Showing posts with label கர்நாடகா. Show all posts
Showing posts with label கர்நாடகா. Show all posts

Tuesday, August 07, 2012

கர்நாடகா -சிருங்கேரி - ஸ்ரீசாரதா பீடத்தின் ஆச்சார்யா ஜகத்குரு. பேட்டி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSIB_dMmT8-lncyaG9nk-Nie1ljXBS_1LIw4VMeU96mafdGBSBrGIjBpKEcCDhan49a5mMuc_ZBRJZIpU1WNjQBJlc71B1Tnh3VhPV0PkhSwh4RXxR7lDqp5hq7WrudomvtI9ckSfrGou2/s320/SirungeriNews1.jpg 

ஆச்சார்ய தரிசனம்




தர்ம சிந்தனை தூண்டப்பட வேண்டும்!




பி.சுவாமிநாதன்




கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புண்ணிய பூமி - சிருங்கேரி. மகான் ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்தாபிதம் செய்த புனிதமான ஸ்ரீசாரதா பீடம் இங்கேதான் அமைந்துள்ளது. ஸ்ரீ சரஸ்வதி தேவியே இங்கு சாரதாதேவியாக அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீ ஆதி சங்கரருக்கு சிவபெருமான் தந்தருளிய ஸ்படிக லிங்கத்துக்கு சிருங்கேரி பீடாதிபதிகள் இன்றளவும் பூஜை செய்து வருகின்றனர்.



சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 36ஆவது ஆச்சார்யாளாகத் தற்போது வீற்றிருப்பவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் ஆவார். ‘கல்கி’ இதழின் பிரத்யேகப் பேட்டிக்காக ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளை சென்னையில் சந்தித்தோம். நறுக்குத்தெறித்தாற் போல் தமிழ் பேசுகிறார் ஜகத்குரு.



தங்களுக்கு முந்தைய ஆச்சார்யாளான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரிடம் தாங்கள் பார்த்து வியந்த நிகழ்வு ஏதேனும் சொல்லுங்களேன்...?




ஒன்றா, இரண்டா... அவரிடம் நான் பார்த்து வியந்த நிகழ்வுகளை இங்கே சொல்ல ஆரம்பித்தால், அது ஒரு மாபெரும் தொகுப்பாக ஆகிவிடும். 23 வருடங்கள் அவருடன் இருந்திருக்கிறேன்; பயணித்திருக்கிறேன். பல விஷயங்களை எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவரிடம் நான் என்னென்ன அம்சங்களைக் கண்டு வியந்தேனோ, தெரிந்து கொண்டேனோ - அவற்றை எல்லாம் தொகுத்து ‘அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம்’ என்று எழுதி இருக்கிறேன். அதாவது 108 நாமாக்களில் என் குருநாதரின் சரிதத்தை எளிமையாகக் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த நாமாக்களை எவர் ஒருவர் சொல்லிப் பிரார்த்திக்கும்போதும் என் குருநாதரை பிரத்யட்சமாகத் தரிசிக்கலாம்."



தர்ம சிந்தனை இன்று பெருகி இருக்கிறதா?





தர்மம் செய்ய வேண்டும் என்பது ஓர் உணர்வு. எந்த ஓர் உணர்வும் தூண்டப்பட வேண்டும். தூண்டப்பட்டால்தான் அதற்குப் பலன் இருக்கும். எல்லோருக்கும் பக்தி உணர்வு இருக்கிறது. இந்தப் பக்தி உணர்வானது தூண்டப்பட்டால்தான் பலன். பக்தி உணர்வு தூண்டப்படுவதன் வெளிப்பாடே - சத் சங்கம். வழிபாடு. பஜனை. நாம கோஷம்.



அதுபோல் தர்மம் செய்ய வேண்டும் என்கிற எண்ணமும் ஒவ்வொருவருக்குள்ளும் தூண்டப்பட வேண்டும். உரிய சந்தர்ப்பம் வரும்போது இத்தகைய தர்ம உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் தூண்டப்படும். தர்மம் செய்ய வேண்டும் என்கிற உணர்வு எல்லோருக்கும் இருக்கிறது. அதற்குரிய சந்தர்ப்பம் வர வேண்டும்.



இன்றைக்கு எனது உபன்யாசம் இங்கே இருக்கிறது என்றால், இதைக் கேட்பதற்கு எல்லோரும் வர வேண்டும். ஆச்சார்யாள் உபன்யாசத்தைக் கேட்க எல்லோரும் வர வேண்டும் என்றால், வருவதற்கு உரிய சந்தர்ப்பம் வாக்க வேண்டும் அல்லவா? சந்தர்ப்பம் அமைந்தால்தானே வர முடியும்?



சந்தர்ப்பம் அமைந்தபின் சிரத்தை வரும். உபன்யாசம் கேட்பதற்கே சந்தர்ப்பம் வரவில்லை என்றால், ஜனங்களுக்கு சிரத்தை எப்படி வரும்? எந்த ஒரு நல்ல காரியத்தையும் கேட்பதற்கு - செய்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பத்தைத் தர வேண்டும்."
http://www.ammandharsanam.com/magazine/July2010unicode/images/Thagavlkalangiyam.jpg


நேர்மையாக வாழும்போது அதிக கஷ்டங்கள் வருகின்றனவே? இதுவே பல நேரங்களில் சோர்வைத் தருகின்றதே...?




நேர்மையாக வாழ்ந்து வருபவருக்குத் தான் கஷ்டங்கள் வரும். சோதனைகள் வரும். நியாயம் தோற்பது போல் தெரியும். ‘தோற்றுப் போய் விடுவோமோ’ என்கிற பயம் வரும். ஆனால், கடைசியில் நேர்மை தான் ஜெயிக்கும்.



பொதுவாக, ஆன்மிகத்தில் இருந்தாலே எல்லா கஷ்டங்களையும் பட வேண்டி இருக்கும். கஷ்டப்படுகிறவர்தான் கடைசியில் ஜெயிப்பார். ஸ்ரீராமரின் வாழ்க்கையையும், ஸ்ரீதர்மரின் வாழ்க்கையையும் பார்த்தாலே இது புரியும்.



மூன்று லோகங்களையும் ஆண்டவன் ராவணன். புஷ்பக விமானம் என்ன... படாடோபமான அரண்மனை என்ன... சோகுசாக இருந்தான். ஆனால், ராமபிரானுக்கு என்ன வசதி இருந்தது? அவர் பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா? கடைசியில், ராவணனின் கொட்டம் அடங்கி, சத்தியம் ஜெயித்து, ராமபிரான் சக்கரவர்த்தி ஆனாரே!



எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். கடவுளின் கண்களை நம்மால் மூட முடியாது. இது நினைவில் இருக்க வேண்டும்."



பிரார்த்தனை செய்தால், அது பலித்து விடுமா? ஒருவரின் பிரார்த்தனை பலிக்க என்ன செய்ய வேண்டும்?





பிரார்த்தனை மட்டும் போதாது. பக்தியும் நம்பிக்கையும் வேண்டும். பக்தியும் நம்பிக்கையும் இல்லாமல் செய்யப்படுகின்ற பிரார்த்தனை பலன் தராது

.

இன்றைக்கு எல்லோரிடமும் நம்பிக்கை இருக்கிறது. ‘நிச்சயம் நல்லது நடக்கும்... நடக்க வேண்டும்’ என்று நம்பித்தான் பக்தி உணர்வு மேலோங்க கோயிலுக்கும் பீடங்களுக்கும் வருகிறார்கள். தங்கள் பிரார்த்தனைகளை அங்கே வைத்து அவை நிறைவேறப் பெறுகிறார்கள்."




மதங்களுக்கும் அரசியலுக்கும் தொடர்பு இருக்கிறதா?



அரசியலுக்கு மதம் தேவை இல்லை. ஆனால், தர்மம் அவசியம் தேவை.



தர்மம் என்றால் என்ன? உண்மை. இந்த உண்மையைத்தான் நாம் தர்மம் என்கிறோம். ‘நான் அரசியலுக்கு வந்து விட்டேன். இனிமேல் உண்மை பேசவே மாட்டேன்’ என்று யாராவது சொல்ல முடியுமா? தர்மத்தை மீற முடியுமா?

http://2.bp.blogspot.com/_SQQxuGz7JZ4/S98MlcKzYwI/AAAAAAAABwU/jJCXQOzFpzg/s640/sringeri+mutt9.jpg

மதத்தையும் தர்மத்தையும் சேர்த்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது. மதம் என்பது ஒவ்வொருவரும் தொன்றுதொட்டுப் பின்பற்றி வரும் வழி. ஆனால், தர்மம் என்பது இந்த மதத்துக்கு மட்டும் தான் என்றில்லை. எல்லா மதத்துக்கும் உண்டு. ‘அப்பா- அம்மாவை வைத்துக் கடைசிவரை காப்பாற்ற வேண்டும்’ என்பது இந்து மதத்துக்கு மட்டுமில்லை... உலகில் இருக்கிற எல்லா மதங்களுமே இதைப் போதிக்கின்றன. ‘திருடக் கூடாது... பொய் சொல்லக் கூடாது’ என்பதை இந்து மதம்தான் என்றில்லை... அனைத்து மதங்களுமே போதிக்கின்றன. நாம் கொண்டுள்ள தர்மத்தை எந்த நாளும் கைவிடக் கூடாது."



புன்னகைத்து விடைகொடுக்கிறார் ஜகத்குரு. அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறோம். ஒரு சமஸ்தானத்தை - சன்னிதானத்தைத் தரிசித்த ஆனந்தமும் சிலிர்ப்பும் மேலோங்க... வெளியே வந்தால் - பெரும் ஜனத்திரள் இந்த மஹா ஸ்வாமிகளின் தரிசனத்துக்காகக் காத்திருக்கிறது.



சென்னையில் சாதுர்மாஸ்யம்





சிருங்கேரியின் 35-வது ஆச்சார்யாளாக இருந்த ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரால் அடையாளம் காணப்பட்டு, சிறு வயதிலேயே சந்நியாசம் பெற்றவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்.



ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நாகுலேரு நதிக்கரையில் அமைந்துள்ள அலகுமல்லிபடு கிராமத்தில் 1951-ல் அவதரித்தவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள். பெற்றோர் இவருக்கு வைத்த திருநாமம் - சீதாராம ஆஞ்சநேயலு. பள்ளியில் படித்த காலத்திலிருந்தே சம்ஸ்க்ருத மொழியிலும் கவிதை புனைவதிலும் கரை கண்ட சீதாராம ஆஞ்சநேயலு, சிறந்த சிவ பக்தர்.



அப்போது சீதாராம ஆஞ்சநேயலுக்கு வயது ஒன்பது. சிருங்கேரி பீடத்தில் 35-வது ஆச்சார்யாளான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் ஒரு முறை சீதாராம ஆஞ்சநேயலு படித்து வரும் பள்ளிக்கு விஜயம் செய்தார். சீதாராம ஆஞ்சநேயலுவின் அளவு கடந்த ஞானம், குருதேவரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. சிறிது நேரம் உரையாடிவிட்டு, சிறுவனுக்குப் பொன்னாடை வழங்கி அருள் பாலித்தார்.



அடுத்தடுத்து வந்த ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரின் யாத்திரைகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார் சீதாராம ஆஞ்சநேயலு. இப்படித்தான் குருவுக்கும் சீடனுக்கும் அன்னியோன்னியமும் ஏற்பட்டது.



தன் 23-வது வயதில் (1974-ல்) ‘ஸ்ரீபாரதீ தீர்த்தர்’ எனும் தீக்ஷா நாமத்துடன் - புகழ் பெற்ற சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 36-வது ஆச்சார்யாளாகப் பொறுப்பேற்றுக் கொண்டார் சீதாராம ஆஞ்சநேயலு. 1989-ல் ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகளின் முக்திக்குப் பின் பாரத தேசத்தின் ஒப்பற்ற குருவாக இவர் அமைந்து உலா வருவது நாம் பெற்ற பேறு. 1960-ஆம் ஆண்டு சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் சென்னை தி.நகரில் சாதுர்மாஸ்ய விரதத்தை (சந்நியாசிகள் அனுஷ்டிக்கும் விரதம்) மேற்கொண்டார். அவருக்கு அடுத்த சிருங்கேரி பீடாதிபதியான ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் தற்போது சென்னை மயிலாப்பூரில் ‘சுதர்மா’ இல்லத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்து வருகிறார்.


http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_448861.jpgA



நன்றி - கல்கி, சீதாரவி, அமிர்தம் சூர்யா, கதிர்பாரதி, புலவர் தருமி

Wednesday, February 08, 2012

சீன் படம் பார்த்த மினிஸ்டர் - கில்மா செமஸ்டர் - காமெடி கும்மி

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருந்த போது, கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி, தன் மொபைல்போனில், ஆபாச படம் பார்த்து ரசித்து கொண்டிருந்தார். அவர் அருகிலிருந்த, பெண்கள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீலும் உற்சாகமாகப் பார்த்தார்.


சி.பி - யோவ், அது கர்நாடகா சட்டசபையா? ஈரோடு நடராசா தியேட்டரா? ந்கொய்யால.. மக்கள் வரிப்பணத்துல அங்கே போய் உக்காந்துட்டு பிட்டுப்படம் பார்த்துட்டு இருந்திருக்கானுங்க ராஸ்கல்ஸ்.. 

கர்நாடக சட்டசபை கூட்டத்தில், நேற்று மதியம்,எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, "பா.ஜ., ஆட்சியில், தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது' என, ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். முதல்வர் சதானந்த கவுடா, அமைச்சர்கள், உறுப்பினர்கள் சபையில் இருந்தனர். சித்தராமையா பேச்சை, முதல்வர் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, அமைச்சர் கோவிந்த் கார்ஜோல், "காங்கிரஸ் ஆட்சியின் போதும், தலித்துகள் தாக்கப்பட்டனர்,' என்று தெரிவித்தார்.


சி.பி - அண்ணன் நம்ம கலைஞர் மாதிரிதான், மின்வெட்டு அதிகமா இருக்குன்னா அதுக்கு பதில் தர மாட்டார்.. எங்கெங்கே எல்லாம் மின் வெட்டு இருக்குன்னு புள்ளி விபரம் குடுத்து சமாளிப்பார்.. 

இந்த விவாதத்தை கவனிக்காமல், கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி, தன் மொபைல் போனை ஆன் செய்து, அதில் ஆபாச படத்தை ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தார். இதை அருகிலிருந்த பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீலும் ரசித்துக் கொண்டிருந்தார். இதை அங்கிருந்த கன்னட "டிவி' சேனல்கள் அனைத்தும் படம் பிடித்து, உடனடியாக ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.


சி.பி - ம்க்கும், இந்த ஆள் தான் பெண்கள் நலத்துறை அமைச்சரா? வெளங்கிடும்.. நாடு.. 

முன்னாள் முதல்வர் குமாரசாமி குறிப்பிடுகையில், "அமைச்சர் ஆபாச படம் பார்த்த சம்பவம், சட்டசபை வரலாற்றில் கறுப்பு தினமாகும்.


சி.பி - கறுப்பு தினம் உங்களுக்கு.. நீல தினம் அவங்களுக்கு ஹி ஹி 

அமைச்சர் லட்சுமண் சவதி, அமைச்சராகத் தொடர அருகதையில்லை. இந்த ஒழுக்கமற்ற செயலுக்கு பா.ஜ., தலைவர்கள் என்ன சொல்லப்போகின்றனர். என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்' என்றார்.


சி.பி - என்ன நடவடிக்கை எடுத்திடப்போறாங்க? இனிமே இப்படி பப்ளிக்கா பிட்டுப்படம் பார்க்க மாட்டேன், முக்காட்டை போட்டுட்டு வீட்லயே பார்த்துடறேன்னு பம்புவான்.. 

 பிட்டுப்படம் பார்த்த அட்டுப்பசங்க

கர்நாடகா சட்டசபையில் ஆபாச படம் பார்த்த பாஜக அமைச்சர்கள்.............!! #Karnataka #BJP #MLA's

கர்நாடக அமைச்சர் லட்சுமண் சவதி குறிப்பிடுகையில், "மொபைல் போனில் ஆபாச படம் எதுவும் பார்க்கவில்லை. அதை பார்த்ததில் தவறு எதுவுமில்லை. என்னிடம் இருந்தது என் மொபைல் போனல்ல. நான் பார்த்தது, டாக்குமெண்ட்ரி படம். இதை ரசித்துப் பார்த்து கொண்டிருந்தேன் என்று கூறுவது சரியல்ல. அமைச்சர் கிருஷ்ண பலேமர், இந்த மொபைல் போனை என்னிடம் கொடுத்து, இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதை பாருங்கள் என்று என்னிடம் கொடுத்தார். கிருஷ்ண பலேமருக்கு யாரோ அவரது மொபைல் போனுக்கு "எம்.எம்.எஸ்.,' அனுப்பியுள்ளனர்' என்றார்.


சி.பி - பார்த்தது பிட்டுப்படம், இதுல என் செல் ஃபோன் இல்ல, அவருதுன்னு ஒரு சப்பைக்கட்டு வேற.. இது எப்படி இருக்குன்னா கொலை செஞ்சு கையும் களவுமா மாட்டிக்கிட்டவன் குத்துன கத்தி என்னுது இல்லை, கடைக்காரனுதுன்னு சொல்ற மாதிரி.. 

இச் சம்பவத்தைக் கண்டித்து, கர்நாடக சட்டசபையில் இன்று, எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். 

 மக்கள் கருத்து 

1. அந்த மான் - மனுநீதி பாண்டியன் -அரசியல் வாதிகள் அதிகாரம் இருக்கும் தெம்பில், பயமில்லாமல் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் நியாய படுத்துகின்றனர், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தக்க தண்டனை கிடைத்தால் யாரும் இப்படி செய்ய மாட்டார்கள். பாரதிய ஜனதா , காங்கிரஸ் இந்த இரண்டும் சேர்ந்து நாட்டை எங்கு கொண்டு போய் விட போறார்களோ தெரியவில்லை, அதற்குள் மக்களாகிய நாம் அனைவரும் விழித்து கொள்ள வேண்டும்.

சி.பி - ம்க்கும் தூங்குனாத்தானே விழிக்க, இன்னைல இருந்து 8 மணீ நேரம் கரண்ட் இருக்காது,, பெக்கே பேக்கேன்னு முழிச்சுட்டே இருக்க வேண்டியதுதான்


2. ஆரூரன், சென்னை - சட்டசபை உறுப்பினர்களை அவ்வபொழுது குஷிப் படுத்த "சீர் கேர்ள்ஸ்களை" ஆட விடலாமே. அரசவை நடனங்கள் நம் நாட்டுப் பாரம்பரியம்தானே? இருவர் மட்டும் ரகசியமாக படம் பார்த்தால்தானே தவறு?

சி.பி - அது சட்ட சபையா? செட்டப் சபையா? விட்டா தொழில் நடத்த சொல்வாரு போல.. 

3. மதுரை விருமாண்டி - தொலைபேசி நிறுவனத்தில் இருந்து மாண்புமிகு அமைச்சரின் தொலைபேசியிலும், தொலைபேசி அலைவரிசையிலும் டெக்னிகல் கோளாறு ஏற்ப்பட்டதற்கு உரிய சான்றுகளும், மாண்புமிகு சபாநாயகரிடமும், மாண்புமிகு முதலமைச்சரிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன...பொய் வீடியோ எடுத்து பிரசுரித்த சானல் மீது, மாண்புமிகு அமைச்சரின் அலுவல்களில் அத்து மீறி நுழைந்ததாக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க மாண்புமிகு சபாநாயகர், மாண்புமிகு முதல்வரின் அனுமதி கேட்டுள்ளார்... மாண்புமிகு முதல்வர் இதை எதிர்க்கட்சிகளின் சதியாக இருக்கும் என்று நம்புகிறார்...கேஸ் குளோஸ்டு..

சி.பி - அது சரி.. ஐடியா எடுத்துக்குடுக்கறீங்களா? அதுதான் நடக்கப்போகுது ஹூம்.. 

4. ராஜா , யுனைட்டட் கிங்க்டம் - அப்புடி போடு போடு போடு போடு.. இப்படி போடு மொபைலிலே..

சி.பி - சிச்சுவேஷன் சாங்க்?ஒரு மந்திரி இப்போ வந்தார் கில்மாவா.. அவர் சீன் படம் பார்த்தார் செல் ஃபோனில் ஒரே ஜொள்மாவா..

5. அருள், சிங்கப்பூர் - ரொம்ப போரியடிக்குதுன்னு நாளைக்கு ரெண்டு குட்டிகள தள்ளிகிட்டு வந்துடாம. மானம்கெட்ட மக்கள் நல அக்கறை இல்லாத அமைச்சர்கள். இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யனுமின்னு தெரியலப்பா

சி.பி - சொல்ல முடியாது, மாறு வேஷம் போட்டு கூட்டிட்டு வந்தாலும் வந்துடுவாங்க.. 

6. கோவிந்த் - டெல்லி - காங்கிரஸ் N D திவாரி ஆந்திரா ராஜ் பவனுக்குள் பலான பெண்களை கூட்டி கொண்டு போய் கூத்தடித்தது வீடியோ ஆதரங்களுடன் வந்தது. அய்யா இங்க பிஜேபி யை சேர்ந்த இரண்டு வெத்துவேட்டுகள் செய்த தவறை யாரும் சரி என்று சொல்ல வில்லை. இவர்களை மிக கடுமையான தண்டனைக்கு உள்ளாக வேண்டும் என்பது தான் என் வாதம். அதே நேரத்தில் 2G , 4G அதில் 1 76 ஆயிரம் கோடி , 2 இலட்சம் கோடி என்று தவறு செய்து நாட்டை சுரண்டும் காங்கிரஸ் முன்னர் இந்த இரண்டு பேரும் எம்மாத்திரம். அவர்கள் சபைக்குள் இருந்து கொண்டு படம் பார்த்தது தான் தவறு. அதற்காகவே அவர்களை தண்டிக்க வேண்டும். ஆனால் இந்த செய்கையினால் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் குறைந்த பட்சம் நஷ்டம் ஏற்படவில்லை என்றாவது சொல்லி மனதை தேற்றி கொள்ள வேண்டும்....

சி.பி - பி ஜே பி.னா  பயங்கர ஜொள்ளு பார்ட்டின்னு ப்ரூஃப் பண்ணிட்டாங்க..

 இனி ஜோக்ஸ் 

1. ஜட்ஜ் - செல்ஃபோன்ல சீன் படம் பார்த்தீங்களாமே? ஏன்? 


எம் பி - என் லேப்டாப் ரிப்பேர் யுவர் ஆனர்

----------------------------------

2. ஜெ - இனி மின்வெட்டு தினசரி 8 மணி நேரம்..

மக்கள் - பிரமாதம் மேடம்,கலைஞரை விட நீங்க பல மடங்கு டேலண்ட் தான்

-----------------------------

3. இன்று முதல் காலை 6-9 மதியம் 12-3 மாலை 6-7 இரவு 8-9 அறிவிக்கப்பட்ட மின்வெட்டு

தமிழ் நாடு மின் வாரியம்  சினிமா தியேட்டர் மாதிரி ஆகிப்போச்சு.. 

-----------------------------