Showing posts with label icewarya. Show all posts
Showing posts with label icewarya. Show all posts

Friday, July 26, 2013

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்

 

ஹீரோ  தன்னோட  ஓனரோட  பணம்  2 லட்சத்த பஸ் ல  கொண்டு போகும் போது  ஹீரோயின் அறிமுகம்  கிடைக்குது .அந்த  குதிரேமுக்  டப்பா  பிகரை  இவரு  லவ்வறாரு .அந்த கேனமும்  இவரை  லவ்வுது .அதே ஹீரோயினை  வில்லனும் லவ்வறாரு.வில்லன்னா லட்சணமா  ஹீரோயினை ரேப்  பண்ணாம பொண்ணு கேட்டு  டார்ச்சர்  பண்றாரு .வில்லன் கிட்டே  இருந்து  ஹிரோயினை  ஹீரோ  எப்படி காப்பாத்தறார்  என்பதே  மீதி  தலைவலி  கதை .


பார்த்து  பார்த்து  புளிச்சுப்போன அரதப்பழசான கதை .விஷால் கழுவாத முகத்தோட  படம் பூரா  வர்றாரு .இதுல என்ன காமெடின்னா  சநதானத்தை விட இவருக்கு வசனங்கள்  3 ல்  1 மடங்கு கூட இல்லை.


இடைவேளை ட்விஸ்ட்க்காக  அவர் மதுரைல ஆல்ரெடி 3 கொலை  பண்ணி இருக்கேன்னு சொல்லும்போது பெரிய  ஷாக் எல்லாம் வரலை .இவர் டான்ஸ் ஆடும்போது  விஜயை இமிடேட் பண்றது பத்தாதுன்னு  கவுண்டமணியும் இமிடேட்டிங் அண்ட் இரிட்டேட்டிங் 





ஹீரோயின் ஆக்ஷன் கிங்க் அர்ஜூன் பொண்ணு  ஐஸ்வர்யா அர்ஜூன் . கார்த்திகா மாதிரி  வரைஞ்சு வெச்ச  பெரிய புருவம் . அது மட்டும் தான் பெருசு . மத்ததெல்லாம் சிறிசு . ஐ மீன் கண்ணு கன்னம் எல்லாம் .ரொம்ப சின்னது . ஓவர் மேக்கப் . பொம்மை மாதிரி இருக்கார் . ரசிக்கவே முடியலை . துப்பட்டாவே தேவைப்படாத  அதிர்ஷ்டசாலி .அது போக  கண்ணுக்கு கீழே  தூக்கம் கேட்ட தடயம் .ம்ஹூம் . தேறாது.


சந்தானம் தான்  நி ஜ ஹீரோ . படம் பூரா இவர் ராஜ்ஜியம் தான் . ஆனா சிரிப்பு கம்மியாதான் வருது ,. ஓவர் டோஸ். ஏதோ அவருக்கு சீன் வெச்சா போதும்னு அதிகமா ஸ்க்ரிப்டுக்கு மெனக்கெடலை போல.


மயில்சாமி ஒரு ஆச்சரிய அப்ளாஸ் . செம காமெடி  வரும்போதேல்லாம் செம சிரிப்பு


வில்லன் காமெடியன். அவர் அடியாள் காமெடியும் ஓக்கே



இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள் 



1. பட ஷூட்டிங்க்க் நடக்கும்போது ஹீரோ  டைரக்டரை பாராட்டினார்னு பீலா விட்டது 



2. இந்தப்படம் பெரிய டர்நிங்க்க் பாயிண்ட்னு  விஷால் ரீல் பேட்டி குடுக்க வெச்சது 



3. வில்லன் அண்ட் கோ அடியாள்கள் காமெடி அலப்பரைகள் , மயில்சாமி காமெடி சீன்கள் 


4. முதலாளி முன் ஹீரோ  அடிக்கடி " எங்க முதலாளி ந ல்ல  முதலாளி  பாட்டு ரிங்க் டோன் போட்டு கலாய்ப்பது 


5.  கண்டிப்பா கடன் கிடையாது பேப்பரை சந்தானம்  சாப்பிட்டு ஹோ ட்டலில் செய்யும் காமெடி காட்சிகள் 

 6. அரங்கை அதிர வைத்த மயில்சாமி பிக் பாக்கெட் அடிக்கும்போது  மெயின் பேன்ட் ஜிப்பில் கை வைக்கும் காமெடி 








இயக்குநரிடம் சில கேள்விகள்  


1. முதல் சீன்ல வில்லன் ஒரு சூட்கெஸ் ல அரிவாளை காட்டி  கத்தி என்பது 


2. விஷால் 20 ரூபா குடுத்து  ஏழைக்கு மல்லிகைப்பூ வாங்கிக்குடு என்றதும்  பூக்காரி 7 முழம் மல்லிகைப்பூ தருவது 


3. பண்பாடு ., கலாச்சாரம் , பாரம்பரியம்  என பேசும் பட்டிமன்ற ராஜா  சாப்பிட்டுப்போங்க என்பதை இடது கையால் சைகை காட்டி சொல்வது , அதே போல் ஹீரோயினும்  இடது கையால் சாப்பிடுவது பற்றி சைகை காட்டுவது 



4. ஸ்கூல் பெண்கள் எல்லாரும் ரோஸ் கலர் தாவணி அநிந்திருக்கும்போது  பேப்பரில் வரும்  போட்டோவில் மட்டும்  மற்ற பெண்கள்  ப்ளூ டிரஸ் , ஹீரோயின்  மட்டும் ரோஸ் எப்படி? 



5. பெட்ரோல் போடப்போகும்  வில்லன் பங்க்கில் டீச்சரைப்பார்த்ததும்  ஆன் த ஸ்பாட் கடத்தி ரேப் பண்ணுவது  செம காமெடி . பாசிபிலிட்டியே இல்லை 






மனம் கவர்ந்த வசனங்கள் 



1. முதலாளி.உங்கப்பா போட்டோவை நாங்க 4 பேரும் ஆளுக்கு 1 காப்பி வெச்சுக்கறோம் 


சந்தானம் - ஆளாளுக்கு வெச்சுக்க அது என்ன நயன் தாரா வா? எங்க நைனா 


2. இன்ஸ்பெக்டர்.நான் ஒரு ஜென்ட்டில்மேன் 


 நெல்லை சிவா -,ஜென்ட்டில்மேனே ஒரு திருடன் தானே? 


3. சந்தானம் - ஹலோ. 


 அடடே.முதலாளி.நானே கூப்டனும்னு நினைச்சுட்டு இருந்தேன். 



ஓஹோ. சரி.கால் கட் பண்றேன்கூப்டு 



4. என்ன சாப்டறீங்க? லைட்டா டிபனா ? புல் மீல்சா?,



 லைட்டா டிபன் சாப்ட்டுட்டு அப்டியே மீல்சும் சாப்ட்ரோம் 


5. டாடி மம்மி வீட்டில் இல்ல #பாட்டு


 முதல்ல இந்தப்பொண்ணோட அட்ரஸ் வாங்குங்கடா.எப்போ பாரு சிக்னல் குடுத்துட்டே இருக்கு



 
ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  38

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - 

ரேட்டிங் =  2.25  / 5


சி பி கமெண்ட் - சந்தானம்  , விஷால் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம் . பூர் அடிக்கலை , ஆனா  தலை வலிக்குது  . சி சென்ட்டர் ல மட்டும் சுமாரா ஓடும்



  

Wednesday, December 19, 2012

விஜய் டி வி 7 சி ஐஸ்வர்யா பேட்டி

http://www.cinespot.net/gallery/d/980328-1/Aishwarya+Tv+Serial+Actress+Photos+_7_.jpg 

 

நான் நடிகையான கதை! - ஐஸ்வர்யா

தொகுப்பாளியாக, தொடர்களின் நாயகியாக வெற்றி வலம் வந்துகொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக இருந்துகொண்டே "7சி'யில் நடிக்கிறார். சன் தொலைக்காட்சியில் "பைரவி'யாக கலக்கிக்கொண்டே, ஜெயா டி.வியில் பாலசந்தரின் இயக்கத்தில் "இலக்கணம் மாறுதோ' தொடங்கிவிட்டது. அவரிடம் தொடர் நடிப்பு இடைவேளையில் பேசியதிலிருந்து...  


தற்போது நடித்து வரும் தொடர்களைப் பற்றிச் சொல்லுங்கள்?


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "7சி', சன் டிவியில் "பைரவி', இப்போது ஜெயா டிவியில் "இலக்கணம் மாறுதோ' ஆகிய தொடர்களில் நடித்து வருகிறேன். எல்லா தொடர்களிலும் லீட் ரோல் நான் தான் செய்கிறேன்."7சி' தொடரில் எஸ்தராகவும், "பைரவி' தொடரில் மதுராவாகவும், "இலக்கணம் மாறுதோ' தொடரில் சுரபி என்கிற கதாபாத்திரத்திலும் நடிக்கிறேன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "7சி' எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. அதற்குக் காரணம் அந்த கேரக்டர் துடுக்கான, அதே மற்ற ரோல்களைவிட வித்தியாசமாக இருக்கும். நானும் அந்த கேரக்டரில் ரொம்ப இன்வால்வாயி நடிக்கிறேன்."

இலக்கணம் மாறுதோ' உங்களை எந்த விதத்தில் மாறுபடுத்திக் காட்டும் தொடராக இருக்கும்?"


இலக்கணம் மாறுதோ' இப்போதுதான் புதிதாக ஆரம்பித்திருக்கிறது. கவிதாலயா பேனர்ல கே.பாலசந்தர் சாரோட தொடர் இது. பாலசந்தர் சார் தொடர் என்றாலே அதில் ஒரு வித்தியாசம் இருக்கும். அதுவே கேரண்டிதான். இதுவும் கண்டிப்பாக பல சுவரஸ்யங்கள் நிறைந்த தொடராக இருக்கும். அவர் இயக்கிய "சஹானா' தொடரில் நடித்த காவியாவும் இந்தத் தொடரில் நடிக்கிறாங்க. இரண்டு பெண்களின் மணவாழ்கை சம்பந்தப்பட்ட கதையாக "இலக்கணம் மாறுதோ' உருவாகி வருகிறது.கவிதாலயா பேனர்ல நான் ஒரு தொடராவது நடித்துவிட வேண்டும் என்பது என் அம்மாவோட நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு இப்போது நிஜமாகியிருப்பது மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது


. நீங்கள் நடிக்க வருவதற்கு முன்பு, வேடிக்கை பார்க்க போன இடத்தில் நடிகை ஆகிட்டீங்களாமே உண்மையா?


ஆமாம் உண்மைதான். என் அண்ணனுக்கு டிவியில் காம்பெய்ராக ஆக வேண்டும் என்று நிறைய ஆசையிருந்தது. அப்படிப்பட்ட ஒரு நேரத்தில் விஜய்டிவியில் அதற்கான ஆடிஷன் நடந்தது. அதில் கலந்து கொள்ள அண்ணன் போயிருந்தார். அவரோடு நானும் சும்மா வேடிக்கை பார்க்க போயிருந்தேன். ஆனால் அவர் தேர்வாகவில்லை. எதிர்பாராத விதமாக நான் தேர்தெடுக்கபட்டேன். வேடிக்கை பார்க்க போன இடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் காம்பெய்ரிங் பண்ண வந்தேன். அதைத் தொடர்ந்து தொடரில் நடிக்கவும் வாய்ப்புகள் கிடைக்க இப்படியே என் பயணம் தொடர்கிறது.


தொடர்களில் நடிப்பதற்கு முன்பு நீங்கள் தொகுப்பாளினியாக இருந்தீர்கள். அந்த அனுபவம் பற்றி?


நான் தொடர்ச்சியாக மூன்று வருடமாக விஜய் டிவியில் வரும் "ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்தேன். அதே போல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் காம்பெய்ரிங் செய்துள்ளேன். அப்போதிலிருந்தே தொடர்களில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. அதில் விருப்பம்மில்லாமல் இருந்தேன். காரணம் தொகுப்பாளினியாக இருப்பது தொடரில் நடிப்பதைவிட ஈசியாக இருக்கும். ஜாலியாக வந்தோமா, ஹாயாக பண்ணோமா போய்க்கிட்டே இருக்கலாம். தினம் ஆபிஸ் வந்து போகிற பீல் தொடரில் நடிக்கும் போது ஏற்படும். ஆனால் காம்பெய்ரிங் செய்வது அப்படி அல்ல.

சரி இப்படி இருந்த நீங்கள் அப்புறம் ஏன் தொடரில் நடிக்க ஒத்துக்கிட்டீங்க?


எதுவும் ஒரு கட்டத்தில் போரடிக்கும்தானே? அதுமட்டுமில்லை இங்க நிலைக்கணும் என்றால் நம் திறமையை நிரூபிக்கணும். அதற்குத் தொடர்களில் நடிப்பது முக்கியம். அதற்காக காத்திருந்தேன். அப்போதுதான் "வந்தாளே மகராசி' தொடரின் கதையைக் கேட்டேன். மிகவும் பிடித்திருந்தது. அதனால் இத்தொடரில் நடிக்க சம்மதித்தேன். அந்த தொடரின் மூலமாகத்தான் நான் சின்னத்திரை நாயகி ஆனேன்.


நடிகையாகவும் இருக்கீங்க, தொகுப்பாளியாகவும் இருக்கீங்க எதை விரும்பி செய்கிறீர்கள்?


காம்பெய்ரிங்கிற்கும், நடிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. காம்பெய்ரிங் பொருத்தவரை நம்ம வீட்டிலோ நண்பர்களிடமோ பேசுவது போன்று இயல்பாக இருக்கும். அதே சமயம் சில நேரங்களில் சரியாக நிகழ்ச்சி கொடுக்கவில்லை என்றால் உடனே முகத்துக்கு நேரே சொல்லி ஓ வென்று கத்திவிடுவார்கள்.அதுவே நன்றாக இருந்தால் உடனே வாழ்த்துவார்கள், நேரடி நிகழ்ச்சிகள் வழங்குவது ஜாலியாக இருந்தாலும், ரொம்ப கடினமான விஷயம். ஆனால் நடிப்பு அப்படியில்லை, கஷ்டப்பட்டு நடித்து முடித்த பிறகு வெளி இடங்களுக்குப் போகும் போது, ரசிகர்களை சந்திக்கும் போதுதான் நாம் என்ன செய்திருக்கிறோம் என்று தெரியும். நடிக்கும் போது அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட வேண்டியிருக்கிறது. இது ஒரு வித்தியாசமான, புதுமையான நல்ல அனுபவமாக இருக்கிறது. இதில் எது பிடித்திருக்கிறது என்று என்னால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் தொகுப்பாளி ஆன பிறகுதான் நான் நடிகையானேன். அதனால் கம்பெய்ரிங்கும் விடாமல் தொடர்ந்து செய்து வருகிறேன். சமயம் கிடைக்கும்போது மேடை நிகழ்ச்சிகள், திரை விழாக்களையும்கூடத் தொகுத்து வழங்கி வருகிறேன். இதை தவிர விளம்பரப் படங்களிலும் நடிக்கிறேன்.


சினிமாவில் நடிக்க அழைப்புகள் வருகிறதா? அந்தப் பக்கம் போகும் எண்ணம் உண்டா?


ஐந்து வருடமாக பெரிய திரையில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்போதைக்குப் பெரியதிரைக்குப் போகிற எண்ணம் இல்லை. சின்னத்திரையே நிறைவாக இருக்கிறது. அதனால் கண்டிப்பாக பெரிய திரைக்குப் போகமாட்டேன்.


உங்களுடைய வருங்காலத் திட்டங்கள் என்ன?


பதினோராம் வகுப்பு படிக்கும் போதே நான் மீடியாவுக்குள் வந்துவிட்டேன். அதனால் பளஸ் டூ முடித்ததும் விஸ்காம் எடுத்து படித்தேன். ஆன் ஸ்கீரின் மட்டும் அல்லாமல் திரைக்கு பின்னும் இருக்க ஆசைப்படுகிறேன். எனக்கு போட்டோகிராபி ரொம்ப பிடிக்கும். கல்லூரியில் படிக்கும் போது பைனல் இயர்ல போட்டோகிராபியில் யூனிவர்ஸிட்டியில் டாப்பராகவும் வந்தேன். முதலில் எல்லா துறையைப் பற்றியும் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும், டெக்னிக்கலாக அதில் அனுபவம் பெற்ற பிறகு எனக்கு எது சரியாக வருகிறதோ அந்த துறையை தேர்ந்தெடுக்கலாம் என்றிருக்கிறேன் என்ன சரிதானே?


நன்றி - சினிமா எக்ஸ் பிரஸ்