Showing posts with label ஜி.வி.பிரகாஷ். Show all posts
Showing posts with label ஜி.வி.பிரகாஷ். Show all posts

Thursday, March 12, 2015

ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை - திரை விமர்சனம் ( மா தோ ம)

படம் வெளியான சூட்டோடு, வீட்டிலேயே அமர்ந்து நமக்கு விருப்பமான நேரத்தில், சூழலில் படத்தைப் பார்க்கும் வாய்ப்பை சேரனின் சி டூ ஹெச் திட்டம் ஏற்படுத்தித் தந்துள்ளது. முதல் வெளியீடான ‘ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை ஃபார்வேர்டு, ரீவைண்ட் செய்து நம் விருப்பப்படி பார்க்கும்போது நமது வாழ்க்கையை நாமே திருப்பிப் பார்த் துக்கொள்வது போன்ற அனுபவம் ஏற்படு கிறது.
வாழ்க்கையைப் பெரிய விளையாட்டு மைதானமாக்கிக் களிக்கும் ஓர் இளைஞனின் பயணத்தில் நடக்கும் ஒரு சம்பவம் அவனது வாழ்க்கையை ஒரு பள்ளிக்கூடம் ஆக்குகிறது. அரட்டை, ஆர்ப்பாட்டம் எனக் கழித்த அவன் ஒவ்வொரு மணித்துளியையும் அர்த்தம் உள்ளதாக உணர்கிறான். குடும்பத்துக்காகவும் சுற்றியுள்ளவர்களுக்காகவும் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறான். இந்த மாற்றத்துக்குப் பின்னாலுள்ள காரணம் என்ன? என்பதை முன்னும் பின்னுமாக நகர்ந்து சொல்கிறது சேரனின் ஜே.கே. எனும் நண்பனின் கதை.
ஆட்டம் பாட்டம் கும்மாளம் எனத் திரியும் ஜே.கே. என்னும் ஜெயகுமாரின் (சர்வானந்த்) வாழ்க்கை சட்டென மாறுகிறது. பொறுப்பில்லாத மூத்த பிள்ளையாக இருந்த சர்வானந்த் தங்கைகளுக்காக, தம்பிக்காக, அப்பா, அம்மாவுக்காக ஓடுகிறார். கிடைக்கும் வாய்ப்புகளையும் சமயோசித புத்தியையும் சரியாகப் பயன்படுத்தி மேலே வருகிறார். ஏழு நண்பர்களின் துணையுடன் அவன் தொழில் வெற்றி நடைபோடுகிறது. இடையில் வரும் கடுமையான சவால்களைச் சாமர்த்தியமாக முறியடிக்கிறார். தன் கடமைகள் அனைத்தையும் முடித்துவிட்டு வெளிநாடுச் சுற்றுலாவுக்குக் கிளம்புகிறார். அந்தச் சுற்றுலாவுக்குப் பின் ஒரு ரகசியம் இருக்கிறது.
ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகி னாலே அது காதலாகவோ வெறும் மோகமாகவோ முடிந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதும் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சிறிதும் தயக்கமின்றி வீட்டில் அமர்ந்து பார்க்கத்தக்க விதத்தில் கதையும் காட்சியமைப்புகளும் வசனங்களும் உள்ளன.
இருப்பினும், தொடக்கத்திலிருந்து விறுவிறுப்பாக நகரும் கதை, பிற்பாதியில் தொய்வடைகிறது. அப்பா, மகன், மகள் ஆகியோர்களின் உறவுச் சித்தரிப்பு டிவி சீரியல் தன்மையுடன் வெளிப்பட்டுள்ளது.
தெளிவாகவே நடிக்கும் சர்வானந்த், தமிழ் உச்சரிப்பை மேம்படுத்திக்கொண்டால் நல்லது. நித்யா மேனனின் நடிப்பு மனதைக் கவர்கிறது. பிரகாஷ் ராஜ் வழக்கம்போலவே தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் தன் பாத்திரத்தைக் கையாள்கிறார். கலகலப்புக்காக சந்தானம்... ஆனால் அவர் வரும் காட்சிகள் வசன ஜாலங்களாக மட்டுமே கடந்து போகின்றன.
சித்தார்த்தின் கேமரா உறுத்தலில்லாமல் படத்துடன் இணைந்து பயணிக்கிறது. விபினின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கவில்லை. ஜி.வி. பிரகாஷ்குமாரின் பாடல்களும் சுமார்தான்.
நேர்மையுடனும் திறமையுடனும் போராடினால் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையைப் பெருமளவில் சுவாரஸ்யமாக விதைத்திருக்கிறார் இயக்குநர் சேரன். அதற்காகவே வரவேற்கலாம்


நன்றி  - த இந்து


டிஸ்கி = (  மா தோ  ம)= மாற்றான்  தோட்டத்து  மல்லிகை

தியேட்டரில்  மட்டுமே  சினிமா  பார்க்க  வேண்டும்  எனும்  கொள்கை  முடிவுடன்  இருப்பதால் இந்தப்படம்  பார்க்கவில்லை. எதிர்காலத்தில்  பல  படங்கள்  ரிலீஸ்  ஆனால்  என்  கொள்கை  மாறலாம்,. நான்  டாக்டர்  ராம்தாஸ் , கலைஞர்  போல . அப்பப்ப  என் பேச்சை  என் கொள்கையை  காத்துல  பறக்க விட்ருவேன் , ஹிஹி

Monday, March 09, 2015

கொம்பன் - பருத்தி வீரன் பாகம் 2 ? - வசூல் இளவல் கார்த்தி பேட்டி

'பருத்தி வீரன்' பாத்திரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது 'கொம்பன்' பாத்திரம் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்தி தெரிவித்தார்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'கொம்பன்'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று காலை நடைபெற்றது. அச்சந்திப்பில் கார்த்தி பேசியது:
"'மெட்ராஸ்' படத்திற்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது. அது மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. கிராமம் சார்ந்த படங்களை தவிர்த்துக் கொண்டே வந்தேன். 'பருத்தி வீரன்' மாதிரியே இருக்கிறது என்று சொல்லுவார்கள் என பயந்தேன்.
இயக்குநர் முத்தையா என்னிடம் 'கொம்பன்' கதையைக் கூறினார். மாமனாருக்கும் மருமகனுக்கு இடையே நடக்கும் கதை. கல்யாணத்திற்கு முன்பு நடக்கும் விஷயங்களை நாம் நிறைய படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், கல்யாணத்திற்கு பிறகு நடக்கும் விஷயங்களை வைத்து ஒரு கதை என்று சொல்லும் போது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
ராஜ்கிரண், கோவை சரளா, லட்சுமி மேனன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் என ஒன்று கூடும் போது படத்திற்கு வேறு ஒரு கலர் கிடைத்திருக்கிறது. மறுபடியும் மதுரையா என்று கேட்டேன், இல்லை ராமநாதபுரத்தில் இருக்கும் பழக்க வழக்கங்கள் வேறு என்று இயக்குநர் கூறினார்.
இப்படத்தில் தண்ணியடிக்காத ஒரு பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். 'கொம்பன்' என்ற பாத்திரம் 'பருத்தி வீரன்'-ல் இருந்து வேறு மாதிரி இருந்தது. அதற்குள் ஒரு ஆழமான எமோஷன் இருந்தது. ராஜ்கிரண் சார் கூட நடித்தது ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது.
இப்படத்தில் இறுதி காட்சியில் தான், நான் ராஜ்கிரணை 'மாமா' என்று அழைப்பேன். அக்காட்சியை நான் டப்பிங்கில் பார்க்கும் போது, ராஜ்கிரண் சார் நடிப்பில் அற்புதமாக பண்ணியிருக்கிறார். வில்லன், சண்டை என கமர்ஷியல் விஷயங்கள் அனைத்துமே கிராமத்துக்குள்ளயே இருக்கும்.
ஒவ்வொரு காட்சியும் நடித்து முடித்தவுடன், இயக்குநரிடம் 'பருத்தி வீரன்' சாயல் தெரிந்ததா என்று கேட்டு கேட்டு நடித்திருக்கிறேன். 'பருத்தி வீரன்' படத்தில் வீட்டுக்குள்ளேயே இல்லாத ஒரு பாத்திரம், 'கொம்பன்' படம் அப்படியே அதற்கு எதிர்மறையாக இருக்கும்." என்று தெரிவித்தார் கார்த்தி


நன்றி  - த இந்து

Thursday, March 28, 2013

தலைவா துப்பாக்கியை தாண்டிடுமா? - இயக்குநர் விஜய் பேட்டி

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQDLezW28cuvlB5MXx6q9XysBBYAdhBxZU3iI8cfxUDLJXe43-2 
 
"குட் பேபி அமலா பால்!”
 
 
எம். குணா
 
முதன்முதலா காலேஜ் கட் அடிச்சுட்டுப் பார்த்த படம் 'காதலுக்கு மரியாதை’. என் பேரும் விஜய்ங்கிறதால அப்ப அந்தப் படத்துல விஜய் போட்டிருந்த மாதிரியே டி-ஷர்ட், கூலர்ஸ் போட்டுக்கிட்டு அலம்பல் பண்ணுவேன். இப்போ அதே விஜயை வெச்சு, 'தலைவா’ படம் இயக்குறேன். காலம் ரொம்ப வேகமா ஓடுது!'' - சிலிர்ப்பும் சிரிப்புமாகப் பேசத் தொடங்கினார் விஜய்... இயக்குநர் விஜய்!
 
 
 
''இயக்குநர் விஜய், நடிகர் விஜயை எப்படிப் பிடிச்சார்?''  


''தனிப்பட்ட முறையில் அவர் எனக்குப் பழக்கம் இல்லை. முன்னாடி 'மதராசபட்டினம்’ பார்த்துட்டு வாழ்த்தினப்போ, 'நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’னு சொன்னார். இப்போ சமீபத்தில் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் 'விஜய் கால்ஷீட் என்கிட்ட இருக்கு. நீங்க போய் அவருக்குக் கதை சொல்லுங்க’னு சொன்னார்.


அவரைப் போய்ப் பார்த்தேன். 'தலைவன்கிற பட்டத்தை நாம தேடிப் போகக் கூடாது. அது தானா நம்மளைத் தேடி வரணும்’னு ஒன் லைன் சொல்லிட்டுக் கதை சொன்னேன். கால் மணி நேரத்துல சிரிச்சுட்டே கைகொடுத்து கன்ஃபர்ம் செய்தார்!''




''நீங்க இயக்கின 'கிரீடம்’, 'மதராசபட்டினம்’, 'தெய்வத்திருமகள்’ எல்லாமே சோகமான முடிவுகொண்ட க்ளாஸிக் வரிசைப் படங்கள். ஆனா, 'துப்பாக்கி’ ஹிட்டுக்கு அப்புறம் அதைவிட அதிரடியா எதிர்பார்ப் பாங்களே விஜய் ரசிகர்கள்?!''   


''நீங்க குறிப்பிடும் எல்லாப் படங்களிலும் க்ளைமாக்ஸ் சோகமா இருக்கும். ஆனா, படம் முழுக்க ட்ராவல் செய்யும் கேரக்டரின் தேடலுக்கு அதுதான் தேவை. 'தலைவா’ சீனுக்கு சீன் ஆர்.டி.எக்ஸ். பட்டாசு வெடிக்கும் படம். இன்னைக்கு 'தலைவர்’னு அடையாளப் படுத்தப்படுற எல்லாரும் அந்த இடத்துக்கு எப்படி வந்தாங்கனு ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கும். அப்படியொரு ஃப்ளாஷ்பேக்தான் படம். 'துப்பாக்கி’ சக்சஸுக்குப் பிறகான எதிர்பார்ப்பு நிச்சயம் பூர்த்தியாகும் அளவுக்குத் திரைக்கதை பிடிச்சிருக்கோம். ஸ்டைல், டான்ஸ் போக சின்னச் சின்ன நுணுக்கமான எக்ஸ்பிரஷன்களுக்குக்கூட ரொம்ப மெனக்கெட்டு நடிச்சிருக்கார் விஜய்!''



''சத்யராஜுக்குப் படத்தில் என்ன ரோல்?'' 


''மிக முக்கியமான ரோல். அது விஜயின் காட்ஃபாதரா இல்லை வில்லானாங்கிறது சஸ்பென்ஸ். நான் டவுசர் போட்ட காலத்துல இருந்து இப்போ வரை அவரோட உயரத்தையும் நடிப்பையும் அண்ணாந்து பார்க்குறவன். ஆனா, அவர்கூட வேலை பார்க்கும்போது சினிமா மீது அவர் வெச்சிருக்கிற டெடிகேஷன் பார்த்து ஆச்சர்யமா இருக்கு. மும்பையில் 'தலைவா’ ஷூட்டிங் நடந்துட்டு இருந்தப்போ, பால் தாக்கரே உடம்பு சரியில்லாம மருத்துவமனையில் இருந்தார்.


 நான் ஸ்பாட்ல இல்லாதப்போ, சிவசேனா கட்சிக்காரங்க வந்து சத்யராஜ் சார்கிட்ட படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லியிருக்காங்க. 'நோ... நோ... டைரக்டர் வந்து பேக்கப் சொல்லாம நான் இடத்தைவிட்டு நகர மாட்டேன்’னு சொல்லி அவங்களை தில்லா எதிர்த்திருக்கார். அந்த அர்ப்பணிப்பும் துணிச்சலும் எங்களைப் போன்ற ஜூனியர்கள் எல்லாரும் கத்துக்க வேண்டிய பாடம்!''


'' 'என்கிட்ட நூறு பேருக்கு மேல உதவி இயக்குநர்களா வேலை பார்த்திருந்தாலும் விஜயை என் அசிஸ்டென்ட்னு சொல்லிக்கிறதில் பெருமைப்படுறேன்’னு இயக்குநர் ப்ரியதர்ஷன் சொல்லியிருக்காரே?'' 



''ப்ரியதர்ஷன் சார் என் கலைக் கடவுள். என்னைப் பத்தி அவர் அப்படிச் சொல்றதுக்கு நான் ரொம்பக் கொடுத்துவெச்சிருக்கணும். இன்னிக்கு நான் இருக்கும் இடத்துக்குக் காரணம் அவர் கத்துக்கொடுத்த பாடம்தான். எனக்கு ஒரு ஆசை இருக்கு. இதுவரை ப்ரியதர்ஷன் சார் 92 படம் இயக்கியிருக்கார். அவரோட 100-வது படத்துல மறுபடி நான் அவர்கிட்ட அசிஸ்டென்ட்டா வேலை பார்க்கணும்!''


''உங்களுக்கும் அமலா பாலுக்கும் நத்திங் நத்திங்னு சொல்றீங்க. ஆனா, 'தலைவா’வில் அவர் எப்படி ஹீரோயின் ஆனார்?'' 


''இளைமைத் துடிப்பும் பெர்ஃபார்மென்ஸ் நடிப்பும் காட்ட வேண்டிய ஹீரோயின் கதைக்குத் தேவை. சோனம் கபூர், தீபிகா படுகோன் எல்லாம் கேட்டுப் பார்த்தோம். உடனடியா கால்ஷீட் இல்லைனு சொன்னாங்க. இடையில ஒரு நாள் விஜய் சார், 'மோகன்லால், அமலா பால் நடிச்ச 'ரன் பேபி ரன்’ படம் பார்த்தேன். அமலா நடிப்பு நல்லா இருந்துச்சு. நம்ம படத்துக்குப் பொருத்தமா இருப்பாங்கனு தோணுது’னு சொன்னார். 'நானும் படம் பார்த்தேன். உங்களுக்கு ஓ.கே-ன்னா எனக்கும் ஓ.கே’னு சொன்னேன். இப்படித்தான் அமலா பால் புராஜெக்ட்டுக்குள் வந்தாங்க. அந்த நிமிஷத்துல இருந்து இந்தக் கேள்வியையும் நான் எதிர்பார்த்தேன்!''


''சரி... உங்க கல்யாணம் எப்போ? காதல் கல்யாணமா... நிச்சயிக்கப்பட்ட திருமணமா?'' 


''நான், நீரவ் ஷா, ஜி.வி.பிரகாஷ் மூணு பேரும் சேர்ந்து ஒரு ரூபாகூடச் சம்பளம் வாங்காம ஒரு படம் எடுக்கணும்னு ஆசைப்படுறோம். காரைக்குடிதான் படத்தோட மொத்த லொகேஷனும். அந்தப் படம் தமிழகக் கலாசாரத்தின் பிரதிபலிப்பா இருக்கணும். அப்புறம்தான் கல்யாணம் பத்தின நினைப்பே. அதுவும் அம்மா, அப்பா பார்த்து செலெக்ட் செய்ற பொண்ணுதான். போதுமா?''


ஒருவேளை... அப்பா-அம்மாவே அமலா பாலை செலெக்ட் பண்ணுவாங்களோ?! 

நன்றி - விகடன்