Showing posts with label மன்னாரு. Show all posts
Showing posts with label மன்னாரு. Show all posts

Monday, September 10, 2012

மன்னாரு - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9AZAv40G6mDw1dUN3p6_ZuiNUwnbcvMlhH6YwjtT1t1-Ny4SaDjQ0n3BW42CiF4Iwl-n_Mwa7J7bMlU5-volmtKN2FToINtaFkrXjShJEg-QSadQIPmrQ0tUr2TZ2w2mynUg4g5qtO45N/s640/Mannaru+Movie+Posters+Mycineworld+Com+(3).jpg ஒரு ஊர்ல ஒரு லவ் ஜோடி ரிஜிஸ்தர் ஆஃபீஸ்ல மேரேஜ் பண்ணிக்கறாங்க. ஊரை விட்டு ஓட பிளான். வில்லன்கள் துரத்திட்டு வர்றாங்க. மாப்ளை பொண்ணு கூட போக முடியலை.. டக்னு தன் நண்பனை தன் மனைவி கூட அனுப்பி வைக்கறார். மாப்ளை வில்லன்கள் கிட்டே மாட்டிக்கறார். அவரை அடைச்சு வெச்சுடறாங்க.. 


 இப்போ அந்த பொண்ணு, மாப்ளையின் நண்பன் 2 பேரும் கொடைக்கானல் ல லாட்ஜ்ல ஒரே ரூமில் தங்க வேண்டிய சூழ்நிலை.. அப்புறம் மாப்ளையின் நண்பன் தன் ஊருக்கு அவளை கூட்டிட்டுப்போனா அங்கே அவனோட காதலி , ஊர் பெருசுங்க..  என்ன ஆச்சு? எப்படி இந்த இடி ஆப்பச்சிக்கலுக்கு விடை கிடைச்சது என்பதை அனுபவம் குறைவான திரைக்கதையால் சொதப்பி இருப்பதே மன்னாரு.. 



 இந்த கதையை திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் டைரக்‌ஷன்ல யதார்த்த நாயகன் சேரன் ஹீரோவா நடிச்சிருந்தா கனகச்சிதமா இருந்திருக்கும்.. மிஸ் பண்ணிட்டாங்க..


 ஹீரோ அழகர் சாமியின் குதிரை ஹீரோ அப்புக்குட்டி.. படத்தின் முன் பாதியில்  ஆங்காங்கே எரிச்சல் படுத்தும் நடிப்பா இருந்தாலும் இடைவேளைக்குப்பின் அபாரமான நடிப்பு.. இவர் இயல்பாய் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் அழகு.. ஆனால் செயற்கையாய்  செய்யும் பல இடங்கள் கடுப்படிப்பு.. 


 ஹீரோயின் ராட்டினம் ஹீரோயின் ஸ்வாதி .மிக கச்சிதமான , பொருத்தமான  தேர்வு.துளியும் ஓவர் ஆக்டிங்க் பண்ணாமல் அச்சு அசலாக அந்த கேரக்டரை முன்னிறுத்துகிறார். கண்ணியமான தோற்றம், கவுரவமான ஆடை வடிவமைப்பு , குடும்பப்பாங்கான தோற்றத்துக்கு கண்ணை மூடிக்கிட்டு இவரை இனிமே செலக்ட் பண்ணலாம்.


http://l2.yimg.com/bt/api/res/1.2/qIohxAfyGNtf1s8DNeH7Tg--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MDA7cT04NTt3PTYwMA--/http://media.zenfs.com/en_us/News/ybrand.dinamalar.com.ta/15212333019.jpg



தம்பி ராமையா தான் படத்துக்கு வசனம். அதுக்காக அவர் படத்துல பேசிப்பேசிக்கொல்லனுமா? மைனா படத்துல எந்த அளவு  ரசிக்க வெச்சாரோ அதே அளவு இதுல கடுப்பேத்துறார்.


ஹீரோவின் மாமா பெண்ணாக வரும்  அந்தப்பொண்ணு மேக்கப் போடாம இயல்பா சில காட்சிகளிலும், ஓவர் ஆக்டிங்கா பல காட்சிகளிலும் வருது.


http://www.thaalamcinema.com/uploads/news/original/-MA469318.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1. பெண்களைக்கவரும் பாக்யராஜ் ஸ்டைலில் கதை தேர்ந்தெடுத்தது, அழகான ஹீரோயின் செலக்‌ஷன்,ரம்மியமான ஒளிப்பதிவு



2. இங்கே எதுவுமே சரி இல்லை பாடலும், கரகாட்டக்கார பாடலும் துள்ளலான நாட்டுப்புற இசையும் கலக்கல்.. அப்படியே கிராமத்து இசையை, நடனத்தை கண் முன் நிறுத்துது ( பாட்டும் ராமையா தானாம்)


3. இடைவேளை வரை திரைக்கதையை வேகமாக நகர்த்தியது, கொடைக்கானல் லொக்கேஷன்கள்

http://l1.yimg.com/bt/api/res/1.2/oY4JDtnI.0sgMtdND04l5w--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MDA7cT04NTt3PTYwMA--/http://media.zenfs.com/en_us/News/ybrand.dinamalar.com.ta/15212382399.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்



1. அண்ணே! வண்டியை கொஞ்சம் நிறுத்துங்க



ஓடற வண்டியை நிறுத்தச்சொல்றியே?



பின்னே? நிக்கற வண்டியையா நிறுத்தச்சொல்வாங்க?



2. அய்யா என் ஊரு  தாண்டிக்குடி, எனக்கு ஒரு டிக்கெட் குடுங்க



 தியேட்டருக்கு வந்தா டிக்கெட் மட்டும் கேளுங்க. ஊர்ப்பேர் எல்லாம் சொல்லி ஏன் கேவலப்படுத்தறீங்க?



3. நாம இப்போ எங்கேடா போறோம்?



மேரேஜ்க்கு



யார் மேரேஜ்க்கு?



என் மேரேஜ்க்குத்தான், ஹி ஹி



4. உழைக்கறவன் கைல ஒரு மோதிரம் கூட இல்லை, ஆனா மொதலாளிங்க கைல  10 விரல்லயும் மோதரம்



5. எனக்கும், என் நண்பன் மனைவிக்கும் ஒரு ரூம் வேணும்.



அடப்பாவிங்களா. இப்போ எல்லாம் இப்படி எல்லாம் ஓப்பனா கேட்க ஆரம்பிச்சுட்டீங்களா?



6. நான் சொன்னா அவங்க நம்ப மாட்டாங்க.




 ஏன்?



 அவளவ் மரியாதை என் மேல .



7. இந்த ஊர்த்தலைவர் யார் தெரியுமா? நாந்தேன்..




 இப்போதானே சொன்னீரு?



மறந்துட்டீன்னா?



8. கரகாட்டக்காரி வனஜாவை கற்பாழிக்கப்போறாங்க போல. வாங்க நாமும் போவோம்//


அய்யய்யோ எதுக்கு?


 அடச்சே, அவளைக்காப்பாத்த.



9. நான் ஒருத்தன் மட்டும் படிச்சவனா இருக்கறதால இந்த ஊர்ல எத்தனை பிரச்சனைகளை சமாளீக்க வேண்டியதா இருக்கு?



10. அவன் நெம்பர் ஒன் குடிகாரன்.



அப்போ நீ யாருவே? நெம்பர் டூ  குடிகாரனா?



11. இது என்ன கழுத்தா? தாலி கட்ற மரமா?  எதுக்கு ஆளாளுக்கு  என் கழுத்துல தாலி கட்ட திட்டம் போடறீங்க?



http://img1.dinamalar.com/cini/CineGallery/VM_113532000000.jpg

யக்குநரிடம் சில பல கேள்விகள்



1. காதலிக்கறவனுக்கு முதல்ல தைரியம் தான் வேணும். பதிவுத்திருமணம் நடந்த பின் ஏன் வில்லன்களுக்கு பயந்து  மாப்ளை தன் கல்யாண டிரஸ்சை  ஹீரோவுக்கு போட்டு விடறாரு?அவர் மாட்னா பரவாயில்லையா?


2. பஸ் ஸ்டேண்ட்ல மாப்ளை, பொண்ணு , ஹீரோ 3 பேரும் நிக்கறாங்க. வில்லன்கள் அங்கே வர்றாங்க. எதுக்கு மாப்ளை லூஸ் மாதிரி ஹீரோவை நீ என் சம்சாரத்தை கூட்டிட்டு போ. நான் பின்னாலயே வர்றேன்னு சொல்றான்/ அவன் லூஸா? மிக்சர் பார்ட்டியா? தியாகியா? கேனமா? படத்தோட முக்கியமான இந்த காட்சில மாப்ளை ஏன் ஹீரொவை தன் மனைவி கூட அனுப்பறார்னு காரணம் சரியா சொல்ல வேணாமா?


3. மாப்ளை ஒரு சீன்ல சாஃப்ட்வேர் கம்பெனில 3 வருஷம் வேலை செஞ்சதா சொல்றாரு. பொண்ணும் தான். அப்படி இருக்கும்போது சாட்சிக்கையெழுத்து போட யாருமே வர்லையே, ஏன்?


4. படத்துக்கு சம்பந்தமே இல்லாம திருநங்கைகளை கேவலப்படுத்தி ஒரு பாட்டு சீன் இருக்கு. எதுக்கு? இந்த லட்சணத்துல ஆர் பாண்டியராஜன் அந்த பாட்டுக்கு மட்டும் வந்துட்டுப்போறாரு? அவர் என்ன சாரு நிவேதிதாவா? கிளாமர்க்கு யூஸ் பண்ணிக்க?


5. ஹீரோவோட மாமா பொண்ணு மல்லிகா கிணத்துல தண்ணி சேந்திட்டு இருக்கு. அப்போ ஒரு பொண்ணு வந்து “ உன் மாமன் வேற ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்திருக்கார்”னு சொல்லுது.  உடனே மல்லிகா சேந்திட்டு இருந்த குடத்தை அப்படியே கிணத்துல தொபுக்கடீர்னு போட்டுட்டு காலியான குடம் ஒண்ணை எடுத்துட்டு போகுது. அங்கே மாமனை பார்த்ததும் அதிர்ச்சில குடத்தை கீழே போடுது. அப்போ தண்ணீர் ஃபுல்லா கொட்டுது. எப்படி? கர்நாடகாக்காரன் தண்ணி குடுத்தானா?


6. ஹீரோவோட மாமா பொண்ணு கிட்டே ஹீரோயின் தனியா கூட்டிட்டுப்போய் இந்த மாதிரி விஷயம், உன் மாமா உன்னைத்தான் நினைக்கறார்னு சொல்லிட்டா 4 வது ரீல்லயே படம் ஓவர்.. ஆனா அவ கடைசி வரைக்கும் அப்படி சொல்லவே இல்லை..



7. ஹீரோ அழகை பற்றி நான் சொல்றதா நினைக்க வேண்டாம். அவர் முகத்தை எதுக்கு அவ்ளவ் க்ளோசப்ல அடிக்கடி காட்டனும்? ஆனானப்பட்ட ஐஸ்வர்யாராயா இருந்தாலும் சில கோணங்கள்ல அழகு கம்மியா தெரிவாங்க.. அந்த ஆங்கிள்களை அவாய்டு பண்ணனும் . ஹீரோ பல் துலக்காத காரை பற்களை, எண்ணெய் பூசாத தலை முடியை அவ்ளவ் க்ளோசப்ல அடிக்கடி காட்றீங்களே, ஏன்.. கலா மாஸ்டரை க்ளோசப்ல காட்டுன மாதிரி.. உவ்வே..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgazXhCfxOjd0jcrRz4K4NTZHgXKpR7wzCHtTKeKLmn947VWySXYcWS821fDdQvG-cKl4yHrEX1UW-5MLQqf5HNjpRbdyuyAJxPrl-apguag3a5iKT_juxL1YqiEruAoR6AmVs9yfUitO__/s1600/tamil-movies-mannaru-movie-audio-launch15.jpg

8. ஹீரோ ஒரு ஆட்டை திருடுனாருன்னு ஊர் மக்கள் முன்னால அவரை கட்டி வெச்சு ஹீரோவோட அப்பாவே அடிப்பதும், ஆடு திருடு போகலை, கட்டை அவுத்துட்டுப்போயிடுச்சு என்று ஒரு ஆள் வந்து சொல்வதும் 1980 டைப் அரதப்பழசான செண்ட்டிமென்ட் காட்சிகள். ஒட்டவே இல்லை.. இந்தக்காலத்துல  1000 கோடி அடிச்சவனை ஒரு அடி வைக்க முடியலை, ஆடு திருடுனதுக்கு அவ்ளவ் அடியா?


9. ஹீரோவுக்கும், நண்பனின் மனைவிக்கும் எந்த மேட்டரும் இல்லை, ஜோடி சேரப்போவதில்லை. எதுக்கு தேவை இல்லாம  ஹீரோ மேல் நல்ல அபிப்ராயம் அவளுக்கு வர்ற மாதிரி வரிசையா சீன் வெச்சீங்க?



10 . இந்த திரைக்கதையின் முக்கிய மைனஸ் என்ன தெரியுமா? ஆடியன்ஸ் மனசுல ஹீரோவும், அந்த நண்பன் மனைவியும் ஒண்ணு சேர்ந்துடுவாங்களா? என்ற நினைப்பை ஏற்படுத்தனும்.. பதை பதைப்பை கொண்டு  வரனும். ஆனா ஹீரோ யார் கூட சேர்ந்தா நமக்கென்ன? சேராட்டி நமக்கென்ன? என்ற அலட்சியம் தான் வருது..


11. ஒரு சீன்ல மாப்ளை ஒரு ரூம்ல அடைச்சு வைக்கப்பட்டிருக்கார். அவரை சுத்தி வேட்டை நாய்கள் 12 இருக்கு.. அதை எல்லாம் தூங்க வெச்சுட்டு அண்ணன் எஸ் ஆகறார். யோவ்.. நாய்ங்க என்ன கும்ப கர்ணன்களா? அப்படித்தூங்க? தூக்க மருந்தோ, மயக்க மருந்தோ தராம எந்த நாயும் அப்படித்தூங்க சான்ஸே இல்லை..


12. ஆனானப்பட்ட கமல் ஹாசனே அபூர்வ சகோதரர்கள் படத்துல சேர்ல கட்டி வெச்ச சீன்ல அடக்கி வாசிச்சாரு. இந்தப்படத்துல மாப்ளை சேர்ல கட்டி வெச்சாலும் அதை எல்லாம் உடைச்சுட்டு 8 பேரை ஃபைட் போட்டு காலி பண்றாரு..  யப்பா...


13. மாப்ளையும், பொண்ணும் மேரேஜ் பண்ணிட்டாங்க, எம் எல் ஏவோட பையனுக்கு நிச்சயம் ஆன பொண்ணு. மாப்ளையை பிடிச்சிடறாங்க. முதல் வேலையா என்ன பண்ணுவாங்க? மாப்ளை கைல இருக்கற செல் ஃபோனை வாங்கி யார் யார் எல்லாம் கால் பண்றாங்க?ன்னு ட்ரேஸ் அவுட் பண்ணி பொண்ணோட இருப்பிடத்தை கண்டு பிடிக்க முயற்சி பண்ணுவாங்க. அதை விட்டுட்டு செல் ஃபோனை லூஸ் மாதிரி ஆஃப் பண்ணி வைப்பாங்களா?  பொண்ணு மாப்ளை செல்லுக்கு எப்போ ஃபோன் பண்ணாலும் ஸ்விட்ச் ஆஃப்னு வருது. அந்த சீன் 2 டைம் வெச்சா பரவாயில்லை 8 டைமா?


14. ஹீரோ ஓப்பனிங்க் ஷாட்ல கில்மா படம் பார்க்க போறாரு. படம் போட்ட உடனே ஆடியன்ஸ் எங்கே பிட்டை காணோம்?னு ஆர்ப்பாட்டம் பண்றாங்க. இயக்குநர் இதுக்கு முன்னே பிட் படம் பார்த்ததே இல்லையா? இடைவேளைக்கு 5 நிமிஷம் முன்னால தான் பிட் வரும். கடைசி வரைக்கும் வர்லைன்னாத்தான் அப்படி சண்டை போடுவாங்க, சீட்டை கிழிப்பாங்க. அதுவரைக்கும் கமுக்கமா உக்காந்து படம் பார்ப்பான் இந்த மறத்தமிழன் ( ர்கள்)


15.  .  டைட்டில் வைக்கும்போது கேரக்டர் நேம் வைக்கனும்னா அந்த ஹீரோ மினிமம் 25 படமாவது நடிச்சிருக்கனும். அப்போத்தான் ஒரு கெத்து இருக்கும். வளரும் நடிகர்கள் படத்துக்கு கதைக்குத்தக்க டைட்டில் தான் வைக்கனும்,. இந்தப்படத்துக்கு நான் வைக்க நினைக்கும் டைட்டில் “ கை மாறிடுமோ ரோஜா? “ ( ஆர் கே செல்வமணி மன்னிக்க )

16. ஒரு சீன்ல ஹீரோயின் அதாவது ஹீரோவின் நண்பனின் மனைவி ஸ்வாதி ஹீரோ கேரக்டர் எவ்ளவ் யோக்கியம்னு வார்த்தைல சொல்றார். நான் தூக்கத்துல படுத்திருந்தப்போ சேலை விலகி இருக்கும், மாராப்பு நகர்ந்திருக்கும்னு.. அதை நாங்க எப்படி நம்பறது? காட்சியா அதை ஏன் எடுக்கலை? எவிடன்ஸ் ஸ்ட்ராங்கா இருந்திருக்கும், கில்மா சீனுக்கு கில்மா  ( இந்த கடைசி கேள்வி மட்டும் சும்மா ) 



http://gallery.southdreamz.com/cache/movie-launch/mannaru/exclusive-mannaru-movie-launch-stills-12_720_southdreamz.jpg



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - டைம் பாஸ் படம் தான் இது. பார்க்கலாம்... பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் படம் இருக்கு. ஈரோடு  ஸ்டாரில் படம் பார்த்தேன்

 டிஸ்கி -1-பாகன் - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/09/blog-post_8.html

2.  RAAZ 3 - பாலிவுட் சினிமா விமர்சனம் 18+-http://www.adrasaka.com/2012/09/raaz-3-18.html

 http://moviegalleri.net/wp-content/gallery/mannaru-movie-latest-stills/mannaru_movie_stills_3251.jpg