Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts

Tuesday, January 03, 2012

என் குட்டி தேவதை அபிக்கு பிறந்த நாள்

http://www.viduppu.com/photos/full/couples/jothika_Diya_Birthday002.jpg 

24 வயசுலயே எனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க, ஆனா பாருங்க எனக்கு செவ்வாய் தோஷம், அதனால  ஜாதகம் எதுவும் அவ்வளவு சீக்கிரம் அமையலை.. அதனால பெண் பார்க்கும் படலம் நடந்தது நடந்தது நடந்துட்டே இருந்தது..

18 பெண்கள் பார்த்தோம் (தேன்) அதுல 12 பேர் என்னை ரிஜக்ட் பண்ணிட்டாங்க (ஹி ஹி ) அந்த டீட்டெயில்ஸ்  எல்லாம் கூகுள் ல போய் என்னை கேவலப்படுத்திய ஃபிகர்கள் பாகம் 1,  பாகம் 2 ல போய் பார்த்துக்குங்க 

2001 டிசம்பர் மாசம் 9ந்தேதி எனக்கு மேரேஜ் ஆச்சு, பொண்ணு ஈரோடு தான்.. பேரு அரசி.. ( நான் சேவகன் அவ்வ்வ்)

2003 ஜனவரி 3 ந்தேதி  ஈரோடு கொல்லம்பாளையம் ஜோதி ஹாஸ்பிடலில் எனக்கு ( எங்களுக்கு) பொண்ணு பிறந்தது ..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS6BdBhyvbrtntMRDZaPD1qL_yXxGau8hOlNhgsIx395FPCaL37M-7ojM9WmkYcFa85E4DroD0UaXN6tIsQsB0Jxrv_IGEF1VFZDy-TYLQA0vXiPzHS_nCckCElIEX2EKkDHpdWtptiq26/s1600/work.jpg

சொந்தக்காரங்களும், சில நண்பர்களும் பொண்ணா?ன்னு கேள்விக்குறியோட கேட்டாங்க, என்னை பொறுத்தவரை குழந்தை என்பதே வரம் தான், அதுல பையன் என்ன ஏ கிரெடு? பொண்ணு என்ன பி கிரேடு?

தேவதை, மகாலட்சுமி என பொண்ணு பிறந்தா நாம கொண்டாடனும்.நாங்க கொண்டாடறோம்.

அபிராமின்னு பேர் வெச்சோம்..  அப்புறம் அபிராமி ஸ்ரீன்னு  ஸ்கூல்ல சேர்த்தாச்சு.. நான்  மற்ற புக்ஸ்ல என் சொந்தப்பேரிலும் ( சென்னிமலை சி.பி செந்தில்குமார்)பெண்கள் பத்திரிக்கைகளில் பாப்பா பேர்ல தான் எழுதுவேன் ( ஈரோடு எஸ் அபிராமி ஸ்ரீ)

பாப்பா செம சுட்டி.. இப்போ 3 வது படிக்கறா.. என்னை எப்பவும் ஒரே மாதிரி கூப்பிடறதே இல்லை.. சில சமயம், அப்பா , பல சமயம் டாடி , கோபமா இருந்தா.  டேய் செந்தில் ஹி ஹி 

எப்படி கூப்பிட்டாலும் சந்தோஷம் தான்.. ஏன்னா மழலை செல்வம் இல்லாம பல தம்பதிகள் கோயில், ஹாஸ்பிடல் என அலைந்து கோண்டு இருப்பதை பார்க்கறோம்.. அதனால தவம் செய்யாமல் கிடைச்ச வரமா பாப்பாவை கொண்டாடறோம்... 


http://www.baby-pictures.org/wp-content/uploads/2010/05/baby-kid-child-cute-cutie.jpeg
அவளுக்கு இன்று 9 வது பிறந்த நாள்.. என்னுடன் சேர்ந்து நீங்களும் வாழ்த்தலாம்..

Tuesday, February 01, 2011

சினி ஃபீல்டில் எண்ட்ரி ஆன கவிதைக்காதலன் - வாழ்த்தலாம் வாங்க

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=8c5ee07e1b&view=att&th=12de184f2412fab2&attid=0.1&disp=inline&realattid=f_gjmv4m9i0&zw
ஒரு படைப்பாளிக்கு பெரிய சந்தோஷமே தான் மக்களால் அங்கீகரிக்கப்படுகிறோம் என்ற உணர்வுதான்.ஒவ்வொருவரும் எழுதுவதும்,படைப்பதும் இந்த அங்கீகாரத்துக்குத்தான். அதனால் கிடைக்கும் வருமானம் தனி சந்தோஷம் என்றாலும் இந்த அங்கீகாரம்தான் சிறந்தது என்பேன்.

நான் முதன் முதலாக பிளாக் உலகில் வரும்போது கவனித்த இருவர் கேபிள் சங்கரும், கவிதைக்காதலரும்.பதிவுலகின் ரஜினி என போற்றப்படும் சங்கர் சினி ஃபீல்டில் ஆல்ரெடி எண்ட்டர் ஆகி விட்டார்.நம்ம கவிதைக்காதலன் தபு சங்கருக்கு இணையான கவிதைத்திறம் மிக்கவர். அவரது கவிதைகளில் காதல் ரசம் சொட்டும்.

நான் அவர் பிளாக்கில் கமெண்ட் போடும்போதே நீங்கள் சினி ஃபீல்டில் நுழையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கமெண்ட் போட்டேன்.அது உண்மையாகி விட்டது. கந்தகோட்டை என்ற படத்தை எடுத்த எஸ் சக்திவேல் என்ற இயக்குநர் எடுக்கும் உயிரைத்தொலைத்தேன் படத்தில் 2 பாடல் எழுதுகிறார். அதை விட பெரிய விஷயம் டைட்டிலில் ,போஸ்டரில் அவர் பெயர் வருகிறது. ( மணிகண்டவேல்)

இதில் என்ன பெருமை என கேட்பவர்களுக்கு. சினி ஃபீல்டில் அவ்வளவு சீக்கிரம் டைட்டிலில் பெயர் போட விட மாட்டார்கள்.முதல் படத்திலேயே அவர் பெற்ற இந்த வாய்ப்பும் ,பெருமையும் நம்மை பெருமை கொள்ள வைக்கிறது.

நேற்றே இறந்து விட்டேன்  என்ற கவிதையை பார்த்து இயக்குநர் இந்த வாய்ப்பு கொடுத்தாராம்.பலர் ஸ்டூடியோ ஸ்டூடியோவாக அலைந்து வாய்ப்பு கேட்டும் கிடைக்காத வாய்ப்பு பதிவு போட்டே இவருக்கு கிடைத்தது ஒரு பதிவர் என்ற முறையில் நம்மை எல்லாம் பெருமை கொள்ள வைக்கிறது.

ஒரு திறமைசாலி அடையாளம் காணப்பட்டால் அது நமக்கு பெருமை. அதே திறமைசாலி நம் நண்பன் என்றால் அந்த பெருமிதம் இரட்டிப்பு ஆகிறது.நமக்கு பதிவு போட மேலும் ஊக்குவிப்பாக இவரது முன்னேற்றம் அமைகிறது.

எனவே இவரது வெற்றியை நமது வெற்றியாக கொண்டாடுவோம்.வாழ்த்துவோம். அவரது ஃபோன் நெம்பர் 9043194811,வயது 24, இன்னும் மணமாகாதவர்.. எனக்கு அண்ணன் மாதிரி..ஹி ஹி

அவரது மெயில் ஐ டி [email protected]

வாழ்த்துங்கள்..


Sunday, August 15, 2010

பாக்யாவின் வால்போஸ்டர்களில் ஜாக்கிசேகர்

இயக்குனர் கே பாக்யராஜ் பல வருடங்களாக பாக்யா எனும் பத்திரிக்கை நடத்திவந்ததும் ,20 வருடங்களுக்கு மேல் அது தொடர்ந்து வெற்றிகரமாக பவனி வருவதும் நம் அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த பாக்யாவில் பொதுவாக வால்போஸ்டர்களில் கே பாக்யராஜ் அவர்களின் கேள்வி பதிலில் அந்த வார டாப் கேள்வி எதுவோ அதுவே வால் போஸ்டர்களீல் விளம்பரப்படுத்தப்படும்.
அந்தப்பத்திரிக்கையின் சரித்திரத்தில் முதன் முறையாக ஆசிரியர் அல்லாத ஒருவரின் படைப்புக்கான் முன்னோட்ட வரிகள் விளம்பரமாக வருவது இதுவே முதல் முறை.
நமது பதிவுலக நண்பர் அண்ணன் ஜாக்கிசேகர் அவர்கள் பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் என்ற பிளாக்கில் ஹாலிவுட் படங்களின் விமர்சனம் எழுதி ஏற்கனவே புகழ் பெற்று இருந்தார்.சமீபத்தில் அலாஸ்கா கவுண்ட்டிங் & ரேட்டிங்கில் ஒரு சாதனை புரிந்தார்.அவரது புகழுக்கு மேலும் ஒரு மணி மகுடமாக அவரது படைப்பு பாக்யாவில் வால்போஸ்ட்ரில் “உங்கள் மனைவி மீது யாராவது கை வைத்தால்?” இடம் பெற்று உள்ளது.
கே பாக்யராஜின் மனம் கவர்ந்த ஜாக்கி அண்ணன் தொடர்ந்து மேன்மேலும் புகழ் பெறவும்,திரை உலகில் கொடி கட்டிப்பறக்க பதிவுலகம் மற்றும் பதிவாளர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.