Wednesday, May 22, 2013

பொண்டாட்டி தோசை சுடும்போது .......

வாக்கிங் எவிடென்ஸ்
1. அடேங்கப்பா.டீக்கடைல 2 பிகருங்க ( அவங்கவங்க ) கால் மேல கால் போட்டு பன்னாட்டா டீ குடிச்சுட்டு இருக்காங்க



------------------



2. உனக்கு மட்டும்தான் சொந்த வீடு இருக்கிறது என்ற எள்ளல் வேணாம்.வீட்டை எப்போதும் முதுகில் சுமக்கும் ஆமை புகுந்த் வீடு உருப்படாது என அறிக




-------------------------


3. இங்கிருந்தே பளிச் என தெரிகிறது மொட்டை மாடியில் ஒரு பிகர் செய்யும் எக்ஸ சைஸ்



---------------------


4. இன்னைக்கு அமாவாசை.உன் மீது பைத்தியமா இருக்கேன் என காதலியிடம் அள்ளி விட உகந்த நாள்



---------------------


5. காலை வணக்கம் சொன்னேன் முறைப்படி.நான் பரிசளித்த உன் கால் கொலுசுகள் சிரித்தன.எல்லாம் என் மண்டகப்படி


-----------------------


6. பொண்டாட்டி தோசை சுடும்போது நோட் பண்ணுங்க.அவங்களுக்கு சுடறதை மெல்லிசாவும் ,நமக்கு மொத்தமாவும் ஊத்தி கடனைக்கட்டுவாங்க


------------------------


7. ஆண்களுக்கு சீரியல் பிடிக்காததுக்கு காரணம் நைட் 11 மணி வரை பொண்டாட்டிங்க டி வி யை (யும்) அணைக்க விடுவதில்லை என்பதால்தான்


---------------------


8. நான் எப்போது முத்தம் கேட்டாலும் அப்புறம் என தட்டிக்கழிக்கிறாயே! நீ என்ன நாராயணசாமியின் வழித்தோன்றலா ?



--------------------


9. என் எல்லாக்கேள்விகளுக்கும் உன் பதிலை தருகிறாய்.என்னை ஏன் பிடிச்சிருக்கு எவ்ளவ் பிடிச்சிருக்கு க்கு மட்டும் புன்னகையை மட்டும் பதிலாய்



---------------------


10. எத்தனையோ பேர் என்னைத்திட்டி இருந்தாலும் நீ என்னைத்திட்டும்போது அருண் ஐஸ்க்ரீம் சாப்பிட்டது போல் இருக்கு




----------------------


11. கர்நாடகா வெற்றிக்கு ராகுலின் கடின உழைப்பே காரணம்-பிரதமர்# ஜிங் சக் கே சரணம்


------------------------


12. தீயா வேலை செய்யனும் குமாரு.யாரும் சொல்லாம நீயா செய்யனும்



----------------------


13. நான் உன்னை கடக்கும்போது அரசு ஊழியரின் அலட்சியமாய் உன் முக பாவனைகள்.நீ என்னை கேள்விகளால் மடக்கும்போது தனியார் ஊழியர் போல் என் பம்மல்கள்்



-----------------------


14. தொட்டுப்பார்க்க மட்டுமே சொந்தம்.பேங்க் கேஷியர் எண்ணும் பணம்



---------------------


15. இச் ? கேட்டேன். ஆரம்பத்தில் ச்சே! என்றாய் ! பின் ச்சீய்! என்றாய்! வாய் ப்புக்கு நன்றி என்றேன்



---------------------


16. நம் பார்வைப்பரிமாறல் நடக்கும்போதெல்லாம் பால்காரன் கணக்கு போல் சுவரில் கோடு போட்டேன்.இப்போது சுவரெல்லாம் கோட்டோவியங்கள்



---------------------


17. மழை வருதா என வானத்தை அண்ணாந்து பார்க்கத்தேவை இல்லை.உனக்கு என் மீது காதல் இருக்கா என உன் கண்களைப்பார்க்கத்தேவை இல்லை




--------------------

18. என்ன பேசனும் எப்போ பேசனும் என்ற வரையறைகள் , வரைமுறைகள் , விதிமுறைகள் எதுவும் காதலுக்கு இல்லை.இருக்கவும் கூடாது



------------------


19. எல்லை மீறியதாய் என்னை நீ உதா சீனப் படுத்தினாய்!



-----------------------


20. காலையில் என்னை 6 மணிக்கு எழுப்பி விடவும்னு சீட்டு குடுத்துட்டு போவுது சம்சாரம், நைசா 7 வரை தூங்கிடனும்



-------------------------------

2 comments:

ராஜி said...

உங்களுக்கு தோசை சுட்டு போடுறதே அதிகம். இதுல பேப்பர் ரோஸ்ட் வேற போடனுமாக்கும்?!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சூப்பர்