Showing posts with label SONIA. Show all posts
Showing posts with label SONIA. Show all posts

Friday, March 16, 2012

ஹிட்லரே அஞ்சி நடுங்கும் ராஜபக்சேவின் கொடூரங்கள் - மக்கள் கருத்து


"ஆசையால் வெற்றி பெற்றவன் அந்தப் போதையால் தவறுகள் செய்து அழிவைத் தேடுவான். ஆனால் தன்னடக்கம் உள்ள மனிதன் அறிவுடன் சிந்தித்து எப்போதுமே இன்பமாக வாழ்ந்திடுவான்." இது சிங்களவர்கள் வணங்கும் புத்தரின் வாக்கு!

'ஒற்றைத் தமிழனையும் விட்டுவிடாதே, தமிழச்சிகள் கருவில் உள்ள குழந்தை கூட நாளை விடுதலைப் புலியாக மாறிவிடும்' என்ற ரத்த வெறிக்கொண்ட இக்கூப்பாடுகள் இறுதிக்கட்ட போர் நடக்கையில் ராணுவத்துக்கு 'மகிந்த ராஜபக்சே'வால் பணிக்கப்பட்ட வேலைகள். இதுவே அன்று சிங்கள ராணுவத்துக்கு வேத வாக்கு!

இலங்கை ராணுவத்தின் ஒவ்வொரு விலங்கு மனிதர்களும் ராஜபக்சேவாக மாறி தமிழ் மழலைகளை முண்டமாக, பிறந்து விழித்திறக்காத குழந்தைகளை பூட்ஸ் கால்களில் நசுக்கி, தமிழச்சிகளின் பிணத்தை கூட முகர்ந்து பார்த்தது உள்ளமே இல்லாத இலங்கை ராணுவத்தின் உடல்.

'தப்பு செய்தவன் ஒரு தடயத்தையாவது விட்டுச் செல்வான்' என்பது துப்பு துலக்குவர்களின் வாக்கு. அந்த வாக்கை போல் 'போரில் வதைப்பட்டவர்கள், தப்பி வந்தவர்கள், ஐ.நா. பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், இவ்வளவு ஏன்.. இப்போர்க்குற்ற காணொளியை கொடுத்த உதவிய சிங்கள ராணுவர் வரை இலங்கையின் இனப்படுகொலைகளுக்கு ஆயிரம் ஆயிரம் சாட்சியங்கள் உண்டு. ஆனால் தண்டணைகள்தான் இல்லை.

இதைத்தான் 'இலங்கையின் கொலைக்களங்கள் - தண்டிக்கபடாத குற்றங்கள்' என்று இரண்டாவது பாகமாக இலங்கை இனப்படுகொலைகள் பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது 'சேனல்-4'.

'இன்று உனக்கு இனிய நாள்' என்ற தோழமையின் குறுஞ்செய்தியுடன் அலைபேசியை ஓரங்கட்டிவிட்டு கணினியின் முன் காலை அமர்ந்தேன். அதுவே 'இலங்கை கொலைக்களங்கள் - தண்டிக்கப்படாத குற்றங்கள்' ஒளிபரப்பட்ட நேரம். கண்ணில் நீர் வற்றிய தருணம் .

அய்யோ! இந்த பச்சப் பிள்ளைய காப்பாத்த இயலையே... என்ற 'சேய்'யை இழந்த ஈழத்தாயின் கதறலே 53:12 நிமிட காட்சியில் கண்ணீரை சொட்ட வைக்கும் முதல் காட்சி.

'தமிழீழம் என்றொரு தேசம் விடிய போராடிய விடுதலைப் புலிகளுக்கு' எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட போர் பல ஆயிரம் மக்களை காவு வாங்கியதை ரணத்தை ஏற்படுத்தும்  காட்சிகளுடன் வெளியிட்டும் 'சேனல்- 4', ஜெனிவா முதல் நியூயார்க் வரை ஒளிப்பரப்பியும் இதுவரை இம்மக்களுக்கு நீதி கிடைத்ததா தெரியவில்லை.

நீதி கிடைக்காத இன்றைய நிலைமையில் தான் 'தண்டிக்கபடாத போர்க்குற்றங்கள் 'என்ற படத்தை ஓர் ஆவண சான்றாக வெளியிடுகிறோம் என்பதுடன் 'ஐ.நா. மற்றும் கண்டும் காணாது இருந்த சர்வதேச சமூகத்தின் மனசாட்சியற்ற கதவுகளை தன் கேள்விகளால் தட்டுகிறார், ஆவணப் படத் தயாரிப்பாளர் ஜான் ஸ்னோ.  

உலக நாடாளுமன்றங்கள் பலவற்றில் சேனல் 4-ன் முதல் ஆவணப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்கா இதனால் ஏற்பட்ட விளைவை கூறியதே 'தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை சிங்களமே ஒப்புக்கொள்கிறது' என்பதற்கான சான்று. அவர் "சேனல்-4 வெளியிட்ட இலங்கை கொலைக்களங்கள் வீடியோவை பார்த்துவிட்டு, "என் 28 வயது மகன் கலங்கிப் போனான், அவன் அதில் காட்டிய சித்தரவதைகளை பார்த்துவிட்டு, நான் சிங்களன், இலங்கையன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கமாக உள்ளது என்றான்," என்று தெரிவித்துள்ளார்.

2007 முதல் 2010 வரை இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் டேவிட் மில்லிபேன்ட் கருத்துரைத்த பொழுது, நல்லிணக்க அறிக்கையில் போருக்கு அந்த குரூர இனப்படுகொலைக்களுக்கு யார் காரணம் என்பதையே இலங்கை அரசு மறைத்து விட்டது.

"விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லிக்கொண்டு தமிழ் மக்களையே முழுவதுமாக அழித்துள்ளனர் கோத்தபயாவும், மகிந்தாவும்" என்று குறிப்பிட்டுள்ளார், மில்லிபேன்ட்.

சிங்கள அரசு அலுவலகங்கள் மீது தற்கொலைப் படை தாக்குதல், ஐ.நா. விதியை மீறி 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை இறுதிக்கட்ட போரில் புலிகள் போரிட பயன்படுத்தினர்  என்று சான்றுகள் முன்வைக்கப்பட்டாலும், ஏன் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு செய்த படுகொலைகளுக்கு, போர் விதிகளை மீறி புலிப்போராளிகளுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு தண்டனைகள் அளிக்கப்படவில்லை? என்ற கேள்விகள் காட்சிகளுக்கு இடையே எழுப்பப்பட்டது.

மக்கள் மீதே எறியப்பட்ட குண்டுகள்...

பாதுகாப்பு வலயங்களில் (No Fire zone) இருந்த பதுங்கு குழிகள், மக்களை காக்க ஐ.நா அமைத்த பதுங்கு குழிகள் என பதுங்கு குழிகள் எல்லாவற்றி்ன் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடைபெற்றுள்ளது. சரத் பொன்சேகா போரில் எவ்வித வலிமையான ஆயுதங்களும் பயன்படுத்தவில்லை என்று சொல்லிவிட்ட பிறகே, ஐ.நா. பதுங்கு குழிகள் மீது தொடர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. 

இத்தாக்குதல் நடக்கும்போது பீட்டர் மக்கே என்ற ஐ.நா.வின் ஆஸ்திரேலிய பணியாளரால் இதை நிறுத்தக்கோரி பல அழைப்புகள் கொழும்புக்கு விடப்பட்ட பிறகும், அங்கிருந்து சற்று தள்ளி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இப்போரில் ஐ.நா. பதுங்குக்குழிகள் மீது தெரிந்தே தகுதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து இலங்கை அரசு போரின் விதிகளை அப்பட்டமாக மீறியது தெரிகிறது.

உணவுக்கு வழி இல்லை... மருந்தில்லாமல் வலியோடு துடித்தவர்கள்!

அரசுக்கு பணிந்து பாதுகாப்பு வலயங்களுக்குள் வரும் மக்களுக்கு உணவு, மருந்து கொடுப்பது ஐ.நா.விதிப்படி ஒரு ஜனநாயக நாட்டின் கடமை. ஆனால் எந்த கடமையும் இல்லை என்றே இலங்கை ராணுவமும் அரசும் செயல்பட்டுள்ளது என ஆதாரங்களுடன் வருகிறது அடுத்தடுத்த சாட்சியங்கள்.

பாதுக்காப்பு வலயங்களுக்கு உள்ள மருத்துவராக பணியாற்றிய ஒருவரின் பதில் "அவசர சிகிச்சை (ஐசியூ) யூனிட்டில் மருந்து மிகவும் பற்றாக்குறையாக உள்ளது என்று சொல்லியும் அரசு பொருட்படுத்தவே இல்லை, இதனாலே குண்டுகளால் அடிப்பட்டு சிகிச்சையின் பொழுது  ரத்தப்போக்கு  நிற்காமல் இறந்தவர்களே அதிகம்."

இதுகுறித்து இதில் வதைப்பட்டு தமிழ் பெண்மணி கூறியது, "கடைக்கு பொருள் வாங்க போனால் குண்டு எப்ப வந்து விழும் என்றே தெரியாது, விழுந்தால் வியாபாரியும் விழுந்துக்கிடப்பார்.. மக்கள் உணவுக்கு வழியின்றி கீழே சிதறிய பொருட்களை அள்ளிக்கொண்டு இருப்பார்கள். அடுத்த அவர்கள் இருப்பார்களா இல்லையா என்றே தெரியாது" என்று அனுபவித்த கொடுமையை விளக்கினார்.

இதே போல் பல காயங்களுடன் தப்பி வந்த ஆண் ஒருவர் "நாங்கள் பட்ட காயங்களுக்கு எல்லாம் மருந்து இல்லை.. கத்திக்கொண்டே கண்கள் சொருகி விழுந்து விடுவோம் ,அதுவே குண்டடிபட்ட எங்களுக்கு வலிப்போக்கும் மருந்து. அப்படி இல்லாமல்  அடிப்பட்டவர்கள் வலியால் துடித்து கத்துவதைக் கண்டால் இழுத்திப்போட்டு சுட்டுக்கொன்று விடுவார்கள் ராணுவ ஆட்கள்" என்றார்.

முழுமையான திட்ட வகுத்தலுடன் குண்டுவீச்சு!

எந்தவித எச்சரிக்கையும் விடப்படாமலே திட்டுமிட்டு பொது மக்கள் குண்டுகள் வீசி தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதுவும் மருத்துவமனை என்று அறிந்தும், அதன் மீதே குண்டுகள் வீசப்பட்டுள்ளன. 2009 ஏப்ரல் 22-ம் தேதி இலங்கை அரசு 'வலிமை வாய்ந்த குண்டுகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை, பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை' என்று சொல்லியதே, அப்படியென்றால் குண்டுவீச்சுத் தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது? இந்த தாக்குதலுக்கு யார் உத்தரவு கொடுத்தது? என்று வினவியுள்ளது, சேனல் 4.

இவ்வளவு ஏன், ராஜபக்சேவே தன் பேச்சில் "மக்களை எங்கள் பக்கம் கொண்டு வருவதற்காக தாக்குதல்கள் நடைபெறுகின்றன. அதில் 5000 முதல் 10000 பேர் செத்திருக்கலாம்" என்று கொலைவெறிப் பேச்சு இணைக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை சுதந்திரம் இல்லாத நாடு..

ராஜபக்சே அரசுக்கு எதிராக பத்திரிகை எதாவது எழுதினால் உடனே அவர்  'எல்.டி.டி.ஈ. உதவி பெறுபவர்' என்று முத்திரை குத்தப்பட்டு காணாமல் போவார் என்பது தான் இலங்கையின் பத்திரிகை விதி.

இலங்கையில் போர் நடைபெற்ற காலத்திலும் அதன் பிந்தைய காலக்கட்டத்திலும் பத்திரிகையாளர்கள் நிலைமையை பேசிவருபவர் இலங்கையின் சுதந்திர பத்திரிகையாளர், பாஷன அபயவர்தனே. அவர், "தன் அரசுக்கு எதிராக நடக்கும் பத்திரிகையாளர் யாராக இருந்தாலும் அவர் கொல்லப்படுவார் அல்லது நாட்டைவிட்டு விரட்டப்படுவார் என்றே நிலைமையே இதுவரை தொடர்கிறது. இந்த தருணம் வரையிலும் 60 ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு விரட்டப்பட்டுள்ளனர். 2005-லிருந்து  சிங்களர்கள், தமிழர்கள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்," என இலங்கையின் பத்திரிகை சுதந்திரமற்ற தன்மையை விளக்கினார். 

பிரபாகரன் மகன் என்பதாலே பாலச்சந்திரன் படுகொலை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இரண்டாவது மகன் பாலச்சந்திர பிரபாகரன். பிரபாகரன் மகன் என்பதாலே கொடுமைப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரருகே ஐந்து பேரின் சடலமும் கைகள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் இருக்கின்றன. அவரின் மெய்க்காவலர்களாக இருக்கக்கூடும் என்று இப்படத்தின் தடயவியல் நிபுணர் டெர்ரிக் பவுண்டர் (Derrick Pounder) குறிப்பிட்டுளார்.

பாலச்சந்திரனின் உடம்பில் 5 குண்டுகள் பாய்ந்துள்ளன. பாய்ந்த குண்டுகள் அனைத்தும் சில அடிகள்  தொலைவில் இருந்தே பாய்ந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இதில் உடல் அளவிலான சித்திரவதைகளுக்கு சாட்சியங்கள் இல்லை என்றாலும்  'பிரபாகரன் மகன்' என்பதாலே மனதளவில் மிகவும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்று அறியப்படுகின்றது. இக்கொலை மே 17, 2009 அன்று நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.      

சிங்கள அரசு கணக்கின் அடிப்படையில் பிரபாகரன் இதுவரை பத்து முறைக்குமேல் இறந்துள்ளார். சேனல்-4 காட்சிப்படுத்திய இப்படத்திலும், தலை மோசமாக அடிப்பட்டு நைந்து போன நிலையில் கைக்குட்டையால் மூடப்பட்ட தலையுடன்... சிங்கள அரசு, 'இவரே  பிரபாகரன், விடுதலைப் புலிகளின் தலைவர்' என்று ஒரு உடலை காட்டியது. அதுவே  இந்த ஆவணப் படத்திலும் காட்டப்பட்டது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுற்றதாக சொல்லப்பட்டபோது சிங்களர்களின் கொண்டாட்ட உற்சவங்களை பார்த்தால் தெரியும் தமிழர்கள் இலங்கையில் பட்டப்பாடினை. இந்த போர் முடிவுற்ற பொழுது இந்தியாவின் சார்பாக கலந்துக்கொண்டு ராஜபக்சேவுக்கு கைக்குலுக்கிய சிவசங்கரன் மேனன் உள்ளிட்ட காட்சிகள் வரை காட்டப்பட்டது.

'2013 காமன்வெல்த் கூட்டம் இலங்கையில் நடக்கவிருக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், 40,000 அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை ஐ.நா.வும் சர்வதேசச் சமூகமும் மறந்துவிடக் கூடாது' என்று உள்ள குமுறல்களுடன் இலங்கையின் மனித உரிமை மீறல்களை சேனல்-4 தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கும்' என்று ரத்தக்கறைகள் நெஞ்சில் பதிவதோடு முடிவு பெறுகிறது.

நீதிக்கு இன்னுமா புலப்படவில்லை தண்டிக்கப்பட்டத இக்குற்றங்கள்?


 விகடன் வெளியிட்ட இந்த கட்டுரைக்கு மக்கள் கருத்து


1. ஏ ஆர் சி - நெஞ்சத்தை பதற வைக்கக்கூடிய காட்சிகள். குழந்தைகளையும் கொன்றொழித்த அரக்கத்தனமான செயலை கண்டு மனித இனம் வெட்க்கபடத்தான் வேண்டும்.

எப்படியாயினும், மக்களின் சக்திக்கு தகுந்தாற்போல் தனது போராட்டக்களத்தை அமைத்துக்கொள்ளாத விடுதலைப்புலிகள் தான் இப்பேர்பட்ட இனவெறி தாக்குதலுக்கு முதற்காரணமானவர்கள். விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களில் எத்தனை உயிர்களை அந்த மண் இழந்திருக்கிறது என்பதையும் நியாய உணர்வு கொண்டவர்கள் சிந்திக்கட்டும். இருப்பினும், ஒரு அரசை நடத்துபவர்களால் பொதுமக்கள்மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதும் தண்டனைக்குறியதுமாகும்.

வன்முறையால் எதையும் சாதித்துவிடலாம் என்று என்னுபவர்களுக்கு இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகளுக்கு இடையே நடந்த இந்த யுத்தம் ஒரு படிப்பினையாக இருக்கட்டும். அது ஒன்று மட்டும்தான் உலகிற்கு ஆறுதலான விசயமாக இருக்க முடியும்.


2.அன்பாயன் -ஜ.நா.விதியை மீறி 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை இறுதிக்கட்ட போரில் புலிகள் போரிட பயன்படுத்தினர்..என்கிற வரிகளை படித்த போது, போர் நடந்துகொண்டிருந்தபோது, தன் பணியாள்ர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அதிக அழுத்தம் கொடுத்தது மட்டுமல்லாது, இவ்வாறான போர் நடக்கும் பொழுது கடைபிடிக்கவேண்டிய சகல விதிகளையும் மீறிய பான்கீ மூனையும், அவர் வழிநடத்தும் ஜ.நா.வையும் தண்டிப்பது யார்? 


3. தமிழன் -அய்யா அப்துல்கலாம் அவர்களே, தமிழனாக அல்ல ஒரு சக மணிதனாக கேட்கிறேன்... இந்த ஆவணத்தை பார்த்திருப்பீர் என்று நம்பி கேட்கிறேன்.. தமிழர்களுக்கு நடந்தேறியுள்ள இந்த பேரழிவை பற்றி ஏதாவது ஒரு வார்த்தை சொல்லுங்களேன்... ராஜபக்ஷேவின் குருதி படிந்த கரங்களை உங்களது தமிழ் கரங்களால் குலுக்கிய உங்களை தான் கேட்கிறேன், வெள்ளையர்களுக்கு இருக்கும் மணிதாபிமானம் ஏன் பாரத மனித்திரு நாட்டிற்கு இல்லாது போனது என்று கேட்கிறேன்.... 

4. தமிழன் -பச்சிளங் குழந்தைகளை எப்படியெல்லாம் கொண்றிருக்கிறார்கள்... சோனியா சர்க்காரே, ராஜபக்ஷேவுடன் இவ்வளவு நெருக்கமாக பழகுகிறீர்களே, கொஞ்சம் கூடவா மணித குருதியின் வாடை, பிய்ந்து தொங்கும் சதைகளின் நாற்றம், வெள்ளெலும்பின் வீச்சம் என்று ஒன்று கூடவா உங்களின் சுவாசத்திற்கு எட்டவில்லை??? சோனியாவின் சர்க்காரே, ஈழத்தில் சிந்திய தமிழனின் ஒவ்வொரு துளி குருதிக்கும், போக்கிய ஒவ்வொரு இன்னுயிருக்கும் நீ தான் பொறுப்பு

5. சிவகுமார்  -புத்தனை வணக்கும் தேசம் கொன்று குவித்தது
புத்தனை ஈன்ற தேசம் உதவி செய்தது ......

இவர்கள் எல்லாம் பரிணாம வளர்ச்சியடைந்த மிருகங்கள் .....இது போல் ஒரு சமுதாயத்தில் வாழ்கிறோம் என்று நினைக்கும் போதே அருவருப்பாக உள்ளது ......இவ்வளவு கொடூரங்கள் நடந்த பிறகு இன்று விசாரணை வைக்கவும், தீர்மானகளுக்கு அதரவு தெரிவிக்கவும் யோசிக்கும் நாடுகளும் தலைவர்களும் மனிதர்களே அல்ல ...இலங்கையை எங்கே சீனாவோ பாகிஸ்தானோ தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுமோ என்ற எண்ணத்தில் இன்று அமெரிக்க இவ்வளவு நாட்களுக்கு பிறகு இலங்கையில் போர் குற்றங்கள் நிகழ்ததாக தீர்மானம் கொண்டு வந்துள்ளது ..... 22 நாடுகள் அதரவு தெரிவித்த பின்பும் ஏன் இந்த காங்கிரஸ் மட்டும் இன்னும் அதரவு தெரிவிக்க வில்லை ...... ஏன் எனில் பிறகு ராஜபக்சே கேட்பார் - நீங்கள் தானே எனக்கு அணைத்து உதவிகளும் செய்திர்கள் என .....நீங்கள் என்ன தீர்மானங்கள் கொண்டு வந்தாலும் அந்த கதறலும் கண்ணீரும் மரணமும் நேர்தது நேர்தது தான் ..... அந்த ஆன்மாக்கள் இந்த மனித சமுதாயத்தை என்றுமே மன்னிக்காது (என்னையும் சேர்த்துதான் - கை நீட்டும் தொலைவில் இருந்தும் எதுவும் செய்யவில்லையே அவர்களுக்கு)

தன் இனத்தை தானே அழிக்கும் இனம் மனித இனம் என்பதற்க்கு இதை விட வேறு எந்த உதாரணமும் தேவை இல்லை ..
கேவலம் ......

Thursday, March 15, 2012

தமிழா! தமிழா! இருப்பாய் தமிழா நெருப்பாய்!ஈழத்தமிழனும் கலந்தான் நம் உயிர் உறுப்பாய்..


a
உலகம் முழுவதும் தன் இனம் வாழ அதை பார்த்து பெருமைப்படும் மனங்கள் இருக்கையில் தமிழ் இனம் மட்டும் தான் தன் இனம் வீழ்வதை நேரில் கண்டும் என்ன செய்வது என்ற நினைப்பே இல்லாமல் சொரணை அற்று இருக்கிறான்.. ஒரே ஒரு ராஜீவ் உயிரை கொன்றதற்கு 3 பேருக்கு தூக்கு என்றால் ஒரு லட்சம் தமிழ் உயிர்களை கொன்ற ராஜ்பக்சேவுக்கு  என்ன தண்டனை தருவது? இத்தனை நாளாக மறைத்து வந்த போர்க்குற்றங்கள் இப்போது வீடியோ வடிவில் வெளிவந்து விட்டது.. கனத்த நெஞ்சத்துடன் அதை பகிர்கிறேன்


கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவை  இல்லை. ஆனால், கொலைக்கு..? கண்ணே தேவை இல்லை!


 மரணத்தின் ஓலமே பச்சைப் படுகொலையை உணர்த்தும். ஈழத் தில் இருந்து ஒலிக்கும் ஒப்பாரியும் ஓலமும் இப்போதுதான் உலக நாடு களுக்கு ஓரளவு கேட்க ஆரம்பித்து இருக்கிறது என்பதை உணர்த்துகிறது அமெரிக்கா.


ஜெனிவாவில் கூடிப் பேசும் நாடுகள், வவுனியாவில் கூடி இருந்தால் உண்மை அதிகமாகவே சுடும். ''எனது பணிக் காலத்தில் நெஞ்சத்தைப் பதைபதைக்க வைத்த காட்சி அது!'' என்று 2009 மே மாதம் 23-ம் தேதி ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன், மூச்சடைத்துப் போய்ச் சொன்னார். மே 19-ம் தேதி உயிர்ப் பறிப் பின் கடைசி தினம். அன்றில் இருந்து நான்கு நாட்கள் கழித்து சென்ற பான்-கி-மூன் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டார். அந்த இடங்களும் போர்க் குற்றத்தின் கொடூரச் சுவடுகள் தெரியாமல் அழிக்கப்பட்டு இருந்தன.


 அந்தத் தடயங்களை மறைப்ப தற்குத்தான் நான்கு நாட்களை எடுத்துக் கொண்டார் மகிந்த ராஜபக்ஷே. தடயம் அழிக்கப்பட்ட இடங்களே பான்-கி-மூனைப் பதைபதைக்கவைத்தது என்றால், முந்தைய மூன்று ஆண்டுகள் எப்படி இருந்திருக் கும்?


''குடியிருப்புகள் மீது வீசப்பட்ட குண்டுகள் மிகவும் பயங்கரமானவை. அவை வெடித்ததும் அந்தப் பகுதியில் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனை உறிஞ்சும். அதனால், காற்றில் மிகப் பெரிய வெற்றிடம் உருவாகும். இதனால் சுற்றுப்புறத்தில் இருப்பவர்கள் மூச்சடைத்துச் செத்துப்போவார்கள். அப்போது அவர்களுடைய உடைகள் எல்லாம் நார்நாராகக் கிழியும். செத்துப்போனவர்கள் உடல்கள் எல்லாம் நிர்வாணமாகவே கிடக்கும்!'' என்று தான் பார்த்த காட்சியை மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் குழுவிடம் தமிழ் ஈழப் பெண் ஒருவர் சொன்னார். அவர் சொன்னது கற்பனை அல்ல. அந்தப் பெண் சொன்னதை வாஷிங்டனில் உள்ள சர்வதேச மூத்தகுடி மக்கள் குழு வழிமொழிந்தது.


'இலங்கை அரசின் செயல்பாடு, சர்வதேச அளவில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்!’ என்று எழுதப்பட்ட வாசகத்தில் கையெழுத்துப் போட்ட மூன்று முக்கியமானவர்கள்... தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர், ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான்.


மூன்று ஆண்டுகள் கழித்து, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் அமெரிக்கா வந்து இதனை ஆரம்பிக்க வேண்டிய அளவுக்கு உலக நாடுகளிடம் மௌனம் நிலவியது. ஜார் சக்கரவர்த்திக்குப் பாடம் கற்பித்த சோவியத் ஒன்றியமும் பண்பாட்டுப் புரட்சி கண்ட செஞ்சீனமும் பாடிஸ்டாவுக்கு எதிராகக் களமாடிய ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபாவும் ஈழத் தமிழர்க்கு அரணாக இருந்து காத்திருக்க வேண்டும். அல்லது காந்திய தேசமாவது கை கொடுத்திருக்க வேண்டும். அமைதி விடுதலை கண்டவர்களும் ஆயுத விடுதலை அடைந்தவர்களும் மௌனிக்க... அமெரிக்கா இந்த விஷயத்தைக் கையில் எடுத்தது.


ஒருகாலத்தில் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைதான் இலங்கை. முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு 30 ஆண்டுகளுக்கு முன் ரத்தத் தொடக்கமாக அமைந்தது 1983 ஜூலைப் படுகொலைகள். அப்போது அமெரிக்க அரசாங்கம் விடுத்த அறிக்கையில், 'சிங்கள மக்களை ஆத்திரமூட்டும் வகையில் பயங்கரவாதிகள் நடந்துகொண்டதன் விளைவாக ஏற்பட்ட சம்பவமே இந்த இனக் கலவரமாகும்’ என்று நியாயப்படுத்தியது. இந்தப் பாவத்துக்குப் பரிகாரம்தான் ஜெனிவாவில் இப்போது காணப்படுகிறது!


ராஜபக்ஷே மீதான போர்க் குற்றங்களை விசாரிக்க ஐ.நா. சபை மூவர் குழுவை அமைத்து விசாரித்தது. சுமார் 40 ஆயிரம் தமிழ் மக்கள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள் என்று அந்த அறிக்கை சொல்கிறது. இந்த அறிக்கையை மையமாக வைத்துதான் அமெரிக்கா தனது தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்க வேண்டும். அதை விடுத்து, இலங்கை அரசாங்கம் அமைத்த கண்துடைப்பு ஆணைய அறிக்கையை மையமாக வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழ் மக்களுக்கும் மனித உரிமைக்கும் காட்டும் அக்கறை ஆகாது. ஆனாலும், அமெரிக்கா இதையாவது செய்கிறதே, இவர்களாவது செய்கிறார்களே என்று மனத் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியது தான்!


பொருளாதார வளத்திலும் ராணுவ வளத்திலும் அமெரிக்காவுக்குச் சமமாக நிற்கும் சீனாவின் கைப்பாவையாக இலங்கை மாறிவிட்டது என்பதால், அந்த நாட்டை மிரட்டுவதற்கு அமெரிக்கா தீர்மானம் கொண்டுவருகிறது. அமெரிக்கா எதைச் செய்தாலும் எதிர்ப்பது என்று கம்யூனிஸ நாடுகள் குருட்டுக் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகின்றன. இந்த இரண்டு பகடைகளுக்கு மத்தியில் தமிழனின் உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. ராஜபக்ஷே உயிர் தப்பிவருகிறார்.


1949-ம் ஆண்டில் இயற்றப்பட்ட ஜெனிவா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. அந்த ஒப்பந்தத்தின் பிரிவு 3-ல் போர்க் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் குறிப்பிடப்பட்டு உள்ளன. 'போரில் நேரடியாகப் பங்கெடுக்காதவர்கள், போரில் ஈடுபாடுள்ள வீரர்களின் குடும்பத்தினர், ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய முன்வந்தவர்கள், காயத்தாலோ, நோயினாலோ பாதிக்கப்பட்டவர்கள், சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் ஆகியோரை மனிதாபிமான முறையில் நடத்த வேண்டும்!’ என்று அந்த விதி கூறுகிறது. 


ஐ.நா. சபை அமைத்த மூவர் குழு அறிக்கைப்படி கொல்லப்பட்ட 40 ஆயிரம் பேரும் (இதைவிட எண்ணிக்கை கூடுதலானது என்றாலும்!) இந்த விதிகளில் குறிப்பிடப்படும் வகையினர்தான். தங்கிய இடங்கள், பதுங்குக்குழிகள், மருத்துவமனைகள், பாதுகாப்பு வளையம் என அத்தனையையும் மயானமாக்கியவர்களுக்கு ஐ.நா. சபையோ 47 உறுப்பு நாடுகளோ தண்டனை தருமா? அதுவும் எப்போது என்று தெரியாது.


ஆனால், 'தெய்வம் நின்று கொல்லும்’ என்ற தீர்ப்பின் மீது நம்பிக்கை வைப்பதைத் தவிர தமிழனுக்கு வேறு வழி இல்லை!


தனது கைக்கூலிகளால் ஆளப்படும் இந்தியா இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஏன் தன்னை எதிர்க்கிறது என்று அமெரிக்காவே ஆச்சரியப்படும். இந்தியாவில் இருந்து வெள்ளைக்காரன் காலத்திலும் கொள்ளைக்காரர்கள் காலத்திலும் கொண்டு பதுக்கப்பட்ட 75 லட்சம் கோடிகளை பாதுகாப்பாகவும் அதே நேரம் தங்கள் பாதுகாப்பிலும் வைக்க சிறந்த இடம் இலங்கைதான் என்று நம் ஆட்சியாளர்கள் நினைக்கிறார்களோ? மொத்தத்தில் காட்டிக்கொடுக்கும் கூட்டம் ஒன்று உள்ளிருந்தே தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது. சாதி, மதம், கட்சி என பல கூறுகளாக தமிழர்களை பிரித்து அவர்களுக்கு இனமானம் இல்லாமல் செய்து இறையாண்மை என்று புதிதாக ஒன்றை கண்டுபிடித்து அந்தக் கூட்டம் கொட்டமடிக்கிறது. தமிழனின் ஆரம்பம் காங்கிரஸின் அழிவில்தான்.
 
சற்று சிந்தித்து பாருங்கள். அமெரிக்கா தான் பாதிக்கப்பட்டால் ஒழிய போரில் ஈடுபடாது. ஈராக் (புஷ் குடும்ப யுத்தம்). ஆப்கான் - இரட்டை கோபுர தாக்குதல். மற்றப்படி ரவாண்டாவில் என்ன செய்த்து. டார்போர் ஒன்றும் இல்லை. சோமாலியா - சுணக்கத்துடன் போய் அடி வாங்கி வந்தது. பாஸ்னியா - வோ ஐரோப்பிய இணையம். லிபியாவில் கூட பிரெஞ்ச் அரசு தீவிரமாக இருந்த்தே தவிர ஒபாமா இல்லை.

அப்படிப்பட்ட அரசு - இலங்கைக்காக எப்படி போராட முன்வரும்? இந்தியாவை எதிர்த்து கொண்டு (ஒரு போர்தளம் நிறுவ ஏதுவாக இடமில்லையே).

வெறும் பொருளாதார மிரட்டல் விடுக்கலாம் - இலங்கையின் ஏற்றுமதிகள் மீது. அதுவும் கடினமே. ஈரான் இத்தனை தடைகளுக்கும் பின்னர் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது. அப்படி தடைகள் ஒரு வேளை அவர்களின் பொருளாதாரத்தை அசைக்கும் எனில் அதன் கோபம் அநாவசியமாக இலங்கை தமிழர்கள் (அங்கு இருப்பவர்கள்) மீதுதான் திரும்பும். ஆக, இவர்களின் மிரட்டல் யாருக்காக செய்யப்படுகிறதோ அவர்களுக்கே இன்னல் தரும்.

இது தமிழ் சினிமா போல - பொண்ணை கட்டி கொடுத்தால் மாப்பிள்ளை இஷ்டப்படி நடக்க வேண்டும் என்ற கோட்பாடு போன்றது.

அடுத்தது கொல்லப்பட்ட 40 ஆயிரம் என்பதனை யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் அறிக்கைகள் கேள்வி குறி ஆக்குகின்றன. அதனை படிக்கும் முன் என் எண்ணமும் அட இத்தனை பேரா என்று!. ஆனால் அந்த அறிக்கையை படித்த பின்னர் ஒரு நிகழ்வையே மீண்டும் மீண்டும் பலர் விவரிக்கின்றனர். நேரில் பார்த்தவர் இல்லை எல்லாமே கேள்விப்பட்டது, மருவி வேறு சூழ்நிலையில் (using diff background) சொல்லப்பட்டது. ஆக எத்தனை டபுள் கவுண்ட் என்பது தெரியவில்லை. ஆள் கணக்கெடுப்பு என்பது தோராயமாகத்தான் உள்ளது. நிஜமாகவே எத்தனை பேர் இறந்தனர் என்பது தெரிய வராது. 30 இல்லை 50 ஆயிரமாக கூட இருக்கலாம்.

 எத்தனையோ இனங்கள் இந்த உலகத்தில் அழிந்திருக்கின்றன! போராடியவை மட்டுமே தப்பி பிழைத்திருக்கின்றன.இந்தியா தமிழர்களின் உணர்வுகளை மீண்டும் மீண்டும் மிதித்துகொண்டேயிருக்கிறது.தவறு செய்தவர்களை 'தெய்வம் நின்று கொல்லும்’ என்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளித்ததாகவோ அல்லது அழிந்துப்போன இனத்தை தெய்வம் மீட்டெடுத்தாக எவராவது அறிந்ததுண்டோ