Showing posts with label Samantha. Show all posts
Showing posts with label Samantha. Show all posts

Friday, May 06, 2016

24 - சினிமா விமர்சனம்


இயக்குநர் விக்ரம் குமார்க்கு எந்த தமிழ் இயக்குநருக்கும் இல்லாத ஒரு பெருமை உண்டு. வழக்கமா தெலுங்குப்படத்தை ,ஹிந்திப்படத்தை தமிழ் ல ரீமேக் பண்ணின தமிழ் சினிமா உலகத்தில்  முதல் முறையா தமிழ் சினிமா வை ஹாலிவுட் சினிமா ரீமேக்கிய தருணம். யாவரும் நலம் என்ற பிரமாதமான த்ரில்லர்  மூவி. அவரது அடுத்த ப்டம் 24  எப்டினு பார்ப்போம்


ஹீரோ ஒரு சயிண்ட்டிஸ்ட். டைம் மிஷின் போல் டைம் ட்ராவல் வாட்ச் கண்டு பிடிக்கறார். ஆனா அவரோட அண்ணன் ( ட்வின்ஸ்) வந்து அவரைக்கொலை செஞ்சுடறார்.அண்ணன்  கைக்கு வாட்ச்  கிடைக்கலை,

 ஹீரோவுக்கு  ஒரு குழந்தை. 26  வருசத்துக்குப்ப்பின்  கதைல  ஒரு திருப்பம். வில்லனும் ஹீரோ மகனும் சந்திக்கறாங்க , அதுக்குப்பின் என்ன நடக்குது என்பதே திரைக்கதை

 ஹீரோவா அர்ப்பணிப்பான நடிப்பில் கமல் விக்ரம் க்கு அடுத்த இடத்தில்  இருக்கும் சூர்யா. இ ரு  வித கெட்டப் . 
வில்லன்  கெட்டப்ல கலக்கல் நடிப்பு  ஆனா அகரம் ஃபவுண்டேசன் சாஃப்ட் ஹீரோவை வில்லனா பார்த்து  ஜீரணிக்க கொஞ்சம்  டைம் ஆகும்.


பாடி லேங்குவேஜில்  வில்லன் நடிப்பில்  வீல்  சேரில் அமர்ந்திருக்கும் சூர்யாவின்  ஆக்டிங் அசத்தல்

ஹீரோவா வரும் சூர்யா வழக்கம் போல் ரொமா\ண்டிக் வழிசல் இளமை துள்ளல்


ஹீரொயினா  சமந்தா . பவுடர் கோட்டிங்  பர்பி பொம்மை.  பாடல் காட்சிகளில் அசால்ட்டா  ஒரு நைட்டி மட்டும்  போட்டுட்டு சுத்துது. நல்ல காஸ்ட்யூம் சென்ஸ், 


 சரண்யா  ஹீரோவுக்கு வளர்ப்பு அம்மா கேர்கடர், வழக்கம் போல்  குட்

ஆர்ட்  டைரக்சன்  , ஒளிப்பதிவு  , இசை மூன்றும்  போட்டி போட்டு பர்ஃபார்மென்சில் கலக்கறாங்க. ஸ்டண்ட் மாஸ்டரும் இந்த லிஸ்ட்டில் சேர முயற்சிக்கிறார். அவருக்கு வாய்ப்பு கம்மி


டூயட்  சீன்களின்  லொக்கேசன் செலக்சன் அருமை டிர்ஸ்சிங் சென்சில் சிக்கன் நடவடிக்கையில்  ஈடுபட்ட சமந்தாவுக்கும் காஸ்ட்யூம்   டிசைன்ருக்கும்  ஒரு  பூங்கொத்து



நச் டயலாக்ஸ்


1  வில்லன் =,நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி.உன் பிறந்தநாள் இறந்த நாள் 2 ம் ஒரே நாளில். #24

2 வீடு பூரா இத்தனை வாட்ச் இருக்கு.ஆனா நேரத்தோட அருமை தெரியாதவங்க #24


3 அதெப்டிரா வெட்கமே இல்லாம ஓசி சாப்பாடு சாப்பிடறே?


நாங்க எல்லாம் வெக்கத்தை கக்கத்தில் வெச்சுக்குவோம் #24


4 எல்லாருக்கும் ரொம்ப நாள் வாழனும்னு ஆசை இருக்கும்.ஆனா வயசானவனா வாழ ஆசை இருக்காது #24


5 மணி எங்கே?


இதோ 5 நிமிசத்துல் வந்துடறேன்னு சொல்லிட்டுப்போய் அரை மணி நேரம் ஆச்சு.1 மணி நேரத்துல வந்துடுவான் எப்படியும் #24



6 ஒரே ஆளை 2 தடவை கொல்ல வாய்ப்பு கிடைச்ச உலகின் முதல் மனிதன் / அதிர்ஷ்டசாலி நாந்தான் #24



தியேட்டரிக்கல் ட்விட்டர் அப்டேட்ஸ்

                        
24 = 164 நிமிடம். ஈரோடு மகாராஜா @ 9 AM show

ஆக்சன் ஹீரோவுக்கு ஓப்பனிங் சீன் பட்டாஸைக்கிளப்பனும்

இதில் அமைதியான எளிமையான ஓப்பனிங் #24



3 ஆர்ட் டைரக்டர் பர்ஸ்ட் கோல்.சயின்ட்டிஸ்ட் லேப் #24


4 வாட்ச் திஸ் மூவி னு தாராளமா சொல்லலாம்.ஏன்னா கதையே வாட்ச் ல தான் # டைம் மிஷின் டைம் வாட்ச்

5 ஆர்ட் டைரக்டருக்கு அடுத்து இசை 2 வது கோல்.பிஜிஎம் ஏ ஆர் ஆர் ராக்கிங் #24

6 3 வது கோல் ஒளிப்பதிவு.மழைத்துளிகளை ப்ரீஸ் செய்து ஹீரோ சுண்டி விடும் காட்சி #24


7 திரைக்கதையின் தேவை கருதி ஒரே சீன் 3,டைம் ரிப்பீட் ஆகுது.இப்டி அடிக்கடி நிகழ்ந்தா நல்லதல்ல #24

8 வாட்ச் மெக்கானிக் இல்லையா நான்.இதெல்லாம் சர்வசாதாரணம். இதே டயலாக்கை ஹீரோ அடிக்கடி சொல்றார்.முடியல #24

9 யாவரும் நலம் விறுவிறுப்பு பரபரப்பு மிஸ்சிங் #24

10 டைம் மிஷின் கதைகளின் முக்கிய விதி இறந்த காலத்தின் நிகழ்வுகளில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதே.ரூல் மீறுதே #24

11 டைம் ப்ரீசிங்.& செட்டிங்ஸ் சேஞ்ச் சீன் கள் சி சென்ட்டர்.ஆடியன்சை கவர்வது புரிவது சிரமம் #24

12 இண்ட்டர்வல் பிளாக். எதிர் பாராத திருப்பம் . வில்லன் ஆக்டிங் ராக்கிங் பர்ஃபார்மென்ஸ் #24


13 வில்லன் = அவன் சேது ராமன் பிள்ளைன்னா நான் சேதுராமனோட
அண்ணண்டா #24











சபாஷ் டைரக்டர்


1   வில்லன் சூர்யாவுக்கான  கெட்டப் நடிப்பு  எல்லாம் செம

2  ஆள் மாறாட்ட  சீனில்  வில்லன் தன் பெயரை செக்கில் சைன் செய்வதும்  ஹீரோயினுக்கு தெரிந்த உண்மை  ஹீரோவுக்கு  தெரியாமல்  போவதும்


3   பின் பாதியில்  வில்லனும்  ஹீரோவும்  சந்திக்கும் சீனும்  ஹீரோ டைம் வாட்சை வில்லனுக்கு தராமல் போக்கு காட்டி பஞ்ச் டயலாக் பேசுவதும்




 லாஜிக்  மிஸ்டேக்ஸ்

1   ஹீரோ  ஒரு சீன்ல  டைம் வாட்ச் மூலம் பேக்ல போய் ஹீரோயினுக்கு பூ வெச்சு  விடறார். அது நிகழ்காலத்துக்கு வந்த பின்னும் அவ\ளால உணர முடியல. 10 நிமிசம் கழிச்சு க\ண்ணாடில பார்த்த பின்  தான் ஹீரோயின் உணருகிறார். மல்லிகைப்பூ  வாசம் கூடவா தெரியாம  போய்டும்?


2   ரிப்பீட் ஆடியன்ஸ்  வரனும்னா படத்தில்  ரிபீட்  சீன்ஸ்  ரிபீட் வசனம் வரக்கூடாது ( விதி விலக்கு ரஜினி பட பஞ்ச் டயலாக்\)  இந்தப்படத்தில்  வாட்ச் மெக்கானிக்னா இது  கூட தெரியாதா என்|ற ஒரே டயலாக் 14 டைம்வருது. வரும்போதெல்லாம் ஆடியன்ஸ்  ஓன்னு கத்தறாங்க


3 ஓப்பனிங்  சீனில் ஹீரோ மனைவி மகன் ஆபத்தான சூழலில்  வில்லன் ஆட்களிடம் மாட்டி இருக்காங்கன்னு தெரிஞ்சும்  எப்படி பதட்டமா  உடனே  கிளம்பாம டைம் வாட்சை பத்திரப்படுத்திட்டு அப்புறமா போக  முடியுது?


4  சயின்ஸ் ஃபிக்சன் த்ரில்லர்  மூவி  எடுக்கனும்னு முடிவு எடுத்ததும் வழக்கமான  காதல்  மொக்கை காமெடி  சீன்களை  எல்லாம்  ஒதுக்கி  இருக்க்லாம்

5   ஹீரோ ஒரு சாதாரண வாட்ச் மெக்கானிக். ஹீரோவோட அப்பா ஒரு சயிண்ட்டிஸ்ட். பல வருசம் சிரமப்பட்டு க\ண்டு பிடிச் ச  டைம் வாட்ச் ல  இருக்கும்  குறையை ஒரே நா|ள் ல  ஹீரோ எப்டி சரி செஞ்சு டெவலப் பண்றாரு? அவர் சயிண்ட்டி\ச்ட் கிடையாதே? சயிண்ட்டிஸ்ட் ஆன அப்பா கூடவும் வளரலை



 சி.பி கமெண்ட் -  24 - தமிழ் சினிமாவுக்கு புதிதான சயின்ஸ் ஃபிக்சன் த்ரில்லர்  மூவி,முன் பாதி ஸ்லோ பின் பாதி ஓக்கே , விகடன் மார்க் -43 , ரேட்டிங் = 3 / 5


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு யூக மார்க்  = 43


குமுதம்  எதிர்பார்ப்பு யூக   ரேட்டிங் = ஓக்கே


Sunday, July 21, 2013

60 வது பிலிம்பேர் விருதுகள்

60வது பிலிம்பேர் விருதுகள் - தனுஷ், சமந்தாவுக்கு இரண்டு விருதுகள்! சிறந்த படம் - வழக்கு எண்

Dhanush-Samantha gets Two awards in 60th Filmfare award
தென்னிந்திய திரைப்பட விழாவில் ஒன்றான பிலிம்பேர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 60வது ஐடியா பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் நடிகர் தனுஷூக்கு சிறந்த நடிகர் மற்றும் பின்னணி பாடகருக்கான இரண்டு விருதுகள் கிடைத்தன. இதேப்போல் நடிகை சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்காக இரண்டு விருதுகள் கிடைத்தன. தமிழில் சிறந்த படமாக தேசிய விருது பெற்ற ‘‘வழக்கு எண் 18/9‘‘ படம் பெற்றது.

60வது தென்னிந்திய திரைப்பட விருதுகளின் முழு விபரம்...

சிறந்த படம்

தமிழ் - வழக்கு எண் 18/9
தெலுங்கு - ஈகா
மலையாளம் - ஆயளும் நஞ்சனம் தம்மீழ்
கன்னடம் - கிராந்தி‌வீரா சங்கோலி ரயாணா

சிறந்த நடிகர்

தமிழ் - தனுஷ் (3)
தெலுங்கு - பவன் கல்யாண் (கபார் சிங்)
மலையாளம் - பகத் பாசில் (22 பீமேல் கோட்டயம்)
கன்னடம் - தர்ஷன் (கிராந்தி‌வீரா சங்கோலி ரயாணா)

சிறந்த நடிகை

தமிழ் - சமந்தா (நீதானே என் பொன்வசந்தம்)
தெலுங்கு - சமந்தா (ஈகா)
மலையாளம் - ரீமா கல்லிங்கல் ((22 பீமேல் கோட்டயம்)
கன்னடம் - பிரியாமணி (சாருலதா)

சிறந்த டைரக்டர்

தமிழ் - பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
தெலுங்கு - ராஜமெளலி (ஈகா)
மலையாளம் - லால் ஜோஸ் (ஆயளும் நஞ்சனம் தம்மீழ்)
கன்னடம் - விஜயஒரசாத் (சித்திலிங்கு)

சிறந்த துணை நடிகர்

தமிழ் - தம்பிராமையா (கும்கி)
தெலுங்கு - சுதீப் (ஈகா)
மலையாளம் - பிஜூ மேனன் (ஆர்டினரி)
கன்னடம் - அதுல் குல்கர்னி (எதிகாரிகி)

சிறந்த துணை நடிகை

தமிழ் - சரண்யா பொன்வண்ணன் (நீர்ப்பறவை)
தெலுங்கு - அமலா அக்கினி (லைப் இஸ் ப்யூட்டிபுல்)
மலையாளம் - கவுதம் நாயர் (டையமண்ட் நெக்ளஸ்)
கன்னடம் - சுமன் ரங்கநாதன் (சித்திலிங்கு)

சிறந்த இசை

தமிழ் - டி.இமான் (கும்கி)
தெலுங்கு - தேவிஸ்ரீ பிரசாத் (கபார் சிங்)
மலையாளம் - வித்யாசாகர் (டையமண்ட் நெக்ளஸ்)
கன்னடம் - வி.ஹரிகிருஷ்ணா (டிராமா)

சிறந்த பின்னணி பாடகர்

தமிழ் - தனுஷ் (3, கொலவெறிடி...)
தெலுங்கு - வேதபள்ளி ஸ்ரீனிவாஸ் (கபார் சிங்)
மலையாளம் - விஜய் ‌யேசுதாஸ் (ஸ்பிரிட்)
கன்னடம் - அவிநாஸ் செப்ரி (சித்திலிங்கு)

சிறந்த பின்னணி பாடகி

தமிழ் - என்.எஸ்.கே.ரம்யா (சற்று முன்பு பார்த்து... நீதானே என் பொன்வசந்தம்)
தெலுங்கு - சுஜித்ரா (பிஸினஸ்மேன்)
மலையாளம் - ஸ்வேதா (அரிகி)
கன்னடம் - இந்து நாகராஜ் (கோவிந்தயான்மகி)

சிறந்த புதுமுக விருதுகள்

நடிகர்

உதயநிதி ஸ்டாலின் - (ஒரு கல் ஒரு கண்ணாடி, தமிழ்)

தல்குர் சல்மான் - (செகண்ட் ஷோ, மலையாளம்)

நடிகை

லட்சுமி மேனன் - (சுந்தரபாண்டியன், தமிழ்)

ஸ்வேதா ஸ்ரீவட்சா - (சைபர் யுக‌தால் நவ யுகா, கன்னடம்)

வாழ்நாள் சாதனையாளர் விருது : வாணி ஜெயராம் மற்றும் பாபு

விழாவில் ஸ்ருதிஹாசன், நாவ்யா நாயர் உள்ளிட்ட பல நடிகைகளின் நடனங்களும் இடம்பெற்றன.
 
 
thanx -dinamalar

Tuesday, January 22, 2013

Seethamma Vaakitlo Sirimalle Chettu - சினிமா விமர்சனம்

http://www.123cinejosh.com/wp-content/uploads/2012/11/Seethamma-Vaakitlo-Sirimalle-Chettu-Release-Wallpapers-123cinejosh.jpgஅண்ணன் , தம்பி 2 பேரு , அம்மா , அப்பா உள்ள ஃபேமிலி .அண்ணனுக்கு முறைப்பொண்ணு வீட்லயே இருக்கு . ஃபேமிலிக்கு ஆகாத தூரத்து ச்சொந்தம் வீட்ல தம்பிக்கு ஒரு பொண்ணு மாட்டுது. தம்பியோட லவ் அண்ணனுக்கு பிடிக்கலை. இதனால அண்ணன் தம்பிக்குள்ளே நிகழும் போராட்டங்கள் தான் கதை . ஆல்ரெடி நாம வானத்தைப்போல , ஆனந்தம் , நட்புக்காக மாதிரி பல படங்கள்ல பார்த்த கதை தான். ஆந்திராவுக்கு ஒரு வேளை புதுசா இருக்கும்.


ஆந்திரா சூப்பர் ஸ்டார்கள் வெங்கடேஷ் , மகேஷ் 2 பேரும் தான் அண்ணன் , தம்பி .  படம் பூரா வில்லன்களோட ஃபைட் போடாம அமைதியா இருந்ததுக்கே அவார்டு தரலாம். வேலை இல்லாத வெட்டாஃபீசாய் , முன் கோபி யாய் வரும் வெங்கடேஷ்க்கு செம ஈசியான வேலை . அப்பப்ப தளபதி ரஜினி மாதிரி முகத்தை இறுக்கமா வெச்சிருந்தாலே போதும் , மிச்சத்தை இயக்குநர் சமாளிச்சுக்கறார். அவர் அடிக்கடி சட்டைக்காலரை பின்னால தூக்கி விட்டுக்கறதுதான் ஸ்டைலா? நம்ம ஊர்ல ரஜினி 25 வருஷத்துக்கு முன்னாலயே அதை பண்ணிட்டாரு .


மகேஷ் இளமைத்துள்ளலான கேரக்டர் . வழியில் தென்படும் ஃபிகர்களை வலியனாப்போய் வம்பிழுக்கும் விதம் ஆஹா! கோபுர வாசலிலே படத்தில் கார்த்திக் பண்ணாததா?  ஆனாலும் ஜாலியா இருக்கு. அவர் அடிக்கடி டக் இன்  பண்ணிய சர்ட்டை எடுத்து வெளியே விடுவது ஸ்டைலா? , சகிக்கலை.  15 ரீல் படத்துல  27 டைம்  அப்படி பண்றார்.. உஷ் அப்பா . அவர் அடிக்கடி ஈ அப்டி காட்டுவது ஆரண்ய காண்டத்துல ஜாக்கி ஷெராப் ஆல்ரெடி செஞ்சாச்சி . புதுசா  அவர் பண்ணுனது ஒண்ணும் இல்லை .

 http://www.webparx.com/movies/wp-content/nggallery/mahesh-babu-in-seethamma-vakitlo-sirimalle-chettu-movie/mahesh-babu-in-seethamma-vakitlo-sirimalle-chettu-movie-webparx-2.jpg




ஹீரோயின் 2 பேர்ல முதல் அறிமுகம் ஆவது  அனுதினமும் அணு அணுவாக ரசிக்கச்சொல்லும் அங்காடித்தெரு அஞ்சலி. கொழுக் மொழுக் கன்னம் , சிரிக்கும் கண்கள் , அழைக்கும் உதடுகள் என அவர் வரும் காட்சி எல்லாம் ஈர்ப்பு. இந்திய சினிமாக்களிலேயே கிளாமரான ஹீரோயின் அறிமுகம் ஆகும்போது அடிக்கும்  டார்க் கலரான சிவப்பு , வயலெட் , மயில் கழுத்து , ராமர் க்ரீன் ஜாக்கெட் எல்லாம் போடாமல் மிக எளிமையான  சம்பங்கி கலரில் ( லைட் காக்கி கலர் )  ஜாக்கெட் போட்டு அறிமுகம் ஆகும் முதல் காட்சியிலேயே ஈர்த்து விடுகிறார். 


அடுத்தடுத்த காட்சிகளில்  அவர் டார்க் கலர் டிரஸ்ஸில் கலக்குகிறார். எல்லா காட்சிகளும் சேலைகள் தான். செம செம . எஜமான் படத்தில் வருவது போல் ஹீரோவுக்கு அடிக்கடி துண்டு  எடுத்துக்கொடுத்து தூண்டும் வேலை . ஒரு டூயட்டும் உண்டு 


அடுத்த ஹீரோயின் சந்தனச்சிலையா? என திகைக்க வைக்கும் சமந்தா. கிண் ஸ்பெஷலிஸ்ட்டான இவர் ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டிடம் போக வேண்டி வந்தது எல்லாம் இயற்கையின் திரு விளையாடல் . பாட்டியாலா சுடிதார் ,  லெக்கின்ஸ் , பாராசூட் மாடல் பைஜாமா என அவர் வகை வகையாய் உடை அணிந்து வருகையில் தியேட்டர் பெண்கள் எல்லாம் நோட் பண்ணிக்கறாங்க . செத்தாண்டா அவங்கவங்க புருஷங்க . 

அஞ்சலியை விட இவர் அதிக காட்சிகளில் வர்றார். ஓப்பனிங்க் சாங்க் , ஒரு டூயட் என இவருக்கு 2 பாட்டு .கலர் ஃபுல் கலக்கல்ஸ். 


பிரகாஷ் ராஜ் இருவர் பட கெட்டப் , காஞ்சிவரம் பட  பாடி லேங்குவேஜ் என அடக்கி வாசிக்கிறார்.

 http://publichubs.com/blogimages/hub/784-2-anjali-saree-stills-at-malabar-gold-showroom.jpg



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. சந்தனச்சிலை சமந்தா ஒவ்வொரு டைம் ஃபோன் பண்ணும்போதும் ஹீரோ ஃபோனை   ஓடும் மிக்சி ஜார் அருகே  ஃபோனை வைப்பது , ஊதும் நாதஸ்வரம் முன் வைப்பது என ஜாலி கலாட்டாக்கள் 


2. அஞ்சலிக்கான ஜாக்கெட் டிசைன் அற்புதம் , முழு முதுகும் தெரியும்படி வடிவமைக்கப்பட்ட பெரிய பள்ளத்தாக்கு  பேக் யு நெக் ஜாக்கெட். கேமரா எப்பவும் அஞ்சலி முதுகுலதான் லேண்ட் ஆகுது . ஹூம், முதுகா அது? பத்தமடை பாய் மாதிரி 



3. மேரேஜ் ஃபங்க்‌ஷனில் ஹீரோவைக்கண்ட  சம்ந்தா வெளிப்படுத்தும் ஷாக் சர்ப்பரைஸ் ரீ ஆக்‌ஷன்  சோ க்யூட்


 http://web2look.com/wp-content/gallery/samantha-hot1/samantha-hot-6.jpg



4. ஹீரோவை விட சமந்தா மிக குள்ளம் என்பதால் அவருக்கு  ஒரு அடி உயரத்துக்கு  ஹை ஹீல்ஸ் போட்டு சமாளிப்பதும் , வெங்கடேஷ் விட அஞ்சலி ஹைட் என்பதால் அவரை எப்போதும் வெறுங்காலுடன் நடக்க விடுவதும் , வெங்கடேஷ் ஹை ஹீல்ஸ் ஷூ அணிவதும் ( நம்ம ஊர் சூர்யா மாதிரி ) பேலன்ஸ்டு சீன்ஸ் 



5. தூரத்துடுக்கு பாட்டப்ப அஞ்சலி  தன்னோட இடுப்பை ஒரு வெட்டு வெட்டுவாரே .. செம கிக். கோடானு கோடி  பாட்டப்ப அந்த லேடி இடுப்பை ஒரு சுத்து சுத்துமே அந்த கிக்குக்கு சமம் 



6. படத்தில் வாய்ப்பு இருந்தும் சண்டைக்காட்சிகள் வைக்காதது , திரைக்கதையில் இரு காதல் ஜோடிகளின் ரொமாண்டிக் காட்சிகளை ஒன் பை ஒன் மாத்தி மாத்தி காட்டி பேலன்ஸ் பண்ணது 



7 . கல்யாண கலாட்டா காட்சிகள் அழகு + பிரம்மாண்டம்

http://moviegalleri.net/wp-content/gallery/samantha-ruth-prabhu-latest-hot-images/hot_samantha_latest_stills_pics_3143.jpg




 இயக்குநரிடம் சில கேள்விகள்




1. வசதியான குடும்பத்தில் இருக்கும் ஒரு நியூலி மேரீடு கப்பிள் ரயில்ல அன் ரிசர்வ்டுல ட்ராவல் பண்ணுவாங்களா? ஏ சி கோச் ல வராட்டியும் அட்லீஸ்ட் ரிசர்வ்டு செகண்ட் கிளாஸ்ல தானே வருவாங்க.. 


2. அஞ்சலிக்கு மட்டும் இண்ட்ரோ சாங்க் இல்லை, ஆனா சமந்தாவுக்கு இருக்கு. இது எந்த வகைல நியாயம்? ஒரு கண்ணுல வெண்ணெய் , இன்னொரு கண்ல தொண்ணையா? 



3. படத்துல ஏகப்பட்ட கேரக்டர்ஸ். கலைஞர் குடும்பம் மாதிரி , எல்லா கேரக்டரும் அறிமுகம் ஆகி கதைக்கு செட் ஆகும்போதே ஒரு மணி நேரம் ஆகிடுது 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidMMvOqxwULA-hFsezvrDydqB7AZsk8R6FbbgN3Rn-f6LQCyOa6u2KCAiykz5JyOWmcqKx6dLM2NtMjKNkrmp2cCtc58Gzr68qcQhJJGSV60oo4N7qI6AmeXA6wcwtoWZfkfDxwORoBtqh/s1600/anjali-hot-stills.jpg



4.  ஒரு சீனில் வேலை வெட்டி இல்லாத வெங்கடேஷ்  இன்ஸ்பெக்டரை கோபத்தில் பளார் என அடிப்பது எல்லாம் ஓவரோ ஓவர். அவர் ஆன்னு பார்த்துட்டு இருக்காரு . அவர் ஒண்ணும் ரவுடி கிடையாதே  நிஜ வாழ்வில் பப்ளிக்கில் ஒரு போலீஸ் ஆஃபீசரை ஒரு வெத்து வேட்டு பப்ளிக் பிளேஸ்ல அடிச்சா என்ன ஆகும்? 



5. கதைப்படி ஆன்மீக வாதியாக வரும் பிரகாஷ் ராஜ் ஒரு சீனில் கூட நெற்றியில் திருநீறோ , குங்குமமோ வைக்கலை, ஆனா கோயில் பிரசாதத்தை ஒணத்தியா சாப்பிடறார், கோயில்ல இருக்கார் . 



6. கல்யாண வேலைகளில் வீடே பரபரப்பாக இயங்குகையில் எல்லாரும் வெறும் காலுடன் இருக்க, ஹீரோ மகேஷ் மட்டும் ரன்னிங்க் கேன்வாஷ் ஷூ உடன் அலைகிறார்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbymytcERdthXZUXZC7CyzwFqGecFmrPwEBR7JvimYRrcpf-A-26-Hrh9aUxqLJl-6mFRslfWXaVt1kcglxQJ607XclINq81EDciycSwXtK_CrcAiy2B5KPWZYjRM7yQvg1I0KZlyygt-C/s1600/Anjali-Latest-New-Unseen-Photo-Shoot-+(1).jpg



7. அதே போல் மேரேஜ் ஃபங்க்‌ஷனில் குப்பம்மா, குருவம்மா , முனியம்மா எல்லாம் பட்டு சேலையில் மினுக்கிட்டு வரும்போது அஞ்சலி சாதா சேலையில் உலா வர்றாரே?  க்ளைமாக்ஸ்ல அவருக்கு மேரேஜ் ஆகும் காட்சியில் தான் சில்க் சேலை . ஒய்? 




8. படம் போட்டதில் இருந்து அஞ்சலி வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவர் ஏதாவது ஒரு சமையல் எடுபுடி வேலை  செஞ்சுட்டே இருக்காரே? அவர் என்ன வேலைக்காரியா? 



9. இண்ட்டர்வியூவில் எல்லா தேர்விலும் பாஸ் ஆன ஹீரோவிடம் அதிகாரிகள் “ உங்க சிரிப்பில் உயிர் இல்லை. அது இயல்பா இல்லை , நல்லா சிரிங்க அப்போதான் வேலை” என்பதும் மனதில் சோகத்துடன் இருக்கும் ஹீரோ மனம் விட்டு சிரிக்க முடியாமல் செயற்கையாய் சிரிப்பதும் அதனால் வேலை கிடைக்காமல் போவதெல்லாம் ஓவரோ ஓவர் . எந்த இண்ட்டர்வ்யூல சிரிப்பை வெச்சு ஜாப் தர்றாங்க? 



10 . ஒரு காட்சியில் கல்யாணப்பெண் வெள்ளைப்பட்டுப்புடவை அணிந்து வர்றார். கேரளாப்பெண்கள் தான் அப்படி வருவாங்க . நம்ம ஆட்கள் எல்லாம் முகூர்த்தப்புடவை மேக்சிமம் ரத்தச்சிவப்பு , மெரூன் , பிரவுன் , வயலெட் , பச்சை கலர் தான் . சத்தியமா வெ:ள்ளை நாட் அலோடு



11. கிட்டத்தட்ட வில்லனாக வரும் உறவினர் ரமேஷ் ராவுக்கும் பிரகாஷ்ராஜுக்குமிடையே பொறாமை ஏற்படக் காரணம் என்ன?ன்னு கடைசி வரை சொல்லவே இல்லை 



 12. அந்த மின் விபத்து , வில்லனை காப்பாற்றுவது  , அவர் மனம் மாறுவது படு செயற்கை


13. சமந்தா வை பல படங்கள்ல கவனிச்சுட்டுதான் இருக்கேன், அவர் அழகா இருக்கும் புருவத்தை பியூட்டி பார்லர் போய் ட்ரிம் பண்ணி அப்புறம் அது மேல  ஐ ப்ரோ பென்சிலால டார்க்கா  வரைஞ்சு அலங்கோலம் பண்ணிக்கறார். கார்த்திகாக்குத்தான் வேற வழி இல்லை , வரைஞ்சுக்கறார், உங்களுக்கு என்ன? அஞ்சலி இந்த விஷயத்துல குட்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD8u7je2fw7likzayZEj2zoUZyjVFsuJsCp5dSQ0BFosGSJ-9hpDJ24tmKqO2csxE1qLVYIZoERrSYZLvrhC9Gdea7Oa0v8BF6MPYNrcuumOt0Cg8CYYovgrJ96ompJ8hpwJsIyqtDbso/s1600/Samantha+Hot+Bikini+stills+(8).jpg



சி.பி கமெண்ட் -  ஃபேமிலியோட பார்க்கற மாதிரிதான் இருக்கு . 2 ஹீரோயின் ரசிகர்கள் பார்க்கலாம், மற்றபடி புதுசா கதைல ஒண்ணும் லேது . டைட்டிலுக்கான அர்த்தம் சீதையின் வீட்டின் முற்றத்தில் மல்லி செடி.ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்

Friday, December 14, 2012

நீ தானே என் பொன் வசந்தம் - சினிமா விமர்சனம்

http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-neethane-en-ponvasantham-new-posters/images/tamil-cinema-neethane-en-ponvasantham-new-posters01.jpg 

ஹீரோ ஹீரோயின் இருவருமே  ஸ்கூல் மேட்ஸ் , காலேஜ் மேட்ஸ் , 3 படத்துல வர்ற மாதிரி ஆரம்பத்துல இருந்தே லவ். ஆனா பாருங்க 2 பேரும் வாயை வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்கறதில்லை. எதையாவது உளறி அது ஈகோ மோதல் ஆகி ஊடல் பிரிவுன்னு அடிக்கடி ஆகிடுது. லவ்வர்ஸ்னா கிஸ் அடிக்க மட்டும்தான் வாயைத்திறக்கனும்னு அவங்களுக்குத்தெரியலை ( கிஸ் அடிக்க எதுக்கு வாயைத்திறக்கனும்? நாராயணா! நாராயண! )


 மு க் அ ழகிரியும் , மு க ஸ்டாலினும் மாதிரி இருக்கும் அவங்க எப்படி பிரசன்னாவும் சினேகாவும் போல் சேர்றாங்க என்பது தான் திரைக்கதை .


படத்தின் முதல் ஹீரோ சந்தேகமே இல்லாம இளையராஜா தான். சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது பாட்டு ஓடும்போது ஏதாவது ஒரு பொண்ணு மடில சாஞ்சுக்கலாம்னு நினைக்காத ஆண் இல்லை. கிளாசிக் மியூசிக். அதே போல் என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன். செம கலக்கலான பாட்டு , மற்ற பாட்டுக்களும் நல்லா இருக்கு . ஒரு ஆள் கூட தம் அடிக்கப்போகலை. ஆனா BGM ஸ்பெலிஸ்ட்டான இளையராஜா  ஏன் இவ்வளவு அடக்கி வாசிச்சிருகாரோ?பல காட்சிகளில் போயஸ் தோட்டத்து மயான அமைதி நிலவுது. அவரே அப்படி இருக்கட்டும்னு விட்டுட்டாரா? கவுதம் ஏதாவது  தகரர்று பண்ணி அதுக்குப்பழி வாங்கிட்டாரா?  தெரில



ஜீவா. கோ படத்துல செம க்யூட்டா இருந்தவர் அதை விட யங்கா சில காட்சிகள்ல தெரிஞ்சாலும் மீசை இல்லாம அவரைப்பார்க்க என்னமோ மாதிரி இருக்கு. ஸ்கூல் பையனா வர்றப்ப அந்த கெட்டப் ஓக்கே . ஆனா காலேஜ் படிக்கறப்போ , ஜாப்க்குப்போறப்போ எல்லாம் அதே கெட்டப் ஏன்? ஏன்னா பல காட்சிகள்ல அவர் வசனம் பேசும்போது வில்லத்தனமாவே இருக்கு.ஈகோ மோதல்கள் கன கச்சிதமான நடிப்பு . 


 சந்தானம். ஒரு படத்தின் பல மைனஸ்களை  தாங்கி நிற்கும் தூண். ஓக்கே ஓக்கே படம் மாதிரி படம் முழுக்க வராவிட்டாலும் பாதி அளவுக்கு வர்றார். அவர் பேசும் கவுண்ட்டர் பஞ்ச்க்கு டக் டக்னு ஆடியன்ஸ் அப்ளாஸ்.. அவருக்கும் ஒரு ஜோடி. காமெடி கலாட்டாக்கள்.. 



ஹீரோயின் சந்தனதேக அஜந்தா  சமந்தா .பவுடர் போடறாரா? வெண்ணெய் யூஸ் பண்றாரா? என கேட்க வைக்கும்  நைஸ் ஃபேஸ். முகத்துக்கு அதீதமான ஒப்பனை இல்லாமலேயே மிளிர்கிறார். இவரது டிரஸ்சிங்க் சென்ஸ் அபாரம். 6 காட்சிகளில்  ஜீவாவுக்கு லிப் கிஸ் தர்றார். பல காட்சிகளில் ஜீவாவுக்கு இணையான  நடிப்பு . ஆனா ஆவேசமா பேசும் காட்சிகளில் அவர் ஏன் ஒரு மாதிரி தடுமாறி நடக்கறார்னு தெர்யல . அப்படி பாடி லேங்குவேஜ் கோப காட்சிகளில் செட் ஆகலைன்னா ஒரே இடத்துல நின்னு டயலாக் பேசி எடுத்திருக்கலாம். 


ஸ்கூல் , காலேஜ் ஆஃபீஸ் என 3 வெவ்வேறு கட்டங்களில் திரையில் உலா வரும் பல ஃபிகர்கள் நேர்த்தியான தேர்வு .பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவு அள்ளுது .



http://moviegalleri.net/wp-content/gallery/neethane-en-ponvasantham-movie-stills/neethane_en_ponvasantham_movie_stills_jeeva_samantha_97aaaee.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. படத்தின் ஓப்பனிங்க் சீனில் ஜீவா சமந்தாவைப்பார்த்து பாடும் நீதானே என் பொன் வசந்தம் , புது ராஜ வாழ்க்கை பாடலைப்பாட முகத்தில்  வெட்கம் , தோழிகள் பார்ப்பதில் பெருமிதம் என அந்த ஆடிட்டோரியமே காதல் வெள்ளத்தில் தத்தளிக்கிறது . 



2. அந்த குண்டுப்பெண் பள்ளிக்கூட அறையில்  ஜீவாவைப்பார்க்க சமந்தாவுக்கு உதவும் காட்சிகள் கல கல. யதார்த்தம் .  இளமை 


3. சமந்தா நிலைக்கண்ணாடி முன் டைட் டி சர்ட் போட்டு நெஞ்சை நிமிர்த்தி அழகு பார்க்கும் காட்சி தியேட்டரில் அபார அப்ளாஸ் ( அவரோட நெஞ்சு அவர் நிமிர்த்தறாரு, இவ்ங்க ஏன் கிளாப்ஸ்?  - அப்பாவி கோவிந்து) 


4. சமந்தா ஒரு காட்சியில் சாம்பல் நிற காட்டன் சேலையும் , ரத்தச்சிவப்பு அமெரிக்கன் ஜார்ஜெட் ஜாக்கெட்டும் போட்டுக்கிட்டு ஜீவா கூட உலாத்தறாரே? ஆஹா ... 


5. ஹீரோவோட அண்ணன் தான் விரும்புன பொண்ணு வீட்டுக்கு அப்பா, அம்மாவோட போய் பொண்ணு கேட்டு அவமானப்பட்டு திரும்பி வந்த பின்  பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்ளும் காட்சியும் , ஜீவா குற்ற உணர்வில் பரிதவிக்கும் காட்சியும் 


6. சந்தானம் , குண்டுப்பெண்  லவ் போர்ஷன் ஜீவா - சமந்தா லவ் போர்ஷன் போர் அடிக்கும்போதெல்லாம் ரிலாக்ஸ்க்கு உதவுது. சந்தானம் பண்ணும் சேட்டைகள் கல கல 


7. சமந்தா மொட்டை மாடியில் ஜீவாவிடம் வெடித்துக்கதறும் காட்சி , க்ளைமாக்ஸ் காட்சியில்  என குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பின்னணி இசை இசை ஞானி பெயர் சொல்லுது 


8. ரிசப்ஷனில் தன் அண்ணியின் தங்கையையே  மனைவியாக ஏற்றுக்கொள்ள முன் வரும் ஜீவாவை சமந்தா சோகத்துடன் கை குலுக்கி சம்பிராதய வாழ்த்து சொல்ல வரும்போது ஜீவா நாசூக்காக மறுப்பதும் அப்போது அடிபட்ட பார்வையுடன் சமந்தா அவரைப்பார்ப்பதும் நுணுக்கமான இயக்கம் .


9. க்ளைமாக்ஸ் நெருங்கும்போது விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி நெகடிவ்  என பதட்டப்பட வைத்து  கடைசி 15 நிமிடத்தில் ஹீரோ - ஹீரோயின் வாக்குவாதம் செய்யும் காட்சி 


http://www.tamilstar.com/photo-galleries/tamil-movies-neethane-en-ponvasantham-movie-wallpapers/images/tamil-movies-neethane-en-ponvasantham-movie-wallpapers09.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்



1. படத்தின் திரைக்கதையில் உள்ள மிகப்பெரிய மைனஸ் ஆண்களை  பழிக்கும் விதமான கதை ஓட்டமே. அதாவது 99%  உண்மைக்காதலர்கள் சில பிரச்சனைகளால் சேர முடியாமல் போய் விட்டால் ஆண் முதல்ல வேற பெண்ணைக்கல்யாணம் பண்ணிக்கவே மாட்டான். தப்பு பொண்ணு சைடில் என்றாலும், அவதான் வேண்டாம் என்று சொன்னாலும் அவளுக்கு மேரேஜ் ஆகி சில வருடங்கள் கழிச்சுத்தான் ஆண் மேரேஜ் பண்ணிக்குவான். நீங்க யாரை வேணா கேட்டுப்பாருங்க . ஆனா இதுல ஹீரோ காதலியுடனான சண்டையில், ஊடலில் தன் அண்ணியின் தங்கையை மணக்க சம்மதிக்கிறான். அதை ஏற்றுக்கொள்ளும் விதமாய் சொல்லப்படலை .



2. இசைஞானி இளையராஜா சாய்ந்து சாய்ந்து பாட்டை என்னமா உருகி இசை அமைச்சிருக்கார். ஆடியோ வெர்ஷன் மட்டும் கேட்கும்போது  காதலியை தாய் ஸ்தானத்தில் வைத்து  ஒரு சோகத்துக்கு அரவணைப்பும் ஆறுதலும் தேடும் ஒரு காதலனின் பாட்டாகவே அது வடிவமைக்கப்பட்டிருக்கு. ஆனா பிக்சரைசெஷனில் அது இளமைக்குறும்பு , கில்மாக்கொண்ட்டாட்டமாகக்காட்டப்படுவதால் ரசிகன் தடுமாறுகிறான். பாட்டை லயித்து ரசிப்பதா? கிளு கிளுப்பை ரசிப்பதா? என . எப்படி இயக்குநரு இதுல ஸ்லிப் ஆனாரு



3. உன் அம்மா , அப்பாவைப்பற்றி என் கிட்டே ஏன் நீ சொல்லவே இல்லை? என ஹீரோயின் கடைசியில் குற்றம் சாட்டும்போது ஹீரோ மவுனமா இருக்கார் . “ ஏன் நீ கேட்கவே இல்லை?னு பதிலடி தர்லை . சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கோவித்துக்கொள்ளும்  ஹீரோயின் ஹீரோ வேறு ஒரு பெண்ணுடன் மேரேஜ் , ரிசப்ஷன் என்றதும் ஓங்கி வெடிப்பார் என்று பார்த்தால் அழுது டிராக் மாறிட்டாரே? 



4. இடைவேளை வரை சந்தானத்தின் காமெடியில் இசையில்   ஓரளவு ஸ்பீடாகப்போகும் படம் பின் பாதியில் தட்டுத்தடுமாறுது . திருச்செந்தூரில் ஹீரோயின் ஸ்கூல் நடத்துவது , அவரை சமாதானம் பண்ண ஹீரோ வருவது அது சம்பந்தமான காட்சிகள் கொஞ்சம் இழுவை 


5. விடிய விடிய ஹீரோ அனுப்பிய மெயிலை தூங்காமல் படிச்சுட்டு விடிஞ்சதும் எனக்கு இன்னும் கோபம் போகலை, சும்மா தான் படிச்சேன் என்பது மாதிரி அவர் வசனம் பேசுவது வால்மார்ட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்த டாக்டர் கலைஞர்  மாநில அரசிடம்  வர விடக்கூடாது என்று பல்டி அடிபப்து போல் படு கேவலமாக இருக்கு 



6. ஹீரோ 8 வயசுல இருந்து ஸ்கூல் , காலேஜ் , ஆஃபீஸ் என பல கட்டத்துல ஹீரோயின் வீட்டுக்குப்[போயிருக்கார். ஆனா ஒரு முறை கூட ஹீரோயின் அப்பாவும் அவரும் சந்திக்கவே இல்லை என்பதும் ஹீரோயின் அப்பாவுக்கு இவர்கள் காதல் மேட்டரே தெரியாது என்பதும் காதில் பூச்சுற்று .


7. இவர்கள் காதல் ஈகோ யுத்தத்தில் ஹீரோவின் அண்ணியின் தங்கையை ரிசப்ஷன் எல்லாம் முடிச்சு , மேரேஜ்ல தாலி கட்ட கடைசி ஒரு மணி நேரம் முன்பு நைசா கழட்டி விடுவது  வை கோவுக்கு நாஞ்சில் செஞ்ச துரோகம் போன்றது .



8. ஹீரோ , ஹீரோயின் ஈகோ மோதல் காட்சிகள் 4 இடங்களில் வருகிறது . எல்லாமே செம இழுவை. நறுக் சுருக் என முடிச்சிருக்கலாம் . 



9. பல லட்சம் மதிப்புள்ள கார் எல்லாம் வெச்சிருக்கும் , கம் ஆஸ்திரேலியா அடிக்கடி போகும் வசதி உள்ள ஹீரோயின் ஹீரோவுக்கு கிஃப்டாக நோக்கியா 1100 மாடல் மாதிரி ஒரு டப்பா ஃபோனை தருவதும், அதே போல் ஹீரோயினும் மட்டரகமான ஃபோன் வைத்திருப்பதும் காதில் பூச்சுற்றல் 



10. ஹீரோ அவ்வளவு ஈகோ பார்ப்பவர் ஹீரோயினிடம் ஒனத்தியாக ஓ சி செல் ஃபோன், ஓ சி சர்ட், என ஏகப்பட்ட ஓ சி களை வாங்கிக்கொள்வது 


11. இளையராஜாவை வ்லுவந்தமாய்ப்பாராட்டும் ஒரு வரியாவது அவர் இசை அமைக்கும் படத்தில் வந்துடும் , இதுலயும் வருது . 


http://behindwoods.com/tamil-movie-news-1/sep-12-01/images/neethane-en-ponvasantham-jiiva-04-09-12.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1. லவ் பண்றப்ப எல்லா சாங்க்ஸும் நமக்காகவே எழுதுன மாதிரியே இருக்குது இல்ல? 


 ஆமாமா . இன்க்ளூடிங்க் போடா போடா புண்ணாக்கு போடாதே தப்புக்கணக்கு




2. டேய் , நிஜமா அவ செம ஃபிகர்டா. இப்படி ஒரு ஃபிகரை நான் பார்த்ததே இல்லை 

 விட்ரா மச்சான், எனக்கு எல்லா பொண்னுங்களூமே செம ஃபிகராத்தான் தெரியுது. ஏன்னா நான் படிச்சது பாய்ஸ் ஹைஸ்கூல் 



3. லாரிக்குக்கீழே விழுந்தவனைக்கூட காப்பாத்திடலாம், ஆனா லவ்வுல விழுந்தவனைக்காப்பாத்தவே முடியாது




4. அவ கிட்டே என்னடா பேசறது?

 ரேஷன்ல பாமாயில் ஊத்தறாங்க , வா 2 பேரும் போய் வாங்கிட்டு வரலாம்னு கூப்பிடு



5. சில பசங்க கிட்டே ஜாக்கிரதையா இருங்கன்னு நம்ம பேரண்ட்ஸ் சொல்வாங்களே, அவன் தான் அது 





6. ஏற்காடு போறேன், நீ அங்கே போய் இருக்கியா? 


 நோ 

 அடடா, வாட் எ பிளேஸ்... சரி நீ எங்கே போகப்போறே? 

 ஆஸ்திரேலியா 



7. எனக்காக சந்தோஷமா இருக்கறது மாதிரி அட்லீஸ்ட் நடிக்காத 




8.  அவன் அடிக்கற மொக்கை ஜோக்குக்கெல்லாம் ஏன் சிரிக்கறே? நான் சொல்றதுக்கு மட்டும் தான் நீ சிரிக்கனும் 


9. மாப்பி , கத்திரிப்பூ கலர்ல கேவலமா  ஒரு சர்ட் வெச்சிருப்பியே அதை போட்டுட்டுப்போகலையே? 



10. சந்தானம் - ஏண்டி, உங்களை எல்லாம் சமாளிக்க நான் ஒருத்தன் போதாதா?


வாட்?

 எல்லாரையும் சேர்த்துப்போட 


 மை திங்க்..... 

 வாட்? திங்க்?

 என்ன? எல்லாமே டபுள் மீனிங்க்ல வருது?  ( இது கவுண்டமணியின் காமெடி உல்டா ) 




11. ப்ளீஸ், நீ வடையை பிராக்டீஸ் பண்ணு, இதுல தலையிடாத, நீ தின்னத்தான் லாயக்கு 



12. நீ ஏதாவது சொல்லனுமா? நான் ஐ லவ் யூ சொல்லிட்டேன்

 அதான் இப்போ  சொன்னேனே?

 ஒண்ணும் சொல்லலையே? 



கிஸ் அடிச்சேனே? 



13. வாடா வா, சுடிதார்ங்க  காய விட்ட பின்னாலதான் உங்களுக்கெல்லாம் பேண்ட் சர்ட் கண்ணுக்குத்தெரியுமே? 



14. கரண்ட் பில்லுல அதுக்கு வெச்சிருந்த பணத்துல தண்ணி அடிச்சுட்டேன் 



15. அண்ணனுக்கு பெண் பார்க்க நான் வர்லை, அந்தப்பொண்ணு திடு திப்னு என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா? 


http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Sep/04/Neethane_En_Ponvasantham_Latest_Stills/Neethane_En_Ponvasantham_Latest_Stills96132685227bc3e15c84d4362430fc0d.jpg


16.  என் கிட்டே ஏதாவது மாற்றம் தெரியுதா? 


 ம்ஹூம்

 முடி வெட்டி இருக்கேன்

 ஓஹோ சரி 

 சுத்தம் 



17.  நான் எம் பி ஏ படிக்கலாம்னு இருக்கேன்

 இதானா? நான் கூட ஏதோ சீரியஸ் மேட்டர்னு நினைச்சேன் 



அப்போ நான் படிக்கறது சீரியஸ் மேட்டர் இல்லையா? 



18. உன் நல்லதுக்கும்  எ ன் நல்லதுக்கும் , நம்ம .  நல்லதுக்கும் ஒண்னே ஒண்னு சொல்றேன் , கேட்கறியா?

 ம் 

 என்னை விட்டுடு 


19.  நான் வேணா உனக்கு சிட்டுக்குருவி லேகியம் வாங்கித்தர்றேன் ,  என்னை தயவு செஞ்சு தம்பின்னு கூப்பிடாதே, ஏன்னா ஹாஸ்பிடல் நர்சைக்கூட சிஸ்டர்னு கூப்பிட்டதில்லை 



20. அப்பாவை வருத்தப்பட வெச்சுட்டேன், அதான் வருத்தமா இருக்கு 



21. இங்கே என்ன தோணுதோ அதை பேசு 

 இதே டயலாக்கை இன்னும் எத்த்னை படத்துல சொல்வே? 



22. இந்தப்பொம்பளைங்க இருக்காளுங்களே 2 மணி நேரப்படம் பார்க்க 3 மணி நேரம் மேக்கப் போடுவாளுங்க



23. ஏண்டா , நீ மட்டும் இறங்கி வந்துட்டே, நீயும் ஈகோல அவளை செர்த்தான் போடினு சொல்லி இருக்கலாமே? 


 சொல்லி இருக்கலாம், அப்புறம் காலம் பூரா கைல பிடிச்சுக்கிடு உக்காந்திருக்கனும் 


24. கரண்ட் கட் கூட முன் கூட்டியே சொல்லிட்டு கட் பண்றாங்க, ஆனா இந்த கன்னிப்பொண்ணுங்க சொல்லாம கொள்ளாம காதலை கட் பண்ணிருவாளுங்க #nepv 



25.  எப்படியும் அவ சமாதானம் ஆக 10 நாள் ஆகும் போல 


 20 நாள் ஆனாலும் சரி  பரவாயில்லை

 டேய் நாம என்ன டூரா வந்திருக்கோம்?



26. நீ என்னை வெறுத்துடக்கூடாது

 அது முடியாது, ஐ ஹேட் யூ 



27.  குட்பை சொல்லிட்டு வந்துட்டேன் 


 குட்பை சொல்ல முடிஞ்சுதா?



28. ஈசியா அழ முடியுதேன்னு அழுதுட்டே இருக்காதே  


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSpgR4vljUMDJ1vVLx0UaSa6tINuaoJMDIJV-R8YzhibbBXd9T4A3x5g8EbRfJqKCvQGyUOmdldbQkfx3WETz88fLMKcKNRR-nRDRXK_0pvnieNGnH7oVXEq_M00TaxxvDjNygDg2EZZxs/s1600/Samantha+Hot+Navel+Stills+With+No+Watermark+(3).jpg


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க் - 43 


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்  - ஓக்கே 



 சி .பி கமெண்ட் - காதலர்கள் , யூத்ங்க, பிரிந்து வாழும் தம்பதிகள் பார்க்கலாம். இளையராஜா ரசிகர்கள் மிஸ் பண்ணவே  கூடாத படம் .ஈரோடு வி எஸ் பி ல படம் பார்த்தேன் . சி செண்ட்டர்ல சுமாராத்தான் போகும், பி செண்ட்டர்ல பொங்கல் வரையும் , ஏ செண்ட்டர்ல 50 நாள் தாண்டியும் ஓடும் 

http://tamilhotactress.files.wordpress.com/2010/12/samantha-hot-stills61.jpg

கும்கி - சினிமா விமர்சனம்

  
http://www.adrasaka.com/2012/12/blog-post_14.html


நீதானே என் பொன்வசந்தம்

http://www.adrasaka.com/2012/12/blog-post_7091.html

கவுதம் அதிர்ச்சி! நெட்டில் வந்த முதல் 2 விமர்சனங்களும் நெகடிவ் ரிசல்ட்!

 http://www.adrasaka.com/2012/12/2_13.html

 

 

அனைத்துப்பாடல்களையும் வரி வடிவில்

கும்கி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/12/blog-post_6836.html

 

http://actresspadam.com/wp-content/uploads/2012/05/samantha-hot-sexy-pics-from-tamil-movie-008.jpg



Thursday, December 13, 2012

கவுதம் அதிர்ச்சி! நெட்டில் வந்த முதல் 2 விமர்சனங்களும் நெகடிவ் ரிசல்ட்!

http://cinema.lankasri.com/photos/full/movies/nee_dhane_endhan_ponvasantham.jpg 

நீதானே என் பொன் வசந்தம் ஃபாரீனில் ரிலீஸ் ஆகி விட்டது. ட்விட்டர்  படம் பார்த்துட்டு நறுக் சுருக் விமர்சனத்தை ட்விட்டர் லாங்கரில் போட்டுட்டார்.



நீ தானே என் பொன் வசந்தம் = அரைத்த மாவு!

அய்யயோ! இத படிச்சா படம் பார்க்க சுவாரஸ்யம் இல்லாம போயிருமேனு நினைக்கிற அளவுக்கு படத்துல ஒரு சுவாரஸ்யமும் இல்ல!

கெளதம்மேனனுக்காகவும், இசைஞானிக்காகவும் பார்க்க தூண்டிய படம்! படத்தில் இவங்க ரெண்டு பேரும் இருக்காங்களான்னு டவுட் வருது படம் பார்க்கும் போது! படத்தில கதைனு ஒரு யழவும் இல்ல! காலங்காலமா காட்டுற ஈகோ புடிச்ச காதல் கதை! கெளதம் எதுக்கு இதே கருமாந்திரம் காதல் கதைக்குள்ளயே குதிரை ஓட்டுறாருனு தெரில! காக்கி சட்டை கதை தான் உங்களுக்கு கரீக்ட்! இன்னொரு விண்ணைத் தாண்டி வருவாயா மாதிரியான படம்! ஆனா கம்பேர் பண்ணுனா விதாவ பெட்டர்

படத்துல வழக்கம் போல ஆங்காங்கே பல இங்கிலீஸ் டயலாக்குகள் பேசுறாங்கே! ஏன் சந்தானமே இங்கிலீஸ்ல பேசி காமெடி(!) பண்றாருனா பார்த்துகங்களேன்

படத்துல பல இடங்களில் லிப் டூ லிப் கிஸ் காட்சி இருக்கு! ஆனா ஒரு கிஸ்ஸ கூட நேரடியா காட்டல!  இதுக்கு பாரதிராஜா மாதிரி பூவையும் பூவையும் ஒரச விட்டுருக்கலாம் கெளதம் சார்!

பாடல்கள பத்தி ஏற்கனவே பல விமர்சனம் பார்த்தாச்சு! அதனால அதிகம் சொல்ல போறதில்ல! எல்லாப் படத்துலயும் பாட்டு வரும் போது தான் வெளிய போய் தம் அடிப்பாங்கே! படத்துல பாட்டு தான் ஒரளவுக்கு நம்மள சாந்த படுத்துது!

அதுவும் படத்துல எந்த பாட்டுமே முழு பாட்டு இல்ல எல்லாமே பிட் சாங்ஸ்! பாடல்கள் ஸ்கீரின்லயாவது நல்லாருக்கும்னு பார்த்தா ம்ஹீம் அதே ஓகே ரகம் தான்! பேக் கிரவுண்ட் மியுசிக் சொல்றதுகில்ல! ஒகே ரகம் தான்! ஆனா பழைய ராஜா சார் எந்த சீனிலும் காண கிடைக்கல!

படத்துல சமந்தா ஒரு சீன்ல “ஒரு மயிறும் இல்ல”னு சொல்வாங்க! படம் முடிஞ்சு வர்றப்ப அந்த டயலாக் தோணுது நமக்கு! படத்துல……!
கெளதம் சார் , ராஜா சார்…. .. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!


டிஸ்கி: படம் பார்க்கனும்னா காதலி இல்ல கேர்ள் பிரண்டோட போங்க! நிறைய சீன்ஸ் போரடிக்கும் அவங்க பக்கத்துல இருந்தா குஜாலா படம் பார்க்கலாம்(!)




Neethane En Ponvasantham Movie Review- Wasted Opportunity

Featured, Movies — By on December 12, 2012 11:14 pm

Produced by Photon Kathaas and RS Infotainment, directed by Gautham Vasudev Menon, Neethane En Ponvasantham is a love story (or as the director cleverly puts it across – moments from Varun-Nithya’s love story).



 With excellent acting, fantastic music, pleasing-on-the-eye cinematography, Neethane En Ponvasantham is a great case study of sum being lesser than the parts. The film starts off when Varun joins college and he meets Nithya in the college culturals. 



They share a history of love-hate relationship. First, they meet when they were kids and then when they were in school. Sparks fly when they meet duing college and they are together for the next four years. The film tries to capture some interesting moments in their lives. Unfortunately, only some of the moments are engaging.



I am not a great fan of GVM’s VTV. It was not bad cinema, it wasn’t a plot oriented film but a character oriented film. But when the director tries the same technique again in NEP, he falls flat. Despite excellent acting by Samantha and Jiiva, you really do not care as much for Varun and Nithya as you should have. 



Beyond a point their fights become irritating and you wonder why at all they should be together. The biggest drawback of NEP is the script focusses too much on the fights between Varun and Nithya and not so much on romantic moments. And you know the director has faltered when he packs off Nithya on a holiday to Edinburgh, and focuses on Varun and you immediately sit up with interest. The moment Nithya is back, the script sags again.



Just like in the Tamil film Khushi, a key scene happens on the rooftop just before the interval – the roof top acts as a character here (Varun-Nithya have had some real intimate moments in this rooftop), but the scene is absolutely ineffective due to the mishandling by the director. 



(The scene from Khushi in comparison is Citizen Kane – more on this a bit later). To give credit to the film, there are a few moments which are engaging. Nithya teaching Varun how to pronounce Edinburgh, the initial school scenes, the climax scene in the same rooftop, the family scenes which changes Varun from a boy to a man, and the first few moments in the college culturals are really entertaining. Incidentally, these are the portions when Varun and Nithya do not fight!



And GVM has done the biggest disservice to Ilayaraja by having improper situations for at least 3 songs. Mudhal Murai, Kaatrai konjam and Ennodu act as speed breakers. The songs are picturised with love and care but due to the situations in which they occur, you really do not get involved. 


But the balance 4 songs – Saindhu Saindhu, Sattru Munbu, Vaanam Mella and Pengal Endral – are good. Sattru Munbu is rivetting in its picturisation in the climax, and the way Samantha emotes here clearly lifts the film to a different level. (Thengi pona Ore nadhiyena indru naanada – you can see it in her eyes – frankly I did not think she could act this well).




Ah!the rooftop !!!
The climax is very good on its own, but when compared to the rest of the film, it is outstanding. And what works here are the moments where no one talks – and this is where Raja scores. What a BGM in the last few minutes. When you hear Raja’s BGM in the last few scenes, you immediately realize what is wrong with the film – through the film, some one or other keeps on talking, and there is just no scope for BGM. GVM – Is this how you write scenes? 



You should have learnt from a less sensitive director (perhaps more street smart) like S.J.Surya. Take the Khushi rooftop scene for example, Vijay and Jothika fight in the rooftop – they keep on arguing – the pitch of their tones keep on getting high – and then an airplane takes off nearby and interrupts their argument for a few moments – and it provides such a character to the scene.



And when Vijay says something he should not have said, the director immediately focuses on Jothika’s close up reaction. She is so hurt that Vijay immediately realizes the mistake he has done and his facial expression conveys that he is really sorry for what he had said. But she is now so hurt that she isn’t prepared to give him another chance – 


the director focuses on close ups and the music director gives a reasonable good BGM and then the scene becomes so very effective. GVM – You may well want to show that the rooftop is a character by opting for a long shot that covers the rooftop as well as Chennai skyline, but you can’t extend it to the whole scene. It reduces the experience to watching something like a stage play.


And you take a genius like Raja, who changed the way BGM was written in Indian Cinema, and offer him no scope at all? I mean, isn’t this suicide? Here is a composer, who had saved films like Idhayam before. And the moment you listen to the last couple of scenes, you know Raja could have saved NEP, if the director thought about BGM when conceiving shot composition. But the current product is even beyond the Maestro. Wasted Opportunity.

நன்றி -  madabout moviez, ட்விட்டர் திருட்டுக்குமரன்




இயக்குநர் பேட்டி படிக்க

http://www.adrasaka.com/2012/12/blog-post_7091.html



கும்கி - சினிமா விமர்சனம்

 
http://www.adrasaka.com/2012/12/blog-post_14.html

Friday, July 06, 2012

நான் ஈ - சினிமா விமர்சனம்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicbTwGjbUg2D7WYHIjjqek07tgMrfCxRvmZKukYZP2ZVvvj7Z0jRuRHFsZL1zdTg3hSDW7pObppWNnaxyBhXpN37eOKawEDZ4Wg8yLW3PhHtIAch88bvN70NwpDNtpX3ngsSYTqQScYdU3/s1600/Naan+Ee.jpgசயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள் தமிழில் ரொம்ப குறைவுதான்.. ஷங்கரின் எந்திரன் ரஜினி நடிச்சதால அந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் பிரமிப்பு ரஜினியின் ஸ்டார் வேல்யூ முன்னால பெரிசா பேசப்படலை.. எஸ் ஜே சூர்யா நடிச்சு டைரக்ட் செஞ்ச நியூ படம் சயின்ஸ் ஃபிக்சன்ல இருந்து கொஞ்சம் விலகி கில்மா பட ரேஞ்சுக்கு போயிடுச்சு.. அதனால தெலுங்குல Eega என்ற பெயரில்  ரிலீஸ் ஆகும்  ஃபேண்டசி வகைப்படமான நான் ஈ ரொம்ப பெரிய எதிர்பார்ப்பு..


 படத்தோட ஒன்லைன் ரொம்ப சிம்ப்பிள்.. ஹீரோ ஹீரோயின் 2 பேரும் லவ் பண்றாங்க.. வில்லன் ஹீரோவை கொலை பண்ணிடறார்.. ஹீரோ ஈ ஆக மறு ஜென்மம் எடுக்கறார்.. எப்படி வில்லனை பழி வாங்கறார் என்பதுதான் கதை..

இனி திரைக்கதை.. ஓப்பனிங்க்லயே வில்லன் தான் அறிமுகம்.. அதுல இருந்தே படத்தோட முக்கியத்துவம் வில்லனுக்கு தெரிஞ்சுடுது.. வில்லன் எந்த மாதிரி ஆள்னா சிம்புவுக்கு அண்ணன், அர்ஜூனுக்கு பாஸ், கார்த்திக்கிற்கு தாதா, எஸ் ஜே சூர்யாவுக்கு குரு ,  கமலுக்கே வழி காட்டி  சுருக்கமா சொல்லனும்னா பொண்ணுங்களை கரெட்க் பண்றதுல மன்னன்.. அதுதான் அண்ணனுக்கு மெயின்  ஜாப்பே.. அது போக நேரம் இல்லாதப்போ ஏதொ தொழில் பண்ணிட்டு தானும் ஒரு தொழில் அதிபர்னு ஊர்ல சொல்லிட்டு திரியறார்..



http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/05/naan-ee-movie-stills.jpg



 ஹீரோயின் ஒரு மினியேச்சர் ஆர்டிஸ்ட் அம்மா, அப்பா இல்லை, அண்ணி கூட தங்கி இருக்கா.. எதிர் வீட்ல ஹீரோ.. எப்போ பாரு அவ பின்னாலயே ரவுண்டிங்க்.. பாப்பாவுக்கு அது தெரியும்.. பிடிச்சிருக்கு.. ஆனாலும் பிகு பண்ணிட்டு அவனை அலைய விட்டு ரசிக்குது..


 எல்லா சங்கடங்கள், ஈகோவை விட்டு ஹீரோ கிட்டே  ஹீரோயின் லவ்வை சொல்ற டைம் அந்த அசம்பாவிதம் நடக்குது.. அதாவது வில்லன் ஹீரோயினை கணக்கு பண்ண பார்க்கறான்.. ஏதோ சமூக சேவை நிறுவனத்துக்கு டொனேஷன் கேட்க வந்த ஹீரோயினுக்கே 15 லட்சம் தர்றான்.. பாப்பா சம்பளமே  ஒரு படத்துக்கு 40 லட்சம் தான்.. வில்லனுக்கு ஹீரோயின் லவ் தெரிஞ்சுடுது.. தனக்கு இடஞ்சலா வந்த ஹீரோவை டக்க்குன்னு போட்டுத்தள்ளிடறான்..


 ஹீரோ ஒரு ஈயா மறு ஜென்மம் எடுத்து வர்றார்.. இந்த ஐடியா எப்படி வந்திருக்கும்னா ஹீரோ பேரு நிஜ வாழ்விலும் நானி = நான்  + இ  . ஒரு சாதாரண ஈ எப்படி வில்லனை பழி வாங்க முடியும்? அவனை டார்ச்சர் பண்ண முடியும்? கொலை பண்ண முடியும்? அதுக்குத்தான் திரைக்கதை, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் அட்டகாசமா பண்ண ஒரு டீம் இருக்கே.. எப்படி பழி வாங்குது என்பதே மீதிக்கதை..


படத்தோட  முதல் ஹீரோ சி ஜி ஒர்க் தான்.. சமீப காலமா பலர் சொதப்பி வந்த கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸை இவங்க முறையா, ரசிக்கும்படி, ஓவர் பில்டப் எல்லாம் பண்ணாம செஞ்சிருக்கறதால  ரசிக்க முடியுது.. குறிப்பா அந்த ஈ டிசைன் அட்ட்டகாசம்.. அது டான்ஸ் ஆடுவது, சைகை காண்பிப்பது எல்லாம் அருமை..


வில்லன் தான் அடுத்த ஹீரோ..KITCHA SUDEEP . வில்லன் சுதீப் கன்னடத்தில் ஏறக்குறைய சுப்ரீம் ஸ்டார் . படம் முழுக்க இவர் ராஜ்யம் தான்.. ஒரு ரகுவரனோ, பிரகாஷ் ராஜோ செய்ய வேண்டிய கலக்கலான கேரக்டர்.. நல்லா பண்ணி இருக்கார்.. நல்ல எதிர்காலம் உண்டு..


 ஹீரோ நானி சித்தார்த்தின் முகச்சாயல், ஜீவாவின் நடிப்புச்சாயல் என கலந்து கட்டி அடிக்கறார்.. படம் போட்ட 30 வது நிமிடமே அவர் கொலை செய்யப்படுவதால் சான்ஸ் கம்மி./. வந்தவரை ஓக்கே..

 ஹீரோயின் சமந்தா  அழகு.. கண்ணியமான உடைகளில் கவுரமாக வந்து போறார்.. ஆல்ரெடி கலரா இருக்கும் அவர் எதுக்கு ரோஸ் பவுடர் அள்ளி பூசிட்டு வர்றார்? தெரியலை..  சோகமான காட்சிகளில் கூட அதே மேக்கப்.. முப்பத்து நான்கு தேவர்கள் வந்தாலும் அவர்களை கட்டிப்போடும் அழகு..



http://g.ahan.in/tamil/NAAN%20EE%20photos/naan%20ee%20(7).JPG

மனம் கவர்ந்த வசனங்கள் ( கிரேசி மோகன்)


1. வில்லனிடம்- ஹாய், நீங்க டெயிலி இங்கே வருவீங்களா?

 யா..

 விச் டைம்?

 நீங்க வர்ற டைம்.. ஹி ஹி



2. நம்ம தொழிலுக்கு போட்டியா இருக்கானே அவனை எப்படி கரெக்ட் பண்ணலாம்னு நாங்க எல்லாம் யோசிச்சுட்டு இருக்கோம், நீ என்னடான்னா அவன் சம்சாரத்தையே கரெக்ட் பண்ணிட்டியே?


3. என் ஒயிஃபை முதன் முதல் காதலியா சந்திச்சப்போ ஒரு டைம் முடிச்சுட்டு கழட்டி விட்டுடலாம்னு தான் நினைச்சேன், ஆனா அவ கிடே ஏகப்பட்ட சொத்து.. மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.. அவ சொத்தை என் பேர்ல எழுதி வைக்க கேட்டேன்.. செத்தாலும் அது நடக்காதுன்னு அடம் பிடிச்சா.. பாவம் அல்பாயுசுல போய்ட்டா..


4. ஹேய்.. நீ பேங்க்ல எவ்ளவ் பணம் வெச்சிருக்கே?

 ரூ 15,860 ஓ டி அமவுண்ட் ( ஓவர் டியூ..  மைனஸ்ல )


5. எனக்கு தன்னம்பிக்கை ஜாஸ்தி.. அதனால செக்ல சைன் பண்ணாமயே தர்றேன்.

 டேய் லூசு, செக்ல சைன் பண்ணலைன்னா எப்படி அது பாஸ் ஆகும்?


6. மிஸ்,,, உங்க ஜடை ரொம்ப டைட்டா இருக்கு.. புரிஞ்சுதா?

 எனக்கு லூஸ் தான் பிடிக்கும்


 நீங்க லூஸ்னு தெரியும்..  ஆனா ப்ளீஸ் ட்ரை த டைட்.. ( டபுள் மீனிங்க் )


7. நீ கொடுத்த 15 ரூபா செக்குக்காக அவ அர்ச்சனை செய்ய கோயிலுக்கு வந்திருக்காளே.. அர்ச்சனை சீட்டே 20 ரூபா ஆச்சே?


8. டேய்.. முதல்ல உன்னோட எக்ஸ்பிரஷனை மாத்து.. அவ எல்லாருக்கும் பிரசாதம் குடுத்துட்டு போறா.. ஆனா உன்னை கண்டுக்காம போறா..


 டேய்.. எல்லாருக்கும் குடுத்துட்டு எனக்கு தர்லைன்னா என்ன அர்த்தம்? அவளுக்கு நான் ஸ்பெஷல்னு அர்த்தம்


9. டிராஃபிக் சார்ஜெண்ட் - வண்டிக்கு ஆர் சி புக் இருக்கா?  லைசன்ஸ் இருக்கா?


 ஹீரோ - என் ஆள் போறா. அவளை பிடிக்கனும்.. வண்டியே இருக்கு.. நீயே அதை வெச்சுக்கோ


10.  என்னடா அவ கிட்டே இருந்து வெறும் பிளாங்க் மெசேஜ் வந்ததுக்கு இப்படி குதிக்கறே?

 உனக்கு தெரியாதுடா , பிளாங்க் மெசேஜ் = பிளாங்க்செக்.. பவர் ஃபுல்.. இஷ்டபட்ட வங்களுக்குத்தான் பொண்ணுங்க  பிளாங்க் மெசேஜ் அனுப்புவாங்க


11. அழுதா வருத்தம் மறைஞ்சுடும்னு சொல்வாங்க, ஆனா எனக்கு அழ அழ அது அதிகம் ஆகுது.. பல தடவை அவனை கண்டுக்காத மாதிரி அலைய விட்டிருக்கேன்.. ஹூம்.. இப்போ நான் தான் சிரமப்படறேன்


12.  வில்லன் - என் மனைவி  சாகறப்ப என் கிட்டே என்ன பிராமிஸ் வாங்கினா தெரியுமா? நீங்க என்னை லவ் பண்றது உண்மையா இருந்தா நான் செத்த பிறகு என்னை மறந்துடனும்.. அப்டின்னா.. அதே போல் நீ உன் காதலனை மறந்துடு, ஓக்கே.. ?


14.  வில்லன் - ஏண்டா, அனிமல்ஸ் ரிவஞ்ச் பண்ணுமா? ( பழிக்குப்பழி வாங்குமா? - நன்றி மேஜர் சுந்தர் ராஜன் )


யா யா விட்டலாச்சாரியார் படத்துல எல்லாம்  அப்படித்தான்


15.. நான் கேட்க வர்றது ஒரு ஈ அப்படி பழி வாங்குமா?


 பாம்பு பழி வாங்கறப்போ ஈ பழி வாங்காதா? சின்ன பாம்புன்னா ஓக்கே.. ஈ-ன்னா யோசிக்கனும்


16. நான் சொல்றேனேன்னு கோவிக்காதே.. ஏதாவது சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை படிச்சுட்டு அதே ஞாபகமா இருந்திருப்பே..


17. சர்வர் - மேடம், காஃபில ஈ விழுந்துடுச்சு போல ,ஸாரி மேடம்..

 நோ நோ , ஈ காஃபி குடிச்சுட்டு இருக்கு


 18. சந்தானம் - டேய் , எங்கே இருக்கே? என்ன பண்ணிட்டு இருக்கே? ஓவர் ஓவர்..

 நான் இங்கே ஒரு பூட்டுன வீட்டுல குதிக்கலாம்னு பிளான் பண்ணிட்டு இருக்கேன்..

 செருப்பால அடிப்பேன், நாயே அது என் வீடு


 19. சந்தானம் ஹீரோயின் வீட்டுக்கு திருட வர்றார்.. அப்போ ஹீரோயின் காதலனான ஈ கிட்டே பேசிட்டு இருக்கார்.. அது தன்னை பார்த்து பேசறதா சந்தானம் நினைக்கறார்

ஹீரோயின் - டேய் , திருட்டுப்பயலே.... வெளீல வா.. ஐ கேன் லெர்ன் யுவர் ஸ்மெல்.. உன்னை லவ்வர்னு வெளீல எப்படி சொல்ல?


20. பூசாரி - உன் சாவுக்கு விதை இங்கே தான் விதைக்கப்பட்டிருக்கு.. புரியலை.. நீ யாரை சாகடிச்சியோ அவன் பிணம் விழுந்த இதே இடத்துல தான்  நீ சாகப்போறே..


21. வில்லன் - பார்ட்னர்ல ஒரு ஆள் செத்துட்டா இந்த டீலிங்க் கேன்சல் ஆகிடும், இன்சூரன்ஸ் தொகை கோடிக்கணக்குல கிடைக்கும்

 அடப்போப்பா.. அதுக்காக  நீ தற்கொலையா பண்ணிடப்போறே?


 நோ நோ..  உன்னை கொலை பண்ணப்போறேன் ..


22. வில்லன் - அடங்கோ.. ஈக்கும், உனக்கும் கம்யூனிகேஷன் கூட நடக்குதா?


23.டேய் , 2 வருஷமா அவ பின்னாடி சுத்துறே.. இப்பபாரு அவளுக்காக 
எவ்வளவு கஷ்டப்பட்டு, லைட்டெல்லாம் போட்டு இருக்கே அவ கண்டுக்காம 
ஜன்னலைச் சாத்திட்டு தூங்கப் போயிட்டா? அவ உன்னை 
காதலிக்கவேயில்லை 





 இல்லைடா அவ என்னை ரொம்பவே காதலிக்கிறா.. இப்ப கதவை சாத்தினது 
எதுக்குன்னா. ஒரு வேளை சாத்தாம போயி நான் அவளுக்காக இங்கேயே 
நின்னுட்டு இருந்தா ராத்திரி பனியில நனைஞ்சு உடம்பு சரியில்லாம 
போயிருமேன்னுட்டுத்தான் கதவ சாத்தி அவ தூங்க போறத சொல்லி 
என்னையும் தூங்கச் சொல்லுறா



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-fcyoor5c-zfCfT6iubF867X8v3Ih_uBY09zBZm8QSNEYvz0e_UQQsvU1WmY89FZnCmu9hXUPsiBH0uKVy2b8x-V7K-pZPblIEg1LYvR_Jy6yst9-ADxhjA_5XaDklXJhzxE0248wmG56/s1600/samanthainbanakathaadi_05.jpg



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. மரகத மணியின் இசையில் வீசும் வெளிச்சத்திலே .. பாட்டு செம மெலோடி.. ஆல்ரெடி சூப்பர்  ஹிட்.. படமாக்கப்பட்ட விதம் குளுமை..


 2. பின்னணி இசை கன கச்சிதம் , குறிப்பாக ஈ கிட்டத்தட்ட ஹீரோ லெவலில் இருப்பதால் அது பழி வாங்க கிளம்பும்போதெல்லாம் அதற்கு தரப்படும் பில்டப் மியூசிக் ஓக்கே..


3. ஒரு ஷாட்ல ஹீரோ சருகுகளை உதைக்க அது சாலை எங்கும் சிதறும் காட்சி கிளாசிக்


4. வில்லன் கார்ல போய்ட்டிருக்கான்.. ஹீரோயின் ஏர்போர்ட்ல .. அவனை போக விடாம பண்ணனும் .. அதுக்கு ஈ டிராஃபிக் கான்ஸ்டபிள் மூலம் குழப்படி பண்ணி முதல்வன் பட டிராஃபிக் ஜாம் போல் பிரம்மாண்டமாய் பண்ணுவது நல்ல நம்பும்படியான ஐடியா


5. ஈயிடம் இருந்து தப்பிக்க வில்லன் பிணம் போல உடம்பு பூரா பாண்டேஜ் கட்டி படுக்கையில் தூங்கும் சீன்..

6. ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் படம் முழுக்க இயக்குநரின் வெற்றிக்கு உழைத்த விதம்,. 


7. ஹீரோயின் வீட்ல கரெண்ட் போயிடுது,, உடனே ஹீரோ பர பரவென மொட்டை மாடி வந்து  சாட்டிலைட் டிஷ்ஷையும், டார்ச் லைட், ரிப்ளெக்டர் பேப்பரை வைத்து  லைட் கொடுக்கும் ஐடியாவும், அதை புன்முறுவலோடு அங்கீகரிக்கும் சமந்தாவின் முகத்தில் காதல் பொங்கி வழிவதும்

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120522171403000000.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. வில்லன் ரூமுக்குள்ளே ஹீரோயின் கூட தனியா இருக்கார்.. அவர் ஹீரோயினுக்கு 15 லட்சம் செக்  தர்றார்.. 2 பேரும் ஒண்ணா வெளீல வர்றாங்க.. அப்போ பார்டன்ர் வில்லன் கிட்டே ” 15 லட்சம் செக்   தர்ற அளவு அவளை உனக்கு பிடிச்சுடுச்சா? என கேட்கறாரே? எப்படி? செக்கை ஹேண்ட்பேக்ல ஹீரோயின் வெச்சிருக்கா.. வில்லன் எதும் சொல்லலை, எப்படி தொகை பார்ட்னருக்கு தெரியும்?


2. ஹீரோ நண்பர்களிடம் பேசும்போது ஒன்றரை வருஷமா அவ பின்னால அலையறேன்னு ஒரு வசனம், ஹீரோயின் தன் அண்ணி கிட்டே பேசும்போது “ 2 வருஷமா அவன் என் பின்னால சுத்தறான்”ன்னு டயலாக்.. 6 மாசம் என்ன ஆச்சு?


3. ஈயாக மாறும் ஹீரோ வில்லன் கிட்டே நான் உன்னை கொல்லப்போறேன்னு எழுதி காட்டுது.. அதே போல் ஹீரோயின் கிட்ட்டே நான் தான் உன் ஆள், என்னை அவன் கொலை பண்ணிட்டான்னு ஆரம்பத்துலயே எழுதி காட்டி இருந்தா அவ உஷாரா இருந்திருப்பாளே?  ( ஆனா அப்படி ஒரு சீன் வெச்சிருக்காங்க, ரொம்ப லேட்டா )


4. பொதுவா சோகத்துல பொண்ணு இருந்தாலும் ஒரு விழிப்புணர்வு,  ஜாக்கிரதை உணர்வு பொண்ணுக்கு இருக்கும் , ஆனா ஹீரோயின் கேனம் மாதிரி வில்லன் என்ன செஞ்சாலும் கண்டுக்காமயே இருக்காளே.. வாலி படத்துல வில்லன் அஜித் கொஞ்சம் ட்ராக் மாறூம்போது ஒரு சீற்றம் காண்பிப்பாரே அப்படி ஒரு சீனாவது வெச்சிருக்கனும்..


5. வில்லன் பல டைம் ஹீரோயினை தவறான பார்வை தவறான கோணத்துல பார்க்கறான்.. எல்லாருக்கும் அது தெரியுது, ஆனா ஹீரோயினுக்கு மட்டும் அது தெரியலை..


6. க்ளைமேக்ஸ்ல அந்நியன் படத்துல வர்ற மாதிரி ஹீரோவான ஈ மீண்டும் ஈயாக மறு ஜென்மம் எடுக்குது, எப்படி? ஒரு முறை ஒரு பிறவி எடுத்துட்டா மறுபடி அதே பிறவி வரும்?



7. க்ளைமாக்ஸ்ல ஈ ஒரு ஊசியை எடுத்து வில்லனை தாக்க வருது.. வில்லன் ஒரு காந்தத்தை எடுத்து அந்த ஊசியை காந்தத்துல மாட்டி வைக்கறார்.. அப்போ ஆபத்துல இருக்கற ஈ ஊசியை விட்டுட்டு அந்த பக்கம் வந்துடலாமே? ஏன் இறுகி பிடிச்சு மாட்டுது?

8. வில்லன் ஈ வைச்ச பாம்ல காயப்படறான்.. அந்த ரூமே அழியுது, அடியாளுங்க எல்லாம் தெரிச்சு ஓடறாங்க, ஆனா ஹீரோயினுக்கு எதுமே ஆகலை.. ஏன்>


9. காதலன் இறந்த துக்கத்தை ஹீரோயின் முகத்துல நல்லா பதிவு செய்யலை.. ஏனோ தானோன்னு இருக்கார்..



http://i45.servimg.com/u/f45/17/35/15/36/naan-e12.jpg


அனைவரும் பார்க்கும்படி சுவராஸ்யமா தான் படம் போகுது.. ஜூலை 13 ரிலீஸ் ஆக இருக்கும் பில்லா -2 விற்கு டஃப் ஃபைட் கொடுக்கும்




 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 44


 குமுதம் ரேங்க் - ஓக்கே



சி.பி கமெண்ட் - ஃபேண்டசி வகையில் ரசிக்கத்தக்க படம், ஆல் கிளாஸ் ஆடியன்ஸையும் கவரும்.. குழந்தைகள், பெண்கள் ரசிக்கும்படிதான் படம் இருக்கு..  காஞ்சனாவை தூக்கி சாப்பிடும்னு சொன்னாங்களே அந்த அளவு இல்லை.. ஆனாலும் படம் ஹிட்  தான்.. சந்தானம் ஒரே ஒரு சீனில் 2 நிமிடம் மட்டுமே வர்றார்.. மறுபடி க்ளைமேக்ஸ்ல அதே சீனை எடிட் பண்ணி யூஸ் பண்ணி இருக்காங்க

 ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்.. ஸ்ரீ கிருஷ்ணாவிலும் ரிலீஸ் 

http://123tamilcinema.com/images/2012/05/Naan-E-Movie-Posters-Mycineworld-Com-1.jpg