Showing posts with label Paresh Rawal. Show all posts
Showing posts with label Paresh Rawal. Show all posts

Friday, January 04, 2013

TABLE NO 21 - சினிமா விமர்சனம்

http://media1.santabanta.com/full1/Bollywood%20Movies/Table%20No%2021/table-no-21-6a.jpg
பாரதிராஜா தன் மகன் மனோஜை ஹீரோவா போட்டு சரண் இயக்க ஒரு படம் எடுத்தாரே அல்லி அர்ஜூனா அந்தப்படத்தோட அடிப்படைக்கருவான ரேகிங்க் கொடுமைகள் ,  டி வி ல இப்போ  ஃபேமஸ் ஆகி வரும் ரியாலிட்டி ஷோ சீரழிவு சொல்வதெல்லாம் உண்மை பேக் டிராப்ல  சொன்னா அதுதான் டேபிள் நெம்பர் ஒன் ஹிந்திப்படத்தின் கதை

மேரேஜ் ஆகி 5 வது திருமண நாள் கொண்டாடும் புது மணத்தம்பதி  ஒரு ஹோட்டல்ல வித்தியாசமான போட்டில கலந்துக்கறாங்க . அது ஒரு ரியாலிட்டி ஷோ , லைவ் புரோகிராம். 8 கேள்வி கேட்பாங்க , அதுக்கு பதில் சொல்லனும். சரியா சொல்லிட்டா   21 கோடி ரூபா  பரிசு .

 முதல் கேள்வியே செம கில்மாவா இருக்கு. உங்க மனைவியை பப்ளிக் ப்ளேஸ்ல எல்லாரும் பார்க்க லிப் டூ லிப் கிஸ் அடிப்பீங்களா? அடிப்பேன்னு சொல்லி அடிச்சு ஒரு கோடி அடிக்கறார் ஹீரோ.

2 வது  கேள்வி உங்க கணவர் உங்களை முழுசா அறிஞ்சவரா? அதுக்கு அந்த உத்தம பத்தினி “ நோ” -னு சொல்றார். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்  யாரும் அறியாத ஒரு  கறுப்புப்பக்கம் இருக்குங்கற பொது விதிப்படி  . ஹீரோயினை ஒரு பிளேட்ல தேள், பல்லி, பூரான் மாதிரி ஊர்வன ஜந்துக்களை உயிரோட சாப்பிட சொல்றாங்க். புருஷன் சொல்றான். என் சம்சாரம் பற்ரி எனக்குத்தெரியாதா? அவ சுத்த  சைவம்கறான். ஆனா அவ  ஈட்டிங்க் . வின் 2 கோடி 


http://movies.infoonlinepages.com/gallery/var/albums/Events/T/Table-No.21/Stills-1/First%20Look%20Launch%20Of%20Table%20No%2021%20Movie%205.JPG?m=1353741295

3வது கேள்வி - உங்க மனைவிக்காக நீங்க எந்த தியாகமும் பண்ணத்தயாரா? எஸ். ஒரு கூண்டுல மனைவியை அடைச்சு டைம் குடுக்கறாங்க  அந்த டைம்க்குள்ளே ஹீரோ அரை பாட்டில் பிளட்டை அவர் உடம்புல இருந்து எடுத்து பாட்டில்ல சேர்த்தனும். டைமிங்க் மிஸ் ஆனா  ஆள் அவுட். பர பரப்பான இந்த கேம்ல ஹீரோ வின்


 இதுல தம்பதிகள் செம காண்ட் ஆகி விலகிடறோம்கறாங்க . அக்ரிமெண்ட்படி விலகமுடியாதுங்கறார் வில்லன். போய்யா நீயும் ஆச்சு , உன் போட்டியும் ஆச்சுன்னு 2 பேரும் அழகிரி மாதிரி கிளம்பறாங்க . அவங்க கைல  என்னமோ வாட்ச் மாதிரி 1 கட்டி இருக்காங்க ஆல்ரெடி . வில்லன் எல்லையை தாண்டுனா டேஞ்சர். சோ அவங்க  ரிட்டர்ன் ஆகி மறுபடி கேம் 



4 வது ஸ்டெப்ல மனைவியை மொட்டை அடிக்கச்சொல்றான். வழக்கமா பொண்ணுங்கதான் பையனுக்கு மொட்டை அடிப்பாங்க , இதுல உல்டா  வின்


5 வது கேள்வி உங்க மனைவியை எப்பவாவது  கை நீட்டி அடிச்சிருக்கீங்களா? ஆமாங்கறார். இப்போ மனைவிகிட்டே நீங்க பளார்னு ஒரு அறை விடுங்க அப்டிங்கறார். விடா பாரு ஒரு அறை பளார்.. கதி கலங்கிடுச்சு 


 6 வது கேள்வி  பப்ளிக் ப்ளேஸ்ல ஃபைட் பண்ணி இருக்கீங்களா?  இல்லை. இப்போ பண்ணுங்கங்கறார்.  பபளிக் ப்ளேஸ்ல ஒரு காரை உடைச்சு போலீஸ் கிட்டே மாட்டி ஒரு ஃபைட் . வந்து பார்த்தா மனைவியை காணோம். ஸ்ட்ரப்டீஸ் எனப்படும் டான்ஸ்க்கு வலுக்கட்டாயமா அவளை கொண்டு போய் இருக்காங்க . போய் ஃபைட் போட்டு மீட்டாச்சு . வின் 


 7 வது கேள்வி  . உங்க கணவருக்கு நீங்க எப்பவாவது துரோகம் பண்ணி இருக்கீங்களா?   அவ பொய் சொல்ல வழி இல்லை . லை டிடெக்டிவ் மிஷின் காட்டிக்குடுத்துடும் . ஆமாங்கறா . அங்கேயே தம்பதிகளுக்குள் சண்டை . ஆனா போட்டில வின்


 8 வது கேள்வி . இதுவரை யாரையாவது கொலை பண்ணி இருக்கீங்களா? இல்லை.. இப்போ பண்ணுங்க  அப்டினு ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறாங்க .


 அவன் யாரு? எதுக்கு இந்த தம்பதியை இப்படி டார்ச்சர் பண்றான்? கொலை செய்யக்கூட்டிட்டுப்போனது வில்லனோட மகனையே. எதுக்காக ? இதெல்லாமே க்ளைமாக்ஸ் சஸ்பென்ஸ்..


ஹீரோவா ராஜீவ். பாவம் அவருக்கு லவ் சீன் எல்லாம் நல்லா ஒர்க் அவுட் ஆகுது . க்ரைம் , பயம் , ஃபைட் , ஆக்ரோஷம் எல்லாம் சரியா வர்லை 


 ஹீரோயின் Tena Desae, . வசீகரமான முகமோ , சொல்லிக்கொள்ளும்படியான தேகமோ இல்லை. 50 மார்க்  தேறும் . மொட்டை அடிக்கும்போது ஓரளவு நடிக்க ட்ரை பண்ணி இருக்கு பாப்பா . 


 வில்லன் நடிப்பு ரகுவரன் , பிரகாஷ்ராஜ் மாதிரி பிரமாதப்படுத்தலை . சொன்னதை செஞ்சுட்டு போய்ட்டார்.. 


http://www.apnatimepass.com/table-no-21-movie-poster-12.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1.  படம் 108 நிமிடங்கள் ஓடுது .  நல்ல விறு விறுப்பு . க்ளைமாக்ஸை யூகிக்க முடியலை ,. குட் 


2. க்ரைம் த்ரில்லர்ல  சமூக அக்கறை , மெசேஜ் சொல்லாமல் சொல்வது நல்ல திரைக்கதை உத்தி 




3. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல ஹீரோயினுக்கு ஸ்விம்மிங்க் டூ பீஸ் டிரஸ்ல  ஒரு கர்ச்சீப்பும் , 2 ரிப்பனும் மட்டும் காஸ்ட்யூமா குடுத்து கேமராவால் அள்ளிக்கிட்டது 



http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/12/Tena-Desae-sizzles-in-Sari-at-a-photoshoot.jpg


 இயக்குநருக்கு சில கேள்விகள்




1. முன் பின் அறிமுகம் இல்லாத ஆள் கூப்பிடதும் தம்பதிகள் ஹெலிகாப்டர்ல தேவாங்கு மாதிரி கிளம்பறாங்க்ளே? எப்டி? 



2.  புரோகிராம் லைவ்ல ஓடுது. உலகம் பூரா மக்கள் பார்த்துட்டு இருக்காங்க. கண்ணியமான உடை அணீயாமல் எல்லாரும் பார்த்துக்கோங்கன்னு கடையை விரிக்கறது மாதிரி மனைவி போட்டு வரும் டிரஸ்சை கணவன் அனுமதிப்பது எபப்டி? 



3. மனைவிக்கு ஏதோ விலை மதிப்பில்லாத முத்து மாலையை பரிசு அளிக்கிறார். அது பார்த்தா  சென்னிமலை தேர்க்கடைல 10 ரூபாய்க்கு வாங்குன பாசி மாலை மாதிரி இருக்கு. அட்லீஸ்ட் ஒரு நெக்லஸ் மாதிரி கவரிங்க்லயாவது காட்டி இருக்கலாம் 



4.  கேம் நடக்கும்போது பதில் சொன்ன அடுத்த நிமிஷமே 2 கோடி ரூபா அவங்க பேங்க் அக்கவுண்ட்ல கிரெடிட் ஆகுது .  அது எப்படி முடியும்?  சும்மா  எஸ் பி  அக்கவுண்ட்ல 50,000 ரூபா க்கு மேலே போட்டாலே பேன் கார்டு , லொட்டு  லொசுக்கு ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் இருக்கும்போது எந்த டீட்டெயிலும் கேட்காம ஆன் லைன்ல 2 கோடி ரூபா அக்கவுண்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியுமா?  ( பேங்க் மேனேஜர் கம் நண்பரிடம் கேட்டேன் முடியாதுங்கறார்) 



5. ஹீரோ ரத்தத்தைப்பார்த்தாலே மயக்கம் வரும் ஆள் அப்டினு ஃபிளாஸ்பேக்ல வருது . ஆனா அவரே  தன் கைல ஊசி  குத்தி பாட்டில் நிறைய ரத்தம் எடுக்கறாரு. மெடிக்கல் லைன்ல இருப்பவங்க தவிர வேறு யாரும் அப்படி செல்ஃப் பிளட் டொனேட் பண்ண முடியாது . கிறு கிறுனு வருமே.. 



 6. எல்லாரும் பார்க்கும் இந்த லைவ் புரோகிராம்ல கொலை பண்றது , துன்புறுத்துறது இதை எல்லாம் பார்த்து யாரும் கேள்வி கேட்கலையா? போலீஸ் எல்லாம் என்ன பண்ணுது? என்பதற்கு யூகமாக ஒரு பதில் க்லைமாக்ஸ்ல கிடைக்குது , ஆனா அதை முறைப்படி விளக்கவே இல்லை 


7.  ராக்கிங்க் பண்ணும் காட்சியில் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்க்குள்ள , அவங்களுக்கே உரிய குறும்புத்தனம் , ஜாலி எல்லாம் மிஸ்சிங்க் , எஒம்ப கொடூரம் மட்டுமே காட்டி இருக்காங்க. பரிதாபத்தை வரவழைக்க , ரொம்ப செய்ற்கை .


8. வில்லனோட டார்கெட் ஹீரோதான் . ஹீரோயினை மொட்ட்டை ஆக்குனது . அந்த விடுதில அவளை அலங்கோலப்படுத்துனது தேவை இல்லாதது . அதுதான் தேவைன்னா க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்ல ஹீரோவை வில்லனா காட்டுனதுக்குப்[பதிலா ஹீரோயினை வில்லியா காட்டி இருந்தா செமயா இருந்திருக்கும் 



http://mimg.sulekha.com/tena-desae/images/stills/tena-desae-04.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்

 1. டெயிலி ஃபிளைட்ல போனா அது உல்லாச வாழ்க்கை ஆகிடுமா? 



2. இந்த முத்து மாலை வாங்க பணம் ஏது? 



 லாட்டரி விழுந்தது , ஜாக் பாட் அடிச்சேன் 


 பொய் 

 சேவிங்க்ஸ்ல இருந்துதான் எடுத்தேன்

 எனக்காக  சேவிங்க்ஸ்ல இருந்து ஏன் செலவு பண்ணி வேஸ்ட் பண்றீங்க பணத்தை? இருந்தாலும் ஐ லைக் இட் ( அதானே? ) 



3. டிராயிங்க் சூப்பரா  இருக்கு 


 சும்மா அள்ளி விடாதீங்க , அது காலியா இருக்கு 

 கலைக்கண்ணோட பார்க்கனும் 



4.  கேம்ல ஜெயிச்சா எவ்ளவ் ? 

 எவ்ளவ் வேணும் ? 


 ஒரு கோடி?


 21 கோடி தர்றேன் 



வாவ் 



5. வெரிகுட் , ஃபர்ஸ்ட் கிஸ் மாதிரியே பிரமாதமா கொடுத்தே 



6. இந்த உலகத்தை வழி நடத்திச்செல்வது எது தெரியுமா?  பயம் தான் . யார் யாரை  எப்படி மடக்குவாங்க அப்டிங்கற பயம் தான்


http://media.santabanta.com/newsite/cinemascope/bitimages/tena-desae.jpg
சி.பி கமென்ட் - க்ரைம் த்ரில்லர்கள் பார்க்கலாம். லேடீஸ் , மாணவ் மாணவிகள்  மன ரீதியான பாதிப்புக்கு ஆளாவர்கள் என்பதால் பார்க்க வேண்டாம்  ( இதுல என்ன பியூட்டின்னா இது ஒரு விழிப்புணர்வுப்படம் டூ காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்) . ஈரோடு அண்ணாவில் படம் பார்த்தேன் . மொத்தமே 7 பேர்தான் தியேட்டர்ல


 ரேட்டிங்க்  =    3 / 5



ஆனந்த விக்டன் எதிர்பார்ப்பு மர்க் - 40 ( ஹிந்திப்படம் எனவே விமர்சனம், மார்க் போட மாட்டாங்க )


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே



http://arkwhisper.com/wp-content/uploads/2012/12/deepika_padulone_hot.jpg

Monday, October 01, 2012

OH MY GOD - சினிமா விமர்சனம்

http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/09/OMG-Oh-My-God-Movie-Review-Poster.jpg 

தமிழில் வந்த முதல்  சயின்ஸ் ஃபிக்‌ஷன்  சிறுகதை புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும். அப்புறம்  தமிழில் வந்த அந்த மாதிரி  டைப் படம் சிம்புதேவனின் அறை எண் 305 இல் கடவுள்.அதே டைப்ல குஜராத் நாடகமான  காஞ்சி விருத் காஞ்சி , மற்றும் ஹிந்தி நாடகமான கிருஷ்ணன் வெர்சஸ் கன்னையா  ஆகியவற்றின் தழுவல் தான் இந்த ஓ மை காடு ஹிந்திப்படம் .


 தான் ஒரு நாத்திகவாதியா இருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள ஆத்திகவாதிகள் வாக்குகள் வாங்கித்தான் கலைஞரால சி எம் ஆக முடிஞ்சுது,,அந்த மாதிரி ஹீரோ அடிப்படையில் நாத்திகர் என்றாலும் அவர் பண்ற பிஸ்னெஸ் எல்லாமே கடவுள் சம்பந்தப்பட்ட பொருட்களான  சிலைகள்,புனித நீர் , கங்கா தீர்த்தம் இந்த மாதிரி அயிட்டங்கள் தான்.


ஹீரோவோட மனைவி ஆன்மீகப்பழம்.எந்த நல்ல காரியம் அல்லது யாகம் செஞ்சாலும் எப்படி ஜெ , நல்ல நேரம் பார்த்து செய்யறாரோ அந்த மாதிரி டைப்.இந்த கடவுள் நம்பிக்கை சம்பந்தமா 2 பேருக்கும் அடிக்கடி வாக்குவாதம் வரும்.




 ஒரு நாள் திடீர்னு பூகம்பம் வருது.ஹைவேஸ்காரங்க எப்படி கேப்டனின் கல்யாண மண்டபத்தை மட்டும் குறி பார்த்து இடிச்சாங்களோ அந்த மாதிரி . ஊர்லயே ஹீரோவோட கடை மட்டும் தான் பூகம்ப பாதிப்புக்கு உள்ளாகுது இன்சூரன்ஸ் கம்ப்பெனி இயற்கைச்சீற்றங்களுக்கு பொறுப்பேத்துக்க முடியாதுன்னு எஸ் ஆகிடறாங்க .இதுக்கெல்லாம் காரணம் ஹீரோவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததுதான் அப்படின்னு மனைவி சொல்றா. ஹீரோ செம காண்ட் ஆகிடறாரு.


இப்போ ஹீரோ உலகத்தில் உள்ள அனைத்து மதக்கடவுள் மேலயும் கேஸ் போடறார்.எல்லா மத சாமியார்கள், பாதிரியார்கள் எல்லாருக்கும் நோட்டீஸ் அனுப்பறார். நஷ்ட ஈடு கேட்கறார். ஆரம்பத்துல எல்லாரும் ஹீரோவை லூஸ் மாதிரி பார்க்கறாங்க..


 ஆனா அவர் தானே வக்கீல் மாதிரி கோர்ட்ல  விதி பட சுஜாதா மாதிரி கலக்கு கலக்குன்னு கலக்கறார். இப்போ நாடே பத்தி எரியுது.நாட்டு மக்கள் செம்மறி ஆடு கணக்கா ஹீரோவுக்கு சப்போர்ட் ஆகறாங்க.


 திடீர்னு கடவுள் வர்றாரு. என்ன நடக்குது என்பதுதான் சுவராஸ்யமான மிச்சக்கதை.. 



எம் ஆர் ராதா ரத்தக்கணீர் நாடகம், சோ முகம்மது பின் துக்ளக்  என  சூப்பர் ஹிட் நாடகங்கள்ல நடிச்சு அதை சினிமா ஆக்கி மெகா ஹிட் கணட மாதிரி  பரேஷ் ராவல் நாடகத்துல நடிச்சு சினிமால்யும் அநாயசமா நடிச்சிருக்கார். கோர்ட் காட்சிகள் பொறி பறக்குது. வசனகர்த்தாதான் அதுக்குக்காரணம்னாலும் நடிப்பும் பக்க பலம். 


 பகவான் கிருஷ்ணரா  அக்‌ஷய் குமார். சுமாரான நடிப்பு.

http://image3.mouthshut.com/images/ImagesR/2012/9/OMG-Oh-My-God-925662626-3459785-1.jpg?a=9/29/2012%2011:03:42%20AM


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. சீரியஸா போகும் திரைக்கதையில் நயன் தாராவின் முன்னாள் காதலர் பிரபு தேவா - சோனாக்‌ஷி சின்ஹா ஜோடியின் டப்பாங்குத்து  டான்ஸ்.


2. பஸ்ஸில் தீர்த்தக்கமண்டலத்தில் சரக்கு வெச்சு ஆண்கள் எல்லாம் ஷேர் பண்ணிட்டு இருக்கும்போது ஒரு லேடி அதை வாங்கிக்குடிப்பது ஆல்ரெடி பல தமிழ்ப்படங்கள்ல பார்த்தது என்றாலும் ஜாலியான சீன்


3. தெளிவான திரைக்கதை ரெண்டேகால் மணி நேரம் ஓடும் படத்துல 20 நிமிடம் மட்டும் தான் ஸ்லோவா போகுது . மற்ற எல்லா இடங்கள்லயும் செம ஸ்பீடு


4. படத்தில் தேவையற்ற டூயட் , செண்ட்டிமென்ட் சீன்ஸ் எல்லாம் வைக்காம படத்துக்கு என்ன தேவையோ  அந்த சம்பவங்களை மட்டும் திரைக்கதை ஆக்கியது. 


5. பொறி பறக்கும் வசனங்கள் படத்தின் மிகப்பெரிய பிளஸ்.. அதுவும் கோர்ட்டில் அவர்  நாத்திக வாதம் பேசும்போதும், ஆன்மீக வாதிகளை மடக்கும்போதும் சபாஷ் வசனகர்த்தா சொல்லத்தோணுது


http://i.indiglamour.com/photogallery/hindi/movies/2012/July16-1/OMG-Oh-My-God/wide/OMG-Oh-My-God_2145rs.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1.  ரிலையன்ஸ் கம்பெனில ஒரு பிரச்சனைன்னா நீ டைரக்டா அம்பானிட்ட தான் பேசுவியா? டீலர்ட்ட பேசுவியா? அதே மாதிரிதான் கடவுளால ஒரு பிரச்சனைன்னா கடவுளோட ஏஜெண்ட்டுகள்னு தன்னை சொல்லிக்கற ஆட்கள்தான் பதில் தரனும் , அவங்க தான் அதுக்கெல்லாம் பொறுப்பு 



2.  இன்சூரன்ஸ்காரங்க கண்டிஷன்ஸ் அப்ளைனு கை கழுவப்பார்க்கறாங்க , ஆனா கடவுள் நான் உங்களை கை விட மாட்டேன்னு சொல்லிட்டே கண்டுக்காம இருக்கார்


3.  யாருய்யா நீ? உன் பேரென்னா? 

 கிருஷ்ண வாசுதேவ் கோகுல் ( அவ்ளவ் தானே, என்னமோ கூகுள் ஓனர் மாதிரி பில்டப் எதுக்கு - திஸ் வசனம் பை அதிகப்பிரசிங்கி சி பி )


நையாண்டி வேணாம்

 யோவ், நிஜமா நான் கடவுள் தான்யா 



4. கடவுளைப்பற்றி போதிக்கறோம்னு என்னைக்காவது நாங்க சர்வீஸ் டேக்ஸ் கட்டுன்னு கேட்டோமா? இப்போ அவரால ஒரு நஷ்டம்னு ஆனதும் எங்க கிட்டே நட்ட ஈடு கேட்டா எப்படி? 



5. மதவாதிகள் தங்களோட வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கறதில்லை. எதையாவது உளறி அவங்க இமேஜையும் கெடுத்துக்கிட்டு கடவுள் பேரையும் கெடுக்கறாங்க.. 


6. குழந்தை சாக்லெட் வேணும்னு அப்பா கிட்டே அடம் பிடிக்குது, அப்போ தன் குழந்தைக்கு சாக்லெட் வாங்கித்தர வேண்டியது  அப்பாவோட கடமை, அதே மாதிரி தான் கடவுளும். பக்தனோட வேண்டுகோளை கோரிக்கைகளை நிறைவேத்தனும் , அதை செய்யலைன்னா அவன் எபப்டி கடவுள்?



7. இப்போ ஆன்மீகம் ஒரு தொழில் ஆகிடுச்சு 


8. நம்ம நாட்ல ஸ்கூலுக்கு போறவங்களை விட கோயிலுக்கு போறவங்க தான் அதிகம்


9. பாலாபிஷேகமே டோட்டல் வேஸ்ட்தான். வெளீல பசில ஏகப்பட்ட ஏழைங்க துடிக்கும்போது வெறும் கல்லுக்கு ஊற்றப்படும் பால் வீணாத்தானே போகுது?


10. கடவுள் இருக்கார்ங்கறதை நீங்க ஒத்துக்கலையா? 


 யோவ்! நான் தான் கடவுளே!


11.  நீ கீதோபதேசம் படிச்சிருக்கியா? 

 இல்லை.அவ்ளவ் பெரிய புக், நோ ஃபோட்டோ . எவன் பொறுமையா உக்காந்து படிப்பான்? 



12. பைபிள் , கீதோபதேசம் எல்லாமே  மனிதனின் ஒவ்வொரு சந்தேகத்துக்கும் விளக்கம் அளிக்கும் பதில்களோட இருக்கு. அதை முதல்ல முழுசா படிச்சுட்டு வந்து அப்புறமா தர்க்கத்துல ஈடு படனும் 


13. சுகமும் துக்கமும் வரும்போது இரண்டையும் சமமாக பாவிப்பனே யுக புருஷன்


14. உலகில் நடக்கும் அனைத்து நல்லது கெட்டதுக்கும் நானே பொறுப்புன்னு கடவுள் எல்லா மதத்திலும் சொல்லி இருக்கார் 


15. கடவுளோட வேலை மனிதனை உருவாக்குவது மட்டுமே, பாவ புண்ணியங்கள் எல்லாம் மனிதனின் வேலைகள்

16. கோயில்ல சாமி கும்பிடறவங்களுக்கு  மட்டும் மரணம் சம்பவிக்காமயா இருக்கு? அப்புறம் அவங்க சாமி எதுக்காக கும்பிடனும்? என்ன யூஸ்?


http://thecommonmanspeaks.com/wp-content/uploads/2012/09/Oh-My-God-movie2.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்



1. தன்னோட கடை பூகம்பத்துல நாசமாப்போயிடுச்சுன்னு ஹீரோ தன்  வீட்ல இருந்து டி வி நியூஸ் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கறாரு. என்ன கொடுமை சார் இது? ஊருக்கே தெரிஞ்சு சேனல், மீடியா கவர் பண்றவரை இவர் என்ன பண்ணிட்டு இருந்தார்? பக்கத்து கடைக்காரங்க ஃபோன் போட்டு சொல்லி இருக்க மாட்டாங்களா? அட்லீஸ்ட் போலீஸ் கூட தகவல் சொல்லி இருக்காதா?


2. ஹீரோ கோர்ட்ல கடவுள் மேல கேஸ் போட்டுட்டார். ஓக்கே .தெரு மக்கள் எல்லாம் கிண்டல் பண்றாங்க.மதவாதிகள் வந்து மிரட்டிட்டு போறாங்க . இதுக்கெல்லாமா ஒரு மனைவி தன் 2 குழந்தைகளை கூட்டிட்டு கோவிச்சுட்டு அப்பா வீட்டுக்கு போவாங்க . பொதுவா இந்த சம்சாரங்க பட்டுப்புடவை எடுத்து தர்லை,தன் பேச்சை கேட்காம புருஷன் தன் அம்மாவுக்கு புது டூத் பிரஷ் வாங்கிக்குடுத்து 50 ரூபா தண்டம் பண்ணிட்டார்னு முக்கியமான பிரச்சனைக்குத்தானே அம்மா வீட்டுக்கு கோவிச்சுட்டு போவாங்க?


3. படத்துல முதல் பாதி வரை சராசரி ஆளா, கொஞ்சம் பயந்த சுபாவமா உள்ள ஹீரோ கோர்ட் காட்சிகளில் அநாயசமா , கம்பீரமா பேசுவது எப்படி? அதுவும் ஜட்ஜே வியக்கும் வண்ணம் பட்டாசை கிளப்பறாரே? ஒரு வை கோவோ ஒரு ஆ ராசாவோ அப்படி செஞ்சாங்கன்னா பேசிக்கலா அவங்க லாயர்ஸ் அல்லது சட்டம் படிச்சவங்க. ஆனா ஹீரோ அதிகம் படிக்காதவர். பயந்த சுபாவம் உள்ள அவர் கோர்ட்டை பார்த்து நடுங்க வேணாம்? விஜய் டி வி கோபிநாத் ரேஞ்ச்சுக்கு அவர் விளாசுவது ரசிக்க முடிஞ்சாலும் லாஜிக் உதைக்குதே?



4. பகவான் கிருஷ்ணரா ஒரு கேரக்டர் கொண்டாரமலேயே இந்தப்படத்தை  எடுத்திருக்க முடியும். இன்னும் ஓப்பனா சொல்லனும்னா படம் ஸ்லோ ஆகறதுக்கு காரணமே கடவுள் வரும் அந்த  23 நிமிட காட்சிகளே! 



5. பகவான் கிருஷ்ணர் தன் அவதாரத்துல  கைல சங்கு சக்கரம் சுத்திட்டு இருந்தார் ஓக்கே அதுக்காக நவ நாகரீக இளைஞனாக வருபவர்  கைல எந்நெரமும் பைக் சாவியை சுத்திட்டே எதுக்கு இருக்காரு? மகா எரிச்சல். 


http://images.jagran.com/inext/Inext_p_ebolly_12aug465.jpg


6. பகவான் கிருஷணர் தன் விஸ்வரூபத்தை கமலுக்கு முன்னாடியே காட்டனும்கறதுக்காக ஹீரோ முன்னால் அவதார தரிசனம் தர்றார், ஓக்கே  ஆனா அப்போ கட் ஷூ போட்டிருக்காறே? அது எப்படி? இது வரை வந்த சாமி படங்கள்ல வெறும் பாதங்கள் தானே? கடவுளும் செப்பல் ஆர் ஷூ போடனும்னா அப்புறம் அவரும் சராசரி மனிதன் தானா? 


7. ஹீரோ கோர்ட்ல வாதிடும்போது திடீர்னு கிறு கிறுனு வந்து மயக்கம் வர்ற மாதிரி கீழே விழறாரு. அப்போ ஜட்ஜே பதட்டம் ஆகி எந்திரிக்கறாரே? ஏன்? ஆனானப்பட்ட புரட்சித்தலைவிக்கே கர்நாடகா ஜட்ஜ் எந்திரிக்கலையே? ஒரு சாதாரண சாட்சி மயங்குனதுக்கு ஒய் சோ மெனி பட படப்பு? 


8. ஹீரோ கடவுளுக்கெதிரா வழக்கு போட்டதும் ஆரம்பத்துல பரிகாசம் செஞ்ச மக்கள் பின் அவருக்கு ஆதரவா இருந்தது ஓக்கே, ஆனா கோர்ட்ல அவர் சாதாரணமா மயக்கம் போட்டதுக்கு  என்னமோ ஒளி விளக்கு எம் ஜி ஆர் ரேஞ்ச்க்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தியோட பிரார்த்தனை பண்றது எல்லாம் ஓவரோ ஓவர், நல்ல வேளை இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு அப்டினு பாட்டெல்லாம் போடலை.


9. இந்தப்படத்துக்கு போஸ்டர் டிசைன் யாரு? வேஸ்ட்.  காமெடிப்படமா? மெலோ டிராமாவா? என யூகிக்க முடியாத படி ரொம்ப சராசரியா இருக்கு.. 


10. அக்சய் குமார் கடவுளா வர்ற சீன்ஸே தேவை இல்லைங்கறப்போ அவர் பைக்ல விஜய் மாதிரி சர்க்கஸ் எல்லாம் பண்றது செம காமெடி. பை த பை ஒரு ஜாலி கேள்வி. கடவுள் பாட்டுக்கு தனியா வந்துட்டாரே? ஜோடியையும் கூட்டிட்டு வந்தார்னா கொஞ்சம் ரொமான்ஸும் நடந்திருக்கும் , ஜாலியா டைம் பாஸ் ஆகி இருக்கும்

 http://www.sonakshisinhawallpapers.com/wp-content/uploads/2011/02/sonakshi-sinha-in-black-hot-wallpapers-500x375.jpg



சி.பி கமெண்ட் - வித்தியாசமான படங்கள் பார்க்க விரும்புவர்கள் , ஹீரோயிசம் , ஃபைட், தாதா கதை பார்த்து சலித்தவர்கள் பார்க்கலாம். பெண்கள் ரசிச்சு பார்ப்பாங்க.. ஈரோடு ஸ்ரீ லட்சுமியில் பார்த்தேன்