Showing posts with label அதர்வா. Show all posts
Showing posts with label அதர்வா. Show all posts

Tuesday, January 12, 2016

‘கணிதன்’ படத்தில் அதர்வா வுக்குப்பதில் விஜய் நடிக்க இருந்தாரா?- ஏ ஆர் முருகதாஸ் சிஷ்யர் பேட்டி

ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக இருந்த சந்தோஷ் தற்போது தாணுவின் தயாரிப்பில் அதர்வா, கேதரின் தெரசா நடிக்கும் ‘கணிதன்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டிரெயிலர் வெளியாகி யுள்ள நிலையில் சந்தோஷை சந்தித்தோம்.



படத்தின் தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே?
‘கணிதன்’ என்ற தலைப்பைக் கேட்டதும் பலரும் இது கணிதத்தைப் பற்றிய படமா என்று கேட்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. ‘கணிதன்’ என்ற வார்த்தைக்கு ஒரு நபர் கணக்கிட்டு வேலை செய்வது என்று அர்த்தம். இப்படத்தின் நாயகன் - வில்லன் இருவருமே புத்திசாலிகள். அந்த இரண்டு புத்திசாலிகளின் மோதல்தான் படம்.



எதை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறீர்கள்?
கடைசி இடத்தில் இருக்கும் ஒரு தொலைக்காட்சியில் வேலை செய்யும் ஒரு பத்திரிகையாளன் வாழ்வின் உச்சத்தைத் தொட என்ன செய்கிறான் என்பதை படத்தில் சொல்லியிருக்கிறோம். இந்தப் படம் பத்திரிகையாளர் களுக்கு பெருமை சேர்க்கக்கூடிய தாக இருக்கும். இப்படத்தில் போலிச் சான்றிதழ் தயாரிக்கும் கும்பல் அதை எப்படிச் செய்கிறார்கள் என்பதை யும் தெளிவாக காட்டியிருக்கிறேன். இதுவரை யாரும் இந்த விஷயத்தை இத்தனை தெளி வாக சொன்னதில்லை என்று நினைக்கிறேன்.



இப்படத்தின் வில்லனாக இந்தி நடிகர் தருணை எப்படி தேர்வு செய்தீர்கள்?
இப்படத்தின் வில்லனைப் பொறுத்தவரை தமிழுக்கு புதியவராகவும், நல்ல உடலமைப்போடும், 40-45 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக நிறைய தேடினோம். ஜாக்கி ஷெராஃப் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம், ஆனால் அவருக்கு வயது அதிகமாக தெரிந்தது. இந்த சூழ்நிலையில்தான் ‘ஜப் வி மெட்’ இந்தி படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த தருணை இந்த வேடத்துக்கு தேர்ந்தெடுத்தோம். இப்படத்தில் அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்துள்ளார்.


ஏ.ஆர்.முருகதாஸிடம் பணியாற்றி இருப்பதால் பெரிய நடிகர்களின் நட்பு கிடைத்திருக்குமே. அவர்களை வைத்து ஏன் இப்படத்தை இயக்கவில்லை?
இக்கதை தயாரான வுடன் நான் விஜய் சாரிடம் சொல்லியிருக் கலாம். ஆனால் ஒரு இயக்குநராக என்னுடைய பார்வையில் இக்கதை விஜய் சாருக்கு பொருத்தமாக இல்லை. ஒரு சின்ன பையனை பெரிய நாயகனாக பார்க்க வேண்டும் என்ற பார்வையில்தான் நான் இக்கதையை எழுதியிருக்கிறேன். இப்படத்தைப் பார்த்தவர்கள் ‘அதர்வா இப்படத்துக்குப் பிறகு மாஸ் ஹீரோவாகி விடுவார்’ என்றார்கள். மாஸ் என்பது 10 பேரை அடிப்பதோ, வசனங்கள் பேசுவதோ கிடையாது. நாயகன் பண்ணுகிற விஷயங்கள் புத்திசாலித்தனமாக இருக்கும். அவ்வளவுதான். இது என் குருநாதர் எனக்கு சொல்லிக் கொடுத்தது. ‘துப்பாக்கி’ படத்தில் விஜய் சார் மிக அமைதியாக நடித்திருப்பார். ஆனால் அந்தப் படம் மாஸாக இருந்தது.
பெரிய நடிகர்கள் பலரையும் எனக்கு தெரியும். ஆனால் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்த பிறகுதான் பெரிய நாயகர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.



ஏ.ஆர்.முருகதாஸிடம் என்ன கற்றுக் கொண்டீர்கள்?
நான் அவரிடம் ஒன்றும் தெரியாத ஜீரோவாகத்தான் போனேன். அவரிடம் இருந்துதான் அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொண்டேன். ‘நீ இப்படி பண்ண வேண்டும், இதெல்லாம் தப்பு’ என்றெல்லாம் அவராக சொல்லித்தர மாட்டார். அதே நேரத்தில் பல பொறுப்புகளை நம்மை நம்பி கொடுப்பார். எல்லோரையும் சமமாக நடத்துவார். நாமாக அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். அவரிடம் பணியாற்றிவிட்டால், நிச்சயம் ஒரு நல்ல இயக்குநராக உருவாகலாம்.



‘கணிதன்’ படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது அதில் ஏ.ஆர். முருகதாஸின் சாயல் தெரிகிறதே. இதே பாணியில்தான் உங்களது இயக்குநர் பயணம் இருக்குமா?
நான் அவரிடம் பணியாற்ற விருப்பப்பட்டதே, எனக்கு அவர் எடுக்கும் படங்கள் பிடிக்கும் என்பதால்தான். என்னால் முழுமையான ஒரு காதல் கதையை எடுக்க முடியாது. ஏனென்றால் எனக்கு அதில் விருப்பம் கிடையாது. ஆரம்பத்தில் இருந்தே சமூக அக்கறை உள்ள படங்கள் பண்ண வேண்டும் என்று தான் நான் ஆசைப்பட்டேன். ஷங்கர் சார் படங்களைப் பார்த்துதான் நான் இத்துறைக்கே வந்திருக்கிறேன்.

நன்றி - த இந்து

Thursday, August 06, 2015

சண்டி வீரன் - களவாணியின் கமர்ஷியல் + வாகை சூடவாவின் கலை நயம் - இயக்குநர் சற்குணம் பேட்டி

கிராமத்து படங்களை எடுக்கும் தற்கால இயக்குநர்களில் முக்கியமானவர் சற்குணம். ‘களவாணி’, ‘வாகை சூட வா’, வரிசையில் தற்போது ‘சண்டி வீரன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். படத்தின் ரிலீஸ் வேலையில் பரபரப்பாக இருந்த அவரிடம் உரையாடியதில் இருந்து..
‘சண்டி வீரன்’ படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர்களைப் பார்த்தால் நீங்கள் கமர்ஷியல் படங்கள் பக்கம் திரும்பியது போல் இருக்கிறதே?
என்னுடைய முந்தைய படங்களில் கமர்ஷியல் விஷயங்களுடன் ஒரு நல்ல விஷயத்தையும் சொல்லியிருப்பேன். அது இந்த படத்திலும் இருக்கிறது. ‘களவாணி’ படத்தில் இருந்த எதார்த்தத்தை மீறாத கமர்ஷியல், ‘வாகை சூட வா’ படத்தில் இருந்த தரம் இப்படி இரண்டையும் கலந்து ‘சண்டி வீரன்’ படத்தை எடுத்துள்ளேன். அதற்காக அந்த இரண்டு படங்களின் கதையையும் சேர்த்துதான் இந்தப் படத்தை எடுத்துள்ளேன் என்று நினைக்க வேண்டாம். இப்படத்தின் இரண்டாம் பாதியில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதுபோல காட்சிகள் அமைந்துள்ளன.
படத்தின் தலைப்பை பார்த்தால் ஜாதியை மையப்படுத்திய படமாக இருப்பது போல் தெரிகிறதே?
கண்டிப்பாக கிடையாது. இந்தப் படம் 100 சதவீதம் எந்த ஜாதியைப் பற்றியும் பேசாது. எந்த ஜாதியையும் உசத்தி பிடிப்பதோ, இறக்கி காட்டுவதோ என் படத்தில் எப்போதுமே இருக்காது. ஜாதியை மையப்படுத்திய படங்களை எடுக்கவும் மாட்டேன். இந்தப் படத்தில் வெறும் காதல், ஆக்‌ஷன் மட்டும் இருக்காது. அதைத் தாண்டி வேறொரு விஷயம் படத்தில் இருக்கிறது. அதை இப்போதே கூறினால் நன்றாக இருக்காது. படம் பார்க்கும்போது நீங்களே தெரிந்துகொள்வீர்கள்.
நீங்கள் ஒவ்வொரு படத்துக்கும் இடையே நீண்ட இடைவெளி எடுத்துக் கொள்வது ஏன்?
என்னுடைய ஒரு படம் வெளியான உடன், அடுத்ததாக எந்தக் கதையைப் பண்ணலாம் என்று தேர்வு செய்து திரைக்கதை அமைக்க நேரம் எடுத்துக் கொள்வேன். கதைக்காக நேரம் எடுத்துக் கொள்வதை என்னைப் பொறுத்தவரை பலமாக கருதுகிறேன்.
‘சண்டி வீரன்’ படத்தை எப்படி இயக்குநர் பாலா தயாரிக்க முன்வந்தார்?
படத்தின் ஒளிப்பதிவுக்காக செழி யனிடம் இக்கதையை கூறினேன். அவர்தான் இந்தக் கதையை பாலா சாரிடம் கூறியுள்ளார். பின்னர் நான் அவரை சந்தித்தேன். இப்படத்தின் கதையை இடைவேளை வரை கேட்டு விட்டு, இதில் நாயகன் வேடத்தை யார் செய்தால் நன்றாக இருக்கும் என்றார். அதர்வா செய்தால் நன்றாக இருக்கும் என்றேன். அதன் பின் இரண்டாம் பாதி கேட்டார். முழுமையாக கதையைக் கூறி முடித்தவுடன் ‘நானே தயாரிக்கிறேன், அதர்வாவுக்கு சரியா இருக்கும் இல்லையா’ என்றார். அந்த இடத்திலேயே அதர்வாவுக்கு போன் செய்து வரவழைத்து இந்தப் படத்தின் பணிகளை தொடங்கிவிட்டார்.
முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன், எடுத்தவரை படத்தைப் பார்க்கிறீர்களா என்று பாலா சாரிடம் கேட்டேன். ‘முழுப் படத்தையும் முடி, முதல் பிரதியை பார்க் கிறேன்’ என்று கூறிவிட்டார். இப்படத்தில் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.
பாலா தயாரிக்கிறார் என்பதால் முன்னணி நாயகர்களை வைத்து படத்தை எடுத்திருக்கலாமே?
படத்தின் கதையை ஆரம்ப கட்டத் தில் வேறு மாதிரி தான் எழுதியிருந் தேன். கதையின் கருவை வைத்துக் கொண்டு திரைக்கதை எழுதும் போது நிறைய மாற்றி எழுதினேன். அப்போதுதான் அதர்வா நடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது.
தொடர்ச்சியாக கிராமம் சார்ந்த கதைகளையே இயக்குகிறீர்களே?
நம்மை பாதித்த விஷயங்களை பட மாக எடுக்கும்போதுதான் அது நல்ல சினிமாவாக மாறும். நான் கிராமத்தில் இருந்து வந்ததால் என்னை சுற்றி நடந்த விஷயங்கள் மற்றும் மனிதர்களை வைத்து படம் பண்ணுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன், அது தான் நல்லதாகவும் படுகிறது. என்னு டைய பலம் என்ன என்று எனக்கு தெரியும்


நன்றி - த இந்து

Wednesday, March 20, 2013

பரதேசி - சினிமா விமர்சனம்

இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தரோ , இயக்குநர் இமயம் பாரதிராஜாவோ இதுவரை சொல்லத்துணியாத  கதைக்களம் , பிரம்மாண்டத்தின் பிரதி பிம்பம் ஷங்கரோ, தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் இயக்குநர் மணிரத்னமோ இனிமேலும் சொல்லி விட முடியாத விளிம்பு நிலை மனிதர்களின் துயரக்கதையை  ஏ , பி சி என எல்லா நிலை மக்களையும் மனம் கனக்கும் வகையில் சொல்லி விட பாலாவைத்தவிர தமிழ் சினிமாவில் யாரால் சொல்லி விட முடியும்?  வெல்டன் பாலா .தமிழ் சினிமாவின்  முக்கியமான படைப்பு இது .

இழவு சேதியை வீடு வீடாக தண்டோரா கொட்டி சொல்லும் ஒட்டுபொறுக்கி என்னும் கேரக்டர் ஹீரோவுக்கு.1936 -ல் நடந்த தேயிலைத்தொழிலாளர்கள் பட்ட கஷ்ட நஷ்டங்கள், அவர்கள் வஞ்சிக்கப்பட்டு கொத்தடிமைகளாய் வேலை செய்த கொடூரத்தை எந்த ஒப்பனையோ, சமரசமோ செய்யாமல் ரத்தமும் , சதையுமாய் அழுகையுடன் மனதை கனக்கச்செய்யும் விதத்தில் படைக்கப்பட்டிருக்கும் தமிழ் சினிமா இது. 


அதர்வா தான் ஹீரோ. முரளி உயிருடன் இருந்திருந்தால் ஆனந்தக்கண்ணீர் விட்டிருப்பார். ஏன்னா எத்தனையோ படங்கள் நடிச்சும் அவரால செய்ய முடியாத , செய்ய வாய்ப்புக்கிடைக்காத கேரக்டர் தன் மகனுக்கு கிடைச்சிருக்கே? மூன்றாவது படமே முத்தான கேரக்டர்.கெட்டப்பில் எந்த உறுத்தலும் இன்றி அச்சு அசலாகப்பொருந்தி விடுகிறார். கூனிக்குறுகுவது , அடிமைத்தனத்தை பாடி லேங்குவேஜ்ஜில் காட்டுவது  என பிரமாதப்படுத்தி இருக்கிறார்.


ஹீரோயின் வேதிகா. பாதிகா ஜோதிகா , மீதிகா ஸ்ரீவித்யா.அவர் காட்டும் செயற்கையான சுட்டித்தனங்கள் கதைச்சூழலுக்குள் பொருந்தாமல் தனித்து நிற்குது.ஓவர் ஆக்டிங்க். அவர் மேல் குறை சொல்லிப்பயன் இல்லை. இயக்குநரின் கவனக்குறைவு. மற்றபடி இந்த கேரக்டருக்காக அவர் தன்னை வருத்திக்கொண்டு நடித்திருக்கிறார் என்பது கண்கூடு .


2வது ஹீரோயின்  தன்சிகா பாத்திரப்படைப்பில் , அமைதியான ஒரிஜினாலிட்டி நடிப்பில் மனம் கவர்கிறார்.சர்வசாதாரணமாக வேதிகாவை நடிப்பில் ஓவர் டேக் செய்கிறார்.

 படத்தில் ஹீரோவின் பாட்டியாக வரும் நபர் அனைவர் மனதையும் கவர்கிறார், கூன் போட்டபடியே அவர் வேதிகாவின் அம்மாவிடம் மல்லுக்கட்டும் காட்சியில் அரங்கில் கை தட்டல் ஒலிகள்


கங்காணி கேரக்டர் , டாக்டர், அவர்  ஃபாரீன் மனைவி , வெள்ளைக்காரத்துரை , தன்ஷிகாவின் குழந்தை என நடிப்பில் முத்திரை படைத்தவர்கள் நீளும் பட்டியல்கள்


 



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஆர்ட் டைரக்‌ஷன் அபார உழைப்பு காட்சிக்கு காட்சி தெரிகிறது . குடிசைகள்  அமைப்பு , சாப்பிடும் இலை,  உட்பட நுணுக்கமான கவனிப்பில் கலை இயக்குநர் வித்தகம் செய்திருக்கிறார்



2. ஆடை வடிவமைப்பு  கனகச்சிதம் ( தேசிய விருது கிடைச்சுருக்கு). அந்தக்கால மனிதர்களின் மாறுபட்ட மேனரிசங்கள் , பாடி லேங்குவேஜ் எல்லாம் ஓக்கே



3. ஓப்பனிங்க் காட்சியில் அந்த ஏரியாவையே சுற்றிக்காட்டி விடும் லாவகம்  அபாரம் ஒளிப்பதிவு கலக்கல் . கிட்டத்தட்ட பிளாக் அண்ட் ஒயிட் மாதிரி தான் படம் பூரா .கச்சிதமான கலரிங். ஒரு பீரியட் ஃபிலிமுக்குத்தேவையான , முக்கியமான 3 சப்போர்ட்டிங்க் 1. ஆர்ட் டைரக்ஷன்  , 2 . ஒளிப்பதிவு  3 ஆடை வடிவமைப்பு . 3ம் பாராட்டு பெறும் விதத்தில்


4. வேதிகா அதர்வாவுக்கு  ஊட்டி விடும் காட்சியும் , அப்போது அதர்வாவின் ரி ஆக்சனும் அப்ளாஸ் வாங்கும் காட்சிகள்


5. கொத்தடிமைகளாய் இருக்கும் மக்கள்  விலங்குகளைப்போல் ஏரியில் கூட்டம் கூட்டமாய் தரையில் முழங்காலிட்டு தண்ணீர் அருந்தும் காட்சி , ஹீரோ தப்பிப்போகும் போது பிடி பட்டு கால் நரம்பை கட் பண்ணும் காட்சி மனதில் வலி தங்கும் இடங்கள்


6. ஓ செங்காத்தே பாடல் வரிகள்  அற்புதம். பஞ்சாயத்து முன் சத்தியம் பண்ண விடாமல் சூடத்தை பாட்டியே அணைக்கும் காட்சி கல கலப்பான ஒரே இடம்


7. டாக்டரும் , அவர் மனைவியும் ஆடிப்பாடும் தெம்மாங்குப்பாட்டின் பி ஜி எம்


8. புதை குழில வந்து சிக்கிட்டியே அங்கம்மா என ஹீரோ கதறும் கலங்கடிக்கும் க்ளைமாக்ஸ் காட்சி






இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோவின் பட்டப்பெயரான ஒட்டுப்பொறுக்கி என்பதை ஹீரோயின் உட்பட பலரும் கிண்டல் செய்யும் காட்சிகள்  தேவை இல்லாதது . அனுதாபத்தை வலிய வர வைப்பதற்கான  உத்தி , கிட்டத்தட்ட கலைஞரின் உண்ணாவிரத நாடகம் போல்


2. தேயிலைத்தோட்டத்தொழிலாளர்கள் படும் அவஸ்தைகள் தான் கதையின் மையம் . அது தொடங்கும்போதே இடை வேளை வந்துடுது . அது வரை வழக்கமான ஹீரோ , ஹீரோயின் ஊடல் , காதல் , சில்மிஷங்கள் , கில்மா என சராசரிப்படமாகத்தான் போகுது . தேவையே இல்லை . பாலா படத்தில் மக்கள் எதிர்பார்ப்பது சராசரிக்காட்சிகள் அல்ல..


3.அங்காடித்தெரு வின் ஓல்டெஸ்ட் வெர்ஷன் தான் இந்தப்படம் அப்டிங்கற எண்ணம் மக்கள் மனதில் தோன்றாமல் இருக்கு இந்தப்படத்தை முன்பே எடுத்திருக்கனும், ஏன்னா இதன் மூல நாவல் ஏற்கனவே எழுதி ரெடியா இருந்தது


4.  இயல்பாகவே பணிவாகவும், அடிமையாகவும் , கூனிக்குறுகி நடந்து கொள்ளும் ஹீரோ ஒரு காட்சியில் கால் மேல் கால் போட்டு தெனாவெட்டாகப்படுத்திருக்காரே?


5. இது ஒரு சோகப்படம், மனதை கனக்க வைக்கும் வரலாற்றுப்பதிவு. இதில் தேவையே இல்லாமல் தன்ஷிகா - அதர்வா  ஜோடி கேப் ல கிடா வெட்டுவாங்களா? என்ற தேவையற்ற கில்மா எதிர்பார்ப்பை தோற்றுவிக்கும் காட்சிகள் எதற்கு?


6. கதையில் 48 நாட்களுக்குப்பிறகு என டைட்டில் போட்ட பிறகு ஹீரோ மட்டும் தாடி , தலை முடி வளர்ந்து காட்சி அளிக்கிறார், அனைத்துத்துணை நடிகர்களும் சம்மர் கட்டிங்க் கெட்டப்பில் இருப்பது எப்படி?



7. டாக்டர் , அவரோட ஃபாரீன் சம்சாரம் கொண்டாட்டப்பாட்டு தேவையற்ற திணிப்பு . பிதா மகன் படத்தில் சிம்ரன் பாட்டு வரவேற்பு பெற்றதால் அதே மாதிரி ஒரு பாட்டு இணைச்சுட்டீங்க போல .அந்தப்பாட்டில் ஃபாரீன் லேடி ;லோக்கல் லோகநாயகி போல் செம குத்தாட்ட ஸ்டெப் போடுவது எப்படி? 


8.வில்லன் வெள்ளைத்துரை தான் ஆசைப்பட்ட மேரேஜ் ஆன பெண்ணைப்பார்த்து “ கன்னிப்பெண்ணா?”னு கேட்கறார். டெயிலி டீ குடிக்கற மாதிரி பல களம் கண்ட  கயவாளிப்பையலுக்கு மேரேஜ் ஆன பொண்ணுக்கும் ,  கை படாத ரோஜாவுக்கும் ( ஆர் கே செல்வமணி மன்னிச்சு )  வித்தியாசம் தெரியாதா?


9.  அவ மேரேஜ் ஆனவ் அப்டினு தெரிஞ்சதும் கங்காணி கிட்டே “ அவ புருஷன் கூட சேராம பார்த்துக்க “ என்கிறார். அதை எப்படி பார்த்துக்க முடியும்? அதுக்கு புருஷனை விரட்டிடலாமே?



10. மேரேஜ் நடக்கும்போது ஒரு இழவு விழுவதும் அந்த சேதி ஹீரோவுக்குத்தெரிந்தால் ஊரைக்கூட்டி விடுவார் என்பதும் சுவராஸ்யம், ஆனால் காட்சிப்படுத்துதலில் அலட்சியம், நம்பும்படி இல்லை


11. கல்யாண வீட்டில் சாப்பாடு பொன்னி அரிசி மாதிரி பளிச் என்ப இருப்பது எப்படி? ( அந்தக்காலத்துல அந்த ஜனங்க அப்டியா சாப்பிட்டிருப்பாங்க? )



12. தேயிலைத்தொழிலாளர்களை பார்க்கவே பாவமா பஞ்சத்துல அடிபட்ட மாதிரி இருக்காங்க . அவங்களைப்பார்த்தா அழுகை தான் வரும், காமம் வராது . வில்லன் காமப்பார்வை பார்க்கறான், ஒரு வாதத்துக்கு அதை ஏத்துக்கிட்டாக்கூட  டாக்டரின் ஃபாரீன் மனைவி செம கிளு கிளுவா   70 கிலோ கேரட் மாதிரி தள தளன்னு இருக்கா, அவளைக்கண்டுக்கவே இல்லையே? இக்கரைக்கு அக்கரை பச்சைங்கறது ஃபிகர் விஷயத்துல செல்லாதே...



13. இந்த மாதிரி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படத்துக்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம்? , இசை ஞானியை விட்டுட்டு ஜி வி பிரகாசை புக் பண்ணியதில் அவர் சொதப்பிட்டார்.


14. வேதிகா ஹீரோவுக்கு லெட்டர் போடறார், க்ளைமாக்சில் ஏன் இங்கே வந்து மாட்டுனே என புலம்பும் ஹீரோ அதை ஏன் கடிதம் எழுதி முன் கூட்டியே வார்ன் பண்ணி இருக்கக்கூடாது , இங்கே வராதே அப்டின்னு ..



மனம் கவர்ந்த நாஞ்சில் நாடன் -ன் வசனங்கள்


1. பொறந்த இடத்துலயே சாகனும்னு நினைக்கற உன்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் இது தாண்டா தலை எழுத்து


2. துணிஞ்சவனுக்குத்தான் அதிர்ஷ்டம் என்னைக்கும் துணை இருக்கும்



3. உள்ளூரில் காக்கா குருவி பசி ஆறுது.மனுஷக்கூட்டம் சம்பாதனைக்காக ஊர் விட்டு ஊர் மாறுதே # பரதேசி பாடல் வரி



4. வேலை ரொம்ப கஷ்டமா இருக்குமா சாமி?


கஷ்டம்னு பார்த்தா மூலவியாதிக்காரனுக்கு நெம்பர் 2 போறது கூட கஷ்டம் தான்

5. கண்ணாலம் ஆகாமயே அங்கம்மா கர்ப்பம் ஆகிட்டா


இவனுக்கு இடுப்புல கயிறு கட்டுறதா? இல்லை புடுக்குல கட்டுறதா?



6. டேய் , உனக்கு பெரியப்பா 1 தான் , பெரியம்மா எத்தனை?


 தெரியலையே? என்னைக்கேட்டா? நீயே சொல்லு

 எனக்கும் தெரியாது , எனக்கு 10 விரலும் பத்தாது ........



7/ரெண்டு பேரும் சேர்ந்து பிச்சை எடுக்கற மாதிரி கனா கண்டீரோ?


8. சாமி , பொண்டாட்டியைக்கூட்டிட்டு வரலாமா?

 உன் பொண்டாட்டிதானே?



9. ஜனங்க பேசக்கூட பயந்து சாகறாங்க


10. ஊருக்குப்போய் பன்னி மேய்ச்சாலும் மேய்ப்பேனே தவிர  திரும்பவும் இங்கே வர மாட்டேன்


 



சி பி கமெண்ட் - பாலா மாதிரியான கலைப்பூர்வமான அபூர்வப்படைப்பாளிகள் வ்ணிக ரீதியிலும் வெற்றி அடையும்போது நாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை பரதேசி -மனதை கனக்க வைக்கும் படம்-தமிழ் சினிமாவின் மைல் கல் - விகடன் மார்க் மே பி 52 ( பாலா ரசிகர்கள் 55 வரும் எனவும் பொது ரசிகர்கள் 48 டூ 50 வரும் எனவும் சொல்றாங்க . படத்தை நான் விழுப்புரம் முருகா தியேட்டர்ல 17 3 2013 சண்டே நைட் பார்த்தேன். மார்ச் இயர் எண்டிங்க் ஒர்க் என்பதால் லேட்