Tuesday, July 31, 2012

விளையாட்டு வீராங்கனை பிங்கி - ஓ பக்கங்கள் ஞானி கட்டுரை

http://www.competenetwork.com/images/stories/bloggers/ty-06-12/pinki-pramanik.jpg

பக்கங்கள்

பதில்கள் தேடும் கேள்விகள்...

ஞாநி

நீ ஆணா, பெண்ணா? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லியே தீரவேண்டும் என்ற நெருக்கடியை நம்மில் பெரும்பாலோர் சந்திப்பதே இல்லை.
ஆனால் இந்த நெருக்கடியை சந்திக்க வேண்டி வருவோரின் வாழ்க்கை நரகமாக்கப்படுகிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதன் அடையாளமாகத் தான் இன்று விளையாட்டு வீரர்கள் பிங்கியும் சாந்தியும் இருக்கிறார்கள்.
இந்திய தடகள வீராங்கனைகளான இருவரின் வாழ்க்கையும் அவர்கள் பெண்கள்தானா என்ற கேள்வியால் நரகமாக்கப்பட்டுவிட்டது. இவர்களின் பிரச்னையைப் புரிந்துகொள்ளுவதற்கு முதலில் இயற்கை என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கேட்க அதிர்ச்சியாக இருந்தாலும், ஆண், பெண் என்ற வரையறை இயற்கை ஏற்படுத்தியதல்ல. நாம் ஏற்படுத்தியதுதான். இயற்கை நாம் ஆண் என்று சொல்லும் வடிவத்துக்கும் பெண் என்று சொல்லும் வடிவத்துக்கும் இடையில் எண்ணற்ற வடிவங்களை உருவாக்கிக் கொண்டேதான் இருக்கிறது. அறிவியல் அவற்றை அறிந்திருக்கிறது. ஆனால் சமூக ரீதியில் அவற்றுக்கெல்லாம் நாம் உரிய பெயர் சூட்டி வகைப்படுத்தி அங்கீகரிக்கத் தவறியிருக்கிறோம் என்பதுதான் அசல் பிரச்னை.
உடல்ரீதியாக அறிவியல் முற்றிலும் இது ஆண் உடல் என்றும் இது பெண் உடல் என்றும் வரையறுக்கும் உடல்கள் அமையப் பெறாமல் இரு தன்மைகளும் வெவ்வேறு விகிதங்களில் அமைந்த உடல்களைப் பெற்றவர்களை நம் சமூகம் எப்படிப் பார்க்கிறது? அவர்களுக்கு உடல் எப்படி இருந்தபோதிலும் மன ரீதியாக தன்னை ஆண் என்று உணர்ந்தால் ஆணாகவும், பெண் என்று உணர்ந்தால் பெண்ணாகவும் அறிவித்துக் கொள்ளும் உரிமையை நம் சமூகம் வழங்குகிறதா? அல்லது இரண்டுமில்லாத மூன்றாம் பாலினம் என்று தன்னை அறிவித்துக் கொண்டால், அதற்குரிய சட்ட அங்கீகாரமும் சமூக வசதிகளும் இன்னமும் இல்லையே?


http://timesofindia.indiatimes.com/photo/14151694.cms
இந்தத் தீர்க்கப்படாத சமூக சிக்கல்களை அவ்வப்போது நமக்கு நினைவுபடுத்தும் விதத்தில்தான் விளையாட்டுத் துறையில் ஏற்படும் சர்ச்சைகள் அமைகின்றன.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிங்கிக்கு இப்போது வயது 26. பதினேழு வயதிலேயே ஆசிய உள்விளையாட்டுரிலே ஓட்டப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றவர். பின்னர் காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம். அடுத்து ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம். தொடர்ந்து விபத்துகளினால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பிங்கி மறுபடியும் தேறி வந்து களத்தில் இறங்கியபோது, அவருக்கு எதிராக அவருடன் இருந்த ஒரு பெண் பாலியல் வன்முறை புகார் கொடுத்ததையடுத்து கைதானார். பிங்கி ஆண் என்றும் தன்னிடம் கட்டாய உடல் உறவு கொள்ள முயன்றார் என்றும் புகார். கைது செயப்பட்ட பிங்கிக்கு பாலியல் சோதனைகள் செய்யப்பட்டன.
தனியார் மருத்துவமனையில் பிங்கிக்கு நடந்த உடல்சோதனையின் வீடியோ படங்கள் செல்போன்களிலும் இணையத்திலும் பரப்பப்பட்டன. தனியார் மருத்துவமனை சோதனை பிங்கியை ஆண் என்று முடிவு செய்தது. ஆனால் இதை பிங்கி ஆட்சேபித்ததையடுத்து அரசு மருத்துவ மனையில் சோதனைகள் செய்யப்பட்டன. அதில் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை என்று சொல்லப்பட்டது. அடுத்து பிங்கியின் குரோமோசோம் பேட்டர்ன் சோதனை செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.
பிங்கி மீது முதலில் பாலியல் வன்முறை புகார் செய்த பெண் தான் பொய்ப் புகார் கொடுத்ததாக இப்போது சொல்லியிருக்கிறார். பிங்கிக்கு அரசு கொடுத்த நிலத்தை அவரிடம் வாங்கிய அவதார் சிங் தூண்டுதலில் பொய்ப் புகார் கொடுத்ததாக சொல்லியிருக்கிறார். இந்த அவதார் சிங் ஏற்கெனவே கொல்கத்தாவில் விபசார விடுதி நடத்திய குற்றத்தில் கைதானவர். அவர் மனைவி ஜோதிர்மயியும் தடகள வீராங்கனை. பிங்கியுடன் சேர்ந்து ஓடியவர். மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.யாக இருந்தவர்.
பிங்கிக்கும் ஜோதிர்மயி கணவருக்கும் நிலத்தகராறு, பணத்தகராறு என்பது தனி விஷயம். அரசு விளையாட்டு வீரர்களுக்குக் கொடுத்த நிலத்தை அவதார் சிங் அவர்களை மிரட்டி கம்மி விலைக்கு வாங்கிக் கொள்கிறார் என்பது அவர் மீதுள்ள குற்றச்சாட்டு.
http://i.telegraph.co.uk/multimedia/archive/02249/pi_2249658b.jpg
ஆனால் இந்த பணத் தகராறினால், பிங்கியின் பாலின அடையாளம் பிரச்னையாக்கப்பட்டுவிட்டது. இதற்கு முன்பு அவர் தடகளப் போட்டிகளில் மெடல்கள் வென்றபோதெல்லாம் யாரும் அவரை ஆணா பெண்ணா என்று கேட்கவில்லை.


அடையாள சர்ச்சையில் சிக்கி சீரழிக்கப்பட்டவர் தமிழ்நாட்டின் சாந்தி சவுந்தரராஜன். இப்போது 31 வயதாகும் சாந்தி 11 சர்வதேச மெடல்களும் 50 உள்ளூர் மெடல்களும் வென்றவர். 2006ல் கத்தாரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். சில சக வீரர்கள் ஆட்சேபித்ததையடுத்து அவருக்கு பாலியல் சோதனை செய்யப்பட்டது. அவரை பெண்ணாகக் கருத முடியாது என்று முடிவு செய்து கொடுத்த மெடல் பறிக்கப்பட்டது.
உண்மையில் சாந்தியின் பிரச்னை வேறு. பெண்ணாகவே பிறந்தபோதும் ஆண்ட் ரோஜென் சென்சிட்டிவிட்டி சிண்ட்ரோம் என்ற குறைபாட்டுடன் அவர் பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தக் குறைபாட்டினால், பெண் உடல் இருந்தபோதும் பெண் தன்மைக்குரிய சுரப்புகள் பாதிக்கப்படுகின்றன.
சாந்திக்காக இந்திய அரசோ, தமிழக அரசோ, ஆசிய விளையாட்டு நிர்வாகத்துடன் சண்டையிட்டதாகத் தெரியவில்லை. இப்போது சாந்தி வறுமையினால் தினக்கூலி வேலைக்குச் செல்வதாக செய்திகள் வெளியானபின், அரசு தரப்பில் இருந்து ஆதரவுக் குரல்கள் வருகின்றன. முதலில் சாந்தி ஏன் தினக் கூலியானார் என்பதே மர்மமாக இருக்கிறது. 2006ல் அவரது மெடல் பறிக்கப்பட்டபோதும் கூட, அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி சாந்திக்கு 15 லட்ச ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்தார். ஓராண்டு கழித்து மனஉளைச்சலினால் சாந்தி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். பின்னர் புதுக்கோட்டையில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி தருவதற்கான மையத்தை சாந்தி தொடங்கி நடத்தி வந்தார். அதில் 2009ல் 68 பேர் பயிற்சி பெற்றதாகவும் அவர்களில் சிலர் சென்னை மாரத்தானில் பரிசுகள் வென்றதாகவும் செய்திகள் வந்தன. இந்த நிலையில் மூன்றே வருடங்களில் சாந்தி தினக்கூலியானது ஏன் என்று புரியவில்லை. பரிசுப் பணம் சாந்தியின் சகோதரி திருமணச் செலவிலும் சகோதரர் படிப்புச் செலவிலுமாக தீர்ந்துபோய் விட்டதாக சொல்லப்படுகிறது. அது உண்மையானால், லட்சக் கணக்கில் தங்களுக்காக செலவு செய்த சாந்தியை அவரது சகோதரரும் சகோதரியும் தினக்கூலியாளாக போக விட்டுவிட்டது நம் குடும்ப அமைப்பின் கோளாறையே காட்டுகிறது.



http://timesofindia.indiatimes.com/photo/14426411.cms
இப்போது மத்திய விளையாட்டு அமைச்சர் அஜமக்கான் தென் ஆப்ரிக்க வீராங்கனை காஸ்டர் செமன்யாவுக்காக அந்த நாட்டு அரசு போராடியதைப் போல சாந்திக்காக இந்திய அரசு போராடுமென்று அறிவித்திருக்கிறார்.
இந்தியாவைவிடப் பின் தங்கிய நாடாகக் கருதப்படும் தென் ஆப்ரிக்கா காஸ்டர் செமன்யாவுக்காகப் போராடியதில் நூற்றில் ஒரு பங்கு கூட இந்தியா இதுவரை சாந்திக்காக செய்யவில்லை. 2006ல் மெடல் பறிக்கப்பட்ட உடன் போராடாமல் விட்டுவிட்டு 2012ல் என்ன, எப்படி போராடுவார்கள் என்று தெரியவில்லை.

காஸ்டர் செமன்யாவின் விஷயத்தில் மிக முக்கியமான அம்சம் அவர் ஆணா பெண்ணா என்று நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவைக் கூட பகிரங்கப்படுத்த அவர் தடை வாங்கியிருப்பதுதான்.
செமன்யா 2008ல் உலக ஜூனியர் போட்டியிலும் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றவர்.
செமன்யா 2009ல் 800 மீட்டர் ஓட்டத்திலும் 1500 மீட்டர் ஓட்டத்திலும் உலக ரிக்கார்டுகளை ஏற்படுத்தியதும், அவரது பாலியல் அடையாளத்தை சோதிக்க சர்வதேச தடகளக் கூட்டமைப்பு நட வடிக்கை எடுத்தது.
உடனே இதற்கு பெரும் எதிர்ப்பு பல்வேறு விளையாட்டு வீரர்களிடமிருந்து மட்டுமல்ல, தென் ஆப்ரிக்க அரசிடமிருந்தே வந்தது. செமன்யாவுக்கு சரியான ஆலோசனை சொல்ல தவறியதற்காக அவரது கோச் ராஜினாமா செய்தார். தென் ஆப்ரிக்க அரசின் அறிவுரைப்படி செமன்யா, மிகப்பெரிய சட்ட நிறுவனத்தை தன் வக்கீலாக நியமித்தார். சோதனை முடிவுகளை வெளியிட கோர்ட்டில் தடை வாங்கப்பட்டது. தனக்கு தந்த மெடலையும் பணத்தையும் செமன்யா வைத்துக் கொள்ளலாம் என்று தென் ஆப்ரிக்க அரசு அறிவித்தது. ஒரு பெண் எப்போது பெண் தன்மையற்றவராகக் கருதப்படுவார் என்பது பற்றிய சர்வதேச தடகளக் கூட்டமைப்பின் விதிகள் தெளிவாக இல்லை என்று தென் ஆப்ரிக்க அரசு கூறிவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வருட லண்டன் ஒலிம்பிக்சில் தென் ஆப்ரிக்க அணியின் கொடியை ஏந்தி மைதானத்தில் வலம் வர இருப்பவர் செமன்யாதான்.
செமன்யா விஷயத்தில் தென் ஆப்ரிக்க அரசு நடந்துகொண்டதைப் போல இங்கே சாந்திக்கு நடக்காமல் போனதற்குக் காரணம், இங்கே இருக்கும் மத்திய அரசுக்கும் சரி மாநில அரசுக்கும் சரி, விளையாட்டுத் துறையிலும் கொள்கைகள் சீராக இல்லை. பாலியல் அடையாளங்கள் பற்றிய அரசுக் கொள்கை என்பது ஒன்று இல்லவே இல்லை.
மீடியா வெளிச்சம் போட்டுக் காட்டியதும் சாந்திக்காகக் குரல் கொடுத்து ஓடிவரும் தொழிலதிபர்களும் அரசியல் வாதிகளும் இதையும் இன்னொரு தானதர்மமாகக் கருதாமல், இப்போதேனும் தெளிவான பாலியல் அடையாளக் கொள்கையை நம் அரசுகள் வகுக்க வற்புறுத்தவேண்டும்.
அவை உருவாகும்வரை சாந்திகளும் பிங்கிகளும் நம் சமூகத்தில் சர்ச்சைகளாகவும் கேலிப் பொருட்களாகவும் மட்டுமே இருப்பார்கள் என்பதே கசப்பான உண்மை.


http://static.sify.com/cms/image//mhln4mbjddf.jpg

தன் தந்தையுடன் பிங்கி
இந்த வார யோசனை!

கொடநாட்டுக்கு அதிகாரிகளை ஜெயலலிதா அடிக்கடி வரவழைப்பதால், அங்கே போவரும் வழிகளை நன்றாக பராமரிப்பதாக செய்திகள் வருகின்றன. எனவே ஜெயலலிதா ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்டமாக தேர்ந்தெடுத்து ஒரு வாரம் அங்கே போயிருந்து ஆட்சி நடத்தும்படி பரிந்துரைக்கிறேன்.
இந்த வாரத் திட்டு!

காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பேரங்களை நடத்துவதற்காக தன் அமைச்சக வேலைகளை கவனிக்காமல் வேலை நிறுத்தம் செத ஷரத் பவாருக்கு .வா.தி. பல மாநிலங் களில் வறட்சி மிரட்டும் நேரத்தில் விவசாய அமைச்சர் வேலைக்குச் செல்லாமல் ஸ்டிரைக் செதது கேவல மானதாகும்.
நன்றி - கல்கி, சீதாரவி,அமிர்தம் சூர்யா, கதிர் பாரதி,புலவர் தருமி

ஸ்மார்ட் கேர்ள்ஸ் யார்? எப்படி கண்டு பிடிக்க? ஐடியா

சே செம செம!
1.செல்வராகவன் - கல்கி இப்போ இல்லை, அதனால பொன்னியின் செல்வன்ல ஹீரோவை சைக்கோ ஆக்கிட்டா கேட்க ஆள் இல்லை ;-0



------------------------


2. சம்சாரம் என் மீது பாய்கின்றதே! 


-------------------------


3. பச்சையா  சின்னமணி சைஸ்ல இருந்தா அது கிலாக்கா(ய்) , பச்சை பச்சையா  டிரஸ் பண்ணி ,ஓவர் மேக்கப் போட்டுட்டு குண்டு மணி சைஸ்ல இருந்தா கலாக்கா



---------------------


4. அன்பே! வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்? 



 சாரி, டியர் , பொண்ணுங்களுக்கு எதையும் தந்து பழக்கம் இல்லை, வாங்கித்தான் பழக்கம்



----------------------


5. கணவன் - டியர், நமக்குள்ள புரிதல்கள் வேணும். 




 மனைவி - அது இந்த ஜென்மத்துல நடக்காதுன்னு அவதானிக்கிறேன் ;-0



----------------------




6. இதுவரை நான் பார்த்த 3800 ஸ்கூட்டி ஃபிகர்ஸ்ல ஒண்ணு கூட அந்த ஸ்கூட்டி லெவலுக்கு இல்லை # சும்மா  



-------------------


7. காலை வணக்கம் என்பதைக்கூட சுருக்கி கா வ என அப்டேட் செய்தால் நீ தான் எங்க ஊரு காவக்காரன் ( கா வ காரன்)



----------------------


8.ஜட்ஜ் - பி எம்மை தவறா வழி நடத்துனீங்களா?


ஆ ராசா - ஆக்டிவா இருக்கற மாதிரி ஆக்ட் பண்ணக்கூட தெரியலைங்க அவருக்கு,அதான் சொல்லிக்கொடுத்தேன்


--------------------------


9. சாலைகளில் குப்பையை பொறுக்குங்கள்: கட்சி நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் அதிரடி உத்தரவு.# அண்ணே, பொறுக்கின்னு  ஜெ கிண்டலிங்க்



----------------------


10. அழகான பெண்ணைப்பார்த்தா எல்லாம் மறந்துடுது,பாருங்க, அந்த பெண்ணை எங்கே பார்த்தேன்கறதையே மறந்துட்டேன் ;-0



--------------------------



shared Art Erotic Fashion's photo.
Calvin♥


11. ஏய் மிஸ்டர் பார்த்தா தெருப்பொறுக்கி மாதிரி இருக்கே?



ஹலோ மிஸ், மீ தே மு திக ஆள் , எங்க தலைவர்தான் ரோட்ல (குப்பை)பொறுக்க சொன்னார்



--------------------------


12. ஆண்கள் தங்களிடம் வழியனும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பு, எப்படியோ காரியம் நடந்தா சரி தான் என்பது ஆண்கள் நினைப்பு



-------------------------


13. டியர், எதுக்காக இப்படி வழியறீங்க?



அன்பே! உன் மீது நான் வெச்சிருக்கும் அன்பு ஓவர் ஃப்லோ ஆகுது, வேற ஏதும் இல்லை



---------------------------


ஹோம் தியேட்டர் ஆடியன்ஸ்காக டி வி யில் இன்றைய சினிமா (தினத்தந்தி) 






14. ஷகிலா பேசாம அல்லது பேசிக்கிட்டே அவர் பேரை ஷ”கிலோ”ன்னு மாத்திக்கலாம் # 96 கிலோவாம், தூக்கினவங்க சொன்னாங்க ;-0



---------------------------


15. மிஸ், நீங்க ஸ்மார்ட் ஃபோன் தானே வெச்சிருக்கீங்க?



அட! எப்படி கண்டு பிடிச்சீங்க?



ஸ்மார்ட் கேர்ள் ஆச்சே? # பிட்டைப்போடு,கடலை போடு



----------------------------


கற்பழிக்கப் படும் கஷ்மீர் தேச பெண்கள் .தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் !!!!



16. பொண்ணுங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தா காப்பாத்தலாம்னு நானும் பஸ் ஸ்டாப் பஸ் ஸ்டாப்பா சுத்தறேன், யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லையே?



--------------------------


17. தாலி கட்ன பொண்டாட்டி கிட்டேயே நம்மாள கோபிச்சுக்க முடியலை, அல்லது கோபத்தை காட்ட முடியலை,மத்தவங்க கிட்டே மட்டும் அதை ஏன் காட்டனும்?



---------------------


18. ஆடி மாசம் புது மணத்தம்பதிகளை பிரிக்கறாங்க, அதே போல் காதலர்களும் பீச்ல வந்து சில்மிஷம் பண்ண தடை விதிக்கனும் யுவர் ஆனர்



---------------


19. டியர், எப்பவும் முகத்துல ஒரு மாஸ்க் அணிந்து முகத்தை மூடிக்கறீங்களே, நீங்க பேட் மேன் ரசிகரா?


  ச்சே ச்சே ஐ ஆம் நாட் எ பேட் மேன்,BAD MAN



---------------------------



20. "அளவு”க்கு மீறினால் அஞ்சலியும்  நஞ்சு!



--------------------


Senbagaluuu Senbagaluuuu...Thenamudheee Manabanthaluuuuu!!

Monday, July 30, 2012

ரூ 10,000 முதல் பரிசு பெற்ற கல்கி போட்டிக்கதை -போன்சாய் நிழல்கள்! -செம்பை முருகானந்தம்-

முதல் பரிசுக் கதை



போன்சாய் நிழல்கள்!



செம்பை முருகானந்தம்



ஒம் பேரு என்ன?"

கோபாலகிருஷ்ணன்."


அம்மா, அப்பா பேரு?"


அம்மா பேரு வாணி.அப்பா பேரு கோவிந்தன்."


ஒன்னப்பத்தி, ஒங்குடும்பத்தப் பத்தி சொல்லேன்."


எங்க வீட்டுக்கு நான் ஒரே பையந்தான். அம்மா, அப்பா, நாங்க மூணு பேருந்தான். எங்க வீடு புதுக்கோட்ட கீழ ரெண்டாம் வீதியில இருக்கு. அதுவொரு லையன் வீடு. அதுலதான் வாடகைக்குக் குடியிருக்கோம். இருவது வருசமாய் அங்கதாங் குடியிருக்குறதா எங்கப்பா சொல்வாரு. அம்மா ஹவுஸ் ஒய்ஃப்தான். அப்பா சின்ன அச்சகம் வெச்சுருக்கார். அது ரொம்பப் பழசு. பழய காலத்து அச்சுக்கோர்த்து ஓட்டுற மிஷினு."



சரி, ஒங்கூடப் பொறந்தவுங்க?"



கூடப் பொறந்தவுங்க யாருமில்ல."



அண்ணந்தம்பி, அக்கா தங்கையின்னு யாருமில்லயே, அது ஒனக்கு கவலையா இல்லையா? ஒன்னப் பாதிக்கலயா?"



பாதிச்சது. ஆனா நாங்க லையன் வீட்டுலதானே இருக்கோம். எல்லார் வீட்டுலயும் பசங்க இருக்குறதால என்னயப் பெருசாய் ஒண்ணும் பாதிக்கல."



ஓகே. ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட்,செகண்ட் ஸ்டாண்டர்டெல்லாம் எங்க படிச்ச?"



எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்த பி.வி.எஸ். மெட்ரிகுலேஷன் ஸ்கூல்லதான் ஃபிப்த் வரைக்கும் படிச்சேன். அப்புறம், எங்கப்பா பணங்கட்ட முடியலைன்னுட்டாரு. ஏன்னா எங்கப்பா வச்சுருக்குற அச்சகத்துக்கு அவ்வளவா வேல வராது. இந்தக் கல்யாண சீசன்ல இன்விடேஷன் ஆர்டர் வரும். ஸ்கூல் சீசன்ல காம்போசிசன், பிராக்ரஸ் கார்டு, டைம்டேபிள் கார்டு ஆர்டர் வரும். அப்புறம் அப்பப்போ வேற ஏதாவது சின்னச் சின்ன வேலைக வரும். இதெல்லாங்கூட எங்கப்பாவோட ஒர்க் ஃபெர்பெக்ஷனுக்காகவும் சொன்னா சொன்ன நேரத்துல குடுக்குற சின்சியாரிட்டிக்குத்தான் தேடிவந்து குடுப்பாங்க."



குட். நீ எப்படிப் படிப்ப?"



நல்லா படிப்பேன்."



நல்லான்னா?"



நீங்க கேக்குறது எனக்குப் புரியல."


மனப்பாடம் பண்ணுவியா, இல்ல புரிஞ்சுக்க ட்ரை பண்ணுவியா?"


புரிஞ்சுக்க மட்டுந்தான் ட்ரை பண்ணுவேன்."



ட்ரை பண்ணுவியா? புரிஞ்சுக்குவியா?"


கண்டிப்பா புரிஞ்சுக்குவேன்."


வெரிகுட். அப்ப, நீ ஒன்னோட எக்ஸாம்ஸ்ஸெல்லாம் புரிஞ்சுதான் எழுதுவியா? நோட்ஸ் ஃபாலோ பண்ணுவியா?"



உறுதியா நோட்ஸ் ஃபாலோ பண்ண மாட்டேன். புரிஞ்சுதான் எழுதுவேன். குறிப்பா எய்த்துல இருந்து தமிழுக்குக் கூட நோட்ஸே பயன்படுத்துறதில்ல. மத்த சப்ஜெக்ட்டுக்குப் பாத்துப்பேன். ஆனா, என்னோட ஓன் சென்டன்சுலதான் எழுதுவேன்."





வெரிகுட். அதென்ன குறிப்பா எய்த்துலருந்து."





ஆமா. எங்கப்பா அந்தக் காலத்து எட்டாங்கிளாஸ் வரைக்கும் படிச்சவரு. ஆனா நெறைய புத்தகங்களைப் படிப்பாரு. திருக்குறள், கம்பன், பாரதி, பாரதிதாசன், ஷெல்லி, கீட்ஸ், காரல் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், டால்ஸ்டாய், காந்தி, அம்பேத்கர், நேரு, பெரியார், ஜீவா, அகிலன், கல்கி, ஜெயகாந்தன்னு இப்ப கரண்டுல எழுதுற ரைட்டர்ஸ் வரைக்கும் படிச்சுக்கிட்டே இருப்பாரு. நான் எய்த்துப் படிக்கிறப்பவே மக்ஸிம்கார்க்கியோட ‘தாய்’ நாவல் படிச்சுட்டேன். செகண்ட், த்தேர்டு படிக்கிறப்ப இருந்தே எனக்கு எங்கப்பா கதை, கவிதைன்னு நெறைய்ய சொல்லிக்கிட்டே இருப்பாரு.



மொதநா அவரு சொன்ன கதைய அடுத்தநா என்னையச் சொல்லச் சொல்வாரு. கத கண்டன்ட் மாறாது. காட்சியும் மாறாது. ஆனா கதக்குள்ள எஞ்சொந்த வார்த்தப் புகுந்துடும். அதாவது, ‘பாரதியார் வீட்டுல சமைக்க அரிசி இல்லாமப் பட்டினியா இருந்தாங்களாம். அப்போ வீட்டு முத்தத்துல பசியோட கத்திக்கிட்டிருந்த சிட்டுக்குருவிகளப் பார்த்துட்டு வீட்டுக்குள்ள போயி, இருந்த கொஞ்சங் குருணையையும் எடுத்துக்கிட்டு வந்து போட்டுட்டு சிட்டுக்குருவிக திங்கிறதப் பார்த்துச் சந்தோஷப்பட்டாராம்’ பார். அடுத்தநா இதே கதைய என்னையச் ‘சொல்லுடா’ம்பாரு.





ஒரு நாள் பாரதியாருக்கு ரொம்பப் பசியாம். வீட்டுல சமைக்கவே இல்லயாம். ஏன்னா அரிசியே இல்லயே என்ன பண்றது. அப்ப பாத்து அவரு வீட்டு முத்தத்துல நெறய சிட்டுக்குருவிக பசியோட கத்திக்கிட்டே அங்கிட்டும் இங்கிட்டும் பறந்துச்சாம். பாரதியாரு நேராய் வீட்டுக்குள்ள போயி கொஞ்சூண்டு இருந்த குருணையையும் எடுத்துக்கிட்டு வந்து போட்டாராம். அவ்ளதான் எல்லா சிட்டுக்குருவியும் கீச்சு மூச்சு, கீச்சு மூச்சுன்னு சந்தோஷமாய் சத்தம் போட்டுக்கிட்டே தின்னுச்சாம். இத பாத்த பாரதியாரு சந்தோஷந்தாங்காம ஆனந்தமாய் பாடுனாராம்"ன்னு சொன்னேன்.

எங்கப்பா ‘டேய்! என்னடா கோபால கிருஷ்ணா... என்னென்னமோ ஒஞ்சொந்த சரடயெல்லாம் உள்ளவிட்டுக் கலக்குற. பரவாயில்ல. நாஞ்சொன்னதவிட நீ சொல்றதுதான் தத்ரூவமாய் இருக்கு’ அப்புடின்னு எங் கன்னத்துல முத்தங்குடுத்து, முதுகுல ‘சபாஷ், சபாஷ்’ன்னு தட்டிக் குடுத்தாரு. இப்புடிதான் எஞ்சொந்த வார்த்த இல்லாம யாரோடதையும் அப்புடியே காப்பியடிக்கிற புத்தி காணாமப் போச்சு."



ஓ! இதச் சொல்றப்போ இவ்ளோ சந்தோஷமாய் சொல்ற."



ஆமா...அதான் உண்மை. அப்புடிதான் நடந்துச்சு. அது மட்டுமில்ல."



ம்... அப்புறம்!?"



நான் எய்த் படிக்கிறப்போ ஜி.பி.எம்.ன்னு எங்க தமிழ்சாரு. அவரு, ஒருநா சொன்னாரு, ‘டேய் மனப்பாடம் பண்ணுறதுக்கும் புரிஞ்சுக்கிறதுக்கும் பெரிய வேறுபாடுயில்ல. நீங்க புரிஞ்சுக்கிட்டிங்கன்னாலே அது மனப்பாடமாகிருச்சுன்னு அர்த்தம். ஆனா நீங்க மனப்பாடம் பண்ணினாலும் அது புரிஞ்சுகிட்டதாய் அர்த்தமில்ல. அதே மாதிரி புரிஞ்சுக்கிட்டா ஒங்க வார்த்தையில எப்புடி வேணாலும் எழுதலாம். மனப்பாடம் பண்ணினா ஒரு வார்த்த மறந்தாலும் பிரேக் டௌனான வண்டி மாதிரி அம்புட்டு தான்’னாரு.



எனக்கு அந்த வயசுல லேசா பொறிதட்டுன மாதிரி இருந்துச்சு. அதுக்கப்புறம் வளர வளர அதோட மகத்துவம் புரிஞ்சது. அதுனாலதான் டென்த்துல தமிழ்ல நான் தொண்ணூத்தெட்டு மார்க்கு."



வ்வாவ்... ஃபென்டாஸ்டிக். ஒம் மொகமெல்லாம் எவ்வளவு மலர்ச்சியா, சந்தோஷமாய் இருக்கு தெரியுமா?"



இருக்கும். இருக்கும். இதெல்லாம் நெனக்கிறப்போ எனக்கு அவ்ளோ சந்தோஷமாய் இருக்கு."



சரி... நீ ஸ்போர்ட்சுல எப்புடி?"



அய்யோ என்னவிட்டா ட்வென்டி ஃபோரவர்சும் வௌயாடுவேன். கொள்ளப் பிரியம் வெளையாட்டுன்னா."



என்ன வௌயாட்டு ஒனக்கு ரொம்பப் புடிக்கும்."



ஃபுட்பால், கிரிக்கெட், அத்தலெட்டிக் குல டிஸ்டிக் ரன்னிங் பிளேயர் நான்."



குட்... கோபாலகிருஷ்ணா. இது தவிர."



இலக்கிய மன்றப் போட்டி எல்லாத்லேயும் பார்ட்டிசிபேட் பண்ணுவேன். பெரும்பாலும் முதல் பரிசுதான் வாங்குவேன்."



அடடே! குதூகலப்புயல்லக் கூத்தாடிக் கிட்டுருந்த..."

ஸ்யோர்"



ஓகே ஓகே... வீட்ல ஒன்ன ரொம்பக் கண்ட்ரோல் பண்றது யாரு?"



இதுல என்ன சந்தேகம், எங்கம்மாதான். வெளையாட விடாது. நான் எங்க போனாலும் பின்னாடியே வரும். ‘ஒரு புள்ள. ஒனக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்ன பண்ணுறது’ன்னு சொல்லிச் சொல்லியே கொல்லும். ‘படி, படி’ன்னு உசுர எடுக்கும்.



எங்கப்பா என்ன படின்னு சொன்னதே கெடையாது. அன்னிக்கி ஸ்கூல்ல என்ன நடந்துச்சுன்னு கேப்பாரு. எல்லாமே அதுக்குள்ள இன்குலூடட். அப்புறம் ஒவ்வொரு நாளும் எங்கம்மா எங்கப்பாகிட்ட அவ்ளோ கம்ப்ளெயிண்ட் பண்ணும். அவரு எங்கிட்ட எதுவுமே கேக்க மாட்டாரு. அதே மாதிரி என்ன சேட்ட செஞ்சாலும் அடிக்கவே மாட்டாரு. அடிச்சதே இல்லை.



ஆனால், எல்லாத்துக்கும் ஒட்டுமொத்தமாய் என்னிக்காவது ஒரு நாளு நைட்டு சாப்புட்ட பிறகு ஒக்கார வெச்சுக் கத சொல்லுவாரு. அந்தக் கதையோட க்ளைமாக்ஸ் வரவரத்தான் நாஞ்செஞ்சத் தப்புகளுக்குத்தான் இந்தக் கதங்கிறது எனக்கே புரியும். அவமானமாய் இருக்கும். மனசெல்லாம் வலிக்கும். இனியொருமுறை அப்புடி ஒரு தப்ப வாழ்க்கையில செய்யக்கூடாதுன்னு தோணும்."



ஓ... கிரேட் யுவர் ஃபாதர்."



ஆமா அவரு எனக்கு அப்பா மட்டுமில்ல. ஹி இஸ் மை பெஸ்ட் ஃப்ரெண்ட், அண்ட் மை வெல்விஷர்."



சரி, கோபாலகிருஷ்ணா, டென்த்ல எவ்ளோ மார்க்கு வாங்கின?"



நானூத்தித் தொண்ணூத்திரெண்டு."



பப்ளிக் எக்ஸாமும் ஒண்ணோட ஓன் சென்டன்ஸ்சுலதான் எழுதினியா?"



நிச்சயமா. கொஸ்டின் பேப்பர்லே சொல்லியிருப்பாங்களே. உன் சொந்த நடையில் எழுதுன்னு."



சரி, அந்த ரிசல்ட் வந்தப்ப எப்புடி இருந்துச்சு?"



ரொம்ப சந்தோஷமாய் இருந்துச்சு. எங்க நகராட்சி ஸ்கூல்ல பெரிய ரெக்கார்ட் ஃபிரேக்குன்னு சொன்னாங்க. ஏன்னா ஸ்டேட் செகண்ட் நான். எங்க ஹெட்மாஸ்டரு, எல்லா சாருங்களும் எங்க வீட்டுக்கு வந்து, என்னய காருல வச்சு ஸ்கூலுக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. டி.வி.,பேப்பர் காரங்கன்னு ஒரே அமர்க்களம். எங்கம்மா சந்தோஷத்துல அழுதுகிட்டே இருந்துச்சு. எங்கப்பாவுக்கு ஆனந்தந் தாங்கல.



நா ஆரம்பத்துல படிச்ச பி.வி.எஸ். ஸ்கூல்லருந்து ஆரம்பிச்சு புதுக்கோட்டயில இருக்குற அத்தன பெரிய ஸ்கூல்ல இருந்தும் எங்கப்பாவுக்குக் கால் பண்ணுனாங்க.



திருச்சியில இருக்குற எல்லாப் பெரிய ஸ்கூல்லயிருந்துங் கால் பண்ணுனாங்க. ‘எங்க ஸ்கூல்ல சேருங்க, எங்க ஸ்கூல்ல சேருங்க, எந்தக் கட்டணமும் வேணாம். ஹாஸ்டல் ஃப்ரீ. எல்லாமே நாங்க பாத்துக்குறோம்’ன்னு."



சரி."



எங்கப்பா, ‘அதெல்லாம் வேணாம். புதுக்கோட்ட கவர்ன்மெண்ட் ஸ்கூல்லயே படிக்கட்டும். இப்ப மார்க் வாங்கலையா? அதே நேரம் புள்ளயும் நம்ம கூடவே இருப்பான்’னாரு. எங்கம்மா கேக்கவே இல்ல.



எங்க சொந்தக்காரங்க, சுத்துப்பட்டுல உள்ளவுங்க எல்லாரும் எங்க அப்பாகிட்ட சொன்னா கேக்க மாட்டாருன்னு எங்க அம்மாகிட்ட நல்ல ஸ்க்ரூ போட்டுவிட்டாங்க. எங்க அம்மாவும் எங்க அப்பாகிட்ட, ‘இங்க பாருங்க, அதெல்லாம் சரிப்படாது. டென்த்து மாதிரி கெடையாது ப்ளஸ்டூ. அதுதான் இவனோட வாழ்க்கையே. இவன் டாக்டராகவோ, இன்ஜீனியராகவோ வரணுமின்னா திருச்சி ஸ்கூல்லதான் சேத்தாகணும். அந்த ஸ்கூல்லயெல்லாம் நம்மாலப் பணங்கட்டி காலடி கூட வக்க முடியுமா? நம்ம புள்ள மார்க்குக்கு ஏதோ இலவசமாய் சீட்டுத் தர்றாங்க?’ அப்புடி இப்புடின்னு எங்கப்பாவப் படாதபாடுபடுத்தி சம்மதிக்க வெச்சுட்டாங்க.




ஆனா எனக்குத்தான் எங்க அம்மா, அப்பாவை விட்டுப் பிரியணுமான்னு கவலையாய் இருந்துச்சு. ஏன்னா, ஒரு நாளைக்கி ஒரு வேளையாவது எங்கம்மா ஊட்டி விட்டாதான் எனக்குச் சாப்பிட்ட மாதிரி இருக்கும். அதே மாதிரி எங்கப்பா கையில தல வச்சு, எங்கம்மா கால் மேல கால் போட்டு, தெனமும் யாரோட வாழ்க்க வரலாறாவது எங்கப்பா எனக்குக் கதையா சொன்னாதான் எனக்குத் தூக்கமே வரும். எப்புடி இவுகளப் பிரிஞ்சு இருப்பேன்னு அழுதுட்டேன். அப்புறம், ஒருவழியாய் திருச்சி எம்.ஆர்.பி.எஸ். ஸ்கூல்ல சேத்து விட்டாங்க."





எப்டி இருந்துச்சு எம்.ஆர்.பி.எஸ்."



ம்.. அங்க... அங்கதான் என் லட்சியம், எங்கனவு, என் அறிவு, எந்திறம, எம் விளையாட்டு எல்லாம், எல்லாம் எல்லாமே செதஞ்சு, கொழஞ்சு போனது."



கோபாலகிருஷ்ணா அழுகையாய் வருதா.. ம்... ஏன் அழுகையை அடக்குற. அழு. நல்லா அழு. மொதல்ல எப்புடி டென்த்தப் பத்திப் பேசறப்போ சந்தோஷமாய் பேசுனியோ அதே மாதிரி இப்ப சோகமாய் இருக்கு, அழுகையா வருதுன்னா நல்லா அழு. ஒம் மனசுல என்னென்னவெல்லாம் இருக்கோ எல்லாத்தையும் வெளியில சொல்லிடு. ம். ம்... சொல்லு."



முதல் நாளு ப்ளஸ் ஒன் ஸ்டூடெண்ட்ஸ்க் கெல்லாம் ஒரு மீட்டிங் போட்டாங்க. வித் பேரண்ட்ஸுக்கும். அப்ப பிரின்ஸ்பாலு, பேசுறப்போ, ‘நீங்க எல்லா ஸ்டூடண்ட்ஸும் கவனமாய் கேளுங்க, நீங்கயெல்லாம் வெளியில எப்புடி படிச்சுட்டு வந்திருந்தாலுஞ் சரி. இங்க எம்.ஆர்.பி.எஸ்.க்குன்னு சில மெத்தடாலஜி வச்சுருக்கோம். அதத்தான் நீங்க ஃபோலா பண்ணணும். பேரன்ட்ஸும் கோ-ஆப்ரேட் பண்ணுங்க. ஒங்க பசங்களுக்குஞ் சொல்லுங்க’ன்னார். அப்பவே எனக்கு எதையோ இழந்த மாதிரி மனசு கவலையாய் இருந்துச்சு.



அடுத்தநா ஸ்கூலுக்குப் போனா, தமிழ் உள்பட ஒவ்வொரு டீச்சரும் வந்து, இங்க எல்லா சப்ஜெக்டுக்கும் நோட்ஸ்தான் ஃபாலோ பண்ணுவோம். அதத்தான் நீங்க படிக்கணும்ன்னாங்க. க்ளாஸ்ல பேருக்கு நடத்துவாங்க. புரியலைன்னு ஏதாவது டௌட் கேட்டா ‘இப்ப என்ன புரிஞ்சு வானத்த வில்லா வளக்கப் போறியா. நோட்ஸ் இருக்குள்ள அதப் படி... மனப்பாடம் பண்ணு. அது போதும்’பாங்க. மேத்ஸ்ல டௌட் கேட்டாக் கூட ‘இதெல்லாஞ் சொல்லிப் புரியவக்க முடியாது. ஒருமுறைக்கு நாலு முறையாய் கணக்கப் போட்டுப் பாரு. அப்பதான் வரும்’பாங்க. எனக்கு ஏதோ தனித்தீவுல தனியா மாட்டிக்கிட்ட மாதிரி இருந்துச்சு.




ஒவ்வொரு டெஸ்டுலயும், ஒவ்வொரு எக்ஸாம்லயும் பேப்பரை எடுத்து வச்சுக்கிட்டு கிளாஸ்லயே அவ்ளோ பேருக்கு முன்னாடி கேவலமாகத் திட்டுவாங்க. ‘கோபாலகிருஷணா நோட்ஸ்ல என்ன இருக்கு; நீ என்ன எழுதியிருக்க’ம்பாங்க. ‘அதே கருத்தத்தானே நானும் எழுதியிருக்கேன்’ அப்புடின்னா அவ்ளோதான். ‘ஒம் மேதாவித் தனத்தையெல்லாம் மூட்ட கட்டிட்டு, நோட்ஸ்ல என்ன இருக்கோ அத வார்த்த பிசகாம வாக்கியம் மாறாம எழுது. ஒஞ்சொந்த நடை, நொந்த நடையெல்லாம் இங்க யாருங்கேக்கல’ம்பாங்க.

எந்தக் காரணங்களுக்காக நகராட்சி ஸ்கூல்ல எல்லா டீச்சரும் என்னைப் பாராட்டினாங்களோ, அதே காரணங்களுக்காக இங்க நான் அவமானப்படுத்தப்பட்டேன். இப்புடிதான் ப்ளஸ்ஒன் கழிஞ்சது. அப்பவே முடிவுக்கு வந்துட்டேன். எங்கம்மா கனவு, எங்கப்பா நம்பிக்க எதையும் என்னால காப்பாத்த முடியாதுன்னு.



இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாய் ப்ளஸ்டூ. லெவன்த் ஹாப்பேர்லி முடிஞ்சதுமே ப்ளஸ்டூ சிலபஸ் படிக்கச் சொல்லிட்டாங்க. புரியாத ஒண்ணு மொட்டையா மனப்பாடம் பண்ணி எழுதுறது எனக்குச் சாத்தியப்படவே இல்ல. புரிஞ்ச விஷயங்கள எனக்குப் புரிஞ்ச மாதிரி எழுதுறது டீச்சர்ஸுக்கு புடிக்கவே இல்ல.



இதவிடப் பெரிய கொடும, எம் பேப்பர எடுத்துக்கிட்டு வந்து, ‘நோட்ஸ்ல உள்ள மாதிரி எதுவுமே இல்லயே. ஒனக்கு மனப்பாடமே வராதா? ம்... நீ எப்புடி டென்த்துல நானூத்தி தொண்ணூத்திரெண்டு மார்க்கு வாங்கின; உண்மையிலேயே படிச்சுத்தான் எடுத்தியா’ம்பாங்க.



எ(ன்) அறிவையும், தெறமையையும் தீவச்சுக் கொளுத்துன மாதிரி இருக்கும் அந்த வார்த்த. எது என் திறமையின்னு, அறிவுன்னு பெருமையாப் பேசப்பட்டதோ, அதையே காரணமாக் காட்டி என்ன அவமானப்படுத்துவாங்க.



எ(ன்) அப்பாவோட மடியில படுத்து அழணும் போல இருக்கும். பேரண்ட்ஸ பார்க்கவோ, பேசவோ விடமாட்டாங்க. எ(ன்) ரெண்டு வருஷப் பொறந்த நாளு, நானே என் நினைவு நாள அனுஷ்டிக்கிற மாதிரி போனுச்சு. எங்கம்மா அப்பாவ வாழ்த்துச் சொல்லக் கூட அனுமதிக்கல. ரெண்டு வருஷமாய் எங்காலு கூட கிரவுண்டுல படல. சாப்புட, தூங்க முடியாம நரக வேதனையை அனுபவிச்சேன்.



எப்பப் பார்த்தாலும் ‘படி, படி, மனப்பாடம் பண்ணு. ஒப்பி, டெஸ்ட் எழுது’ன்னு டார்ச்சர் பண்ணுவாங்க. லஞ்ச் அவர்ஸ்ல கூட ‘பத்து நிமிஷத்துல சாப்புட்டுப் படி, படி’ன்னு வாங்க. நைட் ஸ்டடி பதினோரு மணி வரைக்கும். காலையில மூன்றரை மணிக்கே எழுப்பி விட்டுருவாங்க. சில நேரம் மாத்ரயெல்லாம் குடுப்பாங்க. கேட்டா ‘விட்டமின் டேப்லட்ஸ், ஹெல்த்துக்கு’ம்பாங்க. மாத்ரய சாப்புடலன்ன விடமாட்டாங்க. எனக்கு ஒவ்வொரு நாளும் வேதனையும் விரக்தியுந்தான் அதிகமாயிக்கிட்டே இருந்துச்சு.





ப்ளஸ்டூ பப்ளிக் எக்ஸாம் தேதி அறிவிச்சுட்டாங்க. எனக்கு மனசெல்லாங் கவல மூண்டுக்கிச்சு. நான் ஸ்டேட் லெவல்ல இல்ல, டிஸ்டிரிக்ட் லெவல்ல கூட மார்க் வாங்க முடியாதுன்னு எனக்குத் திண்ணமா தெரிஞ்சது. எங்கப்பா, அம்மா, எம் பழய நகராட்சி ஸ்கூலு எ(ன்) டீச்சர்ஸ் எப்புடி அவுங்க மொகத்துலயெல்லாம் முழிப்பேன்? நெனக்க நெனக்க இதயமே வெடிக்கிற மாதிரி இருக்கும். அழுது, அழுது ஓய்வேன்.



எக்ஸாம்ஸ் ஆரம்பிச்சது. எப்புடியோ, என்னத்தையோ எழுதி எக்ஸாம் முடிச்சுட்டேன். வீட்டுக்கு வந்தேன். எங்கப்பா எப்புடி எழுதினேனு கூடக் கேக்கல. ஏன்னா அவருக்குக் குற்றஉணர்ச்சி, யார் சொல்லியிருந்தாலுங் கேட்டுருக்கக் கூடாது. இருந்தும், தன்புள்ளய தானே கொண்டு போயி பலியிட்டுட்டோ மேங்கிற குற்ற உணர்ச்சி. எங்கம்மாதான் ‘எப்புடி எழுதுன, எப்புடி எழுதுன’ன்னு கேட்டுக்கிட்டே இருக்கும். என்ன பதில் சொல்றது.



எம் உடம்பு பாதியாய்ப் போச்சு. மனசுல கொஞ்சமும் தைரியமில்லாம ஆகிட்டேன். எம் பழைய சுறுசுறுப்பு, வௌயாட்டு, வெகுளி, ஆனந்தம், புத்தகங்கள மேஞ்சு திரியுற அறிவுத் தேடல், எல்லாம் எல்லாமே எங்கிட்ட இருந்து காணாமப் போச்சு.



வீட்ட விட்டு வெளியிலேயே போறதில்ல. ரூமுக்குள்ளேயே கெடந்தேன். எங்கம்மா என்ன நெனச்சோ என்னப் பார்த்துப் பார்த்து அழும். நானே உணர்ந்தேன். எனக்கு நானே பேசிக்கிற மாதிரி இருக்கும். என்னய எங்கம்மாவோ, வேற யாராவதோ பார்த்தா ஒடனே சரியா இருக்குற மாதிரி முயற்சி பண்ணுவேன். ஆனா, எனக்கு நானே எதை எதையோ பேசிக்குவேன். இதுவரைக்குந்தான் எனக்கு ஞாபகமிருக்கு."



இன்னும் என்ன இருந்தாலும் சொல்லு. அழுதுகிட்டே இருந்தா..."



எங்கம்மாவ தோச பெரட்டியால அடிச்சேன். எங்கப்பா எனக்கு சோறு ஊட்ட வருவாரு. அவர கன்னத்துல நெறைய தடவ அறைஞ்சேன். அங்க வீட்டுக்குள்ளயே ஒன்பாத், டூபாத்தெல்லாம் போனேன்."



நல்லாவே அழுதுட்ட. இப்ப ஒம்மனசுல வேறெதுவும் இல்லயே. எல்லாத்தையும் சொல்லிட்டியா..."



ம்... சொல்லிட்டேன்."



இப்ப ஒம் மனசு ரொம்ப இயல்பாய் இருக்கு. சரி, ப்ளஸ்டூ ரிசல்ட் வந்துருச்சா?"



தெரியல."


வந்தா எவ்ளோ மார்க்கு வாங்குவ?"


தொளாயிரத்தி அம்பதுக்குள்ள."


ரிசல்ட் வந்துருச்சு. தொள்ளாயிரத்தி எம்பது வாங்கி இருக்க. இது போதுமா?"


நோ... இது எம்மார்க்கு இல்ல. இது என் அறிவின் அடையாளமில்ல. என்ன என் இயல்புல விட்டுருந்தா ஆயிரத்தி நூத்தி எம்பதாவது வாங்கி இருப்பேன்."



ஓ.கே. யு டோண்ட் வொர்ரி. விதைச்சுருந்தா முளைச்சுருப்பா: திணிச்சுட்டாங்க. அதாம் பிரச்னை ஆகிடுச்சு. நோ ப்ராப்ளம். நா ஒனக்கொரு வாய்ப்புத் தர்றேன். நீ திரும்பவும் ப்ரைவேட்டா ப்ளஸ்டூ எழுத. ஓ(ம்) அறிவுல, ஓ(ம்) ஸ்டையில்ல எழுது. ஒன்னோட மார்க்கே நீ வாங்கலாம். சரியா."



ஒரு வருசம் வீணாகுமே."

பரவாயில்ல. ஒரு வருசந்தானே. பட் ஒன்னோட வாழ்க்க ஒனக்குக் கெடச்சுருமே."



எஸ்... எஸ் எழுதுறேன்."



இப்ப சந்தோஷமா இருக்குறியா."



நிச்சயமா."



நீ விரும்புற மார்க் ஒனக்கு வந்துருச்சு. அடுத்து என்ன படிக்க விரும்புற?"



டாக்டருக்கு."



டாக்டர்ன்னா."



ஒரு சைக்யார்டிஸ்டா வரணும்."



ஓகே... ஓகே... ஓகே..."



ஏன் இப்புடி சத்தம் போட்டுச் சிரிக்கறீங்க. நான் வரமாட்டேனா?"


யார் சொன்னது. நீ என்னைவிட சிறந்த சைக்யார்டிஸ்டா வருவ. வரணும். என் இதய பூர்வமான வாழ்த்துக்கள் கோபாலகிருஷ்ணா."



நன்றி - கல்கி, சீதாரவி,அமிர்தம் சூர்யா, கதிர் பாரதி,புலவர் தருமி

ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கம்

 India First Medal London Olympics Gagan Narang Wins

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் ககன் நரங், வெண்கலப்பதக்கம் வென்றார்.



லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள முதல் பதக்கம் இதுதான் என்பதால் இந்தியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா, ககன் நரங் ஆகியோர் களமிறங்கினர்.


இன்று மதியம் நடைபெற்ற தகுதி சுற்றில் மொத்தம் 47 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா அதிர்ச்சித் தோல்வியுற்று வெளியேறினார். அதே சமயம், தகுதி சுற்றில் 3வது இடத்தை பிடித்த இந்தியாவின் ககன் நரங் இறுதி சுற்றிற்கு முன்னேறினார்.


மாலையில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா, ருமேனியா உட்பட 8 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக புள்ளிகளை சேர்த்த ருமேனிய வீரர் அலின் ஜார்ஜ் 702.1 புள்ளிகளை சேர்த்து தங்கப்பதக்கத்தை வென்றார்.


அவரை தொடர்ந்து இத்தாலிய வீரர் நிக்கோலோ கேம்பிரினி 701.5 புள்ளிகளை பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். இதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் ககன் நராங் 701.1 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்றார்.


இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் கிடைத்தது.


லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கம் பெற்று தந்துள்ள ககன் நரங், கடந்த 2006 மெல்போர்னில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 4 தங்கப்பதக்கங்களை வென்றவர். அதேபோல கடந்த 2010ம் ஆண்டு டெல்லி காமன்வெல்த் போட்டியிலும் ககன் நரங் 4 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

நன்றி - தட்ஸ் தமிழ் 




லண்டன், ஜூலை 30: லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் துப்பாக்கி சுடுதலில் அபிநவ் பிந்த்ரா 594 புள்ளிகளுடன் 16வது இடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார். கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ககன் நரங் துப்பாக்கி சுடுதலில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ககன் நரங் 701,1 புள்ளிகள் பெற்று 3வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் முதல் பதக்கமாகும். 

ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு கிடைக்கும் 3வது பதக்கம் ஆகும். இதற்கு முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு இந்தியாவின் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் மூலம் வெள்ளிப்பதக்கமும், கடந்த 2008ம் ஆண்டு அபினவ் பிந்த்ரா மூலம் தங்கப்பதக்கமும் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.


கடந்த 2004 மற்றும் 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லத் தவறிய ககன் நரங், இந்த ஆண்டு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



 நன்றி - தினமணி

மு.க. ஸ்டாலின் சமாளிஃபிகேஷன் பேட்டி @ கல்கி - 60 வயசாகியும் ஏன் இளைஞர் அணித்தலைவர் போஸ்ட்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvYML7yE0zxUeED6eWA_yuDMGHIoCoY352zlsIs3hh_MBD0OeCyvert9X-cnjNagMaaZzEwQsxx2cJCppIqCxc6UQQtqVTHOk3irMrVTIky5_AdmVA-rEHClK7Xpkk93fQWRsABLMxNpdk/s1600/thuglak+dated+14.04.2010.jpg 


இளைஞர் அணிக்கு வயது 33!



எங்கள் எழுச்சி எதிரிகள் வீழ்ச்சி!



ஸ்டாலினுடன் ஒரு சந்திப்பு!

ப்ரியன்



தி.மு.க. பொருளாளரும், அதன் நம்பிக்கை நட்சத்திரமுமான மு.க. ஸ்டாலின் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார். அவரது குஷிக்குக் காரணங்கள் இரண்டு


. ஒன்று, தமிழகமெங்கும் உள்ள மாவட்டங்களுக்கு விஸிட் செய்து ஒன்றிய, நகர, பகுதி, மற்றும் பேரூர் இளைஞர் அணிக்கு, அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமித்தது;


 அடுத்து, சமீபத்தில் நடத்திய சிறை நிரப்புப் போராட்டம் இளைஞர்களின் பங்களிப்பால் வெற்றிகரமாக நடந்தது. எங்கள் இளைஞர்களின் எழுச்சியால் எதிரிகள் நடுங்குகிறார்கள்" என்கிறார் ஸ்டாலின்.


 முப்பத்தி இரண்டு ஆண்டுகள் முடித்து முப்பத்தி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளைஞர் அணி குறித்து இங்கே பேசுகிறார் ஸ்டாலின்.



சென்ற சட்டமன்றத் தேர்தலில் கழகம் தோல்வியடைந்த பின் இளைஞர் அணியை இன்னமும் பலப்படுத்தி, அதற்கு புத்துணர்வு ஊட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. கழகம் தோல்வியடைந்திருந்த நிலையில், தொண்டர்கள் விரக்தியினால் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்று பலர் சொன்னார்கள். இருந்தாலும் கழக இளைஞர்கள் மீது எனக்கிருந்த நம்பிக்கை தளரவில்லை. மாவட்டம் மாவட்டமாக விஸிட் செய்தேன். ஆளும்கட்சி கிளப்பிய கைது பயத்தை தூக்கியெறிந்து விட்டு இளைஞர்கள் வெள்ளமென திரண்டார்கள். தமிழகமெங்கும் 4649 அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை நியமித்திருக்கிறோம்.


 ஒன்றிரண்டு மாவட்டங்களில், சில உரசல்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் வெற்றிகரமாக சமாளித்து அந்த மாவட்டங்களிலும் நிர்வாகிகளைப் போட்டிருக்கிறோம். இப்போது மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் போடுவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன" என்கிறார் இளைஞர் அணியின் செயலாளராக விளங்கும் ஸ்டாலின். 1984 முதல் இந்தப் பொறுப்பில் இருக்கிறார் ஸ்டாலின்.

http://www.tamilhindu.com/wp-content/uploads/cartoon-kagidha-odam.jpg


1949-ல் தோன்றிய தி.மு.க.வில் 1980ல்தான் இளைஞர் அணி உருவாக்கப்பட்டது என்பது ஆச்சர்யமாக இருக்கிறதே!



பேரறிஞர் அண்ணாவின் பின்னால் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் அணி திரண்டார்கள். மொழி, இன உணர்வு, சமூக நீதி என்று கழகத்தின் இலட்சியப் பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழர்களின் மொழி உணர்வின் உச்சகட்ட வெளிப்பாடு. தொடர்ந்து 1967ல் கழகம் ஆட்சியைப் பிடித்தது. அதற்குப் பிறகு, கழகத்தில் இளைஞர்களின் புது வரவு கணிசமாக குறைந்து வருவது தெரியவந்தது.


 அண்ணாவின் பின் அணிவகுத்த இளைஞர்களும் முதியவர்களாகி வர, இந்த விஷயத்தில் புதிய பார்வையும், அணுகுமுறையும் தேவை என்று உணரப்பட்டது. மாறிவரும் சூழலை முற்றும் உணர்ந்து, காலத்திற்கேற்ற தேவையாக டாக்டர் கலைஞர் அவர்களால், கழகத்தில் மற்றொரு அணியாக இளைஞர் அணி உருவாக்கப்பட்டது. மதுரை ஜான்சி ராணி திடலில் இளைஞர் அணி தொடங்கப்பட்ட போது கழகம் ஆட்சியில் இல்லை. இருந்தும் அந்தத் தொடக்கம் மிகப் பெரிய எழுச்சியாக இருந்தது




உடனேயே நீங்கள் அதன் செயலாளர் ஆகிவிட்டீர்களா?!



இல்லையில்லை... இரண்டு வருட காலம் நிர்வாகிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. 1982ல் திருச்சி வாசவி மகாலில் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பலரும் என்னை செயலாளர் ஆக்க வேண்டும் என்று மிக வலியுறுத்திப் பேசினார்கள். ஆனால் தலைவர் ஒப்புக்கொள்ளவேயில்லை. ‘மகனை நியமித்து விட்டார்’ என்ற விமர்சனம் வரும் என்று கடைசி வரை ஒப்புக் கொள்ள மறுத்தார். எனவே பேராசிரியர் மாற்று ஏற்பாடாக நானும் உள்ளிட்ட ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவில் திருச்சி சிவா, பரிதிஇளம் வழுதி, தாரை மணியன், வாலாஜா அசேன், ஜெயம் ஜூலியஸ், பஞ்ச வர்ணம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.


 அடுத்த இரண்டு வருடம் நாங்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மாவட்ட அளவில் நிர்வாகிகள் போட்டோம். அந்தக் காலகட்டம் மறக்க முடியாதது. ஒரே காரில் நாங்கள் செல்வோம். பெரும்பாலும் நான்தான் கார் ஓட்டுவேன். இந்தச் சமயத்தில் என் நெஞ்சில் என்றும் பசுமையாக இருக்கும் ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.



1967-68ல் கோபாலபுரம் பகுதியில் இளைஞர் தி.மு.க. என்ற பெயரில் சார்பு மன்றம் வைத்திருந்தோம். அதன் சார்பாக அண்ணா பொன்விழா கொண்டாட முடிவு செய்தோம். ம.பொ.சியை அணுகினோம். அவர் வர ஒப்புக் கொண்டார். நான் நண்பர்களுடன் அண்ணா அவர்களை விழாவுக்கு அழைக்கச் சென்றேன். அண்ணா மாடியில் உடம்பு முடியாமல் படுத்திருந்தார். கீழே என்.வி. நடராசன், சத்தியவாணி முத்து ஆகிய தலைவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். ‘அண்ணாவைப் பார்க்க முடியாது’ என்று சொல்லி விட்டார்கள். ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன். ஒன்றிரண்டு மணி நேரம் கழித்து, அண்ணாவின் கார் என் வீட்டுக்கு வந்தது. ஓட்டுநர் வந்து, ‘அண்ணா அழைத்தார்’ என்று கூப்பிட்ட போது பிரமிப்பு; ஆச்சர்யம். சந்தித்து விழாவுக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்



 ‘ஏற்பாடு செய்... வருகிறேன்’ என்றார். ஆனால் அண்ணாவின் உடல்நிலை மேலும் மோசமாக அவர் விழாவுக்கு வர முடியவில்லை. ம.பொ.சி. தலைமையில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். இந்தச் சம்பவத்தை எதற்குச் சொல்கிறேன் என்றால் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. போன்று தமிழகமெங்கும் இளைஞர் மன்றங்கள் இயங்கி வந்தன. எனவே, நாங்கள் மாநிலம் முழுதும் இளைஞர் அணியை கட்டமைப்பது சுலபமாக இருந்தது. 1984-ல் நான் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டேன். இன்று கிட்டத்தட்ட ஒரு கோடி கழக உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் 25 லட்சம் பேர் இளைஞர் அணி. கழகக் கோட்டையின் காவல் அரணாக இளைஞர் அணி உருவாகியிருப்பது மிகுந்த நம்பிக்கையை கொடுக்கிறது."

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHmxMbhxFIQZGqbQTJpDKuug3J4VLZlaAyGBQoS37xFVFRby1JXHF6hQ-WzlaBjdUHDMeJginPzXWwS8CTI3bx1UXTPIj8dkHaMPWAVcR-6oE559c4e9bz4y7de2683ByFtMrelyHpGCs/s1600/karuna+retair.jpg

கழகப் பிரமுகர்களின் மகன்கள்தான் இளைஞர் அணியில் பிரகாசிக்க முடியும் என்று சொல்லப்படுகிறதே?



தவறான கருத்து. உழைப்பும் பொது நல அர்ப்பணிப்பும் மிக்க இளைஞர்கள் எந்தவித பின்புலமுமின்றி உயர்ந்திருக்கிறார்கள். பொன்முடி, அன்பரசன், மா. சுப்பிரமணியன், முபாரக், கார்த்தி என்று சொல்லிக் கொண்டே போகலாம்."



தேர்தல் வந்தால் பெரும்பாலான சீட்கள் இளைஞரணிக்கு என்பதால்தான் ‘அணி திரள்கிறார்கள்’ என்பது உண்மைதானா?



நான் ஏற்கெனவே சொன்னது போல கழகத்தில் உள்ள மற்ற அணிகளைப் போலத்தான் இளைஞர் அணியும் இருக்கிறது. தேர்தலில் சீட் என்பது வெற்றி வாய்ப்பை மனத்தில் வைத்துத்தான் கொடுக்கப்படும். இளைஞர் அணியில் உள்ள திறமையாளர்களைப் போல மற்ற அணிகளிலும் திறமையானவர்கள், விசுவாசமிக்கவர்கள் இருக்கிறார்கள். எனவே இளைஞர் அணியில் இடம்பெற்றிருந்தாலே தேர்தல் சீட் கிடைக்கும் என்பது சரியல்ல."



வர்த்தகமயமாகி விட்ட அரசியலில் பொதுநல அர்ப்பணிப்புடன் இளைஞர்கள் வருகிறார்களா?



சமூகத்தில் பல துறைகள் சீரழிவைச் சந்தித்து வருவதைப் போன்று அரசியலிலும் சறுக்கல் இருக்கத்தான் செய்கிறது. சுயநல நோக்கத்துடன் ஒருசிலர் வரக்கூடும். பாசறைக் கூட்டம் என்று பெயரில் இளைஞர்களின் உரத்த சிந்தனையையும், சமூக நோக்கங்களையும் செழுமைப்படுத்துகிறோம். கழகத்தின் அடித்தள லட்சியங்களை அவர்கள் மனத்தில் வேர் ஊன்றக்கூடிய அளவில் விதைக்கிறோம். எங்களை நோக்கி வீசப்படும் விமர்சனக் கணைகளை எப்படி எதிர்ப்பது என்ற பயிற்சியும் கொடுக்கிறோம்."



அது சரி ஸார். மாவட்ட அளவில் அமைப்பாளர்களுக்கு முப்பது வயது என்று வரம்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் மேல்மட்ட அளவில் பார்த்தால் அறுபது வயது ஆனவர் கூட பொறுப்பில் இருக்கிறார்களே. உங்களுக்கே கூட அறுபது ஆகிவிட்டதே...?




பொதுவாகவே இதுபோன்ற விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் முப்பது வயதுக்குள்தான் இருக்க வேண்டும். மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கு வயது வரம்பு நாற்பது. ஆனால் கழக சட்டத்தின்படி தலைமைக் கழகத்தில் பொறுப்பில் உள்ள எங்களுக்கு வயது வரம்பு இல்லை. களத்தில் இருப்பவர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், மேலே வழி காட்டக்கூடிய இடங்களில் இருப்பவர்கள் அனுபவமும், முதிர்ச்சியும் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்த ஏற்பாடாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்."

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja6y-3oPMROkp8KZRsI4Y259Nsm1W869BVx93x_BtXD-F-fhvnwVmSYjx-ulshXIIuYYnhtYQj3wG50K8FEknlIhQd0YwH9K4BEb-BVKm3_zdScedp-RSffJfnqGrw_D8eHccnlWq1LeE/s400/p7b2.jpg

கழகத்தில் எதிர்பார்க்கப்படும் உயரத்தைத் தொட காத்திருக்கும் நீங்கள் தகுதிவாய்ந்த மற்றொருவருக்கு இளைஞர் அணி பொறுப்பைக் கொடுக்கும் காலம் வந்துவிட்டதா?



பொருளாளர் பதவியுடன் கூடுதல் பொறுப்பாகவே இளைஞர் அணி செயலாளர் பொறுப்பையும் வகிக்கிறேன். கொடுக்கப்பட்ட பொறுப்புகளை அனைவரது ஒத்துழைப்புடன் நிறைவேற்றி வருகிறேன். மற்றபடி இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க வேண்டியவர்கள் தலைவரும், பேராசிரியரும்தான். அவர்கள் தக்க நேரத்தில் முடிவெடுப்பார்கள்."





தலைவரது மகனாக இருப்பதால் இளைஞர் அணி சிறப்புச் சலுகைகளைப் பெறுகிறதா?




தலைவரைப் பொறுத்தவரை எல்லா அணிகளையும் சமநோக்கோடுதான் பார்க்கிறார். ஒரு உதாரணம்: அறிவாலயத்துக்கு கழக அலுவலகம் மாற்றப்பட்ட பின் அன்பகத்தை இளைஞர் அணி பயன்பாட்டுக்குக் கேட்டோம். அப்போது அங்கே தொழிற்சங்கமும் இயங்கி வந்தது. எந்த அணி பத்து லட்சம் கொடுக்கிறதோ அதற்குத்தான் அன்பகம் கொடுக்கப்படும்" என்று சொல்லிவிட்டார் தலைவர். அதன்பின் தமிழகமெங்கும் அலைந்து திரிந்து ரூபாய், ரூபாயாக சேர்த்து பதினொரு லட்சத் தைக் கொடுத்துதான் இளைஞர் அணிக்காக அன்பகத்தைப் பெற்றோம். தலைவர் மகனென்று தூக்கிக் கொடுக்கப்படவில்லை."



இளைஞர் அணியின் அடுத்தகட்ட நடவடிக்கை?



அமைப்பாளர்கள் போடுவது கூடிய விரைவில் முழுவதுமாக முடிந்துவிடும். அடுத்து இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு விரைவில் நடைபெறப் போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தேதியும், இடமும், தலைவர், பேராசிரியர் ஒப்புதலுடன் அறிவிக்கப்படும்!"



அடேங்கப்பா!


இளைஞர் அணி சார்பாக அறக்கட்டளையொன்றை நிறுவியிருக்கிறார்கள். அண்ணா, கலைஞர் பிறந்த நாளின் போது பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்பித்தல் போட்டி என்று அசத்துகிறார்கள். பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு பரிசுத் தொகைகள் வழங்கப்படுகின்றன. இந்த வகையில் அறக்கட்டளையின் சார்பாக இரண்டு கோடியே பதினேழு லட்ச ரூபாய் பரிசுத் தொகை இதுவரை வழங்கப்பட்டிருக்கிறதாம்.



நன்றி - கல்கி, சீதாரவி,அமிர்தம் சூர்யா, கதிர் பாரதி,புலவர் தருமி,அன்னா கண்ணன்


http://img.photobucket.com/albums/v144/annakannan/ulalal.jpg