Showing posts with label எலி. Show all posts
Showing posts with label எலி. Show all posts

Tuesday, June 23, 2015

சினிமா விமர்சகர்கள் சைக்கோக்களா? -வடிவேலு அறிக்கை

'எலி' படத்தில் வடிவேலு
'எலி' படத்தில் வடிவேலு
'எலி' படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள் என்று விமர்சகர்களுக்கு நடிகர் வடிவேலு காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், மனநலம் பாதித்தவர்கள்தான் எலி படத்தைப் பற்றி தவறாக விமர்சிக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவேலு, சதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'எலி'. சிட்டி சினி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.
இப்படம் விமர்சகர்கள் மத்தியில் மிக மோசமான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இதற்கு நடிகர் வடிவேலு வீடியோ பதிவின் மூலம் காட்டமாக பதிலளித்திருக்கிறார்கள்.
அந்த வீடியோ பதிவில் வடிவேலு கூறியிருப்பது:
"'எலி' படத்தை அமோக வெற்றிப் பெற செய்த என்னுடைய ரசிகர்களுக்கும், தாய்மார்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிறைய படங்களில் காமெடி செய்து உங்களை ரசிக்க, சிரிக்க வைத்திருக்கிறேன். சின்ன இடைவெளி விழுந்தவுடன் "ஏன்பா நடித்தா தான் என்ன?"என்று எல்லோரும் கேட்பார்கள். என்னுடைய காமெடியை நீங்கள் எந்தளவுக்கு ரசித்திருக்கிறீர்கள் என்பதை இந்த 'எலி' படத்தைப் பார்த்து தான் தெரிந்துக் கொண்டேன்.
நிறைய திரையரங்குகளில் மறைமுகமாக சென்று பார்த்தேன். மக்கள் ரசிப்பதைப் பார்த்து கண்கலங்கி அழுதுவிட்டேன். நிறைய பொருட்செலவில் இப்படத்தை தயாரிப்பாளர் சதீஷ்குமார் தயாரித்திருக்கிறார். என்னுடைய காமெடியை ரசிக்கிற கூட்டத்தில் இருந்து வந்தவர் தான் தயாரிப்பாளர். அனைவருமே கஷ்டப்பட்டு உழைத்து இந்தப் படத்தை எடுத்ததிற்கு பலன் கிடைத்திருக்கிறது.
இந்தப் படத்திற்கு வரும் நிறைய விமர்சனங்கள் உண்மையாக இருக்கிறது. சிலர் இந்தப் படத்தைப் பற்றி தீய எண்ணத்தில் தப்பு தப்பாக எழுதுகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்த படம் மட்டுமல்ல எந்த படத்தையும் பார்க்காமல் விமர்சனம் எழுதாதீர்கள். படம் பார்த்து நகைச்சுவை இல்லை என்றால், யாரிடமாவது நகைச்சுவை இருக்கா இல்லையா என்று கேட்டுவிட்டு எழுதுங்கள்.
நகைச்சுவை உணர்வு இல்லாதவர்கள் எல்லாம் இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்கிறார்கள். 'எலி' படத்தை கெடுப்பதற்கு சில விஷயங்கள் நடந்து வருகிறது. எல்லா படமுமே கஷ்டப்பட்டு போராட்டி எடுத்து தான் வெளியே வருகிறது. அதை கேவலமாக விமர்சனம் பண்ணுவதில் சின்ன சந்தோஷம் கிடைக்கிறது என்று நினைக்கிறேன். அந்த விமர்சனத்தை படித்து, சிலர் படத்தைப் பார்க்காமல் இருந்தால் தான் அவர்களுக்கு தூக்கம் வருகிறது பாவம்.
நகைச்சுவை நடிகனாக இருந்து அனைவரையும் இன்னும் சந்தோஷப்படுத்துவேன். கெட்ட விமர்சனத்துக்கு யாருமே தயவு செய்து தலைவணங்கி விடாதீர்கள். நிறைய பேர் சைக்கோவாக இருக்கிறார்கள். 'எலி' படத்தைப் பற்றி நிறையப் பேர் தப்பாக எழுதுகிறார்கள். நல்ல விமர்சனம் எழுதுபவர்களுக்கு நன்றி" என்று தெரிவித்திருக்கிறார் வடிவேலு.

நன்றி - த இந்து


  • Shree Ramachandran  
    மலையாளத்தில் பெருச்சாளி என்ற ஒரு படம் மோகன்லால நடித்து வந்தது.
    Points
    4290
    about 14 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • R.Subramani  
      30 பள்ளிபட்டி P R சுப்ரமணியன் - ஒருவர் தன்னுடைய படைப்பு வெற்றி பெறுவதில் சிக்கல் அல்லது படைப்பில் குறைகளை சுட்டிக்காட்டும் போதும் , அதை பக்குவமாக எடுத்து கொள்ளும் பக்குவம் வேண்டும் . 4 - ஆண்டுகள் கழித்து ஒருபடம் வெளிவருகிறது என்றால் அந்த படைப்பை பார்த்து பார்த்து அல்லவா செதுக்கி இருக்கவேண்டும் . அப்படியல்லாமல் எலி கடித்துபோட்ட காகிதம் போல் இருந்தால், அந்த படத்தை என்ன சொல்வது
      Points
      1365
      about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Nizar Ahamed Owner at Travel Update - Sam Exim - Vellinila 
        அடப்பாவமே....
        Points
        3000
        about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Smshaja  
          அவர் மறைமுகமா உங்களைத்தான் சொல்றாருன்னு எங்களுக்கு புரிஞ்சிடுச்சி.
          about 16 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
          sadathulla  Up Voted
          • Nasar  
            எலி மொக்க படம் இனி வடிவேல் காமெடியன் நடிச்ச மட்டும் தான் மக்கள் பார்ப்பார்கள்

          Wednesday, May 20, 2015

          விஜய் நடிக்கும் 'புலி' படத்துக்கு 'எலி' போட்டி ????!! - நடிகர் வடிவேலு

          'எலி' படத்தையொட்டிய சந்திப்பில் நடிகர் வடிவேலு. | படம்: எல்.ஸ்ரீனிவாசன்
          'எலி' படத்தையொட்டிய சந்திப்பில் நடிகர் வடிவேலு. | படம்: எல்.ஸ்ரீனிவாசன்
          'அரசியல் கடையை மூடி வைத்திருக்கிறேன். மீண்டும் வந்தாலும் வரலாம்' என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறினார். மேலும், விஜய் நடிக்கும் 'புலி' படத்துக்கு 'எலி' போட்டி கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். | வீடியோ இணைப்பு - கீழே |
          யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவேலு, சதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'எலி'. வித்யாசகார் இசையமைத்து இருக்கும் இப்படத்தை சதீஷ்குமார், அமர்நாத் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவது முடிவடைந்து இம்மாத இறுதியில் வெளியாக இருக்கிறது.
          'எலி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. அதில், நடிகர் வடிவேலு பேசியது:
          "ஜனங்க நிறைய பேர் என்னை திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ஏன் இவ்வளவு கேப் விடுகிறீர்கள் என்று. இன்னும் கெட்ட வார்த்தை மட்டும்தான் போட்டு திட்டவில்லை. அதற்காகவே உடனே தொடங்கப்பட்ட படம்தான் 'எலி'. சமூகத்துக்கு எந்த ஒரு கருத்தும் சொல்லாமல் முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். இந்தப் படத்தை குடும்பத்தோடு தியேட்டருக்கு வந்து பார்க்கலாம், சிரிக்கலாம்.
          முதல் முறையாக ஒரு இந்திப் பாடலுக்கு வாய் அசைத்து நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. படத்தில் நான்தான் 'எலி'. அப்போ பூனை யார் என்று கேட்கிறீர்களா, இந்த 'கஜினி' படத்தில் நடித்த பிரதாப்தான் பூனை.
          இப்படம் ஒரு பீரியட் படம் கிடையாது. 1960-70 காலகட்டங்களில் நடக்கும் கதையில் நடித்திருக்கிறேன். எப்போதுமே ஒல்ட் இஸ் கோல்ட் தான். இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்களில் ஒருவர் தான் சதா. நம்ம படம் எப்போதுமே ஒருபக்க காதலாகவே தானே இருக்கும். நம்ம படத்தில் கதை, காமெடி தான் முக்கியத்துவம். அதனால் நெருக்கமான காட்சிகள் எல்லாம் இல்லை.
          நல்ல வாய்ப்புகள் அமைந்தால் தொடர்ந்து காமெடியன் வேடத்தில் நடிப்பேன். என்னோடு ஜோடியாக நடிக்கமாட்டேன் என்று நிறைய நாயகிகள் சொல்லி இருக்கிறார்கள். அவங்க இல்லைன்னா இன்னொருவர், இப்போது எல்லாம் வெளிமாநிலங்களில் இருந்து எல்லாம் காசு கொடுத்து கூட்டிட்டு வருகிறார்கள்.
          'புலி' போட்டியாக 'எலி'யா என்கிறீர்கள். அடுத்த படம் 'கரப்பான் பூச்சி' என்றுகூட எடுப்பேன். அது ஒரு தலைப்பு அவ்வளவு தான். 'புலி'க்கு 'எலி' போட்டி கிடையாது. மற்ற நடிகர்கள் சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து நடிப்பார்கள். நமக்கு சிங்கிள் பேக் தான். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க நான் என்ன அர்னால்டா?
          தற்போது காமெடி டிராக் எல்லாம் படங்களில் அழிந்து வருகிறது. காமெடி டிராக் மாதிரியான காமெடியில் தற்போது நடிப்பதில்லை. அதனால் இனிமேல் படங்களில் முக்கிய பாத்திரங்கள் மாதிரியான வேடங்கள் வந்தால் நடிப்பேன். இப்போது 'எலி' மூலமாக மீண்டும் காமெடியன் கதவை திறந்தாச்சு. அவ்வளவு தான்.
          ஒரு படத்தில் முதலமைச்சராக காமெடி வேடத்தில் நடிக்கவிருக்கிறேன். அதனைத் தொடர்ந்து நடிக்க 10 கதைகள் கேட்டு வைத்திருக்கிறேன். அனைத்து கதைகளிலும் நடிப்பேன். ரஜினியின் அடுத்த படத்திற்கு என்னிடம் கேட்டால் கண்டிப்பாக நடிப்பேன். 'சந்திரமுகி' நேரத்தில் எனக்கு மிகவும் நெருக்கமானவர்" என்று வடிவேலு பேசினார்.
          அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். "சகாப்தம் படம் பார்த்தீர்களா" என்ற கேள்விக்கு "எனக்கு என்னோட படத்தைப் பார்க்கவே நேரமில்லை" என்றார்.
          "சட்டசபைத் தேர்தல் வரவிருக்கிறது. அரசியலுக்கு வருவீர்களா" என்ற கேள்விக்கு, "அரசியல் கடையை தற்போதைக்கு மூடி வைத்திருக்கிறேன். காமெடி கடையை திறந்து வைத்திருக்கிறேன். அரசியலுக்கு வந்தாலும் வரலாம். வரமாலும் போகலாம். இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது" என்று தெரிவித்தார் நடிகர் வடிவேலு.


          • ohanbabu  
            வாடா வாடா வாடா ராசா
            Points
            315
            2 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • Decentthamizhan  
              வருவாரு ஆனா வர மாட்டாரு
              2 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • Anandan  
                நம் அனைவரையும் காக்கும் கடவுளை போன்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள். நலவர்களுக்கு உதவி செய்வார். கேட்டவர்களுக்கு சுளுக்கு எடுப்பார்.
                Points
                5070
                2 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                • Gnanasekaran  
                  வாய்தான் யா உனக்கு எதிரி.
                  Points
                  4350
                  2 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                  • [email protected]  
                    யார் என்ன சொன்னாலும் வடிவேல் என்னக்கு ரொம்ப பாவௌரிடே.அவர் காமெடி ஸ்டைல் தனி.அவர் மாதிரி காமெடி பண்ண இனி யாரும் இல்ல.வடிவேல் அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.
                    3 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                    • Poonkodi  
                      அதெல்லாம் உங்களுக்கு சரி பட்டு வராதுஇன்னேன். கல்லா கட்டுவதை மட்டும் பாருங்கள். இருப்பதையும் இழக்காமல் இருப்பதற்கு
                      Points
                      675
                      3 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                      • Kumar  
                        இப்போது எல்லாரும் பேசுவது... அடுத்த முதல்வர் நான்தான் ... இல்லை அடுத்த முதல்வர் எனது மகன் தான்....இனி நீங்களும் இந்த லிஸ்டுல உண்டு... அதுக்கு உடனடியாக நீங்க கர்நாடக முதல்வரை பார்த்து மனு கொடுக்கணும்....

                      thax

                      Friday, April 10, 2015

                      புலி போல் பாய்ந்து வரும் வைகைப்புயலின் எலி'- எலி பட இயக்குநர் யுவராஜ் சிறப்பு பேட்டி


                      'வசமாகச் சிக்கிய எலி'- எலி பட இயக்குநர் யுவராஜ் சிறப்பு பேட்டி

                      கா. இசக்கிமுத்து

                      த  இந்து

                      சென்னையின் பிரம்மாண்டமான பின்னி மில்லில் பதுங்கியிருக்கிறது ‘எலி’. அங்கே அண்ணாந்து பார்க்கவைக்கும் அரங்குகள் அமைத்து, அதில் வடிவேலு நகைச்சுவை நாயகனாக நடித்துவரும் ‘எலி' படத்தைப் படமாக்கிவருகிறார் இயக்குநர் யுவராஜ். ‘தெனாலிராமன்’ படத்தைத் தொடர்ந்து வடிவேலுவுடன் மீண்டும் இணைந்து ஆச்சரியப்படுத்தியிருப்பரைப் படப்பிடிப்பு இடைவேளையில் பிடித்தோம்..
                      யுவராஜ்
                      ‘எலி' என்ற தலைப்பே கிச்சு கிச்சு மூட்டுகிறதே?
                      மிக மோசமான ஒரு கொள்ளைக் கூட்டம். அதைப் பிடிக்க அந்தக் கூட்டத்துக்குள் நுழைகிறார் வடிவேலு. கெட்டவர்கள் கூட்டத்துக்குள் ஒரு நல்லவன் நுழைந்துவிட்டால், “இந்தக் கூட்டத்துக்குள்ளே ஒரு எலி இருக்கான்டா. அவனைக் கண்டுபிடிச்சு அடிச்சுக் கொல்லுங்கடா” என்பார்கள்.
                      அதனால்தான் ‘எலி' என்று தலைப்பு வைத்தேன். கொள்ளைக் கூட்டத்துக்குள் அவர் மாட்டிக்கொண்டு முழிப்பதும், அந்தக் கூட்டத்தைப் பிடித்தாரா, இல்லையா என்பதுதான் கதை. 1960-களில் நடப்பதுபோல் திரைக்கதை அமைத்திருக்கிறேன்.
                      வடிவேலு ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த ‘தெனாலிராமன்' படத்தை இயக்கினீர்கள். ஆனால் வெற்றி கிடைக்கவில்லையே என்ன காரணம்?
                      “நீங்கள் கிரிக்கெட் விளையாடி இருப்பீர்கள் என்று நினைத்து வந்தோம். ஆனால் செஸ் விளையாடிக்கொண்டிருந்தீர்கள்” என்று முகநூலில் ஒரு ரசிகர் விமர்சனம் பண்ணியிருந்தார். அந்த வரிகள் எனக்குப் பிடித்திருந்தன. வடிவேலு மறுபடியும் நடிக்க ஆரம்பிக்கிறார், எதிர்பார்ப்பு இருக்கும் என்று எண்ணி ரொம்ப காமெடியாகப் பண்ணவில்லை. சிரிக்கவைத்து, கூத்தடித்து அனுப்பிவிட்டார்கள் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்ற விஷயத்தில் நானும், வடிவேலும் தெளிவாக இருந்தோம்.
                      அதனால்தான் ‘தெனாலிராமன்' என்ற ஒரு பாத்திரத்தைக் கனமாக அமைத்தோம். “நல்ல மரியாதையான ஒரு படம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த காமெடி அதில் இல்லை” என்று படத்தைப் பார்த்த நிறைய குடும்பத்தினர் எங்களுக்குத் தெரிவித்தார்கள். எந்த இடத்தில் தவறு நடந்தது என்றால் ரசிகர்கள் முழுக்க காமெடி படம் என்று நினைத்து வந்துவிட்டார்கள்.
                      நாங்கள் நல்ல படம் கொடுத்திருந்தோம். ரசிகர்கள் எதிர்பார்த்த படத்தை எடுக்கவில்லை. இப்போது “இதைத்தானே எதிர்பார்த்தீர்கள் இந்தாங்க ‘எலி'” என்று விருந்து கொடுக்கப் போகிறோம். விழுந்து விழுந்து சிரிக்கப் போகிறார்கள்.
                      ஒரு படம் தோல்வியடைந்தும் மறுபடியும் அதே இயக்குநர் - நடிகர் இணைவது ஆச்சரியமாக இருக்கிறதே?
                      எங்கள் இருவருக்குள்ளும் நல்லதொரு புரிதல் இருக்கிறது. ‘தெனாலிராமன்' படப்பிடிப்பு நடக்கும்போதே ஒரு காமெடிப் படம் பண்ணலாம் என்று பேசிக்கொண்டுதான் இருந்தோம். அதனால்தான் திரும்பவும் வாய்ப்புக் கொடுத்தார். எங்களுக்குள் கருத்து வேறுபாடு கிடையாது, கருத்துப் பரிமாற்றம் தான் இருக்கிறது.
                      மூன்றாவது வாய்ப்பு அமைந்தால் என்ன செய்வீர்கள்?
                      அதில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. இப்போதைக்கு ‘எலி' பண்றோம். அடுத்த படத்துக்கான கதையையும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். இந்தப் படம் முடித்த உடனேயே பண்றோமா, கொஞ்சம் நாட்கள் கழித்து பண்றோமா என்பது அவரது விருப்பம்தான்.
                      வடிவேலுவை வைத்துப் படம் பண்ணி னால், அவருடைய தலையீடு இருக்கும் என்று ஒரு பேச்சு நிலவுகிறதே?
                      “தொடர்ச்சியாக இவ்வளவு காமெடி வசனங்கள் அள்ளிக் கொடுக்குறீங்க. நீங்கள் ஏன் இயக்கக் கூடாது” என்று அவரிடமே நான் கேட்டிருக்கிறேன். அப்போது “இல்லை நண்பா. நீ ஒரு காட்சி கொடு. அதில் நான் காமெடி கலந்து சூப்பராகச் சொல்வேன். ஆனால் அடுத்த காட்சி இதுதான் என்று எனக்குத் தெரியாது. நீ என்னிடம் ஒரு விஷயம் சொல்லு, அதை நான் காமெடியாக்கி உன்னைச் சிரிக்க வைக்கிறேன்” என்றார். இதை ஏன் இப்படி எடுக்கக் கூடாது என்றெல்லாம் என்னிடம் கூற மாட்டார்.
                      முதலில் கதையைச் சொல்லச் சொல்வார். கதையைக் கேட்டவுடன், இந்த இடத்தில் எனக்கு இது சரியாக வருமா என்று கேட்பார். சரியாக வரும் என்று கூறியவுடன், முழுக் கதையையும் மூளையில் ஏற்றிக்கொள்வார். ஒரு வாரத்துக்குள் அந்தப் பாத்திரத்துக்கு என்ன பண்ணலாம், பண்ணக் கூடாது என்று மனதில் முடிவு செய்துவிடுவார். அதற்கு பிறகு நாம் என்ன சொன்னாலும், அதில் தலையிடவே மாட்டார்.
                      காட்சி இதுதான் என்று கூறியவுடன், வசனத்தில் இப்படிப் பண்ணலாமா என்று நிறைய சாய்ஸ் சொல்லுவார். ஆனால் மறந்தும் கதை, திரைக்கதை ஏரியாவுக்குள் வடிவேலு தலையிடுவதில்லை. ஒரு காட்சி சொன்னால் இதுக்கு முன்னால் என்ன காட்சி, பின்னால் என்ன காட்சி என்று கேட்பார். அதற்குத் தகுந்தவாறு நடிக்க வேண்டும் என்று சொல்வார். அவ்வளவுதான். அந்தக் காட்சிக்குள் அவருடைய விளையாட்டு நடக்கும்.
                      மறுபடியும் காமெடியனாக களம் இறங்குவது குறித்து வடிவேலு உங்களிடம் எதுவும் கூறியிருக்கிறாரா?
                      அடுத்த அடுத்த படங்கள் பண்ணுவேன் என்று சொல்வார். யார்கூடப் பண்ணினால் நல்லாயிருக்கும் என்று என்னிடம் கேட்பார். உடனே அதை எப்படி நான் சொல்லுவேன் சார்.. நீங்கதான் சொல்லணும் என்பேன். அவசரப்படாமல் பண்ணுவோம் யுவராஜ், எனக்கு இது பிடித்திருக்கிறது என்பார்.
                      மக்களை சிரிக்கவைக்கச் சரியான படங்கள் அமைய வேண்டும் என்பார். நிறையப் பேர் அவரிடம் கதை சொல்ல வருகிறார்கள். இப்போதைக்கு வேண்டாம் என்று மறுத்துவிடுவார். ‘எலி' முடியட்டும், முடிந்தவுடன் பேசலாம் என்று கூறியிருக்கிறார்.


                      நன்றி  - த  இந்து