Friday, April 07, 2023

குமரிக்கோட்டம் (1971) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா)

 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகியின்  அம்மா லவ்  மேரேஜ். அதனால  நாயகியின்  தாத்தா நாயகியின்  அம்மாவை  வீட்டை  விட்டு  விரட்டி  விடுகிறார். குழந்தை  பிறந்ததும் நாயகியின்  அம்மா  இறந்து  விடுகிறார். சில  வருடங்கள்  கழித்து  நாயகியின்  தாத்தா  மரணப்படுக்கையில்  இருக்கும்போது  தன்  பேத்தியைப்பார்க்க  ஆசைப்படுகிறார், ஆனால்  முடியவில்லை , இறந்து  விடுகிறார்.உடனே  வீட்டில்  இருக்கும்  சொந்தக்காரன்  ஆன  வில்லன்  சொத்தை  அபகரிக்க  நினைக்கிறான், ஆனால்  வக்கீல்  சொத்து  பூரா  பேத்தியான  நாயகிக்குதான்  என்கிறார்


 நாயகி  வரவழைக்கப்படுகிறார். இதெல்லாம்  நாயகி 8  வயதாக  இருக்கும்போது  நடந்த  சம்பவங்கள் . இப்போது  நாயகிக்கு  18 வயது 



நாயகியின்  அப்பாவும், நாயகனின்  அப்பாவும் நண்பர்கள் . இருவரும்   ஆரம்பத்தில்  சம்பந்தி  ஆவதாக  வாய்மொழியாக  பேசிக்கொண்டவர்கள் , ஆனால் இப்போது  நாயகி  செல்வச்சீமாட்டி , நாயகன்  ஏழை 


 பணக்காரத்திமிரில்  இருக்கும்  நாயகிக்கு  பாடம்  கற்றுக்கொடுக்க  நாயகன்  நினைக்கிறார். . பெண்  கொடுப்பதாக  வாக்களித்த நாயகியின்  அப்பா மனம்  மாறி  தன்  அப்பாவை  அவமானப்படுத்தியதற்கு  பழி  வாங்கத்துடிக்கிறார் நாயகன் அவர்  எண்ணம்  நிறைவேறியதா? என்பதுதான்  திரைக்கதை 


நாயகனாக  எம் ஜி ஆர். இந்தப்படத்தில்  ஏழையாக  டிசைன்  செய்யப்பட்டிருந்தாலும்  நாயகன்  அணிந்து  வரும்  உடைகள்  எல்லாம்   மல்ட்டி  மில்லியனர்  போலவே  இருக்கும் . , வழக்கமான  அரசியல்  உள்  குத்து  வசனங்கள்  ஆங்காங்கே  உண்டு , ஒஈஸ்ட்மென்  கலரில்  எம் ஜி ஆர்  ஸ்டைலிஷ்  ஆகவே  படம்  முழுக்க  வருகிறார்


 நாயகியாக  ஜெ.  பணத்திமிர்  காட்டும்  காட்சியில்  கச்சிதம்.  காதல்  பிறக்கும்  காட்சியில்  செயற்கை  தட்டுகிறது   ரெக்கார்டு  டான்சராக  இன்னொரு  ரோலில்  அவர்  காட்டும்  நடிப்பு  லோக்கல்  பாஷையில்  உடல்  மொழி  மாற்றத்துடன்  கச்சிதமான  நடிப்பு 


 குடிகார  பணக்காரராக  அசோகன்  நல்ல  நடிப்பு, அவரது  மகளாக  வரும்  லட்சுமி  நாயகனுக்கு  உடன்  பிறவாத்தங்கை  ஆவது  நல்ல  காமெடி 


காமெடிக்கு  சோ.  இன்னொரு  சின்ன  வில்லனாக  மனோகர் 


 நாயகியின்  அப்பாவாக  வி கே  ராமசாமி  கணீர்  குரலில்  அமர்க்களப்படுத்தி  இருக்கிறார்


திரைக்கதை  எழுதி  இருப்பவர்  சொர்ணம், கதையை  இழுக்க   வழி  தெரியாமல்  மெயின்  கதைக்கு  சம்பந்தமே  இல்லாமல்  ஆள்  மாறாட்டக்கதை  , டபுள்  ரோல்  என  பின்  பாதி  திரைக்கதையை  சொதப்பி  விட்டார் ,  கதை  குகநாதன் , இயக்கம்  நீலகண்டன்


அமிர்தம்  தான்  ஒளிப்பதிவு . அனைவரையும் அழகாகக்காட்டி  இருக்கிறார்


எம் எஸ்  விஸ்வநாதன்  தான்  இசை . 6  பாட்டு  ஹிட்டு 


சபாஷ்  டைரக்டர்


1  படத்தின்  டைட்டிலாக  குமரிக்கோட்டம்  என  வைத்து  விட்டு  அதற்கு  நியாயம்  கற்பிக்க  நாயகிக்கு  குமரி  என  பெயர்  வைத்த  புத்திசாலித்தனம்  அருமை 


2   நாயகனின்  அப்பா  கேரக்டர்  படத்தின்  ஆரம்பத்தில்  ஒரு  சீனில்  வந்ததோடு  சரி . அதற்குப்பின்  அவரை  ஆளையே  கண்ல  காட்டாம  மறைத்த  சாமார்த்தியம்




செம  ஹிட்  சாங்க்ஸ்


1  அடி  மத்தளம்  கொட்டி மேளத்தைத்தட்டி  வித்தையைக்காட்டடி  பெண்ணே  பெண்ணே  அடி  கண்ணே! (  ஹீரோயின்  ஓப்பனிங்  சாங்)


2  ஆடுவது  உடலுக்கு  விளையாட்டு  பாடுவது  மனதுக்கு  விளையாட்டு இரண்டும்  இருந்தால்  ... ( நாயகி  காலேஜ்  கலாட்டா சாங்) 


3  வந்தானய்யா  வந்தானய்யா  ராஜாங்கக்கோமாளி  (  ஹீரோ  மாறுவேடங்களில்  தோன்றும்  சாங் ) 


4   எங்கே  அவள்?   என்றே மனம்  தேடுதே  ஆவலால்..   (  டூயட்  சாங்)


5  நாம்  ஒருவரை  ஒருவர்  சந்திப்போம்  என  காதல்  தேவதை  சொன்னாள்  (    டூய்ட்  சாங்)


6  என்னம்மா  ராணி , பொன்னான  மேனி  ( லந்து  சாங்)


  ரசித்த  வசனங்கள் 


1    ஒருத்தன்  சாவில்  வரும்  சொத்து  எனக்குத்தேவை  இல்லை 


2    பயிருக்கு  வேலி , பெண்ணுக்கு  தாலி 


3 சோம்பேறித்தனம்  தான்  மனிதனின்  முதல்  எதிரி 


4   எனக்கு  துணிச்சல் காரன்  என  பெயர்  உண்டு  தெரியுமா? 


5  பெண்  குத்து  விளக்கு  மாதிரி அமைதியா   எரியனும்


6  உன்னால  இந்த  ஆளை  அசைக்கவே  முடியாது 


 என்னை  மட்டும்  இல்லைம்மா , கடமையைச்செய்யற  யாரையும்  யாராலும்  எதுவும்  செய்ய  முடியாது


7   மாணவப்பருவத்தில்  எத்தனையோ  சண்டை  போட்டாலும் பிரிந்து  செல்லும்போது  நண்பர்களாகத்தான்  பிரிவோம்


8  ஜெ -  அவர்  பிறந்ததே  எனக்காகத்தான்  ( உள்  குத்து  வசனம் ) 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  முதல்  பாட்டுக்கும்  இரண்டாவது  பாட்டுக்கும்  உண்டான  கேப்  2  நிமிசம்  தான் , 2  பாடல்களுமே  நாயகி  சோலோ சாங். எம் ஜி ஆர்  படங்களில்  இது  மிக  அரிது . 


2  ஊரில்  இருந்து  வீட்டுக்கு ஹீரோ  வந்ததும்  அவர்  எதுவும்  வாங்கி  வந்த  மாதிரி  தெரியலை. வீட்டில்  ஏற்கனவே  வைக்கப்பட்டிருக்கும்  வாழைப்பழத்தாரை அப்பாவிடம்  கொடுத்து  சாப்பிடு  அப்பா  என்கிறார்


3  வீட்டு  வாடகை  100  ரூபாய்  கூடத்  தர  முடியாத  ஏழையாக  வரும்  ஹீரோ  அணிந்திருக்கும்  பேண்ட்  சர்ட்  எல்லாம் 5000  ரூபாய்  மதிப்புள்ள  பிராண்டட்  சர்ட்


4  ஹீரோ  நல்லவர்னு  காட்ட  வேண்டியதுதான் , அதுக்காக  முன் பின்  அறிமுகம்  இல்லாத  வழிப்போக்கனை இரவில்  வீட்டுக்குள்  தங்க  வைப்பதும்  அவன்  பணத்தை  அபேஸ்  பண்ணுவதும்  அநியாயத்துக்கு  அவரை  நல்லவர்  ஆக்கக்காட்டும்  முயற்சி 


5  திருடு  போன  வீட்டு  வாடகைப்பணத்துக்காக  மாறுவேடத்தில்  நடனம் ஆடும்  ஹீரோ  பிறகு  அப்பாவின்  பசியைப்போக்கத்தான்  இப்படி  செய்தேன்கறார். ஏன் மாற்றி  மாற்றி  பேசனும் ?  வாடகையா? பசியா? 


6  அசோகனை  சிரிக்க  வைத்தால்  100  ரூபாய்  பரிசு  தருவதா  ஒரு  அடியாள்  சொல்றான்,  சிரிக்க  வைத்த  பின்  ஹீரோ  அவனிடம்  100  ரூபாய்  வாங்காமல்  அசோகனிடம்  கேட்டு  வாங்குகிறார். ஏன்  அவன்  தர  மாட்டானா? 


7  குடிகார  அப்பாவான  அசோகனை  பத்திரமாக  வீடு  கொண்டு  வந்து  சேர்த்ததற்காக  ஹீரோவுக்கு  நன்றி  சொல்லும்  லட்சுமி  அப்பாவிடம்  அவரது பணம்  அனைத்தும்  பத்திரமாக  இருப்பது கண்டு மகிழ்கிறார்.  , ஹீரோவிடம்  சிலாகிக்கிறார். மற்றவர்கள்  ரெகுலரா  அப்பா  பாக்கெட்டில்  இருக்கும்  பணத்தை  அபேஸ்  பண்ணிடுவாங்க, நீங்க  செய்யலை  என்கிறார். இதுவரை  எல்லாம்  சரி , பிறகு  ஹீரோவுக்கு  சர்வீஸ்  சார்ஜ்  ஆக  20  ரூபாய்  தருகிறார். இது  எதுக்கு ? அவருக்கு  பணம்  தான்  வேண்டும்  என்றால்  அப்பா  பாக்கெட்  மணியையே  ஆட்டையைப்போட்டிருப்பாரே?   


8  நாயகன் - நாயகி  இருவரும்  காலேஜ்  மேட்ஸ். ஆனால்  இருவருக்கும் ஆகாது . எப்போதும் சண்டை. ஒரு  ஏலம் நடக்கும்  இடத்தில்  போட்டி  போட்டுக்கொண்டு  இருவரும்  ஒரு    நிலத்துக்கு  ஏலம்  கூறும்  போது    நாயகன்  நாயகியிடம்  யூ  ஆர்  ஸோ  பியூட்டிஃபுல்  என்கிறார். உடனே நாயகிக்கு  லவ்  வந்து  விடுகிறது. டூயட். அழகான  பெண்ணைப்பார்த்தால்  1000  ஆண்கள்  அதே  டயலாக்கைதான்  சொல்வார்கள். இதுக்காக  ஒரு  பெண்  லவ்வில்  விழுமா? என்ன ? 


9  நாயகன்  பரம  ஏழை  என்று  நாயகிக்கு  ஆல்ரெடி  தெரியும், நாயகன்  பணக்காரன்  போல்  நடிக்கும்போது   இவருக்கு  எப்படி  இவ்வளவு  பணம்  வந்தது ? என  அவர்  சந்தேகிக்கவே  இல்லையே?


10   நாயகன்  நாயகியைக்கடுப்பேற்ற  அவரது  கேர்ள்  ஃபிரண்ட்  யாரையாவது  ஜோடி  மாதிரி  காட்டி  இருக்கலாம், ஆனால்  அவர்  தன்  உடன்  பிறவாத்தங்கையை  காதலி  மாதிரி  ஜோடி மாதிரி  நாயகியிடம்   காட்டிக்கொள்வது   எப்படி ? 


11   விலை  உயர்ந்த உலோகம்  கிடைக்கும்  என்ற  பொய்யான  தகவலில்  வி  கே  ராமசாமி  11  லட்சம்  ரூபாய்க்கு  ஒரு  டம்மி  நிலத்தை  வாங்குகிறார், ஓக்கே , ஆனால்  அந்த  நிலத்தைத்தோண்டிப்பார்க்க  மட்டும்  20  லட்சம்  ரூபாய்  செலவு  செய்வதெல்லாம்  ஓவர் 


12   ஜெ  ஒரு  சீனில்  மாடி  மீது  நிற்கிறார். அவர்  நிற்கும்  தூரத்துக்கும்  படிக்கட்டு  ஆரம்பிக்கும்  இடத்துக்கும் 10  அடி  தூரம்  இருக்கும், அப்;போது  ஹீரோ  சொன்ன  அதிர்ச்சித்தகவலால்  ஜெ தலை  சுற்றி  10  அடி  தூரம்  ஜம்ப்  பண்ணி மாடிப்படிக்கட்டில்  உருண்டு  விழுகிறார்


13   உண்மையான   கோபால்  நான்  தான்  என  வில்லன்  மனோகரும், நாயகன்  எம்  ஜி ஆரும்  மாறி  மாறி  சொல்லும்போது  அந்த நாட்டாமை  ஆள்  அதற்கான  ஆதாரம் காட்ட  சொல்லலை , அல்லது  சாட்சியாக  யாரையாவது  அழைத்து  வாருங்கள்னு  சொல்லலை, மாறாக  இரண்டு பேரும் சண்டை  போடுங்க , யார்  ஜெயிக்கறாங்களோ  அவங்கதான்  உண்மையான  கோபால்  என்கிறார், என்ன  கொடுமை  சார்  இது ? 


14   ஜெ  ஆள்மாறாட்டம்  நிகழும்  முதல்  சீனில்  அவரது  பாஷையே  தர  லோக்கல் ஆக  இருக்கிறது ,  நாயகனுக்கு  ஏன்  சந்தேகம்  வரவில்லை ?


15  ஜெ  ஆள்  மாறாட்டம்  நிகமும்போது  வயலட்  கலர்  சேலை  வயலெட்  கலர்  பிளவுஸ்  தான்  போட்டுட்டு  வருவார்  என்பது  மனோகருக்கு  எப்படி  தெரியும் > எப்படி  இன்னொரு  ஜெ  வை  அதே  டிரசில்  ரெடி  பண்றார்? 


16  சாப்பாடு  சாப்பிடுவது  டைனிங்  ஹாலில்  அல்லது ஹாலில்  தான்  சாப்பிடுவார்கள். நாயகன்  பைத்தியம்  ஆக  மாறி  விட்ட  நாயகிக்கு  சாப்பாட்டை  அவரது  பெட்ரூமில்  வந்து  ஊட்டுகிறார்

17  வில்லன்  திட்டப்படி  ஆள்  மாறாட்ட  டான்சர்    நாயகன்  தூங்கும்போது  அவரைக்கொலை  செய்ய  முயற்சிப்பதுதானே  சேஃப்டி , அப்படி  செய்யாமல்  அவர்  விழித்திருக்கும்போதே  கையில்  கத்தியுடன்  சுத்திட்டு  இருக்காங்க 

18  படத்தில்  வரும்  அனைத்துக்கேரக்டர்களும்  நார்மலான  டிரஸ்  போட்டுட்டு  வரும்போது  வில்லன்  மனோகர்  மட்டும்  பேக்கு  மாதிரி  ரெயின்  கோட்  அதற்குள்  கோட்  என  ஓவர்  லோடட்  டிரஸ்கோடுடன்  வருவது  ஏன்?  உப்புசமா  இருக்காது ?

19   குடிகாரன்  ஆன  அசோகனை  திருத்துவதற்காக  நாயகன்  அசோகனின்  மகளான  லட்சுமியை  ரேப்  செய்ய  முயற்சிப்பது  போல்  நடிப்பதெல்லாம்  ஓவரோ  ஒவர் 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  எதுவும்  இல்லை , யூ படம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சூப்பர்  ஹிட்  பாட்டுக்காகவும், எம் ஜி ஆர்  - ஜெ  ஜோடி  கெமிஸ்ட்ரிக்காகவும்  பார்க்கலாம். கதை  ரொம்ப  சுமார்  ரகம்  தான் , ரேட்டிங் 2.5 / 5 



நன்றி - ஆனந்த  விகடன்  மை  விகடன்  ஆன் லைன்  இதழ்

பதிவேற்றம் கண்ட  நாள்  31/3.2023



Kumari Kottam
Kumari Kottam poster.jpg
Theatrical release poster
Directed byP. Neelakantan
Screenplay bySornam
Story byV. C. Guhanathan
Produced byKovai Chezhiyan
StarringM. G. Ramachandran
Jayalalithaa
CinematographyAmirtham[1]
Edited byG. Kalyanasundaram[1]
Music byM. S. Viswanathan
Production
company
Kay Cee Films
Release date
  • 26 January 1971
CountryIndia
LanguageTamil

1 comments:

Aravind said...

சிறப்பு சார்.