Showing posts with label வடிவேலு. Show all posts
Showing posts with label வடிவேலு. Show all posts

Thursday, November 08, 2012

கேப்டன் பற்றி நான் சொன்னது நடந்தது - வடிவேல் பேட்டி

http://im.videosearch.rediff.com/thumbImage/videoImages/videoImages1/youtube/rdhash175/20Ju-KjZi_I.gif

ஒரு காமெடியனா விஜயகாந்த்கிட்ட தோத்துட்டேன்!"


சமஸ்
படங்கள் : கே.ராஜசேகரன்
திடீர் என்று நிகழும் சில அற்புதமான சந்திப்புகள். வடிவேலுவை நீண்ட காலத்துக்குப் பின் சந்தித்தது அந்த ரகம்!



 ''சொகமா?''


''நல்லா இருக்கேண்ணே... நல்லா இருக்கேன். நல்லா ஆரோக்கியமா இருக்கேன். பார்த்தீங்களா... ஒடம்பைக் கட்டுக்குள்ள கொண்டுவந்திருக்கேன் (புஜத்தைக் காட்டுகிறார்).''



''ரஜினியே படம் செய்தால்கூட, 'வடிவேலுவிடம் முதலில் தேதி வாங்குங்கள்’ என்று சொல்லும் நிலை இருந்தது. ஆனால், இப்போது நீங்கள் படம் நடித்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. என்ன நடக்கிறது?''



''ஒரு உண்மையைச் சொல்லட்டுங்களா? யாருமே என்கிட்ட பேசுறதே இல்லண்ணே. யாரும் போன்கூடப் பண்றது இல்ல. ஆனா, அதைப் பத்தி நான் கவலைப்படல. மௌனமாக்கவனிச்சுக் கிட்டு இருக்கேன். இது ஒரு காலம். இதையும் தாண்டி வருவோம்னு இருக்கேன்.''




''உங்களை வைத்துப் படம் பண்ணப் பயப்படுகிறார்களா?''




http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Celebreties-Gallery/Vadivel/Vadivel-0019.jpg



''தெரியலண்ணே... தெரியல.''



''முதல்வருக்கு உங்கள் மீது கோபம் ஏதும் இருப்பதாக நினைக்கிறீர்களா?''



''ம்ஹூம்... சும்மா சொல்லக் கூடாது. அவங்க பாட்டுக்கு அரசாங்க வேலையில கவனத்தைக் காட்டுறாங்க. அவங்களுக்கு இருக்குற வேலைக்கு முன்னால நாம எல்லாம் ஒரு பொருட்டா? அப்புறம், அவங்க என் மேல கோவப்படற மாதிரி நான் நடந்துக்கவும் இல்லையே? அவங்க இன்னைக்குச் சொல்றதைத்தானே நான் அன்னைக்கே சொன்னேன்? இது வேற கதை. நம்மகூடவே திரிஞ்சுக்கிட்டு எப்படா நாம கீழ விழுவோம்னு பார்த்துக்கிட்டு இருப்பாய்ங்க இல்ல... அப்படி ஒரு கூட்டம் இதுக்குப் பின்னாடி இருக்கு.''




''தொழில் போட்டியைச் சொல்கிறீர்களா?''



''இருக்கும். நீங்க கண்ணாலகூட ஒருத்தரைப் பார்த்திருக்க மாட்டீங்க. ஆனா, அவரு உங்களை எதிரியா நெனைச்சுக்கிட்டு இருப்பாரு. ஒருத்தரை நேசிக்க எப்படி நியாயம் வேணாமோ, அதேபோல வெறுக்கவும் நியாயம் வேணாம். பச்சப்புள்ளகூட என்னையப் பார்த்தா, 'வடிவேலு... வடிவேலு’னு குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும். எவ்வ ளவு பெரிய வரம் இது? ஒருத்தருக்குக் கூட உறுத்தாமலா இருக்கும்?''



''கருணாநிதியையோ, அழகிரியையோ சந்தித்தீர்களா? தேர்தலில் தி.மு.க. உங்களை வைத்து ஆதாயம் அடைந்தது. ஆனால், ஸ்டாலின் மகனும் அழகிரி மகனும் எடுக்கும் படங்களில்கூட உங்களுக்கு நடிக்க வாய்ப்பு அளிக்கவில்லை. இதுபற்றி எல்லாம் எதுவும் பேசினீர்களா?''



''பொதுவா ஒண்ணு சொல் றேண்ணே... இப்போ வீட்டைவிட்டு நான் எங்கேயும் போறது இல்ல. ஒண்ணு சென்னை; இல்லைன்னா அன்னை. எங்க அம்மாவைப் பார்க்க மதுரைக்குப் போவேன். அவ்வளவு தான். எல்லாரும் என்னைய ஒதுக் கிட்டதா நீங்க நெனைக்கலாம். ஆனா, இப்படி ஒரு காலமும் வேணும்னு நான் நெனைக்கிறேன். 1991-ல 'என் ராசாவின் மனசிலே’ வந்துச்சு. 20 வருஷம்...



 ஓடு ஓடுனு ஓடினேன். நிக்கக்கூட நேரம் இல்ல. கடுமையான உழைப்பு. ஒரு நகைச்சுவை நடிகன் கிறவன் வெறும் நடிகன் மட்டும் இல்லை; படத்துல அவன் வர்ற ஒவ்வொரு காட்சியி லயும் அவனுக்கு நேரடிப் பொறுப்பு இருக்கு. ஒரு பக்கம் நடிப்பு; இன்னொரு பக்கம் யோசனை. 'அய்யய்யோ வந்துட் டான்’னு பேசணும். 'ஆஹா! வந்துட்டான்யா... வந்துட் டான்யா’ம்பேன். இன்னைக்குத் தமிழ்நாட்டுல இந்த வசனத்தைப் பேசாத ஆளுங்க யாரையாவது அடையாளம் காட்டுங்க பார்ப்போம்.



சட்டுனு ஒரு நிமிஷத்துல வர யோசனை இல்லண்ணே இதெல்லாம். உழைப்பு... கடினமான உழைப்பு. மனசாலயும் உடம்பாலயும் ஓடுற பொழப்பு. மூச்சு அடைக்குற அளவுக்கு மூச்சிரைக்க ஓடின உங்களுக்கு ஒரு மரத்தடியில உட்கார நாற்காலி போட்டுக்கொடுத்தா, எவ்வளவு இதமா இருக்கும்? எனக்கு இப்போ அப்படித்தான் இருக்கு.



 ரொம்பக் காலத்துக்குப் பின்னால வீட்டுல அம்மா, சம்சாரம், புள்ளைங்ககூட நிறைய நேரம் இருக் கேன். வாழ்க்கையில எதுக்காக ஓடுறோம், புள்ளகுட்டி சந்தோஷத்துக்குத்தானே? இப்ப நான் ஒவ்வொரு நிமிஷமும் அவங்களைச் சந்தோஷப்படுத்திக்கிட்டு இருக்கேன். அதனால, யார் மேலயும் எனக்கு எந்தக் குறையும் இல்ல.''



''ஆனாலும், இது பெரிய இடைவெளி இல்லையா?''



''இல்ல, ஒவ்வொரு படைப்பாளிக்கும் இது மாதிரி ஒரு இடைவெளி வேணும். எனக்கு அந்த இடைவெளி எப்படி ஏற்பட்டுச்சுங்கிறது வேற விஷயம். அதைத் தனியா வெச்சுக்கு வோம். ஆனா, இந்த மாதிரி ஒரு ஓய்வை நம்மளாவாவது உருவாக்கிக்கணும். வேலையில நாம இதுவரைக்கும் என்ன செஞ்சிருக்கோம், எங்கே எல்லாம் தப்பு பண்ணியிருக் கோம், எதை எல்லாம் சரிசெஞ்சுக்கணும்னு யோசிக்க இந்த ஓய்வு முக்கியம்.




இப்போ காலையில ஒரு ஆறு ஆறரைக்கு எழுந்திரிக்கிறேன். மெள்ள மாடியிலயே ஒரு லாந்து. அப்புறம் சாப்பிட்டுட்டு உட்கார்ந்தன்னா, யோசனை ஓடிக் கிட்டே இருக்கும். பக்கத்துல ஒரு பேனாவும் டைரியும் மட்டும் வெச்சுக்குறது. எதெல்லாம் தோணுதோ, அப்பப்ப குறிச்சுவெச்சுக்குறது. ஆயிரக்கணக்குல குறிச்சுவெச்சு இருக்கேண்ணே. நேரம் வரும்போது... உருட்டித் திரட்டி எடுத்துவிடுவேன்.''



''வடிவேலுவுக்கு உள்ளே ஓர் எழுத்தாளரும் இருக்கிறாரா?''



''அய்யய்யே... எழுத்தாளன் மட்டும் இல்ல... பாடகன், இசையமைப்பாளன், இயக்குநரு... எல்லாம் இருக்காய்ங்க. ஆனா, அதெல்லாம் நமக்கே நமக்கு. வெளியே விடுறது இல்ல. நம்ம ஜோலி என்ன? நடிக்கிறது, சிரிக்கவைக்கிறது. அதை மட்டும்தான் வெளியே விடுவோம்.''



''அரசியலில் கால்வைத்தது தவறு என்று உணர்கிறீர்களா?''



''நீங்க ஒண்ணு புரிஞ்சுக்கணும்... நான் யாரு? எங்கே இருந்து வந்தேன்? மதுரைச் சந்தையில திரிஞ்சுக்கிட்டு இருந்தவண்ணே நானு. இன்னைக்குத் தமிழ்நாட்டுல என்னைய அடையாளம் தெரியாத ஆளே கிடையாது. எது இந்த எடத்துக்குக் கொண்டுவந்து உட்காரவெச்சுருக்கு?


காலம். அதோட வெளையாட்டுல இந்த அரசியல் ஆட்டமும் ஒண்ணு. அரசியல் லாப - நஷ்டக் கணக்கை விடுங்க. லட்சோப லட்ச மக்களை நேருக்கு நேராப் பார்க்குற வாய்ப்பு அப்ப கிடைச்சுது. அந்தக் கூட்டத்தை நீங்க பார்க்கணுமே... அப்பாடி! வெறும் தலையாத் தெரிஞ்சுச்சுண்ணே... தலையாத் தெரிஞ்சுச்சு. இந்த சாதாரண மனுஷன் மேல இம்புட்டுப் பாசமானு கெறங்கிப்போனேன்.''

http://cinesouth.com/images/new/03082009-THN10image1.jpg

''ஆனால், கூட்டம் ஓட்டாகவில்லையே? விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவராக உருவெடுத்தாரே?''




''நான் அந்த ஆட்டைக்குள்ள போக வேணாம்னு நெனைக் கிறேன். ஆனா, ஒண்ணு சொல்றேன்... ஒரு காமெடியனா நான் அவருகிட்ட தோத்துட்டேன். என்னா காமெடி, என்னா காமெடி... பெரிய காமெடியர்ணே அவரு. நான் அன்னைக்குச் சொன்னப்ப யாரும் நம்பலை; ஆனா, இன்னைக்கு எல்லாரும் கண்ணாற பாக்குறீங்க. நம்ம அடிச்ச கோடங்கி பலிக்குதுல்ல?


ஒரு படத்துல புரட்சித் தலைவர் சொல்வாரு... 'எனக்கு எதிரியா இருந்தாக்கூட, அதுக்குத் தகுதியா இருந்தாத்தான் நான் ஏத்துக்கிடுவேன்’னு. அதைத் தமிழக முதலமைச்சர் நிறைவேத்திட்டாங்க. ஒரு முதலமைச்சரு, சட்டசபையில எழுந்திருச்சு, 'உங்களோட கூட்டணி வெச்சுக்கிட்டதுக்காக வெட்கப்படுறேன்... வேதனைப் படுறேன்... அசிங்கமா இருக்கு’னு சொல்றாங்கன்னா, அதுக்கு மேல நானெல்லாம் சொல்ல என்ன இருக்கு?''




''தேர்தலுக்குப் பின் தே.மு.தி.க-வினரிடம் இருந்து மிரட்டல்கள் ஏதும் வந்ததா?''  



''ம்... அதெல்லாம் வந்துக்கிட்டுதான் இருக்கு. நான் எதையும் கண்டுக்கிறது இல்ல.''



''இடைப்பட்ட காலத்தில் தமிழ் சினிமாவில் நடக்கும் மாற்றங் களைக் கவனிக்கிறீர்களா?''



''என்ன, இப்படிக் கேட்டுட்டீங்க? நம்ம உசுரு உறைஞ்சு கிடக்குற இடம்ணே அது. படம் பார்க்குறதோட மட்டும் இல்ல. எல்லாம் எப்படி இருக்காங்கன்னுகூட விசாரிச்சுக் கிட்டுதான் இருக்கேன். சமீபத்துல கூட கவுண்டமணி அண்ணனோட அம்மா தவறிப்போனதைப் பத்தி ஒரு நண்பர்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்.''



''தமிழக நகைச்சுவை நடிகர்கள் சாதி சார்ந்து தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''



''மத்தவங்களைவிடுங்க... என் சாதி நகைச்சுவை சாதி. நாட்டுல இருக்குற ஏகப்பட்ட சாதிகள் மத்தியில இந்த சாதிக்கு ஒரு இடம் கொடுத்தீங்கன்னா, புண்ணியமாப் போகும். நாட்டுல வெட்டுக்குத்து இருக்காது; எல்லோரும் சந்தோஷமா வாழலாம். இப்பவே பாருங்க. நம்மளோட பஞ்ச் டயலாக் ஒவ்வொண்ணும் நாட்டுல மாற்றத்தை உண்டாக்கி இருக்கா, இல்லையா?



ஒருத்தன் ரொம்ப நேரமா பஸ்ஸுக்காக நிக்கிறான். வர்ற கதியா இல்ல. இந்த நேரத்துல அவசர அவசரமா வர்ற இன்னொருத்தன் பொறுமை இல்லாம இவன்கிட்ட கேக்குறான்... 'ஏங்க, பஸ்ஸு எப்போ வரும்?’ இதைக் கேட்டு இம்புட்டு நேரமா நிக்கிறவனுக்கு எவ்வளவு வெறி வரும்? அங்க போடுறான் பாருங்க நம்ம பஞ்ச் டயலாக்கை. 'வரும்... ஆனா, வர்றா££து’. சண்டைக்காரய்ங்க எல்லாரையும் சுமுகமாக்கி விடுதுல்ல இந்த நகைச்சுவை?''




''ஆனால், இப்படியே எல்லாவற்றையும் நகைச் சுவையாகப் பார்க்க, பேச ஆரம்பித்து, மக்களிடம் கொஞ்சம்கூட சொரணையே இல்லாமல் போய்விடும் போல் இருக்கிறதே? ஒருவகையில் நீங்கள் நடித்த காட்சிகளைத் தினமும் டி.வி-யில் போட்டுப்போட்டு முக்கியமான பிரச்னைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பும் வேலை நடக்கிறதோ என்றுகூடத் தோன்று கிறது. நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''




''அய்யய்யோ, நீங்க பயங்கரமா யோசிக்கிறீங்க (சிரிக்கிறார்). நான் அவ்வளவுக்கு யோசிக்கலை. ஆனா, மக்களை நேர்ல பார்க்கும்போது அவங்க மன அழுத்தத்துக்கு நாம ஒரு மருந்தா இருக்கோம்கிறது தெரியுது. என்னைப் பொறுத்த அளவுல, நான் எல்லாத்தையும் கவனிக்கிறேன்.



 எல்லாப் பேரையுமே நடிகனாத்தான் பார்க்குறேன் கைப் புள்ள, வண்டு முருகன், நாய் சேகர், படித்துறை பாண்டி, அலார்ட் ஆறுமுகம், ஸ்னேக் பாபு... இப்படி நான் நடிச்ச ஒட்டுமொத்த கேரக்டரும் நான் கவனிச்ச ஆளுங்கதான். இப்படி நான் கவனிச்சதை எனக்குத் தெரிஞ்ச தமிழ்ல கொடுக்குறேன். அதுல நீங்க என்னென்னவோ கண்டுபிடிக்கிறீங்கண்ணே.''




''எல்லாரும் கவலையை மறக்க உங்கள் படம் பார்க்கிறார்கள். நீங்கள் கவலையை மறக்க என்ன செய்வீர்கள்? உலக சினிமாக்கள் எல்லாம் பார்ப்பீர்களா?''



''கிடையாதுண்ணே... பொழுதுபோக்குன்னா நண்பர்கள்கூட பேசிக்கிட்டு இருப்பேன். டி.வி-ல பழைய பாட்டு பார்ப்பேன். ஆறுதல்னா, தலைவர் பாட்டு கேட்குறதுதான். 'கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்’...'' (பாடுகிறார்).



''சரி, எப்போது திரும்ப வரப்போகிறீர்கள்?''



''ஒரு இடைவெளி விழுந்துடுச்சு. இனி திரும்ப வரும்போது சாதாரணமா வரக் கூடாது. அதிர டிக்கணும்ல? நல்ல காமெடி ஹீரோ சப்ஜெக்ட். பேசிக்கிட்டு இருக்கேன். நாலு அயிட்டம் கையில இருக்கு. மொதல்ல, சிம்புதேவனோட 'புலிகேசி - பார்ட் 2’. பேரு இன்னும் வைக்கலை. கூடிய சீக்கிரம் வேலையை ஆரம்பிச்சுடுவோம். அடுத்தடுத்து, ரவிக்குமார் சாரோட 'ஆப்பிரிக்காவில் வடிவேலு’, யுவராஜோட 'தெனாலிராமன்’, அப்புறம், 25 கேரக்டருல 3-டில பாவாவோட 'உலகம்’. எழுதிக்குங்க... வடிவேலு திரும்பி வந்துட்டான்யா... வந்துட்டான்!''





மக்கள் கருத்து


1.
Gopalan7 Hours ago
"...எனக்கு எதிரியா இருந்தாக்கூட, அதுக்குத் தகுதியா இருந்தாத்தான் நான் ஏத்துக்கிடுவேன்.." -
வடிவேலு.. நீங்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள். இதே வசனத்தைத்தான் விஜயகாந்த் சொல்லவில்லை. ஆனால் செயல்படுத்திவிட்டார். அதனால்தான் அவர் பதிலுக்கு உங்களை எதிர்த்து எதுவுமே பேசவில்லை. தேர்த்தலில் அவரை எந்த அளவுக்கு வறுத்தெடுத்தீர்கள். பதிலுக்கு அவர் பெரிதாக ஏதும் சொல்லாதபோதே நீங்கள் சுதாரித்து இருக்கனும். விஜயகாந்த் அரசியலில் எப்படியோ..,ஆனால் சினிமாவில் விஜயகாந்த்துக்கு உண்மையிலேயே நிறைய நண்பர்கள். தேவையில்லாமல் நீங்கள் அதிகமாக விட்ட சவுண்டுதான் உங்களுக்கு இப்போ ஆப்பு வைக்குது..., இப்போதாவது புரிந்து கொண்டு வீண் பிடிவாதத்தை விட்டு விஜயகாந்த்தை பார்த்து சமாதானமாகி விடுங்கள். பிறகு அரசியலையும் விடுங்கள். உங்கள் எதிர்காலம் நன்றாகவே இருக்கும். 
2. Ravi6 Hours ago
இந்த வாழ்க்கையே ஒரு மாயை. பெரும்பாலும் பேர், புகழ், செல்வாக்கு - இதற்க்கு தான் மரியாதை, உபசரணை எல்லாம். சினிமா உலகில் இந்த நிலை இன்னுமே அழுத்தமாக இருக்கும். வடிவேலு அவர்கள் இதை உணர்ந்திருப்பார். இந்த பேட்டியும் சரி, சென்ற வருடம் தேர்தலுக்கு பின் வந்த பேட்டியும் சரி ரொம்ப பக்குவமாக பேசி இருக்கிறார்.

எது எப்படியோ, "வி ரியலி மிஸ் யு வடிவேலு". மிக விரைவில் மீண்டும் வெள்ளி திரையில் தோன்றி, மருபடியும் ஒரு கலக்கு கலக்க வேண்டும். அதற்க்கு அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
3. vinod5 Hours ago
சரி நெசமாவே சொல்லுங்க வடிவேலு..இந்த பேட்டி முடிஞ்சப்புரம்.. உங்க ஃபேமஸ் வசனமான ... " .. எப்புடி எல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்குது ..." ந்னு நீங்க நெனைச்சீங்களா இல்லியா... இந்த திமுக வால் ஏற்பட்ட பல இழப்புகளில் உங்கள் இழப்பும் ஈடு செய்ய இயலாததே.. உங்களை வெற்றிடத்தால் என்னை போல் பல ரசிகர்கள் நிச்சயம் வருந்துவர்.. மீண்டும் வர வாழ்த்துக்கள்..
4. வடிவேலு தேர்தல் சமயத்துல பேசினது கொஞ்சம் நாகரீகக் குறைச்சலாக இருந்தாலும், இப்படிப் பட்ட ஒரு கலைஞனுக்கு இத்தனை பெரிய இடைவெளியை தமிழ் திரைஉலகம் கொடுத்திருக்கக் கூடாது. இவர் காமெடி நடிப்போடு இயல்பாக நடித்தப் படம் எம்-மகன். நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும் நடக்க இருப்பவை நல்லவைகளாக இருக்கட்டும். சீக்கிரமா வாங்கப்பு.
5. Thiyagarajan8 Hours ago
 
வடிவேலு ஒரு சிறந்த காமெடி நடிகர் ! அதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை! என்று அவர் விஜயகாந்தை எதிரி என நினைத்து தி மு க வின் அரசியல் கூட்டங்களில் காமெடி என எண்ணி தரம் கெட்ட பேச்சுக்களை அள்ளி விட்டாரோ அன்றே பிடித்துவிட்டது ஏழரை நாட்டுச் சனி ! மேலும் இவர் மீண்டும் நிச்சயம் வெற்றிகரமாகத் திரையுலகில் பவனி வருவார் ! ஆனால் இவரின் நகைச்சுவைப் பாணி (எல்லோரிடமும் தர்ம அடி வாங்கும் பாணி)புளித்துப் போன பாணி! அதை மாற்றி விட்டு புதுப் புது விதமாக யோசித்து நகைச்சுவைக் காட்சிகளை அமைத்துக் கொள்ள வேண்டும் ! "விஜயகாந்தின் குடிப் பழக்கத்தைக் கிண்டல் செய்தோமே ! நானும் குடித்தால் என்னை இன்னொருவனும் கிண்டல் செய்வானே " என்ற சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்! மீண்டும் பெரு வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் வடிவேலு சார்!
 நன்றி - விகடன்

Saturday, August 13, 2011

ஜெ ஆளுங்க மிரட்னாலும் சரி , ஜெயிச்ச ஆளுங்க மிரட்னாலும் சரி பயப்படமாட்டேன் - வடிவேல் பேட்டி - காமெடி கும்மி

உண்மையை உடைக்கும் வடிவேலு

நான் பொய்ப் புள்ள இல்லண்ணே... கைப்புள்ள!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI5p-TWhIPyn7z4Ti6NmHJgzrH3WkdlGgAp6cIX8skQ2iQha6oNMRLXZF-8j-dAMUjhoj_cFt0AwPAZFVzjOCiExM_NdKjeesszWOnTF4gS9mC-cRoMm04IczB_YEGXhqEvBVAVVuGZ60/s400/Vadivelu-and+Actress-Asin-in-Press-meet+.jpg 

ந்த நேரத்தில் பிரசார வேனில் ஏறி னாரோ... அக்கப்போரும் பரபரப்பும் வடிவேலுவை இன்னும் விடாது விரட்டுகிறது. லேட்டஸ்ட் வரவு... போலிப் பத்திர மோசடி! 


சென்னை புறநகர் போலீஸில் பழனியப்பன் என்பவர் புகார் கொடுத்த உடனேயே, 'வடிவேலு தலைமறைவு’ என்கிற செய்திகள் றெக்கை கட்டத் தொடங்கிவிட்டன.


''எங்கேண்ணே இருக்கீங்க?'' என போன் போட்டுக் கேட்டதுதான் தாமதம். ''எங்கேயும் ஓடலை. 'தலைமறைவு’னு போட்டிருக்கிற போஸ்டர்களை நானும் பார்த்தேன். இந்தத் தலை என்னிக்குமே மறையாதுண்ணே... நான் செத்தாக்கூட, என் தலை ஏதாச்சும் ஒரு தியேட்டர்லேயோ, டி.வி-யிலேயோ தெரிஞ்சு கிட்டேதான் இருக்கும்.


ஒண்ணு... சென்னையில இருப்பேன். இல்லன்னா, என் அன்னையோட மதுரைத் திண்ணையில இருப்பேன்.

 சி.பி - எங்கே இருக்கீங்கன்னா அதுக்கு மட்டும் பதில் சொல்லனும், அதை விட்டுட்டு சென்னை , திண்ணைன்னு ஏன் வெண்ணை மாதிரி சமாளிப்பு?

தலைமறைவு ஆகிற அளவுக்கு நான் ஒண்ணும் என்கவுன்ட்டர் குற்றவாளி இல்லண்ணே... நாலு பேரை வயிறு வலிக்கச் சிரிக்கவெச்சதைத் தவிர, வேற எந்த வேலையும் செய்யலண்ணே! என்னையப்போய் வில்லங்கம்னு சொல்ல எப்படித்தான் மனசு வருதோ?'' என்றவரிடம் சொத்து விவகாரக் கேள்விகளை வைத்தோம்.



சி.பி - ஏன்? சிங்கமுத்து கிட்டே காமெடி டிராக் எழுதி வாங்கிட்டு ஏமாத்தலை? 



http://www.chennai365.com/wp-content/uploads/movies/Indira_Logathil_Na_Azhagappan/Vadivelu-012908-.jpg
1. ''ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவரே நீங்கள் மோசடி செய்ததாகப் புகார் செய்திருக்கிறாரே?''

சி.பி - அட!!! சிங்கி மங்கி சீட்டிங்க் ஒன் வங்கி !!! அவ்வ்வ்
''அந்த பழனியப்பன் கறுப்பா சிவப்பானுகூட எனக்குத் தெரியாது. இப்போ டி.வி-யிலதான் பார்த்தேன். என் மேனேஜர் முத்தையா மாதிரியே இருக்கார். 2002-ல் இப்போ சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிற நிலத்தை நான் வாங்கினேன். அதில், ஈ.சி. பார்த்தப்ப எந்த வில்லங்கமும் இல்லை. 


2009-ல் அந்த இடத்தில எங்க ஆளுங்க காம்பவுண்ட் போட்டப்ப, பழனியப்பன்கிறவர் வந்து, 'இது என்னோட இடம்’னு சொல்லி இருக்கார். 2006-ல் அந்த இடத்தை வாங்கியதாகச் சொல்ற பழனியப்பன், மூணு வருஷம் கழிச்சு வந்து கேட்க என்ன காரணம்? அப்புறம், அவரே செங்கல்பட்டு கோர்ட்ல கேஸ் போட் டார். அதுக்கு அப்புறம் அவர் கோர்ட் பக்கமே எட்டிப் பார்க்கலை. இதுக்கிடையில நானும் இது சம்பந்தமா கோர்ட்ல கேஸ் போட்டு இருக்கேன். இப்போ, 2011-ல் பழனியப்பன் திடீர்னு கிளம்பி வந்து கம்ப்ளெய்ன்ட் பண்றார்னா, அதில இருக்கிற உள்நோக்கம் புரியுதா?''

 http://thatstamil.oneindia.in/images34/vadivelu-asin-450.jpg

2. ''போலீஸ் உங்களை விசாரிச்சாங்களா?''


''இப்போ வரைக்கும் எந்த போலீஸும் விசாரிக்கலை. 

 சி.பி - ரொம்ப சந்தோஷம் வேணாம், அம்மா இப்போதான் ஃபிரீ ஆனாங்க, இனி விசாரணை தொடரும்

நான்தான் சில போலீஸ் ஆபீஸர்களுக்கு போனைப் பண்ணி, 'நீங்க எப்போ கூப்பிட்டாலும் வர்றேன்’னு சொன்னேன். 


 சி.பி - ஹா ஹா படத்துல வர்ற மாதிரியே நீங்களா போய் மாட்டிக்கிட்டீங்களே?


'உங்களை இன்டலிஜென்ஸ்ல இருந்து விசாரிக்கப்போறாங்களாம்’னு கொஞ்சம் பேர் சொன்னாங்க. உளவுத் துறை அளவுக்கு நான் ஒர்த் இல்லைண்ணே... புகார் கொடுத்திருக்கிற பழனியப்பன் நான் அவரை மிரட்டியதா சொல்லி இருக்காராம். ஒரு முக்கியமான ஆள் மூலமா அந்த பழனியப்பன் தரப்பு என்கிட்ட பேசினாங்க. பல லட்சம் ரூபாய் கேட்டாங்க. கொடுக்கலைன்னா, போலீஸுக்குப் போறதா சொன்னாங்க. 'எந்த விதத்தில உங்களுக்குப் பணம் கொடுக்க முடியும்?’னு கேட்டு நான் மறுத்துட்டேன். 


அததான், சிலரோட தூண்டுதலின் பேரில் இப்போ புகார் கொடுத்து புயலைக் கிளப்பி இருக்காங்க. இது எல்லாமே போலீஸுக்குத் தெரியும்ணே... அவங்க நியாயத்தை செய்வாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு!''


சி.பி - உங்க படத்துல வர்ற காமெடியை விட இந்த காமெடி செம! போலீஸ் நியாயத்தைசெய்யுமா? ஹய்யோ ஹய்யோ!


http://www.nitharsanam.net/wp-content/uploads/2007/10/24sreya.jpg
3. ''அரசியல் பழிவாங்கல் உங்களை நோக்கியும் திரும்புமோ?''


சி.பி - ஆமா, இவர் கர்ம வீரர் காமராஜர், அரசியல்ல போட்டியா வந்துடப்போறாரு....அடப்போங்கப்பா. சினிமால இவரு காமெடியன், அரசியல்ல காமெடி பீஸூ..


''அதெல்லாம் தேர்தலோட முடிஞ்சிடுச்சு. பிடிச்சவங்களுக்குப் பிரசாரம்பண்றதுல அரசியல் எங்கே இருந்து வருது? ஊரையே சிரிக்கவெச்ச ஒருத்தன் இன்னிக்கு, உள்ளுக்குள்ள வெந்து செத்துக்கிட்டு இருக்கேன். என்னால எந்த வேலையும் செய்ய முடியலை. எனக்கு ஏன் இவ்வளவு எதிரிகள்னு தெரியலை.


கிரிமினல் எண்ணம் ஒருத்தனுக்கு இருந்துச்சுன்னா, நிச்சயம் அவன் நல்ல காமெடியனா இருக்க முடியாது. பரம்பரை பரம்பரையா இந்த நரம்புக்குள்ள நகைச்சுவை ஓடுது. என்னையப்பத்தி தப்பா செய்தி பரப்புறவங்ககூட என்னோட காமெடிக்கு நிச்சயம் சிரிப்பாங்க. 


'உண்மை எப்போதும் தூங்குவது இல்லை... பொய்மை எப்போதும் ஓங்குவது இல்லை’ங்கிற எம்.ஜி.ஆரோட வரிகளைத்தான் மனசுக்குள்ள மந்திரமா நினைச்சுக்கிட்டு இருக்கேன். இந்த நில விவகாரத்தை சி.பி.ஐ. வந்து விசாரிச்சாலும் என் தரப்பு நியாயம் நிச்சயம் புரியும். அதனாலதான் எதையும் எதிர்கொள்ற தைரியத்தோட 'வரட்டும் பார்க்கலாம்’னு உட்கார்ந்து இருக்கேன்!''


சி.பி - எக்ஸ்க்யூஸ் மீ, ஒன் ஸ்மால் கரெக்‌ஷன், நடுங்கிட்டு இருக்கேன்னு சொல்லுங்க. 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7mJX6wSSAGdqnFMWQuURVkEytyRGErFiqks9Szi2KRf5nfMJYIJ_ZWW36C6JGK1T6bOca1XnMjd5PYjLxgll_o6AzkYPZBewrSZRyW8RR1sa1jUUAF96y4WBprsoWuWUyKN0MlxGvuV-n/s1600/24.jpg
4. ''வருமான வரித் துறைக்கு பயந்துதான் நீங்க சிங்க முத்து பெயரில் சொத்து வாங்கியதாக அவர் சொல்லி இருக்காரே?''

சி.பி - இந்த விஷயத்துல 2 மேட்டர் இருக்கு, 

1. சிங்கமுத்துவை வடிவேல் காமெடி ஸ்கிரிப்ட் மட்டும் எழுதி வாங்கிட்டு சம்பளம் தராம டேககா கொடுத்தாருன்னும், அதுக்கு பைசல் பண்ணும் விதமாகத்தான் நிலம்  சிங்க முத்து பேர்ல எழுதி வாங்கப்பட்டதுன்னும் சொல்றாங்க.  

2. பொதுவாவே வி ஐ பிங்க அவங்க பி ஏ பேர்ல சொத்து வாங்கறதும், அதனால பின்னால பிரச்சனை வர்றதும் சகஜம் தான். 


''என் வீட்ல திருடியவனைப் பிடிச்சாச்சு. அவனை விசாரிக்கிறப்ப, 'நீயும் நானும் சேர்ந்துதானே திருடினோம்’னு என்னையவே கைகாட்டுறான் அவன்! உன்கூட சேர்ந்து ஏன் என் வீட்டை நான் திருடணும்? ஆங்... உங்க கேள்விக்கு இதுதாண்ணே பதில். என் வீட்டு சுவத்தில நானே ஏன் ஏறிக் குதிக்கணும்? என்னோட குல தெய்வம் அய்யனார் கண் பார்க்க, என்னென்னமோ சொல்லி என்னை ஏமாத்திட்டாங்க. அதைக்கூடத் தாங்கிக்கிட்டேன். 


ஆனால், ஏமாந்தவன் மேலேயே பழிச் சொல் பேச எப்படித்தான் மனசு வருதோ? கைக்குழந்தை மாதிரி எதிர்ப்படுற எல்லாரையும் பார்த்துச் சிரிக்கிற ஆளுண்ணே. இந்தக் கைப்புள்ளைய பொய்ப் புள்ளைன்னு சொல்றவங்களுக்கு அந்த அய்யனார்தான் புத்தி கொடுக்கணும். மற்றபடி துரோகிகள், எதிரிகள்னு என்னைச் சூறையாட நினைக்கிறவங்களோட பெயரைச் சொல்றதைக்கூட பெரும் பாவமா நினைக்கிறேன் நான்!''


சி.பி - எப்படியோ வடிவேலுக்கு இது இறங்கு முகம்,. இதில் இருந்து மீண்டு வந்து அவர் பழையபடி காமெடியில் சினிமாவில் கலக்க வாழ்த்துக்கள். அதை விட்டுட்டு அரசியல்ல காமெடி பண்ணிட்டு இருந்தா அழிஞ்சு போயிடுவாரு

tks - vikatan