Showing posts with label RAMYA NAMBEESAN. Show all posts
Showing posts with label RAMYA NAMBEESAN. Show all posts

Friday, October 19, 2012

பீட்சா - சினிமா விமர்சனம்

ஹீரோ ஒரு பீட்சா ஷாப்ல டெலிவரி மேன்.அவனுக்கு ஒரு லிவ்விங்க் டுகெதர் லைஃப் பார்ட்னர்.மேரேஜ் பண்ணிக்க சொல்லி வற்புறுத்துறா. ஆனா லைஃப்ல செட்டில் ஆன பின்னாடி பண்ணிக்கலாம்னு சொல்லி மேட்டர் எல்லாம் முடிச்சு கரு தங்கிடுது.ரொம்ப வற்புறுத்துன பின் மேரேஜ்க்கு ஓக்கே சொல்றான்.

 பீட்சா கடை ஓனர் வீட்டுக்கு ஒரு டைம் இவன் போனப்போ அவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதும் , அது பேய் பிடிச்ச மாதிரி  இருப்பதும் ( மே பி மன நலம் குன்றி ) தெரிய வருது.இந்த மேட்டரை யார் கிட்டேயும் சொல்லிடாதேன்னு ஓனர் சொல்றார்.

 அடுத்த நாளே அவன் வாழ்க்கைல ஒரு திருப்பம். பீட்சா டெலிவரி பண்ண வந்த இடத்துல ஒரு வீட்ல மாட்டிக்கறான்.வீட்ல இருந்த ஒரே ஒரு லேடி கொலை செய்யப்பட்டு இருக்கா. உடனே ஹீரோ வெளில வர பார்க்கறான். முடில . லாக்டு. கொலை செய்யப்பட்ட லேடியோட கணவர் வீட்டுக்கு  வெளில வாசல்ல நின்னு கால் பண்றான். ஹீரோ எடுத்து பேசறார்.கணவர் ஹீரோவை நம்பலை.ஹீரோ தான் அவளை கொலை பண்ணி இருக்கனும்கறார்.


 அடுத்த திருப்பம். அந்த ஆளும் செத்து கிடக்கறான்.. அந்த வழியா ரோந்து போன  போலீஸ் 2 பேரு வர்றாங்க. இந்த வீட்ல ஒரு வாரமா போலீஸ் சீல் வெச்சிருக்கு. 4 கொலை நடந்த இடம் ஆச்சேங்கறாங்க..  ஹீரோ மேல சந்தேகப்பட்டு விசாரிக்கறாங்க . அவங்க கிட்டே இருந்து தப்பி வந்துடறான் ஹீரோ. அந்த 2 போலீஸும் அந்த பங்களாவுலயே மாட்டிக்கறாங்க.. 


http://tamil.cinesnacks.net/photos/actress/Ramya-Nambeesan/ramya-nambeesan-hot-093.jpg


அடுத்த திருப்பம்.ஹீரோயினை காணோம்.ஹீரோ தான் கொலை பண்ணிட்டாரா? அல்லது குடைக்குள் மழை ஆர் பார்த்திபன் மாதிரி அப்படி ஒரு கேரக்டரே இல்லையோ என சந்தேகப்பட வைக்குது ஹீரோவின்  நடவடிக்கைகள்.ஏன்னா ஹீரோவைத்தவிர வேற யாரும் ஹீரோயினை பார்த்ததில்லை . ஹீரோவோட ஃபிரண்ட்சோ, ஓனரோ பார்த்ததில்லை.

 என்ன தான் நடந்துச்சு என்பதை அட்டகாசமான திரைக்கதை உத்தி மூலம் சொல்லி இருக்காரு இயக்குநர்.இந்தப்படத்துல  யூகிக்க முடியாத பட்டாசான ட்விஸ்ட்ஸ் 2 இருக்கு. அதை சொன்னா சுவராஸ்யம் போயிடும்.

ஹீரோவா நடிச்சவர்  விஜய்சேதுபதி ஆல்ரெடி தென் மேற்குப்பருவக்காற்று படத்துல நடிச்ச ஹீரோதான். பயம், திகில் , கோபம், இயலாமை என நவ ரசங்களையும் காட்ட வாய்ப்பு. நல்ல நடிப்பு. சபாஷ்.. 


ஹீரோயின் ரம்யா நம்பீசன்.இவரைப்பற்றி வர்ணிக்க டைம் இல்லை.ஏன்னா இது ரொமான்ஸ் படம் இல்லை.. க்ரைம் த்ரில்லர் படம்.இவரை வர்ணிச்சுட்டு இருந்தா இயக்குநரை பாராட்ட டைம் இல்லாம போயிடும்.. ஆனாலும் இவரது டைட் டிரஸ் பார்க்கற ஆடியன்சை லூஸ் ஆக்கும் அளவு கிண்ணுனு இருக்கு.. 

மாலைப்பொழுதின் மயக்கத்திலே படத்துல வந்த காபி ஷாப் பேரர் இதுலயும் வர்றார். இவர் ஆல்ரெடி பல குறும்படங்கள்ல நடிச்சவர். இவர் நடிப்பும் நல்லாருக்கு. குறிப்பா பீட்சா கடை ஓனர்  பொண்ணு ஹீரோவை பேய் மாதிரி ஒரு லுக் விடும்போது பேய் நம்பிக்கையே  இல்லாதவர்கள் கூட முதுகுத்தண்டு சிலிர்க்கும் அளவுக்கு அவர் பார்வை.. அபாரம் 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigvKXGtlp-g5kpcieAeSff2KE4OnrUtr903r2VNkUeN5Qy8oP7B7nasT4aHehEG1Rf_l7W-XwAR1Y2iZX8ZwyMAIvaaKy6-jLLuW72Rz1QgvoKbGVfS58RIPwVZGInni4TrFU_tykD3M0/s1600/ramya_nambeesan_stills05.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. சினி ஃபீல்டில் அதிக அனுபவம் உள்ள பெரிய பெரிய ஜாம்பவான்களே தட்டுத்தடுமாறி கரை சேரும் கோடம்பாக்கத்தில் அசால்ட்டாக டைவ் அடிச்சு கரை தொட்டு இருக்கார். முதல்ல அவருக்கு ஒரு பூச்செண்டு. அபாரமான திரைக்கதை. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் சபாஷ் ரகம்.கார்த்திக் சுப்புராஜ்க்கு தயாரிப்பாளர் ஒரு கார் வாங்கித்தருவது உறுதி 





2. படத்தில் ஒரு 37 நிமிடங்கள் வெறும் டார்ச் லைட் வெளிச்சம் மட்டுமே உபயோகித்து ஹீரோ இருட்டு வீட்டில் உலவும், பரிதவிக்கும் இடங்கள் பட்டாசு பட்டாசு. சபாஷ் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத். அது போக ஹீரோயினை அழகாகக்காட்டுவது, பேய்ப்படங்களுக்கான டெம்போவை ஏற்றுவது ,எல்லா விதத்திலும் சபாஷ் 



3. ஒரு திகில் படத்துக்கு பின்னணி இசை எந்த அளவு முக்கியம் என்பதை ஆல்ரெடி இளையராஜா நூறாவது நாள் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.அதை வழி மொழிந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். பின்னணி இசை மிரட்டுது.


4. எடிட்டிங்க் பக்கா.படம் ரெண்டே கால் மணி நேரம் ஓடுவதில் முதல் 17 நிமிடங்கள் மட்டும் தான் 40 கி மீ வேகம். பின் எல்லாம் 90 கி மீ வேகம்.. எடிட்டிங்க் முக்கிய பங்கு 




http://www.southdreamz.com/wp-content/uploads/2010/11/ramya_nambeesan_hot_stills_photos_04.jpg



மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஒவ்வொருவருக்கும் ஒரு வீக்னெஸ் உண்டு.சிலருக்கு பணம்.சிலருக்கு பொண்ணுங்க.அந்த வீக்னெசை நாம யூஸ் பண்ணிக்கனும்



2. டைமுக்கு கிடைக்காத எதுவுமே வேஸ்ட் தான்


3. எவ்ளவோ ஜாக்கிரதையா இருந்தும் எங்கேயோ தப்பு நடந்துடுச்சு.அதுக்காக கலைக்கவெல்லாம் முடியாது.



 ஓஹோ,அப்போ காண்டம் கம்பெனி மேல கேஸ் போட்றலாமா? 


4. அமானுஷ்யமான விஷயங்களை நேர்ல பார்ப்பதை விட அடுத்தவங்க வாயால கதையா கேட்கும்போதுதான் த்ரில் அதிகம் 


5. ஒவ்வொருவர் அவநம்பிக்கையும் நம்பிக்கையா மாறும் MOMENT அவங்க வாழ்க்கைல வரும் 


6. டைவர்ஸ் கேட்டு கோர்ட் படி ஏறுபவர்கள்ல முக்காவாசிப்பேர் பணக்காரங்கதான்

7. நான் எதுலயாச்சும் கேர்லெஸ்ஸா இருந்ததை நீ பார்த்திருக்கியா..?

நான் பிரெக்னெட்டா இருக்கேன்..

http://atozforfun.com/wp-content/uploads/2012/09/pizz-movie.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள் 


1. ஹீரோயின் ஹீரோ 2 பேரும் லிவ்விங்க் டுகெதரா  ஒரே வீட்ல 4 வருஷங்களா இருக்காங்க. மேட்டர் முடிஞ்சுடுது, குழந்தை கரு உருவானதும்  ஹீரோயின் ஹீரோவை மேரேஜ்க்கு கம்ப்பெல் பண்றா. அப்போ ஹீரோ நாம 2 பேர் சம்பாதிக்கறது நமக்கே சரியா இருக்கு. இதுல கல்யாணம் குழந்தை எல்லாம் எதுக்கு? அப்டிங்கறார். அப்போ உடனே ஹீரோயின் என்ன கேட்கனும்? ஏய்யா. மேட்டருக்கு மட்டும் நான் வேணுமா? இனி பெட் ரூம் பக்கம் வந்துடாதேன்னு அடி மடில கை வைக்க வேணாம்? அதை விட்டுட்டு இனிமே உன் பேண்ட் சர்ட்டை துவைக்க மாட்டேன்னு மிரட்டுது. இதுதான் ஒரு பொண்ணோட மிரட்டல் பாணியா?



2. அதுக்குப்பின் ஹீரோ ஒத்துக்கறார். ஆனா ஊரறிய வேணாம் . இப்போதைக்கு இந்த வீட்ல நம்ம 2 பேருக்கு மட்டும் தெரியற மாதிரி பண்ணிக்குவோம்னு ஒரே ஒரு மோதிரத்தை  மோதிர விரல்ல மாட்டி விடறான். உடனே அந்த பேக்கு ஹீரோயின் கெக்கேக்கே பிக்கேக்கேக்கேன்னு சிரிக்குது. பதிவுத்திருமணம் பண்ண என்ன செலவு ஆகிடும்? அட்லீஸ்ட் சாட்சிகள் 2 பேராவது இருக்க வேணாமா? இப்படி வீட்டுக்குள்ளேயே மேரேஜ் பண்ணிக்கவா அத்தனை ஆர்ப்பாட்டங்கள் ?



3. பீட்சா கடை ஓனர் ஒரு கவரை குடுத்து தன் வீட்ல அதை குடுத்துட்டு வான்னு சொல்றார். ஹீரோ அங்கே போனதும் பேய் பிடிச்ச குழந்தையை பார்த்துடறார். உடனே ஓனர் தன் வேலையாள்னு பார்க்காம அவன் கிட்டே பம்மறார். இந்த மேட்டரை யார் கிட்டேயும் சொல்லிடாதேன்னு. நான் ஓனரா இருந்திருந்தா வேலையாளை வீட்டுக்கே அனுப்பி இருக்க மாட்டேன். அல்லது மனைவிக்கு ஃபோன் பண்ணி இப்போ  நம்ம வேலையாள் வர்றான். நீ கேட்டுக்கு வெளில நின்னு கவரை வாங்கிக்க. உள்ளே வந்தா  நம்ம பொண்ணு மேட்டர் அவனுக்கு தெரிஞ்சுடும்னு சொல்லி எச்சரிச்சிருப்பேன்.


4. ஹீரோவோட ஃபோன்ல செல் அவுட் கோயிங்க் போகலை, அதனால கால் பண்ண முடியலைன்னு ஓனர் கிட்டே சொல்றார். அந்த லேடியோட ஃபோன் இருக்கு. செல் ஃபோன் இருக்கு. அதுல இருந்து ஏன் கூப்பிடலை?ன்னு ஓனர் கேட்கவே இல்லையே? 


5. பீட்சா கடை ஓனர்  பேய் ஓட்டுபவர் அல்லது மந்திரவாதியை நம்பறார், ஆலோசனை கேட்கறார் , ஓக்கே  ஆனா மன நல நிபுணரை ஏன்  கலந்து ஆலோசிக்கலை. ? ஏன்னா ஒரு பெண் குழந்தையோட அப்பா தன் குழந்தை குணம் ஆகனும்னா  சாத்தியமான எல்லா  வழிகளையும் முயற்சி பண்ணி பார்ப்பார், உதாரணமா கடவுள் நம்பிக்கை பேய் நம்பிக்கை இல்லதவங்க கூட தன் பெண் குழந்தைக்கு ஒரு ஆபத்துன்னா தாயத்தா? சரி கட்டித்தான் பார்ப்பமேன்னு நினைப்பான். அதே போல மன நல சிகிச்சை பற்றியும் சிந்திச்சிருக்கனும்..


6. இந்தக்காலத்துல  ஆளாளுக்கு டபுள் சிம் ( டூயல் சிம் ) ஃபோன் வெச்சிருக்காங்க. அல்லது 2 செல் ஃபோன் வெச்சிருக்காங்க.. அப்படி இருக்கும்போது 2 கோடி ரூபா அபேஸ் பண்ணும் மேட்டரில் ஒருவர் தன் செல் ஃபோனை கழட்டி சிம்மை மாற்றி பேசிட்டு மீண்டும் பழைய சிம்மை பொருத்துவதும் அந்த இடைப்பட்ட கால அளவில் யாராவது கூப்பிட்டா தன்  சதி தெரியும் என பயப்படுவதும்  ஏத்துக்கவே முடியலை.. அட்லீஸ்ட் ஒரு பேசிக் மாடல் ஃபோன் கூடவா எக்ஸ்ட்ரா வெச்சுக்க மாட்டான்? 


7. பீட்சா கடைல 3 பேர் வேலை செய்யறாங்க. ஒண்ணா சரக்கு அடிக்கறாங்க.ஆனா ஹீரோ மனைவியை யாருமே பார்த்ததில்லை என்பதும், பீட்சா கடை ஓனரும் பார்த்ததில்லை என்பதும் நம்ப முடியலை. இப்போவெல்லாம் கடை ஓனர்ங்க ஃபுல் டீட்டெயில்ஸ் தெரியாம வேலையே தர மாட்டாங்க.. 3 வருசமா ஒர்க் பண்ற  ஆளை பற்றிய விபரம் தெரிஞ்சுக்காமயா இருப்பார்? 


8. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம் தான். ஆனா அது ஹாலிவுட் திகில் படங்களுக்கு சரி..  இந்த க்ரைம் படத்துக்கு அந்த ஆவி ட்விஸ்ட் தேவை இல்லை,. இதை ஒரு பகுத்தறிவுப்படமாவே முடிச்சிருக்கலாம்


9. அந்த பங்களாவுல கரண்ட் போனதும் மெழுகுவர்த்தி பத்த வைக்கறாங்க. இந்தக்காலத்துல ஏழைங்க கூட  எமர்ஜென்சி  லைட் வெச்சிருக்காங்க. மிடில் கிளாஸ் ஃபேமிலி கூட யூ பி எஸ் யூசிங்க் .. ஹீரோ அந்த கதையை சொல்லும்போது யாரும் இது பற்றி பேசலையே? 


http://www.mysixer.com/wp-content/uploads/2012/07/Pizza-Teaser.jpg




எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 45


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று 



சி.பி கமெண்ட் - வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் -அபாரமான திரைக்கதை உத்தி,க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம் ,சபாஷ் படம், புதுமையான கதையை விரும்பும் அனைத்துத்தரப்பும் பார்க்கலாம் ஹீரோ பின்னால் ஓடாமல் திரைக்கதை அமைக்கத்தெரிந்தால் ஒரு சாதா படமும் சூப்பர் ஹிட் ஆகும்  என்பதற்கு இது ஒரு உதாரணம்



டிஸ்கி - மனம் கவர்ந்த வசனங்களில் சஸ்பென்ஸை உடைக்கும் சில வசனங்களை போடலை. படம் பார்த்துட்டு பின்  மீண்டும் இந்த வசனங்களில் ஒரு பார்வை ஓட்டுனா இயக்குநர்  எப்படி இந்த வசனத்துலேயே ட்விஸ்ட் இருக்குன்னு சொல்லாம சொல்றார் என்பது புரியும்..  ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன்

 இப்படத்தின் இயக்குநர் பேட்டி படிக்க 

http://www.adrasaka.com/2012/10/blog-post_2147.html


டிஸ்கி - ராசிபுரம் நண்பர் ஒருவர் ( ட்விட்டர் ) ஃபோன் பண்ணி சொன்ன லாஜிக் மிஸ்டேக் - ஹீரோ  பீட்சாவை எந்த கடைக்கு டெலிவரி பண்ணனும் என்று கொடுக்கப்பட்ட அட்ரஸ்க்கு போகாமல் ஏன் அந்த பேய் வீட்டுக்கு ராங்க் எண்ட்ரி கொடுத்தார்? என பீட்சா கடை ஓனர் கேட்கவே இல்லையே? அது ஏன்?  ( நிஜமாலுமே இது சூப்பரான கேள்வி, எனக்கு தோணலை.. சி பி.. நீ இன்னும் வளரனும்)



Thursday, October 18, 2012

பீட்சா

http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-prn1/s480x480/58315_272670426169601_527921359_n.jpg

"வாங்க பீட்சா சாப்பிடலாம்!"

ஆர்.சரண்
பீட்சா’. தலைப்பிலேயே வித்தியாசம். 'சாஃப்ட்வேர் வேலையா? சினிமாக் கனவா?’ என்று வந்தபோது, அமெரிக்க வாழ்க்கை - கை நிறையச் சம்பளத்தை உதறிவிட்டு கோடம்பாக்கம் புகுந்தவர் அறிமுக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். கலைஞர் தொலைக்காட்சியின் 'நாளைய இயக்குநர்’ குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவரைச் சந்தித்தேன்.



 ''அதென்ன பாஸ், 'பீட்சா’னு ஒரு தலைப்பு?''



''சென்னையை மையமா வெச்சு ஒரு ரொமான்டிக் த்ரில்லர் செய்ய நினைச்சேன். என்னோட ஹீரோ பீட்சா டெலிவரி பாய். அவனுக்கு ஒரு அழகான காதல். எல்லாம் நல்லபடியாப் போயிட்டு இருந்த அவன் வாழ்க்கையில் ஓர் இரவு... ஒரு சம்பவம் நடக்குது. அது அவனோட மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போடுது. ரெண்டு மணி நேரம் நகம் கடிக்க வைக்கிற த்ரில்லர் படம்.


 'தென்மேற்குப் பருவக்காற்று’, 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படங்களோட ஹீரோ விஜய் சேதுபதிதான் என் படத்துக்கும் ஹீரோ. சினிமாவில் ஹீரோ ஆனதுக்கு முன்னாடியே என் குறும்படங்களில் ஹீரோவா நடிச்சவர். ஹீரோயின் ரம்யாநம்பீசன். 'அட்டக்கத்தி’ இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்... அழகழகாப் பாடல்கள் பண்ணிக் கொடுத்து இருக்கார்.''





''எப்படி யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்க்காமல் ஒரு படத்தை இயக்க முடியுது?''



''சினிமாவுக்கான ஃபார்முலா இப்போ மாறிடுச்சு. நல்ல சினிமா ரசனை இருந்தாலே போதும். கொஞ்சம் தொழில்நுட்ப அறிவும் நல்ல ரசனை உள்ள டீமும் அமைந்தால் யாரும் நல்ல படம் எடுக்க முடியும். ஷங்கர் சார் சொல்வார்... 'சினிமா ஒரு மேத்தமெடிக்ஸ்’னு. அந்தச் சூத்திரம் தெரிஞ்சா போதும். எதையும், யாரையும் பார்த்து காப்பி அடிக்காம, நம்ம வாழ்க்கையின் இனிப்பான, கசப்பான அனுபவங்களைக் கோத் தாலே அழகான திரைக்கதை கிடைக் கும்.


 என்னோட குறும்படங்கள்ல நான் கத்துக்கிட்ட விஷயங்களை சினிமாவுல பண்ணி இருக்கேன். 14 குறும்படங்கள் எடுத்து இருக்கேன். 'யூ டியூப்’ல் நான் அப்லோட் பண்ணின முதல் குறும்படத்துக்கு 'இதெல்லாம் படமாடா?’னு கமென்ட் வந்தது. ஆனால், கடைசியாக எடுத்த குறும்படம் லட்சக்கணக்கில் ஹிட்ஸ் அள்ளுது.''



'' 'நாளைய இயக்குநர்’ முதல் இன்றைய இயக்குநர் வரை - கதை சொல்லுங்களேன்?''




''நான் மதுரைப் பையன். பள்ளியில் படிக்கும் போதே நாடகம், கலை விழான்னு திரிஞ்சிட்டு இருப்பேன். குறும்படப் பட்டறைகளில் முதல் ஆளாக ஆஜர் ஆகிடுவேன். அப்புறம் 'மெக்கட் ரானிக்ஸ்’ படிச்சிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டேன். ஆனாலும், மனசு மட்டும் டிராமா, குறும்படம்னு குறுகுறுத்துட்டே இருந்துச்சு. அமெரிக்காவில் 'லாஸ்ட் ட்ரெய்ன்’ என்ற குறும்படம் எடுத்தேன். நல்ல வரவேற்பு கிடைச்சது. தொடர்ந்து நிறையக் குறும்படங்களை எடுத்து 'யூ டியூப்’ல அப்லோட் செஞ்சேன். அது எனக்கு நல்ல களமா அமைஞ்சது.



அப்படி அமெரிக்காவில் நான் எடுத்த ஒரு குறும்படத் தைத்தான் 'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்கு அனுப்பினேன். தேர்வாகி அழைப்பு வந்தப்ப, வேலை விஷயமா நான்  ஃபிரான்சில் இருந்தேன். வாழ்க்கையின் முக்கியமான கட்டம் அது. 'சினிமாவா, வேலையா?’னு யோசிக்கவே இல்லை. மூட்டை முடிச்சுகளைக் கட்டிட்டு சென்னைக்கு வந்துட்டேன்.



 'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் என்னோட 'துரு’, 'நீர்’ படங்கள் பயங்கர அப்ளாஸ் அள்ளியது. 'நீர்’ இரண்டாம் இடத்தைத் தட்டியது. ராமேஸ்வரம் மீனவர் பிரச்னையை மையமா வெச்சு எடுத்த அந்தக் குறும்படத்தைப் பார்த்துட்டு, பல தயாரிப்பாளர்கள் கதை கேட்டாங்க. அந்த உற்சாகத்தில்தான் 'அட்டகத்தி’ படத்தைத் தயாரிச்ச திருக்குமரனிடம் ஸ்க்ரிப்ட்டைக் கொடுத்தேன். உடனே ஓ.கே. சொல்லி ஷூட்டிங் கிளம்பியாச்சு. வாங்க பீட்சா சாப்பிடலாம்!''


 நன்றி - விகடன் 


http://www.virakesari.lk/image_article/Pizza.jpg



அழகும், அம்சமும் நிறைந்த நடிகை. இதுவரை நடித்ததும் நல்லப் படங்கள் தான் என்றாலும், நடிகை ரம்யா நம்பீசனுக்கு கோடம்பாக்கம் கொடுத்திருக்கும் அடையாளம் ராசியில்லா நடிகை என்பதுதான். இந்த அடையாளத்தை வைத்துகொண்டு கோடம்பாக்கத்தில் எப்படியாவது முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ரம்யாவின் பசிக்கு கிடைத்திருக்கிறது 'பீட்சா'.

"மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தும், தமிழ் சினிமாவில் அந்த இடத்தை நான் இன்னும் பிடிக்க வில்லை. 'பீட்சா' படம் வெளியானப் பிறகு கோடம்பாக்கத்தில் எனக்கும் ஒரு அந்தஸ்து கிடைக்கும்." என்று ரம்யா நம்பீசன் கூறினார். அவர் கூறியது உண்மைதான் என்று உணர்த்தியது இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டில் திரையிடப்பட்ட பாடல்களும், டிரைலரும். இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பாடல் காட்சியில் படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியுடன் மிக நெருக்கமாக நடித்திருக்கிறார் ரம்யா நம்பீசன்.

இந்த நெருக்கமான நடிப்பு தான் தன்னை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாரோ என்னவோ!. ஏன் இப்படி நடித்தீர்கள்? என்று கேட்டால், "கதைக்கு தேவைப்பட்டது அதனால் தான் இப்படி நெருக்கமாக நடித்தோம். படத்தைப் பார்த்தால் உங்களுக்கே அது புரியும்." என்கிறார் படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி.

இது ஒரு திரில்லரான காதல் கதையாம்.பீட்சா டெலிவரி பண்ணுவதற்காக ஹீரோ ஒரு வீட்டிற்கு செல்கிறார். அங்கு நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் தான் படத்தின் கதை. இப்படத்தை இயக்கியிருப்பவர் கார்த்திக் சுப்புராஜ் என்ற புதுமுகம். இவர் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாதவர். குறும்படங்கள் இயக்கி தனது திறமையை நிரூபித்து இந்த படத்தின் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

அது என்ன 'பீட்சா' எங்கே போனது தமிழ்? என்று இயக்குநரிடம் கேட்டால், "பீட்சா என்பது இத்தாலி நாட்டு பிரபலமான ஒரு உணவு. அங்கே அந்த உணவை அழைப்பது போலதான் இங்கேயும் அழைக்கிறார்கள். நமது தோசையை ஆங்கிலத்திலும் தோசா என்று தான் சொல்லுவர்கள். அதுபோல தான் இதுவும் பீட்சா என்பது ஒரு உணவின் பெயர் தான். அதனால் இதை தமிழக அரசு ஏற்றுகொள்ளும் என்று நம்புகிறோம். இந்த தலைப்பும் எங்கள் கதைக்கு பொருத்தமாக இருந்ததால் வைத்துவிட்டோம். என்று விளக்கம் அளித்தார்.

நன்றி - சென்னை ஆன் லைன்


diSki -பீட்சா - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க
http://www.adrasaka.com/2012/10/blog-post_1749.html




Friday, March 25, 2011

குள்ளநரிக்கூட்டம் - காதலில் கண்ணியம் + காமெடியில் WIN னியம் - சினிமா விமர்சனம்

http://www.tamilvix.com/wp-content/uploads/2011/03/kullanari-koottam-movie-posters.jpg 

போலீஸ் எஸ் ஐ செலக்‌ஷனில் நடக்கும் ஊழல்கள் மற்றும் மோசடிகளை படம் பிடித்துக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் இயக்குநருக்கு வந்ததைக்கூட சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.. ஆனால் அதற்காக அவர் மெனக்கெட்டு அமைத்த ஜனரஞ்சகமான திரைக்கதை இருக்கே .. கலக்கல்...

இடைவேளை வரை காதல் ,அதற்குப்பிறகு போலீஸ் செலக்‌ஷன் ஸ்டோரி என எந்த விதக்குழப்பமும் இல்லாமல் இயக்குநர் சர்வசாதாரணமாக திரைக்கதையை கையாண்ட விதம் பிரமிப்பூட்டுகிறது...

ஹீரோ - ஹீரோயின் சந்திப்பைக்கூட சாதாரண செல்ஃபோன் ரீ சார்ஜ் மேட்டரில் அவர் டெவலப் பண்ணிய விதம் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கு நல்ல பாடம்..

வெண்ணிலா கபடிக்குழு ஹீரோ விஷ்ணு இதில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரொம்ப சாதாரணமான தோற்றத்தோடு ,இயல்பாக நடித்து பெயரை தட்டி செல்கிறார்...படத்தில் ஹீரோவுக்கு ஃபைட் இல்லை என்பது கூடுதல் நிம்மதி..

ஹீரோயின் ரம்யா நம்பீசன்.. சுமாரான ஃபிகர்.. நடிப்பு ஓக்கே..இவர் கசாமுசா டிரஸ் எல்லாம் போடாமல் கதையின் கண்ணியத்துக்கு ஏற்றவாறு டீசண்ட்டாக உடை அணிந்து வந்து இயக்குநர் சொன்ன வேலையை கரெக்ட்டாக செய்து பாராட்டை பெறுகிறார்...
http://www.tamilnow.com/movies/gallery/kullanari-koottam/remya-nambeesan-in-kullanari-koottam-2.jpg
படத்தோட கதை என்ன?ஒரு போலீஸ் ஆஃபீசருக்குத்தான் பொண்ணைக்குடுப்பேன் என பிடிவாதம் பிடிக்கும் போலீஸ் ஆஃபீசர் பெண்ணை காதலிக்கும் பையன் தன் அப்பாவுக்கு போலீசையே பிடிக்காது என்ற முட்டுக்கட்டையை தாண்டி எப்படி எஸ் ஐ ஆகி காதலியின் கையைப்பிடிக்கிறான் என்பதுதான்... அதை எந்த அளவு கதையோட்டத்துடன் கூடிய காமெடியுடன் சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு சுவராஸ்யமாய் சொல்லுவதில் இயக்குநர் டிஸ்டிங்க்‌ஷனில் பாஸ் ஆகி இருக்கிறார் .

படத்தோட ஓப்பனிங்க்ல அப்பாவின் ஃபோனுக்கு ரீசார்ஜ் பண்ணுவதற்குப்பதிலாக யாரோ ஒரு பொண்ணுக்கு தவறுதலாக ரீ சார்ஜ் செய்ய அந்தப்பெண்ணை பார்த்து அந்த ரீ சார்ஜ் பணத்தை பெறுவதற்குள் அவர்களுக்குள் காதல் ரீ சார்ஜ் ஆகிறது..இந்த சுவராஸ்யமான சம்பவம் படத்தை இடைவேளை வரை கொண்டு போவது ஆச்சரியம் தான்..
http://gallery.nkl4u.in/wp-content/gallery/kullanari-kootam/kullanari-koottam-movie-exclusive-stills-1.jpg
கதையுடன் கூடிய காமெடியில் கலக்கும் வசனங்கள்

1. அப்பா - டேய், எனக்கு ஒரு உதவி பண்றியா..?

ஹீரோ - வேலைக்குபோன்னு சொல்லாம எது வேணாலும் சொல்லுங்க.. கேட்கறேன்..

அப்பா   - நடக்காததைப்பற்றி நான் எதுக்கு கவலைப்படறேன்..?


2.  இங்கே பாரு பசங்களா... மழைக்குக்கூட   போலீஸ் ஸ்டேஷன் பக்கம் ஒதுங்கிடக்கூடாது...அது உங்களுக்கு ஞாபகம் வரட்டும்னு தான் நான் இப்படி நடந்துக்கறேன்...


 3.  டேய்.. வாயை மூடிட்டு சாப்பிடு..

அது எப்படி முடியும்?நீ சாப்பிட்டு காமி...

அய்யோ அப்பா முடியலடா சாமி.. வெற்றிங்கற உன் பேரை ஏன் உன் வீட்ல வெட்டின்னு கூப்பிடறாங்கன்னு இப்பத்தான் தெரியுது...

4.  இந்தா.. நான் உன் கிட்டே வாங்குன 10 ரூபா.. சரியா இருக்கான்னு எண்ணிப்பார்த்துக்க...

ஏண்டா.. நீ என்ன 7 ரூபா + 3 ரூபான்னா குடுத்திருக்கே..? ஒரே ஒரு பத்து ரூபாதானே .. எதுக்கு எண்ணி பார்க்கனும்?

5. ஹீரோயின் - நீங்க என்ன பண்றீங்க..?

ஹீரோ -  ...................................

ஹீரோயின் - என்னங்க.. இப்படி சும்மாவே இருந்தா எப்படி? பதில் சொல்லுங்க..

ஹீரோ - நான் வேலைக்கு போகாம சும்மா இருக்கேன்கறதைத்தான் அப்படி சிம்பாலிக்கா சொன்னேங்க..


6.  எந்த பேங்க்ல அக்கவுண்ட் வெச்சிருக்கீங்க..?

ஹூம்.. என்னை நம்பி ஒரு டீக்கடைல கூட அக்கவுண்ட் வெக்க விட மாட்டேங்கறாங்க...( குமுதம் ஜோக் வெ சீதாராமன்)

7.  ஏங்க.. ஆட்டோ  எல்லாம் வேணாம்ங்க....

காசு நான் தர்றேன்.. 

அப்ப சரி.. இப்பவே போலாம்.. ஹி ஹி 

8.  ஏம்ப்பா.. ஆட்டோ வருமா..?

வந்தா கூட்டிட்டு போ... ( எஸ் வி சேகர் நாடகக்காமெடி- தத்துப்பிள்ளை)

9. ஹீரோயின் தோழி - யார்டி இவன்?

ஹீரோயின் - ஜஸ்ட் ஃபிரண்டுதாண்டி...

ஹீரோயின் தோழி - ஹூம்.. கல்யாணம் பண்ணிக்கப்போறவனையும் இப்படித்தான் சொல்றீங்க.. கழட்டி விடப்போறவனையும் இப்படித்தான் சொல்றீங்க... ( ஆடியன்ஸின் செம க்ளாப்ஸ்#எத்தனை பேர் பாதிக்கப்பட்டாங்களோ)

10. ஹீரோயின் - ஏண்டி.. அவனுக்கு ஃபோன் போட்டு பேசட்டுமா?

ஹீரோயின் தோழி - ஹய்யோ பச்சை மண்ணு.. என்னை கேட்டுத்தான் எதுவும் செய்யும்.. ஹூம்.. நானும் அழகாத்தான் இருக்கேன்.. எனக்கு ஒருத்தனும் மாட்ட மாட்டேங்கறானே..?  (எந்த ஒரு மொக்கை ஃபிகருக்கும் ஒரு இளிச்சவாயன் உண்டு , அது இயற்கையின் நியதி #இடைச்செருகல் சொந்த டயலாக் ஹி ஹி - நன்றி குருதிப்புனல் கமல் வசனம்)


11.  காது குத்தல் ஃபங்க்‌ஷன் நல்ல படியா முடிஞ்சுதா..?

ஹூம்.. இவன் நமக்குத்தாங்க காது குத்திட்டான்..லவ்வை டெவலப் பண்ண போயீட்டு வந்திருக்கான்..

12.  இப்படி தம் அடிக்க்கறீங்களே... போலீஸ் செலக்‌ஷன் ல எப்படி ஓடப்போறீங்க?

ரயில் ஓடறதுக்கு முன்னால புகை விடறதில்லையா? எப்படி ஓடறேன்னு மட்டும் பாரு... ( வெ. க.குழு படத்தில் 50 புரொட்டா சாப்பிட்டு ஜெயிக்கும் காமெடியனின் இந்த டயலாக்கிற்கு அரங்கம் அதிரும் கை தட்டல் # தம் பார்ட்டிங்க)

13.  ஏண்டா.. காதல் அவ்வளவு சக்தியை தருமாடா..? 

அனுபவிச்சுப்பார்த்தாத்தாண்டா அதனோட அருமை தெரியும்..

14. பேசாம நீ என் கட்சில சேர்ந்துடு.. நல்லா வளர்ந்துடுவே...

28 வருஷமா வளராதவனா இப்போ வளரப்போறேன்? அட போங்கப்பா.. (இந்த டயலாக்கை பேசும் காமெடியன் அழகர் சாமியின் குதிரை பட ஹீரோ)
http://boxoffice9.com/gallery/var/resizes/Tamil-Movie-Gallery/Tamil-Movie-Stills/Kullanari-Koottam-Stills,Photos,Pics/Kullanari%20Koottam%20Stills00-11.jpg?m=1299302886
படத்தில் பல சீன்கள் கை தட்டலை அள்ளிக்கொள்கின்றன.... பர்சனல் லோன் வேணுமா? என பிரைவேட் பேங்க் ஸ்டாஃப் கேட்கும்போது எரிச்சலாய் மறுக்கும் ஹீரோ அடுத்த 10 நிமிஷத்துலயே சார் எனக்கு 1500 ரூபா பர்சனல் லோன் வேணும் என கேட்பது செம காமெடி...

மிஸ்டு கால் கொடுக்கும் ஹீரோவை கலாய்க்க ஹீரோயின் ரெடியாக ஃபோனையே பார்த்துக்கொண்டிருக்க கண்ணிமைக்கும் நேரத்தில் ஹீரோ மிஸ்டு கால் கொடுப்பது செம சீன்...

மிஸ்டு காலை உடனே காண தோழி செய்யும் டி வி பக்கத்தில் போய் அலை வரிசை ஆடும்போது டக் என ஆன் பண்ணுவது இயக்குநரின் நுட்பமான பார்வைக்கு எடுத்துக்காட்டு..

இடைவேளை வரை காதலை கலகலப்பாக கொண்டு செல்லும் இயக்குநர் படத்தின் பின் பாதியை அப்படியே சர்வசாதாரணமாக கலர் மாற்றுவது செம..

ஃபர்ஸ்ட் ஆஃப் எடுத்த டைரக்டர் வேற.. செகண்ட் ஆஃப் எடுத்த டைரக்டர் வேற  என சொன்னால் கூட நம்பி விடலாம்...அந்த அளவு செகண்ட் ஆஃப்பில் களம் மாற்றம்..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWLPAqoSE2DQf7WTsRx3-B_s_G_5xoe5ANS8X6PYgsxUIMiUGwvhZDOTWke5HLCS6igfGehQdciBEbywFOQTrRIhF18u5QEEFZJ8im766XmM_ZTAYkE0us4y7e5Yqbk5MLIWYaunqqnLCF/s400/Kullanari-Koottam-ramya-nambeesan-3.jpg
எஸ் ஐ செலக்‌ஷன் எப்படி நடக்குது? என்பதை இவ்வளவு விலாவாரியாக எந்த தமிழ்ப்படத்திலும் காட்டியதில்லை என்ற அளவிலும் இந்தப்படம் முக்கியமான பதிவை பகிர்கிறது...

காதல் என்பதை முத்தத்தில் சொல்லி விட்டாய்.. மவுனத்தில் உணர்த்தி விட்டாய் பாடல் வரிகள், படமாக்கப்பட்ட விதம் எல்லாமே தரம்.. ஒளிப்பதிவு  கண்ணுக்கு குளிர்ச்சி.. எடிட்டிங்க் உட்பட்ட டெக்னிக்கல் சமாச்சாரங்கள் எல்லாம் ஓக்கே ரகம்
.
படத்தில் டைட்டில் தான் சரி இல்லை.. இன்னும் கவித்துவமாய் வைத்திருக்கலாம்.. அதே போல் ஆரம்பத்தில் செல் ஃபோன் ரீ சார்ஜ் செய்யும் பெண்ணிடம் ஹீரோ பேசும் டபுள் மீனிங்க் டயலாக்கை கூட கட் பண்ணி விடலாம்....


இயக்குநர் ஸ்ரீ பாலாஜிக்கு  இது முதல் படம்.. சுசீந்தரனின் அசிஸ்டெண்ட் டைரக்டர் ஒரு கண்ணியமான படம் கொடுத்ததற்குப்பூச்செண்டு கொடுத்துப்பாராட்டலாம்..
ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள், பி செண்ட்டர்களில் 35 நாட்கள், சி செண்ட்டர்களில் 25 நாட்கள் ஓடலாம்..

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 44


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - நன்று


ஈரோடு அபிராமி தியேட்டரில் பார்த்தேன்.. 140 நிமிடங்கள் ஓடுகிறது...


 டிஸ்கி -1. சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம் 

டிஸ்கி 2 -  
  SUCKER PUNCH - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 கூட்டல்