Showing posts with label JEYALILTHA. Show all posts
Showing posts with label JEYALILTHA. Show all posts

Sunday, March 18, 2012

பொது பட்ஜெட் 2012-13 அப்டேட்ஸ்: முக்கிய அம்சங்கள்


தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் ரூ.20,000-ஐ உயர்த்துவது உள்ளிட்ட நடுத்தர மக்களின் மகிழ்ச்சிக்குரிய அம்சங்கள் இருக்கும் அதேவேளையில், சேவை வரி உயர்வு, கலால் வரி உயர்வின் தாக்கங்களைச் சுமந்துகொண்டு வந்திருக்கிறது, பொது பட்ஜெட் 2012-13.
2012-13 பொது பட்ஜெட்டில் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:

* உலக பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் நிலை சிறப்பாக உள்ளது.

* பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


* இந்த ஆண்டு வேளாண் வளர்ச்சி 2.5%

* இன்னும் சில மாதங்களில் பணவீக்கம் குறைந்து, பின்னர் நிலையானதாக இருக்கும்.

* பொருளாதார சீர்திருத்தத்துக்கு சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

* சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 115 டாலராக அதிகரித்துள்ளது. இது, எரிபொருள் மானிய மசோதாவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.


* கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடப்பு நாடாளுமன்ற தொடரில் கறுப்பு பணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். 


* நேரடி வரிவிதிப்பு மசோதா இயன்றவரை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.


* ஊட்டக்குறைவு, கறுப்பு பணம், ஊழல் போன்றவற்றை களைவதற்கு அதி முக்கியத்துவம் தரப்படும்.
* கார்ப்பரேட் சந்தை சீர்த்திருத்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
* பால் உற்பத்தி திட்டத்தை மேம்படுத்த உலக வங்கி ரூ.242 கோடி உதவி.
* மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.11,937 கோடி ஒதுக்கீடு.
* தேசிய உணவு மேலாண்மை திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும்.
* கட்டுமானத் துறைக்கு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.50 லட்சம் கோடி தேவை. இதில் பாதியளவு தனியார்த் துறையிடம் இருந்து பெறப்படும்.
* பின் தங்கிய பகுதிகளுக்கான திட்டங்களுக்கு ரூ.12,040 கோடி ஒதுக்கீடு.
* கல்விக் கடனுக்காக கடன் உத்தரவாத நிதி திட்டம் பரிந்துரைக்கப்படும்.
* ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.15,850 கோடி ஒதுக்கீடு (இது கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரம் கோடி)
* 200 மாவட்டங்களில் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டம் தொடங்கப்படும்.
* தேசிய ஊரக மேம்பாட்டுக்கு ரூ.20,820 கோடி ஒதுக்கீடு.
* காலநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* தேசிய சமூக உதவித் திட்டத்துக்கு ரூ.8,447 கோடி ஒதுக்கீடு.
* தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு ரூ.1,000 கோடி வழங்கப்படும்.
* தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.3,915 கோடி செலவிடப்படும்.
* ஊரக சாலை வசதி திட்டத்துக்கு ரூ.24,000 கோடி.
* வேளாண் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிக்கு ரூ.200 கோடி.
* 7 மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும்.
* ஏப்ரல் 2012-க்குள் 40 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்படும்.
* பாதுகாப்புத் துறைக்கு ரூ.1,93,407 கோடி நிதி ஒதுக்கீடு. இது கடந்த ஆண்டை விட 17 சதவீதம் அதிகம்.
* போக்குவரத்து மற்றும் மின்சாரத்துக்கு தலா ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
* பொதுத்துறை வங்கிகளுக்கான முதலீடு ரூ.15,888 கோடி.
* மாநிலங்களுடன் ஒருமித்த கருத்துடன் சில்லறை வர்த்தகத்தில் 51% அந்நிய நேரடி முதலீட்டுக்கு நடவடிக்கை.
* அடுத்த 5 ஆண்டுகளில் யூரியா தேவையில் இந்தியா தன்னிறைவு அடையும்.
* மண்ணெண்ணெய் நேரடி மானியம் பைலட் ப்ராஜகட் என்ற திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்வார் என்ற இடத்தில் தொடங்கி வைக்கப்படும்.
* நிதி சீர்திருத்த மசோதாக்கள் விரைவில் நிறைவேற்றப்படும்.
* உணவுப்பொருட்களுக்கான மானியம் தொடரும்.
* சமையல் எரிவாயுக்கு மானியம் வழங்குவதில் புதிய திட்டம் அமலுக்கு வருகிறது.
* உரம் மானியம் வழங்குவதில் அரசு புதிய திட்டத்தை கடைபிடிக்கும்.
வருமான வரிவிலக்கு வரம்பு..
* தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு, ரூ.1.8 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு.
* ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோருக்‍கு 10 சதவீதம்.
* ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதம்.
* ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுவோருக்‍கு 30 சதவீதம் வரியும் விதிக்‍கப்படுகிறது.
* வங்கி சேமிப்புக்‍ கணக்‍குகள் மீதான வட்டித் தொகைக்‍கு 10 ஆயிரம் ரூபாய் வரை வரி விலக்‍கு.
* சீனியர் சிட்டிசன்கள் முந்தைய வரி கட்டுவதில் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
* கார்ப்பரேட் வரிவிதிப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை.
வேளாண் கடன் இலக்கு 5.75 லட்சம் கோடி!
* உணவு பாதுகாப்பு திட்டத்துக்கு முழு மானியம் அளிக்‍கப்படும்.
* வேளாண் துறைக்‍கான ஒதுக்‍கீடு 18 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் ரூ.20,208 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* விவசாயத்துக்‍கான கடனுதவி 5.75 லட்சம் கோடியாக உயர்வு.
* விவசாயிகளுக்‍கான கடனுதவி மீது 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.
* விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடு 18% அதிகரிக்கப்படும்.
* கிராமப்புற சுகாதார, குடிநீருக்கு ரூ.14,000 கோடி.
* நபார்டு வங்கிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.
* நபார்டு சட்ட திருத்த மசோதா நடப்பு தொடரில் நிறைவேற்றப்படும்.
* நீர் பாசன திட்டங்களுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.
* பண்ணை நீர் பாசனம், நுண்ணுயிர் பாசனத்துக்கு கடன் வழங்க தனி அமைப்பு.
* விவசாயத்தை பாதிக்காத வகையில் 100 நாள் வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
* விவசாய கடன் அட்டைகளை ஏ.டி.எம்.களில் பயன்படுத்தலாம்.
* பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை மூலம் ரூ.30,000 கோடி வரை திரட்ட இலக்‍கு நிர்ணயிக்‍கப்பட்டுள்ளது
* பங்குச்சந்தையில் தகுதிவாய்ந்த வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதிக்‍கப்படும்.
* சென்னை அருகே தொற்று நோய் தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.
* 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் அரசு, தனியார் துறைகள் மூலம் 6,000 மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும்.
* 150 மாவட்டங்களில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.3 லடசம் கடன் உதவி.
* சிறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.25,555 கோடி
* மதிய உணவு திட்டத்துக்கு ரூ.11,937 கோடி ஒதுக்கீடு.
வருமானவரியை சேமிக்க புதிய திட்டம்...
* சிறு முதலீட்டார்கள் பயன் பெறும் வகையில் ராஜீவ் காந்தி பங்குச்சந்தை முதலீட்டுத் திட்டம் தொடங்கி வைக்‍கப்படும். இதில் 5 லட்சம் வரை முதலீடு செய்து 50 ஆயிரம் ரூபாய் வரை வரிவிலக்‍கு பெறலாம்.
* கச்சா எண்ணெய் மீதான மானியச் செலவு அதிகரிப்பு
* விமான எரிபொருளை நேரடியாக இறக்‍குமதி செய்ய அனுமதி; விமானப் போக்‍குவரத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்‍கத் திட்டம்;  விமான போக்‍குவரத்துத்துறைக்‍கு நடைமுறை மூலதனமாக 100 கோடி டாலர் திரட்ட திட்டம்.
* பொதுத்துறை வங்கிகளின் மறு முதலீட்டுக்‍கு ரூ.15,890 கோடி ஒதுக்‍கீடு.
* உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.50 லட்சம் கோடி.
* 8,800 கிலோ மீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்த ரூ.25,360 கோடி ஒதுக்‍கீடு
*  10 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்‍க திட்டம்
* நுண் கடனுதவி நிறுவனங்கள் நெறிமுறை மசோதா கொண்டுவரப்படும்.
சேவை வரி அதிகரிப்பு...
* சேவை வரி 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்வு. இதன் மூலம் ரூ.18,660 கோடி கூடுதல் வருவாய்க்கு வாய்ப்பு.
* சேவை வரி விதிப்பில் இருந்து ப்ரீ ஸ்கூல் உள்ளிட்ட பள்ளிக் கல்வி, சினிமா துறை முதலியவற்றுக்கு விலக்கு.
* கலால் வரி 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக அதிகரிப்பு.

* வேளாண் சாராத பொருள்களுக்கான சுங்கவரி அதிகபட்சமாக 10 சதவீதம்.

வேளாண்மை, உள்கட்டமைப்பு, சுரங்கம், ரயில்வே, சாலைகள், விமானப் போக்குவரத்து, உற்பத்திப் பிரிவுகள் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளுக்கு மறைமுக வரியிலிருந்து விலக்கு.

* சில குறிப்பிட்ட வகை சிகரெட்டுகள், பீடிகளுக்கு கூடுதல் கலால் வரி, பெரிய வகை கார்களுக்கு சுங்கவரி உயர்வு,

முத்திரையிடப்படாத நகைகளுக்கும் கலால் வரி, சிறிய கலைஞர்கள், பொற் கொல்லர்கள் மற்றும் முத்திரையிடப்பட்ட வெள்ளி நகைகளுக்கும் கலால் வரியிலிருந்து விலக்கு

*  வரி விதிப்பு மூலம் நிகர வருவாய் ரூ.41,440 கோடி
பல்வேறு வரிவிதிப்புகள் அடங்கிய பொது பட்ஜெட் எதிரொலியால் விலை குறையும் பொருட்கள்:
புற்றுநோய், எச்.ஐ.வி. மருந்துகள்
சோலார் பவர் விளக்குகள், எல்.இ.டி. பல்புகள்
அயோடின் உப்பு
சோயா உணவுப் பொருட்கள்
தீப்பெட்டிகள்
எல்.இ.டி மற்றும் எல்.சி.டி. டிவிக்கள்
பொது பட்ஜெட் எதிரொலியால் விலை அதிகரிக்கும் பொருட்கள்:
ஏ.சி. சாதனங்கள்
ஃபிரிட்ஜ்
சைக்கிள்கள்
ஜி.எஸ்.எம்., பி.டி.ஏ. மொபைல்கள்
தங்கம், பிளாட்டினம்
கார்கள்
சிகரெட்டுகள்
உயர்தர ஓட்டல் உணவுகள்
விமானக்கட்டணங்கள்
2012-13 ஆம் ஆண்டுக்கான திட்ட மதிப்பீடுகள்:

* மொத்த வரி வருமானம் - ரூ.10,77,612. கோடி (2011-12) ஆம் ஆண்டுக்கான மறுமதிப்பீட்டைவிட 19.5 சதவீதம் கூடுதலாகும்.

* மத்திய அரசுக்கான நிகர வரி வருமானம் ரூ.7,71,071 கோடி (மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட பின்)

* வரியல்லாத வருவாய் - ரூ.1,64,614 கோடி

* கடனல்லாத வருவாய் - ரூ. 41,650 கோடி

* மொத்த செலவீனம் - ரூ.14,90,925 கோடி

* திட்ட செலவு - ரூ.5,21,025 கோடி

* திட்டமிடாத செலவு - ரூ. 9,69,900 கோடி

* உலக பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் நிலை சிறப்பாக உள்ளது.

* பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த ஆண்டு வேளாண் வளர்ச்சி 2.5%

* இந்த ஆண்டு பணவீக்கம் மேலும் குறையும்.

* தொழில்துறை வளர்ச்சி பலவீனமாக உள்ளது.

* முதல் காலாண்டில் ஏற்றுமதி 23% ஆக உயரும்.
* இந்திய பங்கு வர்த்தகம் மேம்பட்டுள்ளது.

* இன்னும் சில மாதங்களில் பணவீக்கம் குறைந்து, பின்னர் நிலைமை சீரானதாக இருக்கும்.

* வேளாண் மற்றும் சேவைத் துறை தொடர்ந்து சிறப்பாக உள்ளது.

* பொருளாதார சீர்திருத்தத்துக்கு சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

* சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 115 டாலராக அதிகரித்துள்ளது. இது, எரிபொருள் மானிய மசோதாவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
* உணவு மற்றும் உரம் மானியங்கள் மிகப் பெரிய அளவில் செலவினத்தை ஏற்படுத்துகின்றன.

* உணவுப் பாதுகாப்பு மானியம் முழுமையாக வழங்கப்படுகிறது.
* மண்ணெண்ணெய் நேரடி மானியம் பைலட் புராஜெக்ட் என்ற திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் பகுதியில் தொடங்கி வைக்கப்படும்.
* சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்க்கு நேரடி நிதி மானியம்

* சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

* நேரடி வரிவிதிப்பு மசோதா இயன்றவரை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
* ஊட்டக்குறைவு, கறுப்பு பணம், ஊழல் போன்றவற்றை களைவதற்கு அதி முக்கியத்துவம் தரப்படும்.

* பங்குச்சந்தைகளில் ரூ.50,000 ஆயிரம் வரை முதலீடு செய்வதற்கு சலுகைகள்.

* பொதுத்துறை வங்கிகள், மண்டல ஊரக வங்கிகளுக்கு ரூ.15,888 ஒதுக்கீடு.

ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு கீழே இருப்பவர்கள், ரூ.50,000 வரை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், 50 சதவீத வரிமான வரிவிலக்கு சலுகை அளிக்கப்படும். இந்தத் திட்டத்துக்கு ராஜீவ் காந்தி பெயர்.

* மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், தேசிய நில வங்கி மற்றும் கடன் மேலாண்மை மசோதாக்கள் வரும் நிதியாண்டில் தாக்கல் செய்யப்படும்.

* தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கான ஒதுக்கீடு 14 சதவீதம் உயர்வு. வரும் நிதியாண்டில் 8,800 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

* கார்ப்பரேட் சந்தை சீர்த்திருத்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

* அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா யூரியா உற்பத்தியில் தன்னிறைவு பெறும்.

* பால் உற்பத்தி திட்டத்தை மேம்படுத்த உலக வங்கி ரூ.242 கோடி உதவி.

* வேளாண் கடன் இலக்கு ரூ.5.75 லட்சம் கோடியாக அதிகரிப்பு.

* நபார்டு வங்கிகளுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.

* ஏ.டி.எம்.களில் கிஸான் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம்.

* குறித்த காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு பரிசு.

* உணவு தானியங்களை சேமிக்க புதிய கிடங்குகள் அமைக்கப்படும்.

* மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.11,937 கோடி ஒதுக்கீடு.

* தேசிய உணவு மேலாண்மை திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும்.

* கட்டுமானத் துறைக்கு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.50 லட்சம் கோடி தேவை. இதில் பாதியளவு தனியார்த் துறையிடம் இருந்து பெறப்படும்.

* பின் தங்கிய பகுதிகளுக்கான திட்டங்களுக்கு ரூ.12,040 கோடி ஒதுக்கீடு.

* 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் 6,000 பள்ளிகள் கட்டப்படும்.

* கல்விக் கடனுக்காக கடன் உத்தரவாத நிதி திட்டம் பரிந்துரைக்கப்படும்.
* ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.15,850 கோடி ஒதுக்கீடு (இது கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரம் கோடி)

* 200 மாவட்டங்களில் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டம் தொடங்கப்படும்.

* தேசிய ஊரக மேம்பாட்டுக்கு ரூ.20,820 கோடி ஒதுக்கீடு.

* காலநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.

* தேசிய சமூக உதவித் திட்டத்துக்கு ரூ.8,447 கோடி ஒதுக்கீடு.

* மகளிர் சுய உதவித் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் திட்டம்.

* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

* தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு ரூ.1,000 கோடி வழங்கப்படும்.

* தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.3,915 கோடி செலவிடப்படும்.

* ஊரக சாலை வசதி திட்டத்துக்கு ரூ.24,000 கோடி.

* வேளாண் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிக்கு ரூ.200 கோடி.

* 7 மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும்.
*  நடப்பு நாடாளுமன்ற தொடரில் கறுப்பு பணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

* ஏப்ரல் 2012-க்குள் 40 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்படும்.
* கார்ப்பரேட் வரிவிதிப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை.

* தனி நபர் வருமான வரிவிலக்கு உச்சவரப்பு ரூ.2 லட்சமாக உயர்வு. இது, ரூ.1.8 லட்சமாக இருந்து வருகிறது.


* ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை - 10 சதவீதம்

* ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை - 20 சதவீதம்

* ரூ.10 லட்சத்துக்கு மேலான வருமானத்துக்கு 30 சதவீதம் வரி.
* சேமிப்பு கணக்கில் ரூ.10 ஆயிரம் வரை வரும் வட்டிக்கு வரி கிடையாது.

* சீனியர் சிட்டிசன்கள் முந்தைய வரி கட்டுவதில் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.


விலை உயரும், குறையும் பொருட்கள்...

* அயோடின் உப்பு, தீப்பெட்டி, சோயா பொருட்கள் விலைகள் குறைகிறது.

* சோலார் லைட்டுகள், எல்.இ.டி. பல்புகள் விலை குறைகிறது.

* கைவினைப் பொருட்களின் விலைகள் குறைகின்றன.

* புற்றுநோய், எச்.ஐ.வி. சிகிச்சைக்கான மருந்துகள் விலை குறைகின்றன.

* 10%-ல் இருந்து 30% ஆக வரி உயர்வதால், சைக்கிள்களின் விலை உயர்கின்றன.

* ஏ.சி., ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன.

* ஆடம்பரப் பொருட்கள், விமானக் கட்டணங்கள் உயர்கின்றன.

* சிகரெட்டுகள் விலை அதிகரிக்கின்றன.

* தங்கம், வைரங்களின் விலைகள் உயர்கின்றன.