Monday, April 01, 2024

கமெண்ட் போட்டி -குமுதம் பொக்கிஷம் ஓல்ட் ஈஸ் கோல்டு அட்டைப்பட கமெண்ட் ஸ்


 
அந்தக்காலத்துக்குமுதம்  அட்டைப்படத்துக்கு  இந்தக்கால  ட்ரெண்டுக்கு  ஏற்றாற்போல்  கமெண்ட்  இட்டால்  எப்படி  இருக்கும் ? ஒரு  ஜாலி  கற்பனை 

1  நாதா!  உங்கள் முகம்  அழகாய்  இருக்கிறது , ஆனால்  நெற்றியில்  இருக்கும்  நாமம்  ஏதோ  குறியீடாக  இருக்குமோ என்று  எனக்கு  பயமாய்  இருக்கிறது 

2  கண்ணே! உன்   கண்ணே  ஒரு  பின்  தான், எதற்காக  தனியாக  உன்  கையில் ஒரு  ஹேர்பின் ?

3   பஃபே  சிஸ்டமாக  இருந்தாலும்  உன்னை  உட்கார  வைத்து  சோறு  போடுவேன் 

4   ஆண்  வேடம்  இட்ட  பெண்  என்பதை  எப்படிக்கண்டுபிடித்தேனா? ஜூஜூபி  மேட்டர்  , வலது  கைல  வாட்ச்,கட்டி  இருக்கும்  ஸ்டைலைப்பார்த்தா  தெரியாதா?  துக்ளியூண்டு  வாட்ச் வேற 

5  அதென்ன? என்னை  விட  உனக்கு  தலை  முடி  அடர்த்தியா  இருக்கு?இரு  ஒவ்வொரு  முடியா எடுக்கறேன், முடி  காணிக்கை  இக்காரிகைக்கு.. 

6  மஞ்சள்  முகமே  வருக.. மஞ்சள்  தாவணி , மஞ்சில்  விரிஞ்ச  மஞ்சள்  பூ, என்னை  மஞ்ச(ள்)  மாக்கான்  ஆக்கி  விட்டாயே? 

7  நெக்லஸ்  நல்லாருக்கா?னு  கேட்டா  எப்படி  நான் பதில்  சொல்வேன்? பெண்களை  கழுத்துக்குக்கீழே  பார்ப்பது  கண்ணியக்குறைவு  ஆச்சே?பை  த  பை  உன்  பிளவுஸ்  ஃபிட்டிங்  செம  

8    லால்  சலாம்   என்று   நான்  சொன்னது  சினிமாவைக்குறிக்காது , உன்  சிவப்புக்கலர்  பாவாடையைக்குறிக்கும் 

9  உன்னைக்கண்டதும்  என்  தலை எழுத்தே  மாறப்போகுது. என்  அப்பா பேரை  இனிஷியலா  வெச்சிருந்தேன் இனி  உன்  பெயரை  இனிஷியலாய்  வைப்பேன்

10  எப்போதும்  பெண்கள்  மேலிடம்  தான்  MALE  இடம்

11  கல்தோசைதான்  பிடிக்கும், செஞ்சு  தான்னு  சொல்றது  ஓக்கே , ஆனா  நாமக்கல்  தோசை  தான்  வேணும்னா  எப்படி?

12  என்  பேரை  உங்கள்  நெஞ்சில்  பச்சை  குத்திக்கலையா?

அது  வம்பு , ஆள்  மாத்தும்போது  அதே  பேரா  தேடனும்

13   என்  முகத்துக்கு  அழகா  இருக்குன்னு  நாமம்  போட்டு  விட்டியா? உன்னைக்கட்டிக்கிட்டா  நாமம் தான்  என  குறியீடா  சொல்றியா?

14   கல்யாணத்துக்கு  முன்னும் பின்னும்  உன்  குடுமி  என்  கையில்  தான், ஒரு  முன்னோட்டம்  பார்த்துக்கறேன்

15  எப்படி  நான்  போட்டு  விட்ட  நாமம் ?

பட்டை யைக்கிளப்பிட்ட. நெற்றில  திருநீர்ப்பட்டை  தான்  இடுவது  என்  வழக்கம்

16   நீ  வடகலை , நான்  தென் கலை , என்  மீதான  உன்  அன்பு  தாங்கலை.எப்படி  என்  கவிதை ?


அய்யோ  சகிக்கலை 


======================




1  சிக்ஸ் பேக்  சிங்கமே! குங்குமம்  வைத்த  தங்கமே!இனி  நீதான்  என்  வாழ்வில் முக்கிய  அங்கமே!


2   பார்த்தும்  பார்க்காதது  மாதிரி  போறீங்களே?


அன்பே  திருப்பதி  லட்டு ! அதுதான்  ஆணின்  தெனாவெட்டு


3  அயோத்தி  ராமர் கோயிலுக்கு  அழைத்துப்போறேன்னு  வாக்கு  கொடுத்துட்டு  இப்படி  நடைப்பயணமாதான்  போகனும், வரதுன்னா  வா  என்று  சொல்வது  நியாயமா? 


4  அய்யய்யோ  டாப்லெஸ்  ஃபோட்டோ  போட்டிருக்காங்களே? சென்சார்ல  விடுவாங்களா? 


5  அனேகமா  இந்தாளு  கமல்  ரசிகராத்தான்  இருக்கனும், சிக்ஸ்பேக்  ஜிம்  பாடியை காட்டிட்டே நடக்கறாரே? 


6   யார்  வேண்டுமானாலும்  அர்ச்சகர்  ஆகலாம்னு  சட்டம்  வரும்போது  யார்  வேணும்னாலும்  அவரை  சைட்  அடிக்கலாம்னு  சொல்லக்கூடாதா? 


7 தோளில்  ஸ்டைலா  துண்டு  போட்டிருப்பதெல்லாம்  ஓக்கே  தான், ஆனா  கரும்புத்துண்டு  மாதிரி  ஒரு  ஃபிகர்  கிராஸ்  பண்ணுது , கண்டுக்காம  இருக்காரே? 


8  இவரு  என்ன  கழுத்துல  டூ இன்  ஒன்  மாதிரி  செயின்  போட்டிருக்காரு? வாக்மேன்/ஹியரிங்க் எய்ட்  இன்  கோல்டு ? 


9  அன்பு  நாயகனே!  நீதான்  என்  தக் லைஃப்


10  சஞ்சிகை  கொண்டாடும்  சிகை  அழகன், வஞ்சியர் கொண்டாடும்  நகை அ ழகன்


11   குடுமி  வெச்ச  மாப்பிள்ளை  தான்  வேணும்னியாமே? அது  ஏன் ?


அப்போதான்  பெண்களுக்கு  ரொம்ப  “சவுரி”யம்


12   நீ  பார்த்”துட்டு”ப்போனாலும் பார்க்காம  போனாலும்  உன்னைப்பார்த்”துட்டு”தான்  இருப்பேன்


புரியுது , உன்  கவனம்  பூரா  துட்டுல  தான்?


13  நான்  சிவப்பு  ரவிக்கை  அணிந்ததால்  மேட்சுக்கு  மேட்சா  காவி  வேட்டி கட்டினியா?

 அது  சரி . அப்போ  பச்சை  சேலைக்கு  மேட்சா  பச்சை  பச்சையா  பேசிடட்டுமா? 


14  இவர்  என்ன  கழுத்துல  தாலி  கட்டி  இருக்கிறார்? ரிசர்வ்டு  பார்ட்டியோ? 


15  மாப்பிள்ளைக்கு  ஏறு  நெற்றி, குடும்பத்துக்கு  ஆகாதும்பாங்களே?


ஏர் உழுபவன்  நெற்றி உலக  நன்மைக்காக  வியர்வை  சிந்துபவன்.நாங்க  உழலைன்னா  உங்க  வீட்டு  அடுப்புல    அரிசி  வேகாது

0 comments: