Tuesday, May 22, 2012

நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 4

 

சமூக வலைத்தளங்களுக்கு வர்றவங்க பல வகை.. டைம் பாஸ்க்காக வர்றவங்க,வீட்டில், பணிபுரியும் இடத்தில் ஏற்படும் மனத்தாங்கல்கள், நெருக்கடிகளை மறக்க வருபவர்கள்,முகம் தெரியாத நட்பை விரும்புவர்கள்,மீடியாக்களின் கவனத்தை ஈர்க்க இதை ஒரு கலனாக ,களனாக கொள்பவர்கள் என சொல்லிக்கிட்டே போகலாம்.. 


நான் முதன்முதலா பிளாக் உலகத்துக்கு வந்தது 2010 ஜூலை 17...அப்போ ட்விட்டர் பற்றி எதுவும் தெரியாது.. பிளாக்கிற்கான லிங்க்கை ஷேர் பண்றதுக்கு மட்டுமே அதை யூஸ் பண்ணிட்டு இருந்தேன்..ஆனந்த விகடன் வலை பாயுதே பகுதியில் ட்விட்டர்களின் ட்வீட்ஸ் தான் என்னை ட்விட்டர் உலகத்துக்கு கொண்டு வந்தது. குறிப்பாக ஆல் தோட்ட பூபதி எனும் கரூர் ஜெகனின் எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தது.. 

2011 ஜனவரி மாசம் ட்விட்டர் உலகத்துல நான் எண்ட்டர் ஆனேன்.. கிட்டத்தட்ட 18 வருஷங்கள் நான் பத்திரிக்கைத்துறையில் பணி ஆறியதால் ஐ மீன் ஜோக்ஸ் எழுதி வந்ததால் அந்த பழக்கம் அப்படியே வந்தது.. ஜோக் ஃபார்மேட் எனக்கு நல்லா செட் ஆச்சு.. 2 பேர் பேசிக்கற மாதிரி மேட்டர் தான் எனக்கு வந்தது,.,. 

 ஆனா ட்விட்டர் ரொம்ப அட்வான்ஸ்.. நறுக் சுருக் என ஹைக்கூ வடிவத்தில் 140 எழுத்துக்களில் படிப்பவரை கவர வேண்டும் என்ற சவால் என்னை பார்த்து எள்ளி நகையாடியது.. ஆரம்பத்துல ரொம்பவே சிரமப்பட்டேன்.. ( படிக்கறவங்க அதை விட சிரமப்பட்டாங்க)


 இன்னொரு மேட்டர்.. எனக்கு டெக்னிக்கல் நாலெட்ஜ் சுத்தமா இல்லை.. மென்ஷன் பார்க்கத்தெரியாது.. டி எம் அனுப்ப, பார்க்க தெரியாது.. மெயில் ஐ டிக்கு வர்ற டி எம் தான் பார்ப்பேன். ரிப்ளை பண்ணத்தெரியாது.. அதனால ஆரம்பத்துல சிலர் “ இவன் தலைக்கனம் பிடிச்சவனா இருக்கான்.. நோ ரிப்ளை டூ அதர்ஸ்”னு ஒரு டாக் இருந்துச்சு.. 


2011 ஏப்ரல்ல இருந்து தான் கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் கத்துக்கிட்டேன்.. ராஜன் என் ட்விட் ஒண்ணை RT  பண்ணுனாரு.. கலைஞரை நக்கல் அடிக்கும் ட்வீட் அது.. ஆனந்த விகடன்ல வந்த முத ட்வீட் அதுதான்.. 



 அதுக்குப்பிறகு ட்வீட்ஸ்ல  ஒரு ஃபார்முலா வெச்சுக்கிட்டேன். அதாவது கரண்ட் நியூஸ் ஏதாவது 2 லைன்ல எடுத்து போட்டு அதை  பற்றி ஒரு கமெண்ட் அடிப்பது... காதல் கவிதை அல்லது ஏதாவது ஒரு தத்ஸ் , மூணாவதா நம்ம மனசுல என்ன நினைக்கறோமோ அதை அப்படியே எந்த விதமான அலங்காரங்களோ இல்லாம  சொல்றது.. 

 எனக்கு என்ன பிரச்சனைன்னா எங்க வீட்ல நெட் கிடையாது.. ஆஃபீஸ் டைம்ல டைப் அடிச்சாத்தான்.. சமீபத்துலதான் ஆண்ட்ராய்டு ஃபோன் வாங்குனேன்.. அதுவரை பேசிக்  மாடல் சாதா ஃபோன் தான்.. 


 ட்விட்டர் உலகை கூர்மையா கவனிச்சதுல எனக்குத்தோன்றியதை அப்படியே உங்க கிட்டே ஷேர் பண்ணிக்கறேன்.. நல்ல படைப்பு எப்போ வந்தாலும், அதை யார் படைச்சு இருந்தாலும் உடனே அதை மற்றவங்களுக்கு ஷேர் பண்ணிக்குங்க. அதாவது  RT பண்ணுங்க.. நம்மாளுங்க பண்ற 2 மிஸ்டேக்ஸ் என்னான்னா ஐ ஆம் கார்க்கி, பாரத் பாரதி ,ஆல் தோட்ட பூபதி இந்த மாதிரி பிரபல ட்வீட்டர்கள் RT பண்ணுன பிறகு  அவங்களும் RT பண்ணறாங்க.. 

 அது தேவையே இல்லை.. நமக்குப்பிடிச்சிருந்தா உடனே அதை ஆர் டி பண்ணனும்.. ரெண்டாவது நம்ம டைம்லைன்ல ஏதாவது படைப்புகள்  RT ஆனா நம்ம ஆளுங்க அதை படிச்சுட்டு அப்படியே விட்றாங்க. ஆர் டி யின் முக்கிய நோக்கமே புதிய படைப்பாளியை அறிமுகம் செய்வதுதான்.. நல்ல படைப்பு நம்ம டைம்லைன்ல வந்தா உடனே நாம செய்ய வேண்டியது அந்த படைப்பாளியை  ஃபாலோ பண்றதுதான்.. ஆல்ரெடி நாம ஃபாலோ பண்ணி இருந்தா நம்ம ஃபாலோயர்ஸ்க்கு இவர் இந்த வகைல கெட்டிக்காரர், இவரை ஃபாலோ பண்ணுங்க  அப்டின்னு சொல்லிடனும்.. 


ட்விட்டர்ல புது ஃபார்மேட்ல யார் யார் -யார் யாரை ஃபாலோ பண்றாங்க அப்டி ஸ்டேட்டஸ் காட்டுனப்போ ஒரு பிரபல பெண் ட்விட்டர் நக்கலா கமெண்ட் அடிச்சாங்க “ பொண்ணுங்களா தேடித்தேடி போய் ஃபாலோ பண்றாரு”ன்னு.. நான் கேட்டேன்” அதுல என்ன தப்பு? தமிழனின் மொய்க்கு மொய் ஃபார்முலா தெரியுமா? நம்மை யார் ஃபாலோ பண்றாங்களோ அவங்களை நான் ஃபாலோ பண்றேன்.. இதுல கிண்டல் பண்ண என்ன இருக்கு? 



 என்னோட ஃபாலோயர்ஸ் எண்ணிக்கைக்கும் ஃபாலோயிங்க் எண்ணிக்கைக்கும் 524 தான் வித்தியாசம்.. எத்தனை பேரு அப்படி ஃபாலோ பண்றாங்க? 3000 ஃபாலோயர்ஸ் வெச்சிருக்கற பல ட்வீட்டர்ஸ் 300 பேரைக்கூட ஃபாலோ பண்ணாம இருக்காங்க.. அதுக்காக  நான் சொல்ல வர்றது அவங்களை எல்லாமே ஃபாலோ பண்ணனும்கற அர்த்தம் இல்லை.. அது அவங்கவங்க விருப்பம்.. டைம் லைன் நம்பிக்கும்..(நிரம்பிடும்) ஒரு குறிப்பிட்ட அளவு தான்  ஃபாலோ பண்ண முடியும்.. 

நான் ஒரு சாதாரண ஆள் தான். என் ட்வீட்ஸ் எல்லாம் சுமாராத்தான் இருக்கும். இதுவரை 21,900 ட்வீட்ஸ் போட்டிருக்கேன்னா அதுல நல்லாருக்குன்னு தேறுனது 345 தான்.. அதிக  RT பெற்றவை அதாவது 10 டூ 15 ஆர் டி ஆன ட்வீட்ஸ்னு கணக்கெடுத்தா 212 தான் இருக்கும்.. மீதி எல்லாமே மொக்கை தான் .. சும்மா ஜாலிக்கு டைம் பாஸ்க்கு போட்டவை தான்.. 

நான் பாராட்டுக்கோ, அங்கீகாரத்துக்கோ அலையற ஆள் இல்லை.. எல்லாரும் நம்மை , நம்ம படைப்பை பாராட்டனும்னு வெறி இல்லை.. ஆனாலும் மத்தவங்க நம் படைப்பை பாராட்ட்டுனா ஆர் டி செஞ்சா ஒரு சந்தோஷம்.. மன திருப்தி அவ்ளவ் தான்.. 

 ஒரு படைப்பாளிக்கு அதிக  மன திருப்தியை தருவது முகம் அறியாத அன்பு உள்ளங்களின்  அங்கீகாரமும், பாராட்டுமே.. ஏன்னா நம்ம வீட்ல இருக்கறவங்க பெரும்பாலும் நம்ம படைப்பை கண்டுக்க மாட்டாங்க . நம்மையே கண்டுக்க மாட்டாங்க .. அதனால  மத்தவங்க பாராட்டும்போது ஒரு அல்ப சந்தோஷம் அவ்ளவ் தான் .. 

இந்தியாவின் நெம்பர் ஒன் ட்வீட்டர் ஐ ஆம் கார்க்கி என் ட்வீட்ஸ் 18 ஐ இதுவரை ஆர் டி பண்ணி இருக்கார். கமர்ஷியல் ட்வீட்டர் ராஜன் இதுவரை 14 ட்வீட்ஸ் ஆர் டி பண்ணி இருக்கார்..தோட்டா 12 ,  குடத்தில் இட்ட  விளக்குகளை குன்றில் ஏற்றிய தீபங்களாய் ஆக்கும் பாரத் பாரதி இதுவரை 43 ட்வீட்ஸ் ஆர் டி பண்ணி இருக்கார்.. ஆனா ரொம்ப நாளா ஒரு குறை எனக்கு.. ஒரு பிரபல ட்வீட்டர் மட்டும் இதுவரை என் ஒரு ட்வீட்டைக்கூட ஆர் டி செஞ்சதே இல்லை .. அதாவது என் தனிப்பட்ட ட்வீட்.. ( பிளாக் லிங்க் ஷேர் அல்ல )

நானும் இதை முதல்ல கவனிக்கலை.. எனக்கு ஒரு  டவுட்.. நாம தான் ரொம்ப மொக்கை போடறோமா? அல்லது அவர் டைம் லைன்ல இல்லாதப்ப போடறதால அவர் கவனிக்கலையோன்னு .. அதனால நான் என்ன செஞ்சேன்.. அவர் டைம் லைன்ல இருக்கறப்போ ட்வீட் போட ஆரம்பிச்சேன்.. ஆனா அவர் கண்டுக்கலை.. எனக்கு புரிஞ்சிடுச்சு.. அண்ணன் பாலிடிக்ஸ் பண்றார்னு.. 



 இதை அப்படியே விட்டிருப்பேன்.. ஒரு நாள் என்ன செஞ்சாரு? அண்ணன் டைம் லைன்ல “  என்னய்யா ட்வீட் போடறே? ரொம்ப மொக்கையா இருக்கே?” அப்டின்னு கேட்டாரு.. வழக்கம் போல நான் ஸ்மைலி போட்டுட்டு கிள ம்பிட்டேன்.. 

 இது ஒரு டைம் 2 டைம் இல்லை 7 முறை நடந்தது.. அதாவது லேடீஸ் எல்லாம் டைம் லைன் இருக்கற டைமா பார்த்து வேணும்னே நோஸ்கட் பண்ண வேண்டியது.. எனக்கு செம கடுப்பு ஆகிடுச்சு.. என்னை மொக்கைன்னு சொன்னதுக்காக இல்லை.. 

 ஏன்னா என்னை ஆல்ரெடி ட்வீட் உலகின் வெற்றி மாறன் ஐ கிருஷ், கார்க்கி,ராஜன் உட்பட பலர் அப்படி சொல்லி இருக்காங்க.... அவங்க மேல ஏன் எனக்கு வருத்தம் இல்லைன்னா என் நல்ல படைப்பு வந்தப்ப அவங்க ஆர் டி பண்ணி இருக்காங்க.. அவங்க தான்யா உண்மையான் நண்பன்க்கு அடையாளம்.. படைப்பு நல்லா இருக்கறப்போ அங்கீகாரம் கொடு.. நல்லா இல்லைன்னா  திட்டு .. வேணாம்கலை.. 

ஒரு படைப்பாளியை பாராட்டனும்னா அவனை டைம்லைன்ல பாராட்டு.. அவனது குறைகளை சுட்டிக்காட்டனும்னா டி எம் ல சொல்லு.. என் ஃபோன் நெம்பர் இருக்கு மெசேஜ் பண்ணு.. அல்லது கால் பண்ணி சொல்லு.. அதை விட்டுட்டு டைம் லைன்ல எதுக்கு கேவலப்படுத்தனும்?

 அண்ணன் ரெகுலரா கடலை போடும் ஒரு பிரபல பெண் ட்வீட்டர் கிட்டே என் ஆதங்கத்தை டி எம் ல சொன்னேன்.. அவங்க ஒத்துக்கவே இல்லை... அவர் அப்படிப்பட்ட ஆள் கிடையாது. பலரது ட்வீட்சை ஆர் டி பண்ணி இருக்காரு அப்டின்னங்க.. நானும் அதை ஒத்துக்கறேன். ஆனா என் ட்வீட்ஸ் அவர் ஏன் ஆர் டி பண்ணலை?ன்னு கேட்டேன்.. வாக்குவாதம் வளர்ந்தது... 

 நான் சொன்னேன்.. சரி . நான் இதுவரை போட்ட கேவலமான, ரொம்ப மொக்கையான ட்வீட்ஸ் 2 தர்றேன் அதை உங்க ஐ டி ல போடுங்க.. அண்ணன் என்ன பண்றார்?னு பார்க்கலாம்னேன்.. அவங்க  அதுக்கு ஆரம்பத்துல சம்மதிக்கலை.. உங்க ட்வீட்ஸை நான் எப்படி போட முடியும்? அதுவும் என் பேர்ல? வேணும்னா உங்க ட்வீட்டை நான் ஆர் டி பண்ற மாதிரி போடவா?ன்னாங்க


 ம்ஹூம் அது சரிப்படாது.. எனக்குத்தெரிய வேண்டியது./. அவர் படைப்பை பார்த்து ஆர் டி பண்றாரா?  அல்லது ஆளை பார்த்து ஆர் டி பண்றாரா? என்பதே அப்டின்னேன்.. 


 நீண்ட யோசனைக்குப்பின் அந்த பெண் ட்வீட்டர் என் மொக்கையான, படு கேவலமான ட்வீட்ஸ்  ரெண்டையும் போட்டார்.. அந்த ட்வீட்ஸ் 2ம் எவ்வளவு கேவலம்னா தினத்தந்தி குடும்ப மலர்ல கூட வராது அவ்ளவ் கேவலம்,,. அவர் பேருல போட்டுட்டாரு.. 


 ட்வீட் போட்ட 4 வது நிமிஷத்துல அந்த 2 ட்வீட்ஸ்ல ஒண்ணை அண்ணன் ஃபேவரைட் பண்ணினாரு.. ஒண்ணை ஆர் டி செஞ்சாரு,.. சும்மா இல்லை முன் குறிப்பா அவேசம் ட்வீட்  அப்டின்னு.. ஹய்யோ அய்யோ 

 அந்த பெண் ட்விட்டர்க்கு முகமே இல்லை.. எனக்கு படு திருப்தி.. அவரது முக மூடியை கிழிச்சதுல.. 



இப்பவும் நான் அவர் பேரை குறிப்பிட முடியும்.. ஆனா அப்புறம் அவருக்கும் , எனக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும்.. நான் சொல்ல வருவது  மற்றவர்களை மற்றவர் முன்னிலையில் பாராட்டுங்கள், குறைகளை டி எம்மில் சொல்லுங்கள் என்னும் கருத்தைத்தான்.. மற்றபடி அவரை குறை கூறும் எண்ணம் இல்லை.. 


அடுத்த பதிவில் மதுரை டாக்டர் ரியாஸ் உட்பட 167 பேரை பிளாக் செஞ்ச பிரபல ஆண் ட்வீட்டர் பற்றிய ஒரு அலசல்.. 


சினிமா விமர்சனத்தில் இயக்குநர் பற்றி அவர் படைப்பை பற்றி நீ மட்டும் குறை சொல்லலாமா? என கேட்டுடாதீங்க .. அது வேறு, இது வேறு..அதுவும் இல்லாம சினிமா விமர்சனத்துல இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள், ரசித்த வசனங்கள் எல்லாம் சொல்லிட்டு கடைசியாத்தான் இயக்குநரிடம் சிலகேள்விகள் என லாஜிக் மிஸ்டேக்ஸ் பற்றி கேட்டிருப்பேன்




இந்த  மெகா ட்வீட்டப் பாகம் 1 படிக்காதவங்க http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-1.html


 பாகம் 2 படிக்காதவங்க

http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-2.html

 பாகம் 3  -பெண் குயின்ஸ் - http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-3.html



  பாகம் 5 - ஒரு தன்னிலை விளக்கம் http://www.adrasaka.com/2012/05/5.html


பாகம் 6 - பிரபல ட்வீட்டர்களின் இருண்ட பக்கங்கள்-http://www.adrasaka.com/2012/05/6.html