Friday, November 26, 2010

கொலைக்கேசில் மாட்டிய ஆளுங்கட்சித்தலைவர்


1. “மன்னா!  மற்போர்  புரியலாமா,  விற்போர்  புரியலாமா  என்று  எதிரிநாட்டு மன்னன்  அறைகூவல்  விடுக்கிறான்!”

“தளபதி!  சொற்போர்  புரியலாம்  என்று  கூறு.  அப்போதுதான்  நமக்கு  எந்தச்  சேதாரமும்  இருக்காது!”



2. “நம்ம  தலைவர்,  கொலை  கேஸ்ல  கோர்ட்  விசாரணையின்போது  ஏதோ கோக்குமாக்கா  குறுக்குக்  கேள்வி  கேட்டாராமே?”

“ஆமா,  சின்னப்  பசங்க  கொலை  செஞ்சா,  சிறுவர்  சீர்திருத்த்ப்  பள்ளியில  போடறீங்க.  ஆனா,  பெரியவங்க  கொலை  செஞ்சா  மட்டும்  ஏன்  முதியோர்  சீர்திருத்தப்  பள்ளியில  சேர்க்காம,  ஜெயில்ல  போடறீங்கனு  கேட்டாரு!”



3. “சொத்துக்  குவிப்பு  வழக்குல  உங்களை  கோர்ட்  ரிலீஸ்  பண்ணிடுச்சே...  இதைப்  பத்தி  என்ன  நினைக்கறீங்க  த்லைவரே?”

“இந்த  மாதிரி  சாட்சி  கிடைக்காம  கேஸ்  தடுமாறும்னு  தெரிஞ்சிருந்தா,  இன்னும்  அதிகமா  சொத்து  சேர்த்திருக்கலாமேன்னுதான்!”



4. “மந்திரியாரே,  எதிரி  மன்னன்  தகவலை  புறா  மூலம்  அனுப்பாமல்,  மைனா  மூலம்  அனுப்பியுள்ளானே,  ஏன்?”

“புரியவில்லையா  மன்னா! உங்களுடையது  மைனாரிடி  அரசு  என்று  சுட்டிக்காட்டுகிறான்!”



5. “ம்ன்னர்  சேடிப்  பெண்ணைப்  பார்த்து  ‘உன்னை  எல்லாம்  வைக்க  வேண்டிய  இடத்தில்  வைக்க  வேண்டும்’  என்கிறாரே...  அவளிடம்  அப்படி என்ன  தவறு  கண்டார்?”

“நீ  வேற!  மன்னர்  சேடிப்  பெண்ணின்  அழகில்  மயங்கி,  அந்தப்புரத்தில் வைக்கத்  திட்டம்  போடுகிறார்!”



6. “அமைச்சரே!  அண்டை  நாட்டு  அரசர்கள்  என்  மீது  என்ன  அபிப்ராயம்  வைத்திருக்கிறார்கள்?”

“மன்னா!  உங்களிடம்  பொது  வாழ்வில்  நேர்மையும்  இல்லை...  போர்  வாழ்வில்  கூர்மையும்  இல்லை  என்றுதான்  அபிப்ராயப்படுகிறார்கள்!”



7. “என்னதான்  கெட்ட  செய்தியாக  இருக்கட்டும்...  தூது  வந்த  புறாவின்  முதுகில்  நீங்கள்  அப்படி  ஓங்கி  அடித்திருக்கக்  கூடாது  மன்னா!”

“அதனால்  என்ன  அமைச்சரே!”

புற  முதுகிட்டவர்  என்ற  அவப்  பெயரோடு  புறா  முதுகில்  இட்டவர்  என்ற  அவப்  பெயரும்  சேர்ந்துகொண்டதே!”



8. “தலைவர்  கார்ல  போறப்ப  குழியில  விழுந்து,  படுகாயம்  அடைஞ்சுட்டாரு!”

“அதுக்காக  பள்ள  நிவாரண  நிதி  வசூல்  பண்ணக்கிளம்பிடறதா?”



9. “தலைவரோட  தமிழ்ப்  பற்றுக்கு  ஒரு  அளவே  இல்லாமப்போச்சு!”

“எப்படிச்  சொல்றே?”

“உதட்டில்  வரும்  உமிழ்  நீர் கூட  தமிழ்  நீராக  வர  ஆசைப்படுகிறேன்னு ஏகத்துக்கும்  உதார்  விடறாரே!”