Showing posts with label BLOGGERS MEET. Show all posts
Showing posts with label BLOGGERS MEET. Show all posts

Wednesday, December 21, 2011

ஈரோடு பதிவர் சந்திப்பு - வெளிவந்த பல பதிவுலக ரகசியங்கள் பாகம் 2

தொகுத்து வழங்குவது ஈரோடு  கதிர் ,, தாமோதரன் ,திரையில் ஜாக்கி


பதிவர்கள் எல்லாரும் வந்து சேர்ந்தாச்சு.. யார் யார் என்ன பேரு, பிளாக் பேரு என்ன? அப்டின்னு ஈசியா அடையாளம் கண்டுக்க ஒரு ஐடியா பண்ணி இருந்தாங்க .அதாவது ரிசப்ஷன்லயே ஒரு ஐ டி கார்டு ,திடீர் உப்புமா, திடீர் கிச்சடி மாதிரி உடனடி ஐ டி கார்டு, அவங்கவங்க பேர் , பிளாக் நேம் எழுதி அதை சட்டைல மாட்டிக்கனும்.. எல்லாரும் மாட்டிக்கிட்டாங்க. ஆனா பாருங்க எனக்கு பின்னூசி குத்த தெரில ஹி ஹி , இதை வெளீல சொன்னாலும் கேவலம், உள்ள சொன்னாலும் கேவலம்.. 

அப்புறம் உள்ளே போய் எல்லார் சட்டை பாக்கெட்டையும் பார்க்க வேண்டியது , அவங்க கிட்டே வாலண்ட்டரியா போய் அறிமுகம் பண்ண வேண்டியது..ஃபோட்டோ எடுத்துக்க வேண்டியது. ( ஆரியக்கூத்தாடினாலும், திராவிட விஷால் கூத்தாடினாலும் காரியத்துல கண்னா இருடான்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க ஹி ஹி )


 ஆரூர்மூனா செந்தில், சங்கவி சதீஷ்,மெட்ராஸ்பவன் சிவக்குமார்,ஃபிலாசபி பிரபாகரன்,மீ, லக்கிலுக் யுவகிருஷ்ணா, நாய் நக்ஸ் நக்கீரன்

ஆனா லேடீஸ் பெரும்பாலும் பேட்ஜ் குத்திக்கலை. ஹேண்ட் பேக்லயே வெச்சுக்கிட்டாங்க, அதனால பெரும்பாலான பெண் பதிவர்களை அடையாளம் காண முடியாம போச்சு.. இதுல ஒரு உளவியல் ரீதியான சிக்கலும் இருக்கு..210 ஆண்கள் இருக்கற கூட்டத்துல 15 பெண் பதிவர்கள் இருப்பதால் அவங்களுக்கு ஒரு அன் ஈசி இருக்கும். அவங்களா போய் யார் கிட்டயும் அறிமுகம் பண்ணிக்க முடியாது, ஆண் பதிவர்கள் வாலண்ட்ரியா போய் அவங்க கிட்டே அறிமுகம் செஞ்சு பேசுனா மண்டபத்துல அது தனியா தெரியும்...பசங்க கிண்டல் பண்ணுவாங்க, பார்றா பொண்ணுங்க கிட்டே போய் வழியறான்னு.. அதனால இரு பிரிவும் தனித்தனியா  இருந்தாங்க, ஏற்கனவே அறிமுகம் ஆனவங்க மட்டும் கலந்து பேசிக்கிட்டாங்க, மத்தவங்க வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்க..




 இது எதிர்காலத்துல நடக்கற பதிவர் சந்திப்புல தவிர்க்கப்படனும்.. பதிவர் சந்திப்பே எதுக்குன்னா இதுவரை எழுத்தில் மட்டுமே அடையாளம் காணப்பட்டவர்கள் நேரில் உருவத்தை, அவர்கள் பழகும் விதத்தை காணூம் வாய்ப்பாக அதை பயன்படுத்தவே...

அப்புறம் கண்ணில் தென்பட்ட உறுத்தலான இன்னொரு விஷயம்.. பிரபல பதிவர்கள் எல்லாம் ஒரு குரூப், மீடியம் பதிவர்கள் இன்னொரு குரூப், அதிகம் எழுதாத பதிவர்கள் ஒரு குரூப் என பதிவர்கள் 3 பிரிவாக தனித்தனியே இருந்தது வருந்தத்தக்கது..

சாதனை புரிந்த பதிவர்கள் என 15 பேருக்கு விருது குடுத்தாங்க, அவர்கள் ஆரம்பத்துலயே மேடைக்கு அழைக்கப்பட்டு  கவுரவிக்கப்பட்டாங்க.. சிறப்பு அழைப்பாளர்கள், விருந்தினர்கள் பேசியதும், விருது வழங்கப்பட்டதும் அவங்க எல்லாம் கிளம்பிட்டாங்க.. அதற்குப்பிறகு மீதி இருப்பவர்கள் அறிமுகம் நடந்தது.. இது பலருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கும்.


 வீடு சுரேஷ்குமார், மீ


இவங்க பரிசு வாங்குவதை பார்க்க, இவங்களுக்கு கை தட்டவா நாங்க வந்தோம் என பலர் புலம்பியதை காண முடிந்தது. ஒரு விழா நடத்துவது  எவ்வளவு சிரமம், அதில் யார் மனதையும் புண் படுத்தாமல் எப்படி நடத்துவது, வந்திருந்தவர்களை எப்படி நடத்துவது என்று நமக்கெல்லாம் ஒரு பெரிய பாடமாக இந்த நிகழ்ச்சி இருந்தது..

எந்த ஒரு நிகழ்வில் இருந்தும் பாசிட்டிவ் பார்வை வேண்டும் என்ற பெரியவர்கள் கூற்றுக்கு ஏற்ப இந்த நிகழ்ச்சியில் இருந்து எப்படி எல்லாம் விழா ஏற்பாடு இருக்க வேண்டும் என்னும் பாடத்தை கற்றுக்கொண்டேன்.. இது யாரையும் குறை சொல்லும் நோக்கம் அல்ல.. நிறை  குறைகளை அலசும் ஒரு முயற்சி அவ்வளவுதான்..

விழாவில் தொகுப்பாளர்களாக 3 பேர் மிக பிரமாதமாக விழாவை தொகுத்து வழங்கினார்கள்.. அப்புறம் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம்.. சாதனையாளர்கள் 15 பேரின் பயோ டேட்டா , அவர்கள் வலைப்பூ பற்றிய விபரங்கள் அனைத்தும் மேடையிலேயே ஒரு திரை கட்டி அட்டகாசமாக தொகுத்து அளித்தார்கள்.அந்த அழகிய பணியை அகல் விளக்கு ராஜா ஏற்றுக்கொண்டார்.. முதலில் உண்மைத்தமிழன்



ஜாக்கிசேகர், உண்மைத்தமிழன்

1. உண்மைத்தமிழன்  - இவரைப்பற்றி சொல்லவே வேணாம், டைரக்டர் எழுதுன திரைக்கதையை விட சினிமா விமர்சனத்தில் இவர் எழுதும் கதையின் நீளம் அதிகமா இருக்கும், கடும் உழைப்பாளி.. பிரம்மச்சாரி .. தமிழன் எக்ஸ்பிரஸ் உட்பட பல பத்திரிக்கைகளில் பணி ஆற்றியவர், முருக பக்தர்..இயற்பெயர் சரவணன்,4 வருடங்களாக வலைத்தளம் இயக்கி  வருகிறார்,சென்னையை சார்ந்தவர்

2. ஜாக்கிசேகர் - வலை உலகின் சூப்பர் ஸ்டார், இவர் பற்றி தாக்கி எழுதவே பல வலைத்தளங்கள் இயங்கி வருகிறது என்றாலும் காய்த்த மரமே கல்லடி படும் என்பதால் அதை பற்றிக்கவலைப்படாமல் 4 வருடங்களாக சினிமா விமர்சனம், சமூக விழிப்புணர்வுக்கட்டுரைகள் எழுதி வருகிறார்.. 4 குறும்படங்கள் இயக்கி உள்ளார்.. உதவி ஒளிப்பதிவாளராக திரைத்துறையில் பணி ஆற்றி வருகிறார்.விஜய் டி வி யின் நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேறு உள்ளார், அதில் பல விவாதங்கள் புரிந்தவர்,4 வருடங்களாக வலைத்தளம் இயக்கி  வருகிறார்,சென்னையை சார்ந்தவர், இவர் பெயர் வாசிக்கப்பட்டதும் பலத்த கரகோஷம் ஹாலில்



3. ஜீவ்ஸ் எனும் அய்யப்பன் -  பிட்ஸ் இன் ஃபோட்டோகிராஃபி (PIT) எனும் வலைத்தளம் நடத்துகிறார்.. புகைப்படங்களூக்கான தளம் அது . கல்கி , அமுத சுரபி, வடக்கு வாசல் போன்ற இதழ்களீல் கட்டுரை எழுதி இருக்கிறார். 4 வருடங்களாக வலைத்தளம் இயக்கி  வருகிறார்,பெங்களூர்வாசி


 அதிஷா , ஸ்டாலின் குணசேகரன்

4. அதிஷா எனும் வினோத்குமார் - புதிய தலைமுறை தலைமை நிருபர்.. மிகச்சிறந்த  எள்ளல் நடைக்கு சொந்தக்காரர். ட்விட்டர், பஸ், ஃபேஸ்புக் என எல்லாவற்றிலும் இவரது படைப்புகள் பிரபலம்.. சென்னையை சார்ந்தவர்


 தேனம்மை லட்சுமணன்,

5. தேனம்மை லட்சுமணன் - இவர் படைப்பு வராத புக்ஸே இல்லை.. இவர் பிளாக் திறந்தாலே அந்த புக்ல வந்த படைப்பு, இந்த புக்ல வந்த கதை என கலக்கலாக இருக்கும்.. பெண் பதிவர்களில் அதிகமாக எழுதுபவர். சென்னையை சார்ந்தவர்.






6. வெய்யிலான் எனும் ஸ்ரீகாந்த் ரமேஷ் - விருதுநகர் வாசி, பணி திருப்பூர்.. 4வருடங்களாக வலைப்பூ வைத்துள்ளார், இவர் எனகு அறிமுகம் இல்லாதவர்.. திருப்பூரில் சேர்தளம் எனும் அமைப்பை சார்ந்தவர் போல.. ஒரு பெரிய குரூப்பே ஒரே மாதிரி வெள்ளை நிற டி சர்ட்டில் வந்து மண்டபத்தில் ஒரு கலகலப்பை ஏற்படுத்தினார்கள்.





7. வலைச்சரம் சீனா - வலைத்தளம் வந்த புதிதில் எல்லா பிளாக்குக்கும் கமெண்ட்ஸ் போட்டு பின்னூட்ட பிதாமகர் பட்டம் பெற்றவர்.. வலைச்சரத்தின் மூலம் பல புதியவர்களை அடையாளம் காட்டியவர்..




8. கே ஆர் பி செந்தில்  - இவர் எழுத்துக்கள் எல்லாம் படு சீரியஸ் ஆக இருக்கும்.. செம கோபக்காரர் போல என நினைத்தால் ஆள் படு ஜாலி டைப்.. சென்னை வாசி.. பயோடேட்டா ஸ்பெஷலிஸ்ட். கேபிள் சங்கரின் நெருங்கிய நண்பர்..





9. சுரேஷ்பாபு - இவர் புகைபட கலைஞர், பல ஜனரஞ்சகப்பத்திரிக்கைகளில் படைப்பு வர கண்டவர். இவர் எனக்கு அறிமுகம் இல்லை





10. லக்கிலுக் யுவகிருஷ்ணா - 2010 ஆம் ஆண்டு சுஜாதா விருது பெற்ற வலைத்தள வாசி. புதிய தலைமுறை நிருபர். தீவிர திமுக அனுதாபி.. ஆள் செம ஜாலி டைப். ட்விட்டரில் செம கலாட்டா செய்யற நபர். இவர் விருது வாங்கறப்ப ஒரு காமெடி. விருது தர்றப்ப கொடுத்த சில்வர் தட்டையும் எடுத்துட்டு போய்ட்டார். அப்புறம் ஒருத்தர் பதறி ஓடி வந்து தட்டு வேணும்னு கேட்டு வாங்குனது செம கலட்டாவான சீன்.. இவர் வரும்போது மட்டும் நிறைய பேர் கைதட்டுனாங்க.. ஆள்ங்களை ஏற்பாடு பண்ணிட்டு வந்துட்டார் போல.




11. நாளைய இயக்குநர் புகழ் ரவிக்குமார் - இவர் எடுத்த ஜீரோ கிலோ மீட்டர் ஷார்ட் ஃபிலிம் எனக்கு மிகவும் பிடித்தது.. நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பல படங்கள் இடம் பெற்று 3ம் பரிசு பெற்றவர். நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்.




12. பாலபாரதி - நல்ல கவிஞர். பல ஜனரஞ்சகப்பத்திரிக்கைகளில் இவரது நீண்ட கவிதைகள் பிரசித்தம்.. எனக்கு பழக்கம் இல்லை,புதிய தலைமுறையில் பணி புரிகிறார்






13. இளங்கோவன் பாலகிருஷ்ணன் - குறும்பட இயக்குநர்.கோவை பி எஸ் ஜி ஆர்ட்ஸ் காலேஜ் லெக்சரர்.எனக்கு பழக்கம் இல்லை




14. மகேந்திரன் - சிறந்த சமூக ஆர்வலர்.. பல மன நிலை குன்றிய நண்பர்களுக்கு உதவி செய்தவர்..



15. ஓவியர் ஜீவா - திரைச்சீலை என்னும் திரைப்படத்தை பற்றி எழுதப்பட்ட புத்தகத்துக்கு  தேசிய விருது பெற்ற சாதனையாளர்..


---..... தொடரும்

டிஸ்கி -

ஈரோடு பதிவர் சந்திப்பு - வெளிவந்த பல பதிவுலக ரகசியங்கள் பாகம் 1

Sunday, December 18, 2011

ஈரோடு பதிவர் சந்திப்பு - வெளிவந்த பல பதிவுலக ரகசியங்கள் பாகம் 1

 
 மேலே இருக்கும் மேடம் பொதிகை சேனல்ல செய்தி வாசிக்கறவங்களாம்


ஈரோட்டில் பதிவர் சந்திப்பு இன்று 18.12. 2011 ஞாயிறு வெற்றிகரமாக நடந்தது, 210 பேர் மொத்தம் வந்திருந்தாங்க.. அதுல வலைப்பதிவர்கள், ஃபேஸ் புக் , ட்விட்டர் நண்பர்கள் அனைவரும் அடக்கம்.. சென்னையிலிருந்து ஜாக்கிசேகர், கே ஆர் பி செந்தில், ஃபிலாஷபி பிரபாகரன், தண்டோரா மணீ ஜி , உண்மைத்தமிழன் , மெட்ராஸ் பவன் சிவகுமார்.. என நீளும் லிஸ்ட்.. வரிசையா பார்ப்போம்..

சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஃபோன், நாய் நக்ஸ் நக்கீரன் என்னமோ தீவிரவாதி ரேஞ்சுக்கு மிரட்டுனாரு.. நான் சிதம்பரத்துல ரயில் ஏறிட்டேன்.. ஈரோடு 8 மணிக்கெல்லாம் வந்துடுவேன், என்னை வரவேற்க ரெடியா இருந்துக்கோ என்றார்... அடங்கொன்னியா.. இவர் பெரிய சீமை சரக்கு ஷில்பாஷெட்டியா?ன்னு மனசுக்குள்ள நினைச்சுட்டு ஓக்கே டன் அப்டினு ஃபோன்ல சொன்னேன்.. 

அடுத்து ஆரூர் மூனா செந்தில்... 24 மணி நேரமும் மப்புல இருக்கற மாதிரியே டி பி ல ஃபோட்டோ வெச்சிருப்பாரே அவர் தான்..அவர், அண்ணே, நான் சேலம் தாண்டிட்டேன் ( அவ்வளவு பெரிய ஊரை எப்படித்தாண்டுனாரோ..?). 7.30 மணிக்கெல்லாம் ஈரோடு வந்துடுவேன்னாரு..இவர் எஸ் எம் எஸ் ல, ரொம்ப சிக்கனமாம், அடங்கொய்யால, சரக்கு அடிக்கறப்ப மட்டும் அந்த சிக்கனம் தெரியாதா?  ( ஆனா ஆள் தான் தாதா மாதிரி மிரட்ற டைப்ல உருவம், பச்ச மண்ணுய்யா .. செம ஜாலி டைப்)


சொன்ன படி 8 மணிக்கு டான்னு வந்த நக்கீரன் மிஸ்டு கால் குடுத்தார்.. நாமே மிஸ்டு கால் மன்னன், நம்ம கிட்டேயேவா?அப்டின்னு நானும் பதில்க்கு ஒரு மிஸ்டு கால் குடுத்தேன்.. அவர் சொல்ல வந்த தகவல் நான் ஈரோடு வந்துட்டேன்.. நான் சொன்ன தகவல் நான் ரயில்வே ஸ்டேஷன் வந்துட்டேன்.. வந்தாரை வாழ வைக்கும் விருந்தோம்பல் பண்புக்காக 80 பைசா செலவானாலும் பரவாயில்லைன்னு நானே அவர்க்கு கால் பண்ணி ?”யோவ் , எங்கேய்யா இருக்கே?” ந்னு கேட்டேன்.. அவர் நீங்க சொன்ன படி ரயில்வே ஸ்டேஷன் ஆர்ச் வந்துட்டேன்..ப்ளூ கலர் சர்ட் போட்டிருக்கேன்னு அடையாளம் சொன்னாரு.. 

ஆளை கண்டு பிடிச்சு அவரை பிக்கப் பண்ணிட்டு ( பாருங்க மகா ஜனங்களே.. நான் எந்த ஃபிகரை யும் பிக்கப் பண்ணலை, ஒன்லி ஆண் பதிவர்) பழைய பாளையம் பஸ் ஸ்டாப்க்கு போனோம்.. ரோட்டரி சி டி ஹால் தான் ஸ்பாட்.. அங்கே போய் விசாரிச்சோம்.. அப்போ நக்கீரன் கேட்டார்..

யோவ், நீங்க லோக்கல் தானே.. எங்கே மீட்டிங்க்னு கூட தெரியாதா?


தமிழ்வாசி பிரகாஷ் , மீ, நாய் நக்ஸ் பிளாக் நக்கீரன், மெட்ராஸ் பவன் சிவக்குமார்

 ஹி ஹி எனக்கு கோயில், ஸ்தலம், தியேட்டர்  மட்டும் தான் தெரியும், இந்த கிளப் மேட்டர் எல்லாம் நமக்கு தெரியாது”

சரின்னு சித்தோடு சங்கவிக்கு ஃபோனை போட்டேன்.. நிற்க.. சங்கவின்னா ஃபிகர்னு யாரும் நினைச்சுடாதிங்க, சங்கவி வலைப்பூ  சதீஷ் , இவருக்கும் கில்மாவுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு.. கில்மா படத்துக்குப்பேர் போன மலையாளப்படம் அஞ்சரைக்குள்ள வண்டி,  கில்மா போஸ்ட்க்கு பேர் போனது அஞ்சறைப்பெட்டி ஹி ஹி . நிறைய பேருக்கு குழப்பம் வரும் , ஈரோடு மாவட்டத்துலயே 3 சதீஷ் இருக்காங்க.. 1. நல்ல நேரம் சதீஷ் ( ஜோதிடர்) 2. சங்கவி ( சதீஷ் ,சித்தார், பவானி) 3. ஜேம்ஸ்பாண்ட் 007 சதீஷ் ( டெக்னிக்கல் & இமேஜ்  ஃபோட்டோஸ் கலெக்‌ஷன்ஸ் போடற சதீஷ் )

கோமாளி செல்வா , வெங்கட் , மீ

சித்தார் சதீஷ்கிட்டே மண்டபம் எங்கேன்னு கேட்டா அவர் நமக்கும் மேலே இருப்பார் போல.. பழைய பாளையம் பஸ் ஸ்டாப்ல யாரையாவது விசாரிங்க, சொல்வாங்கன்னாரு.. அடங்கோ , அது எங்களுக்குத்தெரியாதாய்யா.. நீங்க வேணும்னா ஈரோடு  கதிர்க்கு ஃபோன் போட்டு கேளுங்களேன்.. இதுல ஒரு ரகசியம், நான் அவுட் கோயிங்க் கால் பேசறதுன்னா ஏர் செல் நெம்பரா இருந்தா மட்டும் தான் பேசுவேன், ஏன்னா எனக்கு ஏர் செல் டூ ஏர் செல் ஃப்ரீ.. இண்ட்டர் நேஷனல் ஃபிகரா இருந்தாலும் வேற கம்பெனி ஃபோன் என்றால் மீ பேச லேது ஹி ஹி , கதிர்ட்ட இருக்கற ஏர்செல் பிசியாவே இருந்துச்சு.. இன்னொரு பி எஸ் என் எல் நெம்பர் எனக்கு தெரியாது.. 

ஃபிலாஷபி பிரபாகரன் , மீ,
 அப்புறம் டீக்கடைல விசாரிச்சு ஸ்பாட்டை கண்டு பிடிச்சு மண்டபம் போனா அங்கே ஆல்ரெடி 8 பேர் இருந்தாங்க.. ஒரு அவசர அறி முகம்.. யார் யார்னு எல்லாம் நினைவில்லை.. அப்போ ஈரோடு கதிர் முதுகை தொட்டார் ( என் முதுகைத்தான் ) டக்னு திரும்பறப்ப அவர் செல் ஃபோனை தட்டி விட்டுட்டேன்.. ஜஸ்ட் மிஸ் ஆகி இருக்கும் , நல்ல வேளை பிடிச்சுட்டாரு..

ஆரூர் மூனா செந்திலை பிக்கப் பண்ணிட்டு  வர்றேன் -னு கிளம்புனேன்.. அப்புறம் பார்த்தா அவர் பாட்டுக்கு இங்கே மண்டபம் வந்துட்டு மெசேஜ் அனுப்பறார்.. தமிழ்வாசி பிரகாஷ், வலைச்சரம் சீனா ஐயா ஆன் த வே-ன்னு சொன்னாங்க. நைட் 11 மணிக்கு ஈரோடு வந்து சேர்ந்தாங்க போல..

நான் சென்னிமலை கிளம்பி போய்ட்டேன், இன்னைக்கு காலைல 9.00 மணிக்கு பிரகாஷ் ஃபோன் பண்ணி நாங்க ஹால்க்கு வந்துட்டோம், நீங்க எப்போ வர்றீங்க?னு கேட்டாரு.. அரை மணி நேரத்துல அங்கே இருப்பேன்னேன்..

ரவி, ஜேம்ஸ் பாண்ட் சதீஷ், மீ, உண்மைத்தமிழன்

9.40 க்கு ஹால்க்கு வந்துட்டேன்.. பதிவுலகின் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சேகர் எண்ட்ரன்ஸ்ல ஒரு குரூப்போட பேசிட்டு இருந்தாரு. புதிய தலை முறை தலைமை நிருபர் அதிஷா இருந்தாரு.. அவர் கேட்ட கேள்வி என்னை அதிர வெச்சுட்டுது.. “ ஏன் என் ட்விட்டர் அக்கவுண்ட்டை பிளாக் பண்ணி வெச்சிருக்கீங்க? ஃபாலோ பண்ண முடியலை? உங்க பிளாக் எல்லாம் ரெகுலரா படிப்பேன், மொக்கை படமா விமர்சனம் போட்டு கொலையா கொல்வீங்களே?ன்னார்.. 
அய்யய்யோ, நான் எதும் பிளாக் பண்ணலை, என்னையும் அறியாம எதையாவது க்ளிக் பண்ணி இருப்பேன், நான் டெக்னிக்கல் மேட்டர்ல ரொம்ப வீக் ( மேட்டர்ல ரொம்ப ரொம்ப வீக் ), உடனடியா பார்க்கறேன்ன்னேன்.. 

யுவ கிருஷ்ணா அவர் பக்கத்துலயே இருந்தாரு.. ட்விட்டர்லயும் சரி, பிளாக்லயும் சரி 15 வருஷம் முன்னால எடுத்த ஃபோட்டோவை வெச்சிருக்காரு ஜனங்களே..  யாரும் ஏமாந்துடாதீங்க.. ( நாம எவ்வளவோ தேவலை , 4 வருஷம் முந்திய ஃபோட்டோ தான் வெச்சிருக்கோம்.. ) அவர்ட்ட கேட்டேன், 




அண்ணே, ஏன் பழைய ஃபோட்டோ வெச்சீருக்கீங்க?

 எனக்கு பழசுதான் ரொம்ப பிடிக்கும்னாரு ( இவர் நடு நிசி கீச்சு மன்னன் போல - மிட் நைட்ல கில்மா ட்வீட் தான் நநிகீ )

நக்கீரன், நான் 2 பேரும் அப்படியே கீழே இறங்கி வந்தோம், எதிர்ல கோகுலத்தில் சூரியன் வெங்கட், சேலம் தேவா வந்தாங்க

எனக்கு அடையாளம் தெரியலை.. நக்கீரன் தான் சொன்னாரு.. வர்றது வெங்கட் போல? 

இருக்காது, அவர் டி பி ல சிந்தாமணி கலர் சட்டை தானே போட்டிருப்பாரு?இதுல வேற கலர் போட்டிருக்காரு.. அதுவும் இல்லாம டி பி ல சிவப்பா இருக்காரு, இதுல கலர் கம்மியா இருக்கே?

கே ஆர் பி செந்தில் ,(எங்கே செல்லும் இந்தப்பாதை) , மீ


அப்புறம் பார்த்தா ஆள் வெங்கட் தான்.. சேலம் தேவா ட்விட்டர் டி பி ல குழந்தை மாதிரி முகத்தை வெச்சிருக்காரே.. ஆள் ஆறரை அடி , ஓங்காம அடிச்சாலே ஒன்றரை டன் வெயிட் வரும் போல அவ்வ்வ்வ்வ்வ்வ்

உண்மைத்தமிழன் என்னை காட்டி என்னமோ மிரட்ற மாதிரி என்னமோ சொன்னாரு.. கிட்டே போய் என்னண்ணே? அப்டின்னேன்
தம்பி.. ரொம்ப ஓவரா ஆடாதே, உன் பிளாக்ல இனிமே ஃபிகருங்கற வார்த்தையே வரக்கூடாது, எந்த விமர்சனம் எழுதுனாலும் நீ ஹீரோயினை ஃபிகர்னு தான் வர்ணீக்கறியாம், நிறைய புகார் வருது.. அப்புறம் ஏதாவது பிரச்சனைன்னா நாங்க காப்பாத்த மாட்டோம்னாரு.. 

லக்கி லுக் மப்பு கிக் யுவ கிருஷ்ணா, மீ

ஃபிலாசபி பிரபாகரன் கிட்டே மெட்ராஸ் பவன் சிவக்குமார் வந்திருக்காரா?ன்னு கேட்டு செம பல்பு வாங்குனேன்.. அடப்பாவமே , அரை மணி நேரமா பேசிட்டு இருந்திங்களே. அவர் தான் சிவக்குமார்னார். அடங்கோ

மணி காலை 10.45  விழா ஆரம்பிச்சுது.. சிறப்பு விருந்தினர் புத்தகத்திரு விழா புகழ் ஸ்டாலின் குணசேகரன்....

தொடரும்