Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Monday, July 30, 2012

ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கம்

 India First Medal London Olympics Gagan Narang Wins

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் ககன் நரங், வெண்கலப்பதக்கம் வென்றார்.



லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள முதல் பதக்கம் இதுதான் என்பதால் இந்தியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா, ககன் நரங் ஆகியோர் களமிறங்கினர்.


இன்று மதியம் நடைபெற்ற தகுதி சுற்றில் மொத்தம் 47 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா அதிர்ச்சித் தோல்வியுற்று வெளியேறினார். அதே சமயம், தகுதி சுற்றில் 3வது இடத்தை பிடித்த இந்தியாவின் ககன் நரங் இறுதி சுற்றிற்கு முன்னேறினார்.


மாலையில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா, ருமேனியா உட்பட 8 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக புள்ளிகளை சேர்த்த ருமேனிய வீரர் அலின் ஜார்ஜ் 702.1 புள்ளிகளை சேர்த்து தங்கப்பதக்கத்தை வென்றார்.


அவரை தொடர்ந்து இத்தாலிய வீரர் நிக்கோலோ கேம்பிரினி 701.5 புள்ளிகளை பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். இதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் ககன் நராங் 701.1 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்றார்.


இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் கிடைத்தது.


லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கம் பெற்று தந்துள்ள ககன் நரங், கடந்த 2006 மெல்போர்னில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 4 தங்கப்பதக்கங்களை வென்றவர். அதேபோல கடந்த 2010ம் ஆண்டு டெல்லி காமன்வெல்த் போட்டியிலும் ககன் நரங் 4 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

நன்றி - தட்ஸ் தமிழ் 




லண்டன், ஜூலை 30: லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் துப்பாக்கி சுடுதலில் அபிநவ் பிந்த்ரா 594 புள்ளிகளுடன் 16வது இடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார். கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ககன் நரங் துப்பாக்கி சுடுதலில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ககன் நரங் 701,1 புள்ளிகள் பெற்று 3வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் முதல் பதக்கமாகும். 

ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு கிடைக்கும் 3வது பதக்கம் ஆகும். இதற்கு முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு இந்தியாவின் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் மூலம் வெள்ளிப்பதக்கமும், கடந்த 2008ம் ஆண்டு அபினவ் பிந்த்ரா மூலம் தங்கப்பதக்கமும் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.


கடந்த 2004 மற்றும் 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லத் தவறிய ககன் நரங், இந்த ஆண்டு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



 நன்றி - தினமணி

Thursday, June 28, 2012

சானியா மிர்சா ஆவேச தாக்குதல் - ஆணாதிக்கவாதம்

http://img.stillgalaxy.com/public/06-24-2011/sania-mirza/sania-mirza-hot-photos-0.jpg 

அதிருப்தியில் இருக்கும் லியாண்டர் பயûஸ சமாதானப்படுத்துவதற்காக தான் பலிகடா ஆக்கப்பட்டதாகக் கூறி அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ), பயஸ் ஆகியோர் மீது கடுமையாகச் சாடியுள்ளார் சானியா மிர்சா.


 ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவின் சானியா மிர்சாவுக்கு மகளிர் இரட்டையர் பிரிவிலும், சோம்தேவுக்கு ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் செவ்வாய்க்கிழமை இரவு வைல்கார்டு (நேரடித்தகுதி) வழங்கியது சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎஃப்).  இதைத் தொடர்ந்து டென்னிஸ் சங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ள சானியா, தன்னுடைய அறிக்கையில் மேலும் கூறியிருப்பது:


 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பது இன்ப அதிர்ச்சியாக உள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து இந்தியாவின் சார்பில் 2-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை எனக்கு வழங்கிய சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  ஒலிம்பிக் போட்டிக்கான அணி அறிவித்தது முதலே பயஸýடன் இணைந்து விளையாடுவீர்களா என்று நண்பர்கள், உறவினர்கள், சக வீரர், வீராங்கனைகள் குறிப்பாக ஊடகங்கள் என அனைவரும் என்னிடம் கேள்வியெழுப்பினர்.

 அப்போதைய சூழ்நிலையில் வைல்டுகார்டு கிடைக்காமல் அதுபற்றி பேசுவது சரியாக இருக்காது என்று நினைத்தேன்.  கலப்பு இரட்டையரில் பயஸýடன் இணைந்து விளையாடுவதற்கு நான் எழுத்து மூலமாக உறுதியளிக்க வேண்டும் என்று அவருடைய தந்தை வேஸ் பயஸ் தொலைக்காட்சிகள் மூலமாக என்னை நிர்பந்தித்தார். நான் என்னுடைய நாட்டுக்காக விளையாடுகிறேன்.  அதனால் பயஸ், பூபதி, போபண்ணா, விஷ்ணுவர்தன், சோம்தேவ் என யாருடன் வேண்டுமானாலும் இணைந்து விளையாடுவேன். ஒருபோதும் விளையாட முடியாது என்று மறுக்கமாட்டேன். 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaCT-JGiHBn4IDpNhKQYYU2XkklJ8CIyB3kIRgY096Ky0xa-tiOAvtv18Ns7X-AW1i08lPKO_m0o_kvFFh9K4pVhvne7vnO_7SwdZU_H4K8EENJVx88bmSk5ts_im-sVGSSz6gma980NTE/s1600/Sania+Mirza+Hot+Pics.jpg

  ஆடவர் இரட்டையர் பிரிவில் போபண்ணாவுடன் இணைந்து விளையாடுவதில் பூபதி மிக உறுதியாக உள்ளார். அவருடன் இணைந்து விளையாடினால் இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புகிறார். அதேநேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸýக்கு விட்டுக்கொடுத்து அவர் தியாகம் செய்திருக்கிறார்.  21-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண்ணாகிய நான், அதிருப்தியில் இருக்கும் பயûஸ சமாதானப்படுத்துவதற்காக பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறேன்.

இதன்மூலம் நான் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறேன். பயஸýடன் விளையாடுவது பெருமைக்குரிய விஷயம் என்றாலும், இந்த முடிவு எடுக்கப்பட்ட விதமும், வெளியாகியிருக்கும் நேரமும் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.  பயஸýடன் விளையாட முடியாது என்று மகேஷ் பூபதி கூறிவிட்டதால், அவரை சமாதானப்படுத்துவதற்காக இப்போது நான் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறேன். நாட்டின் மிகப்பெரிய அமைப்பான டென்னிஸ் சங்கத்தினால் நான் இழிவுபடுத்தப்பட்டுள்ளேன்.

அதை இங்குள்ள பெண்கள் அமைப்பினர் கண்டிக்க வேண்டும். பயஸ், பூபதிக்கு அடுத்தபடியாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மூன்றாவது நபர் நான்.  கடந்த வாரம் பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றபோதும் டென்னிஸ் சங்கத்திடம் இருந்து எவ்வித வாழ்த்தும் எனக்கு வரவில்லை. அப்படியிருந்தும் என் மீது டென்னிஸ் சங்கத்தினர் மரியாதை வைத்திருப்பார்கள் என்று நம்பினேன். ஆனால் இப்போது இழிவுபடுத்தப்பட்டுவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 திறமை அடிப்படையில் அணி தேர்வு:  சானியாவுக்கு ஏஐடிஏ பதில்  புது தில்லி, ஜூன் 27: திறமையின் அடிப்படையிலேயே டென்னிஸ் அணி தேர்வு செய்யப்பட்டதாக அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) தெரிவித்துள்ளது.  சானியாவின் ஒப்புதலுக்குப் பிறகே இந்த அணி தேர்வு செய்யப்பட்டது என்றும் ஏஐடிஏ தெரிவித்துள்ளது. அணி தேர்வு விவகாரத்தில் சானியா கடுமையாக சாடியுள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் ஏஐடிஏ பொதுச் செயலர் பரத் ஓஸô வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:  திறமையின் அடிப்படையிலேயே கலப்பு இரட்டையரில் சானியா, பயஸ் இருவரையும் விளையாட வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvUhMHe9wHOUHxpEHs4VC0Rw7rjNqoqc8axav6pely2BQtn8ssOVv4lPI-hzjvIrKfMK8uMlZDyO2QN1Of31T6WvY6fGwkDzKpy7UviY_25AyD8P1DR4EMDCE-JIrYT_TP9JOgdsoyr-I/s400/sania.jpg


. தரவரிசையில் லியாண்டர் பயஸ் 7-வது இடத்திலும், சானியா 12-வது இடத்திலும் உள்ளனர். அதனடிப்படையிலேயே கலப்பு இரட்டையர் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள 12 முன்னணி அணிகளில் பயஸ்-சானியா அணி 9-வது இடத்தைப் பிடிக்க முடிந்தது. 


 சானியாவும், பயஸýம் இணைந்து விளையாடினால் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும் என ஏஐடிஏ நம்புகிறது. இந்திய வீரர்கள் தங்களின் கருத்து வேறுபாட்டை மறந்துவிட்டு நாட்டு நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ஒன்றாக இணைந்து விளையாட வேண்டும். பொது இடங்களில் ஒருவர் மற்றொருவர் குறித்து குற்றம்சாட்டுவதை விட்டுவிட்டு, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



THANX - DINAMANI