Showing posts with label காரணம். Show all posts
Showing posts with label காரணம். Show all posts

Wednesday, November 04, 2015

பரு, தழும்பை அழிக்க முடியுமா?-டாக்டர் எல். மகாதேவன்

எனக்கு 16 வயதாகிறது. 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். முகம் முழுக்கத் தடிப்புத் தடிப்பாகப் பரு வந்து பெரும் தொல்லை தருகிறது. அத்துடன், பலரது ஏச்சு பேச்சையும் கேட்க வேண்டியிருக்கிறது. பருவை முழுமையாக அகற்ற முடியாதா?
- சாந்தி, ஈரோடு
முகத்தில் வரும் புள்ளிகளுக்கு Acne என்று பெயர். pimples என்றும் அழைப்பார்கள். இது வெள்ளை நிறத்திலோ, சிவந்தோ காணப்படும். தோல் அடைபட்டு இருக்கும் நிலை இது. இளம் வயதில் பலருக்கும் முகத்தில் பரு வரலாம். முகத்தில் முடி வளரும் இடத்தில் அழிந்த திசுக்களுடன் எண்ணெய்ப் பசையும் சேர்ந்து அடைபட்டுப் போவதால் பரு வருகிறது. முகம், கழுத்து, மார்பு, பின்புறம், தோள்பட்டை போன்ற இடங்களில் இது வரலாம்.
பரு வலியை ஏற்படுத்துவதுடன் மனத் துன்பத்தையும் கொடுக்கும். ஒன்று மறைந்தால் இன்னொன்று வரும். ஒழுங்காகச் சிகிச்சை செய்தால், முழுமையாகக் குறைத்துவிடலாம். முடி நாளங்களின் திறப்புகள் எண்ணெய்க் கசிவு போன்ற பொருளால் அடைக்கப்படும்போது வரும் பரு blackheads எனப்படுகிறது. இந்தப் பருவானது உருண்டு, மேலெழுந்து, சிவந்து உள்ளே சீழுடன் சிறு கட்டிகளைப் போலக் காணப்படும்.
காரணம் என்ன?
முகத்தில் கொழுப்பு அதிகமாக வெளியேறுதல், கிருமித் தொந்தரவு, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, ஒரு சில மருந்துகளால் பரு வரலாம். அதிகக் கொழுப்பு சேர்ந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதும் இதற்குக் காரணம். இளம் வயதினருக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் பருக்கள் வரலாம்.
பரு தானாகப் பழுக்கும் வரை விட்டால் முழுமையாகப் பழுத்ததும் காய்ந்து, அதன் மேலே படலம்போல் ஒட்டிக்கொண்டிருந்த தோல் வெளிப்பட்டுவிடும். வடு இருக்காது.
கிள்ளுவது ஆபத்து
கைகளால் நெருடிக் கிள்ளிவிடப்பட்ட பருவின் சீழ் அகன்றவுடன் தோலில் ஒரு பள்ளம் ஏற்பட்டு வடுவாக, நிலைத்து விடும். அடிக்கடி பருக்களைத் தொடுவதாலும் அழுத்துவதாலும் அவை பெருத்து ஆழமாக ஆகிவிடுவதும் உண்டு.
பருக்களைக் கிள்ளுவது தவறு. நெருடாமல், தொடாமல் இருந்தால் பருக்கள் வடுவின்றித் தாமே மறைந்துவிடும். கிள்ளுவதால் அரைகுறையாகப் பழுத்த பருக் கட்டி உடைந்து, அதனால் சுற்றுப்புற அழற்சி அதிகமாகி முகமெல்லாம் வீங்கி, காய்ச்சல், கடும் வேதனை போன்றவை ஏற்பட்டுப் பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விடுவதும் உண்டு.
காரணம் வும் குளியலும்
இனிப்புப் பண்டங்கள் அதிகமாகச் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளலாம். முக்கியமாக சாக்லேட், பாலேடு இனிப்புகளைத் தவிர்க்கலாம். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை லேசான மலமிளக்கிகளைச் சாப்பிடலாம்.
குளிக்கும்போது உடலைத் தினமும் ஈரிழைத் துண்டால் அழுத்தித் தேய்த்துக் குளிப்பது நல்லது. முகத்துக்கு அதிகம் சோப்பு தேய்ப்பதைக் குறைத்துவிடுவது நல்லது.
பயறு, கடலை, அரிசி போன்ற மாவுகளைத் தேய்த்து எண்ணெய்ப் பிசுக்கை அகற்றலாம். முகத்தையும் ஈரிழைத் துண்டால் தேய்த்துவிடுவதால் வியர்வைக் கோளங்களைச் சுற்றியுள்ள தசைகள் வலுவுற்று துவாரங்கள் அதிகம் பெருக்காமலும், கொழுப்பின் கசிவு, அழுக்கு தங்காமலும் அழற்சி அடையாமலும் பாதுகாக்க முடியும்.
மருந்துகள்
முகம் கபத்தின் ஸ்தானமாகும். அங்குக் கொழுப்பும், ரத்தமும் எண்ணெய்ப் பசையால் சீர்கேடு அடைவதால் பரு வருகிறது. இங்குக் கொழுப்பை மாற்றுகிற, ரத்தத்தைச் சமனம் செய்கின்ற, கசப்பை ஆதாரமாகக் கொண்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆயுர்வேத கண்ணோட்டப்படி மலசுத்தி மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. அதற்குப் பிறகு சாதாரண தோல் நிறத்தை ஏற்படுத்தவும், குழிகளை அடைக்கவும், வர்ணத்தை ஏற்படுத்தவும் மருந்துகள் இணைக்கப்படுகின்றன.
இதை ஆயுர்வேதத்தில் முகதூக்ஷிகா என்று அழைப்பார்கள். முகப்பரு நோயில் பாச்சோற்றிப்பட்டை, கொத்தமல்லி, வசம்பு, கோஷ்டம், ஆலம்மொட்டு ஆகியவற்றை அரைத்துப் பூசுவார்கள். மூக்கு வழி மூலிகை சிகிச்சையான நஸ்யம் செய்வதும் உண்டு. சில நேரங்களில் வேப்பம்பட்டை அரைத்து வாந்திக்குக் கொடுக்கலாம். சரக்கொன்றைப் பொடியை அரைத்துப் பூசினால் உடனடி பலன் கிடைக்கும்.
பருக்கள் மறைய
# துத்தி இலையை அரைத்துப் பருக்கள் மீது தடவிவரப் பருக்கள் மறையும்.
# நன்னாரி வேர் கஷாயத்தால் பருக்கள் தீரும்.
# வெட்டி வேர் நூறு கிராம், சந்தனத் தூள் 25 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள், வேனல் கட்டிகள் மாறும்.
# பாசிப் பருப்புப் பொடியுடன் நெல்லிக்காய் தூள் கலந்து சோப்புக்குப் பதில், தினசரிக் குளிக்கப் பயன்படுத்தினால் பரு மாறி உடல் ஒளிபெறும்.
# சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகிய மூன்றையும் அரைத்துப் பற்று போட, பரு மறையும்.
முகம் பளபளப்பாக: முகத்தில் தழும்புகள் அதிகம் இருந்தால் ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தடவிவரத் தழும்புகள் மறைந்து, முகம் பளபளப்பாக மாறிப் பொலிவு பெறும்.
வசீகரம் பெற: அருகம்புல்லை நன்கு அரைத்து, அத்துடன் சம அளவு பசு நெய் சேர்த்து, 40 நாட்கள்வரை உட்கொண்டால், முக வசீகரம் கிடைக்கும்.
வறண்ட சருமத்துக்கு: உடல் வறண்டு காணப்பட்டால் நெல்லிக்காய், நிலக்கடலை, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை அவ்வப்போதுச் சாப்பிட்டு வரவேண்டும்.

தஹிந்து

Tuesday, August 11, 2015

ரத்தச் சர்க்கரை குறைவது ஏன்? - மருத்துவக்கட்டுரை

ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்று சொல்வதற்குப் பதிலாக இனி, ‘வீட்டுக்கு வீடு ஒரு நீரிழிவு நோயாளி’ என்று சொல்லும் அளவுக்கு உலகில் நீரிழிவு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் ஏழு கோடிப் பேருக்கு நீரிழிவு உள்ளது. தமிழ்நாட்டில் 90 லட்சம் பேர் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள்.
இது குழந்தைகள் முதல் முதியோர்வரை எல்லா வயதினரையும் பாதிக்கிற நோயாகவும் உள்ளது. இந்த நோய்க்குச் சிகிச்சை எடுத்துவருபவர்கள், அவ்வப்போது சந்திக்கிற பிரச்சினைகளில் முக்கியமானது, தாழ்சர்க்கரை மயக்கம் (Hypoglycaemic Coma). இன்சுலினை மட்டுமே நம்பியுள்ள டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குச் சராசரியாக ஆண்டுக்கு ஒருமுறையாவது தாழ்சர்க்கரை ஏற்பட்டுவிடுகிறது.
என்ன காரணம்?
ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு, ரத்தச் சர்க்கரை சாதாரணமாக 120 முதல் 140 மி.கி./ டெ.லி. (ஒரு டெசிலிட்டரில் உள்ள மில்லி கிராம் அளவு) வரை இருக்கும். இவர்களுக்கு இயல்பாகச் சுரக்கிற இன்சுலின், இந்த அளவைச் சரியாக வைத்துக்கொள்கிறது. அப்படியே இன்சுலின் குறைவாக இருந்தாலும், ரத்தத்தில் குளுக்ககான் (glucagon) ஹார்மோன் சுரந்து, ரத்தச் சர்க்கரையை அதிகப்படுத்தி, நிலைமையைச் சரிசெய்துவிடும்.
ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நிலைமை வேறு. இவர்கள் உணவுக் கட்டுப்பாடு, மாத்திரை, இன்சுலின் ஊசி ஆகியவற்றால்தான் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு ரத்தச் சர்க்கரையைச் சரியான கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிக்கும்போது, இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் தவறு ஏற்பட்டாலும், ரத்தச் சர்க்கரை ரொம்பவே குறைந்துவிடும் அல்லது அதிகமாகிவிடும். அப்போது மயக்கம் வரும். இந்த இருவகை மயக்கங்களில் தாழ்சர்க்கரை மயக்கம் மோசமானது. உயிருக்கு ஆபத்தை உடனே வரவழைப்பது.
எது தாழ்சர்க்கரை?
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 70 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும் நிலைமையை ‘தாழ்சர்க்கரை’ (Hypoglycaemia) என்கிறோம். ஒருவருக்கு இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது அவருக்கு மயக்கம் வருகிறது. இதை ‘தாழ்சர்க்கரை மயக்கம்' என்கிறோம். என்றாலும், சொல்லிவைத்ததுபோல் எல்லோருக்கும் இந்த அளவு பொருந்தாது. ஒருவருக்கு ரத்தச் சர்க்கரை 70 மி.கி./டெ.லி. இருந்தாலே மயக்கம் வரலாம். சிலருக்கு 50 மி.கி./டெ.லி. இருக்கும்போதும் மயக்கம் வராமல், எப்போதும்போல் இருக்கலாம். இது அவரவர் உடல் இயல்பைப் பொறுத்தது.
எப்படி வருகிறது?
சாதாரணமாக, நமது மூளை செயல்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 5 - 6 கிராம் குளுக்கோஸ் தேவை. தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்கு குளுக்கோஸ் மூளைக்குச் செல்லவில்லை என்றால், மூளை செயலிழந்துவிடும். வழக்கமாக, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 100 மி.கி./டெ.லி.க்குக் குறையாமல் இருந்தால், மூளைக்குத் தேவையான குளுக்கோஸ் சரியான அளவில் கிடைத்துக்கொண்டிருக்கும்.
ஆனால், ரத்தத்தில் இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது மூளைக்குக் குளுக்கோஸ் கிடைப்பது குறைந்துவிடும். இதன் விளைவாக, மூளை செல்கள், மூளை நரம்புகள் குறிப்பாக, தானியங்கி நரம்புகள் - வேலை செய்யாமல் போகும். மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது, அதை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிற குளுக்ககான் ஹார்மோன் அப்போது செயல்படுவதில்லை. இதனால், உடலானது ரத்தச் சர்க்கரையைத் தானாக அதிகப்படுத்திக்கொள்ள வழி இல்லை. ஆகவேதான், இந்த மயக்கம் ஏற்படுகிறது.
அறிகுறிகள் என்ன?
ஆரம்ப அறிகுறிகள
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 60 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது இந்த அறிகுறிகள் தென்படலாம். இவற்றை முன்னெச்சரிக்கை அறிகுறிகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
உடல் அதிகமாக வியர்ப்பது.
உடல் குளிர்ச்சியாக இருப்பது.
உடல் தளர்ச்சி.
படபடப்பு.
உடல் நடுக்கம்.
அதிகப் பசி.
தலைவலி.
தலைசுற்றல்.
பார்வை குறைவது.
இதயத் துடிப்பு அதிகரிப்பது.
அடுத்த கட்ட அறிகுறிகள்
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 40 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது ஏற்படும் அறிகுறிகள்.
l பேச்சு குழறுதல்.
l மனக் குழப்பம்.
l அரை மயக்கம் (Semiconsciousness).
இறுதி கட்ட அறிகுறிகள்
l வலிப்பு வருவது.
l முழு மயக்கம் (Unconsciousness).
l 'கோமா' (Coma) எனும் ஆழ்நிலை மயக்கம்.
முழு மயக்கம் ஏற்பட்டால்?
முழு மயக்கத்தில் உள்ளவருக்கு மேற்சொன்ன முதலுதவிகளைச் செய்ய முடியாது. அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து, குளுக்கோஸ் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் குளுக்ககான் ஊசி போடப்பட வேண்டும்.
டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாழ்சர்க்கரை மயக்கம் வரலாம். இவர்கள் வீட்டிலேயே குளுக்ககான் ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். டாக்டர் ஆலோசனைப்படி அளவு அறிந்து, இன்சுலின் சிரிஞ்சிலேயே இந்த மருந்தை எடுத்து, வீட்டில் யார் வேண்டுமானாலும் அவருக்குப் போட்டுவிடலாம்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள்!
வாகனம் ஓட்டுபவர்கள், இயந்திரங்களில் வேலை செய்பவர்கள், உயரமான இடங்களில் வேலை செய்பவர்கள், தண்ணீருக்கு அருகில் வேலை செய்பவர்கள் போன்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களுக்குத் தாழ் சர்க்கரை ஏற்பட்டால், விபத்து ஏற்படவும், உயிருக்கு ஆபத்து உண்டாகவும் வாய்ப்பு அதிகம்.
குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைந்தால்?
டைப் 1 நீரிழிவு நோய் குழந்தைகளுக்குத்தான் அதிகம். இவர்களுக்குத் தாழ்சர்க்கரை மயக்கம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைய ஆரம்பித்துவிட்டால், குழந்தையின் நடத்தையில் மாறுதல்கள் தெரியும். அதிகம் பசிக்கும், வியர்க்கும், படபடப்பு வரும், நாக்கு உலரும், உடல் நடுங்கும், பார்வை குறையும். குறிப்பாக, குழந்தையின் பேச்சு குழறும்; குழப்பமான மனநிலையில் இருக்கும். இன்னும் சொல்லப்போனால், குடிபோதையில் நடப்பது போன்ற நிலையில் இருக்கும்; மயக்கம் வரும்; சில வேளைகளில் வலிப்பு வரலாம்.
பொதுவாக, மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாய்வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது; அப்படிக் கொடுத்தால், புரையேறி சுவாசத்தை நிறுத்திவிடும் என்றுதான் சொல்வோம். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை குறைவதன் காரணமாக மயக்கம் ஏற்படும்போது, அவர்களுக்கு எவ்வளவு விரைவில் இனிப்புப் பொருள் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மயக்கம் விரைவில் தெளியும், ஆபத்து குறையும்.
எனவே, நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டால்,உடனே மாவு போலிருக்கும் குளுக்கோஸ் பவுடர், இனிப்பு மாவு போன்றவற்றில் ஒன்றைப் பிசைந்து, நாக்கிலும் பல் ஈறுகளிலும் தடவி, முன்பக்கத் தொண்டையைத் தடவிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, குழந்தை மயக்கத்தில் இருந்தாலும், அந்த இனிப்புப் பொருளை விழுங்கிவிடும். இதனால் மயக்கம் தெளிந்துவிடும். இந்த முதலுதவி தரப்பட வேண்டிய அவசியத்தைப் பள்ளியிலும் சொல்லிவைப்பது நல்லது.
தடுப்பது எப்படி?
l நீரிழிவு உள்ளவர்கள் சரியான நேரத்தில் தேவையான அளவு உணவைச் சாப்பிட வேண்டும்.
l இடைவேளை உணவைத் தவிர்க்கக் கூடாது.
l டாக்டர் சொல்லாமல் மாத்திரை அல்லது இன்சுலின் அளவை மாற்றக்கூடாது.
l இன்சுலினுக்கு ஏற்ற சிரிஞ்சைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, 40 யூனிட் இன்சுலினுக்கு 100 யூனிட் சிரிஞ்சைப் பயன்படுத்தினால், இன்சுலின் அளவு அதிகரித்துவிடும். இது தாழ்சர்க்கரை மயக்கத்தை வரவேற்கும். இதைத் தவிர்க்கவே இந்த எச்சரிக்கை.
l இன்சுலின் ஊசியைப் போட்டுக்கொண்ட உடனே அல்லது நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யக் கூடாது.
l அடிக்கடி இப்படி மயக்கம் வருபவர்கள், வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்யக் கூடாது. சர்க்கரை இல்லாத பால் அருந்திவிட்டு நடைப்பயிற்சி செய்யலாம்.
தாழ்சர்க்கரை ஏன் ஏற்படுகிறது?
l தேவைக்குச் சாப்பிடாமல், குறைந்த அளவில் உணவைச் சாப்பிடுவது.
l இடைவேளை உணவைச் சாப்பிடாமல் இருப்பது.
l தாமதமாகச் சாப்பிடுவது.
l விரதம் இருப்பது.
l நீரிழிவு நோய் மாத்திரைகள் அல்லது இன்சுலின் அளவை அதிகமாக எடுத்துக்கொள்வது.
l அதிக நேரம் உடற்பயிற்சி / நடைப்பயிற்சி செய்வது.
l கடுமையாக உடற்பயிற்சி செய்வது.
l வெறும் வயிற்றில் மது அருந்துவது.
யாருக்கு வருகிறது?
கீழ்க்காணும் நபர்களுக்குத் தாழ்சர்க்கரை ஏற்பட வாய்ப்பு அதிகம்.
l இன்சுலின் ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு.
l டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு.
l சல்ஃபொனைல் யூரியா மாத்திரைகள் சாப்பிடுவோருக்கு.
l முதியோருக்கு (வயது 70-க்கு மேல்)
l மது அருந்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு.
l கல்லீரல் நோய், சிறுநீரக நோய், பிரிட்டில் டயபடிஸ் உள்ளவர்களுக்கு.
இவர்கள் என்ன செய்ய வேண்டும்?
கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:
l ‘தான் ஒரு நீரிழிவு நோயாளி’ எனும் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
l தினமும் சாப்பிடும் மாத்திரை விவரங்கள், அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
l இன்சுலின் எடுத்துக்கொள்வதாக இருந்தால் அதன் அளவு, நேரம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
l 25 கிராம் குளுக்கோஸ் மாவு, சாக்லேட், மிட்டாய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
l குளுக்ககான் ஊசியைக் கைவசம் வைத்துக்கொள்வதும் நல்லதுதான்.
l தாழ்சர்க்கரையின் அறிகுறிகள் தெரிந்த உடனேயே இனிப்புப் பொருளைச் சாப்பிட்டுவிட வேண்டும்.
l வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், அலுவலக நண்பர்கள் போன்றோரிடம் தனக்குத் தாழ்சர்க்கரை வந்தால், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பதைக் கற்றுத் தந்துவிட வேண்டும்.
l குளுக்கோமீட்டரைக் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.
l தனியாக உறங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
l படுக்கை அறையைத் தாழ்ப்பாள் போட்டு உறங்குவதைத் தவிர்ப்பதும் நல்லது.
என்ன முதலுதவி?
தாழ்சர்க்கரையின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடன் வீட்டில் அல்லது அலுவலகத்தில் செய்ய வேண்டிய முதலுதவி:
l குளுக்கோமீட்டர் இருந்தால் உங்கள் ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்து ‘தாழ் சர்க்கரை’ உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படி உறுதியானால், உடனடியாக 20 - 25 கிராம் குளுக்கோஸ் மாவைச் சாப்பிடுங்கள்.
l குளுக்கோஸ் மாவு இல்லாதபோது சாக்லேட், மிட்டாய், ஜீனி, தேன், பழச்சாறு, ஜாம் போன்றவற்றில் ஒன்றைச் சாப்பிடுங்கள்.
l மாத்திரை வடிவில் இருக்கும் குளுக்கோஸ் மாத்திரைகளையும் சாப்பிடலாம்.
l கிடைக்கிற ஏதாவது ஒரு இனிப்புப் பானத்தை அவசரத்துக்குப் பருகலாம்.
l இந்த ஆரம்ப அறிகுறிகள் 10 - 12 நிமிடங்களுக்குள் மறைந்துவிடும். என்றாலும், பிரச்சினை சரியாகிவிட்டது என்று வீட்டில் இருந்து விடக்கூடாது. மேல் சிகிச்சைக்கு டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.
l முக்கியமாக, மாத்திரைகளை மாற்ற வேண்டுமா, உணவு முறையைச் சரி செய்ய வேண்டுமா அல்லது இன்சுலின் அளவை குறைக்க வேண்டுமா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொண்டு சிகிச்சையைத் தொடர வேண்டும்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: [email protected]

நன்றி - த இந்து

Monday, May 11, 2015

உத்தம வில்லன் - சிக்கல்கள் - காரணம் கமலா? லிங்குசாமியா?

சினிமாவைக் கொண்டாடும் ரசிகர் பட்டாளம்தான் அதன் அஸ்திவாரம். ரசிகர்கள் தரும் பணத்தின் மூலமே எத்தனை பெரிய தொழில்நுட்பத்தையும் பிரச்சினைகளையும் உள்வாங்கிச் செரித்து வணிக சினிமா தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறது.
தங்கள் அபிமான நாயகனுக்கும் இயக்குநருக்கும் மன்றம் வைத்துக் கொண்டாடும் ரசிகர்கள் பலர் அவர்களை அப்படியே பின்பற்றவும் தயங்குவதில்லை. தங்கள் அபிமான நாயகனின் படத்தை வெளியான முதல் நாளே திரையரங்கில் பார்த்துவிட வேண்டும் எனத் துடிக்கும் வெறித்தனமான ரசிகர்களின் எண்ணிக்கைதான் சம்பந்தபட்ட நாயகனின் வியாபார எல்லையை விஸ்தரித்துக்கொண்டே செல்கிறது.
நாயகர்களின் ஆன்மப் பலம் என்பதும் அவர்கள் தரும் நிபந்தனையற்ற ஆதரவுதான். அத்தகைய ரசிகர்களையே வில்லன்களாக மாற்றிவிடும் சூழல் துரதிஷ்டவசமானது. வெளியீட்டுத் தேதியை அறிவித்த நாளில் படம் வெளியாகவில்லை என்றால் திரையரங்குவரை சென்று ஏமாற்றதுடன் திரும்பும் ரசிகனின் கோபம் அவனை வில்லன் நிலைக்குக்கூடத் தள்ளிச் செல்லும்.
உத்தம வில்லன் வெளியாக வேண்டிய நாளில் வெளியாகாமல்போனதும் திரையரங்கின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ரசிகர்கள் தங்கள் ஆத்திரத்தைக் காட்டிய சம்பவங்களே இதற்குச் சாட்சி. உத்தம வில்லன் வெளியீட்டில் ரசிகர்களைக் கொதிப்படையச் செய்தது யார் என்று அலசினால் முதலில் படத்தின் தயாரிப்பாளரே வந்து முன்னால் நிற்கிறார் என்கிறார்கள்.
கடைசி நேர உஷார்!
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரிக்கும் போது, சினிமா தொழிலுக்கு வட்டிக்குக் கடன் தருபவர்களை நம்பிக் களமிறங்குகிறார்கள் பல தயாரிப்பாளர்கள். அடுத்து விநியோகஸ்தர்களிடமும் திரையரங்க உரிமையாளர்களிடமும் படத்தின் விநியோகம் மற்றும் திரையிடல் உரிமையைத் தருவதாக முன்பணம் பெறுகிறார்கள். இவற்றோடு பெரிய பட நிறுவனங்களிடம் படத்தின் நெகட்டிவ் உரிமையை முன்னதாகவே விற்றும் பணம் பெறுகிறார்கள்.
இப்படி எல்லாப் படங்களுக்கும் பணத்தைக் கடனாகத் திரட்ட முடியாது. தமிழ்நாடு , மற்ற மாநிலங்கள், வெளிநாடுகள் என எங்கும் வியாபார மதிப்பு கொண்ட முன்னணி நாயகர்கள் நடிக்கும் படம் என்றால் மட்டுமே நம்பிக் கடன் தருகிறார்கள். படம் முடிந்து, தணிக்கைக்குத் தயாராகும்போதே படத்தின் வியாபாரம் களை கட்டத்தொடங்கிவிடும். வியாபாரம் முடித்துப் பணம் கைக்கு வந்ததும் தயாரிப்பாளர் கடன் வாங்கிய அனைவருக்கும் வட்டியுடன் பணத்தைத் திரும்பக் கொடுப்பார்.
அதன் பிறகே படம் வெளியாகும். ஆனால் படத்தின் வியாபாரம் முடிந்தும் கடன் கொடுத்தவர்களுக்குக் கொடுத்த மொத்தப் பணமும் வட்டியுடன் கைக்கு வரவில்லை என்றால் படம் வெளியாவதைச் சட்ட ரீதியாகத் தடுத்துவிடுகிறார்கள். கடன் கொடுத்தவர்கள் படம் வெளியாகும் கடைசி நேரத்தில் உஷாராவதற்குக் காரணம், அப்போது கடனை வசூல் செய்யாவிட்டால் அந்தப் பணம் அவ்வளவுதான் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். எல்லாம் அனுபவம் தந்த பாடம்.
அகலக் கால் வைத்தால்
ஒரு படம் அறிவித்த தேதியில் வெளியாகாத சூழ்நிலை ஏற்படும் என்று தெரிந்தால் அதைத் தீர்க்க முன்னதாகவே தயாரிப்பாளர் களத்தில் இறங்குவார். கடன் கொடுத்தவர்கள், தயாரிப்பாளர் உருவாக்கி வைத்திருக்கும் நல்லெண்ணம், நாணயம் ஆகியவற்றை முன்னிட்டு வட்டியின் ஒருபகுதியை விட்டுக் கொடுப்பார்கள்.
படத்தின் நாயகனும் சம்பளத்தின் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்துப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர முன்னால் நிற்பார். ஆனால் உத்தம வில்லன் விவகாரத்தில் படத்தின் தயாரிப்பாளர் ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரிக்க முனைந்து அகலக் கால் வைத்ததுதான் படம் சிக்கலில் மாட்டிக்கொண்டதன் பின்னணிக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
முதல் பிரதி அடிப்படையில் கமல் உருவாக்கித் தந்த இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமை அவரது சம்பளத்தின் ஒரு பகுதியாக அவர் வசமானதாகத் தெரிகிறது. இதனால் பிரச்சினை வெடித்த நேரத்தில் கமல் ஊரில் இல்லாமல் வெளிநாட்டில் படத்தை விளம்பரப்படுத்தச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.
கமலின் கால்ஷீட்டைப் பெற்றுப் படத்தைத் தயாரித்த லிங்குசாமி, அதன் பலனை அனுபவிக்க முடியாமல் தவித்தார். நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் மத்தியஸ்தம் செய்து படத்தை வெளியிட உதவின. கடைசியில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் லிங்குசாமிக்குக் கைகொடுத்தது.
கடனுக்கான பொறுப்பை ஏற்று படத்தை ரிலீஸ் செய்ய முன்வந்த ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவுக்கு உத்தம வில்லன் படத்தின் முக்கிய உரிமைகளை விற்க வேண்டிய சூழல் உருவானதாம். அப்படியும் கடன்களை அடைக்க முடியாததால் சூர்யாவை வைத்துத் தயாரிக்க இருந்த சதுரங்க வேட்டை 2 படம், சிவகார்த்திகேயன் நடித்து முடித்த ’ ரஜினி முருகன்’ படம் உட்பட மேலும் பல படங்களின் வியாபார உரிமையையும் லிங்குசாமி தாரை வார்க்க வேண்டியிருந்ததாகச் சொல்கிறார்கள்.
வெற்றிகரமான இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக இருந்துவரும் லிங்குசாமியை முதலில் கடன் சுமையில் சிக்க வைத்தது ’அஞ்சான்’ படம் ஏற்படுத்திய நஷ்டம் எனத் தெரிகிறது. யூடிவி வெளியீடு செய்திருக்க வேண்டிய அந்தப் படத்தை அதீத நம்பிக்கையுடன் தாமே வெளியிடுவதாக லிங்குசாமி நிறுவனம் எடுத்த முடிவு பெரும் இழப்பில் முடிந்துவிட்டது என்கிறார்கள்.
சினிமா தொழிலில் ஒரே நாளில் மொத்தக் கடனையும் அடைக்க வழி இல்லை. இதனால் ஒரு கடனை அடைக்க இன்னொரு கடனை வாங்க வேண்டிய நிலைக்கு லிங்குசாமி தள்ளப்பட்டாராம். இன்னொரு பக்கம் உத்தம வில்லன் படத்தை வெளியிடுவதாக ஈராஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டிருந்ததாகவும் ஆனால் கடைசி நேரத்தில் அவர்கள் பின்வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
ரசிகர்களுக்கு முதல் நாள் இழப்பு
உத்தம வில்லன் படம் அறிவித்த நாளில் வெளியாகாமல் மறுநாள் வெளியானதால் அந்த ஒரு நாளில் ஓபனிங் வசூலாகக் கிடைத்திருக்க வேண்டிய எட்டு முதல் பத்துகோடி ரூபாய் கணிசமான இழப்பாகிவிட்டதாகச் சொல்கிறார்கள் வசூல் வட்டாரத்தில். முதல் நாள் இழப்பு தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல, இணையங்கள் வழியே டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்களுக்கும்தான்.
ரசிகர்களின் நஷ்டம் வெறும் பணம் சம்பந்தப்பட்டதல்ல. அதற்கும் மேலே. வேலைக்கு விடுப்பு எடுத்துவிட்டு, வாகனங்களை பார்க்கிங் செய்துவிட்டு திரையரங்கு நோக்கி ஓடி வந்தவர்களுக்குப் படம் வெளியாகாது என்ற செய்தி கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. முதல் நாள் முதல் காட்சி பார்க்க வந்த ரசிகர்களின் ஏமாற்றத்தைத் திரையரங்கின் வாசல்களில் பார்க்க முடிந்தது. டிக்கெட் கட்டணத்தையாவது திரும்பப் பெற்றுச் செல்லலாம் என்று நினைத்தவர்களுக்குப் பணம் திரும்பத் தரப்படவில்லை.
காரணம் பெரும்பாலான ரசிகர்கள் சம்பந்தப்பட்ட திரையரங்கம் நடத்தாத ‘தேர்ட் பார்டி’ இணையதளங்களின் மூலம் முன்பதிவு செய்தவர்கள். இவ்வாறு சினிமா டிக்கெட் விற்பனை செய்துவரும் இணையதளங்கள் டிக்கெட் விலையோடு கமிஷனாக வசூல் செய்யும் கணிசமான கட்டணம் கணக்கில் வராத பணம் என்பதால் அதை திருப்பித் தருவதில்லை என்றும், எஞ்சிய டிக்கெட் கட்டணத்தைத் திரும்பக் கொடுக்க ஒருவாரம் வரை ஆகும் என்றும் தெரிய வந்த காரணத்தால்தான் பல ரசிகர்கள் திரையரங்கின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கோபத்தைக் காட்டினார்கள் என்கின்றன திரையரங்க வட்டாரங்கள்.
எப்படியிருப்பினும் பெரும் முதலீட்டில் தயாராகும் ஒரு படம் சிக்கல்களில் இருக்கிறதென்றால், அது முன்னதாகவே தயாரிப்பாளருக்கும் நாயகனுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. படம் வெளியாகும் கடைசி நேரம் வரை படம் சம்பந்தப்பட்ட முக்கியப் புள்ளிகள் அமைதி காத்தால் உத்தம வில்லனுக்கு ஏற்பட்டதுபோன்ற சங்கடத்தைத் தவிர்க்க முடியாது என்பதுதான் தயாரிப்பாளர் வட்டாரத்தில் பலரது கருத்து.
தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் குறைகளைக் கவனிக்கத் தனித்தனி அமைப்புகள் உள்ளன. மனம் கவர்ந்த நாயகனின் படத்தை முன்பதிவு செய்துவிட்டு ஆவலோடு காண வந்த ரசிகர்களின் ஏமாற்றத்திற்குத்தான் பதில் சொல்ல யாருமில்லை.

  • திரு கமல்ஹாசன் அவர்களின் திரையுலக வாழ்வு மெல்ல மெல்ல சரிய சரிய துவங்கியுள்ளது கண்கூடாக தெரிகிறது. இவரைப்பார்த்து பார்த்து போர் அடித்துவிட்டது. இவரிடம் விஷயம் இல்லை. இவர் இன்னும் நிறைய உலக சினிமாக்களை பார்த்து காபி அடிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
    Points
    4275
    2 days ago ·   (1) ·   (0) ·  reply (1) · 
       
    JayennessJayaraman  Up Voted
    • மம்முட்டியும் மோகன்லாலும் எந்த ஒலக சினிமாவை காப்பி அடிக்கிறார்கள். எளிமையாக அதே சமயத்தில் பிரமாதமாக நடிக்கிறார்கள் இந்த கமல் ஹாசன் தான் தான் பெரிய அப்பாடக்கர் என்றே நடிக்க முயல்கிறார் ரசினி போல ரசிகர்கள் படங்களை குப்பையில் எறிகிறார்கள்.
      a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
    • Jayenness Jayaraman at State Bank of India 
      கமலா ஹாசனை இந்திரன் சந்திரன் என்று கொண்டாடுகிறார்கள். இவர் என்ன சாதித்து விட்டார். மொகல் எ ஆஜம் பிருதிவி ராஜ் கபூர், மாதர் இந்தியா பால்ராஜ் சாஹாணி, அசோக் குமார், என் நமது பாலையா, எம் ஆர் ராதா எம் ஜி ஆர், சிவாஜி ஆகியோர் செய்யாததை இவர் செய்து விட்டாரா. இவர் நடித்த நல்ல படங்கள் எண்ணிக்கை 5 கூட இருக்காது.
      Points
      51275
      2 days ago ·   (0) ·   (1) ·  reply (1) · 
      PonrajA  Down Voted
      • இந்த வரிசையில் ஏன் எம் ஜி ஆரை சேர்க்கிறீர் அவர் வாயால் வடை சுட்ட மனிதர் அவ்வளவே. சினிமா வாயால் வடை சுடை அல்ல என நிருபித்தவர் சிவாஜி மட்டுமே.
        a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Angel  
        முதல் நாள் ,முதல் காட்சி பார்க்க வண்டிய அவசிய என்ன ?, அடுத்த வாரம் பார்த்த என்ன?,
        2 days ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
        JayennessJayaraman  Up Voted
        • Anandan  
          உத்தம வில்லன் படம் பெருத்த நஷ்டத்தை திரை அரங்கு அதிபர்களுக்கும் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும் தயாரிபாலருக்கும் ஏற்படுத்தி விட்டது.
          Points
          5035
          2 days ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
          JayennessJayaraman  Up Voted
          • Anandan  
            உத்தம வில்லன் படம் பெருத்த நஷ்டத்தை திரை அரங்கு அதிபர்களுக்கும் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும் தயாரிபாலருக்கும் ஏற்படுத்தி விட்டது. இனிமேல் கோமாளி கமலை வைத்து படம் எடுத்தால் போண்டி தான்.
            Points
            5035
            2 days ago ·   (0) ·   (4) ·  reply (1) · 
            KumarSurean · Venkat · PonrajA  Down Voted
            • இது போல் தகாத வார்த்தைகளை இங்கே பதிய வேண்டாம் என்று யாராவது இவருக்கு எடுத்து சொல்லுங்களேன்
              2 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • திரு வேங்கடம், யார் தான் சுயநலவாதி இல்லை
              3 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • கமல் மிகவும் கரைகண்ட சினிமாக்காரர். தனக்கு மட்டும் எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்வார். இந்த சுயநலம் தமிழ் சினிமாவுக்கு நல்லதல்ல.
                Points
                445
                3 days ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
                balan · LakshmiPriya · JayennessJayaraman  Up Voted
                • Nizar Ahamed Owner at Travel Update - Sam Exim - Vellinila 
                  அப்படி முதல் காட்சியில் - அதிக விலைகொடுத்து பார்க்கவேண்டும் என்ற ஏமாந்த -வெறிபிடித்த - ரசிகர் கூட்டம் இருக்கும்வரை இவர்கள் கடனுக்கு என்ன...ரசிகனுடைய டிக்கெட் காசில் கூட (அட்வான்ஸ் ஆக வாங்கி) படம் எடுப்பார்கள்...
                  Points
                  1345
                  3 days ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
                  Anandan · RSubramani  Up Voted
                  • சிவாஜி கனேசன், எம்.ஜி.ஆர். போன்ற எவெர்க்ரீன் சூப்பர் ஸ்டார்கள் இருந்த காலத்தில்கூட அவர்கள் நடித்த படங்களை எடுத்த தயாரிப்பாளர்கள் பிறரிடன் கடன் வாங்கி படம் தயாரிக்கும் கேவலமான நிலையில் இருந்ததில்லை. ஏ.வீ.எம்மின் மெய்யப்ப செட்டியார், ஜெமினி வாசன், சுஜாதா ப்ரொடக்ஷன்ஸ் பாலாஜி , தேவர் ப்ரொடக்ஷன்ஸ் போன்ற பெரும் தாயாரிப்பு நிறுவனத்தார் பிறரிடம் கையேந்தாமல் தங்கள் சொந்த பணத்தை முத்லீடு செய்து பல வெற்றிப்படங்களை மக்களுக்குத்தந்த சினிமா உலக ஜையன்ட்ஸ். இக்காலத்தில் யார் யாரோ படம் தயாரிக்கிறார்கள் . கையில் பணம் இல்லாதவ்வர்கள் ஏன் படம் தயாரிக்கவேண்டும்? கடன் வாங்கி நடத்தும் பிசினெஸ் எதுவும் உருப்படாது...
                    Points
                    8135
                    3 days ago ·   (4) ·   (0) ·  reply (1) · 
                    balan · RSubramani · JayennessJayaraman  Up Voted
                    • Anandan  
                      இந்திய திரைஉலகில் எவர் கிரீன் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒருவரே. வேறு எவனும் கிடையாது. சிவாஜி - நடிகர் திலகம், MGR - மக்கள் திலகம். குழப்பி கொள்ள வேண்டாம் நண்பரே !
                      2 days ago ·   (0) ·   (0) ·  reply (5) · 
                      • சுய லாபத்திற்காக ஜெயலிதா ஆட்சிக்கு வந்தால் கடவுளால் கூட தமிழ் நாட்டை காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டு அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகி அவரையே வீரலட்சுமி சூரலக்ஷ்மி என்று வியந்த மாபெரும் முதுகெலும்பு தான் ரசினி.
                        a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                        • சூப்பர் ஸ்டார் என்ற அசிங்கமான வார்த்தை சிவாஜி கணேசனுக்கு முன் வேண்டாம்.
                          a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                          • சிவாஜி கணேஷன் ஒரு நல்ல நடிகராக இருக்க முயன்றார் மற்றவர்களை போல சினிமாவை வைத்து வேறு எதற்கும் ஆசைப்படவில்லை.
                            a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                            • இப்போதெல்லாம் கமல் படமே குப்பை தொட்டியில் ரஜினி படம் குப்பை தொட்டிக்கு வெளியே. சிவாஜி படத்தை இன்னும் நாற்பது வருடம் கழித்தும் பார்க்க முடியும்.
                              a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                              • தங்கள் "அவன் இவன்" என்ற ஏக வசனம் பேசும் அளவிற்கு ரசினி ஒன்றும் கிழித்து விட வில்லை.
                                a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                            • நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான்... முதல் நாள் படம் பார்க்க மிகுந்த ஆவலோடு சென்று ஏமாற்றத்தோடு வெளியே வந்தோம்

                            thanx - the hindu