Wednesday, August 22, 2012

ஈரோடு , திருப்பூர் - பிளாட் முதலீடு மோசடி, உஷார்!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgErvq9vwBJBSEu1riHUdCLb2C2ArtAf2aKq-H3Vj1_G-Qx9zjpUUrkZglWlM8oY1A0Ph8rl4RACAu5ZBYYZaUoxA-gCoNUApk8NyTRMt2MPLHvxbw_ByOhfFeKvj8DI1tCqEBNYvJA59o/s1600/Rmwc13.JPG

5 வட்டிக்கு ஆசைப்பட்டு..!

தென் மாவட்டத்தில் பிளாட் மோசடி
முக் குளறுபடிகள் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்த மோசடி அம்பல​மாகி சந்தி சிரிக்கிறது. 'ஐந்து லட்சம் ரூபாயை பிளாட்டில் முதலீடு செய்தால், மாதம்தோறும் ஐந்து சதவிகிதம் வட்டி’ என்று கோடிக்கணக்கான பணத்தை ஏப்பம் விட்டு இருக்கிறார்கள்! 


சாத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த ராஜா,  தீப்பெட்டித் தொழிற்சாலையில் மேஸ்திரியாக இருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன், மருது என்பவருடன் சேர்ந்து, 'ஆர்.எம்.வெல்த் கிரியேஷன்ஸ் இந்தியா’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். சில பெரிய நிறு வனங்களுக்கு ஏஜென்ட் போல தன்னைக் காட்டிக்​கொண்டவர், ஒவ்வொரு பிரிமியம் தொகைக்கும் 5 சதவிகிதம் கமிஷன் தருவதாகச் சொன்னார்கள்.


'பிரிமியம் தொகைக்கே கமிஷனா?’ என்று வாய் பிளந்த பலரும் வரிசை கட்டி நின்று அவர்​களிடம் இன்சூரன்ஸ் பாலிசி போட்டனர். இந்த நேரத்தில், சாத்தூர் அருகே எட்டூர்வட்டத்தில் 102 ஏக்கர் பரப்பளவில் கோல்டன் சிட்டி என்ற பெயரில் பிளாட் போட்டனர். 



ஒரு பிளாட்டுக்கு 4 லட்சம் முதல் 10 லட்சம் வரை என்று விலை வைத்தனர். எந்த பிளாட்டில்... எவ்வளவு முதலீடு செய்கிறோமோ, அந்தத் தொகைக்கு ஐந்து சதவிகிதம் மாதம் தோறும் வட்டி என்றும், வட்டி வேண்டாம் என்றால் கிரையம் செய்து தரப்படும் என்றும் கவர்ச்சிகரமாக விளம் பரப்படுத்தினர்.


 உடனே, 'எனக்கு ஒண்ணு... எங்க அப்பாவுக்கு ஒண்ணு’ என்று கூட்டம் மொய்த்தது.


அதோடு ஐந்து பேரை இந்தத் திட்டத்தில் சேர்த் து விட்டால், ஓர் ஆளுக்கு 500 ரூபாய் கமிஷன் என்று, செயின் லிங்க் சிஸ்டத்தையும் அறிமுகம் செய்து இருக்கின்றனர். டீம் லீடர்களுக்கு கார், டூர் என்று ஏகப்பட்ட வசதிகளை அள்ளித்தரவே, மளமள​​வென்று ஆட்களைச் சேர்ந்தனர். இப்போது சாயம் வெளுத்துப்போகவே, கிட் டத்தட்ட 4,000 முதலீட்டாளர்கள் ஏமாந்து நிற்கிறார்கள்.



முதலீட்டாளர்கள் சார்பில் நம்மிடம் பேசிய வக்கீல் அழகர்சாமி, ''விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி போன்ற இடங்களில் வட்டித் தொகைக்கு ஆசைப்பட்டு பாமர மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை பலரும் லட்சக்கணக்கில் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். புதிதாகச் சேரும் வாடிக்கையாளர்களை டூர் அழைத்துச் சென்று நன்றாகக் கவனித்துள்ளனர்.



 குற்றாலத்தில் நடந்த மீட்டிங்கில், 'நாளைய தமிழகமே...’ என்று வரவேற்பு ஃப்ளெக்ஸ் அடித்து ராஜாவை பூப்பல்லக்கில் அழைத்துவந்து, பொதுமக்களை மயக்கியுள்ளனர். பிப்ரவரி மாதம் வட்டி தருவதில் சுணக்கம் ஏற்பட்டது. அதனால் சில மாதங்களுக்கு முன், எட்டூர் அருகே உள்ள ஆர்.எம்.டபிள்யு.சி. நிறுவனத்துக்குச் சென்ற முதலீட்டாளர்கள் ரகளை செய்தனர். அப்போது, போலீஸ் முன்னிலையில் பேசிய நிறுவனத்தின் சேர்மன் ராஜாவும் எம்.டி. மருதுவும், கொஞ்ச நாட்களில் பணத்தைத் திருப்பித் தருகிறோம், என்று உறுதி அளித்தனர். 



ஆனால் அதன் பிறகு, தலைமறைவாகி ​விட்டனர். இப்போது அவர்கள் திருப்பூர், ஈரோடு, போன்ற இடங்களில், 'எஸ்.எம்.’ என்ற பெயரில் புதிய நிறுவனம் தொடங்கும் முயற்சியில் இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். என் மூலமாகவே இதுவரை 300 பேர் போலீஸில் புகார் செய்துள்ளனர். இவர்கள் ஏமாந்து இருப்பது மட்டுமே 20 கோடி ரூபாய். ஆனால், மொத்தமாகப் பார்த்தால் எவ்​வளவு கோடியோ? உடனே, அவர்களைக் கண்டுபிடித்து பணத்தை மீட்கவேண்டும்'' என்றார்.


முத்துலிங்காபுரம் பஞ்சாயத்துத் தலைவர் பெருமாள்​சாமி, ''இந்தத் திட்டம் பற்றிக் கேள்விப்பட்டதும், 'எப்படி சாத்தியம்?’ என்று ராஜாவிடம் கேட்டேன். 'குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி கூடுதல் விலைக்குத்தான் விற்கிறோம். மேலும், பணத்தைப் பங்குச் சந்தையில் போட்டு லாபம் பார்க்கிறோம். அந்த லாபத்தில் இருந்துதான் மாதம்தோறும் வட்டி தருகிறோம்’ என்று நம்பிக்கையுடன் சொன்னார்.




 நானும் அதைநம்பி, எனக்குத் தெரிந்தவர்களை பணம் கட்டச் சொன்னேன். பஞ்சாயத்துத் தலைவர் என்பதால் என்னை நம்பி 800 பேருக்கும் மேல் இந்தத் திட்டத்தில் சேர்ந்தனர். எங்கள் பகுதியில் மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை மோசடி செய்து விட்டனர். இப்போது எல்லோரும், பணம் கேட்டு எனக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்...'' என்றார் ஆதங்கத்துடன்.



ராஜா, மருது ஆகியோரைச் சந்தித்து விளக்கம் கேட்க முயன்றோம். நிறுவனங்கள் மூடப்பட்டு ​விட்டன. இரண்டு மாதங்களுக்கு முன்னரே வீட்​டையும் காலி செய்து விட்டார்களாம். அதனால், அவர்கள் சார்பில் பேசவும் யாரும் முன்வரவில்லை.



இந்த மோசடியை விசாரித்துவரும் பொருளாதாரக் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம் பேசினோம். ''கோவையில் பாசி நிறுவனம் ஏமாற்றியதுபோல் தென் மாவட்​டத்தில் ஆர்.எம்.டபிள்யு.சி. நிறு​வனத்​திடம் பலர் ஏமாந்துள்ளனர். 


 இது தொடர்பாக நிறைய புகார்கள் வந்துள்ளன. சேர்மனாக ராஜாவும், எம்.டி-யாக மருதுவும் இருந்துள்ளனர். இயக்குனர்களாக மூன்று பேர் இருந்திருக்கிறார்கள். அந்த இயக்குனர்களை நம்பித்தான் பலர் முதலீடு செய்துள்ளனர். அந்த இயக்குனர்களும், தாங்கள் ஏமாற்றப்பட்டு விட் டதாகப் புகார் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. ராஜா, மருது இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தேடிவருகிறோம். அவர்​களுக்​குச் சொந்தமான சொத்துக்களைக் கைப் பற்றி, முதலீட்​டாளர்களின் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுப்போம்...'' என்றார்.


டெயில் பீஸ்: சாத்தூர் வெங்கடாசல​புரத்தைச் சேர்ந்தவர் கல்யாணராஜ். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கு ஊருக்குள் நல்ல மரியாதை. அதனால் இவரை இந்த நிறுவனத்தில் இயக்குனராக நியமித்து இருக்​கிறார்கள். இவரை நம்பி பலரும் லட்சக் கணக்கில் முதலீடு செய்தனர். 



பந்தல்குடி அருகே ஒரு நிலத்தைக் காட்டி பணத்தை வசூல் செய்த விவகாரத்தில் நிர்வாகத்துடன் பிரச்னை வரவே, கல்யாணராஜை இயக்குனர் பதவியில் இருந்து கழற்றி விட்டனர். உடனே, போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து, கடந்த 17-ம் தேதி ஒரு கும்பல் இவரது வீட்டுக்கு வந்து மிரட்டி இருக்கிறது. அதனால், மனஉளைச்சல்களுக்கு ஆளான கல்யாணராஜ், அன்று இரவே தோட்டத்தில், பன்றியைக் கொல்ல வைத்திருந்த விஷ மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம், ஏரியாவில் மேலும் கொதிப்பைக் அதிகரித்துள்ளது.

நன்றி - ஜூ வி

மோசடி செய்த நிறுவனத்தின் வெப் சைட்டில் வெளி வந்த விளம்பரம்



GREAT OPPURTUNITY FOR MLM LEADERS AND NETWORKERS. RMWC

Contact Name  : subbu 09790407098   
Email ID          : [email protected]
Website: www.rmwcindia.com 


IT’S DEFINITE- 

A DAY GETS DAWN.... 

ONLY YOU CAN...



Welcome to RMWC

            Our organization has been started with appropriate recognition under the Indian Company Act, 1956. Through this business opportunity, we aspire to provide housing plots to the members of our RMWC family. Also we seek to provide Safety Policy Schemes to our members and their family. Our ultimate maxim is to create financial freedom to everyone, who adhere the business opportunity through our organization.

 


PRODUCTS

1) REAL ESTATE


2) INSURANCE








3) HOME APPLIANCE
















 OUR FUTURE VISION






Plan – I Products
Rs: 12,000(Minimum) (for one 1 id, you can get Home Appliances products worth Rs.12,000 
Or 
Plan – II Insurance Products
Insurance Products from Reliance or Bajaj worth Rs.12,000
                                                Or 
Plan-III Lands
If your investment is Rs: 50,000 to 1,00,00,000 You will get number of ids worth Rs. 12,000  you can calculate  from that amount as divided by 12,000 (ex. amount Rs. 50000/12 = 4 ids)

INCOME RETURNS

1) Rs. 500/Monthly for one id

2) Binary Income Rs. 1000 for one pair match (1:1)

3) Matrix Income in Auto filling system

4) AWARDS & REWARDS

 

1) Rs. 500/Monthly for one id, Payment will be credited to your bank account

2) Binary Income Rs. 1000 for one pair match (1:1)

 

"Successful Auto Filling System, 

1st time in World"


3) Matrix Income in Auto filling system

1level- 5Members Rs. 500 Rs. 2500
 
2level-  25Members  Rs. 400 Rs. 10,000
 
3level- 125Members  Rs. 200 Rs. 25,000
 
4level- 625Members  Rs. 200 Rs. 1,25,000
 
5level- 3125Members  Rs. 200 Rs. 6,25,000
 
6level- 15625Members  Rs. 200 Rs. 31,25,000
 
TOTAL 19530Members Rs. 1700 Rs. 39,12,500






4) AWARDS & REWARDS







GREAT OPPURTUNITY FOR MLM LEADERS AND NETWORKERS. GET BRANDED PRODUCTS ON ENTRY AT MRP LIKE OTHER SHOPS. 

RMWC INDIA(P)LTD 

SAFE & SECURE PLANS

An ISO 9001:2008 Company, 

Company Having 13,000 CRORE ASSETS

For the First Time in India, our RMWC (RM WEALTH CREATION INDIA PVT.LTD) organization introduces a innovative business plan "AUTO FILLING SYSTEM'. By joining in this AUTO FILLING SYSTEM, EVERYONE who joins RMWC gets confirmed income (Minimum Guarantee). As per the Income Chart (given below), you will get income through AUTO FILLING SYSTEM / INCOME SHARING PLAN when members join under you. 

Contact Name  : subbu 09790407098    

Email ID          : [email protected]

Website: www.rmwcindia.com

மேஹந்தி , வதந்தி , பூந்தி

The Reason Why Dhoni Didn't Reply To Laxman Message
1.பரிசுத்த ஆவி = SOUL OF CLEAN AND NEAT HORSE?# சபாஷ் துபாஷ் 


--------



2. நீ தே"வதை" மாதிரி இருக்கேன்னு சொன்னா சம்சாரத்துக்கு புரிஞ்சிடுது இப்பவெல்லாம்- 



------------------------


3. சுகி சிவம் ஏன் லேடீஸ் மாதிரி வட்டப்பொட்டு வெச்சிருக்காரு?என்னமோ மாதிரி இருக்கு 


------------------------

4. டியர்.நீ ஏன் இப்பவெல்லாம் வெட்கப்பட்டுக்கிட்டே கால் விரலால கோலம் போடறதில்லை?



எத்தனை நாளுக்குத்தான் நானும் அப்பாவி மாதிரியே நடிக்கறது? 



------------------------


5. எதிர்பார்த்தபடி கேப்டன் "ரம்"ஜான் வாழ்த்து சொன்னார் 


------------






6. "வாய்"ப்பு கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்பவன் புத்திசாலி #ஆண்ட்ராய்டு & ஆண்ட்ரியா பாறைகள் 



--------------------------




7. உடம்பு சரி இல்லனா டாக்டர் கிட்டபோகாம நர்ஸ் கிட்டே போவேன்



---------------


8. பிஸிபேளாபாத் னா பிஸியா இருந்தாலும் முதல்ல PAY பண்ணிட்டு் குளினுு அர்த்தம் # பப்ளிக் பாத்ரூம் 




---------------

9. நர்ஸ் -சாரி சார் ,டாக்டர் ரவுண்ட்ஸ் போய் இருக்கார்.




லொள் பேஷன்ட் -வாங்க.நாமளும் ரவுண்ட்ஸ் போவோம்.தானிக்கு தீனி 



------------------------


10. சார்.நீங்க குடுத்த நாவல் பிரமாதம். 



சும்மாவா?ஒரு நாவல் பழம் 8 ரூபா மிஸ் ரூபா 



----------------------




11. சந்தோச மிகுதியில் ் "இந்த நிமிசமே செத்துறலாம் போல இருக்கு" எங்கப்பா நம்ம லவ்க்கு ஓக்கெ சொல்லிட்டார. # செத்தேன்் 




-------------------


12. நீ தரும் ஒவ்வொரு முத்தமும் என் உமிழ்நீர் OIL ஐ கூட்டுகிறது! 



---------------


13. WIDOW முயற்சி விஸ்வரூப வெற்றி # கல்யாணமா(ப்)ளை 




------------


14. ஒரு பொண்ணுக்கு மெஹந்தி போட்டு விட்டா அவ தங்கச்சி நம்மை பார்க்குமாம் - ஈரோட்டில் வதந்தி 




-------------------


15. டியர்.என் கைக்கு மெஹந்தி போட்டு விடறீங்களா?




 ம்க்கும்.வெறும் கைக்கு மட்டும்தானா? 



----------------------------






16. நடிகை அஞ்சு தன் பெயரை நாப்பத்தி அஞ்சு என மாற்றிக்கொள்ள வேண்டும் -ராம்தாஸ் வேண்டுகோள் 


-----------



17. அனிரூத்தின் செல்போன் ரிப்பேர் செய்த ஆள் கோடீஸ்வரர் ஆனார்.87 பிட் படம் கலெக்ஷனில் 



-----------

18. ஈழத்தமிழர் மேல் அன்பு இல்லாத தமிழ் இனத்தலைவர் ஓட்டுக்காக நோன்புக்கஞ்சி குடிப்பார் 


-------------------



19. ஈமு' கோழியை விற்க கவர்ச்சி விளம்பரம் கால்நடைத்துறை அமைச்சர் கண்டுபிடிப்பு# கொலம்பஸ் கண்டு பிடிச்சுட்டாரு,டூஊஊஊ லேட்



-----------------------------


20. வேண்டியவர்களுக்கு கட்சியில் பொறுப்பா? தொண்டர்கள் "புலம்பல்'# கலைஞர் நல்லாருக்கனும்னு வேண்டியவர்களுக்கும் பதவி உண்டாம், ட்ரை



------------------------------

Tuesday, August 21, 2012

மணி அத்தையும் முளைப்பாரியும்!-தே.புதுராஜா - கல்கி 3 ம் பரிசுக்கதை


 மூன்றாம் பரிசுக் கதை



மணி அத்தையும் முளைப்பாரியும்!



தே.புதுராஜா



அன்றொரு ஞாயிற்றுக் கிழமை காலைப் பொழுது, தமிழ் தினசரி ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அருகில், எம்.பி.ஏ., முதலாமாண்டு படிக்கும் என் மகள், ‘நெட்டில்’ எதையோ ‘வலை’ போட்டுத் தேடிக்கொண்டிருந்தவள் திடீரென்று, டாடி... வாட் இஸ் மொல்பரி?" என்றாள் கண்களைக் கணினித் திரையை விட்டு அகற்றாமலேயே.



மல்பெரியா...? அது செம்பருத்தி மாதிரி ஒரு வகைச் செடிடா. பட்டுப் புழு வளர்க்கிறதுக்காக பயிர் செய்வாங்க. அந்தச் செடியோட இலைகளைச் சாப்பிட்டுத்தான் பட்டுப் புழுக்கள் எல்லாம் கூடு கட்டும்" என்கிறேன் நான்.



ஐயோ... டாட்... ஐ நோ தட். ட்வெல்த் பயாலஜில படிச்சிருக்கேன். பட், நான் கேட்டது அது இல்ல. ம்... இந்த... வில்லேஜ் ஃபெஸ்டிவெல் டைம்ல கேர்ள்ஸ் எல்லாம் தலைல வெச்சுத் தூக்கிட்டுப் போவாங்களாமே..." என்றவள் கேள்வியை முடிப்பதற்குள் எனக்குப் புரிந்துவிட்டது.



ஓ... அதுவாடா, அது ‘மெல்பரி’ இல்லடா, முளைப்பாரி" என்று நான் பதில் சொல்லும் போதே என் மண்டைக்குள் காலச்சக்கரம் ‘ரிவர்ஸ் கியரில்’ நாற்பதாண்டுகள் பின்னோக்கிச் சுழன்றது. ‘முளைப்பாரி’ என்றதுமே கூடவே மணி அத்தையின் முகம் மனசுக்குள் வருவதைத் தவிர்க்க இயலாது. கூடவே, தாங்க முடியாத மனவேதனையும்!



எனக்கு நான்கோ ஐந்தோ வயதிருக்கலாம் அப்போது. பள்ளி செல்லாத பருவம் என்பது தெளிவாகத் தெரிகிறது. அன்றுதான் முதன்முதலில் மணி அத்தையைப் பார்த்தேன். அதுவரையிலும் பின்கொசுவம் வைத்து வரிந்து கட்டிய அம்மாவையும், முக்கால் பாவாடையும் குரங்குக் குப்பாயமும் போட்ட அக்காவையும் மட்டுமே பார்த்த என் கண்களுக்கு, தாவணி கட்டிய பன்னிரண்டு வயது மணியத்தையின் தோற்றமும், அவள் சிரித்த முகமும் குரவை மீன் கண்களும் ஒருவித ஈர்ப்பாக இருந்தன. கருப்பும் இல்லாது வெளுப்புமில்லாது ஒரு நிறம்!



அப்பாவுக்கு மீசை இல்லாவிட்டால் இப்படித்தான் இருப்பாரோ... என்று நினைக்கத் தோன்றும். அதனாலேயே அவளிடம் சுலபமாக என்னால் ஒட்டிக் கொள்ள முடிந்தது.



அன்பென்றால் அப்படியோர் அன்பை அதுவரையிலும் நான் யாரிடமும் உணர்ந்ததில்லை. என்னதான் அம்மா - அப்பாவின் பாசம், தாத்தா- பாட்டியின் அக்கறையான அன்பு என்றாலும் அத்தைமார்களின் அன்பென்பது சற்றுச் செல்லம் கலந்த ஸ்பெஷல். அதை அனுபவித்தவர்கள் நிச்சயம் ஒத்துக் கொள்வார்கள்.



அந்த வயதுக்கே உரிய ஆனால் அதே குறும்புத்தனத்தை நான் மணி அத்தையிடம் காட்டியபோது, அப்படியே இடக்கையால் என்னை அணைத்துக்கொண்டு வலது உள்ளங்கையில் உதைத்த என் பாதத்தை ஏந்திப் பிடித்து அப்படியே ‘என் செல்லக் குட்டி...’ என்றவாறு பாதத்தில் அழுத்தமாகஒரு முத்தம் கொடுத்துச்சு. அப்பவே என்னோட சேட்டை, குறும்பு எல்லாமே தூள்தூளாகிக் காணாமப் போச்சு. அன்னிலேர்ந்து மணி அத்தையோட அன்புக்கு நான் அடிமை! அவருக்கு நான்னா உசிரு.



மணி அத்தையோட கூட்டுக்கா அக்கா ஒண்ணு பக்கத்துத் தெருவில இருந்து தெனக்கும் வரும். எங்கப்பத்தா, சித்தப்பா எல்லாமே அதை ‘மூக்கையா மக’ன்னுதான் கூப்பிடுவாங்க. மணி அத்தை எப்பவும் வாடி, போடின்னுதான் பேசுவாங்க. அந்தக்காவுக்கும் என்னைய ரொம்பப் புடிக்கும். ‘அழகு பெத்த பய’ன்னு என் கன்னத்தைப் புடிச்சுக் கொஞ்சும். ஆனாலும் எம்மேல அந்தக்காவுக்குக் கொஞ்சம் பொறாமைதான். ஏன்னா அதுக்கு மட்டுமே சொந்தமான மணி அத்தை பாசம் பூராவும் இப்ப என் பக்கம் திரும்பிடிச்சே! அந்தளவு அவங்களுக்குள்ள ஒரு நெருக்கம்! என்னமோ சொல்வாங்களே ‘உசிர் தோழி’ன்னு... அதை நான் அவங்ககிட்டத் தான் பார்த்தேன். ஒருநாள் கூட அவங்க ரெண்டு பேரும் பார்க்காம இருக்கவே மாட்டாங்க. அப்படியொரு கூட்டு.



மணி அத்தை ஒருநாள் வாசலில் உட்கார்ந்து மடியில என்னை வெச்சுக் கொஞ்சிக்கிட்டிருந்துச்சு. அப்ப அப்பத்தா வந்து, ஏலா... மணி... அந்தா அந்தச் சருவச் சட்டில மொச்சப் பயத்த ஊறவெச்சு மொளக்கட்ட வெச்சிருக்கேன். அதயெடுத்து தோலப் பிதுக்கிட்டு புளிச்சாறு வையி. பெறகு அந்த ரெண்டாவது அடுக்குப் பானைல சாம அரிசி இருக்கு. அதில ஒரு அரப்படி போட்டு வடிச்சு வையி. ஒழவுக்குப் போன ஙொண்ணன் உச்சிக்கு வீட்டுக்கு வந்திருவான் கஞ்சிக்கு


. அதுக்குள்ள கஞ்சி தண்ணி காய்ச்சி வக்கிற சோலியப் பாருடீ. அதவிட்டுப்புட்டு ஒஞ்சோட்டுக்காரி அந்த ‘அமுக்கி முத்தம்மா’ மூக்கையா மக கூட சேந்து சொட்டாங்கல்லு ஆடுறதும் சோழிமுத்து ஆடுறதுமிண்டு பொழுதப் போக்கடிக்காத. நான் பேச்சியக்கா கூட மேற்கு மலைக்கு வெறகுக்குப் போயிட்டு வாரேன்"ன்னுட்டே மூலையிலேர்ந்த பானைலேர்ந்து புளிச்சதண்ணிய ரெண்டு சொம்பு மோந்து குடிச்சுப்புட்டு, சும்மாட்டுத் துணியும், வெட்டறுவாளும் எடுத்துக் கக்கத்தில வெச்சிக் கிட்டுக் கௌம்பிடிச்சு அப்பத்தா.



அப்பத்தா போனொன்னே மணி அத்தை என்னைப் பார்த்து எஞ்செல்லக் குட்டி... இங்கனயே ஒக்காந்து வெளாடுவியாம். அத்தை உனக்கு மொச்சப் பயறு உரிச்சு புளிச்சாறு வெச்சு, சாமக்கஞ்சி காய்ச்சி ஊட்டி விடுவனாம்"ன்னு சொல்லிக்கிட்டே உள்ளே போய் சருவச்சட்டிய எடுத்திட்டு வந்த அத்தை அப்பிடியே அதையே வெச்ச கண்ணு வாங்காமப் பறந்துகிட்டு நிக்கிது. நான் என்னமோ ஏதோன்னு அத்தை மொகத்தைப் பார்க்கிறேன்.


அந்த மொளச்ச பயத்தை அப்பிடியே கையில அள்ளிப் பார்த்த அத்தை, ஆத்தத்தோ... இப்பத்தான் தொப்புள்கொடி அறுத்த பச்சப் பிள்ள கணக்கா இருக்கேத்தே...! இதப்போயி எப்பிடி மனசொப்பி உரிச்சுப் புளிச்சாறு வக்கிறது?"ன்னுட்டு சட்டிய கீழ வெச்சிட்டு வீட்டுக்குள்ள ஓடிப் போயி ஒரு கொத்தை எடுத்து வருது. கொல்லப் பக்கமாய்ப் போயி மண்ணப் போட்டுக் கொத்துது. பெறகு அந்தப் பயறு பூராத்தையும் மண்ணில கொட்டித் தண்ணியத் தெளிச்சு விட்டுட்டு, பொழச்சுப் போங்க"ன்னுட்டுத் திரும்பி வருது. இப்ப அத்தை மொகத்தப் பாக்கணுமே... அம்புட்டுச் சந்தோஷம்! எனக்கு ஒண்ணும் புரியலை.





பிறகு கொஞ்ச நேரத்திலேயே மணி அத்தை சாமக்கஞ்சி காச்சி, மௌகு ரசம் வச்சு, தேங்காத் தொவையல் அரச்சு எனக்கு ஊட்டி விட்டுச்சு. அப்பா! என்னா ருசி! அப்பிடியே சர்ர்...ன்னு நாக்கில ஊறிச்சு. எத்தனை காலமானாலும் அந்த ருசி நாக்க விட்டுப் போகாது.



பிறகு, சித்தப்பா வந்து மொணங்கிக்கிட்டே சாப்பிட்டு அப்பிடியே தூங்கிடிச்சு. ஆனா அதுக்குப் பிறகு வெறகுக் கட்டோட வந்த அப்பத்தாதான் மணி அத்தையைப் பேயோட்டிருச்சு.

ஏண்டீ... கேனப்பய மகள... நான் என்னா சொல்லிட்டுப் போனேன். நீ என்னாடி செஞ்சு வெச்சிருக்கவ? எங்கடி மொச்சப் பயத்த?"



அப்பத்தா, அத்தை, அதை மண்ணில கொட்டிடுச்சு" என்று விவரம் தெரியாமல் நான் போட்டுக் கொடுக்க, அப்பத்தா மாரியாத்தா கணக்கா கத்துது! சித்தப்பாவும் எந்திரிச்சு அது பங்குக்குத் திட்டுது மணி அத்தையை. அதோட மணியத்தையோட கூட்டுக்கார அக்காவையும் சேத்துத் திட்டுது. அதாலதான் மணி அத்தை கெட்டுப் போகுதாம்! இப்பிடியே காலம் ஓடுது. நானும் பள்ளிக்கொடம் போயி இப்ப மூனாப்பு படிக்கிறேன்!



அன்னிக்குப் பொழுதுசாய நேரம் மணியத்தையோட கூட்டுக்காரக்கா வேகவேகமா, நல்லநாய் சாட்டிட்டாய்ங்கடீ. இந்த வருசமாச்சும் எப்பிடியும் மொளப்பாரி எடுத்திடணும்டி. நானும் போன ரெண்டு வருசமா நெனச்சிக்கிட்டேருக்கேன். ஒண்ணுந் தோதுப்படலடி. இந்த வட்டம் உங்க வீட்லயே ரெண்டு பேரும் சேந்து மொளப்பாரி வளக்கலாம்டி மணி. நீ என்னாடி சொல்றே?"



எனக்கென்னமோ கொஞ்சங்கூட ஒப்பலடி. பாவம், கானப்பயத்தையும் தட்டாம்பயத்தையும் தண்ணி ஊத்தி வளத்திட்டு பாங்கெணத்தில கொண்டு போய் கொட்றதுக்கு எப்பிடி டீ மனசு ஒப்புது உங்களுக்கு?"ன்னுச்சு மணி அத்தை.



இவ ஒருத்தி... சீமைலயில்லாதவ! எதெதுக்குத்தான் பாவ புண்ணியம் பாக்கிறதிண்டு வெவஸ்தயே இல்ல?"


எனக்கு ஒப்பல. வேணுமிண்டா நான் மாவௌக்கு எடுக்கிறேன்"ன்னுச்சு மணி அத்தை.



க்கும்டி.. மாவௌக்கெடுக்கிறதுன்னா கிள்ளுக்கீறன்னு நெனச்சியா?"

இங்க பாரு... எங்க வீட்ல ரெண்டு ஓட்டப்பான கெடக்கு. நான் போய் எடுத்துட்டு வாரேன். நீ காப்படி கானப்பயறு, தட்டாம்பயறு, ஒரு அரைக்காப்படி பாசிப் பருப்பும் மட்டும் எடுத்து வை"ன்னுட்டு ஓட்டோட்டமா ஓடிப் போச்சு.

மணி அத்தை கூட்டுக்காரிக்காக ஒத்துக்கிச்சு.

கோபமாய் வந்த அப்பத்தா, மணி அத்தையைப் பார்த்துக் கத்துது.

பயத்தப் பூரா அள்ளிக்கிட்டுப் போயி? என்னாடி செய்யப் போறவ?"


கோயிலுக்கு மொளப்பாரி வௌக்கப் போறோம்த்தா."


ஙொண்ணஞ் சொன்னது சரியாத்தான் போச்சு. ஏன்டி, அந்த அமுக்கி முத்தம்மா கூடச் சேந்து வீணாப் போறவ. ஒனக்கெதுக்கு அந்தச் சோலி? பேசாம பயத்தக் கொண்டு போய் பானைல போட்டுட்டு வேற சோலி கெடந்தாப் பாரு. அந்தச் சிரிக்கி மூக்கையா மக இங்கன வரட்டும் பேசிக்கிறேன்."



ஏன் ஆத்தா எல்லாப் பேரும் அவளவே வய்யிறீங்க? நீங்க நெனக்கிற மாதிரிலாம் அவ கெட்டவ கெடையாது ஆத்தா. அவ உடுத்திச் சிங்காரிச்சிட்டு வாறதைப் பார்த்து எல்லாமே அவள மோசமா நெனக்கிறீக. ஆனா அவளுக்குப் பச்சப்புள்ள மனசு ஆத்தா."

க்கும்... ஒடனே ஒசாரத்துக்கு வந்திருவியே ஒஞ்சோட்டுக்காரிக்கு. உன்னோட சோட்டுக்காரி சரியில்லைன்னு உன் அண்ணந்தான் சொல்லிருக்கான். பாத்துடி மணி. ஒன்னிய கரை சேக்கிற வரைக்கும் நான்தான வயித்தில நெருப்பக் கட்டிக் கிருக்கணும்?"



ஆத்தா... எனக்கும் இந்த மொளப் பாரியும் களுதையெல்லாம் ஒப்பலதான் ஆத்தா. பாவம் அவ ஆசப்பட்றாளேண்டு தான் இந்த ஒத்த தடவ மட்டும் சரின்னு சொன்னேன் ஆத்தா"ன்னு சொல்லி அப்பத்தாவ ஒருவழியா ஒத்துக்க வச்சிச்சு மணி அத்தை.



ரெண்டு மண் பானையோட வந்த மூக்கையா மக, அதை அப்பிடியே பண்ணருவாளக் கொண்டி கொத்திக் கொத்திப் பக்குவமா ஒடச்சிச்சு. மேல்பாதியைக் குப்புறக்கா கவுத்துப் போட்டு கீழ்ப்பாதிய அது மேல வச்சு செம்மண்ணும், மணலும், காஞ்ச பசுஞ்சாணியும் கலந்து அதில ரெப்பிச்சு. நல்லா சமமா பரப்பின மண் மேல நடுக்கொண்டு வட்டமாய் கொஞ்சம் கானப்பயத்த தூவுது. அதச்சுத்தி இன்னொரு வட்டமாய் கொஞ்சம் தட்டாம் பயத்தையும், ஓரமா பாசிப் பயத்தையும் ஒரு வட்டமாய்த் தூவிச்சு. மிச்ச மண்ண அள்ளி அது மேல தூவி, கொஞ்சம் தண்ணியத் தெளிச்சு ஓரமாய் வச்சிருச்சு. அதே மாதிரி ரெண்டு தயார் பண்ணிட்டு, இந்தாடி மணி... அம்புட்டுதாண்டி. இப்பிடியே இதுகள தூக்கிட்டுப் போயி வெயில் படாத மூலையில வச்சு பஞ்சாரத் தப்போட்டு மூடி வையி. தெனமும் விடியக் கருக்கல்லயம் பொழுதுசாய நேரத்திலயும் கொஞ்சம் தண்ணிய தெளிச்சு மூடிட்டா போதும். எட்டா நாள் எடுத்துப் பாத்தா அம் புட்டழகா வளந்திருக்கும் மாளப்பாரி! செப்புப் பானையை வௌக்கிச்சோடி அது மேல அப்பிடியே தூக்கிவச்சி கொண்டுக்குப் போக வேண்டியதுதான். நான் வாறண்டீ மணி"ன்னு கௌம்பிடிச்சு அந்தக்கா.



ஒரு வாரம் ஓடிப் போச்சு. பொழுது விடிஞ்சா கோயில் நல்ல நா. ஊரே சடங்கான கொமரிப்பிள்ளை கணக்கா சிங்காரிச்சு நிக்கிது. தெருவுக்குத் தெருவு எங்க பாத்தாலும் வேப்பிலையும், மாவிலையுமா தொங்குது. வாழமரம் வேற கட்டியிருக்கு. திரும்பின பக்கமெல்லாம் கொழா ரேடியா காதைப் பொளக்குது. பள்ளிக்கொடம் விட்டொன்னே நேரா அப்பத்தா வீட்டுக்குத் தான் போனேன். மணி அத்தையைப் பாக்க. வீட்ல யாரையும் காணோம். சித்தப்பா மட்டும் இடுப்பில ஒரு துண்டைக் கட்டிக்கிட்டுக் கண்ணாடியைப் பாத்து மொகமழிச்சிக்கிட் டிருந்திச்சு.





மணி அத்த எங்க சித்தப்பா?" என்றேன்.



தெருக் கொழாய்ல தண்ணி புடிக்கப் போயிருக்கும்டா. போய்ப் பாரு"ன்னிச்சு சித்தப்பா.




சரின்னிட்டுக் குடுகுடுன்னு வெளிய ஓடியாந்தனா அப்பத்தான் மூக்கையா மக வருது எதிர.




எங்டகா ஙொய்த்தய? மொளப்பாரிக்குத் தண்ணி கிண்ணி ஊத்தினாளோ என்னமோ"ன்னுக்கிட்டே வீட்டுக்குள்ள போச்சு. கொஞ்ச நேரத்தில அழுதுகிட்டே வெளிய ஓடியாந்திச்சு. அப்பத்தான் இடுப்புல தண்ணிக் கொடத்தோட மணி அத்தை வருது எதிர்ல. ஏய்.. .என்னாடி அழுகிறவ? ஆத்தா ஏதாச்சும் வஞ்சிச்சா? சொல்லுடி"ன்னு பதறிப் போயி கேக்குது மணி அத்தை.

மணி... நான் உசிரோடு இருக்க மாட்டேண்டி. எங்கூடப் பெறந்தவங்கெணக்காத்தானடி நெனச்சேன் நானும்... இப்பவே நாண்டுக்கிட்டுத் தொங்கலைன்டா நான் மூக்கையாவுக்குப் பெறக்கலடி..."ன்னு அழுதுக்கிட்டே வேகமா ஓடுது அந்தக்கா.

விடியக்கருக்கல்ல கொட்டுச் சத்தம் கேட்டு எந்திரிச்சுப் பாத்தா தெருவுல ஆம்பளையும் பொம்பளையும் மஞ்சத் தண்ணியைக் கலக்கி வச்சிக்கிட்டு அவுக அவுக மொறப் பிள்ளைக மேல ஊத்தி ஒரே அலம் பல் பண்ணிட்டுத் திரியுதுக. அத்தையோட மொகத்திலதான் சிரிப்பே காணோம்.



பொழுதுசாய நாலு மணிக்கெல்லாம் கோயில்லேர்ந்து கொழா ரேடியால கூப்பிடுறாய்ங்க. மொளப்பாரி தூக்கிற பொம்பளப் பிள்ளைகள்லாம் உடனே கௌம்பி கோயில் மண்டபத்துக்கு வரவும்"ன்னு. மணி அத்தை அவசரமாய் தயாராகுது. மூக்கையா மக வந்து வீட்டுக்கு வராம தெருவோரமாய் நிக்குது. ‘அமுக்கி முத்தம்மா’வா வாற அக்கா இன்னக்கென்னமோ ‘அழுக்கு முத்தம்மா’வா வந்திருக்கு. எனக்கே ஆச் சர்யமாய்ப் போச்சு. பெறகு மணி அத்தைதான் ரெண்டு மொளப்பாரியையும் தூக்கிட்டு வந்து ஒண்ண அது கூட்டுக்காரிகிட்ட குடுத்திட்டு, இன்னொன்ன தூக்கி மண்டைல வச்சிக்கிட்டு அப்பிடியே கோயில் மண்டபம் போகுதுக. நானும் கூடவே போறேன்.



ஒரு சுத்துச் சுத்தி திரும்ப கோயில் மண்டபத்துக்கு வந்திட்டு கோயில் கெணத் தில தொப்புக்கட்டி தொப்புக்கட்டின்னு மொளப் பாரிய போடுதுக. அப்பத் தான் பாக்கிறேன் மணி அத்தையை. வரிசையில காணம்! மூக்கையா மககிட்ட கேக்கிறேன்.



ஓட்டோட்டமா அப்பத்தா வீட்டுக்குத் தான் போனேன். அங்கன நான் பாத்தது மணி அத்ததானா? மூஞ்சியெல்லாம் வீங்கி, கண்ணுலாம் செவந்து, ஒதட்டுக்கிட்ட காயம் வேற. பாக்கவே என்னமோ மாதிரி இருந்திச்சு. நான் கிட்டப் போயி, என்னாத்தே?"ன்னவொடனே என்னிய அப்பிடியே கட்டிப்புடிச்சிட்டு அழுதுச்சு. ஒடனே கண்ணத் தொடச்சிட்டு, ஒண்ணு மில்லடா செல்லம். நீ வெரசா பள்ளிக் கொடம் கௌம்பு"ன்னு சொல்லி என் கன்னத்தில அழுத்தமா ஒரு முத்தம் குடுத்திச்சு.

பொழுதுசாய பள்ளிக்கொடம் விட்டு அப்பத்தா வீட்டுக்குப் போகலாமின்னுட்டுப் போனா ஊர்ப் பொம்பளைகளும் பெரிசுகளும் கூடி நிக்கிதுக. ஒரே ஒப்பாரிச் சத்தம்! கூட்டத்துக்குள்ள முண்டியடிச்சு உள்ள போயி பாக்கிறேன். மண்டையே வெடிக்கிறாப்ல இருக்கு. கூடியிருந்த பொம்பளைக பேசிக்கிச்சுக.

யே... யாத்தே.... அப்பிராணிப்பிள்ள இந்த மணி போயி இப்பிடிச் செய்வாளாக்கா? அந்த மூக்கையா மகதான் என்னமோ செஞ்சு பாவம் இந்தப் பச்ச மண்ணையும் சேத்துக் கூட்டிட்டுப் போயிருப்பா. சாவுல கூட ரெண்டு பேருக்கும் எம்புட்டு ஒத்தும பாத்தியாக்கா? தாவிணித் துணியைப் போட்டு ரெண்டு பேரும் இடுப்பச் சேத்துக் கட்டியிருக்காளுக. ரெண்டு பேர் சடையும் ஒண்ணா முடிஞ்சு, ரிப்பன் துணியப் போட்டு ரெண்டு பேர் கால்களையும் ஒண்ணாக்கட்டி, கைக்குக் கைகோத்த மேனிக்கி ஒண்ணா குருவனூத்துப் பாலத்தில ஏறி பெரியாத்தில தவ்வி யிருக்காளுக!



அங்கேருந்து ஒரு மயில் தொலவுல மரத்துப் பாலத்துக்கிட்டத்தான் கண்டுபுடிச்சுத் தூக்கியிருக்காக. காட்டுப் பொணத்த வீட்டுக்குக் கொண்டு வரப்பிடாதின்னு அங்கனயே எரிச்சுப்பிட்டு வந்திட்டாகலாம்கா. பாவி மக... மூஞ்சியக் கூட பாக்க முடியாமப் போச்சேக்கா..."ன்னு மூக்கச் சிந்திக்கிட்டு அழுகுதுக.



‘மணி அத்தை செத்துப் போச்சா!?’ என்னால ஏத்துக்கவே முடியலை.



நேத்து நீ தூங்கினப் பெறகு நான் அப்பத்தா வீட்டுக்குப் போயிருந்தேன்டா. அப்ப.. சித்தப்பா மணியத்தையப் போட்டு வௌக்கமாத்தக் கொண்டி அடிச்சிச்சு. மொளப்பாரியத் தூக்கிட்டு மந்தக்காட்டுக்கு எவனப் பாக்கலா போனேன்னு கேட்டு ரொம்ப நேரமா அடிச்சிச்சு..." அக்கா சொல்லிக்கிட்டிருக்கும் போதே என்னையறியாம மணியத்தே...."ன்னு கத்திட்டேன். அக்காவும் என்னய கட்டிப்புடிச்சிக்கிட்டு அழுகுது. எப்படா விடியும்னு முழிச்சிக்கேருத்தேன்.


 பொழுது விடிஞ்சொன்ன எந்திரிச்சு ஒரே ஓட்டமா மந்தக்காட்டுக்கு ஓடுறேன். அங்கன போயி மூச்சு வாங்க ஆவலா நாலாபக்கமும் தேடறேன். ஒரு மூலையில வரப்போரமா ஈர மண்ணில மணி அத்த கொட்டின (நட்டுவச்ச) மொளப்பாரி! ஓடிப் போயி கிட்டத்தில ஒக்காந்து அதுகளத் தடவிப் பாக்கிறேன். அப்படியே எம்மணியத்தையோட சிரிச்ச மூஞ்சி அதில தெரியுது! என் மணியத்தை சாகல... என் மணியத்த சாகல..."ன்னு கத்துறேன்.



சித்தப்பாவப் பார்க்கப் புடிக்கலை.எனக்கு அதுக்குப் பெறகு அந்த வீடு மட்டுமில்ல. அந்த ஊரே ஒப்பாமப் போச்சு.



ஹும்... காலம் உருண்டோடிப் போச்சு. போன வருஷம் அந்த மனுசன் சாவுக்குக் கூட நான் போகவேயில்லை. இதோ... இப்ப எனக்கும் ஒரு வயசுக்கு வந்த மக இருக்கா. பேர் ‘மணிப்பிள்ளை’!



டாட்... டாட்... என்ன டாட்... ஒரு மாதிரியா ஃபீல் பண்றீங்க..." என்று என் மகள் என்னை உலுக்க...



ஆங்... மணியத்தை... மொளப்பாரி..." என்று நான் உளற...



ஓ... டாட்... இன்னும் நீங்க அதப்பத்திதான் திங்க் பண்ணிட்டு இருக்கீங்களா? ‘தி மேக்கிங் அஃப் மொல்பாரிய’ கிராம் ஃபெஸ்ட் டமில்நாட் டாட்காம்ல போயிட்டு நான் பார்த்திட்டேன் டாட்" என்கிறாள் என் மகள்.



இப்போதுதான் நன்றாகக் கவனித்தேன் என் மகளின் கண்களை. ஆம், மணி அத்தையேதான்!


 நன்றி  கல்கி, புலவர் தருமி

ஈரோடு -பெங்களூரு- அவினாசி- திருப்பூர் - பதிவர் சந்திப்பு

எம் ஜி ஆர் - ரை ஏன் சுட்டேன்? எம் ஆர் ராதா பேட்டி @ மலேசியா

a
எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்!- எம்.ஆர்.ராதா கைது – மாலைமலர் செய்தி “பெற்றால்தான் பிள்ளையா” படத்தொடர்பான தகராறில் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். அவரை சுட்டு விட்டு, தன்னைத்தானே சுட்டுக் கொண்ட எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டார். 1966_ம் ஆண்டில் அன்பே வா, நான் ஆணையிட்டால், முகராசி, நாடோடி, சந்திரோதயம், தாலி பாக்கியம், தனிப்பிறவி, பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய 9 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். “அன்பே வா” ஏவி.எம். தயாரித்து, மகத்தான வெற்றி கண்ட படம். இதில் அவருக்கு ஜோடி சரோஜாதேவி. முகராசி, தனிப்பிறவி ஆகிய இரண்டு படங்களும் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு. இரண்டு படங்களிலும் ஜெயலலிதாதான் கதாநாயகி. ஆகஸ்ட் 18_ந்தேதியன்று “முகராசி”யும், செப்டம்பர் 16_ந்தேதி “தனிப்பிறவி”யும் வெளியாயின. அதாவது, ஒரு மாத இடைவெளியில், இரண்டு எம்.ஜி.ஆர். படங்களை சின்னப்ப தேவர் வெளியிட்டு, சாதனை படைத்தார். “முகராசி”க்கு ஆர்.கே.சண்முகம், “தனிப் பிறவி”க்கு ஆரூர்தாசும் வசனம் எழுதினர். முகராசியில் எம்.ஜி.ஆருடன் ஜெமினிகணேசன் இணைந்து நடித்தார். “நாடோடி”, பி.ஆர்.பந்துலு தயாரித்த படம். இதில் எம்.ஜி. ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர். பாடிய “நான் ஆணையிட்டால்…” பாடலையே தலைப்பாக வைத்து சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் படம் எடுத்தார். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. வசனத்தை வித்துவான் வே.லட்சுமணன் எழுதினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். படத்தை சாணக்யா டைரக்ட் செய்தார். எம்.ஜி.ஆர். மாறுபட்ட வேடத்தில் நடித்த படம் “பறக்கும் பாவை”. இதில் சர்க்கஸ் காட்சிகளில் எம்.ஜி.ஆர். நடித்தார். ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி. ஆரின் ஜோடி சரோஜாதேவி. வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுத, ராமண்ணா டைரக்ட் செய்தார். ஸ்ரீமுத்துக்குமரன் பிக்சர்ஸ் சார்பில் வாசு தயாரித்த “பெற்றால்தான் பிள்ளையா” 6_12_1966_ல் ரிலீஸ் ஆயிற்று. எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்த படம். கதை_ வசனத்தை ஆரூர்தாஸ் எழுத, இசை அமைத்தது எம். எஸ்.விஸ்வநாதன். டைரக்ஷன்: கிருஷ்ணன் பஞ்சு. “பெற்றால்தான் பிள்ளையா” படத்தில், எம்.ஜி.ஆர். ஓர் அனாதை; குடிசையில் வசிப்பவர். அசோகன் வில்லன். அவர் சவுகார் ஜானகியை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி, குழந்தை பிறந்ததும் கைவிட்டு விடுவார். கேட்பாரற்று கிடந்த குழந்தையை எம்.ஜி.ஆர். எடுத்து வளர்ப்பார். எம்.ஆர்.ராதாவும் சிவாஜியும் எம்.ஜி.ஆர். வீட்டுக்கு எதிர் வீட்டில், எம்.ஆர்.ராதா வசிப்பார். அவர் ஒரு வித்தைக்காரர். அவருடைய தங்கை சரோஜாதேவி. எம்.ஜி.ஆருக்கும் சரோஜாதேவிக்கும் காதல் ஏற்படுகிறது. கே.ஏ.தங்கவேலு, பொம்மை வியாபாரி. தன் குழந்தையைக் கண்டுபிடித்துக் கொடுக்கும்படி, இவரிடம் சவுகார் ஜானகி கேட்டுக்கொள்வார். தங்கவேலுவும், போலீஸ்காரர் டி.எஸ்.பாலையாவும் சிரமப்பட்டுத் தேடி குழந்தையைக் கண்டு பிடித்து விடுவார்கள். ஆனால், குழந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட எம்.ஜி.ஆர்., அதைக் கொடுக்க மறுத்துவிடுவார். இதற்கிடையே அசோகன் ஒரு விபத்தில் கால் இழந்து, மனம் திருந்தி, சவுகார் ஜானகியிடம் போய்ச்சேருவார். குழந்தை யாருக்குச் சொந்தம் என்ற விஷயம், கோர்ட்டுக்கு போகும். “குழந்தை, பெற்றோருக்குத்தான் சொந்தம்” என்று கோர்ட்டு தீர்ப்பு கூறும். குழந்தையை, பெற்றோரிடம் எம்.ஜி. ஆர். கொடுக்கும்போது துயரம் மிகுதியால் கண்ணீர் வடிப்பார். குழந்தையைப் பெற்றுக்கொண்டு சவுகார் ஜானகி புறப்படும்போது, குழந்தை “அப்பா!” என்றபடி, எம்.ஜி.ஆரை நோக்கி தாவும். _ இதுதான் “பெற்றால்தான் பிள்ளையா” படத்தின் கதை. இந்தப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. 12_1_1967 அன்று தேவர் பிலிம்ஸ் தயாரிப்பான “தாய்க்கு தலைமகன்” ரிலீஸ் ஆனது. இதில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். வசனம் ஆரூர்தாஸ். இசை: கே.வி.மகா தேவன். டைரக்ஷன்: எம்.ஏ. திருமுகம். அன்று மாலை, “எம்.ஜி. ஆரை எம்.ஆர்.ராதா சுட்டு விட்டார்” என்ற செய்தி, எரிமலை வெடித்தது போல் வெளியாகியது. தமிழ்நாடு முழுவதும் காட்டுத்தீ போல் இச்செய்தி பரவியது. மக்கள் உறைந்து போனார்கள்; சினிமா தியேட்டர்களும், கடைகளும் மூடப்பட்டன. பஸ்களும், ரெயில்களும் ஓடவில்லை. தமிழ்நாடே ஸ்தம்பித்தது. நன்றி- மாலைமலர்

எம் ஜி ஆரை எம் ஆர் ராதா சுட்டதன் பின்னணி என்ன? 

http://www.adrasaka.com/2011/09/blog-post_1336.html