Showing posts with label 15.10.2012. Show all posts
Showing posts with label 15.10.2012. Show all posts

Saturday, December 22, 2012

சி.பி செந்தில்குமார் -ன் கேவலமான ஜோக்ஸ் பாகம் 4

1.விலைவாசியை கட்டுப்படுத்துவேன்னு தலைவர் சொன்னதை மக்கள் நம்பலியே ஏன்?

தலைவர் சம்சாரத்தையே அவரால கட்டுப்படுத்த முடியலை. அவர் எங்கே விலைவாசியை கட்டு படுத்த போறார்?!

..............................
..............................

2.தலைவரோட பிரச்சாரத்தால மக்கள் அதிர்ச்சி அடைஞ்சுட்டாங்களாமே?!

ஆமா, கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது எங்கள் ஆட்சியில்தான். அப்படின்னாரே!

....................................................................

3.ஏற்கனவே போட்டியிட்ட தொகுதியில் ஏன் மறுபடியும் போட்டியிடுறதில்லை.

ஏற்கனவே லவ் பொண்ணை ஏன் லவ் பண்ணனும்? புது ஃபிகரை ட்ரை பண்ணாத்தானே கிக்?!

............................................................................

4. அறிவிக்கப் படாத நெருக்கடி நிலைமை தமிழகத்தில் தேர்தல் கமிழனால் நிலவுதுன்னு தலைவர் சொல்றாரே ஏன்?!

பின்னே என்ன? பணப்பட்டுவாடா பண்ண முடில, கள்ள ஓட்டு போட முடில இது என்ன எலக்‌ஷன்?

.................................................................

5.தலைவருக்கு ஏகப்பட்ட மெயில் அனுப்பியும் அவரு கண்டுக்கவே இல்லையே.., ஒரு ரிப்ளையும் வர்லையே!

எப்படி வரும்? அவர் ஜெயில்ல இருக்கார்..., பெயிலே கிடைக்கலை! இதுல மெயில் எப்படி கிடைக்கும்?

........................................................................................

6. 2 தலைவர்களுக்குள்ளும் சண்டை. ஆனா, 2 பேரும் ஒரே மேடைல பிரச்சாரம் செய்வாங்கன்னு பிரச்சாரம் வருதே எப்படி?

காலைல இந்த தலைவர் பேசுவார். மாலைல அந்த தலைவர் பேசுவார்.


...............................................................

7. தொங்கு சட்டசபை உறுதியாமே?!

ஆமா, அரசியல் வாதிகளுக்கு சங்குதான்.


.........................................................

8.தலைவர் எதுக்காக ஒரு ஆளை மைக்ல ”நம்ம கட்சிதான் ஆட்சியை பிடிக்கும்”ன்னு டெய்லி சொல்ல வைக்குறார்?!

அந்த ஆள் பேரு மகேசன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புங்குறதால மகேசன் தீர்ப்பே மக்கள் தீர்ப்புன்னு உட்டாலக்கடி ஃப்ரூஃப் பண்ண நினைக்குறர்.

....................................................

9.மக்கள் கேட்ட கேள்வில தலைவர் தடுமாறிட்டாராமே!!

ஆமா.., இதுவரை நீங்க எத்தனை முறை கட்சி மாறி இருப்பீங்கன்னு கேட்டாங்க.

...........................................................

கூட்டணி விசயத்துல குட்ட குட்ட குனிய மாட்டோம்ன்னு தலைவர் சொல்லிட்டாரே?!

ஆமா, எத்தனை நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்குறது.

-------
11. தலைவரோட தேர்தல் அறிக்கையினை பார்த்து மக்கள் மயக்கம் போட்டுட்டாங்களாமே!

ஆமா.., நாங்க ஆட்சிக்கு வந்தால் கறுப்பு பணத்தை ஸ்விஸ் பேங்க்ல போய் அக்கவுண்ட் ஓப்பன் பண்ண தேவையில்லை. இந்தியாவிலேயே “பிளக்மணி பேங்க்” ஒண்ணு ஓப்பன் பண்ணி தரப்படும்ன்னாரே!

..............................
.....................................

12. சி.பி.ஐ ரொம்ப மேனர்ஸ் தெரிஞ்சவங்க போல..,

எப்படி சொல்றீங்க?!

ரெய்டு பண்ண வரவான்னு பெர்மிஷன் கேட்ட பிறகே வர்றாங்களே!

..................................................

13.தலைவரே! 234 தொகுதியிலயும் தனித்து போட்டின்னு சொன்னீங்களே.., ஏன் பேக் அடிச்சுட்டீங்க?!

அது தற்கொலை முயற்சிக்கு சமமானதுன்னு சொன்னாங்க. தற்கொலை முயற்சி சட்டப்படி குற்றாமாச்சே?!

...............................................


14. ஓட்டு போட பணம் வாங்க வேண்டாம்ன்னு தேர்தல் கமிசன் சொல்லுதே.. நீங்க ஏன் கேட்க மாட்டேங்குறீங்க?

சாரி எனக்கு சொல்புத்தி கிடையாது..., சுய புத்திதான் இருக்கு.

........................................

15. தலைவர் நிறைய பேசுவாரே! இப்போ சிபிஐ கிட்ட பேசறதே இல்லையே ஏன்?
அது ராஜ தந்திரம்.., இது ராசா தந்திரம்.

...................................................

16. பெண்களின் முதல் கடமை வீட்டில் இருந்தபடியே தன் கணவன், குழந்தைகளை கவனிப்பதுதான்னு தலைவர் சொல்றாரே அப்போ ஆண்களின் கடமை என்ன?

ஆஃபீஸுக்கும் போய்ட்டு மனைவி, குழந்தைகளை கவனிக்கனும்.

............................................

17. இது கோடைக்காலம் சூரியனின் ஆட்சி. அதனால உதயசூரியன்ம்தான் ஜெயிக்கும்ன்னு தலைவர் சொல்றாறே?!

இது இலையுதிர் காலம் இல்லை. அதனால் இரட்டை இலைதான் ஜெயிக்கும்ன்னு இன்னொரு தலைவர் சொல்றாரே?!

........................................................

18.விட்டா நாட்டையே வித்துடுவீங்கன்னு சிலர் சொல்றாங்களே தலவரே?

பொன் முட்டையிடும் வாத்தை யாராவது சேல்ஸ் பண்ணுவாங்களா?!

.............................................

19. எனக்கு ஊழல் செஞ்சு பழக்கமே இல்லைன்னு சொல்லி தலைவர் ஓட்டு கேட்குறரே?!

ஜெயிச்சா பழகிக்கிடுவார்,...,


.....................................

20. தலைவரே! வேலை வாங்கி தர்றதா சொல்லி ஒரு இளம்பெணை கற்பழிச்சுட்டதா உங்க மேல ஒரு குற்ற சாட்டு இருக்கே.

ஆமா., ரேப் பண்றதுன்னா சின்ன பொண்ணைத்தான் ரேப் பண்ண முடியும்? பின்ன வயசான பொண்ணையா ரேப் பண்ண முடியும்?!



---------------

Wednesday, December 12, 2012

சி.பி செந்தில்குமார் -ன் கேவலமான ஜோக்ஸ் பாகம் 3



1. அந்த பாகவதர் ஏன் கண்ணை மட்டும் மூடிக்குறார்?

வாயை மூடிக்கிட்டா பாட முடியாதே! அதான் கண்ணை மட்டும் மூடிக்குறார்.

......................................................................

நிபந்தனையற்ற ஆதரவு தர்றேன். ஆனா ஒரு நிபந்தனை.

பார்த்தீங்களா? இப்பவே கண்டிஷன் போட ஆரம்பிச்சுட்டீங்களே!

…………………………………………………….

3.நெற்றிக் கண்ணேனு தலைவரை பாராட்டுனாங்களே!

அது அப்போ..., இப்போ ஊழலின் ஊற்றுக்கண்ணேன்னுதான் ஏசுறாங்க.

.............................................................

4. எனக்கு ஒரு வித்தியாசமான மெசேஜ் வந்துச்சு. பிறகு செல், தானா ஆஃப் ஆகிடுச்சு.

அடடா..., என்ன மெசேஜ் அது?

பேட்டரி லோ.( BATTERY LOW.)

...............................................................

5. நிரூபருக்கு கிஃப்டா தலைவர் எதுக்கு வேட்டியை தர்றார்?

பேட்டி எடுக்க வந்தவருக்கு வேட்டி தந்த வேந்தர்ன்னு பேர் எடுக்கத்தான்.

............................................................

6.மோஹனா நீதான் என் மனைவியா வருவேன்னு முதல்லயே எங்க ஸ்கூல் வாத்தியாருக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு.

எப்படி சொல்றீங்க?

மாடு மேய்க்கத்தான் நீ லாயக்குன்னு அடிக்கடி சொல்லுவாரு.

......................................................................
 7. தலைவரே! நீங்க மீன், நண்டு, கோழி சாப்புடுறதை நிறுத்தனும்ன்னு டாக்டர் சொல்லிட்டாரே!

அட போப்பா..., நான் சொல்லுறதை என் சம்சாரமே கேக்குறதில்லை. மீன், நண்டு, கோழிலாம் எப்படி கேக்கும்?

...........................................................

8. உன் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் பேரை செல்லுல ஸ்டோர் பண்றப்ப ஏர்செல் கவிதா, பி.எஸ்.என்.எல் காஞ்சனா, டாடா டொக்கோமோ பிந்துன்னு எழுதியிருக்கியே ஏன்?

அவங்ககிட்ட இருந்து எதாவது மெசேஜ் வந்தாக்கூட செல் இன்பாக்ஸ்ல ஏர்செல், பி.எஸ்.என்.எல், டாடா டொக்கோமோ, இப்படித்தான் காட்டும். என் மனைவி படிக்க மாட்டா.

.............................................................................

 9. சார் ஆஃபீஸ் விட்டு வந்ததும் உங்க வீட்டு ஜன்னல், கதவு எல்லாத்தையும் சாத்திடறீங்களே ஏன்?!

என் மனைவி என்னை சாத்துறது கேக்க கூடாதுன்னுதான்.
............................................................

10 அத்தான் சொர்க்கம், நரகம் ரெண்டுத்துக்கும் வித்தியாசம் என்ன?

மச்சினி விருந்தாளியா வந்தா அது சொர்க்கம்..., கூடவே மாமியாரும் செக்யூரிட்டிக்கு வந்தா அது நரகம்.


.................................................

11. வீடுகளின் சுவர்களில் வரைய அனுமதியில்லை- தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
அதுக்காக தலைவரோட சின்ன வீட்டோட முதுகுல கட்சி சின்னத்தை பச்சை குத்தி விளம்பரம் பண்ணானுமா?!
...........................................................

12. LKG ஸ்டூடண்ட் 1 : நேத்து கிளாஸ் ரூம்ல வச்சு ஒரு சப்பை ஃபிகர் என்னை கிஸ் பண்ணிட்டா.
LKG ஸ்டூடண்ட் 2: அடடே! நம்ம கிளாஸ் மிஸ் மோஹனாக்கிட்ட சொல்ல வேண்டியதுதானே!?
LKG ஸ்டூடண்ட் 1: என்னை கிஸ் பண்ணதே அந்த சப்பை ஃபிகர்தாண்டா.

..........................................................

13. அவர் அம்மா கட்சின்னு எப்படி சொல்றே.

 மஞ்சள் கலர்ல இருக்குன்னு  போஸ்ட் கார்டு போஸ்ட் கார்டே யூஸ் பண்றதில்லையாம்.
.........................................................

14. டாக்டர்! என் மனைவுக்கு நாக்கு நீளம்.

விட்டுத்தள்ளுங்க. கை நீளம்ன்னாத்தான் பயப்படனும்.

......................................................
15. ஜட்ஜ்: தீர்ப்பு சொல்லுறதுக்கு முன்னாடி நீ எதாவது சொல்ல விரும்புறியா?

கைதி: யுவர் ஆனர்! என் ஃபெர்ஃபாமன்சுக்கு உங்க ஸ்கோர் எவ்வளவுன்னு சொன்னா சந்தோசப்படுவேன்.

................................................................................

16.உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்ணை லவ் பண்றதா என்கிட்டயே சொல்லுவே?!

அப்போ சிறந்த தைரியசாலின்னு பாராட்டி உங்க பொண்ணை தரப்போறீங்களா மாமா?!
..................................................

17. தலைவர் அதிகமா டி.வி பார்ப்பார் போல-ன்னு எப்படி சொல்றே?!

அவருக்கும், மகளிர் அணித்தலைவிக்கும் பாடி கெமிஸ்ட்ரி எப்படி இருக்குன்னு கேட்டு கருத்து கணிப்பு நடத்த சொல்லி இருக்கார்.

.........................................................
18. பேடு பாய்ஸின் டெண்டா டெம்பிள் ஆகிடக் கூடாது...,

அது வேற ஒண்ணுமில்லை. கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிடக்கூடாதுங்குற டயலாக்கின் ரீமிக்ஸாம்.

.............................................................

19. தலைவரோட செல்போன்ல காலர் டியூனா என்ன வெச்சிருக்காரு?

அது தெரியலை.., ஆனா, அவர் கரகாட்டக்காரி காஞ்சனாவை வெச்சிருக்குறது மட்டும் தெரியும்.
...................................................

20.நம்ம கட்சிக்கூட எந்த கூட்டணி சேருதோ அது வெற்றிக் கூட்டணி.

சேரலைன்னா?
வெட்டிக் கூட்டணி.

Monday, December 10, 2012

சி.பி செந்தில்குமார் -ன் கேவலமான ஜோக்ஸ் பாகம் 2


1. தலைவர் எந்த கட்சியையும் திட்றது இல்லையே ஏன்?

ம்க்கும் அவருக்கு எதிர்கட்சி எது? தான் இருக்குற கட்சி எதுன்னே வித்தியாசம் தெரியாது.

.................................................................................




2. தேர்தல் அறிக்கைக்கு  தொண்டர்கள்லாம் முத்தம் தர்றாங்களே ஏன்?!

அதுதானே கட்சியோட கதாநாயகி. ஆசை வராதா?

................................................................




3. பெட்ரோல் விலை ஏற விஸ்வநாதன் ஆனந்த்தான் காரணம்ன்னு அறிக்கை விட்டிருக்காரே?!

பெட்ரோலியப் பொருட்கள் மீது செஸ் வரிதானே விதிக்கப் பட்டிருக்கு.

..........................................................




4.எப்படியாவது வர்ற எலக்‌ஷன்ல நான் தோத்துடனும்ன்னு கடவுள்கிட்ட தலைவர் வேண்டிக்குறாரே ஏன்?!

தலைவரோட எதிர்கட்சி மகளிர் அணித்தலவி தலைவர் தேர்தல்ல தோத்துட்டா கட்சி ஆஃபீஸை நிர்வாணமா ஒரு ரவுண்ட் ஓடி வர்றதா சபதம் போட்டிருக்காங்க.


...............................................




5.உலகத்துலயே காதலுக்கு எதிர்ப்பே இல்லாத ஜோடி எது?

ஆதாம்.., ஏவாள்..

.......................................




6. மாமியார் பிரச்சனை இல்லாத மருமகளே இல்லை.

அப்படி சொல்ல முடியாது. ஏன்னா ஏவாள்க்கு மாமியாரே இல்லை...,


...................................

7.எவ்வளவு தடவை குளிச்சும் என் உடம்புல இருக்குற ஜவ்வாது செண்ட் வாசம் போக மாட்டேங்குதே!

அதனால என்ன?

“காதலி கூட “மணம்(மனம்) விட்டு பேசலாம்ன்னு நினைச்சு வந்தேன்.

........................................................................

8.ஆரூடம் சொல்லும் ஆக்டோபஸை அழிக்க போவதா தலைவர் மேடைல முழங்குறாரே!

அவர்  தோற்கப் போவதா முன்கூட்டியே அது சொல்லிட்டா விழுற 10 ஓட்டும் விழாம போய்டுமே!

..............................................................

9.இன்ஸ்பெக்டரை அய்யான்னு கூப்பொடாம அய்யோன்னு கூப்பிட்டியாமே?!

இன்ஸ்பெக்டர் லாக்கப்புல இருக்குற பென் கைதி கூட சரசமா சிரிச்சுப் பேசறப்ப இன்ஸ்பெக்டரோட மனைவி திடீர்ன்னு ஸ்டேஷனுக்குள்ளே வந்துட்டாங்களே!

........................................................................

10. தலைவருக்கு மனசுக்குள்ளே பெரிய சினிமா ஹீரோன்னு நினைப்பு.

ஏன்?

நான் ஒரு தடவை ஒரு தொகுதில நின்ன தொகுதில மறுபடி ஒரு தடவை நானே நிக்க மாட்டேன். யார்க்கிட்டயும் ஓட்டு கேட்க மாட்டேன்னு பஞ்ச் டயலாக் பேசுனாரே?!

..............................................................

11. திருப்பதில எல்லா சாமி நகையையும் காணாம போய்டுச்சாமே!

ஏழுமலையானை ஏழைமலையானாக மாத்தாம  விட மாட்டாங்க போல.

.......................................................

12. தன்வினை தன்னைச்சுடும்ன்னு இப்போதான் நான் உணர்ந்தேன்.

எப்படி?

நான் லவ் மேரேஜ் பண்ணுன சித்ரா என்னையே எதிர்த்துப்பேசி எனக்கே சூடு வைக்குறா.

.......................................................................

13.கடன்கார பசங்கன்னு தலைவர் யாரை திட்டுறாரு?

வேற யாரை? இந்தியர்களைத்தான். உலக வங்கில கடன்(லோன்) வாங்குனதுல இந்தியாதான் நெம்பர்1 பிளேஸ்ல இருக்காம்.

.........................................................................

14.தீம்ஸ் பார்க்குல செயற்கை அலை உருவாக்குற வாட்டர் எஞ்சினியர்ஸ் கூட தலைவர் தீவிர டிஸ்கஷன்ல இருக்காரே! எதுக்கு?

வர்ற எலக்‌ஷன்ல அவருக்கு அனுதாப அலை வீச்ச் செய்ய ஐடியா கேட்குறாரு.

.......................................................

15. டாக்டர்.., மாலை கண் நோய்ன்னு சொல்றிங்க. ஆனா, கண் மஞ்சளா இருக்கே!
ஒருவேளை கா”மாலை” கண் நோயா  இருக்குமோ?!
..................................................................................
16. சதீஷ்.., உங்களுக்கு  தாடி வெச்சா நல்லா இருக்கும்.
மோஹனா! கழட்டி விடப் போறேன்னு ஓப்பனா சொல்லு. ஏன் சுத்தி வளைச்சு சொல்றே.

..................................................

17. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?! அழகான பொண்ணுங்களுக்கு “மூளை” சின்னதா இருக்கும், அழகில்லாத பொண்ணுக்கு “மூளை” பெருசா  இருக்கும்.

ஏன்?

குவாலிட்டி இருந்தா குவாண்டிட்டி இல்லை. குவாண்ட்டி இருந்தா குவாலிட்டி இல்லை.

..............................................................

18. காதும்.., காதும் வைத்ததுப்போல் வளர்வதால் தனோ “காதல்” எனப்படுகிறதோ!

..........................................................................................

19.லவ்வரோட தங்கை நமக்கு மிஸ்டுகால் விட்டா இந்த சமுதாயம் என்ன சொல்லும்?!

கண்ணா! இன்னொரு லட்டு திங்க ஆசையா?!

...................................................................................

20. அவள் விரல்பட்ட கோபத்தில் விழுந்துக் கிடக்கிறேன்.- கோலமாக.