Showing posts with label TNFISHERMEN. Show all posts
Showing posts with label TNFISHERMEN. Show all posts

Wednesday, February 16, 2011

கலைஞருக்கு மீனவன் எழுதும் கடிதம் ( ட்வீட்ஸ்)

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/july/23.07.09/singhalaboat.jpg

1.மீனவன் உயிர் இங்கே ஊசலாடிட்டு இருக்கு...உங்க டி வி ல மானாட மயிலாட ஓடிட்டிருக்கா தலைவரே..


-----------------------------------------------

2.மீன் செத்தா கருவாடு, மீனவன் செத்தா தமிழ்நாடு #கலைஞரின் அடுத்த பட பாட்டுக்கான பல்லவி..?

---------------------------------------------

3.தமிழன் ஒண்ணு தண்ணில மிதக்கிறான் அல்லது பிணமா தண்ணீர்ல மிதக்கிறான் # தமிழ்நாடே சொர்க்கம்டா

----------------------------------

4.
காதலர் தினத்தை நாடே கொண்டாடுது..மீனவன் இறந்த தினத்தை நினைத்து நினைத்து தமிழ்நாடு திண்டாடுது..ஆண்டவா.. மறதியை கொடு

---------------------------------------------
5.சாண்டில்யன் கடல் புறா குடுத்து கலக்குனாரு...கலைஞர் கடல் சுறாக்களுக்கு இரை கொடுத்து கலங்க வைக்கறாரு-விடிவு காலம் எப்போ?
 
 --------------------------------------------
 http://1.bp.blogspot.com/_bnhUKdYMdI4/TUO3jaI5gWI/AAAAAAAAAIM/5i1H43ivJbY/s1600/meena.jpg
6.அரசியல்வாதிகள் சீட்டுக்கு நாய் மாதிரி அலையறான்கள்.மீனவர்கள் நாய் மாதிரி சுடப்படுகிறர்கள்.தமிழ்நாட்டின் தேசிய விலங்கு நாய்?

-----------------------------------------


7. தமிழ்நாட்டைத்தான் ஆண்டவனால காப்பாத்த முடியல.. தமிழக எல்லை கடந்த மீனவர்களையுமா?

------------------------------------------

8.இலங்கைத்தமிழன் செத்தான்.. இப்போ மீனவன் சாகறான். கலைஞர்  டி வி ல கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்படம் பார்த்துட்டு இருப்பாரோ..?

-------------------------------------

9. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு கவலை இல்லை.. ஆனா தமிழன் அநியாயமா மாண்டாலும் கவலை இல்லைன்னு கலைஞர் மாதிரி கமுக்கமா என்னால இருக்க முடியல.


---------------------------------------

10.மக்களுக்காக பாடுபடறேன் பாடுபடறேன்னு சொல்லீட்டு இப்படி மீனவனை பாடாப் படுத்தலாமா? கலைஞரே!

-------------------------------