Showing posts with label மதன். Show all posts
Showing posts with label மதன். Show all posts

Tuesday, January 01, 2013

யாருடா மகேஷ்? - இயக்குநர் மதன் ஜாலி பேட்டி

http://news.moviegalleri.net/wp-content/uploads/2012/11/yaaruda_mahesh_tamil_movie_stills.jpg

எங்கடா அந்தக் கதை?

க.ராஜீவ்காந்தி
து ஒரு படத்தின் டிரெய்லர். திரையில் இருள். பின்னணியில் குரல்.


   ''ஏய்... கொஞ்சம் காட்டேன்...''


- ஆண்.

  ''ச்சீய்...'' - பெண்.

  ''கொஞ்சம் காமியேன்...''

  ''போடா!''

  ''யாரும் பார்க்க மாட்டாங்க, நான் மட்டும் பார்த்துக்குறேன்.''


''சரி, பார்த்துத் தொலை!''


காட்சி தெரிகிறது. தேர்வு அறையில் பெண்ணின் விடைத்தாளைப் பார்த்து ஹீரோ காப்பி அடிக்கும் காட்சி. டிரெய்லர் முழுக்கவே குறும்புச் சேட்டைகள். 5 லட்சம் ஹிட்கள் தாண்டிக் கதறடிக்கிறது 'யாருடா மகேஷ்?’ பட டிரெய்லர். படத்தின் இயக்குநர் மதனைச் சந்தித்தேன்.


  ''யாருங்க நீங்க?''



''சும்மா ஜாலி கேலி ஃப்ரெண்ட்ஸ். நான் யார்கிட்டயும் அசிஸ்டென்ட்டா வேலை பார்க்கலை. சில விளம்பரப் படங்களில் வேலை பார்த்திருக்கேன். ஒரு கேரக்டர் அடிக்கடி எல்லாத்தையுமே மறந்தா என்ன ஆகும்? இதுதான் படத்தின் ஒன் லைன். இதை ஒரு குறும்படமா பண்ண லாம்னுதான் ஐடியா. ஆனா, அதுக்கான வேலைகள் ஆரம்பிச்சப்போ, சினிமாவே பண்ணிரலாம்னு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துட்டோம். 



 ஹீரோவுக்கு சின்னச் சின்ன மறதிகள். என்ன பரீட்சைன்னே தெரியாம, எக்ஸாம் ஹால்ல போய் உட்காருவான். பயங்கர சோம்பேறி, டெட் ஸ்லோ கேரக்டர். அவனுக்கு ஒரு காதல் வருது. அந்தக் காதல் அவனை எப்படி புத்தி சாலியா மாத்துது. மகேஷ் என்ற கேரக்டரை ஹீரோ இன்டர்வெல்ல தேட ஆரம்பிப்பான். இதுதான் கதை. இன்டர்வெல்லதான் டைட்டில் கார்டே போடுவோம்!''



'' 'ரத்னவேலுவை ராண்டினு சொல்றோம். அப்ப குழந்தைவேலுவை..?’ எந்தத் தைரியத்தில் இப்படி வசனம் வைக்கிறீங்க? சென்சார் பயம் இல்லையா?''
''இந்த வசனம் டிரெய்லர்ல செம ஹிட். ஆனா, படத்துல மியூட் ஆகிடும். படம் முழுக்க ஜாலி சேட்டை மட்டும்தான். யார் மனசையும் புண்படுத்தும் எண்ணம் எங்களுக்குச் சத்தியமா இல்லை. இத்தனைக்கும் முடிஞ்ச அளவுக்கு எங்களை நாங்களே கன்ட்ரோல் பண்ணித்தான் டயலாக் வெச்சிருக்கோம். 



எல்லாக் கிண்டலும் எல்லாரும் ரசிக்கிற மாதிரிதான் இருக்கும்.
ஹீரோ சந்தீப், தெலுங்குல நான்கு படங்கள் நடிச்சிருக்கார். ஹீரோயின் டிம்பிள், புனே பொண்ணு. 'நண்டு’ ஜெகன், சுவாமிநாதன், ஸ்ரீநாத், லிவிங்ஸ்டன்னு பெரிய காமெடிப் பட்டாளமே இருக்கு. 



ஒரு சீன்ல ஜெகன் தூங்கி எந்திரிச்சுப் பார்த்தா, பக்கத்துல ஜட்டியோட ஹீரோ படுத்திருப்பான். அந்த சீன்ல நாங்க டயலாக்கே வைக்கலை. ஆனா, ஜெகன் டைமிங்கா, 'என்னை என்னடா பண்ணே..? நான் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பையன்டா’னு பேச, அதை டயலாக்ல சேர்த்துட்டோம். ஜெகனுக்கு இந்தப் படம் பெரிய பிரேக்கா இருக்கும்!''




http://mimg.sulekha.com/tamil/yaaruda-mahesh/stills/yaaruda-mahesh-film-029.jpg



''ஹீரோயின் எப்படி டபுள் மீனிங் வசனம் பேச ஓ.கே. சொன்னாங்க?''



''அவங்களுக்குத் தமிழ் புரிஞ்சாதானே கேள்வி கேட்க? அர்த்தத்தை மாத்திச் சொல்லி ஷாட்ல பேசவெச்சோம். யூனிட்ல எல்லாரும் சிரிக்கும்போது கண்டுபிடிச்சுக் கேட்பாங்க. சமாளிச்சுடுவோம். படத்துக்கு யார் வந்தாலும், ஒரு 20 வயசு இளைஞனா நினைச்சுட்டு வந்து பாருங்க. புதுசா எந்த முயற்சியும் பண்ணலை. ஆனா, படம் முழுக்க ஜோக் ஜோக்கா இருக்கும். தவிர, படத்துல கதைனு ஒண்ணு இருந்தா... நீங்களே கண்டுபிடிச்சு எங்களுக்கும் சொல்லுங்க!''

thanx - vikadan



http://kollytalk.com/posters/wp-content/uploads/2012/12/Yaaruda-Mahesh-Songs-Hit-Poster.jpg


நன்றி -விக்டன் 



கலக்கல் ட்ரெய்லர் 




Tuesday, March 01, 2011

நாளைய இயக்குநர் - சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைகள் -3ம் கலக்கல் ரகம்

http://tv.burrp.com/images/s/t/6/t66b2mgg_1093_1_150.jpg
கலைஞர் + கலைஞர் டி வி நிர்வாகம் தெரிஞ்சோ தெரியாமலோ செஞ்ச உருப்படியான ஒரே நல்ல காரியம் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிதான்.27.2. 2011 அன்னைக்கு வானம் மேகமூட்டமா இருந்தது.. என்னடான்னு பார்த்தா பிரதாப் போத்தன் எல்லாரையும் ஊக்குவிக்கும்படியா பேசுனாரு.வழக்கமா “பப்ளிக்கா மட்டம் தட்டும் இவர் பாராட்டுனது ஆச்சரியம். ஆனா பாராட்டறப்பக்கூட அவர் ஏன் சிடு சிடுன்னு இருந்தாரோ தெரியல.. பாவம் அவரோட குடும்பம்...

1. எதையும் தாண்டி புனிதமானது. - அருண்ராஜ்

ரன் லோலா ரன், தமிழில் 12 B  ஆகிய படங்களில் வந்த  KNOT  தான்.ஒரு செகண்ட் லேட்டா கிளம்பி இருந்தா மனிதனின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்பதை அலசும் படம்.

7 நிமிடங்களில் இந்த கதையை இவ்வளவு அழகான திரைக்கதை ஆக்க யாராலயாவது முடியுமா?ன்னு பிரமிப்பா இருக்கு.ஒரு லவ் ஜோடி.. ஆக்சிடண்ட்ல மாட்டி பொண்ணோட உயிர் போயிடுது... ஹாஸ்பிடல்ல அந்த பையனைப்பார்த்து இன்னொரு பொண்ணு லவ் பண்றா...

இன்னொரு டிராக்ல அந்த ஆக்சிடெண்ட் நடக்காம இருந்தா....அதே பொண்ணு அவனை சந்திக்கவே இல்லை...

ஆக்சிடெண்ட் நடந்திருந்தா அவனை லவ் பண்ற பொண்ணு நீ இல்லாம நான் இல்லைங்கறா.. அதே ஆக்சிடெண்ட் நடக்காம இருந்தா அந்த பொண்ணு அவனை சந்திக்கவே இல்லை...

காதல் என்பது சந்திப்புகளில் வருவது..., நிகழ்வுகள் என்பது தற்செயலானதா? விதிப்படியா? போன்ற பிரமாதமான அலசல்களோட காட்சிப்படுத்தும் திறமை இந்த குறும்பட இயக்குநருக்கு கிடைச்சிருக்கு.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCJVT62g6sO5-4ZpYF4aaC81A7zHq47G1DkFwlFeg5lnY7mKv-X0cl1tILaGWWtyQ8Tvc2DvaBcaKiNRE5qz7Kw9B0PWTU3-7maaVIPuPt9bnfmcDaAjOMUL4fnBTy0r0UIgUxKT8wQgA/s400/keerthi-sneha.jpg
இந்தப்படத்தில் கண்ட (கேட்ட) வசனங்கள்

1. THERE IS NO PAST IN LOVE  ( காதல்ல ,முடிஞ்சு போன காதல்னு எதுவுமே கிடையாது)

2. லவ்வுல ரெண்டே வகை தான்.1. நாம லவ் பண்றது நிஜம். 2. கடைசி வரை லவ்வே பண்ணாம இருக்கறது..

3.காதல்ங்கறது  நாம யார் கூட வாழ ஆசைப்படறோம்கறதுல இல்ல...நாம யார் இல்லாம வாழ முடியாதுன்னு நினைக்கறோமோ.. அது தான்.

இந்தப்படத்துக்கான ஒளிப்பதிவு, எடிட்டிங்க் எல்லாம் பக்கா.. இதுல 2 ஹீரோயின். நானும் பல படங்கள்லயும் ,குறும்படங்கள்லயும் பார்த்துட்டேன்.முதல் ஹீரோயினை விட 2வது ஹீரோயின் அழகா ,ஃபிகரா இருக்காங்க.. ஆனா அவங்களுக்கான காட்சிகள் கம்மி ..இது ஏன்? ( ஒரு ஆதங்கத்துல கேக்குறேன்.. ஹி ஹி )
http://vannitube.com/wp-content/uploads//2010/10/2029.jpg
கே பாலச்சந்தர் சொன்ன கமெண்ட் - காலம் தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது,, காதலையும் கூட .

ஹாய் மதன், பிரதாப் போத்தன் 2 பேரும் காமெடி பண்ணுனாங்க.. படம் பிரமாதமான KNOT. இன்னும் அழுத்தமா சொல்லி இருக்கலாம் அப்படின்னு ஒரு கருத்து சொன்னாங்க...ஒரு வேளை ஹீரோவை ஹீரோயின் டச் பண்ணாம விட்டதை சொல்றாங்களோ என்னவோ.. இந்தப்படத்துக்குத்தான் முதல் பரிசு குடுத்திருக்கனும்.ம்ஹூம்... தர்லை.சாகித்ய அகாடமி விருதுல இருந்து எம் பி பதவி வரை சர்ச்சையில் தான் ஓடும்போல.

2. உயிர்  - ராஜேஷ் 

டைட்டிலைப்பார்த்ததும் சாமி டைரக்ட் பண்ணி சங்கீதா அண்ணியா நடிச்ச உயிர் கதைதான் ஞாபகம் வந்தது. நல்ல வேளை. கதை வேற.

ஒரு ஆக்சிடெண்ட் நடக்குது. 4 பேர் மரணத்தின் வாசலில் இருக்காங்க.. அவங்க உடல் ரோட்ல இருக்கு.ஆனா அவங்களோட ஆத்மா வான் லோகத்தில் சென்று விவாதம் செய்யுது.. 4 பேர்ல ஒருத்தருக்கு மட்டும்தான் உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கு.
ஒரு வயசான ஆள் நான் விலகிக்கறேன்னு அந்த கால சக்கரத்துல இருந்து குதிச்சிடறார்.அடுத்து ஒரு பணக்காரி மீதி இருக்கற 2 பேரையும் ஜெ கணக்கா விலை பேசறா.. கோபம் வந்த மெக்கானிக் கேரக்டர் அவளைப்பிடிச்சு தள்ளி விட்டுடறார்.மீதி இருக்கற 2 பேர்ல ஒரு கட்டத்துல மெக்கானிக் கீழே விழுந்துடறார். மிச்சம் இருக்கற ஒருத்தர் மட்டும் உயிர் பிழைக்கறார்.

இதை டைரக்ட் பண்ணுன ராஜேஷ்  அடிப்படைல சுஜாதா ரசிகர் போல.. அதே மாதிரி காட்சிப்படுத்துதல்ல பூர்ணம் விஸ்வநாதன் பாணியை கையாண்டிருக்கார்.மனிதனின் மரணத்துக்குப்பிறகு என்ன நடக்குது? விபத்தில் சிக்கும் மனிதர்களில் சிலர் இறந்துடறாங்க.. சிலர் பிழைச்சிக்கறாங்க.அது என்ன சூட்சுமம்?என்பது தான் கதையின் கரு.

வித்தியாசமான சிந்தனைதான்.ஆனா மியூசிக்கல் சேர் ஃபார்முலாவுல 4 உயிர்களும் விண்வெளில வாதாடுவதில் நம்பகத்தன்மை குறைவு.இந்தப்படத்துக்குத்தான் முதல் பரிசு கிடைச்சது.கே பி, ஹாய் மதன், பிரதாப் 3 பேரும் இந்த படத்தை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தாங்க.
http://lh3.ggpht.com/_xDJKOay4yj4/SEIR-O0wAyI/AAAAAAAAACQ/tHcEJv83Ldg/madhan.jpg
ஆனா என்னைப்பொறுத்தவரைக்கும் ஒரு படம் பரிசு வாங்க 

1. வித்தியாசமான சிந்தனை 2. மனித மனங்களுக்கு ஒரு படிப்பினை 3. அனைவருக்கும் புரியும் வகையில் எளிமை 4.காட்சிப்படுத்துவதில் புத்திசாலித்தனம்

இந்த நான்கும் முக்கியம்னு நினைக்கறேன்.முதல் பாயிண்ட்டும், 4வது பாயிண்ட்டும் உயிர் படத்துல இருந்துது.ஆனா 4 பாயிண்ட்ஸூமே எதையும் தாண்டி புனிதமானது. படத்துல இருந்துது.

3.மறுபடியும் - கார்த்திக் பாலாஜி

சுபா எழுதுன மாலைமதி நாவலான பொன் ஜிதா வின் மையக்கருவை சுட்டு எடுத்த படம்.ஒரு சயிண்ட்டிஸ்ட் ஆராய்ச்சில செத்துப்போன மனிதனை உயிர்ப்பிக்கும் மருந்தை கண்டுபிடிக்கறாரு. ஆக்சிடெண்ட்டில் இறந்து போன ஒரு ஆளை உயிர் கொடுத்து எழுப்பி (!!??) விடறாரு.. செத்துப்போன ஆள் உயிரோட வர்றதைப்பார்த்த அவனது காதலி,குடும்பம் எல்லாருமே பயந்து ஓடறாங்க...அவன் மறுபடி ஒரு ஆக்சிடெண்ட்ல மாட்டி மறுபடியும் செத்துடறான். இப்படி செத்து செத்து விளையாடற காமெடி வேணாம்னு டாக்டர் அந்த ஆராய்ச்சியையே கை விட்டுடறாரு...

ஒரு நல்ல கதை மோசமான திரைக்கதையால் எப்படி நாசமாப்போகும்ங்கறதுக்கு நல்ல உதாரணம் இந்தப்படம்.

கே பி யின் கமெண்ட் - BIRTH IS BEAUTIFUL THING & ALSO DEATH IS BEAUTIFUL THING

இன்னோரு சந்தோஷமான மாற்றம்,இந்தப்படத்து டைரக்டரை மதன் தனியா கூப்பிட்டு சில பர்சனல் அட்வைஸ் பண்ணுனாரு...நிறைகளை உரத்து சொல், குறைகளை மெதுவாக ,தனியாக சொல் என்ற பாலிஸி போல.. குட்.
( நாம் பதிவுலகில் கமெண்ட் போடறப்ப பாசிட்டிவ் கமெண்ட்டை பப்ளிக்கா போட்டுட்டு குறை இருந்தா தனி மெயில்ல சொல்ற மாதிரி..) சிலர் இருக்கங்க மைனஸ் பாயிண்ட்டை கமெண்ட்டா போட்டுட்டு பாராட்டை மெயில் பண்ணுவாங்க..
கலைஞர் டி வில விமர்சனப்போட்டியும் இருக்கு.அடுத்த வாரத்து;ல இருந்து அனுப்பறவங்க அனுப்பலாம். ஞாயிறு காலை 10.30 ட்டூ 11.30.முகவரி

J V MEDIA
194,G3,GOLDEN NEST,3RD MAIN ROAD,SRI SAI NAGAR,VIRUKAMPAAKKAM,CHENNAI -92

டிஸ்கி -1 : இதே பதிவை காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணிடாதீங்க.. நான் ஏற்கனவே அனுப்பிட்டேன் நேத்தே..பரிசு ரூ 8000 மதிப்புள்ள எலக்ட்ரானிக் சாதனம்.

டிஸ்கி 2 : இந்த 3 படங்களை இயக்கிய இயக்குநர்கள் அல்லது அவர்கள் நண்பர்கள் படம் சம்பந்தப்பட்ட ஸ்டில்ஸ்,அல்லது டைரக்டர் ஸ்டில் அனுப்புனா இதே பதிவை எடிட் பண்ணி அட்டாச் பண்ணிடறேன்...



Wednesday, February 09, 2011

நாளைய இயக்குநர் VS சுஜாதா கதைகள் - விமர்சனம்

http://i1.ytimg.com/vi/SXqp9v22yvU/0.jpg 
கலைஞர் டி வி ல வர்ற உருப்படியான புரோகிராம்னா அது நாளைய இயக்குநர்  நிகழ்ச்சிதான்.வளரும் இளம் இயக்குநர்களை ஊக்குவிக்கும்படியா குறும்படங்கள் வாரா வாரம் 4 போட்டு பரிசும் தர்றாங்க.கடந்த 3 வாரங்களா பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளை மையமா வெச்சு குறும்படங்கள் வர்றது வரவேற்கத்தக்க விஷயம்.

1. மழைக்காலங்கள் ( சுபா)  - இயக்கியது அருண்குமார்

ஒரு மனிதனின் வாழ்வில் பல்வேறு கால கட்டங்களில் சந்திக்கும் மழைக்காலத்தை பற்றி கவிதையா சொல்ல முயன்றிருக்கிறார்.கதையா படிக்கறப்ப இருந்த பாதிப்பு குறும்படத்துல வர்லை. பொதுவா இது சகஜமா நடக்கறதுதான்.ஏன்னா எழுத்தாளணின் பேனா எழுதிய விஷயங்களை படிக்கிற வாசகன் தன் கற்பனைக்கேற்றபடி இந்த சம்பவத்தை நினைச்சுப்பாத்துக்கறான்.. அதுவே திரையில் பார்க்கும்போது அவன் நினைச்ச பிம்பத்துக்கும், இயக்குநர் காட்டற பிம்பத்துக்கும் ஒரு இடைவெளி வந்துடுது.அதனாலதான் கதைகள் படங்களாக ஆகும்போது இயக்குநர் இரண்டு மடங்கு எச்சரிக்கையுடன் பணி ஆற்ற வேண்டி இருக்கு.பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அருண்.

2.மஹா என்கிற மாடு   ( சுஜாதா) -இயக்கியது திருப்பூர் ராம்

அமரர் சுஜாதா எழுதுன குதிரை என்ற ஹாஸ்யக்கதையை கையில் எடுத்துக்கிட்ட நண்பர் திருப்பூர் ராம் அடிப்படையில் ஒரு கவிஞர்.கவிதைல கலக்குனவர் காமெடிக்கதைல கை வரிசை காட்டுனது பாராட்டப்பட வேண்டியது.

மூலக்கதைல ஹீரோவை குதிரை ஒண்ணு கடிச்சிடும்.அதனால அவன் சந்திக்கிற பிரச்சனைகளை காமெடியோட சொல்லி இருப்பாரு சுஜாதா.ராம் இந்த கதைல குதிரைக்குப்பதிலா மாடு கடிக்கற மாதிரி கதையை கொண்டு போயிட்டாரு.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdbJ95UT9TueS-YZUZJqLMjHmjSvRwvPQScMPA07KzH1w3qJTU3u4XlJiRVT_wtecPKs-jcN7qn8nmX0vj8a3hhVHi-Svp8CDR5BnrHv_-mDgU0wSHpzhkEC7wA7e-2xRCLClXrDNMUMC6/s1600/Naalaya.jpg
ரசித்த வசனங்கள்

1. டாக்டர்.. என்னை ஒரு மாடு கடிச்சிடுச்சு.. கடிச்சுட்டு முறைச்சுது..

உங்க சதை டேஸ்ட்டா இல்லையோ என்னவோ..?


2. வாடா .. ஜூஸ் கடைக்குப்போலாம்..

சரி.. எனக்கு அருகம்புல் ஜூஸ் குடு...

அடப்பாவி மாடு கடிச்சதுல இருந்து நீ மாடாவே மாறிட்டு வர்றே....

3. சரி,, மாடு கடிச்ச ராசி எப்படி இருக்குதுன்னு போய்பார்ப்போம்..யோவ்.. கிளி ஜோசியரே...எனக்கு ஒரு சீட் எடுத்து ராசிபலன் சொல்லுய்யா..

பரவால்ல .. உங்களுக்கு கோமாதா சீட்டு வந்திருக்கு.

மறுபடியும் மாடா... எஸ்கேப்.....


இந்தக்கதைல மாடு கடிச்சவரோட நண்பனா வர்றவரோட நடிப்பு நல்லாருந்தது.மாடு கடிச்ச நபரோட நடிப்பு ஓவர் ஆக்டிங்க்.இயக்குநர் ஒவ்வொரு சீன்லயும் தடுமாறி இருக்கறது அப்பட்டமா தெரியுது.ஒரு சீன் முடிக்கறப்ப நாம இந்த சீனை பக்காவா எடுத்துட்டோம்னு நம்பிக்கை வரனும். ஆனா ராம் ஏனோ சுஜாதா கதைங்கறதால டென்ஷன் ஆகிட்டார் போல..

ஆனா ஒரு ஆச்சரியம் இந்த படத்துக்குத்தான் முதல் பரிசு கிடைச்சது.

3. குகை ( பி கே பி ) - இயக்கியது மணிவண்ணன்

தொல்பொருள்ராய்ச்சியாளர் தனது நண்பனும், பி ஏவுமான வில்லனை கூட கூட்டிட்டு போறார். போற வழில ஏற்படற வாக்குவாதத்தால வில்லன் ஹீரோவை போட்டுத்தள்ளிடறான்.மறுபடி ரிட்டன் ரயில்ல வர்றப்ப மற்ற ஃபிரண்ட்ஸ் மூலம் தான் கொலை செஞ்சவன் தன்னை நல்ல நண்பனா நினைச்சான் அப்படிங்கற மேட்டர் தெரிஞ்சு குற்ற உணர்ச்சி தாங்காம தற்கொலை பண்ணிக்கறான்.இதுதான் கதை. கதைல பெரிய மைனஸ் நம்பகத்தன்மை கொஞ்சம் கூட இல்லை.

பாராட்ட வேண்டிய ஒரே விஷயம் இந்த 5 நிமிஷ குறும்படத்துக்காக இயக்குநர் ராஜஸ்தான் பாலைவனம் போய் படம் பிடிச்சதுதான்.பொதுவாவே தமிழ் சினி ஃபீல்டுல ஒரு பழக்கம் உண்டு. கதை சரி இல்லைன்னா படம் பூரா ஃபாரீன் லொக்கேஷன்ஸ்ல எடுத்து மைனஸ்ஸை பிளஸ் ஆக்க ட்ரை பண்ணுவாங்க.அதைத்தான் நம்ம மணியும் பண்ணி இருக்கார். ஆனா எடுபடலை.
http://tamil.webdunia.com/entertainment/tvtime/news/0905/07/images/img1090507079_1_1.jpg
4.  அதே முகம் ஆசை முகம் ( சுஜாதா) - இயக்கியது ரங்கநாதன்

2 வெவ்வேறு கால கட்டங்களில் நடக்கும் கதைகள் எந்தப்புள்ளில எப்படி இணையுதுன்னு சொல்ற மேஜிக் ரியலிச கதை.ஒரிஜினல் சிறுகதையின் தலைப்பு ஒரு கதையில் இரு கதைகள்.

சரித்திர காலத்தில் நடக்கும் கதையில் இளவரசியாக நடிப்பவர் சுமார் ஃபிகர்தான். கலக்கலான ஃபிகராக போட்டிருக்கலாம்.( சம்பளம் ஓவரா கேட்டிருப்பாரோ?)அவர் ஷகீலா ரேஞ்சுக்கு லோ கட்  டிரஸ்ஸில் வருவது பாத்திரத்தின் கண்ணியத்தையே குறைத்து விட்டது.அதே போல் லிப்ஸ்டிக்கும் ஓவர் டோஸ்.

2வது கதையில் வரும் இளஞ்சோடிகளின் வாக்குவாதம் அழகு கவிதை.

பளிச் வசன மின்னல்

டியர்.. உன் எண்ணங்கள்ல வண்ணம் (கலர் ) இல்லை.. எல்லாம் பிளாக் & ஒயிட்டாவே இருக்கு.. எனக்கு நீ சரிப்பட்டு வரமாட்டே..

இயக்குநர் ரொம்ப மெனக்கெட்டு பண்ணி இருந்தார்.இதுக்குத்தான் முதல் பரிசு கிடைக்குனு நினைச்சேன்.ஆனா ஹாய் மதன்  2 கதையும் எந்தப்புள்ளில இணையுதுன்னு நீங்க  காட்டவே இல்லைன்னு காரணம் சொன்னார். அவர் சுஜாதாவோட ஒரிஜினல் கதையை படிக்கல போல.

அப்படி காட்ட வேண்டிய அவசியம் இல்ல. ஏன்னா அப்படி ஒரு சம்பவம் நடக்க சான்ஸ் இல்ல. சும்மா பார்வையாளரை திகைப்பில் ஆழ்த்த கணடறியப்பட்ட உத்தி அது.

சரி விடுங்க , ரசனை என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும் தன்மை உடையது.

TASTE DIFFER FROM PERSON TO PERSON.