Thursday, December 20, 2012

தமிழ் சினிமா வில் புளித்துப்போன ”சீன்கள் ”

 கொச்சின்ல பொழுது போகாத பொம்முன்னு ஒரு ட்வீட்டர் இருக்காரு, அவர் ட்விட்டர் ஹேண்டில் கனல் கண்னன், சுருக்கமா கனல்,அவருக்கு பார்ட் டைம் ஜாப் ஆஃபீஸ் ஒர்க், ஃபுல் டைம் ஜாப் ட்விட்டர்.



  நேத்து வழக்கம் போல என்ன டேக் போடலாம்ன்னு மண்டைய சொரிஞ்சுட்டு இருந்திருக்காரு . சாயங்காலம் கே டிவில 5 மணிக்கு "கங்கா கவிரி " நம்ம ஐ. லியோனிநடிச்ச படம் தான்.. ஓடிட்டு இருந்திருக்கு..


அதுல ஒரு சீன்ல அருண் பாண்டியனையும் வடிவேலுவையும் ஒரு நாய் தொரத்திருக்கு ,  அண்னன் யோசிச்சிருக்காரு . இன்னும் எத்தன படத்துல தான் ஹீரோ/காமடியான நாய் தொரத்துராப்ல சின் வைப்பானுவன்னு ... 
அப்ப உதிச்ச டேக் தான் #RepeatedScenes ... ஒடனே ஒரு டிவிட்டு போட்டாரு ,
ஹிரோக்கள நாய் தொரத்துற சீன் #RepeatedScenes

டேக் காட்டு தீ மாதிரி  பத்திகிச்சு.. 

அதில் என் பார்வையில் எனக்கு பிடித்த சில டிவிட்டுகள் பகிர்கிறேன்.



1.  ஹீரோவா நடுவுல விட்டு ஜிம் பாய்ஸ் சுத்தி சுத்தி வர்றது (,மியூசிக்கல் சேர் போட்டியாடா நடக்குது? )


2.   ஹீரோ கடைசி சீன் ல வில்லனை ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கு கூப்பிடறது ( ஹாலிவுட்லயே இப்போ அப்டித்தான் )

3.   சாலை ஓரத்தில் ஒன்ஸ் அடிக்கிறவன் பைக்க கொள்ளைக்கார வில்லனை பிடிக்க ஹீரோ திருடிட்டு போறது ( அவன் பைக்ல சைடு லாக் , மெயின் லாக் எதுவும் போட்டிருக்க மாட்டான், பெப்பரப்பேன்னு விட்டிருப்பான் )

:4.  கதாநாயகிகள் அப்பா கிட்ட அடி வாங்கிட்டு பெட்ல போய் விழுந்து அழுவுறது  ( முதுகு மட்டும் குலுங்கும் ஹி ஹி )
5.  பார்ல வேலை செய்யும் சின்ன பையனை குடிக்க வந்த அல்லக்கை அடிக்கிறது  ( காண்டா மிருகம் மாதிரி இருப்பான் )

6.  ரேப் சீன் முடிஞ்சு புலி மானை பிடிச்சு கடிக்கிற போஸ்டர காமிக்கிறது  ( அசைவக்காட்சின்னு சிம்பாலிக்கா டெல்லிங்காம்)
7 ஹீரோயினுக்காக ஒரே நாளில் பல வித்தைகளை கற்றுத் தேறும் ஹீரோ.. ( தத்திக்கு ஒரு வித்தை கூட தெரியாது )

:8 தாடி, மீசை, மரு மூலமே ஹீரோ மாறுவேடத்தில் வந்தாலும் யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது! ( ஹேர் ஸ்டைலை மாத்திட்டா  அவங்கப்பாவே வந்தாலும் கண்டு பிடிக்கமுடியாதாம், அடேய் )


வசதிக்கேற்ப நம்பவே முடியாத இடத்தில் கதாநாயகனும் நண்பர்களும் கலாய்க்க ஒரு டீ கடை உருவாக்குவது ( அந்தகக்டையை ஒரு மொக்கை ஃபிகர் குரூப் கிராஸ் பண்ணிப்போகும் )
10 பீரங்கி வச்சி சுட்டாலும் ஹீரோ மட்டும் குண்டு படாம தப்பிகிறது ( புல்லட் புரூஃப் டிரஸ் போட்டிருந்தாக்கூட கொஞ்சம் குண்டு பாயும் , ஆனா இவங்க மேல எதுவும் படாது )


 11  ஹீரோவும் அவர் பின்னால் கதைக்கு தொடர்பே இல்லாதவங்க ஒரு 50 பேரும் ஒரே ஸ்டெப் டான்ஸ் ஆடுறது  ( முன் வரிசைல இருக்கறவங்க  டேன்ஸ் மாஸ்டர் கிட்டே அட்ஜஸ் பண்ணி போறவங்களாம் ) 


12 பத்து ரூபாய் மாமுல் கேட்டது தப்புன்னு மொத்த மார்க்கெட்டையே காலிபண்ணினாலும் ஜனங்க ஹீரோவை வாழ்த்தறது ( காய்கறி எல்லாம் மேலே 1 கி மீ ஆகாயத்துல பறக்கும் )

13  நிஜத்தில் ஈவ டீசிங்கில் புழலுக்குள்ளே போகவேண்டியவனைப் பார்த்து ஹீரோயினுக்குக் காதல் மலர்வது! ( பார்க்கப்பிச்சைக்காரனாடம் தாடியோட குளீக்காத தலையோட பல்லே துலக்காத கபோதி மாதிரி இருப்பான் )


14  பலபேரு அருவா கத்தி வச்சிருந்தாலும் ஹீரோவ ரேசன் கடைல வர்ற மாதிரி ஒருஒருத்தனா போயி அட்டாக் பண்றது..( ஒட்டுக்கா எல்லாரும் போனா ஹீரோ குட்டு வெளிப்பட்டுமே? )


15  தங்கச்சி கற்பிழக்கும் பொழுது ஊர் சுத்தப் போயிட்டு ஹீரோயினை மட்டும் நேரத்துல போய் காப்பாத்துறதுஹீரோ  ( ஹீரோயின் மேல வில்லன் கை படும்போது கரெக்ட்டா கன் மாதிரி வந்து காரியத்தை கெடுப்பாரு )


16  ஹீரோயின் மறுமணம் புரிந்தாலும் கன்னித் தன்மை மாறாமல் இருப்பது! ( ஃபிளாஸ்பேக்ல முதல் இரவுலயே புருஷன் ஹார்ட் அட்டாக்ல செத்திருப்பான் )


17. விஷம் கலந்த பாலை பாம்பு கரெக்டாக தட்டி விட்டு ஹீரோயினை காப்பாற்றுவது! ( நாய்க்குத்தான் மோப்ப சக்தின்னா பாம்புக்குமா? ) 

18  புடலங்காய்ன்னு நெனச்சி பாம்பை எடுத்து கழுத்துல போட்டுக்கிட்டு காமெடின்னு சொல்லி கடுப்பேத்துரது ( இதுவரை 200 படங்கள்ல இது வந்தாச்சு )


19.  ஹீரோ ஒரே ஒரு குத்து தான் விடுவார், ஆனா 10 அடியாளுங்களூம் 20 டைரக்‌ஷன்ல போய் விழுவாங்க ( அதுக்கு பேக் கிரவுண்ட்ல  ஒரு பண்ணாட்டான மியூசிக் வேற )


 20. நீங்க பேசனதை எல்லாம் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன்னு உள்ள வரது ( ஒட்டுக்கேட்டுட்டு வியாக்கியானம் என்ன வேண்டிகிடக்கு? ) 


21. ஹீரோ மிலிட்டரிலேர்ந்து ஊருக்கு வரும்போது கண்டிப்பா யூனிபார்மோடத் தான் வருவாரு!
22 அடிபட்ட கேரக்டருக்கு கரெக்டா இடது (அ) வலது நெற்றியோரம் மட்டும் லேசா ரத்தம் வரும். 

23  ஹீரோவுக்கு ஜெயில்ல எப்பவுமே ஃபேன்ஸி நம்பர்தான் 




24.  பர்ஸ்ட்நைட்டுல விளக்குஅனச்சிட்டு இருட்டை மட்டுமே காட்டுறது 

 25. எவ்வளவு நேரம் இருந்தாலும் டைம்பாமை 00:01 செக்கண்ட்லையே டிப்யூஸ் பண்ணுரது


 26. கன்னத்துல மரு வைச்சுகிட்டு வில்லன் கூட்டத்துக்கு போய் அவங்கள புடிக்கிற ஹிரோ 


27. பொடலங்காய்க்கு பதிலா பாம்ப வாங்கீட்டு கம்பீரமா போறது!! 

28. சரியா க்ளைமாக்ஸ்லே போலீஸ் வர்ரது 




:29.  பாதி ரேப் ஓடிட்டு இருக்கும் போது ஹீரோ வந்து காப்பாத்தறது

30.   வில்லன் ரேப் பண்ணி முடிச்சதும் வாயத் துடைக்கிறது..



31  ஹீரோ கோட்ட குளிர்ல நடுங்கி சாகிற ஹீரோயன்க்கு போர்த்தி விடுறது


 32 ஒண்ணுமே நடக்கலன்னாலும் ஒலக சாதனையா காட்ட தலைய கலச்சு பூவ பிச்சு விட்டுட்டு கதவை தொறக்கும் முதலிரவு காட்சிகள்¡ 


33  எப்பவுமே ஹீரோவ நேரா காட்டவே மாட்டாங்க ! கேட்டா ஹீரோ இன்ட்ரோவாம் டேய் !!! 


34  மாமுல் வசூல் பண்ண வர்ற ரவுடிங்ககிட்ட எலும்பும்தோலுமா இருக்கிற தள்ளுவண்டி வியாபாரி, யாவாரம் இல்ல. காசு இல்லைன்னு சொல்லுறது!


35  கார்த்திக் என்று எல்லா ஹீரோக்கும் பெயர் வைத்து நம்ம பிராணனை வாங்குவது 


36 . மணிக்கட்டை பிடிச்சு பார்த்தே ஹிரோயின் ப்ரெக்னென்ஸி ரிப்போர்ட் குடுக்கற ஒரு கிழவி கேரக்டர்


 37  அம்மா சமையல் செய்யும் போது ஹீரோயின் வாந்தி எடுத்ப்பது 

38 இனிமே 24 மணிநேரம் கழிச்சு தான் எதுவும் சொல்ல முடியும்னு ஸ்திர டயலாக்கோட ஒரு டாக்டர்

39.  வாட்சை கழட்டி வச்சுட்டு சண்டைக்கு ரெடியாவரது 


40. காமெடியன்கள் அடிவாங்கி மக்கள சிரிக்க வைக்க ட்ரை பண்றது....

41 சொந்த கதை மாதிரியே எடுக்குறது 
42  காதல் திருமன ஜோடியின் முன் எம்டி VIP சூட்கேஸை விட்டெறியும் அப்பா. அந்த சூட்கேஸும் வேணாம் என சொல்லும் மகன். 

 43  அறிமுக பாடல்ல ஹீரோ ஒரே ஃபிரேம்ல அஞ்சா வர்றது


44. டாபர் ஹனி பாட்டிலில் லேபிலை கிழித்துவிட்டு விஷமாக காட்டுவது


45   வில்லனோட பையன ஹிரோ கடத்துறது..


46 ஒரே  ஒரு பாட்டில 3 நிமிஷத்துல ஹீரோ  பணக்காரன் ஆறது 



47. ஃபைட் சீன்ல மண்பானை, காய்கறீ வண்டி எதுனா ஓரமா இருந்தா அடியாட்கள் அது மேல போய் விழுறது. 
48. டிவின்ஸுனா அட்லீஸ்ட் ஒரு சீன்லயாவது மீட் பண்ண வைக்கிறது..
49. ஹீரோயின் கரக்ட் டைம்ல காப்பாத்துற ஹீரோ.. ஆனா தங்கச்சிய கோட்ட விடுறது.. 
50. அடியாளா வர்றவன் ஹீரோ சும்ம ஒரு தட்டு தட்டுனாலே மூணு ரவுண்டு அடிச்சு டைவ் அடிச்சு விழுறது 
51. முதல் காட்சில ஹீரோ பிறக்கும் போது அம்மாவ கொன்னுட்டே பொறக்குறது..
52  ஹாஸ்பிட்டல் சீன்களில் நர்ஸுகளை ஒரண்ட இழுக்கும் ஹீரோ/காமடியன்ஸ் 
53. ராமராஜன் ஃபைட் சீன்ல நீட்டா டக்கின் பண்ணி ஷூ எல்லாம் போட்டு ஃபைட்டுறது. 


54. மக்கள் க்ரவுட்ல எப்பவும் ஒரு சொட்ட மண்ட.. இடிச்சபுளி செல்வராஜ் .. 
55. அம்மன் படங்கள்ல புருஷன காப்பாத்த ஹீரோயின் க்ளைமாக்ஸ்ல ஒரு டான்ஸ்
56. அர்ஜுன் படங்கள்ல பிரதமர் இந்தி பேசுவர்.. தீவிரவாதி தமில் பேசுவான்..
57. கோர்ட் சீன்ல கண் தெரியாதவர கண்ணால் பாத்த சாட்ச்சியா காட்டுறது.

 ந்ன்றி  - அனைத்து ட்வீட்டர்ஸ்

@kavi_rrsk
 ஹீரோவா நடுவுல விட்டு ஜிம் பாய்ஸ் சுத்தி சுத்தி வர்றது #RepeatedScenes
@urs_priya
  ஹீரோ கடைசி சீன் ல வில்லனை ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கு கூப்பிடறது.#RepeatedScenes
@Elanthenral
  சாலை ஓரத்தில் ஒன்ஸ் அடிக்கிறவன் பைக்க கொள்ளைக்கார வில்லனை பிடிக்க ஹீரோ திருடிட்டு போறது #RepeatedScenes
கதாநாயகிகள் அப்பா கிட்ட அடி வாங்கிட்டு பெட்ல போய் விழுந்து அழுவுறது #RepeatedScenes
@kasaayam
 
பார்ல வேலை செய்யும் சின்ன பையனை குடிக்க வந்த அல்லக்கை அடிக்கிறது #RepeatedScenes
@kasaayam
 ரேப் சீன் முடிஞ்சு புலி மானை பிடிச்சு கடிக்கிற போஸ்டர காமிக்கிறது #RepeatedScenes
@iThamilachi
 ஹீரோயினுக்காக ஒரே நாளில் பல வித்தைகளை கற்றுத் தேறும் ஹீரோ.. #RepeatedScenes
தாடி, மீசை, மரு மூலமே ஹீரோ மாறுவேடத்தில் வந்தாலும் யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது!#RepeatedScenes
@chinnapiyan
 வசதிக்கேற்ப நம்பவே முடியாத இடத்தில் கதாநாயகனும் நண்பர்களும் கலாய்க்க ஒரு டீ கடை உருவாக்குவது #RepeatedScenes
@naanavarillai
 
பீரங்கி வச்சி சுட்டாலும் ஹீரோ மட்டும் குண்டு படாம தப்பிகிறது #RepeatedScenes
@SeSenthilkumar
 ஹீரோவும் அவர் பின்னால் கதைக்கு தொடர்பே இல்லாதவங்க ஒரு 50 பேரும் ஒரே ஸ்டெப் டான்ஸ் ஆடுறது #RepeatedScenes
@SeSenthilkumar
 பத்து ரூபாய் மாமுல் கேட்டது தப்புன்னு மொத்த மார்க்கெட்டையே காலிபண்ணினாலும் ஜனங்க ஹீரோவை வாழ்த்தறது #repeatedscenes
 நிஜத்தில் ஈவ டீசிங்கில் புழலுக்குள்ளே போகவேண்டியவனைப் பார்த்து ஹீரோயினுக்குக் காதல் மலர்வது!#RepeatedScenes
@Athikapprasanki
 பலபேரு அருவா கத்தி வச்சிருந்தாலும் ஹீரோவ ரேசன் கடைல வர்ற மாதிரி ஒருஒருத்தனா போயி அட்டாக் பண்றது...#repeatedscenes
 தங்கச்சி கற்பிழக்கும் பொழுது ஊர் சுத்தப் போயிட்டு ஹீரோயினை மட்டும் நேரத்துல போய் காப்பாத்துறதுஹீரோ #RepeatedScenes
 ஹீரோயின் மறுமணம் புரிந்தாலும் கன்னித் தன்மை மாறாமல் இருப்பது! #RepeatedScenes
@amas32
விஷம் கலந்த பாலை பாம்பு கரெக்டாக தட்டி விட்டு ஹீரோயினை காப்பாற்றுவது! #RepeatedScenes
@su_boss2
 புடலங்காய்ன்னு நெனச்சி பாம்பை எடுத்து கழுத்துல போட்டுக்கிட்டு காமெடின்னு சொல்லி கடுப்பேத்துரது #repeatedscenes
@itisprashanth
 10 rowdies flying in different directions because of one punch from the hero!! #repeatedscenes
@thoatta
 நீங்க பேசனதை எல்லாம் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன்னு உள்ள வரது #RepeatedScenes
@RavikumarMGR
 ஹீரோ மிலிட்டரிலேர்ந்து ஊருக்கு வரும்போது கண்டிப்பா யூனிபார்மோடத் தான் வருவாரு!#RepeatedScenes
@iParisal
 அடிபட்ட கேரக்டருக்கு கரெக்டா இடது (அ) வலது நெற்றியோரம் மட்டும் லேசா ரத்தம் வரும். #RepeatedScenes
 ஹீரோவுக்கு ஜெயில்ல எப்பவுமே ஃபேன்ஸி நம்பர்தான் #RepeatedScenes

@Rjcrazygopal
 எனக்கும் அப்படித்தான் பண்ணினாங்க சீரியல் ல RT : @rkthiyagarajan
 பர்ஸ்ட்நைட்டுல விளக்குஅனச்சிட்டு இருட்டை மட்டுமே காட்டுறது #RepeatedScenes
 எவ்வளவு நேரம் இருந்தாலும் டைம்பாமை 00:01 செக்கண்ட்லையே டிப்யூஸ் பண்ணுரது #RepeatedScenes
@maghizchi1
 கன்னத்துல மரு வைச்சுகிட்டு வில்லன் கூட்டத்துக்கு போய் அவங்கள புடிக்கிற ஹிரோ #RepeatedScenes
@sudhanks
 பொடலங்காய்க்கு பதிலா பாம்ப வாங்கீட்டு கம்பீரமா போறது!! #RepeatedScenes

@mayan212012
 சரியா க்ளைமாக்ஸ்லே போலீஸ் வர்ரது #repeatedscenes
@santhozn
 ன்னாச்சு…… #RepeatedScenes

: பாதி ரேப் ஓடிட்டு இருக்கும் போது ஹீரோ வந்து காப்பாத்தறது #RepeatedScenes
  வில்லன் ரேப் பண்ணி முடிச்சதும் வாயத் துடைக்கிறது.. #RepeatedScenes

@talkativewriter
 ஹீரோ கோட்ட குளிர்ல நடுங்கி சாகிற ஹீரோயன்க்கு போர்த்தி விடுறது #repeatedscenes
@jannal_seat
 ஒண்ணுமே நடக்கலன்னாலும் ஒலக சாதனையா காட்ட தலைய கலச்சு பூவ பிச்சு விட்டுட்டு கதவை தொறக்கும் முதலிரவு காட்சிகள்¡ #Repeatedscenes
@santhozn
 எப்பவுமே ஹீரோவ நேரா காட்டவே மாட்டாங்க ! கேட்டா ஹீரோ இன்ட்ரோவாம் டேய் !!! #RepeatedScenes
@kaattuvaasi
 மாமுல் வசூல் பண்ண வர்ற ரவுடிங்ககிட்ட எலும்பும்தோலுமா இருக்கிற தள்ளுவண்டி வியாபாரி, யாவாரம் இல்ல. காசு இல்லைன்னு சொல்லுறது! #RepeatedScenes
@talkativewriter
 கார்த்திக் என்று எல்லா ஹீரோக்கும் பெயர் வைத்து நம்ம பிராணனை வாங்குவது #repeatedscenes
@maghizchi1
 மணிக்கட்டை பிடிச்சு பார்த்தே ஹிரோயின் ப்ரெக்னென்ஸி ரிப்போர்ட் குடுக்கற ஒரு கிழவி கேரக்டர்#Repeatedscenes
@alaigal2
 அம்மா சமையல் செய்யும் போது ஹீரோயின் வாந்தி எடுத்ப்பது #Repeatedscenes
@vivek_here
 தினம் இவரு--> @0SGR
 எதாவது டேக் போடுறது.. #repeatedscenes
@maghizchi1
 இனிமே 24 மணிநேரம் கழிச்சு தான் எதுவும் சொல்ல முடியும்னு ஸ்திர டயலாக்கோட ஒரு டாக்டர்#RepeatedScenes
@RenugaRain
 வாட்சை கழட்டி வச்சுட்டு சண்டைக்கு ரெடியாவரது #
repeatedscene
@Athikapprasanki
காமெடியன்கள் அடிவாங்கி மக்கள சிரிக்க வைக்க ட்ரை பண்றது....#repeatedscenes
: தமிழ் சினிமா!#RepeatedScenes
@sudhagarcyru
சொந்த கதை மாதிரியே எடுக்குறது #RepeatedScenes
@jnfr88
காதல் திருமன ஜோடியின் முன் எம்டி VIP சூட்கேஸை விட்டெறியும் அப்பா. அந்த சூட்கேஸும் வேணாம் என சொல்லும் மகன். #RepeatedScenes
 அறிமுக பாடல்ல ஹீரோ ஒரே ஃபிரேம்ல அஞ்சா வர்றது
@jnfr88
டாபர் ஹனி பாட்டிலில் லேபிலை கிழித்துவிட்டு விஷமாக காட்டுவது #RepeatedScenes
@pesubavan
 வில்லனோட பையன ஹிரோ கடத்துறது..#REPEATEDSCENES
@SelvaaRocky
 ஒரு பாட்டில பணக்காரன் ஆறது #RepeatedScenes

இனி  கனல் போட்டது. ஹிஹி 

ஃபைட் சீன்ல மண்பானை, காய்கறீ வண்டி எதுனா ஓரமா இருந்தா அடியாட்கள் அது மேல போய் விழுறது. #RepeatedScenes
டிவின்ஸுனா அட்லீஸ்ட் ஒரு சீன்லயாவது மீட் பண்ண வைக்கிறது..#RepeatedScenes
ஹீரோயின் கரக்ட் டைம்ல காப்பாத்துற ஹீரோ.. ஆனா தங்கச்சிய கோட்ட விடுறது.. #RepeatedScenes
அடியாளா வர்றவன் ஹீரோ சும்ம ஒரு தட்டு தட்டுனாலே மூணு ரவுண்டு அடிச்சு டைவ் அடிச்சு விழுறது #RepeatedScenes
முதல் காட்சில ஹீரோ பிறக்கும் போது அம்மாவ கொன்னுட்டே பொறக்குறது..#RepeatedScenes
ஹாஸ்பிட்டல் சீன்களில் நர்ஸுகளை ஒரண்ட இழுக்கும் ஹீரோ/காமடியன்ஸ் #RepeatedScenes
ராமராஜன் ஃபைட் சீன்ல நீட்டா டக்கின் பண்ணி ஷூ எல்லாம் போட்டு ஃபைட்டுறது. #repeatedscenes
ஆரிசு செயராசு பாட்டெல்லாம் ..... ஹஹஹஹஹ்ஹா.. #repeatedscenes
மக்கள் க்ரவுட்ல எப்பவும் ஒரு சொட்ட மண்ட.. இடிச்சபுளி செல்வராஜ் .. #repeatedscenes
அம்மன் படங்கள்ல புருஷன காப்பாத்த ஹீரோயின் க்ளைமாக்ஸ்ல ஒரு டான்ஸ் #repeatedscenes
அர்ஜுன் படங்கள்ல பிரதமர் இந்தி பேசுவர்.. தீவிரவாதி தமில் பேசுவான்.. #repeatedscenes
கோர்ட் சீன்ல கண் தெரியாதவர கண்ணால் பாத்த சாட்ச்சியா காட்டுறது.. #repeatedscenes


கிளைமாக்ஸ் : @TrendsChennai
 
#repeatedscenes
 is now trending in #Chennai


நான் திரைக்கதை அமைத்திருந்தால்? - நீஎபொவ

http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/12/Neethane-En-Ponvasantham_movie_review-300x300.jpg 

இளையராஜாவின் பிரமாதமான சூப்பர் ஹிட் பாடல்கள் , விண்ணைத்தாண்டி வருவாயா மேஜிக் ஹிட்டால் அதீத எதிர்பார்ப்பு , சந்தனச்சிலை சமந்தா ,காமெடி கலக்கல் சந்தானம்  இவ்வளவு பிளஸ் இருந்தும் படம் ஏன் ஊத்திக்கொண்டது? என்ன செஞ்சா  அல்லது செஞ்சிருந்தா படத்தை காப்பாத்தி இருக்கலாம்? ஒரு பொழப்பத்த ஆராய்ச்சி ... 


1. திரைக்கதையின் பெரிய மைனஸ் ஹீரோ - ஹீரோயின் இருவருக்கும் நடக்கும் ஈகோ மோதல்களில் கருத்து வேற்றுமை வருவது, 5 முறை பெரிய காரணம் , அல்லது சண்டை ஏதும் இல்லாமல் பிரிவது . நிஜ வாழ்க்கைல தம்பதிகள் , காத்லர்கள் இப்படி பிரிவது சகஜம் என்றாலும்  ஒரு நாவல் அல்லது சினிமாவுக்கு வலுவான காரணங்கள் காட்டனும்.18 அசிஸ்டெண்ட் டைரகடர்கள் வெச்சு அவங்களுக்கு சம்பளம் கொடுத்து வேஸ்ட் பண்றதை விட ஈசியா ஒரு வழி இருக்கு. ஆனந்த விகடன் , குமுதம் மாதிரி பிரபல வார இதழில் ஒரு போட்டி அறிவிக்கனும். காதலர்களே! இது உங்களுக்கான போட்டி ! உங்கள் வாழ்வில் நடந்த பிரிவுக்கான சம்பவம் எது? மனதைத்தொடும் நிகழ்வுக்கு ரூ 25,000 பரிசு  தலா 4 பேருக்கு , மொத்தம் ரூ 1 லட்சம் பரிசுன்னு ஒரு அறிவுப்பு .


 போதும், கிட்டத்தட்ட  5 லட்சம் புக்ஸ் விற்கும் புக்கில் இப்படி ஒரு அறிவிப்பு வந்தா  மினிமம் 1000 பேர் , மேக்சிமம் 15,000 பேர்  ஐடியா அனுப்புவாங்க. அதுல இருந்து  4 தேர்வு செய்து ஆசிரியர் தருவார். அதை சினிமாவுக்கு ஏற்ற படி  டெவலப் பண்ணிக்கலாம் . .



2. மேலே சொன்ன  ஐடியா இயக்குநருக்கு ஈகோவா இருந்துச்சுன்னா இன்னொரு வழி இருக்கு . திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் கிட்டே போய் சார், இந்த மாதிரி  லவ்வர்ஸ் பிரிய  4 அல்லது 5 சிச்சுவேஷன் வேணும் , டைட்டில்ல  உங்க பேர் போட்டுடறோம்னா அவர் ஒத்துழைப்பார். ஆல்ரெடி  ஷாம் -ன் 12 பி படத்துல திரைக்கதை மேற்பார்வையில் உதவி செஞ்சிருக்கார் 



3. படம் பூரா ஹீரோ ஹீரோயின் 2 பேரையே ரொம்ப நேரம் காட்டிட்டே இருந்தா போர் அடிக்கும். ஹீரோவின் அண்ணன்  ஆஃபீசில் வேலை செய்யும் சக கொலீக்கை பொண்ணு பார்க்கும் சீன் ரொம்ப முக்கியம். அந்த சீனில் ஹீரோ அண்ணன் கூட போவது மாதிரியும்  ரொம்ப வசதி படைத்த  அந்தப்பெண்ணின் பெற்றோர் அடிக்கும் நக்கல்கள் ஹீரோவின் மனதை பாதிப்பதையும் , இதே போல் தானே ஹீரோயினும் இருப்பார் என்ற நினைப்பு ஹீரோவுக்கு வருவது போலவும் ஆடியன்சுக்கு விஷூவலா காட்ட வேண்டும் . நான் சொன்ன எல்லாமே மறைமுகமாக படத்தில் உணர்த்தப்படுது , என்றாலும் இன்னும் டீட்டெயிலாக தேவை .


4. ஹீரோ திடீர்னு தன் அண்ணியின் தங்கையுடன் நிச்சயத்துக்கு ஓக்கே சொன்னதை பலரால் ஜீரணிக்க முடியலை. ஹீரோயினுக்கு வேற பக்கம் மேரேஜ் ஆகாத வரை ஹீரோ பொறுத்துத்தான் போகனும். அதை நியாயப்படுத்த  ஹீரோ , ஹீரோவின் அண்ணீயின் தங்கை இருவரும் சாதாரணமாக ஒரு ஹோட்டலில் சாப்பிட வரும்போதோ , அல்லது ஒரு டான்ஸ் பார்டியில் இருவரும் இணைந்து நடனம் ஆடும்போதோ ஹீரோயின் அங்கே வந்து பிரச்சனை பண்ணி அனைவர் முன் அவமானப்படுத்துவது மாதிரி சீன் வெச்சுட்டா அந்த அவமானத்தால பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாழ்க்கை தர என ஒரு சா;ல்ஜாப்பு கிடைக்கும் . சும்மா பேசிட்டு இருந்ததுக்கே குதிச்சியே , இப்போ பாரு மேரேஜே பண்ணிக்கப்போறேன்னு ஹீரோ ஹீரோயின் கிட்டே டயலாக் பேசலாம்.




5. ஹீரோயின் ஹீரோ கூடவே  காலேஜில் ஜாயின் பண்ண வர்றேன் என சொல்லும் போது ஹீரோ “ நீ வந்தா படிக்க முடியாது , எங்க ஃபேமிலி சிச்சுவேஷன் இப்படி இருக்கு, நான் நல்லா படிச்சே ஆகனும், நாம மாசம் ஒரு டைம் மீட் பண்ணுவோம்” என ஓப்பனாக சொல்லிட்னும். எந்தக்காரணுமுமே  சொல்லாம நீ வர வேணாம்னு சொல்லக்கூடாது . ஹீரோயின் ஹீரோவைப்பார்க்க வரும்போது ஹீரோ வேற ஒரு பொண்ணு கிட்டே பேசிட்டு இருப்பதைப்பார்த்து சந்தேகம் வந்து வாக்குவாதம் வருவது போல காட்சி வைக்கலாம் 



http://moonramkonam.com/now/wp-content/uploads/2012/03/nee-thane-en-ponvasantham-samantha7.jpg


6. க்ளைமாக்ஸ்ல ஹீரோவும் , ஹீரோயினும் நைட் ஃபுல்லா தாங்கள் சந்திச்ச பழைய இடங்கள்ல ரவுண்ட் அடிக்கறாங்க. அதை யதேச்சையா பார்த்து  மணப்பெண்ணோ , அவர் அப்பாவோ மேரேஜை நிறுத்துவது மாதிரி காட்சி வைக்கனும். ஏன்னா எல்லாம் முடிஞ்சு மேரேஜ்க்கு ஒரு மணி நேரம் முன்னே அந்தப்பொண்ணை அம்போன்னு  கழட்டி விடுவது கேப்டனை கூட்டணில இருந்து கழட்டி விட்ட ஜெ நிலைமை மாதிரி இருக்கு 



7. ஜீவா எல்லா சீனிலும் மீசை இல்லாம இருப்பது சரி இல்லை . ஸ்கூல் ம் காலேஜ் ஓக்கேஎ, ஆஃபீஸ் கெட்டப் வரும்போது கோ பட ஜீவா கெட்டப் பக்காவா சூட் ஆகும். அதே போல் சந்தானமும் பல காட்சிகளில் மீசை இல்லாமல் , மீசையுடன் என மாறி மாறி வருது , எடிட்டிங்க் ஃபால்ட் , அதையும் சரி செய்யனும் 



8. சாந்து சாய்ந்து பாடல் காட்சியை  ரொம்ப டீசண்ட்டா எடுக்கனும் , கேளடி கண்மணி வசந்த் எடுத்த நீ பாதி நான் பாதி கண்ணே , அருகில் நீ இன்றித்தூங்காது கண்ணே ! பாடல் காட்சி போல  கவிதையா எடுக்கனும். சிச்சுவேஷனும்  நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திக்கும் காதலர்கள் பாடுவது போல் வைக்கனும். இப்படி கில்மாப்பாட்டு மாதிரி  எடுக்கக்கூடாது. அந்தப்பாட்டுக்கே ஜீவன் போச்சு பிக்சரைசேஷன்ல 



9. ஜீவா - சமந்தா  வாக்குவாதக்காட்சிகளில் வசனங்கள் ஓவர்  + ஆங்கிலம் ஓவர். மணிரத்ன சுருக்காய் வசனங்களை குறைக்கனும்




10. படத்துல பி ஜி எம் இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம் , இசை ஞானி கிட்டே “ சார், மவுன ராகம் படம் மாதிரி இதுல எதிர்பார்க்கறோம், ஆடியொபொ ஆல்ரெடி ஹிட், மிச்சம் பி ஜி எம் மும் ஹிட் ஆகிடுச்சுன்னா படம் எங்கியோ போயிடும் , எல்லாம் உங்க கைல தான் இருக்கு என் லாவகமா பேசி பி ஜி எம் ஒர்க் பக்காவா முடிக்கனும் 







11. அவ்வளவு வசதியான பொண்ணு பழைய நோக்கியா ஃபோனா கால ஓட்டத்துக்கு தகுந்த மாதிரி மாடலை மட்டும் மாத்திட்டு இருக்கறது நம்ப முடியல , ஆண்ட்ராய்டு ஃபோன் , ஆப்பிள் ஃபோன் இப்படி காட்டனும் 


12. ஹீரோ , ஹீரோயின் இருவருக்கும் இடையே வச்தி , அந்தஸ்து பேதம் மலையளவு இருக்கு. அவங்களையும் அறியாமல் கண்டிப்பா அது பிரச்சனையா வெடிக்கும் . அப்படி ஒரு சீன் வைக்க்னும். உதாரணாம “ நான் கிஃப்ட் குடுக்கும்போதெல்லாம் உணத்தியா வாங்கிக்கிட்டே, இப்போ வேற நல்ல இடம் கிடைச்சதும் என்னை கழட்டி விடப்பார்க்கறியா? “ அப்டினு ஹீரோயின் சொல்வது போலவும் , ஹீரோ வெகுண்டு எழுவது போலவும்  காட்சி வைக்கனும் 



13. ஹீரோ , ஹீரோயின் பொசுக்கு பொசுக்குன்னு லிப் கிஸ் 13 தடவை அடிக்கறாங்க, ஆனா ஒண்ணைக்கூட உருப்படியா காட்டலை, ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொன்னார் என்பது மாதிரி ஒரு கிஸ் அடிச்சாலும் அது கமல் கிஸ் மாதிரி நச்சுன்னு இருக்கனும் , நல்லா காட்டனும் 




14. சந்தானம் காமெடி பின் பாதில சுத்தமா இல்லை, ஓக்கே ஓக்கே லெவலுக்கு இல்லைன்னாலும் இன்னும் அவருக்கு காட்சிகள் வைக்கனும் . படம் பார்த்தவங்க பெரும்பாலும் சந்தானம் இருக்கும் வரை அதாவது இடைவேளை வரை படம் ஓக்கே , பின் பாதி திராபைங்கறாங்க.. 



15. ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு உடம்பு சரி இல்லாம போகும்போது , அல்லது ஒரு விபத்தில் அடி பட்டு இருக்கும்போது மற்றவர் அவரை தாங்கும் சீன்கள் கண்டிப்பா சாரி அன்பா வைக்கனும். லவ் ஸ்டோரிக்கு அது முக்கியம். அது எதுக்குன்னா சுக துக்கங்களில் சமமா பங்கெடுக்க ஒரு துணை இருக்குன்னு காட்ட

குஜராத்தில் மோடி கலக்கினார் , தமிழ் நாட்டில் ஜெ கலங்க வைத்தார்

http://lalitkumar.in/blog/wp-content/uploads/2011/09/narendra_modi.jpgகுஜராத்தில் பா.ஜ. முன்னிலை; 3 வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கிறார் மோடி
Posted Date : 07:33 (20/12/2012)Last updated : 12:33 (20/12/2012)
அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், இமச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளதால், ஆளும் பா.ஜனதா  ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 

குஜராத் முன்னணி நிலவரம் 


பா.ஜ. க  - 115 ( 5 வெற்றி + 110 முன்னிலை)

காங்கிரஸ்  - 62 ( 3 வெற்றி + 59 முன்னிலை )

மற்றவை - 6    ( 3  வெற்றி + 3 முன்னிலை )


குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே பாஜக முன்னிலை பெற்றுள்ளது.


இதன் மூலம் மோடி தலைமையிலான பாஜக அரசு குஜராத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.


மோடி வெற்றி 


மேலும் மணி நகர் தொகுதியில் போட்டியிட்ட நரேந்திர மோடிகு 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


இமாச்சல் முன்னணி நிலவரம்:


காங்கிரஸ்   - 39  ( 13  வெற்றி +  26 முன்னிலை )

பா.ஜ.க.  - 24      (  7 வெற்றி + 17 முன்னிலை )

மற்றவை -  6   ( 1 வெற்றி + 5 முன்னிலை )




இமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதால் அக்க்ட்சி ஆட்சியை பிடிக்கிறது.  ஆளும் பா.ஜ. க பின்னடைவை சந்தித்துள்ளது.


முடிவு குறித்து பேசிய முதல்வர் பி.கே. துமல், மக்களின் முடிவை வரவேற்கிறோம். சட்டமன்றத் தேர்தலில் யாரை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களோ அதை நாங்களும் வரவேற்கிறோம்' என்று தெரிவித்தார்.
சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி  அதிக இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில்,அக்கட்சி பா.ஜனதாவிடமிருந்து  ஆட்சியை கைப்பற்றி உள்ளது. 

இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பிரேம்குமார் துமல் தலைமையில் பா.ஜனதா ஆட்சியின்  பதவிக்காலம் முடிவடைந்த நிலையில்,கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி சட்ட்சபை  தேர்தல் நடந்தது.

மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் சராசரியாக 74.6 சதவீத வாக்குகள் பதிவாகி  இருந்தது.இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில்  பா.ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்ற போதிலும்,பின்னர் பா.ஜ.க.  வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை  பெற்றனர்.

இமாச்சல பிரதேசத்தில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 35 தொகுதிகளில்  வெற்றி பெற வேண்டும்.பகல் 12  மணி அளவில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி  அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி பலத்துடன் முன்னிலை பெற்றது.68 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 13 வெற்றி பெற்றும், 26 தொகுதிகளில்  முன்னிலை பெற்றும் காணப்பட்டது.இதனால் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி  அமைக்கிறது.

பா.ஜனதா 7 இடங்களில் வெற்றி பெற்றும், 17 இடங்களில் முன்னிலை பெற்றும்,  மற்ற கட்சிகள் 1 இடத்தில் வெற்றி பெற்றும், 5 இடங்களில் முன்னிலை பெற்றும்  காணப்பட்டன.


திடீர் சாலை மறியலுக்கு தடை; குண்டர் சட்டத்திலும் திருத்தம்! 
Posted Date : 07:42 (20/12/2012)Last updated : 07:42 (20/12/2012)
சென்னை: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முதல் முறை குற்றம் செய்பவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும் என்றும், 30 நாளுக்கு முன்பே அனுமதி பெறாமல் நடத்தப்படும் சாலை மறியல் தடை செய்யப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  

சென்னையில் 3 நாள் நடந்த கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டை நேற்று முடித்து வைத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா,இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவர் பேசுகையில்,"குண்டர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.குற்றங்களைச் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள், பொது அமைதியைக் குலைக்கும் வகையில் ஏதேனும் ஒரு குற்றச் செயலை முதல் முறையாகச் செய்தாலே அவர்கள் குண்டர் சட்டத்ததின் கீழ் கைது செய்யப்படுவர்.

மேலும், சைபர் குற்றங்களைப் புரிவோரும் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர்.குண்டர் சட்டங்களுக்கான ஆவணங்களை தயாரிப்பதற்கென வழங்கப்படும் தொகையும் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

சாலை மறியலுக்கு 30 நாளுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்.அப்படி பெறாமல் நடத்தப்படும் மறியல் தடை செய்யப்படும்" என்றார்.


புதிய திட்டங்கள் 
மேலும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பல்வேறு புதிய திட்டங்களையும் அவர் வெளியிட்டார்.

டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் ரூ.20 கோடியில் 4 ஆயிரம் இடங்களில் நிலத்தடி நீர் செறிவு துளைகள் அமைக்கப்படும். மேலும், முத்துப்பேட்டை சூழலியல் சுற்றுலா மையமாக மேம்படுத்தப்படும்.

இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன் பெறுவோருக்கு அதன் பராமரிப்புகள் குறித்து இப்போது ஒரு நாள் மட்டுமே பயிற்சி  அளிக்கப்படுகிறது. இனி, மூன்று நாட்கள் பயிற்சி கொடுக்கப்படும். கரூர் அரசு மருத்துவமனையானது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகவும், ராமநாதபுரம் மாவட்டத் தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்படும்.

உதகையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மனநல மருத்துவமனையும் ஏற்படுத்தப்படும்.

பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தனியாக நெடுஞ்சாலைகள் கோட்டம் உருவாக்கப்படும். கரூர் மாவட்டத்தில் சாயக்கழிவு பிரிவுகளை உள்ளடக்கிய பூங்காக்களை அமைப்பதற்கு கடன் மற்றும் மானிய உதவிகள் வழங்கப்படும். குளங்களை ஆழப்படுத்தும் பணிகள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ஒரு மீட்டர் வரை மேற்கொள்ளப்பட்டன.

அவற்றை மேலும் ஆழப்படுத்தும் பணிகள் தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, தருமபுரி மாவட்ட கிரிமங்கலம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய இடங்களில் இருபாலர் கல்லூரிகள் தொடங்கப்படும். அங்கு சூரிய மின்சக்தி பூங்காவும், மிகப்பெரிய மின் உற்பத்தித் திட்டமும், மீன்களைப் பதப்படுத்தும் பூங்காக்களும் அமைக்கப்படும்.

தருமபுரிக்கு கூடுதல் கவனம்: இனக் கலவரங்களால் பாதிக்கப்படும் தருமபுரி மாவட்டத்துக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் நக்சல் பாதிப்புகள் அதிகமுள்ள 32 கிராமங்களில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ரூ.7 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள் மாதமொரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்: திட்டங்கள் செயல்படுத்துவதைக் கண்காணிக்க மாதத்துக்கு ஒருமுறையாவது மூத்த அதிகாரிகள் கள ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

மாதத்துக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கும் ஆய்வுக் கூட்டம் இப்போது ஏறத்தாழ நடைபெறுவதே இல்லை என்ற நிலை உள்ளது. இதை மாற்றி ஒவ்வொரு மாதமும் துறைத் தலைவர்கள் அடங்கிய ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் நடத்த வேண்டும்.

அனைத்துச் சிறைச்சாலைகளிலும் விடியோ கான்ஃபரன்ஸ் வசதி

தமிழகத்தில் உள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் விடியோ கான்பரன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும்.

விடியோ கான்பரன்ஸ் வசதியை புதிதாக 60 இடங்களில் ஏற்படுத்துவதோடு, ஏற்கெனவே 11 இடங்களில் உள்ள அமைப்புகளும் புதுப்பிக்கப்படும்.

புழல் சிறையில் ரூ.3 கோடியில் சூரிய மின்சக்தி அமைப்பு அமைக்கப்படும். அதேபோல், புழல், வேலூர், கடலூர், சேலம் ஆகிய மத்திய சிறைகளில் ரூ.25 லட்சத்தில் பைகளை சோதனையிடும் ஸ்கேனர்கள் பொருத்தப்படும் என்றார்.
நன்றி - விகடன் 


மக்கள் கருத்து 

1. உடன்பிறப்பே, ஒரு மதவாத கட்சி குஜராத்தில் ஐந்தாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றதில் எனக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சி .... திரு. மோடி என் நெடுங்கால நண்பர் ... அவர் தொடர்ந்து மூன்றாவது முறை வெற்றி பெற்றது கேட்டு இதயம் இனிக்கிறது ... கண்கள் பனிக்கிறது .... இப்படி நடக்கபோவதை நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த திமுக செயற்குழு கூட்டத்திலேயே கணித்து கூறினேன் ... நேற்று இரவே நான் நண்பர் மோடியிடம் தொலைபேசியில் என் வாழ்த்துக்களை முன்னதாகவே தெரிவித்துவிட்டேன் .... அவரும் நன்றி தெரிவித்தார் ... எங்கள் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டோம் .... மோடியின் அப்பாவும் நானும் "காந்தியின் உப்பு சத்தியாக்ரகம்" தண்டியில் நடந்தபோது சந்தித்து அளவலாவியதை நினைவு கூர்ந்தார் .
.. வழியில் ஒரு உடுப்பி ஓட்டலில் 2 இட்லி 1 மசால் வடை நான் மோடியின் அப்பாவுக்கு கடனாக வாங்கி கொடுத்ததையும் அதை ஒரு இத்தாலிய வெள்ளை காகம் பறித்து சென்றதையும் அன்னாருக்கு நான் நினைவுபடுத்தினேன் ... இன்னும் சொல்லப்போனால் 2014 தேர்தலில் அவர் தான் பிஜேபியின் பிரதமர் வேட்ப்பாளராக நிற்க வேண்டும் என்ற என் அவாவை அவரிடம் தெரிவித்தேன் ..... அவர் மிகவும் சந்தோஷப்பட்டார் .... மேற்படி சம்பவங்கள் மோடி என் நீண்ட நாள் நண்பர் என்ற முறையில் நடைபெற்றனவே அன்றி நாம் ஒரு போதும் மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைக்க அல்ல என்பதை தம்பிக்கு இக்கடிதம் மூலம் நான் தெரிவித்து கொள்கிறேன். -
எஸ். மணி - ஸ்ரீபெரும்புதூர் ,இந்தியா
2.  முதலில் கீழ் கண்ட புள்ளிவிவரங்களை காணுங்கள், பிறகு குஜராத்தில் மோடியின் வெற்றி எப்படிபட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். (1) எல்லா அரசுக்கும் உரிய ANTI -INCUMBENT எதிர்ப்பு வாக்குகளை மீறி மூன்றாவது முறையாக மோடி வெற்றி கோடி நாட்டியது. தொடர்ந்து மூன்று முறையும் 1995 இல் இருந்து பிஜேபி ஆட்சிசெய்து வருவதும் சாதாரண விஷயம் இல்லை. ஜோதி பாசு தான் இதற்கு முன் தொடர்ந்து ஜெயித்து வந்தார். அதனை பாராட்டியே ஆகா வேண்டும் (2) இது நம்ம ரத்த காட்டேரிக்கு. தேர்தல் நிலவரங்களை கவனிக்கும் போது (குறிப்பாக TIMES NOW TV LIVE COVERAGE ) பெரு வாரியான முஸ்லிம்கள் மோடிக்கு (பிஜேபி) வாக்களித்திருக்கிறார்கள். முஸ்லிம்கள் அதிகமாக குடியிருக்கும் இடங்களிலும் கோத்ரா கலவரம் நடந்த இடத்திலும் பிஜேபி வென்றுள்ளது. மேலும் காங்கிரசின் ஆதிவாசிகள் வாக்குகளை இந்த முறை மோடி சுரண்டிவிட்டார். 
இதன் மூலம் என்ன தெரிகிறதென்றால் முஸ்லிம்களும் ஆதிவாசிகளும் வளர்ச்சிக்கு வோட்டளித்து மதவெறி, சாதிவெறிக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்கள். (3) 2007 தேர்தலை விட இந்த தேர்தலில் பிஜேபி யின் வாக்கு சதவிகிதம் 1.5% அதிகம். காங்கிரசுக்கும் பிஜேபிகும் வித்யாசம் 13%. பிஜேபி யின் வாக்கு சதவிகிதம் மட்டும் 50% மேல். இது ஒரு மிக பெரிய வெற்றி. ஏனென்றால் கேசு பாய் படேலும் பிஜேபி யின் வாக்குகளை சற்று ருசித்தார். (4) காங்கிரஸ் தன்னுடைய புராதன ஸ்ட்ராங் ஹோல்டான மத்திய குஜராத்தை தற்போது பிஜேபி இடம் இழந்துள்ளது. 
ஆனந்த ரீஜனில் சங்கர் சிங் வகேலா போட்டி இடுவதால் சற்று அந்த ரீஜனில் தலை தூக்கியுள்ளது. (5) பிஜேபி தன்னுடைய ஸ்ட்ராங் ஹோல்டான நகரங்களை மீண்டும் தக்க வைத்துள்ளது. தெற்கு குஜராத்தில் இருந்து வடக்கு குஜராத் வரையிலான எல்லா நகரங்களையும் அது தக்க வைத்துள்ளது. எண்ணிக்கையில் காங்கிரஸ் சற்று முன்னேறினாலும் உண்மையில் இது வெற்றி இல்லை. 
3.பல மாநில முதல்வர்கள் செய்ய முடியாத சாதனையை மோடி அவர்கள் செய்துள்ளார். மூன்றாவது முறை அவர் வெற்றி பெறுவது இந்தியாவில் முதல் முறை நடக்கும் நிகழ்வு அல்ல. ஆனால்,அவரது வெற்றியை குறைத்து மதிப்பிடும் முயற்சியை இப்போதே பல ஊடகங்கள் துவங்கி விட்டன. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு என்ற அளவில் வெற்றி பெறுகிறார். 
ஆனாலும், அவர் தோல்வி அடைந்தது போலவே இப்போது பேசக் கிளம்பி விட்டனர். மத்திய அரசு தனக்குத் தேவையான குறைந்த பட்சப் பெரும்பான்மை இல்லாமல், சில பல கட்சிகளை வெளிநடப்பு செய்ய வைத்து, மசோதாக்களை நிறைவேற்றுகிறார்கள். அப்படிப்பட்ட மத்திய அரசின் அல்லக்கை ஊடகங்கள் பா.ஜ.க.வின் வெற்றியை தோல்வியாக சித்தரிக்க முயல்வது கண்டிக்கத் தக்கது. வெற்றி எப்போதும் வெற்றிதான். அதில் மோடிக்கு மட்டும் தனி அளவுகோலா? ஹிமாச்சலில் பா.ஜ.க. தோல்வி வருத்தம் அளிக்கிறது. அங்கு, முதல்வராக வர இருப்பவர் மீது பல ஊழல் புகார்கள். நிலக்கரி ஊழலில் அவர் பெயர் அடிபடுகிறது. ஆகவே, முதல்வராக வர தகுதியானவர். 
4. இது Brand அம்பாசிடர் " மோடி " என்ற பெயருக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி... இங்கே மோடி தான் வெற்றி பெற வேண்டும்.. அதுதான் நடந்திருக்கிறது.. நன்றி... ஆனால் பிஜேபி க்கு எந்தவித லாபமும் தனிப்பட்ட முறையில் இல்லை ( மோடியின் லாபம் BJP இன் லாபம் குஜராத்தில் மட்டுமே ), BJP யின் செல்வாக்கு எந்த விதத்திலும் உயரவில்லை என்பதும் ஹிமாச்சல் முடிவுகளில் இருந்து தெரிகிறது, காங்கிரஸ் ஜெயிப்பது நல்லதில்லை என்பது எனது எண்ணம். அதே சமயத்தில்... 
பிரதமர் வேட்பாளராக மோடியை " Project " செய்தால் ஓரளவுக்கு பயன்தரலாம்... ஆனால் பெருமளவு பயன்தருமா என்று தெரியவில்லை.. எனினும்.. இப்போதே.. இந்த வெற்றியின் சூடோடு சூடாக.. இவரை அறிவித்தால் ஓரளவுக்கு... வாக்குகளை கவரமுடியும்..காங்கின் இலவச மாய வலையிலிருந்து ஓரளவுக்காவது மீட்க முடியும். இல்லை என்றால் பழைய குடுடி கதவை திறடி என்ற கதையாக.. மாநில கட்சிகளின் கலவையாக.. காங்கிரஸ் கட்சியே மீண்டும் அரியணை ஏறும்.. தம்பி ராகுல் தலைமையில்... அன்னை சோனியாவின் ஆசியோடும். அன்னம் ப சி இன் ஆலோசனையோடும்... ஆட்சியில் அமர்ந்து.. நாடு உருப்படாமல் போகும். 
5. இந்த இரு மாநிலங்களின் தேர்தல் ஒரு விசயத்தை உறுதிபடுத்துகிறது, மக்கள் 2ஜி ஊழலை திமுகவின் ஊழலாக பார்க்கிறார்கள். அதனால் தான் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் தோல்வியும் ஹிமாசப் பிரதேச மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியும் குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக வாக்குகளும் அதிக சீட்டும் கொடுத்துள்ளனர். இத்தனை ஊழலுக்கு மத்தியிலும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு கூடுகிறது என்றால் அது ஆச்சரியமான விசயமே வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இந்த நிலை தொடரும் என்றே நினைக்கிறேன்..
. தமிழகத்தை பொருத்த வரையில் திமுக காங்கிரஸ் தேமுதிக கூட்டனி மிக வலுவான கூட்டனி. அதிமுக கூட்டனி இல்லாமல் தனித்து நின்றால் நிச்சயம் தோல்வி வரும். அதனால் அதிமுக பிஜேபியோடு கூட்டனி வைத்து தேர்தலில் நின்றால் அது வலுவான கூட்டனியாக இருக்கும். பாராளுமன்ற தேர்தலை பொருத்தவரையில் தமிழக மக்கள் தேசிய கட்சிகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள், மாநில கட்சிகளுக்கு அல்ல. தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி எனக்கு பிடித்துள்ளது, சென்ற ஆட்சியை விட நிச்சயம் அம்மாவின் ஆட்சி நன்றாகவே உள்ளது.... 
இரண்டு விசயம் தான் உறுத்தலாக உள்ளது. விடுதலை புலி ஆதரவாளர்களின் செயல்பாடுகளை தடுக்காமல் இருப்பது மற்றும் கூடங்குளம் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது. திரு. நரேந்திர மோடி அவர்களின் சிறந்த ஆட்சிக்கு கிடைத்த வெற்றி இது, என் மனமார்ந்த வாழ்த்துகள்... 
6. குஜராத் தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் அந்த மாநிலத்தேர்தலை காங்கிரஸ் பிஜேபி கட்சிகளுக்கிடையேயான தேர்தலாகவோ அல்லது குஜராத் மக்களுக்கு நன்மை அதிகமாக யார் செய்வது என்றோ அணுகவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் அதிகம் மோடி என்ற தனி மனிதரைத்தூற்ற முடியும் என்று பட்டி மன்றம் தான் நடத்தியது. இதற்கு ராகுல் காந்தி சிறப்பு தலைவராக சொக்கவைக்கும் சோனியாவால் நிர்ணயிக்கப்பட்டார். தேர்தல் முடிவுகளின்படி பிஜேபிக்கு வெற்றியா அல்லது திரு. நரேந்திர மோடிக்கு வெற்றியா என்பதைவிட சோனியா மற்றும் ராகுல் கம்பெனிக்கு வெட்கக்கேடான தோல்வி என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 
 தேர்தல் நேரத்தில் மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு அறிவிப்பு, (ஓட்டுக்காக) பணம் நேரடியாக வங்கியில் டெபாசிட் ஆகியவை எதுவும் எடுபடவில்லை. யாருய்யா அங்கே, நான் தினமலரு அன்வர் பாய் கூட போன்ல பேசிகிட்டு இருக்கும்போது குறுக்கால, நரேந்திர மோடி எனது ஐம்பதாண்டு கால நண்பர் வெற்றி பெறுவார் என்பதில் ஐயமே இல்லை, என் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வாருதுன்னு கோபாலபுரத்துலேந்து பேசறது.? 
நன்றி - விகடன் , தினமலர்


Gujarat voted for development and Narendra Modi's leadership: Nitin Gadkari



New DelhiBJP president Nitin Gadkari today thanked the people of Gujarat for voting the party back to power.

He said it was a vote for "development and Mr Modi's leadership."

"The Congress tried to play the communal card but failed. Gujarat will continue to flourish under the leadership of Narendra Modi. I thank the people who have voted for BJP again. I also congratulate the party workers," the BJP president said

"People have voted for the BJP for the fifth time and Narendra bhai's leadership for a 3rd time," he added.

Narendra Modi will be Chief Minister of Gujarat for a third straight term. Projections based on leads at 01.30 pm show Mr Modi likely to end the day at 123 seats, six  more than last time and enough to make his party state that his "vibrant Gujarat" plank worked despite the Congress' best effort to discredit him.
 
 
THANX - NDTV

நானே வருவேன் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNgORehqribNXBgygBqQcVAlfvzoZ6ApgW4yQPssmyaYlJv4s1VbZyjPMIOmy0PD2kZAR87WbtW2TgH5ktkkejTFxQK2sACvumOO5gqk4blksvVcm6flfTcz0x1bAm3skivuAHzkyrL2Zr/s400/naane-varuven-tamil-movie-cd.jpg

நான் ஏன் இந்த டப்பா படத்துக்கு போனேன்னா  போஸ்டர் விளம்பரம் தான் . உலகின் முதல் வாசனைத்திரைப்படம் அப்டினு பக்காவா , பண்ணாட்டா விளம்பரம் கொடுத்திருந்தாங்க. அதாவது ஹீரோயின் மல்லிகைப்பூ வெச்சுட்டு வந்தா தியேட்டர் ஃபுல்லா அந்த வாசம் வீசுமாம். அந்த புது அனுபவம் எப்படி இருக்கும்னு பார்ப்போம்னு நினைச்சேன்.இன்னொரு காரணம் லோ பட்ஜெட் டி ஆர் என அழைக்கப்படும் பாபு கணேஷ் . கதை வசனம் ஆபீஸ் பாய் உட்பட 14 பொறுப்புகளை சுமந்து இவர் எடுத்த கடல் புறா படம் நினைவு இருக்கு . சரின்னுட்டு போனா மனுஷன் கொன்னு குதறிட்டாரு. முடியல


ஹீரோ தன் ஃபிரண்ட்ஸோட டூர் போறார். அங்கே போன இடத்துல ஒரு விபரீதம் நடக்குது . ஒரு மலைவாசிப்பெண் ரேப் செய்யப்படறா. அதை வேடிக்கை பார்த்து ஏளனம் செய்ய்யும் 3 பெண்கள் , 2 ஆண்கள் 5 பேரையும் ரேப்பப்பட்ட பார்ட்டி பேயா வந்து பழி வாங்குது . இந்த பிரமாதமான புதுமையான கதை முடிச்சு படம் போட்டு க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம் முந்திதான் தெரிய வருது, சஸ்பென்ஸை மெயிண்ட்டெயின் பண்றாங்களாம், அடேய்

 ஹீரோ பாபுகணேஷ் பார்க்க சகிக்கல . பீர் அடிச்சு உப்பிய கன்னம் ,வழுக்கையை மறைக்கும் மூன்றாந்தர  விக். எல்லா சீன்களுக்கும் ஒரே மாதிரி பாறை மாதிரி முகத்தை வெச்சிருக்கும் லாவகம் . பாபு கணேஷ் ராக்ஸ். அப்பா சாமி


ஹீரோயின் அதை விட கண்றாவி .பொதுவா ஒரு படத்துல ஹீரோயின் தோழிகளா வர்ற பொண்ணுங்க நல்ல ஃபிகர்ங்களா இருப்பாங்க , இதுல அதுவும் இல்லை. பாக்கி 3 பொண்ணுங்களும் படு கேவலமா இருக்காங்க .காலேஜ் கேர்ள்ச் மாதிரி தெரியல . பக்கா அயிட்டம்ஸ் மாதிரி இருக்கு .ஆண்டிகள் மாதிரி ஆட்களைக்காட்டிட்டு 19 வயசுப்பொண்ணுன்னு சொல்றதுக்கு ஜெயில்ல பிடிச்சு போடுங்க ஏட்டய்யா


டைட்டில் போடும்போது வகீதா , ஷில்பா , இப்ரா , விக்டோரியா ,ச்டேபி , பாபி என வித்தியாசமான பேரா வந்தப்போ நான் சந்தோஷப்பட்டேன், படம் டப்பாவா இருந்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியா ஏதாவது ஃபிகர்ங்களையாவது பார்க்கலாம்னு.. ஆனா பாருங்க இதுங்களைப்பார்த்து  கண்ணே கெட்டுப்போச்சு , ஐ வாஷ் பண்ணனும் 

http://www.tamilnow.com/movies/gallery/naane-varuven/nane-varuven-film-stills-11.jpg



 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1. கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம கின்னஸ் புக்ழ் பாபுகணேஷ்னு டைட்டில்ல போட்டுக்கிட்ட மொள்ளமாரித்தனம்


2. வாசனை டெக்னிக்னு ஊரை ஏமாத்தின லாவகம்

3. படம் பார்க்கும் முதல் 200 பேருக்கு கோடி ரூபா பரிசுன்னு கோல்மால் விளம்பரம் ( ஆனா தியேட்டர்,ல நான்,  தியேட்டர் ஓனர், ஆபரெட்டர், பின்னே டிக்கெட் கிழிப்பவர் 4 பேர்தான் ) 

4. இந்தப்படத்தோட மொத்த பட்ஜெட்டே ரூ 50,000 தான் இருக்கும். ஆனா கொஞ்சம் கூட மன்சாட்சியே இல்லாம கோடி ரூபாய் பரிசுன்னு விளம்பரம் கொடுத்தது செம 


5.கடலுக்குள்ளே மீனம்மா  கட்டு மரத்துல போவமா? மனசுக்குள்ளே பாரமா? உன் மாமன் மேல கோபமா? செம கானா பாட்டு


http://www.images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/naane-varuven/bwoods_naane-varuven-01.jpg

இயக்குநரிடம் வேண்டா வெறுப்பாய் சில கேள்விகள்


1. படத்துல ஃபாரஸ்ட் ஆஃபீசர்னு சொல்லிட்டு ஒரு கேனம் வருது . அது ஏன் போலீஸ் யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு அலையுது . அந்தாள் பார்க்க வாட்ச்மேன் மாதிரியே இருக்காரு


2. நான் ஒரு ஃபாரஸ்ட் ஆஃபீசர்னு அந்த கேனம் சொல்லும்போது ஹீரோ - அதை எல்லாம் உன் வீட்ல வெச்சுக்க “ அப்டினு கேவலமா ஒரு பஞ்ச் பேசறாரு , காட்டுல வெச்சுக்கறதுக்கு வேற ஏதாவது அரேஞ்ச் பண்ணி இருக்கீங்களா?


3. அனாமத்தா வழில கிடக்கும் ஃபார்ஸ்ட் ஆஃபீசரோட டெட் பாடியை இவங்க் அதாவது ஹீரோ அண்ட் கோ பார்க்கறாங்க. அவங்க பாட்டுக்கு கிளம்ப வேண்டியதுதானே , எதுக்கு பேக்குங்க மாதிரி அந்த டெட் பாடியை டிஸ்போஸ் பண்னனும்? வேலியில் போகும் ஓணானை எதுக்கு வேட்டிக்குள்ள விடனும்?


4. அப்படி டெட் பாடியை டிஸ்போஸ் பண்ணும்போது 4 பேர் கைரேகையும் டெட்பாடில படுது.  போலீஸ் அதை கவனிக்காதா?


5.  வழக்கமா  பேய்னா வெள்ளை சேலை தான் போட்டுட்டு வரும்? இதுல ஏன் வெள்ளை பெட்டிகோட் , வெள்ளை பிரா போட்டுக்கிட்டு காட்டுக்குள்ள சுத்துது? குளிராதா? 


6. ஒரு பெண்ணோட 2 கண்களை க்ளோசப்ல படத்துல 67 டைம் காட்டறீங்க, எதுக்கு? 



 http://www.cinepicks.com/tamil/gallery/naane-varuven/nane-varuven-film-stills-2.jpg



மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ( பேய் எஃபக்ட்டாம் ) 



2. நானே வருவேன்  நானே வருவேன் நானே வருவேன் நானே வருவேன் நானே வருவேன் நானே வருவேன் நானே வருவேன் ( டைட்டிலை நியாயப்” படுத்தறாங்களாம் “)


 சி.பி கமெண்ட் - இந்த கேவலமான , குப்பையான , டப்பாவான, மொக்கையான மக்காத குப்பையை யாரும் போஸ்டரைக்கூட பார்த்துடாதீங்க 



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் -  மைனஸ் 10 


 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - அய்யய்யோ 



டெக்கான் கிரானிக்கல் ரேங்க் -  மைனஸ் 4 /5

http://www.images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/naane-varuven/bwoods_naane-varuven-03.jpg



தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://timesofindia.indiatimes.com/photo/14210217.cms 

விகடன் மேடை - வைரமுத்து

மீரா முகம்மது, தோப்புத்துறை.


''தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?''


''உங்கள் கேள்வி என் மனதுக்குள் சின்னதொரு தீக்குச்சி கிழித்தது; சிந்திக்கவைத்தது. நல்ல பதிலுக்குக் கொஞ்சம் உழைக்க வேண்டி இருந்தது.
நானறிந்த புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டு மக்கள்தொகை 7 கோடியே 21 லட்சம் மற்றும் சொச்சம். இந்த 7 கோடிக்குச் சற்றொப்ப மக்கள்தொகை கொண்ட வளர்ந்த நாடுகளில் வரவு விகடன் மேடை - வைரமுத்து

செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு இந்திய மதிப்பில் எவ்வளவு என்று ஆராய்ந்தேன்.
6.8 கோடி மக்கள்தொகை கொண்ட இத்தாலி அரசு ஆண்டுக்கு 60 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகிறது.


6.53 கோடி மக்கள்தொகை கொண்ட பிரான்ஸ் 83 லட்சத்து 64 ஆயிரம் கோடி செலவிடுகிறது.

6.2 கோடி மக்கள்தொகை கொண்ட பிரிட்டன் 64 லட்சத்து 73 ஆயிரம் கோடி செலவிடுகிறது.


6.18 கோடி மக்கள்தொகை கொண்ட ஜெர்மனி 86 லட்சத்து 53 ஆயிரம் கோடி செலவிடுகிறது.

ஆனால், 7.2 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டுக்கு அதிகபட்சமாக 98 ஆயிரத்து 213.85 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்படுகிறது.


அவையெல்லாம் நாடுகள், நம்முடையது மாநிலம் என்றபோதிலும் மக்கள்தொகையில் சற்றொப்ப நிகர் என்பதனால், இந்த ஒப்பீடு தவிர்க்க முடியாததாகிறது.


எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதை விடவும் எவ்வளவு சென்று சேர்கிறது என்பதும் கருதத்தக்கது. இன்னும் நாம் பாதைகளை முழுக்கக் கட்டமைக்க வேண்டும்; பயணம் நெடுந்தூரம்!''


சி.வந்தனா, குமுளி.


''அண்மையில் நீங்கள் படித்ததில் அதிரச் செய்தது?''


''அது ஒரு துணுக்கு.

ஒரு குடும்பமே தற்கொலைக்குத் தயாரா கிறது. வாழ்வில்தான் தோற்றுப்போனோம். தற்கொலையிலும் தோற்றுவிடக் கூடாது என்று முடிவெடுக்கும் தந்தை, சாவுக்கான வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்.


தூக்கில் தொங்கலாம்; ஒருவேளை கயிறு அறுந்துவிட்டால்..? விஷம் அருந்தலாம்; ஒருவேளை அது கலப்படமாயிருந்தால்..? கிணற்றில் குதிக் கலாம்; ஒருவேளை நீர்மட்டம் குறைவாயிருந் தால்..? தீயிட்டுக்கொள்ளலாம்; பாதியில் அணைந்துபோனால்..?


தகப்பன் குழம்பிக்கொண்டிருக்கும்போது, கடைசிக் குழந்தை ஒரு கேள்வி கேட்கிறது:

''அப்பா! சாவதற்கே இத்தனை வழிகள் இருக்கும்போது, பிழைப்பதற்கு ஒரு வழி இல்லையா?''


உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி அது!''


எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.


''சென்னை வாழ்க்கையில் உங்களால் மறக்க முடியாத சம்பவங்கள்?''


''நான் காதலித்த மனிதர்களின் கடைசித் தருணங்கள்.


ஒரு குழந்தை நிலாவைப் பார்த்துக் கை நீட்டுவதுபோல, என் பள்ளி நாட்களில் இருந்து யாரையெல்லாம் பார்க்கத் துடித்துப் பரவசப் பட்டேனோ, அந்த மகா கலைஞர்களின் இறுதி அஞ்சலியை இறுதி வரை இருந்து செலுத்திய நிகழ்வுகள்தாம் மறக்க முடியாத சம்பவங்கள்.


கண்ணம்மாப் பேட்டை.


எரிமேடையில் கிடத்தப்பட்ட உடல் எருக் களால் மூடப்படுகிறது. கொள்ளியிட்ட பிறகு, எல்லோரும் போய்விட்டார்கள். தங்க உடல் தின்னத் தாவுகிறது தீ. நானும் நண்பன் அறிவுமதியும் மட்டும் இடுகாட்டில் எஞ்சி நிற்கிறோம். நான் ஓடிப்போய் சிதையில் விழுந்து எருவைத் தள்ளி மீண்டும் முகம் பார்க்க முனைகிறேன். கை பிடித்து இழுத்த நண்பனோடு எரியும் வரை இருந்து கண்ணீரோடு விடைபெறுகிறேன். அது என் காதல் கவிஞன் கண்ணதாசனுக்கு நான் செலுத்திய அஞ்சலி.


மெரினா கடற்கரை.


தங்கத்தைப் பூட்டிக்கொண்டு குழிக்குள் இறங்கு கிறது சந்தனப் பேழை. அரசியல், கலை உலக மனிதர் கள் சுற்றி நிற்கிறார்கள். ஓரத்தில் கவலை கட்டிய கண்களோடு நின்ற என்னை, 'வைரமுத்து வா; நீயும் மண்ணுத் தள்ளு’ என்று கை நீட்டி அழைக்கிறார் அந்நாள் அமைச்சர் க.ராசாராம். குனிந்து புறங்கையில் மணல் தள்ளுகிறேன். சந்தனப் பேழை மேல் சரசரவென்று சரிகிறது மணல். நினைத்துக்கூடப் பார்க்கவில்லை எம்.ஜி.ஆருக்கு நான் மண் தள்ளுவேனென்று.


பெசன்ட் நகர் மயானம்.


மின் மயான மேடையருகே பிரபு - சத்யராஜ் - நான் மூவர் மட்டும். பட்டு வேட்டியில் சுற்றப்பட்டிருக்கிறது புவியாண்ட கலைஞனின் பூத உடல். விசைப்பலகையில் தூக்கிவைக்கிறோம். கடைசியாக முகம் பார்த்துக் கண் மூடிக்கொள்கிறோம். செத்தும் சாகாத ஒரு ஜீவசரித்திரத்தை அடுப்புக்குள் விசிறியடிக்கிறது விசைப்பலகை. நடிகர் திலகம் சிவாஜியின் கடைசிக் கணங்களில் கனத்த மனத்தோடு நான்.


அந்த மூன்று மகா கலைஞர்களுக்கும் பிள்ளைக்கடன் செய்தது எனக்கு வரமா? வலியா?


நினைக்கும்போது எல்லாம் வலித்து வலித்து அடங்குகிறது இற்றுப்போன இருதயம்!''


ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.


''இலக்கியத்தில் நகைச்சுவை உண்டா?''


''உண்டு. ஒன்று சொல்கிறேன்.


சங்க இலக்கியத்துக்கு எழுத்தெண்ணி உரையெழுதியவர் அவ்வை துரைசாமிப் பிள்ளை. 'உரைவேந்தர்’ என்று ஓங்கு புகழ் பெற்றவர். ஒரே இடத்தில் உட் கார்ந்து எழுதி எழுதி அவருக்கு மூல நோய் கண்டுவிட்டது. அந்தத் துயரத்தை அவர் மைந்தர் அவ்வை நடராசன் எனக்கு நயமாகச் சொன்னார்:


'என்ன பண்றது கவிஞர்? 'உரை’ எழுதியே எங்க அப்பாவுக்கு 'மூலம்’ வந்துட்டது’.


நினைக்கும்போது எல்லாம் என்னைக் குலுக்கும் நகைச்சுவை இது!''


கி.ராமகிருஷ்ணன், சென்னை-24 


''உண்மையில் யார் உயர்ந்த மனிதன்?''


''ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூன்று மனிதர்கள் இருக்கிறார்கள்.

சமூக மனிதன்; குடும்ப மனிதன்; தனி மனிதன்.

இதில் சமூக மனிதன் என்பவன் மகா நடிகன்; நடித்து வெல்பவன்.

குடும்ப மனிதன் என்பவன் பாதி நடிகன்; நடித்துத் தோற்கிறவன்.

தனி மனிதன் என்பவன்தான் மெய்ம் மனிதன். ஒப்பனை இல்லாமல் அவன் அவனாகவே இருப்பவன்.

மூன்று பேருக்கும் மதிப்பெண் இட்டுப் பார்க்க வேண்டும். சமூக மனிதனையும் குடும்ப மனிதனையும்விட ஒரு மதிப்பெண் அதிகம் பெறுகிற தனி மனிதன் எவனோ அவனே உயர்ந்த மனிதன்!''


ரஜினி முருகன், வேலூர்.



''உங்களை மன்றாடிக் கேட்கிறேன்... 'கோச்சடையான்’ பாடல்களில் சில வரிகளாவது சொல்லுங்களேன்?''


''உங்கள் கேள்வியை ரஜினியின் செவி களுக்குக் கொண்டுசென்று அவர் சம்மதத்தோடு வெளியிடுகிறேன்.


ஊடகத்தில் வெளியிடப்படும் 'கோச்சடை யானின்’ முதல் பாடல் இதுதான்.
சிறை பிடிக்கப்பட்டிருக்கிறார் தளபதி இளைய ரஜினி. அழுது பாடுகிறாள் அவர் காதலியான இளவரசி தீபிகா படுகோனே. சரித்திரக் கதை ஆதலால், சங்கத் தமிழில் நடக்கிறது பாட்டு:



தீபிகா:  செந்தீ விழுந்த
செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின்
முட்டையாய்...
இதயம்                                                       
உடலில் இருந்து விழுந்து
உருண்டு புரண்டு போகுதே
 நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து 
வெள்ளச் சுழியில் விழுந்து மலராய்...
 இதயம் 
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து அலைந்து போகுதே
 சிறுகோட்டுப் பெரும்பழம்   
தூங்கி யாங்கு 
என் உயிரோ சிறிதே 
காதலோ பெரிதே



 ரஜினி: பூப்பது மறந்தன கொடிகள் 
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு
யானோ நின்னை மறக்கிலேன்
செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று 
உளியைப் பிரியும் சிற்பம்
யானோ நின்னைப் பிரிகிலேன்
 வாய் மொட்டுடைந்தால் பூவாசம்
வாசத்துக்கேது சிறைவாசம்?
அப்பப்பா!



இசையோடு கேட்கையில் உயிர் உருகி ஓடுகிறது தரையில்!''



ச.அ.அலெக்சாண்டர், வரதராஜன்பேட்டை.


''திரையுலகில் நீங்கள் சந்திக்க விரும்பும் நபர் யார்?''



''தேடிக்கொண்டேயிருக்கிறேன் - 'சின்ன சின்ன’ ஆசை பாடிய மின்மினியை!
சூரியனைப் பனிக்கட்டியாக்கிய பாட்டுக்காரி; இந்தியாவைச் சுழற்றியடித்த பாட்டுக்குச் சொந்தக்காரி.


என்ன ஆனார்? எங்கிருக்கிறார்? இதுவரைக் கும் தகவல் இல்லை.


'அன்புள்ள மின்மினி!


உன் தங்கக் குரலால்தான் என் தமிழ் கேட்டது உலகம். உனக்கு நான் ஒன்றுமே செய்யவில்லை. என் இனிய அன்பளிப்பாக என் சேமிப்பில் இருந்து ஒரு லட்ச ரூபாய் உனக்கு ஒதுக்கிவைத்திருக்கிறேன். குடும்பத்தோடு வந்து பெற்றுக்கொண்டு என்னைப் பெருமைப்படுத்து சகோதரி!''


நிறைவு செய்கிறேன்;

நன்றி.






டிஸ்கி -1.இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டிhttp://www.adrasaka.com/2012/12/blog-post_4667.html


2. நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்

part 2  http://www.adrasaka.com/2012/11/blog-post_2188.html3. 

3. என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி http://www.adrasaka.com/2012/12/blog-post_13.html

 

4 பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி  


http://www.adrasaka.com/2012/11/blog-post_15.html