Thursday, May 05, 2011

”ஆ”ர்யா .. என்க்கு நெறையா கத்தூக்கொட்த்தார்... எமி ஜாக்ஸன் கலக்கல் பேட்டி - காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjt-3_np_PjPZw4Q71ifMFuWb8UyhvassMY2L9oZTLzbWHMnEfN9r7T4yalSo2po7DARwxr9LtSdHjzEBnXOS9q2HzziqJIRv_YC3WcBipfXJCQhBDt4cBqxeXl63-iyDKSKsZPdPbpFuZn/s1600/Amy%252BJackson.jpg 

றந்துட்டியா?’ என்று மனதுக்குள் 'தானா தோ தனன... தானானே நானா’ மீட்டிய எமியை மறக்க முடியுமா?

சி .பி. -ஹா ஹா நாம எந்தக்காலத்துல பொண்ணுங்களை மறந்துருக்கோம்? கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறக்கறவரை பின்னாலயே சுத்துவோம் இல்ல?

எங்கே இருக்கிறார் என்று தேடினால்,''இந்தி 'விண்ணைத் தாண்டி வருவாயா?’ ஷூட்டிங்ல இருக்கேன்!'' என்று சிரிக்கிறார் எமி.

சி .பி. -அவர் ஏன் தொட்டதுக்கெல்லாம் சிரிக்கிறார்?தொடலைன்னாக்கூட சிரிப்பாரா? #டவுட்டு

1. ''தமிழ்நாடே உங்களுக்காகத் தவிச்சுட்டு இருக்கு. திடீர்னு இந்திப் பக்கம் போயிடீங்களே?''
'' 'மதராசப்பட்டினம்’ பார்த்துட்டு நிறையப் பேர் கதை சொன்னாங்க.

சி .பி. -ஆமாமா செமயா ஜொள்ளி இருப்பாங்களே? (ஜொள்ள மறந்த கதைகள்)

எந்தக் கதையை செலெக்ட் பண்றதுன்னு குழப்பம். அப்போதான் டைரக்டர் விஜய், என்னை கௌதம் மேனன்கிட்ட அறிமுகப்படுத்தினார். 'நீங்க என்னுடைய இந்தி ரீ-மேக் படத்தில் நடிக்கிறீங்களா?’ன்னு கௌதம் கேட்டார். ஸ்கிரீன் டெஸ்ட் வெச்சார். எல்லாமே பெர்ஃபெக்ட். இப்போ, நான்தான் இந்தி ஃபீல்டுக்கு 'ஜெஸ்ஸி’!''

 சி .பி. -எல்லாமே பர்ஃபெக்ட்ட்டா? அப்படின்னு கவுதம் அண்ணன் சொன்னாரா? ஹி ஹி வெளங்கிடுச்சு.. 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1240bVbcfn9er-KRHCRVQurX2x2T0t9PeOZEz1DJUHcIu3TvlRPQSLeGANdJBXFYb3dI8a25cP563UYikU-CL0vE23p5iBzS_cYOJ5s5c_R4iZzRXG3eNZ7YsJxCj6RywppiemnUVTiU/
2. '' 'விண்ணைத் தாண்டி வருவாயா’ தமிழ்நாட்டில் பட்டையைக் கிளப்பின படம். த்ரிஷா கேரக்டர் ரொம்பவே பேசப்பட்டுச்சு. அதை உங்களால் ஈடு செய்ய முடியுமா?''

  சி .பி. - த்ரிஷா கேரக்டர் ரொம்பவே பேசப்பட்டுச்சா? உரசப்பட்டுச்சா?

''படம் வந்ததும் என்னை ஜெஸ்ஸின்னு சொன்னா தான் அடையாளம் தெரியும். அந்த அளவுக்கு ஹோம்வொர்க் பண்ணியிருக்கேன்.

 சி .பி. -அடடா.. அப்போ ஷூட்டிங்க் ஸ்பாட்ல ஒர்க் பண்ணலையா?

மூணு வேளை சாப்பிடுறேனோ இல்லையோ, தினம் மூணு முறை 'விடிவி’ டி.வி.டி-யைப் பார்க்கிறேன். மொழிதான் பெரிய பிரச்னை. இந்தி கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். அடுத்ததா, தமிழ் கத்துக்கலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?''

சி .பி. -நாங்க சொல்ல என்ன இருக்கு. உங்களுக்கு தமிழ் டியூஸன் ஃபிரீயா சொல்லித்தர நாங்க ரெடியா இருக்கோம்.. 

http://narumugai.com/wp-content/uploads/2010/12/amy-jackson.jpg
3. ''நல்ல விஷயம்... தமிழ் ரசிகர்களுக்கு குத்துவிளக்கு மாதிரி அறிமுகம் ஆகியிருக்கீங்க. அந்த இமேஜைத் தொடர்ந்து காப்பாத்துவீங்களா?''

சி .பி. -குத்து விளக்கா? கும்மாங்குத்தாட்ட விளக்கா? 


''அது அந்த கேரக்டருக்குக் கிடைச்ச வெற்றி. 'மதராசப்பட்டினம்’ 1940-ல் நடந்த கதை. அதனால், கதைப்படி அடக்கமாதான் இருக்கணும்.

சி .பி. - நீங்க அடக்கமாத்தான் இருந்தீங்க.. ஆனா எங்களாலதான் அடக்க முடியல.. ஹி ஹி ஆர்வத்தை சொன்னேன்.. 


என்னால் எல்லா விதமான ரோலிலும் நடிக்க முடியும்னு நம்பிக்கை இருக்கு. அதனால, கிளாமராவும் நடிப்பேன்!''

சி .பி. -உங்க மொழில கிராமர் மிஸ்டேக் வந்தாக்கூட தமிழன் தாங்கிக்குவான். ஆனா உங்க கிளாமர்ல எந்த மிஸ்டேக்கும் வந்துடாம பார்த்துக்குங்க.. அதை தமிழனால தாங்கவே முடியாது ஹி ஹி 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxLniHWkrZJTjfDP1k3G-P8CZHbRp6IiNF_JjULV7nuC365caGNdXwPWxHg3XgjNHOQ6jSleqw8Qyo9B3Pr-VGNbUK8yH1xo7IU7LUEQdCEFRJRVmuT-jVSeX3kFNWWlz60RePa-U6P3Q/s400/Amy-Jackson-hot-stills-31.jpg
4. ''உங்களுக்கும் ஆர்யாவுக்கும் காதல்னு கிசுகிசு வந்தது தெரியுமா?''

''ஜீசஸ்... நிஜமாவா சொல்றீங்க? ஆர்யா... ஒரு அற்புதமான மனிதர்.அவர் கிட்ட இருந்து நிறைய நல்ல விஷயங் களைக் கத்துக்கிட்டேன். மத்தபடி எதுவுமே இல்லை. இது பிராமிஸ்!''

சி பி - அந்த நல்ல விஷயங்கள் எல்லாம் என்ன?ன்னு சொன்னா நாங்களும் கத்துக்குவோம்.. இப்போ விருந்து,இந்து நேசன்,திரைச்சித்ரா எல்லாம் தடை பண்ணிட்டாங்க.. ஹி ஹி  என்னது பிராமிஸ்ஸா? பிரா மிஸ்ஸா?


5. ''எமின்னா என்ன அர்த்தம்?''

சிபி - என்ன அர்த்தமா இருந்தா நமக்கு என்ன? அவரை லவ் பண்னறவங்க எமி ஆர் யூ லவ் மீ என ரைமிங்கா  கேட்கலாம்.. 

''ஃப்ரெஞ்ச் மொழியில் 'என் பிரியத் துக்கு உரியவளே’ன்னு அர்த்தம்!''

ரீப்ளேஸ் த வார்த்தை என் பை  (by) எங்க.. ஹி ஹி 

நன்றி - விகடன்

ஏ பி ஜே அப்துல் கலாம் பேட்டி பாகம் 2

http://www.tn.gov.in/pressrelease/archives/pr2002/pr151202/Dec15bp.jpg 

கா.வினோதினி, திண்டுக்கல்.

1. ''ஜனாதிபதி பதவிக் காலத்தில் தாய் நாட்டுக்கு என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை என்ற குற்ற உணர்வு உங்களுக்கு இருந்திருக்கிறதா?''

''ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது, நாடு முழுவதும் இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற தாரக மந்திரத்தை விதைத்தேன்.
ஒருங்கிணைந்த நீடித்த வளர்ச்சியைக்
கிராமப்புறங்கள் அடைய வேண்டி, நகர்ப்புற வசதிகள் கிராமப்புறங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற 'புரா’ திட்டத்தைப் பிரபலப்படுத்தினேன்.

இலங்கைத்தமிழர் நலனுக்காக நீங்கள் ஏதாவது குரல் கொடுத்திருக்கலாம் என பலரும் சொல்றாங்க சார்.. 
வளர்ச்சி அரசியல்தான் நாட்டுக்குத் தேவை என மக்களிடம் வலியுறுத்தினேன். அதன் பயன்பாடு இந்தியா முழுமைக்கும் இப்போது எதிரொலிக்கிறது.
இந்தியா வளர்ந்தால் என் தமிழ்நாடும் வளரும் அல்லவா!'' 


எஸ்.சிவகாமி, திருச்சி.

2.
''ஒரு புறம் காந்தியம் பேசுகிறீர்கள்... இன்னொரு புறம் அணுகுண்டுகளை நியாயப்படுத்துகிறீர்கள்... ஏன் இந்த முரண்பாடு?''

''6,000 வருடங்கள்கொண்ட இந்திய வரலாற்றில், இந்தியாவை இந்தியர்கள் ஆண்டது 600 வருடங்கள் மட்டுமே. காரணம் என்ன? நாம் வலிமையோடு இல்லாததின் காரணமாக, இந்தியாவின் வளம் மற்றவர்களால் தொடர்ந்து அபகரிக்கப் பட்டது.

வலிமைதான் வலிமையை மதிக்கும். நம்மைச் சுற்றி 10,000 அணுகுண்டுகளுடன் ரஷ்யாவும் அமெரிக்காவும் மற்ற நாடுகளும் இருக்கும்போது, நாம் மட்டும் கையைக் கட்டிக்கொண்டு தபஸ் பண்ண முடியாது. எனவேதான், நமது வலிமையை உலகத்துக்கு நிரூபிக்க அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

அதுதான் நமது வலிமையை உலகுக்குப் பறைசாற்றியது. இந்தியாவைப்பற்றிய மதிப்பை உயர்த்தியது.
ஆனால், நாம்தான் முதன்முதலாக 'அணுகுண்டைப் பயன்படுத்த மாட்டோம்’ என்ற கொள்கையை வகுத்துக் கொண்டு, உலகத்துக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறோம்.

இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு. உலகத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்!''

பெ.கருணா, வாசுதேவநல்லூர்.

3. ''அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு கலாமின் ஆதரவு உண்டா?''

''இதுவரை நடந்தது நன்றாகவே நடந்தது. இனிமேல் நடப்பதும் நன்றாகவே நடக்கும்!''

கு.அருள்மொழி, காங்கேயம்.
 http://www.centralchronicle.com/uploads/26_June_kalam.jpg
4. ''நீங்கள் குழந்தைகளை அதிகம் நேசிப் பதன் காரணம் என்ன?''

''குழந்தைகளுக்குக் கனவு உண்டு. அந்தக் கனவை நனவாக்கும் லட்சியம் அந்தக் குழந்தைகளிடம் மிகுந்திருக்கும். எனவேதான், அவர்கள் மனதில் விதைக்கும் ஒவ்வொரு நற்செயலும், கண்டிப்பாகப் பிற்காலத்தில் நாட்டின் மேன்மைக்கு மிகுந்த பயன் அளிக்கும். ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்க, அது உத்வேகமாக இருக்கும். அதனால்தான் நான் குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடுகிறேன்!''


நா.கணேசலிங்கம், லிங்கேசன்புதூர்.

5. ''அறிவியல் துறையில் உங்கள் முன்னோடி யாக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்?''

''அறிவியல் துறையில் நான் முன்னோடியாகக் கருதுபவர், ராக்கெட் சமன்பாட்டைக் கண்டு பிடித்த ரஷ்யாவின் கான்ஸ்ஸான்டின் டிஸ்யோல்ஸ்கி என்பவர். அவர்தான் ராக்கெட் துறையில் உள்ள அனைவருக்கும் முன்னோடி. எனது குரு விக்ரம் சாராபாய் அவர்கள்தான் என் அறிவியல் முன்னோடி!''

நம்ம நாட்டுக்காரரான ஜி டி நாயுடுவை சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தோம்.

ச.செந்தமிழன், கானாடுகாத்தான்.

6. ''உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வொன்றை எங்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா?''

''ஜனாதிபதியாக இருந்தபோது, ஒரு முறை நான் கோயம்புத்தூர் சென்றேன். இரவு 11 மணி அளவில் நான் பார்வையாளர்களைப் பார்த்தபோது, ஒருவர் வீல் சேரில் வந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு ஒரே ஆச்சர்யம். அவருக்கு இரண்டு கை களும் இல்லை, கால்களும் இல்லை. நான் அவரிடம், 'உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்கள் சார்... செய்கிறேன்’ என்றேன். கணீர் என்ற குரலில் அவர் சொன்னார், 'எனக்கு உங்களிடம் இருந்து ஒன்றும் வேண்டாம். நான் நன்றாகப் பாடு வேன். உங்கள் முன்பு பாடட்டுமா?’ என்று கேட்டார். 'பாடுங்கள்’ என்றேன். என்ன அருமையாகப் பாடினார் தெரியுமா? 'எந்தரோ மகானுபாவலு’ என்ற தியாகராஜ கீர்த்தனையை ஸ்ரீராகத்தில் பாடினார். அவர் பெயர் கோவை கிருஷ்ணமூர்த்தி. அவரை ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்துக் கௌரவித்து, அங்கும் பாடச் செய்தேன். அது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி!''

எஸ்.வேணுகோபால், திருநெல்வேலி.

7. ''ஜப்பானின் அணு உலைகள் வெடித்துச் சேதம் விளைவிக்கின்றன என்பதைக் கண்கூடாகப் பார்த்துவிட்டோம். இந்நிலையில்... கல்பாக்கம், கூடங்குளம் அணு மின் நிலையங்களை மூட வேண்டும் என்று எழும் கோரிக்கைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?''

''டைட்டானிக் கப்பல் கவிழ்ந்து 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் நடுக் கடலில் மரித்தார்கள் - கப்பல் பயணத்தையே விட்டுவிட்டோமா? வருடம்தோறும் விமான விபத்து நடக்கிறது - விமானப் பயணத்தையே தவிர்த்துவிட்டோமா? இல்லையே!

ஜப்பானில் மோசமான ஒரு சூழ்நிலையில், சுனாமியும் பூகம்பமும் ஒருங்கே நிகழ்த்திய சோகம் அது. அதை எதிர் பாராததால், மாற்று மின் சக்தியைச் சரியான நேரத்தில் கொடுக்கத் தவறியதால், உபயோகிக்கப்பட்ட எரிபொருள் குளிர்ச்சியாகாத காரணத்தால், விபத்து நேர்ந்துவிட்டது. பாதுகாப்புத் தன்மையில் அவ்வப்போது மாற்றம் செய்யாத தின் விளைவே அந்த விபத்து.

எனவே, உலகின் அனைத்து அணு உலைகளையும் மீண்டும் ஆய்வு செய்து, அவற்றுக்கு இப்படிப்பட்ட சிக்கலான இயற்கைச் சீற்றங்களைத் தாங்கும் சக்தி உள்ளதா என்பதை ஆராய்ந்து, அதற்கேற்ப அணு மின் நிலையங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த உலக நாடு கள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளன. இந்தியாவும் தனது அணு உலைகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் மும்முரமாக இருக்கிறது.

அணு மின் சக்திதான் தூய்மையான எரிபொருள். எனவே, அணு மின்சாரம் கண்டிப்பாகத் தேவை. இந்தியாவின் ஆராய்ச்சி யில் தோரியம் மூலம் உருவாக்கப்படும் அணு மின் நிலையங்கள், யுரேனியத்தின் அணு மின் நிலையங்களைவிட மிகவும் பாதுகாப்பானவை.

அவை சீக்கிரம் உருகாத தன்மைகொண்டவை. ஒரு மெட்ரிக் டன் தோரியத்தில் கிடைக்கும் எரிசக்தி, 200 மெட்ரிக் டன் யுரேனியத்தில் அல்லது 3.5 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியில் கிடைக்கும் சக்திக்குச் சமம். அதை அமைக்க ஆகும் செலவும் மிகக் குறைவு. எனவே, நம்பிக்கையோடு இருங்கள்!''

இளங்.கார்த்திகேயன், மகாதேவப்பட்டணம்.
 http://www.sudhirneuro.org/gallery/full/Dr-AP-Abdul-Kalam.jpg
'8. ' 'ஃபுகுசிமா’ அனுபவத்தில் இருந்து உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?''

''அதாவது, பாதுகாப்புக்குத் தேவையானவற்றை... வரக்கூடிய இயற்கைச் சீற்றங்களை அளவிட்டுப் பலப் படுத்த வேண்டும் என்பதுதான். உலகம் இப்போது விழித்துக்கொண்டு அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது!''

நன்றி - விகடன்

Wednesday, May 04, 2011

ஸ்டெனோவின் லோ ஹிப் சேலையும், தடுமாறிய கான்செண்ட்ரேஷனும்

http://www.pixvix.com/data/media/1/peshawar_beautiful_girls_in_rain.jpg 

1. வேலைல கான்செண்ட்ரேஷன் வேணும்னு மேனேஜர் மீட்டிங்க்ல சொல்லும் போதுதான் ஸ்டெனோவின் லோ ஹிப் சேலை கண் முன் செண்ட்டர் ஆஃப் அட்ராக்‌ஸனில்#காலி

------------------------------------
2. காதல் என்பது முட்டாள் தனம் தான்.ஆனால்பெரும்பாலான ஆண்களும் முட்டாளாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள்#லவ்வாலஜி - ஃபெயிலியர் டிப்பார்ட்மெண்ட்

--------------------------
3. லேட்டாக தியேட்டரில் எண்ட்ரி ஆகும் எல்லா புத்திசாலிகளும் எண்ட்ரி ஆனதும் கேட்கும் முதல் கேள்வி அண்ணே படம் இப்போதான் போட்டானா?#ஆடியன்சாலஜி
http://farm4.static.flickr.com/3488/3284859062_7e21058b9f.jpg
-----------------------------
4. சக பெண் ஸ்டாஃப்ஃபின் டிஃபன் பாக்ஸில் விள்ளலை எடுத்து ருசிப்பவர்கள் ஆஹா அபாரம் உங்களைக்கட்டிக்கப்போறவர் குடுத்து வெச்சவ்ர் என கூசாமல் பொய்

---------------------------
5, பெண்களைப்பார்த்துப்பேசும்போது அவர்கள் முகத்தை மட்டுமே பார்க்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு ஆணும் நினைக்கிறான்.ஆனால் விதி சதி செய்கிறது

--------------------------
6. 1008 நல்லது பண்ணும்போது கண்டு கொள்ளாத சமூகம் ஒரு சின்ன தப்பு பண்ணும்போது தன் 10,000 கரங்களை நம் முகம் முன் நீட்டி குற்றம் சுமத்துது

http://funandentertainment.net/wp-content/uploads/2010/08/pakistan-girls-in-rain1.jpg
--------------------------
7. அப்ரைசல் என்ற ஒரே ஆயுதத்தை பயன் படுத்தி ஆஃபீசில் பணிய வைக்கிறார்கள்,விசும்பல் என்ற ஆயுதம் காட்டி வீட்டில் பணிய வைக்கிறார்கள்#சுயம் போச்சு

-------------------------
8. அம்மா வீட்டுக்கு போயிடுவேன் என மிரட்டும் மனைவிக்கு தெரிவதில்லை, தன் கணவனுக்கு சுக்கிர திசை தொடங்கி விட்டதே தன்னால் தான் என்று..

------------------------------
9.ஆஃபீசில் மேனேஜரை வெறுக்காத ஆட்கள் யாரும் இல்லை.. அதே சமயம் ரிஷப்ஷனிஸ்ட்டை விரும்பாத பணி ஆட்களும் யாரும் இல்லை#ஆஃபீஸ் அரிச்சுவடி

----------------------------------
http://www.tribuneindia.com/2008/20080417/chd5.jpg
-10. முதல் இரவில் “என்னை பிடிச்சிருக்கா?” என்ற அரதப்பழசான கேள்வியை எல்லா புத்திசாலி ஆண்களும் கேட்டுத்தொலைக்க வேண்டி இருக்கு# ஃபார்மாலிட்டி
------------------------

மாட்டியது கலைஞர் டி வி.. விரட்டியது சி பி ஐ .. -- ஜூ வி.. ரிப்போர்ட்

லைஞர் டி.வி-க்கு பணம் கைமாறியதை 'ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தை விசாரிக்கும் சி.பி.ஐ. மிக சீரியஸ் கண்ணோட்டத்தில் பார்க்கிறது!
'கடனாக வாங்கினோம். கடனை அடைத்துவிட்டோம்.’ என்று முதல்வர் கருணாநிதியும் கலைஞர் டி.வி-யும் சொல்லி வர... இந்தப் பணம் வந்த வழிமுறைகள் அத்தனையையும் அம்பலப்படுத்தி உள்ளது சி.பி.ஐ.

இந்த விவகாரம் வெளியில் வந்ததுமே கலைஞர் டி.வி-யின் இயக்குநர் சரத்குமார் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.
'2007-08 ஆண்டில் மத்திய தொலைத் தொடர்புத் துறையால் ஒதுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை விவகாரத்துக்கும், 2009-ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியுக் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை.

கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 2009-ம் ஆண்டு சினியுக் என்ற நிறுவனம், பங்குகள் பரிவர்த்தனைக்காக முன்பணம் கொடுத்து இருந்தது. ஆனால், இரண்டு நிறுவனங்களுக்கும் பங்குகள் மதிப்பீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 2009 ஆகஸ்ட் வரை பெறப்பட்ட 200 கோடி ரூபாயைக் கடனாகப் பாவித்து, மொத்தப் பணமும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தால் திருப்பித் தரப்பட்டுவிட்டது.

அந்தத் தொகைக்கான வட்டியாக 31 கோடி ரூபாய் தரப்பட்டது. இந்தப் பரிவர்த்தனை வருமான வரித் துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டு, அதற்கான வரியும் செலுத்தப்பட்டது. இந்த மொத்தப் பரிவர்த்தனையும் சட்டத்துக்கு உட்பட்டு, உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த நிகழ்வு ஒரு திறந்த புத்தகமே!’ - இதுதான் கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம்!

இதற்கிடையே, 'சன் டி.வி-யில் இருந்த தனது பங்குகளைப் பிரித்து வாங்கிய வகையில், 100 கோடி ரூபாய் என் மனைவி தயாளுவுக்குக் கிடைத்தது. அதைத்தான் கலைஞர் டி.வி-யில் அவர் முதலீடு செய்தார்.' என்று பணத்தின் ஒரு பகுதிக்கு முதல்வர் கருணாநிதி திடீரென்று ஒரு கணக்கு சொல்லியிருக்கிறார்.

மாறாக, 'கலைஞர் டி.வி-க்குப் பணம் வந்த விவகாரத்தில் நிச்சயமாக முறைகேடு நடந்து உள்ளது' என்று ஆதாரங்களுடன் சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது!

'அதாவது, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில், 2008 டிசம்பர் மாத இறுதியில், ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த எட்டிஸாலட் நிறுவனம்  3,228 கோடியும் ஜெனெக்ஸ் எக்ஸிம் வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்  381 கோடியும் முதலீடு செய்து பங்குகளை வாங்கின.

ஆ.ராசாவிடம் இருந்த செல்வாக்கின் மூலம் ஸ்பெக்ட்ரம் உரிமங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, மேற்கண்ட நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்றதற்கு நன்றிக் கடனாக, ஸ்வான் நிறுவனம் பணத்தை கலைஞர் டி.வி-க்குக் கொடுத்தது!’ என்கிறது சி.பி.ஐ.

ஸ்வான் டெலிகாமை சேர்ந்த ஷாகித் பால்வா மற்றும் வினோத் கோயங்கா இருவரும் நடத்தும் மற்றொரு நிறுவனம்தான் டிபி ரியாலிட்டி. இது, பங்குச் சந்தையில் பதிவு பெற்ற நிறுவனம். இந்த டிபி ரியாலிட்டி, டைனமிக்ஸ் ரியாலிட்டி என்ற மற்றொரு நிறுவனத்திலும் பங்குதாரராக இருக்கிறது. இந்த டைனமிக்ஸ் நிறுவனத்துக்கு, கட்டுமானத்தில் ஈடுபடும் இரண்டு துணை நிறுவனங்களும் உண்டு.

இப்படி சிலந்தி வலையாகப் பரவி இருக்கும் நிறுவனங்களில், ஷாகித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசீப் பால்வா, ராஜீவ் அகர்வால் போன்றவர்கள் இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் இருக்கின்றனர். இப்படிப் பல பெயர்களில் நிறுவனங்கள் தொடங்கி... அதன் பெயர்களில் கடன்கள் வாங்கி, அந்தப் பணத்தை வேறு காரணங்களுக்குத் திசை திருப்பிவிடுவார்கள்.

இதில் டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனம்தான்  200 கோடியை கலைஞர் டி.வி-க்கு வெவ்வேறு தேதிகளில் வழங்கியது என்று சொல்லும் சி.பி.ஐ., இந்தப் பணமும் நேரடியாகச் செல்லவில்லை என்​கிறது.

'இந்த டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனம்,  209 கோடியை குஸேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனத்துக்குக் கடனாகக் கொடுக்கிறது. 2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட் வரை வெவ்வேறு தவணைகளில் இந்த பணத்தைக் கொடுத்து உள்ளார்கள் (இது பற்றி தனியாக ஒரு பெட்டிச் செய்தி).

ஷாகித் பால்வாவின் சகோதரர் ஆசிப் பால்வாவும் ராஜீவ் அகர்வாலும் இதில் இயக்குநர்கள். இந்த நிறுவனம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வியாபாரங்களுக்காகப் பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்த நிறுவனம் தனது பெயரை குஸேகான் ரியாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்று மாற்றிக்கொண்டு, கடன் வாங்குவதும் மற்ற கம்பெனி​களுக்கு கடன் கொடுப்பதுமான பணிகளைச் செய்தது.

இதன்படி, டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து வாங்கிய  209 கோடியில்,  200 கோடியை சினியுக் நிறுவனத்துக்கு குஸேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனம் கொடுத்தது. அதே 2008 டிசம்பர் 23 முதல் 2009 ஆகஸ்ட் 7 வரையிலான கால கட்டங்களில் கிட்டத்தட்ட ஏழு தவணைகளில் டைனமிக்ஸ் மாதிரியே குஸேகானும் கொடுத்தது.

இதையடுத்து சினியுக் நிறுவனம் இதே காலகட்டத்தில் (23.12.2008 முதல் 7.8.2009) ஆறு தவணைகளில் இந்த  200 கோடியை கலைஞர் டி.வி-க்குக் கொடுத்து உள்ளது...’ என்கிறது சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை. பணம் நேரடியாகக் கொடுக்கப்படாமல்,  சுற்றிவளைத்து கணக்குக் காட்டப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ. பல்வேறு ஆதாரங்களுடன் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

1. குஸேகான் நிறுவனம், சினியுக் நிறுவனத்துக்குக் கொடுத்த  200 கோடியை, அப்படியே 2009 ஆகஸ்ட் மாதத்துக்குள் கலைஞர் டி.வி-க்கு, சினியுக் மீடியா நிறுவனம் கொடுத்துவிடுகிறது. இதே 2009 அக்டோபர் மாதம்தான், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர். போட்டு விசாரணையும் தொடங்கியது.

அதனால், சினியுக் மற்றும் குஸேகான் நிறுவனங்கள் சுதாரித்துக்கொண்டு அவசரமாக சில ஒப்பந்தங்கள் போட்டன. 27.1.2010 அன்று குஸேகான் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசீப் பால்வாவும் ராஜீவ் அகர்வாலும், சினியுக் இயக்குநர் கரீம் முரானியோடு ஒப்பந்தம் போடுகின்றனர்.

இதன்படி, சினியுக் நிறுவனத்தில் டிபி குரூப்பைச் சேர்ந்த குஸேகான் நிறுவனம் 49 சதவிகிதப் பங்குகளை வாங்கி முதலீடு செய்ததுடன் (ஒரு பங்கு  510 என்ற விலையில் 1,22,000 பங்குகளை வாங்கியது),  200 கோடியை கடனாக மாற்றிக்கொள்ளவும் ஓர் ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களும் போட்டுள்ளன.

முரானி குடும்பத்தினர் பல ஹிந்திப் படங்களை எடுத்தவர்கள். 'சினிமாத் தொழிலுக்கு சம்பந்தம் இல்லாத குஸேகான் நிறுவனம் சினியுக் நிறுவனத்துக்கு ஏன் கடன் கொடுக்க வேண்டும்?’ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது சி.பி.ஐ.

2. சினியுக் நிறுவனத்துக்கும் கலைஞர் டி.வி-க்கும் இடையே உருவான ஒப்பந்தங்கள் 'வேடிக்கை'யாக இருப்பதையும் சி.பி.ஐ. குறிப்பிடுகிறது. கலைஞர் டி.வி. ஒரு தனியார் லிமிடெட் நிறுவனம். இந்த நிறுவனம் 2009 மார்ச் 31 அன்று தாக்கல் செய்யப்பட்ட இருப்பு நிலை தொகைக் குறிப்பில்  31,82,21,171 பணத்தை உதிரி மற்றும் இதரக் கடன்கள் மூலம் வந்தவை என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த  31 கோடியில்  25 கோடி சினியுக் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது. ஆனால், சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ததற்கு அடுத்த ஆண்டு (31.3.2010) கலைஞர் டி.வி. தாக்கல் செய்த இருப்பு நிலைத் தொகைக் குறிப்பில் சினியுக் நிறுவனம் கொடுத்த பணத்தைக் கழித்துவிட்டு, மீதி உள்ள சுமார்  6 கோடி மட்டுமே காட்டப்பட்டது.

இதே ஆண்டில் மேலும் பல கோடிகளை சினியுக் நிறுவனம் கலைஞர் டி.வி-க்கு கொடுத்து இருக்க, இதே பேலன்ஸ் ஷீட்டில் பழைய  25 கோடியையும் சேர்த்து உதிரி மற்றும் கடன்கள் மூலம்  214,86,54,109 வந்ததாகக் காட்டி உள்ளனர். அதாவது யார் பணம் கொடுத்தார்கள், இந்த 214 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதற்கான விளக்கம் இல்லை.

கலைஞர் டி.வி. இயக்குநர்களான கனிமொழியும் சரத்குமாரும் திட்டமிட்டு இந்த மாற்றங்களை மேற்கொண்டனர் என்று சி.பி.ஐ. சொல்கிறது.

3. மேலும், கொடுத்த பணத்துக்கும் வாங்கிய பணத்துக்கும் கணக்குக் காட்ட, ஒரு சில ஒப்பந்த வளையங்களுக்குள் இரு நிறுவனங்களும் வலுக்கட்டாயமாக வந்தன. 19.12.2008 அன்று சினியுக் நிறுவனமும் கலைஞர் டி.வி-யும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டதாம்.

அதன்படி, சினியுக் நிறுவனம் அளித்துள்ள நிதியினைக்கொண்டு, கலைஞர் டி.வி-யின் பங்குகளை சுமார் 35 சதவிகிதம் வரை வாங்கிக்கொள்ளும் என்றும், ஒருவேளை இந்த பங்குப் பரிவர்த்தனை திட்டப்படி நிறைவேறவில்லை என்றால், இதைக் கடனாக மாற்றிக்கொள்ளும் என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.

இந்த ஒப்பந்தங்களைப் போட்டுள்ள சரத்குமார், மற்ற இயக்குநர்களின் சார்பிலும், அவரே முடிவு எடுத்துள்ளார். ஆனால் சி.பி.ஐ., 'சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட ஓர் ஒப்பந்தத்தைக்கூட இவர்கள் போடவில்லை. குறைந்தபட்சம் முத்திரைத் தாளில்கூட இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

வாங்கிய பணத்துக்கு நியாயம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே, இப்படி ஓர் ஒப்பந்தத்தை (தயாரித்து) காட்டி வழக்கின் புலனாய்வைத் திசை திருப்புகிறார்கள். இது 2008-ல் போடப்பட்ட உண்மையான ஒப்பந்தம் என்றால், 2009-ம் ஆண்டு அறிக்கையில் இதையும் சொல்லியிருக்க வேண்டும். 2009 மார்ச் மாதம் வரை சினியுக் நிறுவனத்திடம் இருந்து  25 கோடியை கலைஞர் டி.வி. வாங்கி இருந்தது.

இந்தத் தொகையைப் பங்குத் தொகையாகவோ அல்லது பங்கு விண்ணப்பத் தொகையாகவோ காட்டியிருக்கலாம். ஆனால், அந்த ஆண்டு அறிக்கையில் கடன் கணக்கில்தான் இந்த  25 கோடி வரவு வைக்கப்பட்டு உள்ளது. 2ஜி விசாரணை தொடங்கப்பட்ட பின்னரே 2010ம் ஆண்டு அறிக்கையில், தப்பித்துக் கொள்ளும் வகையில் கணக்குகளை மாற்றினார்கள்...’ என்கிறது.
4. பணத்தைத் திருப்பிக் கொடுத்த விவகாரத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும் சி.பி.ஐ., 'கலைஞர் டி.வி-க்கு கொடுக்கப்பட்ட பணம் ஒரு வருடமாக அப்படியே இருந்தது.

ஆ.ராசாவை நாங்கள் அழைத்து விசாரிக்கத் தொடங்கியவுடன்,  200 கோடியை கலைஞர் டி.வி. அவசரம் அவசரமாகத் திருப்பிக் கொடுத்ததாகச் சொல்கிறது. 2010 டிசம்பர் 24 அன்று ஆ.ராசா சி.பி.ஐ. முன்பு ஆஜராகி விசாரணைக்கு உட்பட்ட தினத்தில்தான், கலைஞர் டி.வி. வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கத் தொடங்கியது.

டிசம்பர் 24 முதல் 2011 பிப்ரவரி 3 வரை எட்டு தவணைகளில்  200 கோடியை கலைஞர் டி.வி. கொடுத்துவிட்டது. ஆ.ராசாவை பல முறை அழைத்து விசாரித்து பின்னர், பிப்ரவரி 2 அன்று கைது செய்தோம். இந்த சமயத்தில் பணத்தை முழுமையாகத் திருப்பிக் கொடுத்துவிட்டது கலைஞர் தொலைக்காட்சி.

பணத்தைக் கொடுத்த அதே தேதிகளில், சினியுக் நிறுவனமும் குஸேகான் நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்து இருக்கிறது. இறுதியில் குஸேகானும் இந்த 200 கோடியை வட்டியோடு டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்தது.

இரண்டு நிறுவனங்களைத் தாண்டி பணம் வருவதும் போவதும் பலவிதமான தொடர்புகளை உறுதிப்படுத்துகிறது!’ என்கிறது.
இந்த விவகாரத்தில், கலைஞர் டி.வி. சுமார்  30 கோடியை வட்டியாக சினியுக் நிறுவனத்துக்கும், சினியுக் நிறுவனம் சுமார்  25 கோடியை குஸேகான் நிறுவனத்துக்கும், குஸேகான் சுமார்  23 கோடியை டைனமிக்ஸ் நிறுவனத்துக்கும் வட்டியாகக் கொடுத்து உள்ளன.

கடனைத் திருப்பிக் கொடுக்க கலைஞர் டி.வி. தனது விளம்பர வருமானத்திலும் மற்றும் அஞ்சுகம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்தும் ( 70 கோடி) இந்தியன் வங்கியில் ஓ.டி-யாக கடன் வாங்கியும் சமாளித்ததாகக் கூறப்படுவதை குற்றப் பத்திரிகையில் சி.பி.ஐ. மிக விவரமாக ஆராய்ந்து இருக்கிறது.

''கிரிமினல் வழக்குகளைப் பொறுத்த வரை, தவறான வழிகளில் ஆதாயம் அடைந்ததற்கான முகாந்திரங்கள் இருப்பதைக் காட்டினாலே, குற்றம் நிரூபணம் ஆகிவிடும். ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார் ஆகியோர் தவறான வழிகளில் ஆதாயம் அடைந்ததற்கான சாட்சியங்கள் ஏராளமாக உள்ளன!''

என்கிறார் வழக்கின் விசாரணை அதிகாரி விவேக் பிரியதர்ஷினி.
வரும் மே 6 அன்று, செம்மொழி விருது வழங்கும் நிகழ்ச்சி ராஷ்டிரபதி பவனில் நடக்கிறது. அதே தினம் கோர்ட்டில் ஆஜராகப்போகும் கனிமொழிக்கு சி.பி.ஐ. கொடுக்க இருக்கும் விருது எப்படி இருக்கும் என்பதை இந்தியாவே எதிர்பார்க்கிறது!

நன்றி - ஜூ வி 

உங்க சம்சாரம் உங்களை எளக்காரமா நடத்தறாங்களா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFwdAbq5UH4p4kzJYeeoSUNbCqbBV_09XRwgfuC8fU-PexmwZZRVp-mtt_YucWTiRyhoWdsOv9Bfg_n3OM-q0B5Gv_m6dCiRicnzoLUKNGKgNCTkDbnQIz5DNEwlB3gCe2wCuwzFNWgFZG/s400/1.jpg 

1. நீ எப்பவும் ஸ்வீட் தான் சாப்பிடறே.. காரமே சாப்பிடறதில்லை.. காத தூரம் ஓடிடறே.. ஏன்?

என் மனைவி என்னை இளக்காரமா நடத்தறா..அதுல இருந்து எனக்கு காரம்னாலே அலர்ஜி ..

-----------------------------------

2. தலைவருக்கு எந்த வியாதியும் கிடையாதே.. எதுக்காக கேன்சருக்கான ட்ரீட்மெண்ட் எடுக்கறார்?

ஊழல் ஒரு புற்று நோய் அப்டின்னு அன்ன ஹசாரே சொன்ன பிறகு அவருக்கு பயம் வந்துடுச்சாம்.

---------------------------

3. அந்த கிரிக்கெட் வீரருக்கு 18 சின்ன வீடுகளாம்.

ஓஹோ.. பல களம் கண்டவர்னு சொன்னாங்களே.. இதானா?

-----------------------------------------
http://www.gogooes.com/wallpaper/images/mallu6/img1.jpg
4.அரசியல் உலகில் ஜாம்பவான்னு பெயர் எடுத்த நம்ம தலைவரு  திடீர்னு வேற கட்சிக்கு ஜம்ப் பண்ணீட்டாரே?

ஓஹோ.. அரசியல் உலகின் ஜாம்பவான் இப்போ ஜம்பவான் ஆகிட்டரா?

----------------------

5. இந்தப்படத்துல பல் டாக்டராவும்,மன நலம் குன்றியவராவும்,டபுள் ஆக்ட் பண்றேன்..

ஓஹோ.. டெண்டல் கேரக்டர் + மெண்டல் கேரக்டர்னு சொல்லு.. 

----------------------------

6. தலைவருக்கு கேரளா,ஆந்திரா,கர்நாடகா என மாநிலத்துக்கும் மாநிலம் சின்ன வீடு இருக்காம்.

ஒருங்கிணைந்த தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலப்போம்னு சொன்னாரே.. இந்த அர்த்தம் தானா?

-------------------------
http://lh3.ggpht.com/_SvdS-j65QEo/TJENU98aqnI/AAAAAAAAAHQ/V_iP1XpoMww/pakistani-school-girls.jpg
7. இந்தப்படத்துக்கு கதை,திரைக்கதை,வசனம்,ஒளீப்பதிவு,டைரக்‌ஷன்,தயாரிப்பு, எல்லாம் நான் தான்.

ஆடியன்ஸூம் நீங்கதானா?

----------------------------

8. அந்த யுனிவர்சிட்டில என்ன கலாட்டா?

கட்சி ஆளுங்க சிலர் வந்து டாக்டர் பட்டம் 5 பார்சல் அப்டின்னு ஆர்டர் பண்ணுனாங்களாம்.

--------------------------------

9. இந்தபடத்துல என் உயிரைக்குடுத்து நடிச்சிருக்கேன்.

ஓஹோ.. அதான் படம் பார்த்த ஆடியன்ஸ்  அடடா. உயிரை எடுக்கறானுங்க அப்படின்னு அங்கலாய்ச்சாங்களா?

-------------------------------
http://www.snegidhi.com/2010/105-24-06/uthiram_actress_15.jpg
10. மகளிர் அணித்தலைவி தன்னை ஏமாற்றி விட்டதா தலைவர் கேஸ் போட்டிருக்காரே?

மகளிர் அணித்தலைவியே ஒரு கேஸ் தான். அது மேல இவரு கேஸ் போட்டிருக்காரா? சுத்தம் வெளங்கிடும்..

------------------------