Friday, September 22, 2023

NEEYAT (2023 ) -ஹிந்தி -சினிமா விமர்சனம் (க்ரைம் மிஸ்ட்ரி த்ரில்லர்)@ அமேசான் பிரைம்

 


   ஹாலிவுட்டின்  ராஜேஷ் குமாரினி  அகதா  கிறிஸ்டி  எழுதிய  நாவலைத்தழுவி உருவாக்கபப்ட்ட  நைவ்ஸ்  அவுட் ,  டெத்  ஆன்  த  நைல்   ஆகிய  படங்களின்  தாக்கத்தில் உருவான  பட,ம்  இது . நீயத்  என்ற  ஹிந்தி  சொல்லுக்கு  மோட்டிவ்  என்று  பொருள் .7.7/2023  அன்று  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இப்பட்ம் 1/9/23  முதல்  அமேசான்  பிரைம்  ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது


   ஸ்பாய்லர்  அலெர்ட்

விஜய் மல்லய்யா, நீரவ்  மோடி  மாதிரி  பெரிய  தொழில்  அதிபர்  தான்  படத்தோட  வில்லன். இவரு  ஏகப்பட்ட  பேங்க்ல கடன்  வாங்கி     ஏகப்பட்ட  பணத்தை  ஆட்டையைப்போட்டவரு . இவரோட  ஃபேக்டரியை  நட்டக்க்ணக்கு  காட்டி  மூடுனதால  பலர்  வேலை  இழந்து  எட்டு  பேர்  தற்கொலை  பண்ணி  இறந்துட்டாங்க . இவரு   பாட்டுக்கு  ஃபாரீன்  போய்  செட்டில்  ஆகிட்டாரு. இவ்ரைப்பிடிச்சுட்டு  வர இந்தியாவில்  இருந்து  ஒரு  சிபிஐ  ஆஃபீசர்  கிளம்பி  ஃபாரீன்  வர்றாரு 


வில்லன்  ஒரு  தனிமையான  தீவுல  தங்கி  இருக்காரு. அவருக்கு  பிறந்த  நாள் . அந்த  பிறந்த  நாளுக்கு  அவரோட  மகன், காதலி  , நண்பர்கள்  , உறவினர்கள்  உட்பட   10  பேரை  அழைத்திருக்கிறார். எல்லாரும்  பார்ட்டிக்கு  ஆஜர்  ஆகிடறாங்க. இந்த  பிறந்த  நாள்  பார்ட்டியை  நடத்த  ஈவெண்ட்  மேனேஜர்  ஒருவர்  தன்  ஆட்களுடன்  வந்திருக்கிறார். அழையா  விருந்தாளியாய்  நாயகி  ஆன  சிபிஐ  ஆஃபீசரும்  வந்திருக்கார்


பார்ட்டி  நடந்துட்டு  இருக்கும்போது  வில்லன்  ஒரு  அறிவிப்புக்கொடுக்கிறார். என்  எல்லா  சொத்துக்களையும்  இந்திய  அரசிடம் சரண்டர்  பண்ணீட்டு  நானும்  சர்ண்டர்  ஆகப்போறேன்  என்கிறார். கோடிக்கணக்கான  சொத்து  அவருக்கு . அவரோட  மகன், காதலி , நண்பர்  உட்பட  யாருக்குமே  இவரோட  முடிவில்  உடன்பாடு  இல்லை . ஏன்னா  சொத்து  கை  விட்டுப்போயிடுச்சுன்னா  இவங்க பாடு  திண்டாட்டம்  ஆகிடுமே? 


பார்ட்டி  நடந்திட்டு  இருக்கும்போது  சில  கொலை  முயற்சிகள்  நடக்குது , ஆனா  வில்லன்  தப்பி  விடுகிறார். ஒரு  கட்டத்தில்  வில்லன்  கோபமா  வெளில  கிளம்பிப்போறாரு . பின்  தொடர்ந்து  வ்ந்து  பார்த்தா  உயரமான  இடத்தில்  இருந்து  கீழே  விழுந்து  ரத்த வெள்ளத்தில்  இருக்கிறார்


நாயகி  ஆன  சிபிஐ  ஆஃபீசர்  துப்பு  துலக்க  ஆரம்பிக்கிறார். அங்கே  இருக்கும்  10  பேருக்குமே  வில்லனைக்கொலை  செய்ய  காரணம்  இருக்கிறது. ஒவ்வொருவர்  அறையையும், செல் ஃபோனையும்  செக்  பண்ணி  கொலையாளியைக்கண்டு  பிடிப்பது தான்  மீதிக்கதை 


 நாயகியாக  சிபிஐ  ஆஃபீசர்  ஆக  வித்யாபாலன்  நடித்திருக்கிறார். அவரது  ஹேர் ஸ்டைலும் , உடல்  மொழியும்  ஆணுக்கு  உரியது  போல  இருக்கிறது . அதற்கான  விளக்கம்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டில்  வெளிப்படுகிறது 


 வில்லன்  ஆக  ராம்  கபூர். கச்சிதமான  நடிப்பு . நல்லவர்  போலவே  நடந்து கொள்ளும்  நயவஞ்சகத்தனம்  அருமை 


டெல்லி  க்ரைம்  நாயகி  ஷெஃபாலி  ஷா  கெஸ்ட்  ரோலில்  வருகிறார்.  கம்பீரமான  தோற்றம்,

130  நிமிடங்கள்  ஓடும்  படத்தில்  முதல்  60  நிமிடஙள் கழித்துக்கொலை  நடக்கிறது . இடைவேளைக்குப்பின்  இன்வ்ஸ்டிகேஷன்  ஆரம்பம்  ஆகிறது . க்ளைமாக்சில்  ஒரு  ட்விஸ்ட்டும்  இருக்கிறது


மிக்கி மெக்  கிளியரி யின்  இசையில்  பரபரப்பு  பற்றிக்கொள்கிறது ஆண்ட்ரியாஸ் நியாஸ் ஒளிப்பதிவில் காட்சிகள்  பிரம்மாண்டமாய்  கண்  முன்  விரிகிறது

திரைக்கதையை  நான்கு  பேர்  எழுத  அனு மேனன்  இயக்கி இருக்கிறார். விறுவிறுப்பாக  படம்  செல்கிறது


சபாஷ்  டைரக்டர்


1 சிபிஐ  டைரி  குறிப்பில்  நாயகன்  மம்முட்டி  பொம்மையை  மாடியில்  இருந்து  தூக்கிப்போட்டு  விழும்  பொசிஷனை  வைத்து  தற்கொலை  எனில்  எப்படி  இருக்கும் ? கொலை  எனில்  எப்படி  இருக்கும் ?> என்று  விளக்குவது  போல  நாயகி  வில்லனின்   பொசிசனை  வைத்து  இது  கொலை  தான்  என    சொல்லும்  இடம் 


2  மீடியா  ரிப்போர்ட்டர்  ஒருவர்  அந்த  பார்ட்டியில்  ஊடுருவி  இருப்பதும்  அவர்  கொலையாகும்  காட்சியும் 

3   க்ரைம்  இன்வெஸ்டிகேஷன்  த்ரில்லராகக்கொண்டு  போகும்  கதையை  ரிவஞ்ச்  த்ரில்லராக  மாற்றும்  லாவகம் 


  ரசித்த  வசனங்கள் 


1 உனக்குக்குழந்தைகள்  இருக்கா?

 இல்லை  சார்


 குழந்தைகள்  மாதிரி  அதாவது  நம்ம  வாரிசுகள்  மாதிரி  நம்ம  இதயத்தை  உடைக்கற  நபர்கள்  இந்த  உலகத்துல  வேற  யாரும்  இல்லை 


2  ஒரு  பொய்யை  ஆயிரம்  முறை  திருப்பி திருப்பிச்சொன்னால்  அது  உண்மை  ஆகிடும், அந்த  வேலையைத்தான்  நியூஸ்  சேனல்ஸ்  பண்ணிட்டு  இருக்காங்க   


3 தோல்விக்கு  பயப்படாதவன்  தான்  இந்த  உலகத்தை  மாற்ற  முடியும் 


4 பொய்  [பேசுபவர்க்ள்  எப்போதும்  சத்தம்  போட்டுத்தான்  பேசுவாங்க 


5   எல்லோருமே  அவங்கங்க  வயசை  கம்மியாத்தான்  சொல்வாங்க ,அது  ஒரு  க்ரைம் இல்லை 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கோடீஸ்வரர்  வீட்டில்  பர்த்டே  பார்ட்டி . அங்கே  பணி  புரிய  வந்திருக்கும்  ஊழியர்கள்   புயல்  வரப்போகிறது  என்று  நியூஸ்  சேனல்  அலெர்ட்  வந்ததும்  நாங்கள்  கிளம்பறோம்  என  சொல்வது  நம்பும்படி  இல்லை , டபுள்  பேமண்ட்  தர்றதா  சொன்ன  பின்னும்  யாரும் கண்டுக்கலை   என்பதை  வில்லன்  எப்படி  நம்புகிறார்?


2  கோடீஸ்வரர்  வீட்டில்  பணியாட்கள்  யாரும்  இருக்க  மாட்டார்களா? பர்த்  டே  பார்ட்டிக்கான  பணியாட்கள்  தான்  கிளம்பி  விட்டார்கள் , ஓக்கே, ரெகுலர்  ஆக  பங்களாவில்  இருக்கும்  பணியாட்கள்  எங்கே? 


3  பணியாட்கள்  யாருமே  இல்லாமல்  அத்தனை  பேருக்கான விருந்து  எப்படி  தயார்  ஆனது ?


4  கடல் அலை  வந்து  டெட்  பாடியை  அடித்து  சென்று  விடும்  என்ற  லாஜிக்  நம்ப  முடியவில்லை , ஒரு  கொலைக்கேஸ்  ஃபைல்  பண்ண  டெட்  பாடி  வேண்டாமா? 

5   அவ்வளவு  பெரிய  தொழில்  அதிபர்  சிபிஐ  ஆஃபீசரிடம்  ஐடி  கார்டு எங்கே  எனக்கேட்கவே  இல்லையே? 


6  வில்லன்  அம்ஜத் கான்  போல்  திடமாக  இருக்கிறார். அவர்  மகன்  அனிரூத்  மாதிரி  ஒல்லியாக  இருக்கிறார். ஒரு  கட்டத்தில்  மகன்  அப்பாவின்  முகத்தில்  பஞ்ச்  விடுவது  நம்பும்படி  இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  யூகிக்க  முடியாதபடி  இருப்பதால்  ஒரு   ஸ்லோ  பர்ன்  த்ரில்லர்  மூவி ர்சிகர்கள்  பார்க்கலாம். ரேட்டிங்  2.5 / 5 


Neeyat
Theatrical release poster
Directed byAnu Menon
Written by
  • Anu Menon
  • Girvani Dhyani
  • Advaita Kala
  • Priya Venkataraman
Produced by
  • Vikram Malhotra
Starring
CinematographyAndreas Neo
Edited byAdam Moss
Music byMickey McCleary
Production
companies
Abundantia Entertainment
Amazon Studios
Distributed byPen Marudhar Entertainment
Release date
  • 7 July 2023
Running time
130 minutes[1]
CountryIndia
LanguageHindi

0 comments: