Thursday, September 08, 2011

பிரபுதேவா எனக்கு சகலை முறையா? சிம்பு காட்டம்

Santa Cruz
1.காதல்காரன், காய்ச்சல்காரன் இருவருக்கும் இதழ்கள் இனித்த நிலையிலும், விழிகள் பனித்த நிலையிலும் இருக்கும்

--------------------------

2. ஒவ்வொரு தனி மனிதனும் தினமும் குறைந்த பட்சம் 4 பொய்கள் வீதம் வருடம் 1460 பொய்கள் சொல்கிறான், மேக்சிமம் சொல்ற பொய் “ ஐ ஆம் ஃபைன்”

-------------------------

3. வலிகளைப்பரிசாகத்தருவதில் உனக்கு நிகர் யாருமில்லை.தந்தது நீ என்பதால் புன்னகையுடன் அதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு நிகர் யாருமில்லை

-----------------------------

4.  ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்ததால் முதல்வர் தலையிட முடியாது: ஜெ. விளக்கம் # பரிந்துரை செய்யலாமே?மனம் இருந்தால் மார்க்கமுண்டு

--------------------------

5.எல்லோருடைய வாழ்விலும் 2 காதல்கள் உண்டு 1. சொல்லாத காதல் 2. சொல்லி நிறைவேறாத காதல்

----------------------------


Neuquén
6. உன் மனதில் நான் இல்லை என்பது தெரிந்த பின்பும் உன் மீதான என் அன்பு குறைந்த பாடில்லை

---------------------------

7. தினசரி 4 காட்சிகள் போட்டா அது சினிமா தியேட்டர், தினசரி 4 கட்சிகள் மாறுனா அது ராம்தாஸ் வழிகாட்டல்

-----------------------------

8. அன்பு மட்டுமே எனக்கிருக்கும் ஒரே சொத்து, சந்தேகங்கள் மட்டுமே உன் மனதில் படிந்திருக்கும்  ஒரே வித்து

-------------------------------

9. என் எல்லா சோகங்களுக்கும் நீ ஆறுதல் சொல்வாய்!ஆறுதலே யாரும் சொல்ல முடியாதபடி நீயே என்னை பிரிந்து கொல்வாய்!

-----------------------

10. நீ எனக்கு துரோகம் செய்வாய் என நான் நினைத்ததில்லை,என் கண்ணீர் உன்னை காயப்படுத்திவிடுமோ என்றுதான் என் கண்களைக்கூட நனைத்ததில்லை

--------------------



11. "திமுகவின் தோல்விக்கு பெண்கள் தான் காரணம்''- ஸ்டாலின் #  அ தி.மு.க.,வின் வெற்றிக்கு கலைஞர்,ஆ ராசா போன்ற  ஆண்கள் தான் காரணம்  - ஜெ

-------------------------

12. என் காதலுக்கு நீயே விளிம்பாக இருக்கிறாய், என் காயங்களுக்கு களிம்பாக ஏன் மறுக்கிறாய்?

-----------------------


13. உன் சமீபம் என்னை மென்மை ஆக்குகிறது, உன் அன்பு என்னை மேன்மை ஆக்குகிறது

----------------------------


14. இதே பிரச்சனை சசிகலா குடும்பத்தில் யாருக்காவது வந்தால் இதே போல் அதிகாரம் இல்லை என சொல்வாரா? ஜெ?

-------------------


15. காதலை முதலில் சொல்வது பெரும்பாலும் ஆண்களே!காதலில் கடைசி வரை கொல்வது பெரும்பாலும் பெண்களே!

---------------------------



16. சிம்பு என் நண்பன் இல்லை-ஜீவா  #  பிரபுதேவா என் சகலை அல்ல - சிம்பு @ இமேஜினேஷன்

-----------------------------

17. மூன்றெழுத்தில் நம் மூச்சு இருக்கும் ,அது கடமை,மூன்று உயிர்கள் காப்பாற்ற கோருவோம், அது நம் உரிமை

----------------------------


18. ஒரு உயிர் பிறந்ததும் உதிர்க்கும் முதல் வார்த்தை அம்மா,இந்த மூன்று உயிர்கள் பிழைத்தால் பல ஆயிரம் உயிர்கள் உச்சரிக்குமே அம்மா உன் பெருமையை

-----------------------------

19. நீ இடம் மாறுகிறாய் , தடம் மாறுகிறாய், ஆனால் என் இதயம் மட்டும் மாறவே இல்லை

----------------

20. ஒரு தோல்விக்குப்பின் 1000 காரணங்கள் இருக்கும், ஆனால் ஒரு வெற்றிக்குமுன் 1000 தோல்விகள் இருக்கும்

---------------



21. அமைவதுதான் வாழ்க்கை என்று எண்ணாமல், அமைத்துக்கொள்வதுதான் வாழ்க்கை என எண்ணுங்கள் # லவ் மேரேஜ்

-------------------


22. தவறான 100 நபர்களை நேசிப்பதால் இழப்பு ஏதும் இல்லை,ஆனால் சரியான நபர் ஒருவரை வெறுப்பது வாழ்க்கை முழுதும் உன் இதயத்தை தொந்தரவு செய்யும்

-----------------------


23.  பாடலின் நாயகி பாட்டுடைத்தலைவி ஆகும்போது ட்வீட்டின் நாயகி ட்வீட்டுடைத்தலைவி ஆகமாட்டாளா?

---------------------------

24. எதிர்பார்ப்புகள் இல்லை என்றால் வாழ்வில் அர்த்தமே இல்லை. என் வாழ்வின் எதிர்பார்ப்பு உன் அன்பு, என் வாழ்வின் அர்த்தம் நீ

--------------------


25. உன்னை நீயே எப்போதும் மாற்றிக்கொள்ள மாட்டாய்! யாராவது ஒருவரால் அன்பு காட்டப்பட்டு ஆகர்சிக்கப்படும்வரை

----------------




Wednesday, September 07, 2011

ஜெயா டி வியில் சிம்ரன் ஜாக்கெட் டிசைன் டாப்பாமே? ஏன்?எதற்கு? எப்படி?

1.கவிதை எழுதுபவர்கள் அனைவருமே காதலிப்பவர்கள் அல்ல, ஆனால் காதலிப்பவர்கள் அனைவருமே கவிதைக்காரர்களே!

--------------------------

2. பொதுவான கவிதை கவனிக்கப்படுகிறது, காதல் கவிதைகள் ரசிக்கப்படுகிறது,காதலில் ஈடுபட்டவன் எழுதிய கவிதை நேசிக்கப்படுகிறது

-------------------------

3. தனது காதலை  வெறும் வார்த்தைகளால் வெளிப்படுத்தியபோது நிராகரிக்கப்பட்ட பலர் கவிதைகளாக வடித்து காதலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்

--------------------------

4. ஜெயா டிவியில் சிம்ரன் மட்டுமல்ல மதன், யூகி சேது மற்றும் பலரும்...!! # அய்யய்யோ,அவங்களும் சட்டையை சட்டை பண்ண மாட்டாங்களா? டாப்லெஸ்?அவ்வ்

-------------------------
5. வரைமுறைகளை தாண்டி நடித்திருக்கிறேன்! சில்க் வேடம் பற்றி வித்யாபாலன்!! # சென்சார் விதிமுறைகளை தாண்டி வந்தா சரிதான் மேடம்

--------------------------



Celebs and their cars


-----------------------
6. வெட்கம் என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண்களுக்கும் உரித்தாகும்,ஆனால் கூட அவன் அன்புக்குரியவள் இருக்கும்போது மட்டும் வெளிப்படும்

----------------------------

7.  நேரத்தை பணயம் வைத்து இணையம் எங்கும் தேடிப்பார்த்தும் கிடைக்கவே இல்லை, உன் மவுன மொழிக்கான அர்த்தங்களை

----------------------

8. காரணமே இல்லாமல் சும்மானாச்சுக்கும் ஒரு குழந்தை அழும்போது அதன் அம்மாவைத்தவிர சுலபமாக யாராலும் அழுகையை நிறுத்தி விட முடியாது

-----------------------

9. காகிதத்தில் காதல் கடிதம் எழுதும்போது அதில் உயிர் ஓட்டம் இருந்தது, மெயிலில் லவ் மெசேஜ் அனுப்புகையில் வெறும் எண்ண ஓட்டம் மட்டுமே!

--------------------------

10. . இப்போது நமது தலைவர் அவர்கள் கால்வாயை திறந்து வைத்து நம்மிடையே உரை ஆற்றுவார்.

ஏன் முழு வாயை திறந்து பேசுனா குறைஞ்சிடுவாரா?

--------------------------


..and he never returned

11. பாலகுமாரன் எப்போது ஆன்மீகக்கதைகள் எழுத ஆரம்பித்தாரோ அப்போதிருந்து அவர் ஒரிஜினாலிட்டியை இழந்தார், கூடவே வாசகர்களையும்

----------------------

12. வரலாற்றுப்புதினங்களில் சாண்டில்யனின் நடை ரஜினியின் ஜனரஞ்சகம், கல்கியின்நடை கமலின்மதிநுட்பம்.ஆனால் பி சி ரசிகர்களை சாண்டில்யனே கவர்ந்தார்

----------------------------

13. வெற்றிக்கு 2 வழிகள் உள்ளன. 1. உங்களுக்குத்தெரிந்த எல்லாவற்றையும் எல்லாருக்கும் சொல்லிட்டு இருக்காதீங்க 2. முதல் வழியை இன்னொருக்கா படிங்க

------------------------

14. பிரிவோம் சந்திப்போம் ஆனந்த தாண்டவம் ஆக. ரத்னா கேரக்டரில் ருக்மணி 80 % பொருந்தியும், மதுமிதா கேரக்டரில் தமனா 50% கூட பொருந்தவில்லை

----------------------------
15. ஜீவா-சமந்தா நடிப்பில் நீதானே என் பொன்வசந்தம் - கௌதம் புதிய பட அறிவிப்பு.# விண்ணைத்தாண்டி வெற்றி வர வாழ்த்துக்கள்

------------------------ 
 Landscape Art - An Oil paint depicting a painters pride...
bob-ross-landscape-oil-painting-27-12.jpg

16. பழக்கமான நண்பர்களுடன் ஏற்பட்ட கோபத்தை வெளிப்படுத்த சிறந்த வழி அவர்களை புறக்கணிப்பதே

-----------------------------


17. டென்த் படிக்கறபவே உங்க பையனுக்கு பிரைம் மினிஸ்டர் மூளை. 

நிஜமாவா? 

ஆமா எந்தகேள்வியைக்கேட்டாலும் பதில் சொல்லாம இடிச்ச புளி போல் இருக்கான்

-----------------------

18. அப்பா,எனக்கொரு பேய்க்கதை சொல்லுங்கப்பா.. 

ஒரு காலத்துல பவர் ஸ்டார்னு ஒரு நடிகர் இருந்தாரு..

அய்யய்யோ ,பயமா இருக்கு, போதும் நிறுத்துங்க

-----------------------------

19. பல தவறுகளுக்குப்பிறகு எடிசன் பல்பு கண்டு பிடிச்சார்,ஒரே ஒரு தவறு செஞ்சாக்கூட நாம் பல்பு வாங்கியவ்ர் என்றே அழைக்கப்படறோம்

----------------------------

20. தலைவரே! எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாதுன்னு எந்த தைரியத்துல  சொல்றீங்க? 

2016 வரை எலக்‌ஷன் வராதுங்கற தைரியத்துல  # DR  ராம்தாஸ்

------------------------


21. எக்சாம்ல பாஸ் ஆனாலும், ஃபெயில் ஆனாலும் ஃபிரண்ட் மட்டும் மாறுவதே இல்லை - மச்சி ட்ரீட் எப்போ?

--------------------------

22.  சைடு எஃபக்ட்டே இல்லாத சிறந்த மருந்து புன்னகையே!

-----------------------------

23. யார் கூட இருந்தா நல்லா இருப்போம்? என ஆராய்வது பெண்ணின் மனது, யார்கூட இருந்தாலும் நல்லா இருக்கட்டும் என வாழ்த்துவது ஆணின் மனது

--------------------

24. இது என்ன காதல் உதிர் காலமா? என் மீதான உன் காதல் குறைந்து கொண்டே வருகிறதே?

--------------------------

25. நான் வெற்றியில் திளைக்கும்போது உன் உள்ளங்கை பற்றவும், தோல்வி என்னை துளைக்கும்போது உன் மடியினில் என் தலை சாய்க்கவும் உன்னை தேடுவேன்

------------------------------

Wild Animals

 

 

ஜெவைக்கண்டு விஜயகாந்த் பம்முவது ஏன்? விம்முவது ஜூ வி கட்டுரை

விஜயகாந்த்தை கழற்றிவிட நினைக்கிறாரா ஜெ.?

கூட்டணியை உலுக்கும் உள்ளாட்சி நிலவரம்!
ழுகார் நம்முன் ஆஜராகி செய்திச் சிட்டையைப் பிரிப்பதற்கு முன்னதாக, நாம் முந்திக்கொண்டோம். 

'
''புதிய கவர்னர் ரோசய்யாவை, கருணாநிதி திடீரென்று சந்தித்தாரே! ஏதாவது விஷேசம் உண்டா?''

''ரோசய்யாவுக்கும் கருணாநிதிக்கும் சொல்லிக்கொள்வது மாதிரி நட்பெல்லாம் இல்லை. 'நாங்கள் நெடுநாளைய நண்பர்கள்’ என்று கருணாநிதி சொல்லிக்கொள்கிறார். போகட்டும்... மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கருணாநிதி சொன்னாலும், 'கவர்னரை தன் வசம் வைத்துக்கொள்வது நல்லது’ என்று கருணாநிதி நினைத்து, நடந்த காரியபூர்வமான சந்திப்புதான் இது என்கிறார்கள் தி.மு.க-வில். 

 சி.பி - கலைஞர் ஒரு சிறந்த ராஜ தந்திரி, அவரது ஒவ்வொரு மூவ்க்கும் ஒரு அர்த்தம் இருக்கும், ஆதாயம் இல்லாம ஆத்தோட போக மாட்டார்ர்.......



அன்பழகன், துரைமுருகன் ஆகியோருடன்தான் ரோசய்யாவை சந்தித்தார் கருணாநிதி. தான் எழுதிய புத்தகங்களை அவருக்குக் கொடுத்தார். பிறகு துரைமுருகனை வெளியே அனுப்பிவிட்டு இரண்டு நிமிஷம் ரோசய் யாவிடம் தனிமையில் பேசினாராம் கருணாநிதி.''


''அது என்னவாம்?''

சி.பி - யோவ், உமக்கு லொள்ளு ஜாஸ்திய்யா, அதான் தனிமைல பேசுனாருன்னு சொல்றாங்க.. அப்புறம் எப்படி அது தெரியும்? ஆனாலும் இப்போ அண்ணன் அளந்து விடுவார் பாருங்க.. பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே?  
''ஜெயலலிதாவின் சில செயல்பாடுகளைச் சொல்லி, கருணாநிதி வருந்தினாராம். 'நில மோசடின்னு சொல்லி கட்சிக்காரங்களைக் கைது செய்றாங்க. எல்லாரையும் குண்டாஸ்ல போடு றாங்க. என் குடும்பத்தையே பழிவாங்கணும்னு நினைக்கிறாங்க. சமச்சீர்க் கல்வி விஷயத்தில் தப்பான முடிவெடுத்து, உச்ச நீதிமன்றம் கண்டிச்ச பிறகு பின்வாங்கிட்டாங்க’ என்று கடகடவென கருணாநிதி கலங்கிவிட்டதாக தி.மு.க. வட்டாரம் சொல்கிறது. 


முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல் ரோசய்யா கேட்டுக்கொண்டாராம். 


சி.பி - ஏன் அவரு எந்த பாவனாவையும் காட்டலை.? அடச்சே? எந்த பாவனையையும் காட்டலை? மனசுக்குள்ள ராமராஜன்னு நினப்பா? 

அடுத்து, சொற்ப நிமிடங்களிலேயே வெளியே வந்துவிட்டார் கருணாநிதி!''


''இதுபற்றி என்ன நினைக்கிறாராம் ரோசய்யா!''

''இதெல்லாம் நமக்குத் தேவை இல்லாத விஷயம் என்று நினைப்பார்!

சென்னைக்கு வருவதற்கு முந்தைய நாள், ஆந்திரப் பத்திரிகையாளர் ஒருவர் ரோசய்யாவை சந்தித்துள்ளார். அப்போது, 'நான் அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்வேன். அந்த மாநில அரசுக்கு உதவியாக இருப்பேன். நான் அரசியல்வாதி மாதிரி கருத்துச் சொல்லமாட்டேன். பப்ளிக் ஸ்பீக்கராக இருக்க மாட்டேன்’ என்று சொன்னாராம். இதை வைத்துப்பார்த்தால் ரோசய்யா... அடங்கிய சமர்த்தராகவே காலத்தை ஓட்டிவிடுவார் என்று நினைக்கிறேன். ஆனால், காங்கிரஸ் மேலிடம் என்ன நினைக்கிறதோ...''



சி.பி - காங்கிரஸ் ஃபீமேல் இடம்னு சொல்லுங்க... அப்புறம் கீழே இருக்கற ஃபோட்டோவினைப்பாருங்க.. கேப்டன் மப்புல இருக்காரா?இல்லையா? கண்டுபிடிப்பவர்களுக்கு நயந்தாரா கல்யாண முகூர்த்தம் நேரடி ஒளிபரப்பு வீடியோ லிங்க் அளிக்கப்படும்.. ( ஒன்லி கல்யாண முகூர்த்தம்)

''பர்னாலா உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டாரா?''

''புதிய கவர்னர் வரும்போது முந்தைய கவர்னர் இருப்பது மரபு அல்லவாம்! எனவே, ரோசய்யா மாலையில் பதவி ஏற்கும் அன்று காலையில் பர்னாலா, அவரது மனைவி மற்றும் ஒரே ஒரு பாதுகாவலர் - ஆகிய மூவரும் ராஜ்பவனில் இருந்து பறந்துவிட்டனர். மகன்கள் நான்கைந்து நாட்களுக்கு முன்னதாகவே பொருட்களுடன் போய்விட்டனர். படாடோபமாக வழியனுப்பு விழாக்கள் நடக்காததில் பர்னாலா வருத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள். ஜெயலலிதாவுக்கும், இவருக்கும் நட்பு சரியாக இல்லை என்பதும் விழா நடக்காததற்குக் காரணமாக இருக்கலாம். 'ஒட்டி உறவாடிய தி.மு.க-வாவது சிறு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கலாம்’ என்று பர்னாலா வருந்தியதாக வும் சொல்கிறார்கள்.''


சி.பி - இந்த கழுகார்க்கு, நிருபர்களுக்கு இதே தொழில் போல, சொல்கிறார்கள், நினைத்தார்கள், யோசிக்கிறார்கள்னு இவங்க என்ன மைண்ட் ரீடரா?
''விழா கொண்டாடும் நிலைமையிலா இருக்கிறது தி.மு.க.?''

''அதனால்தான் சண்டிகர் போய் இறங்கிய மறுநாளே அங்கு உள்ள நிருபர்களை அழைத்து பார்ட்டி கொடுத்து பேசினாராம் பர்னாலா. அடுத்து வரப்போகும் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களுள் ஒருவராக பர்னாலா இருக்கப் போகிறாராம். பிரகாஷ் சிங் பாதல் - காங்கிரஸ் ஒரு கூட்டணி அமைக்க, அதற்கு எதிராக பர்னாலா ஒரு கூட்டணியைத் தயார் செய்யத் தொடங்கிவிட்டார். முதல்வர் பாதல், அவரது மகனும் துணை முதல்வருமான சுக்பிர்சிங் பாதல் இருவரும்தான் இனி அவரது இலக்கு! 'இவ்வளவு ஆக்ரோஷமான மனிதர் இங்கே நடந்த பல விஷயங்களைக் கண்டும் காணாமல் மௌனியாக இருந்தது ஏன்?’ என்பதுதான் பலரது கேள்வி. கருணாநிதியுடனான நட்பு என்கிறார்கள் சிலர். பர்னாலாவின் மகனைச் சிலர் காரணம் சொல்கிறார்கள். மொத்தத்தில் பர்னாலா, வெறும் தலையாட்டி பொம்மையாகவே கடந்த ஐந்து ஆண்டுகளைக் கழித்துவிட்டுப் போய்விட்டார்!''

''திடீரென ஸ்டாலின் லண்டன் கிளம்பிவிட்டாரே?''

''மருத்துவ சிகிச்சைக்காக ஆண்டுக்கு ஒரு முறை லண்டன் சென்று வருவதைத் தனது வழக்கமாக வைத்துள்ளார் ஸ்டாலின். லண்டன் செல்வதற்கு முன்னதாக, இங்கு உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று செக்-அப் செய்ததாகவும் சொல்கிறார்கள். எனவே, அவர் லண்டன் செல்வதில் ரகசியம் எதுவும் இல்லை! ஆனால், அதற்காக அவர் தேர்ந்தெடுத்த தேதிதான் தி.மு.க-வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது!''


''என்ன?''

''சட்டமன்றத்துக்குள் போவதா வேண்டாமா என்று கட்சிக்குள் பெரும் பிரச்னை நடப்பது அனை வருக்கும் தெரியும். முதலில் போக மாட்டேன் என்றார்கள். ஒரு நாள் போனார்கள். மறுபடியும் பாய்காட் பண்ணினார்கள். மீண்டும் 5-ம் தேதி போகப் போவதாக ஸ்டாலின்தான் அறிவித்தார். சட்டமன்ற தி.மு.க. குழுத் தலைவர் அவர்தானே! அன்றைய தினம் அவர் இல்லாமல் லண்டன் போனது சரியா என்பதுதான் சில தி.மு.க. பிரமுகர்களின் கேள்வி!

'5-ம் தேதி, தான் லண்டனில் இருப்போம் என்பது முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அப்படி இருக்கும்போது, அந்த நாளை ஏன் சொல்ல வேண்டும்?’ என்று சிலர் புலம்புகிறார்கள். '

தளபதி இருந்து எங்களை சபைக்கு அழைத்துச் சென்றால்தானே உற்சாகமாக இருக்கும்? சபைக்குள் என்ன முடிவு எடுப்பது என்பதையும் அவர் இருந்தால்தான் உடனடியாகச் சொல்லவும் முடியும்?’ என்பது இவர்களது கருத்து. மேலும், சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள கருணாநிதி விரும்புகிறார். ஆனால், அவரது வீல்சேருக்கு வழி இல்லாததால் அவரும் சைலன்ட் டாக இருக்க வேண்டிய நெருக்கடி. மொத்தத்தில் சபைக்கும் தி.மு.க-வுக்கும் ஒட்டவில்லை!''

''சேலம் தி.மு.க. பொதுக் கூட்டத்திலும் ஏதோ கசகசப்பாமே?''

''இத்தனை ஆண்டுகால தி.மு.க. வரலாற்றில் வீரபாண்டி ஆறுமுகம் இல்லாமல் ஒரு பிரமாண்டமான பொதுக் கூட்டத்தை அவரது எதிரிகள் சேர்ந்து நடத்திக் காட்டிவிட்டார்கள். பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன்தான் இதற்கு ஏற்பாடு. ஸ்டாலினின் முழு ஆசியுடன் நடந்த இந்தக் கூட்டத்துக்காக சேலம் போஸ் மைதானத்தில் எக்கச்சக்கமான கூட்டமாம்! 

இதற்கான ஆலோசனை நடந்தபோதே வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவு ஆட்கள் கடும் எதிர்ப்பு கிளப்பினார்களாம். 'அண்ணன், அடுத்த வாரம் ஜாமீனில் வெளியே வரப் போகிறார். அவர் வந்ததும் நடத்தலாம்’ என்று வெளிப்படையாகவே சொல்ல... எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் கலைக்கப்பட்டது. சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் கலையமுதன், சென்னை வந்து கருணாநிதியை சந்தித்து, 'தளபதி கலந்துகிடுற தேதியை மாத்தணும்’ என்று சொல்லி... 

வீரபாண்டி ஆறுமுகம் இல்லாத காரணத்தையும் அவர் சொன்னாராம். கடுப்பான கருணாநிதி, 'வீரபாண்டியார் இல்லேன்னா கூட்டமே நடத்தக் கூடாதா? நானே இல்லேன்னாக்கூட கட்சி இருக்கும். கூட்டம் நடக்கும்’ என்றாராம் கருணாநிதி. கலையமுதன் ஓடி வந்துவிட்டார். இதைத் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாக வீரபாண்டி ஆறுமுகத்தின் எதிர் கோஷ்டி பார்க்கிறது. 'மாவட்டக் கழகத்துக்குள் குழப்பம் ஏற்படுத்தும் இதுபோன்ற காரியங்களுக்கு தளபதி உதவி செய்வது சரியா?’ எனச் சிலர் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்! அதேபோல்...''

''மாநிலம் முழுவதும் தி.மு.க. பிரமுகர்கள் பல மாவட்டங்களில் கைதாகி வருகிறார்கள். எங்குமே நடக்காத காரியம், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் நடந்தது. 'பொன்முடியை விடுதலை செய்’ என்று ஆங்காங்கே தி.மு.க-வினர் மறியல் செய்து கைதாவதுதான் அது. கனிமொழி முதல் எத்தனையோ பேர் கைதான போதெல்லாம் இதுபோல் மறியல் நடத்தாத உடன்பிறப்புகள், பொன்முடிக்காக மட்டும் நடத்துவது சரியா?’ என சிலர் கேட்க ஆரம்பித்த நிலையில்... 'விழுப்புரத்தில் நடந்தது மாதிரி எல்லா ஊர்லயும் நடக்கட்டும்’ என்று தூண்டி விடும் காரியத்தையும் ஸ்டாலின் செய்கிறாராம். '


மாநிலத் தலைமையின் அனுமதி இல்லாமல் ஆங்காங்கே ஆர்ப் பாட்டம் நடத்துவது தவறு என்று கண்டிக்காமல் தளபதியே இப்படிச் சொல்வது சரியா?’ என்றும் இவர்கள் கேட்கிறார்கள். மொத்தத்தில் கட்சி கலகலத்துக்கொண்டு இருப்பது தெரிகிறது!''


''உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் விஜயகாந்த் இருப்பாரா?''


சி.பி - அண்ணன் பம்பறதே அதுக்குத்தானே? உள்ளாட்சித்தேர்தல் முடிஞ்ச பிறகு பாருங்க சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் ஜெ வை குறை சொல்லி வெளி நடப்பு பண்ணப்போறாரு.. 
''இருக்க வேண்டும் என்றுதான் விஜயகாந்த் நினைக் கிறாராம். 10 மாநகராட்சியில் 4 இடங்களை தே.மு.தி.க. கேட்பதாக அ.தி.மு.க. தலைமைக் கழக வட்டாரத்தில் வலம் வருபவர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர். 'ஒரே ஒரு மாநகராட்சியை அம்மா விட்டுக்கொடுக்கலாம்!’ என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.

விஜயகாந்த் இதை ஏற்பாரா எனத் தெரியவில்லை. 'கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியாக ஆக வேண்டும் என்பதற்காக, கூட்டணிக் கட்சிகளுடன் அம்மா சமரசமாகப் போனார். இறங்கிச் சென்று தொகுதி களை விட்டுக்கொடுத்தார். இப்போது ஆளும் கட்சி ஆகிவிட்டதால், அவ்வளவு இறங்கிப் போகமாட்டார்...’ என்றும் அ.தி.மு.க. புள்ளிகள் சொல்கிறார்கள்.''


''விஜயகாந்த் என்ன நினைக்கிறார்?''

''ஜெ. ஆட்சியின் 100-வது நாள் விவாதத்தில் கலந்துகொண்ட பண்ருட்டி ராமச்சந்திரன், ஜெயலலி தாவை புகழ்ந்து தள்ளிவிட்டு, 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணருங்கள்’ என்று சொன்னார்.


சி.பி - யார் யாருக்கு எத்தனை கோடி? நன்மை? 

ஒன்றாக இருப்பதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது என்பது அவரது வாக்கு. இந்த விழா அன்றுகூட சபைக்கு விஜயகாந்த் வராதது, ஜெயலலிதாவுக்கு மனவருத்தம் கொடுத்துள்ளது. 'சபைக்கு வர விஜயகாந்த்துக்கு ஆர்வம் இல்லையா? அல்லது அவாய்ட் பண்ணுகிறாரா?’ என்று குழம்பிப் போயிருக்கிறார் ஜெயலலிதா. 

'எந்த இடத்திலும் ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசி கமிட் ஆகிவிடக் கூடாது’ என்று விஜயகாந்த் நினைப்பதாகவும் சொல்கிறார்கள். 


சி.பி - அண்ணன் ஹேங்க் ஓவர்ல , வாமிட் ஆகிடக்கூடாதுன்னு நினைச்சிருப்பாரு.. 





1. மன்னர்களை வீழ்த்தியது எது?  


சி.பி - நோ டவுட். ஒன்லி மண்ணாசை, & பெண்ணாசை
 
அந்தப்புரமும் புத்திர பாசமும்!
அக்பர் இதற்கு நல்ல உதாரணம். பிறந்த பையனின் முகத்தைக் கூடப் பார்க்காமல் போர்க்களத்தில் இருந்தபடியே அக்பரின் பிறந்த நாளைக் கொண்டாடினார் அப்பா ஹுமாயூன். 'இவன் புகழ் கஸ்தூரி மணம் போல உலகம் முழுக்கப் பரவ வேண்டும்’ என்றார். அதைப் போலவே 69 ஆண்டுகள் வாழ்ந்த அக்பர், 49 ஆண்டுகள் மன்னராகவே இருந்தார். அவரை நொந்து நூலாக்கி மரணப்படுக்கையில் தள்ளியது ரெண்டு பேர். ஒருத்தி, அந்தப்புரத்தில் இருந்த மாஹம் அனாகா. தன் மகன் ஆதம்கானை வளர்க்க வேண்டும் என்பதற்காக அசைக்க முடியாத மாவீரனான பைராம்கான் பற்றி பொய்களைப் புனைந்து அக்பரிடம் இருந்து பிரித்தாள்.


இன்னோர் ஆள், அக்பரின் மகன் சலீம். 'அப்பாவின் ஆயுள் நீடிக்கிறதே’ என்று நித்தமும் புலம்பி, தனி அணி கட்டியவர் சலீம். இவர்கள் இருவரையும் சமாளிக்க முடியாமல் அக்பர் படுக்கையில் சரிந்தார். இதுதான் பல மன்னர்களுக்கும் நடந்தது!



2. 'நாங்கள் எதைச் செய்தாலும் அதைச் சீரழிப்பதே தி.மு.க-வின் வேலை’ என்கிறாரே ஜெ.? 

'நாங்கள் எதைச் செய்தாலும் அதைச் சீரழிப்பதே அ.தி.மு.க-வின் வேலை’ என்கிறாரே மு.க. இவர்கள் ரெண்டு பேருக்​குமே வேறு வேலையே இல்லையா?

சி.பி - நாட்டுக்கு விடிவு காலம் பிறக்கனும்னா திமுக , அதிமுக இரண்டுக்கும் ஒரு மாற்று சக்தி வரனும்...



3. இலங்கையில் 30 ஆண்டுகளாக இருந்த அவசரகாலத் தடை சட்டத்தை ராஜபக்ஷே வாபஸ் வாங்கிவிட்டது நல்ல விஷயம்தானே? 

இலங்கையில் அமைதி திரும்பிவிட்டது என்பதைக்காட்ட ராஜபக்ஷே நடத்தும் நாடகம் இது!
மட்டக்களப்பு மாவட்ட எம்.பி-யான சீனித்தம்பி யோகேஸ்வரன் கடந்த வாரம் தமிழகம் வந்திருந்தார். 'அவசர கால தடை சட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டு, பயங்கரவாத தடை சட்டத்தை ராஜபக்ஷே பலப்படுத்திவிட்டார்!’ என்று சொல்லி​இருக்கிறார். எனவே, சட்டத்தின் பெயர் மட்டுமே மாறியுள்ளது.
அதைவிட யோகேஸ்வரன் சொல்லியிருக்கும் இன்னொரு செய்தி அதிர்ச்சிக்கு உரியது. '50 ஆயிரம் வீடுகள் கட்ட இந்தியா பணம் கொடுத்தது. ஒன்றரை ஆண்டுகளில் ஆயிரம் வீடுகள் கூட கட்டித் தரப்படவில்லை’ என்றும் அவர் சொல்கிறார். இந்தியா இதையாவது தட்டிக்கேட்க வேண்டும்!



'பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட மூவர் குறித்து தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது’ என்கிறாரே மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்? 

ஜெயலலிதா முன்மொழிந்து அனைத்துக் கட்சிகளும் வழிமொழிந்த தீர்மானம், குடியரசுத் தலைவருக்குத்தான். எனவே, அது ஏற்கத் தக்கதா இல்லையா என அவர்தான் தீர்மானிக்கவேண்டும். மேலும், ஒரு மாநில சட்டசபை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை உதாசீனப்படுத்தும் வகையில் ஓர் அமைச்சர், அதுவும் சட்ட அமைச்சர் கருத்துச் சொல்வது அபத்தமானது. ஜெயலலிதா மீதான எரிச்சல் மட்டுமே அவரது வார்த்தைகளில் தெரிகிறது!

சி.பி - கட்டுப்படுத்தாது, ஆனால் கரைக்க , மனம் மாற்ற உதவலாம்..


5.   அண்ணா ஹஜாரே பற்றி, அருந்ததிராய் எழுதிய கட்டுரையைப் படித்தீரா? 

ஊழலுக்கு எதிரான யுத்தம் தொடங்கியவர் என்கிற அடிப்படையில் ஹஜாரே ஏற்கத் தக்கவர்தான். ஆனால், அருந்ததி சொன்னதில் மிக முக்கியமான விமர்சனம் இருக்கிறது.

'அதிகாரம் கீழ்நிலை வரை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது காந்தியின் கொள்கை. ஆனால், ஹஜாரேயின் ஜன்லோக்பால் சட்டம், முற்றதிகாரம் கொண்ட கொடிய சட்டமாக இருக்கிறது. ஏற்கெனவே அதிகாரம் வாய்ந்த சிறு கும்பல் நாட்டை ஆள்கிறது. ஜன்லோக்பால் குழுவும் இரண்டாவது, அதிகாரம் வாய்ந்த கும்பலாகச் செயல்படப் போகிறது’ என்று குற்றம் சாட்டுகிறார்.


'காந்திய நெறி சார்ந்ததாக இச்சட்டம் வடிவமைக்கப்​படவில்லை!’ என்று அருந்ததி சொல்​வதற்கு அண்ணாவிடமிருந்து இதுவரை பதில் இல்லை!

சி.பி - துக்ளக் சோ கூட அன்னா ஹசாரேவை ஆதரிக்கவில்லை...நமது பதிவுலகில் அண்ணன்  சேட்டைக்காரன் எடுத்து வைக்கும் அன்னா ஹசாரேவுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவானவை.. 

\6. ஸ்டாலின் என்ன செய்துகொண்டு இருக்கிறார்? 


'கடந்த ஐந்தாண்டுகளில் அரசு நிகழ்ச்சிகளுக்குப் போனதுதான் எனது வேலை. இப்போது தி.மு.க. தோழர்களை சிறை சிறையாகப் போய்ப் பார்ப்பதுதான் எனது வேலை’ என்று உங்கள் ஊரில் தான் ஸ்டாலினே ஒப்புக் கொண்டுள்ளாரே!

சி.பி - அழகிரியை ஓரம் கட்டுவது எப்படி? அப்பாவின் மனதில் அவசரமாய் இடம் பிடிப்பது எப்படி? என திங்க்கிங்க்.. 



7. 'தமிழகத்தின் அண்ணா ஹஜாரே!’ என்று நடிகர் விஜய்யை அவரது ரசிகர் மன்றத் தலைவர் 'வேலாயுதம்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளாரே! 


நல்லவேளை! இது அண்ணா ஹஜாரேவுக்கு தெரியாது! இதைக் கேள்விப்பட்டு அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது!

சி.பி - அடப்பாவமே?விஜய்க்கு அவ்வளவு வயசாகிடுச்சா?


8. நிலப்பறிப்பு வழக்கு டல் அடிப்பது போல் தெரிகிறதே? 


இதோ அடுத்து வரப்போகிறது, சொத்துக் குவிப்பு வழக்குகள்!

சி.பி - அது வந்தா அம்மாவுக்கும், அய்யாவுக்கும் சேர்ந்தாப்போல் ஆபத்து


9. கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கும் புதிய சட்டம் வரப் போகிறதாமே? 


ஆமாம்! 'கிரிமினல்கள் இல்லாத அரசியல் _ சட்ட மசோதா’ என்று இதற்குப் பெயர். கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களது வேட்பு மனுக்களை இந்தச் சட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்து விடுவார்கள். இன்றைய நாடாளுமன்றத்திலேயே 162 எம்.பி-க்கள் மீது குற்றப்புகார்கள் இருக்கின்றன. இதை வைத்துப் பார்த்தால் வரவேற்க வேண்டிய சட்டம் இது. இன்னும் மூன்று வாரத்தில் தாக்கல் ஆகப் போகிறது.


சி.பி - அப்புறம் எலக்‌ஷன்ல நிக்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுடுமே?


10. பணமா... குணமா... எது முக்கியம்? 


'பணத்தால் அழகான நாயை விலைக்கு வாங்கலாம். ஆனால், அதன் வாலை பணத்தால் ஆட்டுவிக்க முடியாது’ என்பார்கள். நல்லவர்களைப் பார்த்தால் நாய் வாலை நளினமாக ஆட்டும். திருடர்களைப் பார்த்தால் வால் வெடைக்கும். எது முக்கியம் என்று தெரிகிறதா?

சி.பி - பொண்ணு வீட்டுக்காரங்க மாப்ளைக்கு சொந்த வீடு இருக்கா? சொத்து பத்து இருக்கா?ன்னு விசாரிக்கறாங்க, அதுக்குப்பிறகுதான் அவர் கேரக்டர் எப்படி?ன்னு விசாரிக்கறாங்க.. ஓவரா சொத்து இருந்து கேரக்டர் முன்னே பின்னே இருந்தாக்கூட அட்ஜஸ் பண்ணிக்கறாங்க.. அப்போ பணம்தானே முக்கியம்? குணம் முக்கியம்னு பேச நல்லாருக்கும், நடைமுறைல ஒத்து வர்றதில்லையே? \


11. கேரளாவில் முதலமைச்சரின் குறை தீர்ப்பு கால்சென்டருக்கு நல்ல வரவேற்பாமே? 

  முதல்வர் உம்மன் சாண்டியின் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கால் சென்டரை செப்டம்பர் 1-ம் தேதி திறந்தார்கள். முதல் நாளே 2.25 லட்சம் மக்கள் இந்தச் சேவைக்குள் நுழைந்தார்கள். இதை அரசு எதிர்பார்க்கவில்லை. அன்று மட்டுமே 4 ஆயிரம் புகார்கள் பதிவாகி உள்ளன. எல்லாப் புகார்களுக்கும் ஒரு மாதத்துக்குள்  பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் உம்மன் சாண்டி. ஜெயலலிதாவும் இதை அமல்படுத்தலாம்!


சி.பி - அந்த சட்டம் அமலுக்கு வந்தா அய்யா, அம்மா 2 பேரும் தானே மாட்டுவாங்க.. ஐ ஜாலி.. 



12. அண்ணா ஹஜாரேவின் வாழ்க்கை படமாகிறதாமே? 

வில்லன் யார் மன்மோகன் சிங்கா? ராகுல் காந்தியா?

சி.பி - நோ, 2 பேரும் டம்மி வில்லன்ஸ்.. பாபா ராம்தேவ் தான் மெயின் வில்லன்.. ஹா ஹா , ஏன்னா அவருக்குத்தான் அன்னா மேலே பொறாமை.. எங்கே பொறாமை இருக்கோ அங்கே தான் வில்லத்தனமும் ஜாஸ்தி இருக்கும்.. 

THANX - JU VI 



Tuesday, September 06, 2011

''ரஜினி, கமல் இருவரின் பலம்... பலவீனம் என்ன?'' கே பாலச்சந்தர் விகடன் பேட்டி- காமெடி கும்மி

http://worldonpc.com/wp-content/uploads/2010/09/125.jpgவிகடன் மேடை - கே.பாலசந்தர்



1. ''இதுவரை உங்களிடம் திட்டு வாங்காத நடிகர்கள்..?'' 


சி.பி - அண்ணன் எப்பவும் நடிகர்களை மட்டுமே திட்டறார், நடிகைகளை திட்டறதே இல்லையே.. அது ஏன்? ஒரு வேளை அப்படி இருக்குமோ? சே ச்சே இருக்காது. 


''இதற்குப் பதில் சொன்னால், திட்டு வாங்கியவர்களின் பட்டியல் அப்பட்டமாகத் தெரிந்துபோகும்! அவர்கள் என்னைத் திட்டுவார்கள். பின்னால் திட்டுவார்கள்... நேரில் வந்து திட்டினாலும் பரவாயில்லை. மற்ற நண்பர்கள் மத்தியில் என்னைத் திட்டுவார்கள்... எவ்வளவு குழப்பம் ஐயா உங்களால்! இந்த வயதில் எதற்கு எனக்கு இந்த வீண் பொல்லாப்பு!''

சி.பி - நீங்க திட்டுனவங்க எல்லாம் ஃபேமஸ் ஆகிடுவாங்கன்னு சொல்றாங்களே, அப்புறம் ஏன் உங்க மனைவி ஃபேமஸ் ஆகலை? டவுட்டு ஹி ஹி 


2. 'இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லையே என்று எந்தப் படத்தைப் பார்த்தாவது ஏங்கியது உண்டா?'' 


சி.பி - அதுக்கெல்லாம் எங்கேங்க நேரம், சினிமா ,டி வி னு அண்ணன் பறந்துட்டே இருக்காரே, மாறி மாறி./..

''ஒரு பெரும் பட்டியல் உண்டு! ஜம்ஷத் தவிர, மற்றவர்களும் இதே கேள்வியைக் கேட்டால் என்ன செய்வது? அதற்காகவே இரண்டு படங்களைப்பற்றி மட்டும் சொல்கி றேன். வஸந்த் இயக்கிய 'கேளடி கண்மணி’, மணிரத்னம் இயக்கிய 'ரோஜா’!''



3. '' 'சிந்துபைரவி’ படத்தில் சங்கீத மேதையான ஜே.கே.பி. தன் மனைவிக்கு இசை தெரியாது என்பதற்காக, இசை தெரிந்த சிந்துவைக் காதலிக்கிறார். ஆனால், ஜே.கே.பி-வுக்குச் சங்கீதம் தெரியுமே தவிர, சமைக்கத் தெரியாது. அதனால், ஜே.கே.பி-யின் மனைவி ஒரு சமையல்காரரைக் காதலித்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?'' 

சி.பி - சபாஷ், சரியான கேள்வி, இப்போ பாருங்க, அண்ணன் கேட்ட கேள்விக்கு சம்பந்தமில்லாம எதையாவது சொல்லி எஸ் ஆவாரு..  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSSWtmi5XqMpjbtIXbGnzyrbMVB-LL81HLT8LKt8i1Ul_tZVx0J3OubSmtTf5wxz2ZFg_vDgu381c_E9sCu3ayeE3upwCTnoiFuwWDBeAk8fLYv_Wn0vbBcT_fYj7lKuPBv5KPHVAx-tf9/s1600/kamal_gouthami_02.jpg


''சபாஷ்... சரியான போட்டி! பெண்ணியம் என்பதற்கு இதுதான் விளக்கம் என்று இத்தனை நாட்கள் எனக்குப் புரியாமல் போயிற்று.
அம்மணி சுகன்யா, நீங்கள் ஒப்புக்கொண்டால் நானும் ஒப்புக்கொள்கிறேன். ஈர்ப்பு என்பது, நம்மிடம் இருப்பது மற்றவரிடம் இருந்தாலும் வரலாம். நம்மிடம் இல்லாதது மற்றவரிடம் இருப்பதாலும் வரலாம். ஈர்ப்பு என்பது வேறு, இருப்பு என்பது வேறு. இந்த மேகம் அந்த மேகத்துடன் எப்படிச் சேர்ந்தது என்பதை மேகங்கள் சேர்ந்த பின் தான் அறிகின்றன. அறிந்ததும் கலந்து பொழிந்து மறைகின்றன. THE MAGIC OF THE WIND REMAINS A MYSTERY!''

சி.பி - இதனால் அறியப்படும் நீதி என்னான்னா நம்மால பதில் சொல்ல  முடியாத கேள்வியை யாராவது கேட்டாங்கன்னா ஏதாவது ஆங்கிலப்பழமொழி சொல்லி சமாளிக்கனும்



http://bollywood.celebden.com/wp-content/uploads/2008/06/shruti.jpg

4. ''உங்களது எந்தப் படத்தை இப்போது ரீ-மேக் செய்ய ஆசை?'' 


சி.பி - அய்யய்யோ, மறுபடியும் முதல்ல இருந்தா?

'' 'ஒவ்வொரு படத்தையும்’ என்று சொல்லி நான் தட்டிக்கழிக்கப்போவது இல்லை! பெண் கதாபாத்திரங்களை நாயகிகளாக்கி நிறையப் படங்கள் எடுத்திருக்கிறேன். ஆனால், இன்று பெண்கள் நிறையவே முன்னேறிவிட்டார்கள். அவர்கள் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது... கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்குச் சிலர் தங்களை 'வளர்த்துக்’கொண்டு இருக்கிறார்கள்.


ஆண்கள்பற்றிய கதையை ரீ-மேக் பண்ணலாம். அவர்கள் பிரச்னை செய்ய மாட்டார்கள். மன்னிக்கவும். அதற்காக ஆண்கள் இன்னமும் மாறாமல் அப்படியே இருக்கிறார்கள் என்று நான் சொல்வதாக தப்பாக நினைத்துவிடாதீர்கள். ஆங்... அந்தப் படம்தான் கரெக்ட். இப்பவும் ரீ-மேக் பண்ணலாம் அதை. அதுதான்... சொல்லக் கொஞ்சம் பயமாக இருக்கிறது... பயம் என்று இல்லை... வேண்டாமே. அடுத்த கேள்விக் குப் போகிறேன். சரி... அடுத்த வாரம் சொல்றேனே!''

சி.பி - சிம்புவை வெச்சு மன்மத லீலை எடுங்க, டி ஆர் ரொம்ப நாளா ஆசைப்படறார்.. நல்ல அப்பா!!!!!


http://www.8pmnews.com/wp-content/uploads/2010/06/kamal-hasan-his-family1.jpg
.
5. ''ரஜினி, கமல் இருவரின் பலம்... பலவீனம் என்ன?'' 


''அயராத உழைப்பு, அசாத்தியமான திறமை 'இன்னும் மேலே... இன்னும் மேலே’ என்று அடுத்தடுத்து புதுப் புது பரிமாணங்களை நோக்கிச் செல்வது... தொடுவது... இதுதான் மிகப் பெரிய பலம்.


ஆனால், அது புலியின் மேல் சவாரி செய்வதுபோல... இறங்கவே முடியாது. அதுதான் பலவீனம்!''


சி.பி - ரஜினியின் பலம் என்ன மாதிரி கேரக்டர்  கொடுத்தாலும் அதில் தன் ஸ்டைலிஷ் நடிப்பை பிரம்மாண்டமாய் புகுத்துவது, பலவீனம் அந்த வட்டத்துல இருந்து அவரால வெளில வர முடியாமை..



கமலின் பலம் வெரைட்டியான நடிப்பை, கெட்டப் சேஞ்ச் உடன் கலக்குவது, பலவீனம் -தான் திரையில் வரும் சீன்களில் தான் மட்டுமே தனித்து தெரிய வேண்டும் என மெனக்கிடுவது. இதனால் அவரது நடிப்பில்,பாடி லேங்குவேஜ்ஜில் அவரையும் அறியாமல் ஒரு செயற்கைத்தன்மை ஒட்டிக்கொண்டது..


6. ''கமல் - ரஜினி யாரை ரொம்பப் பிடிக்கும்... உண்மையைச் சொல்லுங்கள்?'' 

சி.பி -கமலைத்தான் அவருக்கு ரொம்ப பிடிக்கும் ஏன்னா கால்ஷீட் எப்போ கேட்டாலும் அவர் குடுத்துடுவார், ரஜினியே நினைச்சாலும் அவரால குடுக்க முடியாது..  


''வலது கண், இடது கண் இதில் உங்களுக்கு எது ரொம்பப் பிடிக்கும்? சொல்லுங்கள் மிஸ்டர் ராஜேந்திரன். மாறு கண் இல்லை எனக்கு. ஒரு கண்ணில் வெண்ணெயும் இல்லை!''

http://10hot.files.wordpress.com/2009/02/kamal-gowthami-rajini-latha-rajnikanth-tamil-actors-sarees1.jpg


7. ''உங்கள் படைப்புகளில் மறக்க முடியாத கதாபாத்திரம்?'' 


'' 'ஒரு கலைஞனுக்கு அவனுடைய எல்லாப் படைப்பும் பிடித்தமானவைதான். அதே சமயம் ஒன்றுகூட முழு திருப்தி கொடுக்காதுதான். அதனால்தான் அவன் இன்னும் இயங்குகிறான்!’ இப்படி எல்லா படைப்பாளிகளும் சொல்லிக்கொள்வது உண்டு.

ஆனால், நான் சொல்கிறேனே!
நிறைய கதாபாத்திரங்கள்... குறிப்பாக இரண்டு. 'அபூர்வராகங்கள்’ பிரசன்னா (கமல்ஹாசன்), 'அவள் ஒரு தொடர்கதை’ கவிதா (சுஜாதா).''

சி.பி - அண்ணன் குமுதத்துல ஒரு பேட்டில மனதில் உறுதி வேண்டும் நந்தினி நர்ஸ் கேரக்டர் தான் தான் மறக்க முடியாத கேரடர்னார்...  கல்கில ஒரு பேட்டில சிந்து பைரவி  சிந்து கேரக்டர்னார்,.... தமிழன் ஞாபக மறதி ஜாஸ்தி உள்ள ஆளு.. எதையும் தாங்குவான்


8''எம்.ஜி.ஆரை வைத்து நீங்கள் படங்கள் இயக்காதது ஏன்?''
''என்னுடைய இயக்கத்துக்கு அப்பாற்பட்ட உயரமானவர் அவர். அவருடைய 'தெய்வத் தாய்’ படத்துக்கு வசனம் எழுத வைத்து என்னை வெள்ளித் திரைக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

'தந்தை மகற்காற்றும் நன்றி’யை அவர் செய்தார். 'மகன் தந்தைக்காற்ற வேண்டியதை’ நான் செய்தேனா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும் சுசீலா!''

சி.பி - அண்ணன் எப்பவும் பெண்களை முன்னிறுத்திதான் திரைக்கதை அமைப்பார், இது எம் ஜி ஆருக்கு ஒத்து வராத ஃபார்முலா ஆச்சே?

9.  ''வொயிட் அண்ட் வொயிட் உடை ரகசியம் என்ன?'' 

''ஒரு ரகசியமும் இல்லை!
வெள்ளை என்பது மனதைக் குறிக்கிறது... என் மனம் வெள்ளை மனம் என்றெல்லாம் ஒரு காரணமும் இல்லை. நான் 'வெள்ளித் திரை’க்காரன். அதனால்தான் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

ஏன்... இப்படிச் சொல்லலாமே! காட்சி முடிந்த பின்னே கைதட்ட யாரும் இல்லை. காலி இருக்கைகளின் இருளுக்கு எதிரே மிஞ்சி இருக்கும் ஒன்றே ஒன்று வெள்ளித்திரைதானே!

வெள்ளை ஷூ போடுவேன்... அதற்குள் ரகசியம் அடங்கி இருக்கிறது! வேறு இடங்களில் செருப்புகளைக் கழட்டி வெளியே விட வேண்டிய நேரங்களில் என் காலணியைச் சட்டென்று அடையாளம் கண்டுபிடித்துவிட முடிகிறதே!''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjluemJxXWGC83AUghhlZg-Z8uCdQFRmoMwJCHN-92RPMwLIeqbMJCYXKAs5L-JlDf768LrTU3YgTQHHy3fAmMBOXtdcwNbwXPZx3H9PHJoZROTttcVIrLL3OQmRDHhXGsx57R50IhC1NE/s1600/Kamal_Hassan_Vaani_Marriage_1.JPG

10. ''இயக்குநர் பாலசந்தர், வீட்டில் எப்படி?'' 

''நீங்கள் வீட்டில் எப்படியோ எனக்குத் தெரியாது. நான் வீட்டிலும் 'பாலசந்தர்’ வெளியிலும் 'பாலசந்தர்’தான். அதாவது, பாரதி சொன்ன நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும்!''



11. ''ரஜினி அரசியலுக்கு வருவாரா?'' 

''ஆனை காட்டில், பூனை வீட்டில், திமிங்கிலம் கடலில் என்று அவையவை அவையவற்றுக்கு உரிய இடத்தில் இருப்பது தானே அழகு! ஆனால் ஒன்று, வருவதைக் காட்டிலும், வருவாரா என்று கேட்க வைப்பதிலும், வரலாம் என்று எதிர்பார்ப்பதிலும் தானே சுவாரஸ்யம். THE JOY IS IN WAITING.
இன்னொண்ணு!

எது எங்கே... எப்போது... எப்படி வர வேண்டுமோ... அது அங்கே... அப்படி வந்தே தீரும்.
மூன்று!
அவர் தனது உடல்நலத்தில் முழுக் கவனம் செலுத்தி, நன்கு தேறி 'ராணா’வை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அரசியல் எங்கே போகப்போகிறது?''\
http://s1.hubimg.com/u/1802612_f520.jpg


12. ''தற்போதைய ஆட்சி மாற்றத்தைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' 

''மாறும் உலகில் மாறாத ஒன்றே ஒன்று மாற்றம்தான். ஏற்றமோ... மாற்றமோ வந்தால் அதை ஒப்புக்கொள்வதுதானே நியாயம்!''


13. ''உங்கள் பார்வையில் தமிழின் சிறந்த 10 படங்களைச் சொல்லுங்கள்..?'' 

''இதே கேள்வியை 100 பேரிடம் கேட்டுப் பாருங்கள். 100 விதமான பட்டியல் வரும்.
இப்படிப் பட்டியலிடுவதே ஒரு SUBJECTIVE THINKING தான்.
நான் இயக்கிய படங்களைக் குறிப்பிட் டாலும், குறிப்பிடாவிட்டாலும் தவறாகிவிடும். எனவே, நீங்கள் செய்வதே பொருத்தமாக இருக்கும்!''

http://www.chakpak.com/articles/wp-content/uploads/2011/05/Sarika-Hassan-Kamal-Hassan-.png


14. ''நீங்கள் இயக்கிய நடிகைகளிலேயே  திறமையானவர் என்று யாரைச் சொல் வீர்கள்?'' 


''எனது இயக்கத்தில் வந்தவர்கள் எல்லோருமே மிகத் திறமையானவர்களாகத் தானே வெளியே போவார்கள். யாரைச் சொல்வது; யாரைக் குறிப்பிடாமல் விடுவது! ஒவ்வொருவருமே ஒரு பூ, புயல், பூகம்பம், புன்னகை, புது நெருப்பு!''


 சி.பி - சுஜாதாவை, சுஹாசினியை சொல்லலாம்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRayqa_Sk7yR8RtrRO_HFFlyel0fm6p7T_MJYcJyHSt_IDDPUTuZrgcGk3BeHZSGoNS3nBCkS1ChhnYpzCte09Vl2ofTwpO-nuaBlzHJk4jf1zjtdJwmzUhHqdfgAAbOBDEOZtVXD-5YQ/s400/KamalGowthami.jpg

15. ''யாரை நடிக்கவைக்க ரொம்ப சிரமப்பட்டீர்கள்?'' 

சிபி - அண்ணனுக்கு ஒரு கஷ்டமும் இல்லை, அவர் டைரக்‌ஷன்ல நடிக்கறவங்களுக்குத்தான் கஷ்டம் எப்போ என்ன சொல்லி திட்டுவாரோ? அடிப்பாரோ?ன்னு 


''என்னால் அதிகம் சிரமப்பட்டவர்கள் யார் என்று கேட்டிருந்தீர்களானால், ஒருவேளை பதில் சொல்லியிருப்பேன்!
உங்கள் கேள்விக்குப் பதில்... உஷ்ஷ்ஷ்... ''


thanx - vikatan

மிச்சமான ஃபிகர் நம்மை துச்சமா மதிச்சு அண்ணா என அழைத்தால் என்ன செய்யவேண்டும்? ஐடியா டிப்போ

1.
































1


1. புடவை செலக்‌ஷன், புருஷன் செலக்‌ஷன் இரண்டுக்குமே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் பெண்கள் அதில் வெற்றி பெறுவதில்லை

------------------------------

2. மனைவியுடன் நடப்பது பனிப்போர்,ஆஃபீசில் லேடி ஸ்டாஃப் உடன் பணிப்போர்,காதலியுடன் ஊடல் போர், பெண்கள் என்றாலே அக்கப்போர்

------------------------

3.  பெண்கள் மேக்கப் போட அதிக நேரம் எடுத்துக்கொண்டால் நீங்க பக்கத்துல ஃபிகர் ஏதாவது பிக்கப் பண்ணி கடலை போடுங்க, நோ டென்ஷன்

------------------------

4. ஜவுளிக்கடைகளுக்கு தங்கள் பெண்களை டிரெஸ் செலக்‌ஷனுக்கு தனியே அனுப்பும் பெற்றோர் புருஷன் செலக்‌ஷனை மட்டும் தாங்கள்தான் செய்யனும்கறாங்க

---------------------------

5. ஒரு தொடுகை,ஒரு புன்னகை,ஒரு இனிய சொல்,ஒரு கவனம், ஒரு கேட்டல்,ஆகிய சிறு விஷயங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக ஆக்கக்கூடியவை.

--------------------------


6.கணவன் தன் கோபத்தை மனைவியுடனான மையலில் காட்டுவதில்லை, ஆனால் மனைவி தன் கோபத்தை மையலில்,சமையலில் காட்டுகிறாள் # நீதி - ஆண் நல்லவன்

-----------------------------

7. பெண்கள் வெட்கப்படுவதை அனைவரும் ரசிக்க முடியும், ஆண்கள் வெட்கப்படுவதை அந்த ஆணுக்கு சொந்தமானவள் மட்டுமே ரசிக்க முடியும்

------------------------------

8. உலகிலேயே அழகானது ஒரு பெண்ணின் வெட்கம், உலகிலேயே மிக மோசமானது ஒரு பெண்ணின் துக்கம்

---------------------

9. கால் மேல் கால்போடுவது தப்பா? ஸ்ரேயா கோபம்! # மேடம், உங்க கால் மேலே கால் போட்டா தப்பில்லை

----------------------

10. காதலன் பெயரை முதுகில் பச்சை குத்திய குத்து ரம்யா பச்சையை அழிக்க முடியாமல்  தவிப்பு # காதலர் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர் என்க!

-----------------------

 3D Shift Gif
Stutter camera


11. தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க., நிறைவேற்றுகிறது - ஜெவுக்கு ஸ்டாலின் பாராட்டு # என்ன திடீர்னு ரூட் மாறுது?கலைஞர் அய்யா !உஷார்
------------------------------

12. முதல்வரை பாராட்டுவதில்தயக்கம் இல்லை: வைகோ # அதானே? தமிழன் எந்தக்காலத்துல ஜால்ரா அடிக்க பேக் அடிச்சிருக்கான்?

--------------------------

13. அறத்துப்பால்,பொருட்பால்,இன்பத்துப்பால் என எல்லா தலைப்பிலும் குறள் படைத்த வள்ளுவர் அமலாபால் பற்றி மட்டும் எதுவும் கூறாதது ஏன்? 

-------------------------



14. மென்மையே பெண்மையின் தனித்துவம்,சிலர் ஆண்களுக்கு இணையாக எனக்கூறி தங்கள் தனித்துவத்தை இழக்கிறார்கள்.
----------------------

15. இந்தியாவில் ஜேம்ஸ்பாண்ட் பட சூட்டிங்! அகமதாபாத்தில் படப்பிடிப்பு விரைவில் # அப்போ ஹீரோயின் பாத் (bath) சீன் அகமதா”பாத்”தில்?

------------------------

16. மேனேஜர் - ஏம்மா இன்னைக்கு ஆஃபீஸ் வேலை செய்யாம சாட் பண்ணிட்டு இருக்கே? 
லேடி - சாரி சார்.. இன்னைக்கு சாட்டர்டே , சாட்டிங்க் டே

-------------------------


17. காஜல் அகர்வாலின் தங்கை நிஷாவும் தமிழுக்கு வருகிறார்! # வாங்கம்மா , வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், உங்க முழுத்”திறமை”யையும் காட்டுங்க!!

------------------------


18. கோவை சிறுவாணி தண்ணிக்கு ஃபேமஸ், கேரளா அழகான கன்னிக்கு ஃபேமஸ்
------------------------

19. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவை, ஆல் இந்தியாவின் மான் ”செஸ்ட்”டர்ஸ் ஃபிகர்ஸ் உள்ள பிரதேசம் கேரளா

--------------------------


20. நாடு போகிற போக்கைப் பார்த்தால், நம்முடைய கலை, கலாசாரம், நாகரிகம் இவைகளுக்கு எதிர்காலம் உண்டான்னு தோணுது - கருணாநிதி # மானாட மயிலாட பற்றியா சொல்றீங்க? ?

--------------------------


21. முப்பொழுதும் உன் கற்பனைகள்" படத்தில்தான் என் கனவு பாத்திரம் -அமலா பால் மகிழ்ச்சி # ரிலீஸ்க்கு முன் சம்பளத்தை கறந்துடுங்க,இல்லைன்னா....

----------------------------


22. கொழு கொழு ஃபிகர்கள் பெங்களூரிலும் , கட்டையான ஃபிகர்கள் குஜராத்திலும் இருக்கிறார்களாம் # கொழுக்கட்டை இன்ஃபர்மேஷன்

-----------------------

24. ஃபிகர்கள் அண்ணா என்றால் பசங்க ஜெர்க் ஆகறாங்க, அவங்க கண்ணா என்றால் க்ளீன்போல்டாகறாங்க # ஈசி ரூட் சேஞ்ச் யுவர் நேம் அஸ் அண்ணாமலை,அண்ணாதுரை  ( டைட்டில் ட்வீட்)

--------------------------


25. ஜட்ஜோட சம்சாரம் கூட புருஷனை யோவ்னுதான் கூப்பிடும், யுவர் ஆனர்னு மரியாதையா கூப்பிடாது #கண்டுபிடிப்பு

--------

Monday, September 05, 2011

நாளைய இயக்குநர் - மெகா ஃபைனல் - விமர்சனம்

போனவாரமே வந்திருக்கவேண்டியது..3 கதைகள்ல 2 கதை தான் பார்க்க முடிஞ்சது. ஒண்ணு பெண்டிங்க். இப்போதான் லிங்க் கிடைச்சது.. 9 கதைகள்ல 6 கதைகள் தலா 3 வீதம் கடந்த 2 வாரமா பார்த்தாச்சு.. இது கடைசி வாரம்..

1.  ரமேஷ் - பரிதி மாறன்

நாய்ங்களை வெச்சு கதைன்னதும் நான் கூட ராமநாராயணன் டைப் கதையோன்னு பயந்தேன்.. ஒரு கிராமம், அதுல 2 குழந்தைகள் கொண்ட ஒரு தம்பதி 2 நாய்க்குட்டிகளை வளர்க்கறாங்க.. தன் குழந்தை போலவே பாசமா வளர்க்கறாங்க.. பெரியவன், சின்னவன்ன்னு பேர் வெச்சு கூப்பிடறாங்க..

ஊர்ப்பெரிய மனிதர் உங்க கிட்டே தான் 2 நாய் இருக்கே? ஒண்ணை எனக்கு குடுங்கன்னு கேட்கறார்.. மறுத்துப்பேச முடியாத நிலையில் , தன் குடும்பத்தில் அனைவர் எதிர்ப்பையும் மீறி ஒரு நாயை தானம் செய்கிறார்... ஆனால் அது அடுத்த நாளே இவர்களிடம் ஓடி வந்துடுது.. பெரிய மனிதர் அதை பார்த்துட்டு சினிமா வில்லன் மாதிரி வசனம் எல்லாம் பேசாம ஓக்கே இனி உங்க கிட்டேயே வளரட்டும்கறார். 

ஊர்க்காவல் காக்கறப்ப அந்த நாய்களை ஒரு ஓநாய் கடிச்சுடுது ( இந்த சீனை ஆள வந்தான் ல மணீசாகொய்ராலா கார்ட்டூன் சீன் மாதிரி எடுத்து சமாளிஃபிகேஷன்.)


ஆனா நோய்வாய்ப்பட்டு  அதுல சின்ன நாய் இறந்துடுது..பெரிய நாய் சோகமா சின்ன நாய் புதைக்கப்பட்ட இடத்தையே சுத்தி சுத்தி வருது. ஊர் மக்கள் இப்போ பெரிய நாயையும் கொன்னுட சொல்றாங்க.. அதுக்கும் நோய் தொத்தி இருக்கு..

தன் கையால கொல்ல மனம் வராத குடும்ப தலைவன் காட்ல சில ஆளுங்க கிட்ட  அதை ஒப்படைச்சு கொன்னுடுங்க அப்டீங்கறான்.. அவங்க கிட்டே இருந்து நாய் தப்பிடுது..

வீட்டுக்கு வந்தா மனைவி கடுப்பா கேக்கறா.. நம்ம குழந்தைக்கு உடம்பு சரி இல்லாம போயிருந்தா இப்படித்தான் பண்ணி இருப்பீங்களா? நாம் நாய் மாதிரியா அதை வளர்த்தோம்? குழந்தை மாதிரி தானே வளர்த்தோம்..?கறா..

அப்போ கரெக்டா நாய் அங்கே வந்துடுது.. ஒரு பார்வை பார்க்குது.. குற்ற உணர்ச்சியில் பொங்கி அவன் மன்னிப்பு கேட்கறான்.. ஆனா நாய் அதை ஏத்துக்கலை.. அவனை ஒரு எகத்தாளமா, சோகமா பார்த்துட்டு வேற பக்கம் கிளம்பிடுது..

பல நுட்பமான உணர்வுகளை படம் தூண்டி விட்டது.. நிதர்சனமா என்ன நடக்கும், மனித மனம் சுய நலமா சிந்திக்கும் என்பதை எல்லாம் பிரமாதமா சொல்லி இருக்காங்க.. பலே!!!!!!!!!!!!





2.  ராஜ்குமார் - கறை (ரை?)

நாட்டு நடப்பு வெச்சு அரசியல் நையாண்டி செஞ்சிருக்காரு இயக்குநர். படம் செம கல கல . தீப்பொறி ஆறுமுகத்தைத்தான் நக்கல் அடிச்சிருக்காருன்னு நினைக்கறேன்.


எல்க்‌ஷன் டைம்.. ஹீரோ ஒரு பேச்சாளன்.. ஒவ்வொரு எலக்‌ஷன்லயும் ஏதோ ஒரு கட்சி சார்பா பேசுவான் மேடைல.. யார் முதல்ல புக் பண்றாங்களோ அவங்க கட்சி சார்பா.. .. பணம் கை நீட்டி வாங்கிட்டா அவன் டாக்டர் ராம்தாஸ் மாதிரி கூச்சமே இல்லாம எதிர்க்கட்சியை பொளந்து கட்டுவான்..


அவனை ஒரு கட்சிக்காரர் அட்வான்ஸ் குடுத்து புக் பண்ணிடறார்.. வீட்டுக்கு அட்வான்ஸோட வந்தா மனைவி எதிர்க்கட்சி ஆள்கிட்டே அட்வான்ஸ் வாங்கி இருக்கா..

வாங்குன அட்வான்ஸை திருப்பி கொடுக்க போனா அவர் ஏத்துக்கலை...

இப்போ என்னடா பண்றதுன்னு முழிக்கறப்ப ஒரு குட் நியூஸ். 2 கட்சியும் இணைஞ்சிடுது.. அப்பாடா.. நிம்மதி..

 டாக்டர் ராம்தாஸ், திருமா, குருமா மாதிரி பச்சோந்திகளுக்கெல்லாம் சரியான செருப்படி..  அதை ஆவேசமா சொல்லாம மைல்டான காமெடியா சொல்லி இருக்கார்.


மனம் கவர்ந்த வசனங்கள்

1. முக்கால் மீட்டர் துணியை பொணத்து மேல போர்த்திட்டு  300 ஓட்டை அநாசியமாய்  அள்ளிடலாம்னு பார்க்கறீங்களா? விடுவமா?

2.  அடேய்.. அவன் 10 வருஷமா எங்க கட்சில தான் இருந்தான்.

அதெல்லாம் கணக்கில்லை.. சாகறதுக்கு கடைசி ஒரு வருஷம் எங்க கட்சில தான் இருந்தான்... எங்களுக்குத்தான் அவன் (!!) சொந்தம்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCd1WmKZRR05JwH5P0NHfWZE6qO8QnU9zlPWYSvC2Taz9BsUaALqhhVH6fRvWcGPX0KiMlDqGDNYxYPGhHA8l6a_5pHqoWYyJ9VBzdEvXmqz-DwNWb34Xhm44pT_9HtF3sNdH38zjDp-I/s1600/nadodi+mannan.jpg


3. அருண்குமார் - நாடோடி மன்னன் 

 50 வயதான ஒரு தம்பதியின் அந்நியோன்யமான அன்பு தான் கதை.. காதல் என்பதும் அன்பு என்பதும்  வயதான பின்னும் தொடரும்கற அழகான கருத்தை  ஒரு கவிதை போல சொல்லி இருக்காரு.. இயக்குநர்... தம்பதிகளின் நடிப்பு டாப் கிளாஸ்..

லோ க்ளாஸ் ஜோடி.. அவங்களுக்கிடையே மலரும் அன்பு ஹை க்ளாஸ்..  அவளோட பிறந்த நாள் அன்னைக்கு நாடோடி மன்னன் படம் போலாம்னு பிளான். ஆனா அவன் அன்னைக்குன்னு பார்த்து லேட்டா வர்றான். அதனால செகண்ட் ஷோ போறாங்க..

என்ன ஒரு டிரா பேக்... ஏதோ புரொஜக்டர் ஃபால்ட்டால அன்னைக்கு செகண்ட் ஷோ கேன்சல்னு சொல்லிடறாங்க.. உடனே கணவன் முகம் வாடிடுது.. மனைவியின் கல்யாண நாள் ஆசையை நிறைவேத்த முடியலையேன்னு சோகம். உடனே மனைவி சமாளிக்கறா.. இதுவா முக்கியம்..? உங்க கையால
பூ வாங்கிக்குடுங்க.. அது தான் செம கிக்  என்கிறாள்.. பூ வாங்கி வைத்து விடுகிறான்.


இப்போ ஸ்பீக்கர் ஒலிக்கிறது.. ஆபரேட்டிங்க் மிதின் சரி ஆகி விட்டது, படம் ஓடப்போகிறது என அறிவிப்பு வருகிறது.. இருவர் முகத்திலும் சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே?

கடைசில கேமரா நாடோடி மன்னன் போஸ்டர்ல  வந்து நிக்க எம் ஜி ஆரின் புன்னகையோடு படம்  முடியுது..

http://awardakodukkaranga.files.wordpress.com/2009/09/nadodi_mannan.jpg

 முதல் படம்  ஜட்ஜ்ங்களை ரொம்பவே கவர்ந்தது..... அரசியல் நையாண்டி என்பதாலும் காமெடி எனக்குப்பிடிக்கும் என்பதாலும் 2வது படம் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்திருந்தது.

ஆனால் 3 வது படம்  அனைத்துப்பெண்களையும், மென்மையான மனம் கொண்டவர்கள், அன்புக்கு ஏங்குபவர்கள், காதலர்கள், முன்னாள் காதல் தோல்வியாளர்கள் என பலரைக்கவரும் வாய்ப்புக்கள் உள்ள படம்.


டிஸ்கி - நமது நண்பர்  திருமலை கந்த சாமி அவர்கள் நாளைய இயக்குநர் குறும்படங்கள் காண லிங்க் கொடுத்து உதவினார், அவருக்கு நன்றிகள்....

  http://tamil.techsatish.net/file/naalaiya-5/

சாமி, சிங்கம் இரண்டை விட மங்காத்தா டாப்பா? எப்படி?

a

 1.ஒரு மாதிரியான பெண்கள் என சிலரை சொல்பவர்கள் அவர்கள் அந்த நிலைமைக்கு வர காரணமான ஆண்களை யாரும் ஒரு மாதிரி சொல்வதில்லை # நீதி -ஆண் நல்லவன்

-----------------------

2. காதலிக்கும் பெண் மற்ற ஆணிடம் அதிகம் கடலை போடுவதில்லை,ஆனால் ஆண் காதலியை விட மற்றவர்களிடம்தான் அதிக கடலை போடுகிறான் # நீதி - ஆண் தாராளமனசுக்காரன்

----------------------------

3. கல்யாணம் முடிஞ்சுது,அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம திருதிருன்னு முழிச்சிட்டு இருக்கேன். 

முழிச்சுட்டு மட்டும் இரு, மிச்சத்தை அவ பாத்துக்குவா.

-----------------------------

4. முதல் இரவில் மனைவி - அத்தான்,கொஞ்ச நேரம் பேசிட்டு இருப்போம்? 

நாசமாப்போச்சு, 4 வருஷமா அதைத்தானே செஞ்சுட்டு இருந்தோம்? இது கொஞ்சற நேரம்.

--------------------------
5. வீட்டம்மா,வீட்டுக்காரம்மா என்ன வித்தியாசம்? 

சம்பளத்துல ஒரு பகுதியை கொடுத்தா அது வீட்டுக்காரம்மா, சம்பளத்தையே மொத்தமா பிடுங்கிட்டா அது வீட்டம்மா

-------------------------


6. என் மனைவி என்ன தப்பு செஞ்சாலும் சாரி கேட்கவே மாட்டா. 

நீ கொடுத்து வெச்சவண்டா,என் மனைவி மாசா மாசம் ஒரு சாரி எடுத்து தரச்சொல்லி கேட்கறா

--------------------------------

7.அமைச்சரே!மாதம் மும்மாரி பொழிகிறதா?

-மன்னா! இப்படி அந்தப்புரமே கதியா இருந்தா நாட்ல என்னநடக்குதுன்னே தெரியாது,மாதம் ஒருமுறையாவது வெளிலவாங்க


----------------------------------

8. எனக்கு கார்த்திக் தான் முதல்ல, மத்தவங்க எல்லாம் அதுக்கு அப்பால தான் - குஷ்பு ட்விட்டரில் # ஒரு தோராயமான மொழி பெயர்ப்பு( அவங்க ஆங்கிலத்துல டீசண்ட்டா சொன்னதை நான் தமிழ்ல கொஞ்சம் இண்டீசண்ட்டா மாத்திட்டேன்)

------------------------

9. இந்த சின்ன வயசுலயே தொழில் அதிபர் ஆக ஆசைப்பட்றீங்களே? ஏன்?

முன்னணி நடிகைங்க அவங்களைத்தானே விரும்பறாங்க?

-----------------------------

10. அதிமுகவினர் என்றால் நடவடிக்கையே இல்லை:கருணாநிதி புகார் # இது உண்மைன்னா நீங்களும் நைஸா ஜோதில ஐக்கியம் ஆகிடுங்க தலைவரே? எஸ் ஆக  செம சான்ஸ்

---------------------------




11. பழசிராஜா குரூப்பின் புதிய மலையாளப்படத்தில் திப்பு சுல்தானாக நடிக்கிறார் கமல். # திப்பு சுந்தரி உதடு பத்திரம்!

----------------------

12. ஜெயா டிவியில் இனி ஜாக்பாட் நிகழ்ச்சி சிம்ரன் கையில்! # “இடை” விடாத ஹிட்ஸ் கிடைக்க வாழ்த்துக்கள்

---------------------------

13.மணிரத்னம் அவர்களுக்கு  தலை எல்லாம் மங்காத்தா எஃப்ஃபக்ட், 51 வயசு ஆன சுஹாசினி தலைல ஒரு முடி கூட வெள்ளை இல்லை # நீதி - ஆண் டை அடிப்பதில்லை

---------------------

14. சாமி, சிங்கம் எல்லாம் டியூட்டில இருந்தாத்தான் படம் ஓடும் ,ஆனா தல சஸ்பெண்ட் ஆனாலே பிச்சுக்கிட்டு ஓடும்,மங்காத்தாடா - பிரேஜி @ட்விட்டர்

-----------------

15. தயிராக காதல், கயிறாக கவிதை,கற்பனை மத்து திரட்டி எடுத்து உன்னிடம் தந்தது அன்பு வெண்ணெய்

----------------------



16. விக்கல் வரும்போது நான் தண்ணீர் குடிப்பதில்லை, நீ எனை நினைப்பதை நிறுத்தி விட்டால்?

------------------

17. நினைவுகள் என்பது கடல் அலை போல, அருகில் வரும்போது அதை விட்டு விலகத்தோன்றும், தொலைவில் இருக்கும்போது ரசிக்கத்தோன்றும்

-------------------------

18. அவளிடம் அன்பைக்கொடுத்து அன்பைப்பெற நினைத்தேன்,அவள் அன்பைப்பெற்று எனக்கு அறிவு ஊட்டினாள் -பெண்ணை நம்பாதே என!

----------------------

19. கவிதையுடன் பயணப்படுகிறேன் நதியாக! ஏதோ ஒரு புள்ளியில் உன்னை சந்திப்பேன் கடலாக

-------------------------

20. உன்னைப்பற்றி தெரிந்து கொண்டேன், ஆனால் புரிந்து கொள்ளவில்லை,அதுதான் நம்மிருவருக்கிடையேயான விரிசலுக்குக்காரணமோ என்னமோ?

-----------------------



21. பெண்கள் ஆண்களை விட அதிகமாக சிந்திக்கிறார்கள், அதனால் பல பிரச்சனைகளை ஆண்கள்தான் சந்திக்கிறார்கள்.

------------------------

22. கடவுளோடு ஒப்பிட்டு போஸ்டர்களோ, செய்திகளோ வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் - விஜய்.# அண்ணே!நீங்க சொன்னதைத்தானே செஞ்சோம்?

-----------------------------

23. தமிழக ஆண்கள் ஒல்லியாக இருந்தால் கூட கொழுக் மொழுக் ஹீரோயின்களைத்தான் அதிகம் விரும்புகின்றனர் # நீதி _ ஆணின் மனது விசாலம்

---------------------------

24. ஜெயா டிவி ஜாக்பாட்டில் சிம்ரன் ஜாக்கெட் டிசைனில் குஷ்பூவை ஓவர்டேக்குவாரா? என்ற சர்ச்சைக்கு முடிவு # அவர் ஜாக்கெட்டே போடலை,நன்றி டூ வாசன் ஐ கேர்

------------------------

25.முதல்வராக நடிக்கிறார் திரிஷா # ஜோடியா விஜய்யா? அப்புறம் அவர் ஆக்டிங்க் சி எம் ஆவேன்னு அடம் பிடிப்பாரே?

------------------------------

Sunday, September 04, 2011

கற்றது தமிழ் ராம் ஏன் ரூட் மாறுகிறார்? சேரன் அதிர்ச்சி..

கற்றது பாசம்!


'தங்க மீன்கள்’ - தலைப்பிலேயே தூண்டில் இடுகிறார் இயக்குநர் ராம். 'கற்றது தமிழ்’ படத்துக்குப் பிறகு, இயக்குநராகவும் நாயகனாகவும் 'தங்க மீன்’ பிடிக்க வருகிறார்!

சி.பி - டைரக்டரா இருந்தப்பவே ஹீரோவுக்கு பயங்கர ஒட்டு தாடி வெச்சு ஜீவாவை முடிச்சாரு. இப்போ இவரே ஹீரோவா? எவ்வளவு பெரிய தாடி வைக்கப்போறாரோ?

1. ''தமிழ் படித்த மாணவர்களின் சமூக அந்தஸ்தை 'கற்றது தமிழ்’ மூலமாக விவாதப் பொருள் ஆக்கினீங்க. இந்த மீன்களின் இலக்கு என்ன?''

''இது ஒரு சாதாரண மனிதனின் அசாதாரணமான கதை. ஒரு வரியில் சொல்லணும்னா, ஒரு கெட்ட மகன்... நல்ல அப்பாவான கதை. ஒவ்வொரு மனுஷனும் தன்னோட வாழ்க்கையில் கதாநாயகனாக மாறுவது, அவன் அப்பா ஆன பிறகுதான். 

சி.பி - ஆஹா. ஹைக்கூ கவிதை மாதிரி இருக்கு நீங்க சொன்ன கடைசி வரி.. சபாஷ்..!!!

காதலி, மனைவி, அம்மா, சகோதரி என எல்லோருக்கும் ஒரு ஆண் குறுகிய காலத்துக்கு மட்டுமே ஹீரோவா இருக்க முடியும். ஆனால், மகள் மனதில் மட்டும், ஓர் ஆண் எப்பவுமே நாயகன்தான். அப்படித் தன் பெண்ணுக்காக எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு நின்ன ஒரு அப்பனோட வாழ்க்கை இது. ஒரு அப்பனோட கதைனு சொல்லக் கூடாது. இது இரண்டு அப்பாக்களின், இரண்டு பிள்ளைகளின், இரண்டு தலைமுறைகளின் கதை!


சி.பி - அபியும் நானும், தெய்வத்திருமகள், அன்புள்ள அப்பா பட வரிசையில்..?
சங்க காலத்தில் இருந்து இப்போ வரை 'பொருள்வயிற் பிரிதல்’ என்பது தலைவனின் இயல்பு. பொருள் ஈட்டுவதற்காக தகப்பன்கள் குடும்பத்தைவிட்டுப் பிரிகிற காலங்கள் எப்போதும் உண்டு. காசு, பணம், வசதி என்ற வார்த்தைகள் நம்ம உறவுகளில் எவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்துது... ஓர் அன்பை எப்படி சிதைச்சுப்போடுதுனு யோசிச்சப்போதான் 'தங்க மீன்கள்’ உருவானது.


இங்கே ஒரு நல்ல தகப்பனுக்கு அடையாளம் எங்கேயாவது போய், ஏதாவது செய்து பொருள் ஈட்டுவதுதான். சராசரி இந்தியக் குழந்தைகளுக்கு முதல் 10 வருடங்கள் அப்பாவின் அரவணைப்பு கிடைப்பதே இல்லை. ஆனால், என் கல்யாணசுந்தரம் தன் இருப்பைத் தன் மகள் செல்லம்மாவுக்காக அர்ப்பணிக்கிறான். 

அதற்காக பணம், வேலை, கௌரவம்னு எதையும் கருத்தில்கொள்ளாமல் வாழ்கிறான். ஆனால், கல்யாணியின் அப்பா அவனுக்கு நேர் எதிர். அவருக்குப் பணம், கௌரவம் இதெல்லாம்தான் ஓர் ஆணின் அடையாளம். கல்யாணி என்ற மகன் செல்லம்மாவுக்கு அப்பா ஆகும்போது ஏற்படும் உணர்வுகளின் வழியாக, இரண்டு தலைமுறைகளை இந்தக் கதையில் பார்க் கிறேன்!''  


சி.பி - பொருளீட்ட குடும்பத்தை விட்டு வெளி நாடு போவதை விட கணவனின் அருகாமையும், அரவணைப்புமே மனைவிக்குத் தேவை என்பதே சரி.. 


2. '' 'கற்றது தமிழ்’னு ஆவேசமா ஒரு படம் கொடுத்துட்டு, இவ்வளவு மென்மையாக ஒரு கதையை எப்படிக் கையில் எடுத்தீங்க?''


சி.பி - ஆமா, ஆவேசமா கொடுத்து என்ன பிரயோசனம்? நம்ம ஆளுங்க அதை ஏத்துக்கலையே? மறுபடி அதே மாதிரி படம் கொடுக்க முடியுமா? அதான் அண்ணன் ரூட்டை மாத்திட்டாரு.. 

''உண்மை ஒண்ணுதான். அதைக் கோபமாவும் சொல்லலாம். கண்ணீரோடும் சொல்லலாம். புன்னகையோடும் சொல்லலாம். இது என்போன்ற பல தகப்பன் களின் உண்மைக் கதை. கோயம்புத்தூரில் குடும்பத்தை விட்டுட்டு, சினிமாவுக்காக சென்னையில் திரிபவன் நான். மகளைப் பார்க்கவே போக முடியாமல் இருந்த நாட்கள்ல ஒருநாள், என் பொண்ணு போன்ல சொன்னா... 'அப்பா, நம்ம கொல்லையில பூவெல்லாம் அவங்க அப்பாவைக் காணோம்னு என்கிட்ட அழுதுச்சுப்பா.’ உடனே நான், 'அதுக்கு நீ என்னப்பா சொன்ன?’னு கேட்டேன். ''அப்பாவெல்லாம் பணம் சம்பாதிக்க சென்னைக்குப் போயிருக்காங்க. பணம் கிடைச்சதும் வந்துருவாங்க’னு சொன்னேம்பா’ன்னா. 


எனக்குச் சட்டுனு மனசு கனத்துப்போச்சு. என்னைப் பார்க்காம இருக்கிறதையே ஒரு கதை மாதிரி சொல்லிட்டா என் மக. அவ சொன்ன அந்த வார்த்தைகள்ல இருந்துதான் இந்தக் கதையை எழுத ஆரம்பிச்சேன். இது முழுக்க முழுக்க நம் அசல் வாழ்க்கையின் பதிவு!''


3. ''தாக்கம் இல்லைனு சொல்றீங்க... ஆனா, மத்த இயக்குநர்கள் பாதையில் நீங்களும் ஹீரோவாக் களம் இறங்கிட்டீங்களே?''

சி.பி - எத்தனி நாளுக்குத்தான் அல்வாவை ஒரு ஆளுக்கு ஊட்டி விட்டு அதை சாப்பிட சம்பளமும் தர்றது? அதான் அண்ணன் அல்வாவை தானே சாப்பிட ட்ரை பண்றாரு.. இந்த வெர்ஷன்ல நான் அல்வான்னு சொன்னது ஹீரோ கேரக்டரை ... ஹீரோயினை அல்ல.. ஹி ஹி 

''என் தோழர் ரேவதி பரிந்துரைக்க... கௌதம் மேனனைச் சந்தித்தேன். என் கதையைக் கேட்ட பிறகு, கதையின் ஸ்க்ரிப்ட் புத்தகத்தைப் பார்த்த பிறகு, 'நீங்க நடிச்சா, நான் தயாரிக்கிறேன்’னு சொன்னார். எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எப்பவுமே நோக்கம் கிடையாது. 

அதற்கான முனைப்போ, ஆர்வமோகூடக் கிடையாது. இந்தக் கதையில் நானும் ஒரு பாத்திரம். இதில் இன்றைய ஹீரோவுக்கான அம்சங்கள் இல்லை. அவர்கள் விரும்பும் ஆசைப்படும் சாகசங்களுக்கும் இதில் இடமே இல்லை. அப்படியும் நானே நடிக்கலாமா வேண்டா மானு பெரிய குழப்பத்தில் இருந்த என் பயத்தைப் போக்கியது தோழர் சுபா பாண்டியன்தான். 

அவர் என்னை எடுத்த புகைப்படங்களும், நண்பர் பிஜி.முத்தையாவோடு திருவண்ணாமலைக்குப் போய் எடுத்த டெஸ்ட் ஷூட்டும் எனக்கு நம்பிக்கை அளித்தன. எழுதுகிறவனாகவும் இயக்குநராக வும் ஒருவனே இருந்தால், உணர்வுகளை உண்மையா வெளிப்படுத்தி நடிக்க முடியும்னு அப்புறம்தான் உணர்ந்தேன்!''

சி.பி - அட!!! சேரன் கூட ஆரம்பத்துல இதையே தான் சொன்னாரு.. கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகிடிச்சா?
4. ''கதையின் அழுத்தத்தை அறிமுகக் கதாநாயகியும் குழந்தையும் தாங்குவாங்களா?''

சி.பி - அவங்க தாங்கிடுவாங்க.. புரொடியூசர் தாங்குவாரா?ன்னு தான் டவுட்டா இருக்கு./. 

''திருவனந்தபுரத்தில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருப்பவர் செல்லி. எனது வடிவை செல்லியிடம் அப்படியே அச்சு அசல் பார்த்தேன். ஆர்வத்தோடு கதையை உள்வாங்கி, கண்ணியத்தோடு அதை வெளிப்படுத்தினார் செல்லி. சாதனா என்ற குழந்தை என் மகளா நடிச்சிருக்கா.

என் மகளாகவே வாழ்ந்திருக்கானு சொல்லலாம். கதையின் முக்கியத்துவத்தை, இயல்பை இவ்வளவு சிறு வயதில் உணர்ந்து நடிப்பது ரொம்பவும் கஷ்டம். அந்தக் கஷ்டத்தை ரொம்ப எளிமையாக் கடந்து அட்டகாசப்படுத்தி இருக்கிறாள் சாதனா!''


5. '' 'கற்றது தமிழ்’ காலத்தைக் காட்டிலும் இப்போ யுவன் - நா.முத்துக்குமார் கூட்டணி ரொம்பவே ஸ்பெஷல். இங்கே என்ன விசேஷம்?''


'' யுவன் ஷங்கர்- நா.முத்துக்குமார் இல்லாம என்னால் பாடல்களை நினைச்சுப் பார்க்கவே முடியாது. எனக்காக பணம் எதையும் பொருட்படுத்த மாட்டார் யுவன். நேரத்தைக் கொடுத்துட்டா, அவரோட அர்ப்பணிப்பு எல்லை தாண்டும். என் மனதைப் புரிந்தவர் நா.முத்துக்குமார். சமூகப் பொறுப்பு இல்லாமல் என்னால் படம் எடுக்க இயலாது என்பதைப் புரிந்துகொண்டவர்கள் இவர்கள்!''


6. ''தயாரிப்பாளர் கௌதம் மேனன் என்ன சொன்னார்?''

சி.பி - போட்ட காசு திரும்ப கிடைக்குமா? ஏற்கனவே நடுநிசி நாய்கள்ல நிறைய காசு போச்சுன்னு சொல்லி புலம்பி இருப்பாரு.. 
'' 'கதையைக் கேட்கும்போதே படம் பார்த்த மாதிரி இருந்தது... ஒரு தயாரிப்பாளராக உங்களிடம் நான் குறுக்கிடவே மாட்டேன். முதல் பிரதியைக் காட்டினால் போதும். நீங்கள் சொன்னதைப் பார்க்க ரெடியா இருக்கேன்’னு  சொன்னார். அவருடைய கனிவுக்கு மரியாதை தருகிற படமாக 'தங்க மீன்கள்’ இருக்கும்!'
 thanx - vikatan