை வெச்சிருக்குறது மட்டும் தெரியும்.
...................................................

20.நம்ம கட்சிக்கூட எந்த கூட்டணி சேருதோ அது வெற்றிக் கூட்டணி.

சேரலைன்னா?
வெட்டிக் கூட்டணி.